Followers

Search Here...

Wednesday 27 September 2017

சந்தியா வந்தனத்தில், தலை, மூக்கு, இதயம் தொட்டு செல்லும் ஆவாஹன மந்திரத்தின் பொருள் என்ன? நிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன?




நிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன?
சந்தியா வந்தனத்தில்,
ஜபம் செய்யும் முன் தலை, மூக்கு, இதயம் தொட்டு செல்லும் ஆவாஹன மந்திரத்தின் பொருள் என்ன?

ஓம் என்ற ப்ரணவ மந்திரமே, மற்ற அனைத்து மந்திரத்துக்கும் மூல காரணம்.

பிரபஞ்சத்தில் உள்ள ஒலி அலைகளை தியானத்தில் கவனித்து, மந்திரங்களை கண்டுபிடித்து கொடுத்தவர்கள் நம் ரிஷிகள்.

உருவாக்கப்பட்ட பிற மதங்கள் "நாங்கள் ஆடை இல்லாத, அறிவு இல்லாத ஆதாம், ஏவாள் மூலம் வந்தோம்" என்று பெருமிதமாக சொல்கின்றனர்.

சனாதன தர்மத்தில் இருக்கும் நாம், "வேத மந்திரங்கள் கொடுத்த பிரமிக்க தக்க அறிவாளிகளாக இருக்கும் ரிஷிகளின் பரம்பரை என்று இன்று வரை எந்த ரிஷியின் கோத்திரத்தில் வருகிறோம்" என்று சொல்கிறோம்.

நம் ரிஷிகள் கண்டுபிடித்ததே வேத மந்திரங்கள்.





இவர்கள் கண்டுபிடித்த
ஒவ்வோரு மந்திரமும், ஒவ்வொரு சந்தஸ் (a measure) கொண்டதாக இருக்கிறது.
ஒவ்வொரு மந்திரமும் ஒரு தேவதையை குறித்ததாக உள்ளது.

நாம் தினமும் செய்யும் சந்தியா வந்தனத்தில்,
ப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன்,
காயத்ரி மந்திரம் சொல்லும் முன்,
நாம்
காயத்ரி மந்திரத்தை கொடுத்த ரிஷியின் பெயரை சொல்லி தலையை தொட்டு,
காயத்ரி மந்திரத்தின் சந்தஸை நினைவில் கொள்ளும் போது  மூக்கை தொட்டும்,
காயத்ரி மந்திரம் வணங்கும் தேவதையை நினைவில் கொள்ளும் போது இதயம் தொட்டு ஆவாஹன செய்கிறோம், பாவிக்கிறோம்.

சந்தியா வந்தனத்தில்,
ப்ரணவ ஜபம் செய்யும் முன்:
ப்ரணவஸ்ய ருஷிர் ப்ரஹ்ம,
தேவீ காயத்ரீச் சந்த:
பரமாத்மா தேவதா !
என்று நாம் சொல்லும் போது, தலை, மூக்கு, இதயத்தை முறையே தொடுகிறோம்.
இதற்கு ப்ரணவ ந்யாஸம் என்று பெயர்.
இங்கு பரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

விளக்கம்:
ப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன்னர்,
இந்த மந்திரத்தை எந்த ரிஷி கண்டுபிடித்தார்?
எப்படி சொல்ல வேண்டும்?
யாரை குறித்து இந்த மந்திரம் துதிக்கின்றது ?
என்று தியானிக்கிறோம்.
பரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

1. ப்ரணவஸ்ய ருஷிர் ப்ரஹ்ம
இங்கு, நம் தலையை தொட்டு "ப்ராணாயாம மந்திரத்திற்கு ப்ரம்மாவே ரிஷி" என்று சொல்கிறோம்.

வேத ஸ்வரூபியான ஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, அவர் பாதம் நம் தலையில் பட்டு நமக்கு இந்த ப்ராணாயாம மந்திரம் ஸித்தி ஆகட்டும் என்று பாவனை செய்து தலையை தொடுகிறோம்.

2. தேவீ காயத்ரீச் சந்த:
பின்னர், மூக்கை தொட்டு ப்ராணாயாம மந்திரத்தின் சந்தஸ் "தேவீ காயத்ரீ சந்தஸ்"ல் என்று உள்ளது என்று சொல்கிறோம்.


ஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, ப்ராணாயாம மந்திரத்தை, காயத்ரி சந்தஸ் முறையில் சொல்ல வேண்டும் என்று நம் மனதில் நிறுத்த, நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அது போல,
மந்திரங்களுக்கு அதன் சந்தஸ் (உச்சரிப்பு) முக்கியம் என்று உணர்ந்து, பாவனையாக மூக்கை தொடுகிறோம்.

3. பரமாத்மா தேவதா
பின்னர், இதயத்தை தொட்டு, நாம் சொல்லப்போகும் இந்த ப்ராணாயாம மந்திரம், மூல பொருளான அந்த பரமேஸ்வரனை, பரவாசுதேவனை, பரப்ரம்மத்தை துதிக்கின்றது என்று சொல்கிறோம்.

ஸ்வயம் ப்ரம்மாவே, "இந்த ப்ராணாயாம மந்திரத்தின் மூலம் பரவாசுதேவனை துதித்தார்" என்று உணர்ந்து, "ப்ராணாயாம மந்திரம்" நாம் ஜெபிக்கும் போது, அந்த பரமாத்மாவாகிய பரவாசுதேவன், நம் இதயத்தில் வந்து தங்கி, நமக்கு அனுக்கிரகம் செய்யட்டும் என்று பாவனை செய்து நம் இதயத்தை தொடுகிறோம்.

முக்கியமாக 7 சந்தஸ் உண்டு:
ப்ராணாயாம மந்திரம், காயத்ரி மந்திரம் போன்றவை, "காயத்ரீ சந்தஸில்" உள்ளன.

பெரும்பாலான நம் இதிஹாசங்களும், புராணங்களும் "அனுஷ்டுப் சந்தஸில்" உள்ளன.

"அனுஷ்டுப் சந்தம்" என்பது "மொத்தம் 32 சொல்லுடன் கூடியது".
நான்கு அடிகள், ஒர் அடிக்கு 8 சொல்.
மொத்தம் 32 சொல்.

"காயத்ரி சந்தம்" என்பது "மொத்தம் 24 சொல்லுடன் கூடியது".
மூன்று அடிகள், ஒர் அடிக்கு 8 சொல். 
மொத்தம் 24 சொல்.

காயத்ரி மந்திரத்தை, அர்க்ய ப்ரதானம் செய்யும் போது, 24 சொல்லுடன் "காயத்ரி சந்தஸில்" சொல்ல வேண்டும்.
தத் வி துர் ரே னி யம்
பர் கோ தே ஸ்ய தீ ஹீ !
தி யோ யோ ந: ப்ர சோ யாத் !!

இப்படி சொல்லும் போது, காயத்ரீ சந்தஸ் முழுமையாக 24 சொல்லுடன் இருக்கிறது.

ஆனால், அர்க்யமாக செய்யாமல், காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்யும் போது 23 சொல்லாக மனதில் ஜபிக்க வேண்டும்.

காயத்ரீ சந்தஸ் முழுமையாக இல்லாமல் 23ஆக இருப்பதால், "நிச்ருத் காயத்ரி" என்று சொல்லி, பின்னர் ஜபம் செய்கிறோம்.

நிச்ருத் காயத்ரி மந்திரமாக சொல்லும் போது,
தத் வி துர் ரே ன்யம்
பர் கோ தே ஸ்ய தீ ஹீ !
தி யோ யோ ந: ப்ர சோ யாத் !!
என்று 23ஆக மனதில் ஜபிக்க வேண்டும்.

நிச்ருத் காயத்ரி மந்த்ரத்தை மனதால் மட்டுமே சொல்ல வேண்டும்.

ஒம்காரமே காயத்ரி மந்திரமாக இருப்பதால், ஒம் பூர் புவஸ் ஸூவ: ! என்று  எப்பொழுதும் காயத்ரி மந்திரத்துடன் சேர்த்து சொல்ல வேண்டும்.

நிச்ருத் காயத்ரி மந்த்ரத்தை சொல்லும் முன்,
ஸாவித்ர்யா ருஷிர் விச்வாமித்ர: ! 
நிச்ருத் காயத்ரீச் சந்த: ! 
ஸவிதா தேவதா !!
என்று சொல்லி, "தலை, மூக்கு, இதயத்தை" தொடுகிறோம்.
இங்கு காயத்ரி தேவையான வேத மாதாவை, நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

ப்ராணாயாம மந்திரத்துக்கு முன் சொன்ன பரவாசுதேவனை ஆவாஹனம் செய்தது போல, நிச்ருத் காயத்ரி மந்திரம் சொல்லும் முன், காயத்ரி தேவியை ஆவாஹனம் செய்கிறோம்.

"ஓம்" என்ற மந்திரத்தின் மறு உருவான, "காயத்ரி மந்திரத்தை" கண்டுபிடித்து, வேத மாதாவாகிய காயத்ரி என்ற சாவித்ரி என்ற சரஸ்வதி தேவியை உபாஸனை செய்து, தரிசனமும் செய்த விச்வாமித்ர ரிஷியை தியானித்து, அவர் பாதம் நம் தலையில் படட்டும் என்ற பாவனையில் நாம் தலையை தொடுகிறோம்.

"காயத்ரி மந்திரம் 24ஆக இல்லாமல், ஒன்று குறைந்து 23ஆக இருப்பதால், காயத்ரீ சந்தஸ், நிச்ருத் காயத்ரீ சந்தஸ் ஆக சொல்ல வேண்டும்" என்று மனதில் நிறுத்தி, நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அதை போன்றது காயத்ரி மந்திரத்துக்கு சந்தஸ் என்று குறிக்க, மூக்கை தொடுகிறோம்.




காயத்ரி மந்திரத்தை ஜபிக்கும் முன், "காயத்ரீ தேவியாகிய சாவித்ரி தேவியை மனதில் த்யானிப்போம்" என்று இதயத்தை தொடுகிறோம்.
இங்கு காயத்ரீ வேத மாதாவை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

இந்த ஞானத்தோடு, காயத்ரி ஜபத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டு செய்யும் பொழுது, விஸ்வாமித்திர ரிஷியின் ஆசியும், காயத்ரீ தேவியின் அணுகிரஹமும் கிடைக்கிறது.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 

Thursday 13 April 2017

தாலி கட்டுவதை விட, பாணிக்ரஹனம் தான் மிக முக்கியம் என்று சொல்லப்படுகிறது. தெரிந்து கொள்வோம்.- ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை, ஆசைக்கு ஒரு பெண்

இந்த வைதீக திருமணத்தில், பாணிக்ரஹனம் செய்து கொள்ளும் மணமகன், மணமகளை பார்த்து "ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தையும், ஆசைக்கு ஒரு பெண் குழந்தையும் நமக்கு கிடைக்கட்டும்" என்ற அர்த்தத்தில், மணப்பெண்ணின் 5 விரல்களை சேர்த்து பிடித்து மந்திரம் சொல்லுகிறான்.


ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை என்று கேட்பதற்கு உண்மையான அர்த்தம் :

இது முதலில் ஆஸ்தி அல்ல, அஸ்தி என்று நாம் அறிய வேண்டும்.
இங்கு, ஆண் மணப்பெண்ணின் 5 விரல்களை பிடித்து "என்னுடைய வம்ச பரம்பரை, அழிந்து விடாமல் "அஸ்தி" என்று சொல்லும்படியாக தொடர்ந்து இருக்க வேண்டும். அதற்கு நமக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும்" என்கிறான். கட்டை விரல் ஆண் என்பதை குறிக்கும்.

ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்வது கொஞ்சுவதற்காக அல்ல. குழந்தையாக இருக்கும் போது தான் கொஞ்சுவதெல்லாம்.  பையன் வளர்ந்த பின்னும் கொஞ்சுவதற்காக ஆண் குழந்தை வேண்டும் என்று இங்கு  கேட்கவில்லை.

பிற் காலத்தில் அவன் சம்பாதித்து பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்கவில்லை.

என்னுடைய வம்சத்தில் என் வரை காத்து வந்த பழக்கவழக்கம், கலாச்சாரம், தெய்வ பக்தி, ஒரு ஆண் குழந்தை மூலம் மேலும் வளரட்டும் என்பதற்காகவே இப்படி ஒரு பிரார்த்தனை. சுயநலத்திற்காக அல்ல.


ஆசைக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று கேட்பதற்கு உண்மையான அர்த்தம் :

பெண் குழந்தை பிறந்தால் நம்மிடம் ஆசையாய் இருக்கும் என்பதற்காகவா? இல்லை.

நாம் (ஆண்) கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த போது, யாரோ ஒருவர் (மாமனார்) தன் பெண் குழந்தையை குழந்தை பருவத்தில் இருந்து ஜாக்கிரதையாக வளர்த்து, வேறு கோத்திரத்தை சேர்ந்த நமக்கு, நம் குடும்பம் வ்ருத்தியாகட்டும் என்று தன் பணத்தையும் செலவழித்து, பெண்ணையும் தானமாக கொடுத்தாரே !!.
நாம் சுகமாக இருப்பதற்கும், நம் குடும்பம், நம் தர்மம் வ்ருத்தியாவதற்கும் வளர்த்த பெண்ணை அப்படியே கொடுத்து விட்டாரே !! இத்தனை வருடம் தன் பெண்ணை வளர்த்தது, கடைசி காலம் வரை இவள் என்னை காப்பாள் என்று இல்லாமல், அவளையும், அவள் திறன், சம்பாத்தியம் அனைத்தையும் நான் அனுபவிக்கலாம் என்று தானம் செய்து விட்டாரே !!  எத்தனை பெரிய மனிதன் அவர் !!
இப்படி ஒருவர் நமக்கு கொடுத்ததால் தானே நமக்கு குடும்பம் ஏற்படுகிறது.

எங்கிருந்தோ வந்த அவள், நமக்காக வாழ்நாள் முழுதும் இருந்து, நம் குடும்பத்தை பார்த்து கொள்வாள். இதை நினைக்கும் போது, நாமும் இதே போன்று ஒரு பெண் குழந்தை பெற்று, இன்னொரு சத் குடும்ப பையனுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் என்று ஆண், மணப்பெண்ணின் 5 விரல்களை பிடித்து, "அஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு பெண்ணும்" நம் இல்லற வாழ்வில் பெற்றுக் கொள்வோம் என்கிறான்.


இந்த பாணிக்ரஹன நிகழ்ச்சி, அந்த மணபெண்ணுக்கு, அந்த மணமகனிடம் ஒரு நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. இவனிடம் ஏற்பட்ட பெண் குழந்தை ஆசை, தன் தந்தை செய்த "கன்னிகாதானம்" என்ற உயர்ந்த தானத்தை கண்டு தான் என்று அறிந்து கொள்கிறாள். தன் தந்தையின் இந்த "கன்னிகாதானம்" இவன் மனதிலும் தானம் செய்யும் ஆசையை உருவாக்கி உள்ளது. அதனால் தான், தனக்கும் ஒரு பெண் குழந்தை கேட்கிறான் என்று உணர்கிறாள்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka

தாலி கட்டுவது எதற்கு? தாலி 3 காரணங்களுக்காக ஆண், பெண்ணுக்கு கட்டுகிறான். தெரிந்து கொள்வோமே

தாலி கட்டுவது மட்டுமே திருமணம் அல்ல.
தாலி கட்டுவது, இந்த இருவரும் கணவன் மனைவி ஆவதற்கு முன் நடக்கும் ஒரு வைதீக சடங்கு.


இதையே திருமணம் முடிந்தது, கணவன் மனைவி ஆகிவிட்டனர் என்று நினைத்தால், அது தவறு. இவர்கள் இன்னும் கணவன் மனைவி ஆகவில்லை.

இதற்கு பின் இவர்கள் இருவரும், அக்னியை வலம் வந்து, சப்தபதி என்ற சடங்கு செய்த பின்பு தான், கணவன் மனைவி ஆகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சரி, தாலி கட்டுவது எதற்கு ?
கணவன், மனைவி ஆவதற்கு முன், கணவன் இவளிடம் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தம் போன்றது (Setting up Expectation).

திருமணத்தில் திருமாங்கல்யம் (தாலி) கட்டுகிறான் மணமகன். தாலி 3 காரணங்களுக்காக ஆண் பெண்ணுக்கு கட்டுகிறான்.

1. மாங்கல்யம் என்பது பெண்களின் தற்காப்புக்காக ஏற்பட்டது. அவள் மணமானவள் என்பதைக் மற்றவர்களுக்கு காட்டும் அடையாளம். இந்த அடையாளம், இவளை தீய குணம் உள்ளவர்களிடம் இருந்து காக்கும். பலர் தாலி அணிந்த பெண் என்று பார்த்தவுடனேயே மரியாதையாய் பழகுவர்.
ஒரு ஆணின் வெளி தோற்றத்தை வைத்து எந்த பெண்ணும் ஆசைப்படுவதில்லை, அலைவதும் இல்லை.
பெண் இவன் நல்லவன், ஆறுதல் அளிப்பவன், காப்பாற்றும் திறன் உள்ளவன் என்று பழகும் போது அறிந்து கொண்டு, அதற்கு பின் அவன் பின்னே அலைவாள்.
பெண் மற்ற ஆணுடன் பழக பழக தவறான வழிக்கு போக வாய்ப்பு உள்ளது. அதனால் பெண்ணுக்கு ஒரு ஆணை பார்த்ததினால் மட்டுமே தீய எண்ணம் தோன்றாது. ஆனால், ஆண் என்றுமே நம்பத்தகுந்தவன் அல்ல.
ஆண் வண்டு போன்றவன், பெண் பூ போன்றவள் என்று சொல்வது இதனால் தான்.


ஒரு பெண்ணை பார்த்தே இவன் சபல புத்தி கொள்வான். இதனால் தான், பெண் தாலி அணிவது அவசியம். விவேகம் உள்ள ஆண், சபல புத்தி இருந்தாலும், தாலி கட்டிய ஒரு பெண்ணை நெருங்க தயங்குவான்.

தியானம், யோகம் எல்லாம் ஆணுக்கு விதிக்கப்பட்டது போல, பெண்ணுக்கு விதிக்கப்படவில்லை. காரணம், பெண்ணுக்கு அது தேவை இல்லை.

பெண் எப்பொழுது வேறு ஆணிடம் பழகுகிறாளோ, அப்பொழுது தான், இவள் மனம் கெட வாய்ப்பு உள்ளது, ஆனால், ஒரு ஆண் பழகாமல் இருந்தாலும், பெண் உருவமே சபலத்தை கொடுத்து இவன் மனம் கெட வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் அறிந்து தான், தாலி என்பது பெண்ணுக்கு மிக மிக அவசியம் என்று விதித்தனர்.

2. தாலியை அடையாளமாக கட்டும் மணமகன், பெண்ணை பார்த்து சொல்கிறான் "இது மங்களசூத்திரம். நான் நீண்டகாலம் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி உனக்கு அணிவிப்பது. சௌபாக்கியவதியே! நீ நூறாண்டுகள் சுமங்கலியாக, சுகமாக வாழ்ந்திருப்பாயாக!". இப்படி சொல்லும் ஆண், "நீ சுகமாக வாழ நான் எப்பொழுதும் இருப்பேன். நான் இறந்து, உன்னை தனியாக விட்டு விடாமல் இருக்க எனக்கும் நீண்ட ஆயுள் தேவை. அதனால், நான் 100 ஆண்டுகள் உன்னோடு வாழ, நீ இறைவனிடம் வேண்டி பிரசாதமாக தரும் இந்த தாலியை அணிந்து கொள்" என்று ஆசையாக இவளை கடைசி வரை காக்கும் எண்ணத்துடன் அணிவிக்கிறான்.
பாணிக்ரஹனம் செய்யும் போது, உன் தந்தை மிகவும் உயர்ந்தவர் என்று சொல்லும் போது, மணப்பெண்ணுக்கு இவனிடம் அன்பு உண்டாகிறது.
மாங்கல்யம் கட்டும் போது, தனக்கு நீண்ட ஆயுள் கேட்பது, உன்னை காப்பதற்கே என்று சொல்லும் இவனிடம், மணப்பெண்ணுக்கு மேலும் அன்பு உண்டாகிறது.
இந்த அன்பு மேலும் உறுதியாக சப்தபதி என்ற சடங்கில் இருவரும் பிரிக்க முடியாத கணவன் மனைவி ஆகின்றனர்.

3. தாலி கட்டும் ஆண் வெறுமனே கட்டுவதில்லை. அவள் அணிந்து இருக்கும் தாலியில் மூன்று முடிச்சு போடுவான். தாலி எப்பொழுதும் அணிந்து இருக்கும் பெண், இந்த மூன்று முடிச்சின் காரணத்தை தினமும் ஸ்மரிக்க (ஞாபகபடுத்தக் கொள்ள) வேண்டும் என்பதற்காக தான்.

- சௌபாக்கியவதியே ! நீ எந்த செயலை செய்தாலும், முக்காலமும் உணர்ந்து இல்லற தர்மத்தைப் பேணவும்.
நீ செய்யும் செயல், பிற்காலத்தில் ஏன் இப்படி அதர்மம் செய்தோம் என்று வருந்தும் படியாக இருக்க கூடாது.
நீ செய்யும் செயல், நிகழ் காலத்தில் அதர்மம் நடப்பதற்கும் காரணம் ஆகி விட கூடாது.
நீ செய்யும் செயல், இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பழக்கம், தர்மத்திற்கு எதிராகவும் இருந்து விட கூடாது.
சௌபாக்கியவதியே ! ஆதலால், நீ எந்த செயலை செய்தாலும், முக்காலமும் உணர்ந்து, இல்லற தர்மத்தைப் நீ பேணவும்.

- மும்மூர்த்திகளுக்கு இந்த மூன்று முடிச்சுகளை அர்ப்பணிப்பது தெய்விகமான அம்சம். சௌபாக்கியவதியே ! கண்ணுக்கு தெரியாத, வரப்போகும் எந்த ஒரு ஆபத்தும் உன்னை நெருங்கி விடாமல் இருக்க, அந்த ப்ரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகள் காக்கட்டும். அதற்காகவே மூன்று முடிச்சு. 3 தெய்வங்கள் உனக்கு துணை என்று தினமும் நினைத்து, தைரியமாக குடும்பத்தை நடத்து.

- சௌபாக்கியவதியே, உலகியல் ரீதியாக தெய்வம், பெற்றோர், கணவன் மூவரையும் நீ மதிக்க வேண்டும். அதற்காவும் மூன்று முடிச்சு.

- சௌபாக்கியவதியே ! நீ மனம் - வாக்கு - உடல் இவற்றின் புனிதத்தோடு திருமண பந்தத்தைக் கடைசி வரை காக்கவும். இந்த மூன்று முடிச்சு உனக்கு இதையும் ஞாபகப்படுத்தட்டும். எக்காலத்திலும் மனத்தாலோ, வாக்காலோ, உடலாலோ உன் புனிதத்தன்மையை கெடுத்துக் கொள்ளாமல், திருமண பந்தத்தைக் நீ காக்கவும்.

காரணம் இல்லாமல் பாணிக்ரஹனம் செய்ய வில்லை, தாலி கட்டவில்லை, சப்தபதி செய்வதில்லை.
ஹிந்துவாய் இருந்தால், பல ஆச்சர்ய விஷயங்கள் நமக்கு தெரிய வரும். மேலும், நாம் ஹிந்து குடும்பத்தில் பிறந்து இருக்கிறோம் என்ற சந்தோஷமும் நமக்கு உண்டாகும்.


ஏன் எதற்கு என்ற நியாயமான கேள்விகளுக்கு பதில் சரியான பெரியோர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டாலே, பல விடைகள் கிடைக்கும். ஹிந்துவாய் பிறந்ததற்கே நமக்கு பெருமிதம் அதிகரிக்கும்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 


ஸனாதன தர்மம், யாரையும் அயோக்கியன் என்று சொல்வதில்லை. ஆச்சர்யமான பரந்த எண்ணம் கொண்டது நம் தர்மம்.

நம் ஸனாதன தர்மம், யாரையும் "அயோக்கியன்" என்று சொல்வதில்லை.
உண்மையில் யாருமே இந்த உலகத்தில் அயோக்கியன் இல்லை என்று கூட சொல்கிறது.


இந்த ஸ்லோகம் படிக்கும் போதே, எப்படி மனிதனை உயர்த்தி சொல்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

अयोग्यः पुरुषो नास्ति योजकस्तत्र दुर्लभः॥

அயோக்கிய: புருஷோ நாஸ்தி |
யோஜக தத்ர துர்லப: ||
யாருமே இந்த உலகத்தில் அயோக்கியன் இல்லை. 
அந்த அயோக்கியனிடமும் ஒளிந்து உள்ள  ஈஸ்வரனை, நல்ல குணத்தை, வெளியே கொண்டு வர அவனுக்கு ஒரு குரு இல்லாததே இவன் அயோக்கியன் போல தென்படுவதற்கு காரணம் என்று சொல்கிறது.

தன்னிடம் ஒளிந்து உள்ள நல்ல எண்ணங்களை வெளிப்படுத்த உதவி செய்யும், ஞானிகள் (குரு) கிடைப்பதே அரிது என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.

அப்படிப்பட்ட ஞானத்தில் உயர்ந்த ஒரு குரு, ஒரு அயோக்கியனை பார்க்கும் போது, அவனும் தான் புண்ணிய ஆத்மாவே என்று உணர்வான், திருந்துவான்.

அயோக்கியனுக்கு, அவனிடம் உள்ள நல்லதை எடுத்து காட்டும், உண்மையான குரு கிடைப்பதே அரிது.
வேடுவனாக கொலை கொள்ளை என்று வாழ்ந்த ருக்ஷன், நாரதரை தரிசித்த பின், வால்மீகி ரிஷி ஆனார் என்று பார்க்கிறோம்.

ஸனாதன தர்மம், யாரையும் அயோக்கியன் என்று சொல்வதில்லை. ஆச்சர்யமான பரந்த எண்ணம் கொண்டது நம் தர்மம்.


There no person who is worthless, but,
Rare indeed is the nourisher of talents.

Explained by சாரதா பீட புது ஆச்சர்யாள்.
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka

சத்தியம் பேசுபவர்கள் வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும். சத்யஸ்ய பரம் நிதானம் - முண்டகோ உபநிஷத்

ஒரு ஸமயம், சோழ அரசன், ராமானுஜ வழியில் வந்த சிஷ்யர்களிடம் தனக்குள் இருந்த சந்தேகத்தை ஒரு கேள்வியாக கேட்டார்.
பொதுவாக,
மனிதன் "தன்னை தெய்வம்" என்று சொல்லிக்கொள்ள பெருமைபடுவார்கள்.


பரந்தாமன் ஸ்ரீநாராயணன், "ஸ்ரீராமராக" அவதாரம் செய்தும், பகவான் "தன்னை மனிதன்" என்று சொல்லிக்கொண்டார்.

தன் அவதாரம் முழுவதும் மனிதனை போன்றே இருந்து, தன் தெய்வ ஆச்சர்யங்களை காட்டாமல் இருந்தார்.
குணத்தினால் மட்டுமே தெய்வ குணங்கள் தெரிந்தன.

இப்படி தன்னை மனிதனை போன்றே காட்டிக்கொண்டு, மனிதன் எப்படி தர்மபடி வாழ வேண்டும்? என்று நமக்கு காட்டினார்.

இப்படி இருக்க, ஜடாயு என்ற பறவைக்கு ப்ரம்ம ஸம்ஸ்காரம் செய்து, தன் ஆணை என்று சொல்லி "பரம் என்ற வைகுண்டம் செல்" என்று அனுப்பி வைத்தார் ஸ்ரீராமர் என்று பார்க்கிறோம்.


இங்கு இவர் "தன்னை நாராயணன் என்று காட்டுகிறார்".

இருந்தாலும், தன்னை மனிதன் என்று சொல்லிக்கொண்டு எந்த ஆச்சர்யங்களும் காட்டாத ஸ்ரீ ராமர் இந்த நிகழ்விலும் மனிதனுக்கு சொல்லும் தர்மம் என்ன ?

சிறுது நேரம், ராமானுஜர் இதற்கு என்ன சொல்லி இருக்கிறார்? என்று ஆலோசனை செய்த சிஷ்யர்கள் இவ்வாறு பதில் கூறினர்.


"சத்யஸ்ய பரம் நிதானம்" என்று முண்டகோ உபநிஷத் சொல்கிறது.
இதற்கு பொருள், "சத்தியத்தில் இருப்பவனுக்கு, பரம் என்ற வைகுண்டமும் கிடைக்கிறது"

ஸ்ரீராமர் சத்தியசீலன். சத்தியத்தை என்றும் மீறாதவர்.
தன் சத்தியத்தை கொண்டே, உபநிஷத் வாக்கின் படி, ஜடாயு என்ற பறவைக்கு பரம் என்ற வைகுண்டம் கிடைக்க செய்தார்.

இதே உபநிஷத் "சத்யம் ஏவ ஜயதே" (வாய்மையே வெல்லும்) என்றும் சொல்கிறது.
ஸ்ரீ ராமர் சத்தியத்தின் பெருமையை தன் சரித்திரத்தில் காட்டுகிறார்.

நாமும் ஸ்ரீ ராமரை போன்று சத்தியத்தில் முழுவதுமாக நிற்க முயற்சி செய்ய வேண்டும்.
நாம் முடிந்தவரை சத்தியத்தில் இருக்கவாவது முயற்சி செய்ய வேண்டும்.
முடிந்த வரை பொய் பேசாமலாவது இருக்க வேண்டும்.
காரணமே இல்லாமல், விளையாட்டாக கூட பொய் பேச கூடாது.
பொய் பேச, பொய் பேச நம் புண்ணியங்கள் பொசுங்கும்.
சத்தியம் பேச,  சத்தியம் பேச புண்ணியங்கள் சேர்ந்து வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும், வைகுண்டமும் வசப்படும்
என்று ஸ்ரீ ராமரின் வாக்கில் இருந்து அறிய வேண்டும்.

மனிதன் சத்தியத்தில் இருக்க ஆசை பட வேண்டும்.
புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.
இதையே ஸ்ரீ ராமர் காட்டுகிறார்.
இவ்வாறு சொன்ன பதிலை கேட்டு ஆனந்தப்பட்டார் அரசன்.

சத்யஸ்ய பரமம் நிதானம்

Narrated by DA Joseph.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka