Followers

Search Here...

Friday 11 May 2018

அத்வைதம், விஷிஷ்ட அத்வைதம், த்வைதம் - 947ல் சிக்கி, 1947ல் விடுதலை ஆன பாரத பூமியில் மக்களை ஹிந்துக்களாகவே இருக்க வைத்தது

த்ருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் முடிந்து, 3102BCல் கலி யுகம் ஆரம்பித்தது.

சுமார் 563BCல் க்ஷத்ரியனான சித்தார்தன் என்ற புத்தரால், உலகம் சூன்யம் என்ற பௌத்த மதம் உருவாகி, பாரத பூமியை ஆக்கிரமித்தது.





அசோக சக்கரவர்த்தியின் மத மாற்றத்தால், பாரத பூமி பௌத்த நாடாக போனது. 

நாட்டை காக்க வேண்டிய அரசன் க்ஷத்ரியனாக இருக்க வேண்டும் என்று சொல்லும் வேத தர்மத்தை (ஹிந்து) விட்டு விட்டு, சந்யாசிகளுக்கு போதிக்கும் பௌத்த தர்மத்தை தனக்கு எடுத்துக்கொண்டான்.

பாரத தேசத்தை ஆண்டு கொண்டிருந்த பேரரசன், அனைத்து அரசர்களையும் போர் செய்யாமல், ஒரு சந்யாசி போல, சாதுவாக அரசாட்சி நடத்த சொன்னான். 

பாரத தேசத்தில் இருந்த ஆப்கான், ஈரான் போன்ற எல்லை ராஜ்யங்கள் பௌத்த ராஜ்யம் ஆகி, அரசர்கள் போர் பயிற்சி இல்லாமல், பலவீனமாகி கொண்டிருந்தார்கள். 

போர் வீரர்கள், போர் பயிற்சி இல்லாமல், பௌத்த ஆலயங்கள் கட்டி கொண்டிருந்தனர்.
சுமார் 30ADல் ஏசு என்ற யூதர் ரோமானியர்களால் இஸ்ரேலில் உள்ள ஜெருசலம் என்ற ஊரில் கொல்லப்பட்டார்.

ஏசுவின் ஆதரவாளர்கள் யூத மதத்தில் இனி இருந்தால், ரோமானியர்களால் கொல்லப்படுவோம், அழிவு நிச்சயம் என்று உணர்ந்தனர்.

ஏசுவின் பெயரால், ஏழைகள், பாதிக்கப்பட்டவர்கள் என்று அனைவருக்கும் ஆதரவாக பேசியும், ஏசு உங்களுக்காக தான் உயிர் நீத்தார் எனவும், ஏசு திரும்ப வருவார், எனவும், ஏசு கொல்லப்பட்டாலும், மீண்டும் வருவார் என்றும் சோகத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் செய்தனர்.

இந்த ஆறுதல் பிரச்சாரம், காலப்போக்கில் வாழ்க்கையில் ஆறுதல் எதிர்பார்க்கும் ஏழைகள், இரக்க குணம் உள்ளவர்களை ஈர்த்தது.  

பெரும் கூட்டம் இவர்களுக்கு சேர சேர, ஒரு சமயம் ரோமானிய பேரரசனும் இவர்கள் வலையில் வீழ்ந்தான். 

ரோமானிய மன்னன் புதிய மதத்துக்கு ஆதரவை காட்டியவுடன், மக்களும் புதிய மதத்துக்கு இழுக்கப்பட்டனர்.






விளைவு: ரோமானிய பேரரசும், அதன் கலாச்சாரம் அழிந்து, அதே ரோமானியாவில் ஏசுவின் பெயரால் சர்ச் உருவாக்கினர். பின் ஊரையே மதம் மாற்றினர். 

ஏசு கடவுள் இல்லை என்று, ரோமானிய கிறிஸ்தவர்களை (Roman catholic) எதிர்த்து, ப்ராடெஸ்டெண்ட் (Protestant Christians) என்ற பிரிவு உருவானது.

வேத சம்பந்தமான தெய்வங்களை வணங்காமல், ஆகஸ்ட், ஜுபிடர் என்று வணங்கி கொண்டிருந்த ரோமானியர்களை மதம் மாற்றுவது எளிதாக முடிந்தது.

இப்படி மேற்கு நாடுகள் கிறிஸ்துவத்துக்கு மாற்றப்பட்டு கொண்டிருக்க,

சுமார் 570ADல் அரேபியாவில் இஸ்லாம் (சரணாகதி - surrender to god) என்ற புது மதம், யூத மதத்தில் இருந்து பிரிந்து முகமது நபி என்பவரால் எழுதப்பட்டு, உருவானது.

முகமது நபி இறந்த பிறகு, அவரின் மருமகன் உருவான "அலி இபின் அபிதலிப்" என்பவரை அடுத்த தலைமையாக ஏற்றனர். 
முகமது நபி தனக்கு பிறகு இவர் வர வேண்டும் என்று யாரையும் நியமிக்கவில்லை என்று, பலர் எதிர்க்க, உட்பூசல், சண்டை, கலவரம் ஏற்பட்டு, மருமகன் தலைமையை ஏற்ற இஸ்லாமியர்கள் தங்களை "ஷியா" (Shia) முஸ்லீம் என்று அடையாள படுத்திக்கொண்டனர்.

ஏற்காதவர்கள், தாங்கள் மட்டுமே உண்மையான இஸ்லாமியர்கள் என்று தங்களை "சன்னி" (sunni) முஸ்லீம் என்று அடையாள படுத்திக்கொண்டனர்.

அன்று ஆரம்பித்த பகை, இன்று வரை தொடர்கிறது.

தங்களுக்குள் அடித்துக்கொண்டாலும், பிற மதங்களை எதிர்ப்பது இவர்கள் கொள்கையாகவே இருந்தது. 

இஸ்லாமியனாக மாற விரும்பாமால், கிறிஸ்தவனாகவும் மாற விரும்பாமல், யூதர்களாகவே வாழ விரும்பியவர்கள் வாழ்க்கை சூன்யமானது. பரதேசிகள் ஆகினர்.

பல தெய்வ கொள்கை உடையவர்களை எதிர்த்தது இஸ்லாம் என்ற இந்த புதிய மதம். 

இஸ்லாமியனாக இல்லாத வேறு தெய்வங்களை வணங்கும் அனைவரும் காபிர்கள் என்று கொள்கை கொண்டிருந்தனர். 

இதனால் பிற மதங்களை சேர்ந்தவர்களை கடுமையாக தாக்கினர்.

இதனால் கிரேக்க, ரோமானிய கலாச்சாரம் இஸ்லாமியர்களுடன் கடும் போராலும், கிறிஸ்தவர்களின் மத மாற்றத்தாலும், அவர்களின் தெய்வ வழிபாடு மூட நம்பிக்கையாகவும் இருந்ததால், வேகமாக வேரோடு அழிந்தது.







இதே சமயத்தில், பாரத தேசத்தில், வேதத்தை உபாஸிக்கும் ப்ராம்மணர்களும், வேதத்தில் உள்ள ஞான மார்க்கத்தை புறக்கணித்து, கர்ம மார்க்கமே சிறந்தது என்று யாகம் போன்ற கர்ம காரியங்களில் மட்டும் நாட்டம் கொண்டிருந்தனர். 

ஞானத்தை போதிக்கும் ப்ராம்மணர்கள், கர்ம மார்க்கத்தை மட்டுமே நாட, பாரத மக்களுக்கு ஞானத்தை உபதேசிக்க ஆளில்லாமல் போனது.
ப்ராம்மணர்களால் ஞான மார்க்கம் புறக்கணிக்கப்பட, க்ஷத்ரிய அரசன், வைஸ்யன் (business), சூத்திரன் (employee) என்று அனைத்து ஹிந்துக்களும்  ஞான மார்க்கத்தை போதிக்கும் புத்தரின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டனர். 
பௌத்த மதம் தீ போல பாரதம் முழுவதும் பரவி இருந்தது.

எங்கு பார்த்தாலும் மொட்டை தலைகள்.

எங்கு பார்த்தாலும், "புத்தம் சரணம் கச்சாமி" என்ற ஒலிகள் ஒலித்தது.

பொய் மதங்களை கண்டிக்க, "அனைத்தும் ப்ரம்மமே" என்ற அபேதத்தை காட்டும், ஞானத்தை போதிக்கும், வேத ஸ்ருதிகளை மட்டும் எடுத்து, "அத்வைதம்" என்ற ஞான  சித்தாந்தத்தை நிலை நிறுத்தினால் தான் ஹிந்துக்கள் வாழ வழி செய்ய முடியும் என்ற நிலை உருவானது.

ரோமானிய, கிரேக்க கலாச்சாரங்கள், இல்லாத தெய்வங்களை வழிபட்டதால், இன்னொரு பொய் மதம் புகுந்தவுடன் தன் கலாச்சாரத்தையும், தெய்வத்தையும் இழந்தது. 

கிரேக்க வீரர்கள், ரோமானிய வீரர்கள் கிறிஸ்துவதுக்கு மதம் மாறினர். தன் கலாச்சாரத்தை தானே அழித்துக்கொண்டனர்.

ஹிந்துக்களின் வேதமோ, சத்தியமானது. இங்கு சொல்லப்படும் யமன், இந்திரன் என்று அனைத்து தெய்வங்களும் சத்தியமாக இருப்பவர்கள்.

பாரத தேசம் பொய் மதங்களால், பொய் தெய்வங்களால் சூழ்ந்து, ஹிந்து மக்கள் அழிவதை தெய்வங்கள் அனுமதிப்பதில்லை.
பொய் மதங்களை, பொய் தெய்வங்களை, மனிதர்கள் தங்கள் முயற்சியால், பொய் பிரச்சாரத்தாலும், பேச்சாலும் வளர்க்கின்றனர்.

ஹிந்து தர்மத்தை, தெய்வங்களே முன் நின்று காப்பாற்றுகின்றனர்.
சிவபெருமானே, இந்த சமயத்தில்,  கேரளாவில் காலடி என்னும் ஊரில், 788ADல் அவதரித்தார். ஆதி சங்கரர் என்று ஜகத்குருவாக அவதாரம் செய்தார்.



காலத்தை அனுசரித்து, வேதத்தில் உள்ள அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டினார்.

வேதத்தில் சொன்ன தெய்வங்களில் பேதம் இல்லை. உலகில் காணும் அனைத்துமே அந்த பரப்ரம்மம் தான். அவரே எல்லாமுமாக உள்ளார் என்று அபேதத்தை நிலை நிறுத்தும் அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார்.

அத்வைத சித்தாந்தமும் வேத சம்மதமே என்பதால், மடங்களை பாரத தேசம் முழுவதும் நிறுவி, ஹிந்துக்களின் மனதில் ஹிந்து தர்மத்தின் மேன்மையை விளக்கி, பொய் மதங்களில் வீழ்ந்து விடாமல் தடுத்தார்.

அத்வைத சித்தாந்தத்தால், பௌத்தர்களின் சூன்ய வாதம் "பொய்" என்று நிரூபிக்கப்பட்டது.

பௌத்த மதம் போல, 70க்கும் மேற்பட்ட பொய் மதங்கள் உருவாகி இருந்த காலம் அது. 
அனைத்தையும் பொய் என்று வாதிட்டு, பொய் மதங்களில் ஹிந்துக்கள் வீழாமல் இருக்க செய்தார்.

பாரத மக்கள், மீண்டும் வேத மார்க்கத்தின் பக்கம் திரும்பினர்.
புத்தர் சொன்ன ஞான மார்க்கத்தை விட, வேதத்தில் சொல்லியுள்ள ஞான மார்க்கமான, அத்வைத சித்தாந்தமே உண்மையானது என்று ஹிந்துக்கள் திரும்பினர்.

தெய்வங்களுக்குள் பேதம் இல்லை என்று சொல்லும் வேத மந்திரங்களை கொண்டு, “அத்வைத” சித்தாந்தம் ஆதி சங்கரரால் ப்ரகாசப்படுத்தப்பட்டது. 

இஸ்லாமியர்கள், தங்கள் மதத்தை பரப்பும் நோக்கில், இவர்கள் பார்வை பாரத தேசத்தை நோக்கி 947ADல் திரும்பியது.

947ADல் இஸ்லாமியர்களின் படையெடுப்பு “ஈரான், ஆப்கான்” போன்ற பாரத தேச பக்கம் திரும்ப தொடங்கியது.

அசோக சக்கரவர்த்தியினால் மாற்றப்பட்டு இருந்த பௌத்த தேசங்களான ஈரான், ஆப்கான் போன்ற நாடுகள், அரேபியர்களின் படையெடுப்பில் வீழ்ந்தது.
இரு நாடுகளும் இஸ்லாமிய நாடாக மாறியது.
ஆப்கான் நாட்டை ஆண்டு கொண்டிருந்த “அமீர் சூரி” என்ற பௌத்த அரசன், இவர்களிடம் எதிர்க்க முடியாமல் தோற்றான்.

பௌத்த மதம் அரசர்களை கோழைகள் ஆக்கி, சோம்பேறிகள் ஆக்கி இருந்தது.

இஸ்லாமிய மதத்தின் எதிர்க்கும் குணம், பொதுவான இறை கொள்கைகள் இவனுக்கு பிடித்து போக, தன் மகன்களை பௌத்தனாக வளர்க்காமல் இஸ்லாமியனாக வளர்த்தான்.

அமீர் சூரி என்ற பௌத்த அரசன் மதம் மாறியதால், அவன் சந்ததியின் காரணமாக, இந்தியாவில் பல கோவில்கள் இடிய காரணம் ஆனது. 
விளைவு: இவனுக்கு பிறகு, ஈரான், ஆப்கான் தேசங்கள் இவன் பிள்ளைகளால், பின் வந்த பேரன்களால், இஸ்லாமிய நாடாகி போனது.  

“முகம்மது கோரி” போன்றவர்கள் இவன் குடும்பத்தில் வந்தவர்களே.  கோரி அரசாட்சி (Ghurid Dynasty) உருவாக அமீர் சூரி வித்திட்டான். 
அங்கு இருந்த ஹிந்து கோவில்கள், பௌத்த ஆலயங்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன.

ஹிந்து தேச மக்கள், ஒரு சமயம் பௌத்தனாகி, பின் இஸ்லாமியனாக ஆகி, நாட்டையே இஸ்லாமிய நாடாக ஆக்கினர். 
இன்று வரை ஆப்கான், ஈரான் போன்ற பாரத தேசங்கள் இஸ்லாமிய நாடாக தான் உள்ளது.

மதம் மாறிய இந்த கூட்டமே, பின் இந்தியாவுக்கு பெரும் சவாலை தர ஆரம்பித்தது. 

ஸ்ரீ ராமரின் தம்பி "பரதன்" அமைத்த காந்தாரம் (gandahar) இன்று இஸ்லாம் நாடாகி விட்டது. 

ஸ்ரீ ராமரின் தம்பி "பரதன்" அமைத்த "தக்ஷஷீலா" (Taxila), புருஷபுரா (peshavar) இன்று பாகிஸ்தான் என்று பிரித்து கொடுத்ததால், இன்று இஸ்லாம் நாடாகி விட்டது.

ஸ்ரீ ராமரின் மகன் லவன்  அமைத்த "லவ புரா" (Lahore) பிரித்து கொடுத்ததால், பாகிஸ்தானில் இன்று இஸ்லாம் நாடாகி விட்டது.

மதம் மாறுபவர்களால் அந்த சமயத்தில், பெரும் ஆபத்து ஏற்படாவிட்டாலும், அவர்களுக்கு பின் வரும் சந்ததியினர் செய்யும் அட்டகாசங்கள் ஹிந்துக்களை பாதிக்கிறது. 

ஹிந்துக்கள் பயத்தில் மதம் மாறுவதற்கும், வேதம் தெய்வத்தை பற்றி என்ன சொல்கிறது என்பதை சொல்வதற்கும் அவதார புருஷர்கள் தேவைப்பட்டனர். 

சரித்திரத்தை பார்க்கும் போது, மதம் மாறும் ஹிந்துக்களின் சந்ததியினர் செய்த அட்டகாசங்கள் மிக அதிகம். 





தன் முந்திய தலைமுறை ஹிந்துக்கள் என்று தெரிந்தும், இவர்கள் இடித்த கோவில்கள் அதிகம். இவர்களால் கொல்லப்பட்ட ஹிந்துக்கள் அதிகம். கொள்ளை அதிகம்.

ஈரான், மற்றும் ஆப்கான் என்ற இரு தேசங்களை இழந்ததால், பெரும் ஆபத்தை இந்திய பூமி சந்திக்க வித்திட்டது.

அடுத்த 1000 வருடங்கள்,
இந்தியர்கள் கோடிக்கணக்கில் மடிவதற்கும்,
வட இந்தியா முழுவதும் தென் இந்தியாவில் உள்ள கோவிலை போன்று இருந்த லக்ஷக்கணக்கான கோவில்கள் தரைமட்டம் ஆனதற்கும்,
தங்கத்தில் புரண்டு கொண்டிருந்த பாரத மக்கள் ஏழை ஆவதற்கும்,
கலாச்சாரம் அழியாமல் அவரவர் தொழிலை மற்றவர் பிடுங்காமல், அனைவருக்கும் ஒரு சுயதொழில், சுய வருமானம், சுய கௌரவம் என்று வாழ வைத்துக்கொண்டிருந்த க்ஷத்ரிய அரசகுலம் அழிவதற்கும் வித்திட்டது. 

இதற்கு மூல காரணமாக இருந்தவர் "சாம்ராட் அசோகர்". க்ஷத்ரிய அரசர்களை பௌத்தனாக்கி, கோழைகள் ஆக்க மூல காரணமானார்.

இப்படி இஸ்லாமும், பௌத்தமும் பாரத தேசத்தை உலுக்கி கொண்டிருக்க,
"ஒரே தெய்வம்" என்ற கொள்கை பாரத மக்களிடம் ஸ்தாபிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ஒரே தெய்வம் வேதத்தில் சொல்லவில்லை என்ற பிரமையை இஸ்லாமும், பௌத்தமும் பாரத மக்களிடம் விதைக்க பார்த்தது.
வேதத்தின் உண்மையை விளக்க, ஒரு அவதார புருஷர் மீண்டும் தேவைப்பட்டார்.
விஷிஷ்ட அத்வைத சித்தாந்தத்தை பிரகாசபடுத்த ஒரு அவதார புருஷர் தேவைப்பட்டார்.

பாரதத்தில் இன்னும் கொஞ்சம் ஓடிக்கொண்டிருந்த பௌத்த பிடிப்பையும், ஒரே கடவுள் என்ற கொள்கை கொண்ட இஸ்லாம் என்ற மதத்தின் நுழைவையும் கட்டுப்படுத்த, ஹிந்துக்களுக்கு வர இருக்கும் பெரும் ஆபத்தில் இருந்து சமாளிக்கும் தெம்பு கொடுக்க, ஹிந்துக்களாகவே வாழ நெஞ்சுறுதி கொடுக்க, இம்முறை பரவாசுதேவனின் படுக்கையாக இருக்கும் ஆதி சேஷனை அவதாரம் செய்யுமாறு  நியமித்தார் பெருமாள். 
1017ADல் ஆதி சேஷனே தமிழகத்தில், சென்னையின் அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் மனித அவதாரம் செய்தார்.

"ஸ்ரீ ராமானுஜர்" என்றும் எதிராஜர் என்றும், போற்றப்படும் மகான் அவதாரம் செய்தார். இது தமிழனுக்கு பெருமை.

அனைவரும் ஹரிஜனங்களே (ஹரியின் குழந்தைகளே) என்றும், 
அனைவருக்கும் மோக்ஷம் உண்டு என்றும், 
அனைவரும் நாராயண பக்தி செய்யலாம் என்றும் சமூக புரட்சியும் செய்து, 
அடுத்த 1000 வருடங்கள் இஸ்லாமிய ஆட்சி நடந்தும், கிறிஸ்துவர்கள் 200 வருடங்கள் ஆட்சி செய்தும், ஹிந்துக்கள் அழியாமல் இருக்க வழி செய்தார். 

காலத்தால் அழியாமல் இருக்கும் ஆதி சங்கரரும், ஸ்ரீ ராமானுஜரும் வேதத்தில் சொன்ன சிவனும், ஆதி சேஷனான தெய்வங்கள் என்று ஞாபகத்தில் கொள்ள வேண்டும். 

மற்ற மதத்தை காக்கும் பொறுப்பு, அந்த மதத்தை பின் பற்றுபவர்கள் கையில் உள்ளது. அவர்கள் பிரச்சாரத்தை நம்பித்தான், அவர்கள் மதம் வாழப்போகிறது. 
ஹிந்து மதத்தை காக்கும் பொறுப்பை தெய்வங்களே ஏற்று கொண்டு உள்ளனர் என்பதே நம் ஹிந்து மதத்தின் பெருமை.

காலத்தை அனுசரித்து, பேதம், அபேதம் இரண்டையும் காட்டும் வேத ஸ்ருதிகளை எடுத்து, "விஷிஷ்ட அத்வைதம்" என்ற சித்தாந்தத்தை பாரதத்தில் நிலை நிறுத்தினார், ஸ்ரீ ராமானுஜர்.

நாம் அனைவரும் ஜீவாத்மா, 'விஷ்ணு' ஒருவரே பரமாத்மா என்று வேத வாக்கியத்தால் நிர்ணயம் (முடிவு) செய்தார்.

ஸ்ரீ ராமானுஜர் அவதரித்து இருக்காவிட்டால், ஹிந்துக்களை மிரட்டி, குழப்பி, 1000ADயிலேயே மத மாற்றம் செய்து இருப்பார்கள்  இஸ்லாமியர்களும், பௌத்தர்களும்.
ஒரே கடவுளை தான் வேதம் சொல்கிறது என்று விஷிஷ்ட அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார்.

ஏற்கனவே அத்வைத சித்தாந்தத்தால் நிலை குலைந்து இருந்த பௌத்த மதம், ராமானுஜரின் விஷிஷ்ட அத்வைத சித்தாந்தத்தால் பாரத மக்களால் நிராகரிக்கப்பட்டது.



அனைவரும் வேத மார்க்கத்தை ஏற்றனர். பௌத்த மதம் பாரதத்தை விட்டு போனது.
அனைவரும் அந்த விஷ்ணுவின் அடியார்களே. அனைவரும் வைஷ்ணவர்களே. நமக்கு ஒரே தெய்வம் "நாராயணனே" என்று வேத வாக்கியத்தால் நிரூபித்தார். பாரத மக்கள், மீண்டும் வேத மார்க்கத்தின் பக்கம் திரும்பினர்.

இந்த தெளிவு கிடைத்த பின்னர், ஹிந்துக்கள், அத்வைத சித்ததாந்தத்தையும், விஷிஷ்ட அத்வைத சித்ததாந்தத்தையும், தலையில் வைத்து பூஜித்தனர்.

1200 வருடங்கள் அந்நிய மதங்கள் கோடிக்கணக்கான ஹிந்துக்களை கொன்றாலும்,
லக்ஷகணக்கான கோவிலை இடித்து அதில் மேல் மசூதி, மஹால் என்று கட்டினாலும்,
அனைத்து செல்வங்களையும் கொள்ளை அடித்தாலும்,
ஹிந்துக்களை பிச்சைக்காரகள் போன்ற நிலைக்கு ஆக்கினாலும், பொய் மதம் போவதில்லை என்று மானத்தை இழக்காமல், கஷ்டங்களை சமாளித்தனர் ஹிந்துக்கள்.

947ல் சிக்கி, 1947ல் விடுதலை ஆன பாரத பூமியில் 90% மக்கள் ஹிந்துக்களாகவே இருந்தனர்.
ரோமானியர்களை போல, கிரேக்கர்களை போல, அழிந்து விடவில்லை, மதம் மாறி விடவில்லை.

கஞ்சிக்கு அலையும் நிலையில் பெரும்பாலான ஹிந்துக்கள் தள்ளப்பட்டு இருந்தனர். இருந்த போதும், ஹிந்துக்களாகவே இருந்தனர்.

பொய் மதங்களை பொய் தெய்வங்களை மறுத்தனர்.

இந்த நெஞ்சுரத்துக்கு விதை போட்டவர்கள், வேதத்தில் சொன்ன சிவபெருமானும், ஆதி சேஷனுமே. 
ஆதி சங்கரரையும், ஸ்ரீ ராமானுஜரையும் அறியாத ஹிந்துக்கள் நன்றி கெட்டவர்கள்.

நாம் இன்று ஹிந்து என்றும், ஹிந்துக்களின் பெயர் வைத்து கொண்டும் இருப்பதற்கு இவர்களே காரணம்.

அவர்கள் சரித்திரத்தை ஒவ்வொரு ஹிந்துவும் படிக்க வேண்டும்.

நாத்தீகன் கூட ஸ்ரீ ராமானுஜர் கதையை நாடகம் அமைத்து விட்டான் இந்த காலத்தில்.

இவர்கள் இருவரை பற்றி இன்று வரை தெரியாமல் இருந்தால் கூட, இனியாவது தெரிந்து கொள்ள பல புத்தகங்கள், ஒளிப்பதிவுகள் கண்டு தெரிந்து கொள்ள வேண்டும். 

நாம் இன்று ஹிந்துவாக இருக்க வேண்டும் என்று, தெய்வங்கள் ஆசைப்பட்டு உள்ளன என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

சிவனும், ஆதி சேஷனும் அவதாரம் செய்த சரித்திரத்தை தெரிந்து கொள்ளாமல், ஒரு ஹிந்து இருக்கலாமா?

தெய்வங்களுக்குள் பேதம் இருப்பதாக சொல்லும் வேத மந்திரங்களை கொண்டு,  1238ADல் கர்நாடகாவில் அவதரித்த ஆனந்த தீர்த்தர் என்ற மத்வ ஆச்சாரியார், “த்வைத” சித்தாந்தத்தை மீண்டும் ப்ரகாசப்படுத்தினார். 

பகவான் நாராயணன் மட்டுமே பரமாத்மா, 
நாம் அனைவரும் ஜீவாத்மா என்ற பேதத்தை காட்டி, நாம் அனைவரும் அவரிடம் பக்தி செய்ய வேண்டும் என்று த்வைத சித்தாந்தத்தை ப்ரகாசப்படுத்தினார். கர்நாடகாவில் பக்தி வளர்ந்தது. 


Tuesday 1 May 2018

"ஸஞ்சிதம்", "ப்ராரப்தம்" ,"ஆகாமி" என்றால் என்ன?

"ஸஞ்சிதம்" என்றால் என்ன?
"ப்ராரப்தம்" என்றால் என்ன?
"ஆகாமி" என்றால் என்ன?

ஜீவனுக்கு ஜனனமும், மரணமும் மாறி மாறி சுற்றிக்கொண்டே வருவதால் 'ஸம்சார சக்கரம்' என்று சொல்லப் படுகிறது

உலகில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் காரணம், பூர்வ கர்மமே (செயல்) ஆகும்.

கர்ம பலன் இல்லாவிடில், உலகில் இவ்வளவு சுக துக்கங்கள் இருக்க காரணமென்ன?

ஒரு பிறவியிலேயே அனுபவிக்க படாத கர்மபலன் மிச்சமிருக்கும் போது, மறு பிறவியை அடைகிறான்.




பூர்வ ஜென்மத்தில் மிச்சப்பட்ட கர்மபலனை இப்பிறவியில் அனுபவித்ததும், இப்பிறவியில் செய்த கர்மபலனை அடுத்த பிறவியில் அனுபவிக்கவும் நேரிடுவதால், ஜீவன் பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறான்.

இவ்வாறு ஜனனமும், மரணமும் மாறி மாறி சுற்றிக்கொண்டே வருவதால் "ஸம்சார சக்கரம்" என்று சொல்லப் படுகிறது.

பலன் கொடுக்க அவகாசமின்றி மீந்து விட்ட கர்மபலன்களின் மூட்டையை "ஸஞ்சிதம்"  என்றும்,

பலன் கொடுக்க ஆரம்பித்து விட்ட கர்மபலன்களை "ப்ராரப்தம்" என்றும்,

இப்பிறவியில் செய்த கர்மாக்களின் பலன், இனி வரப்போவதால் "ஆகாமி" என்றும் சொல்லப் படுகிறது.

இந்த மூன்று விதமான கர்மபலன்களையும் அனுபவித்து தீர்த்த பிறகு தான், மோக்ஷம் கிடைக்கும் என்ற நியமம் ஏதும் இல்லை.

ஸஞ்சித்தையும், அகாமியையும் ஞான அக்னியால் பொசுக்கி விட்டு, ப்ராரப்தத்தை மட்டும் அனுபவித்தால், இப்பிறவியிலேயே மோக்ஷம் கிடைக்கும்.

யாரும் ஞானத்துக்காக ஆசைப் படவில்லை. முயற்சிக்கவும் இல்லை.

பெரும்பாலும் அஞ்ஞானிகளே இருப்பதால், ஸம்சார சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது.


பாபங்களுக்கு தண்டனை அனுபவித்தும் ஏன் மீண்டும் மீண்டும் ஜீவன் பாபம் செய்கிறான்?

பாப வாசனை
இந்த உடலை விட்டு ஜீவன் பிரிந்த பின்,
எம தர்மராஜன் ஆணை படி "செய்த பாவங்களுக்கு நரகத்தில் தண்டனை அனுபவிக்கிறான்".



மீண்டும், இந்த உலகில், இவன் செய்த கர்ம பலன்களை பொறுத்து, அதற்கு தகுந்த தாய், தந்தை தேர்ந்தெடுத்து, இந்த உலகில் மீண்டும் பிறக்க அனுக்கிரஹம் செய்கிறார்.

'தான் கொடுத்த தண்டனையில் இவன் திருந்தி, இப்பொழுது கிடைத்த இந்த சரீரத்தை கொண்டாவது ஒழுங்காக வாழ்ந்து, கிருஷ்ண பக்தி செய்து,   கிருஷ்ண சரணம் அடைவானா' என்று எம தர்மராஜன் எதிர்பார்க்கிறார்.

ஆனால் கிடைத்த பிறவியை இந்த ஜீவன், மீண்டும் பாவங்கள் செய்து, கிருஷ்ண பக்தி செய்யாமல் வீணடித்து, கிடைத்த மனித சரீரத்தை இழக்கிறான்.
கிடைத்த ஜென்மத்தை வீணடித்து, மீண்டும் எம தர்மராஜன் முன் வந்து நிற்கும் போது எம தர்மராஜன்,
"எத்தனை தண்டனை முன்பு கொடுத்தாலும், வைகுண்டம் செல்லாமல், ஏன் மீண்டும் மீண்டும் இங்கேயே தண்டனைக்கு வருகிறாய்?"
என்று வருத்தத்தால், கடுங்கோபத்துடன், தன் கடமை படி மீண்டும் தண்டனை கொடுத்து முடிந்தவரை மகா பாபங்களை குறைத்து, மீண்டும் இந்த உலகில் பிறக்க (மனிதனாகவோ, விலங்காகவோ, மரமாகவோ) வழி செய்கிறான்.
பாபங்களுக்கு தண்டனை அனுபவித்தும், ஏன் மீண்டும் மீண்டும் ஜீவன் பாபம் செய்கிறான்? 
அதற்கு பெயர் தான் "வாசனை"

தண்டனை அனுபவித்தும், ஜீவனுக்கு அவன் "பாப குணங்கள் என்ற வாசனை விட்டு விலகுவதில்லை".

இந்த வாசனையே இந்த ஜீவனுக்கு மீண்டும் மீண்டும் செய்த பாபத்தையே செய்ய வைக்கிறது.

வாசனை என்றால் என்ன? புரியும் படியாக சொல்ல வேண்டுமானால்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருவன் வந்து "என்னுடைய வீட்டில் இருந்த நகையை யாரோ திருடி விட்டார்கள்… யார் திருடினார்கள் என்று தெரியவில்லை" என்று அழுதான்.

போலீஸ் இன்ஸ்பெக்டர், அருகில் இருந்த போலீஸ்காரரிடம் அந்த ஏரியாவில் உள்ள ஒரு கேடியின் பெயரை சொல்லி அழைத்து வரச் சொன்னார்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அந்த கேடி, தலையை சொறிந்து கொண்டே, சிரித்துக் கொண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்த்து "வணக்கம் ஸார்" என்று ஸலாம் போட்டான்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபத்துடன் ஒரு அடி போட்டு, "என்னடா, நகையை திருடினாயா?" என்றார்.



உண்மையை ஒத்துக்கொண்டு, திருடிய நகையை திருப்பி கொடுத்தான்.

நகையை இழந்தவர், "எப்படி கண்டுபிடித்தீர்கள்?" என்று கேட்டார்

"இவன் ஒரு கேடி. இது போன்று பல முறை, இதே போல தவறு செய்து என்னிடம் மாட்டியிருக்கிறான். 
ஒவ்வொரு தடவையும் அடி கொடுத்தாலும் திருந்தாமல் மீண்டும் மீண்டும் செய்கிறான். 
பல தடவை இது போல அடி வாங்கி, பழகி போனதாலோ என்னவோ, ஜெயிலுக்கு போவதும், அடி வாங்குவதும் இவனுக்கு பழகிவிட்டது போல" என்று வருந்தவும் செய்தார்.

இது தான் "வாசனை".
அது போல, 
"பாபம் செய்ய வேண்டும் என்ற வாசனை", இந்த ஜீவனை விட்டு விலகுவதில்லை.
அதனால் தான், தண்டனை பல அனுபவித்தும், உலகில் துக்கமே அதிகம் அனுபவித்தும், பாப வாசனை இருப்பதால், பாபம் செய்து கொண்டே இருக்கிறான்.

இந்த பாப வாசனையை அழிக்க எம தர்மராஜனாலும் முடியாது.

இந்த பாப வாசனை அழிய வேண்டுமானால், இடை விடாது "ராம, ராம, ராம, ராம ..." என்று சொல்லுவதே இந்த ஜீவனுக்கு சித்த சுத்தி தரும்.
ராம நாமம் என்ற மந்திரம், இந்த ஜீவனின் இந்த பாப வாசனையை அழித்து, ராம, கிருஷ்ண பக்தியில் ஆழ்த்தி விடும்.
பாபம் செய்ய வேண்டும் என்ற ஆசையை அழித்து விடும்.

எம தர்மராஜன் "ராம, ராம, ராம, ராம …" என்று சொல்லும் ஜீவனை கண்டு பேரானந்தம் அடைகிறார்.

இந்த ஜீவன் இந்த உலகத்தை விட்டு செல்லும் போது, தானே வந்து, தன் தலை மேல் கால் வைத்து ஏறி வைகுண்டம் செல்லுமாறு வேண்டுகிறார்.

ஒரு ஜீவன் முக்தி அடைந்து விட்டது என்று ஆனந்தம் அடைகிறார் எம தர்மராஜன்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 





Monday 30 April 2018

வாலிகர்கள் யார்? ம்லேச்சன் யார்? கர்ணனுக்கும், சல்லியனுக்கும் நடந்த விவாதம்

மஹாபாரத சமயத்தில் ம்லேச்சர்கள், வாலிகர்கள் என்று சிலரை குறிப்பிடுகின்றனர்.
இவர்கள் யார்?



சத்ய யுகம், த்ரேதா யுகம் வரை சனாதன தர்மம் மட்டுமே (இன்று முகலாயர்கள் வைத்த பெயர் "ஹிந்து") உலகம் முழுவதும் இருந்தது.
"சகர' சக்கரவர்த்தி அஸ்வமேத யாக குதிரையை கபில ரிஷி எடுத்து விட்டார் என்று தவறாக புரிந்து கொண்டு, தன் 60000 புத்திரர்களை அனுப்பினார்.
எதிர்க்க வந்த அனைவரும் தீயில் பொசுங்கினர்.

கபிலர் இருந்த அந்த இடம் "கலிபோர்னியா" என்று சொல்லப்படுகிறது. பொசுங்கி சாம்பலாக போனார்கள் என்று சொல்லும் சரித்திரத்தை ஒத்து, கலிபோர்னியா அருகில் Ashland என்ற பெயருடன் இன்றும் பெயர் அளவில் உள்ளது.

சத்ய யுகத்தில் நடந்த இந்த சரித்திரம்.
இதற்கு பின்,
பகீரதன் சொர்க்க லோகத்தில் இருந்து கங்கையை கொண்டு வந்தான்.

கங்கை பாரத பூமியான இமயமலைக்கு வர சம்மதிக்க, அந்த ஜலத்தை கொண்டு, இறந்த தன் முன்னோர்களுக்கு நற்கதி கிடைக்க செய்தார்.

கங்கை பாரத பூமிக்கு வரும் முன் நடந்த நிகழ்வு என்றால், காலத்தால் கணிக்க முடியாத சரித்திரமாக உள்ளது.
கங்கை பூமிக்கு வந்த சரித்திரம் அறிய
https://www.proudhindudharma.com/2017/12/GangaStory.html படிக்கவும்.

துவாபர யுக சமயத்தில் ஈரான் தாண்டி, வெகுவாக சனாதன தர்மத்தில் இருந்து விலகி, தனக்கு தோன்றிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.


பல தலைமுறைகள் செல்ல, ஒரு சமயத்தில், இவர்கள் முழுவதுமாக சனாதன தர்மத்தை மறந்து தான் தோன்றியாக, வாழ ஆரம்பித்தனர்.
இவர்கள் வாழும் பூமியும் ம்லேச்ச பூமியாக கருதப்பட்டது.

மஹாபாரத சமயத்தில் பாண்டவர்கள், கௌரவர்கள் போர் செய்த போது, பெரும்பான்மையான ம்லேச்ச படைகள் கௌரவர்கள் பக்கம் சேர்ந்து போரிட்டனர் என்று பார்க்கிறோம்.

மஹாபாரதம் நடந்த சமயத்தில், இஸ்லாம் என்ற மதமோ, கிறிஸ்தவ என்ற மதமோ, பௌத்த என்ற மதமோ, ஜைன என்ற மதமோ உருவாக்கப்படாத காலம்.

மஹாபாரதம் துவாபர யுக முடிவில் நிகழ்ந்தது.
சுமார் 3000BCல் என்று சொல்லலாம்.
3102BC முதல் கலியுகம் தொடங்கியது.

வாலிகர்கள் யார்?
வேத மார்க்கத்தை மீறி, சனாதன (ஹிந்து) குடும்பத்தில் பிறந்தும், நாத்தீக பேச்சு பேசியும், வேத மார்க்கத்தில் சொன்ன தர்மத்தை புரிந்து கொள்லாமல்  எதிர்ப்பவர்களை பொதுவாக, "வாலிகர்கள்" என்று குறிப்பிட்டனர்.



ம்லேச்சன் யார்?
வேத மார்க்க பரம்பரையில் இருந்து பல பரம்பரையாக விலகியவர்கள், சனாதன தர்மம் தெரியாத, அதில் உள்ள தர்மம்-அதர்மம் தெரியாத தனக்கு தோன்றிய வழியில், தனக்கு தோன்றிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, தானே ஒரு இல்லாத தெய்வத்தை உருவாக்கி குருட்டு வழிபாடு செய்பவர்களை "ம்லேச்சன்" என்று குறிப்பிட்டனர்.

இன்றைய நிலையில், ம்லேச்சன் என்பவன் அமெரிக்கா, பிரிட்டன், அரேபிய, ஜப்பான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருக்கும் நம் ஹிந்து கலாச்சாரத்தை அறியாதவர்கள் என்று சொல்லலாம்.

இவர்களுக்கு ஹிந்துக்கள் கலாச்சாரம் மிக்கவர்கள் என்ற ஞானம் உண்டு. அறிவாளிகள், விருந்தோம்பல், குடும்ப கலாச்சாரம் கொண்டவர்கள் ஹிந்துக்கள் என்ற  பொதுவான மரியாதை உண்டு.
இன்று,
இவர்களோடு "ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ்" போன்ற பாரத தேசமாக இருந்த பூமியும் ம்லேச்ச தேசமாகிவிட்டது.

இன்றைய நிலையில்,
வாலீகர்கள் என்றால், 947AD வரை, பாரத பூமியாக இருந்த ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாட்டில், ஹிந்து குடும்பத்தில் பிறந்து, அதில் இருந்து விலகி, இன்று தன்னை வேறு மதத்தினராக நினைத்து வாழ்பவர்களுக்கு, இந்தியாவிலேயே பார்க்க ஹிந்து போன்ற நிறத்தை கொண்டு, நாத்தீகம் பேசிக்கொண்டும், வேறு மதத்தில் புகுந்து கொண்டும் இன்று ஹிந்துக்களையே எதிர்ப்பவர்கள், அனைவரும் வாலீகர்கள் என்று அறியலாம்.
இந்தியாவில் பிறந்து, வேற்று மதத்திற்கு மாறியவர்கள் என்று அனைவருமே வாலீகர்கள் என்று அறியலாம்.

ம்லேச்சனை விட, மிக ஆபத்தானவர்கள் வாலீகர்கள்.
மதம் மாறியதாலும், ஹிந்துக்கள் மீது இவர்களுக்கு ஊட்டப்படும் வெறுப்பும் மிக ஆபத்தானது.

மஹாபாரதத்தில் நாரத முனி, வியாச பகவானை பார்த்து,
"வேத சாஸ்திரம் சொன்னபடி வாழாத, அதற்கு நேர் மாறாக வாழும் வாலீகர்கள், உலகத்திற்கே களங்கம்/கறை போன்றவர்கள்.
இந்த கறை இல்லாத போது,
உலகம் தானே ப்ரகாசிக்கும்." என்று சொல்கிறார்.

ஒரு ஹிந்துவை பார்த்து, "நீ ஒரு வாலீகன்" என்று சொன்னால், அந்த காலத்தில் அதை அவமானமாக கருதினர்.

அதாவது, "ஹிந்துவாக பிறந்தும், ஹிந்துவுக்கு விரோதியாக நடப்பவன், ஹிந்து தர்மம் என்று மதிக்கும் விஷயங்களை எதிர்ப்பவன்" என்பது போன்ற அர்த்தம்.

கர்ணனுக்கும், சல்லியனுக்கும் இந்த விஷயத்தில் தான் வாக்குவாதம் நடந்தது.
சனாதன தர்மத்தில் இருந்த சல்லியனை "வாலீகர்களை ஆட்சி செய்பவன்" என்று கர்ணன் பேசினான்.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் (west bengal) கர்ணன் தலைமை ஏற்றான்.

கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - சல்லியன் (Punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார்.
இது சல்லியனை அவமான படுத்துவதாக இருந்தது. இருந்தாலும் சம்மதித்தார்.

போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு படுத்தினான்.
த்ரிதராஷ்டிரனை காண வந்திருந்த வேத ப்ராம்மணர்கள், யாகம் செய்ய இடம் கேட்க, மாத்ர தேச அரசனை உதவி செய்ய சொல்ல,
வேதம் கற்ற ப்ராம்மணர்கள்,
'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறி உதவியை மறுத்து விட்டனர்.
இதை நினைவு கூறி, "நீ அந்த தேச அரசன் தானே" என்றான்.



வேத மார்க்க வழியில் நடப்பவனை, "நீ ஒரு வாலிகன்" என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.
சல்லியன் பெரும் அவமானம் கொண்டார்.
இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை விட்டு இறங்கி சென்று விட்டார்.
அங்க அரசன், கர்ணன் அர்ஜுனன் பொழிந்த அம்பு மழையில் மடிந்தான்.

இன்றைய West Bengal, பங்களாதேஷ் (Bangladesh) 3000BCல் மஹாபாரத சமயத்தில் எப்படி இருந்தது?
மேலும் தெரிந்து கொள்ள,
https://www.proudhindudharma.com/2017/12/west-bengal-bangladesh.html படிக்கவும்.



Saturday 28 April 2018

தமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 80 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள்.



*'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வந்து பார்'*, என்று பெருமைப்பட சொல்லும் மதுரைக்காரன், தன் ஆயுளில் மறக்க கூடாத சில பெயர்கள் உண்டு.
1. *அலாவுதீன் கில்ஜி*
2. அவன் படைத்தளபதி *மாலிக் காபுர்* என்ற *மாணிக்* (இஸ்லாமியனான ஹிந்து)
3. கில்ஜிக்கு பிறகு வந்த *முகமது பின் துக்ளக்*
4. மிக முக்கியமாக, *முகமது கியாசுத்தின்*
5. இன்றைய தேதியில் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாண தேர் ஒடுவதற்கும், ஹிந்துக்கள் இருக்கவும் காரணமான, தமிழ் தேசத்தை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர அரசர் *கம்பண்ணா*.

சுமார் 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜியின் படை தளபதி "மாலிக் காபுர்" செருப்பு கால்களுடன், தன் ஒரு லட்ச இஸ்லாமிய படையுடன் நம் மீனாட்சி கோவிலில் புகுந்து, போலியாக வைத்திருந்த சிவ லிங்கத்தை இடித்து தள்ளி விட்டான்.

இன்றும் அந்த லிங்கம் 1311ல் நடந்த கதை சொலகிறது. போய் பார்க்கலாம்.

1311ADல் மீனாட்சி கோவில் மூடப்பட்டு, இனி ஹிந்துக்கள் தலை தூக்க முடியுமா? என்ற நிலையில் இருந்தது நம் மதுரை.

1340ல், டில்லியை ஆண்டு கொண்டிருந்த, "முகமது பின் துக்ளக்" ஆணைப்படி, மதுரை வாஜிராக இருந்த "ஜலாலுத்தின் ஹசன்"னிடம் வேலை செய்த "முகம்மது கியாசுதின்" என்பவன், ஜலாலுத்தின், மற்றும் அவன் மகன், மருமகன் அனைவரையும் கொன்று, தான் மதுரை சுல்தான் என்று ஆகி விட்டான்.

1340ல் ஆட்சி செய்ய ஆரம்பித்த *முகம்மது கியாசுதின்* மதுரை முதல் திருச்சி வரை பரவி இருந்த பாண்டிய தேசத்தில் இருந்த ஹிந்துக்களை வெட்டி தள்ளினான்.
1311 முதல் 1371 வரை, தமிழர்கள் எண்ணிப்பார்க்க முடியாத அழிவை சந்தித்தனர். பாண்டிய அரசாட்சி, சோழ அரசாட்சி போன்றவை அஸ்தமித்த காலம். உண்மையான தமிழர்கள் இருந்த காலம்.

சுமார் 60 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் எத்தனை கொடுமைகள்? என்று நாம் சிந்திக்கும் போதுதான்,
இரான் முதல் தெலுங்கு கன்னட தேசம் வரை 1000 வருடங்கள் இஸ்லாமியர்கள் புகுந்து என்ன அட்டகாசம் செய்து இருப்பார்கள்? என்று புரிந்து கொள்ள முடியும்.

ஏன் தமிழகத்தில் உள்ள கோவில்கள் போல மற்ற மாநிலங்களில் இல்லை? என்ற காரணமும் புரியும்.


60 வருடத்திலேயே தமிழகத்தை இத்தனை சேதப்படுத்த முடியும் என்றால், 1000 வருட ஆக்கிரமிப்பில் கோவில்கள் நிறைந்த இந்த பாரத பூமியை தரை மட்டம் ஆக்கி, இஸ்லாமிய நாடாக ஆக்க பெரும் முயற்சி செய்தனர் என்ற காரணமும் புரியும்.

1000 வருட ஆக்கிரமிப்பில், இரான், ஆப்கான், பாகிஸ்தான்,  பங்களாதேஷ் போன்ற பாரத தேசத்தில் இருந்த இடங்களை இஸ்லாமிய நாடாக மாற்றிவிட்டனர் என்பது வேதனைக்கு உரியது.

70 வருடத்தில் சிக்கிய தமிழகத்தை மேலும் அழிவில் வீழ்ந்து விடாமல், கும்பகோணம் போன்ற தேசங்களுக்குள் கால் பாதிக்க விடாமல் தடுத்தது யார்? தமிழனை காப்பாற்றியது யார்? 

மதுரை சுல்தானாக இருந்த "முகம்மது கியாசுதின்" (1340-1343) என்ன செய்தான்?
முகம்மது கியாசுதின் மதுரையை ஆண்ட காலத்தில், "இபின் படூடா" (ibn Battuda) தங்கி இருந்த போது,
மதுரையில் ஹிந்துக்கள் என்ன நிலைக்கு ஆகினர்? என்று விளக்கி இருக்கிறான்.

1.
மரங்கள் வெட்டப்பட்டு, அந்த இடங்களில், கைது செய்யப்பட்ட ஹிந்துக்கள், வரிசையாக நான்கு gate வழியாக அனுப்பப்பட்டு வரிசையாக தலை சீவபட்டார்கள்.
இவர்களோடு கைது செய்யப்பட்ட இவர்களின் மனைவிகளும் கொலை செய்யப்பட்டு, இவர்களின் தலை முடியை கொண்டு பிணங்களை இணைத்து கீழே போட்டனர்.
பால் குடிக்கும் குழந்தைகளை வெட்டி தூக்கி எறிந்தனர்.
இது போன்று, மறுபடியும் வேறொரு காட்டில் மரங்களை வெட்டி, அந்த இடங்களில் இதே போன்று ஹிந்துக்கள் கொத்து கொத்தாக தலை சீவப்பட்டனர்.

இது போன்ற கீழ் தரமான செயலை பார்த்ததில் நான் அவமானப் படுகிறேன். அப்படி ஒரு தண்டனைக்கான குற்றத்தை இந்த ஹிந்துக்கள் செய்யவில்லை. இந்த காரணத்தால் தானோ, கடவுள் (அல்லா) இவனின் ஆயுளை முடித்து விட்டானோ?

மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
2.
ஒரு நாள், நானும், முகமது கியாசுதினும் உணவு உண்ணும் சமயத்தில், ஒரு ஹிந்துவை, அவன் மனைவி மற்றும் 7 வயது மதிக்க தக்க ஒரு சிறுவனை கைதியாக இழுத்து வந்தனர் காவலாளிகள்.
மதுரை சுல்தான் "முகமது கியாசுதின்" தன் கைகளை அசைத்து நின்று கொண்டிருந்த அந்த ஹிந்துவின் தலையை வெட்ட சைகை செய்தான். மேலும் காவலாளிகளை பார்த்து, அரேபிய மொழியில், 'அவன் மனைவியும், மகனையும் சேர்த்து' என்று சொன்னான்.
உடனே அந்த ஹிந்துவின் தலை வெட்டப்பட்டது. இதை பார்க்க கூடாது என்று நான் கண்ணை மூடிக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து பார்த்த போது 3 தலைகளும் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தது.

மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
3.
இன்னொரு சமயம், நான் மதுரை சுல்தான் "முகமது கியாசுதினுடன்" இருந்த போது, ஒரு ஹிந்து இழுத்து வரப்பட்டான். அவன் மொழியில் ஏதோ பேசினான். எனக்கு புரியவில்லை. உடனே சுல்தானின் காவலாளிகள் தங்கள் ஈட்டிகளை அந்த ஹிந்துவை நோக்கி கொலை செய்ய சென்றார்கள்.
நான் ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை உணர்ந்து வெளியே சென்று விட எழுந்தேன்.
என்னிடம் மதுரை சுல்தான், "எங்கே போகிறீர்கள், இபின் படூடா?" என்றான்.
நான், தொழுகைக்கு நேரம் ஆகி விட்டது. நான் சென்று விட்டு வருகிறேன்" என்று சொல்லி நகர்ந்து விட்டேன்.
என் காரணத்தை புரிந்து கொண்டு சிரித்து கொண்டே, அந்த ஹிந்துவின் கை மற்றும் காலை வெட்ட சொன்னான் சுல்தான். நான் சென்று, பிறகு வந்த போது, அந்த ஹிந்துவின் உடல் ரத்தத்தில் மிதந்து கொண்டு இருந்தது.


மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
4.
நான் மதுரையை அடைந்த போது, தூக்கி வீசப்பட்ட பிணங்களால் உருவான, எங்கும் நோய் பரவி இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் அதிக பட்சம் 2 அல்லது 3 நாட்களில் இறந்தனர்.

நான் மதுரையை விட்டு செல்லும் போது, பொதுவாக அனைத்து ஹிந்துக்களும் நோய்வாய்ப்பட்டு இருந்தனர் அல்லது இறந்திருந்தனர்.


இப்படி 60 ஆண்டுகள் மதுரை சுல்தான் ஆட்சியில் அனுமானிக்க முடியாத துன்பத்தை நம் பாட்டனார்கள் அனுபவித்தனர்.

தமிழ் தேசத்தை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர அரசர் புக்கராயர்  மகன்"*கம்பண்ணா*" காப்பாற்றினார்.

தமிழனை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர பேரரசன் காப்பாற்றினான்.

1371ல் கம்பண்ணா மதுரை சுல்தானை விரட்டி, விஜயநகர சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவி, மூடிய கோவிலை திறந்து ஹிந்துக்கள் வாழ வழி வகுத்தார்.
அதே வருடம் மூடப்பட்டு இருந்த ஸ்ரீ ரங்ககோவிலும் திறக்கப்பட்டு, மீண்டும் ஹிந்துக்கள் தலை நிமிர்ந்தனர்.

இனி இஸ்லாமியர்கள் நுழையா வண்ணம், 1378ல் மதுரையை விஜயநகர பேரரசு கைப்பற்றி, இரண்டாம் ஹரிஹர அரசரால், ஹிந்துக்களை வாழ வைத்தது.
தமிழகம் 1000 வருட ஆக்கிரமிப்பில், பெரும்பாலும் விஜயநகர ஆட்சியின் பாதுகாப்பில் தப்பித்தது.
இந்த 60 ஆண்டு காலத்தில் கத்தி முனையில், கற்பழிப்பில் மதம் மாறி இஸ்லாமியர்களாக போனவர்கள் இன்றும் இஸ்லாமியர்களாகவே உள்ளனர் என்பது வேதனைக்குரியது.

கம்பண்ணாவின் மனைவி சொல்கிறாள்.
கம்பண்ணாவின் வெற்றியை "மதுரை விஜயம்" என்ற தொகுப்பில், அவர் மனைவி "கங்காதேவி" சொல்கிறாள்,
1.
மதுரை தேசத்திற்கு வந்த சோதனையை நினைத்து மனம் தாங்க முடியாத வேதனை அடைகிறது. பார்க்கும் இடமெல்லாம் வளர்ந்து இருந்த தென்னை மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு, அந்த இடங்களில் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, ஹிந்துக்கள் தலைகள் சொருகப் பட்டு இருந்தன.
மேலும் சொல்கிறாள்
2.
மதுரை பெரு வீதிகளில் சுமங்கலியான பெண்களின் வளையல் சத்தமும், சிரிப்பும் நிறைந்த காலம் போய், இன்று கோவிலை காத்த வேத ப்ராம்மணர்களை தலையை பிடித்து இழுத்து சென்று இரும்பு சுவரில் மோதிய அலறல் சத்தமும், ரத்தமும் கிடக்கிறது.
மேலும் சொல்கிறாள்
3. தாமிரபரணி ஆற்றில் பெண்கள் சந்தனம் மற்றும் மஞ்சள் தேய்த்து குளித்து, சந்தன நறுமணத்துடன் மங்களமாக ஓடிய நதியில் இன்று மாட்டு இறைச்சி உண்ணும் இவர்களால், வெட்டப்பட்ட மாட்டின் ரத்தம், தாமிரபரணி ஆற்றை சிவப்பாக ஆக்கி இருந்தது.
மேலும் சொல்கிறாள்,
4. வீரமும், தைரியமும் உள்ள அரசரே !!
இனியும் தாமதம் செய்யாமல், மூன்று உலகத்திலும் சேர்த்து ஏற்படும் துன்பத்தை ஒரு சேர அனுபவிக்கும் நம் தேசத்து மக்களை காக்க, அந்த துஷ்டர்களை வேரோடு அழியுங்கள். வெற்றியின் அடையாளமாக 100 தூண்களை ராம சேதுவில் கட்டுங்கள்.

இப்படி வெற்றி முழக்கம் இட்டு, தெலுங்கு தேசத்தில் பிறந்து, கர்நாடக தேசத்தில் ஹம்பியை தலைநகராக கொண்ட விஜயநகர அரசன், ஹிந்துக்கள் தமிழ் நாட்டில் வாழ வைத்தான்.

மதுரைக்காரனும், பாண்டிய தேசத்தில் இருந்த அனைத்து மக்களும், ஹிந்துக்களாக இன்றும் இருக்க, ஒரு வீர ஹிந்து கர்நாடகத்தில் இருந்து தான் கிடைத்தான்.
நன்றி மறவாமல் இருப்போம்.