Followers

Search Here...

Saturday 17 February 2018

உத்தமன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

உத்தமன் என்ற சொல் பகவான் ஒருவருக்கே பொருத்தம்.
சில நேரம், மனிதர்களிலும், சிலரை "உத்தமர்" என்று சொல்வதுண்டு.
உத்தமன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?
இதை புரிந்து கொள்ள, சாஸ்திரம் கை கொடுக்கிறது.
பொதுவாக மனிதர்கள் 4 வகைப்படுவர்.
அதமாதமன்,
அதமன்
மத்யமன்
உத்தமன்.






அதமாதமன் -
எந்த காரியம் செய்தாலும், அதில் தனக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ, மற்றவர்கள் நாசமாக போனாலும் பரவாயில்லை என்று செய்பவன்  "அதமாதமன்".

அதமன் -
எந்த காரியம் செய்தாலும், அதில் தனக்கு நன்மை கிடைக்கும் என்றால் மட்டுமே முயற்சி செய்பவன், "அதமன்".

மத்யமன் -
எந்த காரியம் செய்தாலும், அதில் தனக்கும், மற்றவனுக்கும் சேர்த்து நன்மை கிடைக்கும் என்றால் முயற்சி செய்பவன் "மத்யமன்".

உத்தமன் -
தனக்கு என்று எதையும் எதிர்பார்க்காமல், தன் உடலாலும், மனதாலும், வாக்காலும் பிறருக்கு நன்மை கிடைக்கும் என்றால் முயற்சி செய்பவன், "உத்தமன்".

பகவான் நாராயணனுக்கு நம்மால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை.
அவர் நமக்கு தரும் இந்த வாழ்வும், உடம்பும், செல்வமும், புத்தியும் அனைத்தும், நம் நன்மைக்காகவே.





உத்தமன்
என்ற சொல்லுக்கு பகவான் ஒருவரே தகுதியானவர்.

சுயநலமில்லாத நம் பாரதத்தில் உதித்த மகான்களும், ரிஷிகளும் கூட உத்தமர்களே.

Hare Rama, Hare Krishna Bhajan 

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 

ப்ரம்மாவின் வயது என்ன ?

ப்ரம்மாவின் வயது என்ன ?

பரம் என்ற பரமாத்மா (நாராயணன்) ப்ரம்மாவை படைத்தார்.
ப்ரம்மாவின் இன்றைய வயது என்ன ?
50 வயதை கடந்து, 51வது வருடத்தின் முதல் நாள் கடந்து கொண்டு இருக்கிறது.

ப்ரம்மாவின் ஒரு பகலில், 14 மனு அரசர்கள் ஆள்கின்றனர்.
ஒவ்வொரு மனுவின் காலம் முடிந்த பின், 17 லட்சத்தி 28 ஆயிரம் வருடங்கள் உலகம் கடலில் மூழ்கும்.

ஒவ்வொரு மனு அரசனும் 71 சதுர் யூகங்களை ஆள்கின்றனர்.

ஒரு சதுர் யுகம் என்பது 43 லட்சத்தி 20 ஆயிரம் வருடங்கள்.

ஆக, ஒரு மனு அரசர் 30 கோடியே 67 லட்சத்தி 20 ஆயிரம் வருடங்கள் ஆள்கிறார்.

ப்ரம்மாவின் இந்த ஒரு நாளில், 14 மனு அரசர்களில், இதுவரை 6 மனு அரசர்கள் காலம் முடிந்துள்ளது.

இப்பொழுது 7வது மனு அரசர் ஆண்டு கொண்டு இருக்கிறார்.
இவர் பெயர் : வைவஸ்வதன்.

இவருடைய 71 சதுர் யூகங்களில் இதுவரை 27 சதுர் யூகங்கள் முடிந்து விட்டது.
இப்பொழுது இவர் 28வது சதுர் யூகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார். இந்த சதுர் யூகத்தில் 3 யுகங்கள் (சத்ய, த்ரேதா, த்வாபர) முடிந்து விட்டது. 4வது யுகம் "கலி யுகம்" நடந்து கொண்டு இருக்கிறது.

கலி யுகத்தின் மொத்த வருடம் 4 லட்சத்தி 32 ஆயிரம் வருடங்கள்.
ஆங்கிலேய calendar படி கலி யுகம் 3102 BCல் ஆரம்பிக்கிறது.

சுமார் 3300 BCல் ஸ்ரீ கிருஷ்ணராக, ப்ரம்மாவை படைத்த அந்த பரமாத்மாவே அவதரித்து மகாபாரத போர் செய்தார்.
3300 BC முதல் 1700 BC வரை indus valley civilization என்று கண்டுபிடித்து உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

2017ல், கலியுகம் 5118 வருடங்கள் கடந்து உள்ளது. இன்னும் 432000 - 5118 வருடங்கள் உள்ளது. நியாயமாக, கலி யுகம் இப்பொழுது தான்  ஆரம்பித்துள்ளது. 😊

நம் ஒரு வருடம், சொர்க்க லோகத்தில் இருக்கும் தேவர்களுக்கு, ஒரு நாள்.

தேவர்கள் அவர்கள் காலப்படி 100 வருடம் இருந்து, அங்கு அவர்கள் செய்த புண்ணியத்துக்கு ஏற்ப, சொர்க்க லோகத்திலிருந்து மேல் இருக்கும் மகர் லோகத்துக்கோ, ஜன லோகத்துக்கோ, தப லோகத்துக்கோ செல்வர்.
இந்த மகர, ஜன, தப லோகத்தில் உள்ளவர்களிடம் ஏதாவது பாவம் செய்திருந்தால், கீழ் லோகமான பூமியில் பிறப்பர்.
தேவர்களை பொறுத்தவரை மனிதர்கள் கீழ் தரமானவர்கள் 😊.

தப லோகத்துக்கும் மேல், சத்ய லோகம் உள்ளது. அங்கு தான் ப்ரம்மா இருக்கிறார்.

14 மனு அரசர்கள் ஆட்சி செய்து முடிக்கும் பொழுது, ப்ரம்மாவுக்கு ஒரு பகல் முடியும்.

ப்ரம்மாவின் இரவு, பகலை போன்று நீளமானது.
இந்த சமயத்தில், ப்ரம்மா தன் இருப்பிடமான சத்ய லோகத்தையும், மக, ஜன, தப லோகத்தை தவிர்த்து, பூலோகம், புவர் லோகம், சொர்க்க லோகம் மற்றும் கீழ் 7 லோகங்கள் அனைத்தையும் அழித்து விடுகிறார்.
இத்தனை காலங்கள் பிறந்தும், இறந்தும் இன்னும் நாராயணனை அடையாமல் உலக வாழ்க்கையே மீண்டும் மீண்டும் செய்து வாழ்ந்த அனைத்து ஆத்மாக்களும் ப்ரம்மாவின் இரவு காலம் முழுவதும், தான் இருக்கிறோம் என்று தெரியாமல் தூங்குவது போல அந்த பரமாத்மாவில் ஒடுங்கும்.

மீண்டும் ப்ரம்மாவின் பகல் ஆரம்பித்தவுடன், பிரம்மா மீண்டும் பூலோகம், புவர் லோகம், சொர்க்க லோகம் மற்றும் கீழ் 7 லோகங்கள் அனைத்தையும் படைத்து, முக்தி அடையாமல், அறியாமல் தூங்கும் நிலையில் உள்ள ஜீவாத்மாக்களை உலகில் மரமாகவோ, பறவையாகவோ, விலங்காகவோ, மனிதனாகவோ அவரவர் செய்த பாவ, புண்ணியத்தை பொறுத்து மீண்டும் பிறக்க வைக்கிறார்.