Followers

Search Here...

Showing posts with label எத்தனை. Show all posts
Showing posts with label எத்தனை. Show all posts

Saturday 29 April 2023

Punjab தமிழ்நாடு உறவு அறிவோம். பாண்டவர்களுக்கு எத்தனை மகன்கள் பிறந்தார்கள்? அறிவோம் மஹாபாரதம்

பாண்டவர்களுக்கு எத்தனை மகன்கள் பிறந்தார்கள்? அறிவோம் மஹாபாரதம்

ततः पाञ्चाल विषयं गत्वा

स्वयंवरे द्रौपदीं लब्ध्वा अर्ध राज्यं 

प्राप्य इन्द्रप्रस्थ निवासिन: तस्यां 

पुत्रान् उत्पादयाम् आसु द्रौपद्याम्।।

प्रतिविन्ध्यां युधिष्ठिरः |

सुतसोमं वृकोदरः |

श्रुतकीर्तिमर्जुनः |

शतानीकं नकुलः |

श्रुतसेनं सहदेव इति।।

- மஹாபாரதம் (வ்யாஸர்)

பாஞ்சால தேசம் (punjab) சென்று, திரௌபதியை சுயம்வரத்தில் வென்று, கிடைத்த பாதி ராஜ்யமான இந்திரப்ரஸ்தத்தில் பாண்டவர்கள் வசித்தனர். அங்கு திரௌபதி மூலம் பாண்டவர்கள் 5 புத்திரர்களை பெற்றனர்.

யுதிஷ்டிரன் ப்ரதிவிந்த்யன் (1) என்ற புத்திரனை பெற்றார்.

பீமன் ஸுதஸோமன் (2) என்ற புத்திரனை பெற்றார்.

அர்ஜுனன் ஸ்ருதகீர்த்தீ (3) என்ற புத்திரனை பெற்றார்

நகுலன் ஸதாநீகன் (4) என்ற புத்திரனை பெற்றார்.

சஹதேவன் ஸ்ருதசேனன் (5) என்ற புத்திரனை பெற்றார்.

शैव्यस्य कन्यां देवकीं नामोपयेमे युधिष्ठिरः।

तस्यां पुत्रं जनयामास यौधेयं नाम।।

யுதிஷ்டிரன் ஸைப்யனின் பெண்ணான தேவகீயை மணந்தார். அவர்களுக்கு யௌதேயன் (6) என்ற புத்திரன் பிறந்தான்.


भीमसेनस्तु वाराणस्यां काशिराज कन्यां जलन्धरां नामोपयेमे स्वयंवरस्थां।

तस्यामस्य जज्ञे शर्वत्रातः।।

பீமன் காசி ராஜனின் பெண்ணான ஜலந்தராவை மணந்தார். அவர்களுக்கு ஸர்வத்ராதன் (7) என்ற புத்திரன் பிறந்தான்


अर्जुनस्तु खलु द्वारवतीं गत्वा 

भगवतो वासुदेवस्य भगिनीं सुभद्रां

नामोदवहद् भार्यां |

तस्याम् अभिमन्युं नाम पुत्रं जनयामास ||

அர்ஜுனன் துவாரகை சென்ற போது, பகவான் வாசுதேவ கிருஷ்ணரின் தங்கை சுபத்ராவை மணந்தார். அவர்களுக்கு அபிமன்யு (8) என்ற புத்திரன் பிறந்தான்

नकुलस्तु खलु चैद्यां रेणुमतीं नामोदवहत् |

तस्यां पुत्रं जनयामास निरमित्रं नाम ||

நகுலன் சேதி நாட்டு அரசன் பெண்ணான ரேணுமதீயை, மணந்தார். அவர்களுக்கு நிரமித்ரன் (9) என்ற புத்திரன் பிறந்தான்


सहदेवस्तु खलु माद्रीमेव स्वयंवरे विजयां नामोदवहद्भार्याम् |

तस्यां पुत्रं जनयामास सुहोत्रं नाम ||

சஹதேவன் மத்திர நாட்டு அரசன் பெண்ணான விஜயாவை சுயம்வரத்தில் மணந்தார். அவர்களுக்கு ஸுஹோத்ரன் (10) என்ற புத்திரன் பிறந்தான்

भीमसेनश्च पूर्वमेव हिडिम्बायां राक्षस्यां पुत्रमुत्पादयामास

घटोत्कचं नाम |

பீமன் இதற்கு முன்பேயே ராக்ஷஸ பெண்ணான ஹிடிம்பியை மணந்தார். அவர்களுக்கு கடோத்கஜன் (11) என்ற புத்திரன் பிறந்தான்.


अर्जुनस्तु नागकन्यायाम् उलूप्याम् 

इरावन्तं नाम पुत्रं जनयामास ||

அர்ஜுனன் மேலும் நாக கன்னியான உலூபியை மணந்தார். அவர்களுக்கு இராவந்தன் (12) என்ற புத்திரன் பிறந்தான். 


ततो मणलूरुपति कन्यायां चित्राङ्गदायाम् अर्जुनः पुत्रम् उत्पादयामास

बभ्रुवाहनं नाम |

பிறகு, அர்ஜுனன் மதுரைக்கு எல்லையாக இருந்த மணலூர் (பாண்டிய தேசம்) அரசனின் (சித்ரவாஹனன்) பெண்ணான சித்ராங்கதாவை மணந்தார். அவர்களுக்கு பப்ருவாஹனன் (பாண்டிய மன்னன்) (13) என்ற புத்திரன் பிறந்தான். 

एते त्रयोदश पुत्राः पाण्डवानाम् 

இவ்வாறு பாண்டவர்களுக்கு 13 புத்திரர்கள் பிறந்தார்கள். 


பாண்டிய தேச அரசி சித்ராங்கதா, அர்ஜுனனின் மூத்த மனைவியும், பாஞ்சாலியுமான (punjab) திரௌபதிக்கு பெரு மதிப்பு கொடுத்து இருக்கிறாள்.

அவள் மகனும், பாண்டிய அரசனுமான பப்ருவாஹனன் முதல் பிறகு 5000 வருடங்கள் வந்த பாண்டிய அரசர்கள் யாவரும் திரௌபதிக்கு பெரு மதிப்பு கொடுத்து வழிபாடு செய்து, அக்னியில் இருந்து தோன்றியவள் என்பதால், அவளுக்கு முன் தீ மிதித்து வழிபாடு செய்து இருக்கின்றனர் என்று தெரிகிறது.

இன்றைய பஞ்சாபில் கூட திரௌபதிக்கு வழிபாட்டு கோவில்கள் அதிகம் இல்லை. ஆனால் திரௌபதிக்கு தெற்கு பாரதமான தமிழ்நாட்டில் திரௌபதிக்கு கோவில்கள், வழிபாடுகள் அதிகம் காணப்படுகிறது.

Saturday 31 July 2021

இரண்டு விதமான பக்தர்கள் இருக்கிறார்கள்... யார் அவர்கள்? ஹிந்துக்கள் கவனிக்க வேண்டியவை...

இரண்டு விதமான பக்தர்கள் இருக்கிறார்கள்.

"பகவான் தனக்கு ஏதாவது செய்வாரா?" என்று ஒரு வித பக்தர்கள்.

"பகவானுக்கு தான் ஏதாவது செய்ய முடியுமா?" என்று மற்றொரு விதமான பக்தர்கள் உண்டு.


ராம அவதார சமயத்தில், விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்கள் "ராமபிரான் தன்னை காப்பாற்றுவாரா? தனக்கு அபயம் கொடுப்பாரா?" என்று வந்தார்கள்.


ராமபிரான் சொன்னார் என்றதும், வாலியை சண்டைக்கு கூப்பிட. அண்ணன் தம்பியான இவர்கள், ஒரே ஜாடையோடு இருக்க, 

"வாலிக்கு பதிலாக தவறுதலாக சுக்ரீவனை  அடித்து விட கூடாதே" என்று ராமபிரான் சற்று நிதானிக்க, அதற்குள் 'வாலி தன்னை கொன்று விடுவானோ!' என்று தப்பித்து சுக்ரீவன் ஓடி விட்டான்.

"இப்படி என்னை காப்பேன் என்று சொல்லிவிட்டு, வாலியிடம் மாட்டி விட்டீர்களே" என்று புலம்பினான்.





பிறகு, வாலியை ஒரே அம்பில் வீழ்த்தி, கிஷ்கிந்தைக்கு சுக்ரீவனை ராமபிரான் அரசனாக்கியதும், ராமபிரானை பூரணமாக சரணாகதி செய்தார்.

அதேபோல, 

விபீஷணனும், "ராமரே கதி." என்று சரணாகதி செய்தார். ராமபிரான் உடனேயே "இலங்கைக்கு அதிபதி விபீஷணன்" என்று ராவணன் இருக்கும் போதே பட்டாபிஷேகம் தன் கையால் செய்தார்.


மிகுந்த நம்பிக்கையில் இருந்த விபீஷணன், ராமபிரானும், லக்ஷ்மணனும் இந்திரஜித் செலுத்திய நாக பாணத்தால் மூர்ச்சையாகி விழுந்து விட... உடனே புலம்ப ஆரம்பித்தார்.

"ராவணனை பகைத்து கொண்டு..  ராமபிரானை சரணடைந்தேனே! இப்படி ராமபிரானும் கிடக்க, ஆதரவு இல்லாமல் போய் விட்டேனே!" என்று அழுகிறார்.


பிறகு, நாகபாசத்தில் இருந்து விடுபட்டு, ராமபிரான் தொடர்ந்து யுத்தம் செய்து, ராவணனை கொன்று. சொன்னது படியே விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கினார். விபீஷணன் பூரண சரணாகதி செய்தார்.

சுக்ரீவனும், விபீஷணனும் ராமபிரானின் பக்தர்கள் தான்.

ஆனாலும், 

கருடனை போன்றோ, ஹநுமானை போன்றோ, ஆச்சர்யமான பக்த சூரிகள் என்று சொல்லிவிட முடியாது.


கருடன், ஹனுமான் போன்றவர்கள், ராமபிரானிடம் தனக்கு எதுவும் எதிர்பார்க்காதவர்கள். எந்த நிலையிலும் பகவான் மீது சந்தேகமோ, இவர் சக்தி அற்றவர் என்றோ நினைப்பதே இல்லை.


"பகவான் தனக்கு ஏதாவது செய்வாரா?" என்ற பக்தர்கள் மத்தியில், கருடன், ஹனுமான் போன்றவர்கள் "பகவானுக்கு தான் ஏதாவது செய்யலாமா?" என்று நினைப்பார்கள்.

ராமபிரான் நாகபாசத்தால் கட்டுப்பட்டு மயங்கி கிடக்க, விபீஷணன், சுக்ரீவன் உட்பட அனைவரும் கையை பிசைந்து கொண்டிருக்க, "அடடா ! கிடைத்தது ஒரு கைங்கர்யம் நமக்கு" என்று கருடன் தானாக வந்து நாகபாசத்தை விலக்கினார்.

"ராமபிரானுக்கு சக்தி உள்ளதா?" என்று சாதாரண பக்தனை போல நினைக்காமல், "நாம் இவருக்கு சேவை செய்ய, தான் சக்தி அற்றவன் போல கிடக்கிறார்" என்று தான் நினைத்தார் கருடன்.

அதேபோல, 

சஞ்சீவினி எடுத்து வந்து ஹனுமான் ராமபிரானை காப்பாற்றியும், 'ராமபிரான் சக்தி அற்றவர்' என்று ஹனுமான் துளியும் நினைக்கவில்லை.  மாறாக, 

"தனக்கு ஒரு புகழ் கொடுக்க, தனக்கு ஒரு சேவை கொடுக்க, தான் சக்தி அற்றவர் போல இருந்தார் ராமபிரான்" என்று தான் நினைத்தார்.


ராமபிரான் அவதார சமயத்தில் மட்டும் தான், இது போன்ற இரு வித பக்தர்கள் உண்டு என்று நினைத்து கொள்ள கூடாது. இன்றும் இது போன்ற இரு வித பக்தர்கள் இருப்பதை காணலாம்.

இது போன்ற பக்தர்கள் என்றுமே பகவானை சுற்றி உண்டு.

இன்றும், 

கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் வித விதமான பிரார்த்தனைகள்.

பகவானிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். பகவானும் அனுகிரஹிக்கிறார்.

பிரார்த்தனைகள் பலிப்பதால் தானே, மதப்பிரச்சாரம் செய்யாமலேயே நம் கோவில்களில் கூட்டம் குவிகிறது.

சில பிரார்த்தனை பலிக்காமல் போனால், சுக்ரீவன், விபீஷணனை போல சந்தேகம் வந்து விடுகிறது.

பிறகு பலிக்கும் போது, பக்தி வலுப்படுகிறது.

இது போன்ற பக்தியை, பலரிடம் நாம் இன்று கூட பார்க்கிறோம்.




ஆனால், 

ஹனுமான், கருடனை போன்று, "பகவானுக்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்ற குறிக்கோளுடனேயே வரும் பக்தர்களும் உண்டு..

இப்படிப்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு நுழையும் போதே,

"அடடா ! பெருமாளுக்கு உடுத்தி கொள்ள நல்ல பட்டு வஸ்திரம் இல்லை போல இருக்கிறதே ! நாம் மாதாமாதம் வாங்கி கொடுக்கலாமா?"

"அடடா ! இந்த கோவிலில் தேர் உற்சவம் நடக்கவில்லை போல உள்ளதே ! அதற்கு ஏற்பாடு செய்யலாமா?"

"அடடா ! இந்த கோவிலில் தீபம் ஏற்ற எண்ணெய் இல்லையே.. பகவான் இருட்டில் இருக்கிறாரே! தீபம் நிரந்தரமாக கிடைக்க ஏற்பாடு செய்வோமா?"

"அடடா ! வேத ப்ராம்மணன் இவருக்கு சுப்ரபாதம் செய்ய வழி இல்லாமல் உள்ளதே ! வேத ப்ராம்மணர்கள் இங்கு வந்து கைங்கர்யம் செய்யும் படி வசதி செய்து கொடுத்து, பகவானுக்கு சேவை செய்ய வைப்போமா?"

"அடடா..  கோவில் இப்படி பாழடைந்து உள்ளதே ! எப்படியாவது நாமே பணம் சேர்த்து, திருப்பணி செய்து விடலாமா?"

"அடடா... கோவிலில் பெருமாள் காவல் இல்லாமல் இருக்கிறாரே! தங்க நகைக்கு ஆசைப்பட்டு யாரவது பெருமாளை சேர்த்து திருடிவிட்டால் என்ன செய்வது? ஒரு காவல் போடலாமா? பெரிய கேட் போட்டு விடலாமா?"

"அடடா,,,  தெய்வ நிந்தை செய்பவன் வந்து இவருக்கு ஏதாவது செய்து விடுவானே! அவனிடமிருந்து பகவானை நாம் எப்படி காப்பது?"

என்றெல்லாம் யோசிப்பான் மற்றொரு வகையான பக்தன்.


இப்படிப்பட்ட பக்தர்கள், மிகவும் உயர்ந்தவர்கள்.

பகவானிடம் இவர்கள் எதையும் வேண்டி பக்தி செய்வதில்லை.

பகவானிடம் இவர்கள் கேட்பது  "சேவை" மட்டுமே !

இப்படிப்பட்ட பக்தர்களுக்காக, சர்வ சக்தி உடைய பகவான், சக்தி அற்றவர் போல சில சமயங்களில் இருக்கிறார்.

ஹனுமான் "தனக்காக சஞ்சீவினி  மலையையே தூக்கி வந்து விடுவார்", என்று உலகுக்கு காட்ட, தான் மயங்கி கிடந்தார்.


அது போல, 

இன்று, பல கோவில்களில், இப்படிப்பட்ட உயர்ந்த பக்தர்களை எதிர்பார்த்து, பகவான் காத்து கொண்டு இருக்கிறார். 

கோவில்கள் இடிந்தும், தீபம் ஏற்றப்படாமலும், நல்ல வஸ்திரம் கூட இல்லாமலும், உற்சவங்கள் நடக்காமலும் பல ஆயிரம் கோவில்கள் உள்ளன.


ஹநுமானை போன்றும், கருடனை போன்றும் சேவை செய்யும் பக்தர்கள் இன்று ஒவ்வொரு கோவிலுக்கும் தேவை.


சுக்ரீவன் போலவும், விபீஷணன் போலவும் நாம் இருந்தது போதும்.

நம்மால் முடிந்த அளவுக்கு, ஒரு கோவிலையாவது எடுத்து கொண்டு, உற்சவங்கள், பூஜைகள் நடக்க செய்வோம்.

ஹனுமான் போலவும், கருடனை போலவும், பிரகாசிப்போம்.

Tuesday 27 July 2021

ராமபிரானுக்கு துணையாக எத்தனை கோடி வானர சேனை கலந்து கொண்டனர்? வால்மீகி ராமாயணம் .. தெரிந்து கொள்வோம்..

ராமபிரானுக்கு துணையாக எத்தனை கோடி வானர சேனை கலந்து கொண்டனர்? 

குறைந்த பட்சம் - 20 ஆயிரம் கோடி வானரர்கள், ராம சேவைக்கு தன்னை ஈடுபடுத்திக்கொண்டனர்.


வாலியின் மாமனார், தாரையின் தந்தை சுசேனா - 10,000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார். 

ततः कांचन शैल आभः ताराया वीर्यवान् पिता |

अनेकैः बहु साहस्रैः कोटिभिः प्रत्यदृश्यत ||

- वाल्मीकि रामायण


சுக்ரீவனின் மாமனார் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

तथा अपरेण कोटीनाम् साहस्रेण समन्वितः |

पिता रुमयाः संप्राप्तः सुग्रीव श्वशुरो विभुः ||

- वाल्मीकि रामायण





ஹனுமானின் தந்தை கேசரி - ஆயிரக்கணக்கான வானரர்களுடன் வந்திருந்தார்.

पद्म केसर संकाशः तरुण अर्क निभ आननः |

बुद्धिमान् वानर श्रेष्ठः सर्व वानर सत्तमः ||

अनीकैः बहु साहस्रैः वानराणाम् समन्वितः |

पिता हनुमतः श्रीमान् केसरी प्रत्यदृश्यत ||

- वाल्मीकि रामायण


கோலங்குளர்களின் அரசன் கவாக்ஷன் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

गो लांगूल महाराजो गवाक्षो भीम विक्रमः |

वृतः कोटि सहस्रेण वानराणाम् अदृश्यत ||

- वाल्मीकि रामायण


தூம்ரா - 2000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ऋक्षाणाम् भीम वेगानाम् धूम्रः शत्रु निबर्हणः |

वृतः कोटि सहस्राभ्याम् द्वाभ्याम् समभिवर्तत || 

- वाल्मीकि रामायण


பனசன் - 3 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

महा अचल निभैः घोरैः पनसो नाम यूथपः |

आजगाम महावीर्यः तिसृभिः कोटिभिः वृतः |

- वाल्मीकि रामायण


நீலன் - 3 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

नील अंजन चय आकारो नीलो नाम अथ यूथपः |

अदृश्यत महावीर्य: तिसृभि: कोटिभिः वृतः ||

- वाल्मीकि रामायण


கவயன் - 5 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततः कांचन आभो गवयो नाम यूथपः |

आजगाम महावीर्यः कोटिभिः पंचभिः वृतः ||

- वाल्मीकि रामायण


தரீமுகன் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

दरीमुखः च बलवान् यूथपो अभ्याययौ तदा |

वृतः कोटि सहस्रेण सुग्रीवम् समुपस्थितः ||

- वाल्मीकि रामायण


மைந்தனும், த்விவிதனும் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

मैन्दः च द्विविदः च उभौ अश्वि पुत्रौ महाबलौ |

कोटि कोटि सहस्रेण वानराणाम् अदृश्यताम् ||

- वाल्मीकि रामायण


கஜன் - 3 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

गजः च बलवान् वीरः त्रिसृभिः कोटिभिः वृतः |

आजगाम महातेजाः सुग्रीवस्य समीपतः ||

- वाल्मीकि रामायण


ஜாம்பவான் - 10 கோடி கரடி படையுடன் வந்திருந்தார்.

ऋक्ष राजो महातेजा जांबवान् नाम नामतः |

कोटिभिः दशभिः व्याप्तः सुग्रीवस्य वशे स्थितः |

- वाल्मीकि रामायण


ருமணன் - 100 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

रुमणो नाम तेजस्वी विक्रान्तैः वानरैः वृतः |

आगतो बलवान् तूर्णम् कोटि शत समावृतः ||

- वाल्मीकि रामायण


கந்தமாதன் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततः कोटि सहस्राणाम् सहस्रेण शतेन च |

पृष्ठतो अनुगतः प्राप्तो हरिभिः गंधमादनः ||

- वाल्मीकि रामायण


வாலியின் பிள்ளை அங்கதன் - ஆயிரக்கணக்கான பத்மங்களுடன், நூற்றுக்கணக்கான சங்கங்களுடன் வந்திருந்தார்.

ततः पद्म सहस्रेण वृतः शन्कु शतेन च |

युव राजो अंगदः प्राप्तः पितृ तुल्य पराक्रमः ||

- वाल्मीकि रामायण





தாரா - 5 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततः तारा द्युतिः तारो हरिः भीम पराक्रमः |

पंचभिः हरि कोटीभिः दूरतः प्रत्यदृश्यत ||

- वाल्मीकि रामायण


இந்த்ரஜானு - 11 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

इन्द्रजानुः कपिः वीरो यूथपः प्रत्यदृश्यत |

एकादशानाम् कोटीनाम् ईश्वरः तैः च सम्वृतः || 

- वाल्मीकि रामायण


ரம்பன் - 1100 ஆயுத வானரர்களுடன் வந்திருந்தார்.

ततो रंभः तु अनुप्राप्तः तरुण आदित्य संनिभः |

आयुतेन वृतः चैव सहस्रेण शतेन च ||

- वाल्मीकि रामायण


துர்முகா - 2  கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततो यूथ पतिः वीरो दुर्मुखो नाम वानरः |

प्रत्यदृश्यत कोटिभ्याम् द्वाभ्याम् परिवृतो बली ||

- वाल्मीकि रामायण


ஹனுமான் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

कैलास शिखर आकारैः वानरैः भीम विक्रमैः |

वृतः कोटि सहस्रेण हनुमान् प्रत्यदृश्यत ||

- वाल्मीकि रामायण


நலன் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

नलः च अपि महावीर्यः संवृतो द्रुम वासिभिः |

कोटी शतेन संप्राप्तः सहस्रेण शतेन च ||

- वाल्मीकि रामायण


சுக்ரீவனுக்கு பிடித்தமான ததிமுகன் - 10 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततो दधिमुखः श्रीमान् कोटिभिः दशभिः वृतः |

संप्राप्तो अभिनदन् तस्य सुग्रीवस्य महात्मनः || 

- वाल्मीकि रामायण


சரபன், குமுதன், வன்ஹி மேலும் பல வானரர்கள் இப்படி நிற்க,  மலைகள், மரங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியாதபடி, எண்ண முடியாத அளவுக்கு வானர சேனை நின்று கொண்டிருந்து.

शरभः कुमुदो वह्निः वानरो रंहः एव च |

एते च अन्ये च बहवो वानराः काम रूपिणः ||

आवृत्य पृथिवीम् सर्वाम् पर्वतान् च वनानि च |

यूथपाः समनुप्राप्ता एषाम् संख्या न विद्यते ||

- वाल्मीकि रामायण


Monday 3 May 2021

சிவ தனுஸை எத்தனை பேர் இழுத்து வந்தனர்? தெரிந்து கொள்வோம். வால்மீகி ராமாயணம்

சிவதனுஸை எத்தனை பேர் இழுத்து வந்தனர்?

"நிமி சக்கரவர்த்தியின் 6வது தலைமுறையில் வந்த தேவவ்ரதனிடம் சிவதனுஷை சாக்ஷாத் சிவபெருமான் கொடுத்து வைத்தார்.

நான் யாகசாலையில் உழுத போது, பூமியிலிருந்து தானாக கிடைத்த பெண் சீதை.

அவளை என் பெண்ணாக பாவித்து வளர்த்து வருகிறேன்.




அவள் வளர்ந்து மணம் செய்து கொள்ள வேண்டிய பருவம் வந்தவுடனேயே, அவளை மணக்க அரசர்கள் அனைவரும் மிதிலையை முற்றுகை இட்டு விட்டனர்.

'எனக்கு வரதக்ஷிணையாக யார் இந்த சிவதனுஸை எடுத்து நாண் ஏற்றுகிறார்களோ! அவர்களே சீதையை மணம் செய்து தகுதி படைத்தவர்" என்று க்ஷத்ரியர்களான இவர்களுக்கு சொல்ல, அனைவரும் முயற்சி செய்தனர்.

சிவதனுஸை தூக்க முடியாமல், பலர் அசைக்க கூட முடியாமல் தோற்றனர்.

அவமானம் அடைந்த இவர்கள், மிதிலையை முற்றுகை இட்டனர். ஒரு வருடம் இவர்களால் மிதிலாபுரி அவதிப்பட்டது.

என்னுடைய பிரார்த்தனையை ஏற்று, தேவகணங்கள் மிதிலையை நாற்புறமும் சுற்றி கொண்டு, அனைவரையும் அடக்கி விரட்டினர்.

அந்த தனுஸை நான் உங்களுக்கும், கூடவே நின்று கொண்டிருக்கும் ராம, லக்ஷ்மணருக்கும் காட்டுகிறேன்"

என்று சொல்லி, தன் அமைச்சர்களிடம் எடுத்து வர சொன்னார் ஜனகர்.


ஜனகேன சமாதிஷ்டா:

ஸசிவா: ப்ராவிஸன் புரம் |

தத் தனு: புரத: க்ருத்வா

நிர்ஜக்மு அமிதொளஜச: ||

ந்ருனாம் சதானி பஞ்சாஸத்

வ்யாயதானாம் மஹாத்மநாம் |

மஞ்சுஷாம் அஷ்ட சக்ராம்

தாம் சமுஹு: தே கதன்சன ||

- வால்மீகி ராமாயணம்


जनकेन समादिष्ठाः सचिवाः प्राविशन् पुरम् |

तद् धनुः पुरतः कृत्वा निर्जग्मु अमितौजसः ||

नृणां शतानि पंचाशद् व्यायतानां महात्मनाम् |

मंजूषाम् अष्ट चक्रां तां समूहुस्ते कथंचन ||

- वाल्मीकि रामायण

ஜனகரின் ஆணைக்கு இணங்கி, அவருடைய அமைச்சர்கள் சென்று, சிவதனுஸை எட்டு சக்கரங்கள் பூட்டிய பெரிய தேரில் வைத்து, அரச மஹாமண்டபத்துக்குள் வந்தனர்.

பலம் பொருந்திய உயரமான ஆண்கள் 5000 பேர் சேர்ந்து கொண்டு, சிரமப்பட்டு சிவதனுஸை இழுத்து கொண்டு வந்தனர்.

As clearly instructed by Janaka those high souled ministers have gone out and entered the palace-chambers, and they came out with an eight-wheeled coffer in which the bow of Shiva is ensconced, and those ministers got it tugged by five thousand (शतानि पंचाशद्) tall men of illimitable energy who somehow tugged it very difficultly, and thus the ministers have re-entered there keeping that bow afore of them





சிவ தனுஸை காண்பித்த ஜனகர், 

"இதோ இந்த சிவதனுஸை மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், மஹோரகர்கள், யக்ஷர்கள் போன்ற பலம் பொருந்தியவர்கள் கூட முயற்சி செய்தும், அசைக்க கூட முடியாமல் திரும்பினர்." என்று காண்பித்தார்.


விஸ்வாமித்திரர், 16 வயது கூட நிரம்பாத ராமபிரானை பார்த்து, "அந்த தனுஸை சென்று பார்" என்றார்.


அருகில் சென்று பார்த்த ராமர், விஸ்வாமித்ரரிடம் "ப்ரம்ம ரிஷி! நான் இந்த தனுஸை தொட்டு பார்க்கலாமா? இந்த அழகான தனுஸை எடுத்து நாண் ஏற்றி பார்க்க ஆசைப்படுகிறேன்" என்றார்.

பாடம் இத்யேவ தம் ராஜா

முனி: ச சம பாஷத |

லீலயா ச தனுர் மத்யே

ஜக்ராஹ வசனான் முனே ||

- வால்மீகி ராமாயணம்


बाढमित्येव तं राजा मुनिश्च समभाषत |

लीलया स धनुर्मध्ये जग्राह वचनान्मुनेः ||

- वाल्मीकि रामायण

ஜனகரும், விச்வாமித்ரரும் சம்மதம் தெரிவிக்க, சிவதனுஸின் நடுவே கை வைத்து தூக்கி, விளையாட்டாக எடுத்து விட்டார்.

ஆயிரக்கணக்கானவர்கள் இந்த காட்சியை பார்க்க, ராமர் சர்வ சாதாரணமாக சிவதனுஸை நாண் ஏற்ற ஆரம்பித்தார்.

நாண் ஏற்றுவதற்கு ஒரு முடிச்சை இழுத்து மேலே கட்ட ராமர் முயற்சிக்க, சிவதனுஸ் முறிந்து விழுந்தது.

மலை சுக்கு நூறாக வெடிக்கும் போது ஏற்படும் சத்தத்தை, முறிந்த சிவதனுஸ் ஏற்படுத்தியது.


விஸ்வாமித்திரர், ஜனகர், ராம லக்ஷ்மணர்களை தவிர, நொடி பொழுதில் நடந்து விட்ட இந்த நிகழ்வை பார்த்த அனைவரும், திகைத்து நின்றனர்.

भगवन् दृष्टवीर्यो मे रामो दशरथात्मजः |

अत्यद्भुतमचिन्त्यं चातर्कितमिदं मया ||

- वाल्मीकि रामायण


பகவன் த்ருஷ்ட வீர்யோ

மே ராமோ தசரதாத்மஜ: |

அதி அத்புதம் அசிந்த்யம்

ச அதர்கிதம் இதம் மயா ||

- வால்மீகி ராமாயணம்

ஜனகர் விஸ்வாமித்ரரை பார்த்து, "ப்ரம்ம ரிஷி!  தசரத மைந்தன் ராமரின் வீரம் இன்று கண்கூடாக கண்டேன்.

ஆச்சரியத்துக்கும் ஆச்சர்யம் இது.  அனுமானம் செய்து பார்க்க முடியாத நிகழ்வு. இது நடக்கவே நடக்காது என்றே நான் நினைத்திருந்தேன்.

என் மகள் சீதை, தசரத மைந்தன் ராமனை கணவனாக அடைவதால், ஜனக குலம் பெரும் பெருமை அடைய போகிறது என்று அறிகிறேன்.."

என்று கூறி ஆனந்தப்பட்டார் ஜனக மஹாராஜன்.