Followers

Search Here...

Sunday 5 May 2024

பிராம்மணன் குடிக்க கூடாது. பெண் எப்படிப்பட்ட ஆணை கண்டு காம வயப்படுகிறாள்? தெரிந்து கொள்வோம் வ்யாஸ மஹாபாரதம்

பெண் எப்படிப்பட்ட ஆணை கண்டு காம வயப்படுகிறாள்?

गायन्तं च एव शुल्कं च दातारं प्रियवादिनम्।

नार्यो नरं कामयन्ते रूपिणं स्रग्विणं तथा 

- ஆதி பர்வம் (வ்யாஸ மஹாபாரதம்)

ஆனந்தமாக பாடிக்கொண்டும், தேவையான பொருளை கொடுத்து கொண்டும், அன்போடு பேசி கொண்டும், நறுமணமிக்க திரவியங்கள் பூசி கொண்டும், அழகோடும் இருக்கும் ஆண், ஒரு பெண்ணிடம் பழகினால், அவள் அவனை கண்டு காம வயப்படுகிறாள், மனதை பறிகொடுக்கிறாள்


அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியாரின் பெண் "தேவயானி", தன்னிடம் பழகிய தேவர்களுக்கு குருவான ப்ருஹஸ்பதியின் மகனான "கசன்" என்பவனை கண்டு காமவசப்பட்டு விட்டாள்.


அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியார், சஞ்சீவனி என்ற ரகசிய ஆயுர்வேதத்தை வைத்து இருந்தார். இதனால், அசுரர்கள் போரில் இறந்தாலும், பிழைக்க செய்து கொண்டிருந்தார்.

தேவர்களுக்கு குருவான ப்ருஹஸ்பதிக்கு இந்த ரகசியம்  தெரியாததால், தன் பிள்ளை சுக்ராச்சாரியாரியாரிடம் அனுப்பி ப்ரம்மச்சர்யத்தில் இருந்து பணிவிடை செய்ய அனுப்பினார்.

மேலும், அவரின் பெண்ணான தேவயானியின் மனதில், இவனை கண்டு பிரியம் ஏற்படும் படி நடந்து கொள்ள சொன்னார்.


தேவயானியிடம் சமயம் கிடைக்கும் போதெல்லாம், அன்பாக பேசி கொண்டும், ஆடி பாடி கொண்டும், அவளுக்கு தேவையான பூ பழம் எல்லாம் வாங்கி கொடுத்து கொண்டும் 5 வருடங்கள் பழகினான்.

தேவயானி இவனிடம் பெரும் ஆசை கொண்டு இருந்தாள்.


ஒரு சமயம், கசன் மாடுகளை மேய்க்க சென்ற போது, ஆலமரத்தின் நிழல் அருகே மாடுகளோடு வந்த கசனை அசுரர்கள் கண்டனர். அசுரர்கள் இவனை வழி மறித்து, அடித்து கொன்று, துண்டு துண்டாக்கி நாய்க்கு (स्व) போட்டு விட்டனர்.

हत्वा शालावृकेभ्यश्च प्रायच्छँल्लवशः कृतम्।

ततो गावो निवृत्तास्ता अगोपाः स्वं निवेशनम्।।


தேவயானி இவன் திரும்பி வராததை கண்டு, தன் தகப்பனாரிடம் சென்று, "ஏதோ ஆபத்து ஏற்பட்டு விட்டது. கசன் அசுரர்களால் கொல்லப்பட்டு இருக்க வேண்டும். பிழைக்க வையுங்கள்" என்று அழுதாள்.

 

அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியார், சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க, அந்த நாய்களை கிழித்து கொண்டு கசன் உயிரோடு திரும்பி விட்டான்.

भित्त्वा भित्त्वा शरीराणि वृकाणां स विनिर्गतः।

आहूतः प्रादुरभवत्कचो हृष्टोऽथ विद्यया।।


இதே போல, மீண்டும் ஒரு சமயம், அசுரர்கள் இவனை பிடித்து, இவனை அரைத்து, சமுத்திர ஜலத்தில் கரைத்து விட்டனர்.

वनं ययौ कचो विप्रो ददृशु: दानवाश्च तम्।

पुनस्तं पेषयित्वा तु समुद्राम्भस्यमिश्रयन्।।


மீண்டும் தேவயானி அழுது பிழைக்க வைக்க வற்புறுத்தினாள்.

அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியார், சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க, மீண்டும் கசன் உயிரோடு திரும்பி விட்டான்.


தங்களுடைய குரு இவனை மீண்டும் மீண்டும் பிழைக்க வைக்கிறார் என்று கோபம் கொண்ட அசுரர்கள், மீண்டும் ஒரு சமயம், மூன்றாவது முறையாக கசன் மாட்டி கொண்ட போது, அவனை கொன்று, கொளுத்தி, மாவாக பொடித்து, மதுவில் சேர்த்து அந்த ப்ராம்மணரான சுக்ராச்சாரியாருக்கே கொடுத்து விட்டனர், அவரும் குடித்து விட்டார்.

ततस्तृतीयं हत्वा तं दग्ध्वा कृत्वा च चूर्णशः।

प्रायच्छन्ब्राह्मणायैव सुरायामसुरास्तथा।।


மீண்டும் தேவயானி அழுது பிழைக்க வைக்க வற்புறுத்தினாள்.

அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியார், சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க, அவர் வயிற்றில் தான் கசன் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டார்.


தேவயானியிடம் "தான் வேண்டுமா? கசன் வேண்டுமா" என்று கேட்டார்.

किं ते प्रियं करवाण्यद्य वत्से

वधेन मे जीवितं स्यात् कचस्य।


தேவயானி அழுது கொண்டே, "கசன் இல்லாமல் எனக்கு உலகில் சுகம் இல்லை. நீங்கள் இல்லாமல் நான் வாழவும் முடியாது" என்றாள்.

कचस्य नाशे मम शर्म नास्ति

तवोपघाते जीवितुं नास्मि शक्ता।।


பிராம்மணன் மட்டுமே சஞ்சீவினி மந்திரத்தை கற்று அதில் ஸித்தி அடைய முடியும். உள்ளே இருக்கும் கசன் கூட பிராம்மணன் தான்.

ஆதலால், கசனிடம் "சஞ்சீவினி மந்திரத்தை கற்று கொடுத்து, பிறகு அவனை உயிர்ப்பிக்க' முடிவு செய்தார். 

குழந்தாய்! நீ என்னால் பிழைக்கப்பெற்று, நீ என் சரீரத்திலிருந்து வெளி வர போவதால், நீ எனக்கு புத்ரனாகிறாய். நீ என் புத்ரனாகி என்னை பிழைக்கவும் செய்.  

पुत्रो भूत्वा भावय भावितो मां 

अस्मद् देहाद् उपनिष्क्रम्य तात।


அவன் ஒழுக்கமானவன் என்பதால், வெளியே வந்த பிறகு, தன்னை பிழைக்க செய்யுமாறும் கேட்டு கொண்டார்.


குருவிடம் வித்தையை கற்று கொண்ட கசன், அந்த மந்திரத்தை ஜபித்து கொண்டே, அவருடையாய் குக்ஷியை (வயிற்றை) கிழித்து கொண்டு வெளி வந்தான்.

गुरोः सकाशात्समवाप्य विद्यां

भित्त्वा कुक्षिं निर्विचक्राम विप्रः।


விழுந்து கிடந்த சுக்ராச்சாரியாரை தான் ஜபம் செய்து உயிர்ப்பிக்க செய்தான். 

உடனே கசன், அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியாரின் காலில் விழுந்து, "கல்வி தாகம் உள்ளவனுக்கு எந்த ஆசிரியர் காதுகளில் கல்வியை போதிக்கிறாரோ, அவர் அவனுக்கு தகப்பனாகவும், தாயாகவும் ஆகிறார். அவர் செய்த இந்த பெரிய உபகாரத்துக்கு, பதிலாக அந்த ஆசிரியருக்கு எந்த தீங்கும் நினைக்க மாட்டான். அப்படிப்பட்ட கல்வி அறிவை தந்த ஆசிரியரை எவன் பூஜிக்காமல் இருக்கிறானோ, அவன் புகழ் அழியும், அவன் பாப லோகங்களையே அடைவான்

என்று சொன்னான்.

यः श्रोत्रयो: अमृतं सन्निषिञ्चेद् विद्याम् अविद्यस्य यथा त्वमार्यः।

तं मन्येऽहं पितरं मातरं च तस्मै न द्रुह्येत्कृतमस्य जानन्।।

ऋतस्य दातारम् अनुत्तमस्य निधिं निधीनामपि लब्धविद्याः।

ये नाद्रियन्ते गुरुम् अर्चनीयं पापाँल्लोकांस्ते व्रजन्त्यप्रतिष्ठाः।।

இப்படி அழகாக பேசிய கசனை கண்ட அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், தான் மது குடித்ததாலும், அதனோடு பிரியமான கசனையும் தாம் குடித்ததையும் நினைத்து, அதனால் ஏமாற்றப்பட்டதையும் அறிந்து பெரும் கோபம் கொண்டார். 

அந்த கோபத்திலும், ப்ராம்மணர்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்று எண்ணி, இவ்வாறு சொன்னார்.


"இன்று முதல் எந்த பிராம்மணன் அறிவு கெட்டு மது பானம் செய்வானோ, அவன் புத்தி கெடும். அதனால் தர்மத்தை விடுவான். ப்ரம்மஹத்தி செய்த பாபத்தை மது அருந்தியதால் இவன் பெற்று வாழும் லோகத்திலும், பர லோகத்திலும் இகழப்படுவான்.

என்னால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த பிராம்மண தர்மத்தை தங்கள் குருவிடம் பாடம் பயின்ற அனைத்து சாதுக்களான ப்ராம்மணர்களும், தேவர்களும் மற்றும் எல்லா மக்களும் கேட்க கடவீர்" என்றார்.

यो ब्राह्मणो अद्यप्रभृति इह कश्चित्  मोहात् सुरां पास्यति मन्द-बुद्धिः।

अपेतधर्मा ब्र्हमहा च एव स स्या- स्याद् अस्मिं लोके गर्हितः स्यात्परे च।।

मया चैतां विप्र धर्मोक्ति सीमां मर्यादां वै स्थापितां सर्वलोके।

सन्तो विप्राः शुश्रुवांसो गुरूणां देवा लोकाश्चोपशृण्वन्तु सर्वे।।


பிறகு, விதியினால் மதி இழந்த அசுரர்களையும் அழைத்து, இவ்வாறு சொன்னார்.

"அசுரர்களே! நீங்கள் முட்டாள்களாக இருக்கிறீர்களே! நீங்கள் செய்த செயலால், கசன் தான் நினைத்த காரியத்தில் வெற்றி பெற்று விட்டான். 

பிரம்மாவுக்கு நிகராக, இனி இவனும் எனக்கு சமமாக அமர போகிறான்.

தேவர்களுக்காக, யாரும் செய்ய துணியாத செயலை செய்து சாதித்து விட்டான்.

இவனுடைய புகழ் அழியாததாகி விட்டது.

இவன் இனி யஞ பாகத்துக்கும் உரியவனாகி விட்டான்."

என்றார்.

आचक्षे वो दानवा बालिशाः स्थ सिद्धः कचो वत्स्यति मत्सकाशे।

सञ्जीविनीं प्राप्य विद्यां महात्मा तुल्यप्रभावो ब्राह्मणो ब्रह्मभूतः।।

योऽकार्षीद्दुष्करं कर्म देवानां कारणात्कचः। 

न तत्किर्तिर्जरां गच्छेद्याज्ञीयश्च भविष्यति।।

பதில் பேசமுடியாமல் திகைத்து நின்ற தானவர்கள் (அசுரர்கள்), திரும்பி சென்றனர்.

एतावदुक्त्वा वचनं विरराम स भार्गवः।

दानवा विस्मयाविष्टाः प्रययुः स्वं निवेशनम्।।


அதன் பிறகு, கசன், அசுர குருவான சுக்ராச்சாரியாரிடம் 1000 வருடங்கள் தொடர்ந்து பணிவிடை செய்து, பிறகு தன் தேவ லோகத்துக்கு புறப்பட தயார் ஆனான்.

गुरोरुष्य सकाशे तु दश वर्षशतानि सः।

अनुज्ञातः कचो गन्तुमियेष त्रिदशालयम्।।


கசன் கிளம்புவதை கண்ட தேவயானி, "அங்கிரஸ ரிஷியின் பேரனே ! நீங்கள் ஒழுக்கத்தாலும், உங்களின் குலத்தாலும், உங்களின் கல்வியினாலும், உங்களின் தவத்தினாலும், புலன்களை அடக்கி இருந்ததாலும் நீங்கள் சோபிக்கிறீர்கள். எப்படி என் தந்தையான சுக்ராச்சாரியாருக்கு உங்கள் பாட்டனார் அங்கிரஸர் மரியாதைக்கு பாத்திரமானவரோ, அது போல உங்கள் தந்தையான ப்ருஹஸ்பதி எனக்கு மரியாதைக்கு பாத்திரமானவர். பூஜிக்கத்தக்கவர். நான் சொல்வதை கேளுங்கள். நீங்கள் பிரம்மச்சர்ய விரதத்தில் இருந்த போது, நான் எப்படி கட்டுப்பாடுடன் நடந்து கொண்டேனோ, அது போல, வித்யை கற்ற பிறகு, நீங்கள் அன்புள்ள என்னிடம் பிரியம் வைக்க தகுதி பெறுகிறீர்கள். வேத மந்திரங்கள் சொல்லி, சாஸ்த்திரப்படி என்னை பாணிக்கிரஹணம் செய்து கொள்ளுங்கள்" என்று கேட்டாள்.

ऋषे: अङ्गिरसः पौत्र वृत्तेनाभिजनेन च।

भ्राजसे विद्यया चैव तपसा च दमेन च।।

ऋषिर्यथाङ्गिरा मान्यः पितुर्मम महायशाः।

तथा प्रान्यश्च पूज्यश्च मम भूयो बृहस्पतिः।।

एवं ज्ञात्वा विजानीहि यद्ब्रवीमि तपोधन।

व्रतस्थे नियमोपेते यथा वर्ताम्यहं त्वयि।।

स समावृतविद्यो मां भक्तां भजितुमर्हसि।

गृहाण पाणिं विधिवन्मम मन्त्रपुरस्कृतम्।।


"குற்றமில்லாதவளே! உன்னுடைய தந்தையை நான் எப்படி பூஜிக்கிறேனோ, அந்த அளவுக்கு உன்னை பூஜிக்கிறேன். நீ உண்மையில் அதை விட பூஜிக்க தகுதியானவள். 

நீ உன் தந்தையான சுக்ராச்சாரியாருக்கு உயிரை விட ப்ரியமானவள். குரு புத்ரியே! நீ தர்மப்படி பூஜிக்க தகுந்தவள். 

தேவயானி! என் குருவும், உன் தகப்பனாருமான சுக்ராச்சாரியார் எப்படி என்னால் பூஜிக்க தகுதி உள்ளவரோ! அது போல நீயும் பூஜிக்க தகுந்தவள். ஆதலால் நீ இவ்வாறு கேட்க கூடாது" என்றான் கசன்.

पूज्यो मान्यश्च भगवान्यथा तव पिता मम।

तथा त्वमनवद्याङ्गि पूजनीयतरा मम।।

प्राणेभ्योऽपि प्रियतरा भार्गवस्य महात्मनः।

त्वं भत्रे धर्मतः पूज्या गुरुपुत्री सदा मम।।

यथा मम गुरुर्नित्यं मान्यः शुक्रः पिता तव।

देवयानि तथैव त्वं नैवं मां वक्तुमर्हसि।।


தேவயானி கசனை பார்த்து, "நீங்கள் அங்கிரஸரின் பிள்ளையும் தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதிக்கு தான் பிள்ளை. என் தந்தைக்கு பிள்ளை இல்லை நீங்கள். நீங்கள் எனக்கு பூஜிக்கதக்கவராகவும், கௌரவிக்க தக்கவராகவும் இருக்கிறீர்கள். கசனே! நீங்கள் பலமுறை அசுரர்களால் கொல்லப்பட்ட போதும், ஆரம்பம் முதலே நான் உங்கள் மீது வைத்து இருந்த அன்பை நினைத்து பார்க்க வேண்டும். அன்பினாலும் ஆசையினாலும் நான் உங்களிடம் காட்டிய அன்பை நீங்கள் அறிவீர்கள். உங்களிடம் பற்று உள்ள என்னை, குற்றம் செய்யாத என்னை நீங்கள் கை விட கூடாது" என்றாள்  

गुरुपुत्रस्य पुत्रो वै न त्वं पुत्रश्च मे पितुः।

तस्मात्पूज्यश्च मान्यश्च ममापि त्वं द्विजोत्तम।।

असुरैर्हन्यमाने च कच त्वयि पुनःपुनः।

तदाप्रभृति या प्रीतिस्तां त्वमद्य स्मरस्व मे।।

सौहार्दे चानुरागे च वेत्थ मे भक्तिमुत्तमाम्।

न मामर्हसि धर्मज्ञ त्यक्तुं भक्तामनागसम्।।


"தேவயானி! செய்ய கூடாத காரியத்தில் என்னை நீ ஏவ கூடாது! நீ என் விஷயத்தில் கருணை செய். எனக்கு நீ குருவுக்கும் மேலான குரு. சந்திரனை போன்ற முகமுள்ளவளே! இனியவளே! கோபமுள்ளவளே! நீ எந்த சுக்ராச்சாரியார் வயிற்றில் வசித்தாயோ, நானும் அதே வயிற்றில் தான் வசித்தேன்! தர்மப்படி நீ எனக்கு சகோதரி ஆனாய். ஆதலால் நீ இவ்வாறு சொல்லாதே! குருகுலத்தில் சுகமாக வசித்தேன். எனக்கு கோபமில்லை. உன்னிடம் நான் விடைபெற்று கொள்கிறேன்! செல்கிறேன்! எனக்கு மங்களம் உண்டாக நீ பிரார்த்தனை செய். தர்மத்துக்கு விரோதமின்றி நான் இருந்தேன். சோம்பல் இல்லாமல் என் குருவான சுக்ராச்சாரியாருக்கு எப்பொழும் பணிவிடை செய்து கொண்டிரு" என்று சொன்னான் கசன். 

अनियोज्ये नियोक्तुं मां देवयानि न चार्हसि।

प्रसीद सुभ्रु त्वं मह्यं गुरोर्गुरुतरा शुभे।।

यत्रोषितं विशालाक्षि त्वया चन्द्रनिभानने।

तत्राहमुषितो भद्रे कुक्षौ काव्यस्य भामिनि।।

भगिनी धर्मतो मे त्वं मैवं वोचः सुमध्यमे।

सुखमस्म्युषितो भद्रे न मन्युर्विद्यते मम।।

आपृच्छे त्वां गमिष्यामि शिवमाशंस मे पथि।

अविरोधेन धर्मस्य स्मर्तव्योऽस्मि कथान्तरे।

अप्रमत्तोत्थिता नित्यमाराधय गुरुं मम।।

 

"அறம் என்ற தர்மத்தை மீறாத காமம் தவறல்ல. அந்த காமத்தை உன்னிடம் கேட்ட என்னை நீ விட்டு விடுவாயானால், நீ கற்ற சஞ்சீவினி வித்யை உனக்கு பலன் கொடுக்காமல் போகட்டும்" என்று கடிந்து பேசினாள்.

यदि मां धर्मकामार्थे प्रत्याख्यास्यसि याचितः।

ततः कच न ते विद्या सिद्धिमेषा गमिष्यति।।  


"நீ என்னுடைய குருவின் பெண் என்பதால் ஒன்றும் செய்யாமல் விடுகிறேன். உன் குற்றத்தினால் அல்ல. குருவும் எனக்கு உன்னை சபிக்க அனுமதி கொடுக்கவில்லை. நீ விரும்பினால், இன்னும் ஆசைதீர சபித்து கொள். ரிஷிகள் சொன்ன தர்மத்தை நான் சொன்னேன். நான் சாபத்திற்கு தகுதி அற்றவன் என்றாலும், உன்னுடைய காமத்தால் சபிக்கப்பட்டேன். உன்னுடைய காமம் நிறைவேறாது. நீ பிராம்மண பெண்ணாக பிறந்தும், உன்னை எந்த ரிஷி புத்திரனும் மணம் செய்து கொள்ள மாட்டான். 

நீ என்னை பார்த்து "உன் வித்யை பலிக்காது" என்று சொன்னாய். 

அப்படியே இருக்கட்டும்.

நான் இந்த வித்யையை யாருக்கு சொல்லி தருகிறேனோ அவர்களுக்கு பலத்தால் போதும்."

என்று சொல்லிவிட்டு, அந்த பிராம்மண ஸ்ரேஷ்டனான் கசன் உடனே விரைவாக சொர்க்க லோகம் நோக்கி கிளம்பினான்.

गुरुपुत्रीति कृत्वाऽहं प्रत्याचक्षे न दोषतः।

गुरुणा चाननुज्ञातः काममेवं शपस्व माम्।।

आर्षं धर्मं ब्रुवाणोऽहं देवयानि यथा त्वया।

शप्तो ह्यनर्हः शापस्य कामतोऽद्य न धर्मतः।।

तस्माद्भवत्या यः कामो न तथा स भविष्यति।

ऋषिपुत्रो न ते कश्चिज्जातु पाणिं ग्रहीष्यति।।

फलिष्यति न ते विद्या यत्त्वं मामात्थ तत्तथा।

अध्यापयिष्यामि तु यं तस्य विद्या फलिष्यति।।


அவன் வந்ததை கண்ட இந்திரன் முதலான தேவர்கள், ப்ருஹஸ்பதியை முதலில் கௌரவித்து, பிறகு அவர் மகனான கசனை பார்த்து "எங்களுக்கு பயன் கிடைப்பதற்காக, ஆச்சர்யமான காரியத்தை நீ செய்ததால், உன் புகழ் என்றுமே அழியாது. நீ யஞ பாகத்திற்கு உரியவன் ஆனாய்" என்று வாழ்த்தினர்.

No comments: