Followers

Search Here...

Showing posts with label வேதம். Show all posts
Showing posts with label வேதம். Show all posts

Wednesday 8 September 2021

வேதம் என்றால் என்ன? ரிக் யஜுர் ஸாம அதர்வண வேதம் எப்படி பிரிகிறது? சம்ஹிதை என்றால் என்ன?

வேதம் :

வேதம் என்றால் "அறிவு (ஞானம்)" என்று பொருள்.

யாருடைய அறிவு?

பரமாத்மாவின் அறிவு.


பரமாத்மாவின் அறிவால் (வேதம்) தான், 

  • பிரம்மா படைக்கப்பட்டார்,
  • நாம் படைக்கப்பட்டோம்,
  • உலகம் படைக்கப்பட்டது, 
  • அவரவர்களுக்கு தர்மங்கள் (rules) படைக்கப்பட்டது.

வேதத்தை மதிக்காதவன், பரமாத்மாவின் அறிவை (ஞானத்தை) அவமதிக்கிறான்.

வேதத்தை மதிக்காதவன், பரமாத்மாவின் அறிவை (ஞானத்தை) கொண்டு படைக்கப்பட்ட தன்னையே அவமதித்து கொள்கிறான்




பரமாத்மா ஏன் நம்மை படைத்தார்? 

பரமாத்மா ஏன் உலகை படைத்தார்?

போன்ற கேள்விகளுக்கு பரமாத்மா என்ன நினைக்கிறார் என்று அறியும் போது, பதில் கிடைத்து விடும்.

வேதம் அவருடைய இதயத்திலிருந்து வெளிப்பட்டது என்பதால், பரமாத்மாவின் எண்ணத்தை, வேதம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அந்த வேதம் ஆகாசத்தில் சப்த ரூபமாகவே உள்ளது.

ஆதலால், வேதத்துக்கு "சப்த ப்ரம்மம்" என்றும் பெயர் உண்டு.

பரமாத்மாவின் இந்த ஞானம் (வேதம்) நான்கு கிளையாக (சாகை) பிரிந்து உள்ளது.

  • * ரிக் சாகை
  • * யஜூ சாகை
  • * ஸாம சாகை
  • * அதர்வண சாகை.

அபிவாதயே சொல்லி, தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் போது, 'தான் எந்த சாகையை படிப்பவன்?' என்று சொல்லி பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்கின்றனர். 


யஜு வேதம் படிப்பவர்கள், 'யஜு சாகா அத்யாயீ'  என்று சொல்லி நமஸ்கரிக்கிறான்.


இந்த 4 சாகைகள், இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது.

  1. சம்ஹிதை (தெய்வங்களை அழைக்கும் மந்திரங்கள் மட்டும்)
  2. ப்ராஹ்மணம் (மந்திரங்களின் விளக்கத்தை உபநிஷத் மூலம் சொல்கிறது)

வேதம் நான்கு கிளையாக (சாகை) பிரிந்து இருப்பதால், 'ரிக், யஜு, ஸாம, அதர்வண சாகைகள்' என்று சொல்கிறோம்.

நான்கும் "வேதம் தான்" என்ற ரீதியில் பார்க்கும் போது, அதனதன் கிளையாக இருக்கும் ப்ராஹ்மண பாகத்தையும் "சாகை" என்று சொல்வதுண்டு.

ரிக் சாகை:

* சம்ஹிதைகள்: (மந்திரங்கள்)

  1. பாஷ்கல சம்ஹிதை
  2. சாகல சம்ஹிதை
  3. கௌஷீதகீ சம்ஹிதை

     சம்ஹிதைக்குள் ஸூக்தங்கள் பல உள்ளன. 

     மொத்தம் 1028 ஸூக்தங்கள் உள்ளது.

      உதாரணத்திற்கு, 

      வாலகில்ய ரிஷியின் 11 சூக்தங்கள் நமக்கு கிடைக்கின்றன. இது போன்ற பல ரிஷிகளின் சேர்த்து , மொத்தம் 1028 ஸூக்தங்கள் உள்ளன.

      1028 ஸூக்தங்களை, 10 மண்டலமாக அல்லது 8 அஷ்டகங்களாக பிரித்து கொண்டு படிக்கின்றனர்.

       1028 ஸூக்தங்களில், மொத்தம் 10,552 ரிக் அல்லது வேத மந்திரங்கள் உள்ளன.

       10 மண்டலத்தில் உள்ள விஷயங்கள்:

       மண்டலம் 1 :

        இதில் 191 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. ஜேதா (மதுசந்தஸின் பிள்ளை)
  2. மேதாதிதி (கண்வரின் பிள்ளை)
  3. சுனசேபர் (அஜீகர்தரின் பிள்ளை)
  4. தேவராதர் (விச்வாமித்ரரின் பிள்ளை)
  5. பராசரர் (சக்தியின் பிள்ளை)
  6. கௌதமர் (ரஹுகணரின் பிள்ளை)
  7. குத்ஸர் (அங்கிரஸரின் பிள்ளை)
  8. கச்யபர் (மரீசியின் பிள்ளை)
  9. கக்ஷீவான்
  10. அகஸ்தியர்
  11. அம்பரீஷ்ர் 

         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. விச்வே தேவர்கள்
  3. இந்திரன்
  4. வாயு
  5. வருணன்
  6. அஸ்வினி தேவர்கள்
  7. சரஸ்வதி
  8. சப்த மருத்துக்கள்
  9. வனஸ்பதி
  10. பூஷா
  11. பகன்
  12. ஆதித்யன்
  13. ப்ரம்ஹணஸ்பதி
  14. ஸோமன்
  15. ரிபுக்கள்
  16. ஸவிதா
  17. விஷ்ணு
  18. ருத்ரன்
  19. ஸாத்யர்கள்
  20. உஷா
  21. ராத்ரி
  22. நதிகள்

         இந்த ஸூக்தங்களில்,

  • கர்பம் கலையாமல், சுக பிரசவம் ஆகும் மந்திரம் உள்ளது.
  • ரோகம், விஷம் போன்ற உபாதைகள் நீக்கும் ஸூக்தங்கள் உள்ளன.
  • சிற்சில இடங்களில், தேவதைகளின் ரூபம், ஆயுதம், குணம், வாஹனம் சொல்லப்படுகிறது.
  • உரல், உலக்கை பற்றி கூட ஒரு பாடல் உள்ளது.
  • புரூரவஸ், மது, துர்வஸூ, த்ருஹ்யு போன்ற அரசர்களை பற்றி குறிப்பு உள்ளது.
  • அஸ்வினி தேவர்கள் ததீசிக்கு அருள் செய்தது பற்றி குறிப்பு உள்ளது.
  • மருத்துக்களை இந்திரன் பேதித்த கதை உள்ளது.
  • லோபமுத்ரா கதை உள்ளது.
  • அகஸ்தியர், வாதாபி என்ற ராக்ஷஸன் கதை உள்ளது.
  • இந்திரன் வ்ருத்ராசுரனை வதம் செய்த ஆதாரம் உள்ளது.
  • த்ரிவிக்ரம அவதாரம் பற்றிய குறிப்பு உள்ளது.

       மண்டலம் 2 :

        இதில் 43 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. க்ருத்ஸமதர்
  2. கூர்மர் (க்ருத்ஸமதரின் பிள்ளை)
  3. பார்கவரான சௌனகர்

         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. இந்திரன்
  3. ராகா
  4. ஸினீவாலீ
  5. அதிதி

         இந்த ஸூக்தங்களில்,

  • இந்திரன் விஸ்வரூபனை தேவ புரோஹிதராக வரித்த கதை உள்ளது.
  • இந்திரன் பர்வதங்களின் சிறகை வெட்டிய கதை இங்கு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.
  • துக்கத்தை நீக்கும் மந்திரம் உள்ளது.

       மண்டலம் 3 :

        இதில் 62 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. விசுவாமித்திரர்
  2.  விசுவாமித்திரர் கோத்திரத்தில் வந்த பல ரிஷிகள்

         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. இந்திரன்

         இந்த ஸூக்தங்களில்,

  • சிந்து, சரஸ்வதி நதிகளின் பெருமை உள்ளது.
  • இந்திரன் வ்ருத்ராசுரனை வதம் செய்த சரித்திரம் உள்ளது.
  • விஷ்ணுவின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.
  • வேத மாதாவான, பிரசித்தமான காயத்ரீ பற்றி குறிப்பு உள்ளது.
  • பாரத தேச மக்களை பற்றி குறிப்பு உள்ளது.

      மண்டலம் 4 :

        இதில் 58 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. வாமதேவர் (கௌதமரின் பிள்ளை)
  2. த்ரஸத்தஸ்யு (புருகுத்ஸரின் பிள்ளை)
  3. புருமீடர் (ஸஹோத்ரரின் பிள்ளை)
  4. அஜமீடர் என்ற ராஜரிஷி


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. இந்திரன்
  3. அதிதி

         இந்த ஸூக்தங்களில்,

  • த்ரஸத்தஸ்யு, பௌர-குத்ஸரின் சரித்திரம் உள்ளது.
  • இந்திரன் விஷ்ணுவின் அருளால், வ்ருத்ராசுரனை வதம் செய்த சரித்திரம் உள்ளது.
  • தெய்வங்களை பற்றி கதைகள் கேட்பது, உண்மை பேசுதலின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.
  • உழவர்களின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
  • கலப்பைக்கு தேவதையாக இருக்கும் சீதாதேவியின் பெருமை பற்றி குறிப்பு உள்ளது.
  • பசுக்களின் பெருமை உள்ளது.
  • நெய்யை (க்ருத ஸூக்தம்) பற்றிய பாடல்கள் உள்ளது

      மண்டலம் 5 :

        இதில் 87 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. ஆத்ரேய
  2. ஆத்ரேய கோத்திரத்தில் வந்த ரிஷிகள்


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. இந்திரன்
  3. ஸூரியன்

         இந்த ஸூக்தங்களில்,

  • ஸ்வர்பானு என்ற அசுரனின் கதை உள்ளது.
  • ஆசிர்வதிக்கும் (ஸ்வஸ்திவாசன) ஸூக்தம் உள்ளது.
  • யமுனை நதியின் பெருமையும், அங்குள்ள ராதஸ் என்ற ஸ்ரீயை பற்றியும், அங்கு கிடைக்கும் பசும்பால், வெண்ணெய், நெய் பற்றியும் சொல்லப்பட்டு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.

      மண்டலம் 6 :

        இதில் 75 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. பாரத்வாஜர்
  2. பாரத்வாஜ கோத்திரத்தில் வந்த ரிஷிகள்


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. இந்திரன்
  3. விஷ்ணு

         இந்த ஸூக்தங்களில்,

  • ததீசியின் கதை உள்ளது.
  • கோ (பசு) ஸூக்தம் உள்ளது.
  • வில்லின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.

      மண்டலம் 7 :

        இதில் 104 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. வஸிஷ்டர்
  2. வஸிஷ்ட கோத்திரத்தில் வந்த ரிஷிகள்


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. அக்னி
  2. இந்திரன்
  3. விஷ்ணு
  4. ருத்ரன்

         இந்த ஸூக்தங்களில்,

  • மழையை தரும் பர்ஜன்யன் என்ற தேவதையின் பாடல் உள்ளது.
  • பராசரின் கதை உள்ளது.
  • வஸிஷ்டர் அவதாரம் சொல்லப்பட்டு உள்ளது. அவருடைய புத்ரர்களின் கதையும் உள்ளது.
  • நமுசி என்ற அசுரனின் கதை உள்ளது.
  • புரு, புரு-குத்ஸன், த்ரஸத்தஸ்யு போன்ற அரசர்களின் கதை உள்ளது.
  • ஸ்யவனரின் கதை உள்ளது.
  • சாந்தி சூக்தம் இங்கு உள்ளது.
  • பாக்ய சூக்தம் இங்கு உள்ளது.
  • அனைவரையும் தூங்க செய்யும் மந்திரம் இங்கு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது.

      மண்டலம் 8 :

        இதில் 103 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. கண்வர்
  2. கண்வ கோத்திரத்தில் வந்த ரிஷிகள்
  3. வைவஸ்வத மனு
  4. விரூப ஆங்கிரசர்
  5. ஜமதக்னி (ப்ருகுவின் பிள்ளை)


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. இந்திரன்
  2. விஷ்ணு

         இந்த ஸூக்தங்களில்,

  • ப்ருதுவின் (வேனனின் பிள்ளை) கதை உள்ளது.
  • இந்திரன் நுரையால், நமுசியின் தலையை வெட்டி எறிந்து கதை உள்ளது.
  • த்ரஸத்தஸ்யுயின் (புரு-குத்ஸரின் பிள்ளை) கதை உள்ளது.
  • ஸிந்து அஸிக்னி என்னும் நதிகளின் பெருமை உள்ளது.
  • 7 ஸிந்துக்களின் குறிப்பு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது

      மண்டலம் 9 :

        இதில் 114 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை, 'பவமான ஸூக்தங்கள்"  என்று சொல்கிறோம்.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. ஆங்கிரஸர்
  2. ஆங்கிரஸ கோத்திரத்தில் வந்த ஆயாஸ்யர்
  3. ஆங்கிரஸ கோத்திரத்தில் வந்த உசத்யர்
  4. ஆங்கிரஸ கோத்திரத்தில் வந்த ஆவத்-ஸாரர்
  5. ஆங்கிரஸ கோத்திரத்தில் வந்த நித்ருவர்


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் ஒரே தெய்வம்: 

  1. ஸோமன்

         இந்த ஸூக்தங்களில்,

  • ஸோம பானத்தின் பெருமை சொல்லப்பட்டு உள்ளது.
  • ஸோம தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது

      மண்டலம் 10 :

        இதில் 191 ஸூக்தங்கள் உள்ளன.

        இந்த ஸூக்தங்களை கண்டுபிடித்து கொடுத்த ரிஷிகளின் பெயர்கள்:

  1. த்ரிதர்
  2. த்ரி-சிரஸூ (த்வஷ்டாவின் பிள்ளை)
  3. சங்கர் (யாமயான கோத்திரத்தை சேர்ந்தவர்)
  4. வஸூகர் (இந்திரனின் பிள்ளை)
  5. வஸூகரின் மனைவி
  6. கோஷா (கக்ஷீவானின் மகள்)
  7. சர்யாதி
  8. புரூரவஸ்
  9. ஊர்வசி
  10. ஸரமா என்ற பெண் நாய் (இந்திரனுக்கு சேவை செய்பவள்)
  11. பரசுராமர் (ஜமதக்னியின் பிள்ளை)
  12. வாகம் ப்ரூணி என்ற தேவீ
  13. ப்ருது (வேனனின் பிள்ளை)


         இந்த ஸூக்தங்கள் கொண்டாடும் தெய்வங்கள்:

  1. இந்திரன்
  2. விஷ்ணு
  3. அக்னி

         இந்த ஸூக்தங்களில்,

  • ஸ்ரீ ராம அவதாரத்தின் குறிப்பு (அக்னி ஸூக்தத்தில்) உள்ளது.
  • ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் குறிப்பு (கர்ம ஸூக்தத்தில்) உள்ளது.
  • விவாஹ (கல்யாண) மந்திரங்கள் இங்கு உள்ளது.
  • பித்ரு மேத மந்திரங்கள் இங்கு உள்ளது.
  • த்ரஸத்தஸ்யு (புரு-குத்ஸரின் பிள்ளை), நஹுக்ஷன், யயாதி, யது, துர்வஸூ, இக்ஷ்வாகு, சந்தனு போன்ற அரசர்களின் புகழ் பாடப்பட்டு உள்ளது.
  • கங்கா, யமுனா, சரஸ்வதி, ஸரயு என்னும் நதிகளின் பெருமை உள்ளது.
  • வைகுண்டன் என்ற ஒரு இந்திரன் பாடிய ஸூக்தம் உள்ளது.
  • விஷ்ணுவே பரமாத்மா, அவரே புருஷன் என்று ப்ரம்மம் யார் என்பதை நிரூபிக்கும் 'புருஷ ஸூக்தம்" இங்கு உள்ளது.
  • நாஸதீய-ஸூக்தம் இங்கு உள்ளது.
  • ஹிரண்யகர்ப-ஸூக்தம் இங்கு உள்ளது.
  • விஸ்வகர்ம-ஸூக்தம் இங்கு உள்ளது.
  • வாக்தேவி (அம்ப்ரூணரின் பெண்) பரமாத்மாவின் பெருமையை பாடும் சூக்தம் இங்கு உள்ளது.
  • புரூரவ-சக்கரவர்த்தியும் ஊர்வசியும் பேசிக்கொண்ட 2 அழகான ஸூக்தங்கள் இங்கு உள்ளது.
  • மழைக்கு வேண்டிய மந்திரங்கள் இங்கு உள்ளது.
  • யக்ஷ்ம  ரோகம் நீங்க மந்திரம் இங்கு உள்ளது.
  • புரி ஜகந் நாத மூர்த்தி ஆவிர்பாவத்திற்கு ஆதாரம் இங்கு உள்ளது.
  • தேவதைகளின் புகழ் சொல்லப்படுகிறது

* ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

  1.  ஐதரேய ப்ராஹ்மணம்


சுக்ல (அயாதயாம) யஜுர் சாகை:

எந்த ரிஷி, எந்த தேவதையை, எந்த சந்தஸில் வழிபட்டார் என்று தெளிவாக இருப்பதால், இந்த யஜு சாகைக்கு "சுக்ல யஜு" என்று பெயர்.

* சம்ஹிதைகள்: (மந்திரங்கள்)

  1.  காண்வ சாகை சம்ஹிதை
  2.  மாத்யந்தின சாகை சம்ஹிதை

      சம்ஹிதைகளை, 40 அத்யாயமாக பிரித்து கொண்டு படிக்கின்ற்னர்.

* ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

  1.  சதபத ப்ராஹ்மணம்





கிருஷ்ண (தைத்தரீய) யஜுர் சாகை:

எந்த ரிஷி, எந்த தேவதையை, எந்த சந்தஸில் வழிபட்டார் என்று தெளிவாக இல்லாததால், இந்த யஜு சாகைக்கு "கிருஷ்ண யஜு" என்று பெயர்

* சம்ஹிதை: (மந்திரங்கள்)

  1.  தைத்தரீய சம்ஹிதை

      சம்ஹிதையில்,

             * 44 ப்ரச்னங்களும்

             * 651 அனுவாகங்களும்

             * 2198 பஞ்சாதிகளும் உள்ளன.

      படிப்பதற்காக, 2 முறையில் பாடம் அமைத்து உள்ளனர்.

  • ஸாரஸ்வத பாடம்
  • இந்த பாடமுறையை 7 காண்டமாக பிரித்து உள்ளனர்.
    • காண்டம் 1
      • வாமன அவதாரம் சொல்லப்பட்டுள்ளது
      • ஊர்வசி புரூரவ சம்பாஷணை சொல்லப்பட்டுள்ளது
      • ரக்ஷோக்ன மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளது
      • விஷ்ணு மஹிமை சொல்லப்பட்டுள்ளது
      • மாதம், ருதுக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
    • காண்டம் 2
      • ஸுவர்பானு என்ற அசுரன் கதை சொல்லப்பட்டுள்ளது
      • ஸ்வாயம்பு மனு பெருமை சொல்லப்பட்டுள்ளது
      • இந்திரன், விஷ்ணு, அஸ்வினி குமாரர்கள் பெருமை சொல்லப்பட்டுள்ளது
      • வ்ருத்ர உபாக்யானம் சொல்லப்பட்டுள்ளது
      • விஸ்வரூபர் கதை சொல்லப்பட்டுள்ளது
      • ரஜஸ்வலா நியமம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • வாக்குக்கும் மனசுக்கும் ஏற்பட்ட போட்டி பற்றி சொல்லப்பட்டுள்ளது
    • காண்டம் 3
      • விச்வாமித்ரருக்கும், வஸிஷ்டருக்கும் ஏற்பட்ட அஸூயை சொல்லப்பட்டுள்ளது
      • நாபாநேதிஷ்டன் கதை சொல்லப்பட்டுள்ளது
    • காண்டம் 4
      • ஹிரண்ய ஸூக்தம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • நக்ஷத்ர தேவதைகள் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • கருத்மானின் மகிமை சொல்லப்பட்டுள்ளது
      • மாதங்கள், ருதுக்கள் பற்றி  சொல்லப்பட்டுள்ளது
      • ஸ்ரீருத்ரம், சமகம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • விஸ்வகர்மா ஸூக்தம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • காண்டம் 5
      • சுனஸ்சேபன் கதை இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • தேவதைகள் விதிக்கப்பட்ட பசுக்கள் இவை இவை என்று இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • காண்டம் 6
      • கத்ருவிற்கும் சுபர்ணாவிற்கும் நடந்த போட்டி இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • ருத்ரன் பசுபதியானது பற்றி  இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • விஷ்ணுவின் வராஹ அவதாரம்  இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • இந்திர வ்ருத்ர யுத்தம்  இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • காண்டம் 7
      • வராஹ அவதாரம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • கணித வாய்ப்பாடு இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • பங்குனி உத்ரம் பெருமை இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • சித்ரா பௌர்ணமியின் பெருமை இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • ஒரு அழகான ப்ரச்னோத்தரி இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • தேசியகீதம் இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • அஸ்வத்தின் விராட் ரூபமான ஸ்துதி இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • நீதி கதைகளும், இதிகாச புராணங்களும் இங்கு சொல்லப்பட்டுள்ளது
      • பொதுவாகவே, பழைய கால சாரத்தையும், நாகரீக முன்னேற்றத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
      • விஞ்ஞானிகள் பிரமிக்கும் அளவுக்கு அருண-ப்ரஸ்னத்தில் ககோளம் விஷயங்கள் அடங்கி உள்ளது.
  • ஆர்ஷேய பாடம்
    இங்கு ரிஷி, சந்தஸ், தெய்வம் தெரிந்து அத்யயனம் செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளதால், இந்த முறை பாடமே சிறந்தது. இந்த முறையில் படிப்பதை போதாயனர், ஆபஸ்தம்பர், வித்யா-ரண்யர் போன்றோர் ஆதரிக்கின்றனர்.
    போதாயன ரிஷியின், க்ரூஹ்ய ஸூத்ரம், 5 விரதங்களை விதிக்கிறது. இதனாலும் ஆர்ஷேய பாட முறையே சிறந்தது என்று சொல்லப்படுகிறது.
    • ஹோத்ரு வ்ரதம்
    • சுக்ரீய வ்ரதம்
    • உபநிஷத் வ்ரதம்
    • கோதாந வ்ரதம்
    • ஸம்மித வ்ரதம்

    இந்த பாடமுறையை 5 காண்டமாக பிரித்து உள்ளனர்
    • ப்ராஜா பத்யம்
      • புரோடாச விஷயம் சொல்லப்பட்டுள்ளது
      • யஜமான விஷயம் சொல்லப்பட்டுள்ளது
      • ஹோதாக்களின் ஹோத்ரம் சொல்லப்பட்டுள்ளது
      • பித்ருமேதம் சொல்லப்பட்டுள்ளது
    • ஸௌம்யம்
      • அத்வர்யுவின் விஷயம் சொல்லப்பட்டுள்ளது
      • க்ரஹங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • தாக்ஷிணங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • ஸமிஷ்ட யஜுக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • அவப்ருத யஜுக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • வாஜபேயம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • சுக்ரீயம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • ஸவனங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
    • ஆக்யம் or ஆக்னேயம்
      • அக்ன்யாதேயம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • அக்னி ஹோத்ரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • அக்னி உபஸ்தானம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • அக்னி சயனம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • ஸாவித்ரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • நாசிகேதம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • வைச்வ-ஸ்ருஜம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • ஆருணம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
    • வைஸ்வ-தேவம்
      • ராஜ-ஸூயம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • பசுபந்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • இஷ்டிகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • நக்ஷத்ரேஷ்டிகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • திவச்யேந்யபாகா என்ற இஷ்டிகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • ஸாத்ராயணம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • உப-ஹோமங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • அஸ்வமேதம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • புருஷமேதம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • ஸௌத்ராமணி பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • அச்சித்ரங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • பசு-ஹோத்ரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது
      • உபநிஷத்துக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது
    • ஸ்வாயம்புவம்
      • காடகத்தில் பாடப்பட்ட விதியே இங்கும் சொல்லப்பட்டுள்ளது.
        காடகத்தில் உள்ள வேதாந்த விஷயங்கள் முழுக்ஷுக்களுக்கு உபயோகமானது.

    இந்த 5 காண்டத்துக்கு, ப்ரஜாபதி, ஸோமன், அக்னி, விச்வேதேவர்கள், ஸ்வயம்பு என்ற 5 காண்ட ரிஷிகள் உள்ளனர்.


    * ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

    1.  தைத்தரீய ப்ராஹ்மணம்

    ஆரண்யகம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

    ப்ரஹ்ம வித்யை தெரிந்து கொள்ள, கடோ உபநிஷத், தைத்தரீய உபநிஷத்துக்கள் இங்கு உள்ளது.

    காடகம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

    காடகத்தில் உள்ள வேதாந்த விஷயங்கள் முழுக்ஷுக்களுக்கு உபயோகமானது

    ஸாம சாகை:

    வேதங்களில் "ஸாம வேதமாக இருக்கிறேன்" என்று பகவான் சொல்கிறார்.

    * சம்ஹிதைகள்: (மந்திரங்கள்)

      ஸாம வேதத்திற்கு "கானமே" முக்கிய லக்ஷணமாக சொல்லப்பட்டு உள்ளது.

      ஸாம கானத்திற்கு,

      சிலர் 5 லக்ஷணங்கள் சொல்கின்றனர் (ப்ரஸ்தானம், உத்கீதம், ப்ரதிஹாரம், உபத்ரவம், நிதனம்)

      சிலர் 7 விதமான ஸாமகானத்தை (ஆசாஸ்தி, ஸ்துதி ஸாங்க்யானம், ப்ரலாபம், பரிதேவனம், ப்ரைஷம், அன்வேஷணம், ஸ்ருஷ்டி) சொல்கின்றனர்

      சிலர் 10 விதமான லக்ஷணங்கள் சொல்கின்றனர் (காயத்ரம், ரதந்தரம், வாமதேவ்யம், ப்ருஹத்-ஸாமம், வைரூபம், வைராஜம், சக்வரீ, ரேவதீ, யக்ஞாயக்ஞம், ராஜநம்)

      சிலர் 16 விதமான கானத்தை சொல்கின்றனர்.

      • ஹாஉ - இந்த கானம் "இந்த லோகமே தேவதையாக" குறிப்பிடுகிறது.
      • ஹாஇ - இந்த கானம் "வாயு தேவதையை" குறிப்பிடுகிறது
      • அத - இந்த கானம் "சந்திரன் என்ற  தேவதையை" குறிப்பிடுகிறது
      • இஹா - இந்த கானம் "ஆத்மா தேவதையை" குறிப்பிடுகிறது
      • ஈ - இந்த கானம் "அக்னி தேவதையை" குறிப்பிடுகிறது
      • ஒளஹோ அஹோ - இந்த கானம் "விச்வே தேவர்களை" குறிப்பிடுகிறது.
      • ஊ, ரூ, நிஹவா, ர - இந்த நான்கு கானத்திற்கும், "ஆதித்யன் தேவதை" என்று காட்டுகிறது.

    1.  ஜைமினி சாகை சம்ஹிதை
    2.  கௌதம சாகை சம்ஹிதை
    3. கௌதம் சாகையை, 2ஆக பிரிக்கின்றனர். 
      • பூர்வார்சிகம் (3 காண்டங்களாக, 5 அத்தியாயங்களை கொண்டுள்ளது)
        • ஆக்னேய காண்டம் (1)
        • ஐந்தர காண்டம் (3)
        • பாவமான காண்டம் (1)
      • உத்தரார்சிகம் (21 அத்தியாயங்கள் உள்ளது)

           பூர்வார்சிகத்தில் உள்ள 5 அத்தியாயத்தில் 650 ரிக்குகள் (மந்திரங்கள்) கானம் செய்யப்படுகிறது.

           உத்தரார்சிகத்தில் உள்ள 21 அத்தியாயத்தில் 1225 ரிக்குகள் (மந்திரங்கள்) கானம் செய்யப்படுகிறது.

         மொத்தம், 1875 ரிக்குகள் (மந்திரங்கள்) கானம் செய்யப்படுகிறது

         இந்த 1875 ரிக்குகள் (மந்திரங்கள்) கீழே சொல்லப்பட்டுள்ள ரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.

    • வஸிஷ்டர்
    • கச்யபர்
    • வாமதேவர்
    • ஸௌபரி
    • விச்வாமித்ரர்
    • சுனஸ்சேபர்
    • ஸூஜனர்
    • ரஹுகணர்
    • ப்ருகு
    • பரத்வாஜர்
    • அஸிதர்
    • தேவலர்
    • பராசரர்
    • ப்ரதர்தனர்
    • ஸப்த ரிஷிகள்
    • வைகானஸ ரிஷிகள்
    • குத்ஸர்
    • ஆங்கிரஸர்

        இந்த 1875 ரிக்குகள் (மந்திரங்கள்) கீழே சொல்லப்பட்டுள்ள தெய்வங்களின் புகழ் பாடுகின்றன.

    • அக்னி
    • இந்திரன்
    • பூஷா
    • விச்வே தேவர்கள்
    • மருத்துக்கள்
    • ஸோமன்
    • ருத்ரன்
    • விஷ்ணு

        ரிக் வேத மந்திரங்களே இங்கும் பாடப்படுகின்றன. கானத்தால் பேதமே தவிர, விஷயத்தில் பேதம் இல்லை.

    • நமுசியின் சிரசை நுரையால் கொய்தது சொல்லப்படுகிறது
    • வராஹ அவதாரம் 
    • சொல்லப்படுகிறது
    • த்ரிவிக்ரம அவதாரம் 
    • சொல்லப்படுகிறது
    • விஷ்ணு ஸூக்தம் 
    • சொல்லப்படுகிறது
    • புருஷ ஸூக்தம் சொல்லப்படுகிறது.

    * ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

    1.  சந்தோக ப்ராஹ்மணம் / அஷ்ட ப்ராஹ்மணம்

    ஆரண்யகம்: (6வது அத்தியாயம்)

    அதர்வண சாகை:

    * சம்ஹிதை: (மந்திரங்கள்)

    1.  அதர்வ சம்ஹிதை

          சம்ஹிதையை 20 காண்டங்களாக பிரிக்கின்றனர்.

          மொத்தம், 5977 ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன.

          இந்த 5977 ரிக்குகளை கண்டுபிடித்த ரிஷிகளின் பெயர்கள்:

    • அதர்வா
    • ஸிந்து த்வீபர்
    • சாதனர்
    • சந்தாதி
    • ப்ருக்வங்கிரஸ்
    • வஸிஷ்டர்
    • சௌனகர்
    • சுக்ரர்
    • பரத்வாஜர்
    • கபிஞ்ஜலர்
    • கண்வர்
    • விச்வாமித்ரர்
    • உத்தாலகர்
    • ரிபு
    • பாதராயணி
      இந்த 5977 ரிக்குகள் புகழும் தேவதைகளின் பெயர்கள்
    • இந்திரன்
    • அக்னி
    • விஷ்ணு
    • ருத்ரன்
    • ஸோமன்
    • அச்வினி குமாரர்கள்
    • ஸூர்யன்
    • கருத்மான்
    • ப்ரஜாபதி

    20 காண்டங்கள் உள்ளது:

    காண்டம் 1:

    • மேதைத்தனத்தை வளர்க்க கூடிய மந்திரங்கள் இங்கு உள்ளது.
    • ரோகத்தை நீக்க கூடிய மந்திரங்கள் இங்கு உள்ளது.
    • ராக்ஷஸரகளை நாசம் செய்து, வெற்றியை தரக்கூடிய மந்திரங்கள் இங்கு உள்ளது.
    • மழையை மந்திரங்கள் இங்கு உள்ளது.
    • சிறுநீரகம் கெட்டு, மூத்திரம் வெளி வராமல் இருந்தால், சரி செய்யும் மந்திரங்கள் இங்கு உள்ளது.
    • இதயநோய் குணமாக்கும் மந்திரங்கள் இங்கு உள்ளது.
    • வெண் குஷ்டம் குணமாக்கும் மந்திரங்கள் இங்கு உள்ளது
    • காய்ச்சல் குணமாக்கும் மந்திரங்கள் இங்கு உள்ளது
    • ரத்த பெருக்கான வாந்தி பேதி நிற்க குணமாக்கும் மந்திரங்கள் இங்கு உள்ளது
    • யக்ஷ்ம (cancer) நீங்கவும் மந்திரங்கள் இங்கு உள்ளது
    • சுக பிரசவமாக மந்திரங்கள் உள்ளது.
    • நீண்ட ஆயுள் உண்டாக மந்திரங்கள் உள்ளது.
    • உடல் நலத்திற்கு வேண்டிய மந்திரங்கள் உள்ளது.

    காண்டம் 2:

    • பரமகாமத்திற்கு மந்திரங்கள் உள்ளது. 
    • பாப விமோசனத்திற்கு மந்திரங்கள் உள்ளது,
    • பயம் நீங்க மந்திரங்கள் உள்ளது
    • பந்தம் நீங்க மந்திரங்கள் உள்ளது
    • வயலில் பயிர்கள் வளர மந்திரங்கள் உள்ளது
    • கோஷ்டத்தில் பசுக்கள் நன்கு வளர, மந்திரங்கள் உள்ளது
    • காமத்தில் இச்சையுள்ள பெண்களை வசியம் செய்ய மந்திரங்கள் உள்ளது

    காண்டம் 3:

    • எதிரி படைகளை குழம்ப வைக்க மந்திரங்கள் உள்ளது
    • இழந்த இடங்களை மீண்டும் பெற மந்திரங்கள் உள்ளது
    • ராஜ லக்ஷணம் கூறப்பட்டு உள்ளது.
    • மக்களால் அரசன் நியமிக்கப்படுவது பற்றி கூறப்பட்டு உள்ளது.
    • ராஜ்யத்தை நிர்வாகம் செய்வது பற்றி கூறப்பட்டுள்ளது.
    • சாலைகள் நிர்மாணம் செய்வது பற்றி கூறப்பட்டுள்ளது.
    • பசுமடம் பற்றி கூறப்பட்டுள்ளது.
    • க்ருஷி, வணிகம் முதலியவைகளின் அமைப்பு கூறப்பட்டுள்ளது. அதன் முன்னேற்றம் பற்றியும் கூறப்பட்டுள்ளது

    காண்டம் 4:

    • ப்ரஹ்ம வித்யை இங்கு சொல்லப்பட்டுள்ளது.
    • ஆத்ம வித்யை இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • பிறரை தூங்க செய்ய மந்திரம் இங்கு உள்ளது.
    • விஷத்தை நீக்க மந்திரம் இங்கு உள்ளது.
    • சங்க நாதத்தின் பெருமை இங்கு சொல்லப்பட்டுள்ளது.
    • பிசாச சமனம் செய்வது பற்றி சொல்லப்பட்டுள்ளது
    • ராஜ்யாபிஷேகம் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • தாய் பூமியின் (மாத்ரு பூமி/ராஷ்டிர தேவி) ராணுவ சேனையை கவனித்தல் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது.
    • காமதேனுவின் மகிமை இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • மரணத்தை தாண்டுவதை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

    காண்டம் 5:

    • உயிரை காப்பாற்றி கொள்வது பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது
    • உலகிலேயே முதன்மையானவனாய் ஆகும் வழி இங்கு சொல்லப்பட்டுள்ளது.
    • குஷ்டரோகம் நீங்க மந்திரங்கள் உள்ளது.
    • ஸ்ர்பநாசம் செய்ய மந்திரங்கள் உள்ளது.
    • க்ருத்யைக்கு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.
    • மாட்டின் வ்யாதியை நீக்க மந்திரங்கள் உள்ளது.
    • குழந்தை உண்டாக மந்திரங்கள் உள்ளது.
    • புது வீட்டிற்கு குடி போவதற்கான மந்திரங்கள் உள்ளது.
    • ரக்ஷோக்னம் முதலிய விஷயங்களுக்கு மந்திரங்கள் உள்ளது.

    காண்டம் 6:

    • குழந்தை உண்டாக மந்திரங்கள் உள்ளது.
    • கர்பத்தில் வளரும் சிசு ஆண் பிள்ளையாக பிறக்க, பும்ஸ-வனம் மந்திரங்கள் உள்ளது
    • கர்பம் கலையாமல் இருக்க கர்ப-ரக்ஷண மந்திரங்கள் உள்ளது.
    • கண் வியாதிக்கு ஏற்ற சிகிச்சை, மருந்து, மந்திரம் உள்ளது.
    • தலைமுடி வளர தைலம், அதற்கான மந்திரங்கள் உள்ளது.
    • கன்னிகைக்கு பொருத்தமான பதி கிடைக்க மந்திரம் உள்ளது.
    • பையனுக்கு பொருத்தமான பெண் கிடைக்க மந்திரம் உள்ளது.
    • பைத்தியம் தெளிய மந்திரம் உள்ளது.
    • குஷ்ட ரோகம், யக்ஷ்ம ரோகம் நிவர்த்தி செய்ய மந்திரம் உள்ளது.
    • அம்புபட்ட பட்ட இடத்தில் சிகித்ஸை செய்ய மந்திரங்கள் உள்ளது.
    • கடன் அடைவதற்கு மந்திரம் உள்ளது.
    • உணவு கிடைத்து கொண்டே இருக்க மந்திரம் உள்ளது.
    • ஞாபக சக்திக்கு மந்திரங்கள் உள்ளது.
    • அன்பு உண்டாக மந்திரங்கள் உள்ளது.

    காண்டம் 7:

    • கண்டமாலை என்ற ரோகம் நீங்க சிகித்ஸையும், மந்திரமும் உள்ளது.
    • கெட்ட ஸ்வப்னங்கள் நீங்க மந்திரம் உள்ளது.
    • கவசம் அணிவதற்கு மந்திரம் உள்ளது

    காண்டம் 8:

    • ப்ரதிஸர மணியை பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளது.
    • கர்ப தோஷ நிவாரணம் சொல்லப்பட்டுள்ளது.
    • பலவிதமான மூலிகைகள் பற்றிய ரஹஸ்யங்கள் சொல்லப்பட்டுள்ளது.

    காண்டம் 9:

    • மது வித்யை சொல்லப்பட்டுள்ளது
    • சாலை நிர்மானம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
    • அதிதி ஸத்காரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
    • காமத்தின் பெருமை சொல்லப்பட்டுள்ளது.
    • ஆத்ம வித்யை சொல்லப்பட்டுள்ளது.

    காண்டம் 10:

    • க்ருதயா பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.
    • மணி பந்தனம் சொல்லப்பட்டுள்ளது.
    • ஸர்வாதார வர்ணனம் சொல்லப்பட்டுள்ளது.
    • கோமாஹாத்யம் சொல்லப்பட்டுள்ளது.

    காண்டம் 11:

    • ருத்ர ஸூக்தம் இங்கு உள்ளது.
    • அன்னம், ப்ராணன் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
    • ப்ரம்மசர்யம் பெருமை சொல்லப்பட்டுள்ளது.

    காண்டம் 12:

    • பூமியை பற்றி ஒரு பெரிய ஸூக்தம் இங்கு உள்ளது. பூமியின் பெருமை சொல்லப்பட்டுள்ளது.
    • வராஹ அவதாரம், த்ரிவிக்ரம அவதாரம், ப்ருது அவதாரம் சொல்லப்பட்டுள்ளது.

    காண்டம் 13:

    • முற்றிலும் உபநிஷத்து போல, வேதாந்த விஷயங்களே இங்கு உள்ளது

    காண்டம் 14:

    • விவாஹ மந்திரங்கள் யாவும் இங்கு கிடைக்கிறது

    காண்டம் 15:

    • இதிலும் உபநிஷத்து போல, வேதாந்த விஷயங்களே இங்கு உள்ளது.
    • இங்கு 'வ்ராத் ஸூக்தத்தில்'  பரமாத்மாவை 'வ்ராத்யன்' என்ற பதத்தினால் அழைக்கிறது. வ்ரதத்தினால் அடையப்படுபவன் என்பதால் பரமாத்மாவுக்கு இந்த பெயர் கொடுத்து அழைக்கிறது.

    காண்டம் 16:

    • கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க மந்திரம் இங்கு உள்ளது.
    • துக்கத்திற்கு விமோசன மந்திரம் உள்ளது.
    • கெட்டவர்களை நாசம் செய்ய, மந்திரங்கள் உள்ளது.

    காண்டம் 17:

    • அப்யுதம் (மங்களம்) உண்டாக பிரார்த்தனைகள் இங்கு உள்ளது

    காண்டம் 18:

இறந்த பிறகு ஒருவருக்கு செய்ய வேண்டிய கர்ம காரிய மந்திரங்கள் இங்கு உள்ளது.

    காண்டம் 19:

    • புருஷ ஸூக்தம் உள்ளது
    • நக்ஷத்திரங்களை பற்றிய ஸூக்தம் இங்கு உள்ளது.
    • சாந்தி கோஷம், தர்ப மணி, ஔதும்பர மணி, சதவார மணி போன்ற மணிபந்தங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளது.
    • ராத்ரி தேவதை, காலம், வேதமாதா, பரமாத்மாவை பற்றிய விஷயங்களை பேசுகிறது

    காண்டம் 20:

    • இந்திரனின் பெருமையை பற்றிய சூக்தங்களே இங்கு உள்ளது

    * ப்ராஹ்மணம்: (உபநிஷத்து மூலம் விளக்கம்)

    1. அதர்வ ப்ராஹ்மணம்


    இங்கு சொல்லப்பட்ட சம்ஹிதைகள் இன்று இருக்கிறது. 

    1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், இது போல பல சம்ஹிதைகள் காப்பாற்றி வந்த ப்ராம்மணர்கள் கொல்லப்பட்டு, அழிந்து விட்டது. 

    ஸாம வேதத்தில் 100க்கும் மேல் சம்ஹிதைகள் இருந்தன. அதில் இன்று இரண்டே இரண்டு மட்டும் தான் உள்ளது.


    அதிலும் ஜைமினி சாகை என்ற சம்ஹிதை காற்றுள்ள வேதியர்கள் மிகவும் குறைவே. 

    இந்த சந்ததியினர் காப்பாற்றப்படாமல் இருந்தால், இந்த சம்ஹிதையும் மறைந்து போய் விடும்.

    சம்ஹிதைகள் (மந்திரங்கள்) அத்யயனம் செய்து முடித்தாலேயே, அந்த வேதத்தை படித்ததாக ஆகும்.

    மேலும்,

    ப்ராஹ்மண பாகத்தில் உள்ள உபநிஷத்துக்களை தெரிந்து கொண்டால், வேத மந்திரங்களின் அர்த்தமும் (வேதாந்தம்) விளங்கும்.

    ரிக் வேத சம்ஹிதை (மந்திர பாகம்) முழுவதையும், 45 மணி நேரம் தொடர்ந்து எதையும் பார்க்காமல், உச்சரிப்பு பிசகாமல் சொல்லும் வேத ப்ராம்மணர்கள் இன்றும் உள்ளனர்.

    இதற்கு இவர்கள் தங்கள் பால்ய வயதான 7 முதல் 16 வயது வரை கடுமையான வ்ரதங்களுடன், தினமும் 4 மணிக்கு எழுந்து, உணவு கட்டுப்பாட்டுடன், 8 மணிநேரம் தினமும் பயிற்சி செய்து, பெற்றோருடன் வசிக்காமல், குருகுல வாசம் செய்து, வேதத்தில் உள்ள சம்ஹிதையை உச்சரிப்பு பிசகாமல் கற்று கொள்கின்றனர்.

    இதற்கு மேல், ப்ராஹ்மண பாகத்தையும் தெரிந்து கொள்ள மேலும் பல வருடங்கள், ஆயுள் முழுக்க செலவு செய்து கற்று கொள்கின்றனர்.

    இத்தகைய தவ வாழ்வு காரணமாக ப்ராஹ்ம்மணர்கள் மதிக்கப்பட்டனர். 

    இன்றும் அத்தகைய வேத ப்ராஹ்ம்மணர்கள் மதிக்கப்படுகின்றனர்.

    குருநாதர் துணை

Saturday 21 August 2021

பகவான் என்ன நினைக்கிறார்? எப்படி தெரிந்து கொள்வது?

ஏன் உலகம் படைக்கப்பட்டது?

நாம் ஏன் படைக்கப்பட்டோம்?

உலகில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?

மனிதனின் குறிக்கோள் என்ன?

மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு விடுதலை அடைய வழி என்ன?

இப்படி பல கேள்விகள் நமக்கு எழலாம்.. 

இந்த கேள்விக்கு பதிலை பகவான் மட்டுமே சொல்லமுடியும்.


பகவான் இதயத்தில் என்ன நினைக்கிறார்? என்று தெரிந்து கொண்டு விட்டால், இந்த கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்து விடும்.


அடுத்தவர் என்ன நினைக்கிறார்? என்றே நம்மால் கண்டுபிடிக்க முடியாத போது, 

பகவானின் இதயத்தில் என்ன உள்ளது, என்று கண்டுபிடிக்க முடியுமா?


முடியும்.. என்கிறது நம் சனாதன தர்மம்.


பரமாத்மாவின் இதயமே "வேதம்".


4 வேதத்தையும் உண்மையான அர்த்தத்தோடு நாம் புரிந்து கொண்டு விட்டால், பகவான் என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்...


கேள்விகள் அனைத்துக்கும் பதில் கிடைத்து விடும்.


வேதத்தை நன்கு தெரிந்து கொண்டால், நாம் கேட்கும் பல கேள்விகளுக்கு பகவான் என்ன பதில் சொல்கிறார்? என்று தெரிந்து விடும்.

ப்ரம்மமே பரமாத்மா. 

ப்ரம்மமே பகவான்.

ப்ரம்மமே நாம (ஒலி) ரூபத்தில் ப்ரணவமாக இருக்கிறார்.

ப்ரம்மமே ரூபத்துடன் (அ என்ற விஷ்ணுவாக) இருக்கிறார். 

 

Saturday 18 April 2020

ப்ருஹஸ்பதியின் மனைவி தாரா, சந்திரன் மூலமாக புதனை பெற்றாள்.. வேதம் என்ன சொல்ல வருகிறது?.. புரிந்து கொள்வோம் காரணத்தை...

"பேன்" தலையில் ஏற்படும் புழுக்கத்தில் இருந்து தானாக உண்டாகிறது.
பேன் "மனிதனால் உண்டானது" என்பதே உண்மை.
அதற்காக, பேனுக்கு தகப்பன் "மனிதன்" என்று சொல்ல முடியுமா? 
இது உண்மை என்றும் சொல்லலாம்.
இது உண்மையில்லை என்றும் சொல்லலாம்.

அது போல,
சில படைப்புகளை, வேதம் சொல்லும் போது, அனைத்தையும் "ஆண் பெண் சேர்க்கை" என்ற காம எண்ணத்துடனேயே பார்க்க கூடாது...




"மனிதனிடம் இருந்து பேன் உண்டானது" என்று சொன்னாலும், "இருவருக்கும் தகப்பன் மகன் உறவு இல்லை" என்று தெரிகிறது.

ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் சில படைப்புகள் உருவாகின்றன. 
ஆதியில் ப்ரம்ம தேவன் நாராயணனால் படைக்கப்பட்டதும், 
பிறகு, ப்ரம்ம தேவனிடமிருந்து ருத்ரன் வெளிப்பட்டதும், 
ப்ரம்ம தேவனின் மனதால் சனத் குமாரர்கள், ரிஷிகள், ஸ்வாயம்பு மனு போன்றவர்கள் படைக்கப்பட்டார்கள் என்பதும் இது போன்றதே..

"ஆண் பெண் சேர்க்கை படைப்பு" என்று நம் கீழ்த்தரமான புத்தியுடன் பார்க்க கூடாது.

மனிதன் இதை புரிந்து கொள்ள தானோ என்னவோ!! அவனவன்  தலையிலேயே பேன்  உருவாகி, "படைப்புகள் அனைத்தும் ஆண் பெண் சேர்க்கையினால் மட்டும் இல்லை என்று புரிந்து கொள்" என்று தலையை பிராண்டிக்கொண்டே இருக்கிறது.

வேதம், சில படைப்புகளை ஆண் பெண் சேர்க்கையாக சொல்லும். 
வேதம், சில படைப்புகளை திவ்யமான படைப்பாக சொல்லும். 
வேதம், சில படைப்புகளை கிரகங்கள் குணத்தை பார்த்து சொல்லும்.. 
அனைத்தையும் "ஆண் பெண் சேர்க்கை" என்ற புத்தியுடன் பார்ப்பவன், வேதம் சொல்வதை புரிந்து கொள்ளவே முடியாது.

சூரியன் உதித்தால், தாமரை மலரும். என்று சொல்கிறோம்
"தாமரைக்கும் சூரியனுக்கும் சம்பந்தம் உண்டு" என்று சொல்லும் போது, இது "காம உறவு" என்று நினைக்க கூடாது.
"தூங்கு மூஞ்சி மரம், சூரியன் மறைந்து விட்டால், கூம்பி விடும்". ஆதலால், 
"சூரியனுக்கு இந்த மரத்துக்கும் காதல்" என்று நினைக்கக்கூடாது.

இந்த இரண்டுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது. 
இந்த சம்பந்தத்தை சொல்லும் போது, இதையே காமம் என்று நினைக்கக்கூடாது.
தேவர்களின் படைப்பை,
கிரகங்கள் (Planets, Stars) படைக்கப்பட்ட நிகழ்வை,
மனு அரசர் படைக்கப்பட்டதை சொல்லும் போது,
'நாம் பிறந்தது போல, இதுவும் ஆண் பெண் சேர்க்கையினால் ஏற்பட்ட படைப்பு தான்' என்று பார்க்க கூடாது.

தேவர்கள், ரிஷிகள், தேவர்களை,ரிஷிகளை,ஸ்வாயம்பு மனுவை ப்ரம்ம தேவன் மனதால் படைத்தார் என்று வேதம் சொல்கிறது.
நமக்கு மீறிய படைப்புகள் என்ற அளவாவது புரிந்து கொண்டு, பக்தியுடன் அறிந்து கொள்ள வேண்டும்.
மனித சக்திக்கு, புத்திக்கு அப்பாற்பட்ட காரியம் செய்ய கூடியவர்கள் தேவர்கள், ரிஷிகள்.




தெய்வ படைப்புகளை வேதம் சொல்லும் போது, பயபக்தியுடன் கேட்க வேண்டுமே தவிர, ஆண் பெண் சேர்க்கை என்ற ரீதியில் பார்க்கவே கூடாது.

ரிஷிகள் தேவர்களை படைத்தார்கள்.  
அத்ரியின் கண்களிலில் இருந்து தோன்றினார் "சோமன்" (சந்திரன் அம்சம்)

கஸ்யபர் ஒருவரே பல வித படைப்புகளை படைத்தார்.
"அசுரர்களை, தேவர்களை, பக்ஷிகளை, பாம்புகளை படைத்தார்" என்று வேதம் சொல்கிறது.

கஸ்யப ரிஷி, "பாம்பை ஸ்ருஷ்டி செய்தாரா?"
என்று மீண்டும் ஆண் பெண் சேர்க்கை என்ற புத்தியுடனேயே பார்க்க கூடாது.

"நாம் தான் பேனை ஸ்ருஷ்டி செய்கிறோம். மனிதனும் பேனும் ஒன்றா?" 
யோசிக்க வேண்டும்.

அது போல,
வேதம், சில படைப்புகளை பற்றி சொல்லும் போது, மனித உறவுகளை போல, ஆண் பெண் சேர்க்கை உறவு போல பார்க்கக்கூடாது.

"கிரகங்களில் சில கிரகங்கள் நட்பு கிரகங்கள்.. 
சில கிரகங்கள் எதிரிகள் என்றும்" வான சாஸ்திரம் சொல்கிறது.
இதை அறியும் போது, வேதம் சொல்லும் சில படைப்புகளை உண்மையாக புரிந்து கொள்ள முடியும்.


"ப்ருஹஸ்பதியின் மனைவி 'தாரா'.  தாராவுக்கும் சந்திரனுக்கும் 'புதன்' பிறந்தான்"
என்று சொல்கிறது வேதம்.
மேலும்,
புதன் 'மகா புத்திசாலியாக இருந்தான்' என்று சொல்கிறது வேதம்..
ராமபிரானாக பரமாத்மா அவதரித்த நாளும் "புதன் கிழமையே". 
'புதன் கிழமையில் பிறந்தவர்கள் புத்தி கூர்மை கொண்டவர்களாக இருப்பார்கள்' என்று சொல்கிறது நம் ஹிந்து தர்மம்.

மனித புத்தியுடன் இதை பார்த்தால்,
ஒரு மனைவியை இன்னொருவன்  கூட்டி சென்றுவிட்டானா?
என்று தான் பார்க்க தோன்றும்.

போலி மதத்தில் உள்ளவர்கள், இந்த கதையை எடுத்து காட்டி, ஹிந்துக்களை குழப்ப நினைப்பார்கள்.
மற்ற போலி மதங்களை போல "500 பக்க நாவல் அல்ல" நம் ஹிந்து தர்மம்.
காரணம் புரிந்து கொண்டால், போலி மதத்தை விட்டு, அனைவரும் ஹிந்துவாகி விடுவார்கள்.

வான சாஸ்த்திரம் அறிந்தவன் பார்க்கும் போது, இதன் மூலம் வேதம் என்ன சொல்கிறது? என்று ஆராய்கிறான்.

ப்ருஹஸ்பதி தேவர்களுக்கு குரு (Priest of Demi Gods in Heaven).
ஆங்கிலத்தில் "Jupiter Planet"  என்று கவனிக்க வேண்டும்.

"தாரா" என்றால் நக்ஷத்திரம்.
"Jupiter Planet (ப்ருஹஸ்பதி) கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நக்ஷத்திரம் (தாரா), 
ஒரு சமயம் சந்திரனின் (moon) கட்டுப்பாட்டில் வந்தது.
இந்த ஈர்ப்பினால், 
புதன் என்ற மிகவும் அழகான, புத்திசாலியான கிரகம் படைக்கப்பட்டது" 
என்பதையே வேதம் சொல்கிறது.
வான சாஸ்திரம் படிப்பவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்.
புதன் கிரகம் என்றால் "Mercury planet" என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இதை பார்க்கும் போது,
புதன் கிரகம் (Mercury), "சந்திரனுக்கு (moon) பிறகு படைக்கப்பட்டது" என்று தெரிகிறது.

ஒரு வேளை, மனிதன் சந்திரனில் வாழும் அளவிற்கு முன்னேறி விட்டால், புதன் கிரகம் (Mercury Planet), சந்திரனுக்கு பிறகு படைக்கப்பட்டதா? என்று ஆராய்ச்சி செய்யலாம்.
வேதத்தை கொண்டே பல ஆராய்ச்சிகள் செய்யலாம், இன்றைய ஆராய்ச்சியாளர்கள்.



சூரியன் மனிதனுக்கு ஆரோக்கியம் தருகிறது.
சந்திரன் மனிதனுக்கு புஷ்டி தருகிறது
என்று சொல்கிறது வேதம்.

சூரியன் எங்கு இருக்கிறது, நாம் எங்கு இருக்கிறோம்!!
எப்படி நமக்கு ஆரோக்கியம் தரும்? என்று கேட்பானா ஒரு அறிவாளி!!
"வைட்டமின் D  சத்து சூரியனில் இருந்து வருகிறது"
என்று அறிவியல் சொல்லி வேதம் சொல்வதற்கு ஆமாம் சொல்கிறதே?

"சூரியன், சந்திரன் போன்றவை நமக்கு ஆரோக்கியம், புஷ்டி தருகிறது" என்ற உண்மை இருக்கும் போது,
வேதம் "சாயா (நிழல்) கிரகங்கள் சூரியனை மறைக்கும் போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது" என்று சொல்கிறது.
சாயா கிரகங்கள் "ராகு கேது" என்றும் சொல்கிறது.
இவர்கள் அசுரர்கள் என்றும் சொல்கிறது.

பூமிக்கு அருகில் இருக்கும் சந்திரனை பற்றி அறிந்து கொள்ளவே இன்னும் முடியவில்லை!
இந்த சாய கிரகங்களோ இருட்டு என்று சொல்கிறது.. 
இதை கண்டுபிடிக்க பல லட்சம் காலங்கள் மனிதனுக்கு தேவைப்படும்.

"ஒரே அசுரன் தான் இப்படி ராகு, கேதுவாக ஆகி, சந்திரனை, சூரியனை சில நாழிகைகள் மறைக்கிறான்" என்று இவர்கள் யார் என்றும் வேதம் சொல்கிறது.

தேவர்கள் பாற்கடலை கடைந்து அம்ருதம் கிடைத்த போது, அசுரர்கள் எடுத்துக்கொண்டு ஓடி விட்டனர்.
இவர்களிடம் இருந்து சாமர்த்தியமாக மோகினி அவதாரம் செய்து வாங்கி, தேவர்களுக்கு அம்ருதம் போட்டார் மஹாவிஷ்ணு.
அப்பொழுது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்த ஒரு அசுரன் அம்ருதம் சாப்பிட்டு விட்டான்.
இவனை தன் சக்கரத்தால் இரண்டாக துண்டித்து விட்டார் பெருமாள். அம்ருதம் சாப்பிட்டதால் ராகு கேது என்ற கிரகங்களாக ஆகி விட்டார்கள்.

சூரியன் இந்த கிரகங்களால் மறைக்கப்படும் போது, ஆரோக்கியம் நமக்கு குறையும், ஆதலால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்று சொல்கிறது.
"இது அறிவியல்".  இதை பொருட்படுத்தாத மக்கள், எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்கிறார்கள்.
ஒரு வைரஸ் (Corona) பாதிக்கும் போது, இவர்கள் லட்சணம் என்ன?
என்று தெரிந்து விடுகிறது.

வாழ்க நம் ஹிந்து தர்மம்..
வாழ்க நம் வேதம் சொல்லும் படைப்பின் ரகசியங்கள்..
ஹிந்துவாக பிறப்பதே நாம் செய்த புண்ணியம்..

Thursday 16 April 2020

ஸத்-அஸத் இரண்டுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார் பரப்பிரம்மம் என்று சொல்கிறது வேதம்... புரியவில்லையே!! புரிந்து கொள்வோமே!

"ஸத்-அஸத் இரண்டுக்கும் சாட்சியாக, அப்பாற்பட்டு இருக்கிறார், பரப்பிரம்மம்" என்று சொல்கிறது வேதம்
"ஸத்" என்றால் "இருக்கிறது" என்று அர்த்தம்.
"அஸத்" என்றால் "இல்லை" என்று அர்த்தம்.

கேள்வி: உலகம் இருப்பது தெரிகிறதா?
கண் இருப்பவன் "உலகம் தெரிகிறது" (ஸத்) என்று சொல்கிறான்.
கண் இல்லாதவன் "தெரியவில்லை" (அஸத்) என்று சொல்கிறான்.




கேள்வி: இருட்டில் உலகம் தெரிகிறதா?
கண் இருப்பவனும் "உலகம் தெரியவில்லை" (அஸத்) என்று சொல்கிறான்.
கண் இல்லாதவனும் "உலகம் தெரியவில்லை" (அஸத்) என்று சொல்கிறான்.

கேள்வி: தெய்வம் இருப்பது தெரிகிறதா?
சிலர் "தெய்வம் இருக்கிறார்" (ஸத்)  என்று சொல்கிறார்கள்.
சிலர் "தெய்வம் இல்லை" (அஸத்)  என்று சொல்கிறார்கள்.

இப்படி எதை கேட்டாலும்,
சிலர் ஸத் என்றும், 
சிலர் ஸத் என்றும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

"ஸத்-அஸத் இரண்டுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார், பரப்பிரம்மம்"
என்று சொல்கிறது வேதம்

வேதம் சொல்லும் இந்த ரகசியத்தை புரிந்து கொள்ள முடியுமா? 
குருநாதர் வழிகாட்டுகிறார்.

கேள்வி: இருட்டில் நீ இருப்பது தெரிகிறதா? 
கண் இருப்பவனும் "நான் இருக்கிறேன்" (ஸத்) என்று சொல்கிறான்.
கண் இல்லாதவனும் "நான் இருக்கிறேன்" (ஸத்) என்று சொல்கிறான்.

"இருக்கிறார் என்றும், இல்லை என்றும் யார் சொல்வது?" என்று கேட்டால்,
"நான் சொல்கிறேன்" என்று பதில் உள்ளுக்குள் இருந்து வருகிறது.

யார் பேசுவது? என்று கேட்டால், "நான் பேசுகிறேன்" என்று உள்ளுக்குள் இருந்து பதில் வருகிறது.

"நான் இருக்கிறேன்" என்று உள்ளுக்குள் இருந்து பேசுவது யார்?
உள்ளிருந்து பேசுவது "பரப்பிரம்மம்" என்று அறிந்து கொள் என்று வேதம் காட்டுகிறது.

இந்த பரப்ரம்மமே எங்கும் இருக்கிறது.
அந்த பரப்ரம்மமே பல ரூபத்தில் இருக்கிறது.
அந்த பரப்ரம்மமே "இது ஸத் என்றும், இது அஸத் என்றும்" சொல்லி லீலை (விளையாடு) செய்து கொண்டு இருக்கிறது.

ஸத்-அஸத் இரண்டுக்கும் அப்பாற்பட்டு சாட்சியாக இருக்கிறார் (ஸத்), பரப்பிரம்மம்.

"நானே பரப்பிரம்மம்" என்று சொல்வது அகம்பாவம். அப்படி ஒருவரும் சொல்லக் கூடாது.
மாறாக,
"பரப்பிரம்மே எங்கும் இருக்கிறார்" என்பதே உண்மை என்பதால்,
"பரப்பிரம்மே  நானாகவும் இருக்கிறார்" என்று சொல் லும் போது, அகம்பாவம் நமக்கு ஏற்படாது. 
"அனைவருமே பரமாத்மா ஸ்வரூபம் தான்" என்ற ஞானம் பிறக்கும் போது நமக்கு சித்த சுத்தி உண்டாகும்.

கடவுள் (பரப்பிரம்மம்) உள்ளே இருப்பதால் தான், மாயையின் காரணத்தால், "ஒருவன் கடவுள் இல்லை" என்றும், கொஞ்சம் உணர்ந்தவன் "கடவுள் இருக்கிறார்" என்று சொல்கிறான்.

கடவுள் இருக்கிறார் (ஸத்) என்று சொல்வதால் தான், பரப்பிரம்மம் இருக்கிறார் என்று நினைக்கக்கூடாது. அவர் என்றுமே இருக்கிறார்.
கடவுள் இல்லை (அஸத்) என்று சொல்வதால், பரப்பிரம்மம் இல்லாமல் போவதும் இல்லை. அவர் என்றுமே இருக்கிறார்.




உண்மையில்,
"கடவுள் இல்லை" என்று சொல்பவன், "நானே இல்லை" என்று சொல்கிறான். 
இதை விட ஒருவன் தன்னை தாழ்த்திக்கொள்ள என்ன இருக்கிறது?

"இருக்கிறார்" என்றாலும், "இல்லை" என்றாலும், 
இரண்டையுமே சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கிறார் பரப்பிரம்மம்.
இதையே வேதம், 
ஸத்-அஸத், இரண்டுக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார் பரப்பிரம்மம் என்று சொல்கிறது.

நம் ஆத்மாவே பரப்பிரம்மம் என்று உணர வேண்டும்.

வாழ்க நம் ஹிந்து தர்மம்
வாழ்க நம் ஹிந்துக்கள்

வாழ்க நம் குருநாதர்.


Wednesday 13 November 2019

4000 திவ்ய பிரபந்தத்தில் வேதம் எப்படி அடங்கியது? எந்த காரணத்தால் இப்படி சொன்னார்கள்? தமிழ் மொழியில் சொல்லப்பட்ட 4000த்தை "தமிழ் மறை" என்று ஏன் சொன்னார்கள்?

"பரமாத்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசையுள்ள நமக்கு, வள்ளலாக வந்தார்கள் "ஆழ்வார்கள்"..

கடல் போன்றது "வேதம்'..




வேதம், "பகவானை பற்றி மட்டும் சொல்லவில்லை, உபதேவதைகள் பற்றியும், உலக ஸ்ருஷ்டி ஆரம்பித்து, உலகத்தில் அர்த்தங்களை பெறுவதற்கான அனைத்து கலைகளையும் பற்றி சொல்கிறது..."


"4 வேதங்கள் மட்டும் வேதத்தில் அடக்கம்" என்று நினைத்து விட கூடாது...

"அர்த்தங்களை (wealth) பெறுவதற்கு பல விஷயங்களையும் சொல்கிறது" வேதம்...

  • ஆயுர்வேதம் (medicine)
  • ஸ்தாபத்யம் (engineering)
  • காந்தர்வ வேதம் (music)
  • தனுர் வேதம்(army)
  • சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)
  • கல்பம் (expert in knowing  procedures for Vedic rituals and rituals associated with major life events such as birth, wedding and death in family, as well as discussing the personal conduct and proper duties of an individual in different stages of his life)
  • வியாகரணம் (expert in grammers and linguistic analysis)
  • நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words)
  • சந்தஸ் (expert in poetic metres)
  • ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy.)
  • ஸ்ம்ருதி,
  • இதிகாசம் (knowledge about history),
  • புராணம் (knowledge about very old history) இவைகளும்,
  • காவியம்,
  • நாடகம்,
  • அலங்காரம்
  • யோகம் (expert in meditation, contemplation and liberation)
  • ஸாங்க்யம் (Expert in consciousness and matter)
  • நியாயம் (Expert in exploring sources of knowledge)
  • சௌகதம்
  • ஆர்ஹதம்
  • மீமாம்ஸா (expert in correct conduct, both ethical and liturgical)
  • பாசுபதம்
  • பாஞ்சராத்ரம் (expert in Agama rules and guiding five observances every day to lord narayana)

என்று பல வேதத்தில் அடக்கம்.

"கடல் போன்ற வேதத்தை ஒருவன் முழுமையாக படித்து, உபதேவதைகள், அர்த்தங்களை (wealth) பற்றி சொல்லும் வேத பாகங்களை தள்ளி விட்டு, குறிப்பாக பரமாத்மாவை பற்றி வேதம் என்ன சொல்கிறது?" என்று தெரிந்து கொள்வதற்கு கலியுகத்தில் நமக்கு ஆயுசு போதாது....

"பரமாத்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசையுள்ள நமக்கு, வள்ளலாக வந்தார்கள் "ஆழ்வார்கள்"..
ஆழ்வார்கள், "வேதத்தின் சாரத்தை, இதிகாச, புராணங்களின் சாரத்தை (essence) நமக்கு 4000 திவ்ய பிரபந்தமாக கொடுத்து விட்டார்கள்."

பகவானை பற்றி அறிய, 'வேதம் முழுவதையும் படிக்க முடியாத நமக்கு, பகவானை பற்றி வேதம் சொல்லும் விஷயத்தை' அப்படியே தமிழில், கொடுத்து விட்டார்கள் ஆழ்வார்கள்.

வேதம் என்ற "பழத்தை" பிழிந்து,
அர்த்தவாதங்கள் சொல்லும் வேத மந்திரங்களை "சக்கை" என்று தள்ளி விட்டு,
பரமாத்மாவை பற்றி மட்டுமே சொல்லும் வேத மந்திரங்களை "சாறு" போல எடுத்து,
4000 திவ்ய ப்ரபந்தமாக "தமிழில்"  நமக்கு சிரமப்படாமல் அருந்தி சுவைப்பதற்கு கொடுத்து விட்டார்கள் ஆழ்வார்கள்.
"பகவானை பற்றி அறிந்து கொள்ள, 
வேதம் முழுக்க படிக்க அவசியமில்லை, 4000 திவ்ய பிரபந்தங்களே போதும்"
என்ற அளவுக்கு தமிழ் மக்களுக்கு பெரும் நிதியாக கொடுத்து விட்டார்களே ஆழ்வார்கள்..

"4000 திவ்ய ப்ரபந்தம் புரிந்து கொண்டால், பகவானை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த ரகசியம் தெரிந்த தமிழன் திவ்ய ப்ரபந்ததை விடுவானா?.. "




பிரபந்தங்கள் தமிழனின் பொக்கிஷமாயிற்றே... தமிழ் மொழியாயிற்றே..

வேதம் "கடல் போன்றது" என்று எடுத்துக்காட்டாக சொல்வதற்கு காரணம் உண்டு..

கடல் தண்ணீரில் "உப்பு" கலந்து இருக்கும்..
பல ஜீவராசிகள் அதை சார்ந்து இருக்கிறது...
மனிதர்களாகிய நமக்கோ, கடல் முழுக்க நீர் இருந்தாலும், அதில் ஒரு சொட்டு நீர் கூட தாகத்தை தணிக்காது...
மனிதனும் நீரை நம்பி தான் வாழ்கிறான்.




மனிதனுக்கு நீர் கொடுப்பதற்காக அந்த கடலின் மேல், மேகங்கள் சென்று, அது தன் சாமர்த்தியத்தால், கடலில் உள்ள உப்பை மட்டும் விலக்கி விட்டு, நல்ல தண்ணீரை மட்டும் உறிஞ்சிக்கொள்கிறது...

கர்ப்பம் தரித்த பெண் போல, கார்மேகமாக நகர்ந்து நகர்ந்து, நம் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் வந்து, அம்ருதம் போன்ற மழையை பொழிந்து நம் தாகத்தை தீர்த்து விடுகிறது...
கடல் நீரில் (வேதம்) உள்ள
உப்பை (அர்த்தவாதங்களை) விலக்கி,
சுவையான நீரை மட்டும் (பகவானை பற்றி மட்டுமே)  எடுக்க தெரிந்த மேகங்கள் போல நமக்கு 'ஆழ்வார்கள்' கிடைத்தார்கள்.

வேதத்தில், சாரம் இல்லாத  சாஸ்திரங்களை விலக்கி, சாரத்தை மட்டும் எடுக்கும் சக்தி நமக்கு கிடையாது..

எம்பெருமான் அருள் பெற்ற, அருள் பெற்றதால் ஞானத்தை அடைந்த
ஆழ்வார்கள்,
12 கருமேகங்களாக நம் தமிழகத்தில் உதித்து,
வேத நாயகனான நாராயணனின் பரத்துவத்தை, குணங்களை சொல்லும் வேத பாகங்களை, "மேகம்" சுத்தமான நீரை மட்டும் உறிஞ்சுவது போல உறிஞ்சி,
நம்மை போன்ற சாமானிய ஜனங்களும் "கோவிந்தனின் நாமத்தை, அவர் மகிமையை, அவர் குணங்களை, அவர் கருணையை அறிந்து கொள்ளும்" படியாக,
"4000 திவ்ய ப்ரபந்தங்கள்" என்ற அம்ருத மழையாக பொழிந்து விட்டனர்..

அதனால்,

  1. பெரியாழ்வார் அருளிய "திருப்பல்லாண்டு, திருமொழி"
  2. ஆண்டாள் அருளிய "திருப்பாவை, நாச்சியார் திருமொழி"
  3. குலசேகராழ்வார் அருளிய "பெருமாள் திருமொழி"
  4. திருமழிசையாழ்வார் அருளிய "திருச்சந்தவிருத்தம்", "நான்முகன் திருவந்தாதி"
  5. தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய "திருமாலை, திருப்பள்ளி எழுச்சி"
  6. திருப்பாணாழ்வார் அருளிய "அமலனாதிபிரான்"
  7. மதுரகவியாழ்வார் அருளிய "கண்ணிநுண்சிறுத்தாம்பு"
  8. திருமங்கையாழ்வார் அருளிய "பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்"
  9. பொய்கை ஆழ்வார் அருளிய "முதல் திருவந்தாதி"
  10. பூதத்தாழ்வார் அருளிய "இரண்டாம் திருவந்தாதி"
  11. பேயாழ்வார் அருளிய "மூன்றாம் திருவந்தாதி"
  12. நம்மாழ்வார் அருளிய "திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி"
    திருவரங்கத்தமுதனார் அருளிய "இராமானுச நூற்றந்தாதி"

ஆகிய 4000த்தில் சொல்லப்பட்டு இருக்கும் அனைத்தும், வேதத்தின் சாரமான "பரமாத்மாவின் குணங்களையே, தத்துவத்தையே பேசுகிறது"...

சர்வ சாஸ்திரங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது.
நம்மாழ்வார் "ரிக், யஜுர், சாம, அதர்வண" ஆகிய 4 வேதங்களின் சாரத்தை பிழிந்து,
"திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி" என்ற "தமிழ் மறை"களாக நமக்கு கொடுத்தார்.

திருமங்கையாழ்வார், "சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஸம்" ஆகிய 6 சாஸ்திரங்களின் சாரமாக,
"பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்" என்ற "தமிழ் சாஸ்திரங்களாக" நமக்கு கொடுத்தார்.




ஆறு சாஸ்திரத்தின் சாரமும், பெரிய திருமொழியில் இருப்பதை நாம் காணலாம். 
திவ்ய தேசம் பற்றி சொல்லும் போது, அந்த திவ்ய தேசத்தில் உள்ள வீதிகளை வர்ணிக்கும் போதே, தான் கற்ற சாஸ்திர ஞானத்தை பிரபந்தத்தில் காட்டி விடுகிறார்.
நாம் உலக விஷயமான சாஸ்திரங்களை கற்றாலும், அதன் மூலமாகவும் நமக்கு மேலும் பகவத் பக்தி ஏற்பட செயது கொள்ள வேண்டும் என்று காட்டுகிறார் திருமங்கையாழ்வார்.

தான் கற்ற 6 சாஸ்திரங்களையும் திருமங்கையாழ்வார், உலக விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், எம்பெருமானுக்கே பயன்படுத்தினார்.

உலக சாஸ்திரங்களை கற்றாலும், அதன் மூலம் பகவத் பக்தியை உயர்த்தி கொள்ளவே நாம் முயற்சிக்க வேண்டும் என்று காட்டுகிறார்.. திருமங்கையாழ்வார்.

அது போல, 2 இதிகாசங்கள், புராணங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது..

ஸ்ரீ ராமாயணத்தை ராமபிரானை பற்றி அறிய, குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழியே போதுமானது...
வால்மீகி ராமாயணத்தின் சாரமாக, நமக்கு ராமபிரானின் குணத்தை நமக்கு காட்டுகிறார்..

"பாகவதம்" போன்ற சாத்வீக புராணங்களின் சாரமாக, பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் நாச்சியார் போன்றவர்கள் அருளிய பிரபந்தங்களே நமக்கு பகவத் பக்தி அனுபவத்தை கொடுத்து விடுகிறது..

"விஷ்ணு தர்மத்தை" அறிய, தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய திருமாலை, திருப்பள்ளி எழுச்சி போன்றவைகளே அந்த சாரத்தை நமக்கு தந்து விடுகிறது..

இப்படி "மோக்ஷத்துக்கு வழி சொல்லும் புராணங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்கள், 4 வேதம் உட்பட அனைத்தும்" 4000 திவ்ய பிரபந்தத்தில் அடங்கி விடுகிறது..

தமிழர்களுக்கு "பொக்கிஷம்" அல்லவா திவ்ய பிரபந்தங்கள்..
அர்த்தங்கள் பொதிந்த, பக்தியை தரக்கூடிய, 'தமிழ் மறை' அல்லவா திவ்ய பிரபந்தங்கள்..

4 வேதங்களையும், புராணங்களையும், சாஸ்திரங்களையும் முழுவதாக படித்து இருந்தவர்களால் தானே, இவையெல்லாம் 4000த்தில் அடங்கி இருப்பதாக சொல்லி இருக்க முடியும்!!..

4000த்தில் இவையாவும் அடங்கி உள்ளது!! என்று சொன்னவர்கள் யார்? என்றும் நாம் கவனிக்க வேண்டாமா?

சர்வ சாஸ்திரங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது என்று  யார் சொன்னார்கள்? 
என்று கவனிக்கும் போது தான், திவ்ய பிரபந்தத்தின் பெருமை நமக்கு புரியும்..

சம்ஸ்க்ரிதம் தெரியாதவன், இதையாவது தெரிந்துகொள்ளட்டும் என்று கொடுக்கப்பட்ட சாதாரண புத்தகம் இல்லையே, 4000 பிரபந்தங்கள்...
வெறுமனே தமிழ் கற்று கொள்வதற்காக, ஏற்பட்ட நூல் இல்லையே 4000 பிரபந்தங்கள்...
சர்வ சாஸ்திரமும், வேதமும், புராணங்கள், இதிகாசங்கள் உட்பட அனைத்தும் கரைகண்ட,
பெரியவாச்சான் பிள்ளை, தேசிகர், ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்கள் வாக்கியத்தால் நமக்கு 4000த்தின் பெருமை தெரிகிறது..

சர்வ சாஸ்திரமும் கரை கண்ட பெரியவாச்சான் பிள்ளை, போன்ற மகான்கள், கடைசியாக '4000த்தை கையில் எடுக்கும் போது, அதில் உள்ள பிரபந்தங்களோடு வேத சாஸ்திரங்களை, புராண, இதிஹாசங்களை காட்டி விளக்கம் கொடுக்கும் போது, நமக்கு 4000த்தின் பெருமை தெரிகிறது..'

தேசிகர் போன்று சாஸ்திரத்தில் கரை கண்டவர் கிடையாது...
அவர் சம காலத்தில் சிம்மமாக இருந்த மகா பண்டிதர்கள் எல்லாம், இவர் வித்வத்தை பார்த்து பெருமதிப்பு கொண்டிருந்தனர்..

சர்வ சாஸ்திரமும் அறிந்த தேசிகர், கடைசியில் 4000த்தை கையில் எடுத்து வாசிக்க வாசிக்க, "தெளியாத மறை நிலமெல்லாம் தெளிகிறது" என்று சொல்கிறார்..

யார் இப்படி சொல்கிறார்? என்பதை கவனிக்க வேண்டும்..
"தான் கற்ற வேதங்களில், புரியாத சில வாக்கியங்கள், 4000 திவ்ய பிரபந்தத்தை படிப்பதால், புரிந்து விடுகிறது என்று யார் சொல்கிறார்? என்று பார்க்க வேண்டும்..
அப்பொழுது தான், நமக்கு 4000த்தின் மகத்துவம் புரியும்.

"தான் வேத சாஸ்திரம் படித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள இயலாத இடங்களை கூட 4000 திவ்ய பிரபந்தத்தில் பார்க்கிறேன்" என்று சொல்கிறார் தேசிகர்..

அற்புதமான திவ்ய பிரபந்தத்தை, தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்..

இதன் உண்மையான ஆழ்ந்த அர்த்தங்களை, ஞானத்தில் உயர்ந்த, பரமாத்மாவிடம் திட பக்தி உள்ள, மகான்களிடம் கேட்டு மனதில் உள்வாங்கி, அனுபவிக்க வேண்டும்..  




திவ்ய பிரபந்தங்களே நமக்கு பரமாத்மாவை பற்றிய ஞானத்தை, பக்தியை தரும்.
தமிழனாக பிறந்ததற்கு பெருமை படுவோம்.

வாழ்க 4000 திவ்ய பிரபந்தம்.
வாழ்க ஆழ்வார்கள்.   வாழ்க நாயன்மார்கள். 
வாழ்க நம் பாரத மண்ணில் உதிக்கும் மகான்கள்.



Wednesday 26 June 2019

புராணங்களை சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர்த்தங்களை சொல்லி தருவது இல்லையே!! அது ஏன்? அதற்கு என்ன காரணம்?.. ஒரு அலசல்.

'ராமாயணம், மகாபாரதம், சிவ புராணம், விஷ்ணு புராணம், கந்த புராணம், சக்தி புராணம்'  போன்ற புராணங்களில்,
  • 'தெய்வங்களின் அவதாரத்தை' பற்றியும், 
  • 'தெய்வங்களின் அவதார காரணத்தை' பற்றியும் 
தெரிந்து கொள்கிறோம்.



இந்த புராணங்களை பற்றி  மகான்களும் பெரியோர்களும், 
கோவில்களில், பொது மேடைகளில், உபன்யாசம் செய்து விவரிக்கின்றனர்.

பாகுபாடு இல்லாமல், பொது மக்கள் அனைவருக்கும் இந்த புராணங்கள் சொல்லப்படுகிறது.
இஷ்டப்பட்டவர்கள் கேட்கிறார்கள்.

அது மட்டுமில்லாது,
இந்த புராணங்கள் யாவும் மேடை நாடகமாகவும், புத்தகமாகவும், டிவி, சினிமாக்களில் காட்சியாகவும் நடித்து  காட்டப்படுகிறது.

மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை ('இதி' - இவ்வாறு, 'ஆச' - நடந்தது) TV சீரியலாக பார்க்காத பாரத மக்கள் இருக்க மாட்டார்கள்.
பாரத நாட்டில் உள்ள கிறிஸ்தவன், இஸ்லாமியன் கூட, ஸ்ரீ ராமரை பற்றி தெரிந்து கொள்ள செய்தது.
ராமாயணம் பார்த்து,
"ராமனை போல மனிதன் வாழ வேண்டும்" என்று ஆசைப்படாத மனிதன் இருக்க முடியுமா?
  • தன் பெற்றோரை எந்த அளவுக்கு மதித்தார் ஸ்ரீ ராமர்.
  • ஜாதி பேதம் இல்லாமல், வேடுவன் குகனை நண்பன் என்றார்.
  • பலம், பராக்ரமம் இருந்தும், கர்வமே இல்லாமல் அனைவரையும் மதித்தார்.
  • எத்தனை துயரங்கள் தன் வாழ்வில் வரும் போதும் தன் தர்மத்தை விடாமல், மனம் கலங்கி சோர்ந்து விடாமல், வாழ்ந்து காட்டினார் ஸ்ரீ ராமர்.
  • சுயமாக 14000 ராக்ஷர்களை ஒருவனாக போரிட்டு அழிக்கும் பராக்கிரமம் இருந்தும், நல்லோர்களை (விபீஷணன், சுக்ரீவன்) தன்னுடன் சேர்த்து கொண்டார்.
  • கஷ்ட காலத்திலும், பலம் கொண்ட வாலி போன்ற பிறர் மனைவியை அபகரித்து தன் தம்பியை கொலை செய்ய துடிப்பவன் துணையை எதிர்பார்க்கவே இல்லை. தீயவன் பலம் கொண்டவனாக இருந்தாலும், தன் லாபத்திற்காக அவர்களுடன் துணை சேரவில்லை.
  • சீதையை மீட்க பஞ்சவடியில் (nasik) இருந்து, 2000 KM நடந்து சென்று, எதிரியை கொன்று, சீதையை மீட்டு, கடைசி வரை ஏகபத்னி வ்ரதனாகவே வாழ்ந்து மனித சமுதாயத்துக்கு வழி காட்டினார்.
  • காமத்தை ஜெயித்து, கோபத்தை ஜெயித்து, பொறாமையை ஜெயித்து. வெறுப்பை ஜெயித்து, எந்த நிலை ஏற்பட்டாலும் மனிதன் தர்மத்தில் வாழ்ந்து காட்ட முடியும் 
என்று மனிதர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார் ஸ்ரீ ராமர்.



புராணங்கள் படிப்பதன் மூலம் "தெய்வங்கள் 3 காரணங்களுக்காக அவதாரம் செய்கிறார்கள்" என்று தெரிந்து கொள்கிறோம்.
1. சனாதன (காலம் காலமாக இருக்கும்) வேத தர்மத்தை, (இன்று ஹிந்து தர்மம் என்று சொல்கிறோம்) அழிக்க நினைக்கும் தீயவர்களை ஒடுக்கவும்,

2. ஹிந்து தர்மத்தை காக்கும் சாதுக்களை, இவர்களை போன்ற தீயவர்களிடம் இருந்து காக்கவும்,

3. சனாதன (காலம் காலமாக இருக்கும்) வேத தர்மத்தை, (அதாவது ஹிந்து தர்மத்தை) அழிய விடாமல் என்றுமே நிலை நிறுத்தவும்,
தெய்வங்களின் அவதாரம் உலகில் நடக்கிறது. நடந்து கொண்டே இருக்கிறது.

இதை பரமாத்மா வாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, தெளிவாக சொல்கிறார்.
பரித்ராநாய சாதுனாம்
வினாசாய ச துஶ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்த்தாப னார்தாய ஸம்பவாமி யூகே யூகே

தர்மத்தை காக்கும் 'சாதுக்களை காக்கவும்',
தர்மத்தை அழிக்க நினைக்கும் கொடியவர்களை அழிக்கவும்,
தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும்,
ஒவ்வொரு யுகத்திலும் நான் தோன்றுகின்றேன்
என்று ஸ்ரீ கிருஷ்ணர், தெய்வங்களின் அவதார ரகசியத்தை தெளிவாக சொல்கிறார்.
ஹிந்து தர்மத்துக்காக வாழ உறுதி கொள்ளும் போது,
'தெய்வம் நமக்கு துணை நிற்கும்' என்ற உண்மை, புராணங்களை படிப்பதன் மூலம் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.

புராணங்களை படிப்பதன் மூலம்,
"ஹிந்து தர்மத்தில் திடமான நம்பிக்கையுடன் வாழ்ந்தால், நம்மை தெய்வங்கள் காக்கும்" என்ற தெளிவு, நாளடைவில், நமக்கு உண்டாகி,
ஒரு இறை உணர்வை நமக்குள் உண்டாக்குகிறது.


புராணங்களை படிப்பதன் மூலம்,
"கடவுள் காப்பாற்றுவார்" என்ற தைரியமும் நமக்கு கிடைக்கிறது. உலகை தைரியமாக சந்திக்க மனோதிடம் உண்டாகிறது.

புராணங்களை படிப்பதன் மூலம்,
"வாழ்வில் துயரங்கள் வந்தாலும், இறைவனின் கருணையை பற்றி கொண்டு, தாண்டி விடலாம்" என்ற நம்பிக்கை நமக்கு கிடைக்கிறது.

புராணங்கள், இதிஹாசங்கள் பற்றி தெளிவாக தெரிந்து, புரிந்து கொள்வதால், வாழ்வில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. 
தெய்வத்தை பற்றிய ஒரு புரிதல், ஓரளவுக்காவது உண்டாகிறது.
ஆன்மீக வளர்ச்சிக்கு நம்மை உந்துகிறது.

'தர்மத்தில் நின்று, தர்மத்தில் இருக்கும் சாதுக்களை கேலி செய்யாமல் இருந்தால்', நம்மை நிச்சயமாக தெய்வங்கள் காக்கும்
என்று புராணங்களை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அற்புதமான புராணங்கள், இதிஹாசங்கள் அனைவருக்கும் ஜாதி பேதமின்றி பொது மக்கள் அனைவருக்கும் சொல்லப்படுகிறது.

புராணங்களை அனைவருக்கும் சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர்த்தங்களை அது போல சொல்லி தருவது இல்லையே. அது ஏன்? அதற்கு என்ன காரணம்?

மாந்த்ரீகம் செய்பவர்கள் சில மந்திரங்களை உச்சாடனம் செய்கிறார்கள். "ஓம் ஹ்ரீம் க்லீம் ..." என்று சொல்லி கேட்டு இருப்போம்.

இந்த மந்திரங்கள் பீஜ (seed) மந்திரங்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த மந்திரங்கள் ஸித்தி ஆனவர்கள், நமக்கு உபதேசம் செய்தால், நமக்கும் அந்த மந்திரங்கள் பலன் அளிக்கும். 

"மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை" என்று சொல்லப்படுகிறது.
அர்த்தம் புரிந்து கொண்டு, மந்திரங்களை பல லட்சம் தடவை உச்சரிக்கும் போது, இந்த மந்திரங்கள் தரும் பலன், சக்தி வாய்ந்தது.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு சில முக்கிய 'காரணங்கள்' உண்டு.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்: 
காமம், கோபம், பொறாமை குணம் கொண்டவர்கள், தகுதி இல்லாதவர்கள், சில மந்திரங்களின் அர்த்தங்கள் புரிந்து கொள்வதால், அதை தெய்வ அனுக்கிரஹம் கிடைக்க பயன்படுத்தாமல்,  தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
க்லீம் என்ற பீஜ மந்திரத்தை, ஒரு குரு மூலம் உபதேசம் பெற்று,
ஜபம் செய்ய செய்ய,
'எந்த தெய்வத்தை நினைத்து ஜபம் செய்கிறோமோ, அந்த தெய்வங்கள் நமக்கு சப்படுவார்கள்'. சில சமயம் தெய்வங்களின் ஆவேசம் கூட நமக்குள் ஏற்படலாம்.



க்லீம் என்ற பீஜ மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று, ஜபம் செய்ய செய்ய, 'யாரை நினைத்து ஜபம் செய்தோமோ, அவர் நம்மை விரும்ப ஆரம்பிப்பார்' என்று பொதுவாக பலன் சொல்லப்படுகிறது.
இந்த பலனை, ஆன்மீக தேடல் இல்லாத ஒருவன், நாத்தீகன், மாந்த்ரீகம் செய்பவன், காமம், கோபம், பொறாமை குணம் கொண்டவன் அறிந்து கொள்ளும் போது,
தெய்வத்தை வசியம் செய்ய முயற்சிக்காமல், பெண்களை வசியம் செய்ய பயன்படுத்த ஆரம்பிக்கிறான். 
சிவபெருமான் தன் மனைவியான பார்வதியை மணந்த பின்னும், கைலாயத்தில் தியான யோகத்திலேயே இருந்தார்.
தான் இருப்பதே நினைவில்லாமல் இருக்கும் சிவபெருமானின் கடாக்ஷத்தை பெற, 
பார்வதி தேவி காஞ்சிக்கு வந்து, காஞ்சி வரதனாக இருக்கும் பரவாசுதேவனிடம் வழி கேட்டாள்.

காஞ்சி வரதன் பார்வதிக்கு "க்லீம்" என்ற பீஜ மந்திரத்தை உபதேசம் செய்து, சிவபெருமானை நினைத்து ஜபம் செய்ய சொன்னார். (திருக்கார்வானம் கள்வபெருமாள்)

சிவபெருமானை நினைத்து 'க்லீம்' என்ற பீஜ மந்திரத்தை ஜபம் செய்து தான், சிவபெருமானின் கடாக்ஷத்தை பெற்றாள் பார்வதி தேவி. 
காஞ்சியில், காமாக்ஷி என்ற பெயர் பெற்றாள் பார்வதி. 

"கணவன் மனைவியிடையே பரஸ்பரம் அன்பு இல்லாமல் இருப்பவர்கள்" காஞ்சி காமாக்ஷி கோவிலுக்கு சென்று, காமாட்சியை தரிசித்தால், "தம்பதிகளுக்குள் அன்பு உண்டாகும்" என்று லன் சொல்லப்படுகிறது.

'தெய்வத்தை குறித்து சொல்லும்' சக்தி வாய்ந்த மந்திரங்களை, மாந்த்ரீகம், வசியம் செய்ய பயன்படுத்துவார்கள் என்பதால், மந்திரங்களை, மந்திரங்களின் அர்த்தங்களை சொல்லாமல் இருந்தனர் பெரியோர்கள். 

இது போன்ற ஆபத்துகள் இருப்பதால்,
மந்திரங்கள் அனைவருக்கும் சொல்லப்படாமல், தகுதியும், பக்குவமும் அடைந்தவர்களுக்கே, உபதேசமும், அதன் அர்த்தங்களையும் விளக்கினர்.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம்: 
"தெய்வங்கள் மூன்று காரணங்களுக்காக அவதாரம் செய்கிறார்கள்", என்று புராணங்களை படிக்கும் போது தெரிந்து கொள்கிறோம் என்று பார்க்கிறோம்.
  1. வேத தர்மத்தை காக்கும் சாதுக்களை காக்கவும்
  2. வேத தர்மத்தை அழிக்கும் துஷ்டர்களை அழிக்கவும்,
  3. வேத தர்மத்தை காக்கவும்,
தெய்வங்களின் அவதாரம் நடந்து கொண்டே இருக்கிறது.


'தர்மத்தை காப்பதற்கே' தெய்வங்களின் அவதாரம் நடக்கிறது.

"தர்மத்தை விட்டு விட கூடாது" என்று தெய்வங்கள் ஆசைப்படுகிறார்கள்.
"தர்மத்தை நிலை நிறுத்தத்தான்" தெய்வங்கள் அவதாரமே செய்கிறார்கள் என்று பார்க்கும் போது
ஹிந்துக்களாகிய நாம் "நம் தர்மத்தில் இருக்க வேண்டுமா?" என்று நினைப்பது கூட தவறு.

தர்மத்தை காக்க, கலியில், தெய்வங்கள் தெய்வங்களாக அவதாரம் செய்வதில்லை. சாதுக்களாக அவதாரம் செய்கின்றனர்.

947ல் இருந்து 1947 வரை பாரத பூமியில், அந்நிய மதங்கள் நுழைந்து
வேத தர்மத்தை காக்கும் சாதுக்களை அழிக்கவும், 
வேத தர்மத்தையே அழிக்கவும், 
1000 வருடங்கள் தொடர்ந்து, கடுமையான முயற்சி செய்தனர்.

கலி யுகத்தின் ஆரம்பத்தில் இருந்து, இந்த 1000 வருட இருண்ட காலம் வரை ஹிந்துக்களாகிய  நாம் கொஞ்சம் நிதானத்தோடு கவனித்தால், ஹிந்து மதத்தை யார் காப்பாற்றினார்கள் என்று புரியும்.
பரவாசுதேவனே, கிருஷ்ண சைதன்யராகவும், ராமகிருஷ்ணராகவும் தானே அவதாரம் செய்தார்.
சிவபெருமானே, ஆதி சங்கரராகவும், விவேகானந்தராகவும் அவதாரம் செய்தார்.
பிரகலாதனே, ஸ்ரீ ராகவேந்திரராக அவதாரம் செய்தார்.
நாரதரே, புரந்தர தாசராகவும், தியாகராஜராகவும் அவதாரம் செய்தார்.
ஆதிசேஷனே, திருப்பதியில் உள்ள 7 மலைகளாவும், ராமானுஜராகவும் அவதாரம் செய்தார்.
ஆஞ்சநேயரே, ஸமர்த்த ராமதாசராக அவதாரம் செய்தார்.




யோகிகள், ரிஷிகள், ஞானிகள் அனைவரும் கலியில்,
சூர தாஸ், கபீர் தாஸ், துளசி தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பத்ராச்சல ராமதாஸ், மீரா 
என்று பாரத தேசம் முழுவதும் சாதுக்களாக அவதரித்து,  .
அந்நிய மதங்கள்,

  • கோவிலை இடித்தும்,
  • ஹிந்துக்களை கொன்றும்,
  • மதம் மாற்றியும்,

எத்தனை முயற்சி செய்தும், பாரத தேசத்தில் உள்ள
ஹிந்துக்களை அழிக்க முடியவில்லை, 
ஹிந்து தர்மமும் அழியவில்லை என்று இன்று நிரூபணமாகி உள்ளது.
இன்றும், சங்கரன், விஷ்ணு, லலிதா, லீலா, ருக்மிணி என்ற ஹிந்து பெயர்கள் கொண்ட 80 கோடிக்கும் மேல் உள்ள ஹிந்துக்கள் தன்மானத்தோடு வாழ்கிறோம். மேலும் பல கோடி
ஹிந்துக்கள் உலக நாடுகளில் ஹிந்துக்களாகவே வாழ்கின்றனர்.

பிற மதங்களை 'மனிதர்கள் உருவாக்கினார்கள்'.
அதனால், மனிதர்கள் முயற்சி செய்து பிற மதங்களை காப்பாற்றி வருகிறார்கள்.

வேத தர்மம் என்ற ஹிந்து தர்மத்தை, 'தெய்வங்களே உருவாக்கியதால்', இங்கு தெய்வங்களே அவதரித்து ஹிந்துக்களை, ஹிந்து தர்மத்தை காக்கின்றனர். 

ஹிந்துக்களாகிய நாம் நம் ஹிந்து தர்மத்தை காக்கும் போது தான், தெய்வங்கள் நம்மை கண்டு சந்தோஷப்படுவார்கள்.

ஹிந்து தர்மத்தை காக்கும் நம்மை, அழிக்க நினைக்கும் கூட்டம் அதிகரிக்கும் போது, 
ரிஷிகளை, முனிவர்களை அவதாரம் செய்ய வைக்கிறார் பரவாசுதேவன். 
இதுவும் போதாது என்றால், 
விஷ்ணுவாகிய தானே அவதாரம் செய்து, ஹிந்து தர்மத்தை மீண்டும் ஸ்தாபிக்கிறார்.

தர்மத்தை காப்பதற்கு, தெய்வங்களே அவதாரம் செய்கின்றனர்.


ஹிந்து தர்மத்தில் இருப்பது ஹிந்துக்களுக்கு அவசியம். 
ஹிந்து தர்மத்தை நாமே விட்டு விட்டால் என்ன செய்வது? 

சில மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளும் போது, 
ஆன்மீக பக்குவம் இல்லாத நிலையில் நாம் இருந்தால், நம் ஹிந்து தர்மத்தை கூட விட்டு விட வாய்ப்பு உள்ளது. 
நாம் செய்து கொண்டிருக்கும் கொஞ்சம் ஹிந்து தர்மம் கூட, கெட்டு போகும் என்பதால்,
சில மந்திரங்கள், அதன் அர்த்தங்களை சொல்ல தயங்கினர். 
பிராம்மண குலத்தில் பிறந்து, சந்யாச தர்மத்தையும் ஏற்று கொண்டு, யதிராஜராக ஆகி,
ஸ்ரீ ரங்கதிற்கு மடத்தின் பொறுப்பை ஏற்று, 
கோவில் கைங்கரியமே செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ ராமனுஜருக்கு,
திரு அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும் அறிந்து கொள்ள ஆர்வம் உண்டானது.

திருக்கோஷ்டியூர் நம்பிக்கு, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் ரகசிய அர்த்தம் தெரியும் என்று அறிந்து கொண்டார் ராமானுஜர்.

திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் பெற்று, அதன் உட்பொருளை அறிந்து கொள்ள, யதிராஜராக இருந்த ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சுமார் 100KM நடந்து, திருக்கோஷ்டியூரை அடைந்தார்.

பிராம்மண குலத்தில் பிறந்து, சன்யாசமும் பெற்று, ரங்கநாதருக்கே தொண்டு செய்யும் ராமானுஜர் வந்தும் கூட,  திரு கோஷ்டியூர் நம்பி திருப்பி அனுப்பி விட்டார்.
ப்ராம்மணனாக பிறந்தால் 'மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளலாம் என்பது கிடையாது' என்று தெரிகிறது.
ராமானுஜருக்கே சொல்ல தயங்கினார் என்று பார்க்கிறோம்.

மந்திரங்களின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள, "சில தகுதிகளை எதிர்பார்த்தார்கள்" என்று தெரிகிறது. .

இது போல 17 தடவை, ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சுமார் 100KM நடந்து நடந்து, திருக்கோஷ்டியூர் வந்து, நம்பியின் வீட்டிற்கும் முன் நிற்பார்.
ஒவ்வொரு தடவையும், ராமானுஜரை திருப்பி அனுப்பி விடுவார்.

உண்மையில், 'திரு அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும் சொல்ல தயங்கினார், பயந்தார்' திரு கோஷ்டியூர் நம்பி.

ஏன் பயம்? எதனால் தயக்கம் ஏற்பட்டது?
'தகுதி இல்லாதவர்களுக்கு சொல்லிவிட கூடாது' என்ற தயக்கமும்,
'தகுதி இல்லாதவர்கள், இதன் அர்த்தத்தை தெரிந்து கொண்டு, அவர்கள் செய்யும் கொஞ்சம் தர்மமும், தன்னால் தடைபடுமோ!!' என்ற பயமும் தான், இவரை தடுத்தது.

17 தடவை 'நம்பி' திருப்பி அனுப்பியும்,
அர்த்தத்தை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்ட ராமானுஜர், மீண்டும் மீண்டும் சளைக்காமல், கோபப்படாமல், பொறாமைப்படாமல் நம்பியை பார்க்க வர,
கடைசியாக 18வது முறையாக வந்த போது, ஸ்ரீ ராமானுஜருக்கு பரம சந்தோஷத்துடன்  உபதேசித்தார் என்று பார்க்கிறோம்.

'நான்' என்ற கர்வமே இல்லாமல், "'பெருமாளே கதி' என்று இருக்கும்  யதிராஜருக்கே "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை உபதேசம் செய்வதற்கு, அத்தனை தயக்கம் காட்டினார்கள் என்று பார்க்கிறோம்.

மந்திரங்களை, அதன் உட்பொருளை உலகத்திற்கு சொல்ல ஏன் தயக்கம் காட்டினார்?

ஏன் மந்திரங்களை ரகசியமாக வைத்து இருந்தார்கள்?
எதற்காக பயந்தார்கள்?

மந்திரங்கள் ரகசியமாகவே இருக்க வேண்டும், யாருக்கும் தெரிய கூடாது என்று நினைக்கவில்லை.
மந்திரங்களின் வீரியமும், அதன் அர்த்தமும் எல்லோருக்கும் தெரிந்தால், விபரீதமாக முடிந்து விடுமோ என்று பயந்தார்கள்.

யதிராஜரான ராமானுஜரையே 18 தடவை (18×200= 3600KM) நடக்க வைத்த பின்பு தான்,
திருக்கோஷ்டியூர் நம்பி, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து, அதன் அர்த்தம் சொன்னார் என்றால்,
மந்திரங்களை வெளி படுத்தவோ, அதன் அர்த்தங்களை சொல்ல கூடாது என்று நினைக்கவில்லை என்று தெரிகிறது.
ஆனால், மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தகுதி இல்லாதவர்களுக்கு சொல்லி விட கூடாதே!! என்று பயந்தார்கள் என்று தெரிகிறது.

சில வேத மந்திரங்கள் உலகிற்கு தெரிந்தாலும், நமக்கே காதில் விழுந்தாலும், அதன் அர்த்தங்கள் வெளி உலகிற்கு வருவதில்லை.

மந்திரங்களின் அர்த்தத்தை சொல்ல, ஏன் பயந்தார்கள்?


பொதுவாக,
மக்களின் இறை பக்குவம், மூன்று நிலைகளில் இருக்கிறது.
1. கடவுள் இருக்கிறார். அவர் நம்மை காப்பாற்றுகிறார் என்று நினைப்பது, முதல் நிலை.
2. கடவுள் நிச்சயமாக உள்ளார் என்று அனுபவத்தில் உணர்ந்து, அவர் யார்? நமக்கும் அவருக்கும் என்ன உறவு? என்று பரமாத்மா வாசுதேவனை பற்றி நினைப்பது, இரண்டாவது நிலை.
3. தனக்கும் பரமாத்மாவாகிய நாராயணனுக்கு உள்ள சம்பந்தம் தெரிந்து கொண்டதால், பிறவிக்கு காரணம் புரிந்ததால், உலக ஆசையை விட்டு, இந்த ஜென்மத்திலேயே தெய்வத்தை அடைய வேண்டும் என்ற பேராவல் உண்டாகி, காதல் கொண்டு உருகுவது, மூன்றாவது நிலை.

நம்மை கடவுள் காப்பற்றுவார் என்ற நம்பிக்கையை, 'புராணங்கள், இதிகாசங்கள்' படிப்பதன், கேட்பதன் மூலம் நாம் பெறுகிறோம்.
அதனால் தான், புராணங்களை, இதிகாசங்களை பொது மேடைகளில், கோவில்களில் மகான்கள், சந்யாசிகள், பெரியோர்கள் என்று அனைவரும், பொது மக்கள் அனைவருக்கும் எடுத்து சொல்லி,
நமக்கு ஆன்மீக வளர்ச்சியும், தர்மத்தில் இருந்தால் கடவுள் காப்பற்றுவார் என்ற நம்பிக்கையையும் வளர்க்கின்றனர்.

"இறைவன் இருக்கிறார்" என்று திடமாக அனுபவத்தில் உணர்ந்தவன்,
புராணங்கள், இதிகாசங்கள் கேட்டு கேட்டு,
"தன்னை,  கடவுள் காப்பற்றுகிறார்", "நாம் ஹிந்து தர்மத்தில் இருக்க வேண்டும்" என்ற அளவில் ஆன்மீக சிந்தனை பெற்ற ஒருவன், தொடர்ந்து புராணங்களை, இதிகாசங்களை கேட்க கேட்க, படிப்படியாக உயர்ந்து,
"தனக்கு கடவுள் என்ன செய்வார்?" என்ற கேள்வியுடன் நிற்காமல்,
'அவர் எப்படி இருப்பார்? 
அவருக்கும் நமக்கும் என்ன உறவு? 
அவர் எப்படியெல்லாம் நம்மிடம் உறவாடுகிறார்?' என்று பல கேள்விகள் உருவாகி,
அவரை தெரிந்து கொள்ள ஒரு கட்டத்தில் ஆர்வம் பெறுகிறான். 

முதல் நிலையிலிருந்து, இரண்டாவது நிலைக்கு முன்னேறுகிறான்.

இந்த ஆர்வத்தை பெற்றவன், மகான்களின் துணையை தேடுகிறான். 
"ஸத் சங்கத்தில்" தன்னை சேர்த்து கொள்கிறான்.
"நாம் ஹிந்து தர்மத்தில் இருக்க வேண்டும்" என்று ஆசைப்பட ஆரம்பிக்கிறான்.

ராம நாமத்தை, பிரணவ மந்திரத்தை, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஒரு ஆத்ம குருவிடம் உபதேசம் பெற்று, அதை எப்பொழுதும் ஜபம் செய்ய ஆசைப்பட ஆரம்பிக்கிறான்.

ஆர்வம் அதிகமாகி, மந்திரங்களின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள ஆசைப்படுகிறான்.
அததற்கு அதிகாரியான, குருவை தேடி அலைந்து, மந்திரங்களின் உட்பொருளை அறிந்து கொண்டு, அர்த்தம் புரிந்து கொண்டு, மந்திரங்களை ஜெபிக்க ஆரம்பிக்கிறான். 
இது இரண்டாவது நிலை.


யதிராஜரான ராமானுஜர், அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் பெற்று, அதன் அர்த்தம் தெரிந்து கொள்ள, 18 தடவை (18×200= 3600KM) நடந்து நடந்து, கடைசியில் தான் நம்பி, அஷ்டாக்ஷர மந்திரத்துக்கு அர்த்தம்  சொன்னார் என்று பார்க்கிறோம்.
  • இறை எண்ணமே இல்லாத நாதீகர்கள்
  • புராணங்கள், இதிகாசங்கள் கேட்டு, ஆன்மீக எண்ணம் உடையவர்கள், 'தன்னை கடவுள் காக்கிறார்' என்ற ஞானம் உடையவர்கள், ஆனால், கடவுளை பற்றி அறிந்து கொள்ள தாகம் இல்லாதவர்கள், 
மந்திரங்களை பற்றியோ, அதன் உள் அர்த்தங்களை பற்றியோ அறிந்து கொள்வது, பெரும் ஆபத்தை தந்து விடும் என்ற பயத்தாலும், தயக்கத்தாலும், மந்திரங்களை, அதன் அர்த்தங்களை ரகசியமாக வைத்தனர்.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை சொல்ல கூடாது என்பதற்காக ரகசியமாக வைத்து கொள்ளவில்லை.
இதை தெரிந்து கொள்ள தகுதி உள்ளவர்களாக உள்ளார்களா? என்பது தான் கேள்வியாக உள்ளது.

அஷ்டாக்ஷர மந்திரத்தை ராமானுஜருக்கு சொல்ல ஏன் தயங்கினார்?
"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தின் ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தையும் பார்த்தோம் என்றால்,
"ஜீவனாகிய நாம் சுதந்திரமானவன் இல்லை, நாம் பரமாத்மா நாராயணனுக்கு கட்டுப்பட்டவன். 
அதனால், அவரே கதி என்று சரணாகதி செய்து, 
நான் என்ற கர்வத்தை விட்டு, "பெருமாள் இஷ்டம்" என்று இருக்க வேண்டும்" என்று சொல்கிறது.

திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் சாரத்தையே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,
சர்வ தர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாப்யோ
மோக்ஷ இஷ்யாமி மா சுச:
என்று தெளிவாக சொல்கிறார்.
அதாவது,
அனைத்து (சர்வ) தர்மத்தையும் விட்டு,
என்னை ஒருவனையே சரண் அடைந்து விடு,
நான் உன் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து,
நீ உலகத்தில் வாழும்வரை காப்பாற்றி, உனக்கு பிறவா நிலையான மோக்ஷமும் தருகிறேன்
என்று தெளிவாக சொல்கிறார்.


"கடவுள் என்னை காப்பாற்றுகிறார்" என்ற அளவில் மட்டும் ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள்,
"தெய்வம் எனக்கு என்ன செய்யும்?" என்ற அளவில் ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள்,
"கடவுளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற தாகம் இல்லாதவர்கள்,
திருஅஷ்டாக்ஷர மந்திரத்தின் அர்த்தத்தை, தெரிந்து கொண்டால்,
பகவத் கீதையில் கடைசியாக ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதை புரிந்து கொண்டால்,
"நான் பெருமாளிடம் சரண் அடைந்து விட்டேன். அவர் நான் செய்த பாவங்களை எப்படி இருந்தாலும் மன்னித்து விடுவார். அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்.
என் தர்மத்தை விட்டாலும், அவர் என்னை காப்பாற்றுகிறார்"
என்று பேச ஆரம்பித்து விடுவான்.

பிராம்மணன், "பெருமாளை  சரண் அடைந்து விட்டேன், நான் சந்தியா வந்தனம் செய்ய தேவையில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

வியாபாரி, "பெருமாளை சரண் அடைந்து விட்டேன், நான் வியாபாரத்தில் ஏமாற்றினாலும் பரவாயில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

சூத்திரன் (வேலைக்கு செல்பவன் (employee)), "பெருமாளை சரண் அடைந்து விட்டேன், நான் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி ஏமாற்றினாலும் பரவாயில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

இன்னும் சிலர்,
"ராம" என்ற தாரக மந்திரத்தின் பொருளே "சம்சார சாகரத்தில் இருந்து கடக்க (தாரக) செய்யும்" என்பது தான்.   
"ராம ராம ராம..." என்று தாரக மந்திரத்தை சொன்னாலேயே போதும், பூஜை, ஆசாரம், அனுஷ்டானம் செய்ய வேண்டிய தேவையில்லை." என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

மந்திரங்களின் அர்த்தங்களை,
நாத்தீகர்கள்,
ஆன்மீக நிலையில் முதல் நிலையில் உள்ளவர்கள்,
காமம் கோபம் பொறாமை குணம் கொண்டவர்கள் தெரிந்து கொள்வதால்,
"தன் தர்மத்தை விட்டாலும், மோக்ஷம் கிடைத்து விடும்" என்று ஆரம்பிப்பார்கள்.
"தர்மத்தை காக்க தான், தெய்வங்களே அவதாரம் செய்கிறார்கள்" என்பதை மறந்து பேசுவார்கள்.

தெய்வங்களை குறித்து ஜபம் செய்ய வேண்டிய சில மந்திரங்களை, பெண்களை மயக்க பயன்படுத்துவார்கள்.

இப்படி பக்குவம் இல்லாத நிலையில் 80% சதவீத மக்கள் இருப்பதால், பொதுவாகவே மந்திரங்கள், அதன் அர்த்தங்கள் பொது மேடைகளில் சொல்லப்படுவதில்லை.

திருக்கோஷ்டியூர் நம்பி, 18 முறை வந்த ஸ்ரீ ராமானுஜர், கோபத்தை, பொறாமையை ஜெயித்தவர் என்று அறிந்து,
"திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தின் பொருளை சொன்னாலும், மோக்ஷம் கிடைக்கும் என்றாலும்,
தன் தர்மத்தை விட்டு விட மாட்டார் என்று நம்பிக்கை கொண்டார்.

"தனக்கு மோக்ஷம் நிச்சயம்" என்றாலும், ஸ்ரீ ராமானுஜர், கடைசி வரை தன் தர்மங்களை விடவில்லை.



தன் தர்மத்தை விட்டு, "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை சொல்லி மோக்ஷம் அடைய ஆசைப்படுபவன், பகவானை ஏமாற்றுகிறான்.
பகவான் தன்னை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும், மோக்ஷ வாசலை திறந்து விடுகிறார், கருணையின் காரணத்தால். 
ஆனால்,
உண்மையான பக்தன், தெய்வம் விரும்பும் படியாக உலகில் தர்மத்தில் வாழ்ந்து, பிறகு மோக்ஷம் அடையவே விரும்புவான்.

ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ ராமானுஜர்,  "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை உபதேசம் பெற்றதும், 
கோவிலின் உச்சிக்கு சென்று, அங்கு கூடி இருந்த அனைவருக்கும்
"ஓம் நமோ நாராயணாய! என்று சொல்லுங்கள், உங்கள் அனைவருக்கும் மோக்ஷம் நிச்சயம்" என்று சொல்லி விட்டார்.

ஓம் நமோ நாராயணனாய மந்திரத்தின் விளக்கம் இதோ

திருக்கோஷ்டியூர் நம்பி,
தகுதி உள்ளவர்களுக்கே சொல்ல வேண்டும், 
தகுதி இல்லாதவர்களுக்கு சொன்னால், "சரணாகதி செய்து விட்டேன் ! தர்மத்தை விட்டாலும், எனக்கு பகவான் நிச்சயம் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்றெல்லாம் பேச ஆரம்பித்து கலி யுகத்தில் அனைவரும் தர்மத்தை விட்டு விடுவார்களே !! என்று பயந்தார்.

"தன்னால் உலகம் அதர்மத்தில் வீழ்ந்தது" என்று ஆகி விட கூடாது என்று பயந்தார்.

பரவாசுதேவனின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனே, ஸ்ரீ ராமானுஜர்.

"தர்மத்தில் இருக்காமல், மோக்ஷம் கிடைத்து விடும் என்று சொல்லி, ஆஸ்தீகர்கள் கூட மந்திரங்களை தவறாக பயன்படுத்தி விடுவார்கள். அதனால், 
இது போன்ற மந்திரங்களை தகுதி இல்லாதவர்களுக்கு சொல்ல கூடாது என்பது தவறில்லை. 
ஆனால், 
இப்படியே மறைத்து வைத்து இருந்தாலும்,
கலியின் ஆக்கிரமிப்பில், சுய நலம் அதிகமாகி, பெரும்பாலான  மக்கள் இனி வரும் காலங்களில், அவர்களே அவரவர்கள் தர்மத்தை விட்டு, பெருமாளையும் அறிந்து கொள்ளாமல், மிலேச்ச மதங்களில், பொய் மதங்களில், பொய் தெய்வங்கள் தனக்கு சொர்க்கம் கொடுக்கும், நன்மை செய்யும் என்று நம்பிக்கொண்டு போய்  விடுவார்கள்'
என்று அறிந்து இருந்தார் ஸ்ரீராமானுஜர்.

'கலியில், 
பெரும்பாலான மக்கள், தங்கள் சுய நலத்தால், எப்படி இருந்தாலும், தர்மத்தை விட்டு விடுவார்கள்' 
என்று அறிந்த நம் ராமானுஜர்,
"தர்மத்தை விட்டாலும் பரவாயில்லை, ஓம் நமோ நாராயணாய!! என்று சொல், பகவான் உன்னை ரக்ஷித்தது, மோக்ஷமும் கொடுப்பார்"
என்று பெரும் கருணை கொண்டு,
மறைத்து வைத்திருந்த திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை அனைவருக்கும் கொடுத்து விட்டார்.
"தெய்வம் வந்து இந்த மந்திரத்தை அனைவருக்கும் சொல்லட்டும், தானாக சொல்ல கூடாது" 
என்று இருந்த திருக்கோஷ்டியூர் நம்பி,
கலியில் உலக மக்கள் யாவரும் தர்மத்தை விட்டு, கதி இன்றி இருக்க போகிறார்கள் என்று உணர்ந்து,
திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை அனைவருக்கும் அள்ளி கொடுத்த, ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ ராமானுஜரை கண்டு மனம் மகிழ்ந்தார்.


"ஓம் நமோ நாராயணாய" என்று கூட சொல்லாமல் இருக்கிறார்கள் பலர்.
"இவர்களுக்கும் ஒரு வழி காட்ட வேண்டுமே" என்று, பரவாசுதேவன் நாராயணனே "ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராக" அவதாரம் செய்து, மிகவும் சுலபமான மந்திரமாகவும் இருக்க வேண்டும், கேட்பதற்கும் இசையாக இருக்க வேண்டும் என்று,
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்று ராம என்ற தாரக மந்திரத்தையும், தன் பிற அவதாரங்களான நரசிம்ம (ஹரே), கிருஷ்ண மந்திரத்தையும் சேர்த்து தொடுத்து, ஒரு இசை மாலையாக கொடுத்து விட்டார்.
இந்த மந்திரத்தை இன்று பாடாத மனிதன் இல்லை. 
ஆன்மீக எண்ணமே இல்லாதவர்களை கூட, இந்த இசை இழுக்கிறது.
வெளிநாட்டினர் பலர், இந்த மந்திர மாலைக்கு மயங்கி கிடக்கின்றனர்.

ஹிந்துவாக பிறந்ததில், பெருமை கொள்வோம்.

மந்திரங்களை அதன் அர்த்தங்கள் புரிந்து கொண்டு, ஜபம் செய்ய செய்ய, இரண்டாம் நிலையில் இருந்து, நாளடைவில், குருவின் துணையால் மூன்றாம் நிலையை அடைகிறோம்.

இந்த மூன்றாம் நிலை அடைந்தவர்களே, நம் பாரத தேசத்தில் வாழ்ந்த மகான்களும், வாழும் மகான்களும்.

ஆழ்வார்கள் பாடிய சில பாசுரங்களை படித்து அர்த்தம் புரிந்து கொண்டால், "தான் ஒரு பெண் போலவும். பெருமாள் தன்னை எப்பொழுது மணந்து கொள்வார்?" என்பது போலவும் பாசுரங்களை பார்க்கிறோம்.

இது போன்ற பாசுரங்களை ஒரு நாத்தீகனோ, ஆன்மீக வளர்ச்சியில் முதல் நிலையிலோ, இரண்டாம் நிலையிலோ இருக்கும் ஆஸ்தீகர்கள் கூட,
"ஏன் இப்படி ஆழ்வார் பாடுகிறார்? ஏன் தன்னை பெண் என்று சொல்லி கொண்டு, பாடுகிறார்?"
என்றெல்லாம் கேட்க தோன்றும்.

4000 திவ்ய பாசுரங்கள், நாயமார் பதிகங்கள், மீராவின் பாட்டுக்கள், மகான்களின் ஸ்லோகங்கள் படிப்பதற்கே, நமக்கு ஒரு தகுதி தேவைப்படுகிறது.

ஆழ்வார்கள் பாசுரத்தை படித்து, இது என்ன காமம் கலந்து இருக்கிறது? என்று கூட சொல்லி விடுவான் நாத்தீகன்.

இறை நிலையில் மூன்றாம் நிலையில் உள்ள இவர்கள்,
உலக நினைவே இல்லாமல், 
மோக்ஷம் வேண்டி கதறி அழும், பாசுரங்கள் உண்டு, காதல் கொண்டு, தன்னை சேர்த்து கொள்ள பிரார்த்திக்கும், பாசுரங்கள் உண்டு.

மோக்ஷத்தை இந்த ஜென்மத்தோடு பெற வேண்டும் என்று மூன்றாம் நிலையில் உள்ள மகான்களால் மட்டுமே, ஆழ்வார்கள் பாடிய  பாசுரங்களை, உண்மையில் புரிந்து கொள்ள முடியும்.


குருவின் கிருபையை பற்றி கொண்டு,
நாமும் புராணங்களை கேட்டு, புரிந்து கொண்டு, படிப்படியாக முன்னேறி, நாம் தர்மத்தில் இருந்தால், பகவான் காப்பாற்றுவார் என்ற பக்குவத்தை பெற்று,
பகவானை பற்றி அறிய "மந்திரங்கள் அதன் அர்த்தங்களை" புரிந்து கொண்டு ஜபம் செய்து,
மேலும் நம் ஆன்மீக நிலையை வளர்த்து கொண்டு,
மோக்ஷம் என்ற பிறவா நிலையை அடைய, நாராயணனை சரண் அடைவோம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ராமானுஜர்.
வாழ்க ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்,
வாழ்க நம் பாரத பூமியில் வாழும் மகான்கள்.

தர்மத்தை காப்பதற்கு தான், தெய்வங்களே அவதாரம் செய்கின்றனர்.
ஹிந்துக்கள் அவரவர்கள் தர்மத்தில் இருப்பது, ஹிந்துக்களுக்கு அவசியம்.

Sandhya Vandanam is a Key Dharma for Brahmin

Sandhya Vandanam - Morning (With meaning)



Sandhya Vandanam - Afternoon (With meaning)

Sandhya Vandanam - Evening (With meaning)