Followers

Search Here...

Monday 9 January 2017

எளிதான ஆஞ்சனேயர் ஸ்லோகம்

எளிதான ஆஞ்சனேயர் ஸ்லோகம்.

ஆஞ்சனேய மதி பாடலாலனம்
காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம் !
பாரிஜாத தருமூல வாஸினம்
பாவயாமி பவமான நந்தனம் !!

சிவந்த முகம் உடையவரும்,
தங்கம் போன்ற காந்தி உடையவரும்,
பாரிஜாத மரத்தின் அடியில் வஸிப்பவரும்,
வாயு குமாரனுமான ஆஞ்சனேயரை தியானிக்கின்றேன்.


யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் !
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷ ஸாந்தகம் !!

எங்கெங்கு ராம நாம கீர்த்தனம் நடக்கிறதோ,
அங்கங்கு சிரமேற் கை குவித்து,
ஆனந்தக் கண்ணீருடன் நிற்பவரான,
மாருதியை வணங்குங்கள்.
மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் !
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராம தூதம் சிரஸா நமாமி !!

மனதை விட வேகமானவரும்,
புலன்களை அடக்கியவரும்,
புத்திமான்களில் சிறந்தவரும்,
வானரர்களில் முக்கியமானவரும்,
வாயு குமாரனுமான ஸ்ரீ ராம தூதனை வணங்குகிறேன்.

புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா !
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத் !!

ஹனுமானை நினைப்பதால் புத்தியும், பலமும், புகழும், தைரியமும், அபயமும், ஆரோக்யமும், கல்வியும், பேச்சுத் திறமையும் உண்டாகும்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka

No comments: