Followers

Search Here...

Thursday 2 September 2021

ஆதி தமிழன் யார்? யார் பழங்குடி? Who is Native Tamilan?

ஆதி தமிழன் யார்? யார் பழங்குடி? யார் தமிழன்?

தமிழ் சங்க இலக்கியம் என்ன சொல்கிறது?



"தொல்குடி தமிழன்" என்று சங்க இலக்கியம் யாரை சொல்கிறது??


சங்க இலக்கியங்களில் ஒன்றான "திருமுருகாற்றுப்படை" நமக்கு பதில்" சொல்கிறது.


பழங்குடியினருக்கு என்று சலுகைகள் அரசாங்கம் கொடுக்கிறது... 

ஆனால், "உண்மையான பழங்குடி யார்?" என்று அரசாங்கம் சங்க இலக்கியங்களை படித்து முடிவு செய்ததாக தெரியவில்லை.


சங்க இலக்கியமான "திருமுருகாற்றுப்படை", அந்தணர்களே தமிழகத்தில் இருந்த "பழங்குடியினர்" (தொல்குடி) என்று தெளிவாக சொல்கிறது.  


அதிலும், 

இந்த அந்தணர்கள் பல ரகங்களில் இருக்கிறார்கள். 

(சாம வேதம் அறிந்தவர், ரிக் வேதம் அறிந்தவர், யஜுர் வேதம் அறிந்தவர், அதர்வண வேதம் அறிந்தவர், இரண்டு வேதங்கள் (த்விவேதி) அறிந்தவர், மூன்று வேதங்கள் ஒரு சேர அறிந்தவர் (த்ரிவேதி), நான்கு வேதமும் அறிந்தவர் (சதுர்வேதி)) 

என்று சொல்கிறது.


சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை,  “பலவேறு தொல்குடி அந்தணர்கள் இருந்தார்கள்” என்று தெளிவாக சொல்கிறது. 


இருமூன்று எய்திய இயல்பினில் வழாஅது 

இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி

என்ற பாடலில், 

"அந்தணர்களுக்கு (2+3) 6 கடமைகள் உண்டு. 

அவர்கள் பெற்றோர்கள் உயர்ந்த பண்புகள் கொண்டு இருந்தார்கள். 

இந்த அந்தணர்களே, ஆதியில் இருந்தே வாழ்ந்து வரும் தொல்குடியினர் '

என்று சான்றிதழ் கொடுக்கிறது. 


வாழ்க திருமுருகாற்றுப்படை..


உண்மையான தமிழன்..  அந்தணனே!

ஆதி பழங்குடி தமிழன்.. அந்தணனே!

No comments: