Followers

Search Here...

Monday 1 May 2023

வியாசர் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன? த்வைபாயனர் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன? அறிவோம் மஹாபாரதம்

வியாசர் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன? அறிவோம் மஹாபாரதம்

एवं द्वैपायनो जज्ञे सत्यवत्यां पराशरात्।

न्यस्तो द्वीपे यद् बाल: तस्माद् द्वैपायनःस्मृतः।।

- adi parva (Vyasa mahabharata)

பராசரருக்கும், சத்யவதிக்கும் பிறந்த இவர், யமுனை கரையிலேயே (த்வீபத்தில்) குழந்தையாக விடப்பட்டதால், இவருக்கு 'த்வைபாயனர்" என்ற பெயர் வந்தது.


पादापसारिणं धर्मं स तु विद्वान्युगे युगे।

आयुः शक्तिं च मर्त्यानां युगावस्थामवेक्ष्यच।।

ब्रह्मणो ब्राह्मणानां च तथानुग्रह काङ्क्षया।

विव्यास वेदान्यस्मत्स तस्माद् व्यास इति स्मृतः।।

- adi parva (Vyasa mahabharata)

தர்மம் ஒவ்வொரு யுகமாக நகரும் போது, கால் பங்கு விலகி போவதையும், மனிதனின் ஆயுளும், சக்தியும் யுகங்களுக்கு தக்கபடி இருப்பதையும் பார்த்த அந்த த்வைபாயனர், 

வேதத்தையும், ப்ராம்மணர்களையும் அனுசரித்து, வேதத்தை வகுத்ததால், அவருக்கு "வியாசர்" என்று பெயரும் ஏற்பட்டது.

वेदानध्यापयामास महाभारत पञ्चमान्।

सुमन्तुं जैमिनिं पैलं शुकं चैव स्वमात्मजम्।।

அந்த வியாசர், வேதத்தை, பைலருக்கும் (ரிக்), சுமந்துவுக்கும், ஜைமினிக்கும் (ஸாம), தன் பிள்ளையான சுகருக்கும் சொல்லிவைத்தார்.

No comments: