Followers

Search Here...

Showing posts with label வருத்தம். Show all posts
Showing posts with label வருத்தம். Show all posts

Sunday 3 January 2021

ஹனுமானுக்கு ஏற்பட்ட சோகம் (Hanuman in Stress).. கோபத்தின் விளைவை எண்ணி வருத்தப்படுகிறார்... தெரிந்து கொள்வோமே ! வால்மீகி ராமாயணம்

'சீதா தேவியை அனுப்ப முடியாது' என்று தீர்மானித்து,  ஹனுமானின் வாலில் தீ வைக்க சொல்லி ராக்ஷஸர்களுக்கு ஆணையிட்டான் ராவணன். 
ஊர் முழுக்க ஹனுமானை கட்டி இழுத்து சென்று, ஊரில் இருந்த அனைத்து ராக்ஷஸ குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் உட்பட அனைவரும் கேலியாக சிரித்தனர். 
ஹனுமான் இவர்கள் செய்யும் அட்டகாசங்கள், கேலிகள் அனைத்தையும் பார்த்தும், பொறுமையாகவே இருந்தார்.

இதற்கிடையில் ஸீதா தேவியிடம் அங்கிருந்த ராக்ஷஸிகள் 'உன்னை பார்க்க வந்த தூதன் பிடிபட்டு விட்டான். இன்று அந்த வானரன் வாலில் தீ வைத்து, ஊர் முழுக்க இழுத்து கொண்டு போகிறார்கள்" என்று சொல்ல, 
சீதா தேவி 'என் கணவனுக்கே நான் சேவை செய்தது உண்மையென்றால், நான் பதிவ்ரதை என்பது உண்மை என்றால், ராமபிரானின் ஒழுக்கம் உண்மை என்றால், ஏ அக்னியே! ஹனுமானை நீ தொடும் போது, குளிர்ச்சியாக இரு' என்று பிரார்த்தித்தாள்.
அதே சமயத்தில், வாலில் வைத்து இருந்த தீ, திடீரென்று குளிர்ந்த நீர் பட்டது போல ஆனதை உணர்ந்தார் ஹனுமான்.

உடனே உற்சாகம் அடைந்த ஹனுமான், இது வரை கேலி செய்து கொண்டிருந்த ராக்ஷஸர்களுக்கு ஒரு பாடம் புகட்ட, இலங்கையையே தீயிட்டு விட்டார்.

ஒவ்வொரு மதில் சுவராக தாவி, 
விபீஷணன் மாளிகையை மட்டும் விட்டு விட்டு, ராவணன் மாளிகை உட்பட அனைத்தையும் தீயிட்டு விட்டார்.
லங்காம் சமஸ்தாம் சந்தீப்ய லாங்கூலாக்னிம் மஹாகபி: |
நிர்வாபயாமாஸ ததா சமுத்ரே ஹரி சத்தம: ||
लङ्कां समस्तां सन्दीप्य लाङ्गूलाग्निं महाकपिः |
निर्वापयामास तदा समुद्रे हरिसत्तमः ||
இலங்கையை கொளுத்திய பிறகு, ஹனுமான் தன் வாலில் ராக்ஷஸர்கள் வைத்த தீயை கடலில் அணைத்தார்.

சந்தீப்யமானாம் வித்வஸ்தாம் த்ரஸ்தரஷோ கனாம் புரீம் |
அவேக்ஷ்ய ஹானுமான் லங்காம் சிந்தயாமாச வானர: ||
सन्दीप्यमानां विध्वस्तां त्रस्तरक्षो गणां पुरीम् |
अवेक्ष्य हानुमाँल्लङ्कां चिन्तयामास वानरः ||
இலங்கை நகரமே தீயில் கொழுந்து விட்டு ஏறிந்து கொண்டிருக்க, அலறி அடித்து ராக்ஷஸர்கள் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருப்பதை கண்ட ஹனுமானுக்கு, திடீரென்று தாங்க முடியாத சோகம் ஏற்பட்டது.
தஸ்ய அபூத் சமுஹாம் த்ராச: குத்ஸா ச ஆத்மன்ய ஜாயத |
லங்காம் ப்ரதஹதா கர்ம கிம் ஸ்வித் க்ருதம் இதம் மயா ||
तस्याभूत्सुमहांस्त्रासः कुत्सा चात्मन्यजायत |
लङ्कां प्रदहता कर्म किंस्वित्कृतमिदं मया ||
ஹனுமான் இதயத்துக்குள் பெரும் கவலை குடி கொண்டது. ஹனுமான் தன்னையே வெறுத்துக்கொண்டார். 
"சீ! இலங்கையை கொளுத்தி என்ன காரியம் செய்து இருக்கிறேன்!!

தன்யாஸ்தே புருஷ ஸ்ரேஷ்ட யே புத்தயா கோபம் உத்திதம் |
நிருன்தந்தி மஹாத்மனோ தீபதம் அக்னிமிவாம்பசா ||
धन्यास्ते पुरुषश्रेष्ठ ये बुद्ध्या कोपमुत्थितम् |
निरुन्धन्ति महात्मानो दीप्तमग्निमिवाम्भसा ||
இந்த கொழுந்து விட்டு எரியும் தீயை தண்ணீர் விட்டு அணைக்க முற்படும் அனைவரும் தன்யர்கள்.. அந்த மஹாத்மாக்களுக்கு என் நன்றி..




க்ருத்த: பாபம் ந குர்யாத் க:  க்ருத்தோ ஹன்யாத் குருநபி |
க்ருத்த: பருஷயா வாசா நர: ஸாதூனதிக்ஷிபேத் ||
क्रुद्धः पापं न कुर्यात् कः क्रृद्धो हन्यात् गुरूनपि ।
क्रुद्धः परुषया वाचा नरः साधूनधिक्षिपेत् ॥
கோபத்திற்கு ஆட்பட்ட, யார் தான் தவறு செய்யாமல் இருக்க முடியும்? கோபமடைந்தவன் தனது குருவை கூட கொல்ல துணிந்து விடுவானே!! கோபம் அடைபவன் நல்லவர்களை கூட கடும் சொற்களை பேசி அவமானப்படுத்தி விடுவானே!!

வாச்யாவாச்யம் ப்ரகுபிதோ ந விஜானாதி கர்ஹிசித் |
நாகார்யம் அஸ்தி க்ருத்தஸ்ய நாவாச்யம் வித்யதே க்வசித் ||
वाच्यावाच्यं प्रकुपितो न विजानाति कर्हिचित् ।
नाकार्यमस्ति क्रुद्धस्य नावाच्यं विद्यते क्वचित् ॥
கோபம் அடைந்தவன் என்ன பேச வேண்டும்? என்பதையும் மறக்கிறான். என்ன பேச கூடாது? என்பதையும் மறக்கிறான். 
கோபம் அடைந்தவனுக்கு எந்த செயலும்! செய்ய கூடாத செயல் இல்லை. கோபம் அடைந்தவனுக்கு எந்த வார்த்தையும்! பேசக்கூடாத வார்த்தை இல்லை.

ய: சமுத்பதிதம் க்ரோதம் க்ஷமயைவ நிரஸ்யதி |
யதோரகஸ்த்வசம் ஜீர்ணாம் ச வை புருஷ உச்யதே ||
यः समुत्पतितं क्रोधं क्षमयैव निरस्यति ।
यथोरगस्त्वचं जीर्णां स वै पुरुष उच्यते ॥
பாம்பு தன் பழைய தோலை கழட்டி விட்டு செல்லும். அது போல, யார் ஒருவன் தன் கோபத்தை கழட்டி எரிந்து விட்டு, மன்னிக்கும் குணத்தை பெறுகிறானோ! அவனே உண்மையான நாயகன்.

திகஸ்து மாம் சுதுர்புத்திம் நிர்லஜ்ஜம் பாபக்ருத்தமம் |
அசிந்தயித்வா தாம் சீதாம் அக்னிதம் ஸ்வாமிகாதகம் ||
धिगस्तु मां सुतुर्बुद्धिम् निर्लज्जम् पापकृत्तमम् |
अचिन्तयित्वा तां सीतामग्निदं स्वामिघातकम् ||
சீ! அவமானம். நான் ஒரு புத்தி கெட்டவன்! வெட்கமில்லாதவன்! பாவி! சீதாதேவியை பற்றி நினைவு இல்லாமல், இப்படி இலங்கையை கொளுத்தி விட்டேனே!! என் பிரபு கொடுத்த காரியத்தை கெடுத்து விட்டேனே!!

யதி தக்தா த்வியம் லங்கா நூனமார்யாபி ஜானகீ |
தக்தா தேன மயா பர்துர்ஹதம் கார்யம் அஜானதா ||
यदि दग्धा त्वियं लङ्का नूनमार्यापि जानकी |
दग्धा तेन मया भर्तुर्हतं कार्यमजानता ||
இந்த இலங்கை நகரம் முழுவதும் இப்போது எரிந்து சாம்பலாகி விட்டால், அதில் சீதா தேவியும் எரிந்து விடுவாளே! 
என்னுடைய முட்டாள்தனத்தால், என் பிரபு கொடுத்த காரியத்தை கெடுத்து விட்டேனே!!  செய்த அனைத்து முயற்சியும் வீணாகி போனதே! 

யதர்தம் அயம் ஆரம்ப: தத் கார்யம் அவசாதிதம் |
மயா ஹி தஹதா லங்காம் ந சீதா பரி ரக்ஷிதா ||    
यदर्थम् अयम् आरम्भ: तत् कार्यम् अवसादितम् |
मया हि दहता लङ्कां न सीता परिरक्षिता ||
நான் இலங்கையை கொளுத்துவதற்கு முன்னால், சீதா தேவியை பத்திரமாக வைத்து விட்டு செய்து இருக்கலாமே!!

ஈசத் கார்யம் இதம் கார்யம் க்ருதம் ஆஸீன் ந சம்சய: |
தஸ்ய க்ரோத அபிபுதேன மயா மூலக்ஷய: க்ருத: ||
விநஷ்டா ஜானகீ வ்யக்தம் ந ஹ்யதக்த: ப்ரத்ருஷ்யதே |
லங்காயா: கஸ்சித் உத்தேச: சர்வா பஸ்மீக்ருதா புரீ ||
யதி தத்விஹிதம் கார்யம் மயா ப்ராஞா விபர்யயாத் |
இஹைவ ப்ராண சந்யாசோ மமாபி ஹ்யதிரோசதே ||
ईषत्कार्यमिदं कार्यं कृतमासीन्न संशयः |
तस्य क्रोधाभिभूतेन मया मूलक्षयः कृतः ||
विनष्टा जानकी व्यक्तं न ह्यदग्धः प्रदृश्यते |
लङ्कायाः कश्चिदुद्देशः सर्वा भस्मीकृता पुरी ||
यदि तद्विहतं कार्यं मया प्रज्ञाविपर्ययात् |
इहैव प्राणसंन्यासो ममापि ह्यतिरोचते ||
என் பிரபு கொடுத்து அனுப்பிய காரியத்தில் பெரும்பாலான காரியங்கள் முடிந்து, இன்னும் கொஞ்சம் தானே மிச்சம் இருந்தது. என் கோபத்தால், செய்த காரியம் அனைத்தையும் அடியோடு நாசமாக்கி விட்டேனே!
என்ன செய்கிறேன் என்றே தெரியாமல், புத்தி கெட்டு, நான் வந்த காரியத்தை நானே கெடுத்து கொண்டேனே! நான் இங்கேயே சாக வேண்டும்…

கிமக்நௌ நிபதாம் யத்ய ஆஹோஸ் வித்வங்வாமுகே |
சரீரம் ஆஹோ ஸத்த்வானாம் தத்மி சாகர வாசினாம் || 
किमग्नौ निपताम्यद्य आहोस्विद्वडवामुखे |
शरीरमाहो सत्त्वानां दद्मि सागरवासिनाम् ||
இந்த தீயிலேயே விழுந்து உயிர் விட்டு விடுவோமா? என் உடலை இந்த கடல் எடுத்து கொள்ளட்டுமா?

கதம் ஹி ஜீவிதா சக்யோ மயா த்ரஷ்டும் ஹரீஸ்வர: |
தொள வா புருஷ சார்தூலௌ கார்ய சர்வஸ்வகாதினா ||  
कथं हि जीवता शक्यो मया द्रष्टुं हरीश्वरः |
तौ वा पुरुषशार्दूलौ कार्यसर्वस्वघातिना ||
இப்படி வந்த காரியத்தை நாசம் செய்து விட்டு, இனி, சுக்ரீவ மஹாராஜனையும், அந்த இரு நர ச்ரேஷ்டர்களையும் எந்த முகத்தை வைத்து கொண்டு பார்ப்பேன்? 

மயா கலு ததே வேதம் ரோஷதோஷாத் ப்ரதர்ஷிதம் |
ப்ரதிதம் த்ரிஷு லோகேஷு கபித மனவஸ்திதம் ||
मया खलु तदेवेदं रोषदोषात्प्रदर्शितम् |
प्रथितं त्रिषु लोकेषु कपितमनवस्थितम् ||
கோபம் என்ற கறையால், நான் வானர குணத்தை காண்பித்து விட்டேனே! மூவுலகத்தில் உள்ளவர்களும் வானரர்கள் நிலையில்லா புத்தி கொண்டவர்கள் என்று சொல்வதை இன்று நானும் நிரூபித்து விட்டேனே!!

