Followers

Search Here...

Thursday 12 September 2019

ப்ருகு ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... ஸ்ரீவத்ஸ கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

"ப்ருகு ரிஷியின்" பரம்பரையில் வந்த முக்கியமான சில ரிஷிகளின் பெயர்:

ம்ருகண்டு
மார்க்கண்டேயர்
ஹேம ரிஷி

சௌனகர்
ச்யாவன
ஆப்னவான
ஔர்வ
ஜாமதக்ன்ய (ஜமதக்னி)
பரசுராமர்

இவர்களை போல, மேலும் பல ரிஷிகள், சாதுக்கள், மகாத்மாக்கள் இந்த பரம்பரையில் தோன்றி உள்ளனர்.


ப்ருகு ரிஷியை, "பார்கவ" ரிஷி என்றும் அழைப்பது உண்டு.

இந்த ரிஷிகளின் பெயர்களை ஸ்மரித்து கொண்டே,
'நான் இந்த ரிஷிகளின் கோத்திரத்தில் (வம்சத்தை) பிறந்தவன்'
என்று அபிவாதயே (self intro) சொல்வது ஹிந்துக்களுக்கு வழக்கம்.

இன்று பிராம்மண சமுதாயம் மட்டுமே, தான் எந்த ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் என்று தன்  அடையாளத்தை ஞாபகத்தில் வைத்து இருக்கிறார்கள்.

மற்ற சமுதாய மக்களும், ரிஷி பரம்பரையில் இருந்து வந்தவர்கள் தான்.

ஹிந்துக்கள் அனைவரும் தன் ரிஷி பரம்பரையை அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் எந்த ரிஷியின் பரம்பரையில் இருந்து வந்தோம் என்று தெரிந்து கொள்வது மிக அவசியம். கௌரவமும் கூட.
அந்த ரிஷிகளை பற்றி நன்கு தெரிந்து இருக்கவும் வேண்டும்.

ப்ருகுவின் பரம்பரையில் வந்தவர் 'ச்யவனர்' என்ற ரிஷி.
இவர் ஸித்த மருத்துவ முறைப்படி நமக்கு தயாரித்து தந்தது தான், நாம் இன்று கடையில் வாங்கி வாங்கி விழுங்கும் ஸ்யவன்ப்ராஸ் (Cyavanprash) என்ற லேகியம்.
இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரும், ஆரோக்கியம் என்று விழுங்கும் நாம்,
அதே ஸ்யவன ரிஷி, "தாரக மந்திரமான "ராம நாமத்தை" எப்பொழுதும் சொல்பவனுக்கு மோக்ஷம் நிச்சயம்" என்ற வழியையும் சொன்னார் என்பதை மறக்க கூடாது.

"ஸ்யவன்ப்ராஸ் (Cyavanprash) உடம்புக்கு நல்லது" என்று விழுங்கும் நாம்,
'ஆத்மாவின் ஆரோக்கியத்துக்கு ராம நாமத்தையும் சொல்ல வேண்டாமா?'
கொஞ்சம் ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும்.

ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் மூலம் தோன்றிய பரம்பரை என்பதால்,
இந்த பரம்பரையில் உள்ளவர்கள், "பார்கவ கோத்திரத்தை (வம்சத்தை) சேர்ந்தவர்கள்" என்று அறியலாம்.

ஆடையில்லாது, அறிவில்லாது திரிந்த "ஆதாம் ஏவாள்" வழியில் வந்த 'மடையர்கள்' என்று சொல்லிக்கொள்வதில்லை வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள்.
"நான் முட்டாள் ஆதாம் ஏவாள் பரம்பரையில் வந்தவன்" என்று சொல்லிக்கொள்வதை விட அவமானம் ஏதாவது உண்டா?

"ஞானத்திலும், தவத்திலும், தெய்வீகத்திலும், ஸித்த மருத்துவத்திலும்" தேர்ந்த "ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள்" என்று வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொள்கின்றனர்.


அறிவாளியாக இருந்த ரிஷிகள் என் முப்பாட்டன் இல்லை, "முட்டாள் ஆதாம், ஏவாள் தான் என் முப்பாட்டன்" என்று சொல்வதே, மதம் மாறுபவனுக்கு அவமானமல்லவா !!.
ப்ருகு என்ற பார்கவ ரிஷி, பிரம்மாவின் மனதில் இருந்து தோன்றியவர்.
பிரம்மாவின் மானஸபுத்ரர்களில் இவரும் ஒருவர்.

'உலக மக்களை ஸ்ருஷ்டி செய்ய ஒன்பது ப்ராஜாபதிகளை நியமித்தார்' ப்ரம்மா. அதில் ப்ருகு ரிஷியும் ஒருவர்.

"தக்ஷ பிரஜாபதி" ப்ருகு ரிஷிக்கு தன் மகள் "க்யாதி"யை மணம் செய்து கொடுத்தார்.
சாஷாத் மஹாலக்ஷ்மி ப்ருகுவுக்கு மகளாக பிறந்தாள்.  
ப்ருகுவுக்கு மகளாக பிறந்ததால், மகாலட்சுமி "பார்கவி" என்ற பெயரில் வளர்ந்தாள்.
விஷ்ணுவாகிய நாராயணன் "பார்கவி"யை மணந்து கொண்டார்.

மஹாலக்ஷ்மி பரமாத்மாவை ஒரு நாழிகை கூட பிரிய இஷடப்படாததால், "தன் மார்பிலேயே (வக்ஷஸ்தலம்) இடம்" கொடுத்து விட்டார்.
ப்ருகு ரிஷி "பரமாத்மாவுக்கு மாமனார்" என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு பின், தேவர்களுக்கு அசுரர்களுக்கும் ஓயாத சண்டை ஏற்பட, தேவர்கள் தங்களுக்கு உதவி செய்ய பெருமாளை கேட்க, தான் இருக்கும் க்ஷீராப்தியிலேயே (பாற்கடல்) மந்த்ர மலையை போட்டு, வாசுகி என்ற பாம்பை கயிறாக கடைந்து அதில் வரும் அம்ருதத்தை எடுத்து கொள்ளுமாறு சொன்னார்.
அந்த சமயம் மஹாலக்ஷ்மி மீண்டும் பாற்கடலிருந்தே அவதாரம் செய்து, மீண்டும் விஷ்ணுவை மணந்தாள்.
மஹாலக்ஷ்மியை பெற்றதால், பாற்கடலும் "பெருமாளுக்கு சம்பந்தி" என்ற பெருமையை பெற்றது.

'பூரணமான சாத்வீக குணம் நமக்கு இருந்தால் மட்டுமே 'மோக்ஷம்' கொடுக்கப்படும்' என்ற என்று சாஸ்திரம் சொல்கிறது.
அந்த "மோக்ஷத்தை தருபவரும் பூரணமான சாத்வீக தெய்வமாக தானே இருக்க வேண்டும்" என்பதால்,
ப்ரம்ம தேவன் சாத்வீக தெய்வமா?
ருத்ரன் சாத்வீக தெய்வமா?
விஷ்ணு சாத்வீக தெய்வமா?
என்று மும்மூர்த்திகளையே பரிக்ஷை செய்ய கிளம்பிய பொல்லாத ரிஷி இவர்.

ப்ரம்ம லோகம் (சத்ய லோகம்) சென்ற போது,
ப்ரம்ம தேவன் இவரை வரவேற்று பேசாமல், சரஸ்வதியிடம் பேசி கொண்டு இருந்தார்.
ப்ரம்ம தேவன் "ரஜோ குணம்" உடையவராக இருப்பதை பார்த்து, ப்ரம்ம லோகத்தை விட்டு கிளம்பி சிவலோகம் வந்தார்.




"சிவன் கோவிலுக்கு அகாலத்தில் போக கூடாது" என்று வழக்கம் உண்டு. சம்ஹார மூர்த்தி அல்லவா..

ப்ருகு அகாலத்தில் வந்து விட, சிவபெருமான் தன் சூலத்தால் குத்த வந்தார்.
சிவ பெருமான் "தாமஸ குணம்" உடையவராக இருப்பதை பார்த்து, சிவ லோகத்தை விட்டு கிளம்பி க்ஷீராப்தி (பாற்கடல்) வந்தார்.

தன்னை ப்ரம்ம தேவனும், சிவபெருமானும் அலட்சியம் செய்த கோபத்துடனேயே க்ஷீராப்தி (பாற்கடல்) வந்தார்.

ஆதிசேஷன் மேல் யோகநித்திரையில் கண்ணை மூடி கொண்டு படுத்து இருக்கும் விஷ்ணுவை கண்டு பெரும் கோபம் கொண்டார்.
"தன்னை இவரும் வரவேற்காமல் இருக்கிறாரே!!" என்ற கோபத்தில், ஜீவகோடிகளை தாங்கும் விஷ்ணுவின் வக்ஷஸ்தலத்தில் (மார்பில்) ஓங்கி காலால் உதைத்து விட்டார்.

உடனே பெருமாள் எழுந்திருந்து, ப்ருகு ரிஷி தன்னை உதைத்தார் என்று கோபப்படாமல், கருணையுடன், ப்ருகு ரிஷியின் பாதத்தை பிடித்து தடவி கொடுத்து,
"கால் வலிக்கிறதோ?.. என் மார்பு கடினமாயிற்றே!... ஏன் இப்படி உதைத்தீர்?..."
என்று சமாதானமாய் கேட்டார்.
தானும் கோபப்படாமல், 
தன்னை கோபத்துடன் எதிர்ப்பவனையும் சாந்தப்படுத்தும் தன்மையுடைய, "விஷ்ணுவே" சாத்வீக குணம் கொண்ட "சத்வ குண மூர்த்தி" என்று உலகுக்கு காட்டினார்.
இவரே "மோக்ஷம் அளிப்பவர்" என்று காட்டினார்.




ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள், தங்களை "பார்கவ கோத்திரம்" என்று சொல்லிக்கொள்ளாமல்,
"ஸ்ரீவத்ஸ கோத்திரம்" என்று சொல்லி கொள்ள ப்ரியப்படுவதை நாம் கவனிக்கலாம்.

பார்கவ கோத்திரத்துக்கு, "ஸ்ரீவத்ஸ கோத்திரம்" என்று எதனால் பெயர் ஏற்பட்டது?
இதற்கு காரணம் உண்டு...

'ஸ்ரீ' என்ற சொல், மஹாலக்ஷ்மியை குறிக்கும்.
'வத்ஸ' என்ற சொல், குழந்தையை குறிக்கும்.




ஸ்ரீமந் நாராயணனுக்கு எப்படி பிறப்பு இல்லையோ,
அது போல,
மஹாலட்சுமிக்கும் பிறப்பு இல்லை.
எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறாள் 'மஹாலட்சுமி'.

எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே, ஒரு சமயம்
தசரதனுக்கு பிள்ளையாகவும் (ஸ்ரீ ராமர்),
கஷ்யபரின் பிள்ளையாகவும் (வாமன)
அவதாரம் செய்து விடுகிறார்.
அது போல, மஹாலட்சுமியே ஒரு சமயம்,
"ப்ருகு ரிஷிக்கு பெண்ணாக" அவதாரம் செய்து இருக்கிறாள்.
பாற்கடலில் இருந்து தோன்றியும் இருக்கிறாள்.

ஸ்ரீயும் (மஹாலட்சுமியும்), நாராயணனும், ஆதிசேஷனும் நித்யமாக எப்பொழுதும் "வைகுண்டத்தில்" இருந்து கொண்டே இருக்கின்றனர்.

லீலையின் காரணமாக, பாற்கடலில், பூலோகத்தில் என்று பல்வேறு லோகங்களில் அவதாரம் செய்கின்றனர்.
சுதந்திரமானவர்கள், யாருக்கும் அடிமைப்பட்டவர்கள் அல்ல.

ப்ருகு ரிஷியின் பெண்ணாக மஹாலட்சுமி பிறந்ததால், மஹாலட்சுமிக்கு "பார்கவி" என்றும் பெயர் உண்டானது.

யாருக்கு மஹாலக்ஷ்மி (ஸ்ரீ) குழந்தையோ (வத்ஸ), அவரே ஸ்ரீவத்ஸன் என்பதால், ப்ருகு ரிஷிக்கு "ஸ்ரீவத்ஸன்" என்று பெயர் ஏற்பட்டது.

ப்ருகு ரிஷிக்கு "ஸ்ரீவத்ஸன்" என்றும் பெயரும் ஏற்பட்டது.

இதன் காரணமாக, பார்கவ (ப்ருகு) வம்சத்தில் வந்தவர்கள் "நாங்கள் பார்க்கவ கோத்திரம்" என்று சொல்வதை விட,
"எங்கள் வம்சத்தில் மகாலக்ஷ்மியே குழந்தையாக அவதரித்தாள்" 
என்று சொல்லி பெருமைப்படும் விதமாக, ப்ருகுவுக்கும் "ஸ்ரீவத்ஸன்" என்று பெயர் ஏற்பட்டதால்,
"நாங்கள் ஸ்ரீவத்ஸ கோத்திரம்" என்று சொல்வது வழக்கத்தில் ஏற்பட்டது.

ஸ்ரீ என்ற மஹாலக்ஷ்மியே, தனக்கு மகளாக அவதரித்ததால், மஹாலக்ஷ்மியிடம் ப்ருகுவுக்கு வாத்ஸல்ய பக்தி (தன் மகள் என்ற பாசம்) உண்டு.

இந்த கோத்திரத்தில் வந்த ரிஷிகளுக்கு, இந்த கோத்திரத்தில் இன்று வரை இருக்கும் அனைவருக்கும் இந்த உணர்வு எப்பொழுதுமே உண்டு.


ப்ருகு ரிஷி, யார் சாத்வீக தெய்வம்?
என்று மும்மூர்த்திகளை பரீக்ஷை செய்ய சென்று, விஷ்ணுவின் மார்பை காலால் உதைத்ததால், எம்பெருமாள் மார்பில் மரு ஏற்பட்டது.

ப்ருகு விஷ்ணுவுக்கு மாமனார் முறை. 
மஹாலக்ஷ்மியை எப்பொழுதும் தன் மார்பில் வைத்து இருக்கிறார் பெருமாள்.

தன் மார்பில், மகாலட்சுமிக்கு இடம் கொடுத்த பெருமாள், இப்பொழுது பிருகு ரிஷியின் (பித்ரு) சம்பந்தமும் தன் மார்பில் ஏற்பட்டதால் மகிழ்ந்தார்.

மகாலட்சுமியை (ஸ்ரீ) குழந்தையாக (வத்ஸ) பெற்றதால்,
ப்ருகுவுக்கு 'ஸ்ரீவத்ஸன்' என்று பெயர் ஏற்பட்டது.

ப்ருகு ரிஷியால் தன் மார்பில் ஏற்பட்ட மருவுக்கும், "ஸ்ரீவத்ஸ" என்று பெயர் ஏற்படுமாறு செய்தார் எம்பெருமான்.

"ஸ்ரீவத்ஸ" என்று சொல்லும் போது,
ப்ருகு ரிஷிக்கே "ஸ்ரீவத்ஸன்' என்றும் பெயர் இருப்பதால், ப்ருகு ரிஷியை தியானித்த பலன் நமக்கு கிடைக்கும்.
ஸ்ரீ என்ற சொல் மஹாலக்ஷ்மியை குறிப்பதால், தாயாரை தியானித்த பலனும் கிடைக்கும்.
ப்ருகு ரிஷியால் தன் மார்பில் ஏற்பட்ட மருவுக்கும் (லக்ஷ்ம), "ஸ்ரீவத்ஸ" என்று பெயர் ஏற்படுமாறு எம்பெருமான் செய்து கொண்டதால், நாராயணனை தியானித்த பலனும் கிடைக்கும்.

"லக்ஷ்ம" என்றால் அடையாளம்/மரு.
ப்ருகு ரிஷி உதைத்தால் மார்பில் ஏற்பட்ட அடையாளத்தில் (லக்ஷ்ம),
ஸ்ரீ வசிப்பதால், அவளுக்கு "ஸ்ரீலக்ஷ்மி" என்று பெயர்.

வடக்கில் பெருமாளின் மார்பில் இருக்கும் இந்த மருவுக்கு "ப்ருகு சின்னம்" என்று இன்றும் சில கோவில்களில் சொல்கின்றனர்.

பொதுவாக "ப்ருகு சின்னம்" என்று சொல்வதை காட்டிலும், "ஸ்ரீவத்ஸம்" என்று சொல்வதே உசிதமானது.

'மஹாலக்ஷ்மி "ஸ்ரீவத்ஸம்" உள்ள எம்பெருமான மார்பில், வாசம் செய்கிறாள்' என்று சொல்வதே பொருத்தமும், அழகும் கூட.

"மஹாலக்ஷ்மி வசிக்கும் மார்பில் உதைத்து விட்டோமே" என்று வேதனையுற்றார் பிருகு ரிஷி.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணங்குடிக்கு வந்தார் பிருகு ரிஷி.
அங்கு லோகநாதனாக பெருமாள், காட்சி கொடுத்தார்.

பிருகு ரிஷி, லோகநாத பெருமாளை பார்த்து,
"ஒரே தேவன். நீரே பரமாத்மா. 
நீரே அனைவரிடத்திலும் அந்தர்யாமியாக இருக்கிறீர்கள். 
அவரவர்கள் குண வித்தியாசத்தால், நீங்கள் பேதம் போல காட்டிக்கொள்கிறீர்கள்.

'ப்ரம்ம தேவனுக்கு' அந்தர்யாமியாக இருந்து கொண்டு உலக சிருஷ்டியை நீங்களே செய்கிறீர்கள்.
'விஷ்ணுவாக' இருந்து கொண்டு உலகை ரக்ஷிக்கிறீர்கள்.
'ருத்ரனாக' இருந்து கொண்டு உலகை சம்ஹாரம் செய்கிறீர்கள்.



'படைப்பு, காத்தல், அழித்தல்' போன்ற செயலை செய்ய, 
மாயையான குணங்களை உங்களிடத்தில் நீங்களே சேர்த்து கொள்கிறீர்கள்.

ரஜோ குணத்தை தன்னிடத்தில் சேர்த்து கொண்டு, 'ப்ரம்ம தேவனாக படைக்கும் தொழிலை செய்கிறீர்கள்'.   
சத்வ குணத்தை தன்னிடத்தில் சேர்த்து கொண்டு, 'விஷ்ணுவாக  காக்கும் தொழிலை செய்கிறீர்கள்'.
தமோ குணத்தை தன்னிடத்தில் சேர்த்து கொண்டு, 'ருத்ரனாக அழிக்கும் தொழிலை செய்கிறீர்கள்'.

குணங்களை கடந்தவர் நீங்கள் என்று அறிகிறேன். மாயையான குணங்களை தேவைக்காக உங்களிடம் சேர்த்து கொள்கிறீர்கள் தவிர, 'குணங்களுக்கு அப்பாற்பட்ட பரமாத்மா நீங்கள்' என்று அறிகிறேன்.

ஒரு சுத்தமான ஸ்படிக கல் (prism) அருகில் ஒரு நீல வர்ண பூவை வைத்தால், அந்த ஸ்படிகம் நீளமாக தோன்றும். 

ஒரு சிவப்பு நிற பூவை வைத்தால், ஸ்படிகம் சிவப்பாக தோன்றும்.

அதுபோல, நீங்கள் நிர்குணமாக இருக்கிறீர்கள். 
எப்பொழுதெல்லாம், ரஜோ குணம், தமோ குணம், சத்வ குணம் தேவைப்படுகிறதோ, அப்பொழுது அந்த ,மாயா குணங்களை தன்னிடம் சேர்த்து கொண்டு, 
ரஜோ குணம் உள்ளவர் போலவும், 
தமோ குணம் உள்ளவர் போலவும், 
சத்வ குணம் உள்ளவர் போலவும் காட்சி கொடுக்கிறீர்கள். 

உண்மையில் நீங்கள் நிர்குண பிரம்மம் என்று அறிகிறேன்.
ஆனால், உங்களுடைய விபூதி ரூபங்களான ப்ரம்ம (ரஜோ குணம்), ருத்ரனை (தமோ குணம்) ஆஸ்ரயித்து, ராவணன், ஹிரண்யகசிபு போன்றவர்கள், உலகையே ஆளும் சக்தி பெற்றார்கள், உலக செல்வம் அவர்கள் காலில் விழுந்தது.
விஷ்ணுவாக சத்வ மூர்த்தியாக இருக்கும் உங்களை ஆஸ்ரயித்து, ஒரு யானை கூட மோக்ஷம் அடைந்து விட்டது.
மோக்ஷத்தை கொடுக்கும் சத்வ மூர்த்தியான உங்களிடம் வாயால் சொல்லக்கூட முடியாத பெரும் அபச்சாரத்தை செய்து விட்டேனே என்று நான் தாபப்படுகிறேன்!!"
என்று வருந்தினார்.

பெருமாள் ப்ருகுவை பார்த்து,
"இது ஒரு பெரிய பாபம் இல்லையே!!  
ஒரு குழந்தை தன் தயார் மடியில் உட்கார்ந்து கொண்டு, தன் தாயையே காலால் உதைக்கும். அதை கண்டு தாயார் குழந்தை அபச்சாரம் செய்கிறது என்று நினைப்பாளா?" என்றார்.

ப்ருகு,
"அது விவேகம் இல்லாத குழந்தை. விவேகம் உடைய நான் இப்படி செய்து இருக்கலாமா?" என்று வருத்தப்பட்டார்.

பெருமாள்,
"கணவன்-மனைவி, சிநேகிதர்கள்  சில சமயம், தவறுதலாக  கால் பட்டு விட்டாலும் அபச்சாரம் என்று நினைப்பார்களா?.  
அதுபோல, உங்களுடைய கால் என் மீது மட்ட போதும் அதை நான் அபச்சாரமாக பார்க்கவில்லை, எனக்கு போக்யமாக தான் ஏற்றுக்கொண்டேன்.
அர்ச்சா விக்ரஹமாக நான் அவதாரம் செய்யும் போது, சில சமயங்கள் பூஜை செய்பவர்களின் 'கால் என் மீது படுகிறது'. 
எனக்கு உபசாரம் செய்ய, பூஜை செய்ய தானே, ஆசையாக வருகிறார்கள் என்று நான் அறிவதால், தவறுதலாக ஏற்படும் அபச்சாரங்களை நான் பார்ப்பதில்லை. நான் செயலை பார்ப்பதில்லை. அதில் உள்ள நோக்கத்தை தான் பார்க்கிறேன்." என்றார்.


ப்ருகு,
"இப்படி பேசுவது உங்களுக்கு அழகு. ஆனால் நான் செய்தது அபச்சாரம் தானே!!" என்றார்.

"யார் சர்வேஸ்வரன்? என்ற சர்ச்சைக்கு, நீங்கள் 'என் பெருமையை உலகிற்கு ஸ்தாபிக்க வேண்டும்' என்ற உங்கள் எண்ணம் தானே இங்கே விஷேசம். 
உங்கள் எண்ணத்தை தான் பார்க்கிறேன். 
"மும்மூர்த்திகளில் சிறந்தவன், சாத்வீகன் என்று என்னை காட்ட வேண்டும்" என்று உமக்கு ஏற்பட்ட ஆசையை தான் நான் பார்க்கிறேன்.
இந்த அன்பை பார்க்கிறேனே தவிர, நீங்கள் செய்தது பாபம் ஆகாது"
என்று சொல்லி சமாதானம் செய்தார் பெருமாள்.

பெருமாள் குறையாக நினைக்கவில்லை என்று சொல்லியும், "பிராட்டி பெருமாளின் வக்ஷஸ்தலத்தில் இருக்கிறாள் என்று கூட உணராமல் உதைத்து விட்டோமே" என்று பெரிதும் தாபப்பட்டார்.

"பெருமாள் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னாலும், பிராட்டியின் மேல் என் கால் பட்டு இருக்குமே !!"
என்று நினைத்து கொண்டே, இந்த திவ்ய தேசத்தில் கண்ணீர் விட்டு கொண்டு, பகவத் தியானத்திலேயே இருந்து கொண்டு இருந்தார் பிருகு ரிஷி.
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊருக்கு வந்து தியானத்தில் இருந்தார்.

இவர் தாபத்தை போக்க மஹாலக்ஷ்மியே 'பிருகு ரிஷிக்கு இங்கு காட்சி கொடுத்தாள்'.
சாஷாத் மஹாலக்ஷ்மி பிருகு ரிஷிக்காக மீண்டும் அவதாரம் செய்து இருக்கிறாள் என்றதும், தேவர்கள் கூடி பார்க்க, ஐராவதம் என்ற யானை தாயாருக்கு அபிஷேகம் செய்ய, இங்கு மகாலட்சுமிக்கு "அபிஷேக வள்ளி" என்று பெயர் ஏற்பட்டது.

ப்ருகு ரிஷி "ஸ்ரீ சூக்தம்" சொல்லி மஹாலக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்து கண்ணீர் விட்டார்.

மஹாலக்ஷ்மி தாயார் ப்ருகுவை பார்த்து, "அப்பா.." என்று ஆசையோடு அழைத்து பேசலானாள்.
"நீங்கள் என்னை தாயாராக பார்க்கிறீர்கள்.  நான் உங்களை என் தந்தையாக பார்க்கிறேன். 
தவறுதலாக குழந்தை மேல் தகப்பனாரின் கால் பட்டு விட்டால், அந்த குழந்தைக்கு க்ஷேமம் தானே. எப்பொழுது உங்களுக்கு நான் பெண்ணாக (பார்கவி) பிறந்தேனோ, உங்களை ஏன் தகப்பனாராக ஏற்றுக்கொண்டேனோ, அப்பொழுதே உங்களிடம் எனக்கு தனியான பாசம் உண்டு. உங்கள் கால் என் மேல் பட்டாலும் எனக்கு அது க்ஷேமம் தானே. 

அதனால், பாபம் செய்து விட்டோமோ!! என்ற பயத்தை நீங்கள் நீக்கிவிடுங்கள்." 
என்று தானும் சமாதானம் செய்து, மீண்டும் இந்த தேசத்தில், "கிருஷ்ண மங்கா" (கண்ணமங்கை) என்ற பெயருடன் குழந்தையாகவே அவதரித்து, ப்ருகுவின் தாபத்தை நீக்கினாள்.

மஹாலக்ஷ்மியை "கிருஷ்ண மங்கை"யாக வளர்த்து, கல்யாண வயது வந்ததும் "பெருமாள்" வந்து கரம் பற்ற வேண்டுமே!! என்று பிருகு ரிஷி காத்து இருக்க, பரமாத்மா இங்கு "பக்தவத்சலன்" என்ற பெயருடன் தானே வந்து "கண்ணமங்கை" என்ற மஹாலக்ஷ்மியை மணந்துகொண்டார்.



"லட்சுமி கடாக்ஷம்" கிடைக்க, "தரித்திரம் ஒழிய",
வாழ்நாளில் ஒருமுறையாவது மனிதனாக பிறந்தவன் வந்து பார்க்க வேண்டிய திவ்ய க்ஷேத்ரமாக ஆனது  தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள "திருக்கண்ணமங்கை" என்ற தேசம்.

தாயாருக்கு "கண்ணமங்கை நாயகி" என்று பெயரும் ஏற்பட்டது.

கோவிலில் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதை நாம் பார்த்து இருப்போம்.

சாதாரணமாக நமக்கு திருமணம் நடந்தால்,
"இந்த கோத்திரத்தில் (வம்சம்) பிறந்த மணப்பெண்ணை,
இந்த கோத்திரத்தில் பிறந்த மணமகனுக்கு 'கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன்"
என்று சொல்லி, கன்னிகாதானம் செய்து கொடுப்பது வழக்கம்.

பிறப்பே இல்லாத பெருமாளுக்கும், பிராட்டிக்கும் 'எந்த வம்சத்தை சொல்லி' திருக்கல்யாணம் செய்வது?
அதற்கான பதிலை, "வைகானஸ ரிஷி" நிர்ணயம் செய்ய, வெங்கடேச எம்பெருமானே அதை அங்கீகரித்தார்.

வைகானஸ முறைப்படி,  திருகல்யாண உத்ஸவம் செய்யும் போது,
பெருமாள், கஷ்யபருக்கு புத்திரனாக 'வாமன அவதாரம்' செய்ததால்,
தன்னை 'காஷ்யப' கோத்திரத்தை சேர்ந்தவன் என்றும்,
மஹாலக்ஷ்மி, ப்ருகுவுக்கு புத்ரியாக அவதாரம் செய்ததால், 'பார்கவ' கோத்திரத்தை சேர்ந்தவள் என்றும் சொல்லலாம்
என்று அங்கீகரித்தார் பெருமாள்.

எந்த கோவிலாக இருந்தாலும்,
பெருமாள் "காஷ்யப கோத்திரம்" என்றும்,
பிராட்டி "பார்கவ கோத்திரம்" என்று சொல்லி,
திருக்கல்யாண உத்சவங்கள் இன்று வரை நடந்து வருகிறது.
"பரமாத்மாவுக்கு மாமனார்" என்ற அந்தஸ்தும்,
"மஹாலட்சுமிக்கு தந்தை" என்ற பெருமையும்,
பிரம்மாவின் மானஸ புத்ரன்,
ஒன்பது பிராஜாபதிகளில் ஒருவர் என்ற பதவியும் பெற்ற,
மகத்தான வைஷ்ணவ ரிஷி "ப்ருகு".

ப்ருகு ரிஷியே பிறகு "வருணனுக்கு மகனாக" அவதரித்தார்.
வருண தேவனிடம் "பஞ்சகோச" வித்யையை, ப்ரம்ம வித்யையை கற்றார் என்று தைத்ரிய உபநிஷத் கூறுகிறது.

அந்த சமயத்தில் தான், நாரதர் 'மஹாவிஷ்ணு ஸ்ரீ ராம அவதாரம் செய்ய போகிறார்' என்று தெரிந்து கொண்டார்.
வருணனின் ஆசிரமத்துக்கு வந்து அவர் பிள்ளையாக வளரும் ப்ருகுவே அந்த சரித்திரத்தை எழுத வேண்டும் என்று ஆசைப்பட,
வருண தேவன் பாசத்தால் விட்டு பிரிய மனமில்லாமல் இருப்பதை பார்த்து, சபிப்பது போல சபித்து, வருணனின் பிள்ளையாக வளரும் ப்ருகுவை பூலோகத்தில் பிறக்க செய்து விட்டார்.


பிருகு ரிஷி பூலோகத்தில், தமிழ்நாட்டில் "ருக்ஷன்" என்ற வேடுவனாக வளர்ந்து, பிறகு உலகமே போற்றும் "வால்மீகி" ரிஷியாக ஆகி,
மஹா விஷ்ணு ஸ்ரீ ராமர் அவதாரம் செய்த போதே "ஸ்ரீ ராமாயண" காவியத்தை கவி நடையில் எழுதி உலகிற்கு தந்து விட்டார்.
ப்ருகு ரிஷியால், நமக்கு ராமாயணம் என்ற மகா காவியமும் கிடைத்தது. பெருமாள் நமக்காக ஸ்ரீ ராம அவதாரம் செய்த சரித்திரமும் நமக்கு கிடைத்தது.  வால்மீகி பற்றி தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.
ஹிந்துக்கள் அனைவரும் ஏதாவது ஒரு முறையில்  ரிஷிகளுக்கு கடமைப்பட்டு உள்ளோம்.

வாழ்க ப்ருகு ரிஷியின் புகழ்.
வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ஹிந்து தர்மம்.



Tuesday 10 September 2019

உடுப்பி கிருஷ்ணர் எப்படி வந்தார்? அணையா விளக்கு கோவிலில் ஏற்றுகிறார்களே!! அணையா விளக்கு என்று எதை சொல்கிறார் திருமங்கையாழ்வார்? தெரிந்து கொள்வோமே...

பத்ரிநாத்தில் "நர-நாராயணன்" இருக்கிறார்.
வட இந்திய யாத்திரை சென்றவர்கள் பதரி நாராயணனை கட்டாயம் தரிசித்து இருப்பார்கள்.



நாகப்பட்டினம் திருநாங்கூரில் உள்ள "மணிமாட கோவிலில்" பெருமாள், "நாராயணன்" என்ற பெயரில் அருள் செய்கிறார்.

வட இந்தியாவில் உள்ள பதரிநாத் வரை சென்று, நர-நாராயணனை நம்மால் பார்க்க இயலாது போனால், அதே பெருமாளை மணிமாட கோவிலில் நாம் தரிசிக்கலாம்.

பெருமாள் கருணை கொண்டு, தானே இங்கு மணிமாட கோவிலுக்கு வந்து விட்டார்.
திராவிட தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய திவ்ய தேசம்.

"பதரியில் உள்ள நர நாரணனே இங்கு மணி மாட கோவிலில் நமக்காக இருக்கிறார். அவரை வணங்கு மனமே"
என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
மணிமாட கோவிலில் உள்ள  பெருமாளை பார்த்து
"நந்தா விளக்கே, அளத்தற்கரியாய்
நரநாரணனே
கரு மாமுகில் போல் என் தாய்"
என்று, வேதத்தின் ரகசியத்தை, எளிதான பதங்கள் போட்டு,
பெருமாளை மங்களாசாசனம் செய்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

"நந்தா விளக்கு" என்றால் என்ன?
"அளத்தற்கரியாய்" என்றால் என்ன?
"என் தாய்" என்று எதற்கு சொன்னார்?

"நந்தா விளக்கு" என்று கோவில்களில் வைத்து இருப்பதை நாம் பார்த்து இருப்போம்.
அந்த விளக்கு அணையாமல் இருக்க,
பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு, அந்த விளக்கு அணைந்து விடாமல், அதற்கு எண்ணெய் ஊற்றி கொண்டே இருப்பார்கள்.

அணையாமல் விளக்கு எரிவதால், அந்த விளக்கை "அணையா விளக்கு" என்று கூட போர்டு போட்டு வைத்து இருப்பார்கள்.


"நந்தா" என்றால் "அணையாத" என்று அர்த்தம்.

"நந்தா விளக்கு" என்றால் "அணையா விளக்கு" என்று அர்த்தம்.

கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும், இந்த "நந்தா விளக்கையா"?திருமங்கையாழ்வார் இங்கு சொல்கிறார்? இல்லை.

உண்மையில் உலகில் நாம் காணும் அனைத்து விளக்குகளும் நந்தி (அணையும்) போகும் விளக்குகள் தான்.

யாரும் தூண்டாமல் தானாகவே பிரகாசமாக எந்த விளக்கும் கிடையாது.
யாரோ ஒருவர் தூண்டியோ,
யாரோ ஒருவர் துணை கொண்டோ தான்,
நாம் காணும் விளக்குகள் அனைத்தும் உள்ளன.
இவை எல்லாம் "நந்தி போகும் விளக்குகள்" தான்.

"நந்தா விளக்கு" என்பதோ,
யாருமே தூண்டாமல்,
யார் துணையும் இல்லாமல்,  'சுயமாகவே பிரகாசமாக' இருக்கும் விளக்கு.

அப்படி ஒரு "நந்தா விளக்கு" உள்ளதா?

எந்த 'நந்தா விளக்கை' திருமங்கையாழ்வார் இங்கு சொல்கிறார்? 
என்ற கேள்வி நமக்கு எழலாம்.
இந்த இருண்ட உலகம், எந்த விளக்கு மூலம் பிரகாசம் அடைகிறது?
சூரியன், சந்திரன், அகல், மின்சாரம் போன்ற  'விளக்குகள்' மூலம் பிரகாசம் அடைகிறது.

இந்த வெளி விளக்குகள் மூலம், உலகம் பிரகாசமாகிறது.
'உலகம் பிரகாசமாக இருக்கிறது' என்று, 'எந்த விளக்கு'? மூலம் நமக்கு தெரிகிறது?
"கண்" என்ற விளக்கு மூலம் உலகம் தெரிகிறது...
மின்சார விளக்கு அணைந்து இருக்கும் போது, இருட்டில் மாட்டியவனுக்கு கண் இருந்தும் ப்ரயோஜனமில்லையே!! 

கண் இல்லாத குருடனுக்கு எந்த விளக்கை கொண்டு வெளி உலகம் தெரியும்?
ஆயிரம் 'சூரியன்' இருந்தாலும்,
ஆயிரம் 'மின்சார விளக்குகள்' போட்டாலும்,
வெளி உலகம் இருப்பது 'குருடனுக்கு தெரியாதே'..


ஆதலால்,
'கண்' என்ற விளக்கும், 
'வெளியில் உள்ள' அனைத்து விளக்குகளும் 
நந்தி போகும் விளக்குகளே...

ஆனால், குருடனாக இருப்பவனுக்கும், வெளி விளக்குகள் அணைந்து இருட்டில் இருப்பவனுக்கும் கூட,
அவனுள்ளேயே, எப்பொழுதும் ஒரு விளக்கு "சுயமே பிரகாசமாக எரிந்து கொண்டே" இருக்கிறதே!!...
அந்த விளக்கு என்றுமே அணைவதில்லையே..

அது யார் தூண்டுதலும் இல்லாமல், 
யார் துணையும் இல்லாமல் 
தானே சுயம் பிரகாசமாக உள்ளதே!!  

அந்த நந்தா விளக்கு ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கிறதே!! அதை தெரிந்து கொள்ள வேண்டாமா நாம்?.
அணையாத சுயம் பிரகாச இருக்கும் அந்த நந்தா விளக்கு "பரவாசுதேவன் நாராயணன்" அல்லவா..!!
அவர் நமக்குள் தான் இருக்கிறார் என்று தெரியாமல் இருக்கலாமா?

நந்தா விளக்காக உள்ள அந்த 'பரவாசுதேவன்' நம் உடம்பில் இருக்கும் வரை தானே, நாம் இந்த உடலில் ஜீவிக்க முடிகிறது!!.

அந்த ஜோதி ஸ்வரூபமான பரமாத்மா உடலை விட்டு விலகும் போது, பரமாத்மாவோடு "ஜீவனாகிய நாமும்" கிளம்ப வேண்டியது தான்.

குருடனிடம் "உலகம் பிரகாசமாக இருக்கிறதே... உனக்கு தெரிகிறதா?" என்று கேட்டால்,
வெளியில் உறுப்பாக உள்ள "கண் என்ற விளக்கு" அவனுக்கு எரியாததால்,
குருடன் "தனக்கு உலகம் தெரியவில்லை" என்கிறான்.

ஆனால்,
நந்தா விளக்காக (சுயமே பிரகாசம்) பரமாத்மா அவன் உள்ளும்  இருப்பதால்,
குருடனிடம் "உலகம் தெரியவில்லை சரி. நீ இருக்கிறாய் என்று தெரிகிறதா?" என்று கேட்டால்,
அவன் உள்ளே சுயம் பிரகாசமான நாராயணன் என்ற விளக்கு அவனுக்குள் எரிவதால்,
"கண் இல்லாததால், உலகம் எனக்கு தெரியவில்லை. 
ஆனால் நான் இருக்கிறேன் என்று தெரிகிறது" என்கிறான்.
குருடன் கூட, "நான் இருக்கிறேனா என்று தெரியவில்லை!!. " என்று சொல்வதில்லை.

"நான் இருக்கிறேன்" என்பதை, பரமாத்மா என்ற "நந்தா விளக்கு" இருக்கும் வரை, நாம் தெரிந்து கொள்கிறோம்.





'நான் இருக்கிறேன்' என்று தெரிய காரணம் எது?
எந்த அணையா விளக்கை கொண்டு, குருடன் கூட, தான் இருப்பதை தெரிந்து கொள்கிறான்?

"பரமாத்மா நாராயணன்" என்ற நந்தா விளக்கு இருப்பதால் தான், 'நான் இருக்கிறேன் என்பது எனக்கு தெரிகிறது' என்ற உண்மையை ஞானிகள் புரிந்து கொள்கின்றனர்.

இந்த அர்த்தத்தை "நந்தா விளக்கு" என்ற பதம் மூலம் நமக்கு காட்டுகிறார் திருமங்கை ஆழ்வார்.

"பரமாத்மா எப்பொழுதும் அணையாமல் உள்ளே இருந்து கொண்டு, நமக்கு பிரகாசத்தை கொடுக்கிறார்" என்பதாலேயே பரமாத்மா நாராயணனை  "நந்தா விளக்கே" என்று கூப்பிடுகிறார்.

'சுயம் பிரகாசமாக ஜோதி ஸ்வரூபமாக இருக்கும் நாராயணன், நமக்குள்ளும் இருக்கிறார்' 
என்பதை குறிக்கவே "நந்தா விளக்கே" என்ற பதத்தை வைத்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

நந்தா விளக்கே என்று பரமாத்மாவை குறிக்கும் திருமங்கையாழ்வார், பரமாத்மா ஜோதி ஸ்வரூபமானவர் என்று காட்டுகிறார்.
அவர் அரூபமானவர்,
அவரே வேதம் உரைக்கும் ப்ரம்மம் என்று காட்டுகிறார்.

ஜோதி ஸ்வரூபமானவர் (அரூபமானவர்), சுயமே பிரகாசமாக நந்தா விளக்காக இருக்கிறார் என்கிறார்.

அவர் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறார். எங்கும் இருக்கிறார்.

"அவர் நம் உடலின் உள்ளே இருப்பதால் தான், நாம் இருக்கிறோம்"
என்பதை சுட்டி காட்டவே, "நந்தா விளக்கே" என்ற பதத்தை வைத்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

நம் உடம்பை விட்டு அந்த நந்தா விளக்கு (பரமாத்மா) விலகி விட்டால்? "சவம்" என்ற பெயரை பெற்று விடுகிறது இந்த உடல்.

பரமாத்மா உள்ளே இருந்தவரை, இந்த உடல் இயங்கி வந்தது...
அந்த நந்தா விளக்கு உடலை விட்டு விலகிய அடுத்த நொடி, மரம் போல உடல் சாய்ந்து விடுகிறது...

நம் உடலுக்கு ஆதாரமாக இருந்த அந்த நந்தா விளக்கை, சுயம் பிரகாசமான ஜோதியை, பரமாத்மாவை, ஜீவனாகிய நாம் மதிக்காமல், உணராமல் போனால், நமக்கு தானே நஷ்டம்...
நாத்தீகம் பேசுவதால் யாருக்கு லாபம்?..

"உடலை விட்டு நந்தா விளக்கான பரமாத்மா விலகி விட்டால், அவரும் அழிந்து விடுவாரோ?"
என்ற சந்தேகம் நமக்கு வரக்கூடாது என்பதற்காக, உடனேயே "அளத்தற்கரியாய்" என்ற பதத்தை  திருமங்கையாழ்வார் பயன்படுத்துகிறார்.

நம் உடலை விட்டு போனாலும், பரமாத்மா (நந்தா விளக்கு) அழிவதில்லை என்று காட்டுகிறார்.
அவர் உலகம் எங்கும் பிரகாசமாக பரவி இருக்கிறார் என்கிறார்.

'அளத்தற்கரியாய்' என்றால் என்ன?
அளத்தற்கரியாய் என்றால் "அளவிட முடியாதவர்" என்று அர்த்தம்.


தமிழ் வளர, திவ்ய பிரபந்தங்களை படித்தாலே போதும்.
பல தமிழ் சொற்கள் தெரிந்து கொள்ளலாமே...

"நந்தா விளக்கே அளத்தற்கரியாய் நர நாரணனே"
என்று சொல்லும் போது,
"பரஞ் ஜோதியாக, யார் துணையும் இல்லாமல், தானே சுயம் பிரகாசமாக (நந்தா விளக்காக) உள்ள நாராயணன் நம் உடம்புக்குள் மட்டும் இல்லை, அவர் அளவிட முடியாதவராக எங்கும் இருக்கிறார்"
என்று பர தத்துவத்தை 'அளத்தற்கரியாய்' என்ற சொல்லை வைத்து பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.
ஜீவனாகிய நாம் அனைவரும்,
'தேசத்தால், காலத்தால், வஸ்துவால்' கட்டுப்பட்டவர்கள்.

ஒரு மனிதன் ஒரு தேசத்தில் இருக்கும் போது, அதே சமயத்தில் இன்னொரு தேசத்தில் இருக்க முடியாது..
பரவாசுதேவன் நாராயணனோ தேசத்துக்கு கட்டுப்படாதவராக இருக்கிறார்.
எந்த தேசத்திலும், எப்பொழுதும் இருக்கிறார்.
அளவிட முடியாதவராக எங்கும் இருக்கிறார்.

பரவாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த போது, நாரதர்
"ஸ்ரீ கிருஷ்ணர் தேசத்துக்கு கட்டுப்பட்டவரா?" என்று பார்க்கலாம் என்று துவாரகை வந்தார்.
16108 ராணிகள் ஸ்ரீ கிருஷ்ணரின் தர்ம பத்னிகள்.

நாரதர் ஒவ்வொரு ராணியின் அரண்மனைக்கும் சென்று சென்று பார்க்கிறார்.
நாரதரின் மனோபாவம் புரிந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணர்,
"ஒவ்வொரு அரண்மனையிலும் ஒவ்வொரு கிருஷ்ணனாக இருந்து, தான் தேசத்துக்கு கட்டுப்பட்டவன் இல்லை" என்று காண்பித்தார்.
நாரதர் பரமானந்தம் அடைந்தார்.
பரவாசுதேவன்  தேசத்துக்கு கட்டுப்படாதவர் என்று நிரூபித்தார்.

ஜீவனாகிய நாம் அனைவரும்,
"காலத்தால் கட்டுப்பட்டவர்கள்".

மனிதன் காலத்துக்கு கட்டுப்பட்டு வாழ்கிறான்.
மனிதன் தன் பிறப்பை இறப்பை கூட தீர்மானிக்க முடியாதவன்.

பரவாசுதேவன் நாராயணனோ, எந்த காலத்துக்கும் கட்டுப்படாதவர். "நடந்தது, நடப்பது, நடக்க போவது" என்று எந்த காலத்திலும் இருப்பவர்.
"காலம் தன் கையில் அடங்கி உள்ளது" என்பதை காட்டுவதற்கே "கால சக்கரத்தை" நாராயணன் வைத்துள்ளார்.

பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, உஜ்ஜயினியில் (மத்திய பிரதேசம்) சாந்தீபினியின் ஆசிரமத்தில் படித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணர் "பரமாத்மா" என்று அறிந்த சாந்தீபினி, 12 வருடம் முன் கடலில் விழுந்து இறந்து விட்ட தன் மகனை மீட்டு தர கேட்டார்.

குருவின் ஆசையை நிறைவேற்ற, காலத்துக்கும் கட்டுப்படாத ஸ்ரீ கிருஷ்ணர், 
எம லோகம் சென்று, யமதர்மனிடம் அந்த ஜீவனை அனுப்ப சொல்லி,
12 வருடம் கழித்து அவன் எப்படி வளர்ந்து இருப்பானோ அதே போன்ற உடலையும் கொடுத்து, எம லோகத்தில் இருந்து உஜ்ஜயினி வருவதற்குள் சகல வேதங்களையும் தானே சொல்லி கொடுத்து தன் குருவிடம் ஒப்படைத்து விட்டார்.

மகாபாரத போர் முடிந்த பிறகு, துவாரகையில் ஒரு சமயம், தேவகி ஸ்ரீ கிருஷ்ணரிடம் "தன்னால் கிருஷ்ணனின் பால லீலையை பார்க்க முடியாமல் போய் விட்டதே... குழந்தை கிருஷ்ணனை கொஞ்சும் பாக்கியம் அந்த யசோதை தானே பெற்றாள்" என்றாள்.
தன் தாய் ஆசைப்படுகிறாள் என்றதும், தன் மாய சக்தியால், அங்கேயே யசோதை அனுபவித்த குழந்தையாக ஆகி, பால லீலைகள் அனைத்தையும் தேவகிக்கு காட்டினார்.

காலத்துக்கு கட்டுப்படாதவர் என்று காட்டினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

'அளவிட முடியாதவராக' எங்கும் இருக்கிறார்.

இந்த ஆச்சர்யத்தை ருக்மிணி பார்த்து விட, தான் கண்ட 2 வயது கிருஷ்ணனை சிலை செய்தாள்.
அந்த பால கிருஷ்ணனை தானே பூஜை செய்ய ஆசைப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணரிடம் காண்பித்தாள்.

ஸ்ரீ கிருஷ்ணரும் தன் கையால் தொட்டு, தன் சாநித்யம் இந்த சிலையில் இருக்கும் என்று அணுகிரஹித்தார்.
கலியுகம் ஆரம்பித்து, துவாரகை கடலில் மூழ்கிய பின், மத்வாச்சாரியார் காலத்தில் ருக்மிணி வழிபட்ட அந்த மூர்த்தி இவருக்கு கிடைத்தார்.

உடுப்பியில் இந்த கிருஷ்ண விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று வரை லக்ஷகணக்கான பக்தர்களை ஆகர்ஷிக்கிறார்.
ஜீவனாகிய நாம் அனைவரும்,
"தேசத்தால், காலத்தால், வஸ்துவால்" கட்டுப்பட்டவர்கள்.

மனிதன் மனிதனாக தான் இருக்க முடியும். 
மனிதனே பல வஸ்துவாக ஆக முடியாது..

பரவாசுதேவன் நாராயணனோ எந்த வஸ்துவுக்கும் கட்டுப்படாதவர்.
எந்த வஸ்துவாகவும் இருப்பவர்.
ராமராக, கிருஷ்ணராக அவதாரம் செய்த பரவாசுதேவன், தேவைப்படும் போது, மீனாக, பன்றியாக, ஆமையாக, நரசிம்மராக கூட அவதரித்து விட்டார்..
தான் எந்த வஸ்துவாகவும் வர இயலும் என்று காட்டினார்..
ப்ரம்ம தேவன் படைப்பில் இல்லாத நரசிம்மமாக கூட வந்து விட்டார்..

பரவாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த போது,
"உயிருள்ள, உயிரற்ற பொருள் யாவும் தானாக ஆகி, தான் வஸ்துவுக்கு கட்டுப்பட்டவன் இல்லை" என்று காட்டினார்.

ப்ரம்ம தேவன், இடையர் சிறுவர்களை ஸ்ரீபிருந்தாவனத்தில் இருந்து மறைத்து சத்ய லோகம் எடுத்து சென்று விட்டார்.
ஸ்ரீ கிருஷ்ணர் இதை பற்றி துளியும் கவலைப்படவில்லை.
தானே அனைத்து இடையர் சிறுவர்களாகவும் ஆகி,
அவர்கள் கட்டி இருந்த ஆடைகளாகவும் ஆகி,
சாப்பிட கொண்டு வந்திருந்த மண் சட்டியாகவும் தானே ஆகி விட்டார்.

வஸ்துவுக்கு கட்டுப்படாதவர் என்று காட்டினார்.
அளவிட முடியாதவராக எங்கும் இருக்கிறார்.

ஒரு வருட காலம் ஆகி விட்டது. பிருந்தாவனம் வந்து பார்த்த ப்ரம்ம தேவன், ஸ்ரீ கிருஷ்ணரே உயிருள்ள பொருளாகவும், உயிரற்ற  பொருளாகவும் இருந்த ஆச்சர்யத்தை கண்டு பிரமித்தார்.
வஸ்துவுக்கு கட்டுப்படாத பரமாத்மாவே ஸ்ரீகிருஷ்ணராக இருக்கிறார் என்று உணர்ந்தார்..ப்ரம்ம தேவன்

நாம் இருப்பதற்கு ஆதாரமாக, அணையாமல் இருக்கும் அந்த பரஞ்ஜோதியை "நந்தா விளக்கு" என்ற பதத்தை கொண்டும்,
"அளத்தற்கரியாய்" என்ற பதத்தை பயன்படுத்தி, பரவாசுதேவன் எங்கும் இருக்கிறார் என்ற பரத்துவத்தை காட்டியும் இந்த பாசுரத்தை ஆரம்பித்து,
அப்படிப்பட்ட "அரூபமானவர், பரஞ்சோதி, அளவிட முடியாதவர்"
நம் மீது உள்ள கருணையின் காரணத்தால், "நாங்கூரில் மணிமாட கோவிலில் உருவம் தரித்து நாராயணனாக இருக்கிறாரே!!"
என்பதை பார்த்ததும், திருமங்கை ஆழ்வாருக்கு தன்னை பிள்ளையாகவும், கருணா மூர்த்தியான நாராயணனை "தாயாகவும்" தோன்ற,
"கரு மா முகில் போல் என் தாய்" 
என்று "தன் தாய்" என்று கொஞ்சுகிறார்..


ஆழ்வார்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும், ஆழ்ந்த வேத அர்த்தங்கள் கொண்டது... என்று அறிகிறோம்.
ஆழ்வார் பாசுரங்ககளை, நாயன்மார் பதிகங்களை,
ஆழ்ந்து படித்தாலேயே தமிழ்நாட்டில் தமிழும் வளரும், இறை பக்தியும் வளரும்.

ஆழ்வார் பாசுரங்ககளை, நாயன்மார் பதிகங்களை படித்தாலேயே, தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இறை பக்தி வளர்ந்து விடுமே!! என்று, நாதீகர்கள், ஹிந்து தெய்வங்களை மறுப்பவர்கள்,
தமிழ் வளராமல் போனாலும் சரி,  'ஆழ்வார் பாசுரங்கள், நாயன்மார் பதிகங்கள் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விடாமல் செய்வோம்'
என்று கடந்த 70 ஆண்டுகளில் முயற்சி செய்து,
தமிழ் கல்வியில் இந்த பாசுரங்கள் இடம்பெற செய்யாமல் அழிக்க முயன்றனர்.
போலிகளை எதிர்போம்.

பெரிய திருமொழியில்"மணிமாட கோவிலில்" பெருமாளை தன் தாய் என்று கொஞ்சி மகிழும் "திருமங்கையாழ்வார்" அருளிய பாசுரம் இதோ:

நந்தா விளக்கே அளத்தற்கரியாய், நர நாரணனே
கரு மா முகில் போல் எந்தாய்,
எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம்,
எத் திசைக்கும் அந்தாரம் அந்தேன் இசைபாட
மாடே களிவண்டு மிழற்ற
நிழல் துதைந்து, மந்தாரநின்று மணமல்கு 
நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என் மனமே

வாழ்க தமிழ்.
வாழ்க ஹிந்துக்கள்
வாழ்க ஹிந்து தர்மம்.



Sunday 8 September 2019

கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன?... பரமாத்மா-ஜீவாத்மா பற்றி ஒரு அலசல்.

பரமாத்மா-ஜீவாத்மா பற்றி ஒரு அலசல். 
பரமாத்மா 'நாராயணன்' சங்கல்பித்து தான், "ப்ரம்ம தேவன்" படைக்கப்பட்டார்.
அதற்கு பின்,
"சனகாதி முனிவர்கள்" பிரம்மாவால் படைக்கப்பட்டனர்.
அதற்கு பின்,
பரவாசுதேவன் நாராயணனே, ப்ரம்ம தேவன் நெற்றியில் சம்ஹார மூர்த்தியாக  "ஏகாதச (11)ருத்ரர்களாக" அவதாரம் செய்தார். 
இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்..



மேலும், 
ப்ரம்ம தேவன் தொடர்ந்து, "ரிஷிகள், தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள்" 
என்று பல படைப்புகள் செய்தார்.

நாராயணன் ஒருவரே "பரமாத்மா".  
மற்ற அனைவரும், "ஜீவாத்மாக்களே".
என்று வேதம் சொல்கிறது.

"ப்ரம்ம தேவன்" முதல் பூலோகத்தில் பிறக்கும் புழு பூச்சி வரை, அனைத்தும் "ஜீவாத்மாக்களே". 

அவரவர்கள் செய்த புண்ணியத்துக்கு "ப்ரம்ம பதவி, தேவ பதவி, மனித உடல், விலங்கு, பறவை, புழு, பூச்சிகளாக, மரமாக" பிறக்கின்றனர்
என்று வேதம் சொல்கிறது.

மஹா புண்ணியங்களை செய்து "ப்ரம்ம பட்டத்தில் ப்ரம்ம தேவனாக இருக்கும் ஜீவாத்மாவுக்கும்" ஆயுசு எல்லை உண்டு என்று வேதம் சொல்கிறது.
இப்பொழுது இருக்கும் "ப்ரம்ம தேவன்" காலம் முடிந்த பின், பரமாத்மா நாராயணன் மீண்டும் இன்னொரு புண்ணிய ஆத்மாவை (ஜீவன்) ப்ரம்ம பதவியில் அமர்த்தி, வேதத்தை கொடுத்து, உலகை நடத்த ஆணை இடுகிறார்.

"நாராயணனை பக்தி செய்து அவர் கருணையால் மோக்ஷம் அடையாதவரை",
செய்த புண்ணியங்களுக்கு, செய்த பாவங்களுக்கு
"மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து கொண்டே இருக்க வேண்டியது தான்"
என்றும் வேதம் சொல்கிறது.

"பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவை" புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்...

பொதுவாக,
ஜீவாத்மாவை "பரமாத்மாவின் அம்சம்" என்று சொல்வது வழக்கம்.

ஜீவாத்மா "பரமாத்மாவின் அம்சம்" என்றால் என்ன? புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
எளிதான உதாரணம் மூலம், நாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

பரமாத்மா "பரஞ்ஜோதி ஸ்வரூபமாக இருக்கிறார்" என்று சொல்லி கேட்டு இருப்போம்.

அந்த பரமாத்மாவை (பரஞ்ஜோதியை) "ஒரு அணையா விளக்கை" உதாரணமாக கொண்டு, பார்க்கும் போது
பரமாத்மா யார்? ஜீவாத்மா யார்? 
அத்வைதம் எப்போது தெரிகிறது?
த்வைதம் எப்போது தெரிகிறது?
விஷிஷ்ட அத்வைதம் எப்போது தெரிகிறது?
என்ற புரிதல் நமக்கு ஏற்படும்.



"பரமாத்மா ஒருவனே" (பரஞ்ஜோதியை) - என்று வேதம் சொல்வதை, 
ஒரு அணையா விளக்காக பார்ப்போம்.  
ஒரே ஒரு அணையா விளக்கிள் உள்ள ஜோதியை கொண்டு, 
கார்த்திகை மாதத்தில், ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றுகிறோம் அல்லவா?!!.

அது போல, 
பரஞ்ஜோதியாக இருக்கும் பரமாத்மா வாசுதேவன், 
'தன் அம்சமாகவே' பல ஜீவஜோதிகளை (ஜீவாத்மாக்களை), தானே படைக்கிறார்.
ஆனால்,
இந்த ஜீவாத்மாக்களுக்கு, பரமாத்மாவை போல உயிரற்ற உலகங்கள், உடல்கள் ஸ்ருஷ்டி செய்ய சக்தி கிடையாது. 

பரமாத்மா வாசுதேவன், 
தன்னை போன்றே அம்சமுள்ள "ஜீவாத்மாக்களை படைக்கவும்" சக்தி உள்ளவராக இருக்கிறார், 
உயிரற்ற "உலகங்களாக தானே ஆகவும்" சக்தி உள்ளவராக இருக்கிறார்.

பூலோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்த போது,
இதை தன் அவதாரத்தில் காட்டி, நமக்கு புரியவும் வைக்கிறார், பரமாத்மா வாசுதேவன்.

ஒரு சமயம், "ப்ரம்ம தேவன்" கோகுல சிறுவர்களை மறைத்து ப்ரம்ம லோகத்துக்கு எடுத்து சென்றுவிட்டார்.  
ப்ரம்ம தேவனின் செயலை அறிந்த பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர், 
தானே அனைத்து கோகுல சிறுவர்களாகவும் (ஜீவாத்மாக்கள்) ஆகி, 
தானே அவர்கள் உடுத்தி இருந்த "ஆடை", 
கொண்டு வந்திருந்த "மண் சட்டி" வரை உயிரற்ற பொருளாகவும் ஆகி விட்டார். 

ஒரு வருடம் கழித்து பிருந்தாவனம் வந்து பார்த்த ப்ரம்ம தேவன், பரமாத்மாவின் சக்தியை அறிந்ததும், ஸ்ரீ கிருஷ்ணர் "பரமாத்மா" என்று உணர்ந்தார்.


"உயிருள்ள பொருளாகவும், உயிரற்ற பொருளாகவும்" ஸ்ரீ கிருஷ்ணரே ஆகி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்.
சிறுவன் போல காட்சி கொடுக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை "பகவான்" என்று அறிந்து, மன்னிப்பு கேட்டார் என்று பார்க்கிறோம்.
"உயிருள்ள ஜீவாத்மாக்களை மட்டும் தான் படைக்கிறேன் என்று நினைத்து விடாதே!! 
'உயிரற்ற பொருளாகவும்' நானே இருக்கிறேன்"
என்று ஸ்ரீ கிருஷ்ணர் ப்ரம்ம தேவனுக்கு காட்டியதை,
நாம் மனதில் பதிய வைக்கும் போது தான், நமக்கு உலக படைப்பின் ரகசியங்கள் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
"தானே 14 உலகங்களாக" ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.
14 லோகங்களில் ஒன்றான "பூலோகமாகவும்" (earth) நாராயணனே இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.

நாராயணனே "பூலோகமாகவும் இருக்கிறார்" என்று நாம் புரிந்து கொள்ளும் போது தான்,
"நமக்கு ஏன் இந்த உலக விஷயங்களில் உள்ள ஆர்வம் குறைவதே இல்லை!!" என்று புரிந்து கொள்ள முடியும்.

இந்த உலக மயக்கத்தை "மாயை" என்று சொல்கிறது வேதம்.

பரமாத்மா வாசுதேவன்,
தானே பஞ்ச பூதங்களாக இருக்கிறார் (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம்)  என்ற ரகசியம் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
நீரிலும் பல நீர் வகையாக (sweet, salt) தன்னை காட்டுகிறார்  என்ற ரகசியம் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
காற்றிலும் பல வித காற்றாக (Hydrogen, Oxygen, etc.,) ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
நெருப்பிலும், விளக்கில் ஒரு நெருப்பாக, சூரியனில் ஒரு நெருப்பாக பல விதங்களில் இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.
பரமாத்மா வாசுதேவன்,
நிலத்திலும் பல வித நிலங்களாக ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.

நிலத்தின் அம்சமாக உருவாகும் மனித உடல்கள்,  மிருக உடல்கள், பறவை உடல்கள், மரங்கள், பூக்கள், அனைத்திலும்  பல ரூபங்கள் தரித்து இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.
இப்படி தானே ஆயிரக்கணக்கான ரூபங்களை எடுத்துக்கொண்டு, உயிரற்ற பொருளாகவும் ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.


இப்படி "உயிரற்ற பொருளாக" பல கோடி ரூபங்கள் எடுத்துக்கொண்டு, "தன் அம்சமாக உருவான ஜீவாத்மாக்களுக்கு" 
தானே உடலும் கொடுத்து, வாழ தானே இடமும் கொடுத்து பிறக்க வைக்கிறார் என்ற ரகசியம் புரியும்.


வேதம் "சஹஸ்ர சீர்ஷ புருஷ:" என்று ஏன் சொல்கிறது? 
என்ற ரகசியம் புரியும்.

"சர்வம் ப்ரம்ம மயம்" (அனைத்திலும் நாராயனே தெரிகிறார்) என்று மகான்கள் ஏன் சொன்னார்கள்? 
என்ற ரகசியமும் புரியும்.
"பரமாத்மாவின் அம்சமாக" வெளிப்பட்ட ஜீவாத்மாக்கள், 
"தான் தனியாக இருப்பது போல தெரிவதால், ஜீவாத்மாக்கள் தன்னை படைத்தவன் ஒருவன் இருக்கிறான்" என்று உணர்வதில்லை.

பரமாத்மாவே மனித உடலாக இருக்கிறார்.
பரமாத்மாவே உலகங்களாகவும் இருக்கிறார் என்று ஜீவாத்மாக்கள் புரிந்து கொள்ள முடியாமல், "இயற்கை" என்று பார்த்து மயங்குகிறார்கள். 
இதையே "மாயை" என்று வேதம் சொல்கிறது.

இந்த உலகில் உள்ள உடல்களை பார்த்து ஆசை கொள்கின்றனர்.
இந்த உலகில் உள்ள நகரங்களை பார்த்து, ஆசை கொள்கின்றனர்.

உலகத்தில் பல ஆசைகளை வளர்த்து கொள்கின்றனர். 
அந்த ஆசைகள் நிறைவேற பல வித முயற்சிகள் செய்ய ஆரம்பிக்கின்றனர். 
இதனால் காமம், கோபம், பொறாமை போன்ற குணங்களை சம்பாதிக்கின்றனர். 
செய்த முயற்சியின் பலனாக புண்ணியங்களை, பாவங்களை சேர்த்து கொள்கின்றனர்.
ஆயுசு முடிந்து, கிடைத்த மனித உடலை விட்ட பின், அந்த ஜீவாத்மா மீண்டும் செய்த பாவ புண்ணிய மூட்டையை பொறுத்து, மீண்டும் உலகங்களில் பிறக்கின்றனர்.
முடிவே இல்லாத இந்த சுழலில், கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் இறந்து, பிறந்து கொண்டே இருக்கிறது.



இதை "சாட்சியாக" பார்த்து கொண்டே இருக்கும் பரமாத்மா நாராயணன், "ஏதாவது ஒரு ஜீவனாவது, உலகில் ஏற்படும் சுக துக்கங்களை கண்டு வெறுத்து, பயந்து, தனக்கு அபயம் தருபவர் எங்கே? என்று 
ஜீவாத்மா தன்னை திரும்பி பார்ப்பானா?" 
என்று காத்து கொண்டு இருக்கிறார். 
ஆனந்த மூர்த்தியான தானே "உலகமாகவும் இருப்பதால்"
உலகத்தை கண்டு ஜீவாத்மாக்கள் மோஹித்தாலும், பரமாத்மா வாசுதேவன் தவறாக நினைப்பதில்லை. 
ஆனால், 
"உலகமாகவும் (உயிரற்ற) நானே இருக்கிறேன்" என்று புரிந்து கொள்ளாமல், "இயற்கை என்றும், உடல்கள் என்றும்" சொல்லிக்கொண்டு ஆசை கொள்வதால், 
பாவ புண்ணியங்கள் அடையும் ஜீவாத்மாவின் நிலையை, கண்டு வருந்துகிறார் பரமாத்மா வாசுதேவன்.
இதற்காக, 
தானே ரிஷிகளாகவும், அவதாரங்கள் செய்தும், 
ஆதி சங்கரராகவும், ராமானுஜராகவும் வந்து, 
புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களுக்கு வழி காட்டினார்.  வழி காட்டி கொண்டே இருக்கிறார்.  
தானே அர்ச்சா அவதாரங்கள் செய்து திருமலையில், காஞ்சியில், பதரியில், பாரத தேசங்கள் முழுக்க, அர்ச்சா அவதாரங்கள் செய்து நிரந்தரமாக நமக்கு கல் ரூபத்தில் காட்சியும் கொடுக்கிறார். 

உயிரற்ற பொருளாகவும் நாராயணனே இருக்கிறார். 
தன் உடலாகவும் அவர் தான் இருக்கிறார்.
  
தானும் (ஜீவன்) "பரமாத்மாவின் அம்சம்" தான் என்று புரிந்து கொள்ளும் போது, 
"அஹம் ப்ரம்மாஸ்மி" (நாம் அனைவரும் பிரம்மமே) 
என்ற ஞானம் ஏற்பட்டு விடுகிறது. 
அப்பொழுதான் அந்த ஜீவனுக்கு "அத்வைதம்" புரிய ஆரம்பிக்கிறது. 
"இந்த அனுபவம் நமக்கு ஏற்பட வேண்டும்" என்ற கருணையின் காரணமாக தான், 
ஆதி சங்கரராக சிவபெருமானே அவதரித்து "அத்வைத" சித்தாந்தத்தை வெளிக்காட்டினார்.





ப்ரம்ம தேவன் ஆயுள் முடிந்த பின், 
பரமாத்மா நாராயணன் "உயிரற்ற உலகங்களை தன்னிடமே மறைத்து கொண்டு", "தான் படைத்த ஜீவாத்மாக்களை தன்னோடு சேர்த்து கொண்டு" தான் மட்டுமே இருக்கிறார். 
பல விளக்கில் ஏற்றப்பட்ட தீபங்கள் அந்த அணையா விளக்கில் சேர்ந்து மறைந்து விடுவது போல, 
உயிரற்ற உலகங்களும், தன் அம்சமான ஜீவாத்மாக்களையும் தன்னுடன் சேர்த்து கொண்டு விடுகிறார். 
பிரளய காலம் முடிந்து, மீண்டும் புது ப்ரம்ம தேவனை நியமித்து, 
தன்னுள் வைத்து இருந்த அனைத்து ஜீவாத்மாக்களையும் மீண்டும் பிறக்க வைக்கிறார். 
அவர்களுக்கு உடலாகவும், உலகங்களாகவும் இவரே ஆகி, மோஹிக்க செய்கிறார் பரமாத்மா.

உயிரற்ற பொருளாகவும் நாராயணனே இருக்கிறார், 
நாமும் (ஜீவனும்) அந்த பரமாத்மாவின் அம்சமே என்பதால், 
"எங்கும் பரப்ரம்மமே இருக்கிறது. ஒரே தெய்வம் தான்" 
என்று ஆதி சங்கரர் அத்வைத வேத சித்தாந்தத்தை வழிகாட்ட வேண்டிய அவசியம் அவர் காலத்தில் ஏற்பட்டது.  
வேதத்தை "கர்மமாகவே செய்யும் கர்மடர்கள்" அதிகமாகி போனதால், வேதத்தில் உள்ள இந்த "ஞானத்தை" புரிந்து கொள்ளாமல், வெறும் செயலாகவே செய்து கொண்டிருந்தனர்.  
அவர்களுக்கு "அத்வைத சித்தாந்தத்தை" வெளிக்காட்டி ஆதி சங்கரர் ஹிந்துக்களை மீண்டும் நேர் வழிக்கு திருப்பினார்.

அரேபிய இஸ்லாமியர்கள், பாரத தேசத்தில் நுழைந்து 
ஹிந்துக்கள் கொல்லப்பட, 
லட்சக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட, 
மத மாற்றம் செய்யப்பட, 
ஹிந்துக்கள் நிலை குலைந்த சமயத்தில், ஹிந்துக்களை மீண்டும் நிலை பெற செய்ய மத்வாச்சாரியார் அவதரித்தார்.



உயிரற்ற பொருளாகவும் நாராயணனே இருக்கிறார், 
கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களும் "நாராயணனின் அம்சமே" என்ற "அத்வைத ஞானம்" உண்மை தான். 
ஆனால், 
அந்த பக்குவம் அனைத்து ஜீவாத்மாவுக்கும் வருமா? 

"ஆதி சங்கரருக்கு, பிரகலாதனுக்கு, ஜடபரதருக்கு" அந்த பக்குவம் இருந்தது. அத்வைத ஞானம் இருந்தது. 
தன்னை கொல்ல வந்தாலும் "கொலை செய்ய வருபவனும் நாராயணனே" என்று இருந்தனர்.

கோவில்களை இடித்து, 
ஹிந்துக்களை கொன்று, 
மதம் மாற்றும் அரேபியர்களுக்கு இந்த ஞானம் இல்லையே ! 
இந்த பக்குவம் ஹிந்துக்களுக்கு மட்டும் புரிந்து இருப்பதால், 
வேதமே அழியும் அபாயம் ஏற்பட்டது. 

வேத தெய்வங்கள் சும்மா இருக்குமா? பொய் தெய்வங்கள் இல்லையே ! 

மனிதர்கள் உருவாக்கிய மதம் இல்லையே, ஹிந்து தர்மம்.

பிற மதங்களை காப்பது "மனிதர்கள்". 
ஹிந்து தர்மத்தை காப்பது "தெய்வங்கள்" அல்லவா.



காலத்தை அனுசரித்து, யதிராஜர் ராமானுஜர் மூலம் "விஷிஷ்டாத்வைத" சித்தாந்தம் வெளி வந்தது.

காலத்தை அனுசரித்து, மத்வாச்சாரியார் மூலம் "த்வைத" சித்தாந்தம் வெளி வந்தது.
பரமாத்மா நாராயணன், "தன் அம்சமாகவே கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களை படைத்து இருக்கிறார்" என்று பார்த்தோம்.

"தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொண்டு இருக்கும் ஜீவாத்மாக்கள், 
"தன்னை படைத்தவன் தான், தன் உடம்பாகவும், உலகமாகவும் இருக்கிறார்" என்று புரியாமல், மயங்கி இருக்க, 
"தான் இருப்பதை உணரும் வரை, தன்னை படைத்தவனை தேடும் வரை" மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கிறார் என்று பார்த்தோம்.

"அத்வைதம்" என்ற உண்மை நிலையை  ஒரு சிலரே அனுபவத்தில் உணர முடியும் என்பதால், "அத்வைத பக்குவம் மட்டுமே மோக்ஷம் கிடைக்க வழி" என்று சொன்னால், கோடிக்கணக்கான ஜீவனுக்கு மோக்ஷமே கிடைக்காது.

இந்த உலகமும் நாராயணனே, 
இந்த உடலும் நாராயணனே, 
தான் (ஜீவன்) நாராயணின் அம்சமே 
என்று உணர்வதற்கு, நாராயணனாக பார்த்து கருணை செய்தால் தான் வழி.  

அத்வைத நிலை நமக்கு ஏற்பட, பரவாசுதேவன் தான் ஜீவாத்மாவுக்கு  வழி காட்ட வேண்டும். 

"உலகமே நாராயணன், நாமும் அவர் அம்சமே" என்ற ஞானம் ஏற்படாத வரை, நமக்கு நாராயணன் "மோக்ஷம்" கொடுக்க போவதில்லை.  
ஜீவன் "தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொண்டு, 
"தன்னை படைத்தவன் ஒருவன் இருக்கிறான்" என்று நினைவே இல்லாமல், 
நாராயணனே உலகமாக இருப்பதை அறியாமல் "இயற்கை" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் வரை, பாவ, புண்ணியத்துக்கு ஏற்றவாறு மீண்டும் மீண்டும் உலகில் பிறக்க செய்கிறார்



ஜீவன், "இயற்கை" என்ற பெயரில் 'தன்னை தானே ரசிக்கிறான்' என்பதால், 
மோக்ஷம் கொடுக்க அவசியமில்லாமல் இருக்கிறார் பரமாத்மா நாராயணன்.

உலகில் சுகங்கள் கிடப்பது போல, பல துன்பங்களும் நமக்கு ஏற்படுகிறது.

உலகில் ஏற்படும் துன்பங்களை பார்த்து, மூப்பை பார்த்து, மரணத்தை பார்த்தும், 
நமக்கு அத்வைத பக்குவம் நமக்கு வரப்போவதே இல்லை.

"நம்மை நாராயணன் தான் படைத்தார். 
அவர் நினைத்தால் மட்டுமே, நமக்கு மோக்ஷம் தர முடியும்" 
என்ற அளவுக்காவது நமக்கு அறிவு இருக்க வேண்டாமா!!
பரமாத்மாவின் பரத்துவத்தை படித்து புரிந்து கொண்டாலும், அனுபவத்தில் கொண்டு வர முடியாத நம்மை போன்றவர்களுக்கு (ஜீவாத்மா), 
அந்த அத்வைத பக்குவத்தை "நாராயணனே" கொடுக்கவல்லவர். 

ஆதலால், நாம் அஞானியாக இருப்பதால், "நம்மை படைத்த நாராயணன் நம்மை காக்கிறார்" என்ற அளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
நம்மை படைத்தவர் மேல், நமக்கு அன்பு (பக்தி) இருக்க வேண்டும்.
ஆதலால், 
"நாம் அஞானியாக இருப்பதால், நாம் நாராயணனை பக்தி செய்ய வேண்டும். அவர் கருணையால் மோக்ஷம் அடைய வேண்டும்" 
என்று "த்வைத" சித்தாந்தத்தை மத்வாச்சாரியார் மீண்டும் வெளிக்கொண்டு வந்தார்.



அத்வைத பக்குவம் (நிலை) ஏற்படாதவரை, ஜீவாத்மா மோக்ஷம் அடைய முடியாது என்பது உண்மை என்பதால், "ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு" என்று புரிந்து கொண்டு, அந்த பரமாத்மாவிடம் பக்தி (அன்பு) செய்ய வேண்டும்.
அஞானியாக இருந்தாலும், உலகத்தை உலகமாகவே பார்த்தாலும், பக்தி செய்ய ஆரம்பித்து விட்டால், 'தன்னை பார்க்கும் ஜீவனை, தன்னை நினைக்கும் ஜீவனை', பரமாத்மா 
கருணையோடு பார்க்க ஆரம்பிக்கிறார். 
தன் மீது பக்தி வளர செய்கிறார். 
உலகத்தில் ஏற்படும் துன்பங்கள் தான் பக்தனுக்கு வராமல் செய்கிறார். பக்குவத்தை கொடுத்து, தன் கருணையால் "மோக்ஷம்" கூட கொடுத்து விடுகிறார்.

"நம்மை படைத்த நாராயணன் மீது அன்பு (பக்தி) செய்தால், அஞானியும் மோக்ஷம் அடைய முடியும்" என்ற த்வைத சித்தாந்தம் கோடிக்கணக்கான மக்களுக்கு ஏற்பு உடையதாக இருப்பதால், மத்வாச்சாரியார் த்வைத சித்தாந்தத்தை மீண்டும் வெளிக்கொண்டு வந்தார்.
ராமானுஜர் வேதத்தின் முழுமையான அபிப்ராயமான "விஷிஷ்டாத்வைதத்தை" வெளிக்காட்டினார்.

"பரமாத்மா ஒருவரே மெய்.  
உலகம் பொய்" என்கிறது அத்வைதம்.

"உலகத்துக்கும் அந்தர்யாமியாக பரமாத்மாவே இருக்கிறார். 
அதனால் உலகத்தை வெறுக்காமல், உலகத்தில் பார்க்கும் அனைத்திலும் அந்தர்யாமியாக பரமாத்மாவே இருக்கிறார் என்று பார்" 
என்று அத்வைத சித்தாந்தத்தில்  அந்தர்யாமி தத்துவத்தையையும் காட்டி '"விசேஷ அத்வைதம்" காட்டப்பட்டது. ஸ்ரீ ராமானுஜர் அவர் காலத்தில் (1017AD-1137AD) விஷிஷ்டாத்வைதம் பிரகாசம் அடைந்தது.

வாழ்க ஸ்ரீ ராமானுஜர்.
வாழ்க சங்கரர்.

நாராயணின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் அல்லவா.. ஸ்ரீ ராமானுஜர்.
வேதம் "த்வைதம், அத்வைதம்" இரண்டையும் சொல்வதால்,
ஸ்ரீ ராமானுஜர், 
த்வைத சித்தாந்தம் சொல்லும் "பக்தியை" ஏற்கிறார், 
அத்வைத சித்தாந்தம் சொல்லும் "பரதத்துவ" ஞானத்தை ஏற்கிறார்.  



வேதத்தின் முழு அபிப்ராயமான, "விஷிஷ்டாத்வைத சித்தாந்தம்" ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் மீண்டும் வெளிப்பட்டது. 

அஞானியாக இருந்தாலும் பரவாயில்லை. 
உலக கஷ்டங்கள் விலக, பெருமாள் கருணையை பெற, "நமோ நாராயணாய" என்று அனைவரும் சொல்லுங்கள். 
"அனைவரும் ஹரியின் ஜனங்களே" என்று த்வைத சித்தாந்தமான பக்தியை செய்ய சொன்னார் ஸ்ரீ ராமானுஜர்.

பகவானின் கருணை நம் மீது திரும்பும் பொழுது, நமக்கு அத்வைத அனுபவத்தை நாராயணனே கொடுப்பதால், 
"மோக்ஷம்" என்பது உடலை விட்டு பிரிந்து பரஞ்சோதியின் சேர்ந்தால் மட்டும் தான் கிடைக்கும் என்று த்வைதம் சொல்கிறது

அத்வைத அனுபவம் நமக்கு ஏற்படும் போது, நாம் உலகில் இருக்கும் போதே, 'மோக்ஷ அனுபவம் கிடைக்கும்' என்று சொல்லும் அத்வைத சித்தாந்தத்தையும் ஏற்கிறது "விஷிஷ்டாத்வைதம்".
'பிரகலாதன், ஆதி சங்கரர், ஜடபரதர்' போன்றோருக்கு "பரமாத்மா எங்கும் உள்ளார்" என்ற அத்வைத நிலை இருந்தது. 
தன்னை கொல்ல வந்தவர்களை கூட வேறாக பார்க்க முடியாமல் இருந்தனர். 

"'பரமாத்மா எங்கும் உள்ளார்' என்ற இந்த பரதத்துவ நிலை, 
அஞானியாக இருந்து பக்தி செய்தால் கூட ஏற்படும், பகவான் நமக்கு அந்த அனுபவத்தை கொடுப்பார்" 
என்று 'வேதத்தின் ரகசியத்தை' ராமானுஜர் விஷிஷ்டாத்வைதத்தை காட்டி வெளிப்படுத்தினார்.

ஆழ்வார்கள் பாசுரங்களை பார்க்கும் போது நமக்கு இந்த உண்மை புரிகிறது. 

"பக்தியை நமக்கு ஊட்டும்" 4000 பாசுரங்களை கொடுத்த ஆழ்வார்கள், 
பல இடங்களில் 
"ஸ்ரீ ரங்க வாசமே எங்களுக்கு போதும், 
திருமலை வாசமே போதும், 
காஞ்சி வரதனே போதும், 
மோக்ஷத்தை இங்கேயே நாங்கள் அனுபவிப்பதால், பரமபதம் என்ற வைகுண்டம் கூட எங்களுக்கு வேண்டாம்" 
என்று சொல்வதை பார்க்கும் போது, அத்வைத நிலையை காட்டுகின்றனர்.




மகாத்மாக்கள் "அத்வைத நிலையிலேயே" வாழ்கிறார்கள்.  
அஞானியாக நாம் இருப்பதால், 
"உலகமே நாராயணன் தான்" என்ற அனுபவம் நமக்கு ஏற்படாததால், 
"நாம் சேர வேண்டியது அந்த பரஞ்ஜோதியான நாராயணனை தான்" என்ற உண்மை நமக்கு புரியாததால்,
"சுதந்திரமானவர்கள்" என்று நினைத்து கொள்வதால்,
சம்சார சூழலில் சிக்கி, உலக துன்பங்களை அனுபவித்து கொண்டே, மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து கொண்டே இருக்கிறோம்.

அஞானியாக இருக்கும் நமக்கும் வழி உண்டு. 
அஞானியாக இருக்கும் நமக்கும் 'மோக்ஷம்' கிடைக்க வழி உண்டு.

முதல் படியாக "நம்மை படைத்த நாராயணன் மீது அன்பை (பக்தியை) வளர்த்து கொண்டு"
நாராயணன் கருணை நம் மீது விழுந்து, அவர் கருணையாலேயே நமக்கும் அத்வைத அனுபவம் ஏற்பட்டு, நாமும் மோக்ஷம் அடையலாம். 

ஸ்ரீ ராமானுஜர் சொன்ன விஷிஸ்டாத்வைதம் நமக்கு ஏற்றது. 

மற்ற இரண்டு சித்தாந்தங்களையும் ஏற்று கொண்டு இருப்பதால், விஷிஷ்டாத்வைதம் வேதத்தின் அபிப்ராயம் கூட.

ஆதி சங்கரரை வணங்குவோம்.
மத்வாச்சாரியாரை வணங்குவோம்.
யதிராஜரான ராமானுஜரை வணங்குவோம்.

நம் பாரத பூமியில் அவதரித்த அனைத்து மகாத்மாவையும் வணங்குவோம். 



நம் குருநாதரை நமஸ்கரிப்போம்.

மோக்ஷம் அடைய வழி என்ன?  
நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு என்ன? என்று காட்டி வழிநடத்தும், 
நம் ஆன்மீக பூமியான பாரத பூமியை நினைத்து, பெருமை படுவோம்.

வாழ்க ஹிந்துக்கள்.