Followers

Search Here...

Friday 22 June 2018

நெற்றியில் திலகம் அணிவது ஹிந்துக்களுக்கு அவசியம்

ஹிந்துக்கள் மட்டும் ஏன் மதம் மாற்றத்தில் சிக்குகிறார்கள்?

நாராயணனான விஷ்ணு, மற்றும் தேவர்கள் என்று அனைத்து தெய்வங்களும் நெற்றியில் கோபி சந்தனத்துடன் காட்சி கொடுக்கின்றனர்.




பராசக்தி, காளி, பார்வதி, லட்சுமி, துர்க்கை என்று அனைத்து பெண் தெய்வங்களும் நெற்றியில் குங்குமத்துடன் காட்சி கொடுக்கின்றனர்.

சிவன், முருகன், விநாயகர், என்று அனைத்து தெய்வங்களும் நெற்றியில் விபூதியுடன் காட்சி கொடுக்கின்றனர்.

நெற்றியில் ஒன்றும் இட்டுக்கொள்ளாத ஹிந்து தெய்வங்களே இல்லை.

காவல் தெய்வங்கள் கூட நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டு உள்ளனர்.

நாயன்மார்கள், அகத்தியர் போன்றோர் விபூதி இட்டுக்கொண்டார்கள் என்பது ஆச்சரியமில்லை.


அசுரன், ராக்ஷஷன் போன்றவர்கள் கூட, சிவ பக்தி செய்தால், அவர்கள் கூட நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டார்கள்.

அசுர குலத்தில் பிறந்த பிரகலாதன் நெற்றியில் கோபி சந்தனம் இட்டு கொண்டு இருந்தார்.


நம் வீட்டு பசுவுக்கு கூட திலகம் இடும் பழக்கம் நம்மிடம் இருந்தது.

நம் வீட்டு வாசல் படிக்கு கூட திலகம் இடும் பழக்கம் நம்மிடம் இருந்தது.




இப்படி நாம் அனைவரும், நம் வீடு, மாடு என்று அனைத்தும் அந்த தெய்வங்களின் தொடர்பில் வைத்து இருந்தோம்.

திலகம் அணியும் பழக்கம் நம்மிடம் இருந்ததால் தான், டச், பிரெஞ்ச், போர்ச்சுகல், பிரிட்டிஷ் போன்ற நாட்டில் இருந்து வந்த கிறிஸ்தவ வெளிநாட்டவர்கள், அரேபியர்கள் இஸ்லாமிய நாட்டவர்கள் நம்மை 1200 வருடங்கள் அடக்கிய போதும், ஹிந்துக்கள் மதம் மாறாமல் இருந்தோம்.
பெண்களை தூக்கி சென்று, மிரட்டி மதமாற்றப்பட்டவர்கள் தவிர, பெரும்பாலும் ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே இருந்தோம் 1947 வரை.

விடுதலை அடைந்த பின், சுதந்திரம் கண்ணை மறைக்க, இன்று இந்த பழக்கம் நம்மிடம் மலிந்து போக, நாத்தீகமும், மத மாற்றமும் நம் ஹிந்துக்களுக்கு நேருகிறது.

ஒரு ஹிந்துவாக இருப்பவன், குறைந்த பட்சம் விபூதி, குங்குமம், சந்தனம் என்று ஏதாவது இட்டுக் கொள்ள வேண்டாமா?



நம் தெய்வங்கள் நெற்றியில் திலகம் வைத்துக்கொண்டு இருப்பதை பார்த்த பின்னும், ஒரு சூடு சூரனை உள்ள ஒரு ஹிந்து எப்படி விதவை போல இருக்க சம்மதிப்பான்?

தான் விதவை போல இருந்தால், நாம் ஹிந்த்துவா, கிறிஸ்துவனா என்று தெரியுமா?

இது போன்று நாம் விதவை கோலத்தில் இருந்தால், நம்மை போலவே விதவை போல இருக்கிறானே என்று, கிறிஸ்துவன் நினைக்கிறான். மதம் மாற்றம் செய்ய துணிகிறான்?
தவறு யாருடையது?
இன்று இருக்கும் அனைத்து கிறிஸ்தவனும் இப்படி மாட்டிக்கொண்டவர்கள் தானே !

சிவனை, முருகனை என் தெய்வம் என்று சொல்லிக்கொண்டு, ஞானத்தை தேடாவிட்டாலும் குறைந்த பட்சம் விபூதி இட்டுக்கொண்டால் எவனாவது மதம் மாற்ற முயற்சி செய்வானா?

ஹிந்துக்களே, நம் தெய்வங்களே நெற்றியில் விபூதி இட்டுக்கொள்ளும் போது, நாம் மட்டும் விதவை கோலம் பூண்டால், நம்மை பற்றி தெய்வங்கள் என்ன நினைக்கும்? மற்ற மதக்காரர்கள் மதம் மாற்ற நாமே தூண்டுகிறோமே? சற்று சிந்திப்போமே??

விதவை கோலத்தை விட்டு, நம் தெய்வங்கள் போல நாமும் நெற்றியில் இட்டுக்கொள்வோம்.

இந்த ஒரு சின்னமே, மற்ற மதத்தினரை மத மாற்ற எண்ணத்தில் இருந்து விலக்கும்.

ஒரு இஸ்லாமியனை மதம் மாற்ற கிறிஸ்தவன் துணிவதில்லை. இதற்கு காரணம் அவன் தன்னை இஸ்லாமியனாக தாடி, குல்லா என்று அணிந்து காட்டிக்கொள்கிறான்.

ஹிந்துக்கள் மட்டும் விதவை போல இருந்தால், விதவை கூட்டத்துடன் இழுக்கப்படுவது உறுதி.

இந்த பாரத நாடு மட்டுமே ஹிந்துக்கள் உள்ள தேசம். மற்ற அனைத்து நாடுகளும் மற்ற மதத்தால் சூழ்ந்துள்ளது.

ஹிந்த்துக்கள் ஹிந்த்துக்களாக இருக்க, நம் தெய்வங்களை போல திலகம் இட்டு கொண்டாலே போதுமானது.
அடுத்த தலைமுறை ஹிந்துக்கள் அழியாமல், மதம் மாறாமல் காத்து விடலாம்.

எப்பொழுதும் திலகம் இட்டு கொள்வோம். நம் தெய்வங்கள் போல நாமும் இருப்போம்.




No comments: