Followers

Search Here...

Sunday 11 February 2018

ப்ராம்மண லக்ஷணம் என்றால் என்ன?

பாண்டவர்கள் காட்டில் இருந்த போது, எங்கு சென்றாலும், பொதுவாக பீமன் முன்னே நடந்து செல்வான்.

பீமனை தொடர்ந்து மற்ற சகோதரர்கள் பின் தொடர்வார்கள்.

ஒரு சமயம், முன்னால் நடந்து கொண்டிருந்த பீமன் திடீரென்று காணாமல் போய் விட்டான்.

பதறிய தர்மபுத்திரர், வழி எங்கும் தேட, ஒரு பெரிய மலை பாம்பு, பீமனை விழுங்கி இருந்தது. பீமன் தலை மட்டும் வெளியில் இருப்பதை கண்டார்.

1000 யானை பலம் கொண்ட பீமனை தோற்கடிக்கவே முடியாதே!!
இப்படி இருக்க, பீமனை எப்படி இந்த பாம்பு விழுங்கியது என்று நடந்த ஆபத்தை கண்டு பதறினார்.

பீமனை வெளியில் எடுக்கலாமா? பாம்பை வெட்டி விடலாமா, கொளுத்தலாமா? என்று முடிவு செய்வதற்குள், பீமனை விழுங்கி இருந்த அந்த பாம்பு பேச தொடங்கியது,
"மலை பாம்பாக நான் நீண்ட காலங்கள் பசியோடு இங்கேயே கிடக்கிறேன். நானாக உணவுக்கு செல்ல இயலாது.
உன் சகோதரன், தானாக வந்து என்னிடம் உணவாக மாட்டிக்கொண்டான்.
நீ இனியும் இங்கு இருக்காதே. இந்த  இடத்தை விட்டு சென்று விடு. மீறினால், நான் உன்னையும் என் நாளை உணவுக்கு சேர்த்து விழுங்கி விடுவேன். எனக்கு உணவாக கிடைத்த உன் சகோதரனே என் உணவு"
என்றது.

பீமனை விழுங்கவும் இல்லை, பாம்பு பேசுகிறது என்றதும், இது தேவனாகவோ, ராக்ஷஷனாகவோ இருக்க வேண்டும் என்று உணர்ந்த யுதிஷ்டிரர், அந்த பாம்பை பார்த்து,
"என் சகோதரன் எல்லையில்லா பலம் கொண்டவன். இவனை விட்டு விடுங்கள்.
இவனுக்கு பதில் வேறு உணவு கிடைக்க, உங்கள் பசிக்கு உணவு ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

பீமனை விழுங்கிய பாம்பு தர்மனை பார்த்து,
"நீ கொடுக்கும் உணவு எனக்கு தேவை இல்லை.
நீ என்ன முயற்சி செய்தாலும் பீமனை மீட்க முடியாது.

ஆனால், நீ மிகவும் தர்மம் தெரிந்தவன், சாஸ்திரம் தெரிந்தவன் என்று உலகம் உன்னை பிரசித்தியாக சொல்கிறது.

நான் தர்ம விஷயமாக இல்லாமல், தர்ம சூக்ஷ்மமாக சில கேள்விகள் கேட்க போகிறேன்.

அதற்கு நீ சரியான பதில் சொன்னால், உன் தம்பி பீமனை விட்டு விடுவேன். இல்லையெனில், பீமனோடு, உன்னையும் சேர்த்து விழுங்கி விடுவேன்"
என்றது.

"அடடா, தர்மமான கேள்வியா? இப்பொழுதே கேட்கப்போகிறாயா?
அதுவும் தர்ம சூக்ஷ்மமாக கேள்வி கேட்க போகிறாயா?
தம்பி உயிருக்கு ஆபத்து என்ற இக்கட்டான நிலையில் தர்ம சம்பந்தமான கேள்வியா?
கொஞ்சம் அவகாசம் கொடு"
என்று தர்மர் கேட்கவில்லை. மறுக்கவும் இல்லை.
பதறவும் இல்லை.

தர்ம விஷயத்தில், இவருக்கு தெரியாத விஷயங்கள் கிடையாது. எந்த தர்ம சம்பந்தமான கேள்விக்கும் பதில் சொல்ல தன்னம்பிக்கை உடையவராக இருப்பதால், தர்மர்,
"தர்ம சம்பந்தமான கேள்வி என்றால், மகிழ்ச்சியுடன் பதில் சொல்ல தயார்"
என்றார்.

அந்த பாம்பு, கேட்ட முதல் கேள்வியே, மிகவும் பெரிய கேள்வி, கடினமான கேள்வி, பொல்லாத கேள்வியும் கூட.

அந்த பாம்பு கேட்டது,
"க்ஷத்ரிய குலத்தில் பிறந்த யுதிஷ்டிரா, நீ மகா புத்திசாலி என்ற காரணத்தால் தான், இந்த கேள்வியை உன்னிடம் கேட்கிறேன்.

பிராமணன்,  பிராமணன் என்று சொல்கிறார்களே.
அவர்கள் மிகவும் பூஜிக்கப்பட வேண்டிவர்கள் என்றும் சொல்கிறார்களே.

மற்றவர்கள் பிராமணன் சொல்வதை கேட்க வேண்டும் என்று சொல்கிறார்களே.

பிராமண லக்ஷணம் என்றால் என்ன?
நான் பிராமணன்,  பிராமணன் என்று சொல்பவன் எல்லாம் பிராமணன் ஆகி விடுவானா?

எப்படி இருந்தால் ஒருவன் பிராமணன் ஆகிறான்?
யார் பிராமணன்? என்று சொல்"
என்றது.

தயங்காமல் க்ஷத்ரியனான தர்மர் பதில் சொன்னார்,
"யாரிடத்தில் ஸத்யம் (உண்மை) இருக்கிறதோ,

யாரிடத்தில் தானம் (ஈகை) இருக்கிறதோ,

யாரிடத்தில் கருணை குணமாக  இருக்கிறதோ,

யாரிடத்தில் ஸதாசாரம் (நன்நடத்தை) இருக்கிறதோ,

யாரிடத்தில் அஹிம்சை (ஜீவ ஹிம்சை செய்து உடல் வளர்க்காமல், பிற ஜீவனை ஹிம்சை செய்யாமல்) இருக்கிறதோ,

யார் தன் ஜீவ வாழ்க்கையை ரிஷிகளின் வேத தர்மத்தில் இருந்து, தபசுக்காவே தன் வாழ்க்கையை செலவழித்து, வாழ்கிறானோ,

யார் சுக போகத்தை அடைவதற்காக ஜீவிக்கவில்லையோ,

யாரிடத்தில் இரக்கம் குணமாக  இருக்கிறதோ,
அப்படிப்பட்ட நற்குணங்களை கொண்ட, சாத்வீகமானவனே பிராமணன் என்று வேத ஸ்ம்ருதிகள் சொல்கிறது. "
என்றார் தர்மபுத்திரர்.

தர்மபுத்திரர் இங்கு சொன்னது தர்ம சூக்ஷ்மம்.

தர்மபுத்திரர் சொன்ன சொல், இதோ,
"சத்யம் தானம் க்ஷமா சீலம் ஆந்ரு ஸம்ஸ்யம் தபோ க்ருணா: த்ருஷ்யந்தே யத்ர நாகேந்திர ஸ ப்ராம்மண இதி ஸ்ம்ருத:"

"सत्यं दानं क्षमाशीलं आनृशंस्यं तपोघ्घृणा। दृश्यन्ते यत्र नागेन्द्र स ब्राह्मण इतिस्मृतः"

இப்படி பதில் சொன்னதும், அந்த பாம்பு, தர்மரை பார்த்து கேட்டது,
"அது என்ன இப்படி சொல்லிவிட்டீர்?
ப்ராம்மணனுக்கு பிறந்தவன் ப்ராம்மணன் இல்லையா?

நீங்கள் சொல்லும் குணங்கள், ஒரு க்ஷத்ரியனிடமோ (protection force), வைஸ்யனிடமோ (business man) சூத்ரனிடமோ (employee) தென்பட்டால், அவனும் ப்ராம்மணன் என்றல்லவா ஆகி விடுகிறது?

இந்த குணங்கள் இருந்தால் அவன் பிராம்மணன் என்று இப்படி சொன்னால், இப்படி தான் இருக்க வேண்டும் என்று அமைந்த ஒரு குடும்ப அமைப்பு கெட்டு விடுமே?

நீ க்ஷத்ரிய குலத்தில் பிறந்த காரணத்தால், நீ நாட்டை காப்பாற்று,

நீ வைஸ்ய குலத்தில் பிறந்த காரணத்தால், நீ வியாபாரம் செய்.

நீ பிராமண குலத்தில் பிறந்த காரணத்தால், நீ ப்ரம்மத்தை உபாசித்து கொண்டே, தர்மம் எது என்று அறிந்து, மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டு வாழ்.

நீ சூத்ர குலத்தில் பிறந்த காரணத்தால், நீ மற்றவர்கள் கொடுக்கும் ஊதியத்துக்கு உழைத்து (employee) அவர்களுக்கும் உபயோகமாக, நீயும் சம்பாதித்து வாழ்ந்து கொள்.

என்று சாஸ்திரங்கள், பாகுபடுத்தி வைத்துள்ள ஒரு அமைப்பு கெட்டு விடுமே?"
என்று கேட்டது அந்த பாம்பு.

துவாபர யுகம் முடியும் நேரம், கலி யுகம் ஆரம்பிக்க போகும் காலம் அது.

இந்த சமயத்திலேயே வர்ணங்கள் கலக்க ஆரம்பித்து இருந்தன.

க்ஷத்ரியனான (armed men) தர்மருக்கே பிராம்மண குணம் கலந்து இருந்தது.
முழுமையான க்ஷத்ரியனாக இல்லாமல், க்ஷத்ரிய-பிராமணனாக இருந்தார்.

பிராமணனான (priest) துரோணருக்கு க்ஷத்ரிய குணம் கலந்து இருந்தது.
முழுமையான பிராமணனாக இல்லாமல், பிராமண-க்ஷத்ரியனாக இருந்தார்.

சூத்திரனான (employee) விதுரருக்கு பிராம்மண குணம் கலந்து இருந்தது.
முழுமையான வைஸ்யனாக இல்லாமல், வைஸ்ய-பிராமணனாக இருந்தார். வைஸ்யனாக இருந்த இவர், மிகுந்த உயர் பதவியான "முதல் அமைச்சராக" (hastinapur chief minister) இருந்தார் என்பது கவனிக்க தக்கது. பிராமண குணமும் இருந்ததால், விதுர நீதி சொன்னார். எப்பொழுதும் இறை சிந்தனையிலேயே பொழுது கழித்தார்

இப்படி வர்ணங்கள் துவாபர இறுதியிலேயே கலந்து விட்டதை உணர்ந்த தர்மர், "யார் உண்மையான பிராம்மணன்?" என்ற கேள்விக்கு தர்ம சூக்ஷ்மமான பதில் கேட்டதால், மேலோட்டமாக பிறப்பால் பிராம்மணன் என்று சொல்லாமல்,
"பிராம்மண லக்ஷணம் யாரிடம் உள்ளதோ அவனே பிராம்மணன்" என்று குணத்தை கொண்டு மதிக்க வேண்டும் என்றார்.

தர்மர் காலத்திலேயே கொஞ்சம் கலந்து இருந்த வர்ணத்துக்கே, தர்மர் குலத்தை வைத்து இனி யார் க்ஷத்ரியன் (Army man)?
யார் பிராம்மணன் (priest)?
யார் சூத்ரன் (employee)?
யார் வைஸ்யன் (businessman)?
என்று சொல்ல முடியாது என்பதால், குணத்தை வைத்து தான் இனி வர்ணத்தை சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டார்.

இதுவரை ஒருவனின் வர்ணம்  அவனுடைய ஆசாரத்திலும், குணத்திலும் மற்ற வர்ணங்கள் கலக்காமல் இருந்ததால், இவன் பிராம்மணன், இவன் க்ஷத்ரியன், இவன் சூத்ரன், இவன் வைஸ்யன் என்று பிறப்பை வைத்தே கண்டு பிடிக்க முடிந்தது.

ஆசாரம் கலி யுகத்தில் கெட்டு போவதால்,
க்ஷத்ரியன் (army) குடும்பத்தில், பிராம்மண (priest) குணத்தில் பிறக்கிறான். ஞானத்தை பற்றியும், தெய்வீக வாழ்க்கையையும் நாடுகிறான்.

பிராம்மணன் (priest) குடும்பத்தில், சூத்ர (employee) குணத்தில் பிறக்கிறான். வேலைக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகிறான், பிறருக்கு உழைத்து அதில் வருமானம் தேட முயற்சிக்கிறான். முதல் அமைச்சர் கூட ஆகிறான்.

சூத்திரன் (employee) குடும்பத்தில், க்ஷத்ரிய (army) குணத்தில் பிறக்கிறான். நாட்டுக்காக உயிர் துறக்க துணிகிறான். மற்ற குணத்தில் உள்ளவர்களை காப்பதில் ஆர்வம் காட்டுகிறான். மற்றவர்களுக்கு வேலை செய்து, அதில் வருமானம் சம்பாதித்து சாப்பிட இஷ்டமில்லாமல், உயிர் தியாகம் செய்யவும், நாட்டிற்கு காவல்காரனாகவும் இருக்க ஆசை படுகிறான்.

வைஸ்யன் (business) குடும்பத்தில், பிராம்மண (priest) குணத்தில் பிறக்கிறான். ஞானத்தை பற்றியும், தெய்வீக வாழ்க்கையையும் நாடுகிறான். தன் குடும்ப வியாபாரத்தில் நாட்டம் இல்லாமல் சந்யாசியாக ஆசை படுகிறான்.

இப்படி ஆகி விட்ட நிலையில், பிராம்மணன் யார் என்று கேட்கும் பொழுது,
"வெளி ஆசாரத்தில், பிறப்பால் உண்மையான பிராம்மணன் யார் என்று கேட்டால், பிறப்பால் சொல்ல முடியாது இனி என்பதால், இனி குணத்தால் மட்டுமே, பிராம்மணனை சொல்ல முடியும்"
என்று தர்மர் விளக்கினார்.

4 வர்ணமும் மூன்று யுகங்கள் ஆசாரம் கெடாமல், குணமும் கலக்காமல் இருந்ததால், பிறப்பால் வர்ணத்தை கண்டு பிடிக்க முடிந்தது.

கலியில் நான் பிறப்பால் சூத்ரன், பிறப்பால் பிராம்மணன், பிறப்பால் க்ஷத்ரியன், பிறப்பால் சூத்ரன் என்று சொல்ல முடியாது.

நான் பிராம்மணன் என்று சொல்லி கொள்பவன், வேதம் படிப்பதில்லை. குறைந்த பட்சம் அவனுடைய கடமையாக விதிக்கப்பட்ட மூன்று வேளை சந்தியா வந்தனம் கூட செய்வதில்லை.
பூணுல், குடுமி, நெற்றியில் திலகமோ, விபூதியோ இல்லாமல் கூட திரிகிறான்.

அனைத்து வர்ணத்தில் உள்ளவனுக்கும் தினமும் ஹரி நாமமோ/சிவ நாமமோ, தெய்வ பக்தியும், அவரவர் வீட்டில் பூஜையும், கோவில் சென்று வழிபடுவதும் பொது கடமையாக இருந்தது.

இந்த ஆசாரங்களும் அழிந்து, இன்று வைஸ்யன், சூத்ரன், பிராம்மணன், க்ஷத்ரியன் என்று எல்லோரும் தெய்வ நிந்தனை செய்ய துணிகின்றனர், நெற்றியில் திலகம் கூட  இல்லாமல் திரிகின்றனர்.

இவன், ஹிந்துவா? முஸ்லீமா?  என்ற அளவுக்கு வேஷத்தில் ஒரே மாதிரியாகி போன பின், நான் பிராம்மணன், சூத்ரன், வைஸ்யன், க்ஷத்ரியன் என்று சொல்வதே வெட்ககேடான விஷயம். நெற்றியில் திலகம் இல்லாதவன் மிலேச்சன். நம் தெய்வங்கள் நெற்றியில் எதுவும் தரிக்காமல் இருக்கிறதா? பெருமாள், சிவன், முருகன் என்று எந்த தேவனும் நெற்றியில் திலகம் வைத்து உள்ளனர். நெற்றியில் திலகம் இல்லாதவன் மிலேச்சன்.

வர்ணம் ஆசாரத்தால் இனி அழிந்து விடும் என்றாலும், வர்ணம் குணத்தில் அழிவதே இல்லை.

அதனால் குணத்தை கொண்டே பிராம்மணன் யார்? என்று கண்டுபிடிக்க முடியும் என்று தர்ம சூக்ஷ்மத்தை விளக்கினார்.

இப்படி கலப்பு ஏற்பட காரணம் என்ன? வைஸ்யன் குடும்பத்தில் பிராம்மண குணத்தில் ஒருவன் பிறக்க அல்லது வளர காரணம் என்ன?
மற்ற வர்ணத்தில் உள்ளவர்களிடம் ஏற்படும்
சகவாசம் (உறவு),
சல்லாபம் (பேச்சு),
உணவு பரிமாற்றம்,
ஜலம்,
போன்றவை நமக்கு பிறக்கும் குழந்தைக்கோ, நமக்கோ கூட பிற வர்ண கலப்பு ஏற்பட்டு விடுகிறது.

நாட்டுப்பற்று உள்ளவன் குடும்பத்தில், வைஸ்ய குணம் உள்ளவன், தனக்கு கிடைக்கும் லாபத்தை பார்த்து, சில சமயத்தில், சொந்த நாட்டையே காட்டி கொடுத்து விடுகிறான்.

இந்த தர்ம சூக்ஷ்மமான பதிலை எதிர்பார்த்த அந்த சர்ப்பம் (பாம்பு), பீமனை கக்கி விடுவித்தது.

யுதிஷ்டிரர், பாம்பை பார்த்து,
"பாம்பு வடிவத்தில் இருக்கும் நீங்கள் தேவனா? அரக்கனா?. பாம்பாக இருந்து என்னிடம் பேசும் நீங்கள், யார் என்று எனக்கு சொல்ல வேண்டும்."
என்றார்.

பாம்பு பேசலானது,
"தர்மா !! சொல்கிறேன் கேள்.
நான் சந்திர வம்சத்தில் இருந்து வந்தவன்.
ஆயு என்பவரின் மகன். நகுஷன் என்ற பெயரில் அரசாட்சி செய்து கொண்டிருந்தேன். நான் ஒரு ராஜரிஷி.
என்னுடைய தானங்களாலும், பலத்தாலும், தர்மங்களாலும் நான் பூலோகம், புவர் லோகம், ஸ்வர்க லோகம் ஆகிய மூன்று லோகங்களையும் ஆளும் தகுதி பெற்றேன்.

இதனால், என்னை போல எவன் உண்டு என்ற அகங்காரம் கொண்டிருந்தேன்.

சொர்க்கத்துக்கு சென்ற நான், அனைத்தையும் அனுபவிக்கலாம் என்று நினைத்து விட்டேன்.

நான் எப்பொழுது சொர்க்க லோகத்துக்கு இந்திரனாக ஆகி விட்டேனா, அப்பொழுது, இந்திரனின் மனைவி "சசி" தேவியும் தனக்கு சொந்தம் தான் என்று நினைத்தேன்.

தானே அவளின் அந்தப்புரம் வர இருப்பதாக சொன்னேன்.

பதிவ்ரதையான சசி தேவி கண்ணீர் வடித்தாள்.
நான் வந்து விட போகிறேனே, என்ற பயத்தில், தான் என்ன செய்வது என்று தவித்தாள்.

தேவ குரு "ப்ருஹஸ்பதி" அங்கு சென்றார்.
"கவலை படாதே. ஒன்றும் ஆகாது.
அவன் வருவதாக இருந்தால், உன்னை பார்க்க வேண்டுமென்றால், சப்த ரிஷிகள் பல்லக்கு தூக்க, அதில் ஏறி வர வேண்டும் என்று கேள். காமுகனுக்கு நியாயம் அநியாயம் தெரியாது, சாதுக்கள் எதிரில் அவன் கட்டாயம் அபச்சாரமாக ஏதாவது செய்து விடுவான்"
என்றார்.

இதையே சசி தேவியும் என்னிடம்  தெரிவிக்க, இந்திரனாகி போன நான், சப்த ரிஷிகளை எனக்கு பல்லக்கு தூக்க அழைத்தேன்.

சொர்க்க லோகத்துக்கும் மேல், உள்ள லோகங்களில் சஞ்சரிக்கும் இவர்கள், கர்வமில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்டு எனக்கு பல்லக்கு தூக்கினர்.

வைவஸ்வத மனு ஆட்சி புரியும் இந்த 71 சதுர் யுகத்தின் சப்த ரிஷிகள் வெறுப்பை சம்பாதித்தேன்.

அவர்களில் அகத்தியர் குள்ளமாக இருந்ததால் பல்லக்கினை இவர் கையால் தூக்கி கொண்டு நடக்க, மற்ற ரிஷிகள் தன் தோளில் வைத்து நடந்தனர்.

இவரால் வேகம் தடைப்படுகிறதே என்று பார்த்த நான், கேலியாக, "சர்ப சர்ப" என்று பாம்பை போல வேகமாக ஊர்ந்து செல் என்று அகத்தியனை பார்த்து சொன்னேன்.

சப்த (7) ரிஷிகளில் ஒருவரான அகஸ்தியர், கோபம் கொண்டு 'அப்படியென்றால், நீ மலை பாம்பாக போ. அங்கேயே கிட' என்று சபித்து விட்டார்.

மெதுவாக நடந்தார் என்று கேலி செய்த நான், அன்றிலிருந்து, எங்கும் நகராமல், இந்த நிலையில் யுகங்களாக கிடக்கிறேன்.

மலை பாம்பாக இருந்தாலும், பூர்வ ஜென்மம் நினைவோடு இருக்கிறேன்.
சாதுக்களை கிண்டல் செய்து சாபத்தை வாங்கினாலும், அவர்கள் அணுகிரஹமும் செய்வார்கள் என்பதால், அகத்தியர்,
"எப்பொழுது பஞ்ச பாண்டவர்களில், பீமனை பிடிப்பாயோ, அவனை கொண்டு தர்ம சூக்ஷ்ம விஷயத்தை யுதிஷ்டிரனிடம் கேட்டு ஞானம் அடைவாயோ அப்பொழுது உனக்கு சாப விமோசனம் என்று அகத்தியர் சொன்னார்"
என்று சொன்ன மறுகணம், தன் பாம்பு உருவம் மறைந்து, நகுஷன் என்ற ராஜரிஷியாக வெளி வந்தார். வணங்கி விடைபெற்றார்.

வாழ்க ஹிந்துக்கள். வாழ்க ஹிந்து கலாச்சாரம்.

Saturday 10 February 2018

திதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன? தெரிந்து கொள்வோமே

ஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம்.

அதிதி (Aditi) -

"திதி" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது.
"அதிதி" என்றால் காலம், நேரம் சொல்லாமல் என்று அர்த்தம்.

இந்தியாவில் மட்டும் தான் "அதிதி தேவோ பவ" என்று சொல்லும் பழக்கம் உண்டு.
வெளிநாட்டவன் அதிதி என்றால் "Guest" என்று அர்த்தம் புரிந்து கொள்கிறான்.  அவன் புத்திக்கு எட்டியது அவ்வளவு தான்.

வீட்டுக்கு இத்தனை மணிக்கு வருகிறேன், இந்த தேதிக்கு வருகிறேன் என்று சொன்னால் தான், வெளிநாட்டவன் வீட்டில்  வரும் விருந்தாளிக்கு மரியாதை கிடைக்கும்.
நேரம் காலம் சொல்லி வீட்டுக்கு வருபவனை தான் guest என்று சொல்கிறான் வெளிநாட்டவன்.

நம் பாரத நாட்டில், நேரம் காலம் சொல்லாமல் வரும் அதிதியையும் வணங்கி உபசரிக்கும் உயர்ந்த குணம் உண்டு என்பதால் தான் வெளிநாட்டவன் நினைத்து கூட பார்க்காத உயர்ந்த குணத்தை சர்வ சாதாரணமாக "அதிதி தேவோ பவ" என்கிறான்.





நேரம் காலம் சொல்லாமல் திடீரென்று வரும் விருந்தினனை, நான் தெய்வத்துக்கு சமமாக நினைத்து உபசரிப்பேன்
என்கிறான் ஹிந்து.

இந்த உயர்ந்த குணம் நம்மிடையே மீண்டும் துளிர்க்க வேண்டும்.
அதிதி தேவோ பவ என்ற சொல்லுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பதை உணர வேண்டும்.
வீட்டிற்கு வரும் அதிதியையும் உபசரிக்க வேண்டும். இது ஹிந்துக்களின் உயரிய பண்பு.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சிறப்பு சொல்லும் போது, நம் இந்தியர்களை பார்த்து "Indians are known for hospitality" என்று சொல்கின்றனர்.

இந்த பெருமை "guest" வந்தால் இந்தியன் உபசரிப்பான் என்ற காரணத்தால் கொடுக்கப்படவில்லை. அதிதியாக வந்தாலும், ஹிந்து உபசரிப்பான் என்ற காரணத்தால் கிடைத்தது.

திடீரென்று வந்த சுதாமாவை, ஸ்ரீகிருஷ்ணர் எப்படி வரவேற்றார். கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர் நாம் எப்படி உபசரிக்க வேண்டும் என்று காட்டினார்.



இந்த குணம், மேலை நாட்டு மதங்களின் மோகத்தால், அழிந்து, அதிதியாக ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால் கோபமும், நேரம் காலம் சொல்லி அனுமதி பெற்று வந்தால் தான் உபசரிப்பு என்ற நிலைக்கு வந்து விட்டோம்.




உயர்ந்த குணத்தை போலி மதங்களின் ஊடுருவளால் விட்டு விட்டோம். மீண்டும் நல்ல குணங்களை வளர்த்து கொள்ள ஹிந்துவாகிய நாம் ஆசையாவது பட வேண்டும்.

சுய நலத்தில் உருவான போலி மதங்கள், சுய நலத்தையே போதிக்கிறது.
ரிஷிகளால் காட்டப்பட்ட ஹிந்து தர்மத்திலோ, ஒவ்வொரு சொல்லிலும் பரந்த குணமும், உயர்ந்த எண்ணமும் வெளிப்படுகிறது.

ஹிந்து தர்மம் பல பொக்கிஷங்கள் கொண்டது. எடுக்க எடுக்க குறையாதது.

போலி மதங்களில் விழுந்து சுயநல போதனைகள் கேட்டு வீணாகி போன ஹிந்துக்களை, மீண்டும் புனித படுத்தி ஹிந்துக்கள் ஆக்க, முதலில் நாம் ஹிந்து தர்மத்தை புரிந்து கொள்ள ஆராய்ச்சிகள் செய்து, உண்மையான ஞானம்(அறிவு) பெறுவோம். 


What is Aditi devo bhava? What is Aditi means? Indians are famous for ?... Let's know

अतिथि देवो भव: (Aditi devo bhava)
This is the proud slogan of every indians.




Every country is known for few good things and remembered.
 Click here

When we talk about German.
We say, German people are known for making quality products.
When we talk about France
French is known for introducing fashion.
We the indians are known for "Indian hospitality" to the world.

This fame is given to india as we are the only people in this planet to say
अतिथि देवो भव: (Aditi devo bhava).
In english dictionary, the sanskrit word अतिथि is referred as "Guest".

"Welcoming Guest to our home" is not uncommon practice thru'out the world.
Everyone welcomes guest.
Not just indians.

Then why, world recognize India for Hospitality and hail them by saying "indians are known for hospitality"?

If we go by this english word "Guest", we can't understand the truth, or we can understand why indians are known for hospitality.

The Word "Aditi" is translated in English as Guest.  But What is meaning of guest?  What is the actual meaning of Aditi? 



Guest are the people who come to our home with appointment (with prior notice).
A person who is invited to visit someone's home or attend a particular social occasion is generally termed as "Guest"
The person who is invited to visit our home is termed as "GUEST".

If we try to compare the meaning of this "Guest" with the sanskrit word अतिथि (Aditi), we will never understand the greatness of Indians Hospitality or know the beauty of Indian heart.

तिथि (Dithi) refers to Specific Time or Date. A Person who is invited and comes to our home with specified date and time is called Guest.  The Actual meaning of "Guest" can be तिथि (Dithi)

अतिथि is just negate (not of) to तिथि.
That is, without specified time. A Person who was not invited, but came in surprise to our home informing his arrival time or date. That person is referred as तिथि (Dithi) by People of Bharat.

Now, if we once again read अतिथि देवो भव: we will understand the greatness of indian culture and our ancestors.
Even if a person enters an indian house without any prior info of his arrival date and time, the indians had a greatest heart and will treat them like a god (देवो) appeared in their house with respect (भव:).
This greatest hospitality was a common scenario thru'out India.  Due to this greatest Quality, we fell down for 1200 years under Christian and Islamic conquest. Still Indian recovered and fought back against the enemies and got independence at 1947 AD.
Though this greatest Hospitality is misused by foreigners, still this is the greatest Quality of Indians.  Even Today, with little More cautious Indian continue to show their Hospitality to the Foreigners and have to continue anyway and can't lose great Qualities because of Cheat or misuse by foreigners. 
Hence indians are known for "hospitality".

In other countries, if someone (even relatives) enters other's house without their permission, they feel upset, angry.
With western culture migration, today, Indians also, have almost lost their identity of "hospitality" and as everyone around the world, Indians also invite only the guest who have prior appointment to meet them.



Today indians, must relook themselves and rejuvenate their heart and try to bring back the great and wise qualities of our Indian ancestors back again with little Caution.

Let us prove the world "Indians are known for hospitality" in its original form.

Courtesy : Extract from Sri Rangaji speech.

INTERESTED TO READ MORE? CLICK HERE... -> Why Woman is dependent to Men? Is it because of Appearance or by Qualities? Who is Supreme God? Who is the Only Man Exist?



Saturday 3 February 2018

உண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்தில் தெரிந்து கொள்ளலாம்.

உண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்தில் தெரிந்து கொள்ளலாம்? என்ற கேள்விக்கு, சாஸ்திரம் என்ன பதில் சொல்கிறது.

விபீஷணன், ஸ்ரீராமரிடம் சரணாகதி என்று வந்த சமயத்தில், அனைவரும் "இவனை சேர்த்து கொள்ள கூடாது" என்று பல காரணங்கள் ஸ்ரீராமரிடம் கூறினர்.

சுக்ரீவன், "சொந்த அண்ணனை போர் வந்து விடும் என்ற நிலையில், விட்டு விட்டு, நம்மிடம் வருகிறான் என்பதே சந்தேகத்துக்கு வழி வகுக்கிறது" என்றும் சொன்னான்.


ஸ்ரீ ராமர் புன்சிரிப்புடன், லக்ஷ்மணரை பார்த்து கொண்டே, "எல்லோரும் பரதனை போல சகோதரன் ஆகி விட முடியுமா?" என்று சொல்லி,

தான் பகவான் என்று சொல்வதை விட, தசரதன் மைந்தன் என்று சொல்லி கொள்ளவே ஆசைப்பட்ட ஸ்ரீராமர், தன்னை பற்றி பொதுவாக, உயர்த்தி எங்கும் பேசிக்கொள்ள ஆசைப்படாதவர், சுக்ரீவனை பார்த்து,
"ஒரு தகப்பனுக்கு என்னை போல மகன் கிடைத்து விடுவானா?" என்று பெருமிதமாக சொன்னார்.

ஸ்ரீ ராமர், லக்ஷ்மணரை பக்கத்தில் வைத்து கொண்டே, "பரதனை போல ஒரு சகோதரன் உண்டா ?" என்று உயர்த்துகிறார்.

அண்ணனுக்காக, 14 வருடமும் தூங்காமல்,
அண்ணனுக்காக 14 வருடமும் தன் மனைவி, தன் தாயை விட்டு, ஸ்ரீராமருக்கு சேவையே லட்சியம் என்று வந்த லக்ஷ்மணனை அருகில் நிற்க வைத்துக்கொண்டே, ஸ்ரீ ராமர், இப்படி சொன்னார் என்று நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

லக்ஷ்மணர் முகமும் இதனால் சுருங்கவில்லை. லக்ஷ்மணர் அமோதித்தது புரிகிறது.

லக்ஷ்மணரை விட பரதனே சிறந்த   சகோதரன் என்ற ஸ்ரீ ராமரே சொல்லி விட்டார்.
அது மட்டுமில்லை, தனக்கு கிடைத்த பரதனை போன்ற சகோதரன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றார்.

ஸ்ரீ ராமர், வேதங்களை, சாஸ்திரங்களை அறிந்தவர். அவர் பேசும் ஒவ்வொரு சொல்லும்,  வேத சாஸ்திரமானது.

உண்மையான சகோதரனை எந்த சமயத்தில் தெரிந்து கொள்ளலாம் என்ற கேள்விக்கு, சாஸ்திரம் பதில் சொல்கிறது.
"சொத்து விவகாரங்கள் நடக்கும் போது, உண்மையான சகோதரன் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்கிறது சாஸ்திரம்.

"அண்ணனோ, தம்பியோ, சகோதரியோ, சொத்து விவகாரம் என்ற பேச்சு ஏற்பட்டவுடன் அதை பற்றியே பேசாமல், முடிந்தவரை பேச விரும்பாமல், அது தன் சகோதரனுக்கு போனாலும் போகட்டும் என்று அதை பற்றி விவாதம் செய்ய கூட விரும்பாமல், விலகி நிற்கிறானோ, அவனே உண்மையான சகோதரன்", என்கிறது சாஸ்திரம்.

14 வருடம் தான் காட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில், ஸ்ரீராமரே மகிழ்ச்சியுடன், பரதன் 14 வருடம் அயோத்தியை ஆளட்டும் என்று ஸ்ரீராமர் சொல்லியும், சொத்து அனைத்தையும் தம்பி பரதனுக்கு கொடுத்தும், யாரும் எதிர்க்காத நிலையிலும், சொத்து வேண்டாம் என்று சொல்லி விட்டார் பரதன்.

சொத்து பகை என்ற சமயத்தில், தனக்கு கிடைத்த சொத்து வேண்டாம், என்று இருந்த பரதன், சாஸ்திரப்படி உண்மையான சகோதரன் என்று ஆகிறார்.

பொதுவாக, சொத்து சண்டையால், சகோதரர்கள் சந்தியில் (வீதியில்) நிற்கிறார்கள் என்று சொல்வதுண்டு.

ஆனால், ஸ்ரீ ராமாயணத்தில், சொத்து சண்டையால், சகோதரர்கள் (ஸ்ரீராமரும், பரதனும்) சேர்ந்து இருக்க, சொத்து வீதியில் நின்றது.

இதையும் காரணமாக கொண்டு, ஸ்ரீராமர், "அனைவருக்கும் என்னுடைய பரதனை போல சகோதரன் கிடைத்து விடுவானா?" என்கிறார்.

தசரதர் பரலோகம் சென்ற பின்னர், ஸ்ரீ ராமர், லக்ஷ்மணரை பார்த்து ஒரு சமயம்,
"அப்பா இல்லாத குறையே இல்லாமல், நீயே எனக்கு அப்பாவாக இருக்கிறாய். நீ என்னை நம் அப்பா பார்த்து கொள்வது போல, எனக்காக உன்னை வருத்தி கொண்டாலும், அதை பொருட்படுத்தாமல், என்னை உன் குழந்தை போல பாதுகாக்கிறாய்" என்றார்.

ஹனுமான், சீதையை அசோகவனத்தில் பார்க்கும் போது, சீதையும் அதே போல, "தன் கணவனுக்கு அப்பாவாக இருந்து வரும் லக்ஷ்மணனையும் விஜாரித்ததாக சொல்லுங்கள்" என்றாள்.

இதன் மூலம், ஸ்ரீ ராமர், லக்ஷ்மணனை தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து இருந்தார் என்று தெரிகிறது.

கடைசியாக, சிறந்த மகன் யார் என்று ஸ்ரீராமர் தியானிக்கும் பொழுது, வேறு வழியே இல்லாமல், தான் மட்டுமே சிறந்த பிள்ளை என்ற சத்தியத்தினால்,
"என்னை போல ஒரு மகன், ஒரு தகப்பனுக்கு கிடைத்து விடுவானா?"
என்றார் ஸ்ரீராமர்.

தசரதர் கைகேயிக்கு 2 வரங்களை கொடுத்தார்.
அந்த வரத்தை பயன்படுத்தி, சத்தியத்தை (சொன்ன வாக்கை) மீறாத தசரதரிடம், 14 வருடம் ஸ்ரீ ராமர் வனவாசம், பரதன் அயோத்தி ஆள வேண்டும் என்று கேட்டு விட்டாள்.

தசரதர் உயிரே போனாலும், சத்தியத்தை மீற கூடாது என்ற கொள்கை உடையவர்.

இந்த 2 வரங்களை பற்றி ஸ்ரீ ராமரிடம் சொல்லி, தான் சத்தியத்தை மீற முடியாது, என்பதால், "நீ என்னை சிறையில் தள்ளியாவது, அயோத்தி அரசனாக பட்டம் சூட்டிக்கொள்." என்றார்.

தசரதர் உயிர் மூச்சாக "சத்யம்" என்ற தர்மத்தை, அவர் காலம் முழுவதும் கடைபிடித்தார். சொன்ன சொல் தவற மாட்டார்.

தசரதர் அவர் மனைவிக்கு செய்த சத்தியத்துக்கு, தான் 14 வருடம் காட்டுக்கு போக அவசியமே இல்லை. எளிதாக மறுத்து விடலாம்.
தசரதர் சொன்னது போல, அவரையே சிறையில் தள்ளி, தானே மகுடம் சூட்டி கொள்ளலாம்.

இப்படி எந்த வழியும் தேவையில்லை. தான் 14 வருடம் காட்டுக்கு போவதால், தன் தந்தையின் தர்மம் காக்க படுமானால், தான் எதற்கும் தயார் என்றார் ஸ்ரீ ராமர்.

இப்படி தன் தந்தையின் தர்மத்துக்கு களங்கம் ஏற்பட கூடாது என்று, எதையும் தியாகம் செய்வேன் என்று வந்த ஸ்ரீ ராமர், யார் சிறந்த புதல்வன் என்ற கேள்விக்கு, வேறு யாரும் தனக்கு நிகராக இல்லாததால், தன்னையே காட்டிக்கொண்டார்.

இப்படி தன் தர்மம் காக்கப்பட, மகனான ஸ்ரீராமர் காட்டுக்கு செல்ல, அப்படிப்பட்ட உன்னதமான மகனை இழந்த தசரதர் உயிர் வாழ முடியாமல், பரலோகம் சென்று விட்டார்.

பொதுவாக பேச்சுக்கு தன் பிள்ளையை, "கண்ணே, மணியே" என்று பெற்றோர் சொல்வதுண்டு.

ஸ்ரீ ராமரை பிரிந்தவுடன், தசரதர் உண்மையிலேயே "கண் பார்வை இழந்து விட்டார்". பிரிவு தாங்காமல், உயிரையும் விட்டு விட்டார். 

Monday 29 January 2018

"ஓம் நமோ நாராயணாய" என்ற சொல்லின் அர்த்தம் என்ன? - ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?...

ஓம் என்ற பிரணவம், ஜீவாத்மாவுக்கு, பரமாத்மாவின் உறவை மட்டும் காட்டுகிறது.




ஆனால், யார் அந்த பரமாத்மா? என்று ஓம் என்ற பிரணவம் பெயரிட்டு சொல்லவில்லை.

ஓம் என்ற பிரணவத்தின் விளக்கம் தெரிந்து கொள்ள, படியுங்கள்
Click_Here

இதனால், பிரணவம் குறிப்பிடும் "அந்த பரமாத்மாவை" பக்தனாக இருப்பவன், தன் இஷ்ட தெய்வங்களுக்கு பயன்படுத்தி கொள்கிறான்.

இது பக்தியின் லக்ஷணம் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும்.

"உண்மையில் யார் அந்த பகவான்? யார் அந்த பரமாத்மா? யார் அந்த புருஷன்?"

"ஹரி: ஓம்" என்றும், "லக்ஷ்மியின் கணவன்" என்ற புருஷ சூக்தத்தில் வேதம் அந்த பரமாத்மா, "நாராயணனே" என்று முடிவாக சொல்கிறது.
புருஷன் யார்? பகவான் யார்? என்ற கேள்விக்கு வேதமே பதில் சொல்கிறது. மேலும் படியுங்கள் Click Here


பரமாத்மா/கடவுள் என்று மட்டும் சொன்னால், நமக்கு பக்தி (அன்பு) செய்ய முடியாது. கடவுள் மேல் பயம் வேண்டுமானால் இருக்கும்.

ஓம் என்ற பிரணவம் "பரமாத்மாவுக்கும், நமக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது".
ஆனால் "இவர் தான் பரமாத்மா, இவைகள் தான் இவருடைய தெய்வீக குணங்கள்" என்று காட்டாததால், நமக்கு பக்தி செய்ய வாய்ப்பு இல்லாமல் போகிறது.




பக்தி இல்லாத ஞானம் தருவதால், பிரணவத்தை மட்டும் சொல்லி மோக்ஷம் அடைபவர்கள், "ஞானியாக" இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

"ஓம்" என்ற பிரணவத்தை புரிந்து கொண்டாலும், சாதாரண மக்களால், பிரணவத்தை மட்டும் சொல்லி "மோக்ஷம்" அடையும் பக்குவம் இருக்காது.

"ஏதோ ஒரு பரமாத்மா நம்மை படைத்து இருக்கிறார்" என்ற அறிவு வேண்டுமானால் வரலாம்.
அதிக பட்சம் "கைவல்யம்" என்ற மோக்ஷம் கூட அடையலாம்.
ஆனால், அந்த பரமாத்மாவை எளிதில் அடைய முடியாது.

"பக்தி கலந்த, பிரணவம்" அனைவருக்கும் மோக்ஷ வாசலை திறந்து விடுகிறது.
இந்த வைகுண்ட வாசலின் சாவியை வைத்து கொண்டிருக்கும், ஸ்ரீனிவாச பெருமாளே நமக்கு பிரணவத்துடன் சேர்த்து, திருஅஷ்டாக்ஷர மந்திரமாக கொடுத்து விட்டார்.
ஸ்ரீனிவாச பெருமாளே, தொண்டைமான் சக்கரவர்த்திக்கு, அந்த பரமாத்மா "நானே" என்று திருஅஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார்.

"ஓம் நமோ நாராயணா" என்ற இந்த மந்திரத்தில்,

"ஓம்" என்ற பிரணவத்தின் விளக்கம் தெரிந்து கொள்ள, படியுங்கள் Click_Here
இனி,
"நமோ நாராயணா" என்பதின் விளக்கத்தை கவனிப்போம்.

2. நமோ
நம: என்ற சமஸ்கிருத சொல்லையே, தமிழில் "நமோ" என்கிறோம்.
a)
'ம' என்ற சொல், "மம"காரத்தை குறிக்கும்.
தமிழில் "நான்" "எனது" என்ற அகம்பாவத்தை குறிக்கும்.
b)
'ந' என்ற சொல், "இல்லை" என்பதை குறிக்கும்.
ஆக,
"நமோ" என்று சொல்லும் போது, "நான் (ஜீவாத்மா) செய்கிறேன், இது என்னுடைய (ஜீவாத்மாவின்) திறமையால் கிடைத்தது என்ற அகம்பாவத்தை விட்டு, நான் (ஜீவாத்மா) செய்யவில்லை"
என்று உணர்த்துவதே இந்த "நம:" என்ற சப்தத்தின் பொருள்.



மோக்ஷமே கிடைத்தாலும்,
துக்கமே வந்தாலும்,
சுகமே வந்தாலும்,
என்ன நடந்தாலும்,
"அது அந்த பரமாத்வாவின் இஷ்டம்"
என்று இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே "நமோ" என்ற சொல்லின் அர்த்தம்.
இதுவே வைஷ்ணவனின் லக்ஷணம்.

திருப்பதி சென்று, ஸ்ரீனிவாசனை தரிசனம் செய்தாலும்,
அவரிடம் பக்தி செய்யவும், அவருக்கு சேவை செய்யவும் ஆசை வர வேண்டுமே தவிர,
"அவரிடம் இது வேண்டும், அது வேண்டும்" 
என்று கேட்க கூடாது. இதுவே வைஷ்ணவனின் லக்ஷணம்.

"நாம் கேட்காமலேயே நம் தேவை அறிந்து அவரே தருவார்" என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

"அவரை பார்க்க வேண்டும்" என்ற ஆசை தான் முக்கியம்.
அவருடைய இஷ்டத்துக்கு நம்மை காப்பாற்ற விட வேண்டும்.

"நமக்கு எஜமானன் அவர்" என்ற உண்மையை உணர்ந்து,
"எப்பொழுதும் நம்மை காப்பாற்றுகிறார்" என்ற உண்மையை உணர்ந்து, எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும்.

இடையூறுகள் வந்தாலும், எப்படி ஸ்ரீனிவாச பெருமாள் நம்மை காப்பாற்ற போகிறார்!! என்ற ஆச்சர்யத்துடன், ஆவலுடன், அவர் எப்படி காப்பாற்றுகிறார் என்று பார்க்கிறேன்? என்று வெளி மனிதன் போல பார்க்க வேண்டும்.

"துக்கங்கள் யாவும் அவர் பார்த்து கொள்வார்" என்ற புத்தியுடன், "சேவை செய்வதே நம் கடமை" என்று, "நான்" என்ற எண்ணம் இல்லாமல், சந்தோஷமாக இருக்க வேண்டும்.

"என்னுடைய எஜமானன் (பரமாத்மா) என்னை படைத்து இதுவரை காப்பாற்றி கொண்டு இருக்கும் பொழுது, நான் தனியாக முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை" என்ற நிலையை உணர்த்தவே, "நமோ" என்று சொல்கிறோம்.

3. நாராயணாய
ஓம் என்ற பிரணவத்தில் அந்த பரமாத்மாவை சேர்ந்தவன் ஜீவாத்மா என்று உறவை உணர்த்துகிறது.
யார் அந்த பரமாத்மா? என்ற கேள்விக்கு, "நரனாக (மனிதர்களாக) பிறப்பு எடுத்த அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் கதியாக இருப்பவனே நாராயணன். அந்த நாராயணனே பரமாத்மா" என்று "நாராயணா" என்ற சப்தம் நமக்கு வழி காட்டுகிறது.

"நாராயணாய" என்று சொல்லும் போது, "ஆய" என்ற சப்தம், *நாராயணன் "ஒருவனே" பகவான், வேறு யாரும் பகவான் இல்லை, மற்ற தேவதைகள் யாவும் இவர் அங்கங்களே" என்று உறுதி செய்கிறது.
திட விசுவாசம், ஏக பக்தியே மோக்ஷத்திற்கு வழி.

நாராயணனே
என்ற தமிழ் சொல், சம்ஸ்கிருத சொல்லான நாராயணாய என்ற சொல்லுக்கு ஈடாக உள்ளது.

இப்படி, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உணர்ந்து சொல்ல, அந்த நாராயணன் பிறவி கடலில் இருந்து நம்மை கை தூக்கி, பரமபதம் என்ற தன் வைகுண்டத்தை கொடுத்து நித்யமாக வாழ வைக்கிறான்.

ஓம் நமோ நாராயணாய.

"ஓம்" என்ற பிரணவத்தை யார் வேண்டுமானாலும் சொல்ல முடியாது.



பிரணவத்தை தகுந்த குருவை கொண்டு உபதேசம் பெற்று,
அதற்குரிய காலத்தில்,
அதற்குரிய நியமத்துடன் சொல்ல வேண்டும்.
உண்மையான ஞானத்த்துடன் சொல்ல வேண்டும்.
உணவிலும், பழக்கத்திலும் ஒழுக்கம் தேவை.

இப்படி பல நியமங்கள் கொண்ட பிரணவ மந்திரம், தன்னை தானே சுலபமாக்கி கொண்டு, "ராம" என்ற மற்றொரு பிரணவ மந்திரமாக தன்னை வெளிப்படுத்தியது.

ராம நாமத்தை யாரும் சொல்லலாம்.
ராம நாமத்தை எங்கும் சொல்லலாம்.
ராம நாமத்தை குண சீலனும், குணம் கெட்டவனும் சொல்லலாம்.
ராம நாமத்தை சனாதன தர்மத்தில் உள்ளவனும் சொல்லலாம்,
ராம நாமத்தை மற்ற பொய் மதங்களில் விழுந்து தடம் மாறியவனும் சொல்லலாம்.
ஆஞ்சநேயர் அனுதினமும் சொல்வது "ராம" மந்திரமே.
சிவபெருமான் காசியில் அனுதினமும் சொல்வது "ராம" மந்திரமே.
வால்மீகியை ராமாயண காவியம் எழுதும் முன், அவருக்கு ஞானத்தை கொடுத்ததும், "ராம" நாம மந்திரமே.
ஞானம் அடைந்த வால்மீகியை, ப்ரம்ம தேவன் காண வந்து, அந்த ராம நாமத்திற்கு சொந்தக்காரரான பரவாசுதேவன், ஸ்ரீ ராமராக அவதரிக்க போவதை சொல்லி, ஸ்ரீ ராமாயணம் எழுத சொன்னார்.
ஸ்ரீ ராமரை அவதரிக்க செய்ததும், ராம நாமமே.



பிரணவ (தாரக) மந்திரமான "ராம" நாமத்தை சொல்ல சொல்ல, பரவாசுதேவனை அறியும் ஞானம் கிடைக்கும்.
உலக சுகங்கள் யாவும் தானாக வந்து சேரும்.

தாரக மந்திரம் என்ற "ராம" நாமத்தை, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.

"தாரகம்" என்றால் "கடப்பது" என்று பொருள்.
ராம நாமத்தை சொல்பவன், பிறவி என்ற கடலை கடந்து விடுகிறான். வைகுண்டம் அடைகிறான். பரமாத்மாவை அடைகிறான்.

ஓம் என்ற தாரக மந்திரம், தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே.
தன்னை சுலபமாக்கி கொண்ட "ராம" என்ற தாரக மந்திரம், அனைவருக்கும் சொந்தமானது. 

அனைவரும் எப்பொழுதும் சொல்வோம் ராம ராம ராம....

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Morning (With meaning)



Sandhya Vandanam - Evening (With meaning)

Sandhya Vandanam - Afternoon (With meaning)