Followers

Search Here...

Wednesday 27 December 2017

மஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Iran, Greece and beyond)


மஹா பாரத சமயத்தில்,
ஈரான் முதல் கிரீஸ் வரை : (Iran, Greece and beyond)

மஹா பாரத சமயத்தில், ஈரான் வரை பாரத தேசமாக இருந்தது.

ஈரான் நாட்டை தாண்டி இருக்கும் தேசங்களில் கிரேக்கர்களை "யவனர்கள்" என்று அழைத்தனர். இவர்களை மிலேச்சர்கள் என்று அறியப்படுகின்றனர்.

இன்றைய ஈரான் நாடு, மஹாபாரத சமயத்தில், காம்போஜ தேசம், பஹ்லவ தேசம், சாக தேசம் என்று 3 தேசங்களாக அழைக்கப்பட்டது.

பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் போனற தேசங்கள், ரமத தேசம் என்று அழைக்கப்பட்டது.

பஹ்லவ தேச அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

வேத மார்க்கத்தை விட்டு, மது, மாமிசம் என்று வாழ்க்கை முறை இந்த அனைத்து தேசங்களிலும் பரவி இருந்தது. பொதுவாக இந்த தேசத்தவர்கள் யாவரையும் மிலேச்சர்கள் என்று அறியப்பட்டனர்.


சிறந்த க்ஷத்ரியர்களாக இருந்த இவர்கள், இந்த காலத்தில் மலேச்சர்களாகி இருந்தனர்.
வேதங்கள் ஓதும் வேதியர்கள் இங்கு வாழ மறுத்தனர்.

இந்த காம்போஜ தேச அரசன் "சுதிக்ஷ்ணன்" துரியோதனனின் பக்கம் நின்று போரிட்டான்.

சாக தேசம், காம்போஜ தேசம், பஹ்லவ தேச படைகள், க்ருபாச்சாரியார் தலைமையில் போர் புரிந்தனர்.

சிவபெருமான் வழிபாடு அதிகம் இருந்த தேசமாக இருந்தது சாக தேசம். பின்னர் மிலேச்சர்கள் ஆகினர்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்கு திக்விஜயமாக வந்த பீமன், சாக தேச அரசர்களை பீமன் போர் செய்து அடக்கினான்.

சாகர்கள் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொள்ள வந்தனர். கொண்டு வந்த பரிசுகளை கொடுக்க மாளிகையின் வாசல் வரை சென்று வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. இவர்களுக்கு முன்னால் சீன தேசத்தவர்கள், வ்ருஷ்ணி என்ற யாதவ குலத்தை சேர்ந்தவர்கள் மேலும் பலர் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

சாக படைகள், காம்போஜ தேச அரசன் "சுதிக்ஷ்ணன்" தலைமையில் போரிட்டனர்.

மஹா பாரத போரில், துரியோதனன் பக்கம் நின்று கடும் போர் புரிந்தனர் ரமத தேச, காம்போஜ தேச, பஹ்லவ தேச, சாக தேச, யவன தேச படைகள். அனைவரையும் அர்ஜுனன் ஒருவனே கொன்று குவித்தான்.

பாரத மண்ணில், காம்போஜ தேசத்தை தான் முதன் முதலில் பிற்காலத்தில் 3000 வருடத்திற்கு பிறகு வந்த கிரேக்க அரசன் அலெக்சாண்டர் கைப்பற்றினான். இதே ஊரில் பாபிலோன் என்ற இடத்தில், உயிர் விட்டான்.

மஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kashmir, himalayas


மஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kashmir, himalayas

காஷ்மீர தேசம், தாரத தேசம், தர்வபிஸார தேசம், லடாக் தேசம் என்று அறியப்பட்டது.

புலிந்த தேசம் என்பது ஹிமாலயா என்று அறியப்பட்டது. புலிந்த தேசத்தவர்கள், இமாலயம் முதல் அஸ்ஸாம் வரை படர்ந்து இருந்தனர்.

பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து கொலை செய்ய நினைத்த துரியோதனனிடம் இருந்து தப்பித்து சில காலம் மறைந்து வாழ்ந்தனர். இந்த சமயத்தில் புலிந்த தேசம் அடைந்து அங்குள்ள மணலி (manali) என்ற தேசத்தை அடைந்தனர். குளு மணாலி என்று சுற்றுலா செல்லும் இடமாக இன்று உள்ளது.

அங்கு இடும்பன், இடும்பி என்ற அரக்கர்கள் மனித மாமிசம் சாப்பிட்டு அங்கிருந்தவர்களை பயமுறித்திக்கொண்டிருந்தான்.

இடும்பனை பீமன் கொன்றான்.
தன் சகோதரனை கொன்றாலும், பீமனின் பலத்தை கண்டு ஆச்சரியப்பட்டு, பீமனை மணக்க ஆசைப்பட்டாள். குந்தி தேவி அனுமதி கொடுக்க பீமன் அவளை மணந்தான். இவர்களுக்கு கடோத்கஜன் என்ற மகன் பிறந்தான்.



பாண்டவர்கள் பதரிநாத் (உத்திர பிரதேசம்) நகரில் இருந்து, கடினமான இமாலயத்தை கடந்தனர். அப்பொழுது அங்கு இருந்த சீன தேசத்தை கண்டனர். அங்கிருந்து மேலும் பயணம் கொண்ட பாண்டவர்கள், இறுதியில், புலிந்த தேசத்தை (இமாலய தேசம்) மீண்டும் வந்து அடைந்தனர்.

13 வருடம் வனவாசம் செய்த இந்த சமயத்தில் தான், புலிந்த தேசத்தில், பீமன் ஹனுமானை தரிசித்தார்.

தாரத தேச அரசர்கள் க்ஷத்ரியர்கள். அங்கு இருந்த அரசர்கள் வேத கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பிராம்மணர்களை மதிக்காமல், வேத மார்க்க ஒழுக்கத்தில் இருந்தும் மீறி வாழ்க்கை நடத்தினர். இதனால், தாரத தேசத்தை மிலேச்ச பூமி என்றும், இவர்கள் வாலிகர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

காஷ்மீர தேசத்தில் விதஸ்தா என்ற நதி ஓடிக்கொண்டு உள்ளது. (இன்று இந்த நதி ஜீலம் நதி என்று பாகிஸ்தான் பகுதி காஷ்மீரில் உள்ளது).
இந்த நதியின் நீர் மிகவும் தூய்மையானாதாக இருந்தது என்று மஹா பாரதத்தில் உள்ளது. இந்த விதஸ்தா நதி, கடைசியில் சிந்து நதியில் கலக்கிறது என்று உள்ளது.

லடாக் தேசத்தவர்கள் மிலேச்சர்களாக இருந்தனர்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகம் நடத்த வேண்டி, அர்ஜுனன் வடக்கு நோக்கி படை எடுத்து, அனைவரையும் தோற்கடித்தான்.
காஷ்மீர தேச அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

தாரத தேசத்தவர்கள் மஹா பாரத போரில், 'யவன'ர்களோடும் (ஆப்கான் நாட்டை தாண்டி, இருக்கும் வடக்கு தேசத்தவர்கள்), தர்வபிஸார தேச அரசர்களுடனும் சேர்ந்து, துரியோதனன் பக்கம் நின்று படு வலிமையுடன் போர் புரிந்தனர்.

லடாக் தேசத்தவர்கள் மஹா பாரத போரில், பாண்டவர்களோடு நின்று போர் புரிந்தனர். யுதிஷ்டிரரை காக்கும் பணியில் இருந்த "த்ருஷ்டத்யும்னன்" இருந்தான். த்ருஷ்டத்யும்னன் படையில், லடாக் தேச படையினர் அணிவகுத்தனர்.



மஹா பாரத போரில், 13ஆம் நாள் யுத்தத்தில், அபிமன்யு பல பேரால் சேர்ந்து போர் நியதிக்கு எதிராக கொன்றனர்.
14ஆம் நாள் யுத்தம் எல்லா நியதியையும் மீறியது. சூரியன் மறைந்தும் போர் தொடர்ந்தது.
கடோத்கஜன் பலம் அதிகரிக்க, பல போர் வீரர்களை அடித்து கொன்றான். இவனை எதிர்க்க துரியோதனன் யாரும் அஞ்சினர்.

இதனால், கர்ணன் அர்ஜுனனுக்காக இந்திர தேவனிடம் வரமாக வைத்து இருந்த சக்தி ஆயுதத்தை கடோத்கஜன் மீது விட்டான். கடோத்கஜன் அடிபட்டு, கீழே விழும் போது, பீமன் வீர மரணம் அடையப்போகும் தன் மகனை பார்த்து, தன் உருவத்தை பெரிதாக்கி துரியோதனன் படை நோக்கி கீழே விழுமாறு சொல்ல, தந்தை சொல்லை இறுதி சமயத்திலும் கேட்டு, அதே போல செய்து, வீர மரணம் அடைந்தான்.

ஜம்மு (JAMMU) என்ற பெயர் யாரை கொண்டு ஏற்பட்டது? தெரிந்து கொள்ள... http://www.proudhindudharma.com/2018/06/jammu.html படிக்கவும்

மஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.

மஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.




கிராட தேசம் என்று பூடான் அழைக்கப்பட்டது.

இமாலய தேசத்தின் மலை தொடரில் இந்த தேசம் இருந்தது.

ப்ரக்ஜ்யோதிச தேசம் என்று அசாம் அழைக்கப்பட்டது.

பௌண்ட்ரக தேசத்தை ஆண்ட பௌண்ட்ரக வாசுதேவன், வங்க தேசத்தின் கிழக்கு பகுதியையும், இந்த கிராட தேசத்தின் சில பகுதியையும் கைப்பற்றி ஆண்டு வந்தான்.

தேவர்கள் மனித குலத்தில் அர்ஜுனன், யுதிஷ்டிரர் என்று பிறந்தது போல, அசுரர்களும் மனித குலத்தில் பிறந்தனர்.
பாணாசுரன் என்ற அசுரனுடன், நரகாசுரன் நட்பு கொண்டிருந்தான்.

நரகாசுரன் ப்ரக்ஜ்யோதிச தேசத்தை கடகாசுரன் என்பவனிடம் இருந்து கைப்பற்றினான். அந்த தேச பெண்கள் மிகவும் அவதியுற்றனர். 


16000 இளவரசிகளை பிடித்து வைத்திருந்தான். இதனை கண்ட சத்யபாமா, ஸ்ரீ கிருஷ்ணரிடம் நரகாசுரனை வதம் செய்ய சொன்னாள்.

சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையிலிருந்து ப்ரக்ஜ்யோதிச தேசத்தை அடைந்தார்.
நரகாசுரனின் 11 அக்சௌனி சேனையை அழித்தார். முரா என்ற அரக்கனை கொன்றார். பின் நரகாசுரனின் தலையை தன் சுதர்சன சக்கரத்தால் சீவினார்.

ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிசம் சென்ற இந்த சமயத்தில், சேடி நாட்டு அரசன் சிசுபாலன் துவாரகை சென்று, நகரில் தீ வைத்து ஓடினான்.
ஸ்ரீ கிருஷ்ணர் சிசுபாலன் செய்த இந்த கீழ்தரமான செயலையும் மன்னித்தார்.

நரகாசுரன் ஸ்ரீ கிருஷ்ணரிடம், தன் இறந்த நாளை, அதர்மம் அழிந்து தர்மம் காப்பாற்றப்பட்டதன் நினைவாக, அனைவரும் கொண்டாட வேண்டும் என்று பிரார்த்தித்தான். நரகாசுரன் கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியா மட்டுமில்லாமல், இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இந்த தீபாவளி திருநாள் இன்று வரை இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

பின்னர் பாணாசுரன் என்ற அசுரனும், ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப்பட்டார்.

நரகாசுரனின் மகன் "பகதத்தன்" அரசனானான்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாத்திற்கு, அர்ஜுனன் பல தேசங்களுக்கு திக்விஜயம் செய்தான். இந்த தேசத்திற்கு வந்து, பகதத்தனை தோற்கடித்தான்.
பகதத்தன், மற்ற அனைத்து இமாலய தேச அரசடகளுடன் சேர்ந்து, யுதிஷ்டிரரின் ராஜசுய யாத்தில் கலந்து கொண்டான்.

மஹாபாரத போரில், பகதத்தன் துரியோதனின் பக்கம் நின்று போரிட்டான்.

கிராட தேசத்தவர்கள் துரியோதனின் பக்கம் நின்று படு பயங்கர போர் புரிந்தனர். 
இவர்கள் பிரக்ஜ்யோதிச (அசாம்) அரசன் 'பகதத்தா'வின் ஒரு அக்ஷௌனி சேனையின் பகுதியாக அணி திரண்டு இருந்தனர்.




பகதத்தனை போரில் அர்ஜுனன் கொன்றார்.

மஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில் பிறந்தார்கள்? எப்படி இருந்தது?

மஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar.

மகத தேசம் என்று பீஹார் அழைக்கப்பட்டது.




ராமாயண காலத்தில், ஸ்ரீ ராமரின் தாய் கௌசல்யா இந்த தேசத்தில் பிறந்து, பின் கோசல அரசன் தசரதனை திருமணம் செய்து கொண்டாள்.
தசரதர் தன் காலத்திற்கு பிறகு, தன் பிள்ளைகள் ஒருவராவது, பீகாரில் உள்ள கயை என்ற நகருக்கு சென்று, விஷ்ணு பாதத்தில் பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

பிற் காலத்தில், ஸ்ரீ ராமர் கயை சென்று, தன் தகப்பனாருக்கு விஷ்ணு பாதத்தில் பிண்ட ப்ரதானம் செய்தார்.

குடும்பத்திலேயே மதம் மாறி இறந்து போனவர்கள், பிள்ளைகள் இருந்தும் திவசம் செய்யப்படாமல் இறந்து போனவர்கள், அனாதையாக இறந்தவர்கள், கர்பத்திலேயே இறந்தவர்கள், அடிபட்டு இறந்தவர்கள், காணாமல் போய் பல காலம் ஆகியும் இறந்தார்களா இல்லை இருக்கிறார்களா என்று நிலைக்கு ஆனவர்கள், இறந்தவர்கள் இப்படி எவருக்காகவும் இந்த விஷ்ணு பாதத்தில், யாவரும் தான் இருக்கும் சமயத்தில் வந்து, தன் நினைவில் உள்ள இறந்தவர்கள் அனைவருக்கும் பிண்ட ப்ரதானம் செய்யலாம், செய்ய வேண்டும். திவசம் செய்யாததால் அலையும் பித்ருக்கள் அனைவரும் திருப்தி அடைவார்கள்.

இனி,
மஹாபாரத சமயத்தில், ஜராசந்தன் மகத அரசனாக ஆண்டு வந்தான்.
யாதவர்களை தன் எதிரிகளாக நினைத்தான்.

ஜராசந்தன் பிறந்த ஊர் இன்றைய டாடாநகர் (TataNagar,Jamshedpur,Jharkhand). இது ஜாம்ஷெட்பூர் என்ற மாநிலத்தில் உள்ளது. இது பீகார் மாநிலத்தில் இருந்தது. Nov 15, 2000 ஆண்டு தெற்கு பகுதியில் இருந்த இந்த பிரதேசம் (ஜாம்ஷெட்பூர்) பிரிந்து தனி மாநிலம் ஆக்கப்பட்டது.

நரகாசுரன் (ப்ரக்ஜ்யோதிச தேசம் என்ற அசாம்), பௌண்ட்ரக வாசுதேவன் (பௌண்ட்ரக தேசம் என்ற பங்களாதேஷ்), சிசுபாலன் (சேடி தேசம் என்ற மத்யபிரதேசம்), வ்ருஷ்னி குல கம்சன் (மதுராவை ஆண்ட, ஸ்ரீ கிருஷ்ணரின் மாமா), துரியோதனன் (குரு தேசம் என்ற உத்திரபிரதேச இளவரசன்) ஆகியோர் ஜராசந்தனிடம் நட்பு கொண்டவர்கள்.




கம்சன் யாதவர்களை விரட்டி, மதுராவை கைப்பற்றியதால், கம்சனிடன் நட்பு கரம் நீட்டினான். தன் 2 மகள்களையும், கம்சனுக்கே மணம் செய்து கொடுத்தான்.

ஸ்ரீ கிருஷ்ணரின் மாமா கம்சன். தன் தங்கை என்றும் பாராமல், மதுராவில் ஜெயிலில் தள்ளினான். ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயிலில் அவதாரம் செய்து, கோகுலத்தில் வளர்ந்து, தன் 11 வயதில், மதுரா வந்து ஒரே குத்தில் கம்சனை பரலோகம் அனுப்பினார்.
தன் மகள்கள் விதவை ஆனதற்கு இந்த ஸ்ரீ கிருஷ்ணரும், யாதவர்களுமே காரணம் என்று, 17 முறை மதுராவை தாக்கினான். 
ஒவ்வொரு தடவையும் ஸ்ரீ கிருஷ்ணர் தோற்கடித்து விரட்டினார்.