திகஸ்து ராஜசம் பாவமனீஷ மன வஸ்திதம் |
ஈஸ்வரேநாபி யத் ராகான் மயா சீதா ந ரக்ஷிதா ||
धिगस्तु राजसं भावमनीशमनवस्थितम् |
ईश्वरेणापि यद्रागान्मया सीता न रक्षिता ||
சீ! அவமானம்! எனக்குள் எழுந்த இந்த ராஜஸ குணத்தால், சீதா தேவியை காப்பாற்ற வழி இருந்தும், புத்தி கெட்டு காப்பாற்றாமல் போனேனே!!

வினஷ்டாயாம் து சீதாயாம் தாவுபௌ விநசிஷ்யத: |
தயோர்விநாசே சுக்ரீவ: ச-பந்து:  விநசிஷ்யத: ||
विनष्टायां तु सीतायां तावुभौ विनशिष्यतः |
तयोर्विनाशे सुग्रीवः सबन्धुर्विनशिष्यति ||
சீதாதேவிக்கு ஆபத்து விளைவித்து, ராம லக்ஷ்மணர்களையும் நாசம் செய்து விட்டேன்! ராம லக்ஷ்மணர்கள் தங்கள் உயிரை விட்டு விட்டால், சுக்ரீவ மகாராஜனும் அவருடன் இருக்கும் அனைவரும் தங்களை அழித்து கொள்வார்கள்.




ஏததேவ வச: ஸ்ருத்வா பரதோ ப்ராத்ரு வத்சல: |
தர்மாத்மா ஸஹ சத்ருக்ன: கதம் சக்ஷ்யதி ஜீவிதும் ||
एतदेव वचः श्रुत्वा भरतो भ्रातृवत्सलः |
धर्मात्मा सहशत्रुघ्नः कथं शक्ष्यति जीवितुम् ||
சகோதர்கள் மடிந்ததை கேட்டால், பரதனும், சத்ருக்னனும் எப்படி உயிர் வாழ்வார்கள்?

இக்ஷ்வாகு வம்சே தர்மிஷ்டே கதே நாசம் அஸம்சயம் |
பவிஷ்யந்தி ப்ரஜா: சர்வா: சோக சந்தாப பீடிதா: ||
इक्ष्वाकुवंशे धर्मिष्ठे गते नाशमसंशयम् |
भविष्यन्ति प्रजाः सर्वाः शोकसन्तापपीडिताः ||
என் காரியத்தால், இக்ஷ்வாகு குலமே சோகத்தால் அழிய போகிறது. 

ததஹம் பாக்ய ரஹிதோ லுப்த தர்மார்த சங்க்ரஹ: |
ரோஷ தோஷ பரீதாத்மா வ்யக்தம் லோக விநாசன: ||
तदहं भाग्यरहितो लुप्तधर्मार्थसङ्ग्रहः |
रोषदोषपरीतात्मा व्यक्तं लोकविनाशनः ||
என்ன ஒரு துர்பாக்கியம்!! என்னிடம் படிந்த இந்த கோபம் என்ற கறையால், நல்லதையும், நல்லவர்களையும் இழக்க போகிறேன். என் கோபத்தால், பலர் அழிய போகிறார்கள்."
இதி சிந்தயதஸ் தஸ்ய நிமித்தான் யுபபேதிரே |
பூரம் அப்யு பலப்தானி சாஷாத் புனரசிந்தயத் ||
इति चिन्तयतस्तस्य निमित्तान्युपपेदिरे |
पूरमप्युपलब्धानि साक्षात्पुनरचिन्तयत् ||
இப்படி ஹனுமான் ஒடிந்து போய், சிந்தித்து கொண்டு இருக்க, மனதில் எதேச்சையாக 'சுப சகுனம்' தோன்றியது. 
"சோகத்தை அடைபவன், மேலும் மேலும் சோகத்தை மனதில் வளர்த்து கொண்டால், அது அவனை தற்கொலை வரை கொண்டு சென்று விடும்.
சோகத்தை ஒழிக்க ஒரே வழி மனதை உற்சாகப்படுத்துவதே!" என்று நினைத்து கொண்ட, ஹனுமான், மேலும் சிந்திக்கலானார்.  

அத வா சாரு சர்வாங்கீ ரக்ஷிதா ஸ்வேன தேஜஸா |
ந நிஷிஷ்யதி கல்யாணி ந அக்னிரக்னௌ ப்ரவர்ததே ||
अथ वा चारुसर्वाङ्गी रक्षिता स्वेन तेजसा |
न नशिष्यति कल्याणी नाग्निरग्नौ प्रवर्तते ||
"சீதா தேவி தன் கற்பு என்ற அக்னியுடன் இருப்பதால், நாம் தீயிட்ட இந்த அக்னியில் ஒன்றும் ஆகி இருக்க மாட்டாள். ஒரு அக்னி இன்னொரு அக்னியை கொளுத்த முடியுமா?

ந ஹி தர்மான் மனஸ்தஸ்ய பார்யாம் அமிததேஜச: |
ஸ்வசாரித்ர அபிகுப்தாம் தாம் ஸ்ப்ரஷ்டும் அர்ஹதி பாவக: ||
न हि धर्मान्मनस्तस्य भार्याममिततेजसः |
स्वचारित्राभिगुप्तां तां स्प्रष्टुमर्हति पावकः ||
இந்த அக்னி நிச்சயம் சீதாதேவியை கொளுத்தி இருக்காது. அவள் தன் நடத்தையாலேயே நன்கு பாதுகாக்கப்பட்டு இருப்பாள். எல்லையற்ற ஒளியான ராமபிரானின் பெண்மணி அவள்

நூனம் ராம ப்ரபாவேன வைதேஹ்யா: சுக்ருதேன ச |
யன்மாம் தஹன கர்மாயம் நாதஹத்தவ்ய வாஹன: ||
नूनं रामप्रभावेन वैदेह्याः सुकृतेन च |
यन्मां दहनकर्मायं नादहद्धव्यवाहनः ||
சீதாதேவியின் கற்பின் பலத்தாலும், ராமபிரானின் ப்ரபாவத்தாலும் தான் இந்த அக்னி என்னை சூடாமல் இருந்ததுஎன்று உணர்கிறேன்.

த்ரயானாம் பரதாதீனாம் ப்ராத்ருனாம் தேவதா ச யா |
ராமஸ்ய ச மன: காந்தா சா கதம் வினசிஷ்யதி ||
त्रयाणां भरतादीनां भ्रातॄणां देवता च या |
रामस्य च मनःकान्ता सा कथं विनशिष्यति ||
அருமையான பரதன் போன்ற மூன்று சகோதரர்கள் இருக்க, ராமபிரானுடைய மனதை கவர்ந்தவளாக இருக்கும் சீதா தேவி எப்படி இந்த தீயில் அழிந்து இருக்க முடியும்?

யத்வா தஹன கர்மாயம் ஸர்வத்ர ப்ரபுரவ்யய: |
ந மே தஹதி லாங்கூலம் கதம் ஆர்யாம் ப்ரதக்ஷ்யதி ||
यद्वा दहनकर्मायं सर्वत्र प्रभुरव्ययः |
न मे दहति लाङ्गूलं कथमार्यां प्रधक्ष्यति ||
அனைத்தையும் கொளுத்தி சாம்பலாக்கும் குணம் கொண்ட அக்னி என்னையே அழிக்காத போது, சீதா தேவியை எப்படி அழித்து இருக்க முடியும்?" என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்.

புன: ச சிந்தயத் தத்ர ஹனுமான் விஸ்மித: ததா |
ஹிரண்ய நாபஸ்ய கிரே: ஜல மத்யே ப்ரதர்சனம் ||
पुन: च चिन्तयत्तत्र हनुमान् विस्मित: तदा |
हिरण्य नाभस्य गिरे: जल मध्ये प्रदर्शनं ||
ஹனுமான் கடலை கடந்து கொண்டிருக்கும் போது, தான் இளைப்பாற இடம் கொடுக்க, ப்ரம்ம தேவனால் அனுப்பப்பட்ட மைனாக மலை கடலிலிருந்து வெளிவந்த ஆச்சர்யத்தை நினைத்து பார்த்தார்.

தபஸா சத்ய வாக்யேன அனன்யத் வாச்ச பர்தரி |
அபி சா நிர்தஹேதக்னி ந தாமாக்னி: ப்ரதக்ஷ்யதி ||
तपसा सत्यवाक्येन अनन्यत्वाच्च भर्तरि |
अपि सा निर्दहेदग्निं न तामग्निः प्रधक्ष्यति ||
சீதாதேவியின் தபசும், சத்தியமும், பதிவ்ரதா தன்மையுமே அக்னியை பொசுக்கி இருக்கும். அக்னி சீதையை பொசுக்கி இருக்காது."

ச ததா சிந்தயம் தத்ர தேவ்யா தர்மபரிக்ரஹம் |
சுஸ்ராவ ஹனுமான் வாக்யம் சாரனானாம் மஹாத்மனாம் ||
स तथा चिन्तयंस्तत्र देव्या धर्मपरिग्रहम् |
शुश्राव हनुमान्वाक्यं चारणानां महात्मनाम् ||
இப்படி ஹனுமான் தனக்குள் ஏற்பட்ட சோகத்தை நம்பிக்கை வார்த்தைகளால் மாற்றி கொண்டு இருக்க, அப்போது வானத்திலிருந்து தேவர்கள் பேசுவது கேட்டது.

அஹோ கலு க்ருதம் கர்ம துர்விஷஹ்யம் ஹனுமதா |
அக்னிம் விஸ்ருஜதாபீக்ஷ்னம் பீமம் ராக்ஷஸ சத்மணி ||
अहो खलु कृतं कर्म दुर्विषह्यं हनूमता |
अग्निं विसृजताभीक्ष्णं भीमं राक्षससद्मनि ||
"ஹனுமான் ராவணனின் பவனத்தை கொளுத்தி அபாரமான காரியம் செய்து விட்டார். 

ப்ரபலாயித ரக்ஷ: ஸ்த்ரீ பால வ்ருத்த சமா குலா |
ஜனகோ லோஹ லாத்மாதா க்ரந்தன்தீவாத்ரி கந்தரே || 
प्रपलायित रक्ष: स्त्री बाल वृद्ध समा कुला |
जनको लोह लाध्माता क्रन्दन्तीवाद्रिकन्दरे || 
ராக்ஷஸ பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் அனைவரும் தப்பித்து விட்டனர். இவர்கள் அனைவரும் மலை உச்சியில் பேசி கொண்டிருப்பது கேட்கிறது.




தக்தேயம் நகரீ லங்கா சாட்டப்ராகார தோரனா |
ஜானகீ ந ச தக்தேதி விஸ்மயோ அத்புத ஏவ ந: ||
दग्धेयं नगरी लङ्का साट्टप्राकारतोरणा |
जानकी न च दग्धेति विस्मयोऽद्भुत एव नः ||
இலங்கையின் மதில் சுவர்கள், நுழைவாயில் அனைத்தும் எரிந்து போனாலும், ராவணனின் மாளிகை அழிந்தும், அதற்கு உட்பட்ட அசோக வனம் பாதிப்பு அடையவில்லை. சீதா தேவி அக்னியால் பொசுக்கப்படவில்லை. இது பெரும் ஆச்சரியம்…

ச நிமித்தை: ச த்ருஷ்டார்தை: காரணை: ச மஹாகுணை: |
ருஷி வாக்யை: ச ஹனுமான் பவத் ப்ரீத மானஸ: ||
स निमित्तैश्च दृष्टार्थैः कारणैश्च महागुणैः |
ऋषिवाक्यैश्च हनुमानभवत्प्रीतमानसः ||
இதை கேட்ட ஹனுமான் உற்சாகம் அடைந்தார். தான் உணர்ந்த நல்ல சகுனத்தையும், தனக்குள் ஏற்பட்ட நல் எண்ணங்களையும், இப்பொழுது கேட்ட தேவ வாக்கினையும் நினைத்து, ஹனுமான் ஆனந்தம் அடைந்தார்.

தத: கபி: ப்ராப்த மனோரதார்தஸ்
தாமக்ஷதாம் ராஜசுதாம் விதித்வா |
ப்ரத்யக்ஷதஸ்தாம் புனரேவ த்ருஷ்ட்வா
ப்ரதி ப்ரயானாய மதிம் சகார ||
ततः कपिः प्राप्तमनोरथार्थस्
तामक्षतां राजसुतां विदित्वा |
प्रत्यक्षतस्तां पुनरेव दृष्ट्वा
प्रतिप्रयाणाय मतिं चकार ||
'சீதா தேவிக்கு ஒன்றும் ஆகவில்லை' என்று நம்பிக்கை பிறந்த பின், ஒரு முறை சீதா தேவியை பார்த்து விட்டு, கிளம்பி செல்லலாம் என்று முடிவு செய்து மீண்டும் அசோகவனம் சென்று சீதா தேவியை தரிசித்தார்.