Followers

Search Here...

Saturday 18 April 2020

ஆண் பெண் சேர்க்கை இல்லாமல், படைக்கப்பட்டார்கள் தேவர்கள், மனு போன்றோர். எப்படி இதை புரிந்து கொள்வது? சேர்க்கை இல்லாமல், படைக்கப்பட்டவர்கள் தேவர்கள், மனு போன்றோர். எப்படி இதை புரிந்து கொள்வது?

"ஆண் பெண் சேர்க்கை" மூலம் தான், படைப்புகள் அனைத்தும் நடக்கிறது என்ற கண்ணோட்டத்திலேயே, அனைத்தையும் பார்க்க கூடாது.  
ப்ரம்ம தேவன், தன் "மனதிலிருந்து சனத் குமாரர்கள், ரிஷிகள், ஸ்வயம்பு மனு போன்றவர்களை படைத்தார்" என்று வேதம் சொல்கிறது.




சனத் குமாரர்கள் "உலக சிருஷ்டியில் நாங்கள் ஈடு படமாட்டோம்" என்று ப்ரம்ம தேவனிடம் சொல்ல, கோபத்தை அடைக்க, அவர் நெற்றியில் இருந்து ருத்ரன் வெளிப்பட்டார் என்று சொல்கிறது.
அவரே 11 ருத்ரர்களாக பிறகு ஆகி, பிறகு கைலாயம் என்ற லோகத்துக்கு சென்று விட்டார் என்று சொல்கிறது வேதம். மேலும் படிக்க இங்கே பார்க்கவும்.

"ஆண் பெண் சேர்க்கை" மூலம் தான் படைப்புகள் அனைத்தும் நடக்கிறது என்ற கண்ணோட்டத்திலேயே, அனைத்தையும் பார்க்க கூடாது. 

சாதாரண பேன் எப்படி உண்டாகிறது? என்று கவனித்தாலே, வேதம் சொல்லும், ஆரம்ப கால ஸ்ருஷ்டி  நமக்கு புரிந்து விடும்.
நம் தலையில் உள்ள புழுக்கத்தில் இருந்து "பேன் உண்டாகிறது".. ஆண் பெண் சேர்க்கை தேவைப்படாமல் தானே உருவாகிறது.
ஆரம்ப படைப்பு எதுவுமே "ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் தான் நடக்கிறது".

மனிதனில் முதல் படைப்பு "மனு".
மனுவை தன் மனதிலிருந்து ஸ்ருஷ்டி செய்தார் பிரம்மா என்று சொல்லும் போது, "ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் மனித ஸ்ருஷ்டி எப்படி நடக்கும்?" என்று நினைக்கக்கூடாது.
"ஆரம்ப ஸ்ருஷ்டி எதுவுமே, சேர்க்கை இல்லாமல் நடக்கிறது" என்பதை நாம் புரிந்து கொள்ளவே, நம் தலையிலேயே பேன் உருவாகி நமக்கு புரிய செய்கிறது.
சற்று கவனிக்கும் போது தான், நமக்கு படைப்புகளின் ரகசியங்கள் புரியும்.

திடீரென்று நம் தலையில் பேன் உருவாவதையும்,
திடீரென்று மர பட்டையில் இருந்து மரவட்டை உருவாவதை கவனிக்கும் போது, ஆரம்ப ஸ்ருஷ்டியை புரிந்து கொள்ள முடியும்.

மனிதர்களால் எழுதப்பட்ட 500 பக்க போலி புத்தகம் அல்ல, ஹிந்து மதம்..
மனிதன் ஆடையில்லாமல் முட்டாள் ஆதாம் ஏவாளாக பிறந்தார்கள் என்று சொல்லவில்லை நம் தர்மம்.

முதல் மனிதனே ஸ்வாயம்பு மனு. மனு உலகை ஆளும் திறனுடன், அரசாங்க சட்டம் எப்படி இருக்க வேண்டும்? சமுதாயம் எப்படி அமைக்க வேண்டும்? என்று மனு நீதி கொடுத்தார் என்று மனிதன் மகா அறிவாளியாக தான் படைக்கப்பட்டான் என்று ஆரம்பிக்கிறது..

இன்று வரை நம் இந்திய சட்டம், மனு நீதியை கொண்டு தான் உள்ளது. அம்பேதகர், சட்டத்தை மனு நீதியை கொண்டே அமைத்தார்.
அது மட்டுமல்ல, போலி மதத்தில் உள்ளவர்களே, மனித குலத்தை "Adam" என்று சொல்லாமல் நம் மனுவை தான் "Man" என்று சொல்கின்றனர்.

போலி மதத்தை சேர்ந்தவன் கூட, மனிதன் முட்டாள் ஆதாம் வம்சம் என்று சொல்லி கொள்ள பிரியப்படவில்லை என்கிற போது, அறிவுள்ள ஹிந்துக்கள் சொல்வார்களா?

நாம் அனைவருமே மனு வம்சம்..
மனு பிரம்மாவால் படைக்கப்பட்டவர். ஆதலால் நாம் ரிஷி வம்சம்.




எந்த ஜாதியில் இருந்தாலும், உன் கோத்திரம் (பரம்பரை) என்ன என்று கேட்டால்? 
ஒவ்வொருத்தரும் நான் "கௌசீக ரிஷி" கோத்திரம், நான் "பரத்வாஜ" கோத்திரம் என்று சொல்கிறார்கள்.

நாம் எந்த ரிஷி பரம்பரை? என்பதை ஹிந்துக்கள் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் அந்த ரிஷியை பற்றி முழுவதுமாக தெரிந்து இருக்க வேண்டும்.

1000 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில், 500 வருட கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், "தான் எந்த ரிஷி பரம்பரை?" என்பதையே மறந்து விட்டார்கள் பலர்.

விழித்து எழ வேண்டும் ஹிந்துக்கள்..
தன் ரிஷி யார்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
முடிந்தால், தன் வீட்டின் பெயராக ரிஷியின் பெயரை வைத்து அடையாளப்படுத்தி கொள்ள ஆரம்பிக்க வேண்டும்..

அவர் சரித்திரத்தை, பெருமையை எழுதி, அந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு சொல்லி தர வேண்டும்..

இது ஒவ்வொரு ஹிந்துவின் கடமை... 
இதை செய்யும் போது, நம் குலம் எத்தனை பெருமை வாய்ந்த குலம் என்பது புரியும்..

"ஆதியில் அனைவருமே பிரம்ம தேவன் படைப்பு தான்"
என்பதும் புரியும்.
ப்ரம்மாவையும் படைத்த நாராயணன் தான், "நம் முழு முதற்கடவுள்" என்பதும் புரியும்.
சில ரிஷிகளை பற்றி தெரிந்து கொள்ள.. இங்கே படியுங்கள்.. நீங்கள் எந்த ரிஷி பரம்பரை என்று தேடுங்கள்.. உங்கள் ரிஷிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  

வாழ்க ஹிந்துக்கள்.

Thursday 16 April 2020

ஸத்-அஸத் இரண்டுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார் பரப்பிரம்மம் என்று சொல்கிறது வேதம்... புரியவில்லையே!! புரிந்து கொள்வோமே!

"ஸத்-அஸத் இரண்டுக்கும் சாட்சியாக, அப்பாற்பட்டு இருக்கிறார், பரப்பிரம்மம்" என்று சொல்கிறது வேதம்
"ஸத்" என்றால் "இருக்கிறது" என்று அர்த்தம்.
"அஸத்" என்றால் "இல்லை" என்று அர்த்தம்.

கேள்வி: உலகம் இருப்பது தெரிகிறதா?
கண் இருப்பவன் "உலகம் தெரிகிறது" (ஸத்) என்று சொல்கிறான்.
கண் இல்லாதவன் "தெரியவில்லை" (அஸத்) என்று சொல்கிறான்.




கேள்வி: இருட்டில் உலகம் தெரிகிறதா?
கண் இருப்பவனும் "உலகம் தெரியவில்லை" (அஸத்) என்று சொல்கிறான்.
கண் இல்லாதவனும் "உலகம் தெரியவில்லை" (அஸத்) என்று சொல்கிறான்.

கேள்வி: தெய்வம் இருப்பது தெரிகிறதா?
சிலர் "தெய்வம் இருக்கிறார்" (ஸத்)  என்று சொல்கிறார்கள்.
சிலர் "தெய்வம் இல்லை" (அஸத்)  என்று சொல்கிறார்கள்.

இப்படி எதை கேட்டாலும்,
சிலர் ஸத் என்றும், 
சிலர் ஸத் என்றும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

"ஸத்-அஸத் இரண்டுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார், பரப்பிரம்மம்"
என்று சொல்கிறது வேதம்

வேதம் சொல்லும் இந்த ரகசியத்தை புரிந்து கொள்ள முடியுமா? 
குருநாதர் வழிகாட்டுகிறார்.

கேள்வி: இருட்டில் நீ இருப்பது தெரிகிறதா? 
கண் இருப்பவனும் "நான் இருக்கிறேன்" (ஸத்) என்று சொல்கிறான்.
கண் இல்லாதவனும் "நான் இருக்கிறேன்" (ஸத்) என்று சொல்கிறான்.

"இருக்கிறார் என்றும், இல்லை என்றும் யார் சொல்வது?" என்று கேட்டால்,
"நான் சொல்கிறேன்" என்று பதில் உள்ளுக்குள் இருந்து வருகிறது.

யார் பேசுவது? என்று கேட்டால், "நான் பேசுகிறேன்" என்று உள்ளுக்குள் இருந்து பதில் வருகிறது.

"நான் இருக்கிறேன்" என்று உள்ளுக்குள் இருந்து பேசுவது யார்?
உள்ளிருந்து பேசுவது "பரப்பிரம்மம்" என்று அறிந்து கொள் என்று வேதம் காட்டுகிறது.

இந்த பரப்ரம்மமே எங்கும் இருக்கிறது.
அந்த பரப்ரம்மமே பல ரூபத்தில் இருக்கிறது.
அந்த பரப்ரம்மமே "இது ஸத் என்றும், இது அஸத் என்றும்" சொல்லி லீலை (விளையாடு) செய்து கொண்டு இருக்கிறது.

ஸத்-அஸத் இரண்டுக்கும் அப்பாற்பட்டு சாட்சியாக இருக்கிறார் (ஸத்), பரப்பிரம்மம்.

"நானே பரப்பிரம்மம்" என்று சொல்வது அகம்பாவம். அப்படி ஒருவரும் சொல்லக் கூடாது.
மாறாக,
"பரப்பிரம்மே எங்கும் இருக்கிறார்" என்பதே உண்மை என்பதால்,
"பரப்பிரம்மே  நானாகவும் இருக்கிறார்" என்று சொல் லும் போது, அகம்பாவம் நமக்கு ஏற்படாது. 
"அனைவருமே பரமாத்மா ஸ்வரூபம் தான்" என்ற ஞானம் பிறக்கும் போது நமக்கு சித்த சுத்தி உண்டாகும்.

கடவுள் (பரப்பிரம்மம்) உள்ளே இருப்பதால் தான், மாயையின் காரணத்தால், "ஒருவன் கடவுள் இல்லை" என்றும், கொஞ்சம் உணர்ந்தவன் "கடவுள் இருக்கிறார்" என்று சொல்கிறான்.

கடவுள் இருக்கிறார் (ஸத்) என்று சொல்வதால் தான், பரப்பிரம்மம் இருக்கிறார் என்று நினைக்கக்கூடாது. அவர் என்றுமே இருக்கிறார்.
கடவுள் இல்லை (அஸத்) என்று சொல்வதால், பரப்பிரம்மம் இல்லாமல் போவதும் இல்லை. அவர் என்றுமே இருக்கிறார்.




உண்மையில்,
"கடவுள் இல்லை" என்று சொல்பவன், "நானே இல்லை" என்று சொல்கிறான். 
இதை விட ஒருவன் தன்னை தாழ்த்திக்கொள்ள என்ன இருக்கிறது?

"இருக்கிறார்" என்றாலும், "இல்லை" என்றாலும், 
இரண்டையுமே சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கிறார் பரப்பிரம்மம்.
இதையே வேதம், 
ஸத்-அஸத், இரண்டுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார் பரப்பிரம்மம் என்று சொல்கிறது.

நம் ஆத்மாவே பரப்பிரம்மம் என்று உணர வேண்டும்.

வாழ்க நம் ஹிந்து தர்மம்
வாழ்க நம் ஹிந்துக்கள்

வாழ்க நம் குருநாதர்.