Followers

Search Here...

Saturday 21 April 2018

"ஒப்பில்லாத" என்று கூறும் போது - ஆழ்வார் நிலை எப்படி இருந்தது?

ஒப்பில்லாத பெருமாள் என்றால் பொதுவாக நாம் நினைப்பது, அவர் மிகவும் உயர்ந்தவர், தன்னிகர் இல்லாதவர் என்று.

ஆழ்வார் தன் பாசுரத்தில் "ஒப்பில்லாத" என்று கூறி கதறுகிறார். ஒப்பில்லாதவன் என்று கூறி, பெருமாள் உயரந்தவர் என்று சொல்லும் போது பெருமை படாமல் ஏன் ஆழ்வார் கதறுகிறார்?




ஆழ்வாரின் நிலை:
நரசிம்மருக்கு பிரகலாதன் ஒப்பு. 

"ஒப்பு" என்றால் பகவான் செய்யும் கருணைக்கு, ஒப்பாக பக்தன் பக்தி செய்வான்.
 

ராமருக்கு ஹனுமான் ஒப்பு.
கிருஷ்ணருக்கு கோபிகைகள் ஒப்பு.
 

இப்படி ஒப்பாக இருப்பதனாலேயே, பெருமாள் அவர்களை கண்டாலே ப்ரீதி கொள்கிறார்.

யாருக்குமே தனக்கு ஒப்பாக இருப்பவரையே பிடிக்கும்.

தன்னை விட குறைந்த அந்தஸ்த்தோ, படிப்போ, குலமோ இருந்தால் பழக கூட மாட்டர்.

பிரகலாதனும், கோபிகைகளும், ஹனுமனும் வந்து நின்றால், பெருமாளுக்கு ஒப்பாக இருக்கும். பெருமாள் பிரசன்னமாவார். அது நியாயம்.




எந்த விதத்திலேயும் ஒப்பு இல்லாத நிலையில், உன் கருணையை மட்டும் எதிர்பார்த்து, எந்த தைரியத்திலோ வந்து விட்டேன்.

வந்த பின் தான் தெரிகிறது, நான் எந்த விதமும் உனக்கு ஒப்பு இல்லையே என்று.
இதை நினைத்து,
ஆழ்வார் "ஒப்பில்லாத" என்று கூறும் போது தன் நிலை நினைத்து கதறுகிறார்.

Friday 13 April 2018

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள் என்ன?. கிருஷ்ணணே பகவான்

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்களை விஷ்ணு புராணம் சொல்கிறது.
1. பூர்ணமான ஐச்வர்யம்
2. பூர்ணமான தர்மம்
3. பூர்ணமான புகழ்
4. பூர்ணமான ஸ்ரீ
5. பூர்ணமான வைராக்யம்
6. பூர்ணமான மோக்ஷம்

இந்த ஆறும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்ததை இனி பார்ப்போம்.

1. பூர்ணமான ஐச்வர்யம் : (Complete Power to create, maintain, destroy)
  • படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவை போல, வத்ஸா பஹரண லீலை செய்து, பிரம்மாவை போல படைத்தது,
  • அழிக்கும் தொழிலை செய்யும் ருத்திரனை போல, பாணாஸுர யுத்தத்தில் ருத்திரனை வென்று, பாணாஸுரனை வதம் செய்தது,
  • வைதீகன் பிள்ளைகளை மீட்டதில் விஷ்ணுவையும் அடக்கினதாலும்,
  • இந்திரனை கோவர்த்தன லீலை செய்து தோற்கடித்தும்,
  • ஸாந்தீபனியின் பிள்ளையை யமனிடம் மீட்டதும், 
ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான ஐச்வர்ய ஸ்வரூபம் என்று தெரிகிறது.

2. பூர்ணமான தர்மம் :  (Stand by Dharma)
  • அதர்மம் செய்த கம்சன், நரகாசுரன், பாணாசுரன், ஜராசந்தன், கௌரவர்கள் அனைவரையும் அழித்து, தர்மத்தை நிலை நாட்டி
  • யுதிஷ்டிரனை ஆட்சியில் அமர்த்தியதில், 
ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான தர்ம ஸ்வரூபம் என்று தெரிகிறது.

3. பூர்ணமான புகழ் : (Fame beyond boundary)
  • ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம், ஸ்ரீமத் பகவத் கீதை போன்ற என்றும் நிலைக்கும் பிரமாணங்களே 
பூர்ணமான புகழ் கொண்டவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று தெரிகிறது.




4. பூர்ணமான ஸ்ரீ :  (Complete Wealth)
  • மஹாலக்ஷ்மி ஸ்ரீகிருஷ்ணருக்கு ருக்மிணியாக சேவை செய்தாள் எனில், ஸ்ரீ கிருஷ்ணரை விட பூர்ணமான ஸ்ரீமான் யார்? 
  • செல்வம் கொழித்த தேசமாக இருந்தது துவாரகை.
    ஸ்ரீ கிருஷ்ணரை நம்பியதாலேயே பெரும் செல்வம் அடைந்து, பேரரசனும் ஆனார் தர்மபுத்திரர். 
  • ஏழை பிராம்மணன் குசேலர் என்ற சுதாமா, ஸ்ரீ கிருஷ்ணரை பார்க்க சென்றதற்கே அவர் பெரும் செல்வந்தனாக ஆனார் என்ற நிகழ்ச்சிகளே 

ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான ஸ்ரீமான் என்று தெரிகிறது.

5. பூர்ணமான வைராக்யம் :
  • ஷோடச ஸ்திரீ ஸஹஸ்ரேசன் ஆயினும், அநாதி ப்ரம்மச்சாரி என்று ஸ்ரீ கிருஷ்ணரை, ப்ரம்மச்சாரியான பீஷ்மரும், சுகரும் சொல்லும் போதே பூர்ணமான வைராக்யம் ஸ்வரூபமாக கொண்டவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று தெரிகிறது. 
  • பிறக்கும் போதே தாயும், தந்தையும் சிறையில், தனக்கு முன் பிறந்த குழந்தைகள் அனைவரும் கொலை செய்யப்பட்ட சோகம், கோகுலத்தில் வளரும் போதே குழந்தையாக இருந்ததில் இருந்தே கொலை செய்ய பல வித முயற்சி, பல விதத்தில் ஜராசந்தன் போன்றவர்களால் யாதவர்கள் இன்னல் போன்றவை ஏற்பட்டும், ஸ்ரீ கிருஷ்ணர் எந்த நிலையிலும் மனம் தளராத தீரனாகவும், மகிழ்ச்சி குறையாதவனாகவும், சம நிலையில், புலம்பல் இல்லாமல், அழுகை இல்லாமல், அனைத்து கஷ்டங்களையும் எளிதாக சமாளித்து, மற்றவர்களும் இவரால் பயன் பெறும் வகையில் பூர்ணமான வைராக்ய ஸ்வரூபமாக இருந்தார். 
  • பகவத் கீதை முழுவதுமே ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான வைராக்கியம் உடையவர் என்று உணர்த்துகிறது.

6. பூர்ணமான மோக்ஷம்:
  • மோக்ஷம் என்ற வைகுண்டம் நாராயணர் மட்டுமே கொடுக்க கூடியது. 
  • எந்த புண்யத்தாலும் சம்பாதிக்க முடியாத மோக்ஷம் என்ற வைகுண்டத்தை
  • எந்த தகுதியும் இல்லாத பூதனை போன்ற அல்பத்திற்கும் தன் சங்கல்பத்தில் (விருப்பத்தில்) வைகுண்டம் கிடைக்கச் செய்தார்.
பகவான் என்ற சொல்லின் 6 அர்த்தங்களையும் கண்ணன் காண்பித்தான்.

நாராயணரின் விபவ அவதாரத்தில், இந்த ஆறும் நிரம்ப அவதாரம் செய்தது ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே.

கையை தூக்கி நோயே விலகு, பிசாசே ஓடு என்று இந்த்ரஜாலம் செய்வதும், நதியில் நடப்பதும், நதியை கடக்க முயலும் போது நதி வழி விடுவதும் அனைத்தும் ஒரு யோக கலையே.

நம் தமிழ் நாட்டில் குட்டி முனிவர் அகத்தியர் கடல் நீரை அள்ளி தன் கமண்டலத்தில் அடக்கி விட்டார்.
ராவணன் பத்து தலைகளுடன், யமனையும் சேர்த்து அடிமை செய்து விட்டான்.
வசிஷ்டர் தன் தண்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போர் படைகளை உருவாக்கி, விஸ்வாமித்திரர் அரசனாக இருந்த போது சண்டை இட்டார்.




இப்படி சாகசங்கள், ஆச்சரியங்கள், மருத்துவன் செய்ய கூடிய சிகிச்சைகள் செய்யும் இவர்களை மூடத்தனமாக பகவான் என்று ஹிந்துக்கள் கூறவில்லை.
ஞானி, மஹாத்மா, முனி, ரிஷி, ஸாது, அரசன் என்று மதிப்பு கொடுத்தனர்.

அகத்தியர், பதஞ்சலி போன்ற பெரும் முனிகளை, மதித்தனர்.
ஆனால் பகவான் என்று சொல்லவில்லை.

இந்த 6ம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இருப்பதால், முழு முதல் பகவான் கண்ணனே

"பகவான்" என்ற பெயருக்கு உரிமையாளன் யார்?

பொதுவாக, எந்த தெய்வத்தையும் "பகவான்" என்று சொல்லி ஆனந்தப்படுகிறோம்.

புத்தரை கூட சிலர் "புத்த பகவான்" என்று சொல்வதுண்டு.

"பகவான்" என்ற மதிப்பு மிக்க அடையாளத்தை அனைத்து தெய்வங்களும் பயன்படுத்தினாலும், ஆழ்ந்து கவனிக்கும் போது, எந்த தெய்வம் "பகவான்" என்ற பெயருக்கு உண்மையில் உரிமையாளர் என்று தெரிந்து விடும்.

ஒவ்வொரு தேவதைக்கும் புராணம் சொல்லப்பட்டு இருக்கிறது.

சிவபெருமானை பற்றி சொல்லும் புராணத்திற்கு "சிவ புராணம்" என்று பெயர் உள்ளது.

கணேசனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கணேச புராணம்",
முருகனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கந்த புராணம்" என்று பெயர் உள்ளது.

இப்படி ஒவ்வொரு தெய்வத்தின் புராணமும் அவரவர் பெயர்களை கொண்டிருக்க,
ஸ்ரீ கிருஷ்ணனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கிருஷ்ண புராணம்" என்று இல்லாமல், அவர் பெயரை கூட பயன்படுத்த அவசியமில்லாமல், "பாகவதம்" என்று பெயர் உள்ளதை கவனிக்க வேண்டும்.

தேவியை பற்றி சொல்லும் புராணத்திற்கு கூட "தேவி பாகவதம்" என்று தேவியின் அடையாளத்தை சேர்த்து தான் பெயர் உள்ளது. 

ஆனால், ஸ்ரீ கிருஷ்ண சரித்திரத்தை சொல்லும் போது, கிருஷ்ணன் என்று சொல்லக்கூட அவசியமில்லாமல், "பாகவதம்' என்று தனித்து நிற்கிறது.

புராணங்கள் மட்டும் தான் இப்படி உள்ளது என்றில்லை.. உபதேச க்ரந்தங்களும் இப்படியே இருக்கிறது.

ருத்ரன் உபதேசித்த கீதைக்கு "ருத்ர கீதை", "சிவ கீதை" என்று பெயர்.
கணேசன் உபதேசித்த கீதைக்கு "கணேச கீதை" என்றும்,
எமன் உபதேசித்த கீதைக்கு "எம கீதை" என்றும் பெயர் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார் என்றதும், "கிருஷ்ண கீதை" என்று தானே இருக்க வேண்டும்...

ஆனால், ஸ்ரீ கிருஷ்ணனே "பகவான்" என்பதால், அவர் உபதேசித்த கீதைக்கு மட்டும் "பகவத் கீதை" என்று பெயர் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல,
மஹாபாரதத்தில் மற்ற இடங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் சகஜமாக பேசும் இடங்களில் "ஸ்ரீ கிருஷ்ணன் பேசுகிறார்" என்றே காண்கிறோம். 
அர்ஜுனன் பேசும் போது கூட, "அர்ஜுன உவாச" (அர்ஜுனன் பேசுகிறான்) என்றே பகவத் கீதையில் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணர், உபதேசிக்கிறார் என்றதும், "கிருஷ்ண உவாச" என்ற பதத்தை பயன்படுத்தாமல், "பகவான் உவாச... பகவான் உவாச... பகவான் உவாச..." என்று கீதை முழுக்க "பகவான் பேசுகிறார்... பகவான் பேசுகிறார்..  பகவான் பேசுகிறார்" என்று இருப்பதை காண்கிறோம்.

பகவான் பேசும் கீதையை படிக்க யாருக்கு தான் ஆசை ஏற்படாது. 

கிருஷ்ண சரித்திரம் "பாகவதம்' என்றும்,
அவர் உபதேசம் செய்தால் "பகவத் கீதை" என்றும்,
அவர் பேசுனால், "பகவான் உவாச" என்றும் பார்க்கும் போது "பகவான்" என்ற பெயருக்கு உரிமையாளன் யார் என்று தெளிவாக நமக்கு தெரிகிறது.

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள் சேர்த்து சொல்லப்படுகிறது. 

இந்த 6ம் ஒரு சேர பெற்றவர் ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவரே. 

ஸ்ரீ கிருஷ்ணரே "பகவான்"



மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட காரணம் என்ன?

மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட காரணம் என்ன?

Spiritual Answer:

பொதுவாக நாத்தீகன் தனக்கும் மேல் ஒரு பரமாத்மா இருக்கிறார் என்று அறியாமல், எல்லாம் தன் முயற்சியால் நடக்கும் என்று நினைப்பான்.
அவனுக்கு மீறி இருக்கும் பல விஷயங்கள், மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் போன்றவற்றை கொடுக்கும்.

இந்த பயம், கவலை இவர்களில் சிலருக்கு நோய் உண்டாக்கும், சிலருக்கு சோம்பறித்தனத்தை கொடுக்கும். சிலருக்கு தீவிரவாதம், கோபம் போன்ற குணத்தை கொடுக்கும்.




இது போன்ற கவலைகள் நாம் அடைவதே ஒரு நாத்தீக லட்சணம்.

மகா சக்தி வாய்ந்த பகவான் உங்களை மட்டுமின்றி உலகையே காக்க வல்லவன் என்று தெரிந்தும், கவலை பட கூடாது.

நம்மையும் வழி நடத்த கடவுள் இருக்கிறார் என்ற அறியும் நிலையில் நீங்கள் இருந்தால், எந்த நிலையிலும் முயற்சியும் கை விடமாட்டீர்கள், கவலையும் பட மாட்டீர்கள்.

கவலைகள் பல இருந்தாலும், தியானம் உடனே சிலருக்கு கை கூடுவதற்கு காரணம் இந்த தைரியம் தான்.

கவலைகள் பல இருந்தாலும், சோர்ந்து போகாமல் தன் கடமையை உற்சாகத்துடன் தொடர்ந்து செய்பவர்கள் இந்த தைரியத்தில் தான்.




யோகிகள், சாதுக்கள் சோம்பேறிகளாய் இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த தைரியத்தில் தான்.

எந்த வறுமையிலும் தன் முயற்சியை விடாமல் இருப்பவர்களும் இந்த தைரியத்தில் தான்.

நாத்தீக குணத்தை விட்டு விடுவதாலேயே, மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் போய் விடும். 
 
இந்த தைரிய மன நிலையில் அமர்நது கொண்டு, கட்டை விரலின் நுனியும், மோதிர விரலின் நுனியும் சேர்த்து, பிராணாயாமம் மெதுவாக, நிதானமாக 30 நிமிடம் தினமும் செய்தாலே உயர் ரத்த அழுத்தம் என்ற நோயே அண்டாமல் போகும்.

அதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால் அனைவரும் ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை தினமும் தியானிக்க வேண்டும்

சத்தியம் (வாக்கு கொடுத்தால் அதில் உண்மையாக இருப்பது)

"சத்தியம்" என்ற தர்மம், இன்றைய இந்தியாவில் உள்ள மக்களிடம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

"நாளை 10 மணிக்கு உங்களை பார்க்க வருகிறேன்" என்று ஒரு இன்றைய இந்தியன் சொன்னால், இவன் சத்தியத்தை நம்ப முடிவதில்லை.

இன்று, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்த சத்தியத்தை உயிராக மதிக்கின்றனர்.
இந்தியாவில் இதற்கு மதிப்பு குறைகிறது.

சத்தியத்தை மதிக்கும் நாடு எப்பொழுதுமே பிரகாசம் அடையும் என்பது இந்த நாடுகள் எப்படி வலிமையாக இருக்கிறது என்று பார்க்கும் போதே தெரிகிறது.

சத்தியத்துக்காக வாழ்ந்த ராமர் பிறந்த நாட்டில், இந்த தர்மம் வீழ்ந்ததற்கு காரணம் என்ன ? 
ராமர் போன்ற சத்தியத்தில் நின்றவர்கள் சரித்திரத்தை நாம் மறந்ததே இதற்கு காரணம்.

சத்தியத்தில் நிற்கும் மக்களே, நாட்டை உயர்த்த முடியும்.
இனி இந்தியா முன்னேற ஒவ்வொரு இந்தியனும் முதலில் கடைப்பிடிக்க வேண்டியது சத்தியமே !

சரி,
எப்படி இந்தியாவில் பொய் பேசும் பழக்கம் அதிகமாய் போனது?

பொய் பேச தேவை இல்லை என்ற இடத்தில் கூட, வெகு சாதாரணமாக இப்பொழுது பொய் பேசுகின்றனர். இது ஏன்?



எப்படி இந்த சத்தியம் என்ற தர்மம் இந்தியர்களிடம் இப்போது மலிந்து காணப்படுகிறது ?

Root cause Analysis :
இஸ்லாமியர்களின் 1000 வருட ஆதிக்கத்தில் இருந்தும் கூட, ஹிந்துக்களிடம் சத்தியம் அழியாமல் தான் இருந்துள்ளது.

ஆனால், சத்தியமாக இருக்க வேண்டும் என்ற பண்பு படிப்படியாக கிறிஸ்தவர்களின் ஆட்சியில் இருந்து குறைய தொடங்கி, இப்பொழுது விடுதலை அடைந்த பின்பும், ஹிந்துக்கள் தன் குணமாக வைத்திருந்த இந்த சத்யம் (உண்மையாக இருத்தல்) இன்று குன்றி போய் உள்ளது என்பதே உண்மை.

"சத்யம் ஏவ ஜயதே" ( "Truth Alone Triumphs") என்று இன்றும் இந்தியா சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில் யாவருமே பொய் சொல்ல மனம் அஞ்சாததால், அரசன் முதல் பொது மக்கள் வரை பொய் பேச இன்று தயங்குவதில்லை.
நீதிமன்றத்தில் உள்ள ஏராளமான வழக்குகள் இதற்கு சாட்சி.

இந்த சத்தியத்தை உயிராக கொண்டவர் ஸ்ரீ ராமர்.
ராமரிடம் அன்பு உள்ளவன் பொய் பேச அஞ்சுவான். 
சத்தியத்தில் இருப்பான்.

இஸ்லாமியர்கள் காலம் வரை, ஹிந்துக்கள் பெரும்பாலும் அவரவர்கள் உயிராக மதிக்கும் தெய்வத்தை வைத்தோ, தாய் தந்தை மீதோ ஒரு சபதம் செய்து வாணிகமோ, உடன்படிக்கையோ செய்து கொண்டனர்.

இப்படி செய்த சபதம், வாய் மொழியாக இருந்தாலும், பெரும்பாலும் ஜெயித்துள்ளது. 

அரசன் வரை, செல்லும் வழக்குகள் மிக குறைவு அந்த காலங்களில்.

அப்படி வரும் வழக்கும், சில நாட்களில் தீர்வு காணப்பட்டு விடும்.
இது எப்படி சாத்தியமானது?

இந்த சபதமே யார் குற்றவாளி என்பதை காட்டி விடும் சக்தி கொண்டதாக இருந்தது.

பெரும்பாலும் குற்றம் செய்தவன், தன் தாய் மீதோ, தன் ப்ரியப்பட்ட தெய்வத்தின் மீதோ சபதம் செய்த பின், பொய் சொன்னதில்லை. பொய் சொல்ல தயங்குவான்.

இந்த சபதம் உள்ளுக்குள் சென்று மனதை தொடுவதால், ஹிந்துக்கள் முதலில் "சபதம் செய்", பின் பத்திரம், பட்டா போன்றவை எழுதிக் கொள்ளலாம் என்றனர். 

கிறிஸ்தவர்களின் ஆட்சி ஆரம்பித்ததில் இருந்து, பத்திரம், பட்டா போன்றவை மிக முக்கியம் என்று கொண்டு வரப்பட்டு, "சபதம் செய்" என்பது காணாமல் போனது.

நம் ஹிந்து தெய்வங்களின் மீது இருந்த த்வேஷ புத்தியே, இதற்கு காரணம்.

செய்யும் சபதம் ஹிந்துக்களின் தெய்வமாக இருந்தால், எப்படி இவர்கள் நம்பிக்கையை கெடுக்க முடியும்?
தங்கள் மதத்தை பரப்புவது மட்டுமே நோக்கம் கொண்ட இவர்கள், இது போன்று தெய்வத்தின் பெயரால் என்று சபதம் செய்ய அனுமதித்தால், 1000 வருடம் இஸ்லாமியர்கள் ஆட்சியில் மழுங்கி போன ஹிந்துக்கள் விழித்து கொள்ள வழி வகுக்கும்.
தன் மதத்தை பரப்ப இயலாமல் போகும் என்று கணித்து, அதனால் லீகல் சிஸ்டம் என்பதை மட்டுமே முக்கியப்படுத்தி, இவர்களின் தெய்வ நம்பிக்கை பயன் அளிக்கும் என்று தெரிந்தாலும், இதனை தந்திரமாக நம் வழக்கத்தில் இருந்து அகற்றினர்.

சபதம் செய்பவனுக்கு, மனதால் ஒரு வித சஞ்சலம் / நெருடல் ஏற்படும். இந்த சபதம் செய்யும் பழக்கம், காணாமல் போனதும், பத்திரத்தில் கை ரேகை பதித்தாலும், கை எழுத்தே போட்டாலும், "இது என் கை எழுத்து இல்லை" என்று தைரியமாக பொய் சொல்ல ஆரம்பித்தனர்.

பொய் சொல்ல பயந்த நீதி மன்றத்தில், இன்று சகஜமாக பொய் சொல்கின்றனர்.

நீதிபதிகள் ஒரு வழக்கை முடிக்க பல வருடங்கள் ஆகிறது.
இதனால். யார் உண்மை சொல்கின்றனர், யார் பொய் சொல்கின்றனர் என்பது கண்டு பிடிக்க முடியாது போய், ஒரு வழக்கு முடிய பல வருடங்கள் எடுக்கிறது.

உண்மையை நிலைநாட்ட எங்கும் பயன் படுத்தப்பட்ட சபதம் செய்யும் முறை, இன்று நீதி மன்றத்தில் மட்டும் இன்றும் உள்ளது.

இன்றும் ஹிந்துக்கள் கீதையை கொண்டோ,
பிற மதத்தில் மாறிய/மாற்றப்பட்ட ஹிந்துக்கள் அவர்களின் நூலையோ கை வைத்து சபதம் செய்கின்றனர்.

இந்த சபதம் செய்யும் பழக்கம், சகஜமாக ஒவ்வொரு வீட்டிலும், வீட்டில் சண்டை என்றால் ஊர் பஞ்சாயத்தில் என்று இந்த சபதம் என்ற மனோவியல் கொண்டே பல தீர்க்க படாத வழக்குகள் அரசன் வரை சொல்லாமலேயே அந்த காலத்தில் எளிதாக தீர்த்துள்ளனர்.

இன்றோ, அரச பதவியில் இருக்கும் அதிகாரி முதல் வீட்டில் உள்ள குழந்தை வரை பொய் பேச பயப்படுவதில்லை.

பத்திரத்தில் கையெழுத்தோ, சாட்சியை கண்டோ, கொலை செய்யவோ, திருடவோ இவர்களுக்கு (நமக்கு) பயமில்லை.

பணம் இருந்தால் தப்பிக்க வழி தேடுவோம் என்று தான் நினைக்கின்றனர்.

இந்த அதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால், அனைவரும் ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை தினமும் தியானிக்க வேண்டும். 



தந்தை செய்த சத்தியத்துக்கு தான் 14 வருடம் காடு செல்ல கூட தயார் என்று சென்ற ஸ்ரீ ராமர் இந்த நாட்டில் இருந்தவர் என்பதை நாம் மறக்க கூடாது.

14 வருடங்கள் வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரம் வரை இவர் கால் தடம் உள்ளது என்பதை மறக்க கூடாது.

ராமர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த வால்மீகி என்ற ஒரு வேடுவ குலத்தில் பிறந்த ரிஷி, நம் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பதையும் மறக்க கூடாது.

ராமர் ராவணனை தேடி வரும் பொழுது, நம் தமிழ் நாட்டில் இருந்த அகத்திய தமிழ்முனிவர் தன்னிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் தந்தார் என்பதையும் மறக்க கூடாது.

சத்தியத்தால் மட்டுமே நாட்டுக்கு மதிப்பு. 
இந்த தர்மமே அமெரிக்கா, ஜப்பான் மக்களிடம் காணப்படுகிறது.
 

"நாளை பார்க்க வருகிறேன்" என்று ஒரு ஜப்பான்காரன் சொன்னால், கட்டாயம் வருவான் என்று சொல்லலாம்.

இது அடிப்படை குணமாக இருந்த சமயத்தில், இந்தியன் மதிப்பு மிக்கவனாக இருந்தான்.
சரித்திரத்தில், வாஸ்கோடகாமா இந்தியாவை நோக்கி வந்தான்.
இந்தியர்கள் அந்த காலங்களில் கை நீட்டி கேட்பவர்களாக இல்லை.

இப்பொழுது எதற்கு எடுத்தாலும் இந்தியன் அமெரிக்காவையும், ஜப்பானையும் எதிர்பார்க்கும் நிலை வந்ததற்கு காரணம், இந்த சத்தியத்தை நாம் விட்டதே மூலகாரணம்.

ஸ்ரீ ராமர் வழியில் செல்ல செல்ல சத்தியம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வளரும்.

நாடு சத்தியத்தில் நிற்கும். மதிப்பு தானாக பெருகும்.

"சத்யம் ஏவ ஜயதே" ( "Truth Alone Triumphs") என்று சொல்லும் வாக்கு உண்மையாகும்.

ஏகலைவனும், துரோணரும்: ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய தவறான பிரச்சாரம்

ராணுவத்தில் பயங்கரமான ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன.

சாதாரண துப்பாக்கியில் இருந்து nuclear bomb வரை தயாரிக்கப்பட்டு,
அதை பயன்படுத்தும் முறை, குறிப்பிட்ட தகுதி உள்ள வீரர்களுக்கு மட்டும் சொல்லி தந்து, எதிரிகள் உள்ளே வந்து நாட்டை பாதிக்காமல் இருக்க, இந்த வீரர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கின்றனர்.



இது அனைத்து நாட்டு ராணுவமும் செய்கிறது என்பது நாம் அறிந்ததே..
ராணுவம் மட்டுமே அறிந்த இந்த அறிவியல், சாதாரண மக்களுக்கு தெரியாத வண்ணம் பாதுகாக்கப் படுகிறது.

மேலும்,
ஒரு சாதாரண மனிதன் தன் திறமையாலோ, அல்லது ராணுவ ரகசியத்தை திருடியோ, ஒரு அணு குண்டு தயாரித்தால் கூட, கடும் தண்டனைக்கு உள்ளாக நேரும். மரண தண்டனை வரை கூட சட்டம் செல்லும்.

இது போன்ற ஒரு நியாயமான நிகழ்வை நம் இதிஹாசத்தில் இருந்து எடுத்து, வேறு விதமாக அதை காட்டி, நம் ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய தவறான பிரச்சாரம் செய்ய முடியுமா ?
இப்படிப்பட்ட திருட்டுத்தனமான ப்ரசாரங்கள், நம் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் உள்ளது.

நம் ஹிந்து குழந்தைகள் என்ன படிக்கின்றனர்? என்று தெரியாமல் பெற்றோர்கள் இருக்க கூடாது.
ஹிந்து ஸ்கூல், காலேஜில் சேர்க்க ஆசை படவேண்டும் ஹிந்துக்கள்.. 

பாடங்கள், சரித்திரத்தை மறைத்தாலோ, தவறாக எண்ணம் கொண்டு எழுதப்பட்டாலோ, அதை பெற்றோர்கள், தெரிந்து, குறைந்த பட்சம் உண்மை சரித்திரத்தை குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டும்.

ஹிந்து குழந்தைகள் ஹிந்துக்களாக வளர்க்கப்பட, மிக முக்கிய பங்கு பெற்றோர்கள் கையில் உள்ளது. 
தரத்தை விட, குழந்தைகள் ஹிந்து விரோதியாகவோ, நாத்தீக பேய் பிடித்தவனாகவோ வளர்த்து விட கூடாது.?

நம் பாரத இதிஹாசத்தில் இருந்து, இந்த கல்வி அதிகாரிகளுக்கு கிடைத்தது ஒரே ஒரு கதை மட்டும் தான்.

ஏகலைவனும், துரோணரும்:
இது நமக்கு தெரிந்த நிகழ்வே.
துரோணர், தன் சிஷ்யர்களான பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தும் அஸ்திர, சஸ்திர முறைகளை சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார்.

ஏகலைவன் என்ற வேடுவன், துரோணரிடம் சென்று தனக்கும் சொல்லித் தர வேண்டினான்.

துரோணர் க்ஷத்ரியன் (army person) மட்டுமே இதை கற்றுக்கொள்ள தகுதி ஆனவர்கள் என்று கூறி, மறுத்து விட்டார்.



ஏகலைவன் துரோணரை மனதுக்குள் குருவாக ஏற்று, அவர் சொல்லிக் கொடுக்கும் முறைகளை மறைந்து நின்று கவனித்து, தினமும் தனியாக சென்று பயிற்சி செய்வான். இப்படியே பல மாதங்கள் கடந்தன.

ஒரு நாள், துரோணர் பாண்டவர்களுடன் காட்டில் நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறைக்க முடியாத படி, அதன் வாயை சுற்றியும், அதனை சுற்றியும் அம்புகள் தெய்க்கப்பட்டு இருந்தன. ஆச்சர்யம் என்னவென்றால், அந்த நாய் ஒரு காயமும் அடையாதவாறு, அம்புகளால் கட்டப்பட்டு இருந்தது.

இதை கண்டு அர்ஜுனனே ஆச்சர்யப்பபட்டான்.



தேடிப்பார்த்த போது, ஏகலைவன் எதிர் வந்தான்.

தன் குரு தன் முன் இருப்பதை கண்டு ஆனந்தத்தில் மகிழ்ந்தான். அவரை வணங்கி உங்கள் மூலமே இதனை கற்றேன் என்றான்.

துரோணர் இது உடனே கண்டிக்கப் பட வேண்டியது என்று நினைத்து, இது பேராபத்து என்றும் உணர்ந்து, "எனக்கு குரு தக்ஷிணையாக உன் கட்டை விரலை கொடு" என்றார்.

இப்படி ஏகலைவனும், துரோணரும் சந்தித்த நிகழ்வை குழந்தைகள் பாட புத்தகத்தில் மனப்பாடம் செய்யும் முறையில் வைத்து விட்டு, கேள்வி பதில் பகுதியாக, இவர்கள் கேட்கும் கேள்வியே விஷமத்தனமாக உள்ளது.
இவர்கள் குழந்தைகளிடம் கேட்கும் கேள்வி என்ன ?

கேள்வி :
இப்படி நடந்த இந்த ஸம்பவத்தை படித்ததன் மூலம், நீங்கள் (ஹிந்துக்களை பற்றி) என்ன நினைக்கிறீர்கள் ?
என்ன ஒரு விஷமமான கேள்வி ?!! 

இப்படி சாதுர்யமாக கேள்வி கேட்டு, படிக்கும் குழந்தைகளையும், சொல்லித் தரும் ஆசிரியர், பெற்றோர்களுக்கு மறைமுகமாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

"பாருங்கள், ஹிந்துக்கள் எப்படி ஒரு தாழ்ந்த வகுப்பில் உள்ள ஒருவனை தண்டித்து உள்ளனர்.
எப்படி இப்படி ஏகலைவனின் கட்டை விரலை குரு தக்ஷிணையாக கேட்கலாம்?!!"

இப்படியெல்லாம் ஒருவன் இந்த காலத்தில் அணுகுண்டு தயாரித்து விட்டு உயிரோடு இருக்க முடியுமா ?

ஏகலைவன் ஒரு வேடுவன்.
அம்பு விடுவதில் ஏற்கனவே வல்லவன்.

இவன் மறைமுகமாக கற்றுக் கொண்டது அஸ்திர, சஸ்திர ப்ரயோகம். அதாவது "அணுகுண்டு" போன்றவை உபயோகப்படுத்தும் முறை.
இவன் க்ஷத்ரியன் (Army person) அல்ல. இவன் ஒரு சாதாரண பிரஜை (Citizen).



துரோணர் நினைத்தது போலவே, இவன் துரியோதனனின் பக்கம் போய், அதர்மத்தின் வழியில் சண்டை போட்டான்.
இப்படி திருட்டு தனமாக ராணுவ ஆயுதங்கள் பயன்படுத்த கற்றுக்கொண்ட ஏகலைவன் என்ன செய்தான் என்று தெரிந்து கொள்ள
Ekalavya_War படிக்கவும்.


குழந்தைகள் history என்ற பெயரில் எந்த விஷத்தை (விஷயத்தை) படிக்கின்றனர்?  என்று பெற்றோரும் உணர்ந்து, நம் இதிகாசத்தை இவர்களும் சரியாக உணர்ந்து, என்ன உண்மையாக நடந்தது என்று சொல்லித்தரவேண்டும்.

1947ல் இருந்து இப்படிப்பட்ட விஷமக் கல்வியையே, கற்ற கூட்டம் தான், ஹிந்துவாக பிறந்தும் நாத்தீகனாகவும், ஹிந்துவின் பெருமையை சரியாக அறியாமல் தானும் சீரழிந்து, பல உயர் பதவியில் இன்று அமர்ந்து கொண்டு சீரழித்து வருகின்றனர்.

இனி வரும் தலைமுறை குழந்தைகளுக்காவது, பாடம் எப்படி இருந்தாலும் உண்மையை சரியாக சொல்லிக் கொடுக்கும் கடமை பெற்றோருக்கு இருக்கிறது.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka