Followers

Search Here...

Friday 30 July 2021

பகவான் எதை சாப்பிடுகிறார்? தெய்வ சாந்நித்யம் நிலைக்க, நாம் என்ன செய்ய வேண்டும்?

 பகவான் எதை சாப்பிடுகிறார்? 

தெய்வ சாந்நித்யம் நிலைக்க, நாம் என்ன செய்ய வேண்டும்?

கோவிலிலோ, நம்முடைய வீட்டிலோ உள்ள தெய்வத்துக்கு, நாம் சமைத்த உணவை சமர்ப்பிக்கிறோம் (நெய்வேதயம் செய்கிறோம்)

சமர்ப்பித்த பிறகு? 

பகவான், நாம் சமர்பித்ததை பார்த்து அதில் உள்ள தோஷங்களை நீக்கி அனுக்கிரஹம் செய்கிறார்.

வெறும் சாதத்தை, தெய்வத்துக்கு காட்டிய பிறகு, பிரசாதமாக நமக்கே அது வந்து விடுகிறது.


ஒரு ஊதுபத்தி கொளுத்தினாலும், மனம் நமக்கு வந்து விடுகிறது..




பூ அபிஷேகம் செய்தாலும், அவர் திருமேனியில் பட்ட பூவை நாம் எடுத்து கொண்டு விடுகிறோம்.


இப்படி எது கொடுத்தாலும், அதை அனுக்கிரஹம் செய்து, பகவான் நமக்கே  திருப்பி கொடுத்து விடுகிறார்.


அவர் உண்மையில் திருப்பி கொடுக்காமல் சாப்பிட்டு விடுவது ஒன்றே ஒன்று தான்...

பகவானை நினைத்து கொண்டு "ரமா ரமண கோவிந்தா.. கோவிந்தா.. கோவிந்தா..." என்று சொல்லிவிட்டால், அந்த நாமத்தை அப்படியே சாப்பிட்டு விடுகிறார் பகவான்.


நாமத்தை சொன்ன மாத்திரம்... அப்படியே மறைந்து விடுகிறது... பிரசாதம் போல திரும்ப வருவதே இல்லை...

நாம் செய்ய கூடிய இந்த மங்களாசாசனம் தான்... பகவானை கோவிலிலோ, நமது வீட்டிலோ சாந்நித்யத்துடன் நிற்க செய்கிறது.


எந்த கோவிலில்! எந்த வீட்டில்! பகவன் நாமத்தை சொல்வதில்லையோ, அந்த இடத்தில பகவத் சாந்நித்யம் இருக்கவே இருக்காது.


வேத மந்திரத்தை கொண்டு, பகவன் நாமத்தை மங்களாசாசனம் செய்கிறோம்.


அஷ்டோத்திரம், சஹஸ்ர நாமம் போன்றவற்றை கொண்டும், பகவன் நாமத்தை தான் மங்களாசாசனம் செய்கிறோம்.


"கோடி அர்ச்சனை செய்தால், பகவானுக்கு சாந்நித்யம் ஏற்படும்" என்று பல கோவில்களில் செய்வார்கள்.


"கோடி பூவை பகவானுக்கு அர்ச்சனை செய்தால், பகவான் அங்கு தன் சாந்நித்யத்தை வெளிப்படுத்துகிறார்" என்று நினைத்து விட கூடாது.




"அந்த கோடி அர்ச்சனையில் என்ன சொல்லி அரச்ச்னை செய்தோம்?" என்று பார்க்க வேண்டும்..


கோடி அர்ச்சனையில்... "விஸ்வஸ்மை நம: ! விஷ்ணவே நம: !..." என்று எவ்வளவு நாமத்தை நாம் சொல்கிறோம். 

நாமத்தை சொல்ல சொல்ல, பகவான் நாம் சொல்லுமிடத்தில் சாந்நித்யத்தை காட்டுகிறார்.





கோவிலில் அர்ச்சனை செய்கிறோம். கொடுக்கும் துளசி, பூ, தேங்காய் போன்றவற்றிலா தெய்வத்துக்கு சாந்நித்யம் ஏற்படுகிறது? இல்லை..

அந்த அர்ச்சனையில் நாம சங்கீர்த்தனம் உள்ளது. 

அந்த நாம சங்கீர்த்தனமே பகவானை அங்கு சாநித்யத்தோடு இருக்க செய்கிறது.


எத்தனைக்கு எத்தனை கோவிலில், நம் வீட்டில், நாமம் ஒலிக்கிறதோ, அத்தனைக்கு அத்தனை கோவிலில் தெய்வ சாந்நித்யம் அதிகரிக்கும்.


எததனைக்கு எத்தனை நாம் நமக்குளேயே "ராம... ராம... ராம..." என்று நாம ஜபம் செய்து கொண்டே இருக்கிறோமோ! அத்தனைக்கு அத்தனை நம் இதயத்துக்குளேயே தெய்வம் வந்து அமர்ந்து இருப்பதை அறிய முடியும்..

நாமசங்கீர்த்தனம் செய்து, ஹிந்துக்கள் தெய்வ சக்தியை எங்கும் நிலைபெற செய்ய வேண்டும். 

போலி பிரச்சாரங்கள் தானாக ஒழிந்து விடும்.

No comments: