Followers

Search Here...

Thursday 13 September 2018

த்வைதம், அத்வைதம், விஷிஷ்டாத்வைதம் பற்றி ப்ருகு முனிவர் என்ன சொல்கிறார்? தெரிந்து கொள்வோமே...

இக்ஷ்வாகு என்ற சூரிய வம்சத்தில், "முசுகுந்தன்" என்ற சக்கரவர்த்தி ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
இவர் க்ருத யுகத்தில் இருந்தவர்.
"ஸ்ரீ ராமர்" அவதாரத்துக்கும் முன் இருந்தவர் முசுகுந்த சக்கரவர்த்தி.
3102 BCல் கலியுகம் ஆரம்பித்தது.
கலியுகத்துக்கு முன், துவாபர யுகம் 8,64,000 வருடங்கள்.
இதற்கும் முன் த்ரேதா யுகம். த்ரேதா யுகம் 12, 96,000 வருடங்கள்.
இதற்கும் முன் க்ருத யுகம் 17,28,000 வருடங்கள்.


ஆக குறைந்த பட்சம், 20 லட்ச வருடங்கள் முன் இருந்தவர் "முசுகுந்த சக்கரவர்த்தி" என்று நாம்  அனுமானிக்கலாம்.

ஸ்வபாவத்திலேயே இவர் தார்மீகர்.
இயற்கையாகவே அடக்கம் உள்ளவர்.
விஷ்ணு பக்தி உடையவர்.
தன் மக்களை சிறப்பாக தர்ம வழியில் பரிபாலித்து வந்தார்.
சத்யம் மீறாதவர்.
சூர்யவம்ச அரசர்கள் யாவரும் சத்தியத்துக்காக உயிரையும் தியாகம் செய்ய துணிந்தவர்களாக இருந்தனர்.
மகா வீரர்.
இதனால் தான் பிற்காலத்தில், இந்த பரம்பரையில் ஸ்ரீ ராமராக அவதரிக்க திருவுள்ளம் கொண்டார் பரவாசுதேவன்.

ஒரு சமயம், அயோத்யாவில் இருந்து, தீர்த்த யாத்திரையாக தன் பரிவாரங்களுடன், ஒவ்வொரு க்ஷேத்ரமாக சென்று சேவிக்கலாம் என்று புறப்பட்டார்.

அயோத்தியில் இருந்து, மதுரா, மாயா, கயா, வாரணாசி போன்ற க்ஷேத்ரங்கள் தரிசித்து, தென் பாரதம் முழுக்க ஒவ்வொரு க்ஷேத்ரமாக தரிசித்து, ஒரு சமயம், நம் தமிழகத்துக்கு வந்தார். 
காஞ்சிபுரத்திற்கு வந்து தங்கினார்.

காஞ்சியில், "ஹேம சரஸ்" என்ற பொற்றாமரை குளம் இருந்தது.
அங்கேயே தங்கி இருந்தார்.
அந்த சமயம், ரிஷியான "ப்ருகு" முனிவரை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றார்.

(தமிழ் நாட்டில் நடந்த சரித்திரம் என்று கவனிக்கும் போது, நம் பெருமை நமக்கு புரியும்)

பொதுவாக, நாம் ஒவ்வொருவருக்கும் மனதில், சில விடை தெரியாத கேள்விகள் எழுவது உண்டு.

'விடை தெரியாத கேள்விகளுக்கு, பதிலை அறிய, நாம் சரியான பதில் தெரிந்தவர்களிடம் சென்று, கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்' என்று சாஸ்திரம் சொல்கிறது.

ப்ருகு ரிஷியை பார்த்த முசுகுந்த சக்கரவர்த்தி, நமஸ்கரித்து, ஆர்வத்தோடும், அடக்கத்தோடும், ஸ்ரத்தையோடும் தன் மனதில் இருந்த நெடுநாள் சந்தேகத்தை கேட்டார்,

"உங்களை தரிசித்த பாக்கியம் பெற்றேன்.
வேதம், பொதுவாக பல தெய்வங்களை பற்றி பாடுகிறது.
வேதத்தில் ப்ரம்ம ஸூக்தம் இருக்கிறது.
ருத்ர ஸூக்தம் இருக்கிறது.
இது போன்று
இந்திரன், வருணன், அஸ்வினி குமாரர்கள், அக்னி, சூரியன், 
யமன், சோமன், வாயு, ப்ரம்மனஸ்பதி, விஸ்வேதேவர்கள், 
மருத்து, ரிபுக்கள், ஸாத்யர்கள், பித்ருக்கள்,  விஷ்ணு 
என்று எல்லா தெய்வங்களுக்கும் வேத மந்திரங்கள் உள்ளது.

வேத வாக்கும் சத்தியம். இவர்கள் கற்பனையான தெய்வங்களும் இல்லை.
இவர்கள் அனைவரும் நிஜமாகவே இருக்கிறார்கள் என்றும் வேதம் சொல்கிறது.




இவ்வளவு தெய்வங்களுக்குள்ளே, யார் உயர்ந்தவர்? ச்ரேஷ்டமானவர்?

யாரை ஆராதித்தால், கோரமான ஸம்ஸாரத்தில் இருந்து கரையேற முடியும்?

'மோக்ஷம்' என்ற ஐஸ்வர்யம் யாரை ஆராதித்தால் கிடைக்கும்?

தெய்வங்களுக்குள்ளே பேதம் (வேற்றுமை) உண்டா? அபேதமா?

இதில் உமக்கு எது சம்மதம்?

சிலர் 'தெய்வங்களுக்குள்ளே பேதம் உண்டு' என்று சொல்கிறார்கள்.
சிலர் 'தெய்வங்களுக்குள்ளே பேதம் இல்லை' என்று சொல்கிறார்கள்.

எனக்கு உள்ள இந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டும்.

நீங்கள் சர்வஞர், அனைத்தையும் உண்மையாக அறிந்தவர்.

தெய்வங்களுக்குள்ளே பேதம் இருக்கிறதோ, இல்லையோ, எப்படி இருந்தாலும், நான் ஆராதனை செய்ய வேண்டிய தெய்வம் எது?

நீங்கள், இதை நிர்ணயம் செய்து எனக்கு சொல்ல வேண்டும்.
எனக்கு எது பாதை? என்று சொல்ல வேண்டும்."
என்று கேட்டார் முசுகுந்த சக்கரவர்த்தி.

ப்ருகு பேசலானார்,
"முசுகுந்த சக்கரவர்த்தி! தெய்வங்களை, மனிதர்களை பார்ப்பது போன்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அனுமானம் செய்ய கூடாது.

மனிதர்கள் பஞ்ச பூதங்களில் "நிலத்தில்" இருந்து உருவானவர்கள். கண்ணால் பார்க்கும் படியாக, உருவம் தரித்தவர்கள்.

வேதத்தில் உள்ள தெய்வங்கள் மனிதர்களின் கண்களுக்கு  அரூபமானவர்கள்.

மனிதன் ஒரு விஷயத்தை நம்புவதற்கு, கண், காது, நாக்கு, மூக்கு, ஸ்பரிசம் போன்ற உறுப்புகளே ஆதாரமாக உள்ளது.

மனிதன் பார்க்க முடியாத விஷயங்களும் உலகில் இருக்கிறது.
அதை உணருவதற்கும், நம்புவதற்கும், இந்த உறுப்புகள் மட்டும் போதாது.

கண்ணுக்கு தெரிந்த விஷயங்களுக்கு சாஸ்திரத்தின் தேவை இருக்காது. நாமே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு யானையை சாஸ்திரம் கொண்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கண் இருந்தாலே போதுமானது.

உலகத்தில் கண்ணுக்கு தெரியாத விஷயத்தை ஒருவன் எப்படி தான் தெரிந்து கொள்ள முடியும்?
வேத சாஸ்திரமே கதி"
என்றார் ப்ருகு முனிவர்.

இதையே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  துவாபர யுகத்தில் அவதாரம் செய்த போது,
"தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே"
என்று
"சாஸ்திரத்தை கொண்டு தான் நாம் செய்யும் செயல், தர்மமா? அதர்மமா?"
என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

ப்ருகு மேலும் பேசலானார்,
"பரமாத்மா யார்? அவர் எப்படி இருப்பார்? என்ற நமக்கு அப்பாற்பட்ட கேள்விக்கு, பதிலை சாஸ்திரத்தின் துணை கொண்டே பெற முடியும். சாஸ்திரமே கதி.


நாமாக பரமாத்மா இப்படி தான் இருப்பார் என்று உருவாக்கி, ஏமாற்ற கூடாது.

வான்வெளியில் என்ன நடக்கிறது?
நம் உடம்புக்குள்ளே என்ன நடக்கிறது?
வெளிநாடுகள் எப்படி இருக்கிறது?
என்ற பல கேள்விகளுக்கு, அதனை பற்றி ஆராய்ச்சி செய்த ஞானிகள், விஞ்ஞானிகள், சொல்லும் வார்த்தைகளும், அவர்கள் அனுபவத்தில் எழுதி வைத்த புத்தகங்களுமே (சாஸ்திரமே) நமக்கு ப்ரமாணம் ஆகிறது அல்லவா?

அந்த புத்தகங்கள் (சாஸ்திரம்) என்ன சொல்கிறதோ அதன் படி நடந்து, நாமும் சென்றால், நாமும் வெளிநாடு இருப்பதை காண முடிகிறது.

நம்மாலும், உடலுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று கணிக்க முடிகிறது.

விண் வெளியில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆக, ஐந்து புலன்களால், நாம்  அறிய முடியாத விஷயங்களும் உண்டு என்பதை மனிதன் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐந்து புலன்களால், அறிய முடியாத விஷயங்களையும் நாம் உணர்ந்து கொள்ள, அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஞானிகள், வழியில் சென்று பார்த்தால், நமக்கும், புரியாத பல விஷயங்கள் புரியும்.

மனிதர்கள், கண்ணால் காண முடியாத விஷயங்களும், இருப்பதை உணர்வதற்கு தேவையான அடிப்படையான தகுதிகள் :
1. அந்த விஷயங்களை ஆராய்ச்சி செய்த ஞானிகள், விஞ்ஞானிகள் மேல் நம்பிக்கை.
2. அவர்கள் எழுதிய புத்தகத்தின் (சாஸ்திரம்) படி முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம்.

எப்படி உலகத்தில், காண முடியாத விஷயங்களை, உணர்வதற்கே, நாம் ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சியை, அவன் எழுதிய புத்தகத்தை (சாஸ்திரத்தை) நம்புகிறோமோ,
அதுபோல,
உலகத்திற்கும் மேல், கண்ணால் காண முடியாத தேவர்களை உணர, தேவர்களை நேரில் பார்த்த ரிஷிகளையும், அவர்கள் கொடுத்த வேத சாஸ்திரத்தையும்  நம்ப வேண்டாமா?

தேவர்களை பொறுத்தவரை, மனிதன் மிகவும் 'அற்ப பிறவி'.
மனிதன் பூமியில் நிரந்தரமாக, வாழ முடியாதவன். 
மரணம் நிச்சயம் உடையவன்.
மோக்ஷம் அடையும் வரை,  மீண்டும் பிறந்து, இறந்து பூமியில் சுழன்று கொண்டே இருப்பவன்.
தேவர்களை பொறுத்தவரை, மனிதன் அற்பமானவன் என்று சொல்வதற்கு காரணம் உண்டு.

தன் வீட்டின் சுவற்றிக்கு பின்னால் என்ன நடக்கிறது? என்று தானே அறிய முடியாதவன்.
நாளை என்ன நடக்க போகிறது?  என்றும் தெரியாதவன்.
5 வயதில் என்னென்ன செய்தோம்? என்பதை மறந்தவன்.
படித்த பல விஷயங்கள் மறந்து போய், சில விஷயங்கள் மட்டும் தான் ஞாபகத்தில் வைத்து உள்ளவன்.
எத்தனையோ பேரை வாழ்நாள் முழுதும் பார்த்தும், சிலர் மட்டும் தான் ஞாபகத்தில் வைத்து உள்ளவன்.
எப்பொழுது தனக்கு மரணம்? என்றும் அறியாதவன்.

நம் புத்தி அற்பமானது என்று நமக்கே புரிகிறதே !!
இந்த அற்ப புத்தியை கொண்டு, 'தேவர்களை பற்றி எப்படி நம் புத்தியை கொண்டு  அனுமானிக்கலாம்?'

நம் புத்தியை கொண்டு தெய்வம் 'இப்படி தான் இருக்கும்' என்றால், 
யார் வேண்டுமானாலும் கற்பனையாக தெய்வங்களை உருவாக்கி விடலாமே?

இப்படி பொய் மதங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுமே? அது எப்படி உண்மையாகும்?
அது எப்படி தெய்வமாகும்?


இப்படி மனித புத்தி கொண்டு உருவாக்கப்படும் எந்த தெய்வமும் தெய்வமில்லை, எந்த சாஸ்திரமும் சாஸ்திரமில்லை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.
சிலர் சங்கிலியை கட்டி, இதோ தெய்வம் என்பர்.

மனிதனால் புதிதாக பெயர் கொடுத்து உருவாக்கப்பட்ட தெய்வங்கள் 'உண்மையான தெய்வங்கள் இல்லை'.
அங்கு ஏற்படும் அலைகள் யாவும் மன வியாதியே.
பலர் சேர்ந்து "இது தெய்வம், இது தெய்வம்" என்று சொல்லி, ஒரு மன வியாதியை உருவாக்கிவிடலாம்.

கண்ணால் காண முடியாத தெய்வங்களை, ரிஷிகள் பார்த்து, நமக்கு வேத சூக்தங்களாகவும், புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் அருளினர்.

வேத சாஸ்திரங்கள் சொல்லும் வழியில் நாமும் சென்று, அதன்படி செய்யும் போதுதான், தெய்வங்களை நாமும் உணர முடியும்.




தெய்வங்களை நேரில் பார்த்த ரிஷிகள் கொடுத்த வேதத்தை கொண்டே தெய்வத்தை கண்டு பிடிக்க வேண்டும்.

ரிஷிகளின் வாக்கில் வந்த வேதத்தில் 'இந்திரன், வருணன், ருத்ரன், விஷ்ணு, யமன்' என்று பல தேவதைகளின் பெயர் சொல்லப்படுகிறது.

இந்த தேவதைகள் அனைவரும் "உண்மை" என்பதை நீ வேதத்தின் வாக்கினாலும், ரிஷிகளின் சுய அனுபவத்தாலும் நம்பலாம்.

வேத சாஸ்திர படி, வருண ஜெபம் செய்தால், மழை பெய்யும். 
இதை நீயும் அனுபவத்தால் உணரலாம். 
வருண தேவன் உண்மையில் தேவனே என்று உணர்வாய்.

வேதத்தில் சொல்லாத, மனிதன் கற்பித்த தெய்வங்களை, தெய்வங்கள் என்று நம்பி விடாதே.

மெய் ஞானிகளான (உண்மையை அறிந்த) ரிஷிகள் அளித்த வேதத்தில் என்ன சொல்லி உள்ளதோ அதுவே ப்ரமாணம் என்று உணர்வாயாக. 
அதில் உள்ள தேவதைகளே உண்மையான தெய்வங்கள்.

தனக்கு தோன்றிய தேவதைகளை மனிதர்கள் உருவாக்கி கஷ்டப்படுகிறார்கள். தன்னையே ஏமாற்றி கொள்கிறார்கள்.

தெய்வங்களுக்குள்ளே பேதம் (உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு) உண்டா? என்ற உன்னுடைய கேள்விக்கு, 
"பேதம் இல்லை" என்பதாக சில இடங்களில் வேத வாக்கியம் இருக்கிறது.

ச ப்ரம்மா சசிவஸ்தேதிஹ்ய
வேத ஸ்ருதி வாக்ய:
என்று வேதம் சொல்லும் போது, 
'அவனே ப்ரம்மா, அவனே சிவன், அவனே விஷ்ணு 
அவனே எல்லாமுமாக இருக்கிறார்'
என்று அபேதமாக சொல்கிறது.

அபேதம் தெரிவதால், 'அத்வைத' சித்தாந்தமும் வேதத்தில் சொல்லப்படுகிறது."
என்றார் ப்ருகு.

முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து, மேலும் ப்ருகு சொன்னார்,
"தெய்வங்களுக்குள்ளே பேதம் (உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு) உண்டா? என்ற உன்னுடைய கேள்விக்கு, 'பேதம் உண்டு' என்பதாகவும் சில இடங்களில் வேத வாக்கியம் இருக்கிறது.
'இந்திரன், விஷ்ணு, ருத்ரன் போன்ற தெய்வங்கள் இருக்கிறார்கள்' என்று வேதமே பிரித்து காட்டுகிறது.


இப்படி பிரித்து சொல்வதாலேயே, தெய்வங்களுக்குள்ளே  'பேதம்' இருப்பது தெரிகிறது.

யார் ச்ரேஷ்டமான தெய்வம்?
யாரை வணங்கினால் எனக்கு மோக்ஷம் கிடைக்கும்?
சம்சார சாகரத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்? என்று கேட்டாய்.

அக்னிர் தேவானாம் அவம:
விஷ்ணு பரம:
என்று வேத வாக்கியம் இருக்கிறது.

'விஷ்ணு' முதல் தெய்வமாகவும், 
'அக்னி' கடைசி தெய்வமாகவும் இருக்க, 
வேதத்தில் சொன்ன அனைத்து 'பிற தேவதைகளும்' இவர்களுக்கு அந்தர்கதமாக இவர்களுக்கு 'இடையில் இருக்கின்றனர்' 
என்கிறது வேதம்.
இதன் காரணமாக தான், ப்ரம்மத்தை உபாஸிக்கும் ப்ராம்மணர்கள், அக்னி வளர்த்து, விஷ்ணுவை ஆராதனை செய்கிறார்கள்.

'அக்னியையும், விஷ்ணுவையும் பூஜித்தால், இவர்களுக்கு இடையில் இருக்கும் அனைத்து தேவர்களையும் பூஜித்ததாகும்' 
என்று வேதமே அங்கீகரிக்கிறது.
விஷ்ணு: பரம:
என்று வேத ஸ்ருதி சொல்கிறது.
'விஷ்ணுவே பரப்ரம்மம்'
என்று சொல்லும் வேதம், மற்ற தெய்வங்களுக்குள்ளே, அனைத்திலும் அந்தர்யாமியாக விஷ்ணுவே இருக்கிறார் என்று சொல்கிறது.

இப்படி, அக்னி, விஷ்ணு, இந்திரன் என்று வேதமே பிரித்து காட்டுவதால், 'பேதம்' தெளிவாக தெரிகிறது.
பேதம் தெரிவதால், 'த்வைத' சித்தாந்தமும் வேதத்தில் சொல்லப்படுகிறது.

மேலும், 
'தெய்வங்களில் ச்ரேஷ்டமான தெய்வம் யார்?' 
என்று நீ கேட்ட கேள்விக்கு, வேதமே பதில் சொல்கிறது.
நம் புத்தியால் சொல்லக்கூடாது.

வேதமே, விஷ்ணுவாகிய "நாராயணனே" முதல் தெய்வம் என்று சொல்கிறது.
'நீ அவரை உபாசித்தால், உனக்கு மோக்ஷம் கிடைக்கும்' என்பதில் சந்தேகமில்லை"
என்றார் ப்ருகு ரிஷி.

முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து, மேலும் ப்ருகு சொன்னார்,
"தெய்வங்களுக்கு உள்ளே பேதம் உண்டா, இல்லையா? என்று நீ கேட்ட கேள்விக்கு, வேதம் இரண்டுமே உண்மை தான் என்று சொல்கிறது.


சில வேத வாக்கியங்கள்,
'தெய்வங்களுக்கு உள்ளே பேதம் உண்டு' என்று, த்வைதமாக சொல்கிறது.
சில வேத வாக்கியங்கள்,
'தெய்வங்களுக்கு உள்ளே பேதம் இல்லை' என்று, அத்வைதமாகவும் சொல்கிறது.

வேதமே பேதத்தையும் (த்வைதம்), அபேதத்தையும் (அத்வைதம்) சொல்லுவதால், இரண்டுமே உண்மை தான்.
வேதம் பொய் பேசுவதில்லை.

'தெய்வங்கள் வெவ்வேறு' என்று பேதத்தை சொல்லும் வேத ஸ்ருதியை மட்டும் எடுத்துக்கொண்டு முடிவு எடுக்க கூடாது.
அதேபோல,
அனைத்தும் 'ஒருவனே' என்ற அபேதத்தை சொல்லும் வேத ஸ்ருதியை மட்டும் எடுத்துக்கொண்டும் முடிவு எடுக்க கூடாது.

வேதத்தின் உட்பொருளை உணரும் போது, வேதத்தின் உண்மையான அபிப்ராயம் என்ன? என்று புரிந்து விடும்.

தெய்வங்களுக்குள்ளே பேதமா, அபேதமா? அதில் உமக்கு எதில் சம்மதம்? என்று கேட்டாய்.
வேதத்திற்கு எது சம்மதமோ, அதுவே என் சம்மதம்.

'வேதம் ஒரு இடத்தில் அபேதமாக இருக்கிறார் என்றும், மற்றொரு இடத்தில் பேதமாக இருக்கிறார் என்று சொல்வதே' எனக்கும் சம்மதம்.
'அத்வைதமும் உண்மை, த்வைதமும் உண்மை' என்பதால், இரண்டையும் சேர்த்து ஏற்று கொள்ளும் விஷிஷ்ட அத்வைதமே வேதத்தின் உண்மையான அபிப்ராயமாக உள்ளது.

இதுவே என் அபிப்ராயமும் கூட.

(947 AD முதல் 1947 AD வரை, பாரத தேசத்தில், ஹிந்துக்களுக்கு வர இருக்கும் பெரும் ஆபத்தில் இருந்து சமாளிக்கும் தெம்பு கொடுக்க, த்வைதம், அத்வைதம், விஷிஷ்ட அத்வைதம் போன்ற சித்தாந்தத்தை பாரதத்தில் நிலை நிறுத்த “ஆதிசங்கரர்”, “ஸ்ரீ ராமானுஜர்”, “மத்வ ஆச்சாரியார்” அவதாரம் செய்து, ஹிந்துக்களின் மனதில் ஹிந்து தர்மத்தின் மேன்மையை விளக்கி, பொய் மதங்களில் வீழ்ந்து விடாமல் தடுத்தனர் . Further read - http://www.proudhindudharma.com/2018/05/947-1947.html )

வேதம் அபேதமாக பேசும் போது, பரப்ரம்மமாக இருக்கும் அந்த லட்சுமி பதியான விஷ்ணுவே, மற்ற அனைத்து ஜீவனிடத்திலும், அனைத்து உலகத்திலும் பரவி இருக்கிறார் என்கிறது.
அவரே பரப்ரம்மம்.
அவர் ஒருவரே பரமாத்மா. 
அவர் ஒருவரே என்றும் இருப்பவர். 
அவரே அனைத்துமாக இருக்கிறார் என்று சொல்கிறது.
இதுவே உண்மை.
வேதம் 'பேதமாக' பேசும் போது, 
சிவன், யமன், இந்திரன், என்று பல தெய்வங்களை பெயர் குறிப்பிட்டு சொல்கிறது.

நாராயணனே பரவாசுதேவன் என்று சொல்லும் வேதம், அக்னி தேவனை உயர்த்தியும்  ஸ்தோத்திரம் செய்கிறது.


வேதம் 'அபேதமாக' சொல்லும் போது, வேதம் அந்த நாராயணனின் விராட் ஸ்வரூபத்தை பார்த்து துதிக்கிறது.
விஷ்ணுவாக அனைத்தும் நானே என்று இருக்கும் பரப்ரம்மத்தை பார்த்து, அவன் கண்களே அக்னி தேவனாக இருப்பதை கண்டு, அவன் கண்களுக்கு ஜெய கோஷம் போடுகிறது வேதம்.

வெளியோட்டமாக பார்க்கும் போது, அக்னி தேவனை வேதம் துதிப்பதாக தோன்றும்.

வெளியோட்டமாக பார்க்கும் போது, தெய்வங்களுக்குள்ளே பேதம் இருப்பது போல தோன்றும்.

ஞானிகளுக்கு, வேதத்தில் அக்னியை குறித்து வரும் வேத மந்திரங்களை கேட்கும் போது, அந்த நாராயணனின் அங்கமாக இருக்கும் அவன் கண்களுக்கு பூஜை செய்யும் உண்மை புலப்படும்.

இப்படி இந்திரனை குறித்து வரும் வேத மந்திரங்கள் விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனின் புஜங்களை குறித்து பாடுகிறது என்று புரியும்.

இப்படி பேதமாக வரும் அனைத்து வேத மந்திரங்களும், அந்த விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனுக்கு செய்யும் அங்க பூஜை என்று ஞானிகள் உணர்கின்றனர்.

நாராயணனின் அங்கங்களில் தேவதைகள் அடக்கம்.
அக்னி தேவன் அவர் கண் ஒளியாக இருக்கிறார்.
அல்ப ஆசைகளை நாடுபவன், அக்னியை குறிக்கும் வேத மந்திரங்களை சொல்லும் போது, அக்னி தேவனை மட்டுமே தியானிக்கிறான்.
அக்னி தேவன் கண் பார்வை தருகிறார். ஆரோக்கியம் தருகிறார்.

மோக்ஷத்தை விரும்புபவன், அக்னியை குறிக்கும் வேத மந்திரங்களை சொல்லும் போது, அக்னி தேவனை நினைக்காமல், நாராயணனின் கண்களாக  தியானிக்கிறான்.
அக்னி தேவன் கண் பார்வை தருகிறார். ஆரோக்கியம் தருகிறார்.
மேலும், 
நாராயணன் மகிழ்ச்சி அடைந்து, தன்னையே தருகிறார். பக்தி தருகிறார். பிறவி கடலில் இருந்து மீட்டு, மோக்ஷமும் தந்து விடுகிறார்.

ஒரே வேத மந்திரம் தான். 
அல்ப ஆசை உள்ளவன் அல்ப பலன்களை பெறுகிறான்.

அதே வேத மந்திரத்தை சொல்லி, ஒரு ஞானி அல்ப பலன்களையும் பெறுகிறார், மோக்ஷத்தையும் பெறுகிறார்.

இப்படி அபேதமாக வரும் அனைத்து வேத மந்திரங்களும், அந்த விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனையே பூஜை செய்கிறது என்றும் ஞானிகள் உணர்கின்றனர்.

இப்படி வேத மந்திரங்கள் எதையும் விலக்காமல், அதன் உண்மையான நோக்கத்தையும், அர்த்தத்தையும் உணர்ந்து, இரண்டு சித்தாந்தமும்  ஒவ்வொரு விதமாக அந்த நாராயணனை தான், பூஜை செய்கிறது என்பதால், இந்த விஷிஷ்ட அத்வைதமே எனக்கும் சம்மதம்"
என்றார் ப்ருகு முனிவர்.

சந்தேகம் தீர்ந்த, முசுகுந்த சக்கரவர்த்தி மேலும் கேட்டார்,
"நாராயணனே பரப்ரம்மம். அவரே அனைத்துமாக இருக்கிறார். அபேதமாக இருக்கிறார் என்ற உண்மை புரிந்து கொண்டேன்.

'தான் ஒருவனே தெய்வம்' என்று இருக்காமல், தன் அங்கங்களாக இருக்கும் பல தெய்வங்களை நியமித்து, பேதமாக காட்டி கொள்வது ஏன்?"
என்று கேட்டார்.


ப்ருகு சொன்னார்,
"ஜனங்களுக்கு பல வித பலன்களில் ஆர்வம் இருப்பதால், நாராயணன் தன்னை பேதமாக காட்டிக்கொள்கிறார்.
மகா கருணை உடையவர் நாராயணன்.

'தன்னை நேரிடையாக வணங்கினால் தான்' அல்ப பலன்களாக இருந்தாலும் கொடுப்பேன் என்று பிடிவாதம் செய்வதில்லை.

எப்படி ஒரு மருத்துவன் (டாக்டர்) வரும் நோயாளிக்கு 'ஒரே மருந்து' என்று கொடுக்காமல், 
அந்தந்த வியாதிக்கு அதற்கு தகுந்த மருந்து அளிப்பானோ,
அது போல, சர்வேஸ்வரனான நாராயணன், 
அக்னி தேவனை வழிபட்டால் இந்த பலன், 
ருத்ரனை வழிபட்டால் இந்த பலன், 
பிரம்மாவை வழிபட்டால் இந்த பலன்,
சாக்ஷாத் பரவாசுதேவனான தன்னையே வழிபட்டால் 'மோக்ஷம்' என்று, பிரித்து, 
அததற்கு ஆசைப்படும் ஜனங்களுக்கு அந்தந்த தெய்வங்களிடம் பிரியம் வளர செய்கிறான்.

நாராயணனுக்கு, பல வித ஆசைகள் கொண்ட ஜனங்களுக்காக பல வித தெய்வங்களை நியமித்தார்.
'படைத்தல், காத்தல், அழித்தல்' என்ற மூன்று காரியங்களுக்கு, நாராயணன்,
ப்ரம்மாவை 'படைக்கும்' தொழிலை செய்யுமாறு படைத்தார்.
சிவபெருமானை பிரளய காலத்தில் 'சம்ஹாரம்' என்ற அழிக்கும் பொறுப்பை செய்யுமாறு படைத்தார். 
இவர்களுக்குள்ளே அந்தர்யாமியாக தானே இருக்கிறார். பார்க்க பேதமாக தெரிகிறார்.
தானே 'காக்கும்' தொழிலை ஏற்று, விஷ்ணுவாக வ்யூக அவதாரம் செய்கிறார்.

'தான் படைத்த எந்த பிறப்பும் கீழானது இல்லை' என்று காட்ட, மகா கருணை கொண்டு, தானும் கூடவே அவதாரம் செய்கிறார்.

முப்பத்து முக்கோடி தேவர்களை நியமித்து, தானும் ஒரு தேவன் என்று அவதாரம் செய்து கொள்கிறார்.
இந்திரனின் தம்பி 'உபேந்திரன்' என்று அவதாரம் செய்கிறார்.

மற்ற தேவர்களுக்கு, 'இவரும் ஒரு தேவன் தானே' என்று நினைக்கும் அளவுக்கு தன்னை சுலபமாக்கி கொண்டு தேவர்களுடன் பழகுகிறார்.

தேவர்களிடம் மட்டுமா!!, திடீரென்று, 'மீனாகவும், பன்றியாகவும்' தன்னை அவதாரம் செய்து கொண்டு விடுகிறார்.

ரிஷிகளுக்கு நடுவே ஒரு 'ரிஷி'யாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.

மனிதர்களுக்கு நடுவே தானும் ஒரு 'மனிதனாகவும்' அவதாரம் செய்து விடுகிறார்.

'தான் ஒருவனே தேவன்' என்ற கர்வமே இல்லாமல், மகா கருணை கொண்டு அவதாரம் செய்து விடுகிறார்.

'உபேந்திரனும்' தன்னை போன்ற ஒரு தேவன் தான் என்று தேவர்கள் நினைப்பது போல,
வராக அவதாரம் செய்த போது, பன்றிகளாக உள்ள ஜீவன்கள் இவரும் தன் ஜாதி தான் என்று நினைத்தனவாம்.

மனிதனாக அவதாரம் செய்தாலும், மனிதர்கள், இவரும் மனிதன் தானே என்று பேசுவர்.

இவர் பரவாசுதேவன் என்ற உண்மையை, இவரின் குணத்தாலும், சரித்திரத்தாலும் மட்டுமே கண்டு கொள்ள இயலும்.

ப்ரம்மா, சிவனுக்கு நடுவில், தானும் ஒரு தொழிலை செய்யும் தெய்வம் என்று சொல்லிக்கொண்டு 'விஷ்ணுவாக' வ்யூஹ அவதாரம் செய்து கொண்டார்.


மஹாவிஷ்ணு சாஷாத் அந்த பரம்பொருளே என்று பிரம்மாவும், சிவனும் உணர்ந்து இருந்தனர்.

ஒரு முறை நாரதர், தன் பிதா ப்ரம்மாவிடம்,
'வேதமே உங்களால் தான் கொடுக்கப்பட்டது என்ற பொழுது, தாங்களே பரப்ரம்மம் என்று சொல்லி கொள்ளலாமே?' என்று கேட்டார்.

அதற்கு ப்ரம்மா, 'யார் வேண்டுமானாலும் தன்னை பரம்பொருள் என்று சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால், வேதத்தின் அபிப்ராயம் அப்படி இல்லையே.

வேத வாக்கியம், நாராயணன் மட்டுமே பரப்ரம்மம் என்று சொல்கிறதே. அப்படி இருக்க, நான் பரப்ரம்மம் என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்'
என்று பதில் சொன்னார்.

(புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?
யார் ஒருவரே புருஷன்? Click Here to Read )

இப்படி பல தெய்வங்களை படைத்து, அனைவருக்கும் தானே அந்தர்யாமியாகவும் இருந்து, அவர்களுக்குள்ளே தானும் அவதாரம் செய்து பழகி, அனைவரையும் தன் மீது பக்தி செய்ய செய்து மோக்ஷம் கொடுக்கும் வரை கூடவே இருக்கிறார் நாராயணன்.

பிரகலாதன் இந்த ஞானத்துடன் இருந்ததால் தான், நாராயணனே எங்கும் வியாபித்து உள்ளார் என்று பார்த்தான்.
தன்னை சூலத்தால் குத்த வரும் அசுரர்களை பார்த்து, பிரகலாதன் சொல்கிறான்,
'என்னை குத்த வரும் உங்களிடத்திலும் நாராயணனே இருக்கிறார். என்னிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.
நீங்கள் குத்த வைத்திருக்கும் சூலத்திலும் நாராயணனே இருக்கிறார். உங்களை இங்கு அனுப்பிய என் தந்தையிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.' என்றான்.

பேதமாக உலகம் தெரிந்தாலும், ஞானிக்கு அபேதமாகவே உலகம் தெரிகிறது.
அனைத்தும் நாராயண ஸ்வரூபமாகவே தெரிகிறது. 
அஞானியாக இருந்தால் உலகம் பேதமாக தெரிகிறது. 
இரண்டும் உண்மையாக பக்குவத்தை பொறுத்து தெரிகிறது.
இதுவே விஷிஷ்ட அத்வைதம்.

இந்த ஞான நிலையில் பிரகலாதன் நாராயணனை பக்தி செய்தான்.
நாராயணனின் கருணைக்கு பாத்திரமானான்.
நரசிம்மமாக தரிசனம் பெற்றான். மோக்ஷத்திற்கு தகுதி பெற்றான்.

மோக்ஷத்திற்கு என்ன வழி என்று நீ கேட்டாயே? எனக்கு எது பாதை என்று கேட்டாயே?
நாராயண பக்தி செய்வதே, மோக்ஷத்திற்கு வழி.

நீயும் அந்த நாராயணனிடம் பிரகலாதனை போன்று திடமான பக்தியை செய். 
உனக்கும் தரிசனம் கிட்டும். 
மோக்ஷத்திற்கும் வழி கிடைக்கும்"
என்று ப்ருகு முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து அணுகிரஹம் செய்து, ஆசிர்வாதம் செய்தார்.



சந்தேகம் தெளிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, காஞ்சியில் உள்ள அந்த “ஹேம சரஸ்” என்ற அந்த பொற்றாமரை குளக்கரையிலேயே நரசிம்மமாக வந்த நாராயணனை தரிசனம் செய்ய, பக்தி யோகமாக, தவம் செய்தார்.

ப்ருகு முனிவரின் ஆசி பெற்ற, குரு கடாக்ஷம் பெற்ற முசுகுந்த சக்கரவர்த்திக்கு, காஞ்சியில் வரதராஜனாக இருக்கும் நாராயணன், இவருக்கு "யோக நரசிம்மமாக" (அழகிய சிங்க பெருமாள்) காட்சி கொடுத்தார்.



Wednesday 12 September 2018

கோவில்கள் நிரம்பிய தமிழகத்தை யார் ஆள வேண்டும்? ஒரு அலசல்

ஒரு பெரிய மனிதரை சந்திக்க, அவர் வீட்டுக்குள் நாம் சென்றால், அவர் நம்மை வரவேற்பாரா? என்பது சந்தேகமே.
வரவேற்க வேண்டும் என்ற அவசியம் கூட அவருக்கு இல்லை.
இது சகஜம்.
நம்மை எல்லாம் படைத்தவர் நாராயணன்.



அவரை பார்க்க நாம் கோவிலுக்குள் நுழையும் போது, மனிதர்களை போல மதிக்காமல் இருப்பதில்லை நம் பெருமாள்.
வருவது ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி, வந்திருக்கும் நாம் ஒவ்வொருவருக்கும் தீர்த்தம் கொடுத்து, துளசி கொடுத்து, ஜடாரி வைத்து, தன்னை பார்க்க வந்த நம் அனைவரையும், தன் சார்பில் அர்ச்சகரை அனுப்பி உபசாரம் செய்ய சொல்லி, பின் தன் தரிசனத்தையும் தருகிறார்.
முடிந்தால் புளியோதரை, பொங்கல் என்று தன் பிரசாதத்தையும் நமக்கு தருகிறார்.
கேட்கும் நம் பிரார்த்தனைகளையும், நமக்கு நல்லது கெட்டது பார்த்து கிடைக்க அணுகிரஹமும் செய்து விடுகிறார்.
சும்மா அனுப்புவதே இல்லை பெருமாள்.

க்யூவில் நிற்கும் நாம், பெருமாளை ஒழுங்காக பார்த்தோமா, பார்க்கவில்லையா என்று கூட தெரியாது.
ஆனால் தன்னை தரிசிக்க வரும் அனைவரையும் அவர் பாரத்து விடுகிறார்.

திருமலை போன்ற திவ்ய தேசத்தில், தானே விருப்பப்பட்டு அர்ச்ச அவதாரம் செய்த ஸ்ரீனிவாச பெருமாள், தன்னை தரிசிக்க வரும் பக்தனுக்காக தன் பூஜை, தூக்கம் என்று அனைத்தையும் சுருக்கிக்கொண்டு, நின்று கொண்டே இருக்கிறார்.
வரிசை வரிசையாக வந்து கொண்டே இருக்கும் பக்தர்களை அங்கு இங்கு திரும்பாமல், திரை போட்டு கொண்டு விடாமல், "யார் வந்து இருக்கிறார்கள்? யாருக்கு என்ன அனுக்கிரகம் செய்யலாம்?" என்று நின்று கொண்டே இருக்கிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.
நாம் மூன்று மணி நேரம் நின்றால், அவரோ நம் வருகைக்காக நாம் பிறந்ததில் இருந்து, எப்பொழுது வருவானோ என்று காத்துக்கொண்டு, நின்று கொண்டே இருக்கிறார்.
இதை நினைத்து பார்க்கும் பக்தன், தான் 3 மணி நேரம் நிற்பதை பெரிதாக நினைப்பானா?
அவர் நமக்காக, நம்மை காண, நம் பாவங்கள் பொசுக்க, நமக்கு மோக்ஷம் அளிக்க, நின்று கொண்டே இருக்கிறார் என்று புரிந்து கொண்ட பின்னும், ஒரு பக்தன் தான் 3 மூன்று நேரம் நிற்பதை பெரிதாக நினைப்பானா?

தன் பக்தர்கள் வந்து கொண்டே இருக்க, இந்த கூட்டத்தில் தன்னை பக்தன் பார்த்தானோ இல்லையோ, பெருமாள், பக்தனை கடாக்ஷம் செய்கிறார்.

அரை நொடி தரிசனம் பெற்று வெளியே வரும் பக்தனிடம் 'தரிசனம் கிடைத்ததா? என்று கேட்டால்,
பக்தன் 'மனம் திருப்தி அடைந்தது. ஆஹா... அருமையான தரிசனம்  கிடைத்தது' பூரிப்புடன் சொல்கிறான்.

'ஒரு நொடி தானே தரிசனம் கிடைத்தது?' என்று கேட்டால், 'அந்த ஒரு நொடி தரிசனம் கூட சொல்லமுடியாத திருப்தியை தந்து விட்டது' என்கிறான்.

இந்த திருப்தி நம் மனதில் ஏற்பட காரணம், நாம் அவரை பார்த்ததினால் அல்ல, அவர் நம்மை பார்க்கிறார் என்பதினால் தானே ஏற்படுகிறது.

கூட்டம் தினமும் அலைமோதுவதற்கு காரணம், திருமலையப்பன் கருணையே காரணம்.
நமக்கு எது நல்லதோ அதை நடத்தி வைப்பான் ஸ்ரீனிவாசன்.
கோவிலில் அர்ச்சனை செய்பவர், பகவானின் பிரதிநிதி.
உண்மையான பக்தன் தன்னை பார்க்க வரும் போதும், அர்ச்சனை செய்யும் போதும், பெருமாள் அர்ச்சகர் மூலமாக பக்தனின்  பிரார்த்தனைகளை கேட்கிறார். அனுக்கிரகம் செய்கிறார்.

ப்ராம்மணர்கள் எல்லோரும் அர்ச்சகர் கிடையாது, ஆகி விடவும் முடியாது.

அந்த கோவில்களை கட்டிய அரசர்கள் நியமித்த அர்ச்சகர் குடும்பம் மட்டும் தான் இன்று வரை பூஜை செய்கின்றனர். 

பிராம்மணன் மட்டும் சாமியை தொடலாம், நாங்க தொட கூடாதா? என்று கேட்கும் தெய்வ பக்தி இல்லாத, பொறாமை மற்றும்  காழ்ப்புணர்ச்சி மட்டுமே உடையவர்களுக்கு....

பிராம்மணன் எல்லோரும், கோவில் கற்பக்ரஹத்தில் நுழைந்து மூலவரை தொட்டு பார்த்து இருக்கிறீர்களா? பிராம்மணன் எல்லோரும், கோவில் கற்பக்ரஹத்தில் நுழைவதும் இல்லை, தெய்வத்தை தொடுவதுமில்லை.
அர்ச்சகரை தவிர, ப்ராம்மணனாக இருந்தாலும், பகவானை தொட யாருக்கும் அனுமதி இல்லை.
அர்ச்சகரின் மனைவி கூட கோவில் மூலவரை தொட முடியாது.

அதேபோல, காளி கோவிலில் ப்ராம்மணன் இல்லாத மற்றவர்கள் அர்ச்சகர்களாக இருக்கின்றனர்.
அவர்களை தவிர, பிராம்மணன் கூட அம்பாளை தொட அனுமதி இல்லை.

தெய்வத்தை வழிபட யாருக்கும் அனுமதி உண்டு.
ஆனால், ஆகம விதிப்படி கோவிலில் அமைந்த தெய்வத்தை, தொடுவதற்கு அனுமதி அனைவருக்கும் கிடையாது.

யாவருக்கும் பெருமாளை தொட வேண்டும் என்கிற ஆசை இருக்கும் என்பதால் தானே, ஒவ்வொரு வீட்டிலும் அதே போன்ற பெருமாளை பஞ்ச லோகத்தில் செய்து வழிபட அனுமதித்தனர். இது மறந்து விட்டதா இந்த பொறாமை புத்தி உடையவர்களுக்கு?

சிறிய விக்ரஹம் முதல் பெரிய விக்ரஹம் வரை, வீட்டில்  வழிபடலாமே, பக்தி இருந்தால்.
தியாகப்ரம்மம் தன் கீர்த்தனைகள் முழுவதும் தன் வீட்டில் இருக்கும் ராம விக்ரஹத்தை பார்த்து தானே பாடினார். அவர் பக்திக்கு, ராமர் காட்சி கொடுத்தாரே.
தன் வீட்டில் இருக்கும் தெய்வ விக்ரஹங்களுக்கு ஒரு நாள் அபிஷேகம், அலங்காரம் செய்தது கிடையாது இந்த காழ்ப்புணர்ச்சி கொண்ட பொறாமை கூட்டம்.
தன் வீட்டில் இருக்கும் தெய்வத்திடம் அக்கறை கிடையாது, பக்தியும் கிடையாது,
பொறாமை குணத்தினால், ஆழ்வார்கள் பாடிய பெருமாளையும்,  நாயன்மார்கள் பாடிய சிவனையும் கோவிலுக்கு சென்று தொட வேண்டுமாம் இவர்களுக்கு.

இது போன்ற கீழ்த்தரமான மனிதர்கள் கண்டிக்கப்படவேண்டும்.

பணம் இருப்பவர்கள் special entrance வழியாக காசு கொடுத்து, பெருமாளை பார்க்கின்றனர்.
அவர்கள் காசு கொடுத்து சென்றாலும் பொறாமை.
இதில் சம்பந்தப்படாத அர்ச்சகரிடமும் பொறாமை.








அரசாங்கம் கோவிலை கைப்பற்றிய காலத்துக்கு முன், எந்த கோவிலில் இது போன்று க்யூ நடைமுறை இருந்தது?
ஒரு காலத்தில் மீனாக்ஷி கோவிலில் எளிதாக தரிசனம் பார்த்த சமயங்களில் அதே அர்ச்சகர்கள் தானே இருந்தனர்.
இப்பொழுது அரசாங்கம் special entrance, vip entrance என்று காசு வாங்கினால், கோபம் அர்ச்சகரிடமா?

தெய்வத்தின் அனுக்கிரகம் வேண்டும் நமக்கு. ஆனால் அவருடனேயே இருக்கும் அர்ச்சகரிடம் பொறாமை.
தீபாவளி ஆனாலும், புது வருடம் ஆனாலும், தன் குடும்பத்தை விட, தினமும் காலை 4 மணி எழுந்து குளித்து, கோவிலுக்கு நுழைந்து இரவு 10-12 மணி வரை தனக்கு தொண்டு செய்யும் அர்ச்சகரை, 'பிச்சைக்காரன், திருடன், சோம்பேறி' என்று சொல்லும் உங்களை, தெய்வம் தண்டிக்குமா? கொண்டாடுமா?

பொறாமை குணத்தால் உங்கள் முகத்தில் தெரியும் அழுக்கை கண்ணாடியில் பாருங்கள். எத்தனை கீழ் தரமானவர்கள் நீங்கள் என்று புரியும்.

நாத்தீகன் தெய்வத்தை நம்பவில்லை. அவனுக்கு கோவிலை பற்றியும் அறிவில்லை, தெய்வத்தை பற்றியும் அறிவில்லை, அர்ச்சகர் பற்றியும் அறிவில்லை, தெய்வ நம்பிக்கையோடு செல்லும் எவரிடமும் நம்பிக்கை இல்லை.

கோவில், தெய்வம் என்ற விஷயத்தில் சம்பந்தமில்லாத இந்த நாத்தீக கூட்டத்தை, தெய்வநம்பிக்கை உடையவர்கள் மதிப்பதே அவர்கள் வழிபடும் தெய்வத்துக்கு அவமானம்.

மானமுள்ள ஆஸ்தீகன் (எந்த மத தெய்வத்தை வழிபட்டாலும்), நாதீகனை மதிப்பதே, அவரவர்கள் தெய்வத்தை அவமானப்படுத்துவதாகும்.

"உன் தெய்வமே பொய், உன் நம்பிக்கையே பொய்"
என்று சொல்லும் நாத்தீகன் 'உலகையே உனக்கு வாங்கி தருகிறேன்' என்றாலும், அவனை மதிப்பதே பெரும் பாவம்.
அவன் கொடுத்து நாம் வாங்குவதே, நம் தெய்வத்தை அவமானப்படுத்துவதாகும்.

'உன் தாய் வேசி' என்று சொல்லிவிட்டு, 'நீ நல்லவன்' என்று சொல்பவனை ஒரு நல்ல தாய்க்கு பிறந்தவன் ஏற்றுக்கொள்வானா?
நாத்தீகனுக்கு மரியாதையும், மதிப்பும் கொடுப்பதே ஆஸ்தீகனுக்கு பாவத்தை சேர்க்கும்.

கடந்த 60 ஆண்டுகளில் நாத்தீகனை அரசு பதவியில் அமர்த்தியதன் விளைவை தான் இன்று தமிழகம் பார்க்கிறது.
தமிழை வளர்த்த தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் பாடிய ஓதுவார்கள் ஓரம் தள்ளப்பட்டனர்.
தமிழை வளர்த்த இந்த தெய்வ பாசுரங்களை இவர்கள் நாத்தீக புத்தியால் தடுக்கப்பட்டது.
தமிழ் மொழியை அழித்து, இன்று தமிழை படிக்க தெரிந்த தலைமுறை இல்லாமல் செய்து, கோவில்களில் சொத்துகள் சுரண்டப்பட்டு, கோவில் சொத்துக்கள் அரசுக்கும் மற்ற மதக்காரர்கள் செலவுக்கும் அனுப்பி, கோவில்கள் நிறைந்த தமிழ்நாட்டை, நாத்தீக மடமாக்கி விட்டனர்.

நல்லவனாக இருந்தாலும் அந்த நாத்தீகனை புறக்கணிப்போம்.

ஒரு ஆன்மீக எண்ணம் கொண்ட ஒரு நல்லவன் அரசாள செய்வோம். தெய்வ பாசுரங்கள் மீண்டும் தானே துளிர்க்கும். தமிழ் வளரும்.

தமிழர்கள் அறிவாளிகள் என்பதை உலகம் நம்பிய காலம் போய், இந்த நாத்தீக கூட்டத்தால், "தமிழர்கள் முரண்டு செய்பவர்கள், நாத்தீகம் தலைக்கு எரியதால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவர்கள், மடையர்கள், மதராசி திருடர்கள்" என்ற பிரமையை நீக்க வேண்டிய கட்டாயம் ஆன்மீக எண்ணம் கொண்ட அனைத்து தமிழனுக்கும் உண்டு.

கோவில்கள் நிரம்பிய தமிழகத்தை ஆன்மீகவாதியே ஆள வேண்டும்.
பதவி ஆசை பிடித்த நாத்தீக கூட்டம் ஒடுக்க பட வேண்டும்.

பெருமாளை விட்டு விடாமல், எப்பொழுதும் கூடவே இருந்து கைங்கர்யம் செய்யும் அர்ச்சகருக்கு 5 ரூபாய் தட்டில் போட்டால் குறைந்து விடுவோமா?
தெய்வத்தின் முன் நின்றும் பொறாமை குணம் நமக்கு வேண்டுமா?
நாம் தரிசனம் செய்ய செல்லும் பகவானை, கூடவே இருந்து பார்த்து கொள்ளும் அர்ச்சகர் மீது மரியாதை வேண்டாமா?
நம் குறைகளை பெருமாளிடம் போய் சேர்க்கும் அர்ச்சகரிடம் பொறாமை உள்ளவனுக்கு, அடுத்த பிறவியில் மனித பிறவி கிடைக்குமா?
ஊரில் உள்ளவன் எல்லாம், படித்து டாக்டர் ஆகலாமா? வெளிநாடுகள் செல்லலாமா? சைடு பிசினஸ் பண்ணலாமா? என்று பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்க,
தான் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலும், ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை, குடுமி வைத்து இருப்பதை பார்த்து கேலி செய்தாலும் பரவாயில்லை, ஊர் மக்கள் அனைவரும் காலி செய்து, பணம் சம்பாதிக்க வெளிநாடு சென்றாலும் பரவாயில்லை, கோவிலை சுற்றி இருந்த  ஹிந்துக்கள் மானங்கெட்டு தன் வீட்டை பிற மதத்த்தவனுக்கு  விற்று விட்டு கோவில் உத்ஸவம் நடத்த முடியாமல் செய்தாலும் சரி, இந்த கோவிலே எனக்கு கதி, கல்யாணம் செய்து கொள்ள பெண் கொடுக்க மறுத்தாலும் இந்த கோவிலில் தீபம் ஏற்ற நான் என் வாழ்க்கையை தியாகம் செய்கிறேன்' என்று இன்றும் 'பெருமாள் ஒன்றே சரணம்' என்று வாழும் அர்ச்சகர்கள் மீது பொறாமையா?
இவர்களிடம் நீங்கள் காட்டும் பொறாமை உங்கள் வம்சத்தையும் சேர்த்து சபிக்குமே!

108 திவ்ய தேசங்களில் திருப்பதி ஒன்று தான் இந்த பொறாமை குணம் கொண்டவர்களுக்கு தெரியுமா?
எத்தனை கோவில்கள் கும்பாபிஷேகம் கூட செய்யப்படாமல், ஏழை அர்ச்சர்கள் எதையும் எதிர்பார்க்காமல் தினமும் காலையிலிருந்து இரவு வரை உள்ள சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றனர்.
தவ வாழ்க்கை வாழும் அர்ச்சர்கள் குடும்பத்தை இந்த பொறாமைக்காரர்கள் கண்டதுண்டா?
காஞ்சியில் உள்ள திவ்ய தேச கோவில்களின் நிலைமையும், கும்பாபிஷேகம் கூட செய்ய முன் எடுக்காத இந்த ஹிந்துக்களின் நடுவே, அந்த கோவில் உள்ள பெருமாளுக்கு, பூஜைகளை காலம் தவறாமல் செய்து கொண்டு, வரும் ஒரு சில பக்தர்களிடமும் "கோவில் கும்பாபிஷேகத்திற்காகவாவது முயற்சி செய்யுங்களேன்" என்று கூட கேட்காமல், பெருமாளை காட்டி, துளசியும் தீர்த்தமும் கொடுத்து உபசாரம் செய்கிறார்களே. இவர்களிடம் கூட பொறாமையா?

பெருமாளுக்கு, பணக்காரனும் ஒன்று தான், ஏழையும் ஒன்று தான்.
அவரை பொறுத்தவரை, தன் மரியாதையை, வரவேற்பை தராமல் இருப்பதில்லை.

பணம் கொடுத்து பார்த்தத்தினால் மட்டும் பகவான் தரிசனம் தந்து விடுவாரா?
தெய்வத்தை பொறுத்தவரை 'பக்தி இருக்கிறதா?' என்று தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

பக்தி இல்லாமல், கோவிலுக்கு வந்து பணம் கொடுத்து வேகமாக தரிசனம் செய்தாலும், ஒன்றும் கொடுக்காமல், சாதாரண க்யூவில் ஒரு மணி நேரம் நின்று, தரிசனம் செய்தாலும்,
பகவான் மகிழ்ச்சி அடையப்போவதில்லை.

உண்மையான பக்தி உள்ளவன், தரிசனம் செய்வதே பாக்கியம் என்று கருதுவான்.



உண்மையான பக்தி உள்ளவன், பணக்காரன் காசு கொடுத்து வேகமாக தரிசனம் பெற்று செல்வதை பார்த்து கூட பொறாமைப்பட மாட்டான்.
மாறாக, தான் வெகு நேரம் கோவிலில் அவருக்காக காத்து இருந்து தரிசிப்பதை ப்ரயோஜனமாக கருதுவான்.

பகவான் சிலருக்கு வேகமாக தரிசனம் தந்து விட்டு, அனுப்பி விடுவார்.
பக்தனான தன்னை கொஞ்ச நேரம் தன் சந்நிதியில் நிறுத்தி, தன்னிடம் கொஞ்சம் அதிக நேரம் இங்கே இருக்க வைத்த கருணையை நினைப்பான்.
பக்தன் க்யூவில் காத்து இருந்தாலும், "பெருமாள் தன்னை இங்கேயே தன் சந்நிதியில் கொஞ்ச நேரம் நில் என்று சொல்கிறார் போலும்" என்று நினைத்து அதிலும் ஆனந்தப்படுவான்.

பொறாமை குணம் கொண்ட, பக்தி இல்லாதவன், எவனோ காசு கொடுத்து பார்த்தான் என்று, அர்ச்சகரிடமும், காசு கொடுத்து பார்த்தவனிடமும், அரசிடமும் கோபப்பட்டு, இறுதியில் கடவுளிடமும் கோபப்பட்டு, சாபத்தை வாங்கி கொள்கிறான்.

பொறாமை குணத்தை விட்டு, பக்தியை வளர்த்துக்கொள்வோம்.

தமிழ்நாட்டை இனி ஆன்மீக எண்ணம் கொண்டவர்களே ஆள அனுமதிப்போம்.

கோவிலில் பாசுரங்கள் மீண்டும் புத்துயிர் பெற செய்வோம். தமிழை எப்படி வளர்த்தோமோ, அதே போன்று மீண்டும் வளர்ப்போம்.

இடிந்து போன நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழக  கோவில்களை புதுமை படுத்துவோம்.

காட்டுவாசி போன்ற, நாத்தீகம் பேசும் மடையர்கள் அல்ல தமிழர்கள்,
இறையாண்மை உள்ள தமிழக மக்கள் என்ற உண்மையை மற்ற மாநில அரசுக்கும், மக்களுக்கும்  காட்டுவோம்.

கூடி வாழ்வோம்.

ஹிந்துவாக பிறந்ததில் பெருமை கொள்வோம்.
  • கோவில்கள் கொட்டி கிடக்கும் தமிழகத்தில்,
  • 63 நாயன்மார்கள் பிறந்த தமிழகத்தில்,
  • 12 ஆழ்வார்கள், ராமானுஜர், ஸ்ரீ ராகவேந்திரர் போன்ற மகான்கள் அவதரித்த தமிழகத்தில்,
  • அகஸ்தியர் போன்ற ரிஷிகள் அவதரித்த தமிழகத்தில்,
  • ஆயிரக்கணக்கான சித்தர்கள் அவதரித்த தமிழகத்தில்,
பிறந்தவர்கள் என்று பெருமை கொள்வோம். புரிய வைப்போம்.



நாத்தீகம் பேசுபவனை தலையெடுக்க விடுவதே தமிழகத்தின் கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும், ஆயிரக்கணக்கான கோவில்களையும் அவமானப்படுத்தியதாகும்.
ஆன்மீகம் துளிர்க்க செய்வோம்.
ஆன்மீக அரசியலை வரவேற்போம்.
ஆன்மீக எண்ணம் கொண்ட நல்லவர்களுக்கு துணை நிற்போம்.
தமிழை காப்போம்.




Friday 7 September 2018

கடவுள் உண்டு என்று சொல்வது "மனித இயல்பு". யோகம் என்றபொருள் என்ன?

யோகம் என்ற இந்த சமஸ்கரித சொல்லுக்கு "சேர்க்கை" என்று தமிழில் பொருள் கொள்ளலாம்.

ஒரு புத்தகத்தை, நாம் மீண்டும் மீண்டும் படிக்கும் போது, அந்த விஷயங்கள் நம் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக சேருகிறது.
இந்த சேர்க்கையை தான் 'யோகம்' என்று சொல்கிறோம்.

ஒரு விஷயத்தை, தொடர்ந்து செய்யும் போது, ஒரு சமயத்தில் படித்தது எல்லாம் இதயத்தில் சேர்ந்து விடுகிறது.
இந்த சேர்க்கையை தான் 'யோகம்' என்று சொல்கிறோம்.
இதயத்தில் பதிந்துவிட்ட பின், அதுவே - ஸித்தி பெற்ற நிலை.
ஒரு விஷயத்தில் ஸித்தி அடைந்தவனை "ஸித்தன்" என்கிறோம். யோகி என்கிறோம்.

ஸித்தி பெற்ற (மனதில் பதிந்து விட்ட) நிலையில், வெளி புத்தகம் இனி தேவையில்லை என்ற நிலைக்கு வருகிறான்.
தானே புத்தகம் ஆகிறான்.
புத்தகத்தை விட ஆச்சர்யமாக விளக்கி சொல்லும் அளவுக்கு ஆற்றல் பெறுகிறான்.

அவரவர் தகுதி, திறமைக்கு ஏற்ப, ஒவ்வொரு நிலையில் இந்த யோகம் ஏற்படுகிறது.

ஒரு மாணவனுக்கு, ஒரு முறை ஒரு புத்தகத்தை படித்தாலே அது மனதில் சேர்ந்து (யோகம்)  விடுகிறது.
இன்னொரு மாணவனுக்கு பத்து முறை திரும்ப திரும்ப ஒரு புத்தகத்தை படித்த பின், அது மனதில் சேர்ந்து (யோகம்) விடுகிறது.
ஒரு மாணவனுக்கு ஆயிரம் முறை திரும்ப திரும்ப ஒரு புத்தகத்தை படித்த பின், அது மனதில் சேர்ந்து (யோகம்) விடுகிறது.

அவரவர் தகுதி, திறமை அடிப்படையில் அனைவரும் யோகியாக முடியும், ஆனால்  முயற்சியில் தான் வேறுபாடு உள்ளது என்று தெளிவாக சொல்வது சனாதன தர்மம் என்ற இன்றைய ஹிந்து மதம்.

அனைவரும் ஒரு ஜென்மத்தில் மோக்ஷம் அடைவார்கள் என்று சொல்லும் மதமும், ஹிந்து மதம் தான்.
'நிரந்தர நரகம் செல்வான்' என்று உளராத மதம், ஹிந்து மதம்.

மீண்டும் மீண்டும் ஒரே காரியத்தை செய்யும் பொழுது, அந்த விஷயம் மனதில் சேருகிறது (யோகம்).
ஒரு சமயம் ஸித்தி ஆகிறது.
எப்பொழுது யோகம் (இந்த சேர்க்கை) நமக்கு ஸித்தியாகும் என்பது நம் தகுதி, திறனை பொறுத்தது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நமக்கே நம் திறன், தகுதி என்ன? என்று கண்டுபிடிக்க முடியாது.

எத்தனை தடவை மீண்டும் மீண்டும் முயற்சி செய்யவேண்டும்?
எப்பொழுது ஞானம் (இந்த சேர்க்கை) நமக்கு ஸித்தியாகும்? என்பது நம்மால் கணிக்க முடியாது.

இதன் காரணமாக தான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,
"கர்மன் ஏவ அதிகாரஸ்யே,
மா பலேஷு கதாசன |"
என்று சொல்லும் போது,
"உன் கடமையை செய்து கொண்டே இரு" என்கிறார்.

"பலன் எப்பொழுது கனிய வேண்டுமோ அப்பொழுது தானாக கனிந்து விடும்.
முயற்சி செய்து கொண்டே இரு" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

பகவத் கீதையில் இல்லாத உபதேசங்கள் உண்டா? ஸ்ரீ கிருஷ்ணரை தெய்வம் என்று புரிந்து கொள்ளாதவன், மனித வாழ்க்கையை வீண் செய்கிறான்.

இந்த யோகம் என்ற சேர்க்கை பல உண்டு.
ஒரு புத்தகத்தை திரும்ப திரும்ப படித்து, அதன் விஷயங்களை தனக்குள் சேர்ப்பவன் (யோகம்), கல்வி யோகி ஆகிறான்.

பல வித யோகத்தை(சேர்க்கை) பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார் என்று அறிகிறோம்.
"பகவானாகிய தன்னை அடைய, பல வழிகளை சொல்கிறார்.
பக்தி யோகம்,
கர்ம யோகம்,
ஞான யோகம் 
என்று பல யோக வழிகள் பற்றி சொல்கிறார்"

பக்தி யோகம் = ஸ்ரீ கிருஷ்ணனிடம் அன்பை (பக்தியை) எப்பொழுதும் நம் மனதில் சேர்ப்பதே பக்தி யோகம்.
செய்த பக்தியை, பகவானிடம் ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

கர்ம யோகம் = ஒழுக்கமான செயலை (கர்மா) எப்பொழுதும்  சேர்ப்பதே கர்மயோகம்.
செய்த கர்மாவை, பகவானிடம் ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

ஞான யோகம் = உலகம் நிரந்தமற்றது, ஆத்மாவே நான் என்ற உண்மையான அறிவை (ஞான) எப்பொழுதும் சேர்ப்பதே ஞானயோகம்.
இந்த ஜீவாத்மா, பரமாத்மாவின் அங்கம் என்று அறிந்து பகவானிடம் தன்னை ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

அதில்,
* கர்ம யோகத்துக்கு 'ஆசாரம்' அடிப்படை தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
உள்ளும் புறமும் ஒழுக்கமாக இருந்தால், கர்ம யோக வழியில் சென்று, பகவானை அடையலாம் என்கிறார்.

* பக்தி யோகத்துக்கு 'திடமான விசுவாசம்' தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார்.
உலகமே எதிர்த்து நின்றாலும், பகவான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருந்தால், பக்தி யோக வழியில் சென்று, பகவானான என்னை அடையலாம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

* ஞான யோகத்துக்கு 'திட  வைராக்கியம்' தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார்.
உலகம் பொய், நாம் நிச்சயமாக இந்த உடலை விட்டு ஒரு நாள் வெளியேறி விடுவோம். உலகம் நம்மை பொறுத்தவரையாவது  நிரந்தரமற்றது என்று எப்பொழுதும் நினைவில் கொண்டு, சுகம் துக்கம், மானம் அவமானம், வெற்றி தோல்வி, ஆரோக்கியம் ரோகம், எல்லாம் வந்தால் வரட்டும், கவலையில்லை என்று வைராக்கியத்தோடு இருந்தால், ஞான யோக வழியில் சென்று, பகவானை அடையலாம்.

நம் கண்ணுக்கு தெரியாத  தெய்வத்திடம் "திடமான நம்பிக்கையுடன் அன்பு (பக்தி) வை"
என்று பக்தி யோக முறைக்கு அடிப்படையாக சொல்லப்படுகிறது.

கண்ணுக்கு எதிரே தெரியும் ஒருவரிடம் அன்பு காட்டவே, நம்மால் முடியவில்லை.




பக்தி யோகம் என்ற முறையிலோ, 'கண்ணுக்கு இன்னும் புலப்படாத பகவானிடம் அன்பு வை' என்கிறது.

ஒருவனை பார்த்து பழகி கூட, நமக்கு அன்பு வராமல் இருக்கிறது, அது எப்படி பார்க்க முடியாத தெய்வத்திடம் அன்பு வைக்க முடியும்?
ஒருவரை பார்க்காமல், பேசி பழகாமல் அன்பு வைப்பது என்பது சாதாரண விஷயமில்லையே.

பகவானிடம் திடமான நம்பிக்கையுடன் கூடிய பக்தி (அன்பு) இல்லாமல், பக்தி யோகம் செய்வது வீண்.

பகவானிடம் திடமான நம்பிக்கையுடன் கூடிய பக்தியுடன் (அன்பு), பக்தி யோகம் செய்தால், பகவான் நம்மிடம் படிப்படியாக தான் இருப்பதை உணர வைப்பார், பேசுவும் செய்கிறார். நம் பாரதத்தில் பிறந்த எண்ணிலடங்கா மகான்களின் சரித்திரம் இதற்கு சான்று.

பிரகலாதன் என்ற சிறுவனுக்கு அடிப்படையாக இருந்தது இந்த திட நம்பிக்கையே.
கஷ்டம் வந்த காலத்திலும், பகவான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை துளி கூட விடவில்லை.
இந்த திட நம்பிக்கையை மனதில் சேர்த்து சேர்த்து(யோகம்) வைத்து இருந்தான் பிரகலாதன்.
இதற்கு பலனாக,  நாராயணன் நரசிம்மமாக காட்சி கொடுத்தார்.

பக்தி யோகம் செய்ய, குருவின் அனுக்கிரகம் தேவை. குரு இல்லாமல் நமக்கு இந்த திட நம்பிக்கை பகவானிடம் வரவே வராது.

காட்டுவாசியிடம் போய் கேட்டாலும் கடவுள் உண்டு என்பான்.
நாகரீகம் உள்ள ஒருவனிடம் கேட்டாலும் கடவுள் உண்டு என்பான்.
கடவுள் உண்டு என்று சொல்வது மனிதனுக்கு உள்ள அடிப்படை தகுதி.

மிருகத்திடன் கடவுள் உண்டா? என்று கேட்டால், அதன் மூளைக்கு இது புரியவே புரியாது.
நம்மை ஒருவர் படைத்து, நாம் வாழ உலகத்தையும் படைத்து இருக்கிறார் என்று மிருகத்தினால் உணர முடியாது.
ஆதலால் தின்று, தூங்கி, இன விருத்தி செய்து கொண்டு,  இருக்கும் காலம் வரை வாழ்ந்து சாகிறது.

நம்மை எல்லாம் ஒருவர் படைத்து இருக்கிறார் என்று பகுத்து அறியும் புத்தியுடைய மனிதனால் உணர முடிகிறது.
====
கடவுள் உண்டு என்று சொல்லும் இனமே மனிதர்கள் மட்டும் தான்.

மனிதனுக்கு மட்டுமே, அறிவு இருப்பதால் "கடவுள் உண்டு" என்கிறான்.

கடவுள் உண்டு என்று சொல்வது "மனித இயல்பு".

காட்டுவாசியில் ஆரம்பித்து ஹிந்து, முஸ்லீம், பௌத்தன், ஜைன, யூத என்று எவரும் "கடவுள் உண்டு" என்பதை மறுப்பதில்லை.

உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் அறிவு உள்ளவர்கள் என்பதால் தான், 98 சதவீத மனித சமுதாயம் 'கடவுள் உண்டு' என்று சொல்கிறது.

மீதம் உள்ள மனித சமுதாயம், மிருகத்தின் மூளை அளவுள்ள புத்தி கொண்டுள்ளதால், பயன்படுத்த முடியாத நிலையில், கடவுள் உண்டு என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

யோசிக்க முடியாத மிருகத்திடம்  "கடவுள் உண்டு" என்றால் புரியாது.
அதுபோல, சில மனித கூட்டத்துக்கும், யோசிக்கும் திறன் இல்லாமல் போவதால், அவர்களுக்கும் புரிவதில்லை.
இவர்களை கண்டு பரிதாபப்படலாம். அவ்வளவு தான்.

"கடவுள் இல்லை" என்று மிருகம் அளவிற்கு மூளை உள்ளவன் சொல்வதை ஆதரிப்பவன் ஹிந்துவாக இருந்தாலும், இஸ்லாமியனாக இருந்தாலும் அவன் 'தன் உள்ளுணர்வை, தன் அறிவை, தன் தெய்வத்தை' அவமானப்படுத்துகிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

"கடவுள் இல்லை" என்று சொல்பவன் அறிவில்லாதவன். அதாவது முட்டாள் மிருகம்.

மிருகத்திற்கு கடவுள் இருப்பது புரியாமல் இருப்பதற்கு காரணம் அது கடவுளை நேரில் பார்த்ததில்லை. பேசியதில்லை.

ஒரு நாய், தன் எஜமானனிடம் அன்பு செலுத்துவதற்கு காரணம், அவனை அது பார்த்தும், அவன் பேச்சை கேட்டும் இருக்கிறது.
கேட்டதாலும், பார்த்ததாலும் தான் அன்பு வருகிறது மிருகத்திற்கு.
பார்க்க இயலாத விஷயங்களில் மிருகத்திற்கு அன்பு வராது.

இதே போல, "கடவுள் இல்லை" என்று சொல்லும் கூட்டமும் மிருக அளவு கொண்ட புத்தி உடையவர்கள்.

நன்றாக கவனித்தால், இந்த முட்டாள் மிருக அளவு புத்தியுடைய, மனித கூட்டம் மட்டுமே "கடவுளை காட்டு.  காட்டு.. காட்டு" என்று கேட்பார்கள்.

மிருகத்தை போன்று, இவர்களும் பார்த்தால் தான், அன்பு வைக்க முடியும், நம்ப முடியும் என்கிற அளவில் மூளை உள்ளவர்கள்.

மனிதனால் மட்டுமே, கண்ணால் காணமுடியாவிட்டாலும், பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், அறிவை கொண்டு மட்டும் ஒருவனிடம் அன்பு செலுத்த முடியும்.

ராஜசோழன், திருவள்ளுவர், வீர சிவாஜி, ராமானுஜர், மஹாத்மா காந்தி இன்று இல்லை. நாம் பார்த்ததும் இல்லை.
விவேகானந்தர் இன்று இல்லை.
இன்று இருக்கும், நமக்கு பிடித்த தேச தலைவர்களை கூட நாம் நேரில் கண்டது இல்லை, பேசியதும் இல்லை.
இருந்தாலும் அவர்கள் நாட்டுக்கு செய்த சேவை, நமக்காக இவர்கள் செய்த தியாகம் போன்றவற்றை 'அறிவை' கொண்டு தியானிக்கும் போது, அவர்களிடம் ஒரு அன்பு உண்டாகிறது.
உறவு கொள்ள முடிகிறது.

அறிவு இருந்தால், பார்க்காமல் போனாலும், பேச முடியாமல் இருந்தாலும், ஆராய்ந்து பார்க்கும் போது, சிலர் மீது அன்பு வருகிறதே?

கண்ணால் காட்டினால் தான் எனக்கு புரியும் என்று இருக்கும் மிருக அளவு புத்தியுள்ள முட்டாளை என்ன செய்ய முடியும்? முட்டாள் முட்டாள் தானே.

இந்த உலகை மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள் உருவாக்கி இயக்கிக்கொண்டு இருக்கிறார் என்பதை கொஞ்சம் அறிவு இருந்தால் கூட புரிந்து கொள்வது எளிதாயிற்றே.

கடவுள் இருக்கிறார் என்பதை பொதுவாக மக்கள் புத்தியை பயன்படுத்தி, ஒத்துக்கொள்கின்றனர்.

98 சதவீத மக்கள், உலகில் 'கடவுள் உண்டு' என்று அறிவு சொல்வதால் நம்புகின்றனர். 'கடவுள் இருக்க வாய்ப்பு உண்டு' என்று அனுமானிக்கின்றனர்.

இன்னும் கொஞ்சம் மேலே போய், எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள், துக்கங்கள், சுகங்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள் போன்றவற்றை உணரும் போது, 'கடவுள் இருப்பது மட்டுமல்ல, அவர் நமக்கு உதவியும் செய்கிறார்' என்று அவ்வப்போது உணருகின்றனர்.

கடவுள் இருப்பதை புத்தியால் உணருவதும், கடவுள் நம்மை காக்கிறார் என்று அவ்வப்போது உணருவதும் பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிறது.

தான் சில இக்கட்டான காலங்களில் அதிர்ஷ்டவசமாக (கண்ணுக்கு புரியாத) காப்பாற்றப்படுவது இறை செயல் என்று உணரும் போது, 'கடவுள் இருக்கிறார்' என்ற நிலையை விட, ஒரு படி மேலே போய், 'தன்னை இந்த சக்தி (கடவுள்) காக்கிறது' என்றும் உணர்கிறான்.

அதற்கும் ஒரு படி மேலே போய், தனக்கும், அந்த கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு. அவரிடமிருந்து தான் நாம் வந்துள்ளோம். அதனால் தான், கடவுள் நம்மை  மறைமுகமாக நின்று காக்கும்போது, சில சமயங்களில் நம் புத்திக்கு புரிகிறது.
ஒரு குரு, உபதேசம் செய்து, நமக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் உள்ள சம்பந்தத்தை சொல்லும் போது, 'நம்மை காப்பவரே இவர் தான்' என்ற தெளிவு பிறக்கிறது.

இதுவே திட நம்பிக்கையாக மாறும் பொழுது,
"கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான்" என்று சந்தேகம் இல்லாமல் நம்பும் போது, அவன் தெய்வத்திடம் அன்பை (பக்தியை) செலுத்த ஆரம்பிக்கிறான்.
உலக பயத்தை விடுகிறான்.

யோகம் என்றால் சேர்க்கை என்று முன்னமே சொன்னது போல, தெய்வத்திடம் அன்பை (பக்தியை) திடமான நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்க, இவன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இறை பக்தி சேர ஆரம்பிக்கிறது (யோகம்).
இதுவே, நாளைடைவில், இவன் இதயத்தில் உள்ள காமம், கோபம், பொறாமை போன்ற குணங்கள் அழித்து, இதயம் சுத்தமாகி, அதில், இவன் தினமும் திட நம்பிக்கையுடன் அன்பு செய்த ஸ்ரீ கிருஷ்ணர் தானாகவே வந்து அமர்ந்து விடுகிறார்.
பக்தி யோகத்தில் ஸித்தி பெற்றவன், இதயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதால், பேரானந்தத்தை பெறுகிறான். இவர்கள் மோக்ஷம் என்ற பரமபத ஆனந்தத்தை இம்மையிலும் மறுமையிலும் அனுபவிக்கிறார்கள்.
இவர்களே யோகிகள். இவர்களே மகாத்மா. இவர்களை தரிசித்தாலே நமக்கும் பக்தி உண்டாகும்.

கடவுள் தன்னை, மனித சமுதாயத்துக்கு உணர செய்தாலும், மறைந்து இருப்பதற்கு காரணம், நாம் நம் தகுதியை இன்னும் உயர்த்த வேண்டும் என்பதற்காக தான்.

பக்தி யோகத்தில் முயற்சி செய்து, கண்ணால் கடவுளை தரிசித்தவர்கள் உண்டு. புரந்தரதாசர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று அடுக்கலாம்.

பக்தி யோகத்தில், திட விசுவாசம் (நம்பிக்கை) முக்கியம்.

இன்று பகவானை காண முடியாவிட்டாலும், "இருக்கிறார்" என்பதை அறிவு சொல்வதால்,
நம்முடைய இந்த நிலையில், பகவானை காண முடியவில்லை என்றாலும், அவரை காண முடியும் என்கிற நம்பிக்கையை (விசுவாசம்) வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பகவான் என்னை காக்கின்றார் என்பதை உணர்கிறேன். அவரின் இந்த அன்பு, எனக்கும் திடமாக உள்ளது என்று நம்பிக்கை வேண்டும்.

கடவுள் உள்ளார் என்று அறிவை கொண்டு எப்படி புரிந்து கொள்ள முடியும்?
சிறிய கல்லை எடுத்து வானத்தை நோக்கி வீசினால், அப்படியே வானத்தில் நிற்காமல் கீழே விழுந்து விடுகிறது.

உலகம் என்ற மிகபெரிய கல் உருண்டை ஆகாயத்தில் சுழன்று கொண்டே உள்ளது. அதுமட்டுமல்ல,
ஒரே மாதிரி சுழற்சியுடன் சுற்றுகிறது.
அந்த கல்லில் நாம் அனைவரும் குத்திட்டு ஒட்டிக்கொண்டு இருக்கிறோம்.
இது ஆச்சர்யமல்லவா?

இந்த பூமியை போல, நாமும் ஒரு சாட்டிலைட் விட்டு பார்க்கும் போது, இன்னும் சில உண்மை புரிகிறது.

வெளியில் பார்க்க சாட்டிலைட்டில் ஒரு ஆள் கூட இல்லாமல், தானாக சுற்றுவது போல தெரிந்தாலும், எங்கிருந்தோ ஒருவன் பூமியில் இருந்து கண்காணித்து இயக்குகிறான் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சாட்டிலைட்டை விட பல மடங்கு பெரிய இந்த உலகங்கள் ஒழுங்காக சுற்றுவதை பார்த்த பின்னும், இவை அனைத்தும் தானாகவே சுற்றுகிறது என்று நினைப்பவனை என்ன சொல்வது?

முற்பிறவி வரை மிருகமாக இருந்து, முதல் முறை, மனித பிறவியை இப்பொழுது தான் அனுபவிக்கிறான் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூளை வேலை செய்யாத இவர்களிடம் பரிதாபம் மட்டுமே படலாம்.

ஒரு ரோபோ தானாக வேலை செய்வது போல தோன்றினாலும், மோட்டார் தானாக ஓடினாலும், அதை ஒருவன் ஸ்டார்ட் செய்து இயக்கி உள்ளான் என்று கொஞ்சம் பகுத்தறிவு உள்ள மனிதனுக்கு கூட புரியுமே.

'கடவுள் இல்லை' என்று சொல்பவனை விட, 'எங்கேயோ ஒரு கடவுள் இருக்கிறார், அவருக்கு பயப்பட வேண்டும்' என்று காட்டுமிராண்டி தனமாக சொல்லும் கூட்டம் கூட உயர்ந்தவர்கள் தான்.

நமக்கு ஆசாரம், அல்லது திட விசுவாசம் அல்லது திட வைராக்கியம் என்று ஏதாவது ஒன்று இருக்கும் பட்சத்தில், எந்த யோகத்தின் வழியிலும் சென்று பகவானை உணரலாம், தரிசிக்கலாம், மோக்ஷம் அடையலாம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் காட்டுகிறார்.

பகவானை தரிசிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவன், ஆசாரம்(நல்லொழுக்கம்) என்ற தகுதி இருக்குமாகில், கர்மாவை (செயலை) யோகமாக(சேர்க்கையாக) செய்து, அதை பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஞான யோகம், பக்தி யோகம் குரு இல்லாமல் புரியாது. என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாத போது, திரும்ப திரும்ப எப்படி செய்ய முடியும்? ஞான மார்க்கத்துக்கும், பக்தி மார்க்கத்துக்கும் குருவே துணை.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம். வாழ்க ஹிந்துக்கள். 


Wednesday 29 August 2018

காலம் கடந்து அனாதி காலமாக இருக்கும் நான்கு விஷயங்கள் என்ன?

நான்கு விஷயங்கள் கால அளவுக்கு உட்படாமல், காலத்தால் கணிக்க முடியாமல், அனாதியாக முடிவே இல்லாமல் இருந்து கொண்டே இருக்கிறது.
அது என்ன?



1. 'உலகம் என்ற ப்ரக்ருதி' அனாதி காலமாக இருக்கிறது.
2. 'ஆத்மா' (நம் உயிர்) அனாதி காலமாக இருக்கிறது.
3. 'பெருமாள்' அனாதி காலமாக இருக்கிறார்.
4. 'வேதம்' அனாதி காலமாக இருக்கிறது.
அனாதி காலமாக இருக்கும் இந்த நான்குக்கும், பிறப்பும் தெரியவில்லை, இறப்பும்/அழிவும் தெரியவில்லை.
ஆனால் இந்த நான்குக்கும் ஆவிற்பாவம் உண்டு.

ஆவிற்பாவம் என்றால், தோற்றம் என்று அர்த்தம் கொள்ளலாம்.

பிறப்பும், தோற்றமும் ஒரே அர்த்தம் இல்லை.
அதே போல,
இறப்பும், மறைவும் ஒரே சொல் அல்ல.

பிறப்புக்கு முன் இறப்பு வராது.
இறப்புக்கு பின், பிறப்பு வராது.

ஆனால்,
தோற்றத்துக்கு முன், மறைவு இருக்க முடியும்.
மறைவுக்கு பின், தோற்றம் இருக்க முடியும்.

பிறப்புக்கும், இறப்புக்கும் உள்ள பொருள்:
ஒரு லைட் பல்ப் உருவாக்கும் (பிறப்பு) முன், லைட் பல்ப் இருந்து இருக்க வாய்ப்பில்லை.
அது போல,
ஒரு லைட் பல்ப் உடைந்த பின் (இறப்பு), அதே லைட் பல்ப் மீண்டும் உருவாக வாய்ப்பில்லை.
நம் உடல், இந்த லைட் பல்ப் போன்றது.
உடலுக்கு பிறப்பு உண்டு. இறப்பு உண்டு. இறந்த பின், மீண்டும் அதே உடல் பிறக்காது.






தோற்றத்துக்கும், மறைவுக்கும் உள்ள பொருள்:
ஒரு லைட் பல்பில் உருவாகும் வெளிச்சத்துக்கு(தோற்றம்) முன், வெளிச்சம் இல்லாமல் அணைந்து (மறைவு) இருக்க முடியும்.
அது போல,
ஒரு லைட் பல்ப் அணைந்து இருந்த (மறைவு) சமயத்துக்கு முன், வெளிச்சமும் கொடுத்து இருக்க முடியும்.
நம் உயிர் என்ற ஆத்மா, இந்த வெளிச்சம் போன்றது.
இது உடலில் புகுந்து இருக்கும் போது தோற்றம் அளிக்கிறது. உடலை விட்டு வெளியே செல்லும் போது, இல்லாதது போல மறைந்து விடுகிறது. ஆனால் மீண்டும் வேறொரு உடலில் புகுந்து தன்னை வெளிப்படுத்துகிறது.

ஆத்மாவை புரிந்து கொள்ளாதவர்கள், "உடலே நான்" என்று சொல்லிக்கொள்ளும் மடையர்கள், ஒருவனுடைய ஆத்மா உடலை விட்டு வெளியேறிய பின், அவனே 'இறந்து விட்டான்/மரித்து விட்டான்' என்று சொல்லிக்கொள்வர்.

'ஆத்மா ஒன்று உள்ளே இருப்பதால் தான் இந்த உடம்பு இதுநாள் வரை வேலை செய்தது' என்று உணர்ந்திருந்த ஹிந்துக்கள், பொதுவாகவே, உடலை விட்டு பிரிந்த ஆத்மாவை, "இறந்து விட்டார், மரித்து விட்டார்" என்று மடத்தனமாக சொல்லாமல், 'ஆத்மா மறைந்து விட்டது, இறைவனடி சேர்ந்தார். ஆத்மா வைகுண்டம் அடைந்தது, சிவபதம் அடைந்தது' என்று உண்மை அறிந்து சொல்லும் பழக்கம் கொண்டிருந்தனர். உண்மை அறிவு கொண்டிருக்கும் நம் ஹிந்துக்கள்.

1. அனாதி காலமாக உள்ள உலகம், மறைக்கப்பட்டு, மீண்டும் ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "ஸ்ருஷ்டி" என்று பெயர்.

2. அனாதி காலமாக உள்ள நாம் (ஜீவ ஆத்மா / உயிர்), ஒரு உடலுக்குள் புகுந்து, ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "ஜன்மம்" என்று பெயர்.

3.  அனாதி காலமாக உள்ள பெருமாள் (பரம் ஆத்மா), ஒரு உடலுக்குள் புகுந்து, ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "அவதாரம்" என்று பெயர்.

4. அனாதி காலமாக உள்ள வேதம் (பரமாத்மாவின் அறிவு), ஒரு ரிஷியின் காதில் புகுந்து, ஆவிர்பவிக்கும் (கேட்கப்படும்) போது, அதற்கு "ஸ்ருதி" என்று பெயர்.
காதில் கேட்ட வேதத்தை, வாயால் ஆவிர்பவிக்கும் (சொல்லாக வெளிப்படும்) போது, அதற்கு "ஆம்நாயம்" என்று பெயர்.
வாயால் சொன்னதை, காலப்போக்கில் கேட்டது ஒன்று, சொல்வது ஒன்று என்று ஆகி விடாமல், கேட்ட அதே வேத சொற்களை ஒரு காவல்காரனை போல காத்து, பரம்பரை பரம்பரையாக வேத சொற்கள் மாறிவிடாமல், விட்டுப்போகாமல் எடுத்து செல்வதற்கு, "சந்தஸ்" என்று பெயர்.

ஹிந்துக்கள் கொண்டிருந்த இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத பிற பொய் மதங்களில், நம்பிக்கைகளில், ஹிந்துக்கள் வீழ்வதே அவமானம்.
ஹிந்துவாக பிறந்து, பின் மதம் மாறுபவர்கள் அவமானப்படவேண்டும்.

ஆராய்ச்சியின்றி, காரணமின்றி எதுவும் செய்யாத ஹிந்துக்களின் பழக்கம், பேச்சு எல்லாம் உயர்ந்தவை.

ஹிந்துக்களாக பிறந்ததே புண்ணியம்.
வேற்று மதங்கள் கூட, மத மாற்றம் என்ற போர்வையில்,
*ஹிந்துக்களின் காவி உடை அணிந்து பாத யாத்திரை செல்கின்றனர்.
*வெள்ளை உடை அணிந்து தான் தன் கோவிலில் ஆராதனை செய்கின்றனர்.
*சமஸ்கரித மொழியை வெட்கமே இல்லாமல் பயன்படுத்துகின்றனர்.
*தமிழை கொலை செய்கின்றனர்.
*ஹிந்துக்களின் தெய்வீக கர்நாடக இசையை திருட முயற்சிக்கின்றனர்.
*வெட்கமே இல்லாமல் கொலு வைக்கின்றனர்.
*தேர் இழுக்கின்றனர்.
*கோவில் ஸ்தூபம் இருப்பதை பார்த்து, மானம் இல்லாமல் தாங்களும் ஸ்தூபம் வைக்கின்றனர்.
*சுய சிந்தனை இல்லாமல், நம்மிடம் காபி அடித்து, வெட்கமில்லாமல், ஹிந்துக்களை மதம் மாற்றுகின்றனர்.
*மனு என்ற அரசன் முதல் மனிதன் என்று சொன்னதையும் காப்பி அடித்து "Man" என்றனர்.
*நவ க்ரஹங்கள் என்று சொன்ன என்றோ சொல்லி வைத்ததை வைத்து "9 planets" உண்டு என்கின்றனர்.
*செவ்வாய் கிரஹம் சிவப்பு என்று அறிந்து, நவ க்ரஹத்தில் செவ்வாய் தேவதைக்கு இடுப்பில் சிவப்பு துணி கட்டுவதை அடிப்படையாக கொண்டு, "Mars is Red planet" என்றனர்.



*பஜனை செய்வதை பார்த்து, காப்பி அடிக்கிறோம் பேர்வழி என்று பைத்தியம் வராத குறையாக ஆடுகின்றனர்.
*நான்கு மறை வேதம் என்ற சப்த ப்ரம்மத்தின் பெயரை ஒரே ஒரு புத்தகம் எழுதி அதை வெட்கமே இல்லாமல் இதுவும் "வேதம்" என்று ஹிந்துக்களின் வேதம் என்ற பெயரை திருடுகின்றனர்.
*திருட்டு செயலே பழக்கம் ஆகி போனதால், திருட்டு புத்தியுடன், திருட்டு தனமாக, புரியாத ஹிந்துக்களை மதம் மாற்றுக்கின்றனர்.
*இஸ்லாமியன் திருடனை உதைப்பான் என்று இன்று வரை நெருங்க பயப்படுகின்றனர்.
ஹிந்துக்கள் திருடனை அடிக்க வேண்டாம், நம் வீட்டில் உள்ள பொருளை திருடி, நமக்கே காட்டும் திருடன் இவன் என்று தெரிந்து கொண்டாலே போதும்.
*கிருஷ்ணன் மாடு மேய்த்தான், என்றால், பெயரையும் ஏறத்தாழ அதையும் காப்பி செய்து, மாட்டுக்கு பதில் ஆடு மேய்த்தான் என்றனர்.
*உலகம் உருண்டை என்று வராஹ அவதாரத்திலேயே சொன்னதை மறுக்க நினைத்து, கடைசியில் உலகம் உருண்டை தான் என்று அறிவியல் சொல்ல, தன்னுடைய ஒரே கொள்கையில் மரண அடி வாங்கினர்.

இப்படி ஹிந்துக்களை, ஹிந்துக்களின் சின்னங்களை, ஹிந்துக்களின் தத்துவங்களை திருடி பிழைப்பு நடத்தும் பொய் மதத்தில், ஹிந்துவாக பிறந்தவன், இருப்பவன் மாறுவதே அவமானம். மாறியவன் ஹிந்துவாக மாறுவதே புத்திசாலித்தனம்.

இப்படி தறிகெட்டு காசுக்காகவோ, நம் krishணனை கிறிஸ்ஆக பெயர் மாற்றி இந்திய மண்ணிலேயே, ஹிந்துக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் திருடர்களிடம் இருந்து, சுய புத்தியுடன் ஹிந்துக்களாக மீண்டும் திரும்புவதே சிறந்தது.



காப்பி அடித்து பாஸாக துடிக்கும் பொய் மதங்களில் ஹிந்துக்கள் வீழாமல் இருக்க வேண்டும்.
இதற்கு ஒரே வழி.. ஹிந்துக்கள் தன் மதத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஹிந்துக்களுக்கு பகிர வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள். வாழ்க நாம்.

 நன்றி: எந்தரோ மஹாநுபாபு(...லு) அந்தரிகி வந்தநமு (Salutations to all those great men in this world)





Saturday 25 August 2018

உண்மையான குருவின் 6 லக்ஷணங்கள் (qualities) என்ன? தப, ஸ்வாத்யாய நிரதம்,தபஸ்வி,வாக்விதாம் வரம்,முனி புங்கவம்,நாரதம்.. அர்த்தம் தெரிந்து கொள்வோமே


உண்மையான குருவின் 6 லக்ஷணங்கள் (qualities) என்ன?

तपः स्वाध्याय निरताम् तपस्वी वाग्विदाम् वरम् |
नारदम् परि पप्रच्छ वाल्मीकिः मुनि पुंगवम् ||

தப ஸ்வாத்யாய நிரதம்
தபஸ்வி வாக்விதாம் வரம் |
நாரதம் பரி ப்ரக்ஷூசா வால்மீகி முனி புங்கவம் ||
இது வால்மீகி இராமாயணத்தின் முதல் ஸ்லோகம்.



1. தப - யார் உடலை துச்சமாகவும், சாஸ்திர (வேத) ஞானியாகவும்
2. ஸ்வாத்யாய நிரதம் - யார் சாஸ்திரம் படித்த ஞானத்தோடு மட்டும் நிற்காமல், தானே அனுஷ்டானம் செய்பவராகவும்
3. தபஸ்வி - யார் அபரோக்ஷ அனுபூதி (பகவத் அனுபவம்) கொண்ட சம்யக் ஞானியாகவும்
4. வாக்விதாம் வரம் - யார் வாக்கு ஸித்தி பெற்றவராகவும்,
5. முனி புங்கவம் - யார் எப்பொழுதும் பகவத் தியானத்திலேயே இருப்பவராகவும்,
6. நாரதம் - யார் அந்த ப்ரம்ம ஸ்வரூபத்தை (நாராயணனை) நமக்கு கொடுக்கும் சக்தி உள்ளவராகவும்,
யார் இருக்கிறாரோ, அவரே உத்தம குரு.

இந்த 6 லட்சணமும் சேர்ந்த ஒருவரை தரிசிப்பதே அரிது.
அப்படிப்பட்டவர் குருவாக கிடைப்பது அதை விட துர்லபம்.

இப்படி ஆறு லட்சணமும் சேர்ந்த குருவை தேடி தேடி அலைந்தாலும் கண்டுபிடிப்பது அரிது.
கிடைத்தவர்கள் மகா பாக்கியவான்கள்.

அபரோக்ஷ அனுபூதி (பகவத் அனுபவம்) கொண்ட சம்யக் ஞானியாகவும், வாக்கு ஸித்தி பெற்றவராகவும், சாஸ்திர (வேதம்) ஞானியாகவும், எப்பொழுதும் பகவத் தியானத்திலேயே இருப்பவராகவும் கூட குரு கிடைப்பார். ஆனால் அவரிடமும் ஒரு குறையாக, சாஸ்திரத்தை அனுஷ்டானம் செய்யாமல் இருப்பார்.

சிலருக்கு 1 லட்சணம் மட்டுமே கொண்ட "குரு கிடைப்பார்".
சிலருக்கு ஒன்றிலிருந்து ஐந்து வரை லட்சணங்கள் உடையவர் "குருவாக கிடைத்து விடுவார்".

ஆறு லட்சணங்களும் சேர்ந்த குரு கிடைப்பது துர்லபம்.

6 லக்ஷணங்களும் உடைய உத்தம குருவை அடைந்தவன், எப்படி குருவிடம் உபதேசம் பெறவேண்டும்? என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரே சொல்கிறார்.
தத் வித்தி ப்ரணி பாதேன
பிரிப்ரஷ்நேன சேவயா |
உபதேக்ஷந்தி தே ஞானம்
ஞானினஸ் தத்வ தர்ஷின: ||
Chapter 4.  Sloka 34
"6 லட்சணங்கள் உடைய உண்மையான ஞானியை (குருவை) நீ தேடி சென்று, அவருக்கு அடி பணிந்து, அவருக்கு தொண்டு செய்து, அவரின் அபிமானத்துக்கு பாத்திரமாகி, அவர் பிரியப்பட்டு, சிஷ்யனான உனக்கு ஞானத்தை உபதேசமாக தர வேண்டும்"
என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

சிஷ்யன் "குருவுக்கு தொண்டு செய்து உபதேசம் பெற வேண்டும்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் சிஷ்யனுக்கு சொன்னாலும், 6 லக்ஷணங்களும் கொண்ட குருவோ, கருணை உள்ளவராக இருப்பதால், தகுதி இல்லாத சிஷ்யனுக்கும், 'ராம' நாம உபதேசம் செய்கிறார்.







ஆறு லட்சணம் பொருந்திய குரு, ஒருவனுக்கு கிடைத்தால், ஒரு கவலையும் இல்லாமல், அந்த குருவின் அணுகிரஹத்தினால், நாராயணனை அடைகிறான் மோக்ஷம் அடைகிறான்.
** யார் தன் உடலை துச்சமாக நினைத்து, தன் உடல் வருந்தினாலும் விரதம், பூஜை, பஜனை என்று பகவத் கைங்கர்யம் எப்பொழுதும் செய்து கொண்டு, ஞானத்திலும் (அறிவிலும்) சாஸ்திர (சப்த ப்ரம்மத்தில் நிஷ்டையுடைய) ஞானியாகவும் இருந்து, சம்யக் (ப்ரம்மத்தில் நிஷ்டையுடைய) ஞானியாகவும் இருந்து,  தபஸ்வியாக இருக்கிறாரோ,
(‘தபோ நிரதம்’),
** யார் சாஸ்திரத்தை (சப்த ப்ரம்மம் என்ற வேதத்தை) படித்து,படித்ததோடு மட்டுமில்லாமல், அதன் படி தன் வாழ்க்கையில் தானே அனுஷ்டித்து கொண்டும் இருக்கிறாரோ ('ஸ்வாத்யாய நிரதம்’)
** சாஸ்திர (வேதம் என்ற சப்த ப்ரம்மம்) ஞானமும் இல்லாமல், சம்யக் ஞானிமும் இல்லாமல், அனுஷ்டானமும் இல்லாமல் தகுதி எதுவும் இல்லாமல் இருக்கும் ஒரு சிஷ்யன், யாருடைய வாக்கை கேட்ட மாத்திரத்தில் அவரிடம் ஆகர்ஷிக்கப்படுகிறானோ.
யார் வாக்கின் சக்தியை உணர்ந்து, வீண் பேச்சு பேசாமல், பகவானை பற்றியே பேசி கொண்டிருக்கிறாரோ. வாக்கினால் முதலில் ஈர்க்கப்பட்ட சிஷ்யன், அவனே பின்னர், சாஸ்திரத்தில் ஆர்வமும், அதை தன் வாழ்க்கையில் அனுஷ்டிக்கும்  ஆர்வமும் பெற்று, தன் குருவை போலவே தானும் ஆகும் அளவிற்கு, யாருடைய வாக்கை கேட்ட மாத்திரத்தில் ஏற்படுமோ ('வாக் விதாம்பரம்’)

** யார் உலக விஷயங்களில் ஈடுபட்டாலும், உலக விஷயங்கள் பேசினாலும், தனித்து இருந்தாலும், மனம் அடங்கி, எப்பொழுதும் மனது உலக விஷயத்தில் அலையாமல், மனதை பகவத் தியானத்திலேயே வைத்து இருப்பாரோ (முனிபுங்கவம்)
** யாரிடம் நாம் சரணடைந்தால், அந்த ப்ரம்ம ஸ்வரூபத்தை (நாராயணனை) நமக்கு கொடுக்கும் சக்தி உள்ளவராகவும்
இருக்கிறாரோ (நாரதம்)
அவரே உத்தம குரு.
'நாரம் ததாமி' என்ற சமஸ்கரித சொல்லுக்கு, "நாராயணனை தருபவர்" என்று அர்த்தம்.

'நாரம் ததாமி' என்பதே நாரதர் என்ற ஆனது.

நாரதருக்கு, 'நாரதர்' என்ற பெயர் கிடைத்ததே இதன் காரணமாக தான்.
நாரதரை குருவாக கொண்ட, துருவன், பிரகலாதன், வால்மீகி, வியாசர், புரந்தரதாசர் என்று அனைவருக்கும் பகவத் தரிசனம் கிடைத்ததே!
நாரதரே உத்தம குரு.
ஆறு லட்சணங்களும் உடையவர் நாரதர். 
நாரதரை மதிப்பு குறைத்து நினைப்பதே மகாபாபம்.

தவம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?
தபம் என்ற சொல்லுக்கு, இரண்டு அர்த்தங்கள் உண்டு.

ஒன்று, உடலை வருத்தி, சுத்தி செய்து கொள்ளுதல்.
மற்றொன்று ஞானத்தில் நிலைத்தல்.

யார் ஞானியாக இருக்கிறாரோ, யார் உடலை துச்சமென கருதி, உடல் வருத்தினாலும், பகவத் கைங்கர்யம் செய்து, சுத்தி செய்து கொள்கிறாரோ, அவரே தபஸ்வி.

எந்த விதத்திலாவது, தன் உடலை சுத்தி செய்து கொள்வதற்கு, தவம் என்ற சம்ஸ்கிருதத்தில் சொல்கிறோம்.

உண்ணாமல் ஒரு நாள் விரதம் இருந்து, உடலை சுத்தி செய்வதும், ஒரு தவம் தான்.

அதை ஏகாதசி அன்று பகவானை நினைத்து விரதம் இருந்தால் மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.
அதே தவத்தை பக்தி இல்லாமல், ராவணன், ஹிரண்யகசிபு போன்றவர்கள் போலவும் தவம் செய்து பெரும் வரங்களை பெற்று, அட்டகாசம் செய்து, பின்பு அழியவும் முடியும்.

தவத்தின் நோக்கம் உடல் சுத்தி மேலும் ஞான சுத்தியே.


ஞானம் (அறிவு) இரண்டாக உள்ளது.
சாஸ்திர ஞானம், சம்யக் ஞானம்.
இதை பற்றி தெரிந்து கொள்ள
www.proudhindudharma.com/2018/08/SastraSamyaggyaani.html

உபதேசம் பெற என்ன தகுதி வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது?

சாஸ்திரத்தில் சொன்ன கர்மாக்களை விடாமல் செய்து கொண்டு,
செய்யும் கர்மாவில் பலனை எதிர்பார்க்காமல், தான் கர்மா செய்வதே பகவான் என்னை பார்த்து ப்ரீதி அடைவான் என்ற நோக்கத்தில் மட்டும் செய்து,
இதனால் கர்வம் அகன்று, சித்தம் சுத்தி ஆகி, மனம் தெளிவு பெற்றவனே, குருவின் உபதேசத்திற்கு தகுதி ஆகிறான்.

இந்த தகுதியுடன், குருவின் உபதேசம் பெற்றவனுக்கு உடனே அந்த உபதேசம் ஸித்தி ஆகிவிடுகிறது.

உடல் வேறு ஆத்மா வேறு என்று குரு உபதேசம் செய்தாலும், அந்த உபதேசம் சிஷ்யனுக்கு மனதில் ஏறாததற்கு காரணம், இந்த தகுதியை சம்பாதிக்காத சிஷ்யனின் குறையே இது.

தகுதி அடைந்த சிஷ்யனுக்கு, குருவிடம் உபதேசம் பெற்றவுடன் அது பலித்து விடும்.

சமிகர் என்ற ரிஷியின் கழுத்தில் விதிவசத்தால், பரிக்ஷித் மன்னன் இறந்த பாம்பை போட்டு விட்டு சென்று விட்டார்.
சமிகர், தன் மகனுக்கு பூணல் போட்டு ப்ரம்ம உபதேசம் செய்து இருந்தார்.
உபதேசம் பெற தகுதி உள்ளவனாக இருந்த அந்த சிறுவன், உபதேசம் ஸித்தி பெற்று இருந்தான்.
"ஏழு நாளில் தக்ஷகன் என்ற பாம்பு கடித்து பரிக்ஷித் மரணிக்கட்டும்" என்று சபித்து விட்டான் அந்த சிறுவன். "தகுதி உள்ள ஒருவன், குருவிடம் உபதேசம் பெரும் போது, அவனுக்கு உடனே ஸித்தி ஆகி விடும்" என்பது இந்த சரித்திரத்தில் தெரிகிறது.

தகுதி பெற்ற ஒருவன், குருவின் உபதேசத்தின் உள் அர்த்தத்தை உணர்கிறான்.
தகுதி இல்லாமல் பெறும் உபதேசம், நமக்கு வார்த்தையாக இருக்குமே தவிர, அனுபவத்தில் வராது.

உபதேசத்திற்கு எந்த தகுதியும் இல்லாமல் இருக்கும் சிஷ்யனுக்கு, கருணையால், குரு "ராம" நாமம் உபதேசம் செய்கிறார்.

இந்த ராம மந்திரத்தை, தகுதி இல்லாதவனும் சொல்லலாம்.

உத்தம குரு, தகுதி இல்லாத தன் பக்தனுக்கு, "ராம" நாம உபதேசம் செய்கிறார்.
தன் அணுகிரஹத்தாலும், ராம நாமத்தின் பலத்தாலும், உபதேசம் பெற்றவனுக்கு, சிறிது காலத்திலேயே, தான் செய்யும் கர்மாக்கள் பகவான் ப்ரீதிக்காக தான் என்ற ஞானம் உருவாகுமாறு செய்து, சித்த சுத்தியாக்கி, ராம நாமத்தின் மகத்துவத்தை அனுபவிக்க ஆரம்பிக்கிறான்.

குரு, சிஷ்யனுக்கு உபதேசத்தை முதலில் கொடுத்து, பின்னர் தகுதியை
சம்பாதித்து மோக்ஷம் அடைய கருணை செய்கிறார்.

இப்படிப்பட்ட குருவை அடைந்த ஒரு சிஷ்யன், குருவின் நிலையை புரிந்து பழக வேண்டும்.

எப்பொழுதும் பகவத் தியானத்தில் இருக்கும் குருவிடம், நாம் போய், உலக விஷயங்களை பேச கூடாது.

நாம் குருவை தரிசிக்க போவதே, நமக்கு இந்த உலக விஷயங்கள் மறந்து, பகவத் விஷயமாக நினைவு வர வேண்டும் என்பதற்காக தான்.

ஆறு லக்ஷணங்கள் உடைய குரு கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்.

ஹிந்துவாக நாம் பிறந்ததே புண்ணியத்தால் தான்.

வாழ்க ஹிந்துக்கள். நம் ஆத்ம குருவே, நமக்கு துணை.
ஹிந்துக்கள் ஒன்று சேருவோம்.