இந்த முறை ஸ்ரீ கிருஷ்ணரை யவன தேசத்து (கிரீஸ் போன்ற மேற்கு தேசங்கள்) மிலேச்சனான "காலயவனன்" துணையுடன் எதிர்த்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் காலயவனனிடன் போர் புரிந்து சாமர்த்தியமாக அவனை கொன்றார்.
இந்த சமயத்தில் மதுராவை முற்றுகையிட்டான் ஜராசந்தன். யாதவர்களுக்கு ஏற்பட போகும் ஆபத்தை உணர்நத ஸ்ரீ கிருஷ்ணர், மதுரா நகர 5 லட்சம் யாதவ மக்களை மாய ஸ்ருஷ்டி மூலம், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து, அனைத்து மக்களையும் ஒரே ராத்திரியில் இடம் மாற்றினார்.
இந்த மாயை புரியாத ஜராசந்தன் மீண்டும் படை எடுக்க வந்த போது மதுரா நகரமே காலி ஆகி போயிருந்ததை கண்டு தேடி கொண்டே இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆணைப்படி, தேவலோகத்தில் இருக்கும் விஸ்வகர்மா ஒரே நாளில், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து கொடுத்தார்.

ஸ்ரீ கிருஷ்ணரையும், யாதவர்களையும் தோற்க அடிக்க முடியாத ஜராசந்தன், சிவனை குறித்து தவம் செய்து, 100 க்ஷத்ரிய அரசர்கள் பலியிட்டு தன் பலத்தை கூட்ட எண்ணினான். இதற்காக பல தேசங்களை கைப்பற்றி அதன் 95 க்ஷத்ரிய அரசர்களை ஜெயிலில் போட்டான்.

யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்த திட்டமிட்டு கொண்டிருந்தார். இதற்கு ஜராசந்தன் போன்றவர்கள் தடையாக இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர் ஜராசந்தனை பீமனோடு மல்யுத்த போருக்கு அழைத்தார். பீமன் ஜராசந்தனை மல்யுத்தத்தில் இரண்டாக கிழித்து போட்டு விட்டான்.
ஜராசந்தன் மகன் சகதேவன் மகத தேச அரசனானான்.



சகதேவன் மஹா பாரத போரில் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டான்.

3000 வருடங்களுக்கு பிறகு கௌதம புத்தர், லும்பினி என்ற நகரில் நேபாள தேசத்தில் பிறந்தார். மகத தேசத்தில் (பீஹார்) உள்ள போத் கயா என்ற ஊரில், புத்தர் ஞானம் அடைந்தார் என்று அவரின் சரித்திரம் சொல்கிறது.

மஹா பாரத சமயத்தில், தெலுங்கானா, ஆந்திர தேசம்: Telangana, Hyderabad

மஹா பாரத சமயத்தில்,
தெலுங்கானா, ஆந்திர தேசம்: Telangana, Hyderabad

இன்றைய ஆந்திர தேசம், அன்று ஆந்திரக தேசம் என்றும்,
இன்றைய தெலுங்கானா, அன்று அஸ்மாக தேசம் என்றும் பெயர் கொண்டிருந்தது.

ராஜசுய யாகம் நடத்த வேண்டுமானால், அனைத்து பிற அரசர்களும் சம்மதிக்க வேண்டும்.

யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்த தன் சகோதரர்களை அனைத்து தேசத்திற்கும் அனுப்பினார்.

தம்பி 'சகாதேவன்' ஆந்திர தேசம் வந்து போர் புரிந்து வென்றார்.

ஆந்திர அரசர்கள், யுதிஷ்டிரர் நடத்திய ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.
ஆந்திர தேச அரசர்கள், மஹா பாரத போரில் துரியோதனனுக்கு துணை நின்று போர் செய்தனர்.

அஸ்மாக தேச அரசர்கள் (தெலுங்கானா), மஹா பாரத போரில் பாண்டவர்களுக்கு துணை நின்று போர் செய்தனர்.

பாண்டவர்கள் இறுதியில் வென்று, சக்ரவர்த்தி ஆனார் யுதிஷ்டிரர்.
பின், அஸ்வமேத யாகம் நடத்தி, பாரத தேசத்தின் சக்ரவர்த்தி என்று நிலைநாட்ட, மற்ற தேச அரசர்களின் சம்மதம் பெற அல்லது எதிர்ப்பவர்களை வெற்றி பெற, அர்ஜுனன் தன் படையுடன் கிளம்பினார்.
அர்ஜுனனின் பராக்கிரமும், வீரமும் அதி ஆச்சரியமானது. அர்ஜுனன், ஆந்திர அரசர்களை போரில் வென்று, யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகம் நடத்தி சக்ரவர்த்தி ஆனார்.