Followers

Search Here...

Wednesday 9 October 2019

ரிஷிகளின் பரம்பரை என்று சொல்லி கொள்ளும் நாம், ரிஷிகளை பற்றி தெரிந்து கொள்வோமே..மஹ ரிஷி யார்? ப்ரம்ம ரிஷி யார்? சூத ரிஷி யார்?..

ரிஷிகள் மனிதர்கள் அல்ல, தேவர்களும் அல்ல.
தேவர்களுக்கும் மேலானவர்கள் ரிஷிகள்.

ரிஷிகள் தேவர்களையும், அசுரர்களையும், ராஷசர்களையும், மனிதர்களையும் படைத்தவர்கள்.



பரப்ரம்மான வாசுதேவனே ரிஷி தான்.
அவரே மும்மூர்த்திகளாக வ்யூஹ அவதாரம் செய்தார்.
மும்மூர்த்திகளும் ரிஷிகள் தான்.

பரவாசுதேவன் மனித அவதாரம் செய்த போது கூட, தன்னை ரிஷியின் பரம்பரையை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்பட்டார்.
ஸ்ரீ ராமர் - வசிஷ்ட கோத்திரம் (பரம்பரை)
சீதை - அவதரித்தது கௌதம கோத்திரம், ஸ்ரீ ராமரை மணம் செய்து கொண்ட பின், வசிஷ்ட கோத்திரம் (பரம்பரை)
ஸ்ரீ கிருஷ்ணா - கர்க கோத்திரம் (பரம்பரை)
தர்மபுத்திரர் - வியாக்ரபாதர் கோத்திரம் (பரம்பரை)

கௌதம கோத்திரம் (பரம்பரை) கௌதம ரிஷியால் உருவானது.
ஜாபாலி என்ற சிறுவன் தன் கோத்திரம் (பரம்பரை) தெரியாமல் இருந்தான்.  கௌதம ரிஷி அவனை ஏற்றுக்கொண்டு, தனது கோத்திரத்தை (பரம்பரை) கொடுத்து, உபநயனம் செய்து, "ஸத்யகாம ஜாபாலி" என்று பெயர் கொடுத்தார்.
கௌதம ரிஷியின் ஆசியால், பெரும் தபோதனராக ஆகி விட்டார் ஜாபாலி.
பிற்காலத்தில், ஜாபாலி கோத்திரம் (பரம்பரை) உருவாகி, இந்த பரம்பரையில் வருபவர்களுக்கு ஜாபாலியே ரிஷியாக ஆனார்.
கௌதம ரிஷியை குருவாக ஏற்ற ஜாபாலி, பெரும்பேர் பெற்றார்.



காஷ்யப கோத்திரம் (பரம்பரை) காஷ்யப ரிஷியால் ஏற்பட்டது.
ப்ரம்மாவின் மானஸ புத்திரர் காஷ்யபர். சப்த ரிஷிகளில் ஒருவர்.
பெரும்பாலான உலக ஸ்ருஷ்டி காஷ்யபரால் தான் உண்டானது.
ஜாம்பவான் அவதரித்த இடம் இன்று 'ஜம்மு' (Jammu) என்று அழைக்கப்படுவது போல,
காஷ்யப ரிஷி பூலோகத்தில் தவம் செய்த இடம் இன்று காஷ்மீர் (kashmir) என்று அழைக்கப்படுகிறது.

வேதம் தழைத்த தேசம் காஷ்மீரம். ஆதி சங்கரர் காஷ்மீரம் வந்து மண்டல மிஸ்ரரிடம் வேதத்தை பற்றி விவாதித்தார் என்று பார்க்கிறோம்.

ஒருவேளை யாருக்காவது தான் எந்த கோத்திரத்தை (பரம்பரை) சேர்ந்தவன்?
என்று தெரியாத பட்சத்தில், தாங்கள் காஷ்யப கோத்திரம் என்று சொல்லி கொள்ள சாஸ்திரம் இடம் கொடுக்கிறது.

அதேபோல,
தர்மத்தை சொல்லும் "சூத்ரம்" (Formula to lead life) பல உண்டு. ரிஷிகள் பலர் தர்ம சூத்ரங்கள் இயற்றி உள்ளனர்.

'ஆபஸ்தம்ப சூத்ரம், போதாயன சூத்ரம், வசிஷ்ட சூத்ரம், விஷ்ணு சூத்ரம், கௌதம சூத்ரம்' என்று பல தர்ம சூத்ரங்கள்,
அந்தந்த ரிஷிகளின் பெயராலேயே உள்ளது.

மற்ற சூத்ரத்தில் சொல்லப்பட்ட அனைத்து தர்மங்களும் 'போதாயன' சூத்திரத்தில் அடக்கம்.
அதனால்,
ஒருவேளை யாருக்காவது தான் எந்த சூத்ரத்தை (formula) சேர்ந்தவன்? 
என்று தெரியாத பட்சத்தில், 'போதாயன சூத்திர' படி வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கலாம் என்று சாஸ்திரம் இடம் கொடுக்கிறது.
ரிஷிகள் அனைவரும் ஒரே தகுதி உள்ளவர்கள் அல்ல.
ரிஷிகள் ஞானிகள் (மெய் அறிவு கொண்டவர்கள்).
ரிஷிகள் தவவலிமையால் வேத மந்திரங்களை கண்டுபிடிப்பதால் இவர்களுக்கு ரிஷி என்று பெயர்.



ரிஷிகள் பலவிதமாக உள்ளனர். ரிஷிகள் அனைவரும் ஒரே பலம் கொண்டவர்கள் என்று நினைக்க கூடாது.
  • மஹ ரிஷி
  • ப்ரம்ம ரிஷி
  • ராஜ ரிஷி
  • வைஸ்ய ரிஷி
  • ஜன ரிஷி
  • தப ரிஷி
  • ஸத்ய  ரிஷி
  • காண்ட ரிஷி
  • தேவ ரிஷி
  • சூத ரிஷி

ரிஷிகளின் மனைவிகள் "ரிஷிகை" என்று சொல்வோம்.

பொதுவாக அனைத்து ரிஷிகளும் தவவலிமையால், சப்த பிரபஞ்சத்தில் (sound energy) மறைந்து இருக்கும் "வேத மந்திரங்களை" கண்டுபிடிக்கும் சக்தி உள்ளவர்கள்..




பிரபஞ்சத்தில் இருக்கும் வேதத்தை கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்கள், "ரிஷி" என்று போற்றப்பட்டனர்.
வேதத்திற்கே "சப்த ப்ரம்மம்" என்று தான் பெயர்.
மறைந்து இருக்கும் இந்த சப்த பிரம்மத்தை, தியானத்தால் கண்டுபிடித்து நமக்கு தந்து விட்டனர் ரிஷிகள்.
மறைந்து இருப்பதால், தமிழில் வேதத்தை "மறை" என்ற சொல் கொண்டு பொருத்தமாக அழைக்கின்றனர்.
சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்தியரே "தமிழ் முனி"யாக தானே போற்றப்படுகிறார்.
ரிஷியை விட உயர்ந்தவர்கள் முனிகள்.
ரிஷியான நாரதர் முனியாகவும் போற்றப்படுகிறார். தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்..
தவவலிமை அதிகமாக உள்ள ரிஷிகளுக்கு,
8 மஹா ஸித்திகளும் கைகூடி, 
அனுகிரஹமும் செய்ய முடியும், 
நிக்ராஹமும் (அழிக்கவும்) முடியும் 
என்ற சக்தி பெரும் போது,
அந்த ரிஷிகள் "மஹ ரிஷி" என்ற அந்தஸ்த்தை பெறுகிறார்.
துர்வாசரை மஹ ரிஷி என்று சொல்வார்கள்.



அழிக்கும் சக்தியும் உள்ளதால், "மஹ ரிஷிகளை" கண்டு க்ஷத்ரியனும், தேவர்கள் கூட, அவர்கள் சாபத்துக்கு பயப்படுவார்கள்.

ப்ராம்மண (Spiritual) பரம்பரையில் பிறந்து, பேராசை கோபம் அற்று, தவவலிமையால், "வேத மந்திரங்களை" கண்டுபிடித்தவர்கள் "ப்ரம்ம ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
பிராம்மண குணம் உள்ளவன் ரிஷியாக உயரும் போது "ப்ரம்ம ரிஷி" ஆகிறான்.
க்ஷத்ரிய குணம் கொண்ட கௌசிகன் என்ற அரசன், ப்ரம்ம ரிஷியான "வசிஷ்டரிடம்" உள்ள காமதேனுவை கைப்பற்ற நினைத்தான்.
தன் படைவீரர்களை கொண்டு காமதேனுவை இழுத்து வர   சொன்னான்.
"ப்ரம்ம ரிஷி" வசிஷ்டர், தன் தவவலிமையால் ஆயிரக்கணக்கான படைவீரர்களை மாயையால் உருவாக்கி, அனைவரையும் ஒழித்தார். 

இத்தனை பலம் ஒரு ப்ரம்ம ரிஷிக்கு இருக்குமானால், க்ஷத்ரிய அரசனாக இருப்பதை விட, ப்ரம்ம ரிஷியாகலாம் என்று நினைத்தார் கௌசிகன்.
அரச பதவியை தன் மகன்களிடம், மந்திரிகளிடம் கொடுத்து விட்டு, தவம் செய்ய புறப்பட்டு விட்டார்.
கோபத்தை விட்டு, காமத்தை விட்டு, பொருள் ஆசையை விட்டு, பிராம்மண குணங்களை கடும் தடைகளுக்கு பிறகு பெற்று, க்ஷத்ரியனாக பிறந்தும், ப்ரம்ம ரிஷியாக ஆசைப்பட்ட கௌசிகன், வசிஷ்டர் வாயால் "ப்ரம்ம ரிஷி" என்று பெயர் பெற்றார். விஸ்வாமித்திரர் என்று உலக புகழ் பெற்றார் என்று பார்க்கிறோம்.

க்ஷத்ரியனாக (Protector) பிறந்து, தவவலிமையால், சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "ராஜ ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
ஸ்வாயம்பு மனுவே "ராஜ ரிஷி". 
தசரதர் ஒரு ராஜ ரிஷி. 
ஜனகன் ஒரு ராஜ ரிஷி.
பொதுவாக ராஜரிஷிகள், தன் மகன்கள் ஆட்சிக்கு அமர்த்திய பின், வயோதிக காலத்தை வனத்தில் தவம் செய்து கழிக்க சென்று விடுவார்கள்.



வைஸ்யனாக (Business) பிறந்து, தவவலிமையால்,  சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "வைஸ்ய ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
துலாதரன் என்ற ரிஷி - வைஸ்ய ரிஷி.

"ஜாதி பேதம்" பார்ப்பது காமம், க்ரோதம் உள்ள நமக்கு தான் உண்டு.
ரிஷிகளுக்கு இல்லை.
யார் மெய் அறிவில் (ஞானத்தில்) உயர்ந்து இருக்கிறார்களோ, அவர்களே பெரியவர்.
மஹாபாரதத்தில், ப்ரம்ம ரிஷியான "ஜாஜலி" என்பவர், துலாதரன் என்ற வைஸ்ய ரிஷியிடம் தர்ம உபதேசங்கள் கேட்டதாக உள்ளது.

சூத்ர குலத்தில் பிறந்து இருந்தாலும்,  தவவலிமையால், சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "சூத ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
சூத ரிஷியை, சௌனகாதி ப்ரம்ம ரிஷிகள் பூஜை செய்து, அவரை வ்யாஸ பீடத்தில் அமர்த்தி, அவரிடம் புராணங்களை சொல்ல சொல்லி கேட்டனர்.
ரோம ஹர்ஷனர் என்ற ரிஷியும் சூத ரிஷி.

தேவனாக பிறந்து, தவவலிமையால், சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "தேவ ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
நாரதர் - தேவ ரிஷி
தேவலர் - தேவ ரிஷி
தேவர்கள் திவ்யமான சரீரம் உடையவர்கள்.
அக்னி ஸ்வரூபமானவர்கள்.
இவர்கள் எந்த லோகத்துக்கும் சஞ்சரிக்க இயலும். 
மண்ணால் ஆனா மனிதர்கள் அல்ல இவர்கள்.
பொதுவாக இவர்கள் பூலோகத்து மேல் உள்ள சொர்க்க லோகத்திலோ, ஜன  லோகத்திலோ, தப லோகத்திலோ, ப்ரம்மா இருக்கும் சத்ய லோகத்திலோ வசிக்க கூடியவர்கள்.


ப்ரம்ம (ஸத்ய) லோகத்தில் வசிக்கும் தேவ ரிஷிகள், "ஸத்ய ரிஷி" என்றும்  அழைக்கப்படுகிறார்கள்.

ப்ரம்மாவின் முதல் படைப்பான சனத்குமாரர்கள் - ப்ரம்ம ரிஷிகள். 
எப்பொழுதுமே 5 வயது பாலகனாகவே இருப்பவர்கள்.
ப்ரம்ம லோகம் அழியும் வரை, ப்ரம்மா அழியும் வரை இருப்பவர்கள்.

ப்ரம்ம இருக்கும் ஸத்ய லோகத்துக்கு கீழே உள்ள தப லோகத்தில் வசிக்கும் தேவ ரிஷிகள், "தப ரிஷிகள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

தப லோகத்துக்கு கீழே உள்ள ஜன லோகத்தில் வசிக்கும் தேவ ரிஷிகள், "ஜன ரிஷிகள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

வேதத்தில் 4 காண்டங்கள் உள்ளன.
  1. ஆக்னேயம்
  2. ஸோமம்
  3. வைச்வ தைவத்யம்
  4. ப்ராஜா பத்யம்
வேதத்தில் உள்ள ஒவ்வொரு காண்டத்துக்கும் (Chapter) அதற்கான ரிஷிகள் உள்ளனர்.  "காண்ட ரிஷிகள்" என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
பெண்களில் கூட ரிஷிகள் உண்டு.
"கார்கி"  என்ற பெண் ரிஷி உண்டு.

ரிஷிகளால் மனிதர்கள் படைக்கப்பட்டனர். 
தேவர்களும் வழிபடும் ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் நாம்.


வாழ்க ரிஷிகள்.
வாழ்க ஹிந்துக்கள். 




Monday 7 October 2019

"பிராணன் போய் விட்டது" என்று சொல்வதற்கு காரணம் என்ன? நம் உடம்பில் உள்ள 5 வாயுவின் பெயர் என்ன?

பிராணன்
பரப்பிரம்மமாகிய வாசுதேவன்,
"ராவணனை அழித்து, மனிதர்களுக்கு தர்மத்தை வழிகாட்ட, தானே மனித அவதாரம் செய்வேன்" என்று ப்ரம்மதேவனிடம் சொன்னதும், முப்பத்து முக்கோடி தேவர்களும், வாசுதேவன் அவதரிப்பதற்கு முன், அவருக்கு தொண்டு செய்ய பூலோகத்தில் அவதாரங்கள் செய்தனர்.



இந்திரனே வாலியாக அவதரித்தார்.
சூரிய தேவனே சுக்ரீவனாக அவதரித்தார்.
வாயு தேவனின் அம்சமாக ஹனுமான் அவதரித்தார் என்று பார்க்கிறோம்.

உலகத்தில் ஏற்படும் அனைத்து அசைவுக்கும், வாயுவே காரணம்.
"வாயு தேவன்" காற்றுக்கு அதிபதி.
இந்த காற்று(வாயு) வெளியில் மட்டும் இருக்கிறது என்று நாம் நினைத்து விட கூடாது. 
இந்த காற்று(வாயு) 5 விதமான காரியங்கள் செய்ய, நம் ஒவ்வொருவரின் உடலிலும் இருக்க செய்து, நம் உடலை இயங்க செய்கிறார் வாயு தேவன்..
இந்த 5 வித காற்றுக்கும் நம் வேத சாஸ்திரம் (ஹிந்து தர்மம்) பெயர் கொடுத்து இருக்கிறது..

1. பிராணன்
2. அபானன்
3. வியானன்
4. உதானன்
5. சமானன்
என்று இந்த 5 வித காற்றுக்கும் நம் வேத சாஸ்திரம் (ஹிந்து தர்மம்) பெயர் கொடுத்து இருக்கிறது.



நம் உடம்பில் இருக்கும் 5 விதமான வாயுவில் (காற்றில்), மிகவும் முக்கியமான இடமான இதயத்தில் இருக்கும் காற்றுக்கு தான் "பிராணன்" என்று பெயர்.

இந்த "பிராணன்" என்ற வாயுவின் அசைவினால் தான், இதயத்தில் ரத்த நாளங்கள் ஒரே இடைவெளியில் ஆயுசு முழுக்க அசைந்து அசைந்து வேலை செய்து கொண்டே இருக்கிறது..
நமக்கு மிகவும் முக்கியமான இடம் இதயம்.
இதயம் நின்றுவிட்டால் ஜீவன் பிரிந்து விடும்.

பிராணன் என்ற இந்த வாயு தடைபடும் போது, இதய கோளாறு ஏற்படுகிறது.
பொதுவாக, ஜீவன் பிரிந்து விட்டால், கூடவே இந்த ஐந்து வாயுவும் உடலை விட்டு கிளம்பி விடும்.

"பிராணன் போய் விட்டது" என்று சொல்வதற்கு காரணம் இது தான்.

ஜீவாத்மா (நாம்) இந்த 5 வாயுவிலும் பயணித்து கொண்டே இருக்கும் வரை, உடலில் ஜீவன் இருக்கிறது என்று வேதம் சொல்கிறது.




வாயுவை வாகனமாக கொண்டு ஜீவனாகிய நாம் சஞ்சரிக்கிறோம் என்று வேதம் சொல்கிறது.
ஆத்மா 'வாயுவை வாகனமாக கொண்டு சஞ்சரிப்பதால், ஆத்மா (உயிர்) பிரிந்து விட்டால், ப்ராண வாயுவும் கூடவே வெளியே சென்று விடுகிறது என்று புரிகிறது.

இதனால் தான், "உயிர் போய் விட்டது" என்று சொல்வதை சில சமயம் "பிராணன் போய் விட்டது" என்றும் சொல்கிறோம்.

ஜீவனோடு எப்பொழுதும் பரமாத்மாவும் அந்தர்யாமியாக பல அவதாரங்கள் எடுத்து கொண்டு ஒவ்வொரு ஜீவனோடும் கூடவே பயணிக்கிறார்.
ஜீவன் அழிவற்றவன்.
ஜீவன் பரமாத்மாவின் அம்சமே என்றாலும், ஜீவன் பரமாத்மாவுக்கு பணிந்தவன்..
அந்த பரமாத்மாவை சேர நினைக்காதவரை உலகில் மனித, மிருக, பறவை உடல்களில் புகுந்து பிறந்து, இறந்து கொண்டே இருக்கிறான்.



உடலில் உள்ளிருக்கும் கெட்ட காற்றை, உள்ளிருக்கும் மலம், மூத்திரம் போன்ற கெட்டதை வெளியே உந்தி தள்ள வைப்பது, ஒரு அளவுக்கு சேரும்வரை வெளியே விட்டு விடாமல் தடுப்பது "அபானன்" என்ற வாயு.
இந்த அபானன் வேலை செய்யாது போனால், மலம் மூத்திரம் உடலிலேயே தங்கி விடும்..அல்லது தானாக வெளியேறி கொண்டே இருக்கும்.

உடலில் தொப்புள் வழியாக வயிற்றில் உள்ள உறுப்புகள் சரியான அசைவுகளுடன் வேலை செய்ய உதவும் காற்றுக்கு "சமானன்" என்று பெயர்.
உடலில் தொண்டை பகுதியில் மிகவும் முக்கியமான காற்று உள்ளது.. இதற்கு "உதானன்" என்று பெயர்.
நாம் சாப்பிடும் எந்த உணவையும், நீரையும் வயிற்றுக்குள் உள்ளே தள்ள வைப்பது இந்த "உதானன்" என்று காற்று தான்.

மூக்கின் வழியாக நாம் இழுக்கும் வெளி காற்றில் பல அசுத்தங்கள் இருந்தாலும், இந்த கழுத்தில் உள்ள உதானன் என்ற வாயு அசுத்தங்களை சளியாக தள்ளி, சுத்தமான காற்றை நுரைஈரலுக்கு  தள்ளுகிறது..

இந்த உதானன் என்ற வாயு தான், மரண சமயத்தில் உள்ளே வெளி காற்றையும் அனுப்பாமல், வாய் வழியாக உள்ளே தள்ளும் ஜலம், உணவு எதையும் உள்ளே போக விடாமல் தடுத்து விடும்.

இந்த உடலில் வசிக்கும் காலம் முடிந்தவுடன், ஜீவனோடு பயணிக்கும் பரமாத்மா (நாராயணன்) வெளியே கிளம்ப தீர்மானிக்க, ஜீவனும் கிளம்புகிறான்.

உடலில் உள்ள வாயுவில் சஞ்சரிக்கும் பரமாத்மா, ஜீவனோடு கிளம்ப தயார் ஆனதும், உதானன் என்ற வாயு இவர்கள் வெளியே கிளம்ப இடம் கொடுக்க, தன் வேலையை நிறுத்துகிறது..

மரண நிலையில் இருக்கும் ஒருவருக்கு, பால், கங்கை ஜலத்தை வாயில் விட்டு பார்ப்பார்கள்..
கழுத்தை தாண்டி உள்ளே போகாமல் இருந்தால், ஜீவன் பிரியபோகிறான் என்று வேதம் மரண அவஸ்த்தையை காட்டுகிறது.



ஜீவன் உடலை விட்டு கிளம்ப தயார் ஆனதும்,
சமானன் என்ற வாயுவும் தன் வேலையை நிறுத்தி விடும்.
வயிறு உப்பி, வயிற்றில் உள்ள உறுப்புகள் வேலை செய்ய முடியாமல் ஸ்தம்பித்து விடும்.
அபானன் என்ற வாயுவும் தன் வேலையை நிறுத்த மலம் மூத்திரம் தானாக வெளியேறி விடும்.

மற்ற உறுப்புகளில் அனைத்திலும் வியாபித்து இருக்கும் வாயுவுக்கு வியானன் என்று பெயர்.

இப்படி ஐந்து வாயுக்கள் நம் உடலில் இருந்து, மண்ணால் ஆன இந்த சரீரத்தை இயக்குகிறது..

இந்த வாயுவில் சஞ்சரிக்கும் ஜீவாத்மா, கூடவே இருக்கும் பரமாத்மாவுக்கும் ஆராதனை செய்து விட்டு தான் சாப்பிட்டார்கள் நம் முன்னோர்கள்.

வெளியில் நாம் விக்ரஹ ரூபமாக வழிபடும் பரவாசுதேவனே, நம் ஒவ்வொரு உடலிலும் கூடவே இருக்கிறார்.

வெளியில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு நாம் நெய்வேத்யம் செய்யும் போது,
நம் கைகளை கொண்டு பூஜிக்கிறோம்.
மனதால் நன்றி சொல்கிறோம்.
கண்ணால் காண்கிறோம்.
காலால் கோவிலுக்கு நடந்து செல்கிறோம்.
தான் சமைத்ததை அவருக்கு காட்டி நன்றி காட்டுகிறோம்.

உணவு சாப்பிடும் போதும், உள்ளிருக்கும் வாயு பகவானுக்கும், இந்த சரீரத்தில் ஜீவனோடு கூடவே இருக்கும் பரமாத்மாவுக்கும் நெய்வேத்தியம் செய்து விட்டு சாப்பிடுகிறோம். சாப்பிட வேண்டும்.

இந்த வாயுக்கள் (காற்றுகள்) அசைவற்று போனால், உடல் கட்டை போல கிடைக்க வேண்டியதுதான். அதற்கு காரணமான வாயு தேவனுக்கும், பரமாத்மாவாவுக்கும் செய்யும் நெய்வேத்தியமே "பரிசேஷணம்"

  1. ப்ராணாய ஸ்வாஹா (உயிரை தரிக்கும் காற்று)
  2. அபானாய ஸ்வாஹா (மலத்தை வெளியேற்றும் காற்று)
  3. வ்யானாய ஸ்வாஹா (உறுப்புக்கள் அதனதன் தொழிலை செய்ய வைக்கும் காற்று)
  4. உதானாய ஸ்வாஹா (சுத்திகரிப்பு செய்யும் ஒலிக் காற்று)
  5. சமானாய ஸ்வாஹா (நிரவுக் காற்று)
  6. ப்ரம்மனே ஸ்வாஹா (ஜீவனோடு கூடவே இருக்கும் பரமாத்மா)

என்று சொல்லிக்கொண்டே, 6 முறை ஒவ்வொரு பருக்கையாக சாதத்தை பல்லில் படாமல், வாயில் போட்டு கொண்டு விழுங்கும் போது, ஜீவனாகிய நாம், இந்த 5 வாயுவில் ஜீவனோடு கூடவே சஞ்சரிக்கும் அந்தர்யாமியாக உள்ள பரப்ரம்மத்துக்கு முதலில் நெய்வேத்யம் செய்து விட்டு சாப்பிடுகிறோம்.
மற்ற போலி மதங்களில், தனக்கு கிடைத்த உணவுக்கு நன்றியை சொல்கிறார்கள். 
ஹிந்துக்களோ, வெறும் நன்றியை மட்டும் காட்டுவதில்லை.. கொடுத்த உணவும் அவருடையது தான் என்று அவருக்கு காட்டி நன்றியை சொல்லி, கிடைத்த சாதத்தை கூட பிரசாதமாக சாப்பிடுகிறோம்.



இப்படி, உள்ளும் புறமும் தெய்வ சிந்தனையுடன் வாழ்ந்த ஹிந்துக்கள் அல்லவா நாம்... 
நம்மை கண்டு நாம் பெருமை கொள்ள வேண்டாமா!!

உலகில் உள்ள விலங்குகள், பறவைகள் எல்லாம் நாம் சாப்பிட தான் என்று பேசும் போலி மதங்கள் உண்டு..
உள்ளும் புறமும் தெய்வம் எங்கும் இருப்பதை உணரும் ஹிந்துக்கள் எத்தனை அற்புதமானவர்கள்...

ஹிந்துவாக வாழ்வதே புண்ணியம் அல்லவா..

சாப்பிடும் முன், அனைவரும் நம் உடம்பில் உள்ள 5 வாயுவில் சஞ்சரிக்கும் ப்ரம்மத்துக்கு நெய்வேத்யம் செய்து விட்டு, பிறகு சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிப்போம்..

வெறும் சாதமாக உண்ணாமல், இறைவனுக்கு படைத்த பிரசாதமாக மாற்றி கொண்டு உண்போம். நோய்நொடி இல்லாமல் வாழ்வோம்.

தெய்வ சிந்தனையுடன் வாழ்வோம்.




சாப்பிடும் போது, சொல்ல வேண்டிய,
பரிஷேஷன மந்திரம்...
Morning


Evening