Followers

Search Here...

Friday 7 June 2019

இன்றைய கால மக்களின் குணங்கள் பொதுவாக எப்படி உள்ளது? யாரை போல உள்ளது? நமக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்பட எதை பற்றிக் கொள்ள வேண்டும்?

மஹாபாரதம், துவாபர யுகத்தில் சுமார் 3102BCக்கு முன் நடந்தது.

3102BCக்கு பின், கலியுகம் ஆரம்பித்தது.


கலியுகத்தில் பெரும்பாலான மக்களின் குணம், பழக்கவழக்கம்,
"த்ருதராஷ்டிரன் போல" இருப்பதை கவனிக்கலாம்.
த்ருதராஷ்டிரனை, 
முழுமையாக 'நல்லவன்' என்றும் சொல்ல முடியாது,
முழுமையாக 'கெட்டவன்' என்றும் சொல்ல முடியாது.

த்ருதராஷ்டிரனுக்கு,
எது நியாயம்? என்று நன்றாக தெரியும், 
ஆனாலும் சுயநலத்தினால், ஏதேதோ காரணங்கள் சொல்லிக்கொண்டு,  அநியாயத்துக்கு துணை நிற்பான்.

தர்மத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பான். 
ஆனால் பாசத்துக்கு கட்டுப்பட்டு, அதர்மத்தில் நின்று கொண்டு நல்லவர்களையே எதிர்பார்ப்பான்.
பீஷ்மர், வியாசர், விதுரர் போன்ற மகாத்மாக்களிடம் பேசும் போது, நல்லவனாக தான் இருப்பான்.
"இனி அதர்மத்துக்கு துணை போக மாட்டேன்" என்று உறுதி கூறுவான்.
அடுத்த நிமிடம்,
தன் மகன் துரியோதனன் ஆசைப்பட்டான் என்றால், அதர்ம செயல்கள் செய்யவும் உறுதுணை செய்வான்.
தன் சபையிலேயே, தான் அரசனாக இருந்தும்,
தன்  மருமகள் அவமானப்படுவதை, தன் மகன் மீது இருந்த பாசத்தால் அனுமதித்தான்.
திரௌபதி 'சாபம் கொடுக்க போகிறேன்' என்றதும், தன் மகன்களுக்காக மன்னிப்பு கேட்டு, தான் நல்லவன் போல காட்டி கொண்டான்.

"த்ருதராஷ்டிரனை போன்று தான்", கலியில் பொதுவாக ஜனங்கள் பிறக்கிறார்கள்.

"துரியோதனன், கர்ணன், சிசுபாலன், கம்சன்" போன்ற சுத்தமான கெட்டவன் கூட கலியுகத்தில் கிடையாது.

"தர்மத்துக்காக, சத்தியத்துக்காக எதையும் தியாகம் செய்வேன்" என்று வாழ்ந்த பீஷ்மர், தர்ம புத்ரர் போன்ற மகாத்மாக்களை காண்பதும் அரிது.

மகாபாரதத்தில் த்ருதராஷ்டிரனை தவிர, மற்ற அனைவரும் ஒரே குணம் கொண்டவர்கள்.
"துரியோதனன்" பீமனை சிறுவனாக இருக்கும் போதே விஷம் கலந்த உணவு கொடுத்து கடலில் எரிந்து விட்டான்.
கடைசி வரை பாண்டவர்களை எதிர்த்தான்.
கடைசி வரை பகைவனாகவே வாழ்ந்தான்.

கெட்டவன் கெட்டவனாகவே உள்ளும் புறமும் வாழ்ந்தான்.
நல்லவன் நல்லவனாகவே உள்ளும் புறமும் வாழ்ந்தான்.

'த்ருதராஷ்டிரனுக்கு' மட்டும், நல்ல குணம், கெட்ட குணம் மாறி மாறி வரும்.


பொதுவாக, இவனை "இரட்டை நாக்கு' உடையவன் என்று அடையாளமாக சொல்வார்கள் பெரியோர்கள்.
இரட்டை நாக்கு பொதுவாக பாம்புக்கு தான் உண்டு.
த்ருதராஷ்டிரனை "நல்ல பாம்பு"க்கு சமமாக சொல்வார்கள் பெரியோர்கள்.

நல்ல பாம்புக்கு உள்ளுக்குள் விஷம் அதிகம்.
ஆனால் பெயர் மட்டும் "நல்ல" பாம்பு.
நல்ல பாம்பு போல,
வெளியில் பார்த்தால், மிகவும் நல்லவன் போல இருப்பான் த்ருதராஷ்டிரன்.
ஆனால் உள்ளுக்குள். பாசம், சுயநலம் போன்ற விஷம் கொண்டவன்.

'வெளியில் பார்த்தால் மிகவும் நல்லவன் போல இருக்கிறானே, இவனுக்கு புத்தி மதி சொன்னால், இவன் புரிந்து கொள்வான்' 
என்று பல முறை பீஷ்மர், விதுரர், வியாசர் போன்றவர்கள் தர்ம உபதேசங்கள் செய்வார்கள்.
அவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்பான்.
கேட்கும் போது தன் தவறை உணர்ந்து சில சமயம், அழ கூட செய்வான்.
"இனி சரியாக இருப்பேன், துரியோதனன் தவறை கண்டிப்பேன். பாண்டவர்களும் என் பிள்ளைகள் தான்" என்று சொல்வான்.

இவர்கள் போனவுடனேயே, தன் மகனை பற்றி நினைவு வந்து விடும்.
'தன் மகன்கள் வாழ வேண்டும் என்றால், அதற்கு பாண்டவர்கள், தன் தம்பியின் மகன்கள் செத்தாலும் பரவாயில்லை' என்றளவுக்கு குருட்டு பாசம் இவனுக்கு.

பொதுவாக தாய் தந்தைக்கு குழந்தைகள் வளர்வதை "பார்க்க பார்க்க", பாசம் வளரும். 
பாசம் சுயநலத்தை வளர்க்கும்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,
பிறந்ததில் இருந்தே கண் தெரியாத த்ருதராஷ்டிரன்,
தன் 100 மகன்களையும் பார்த்தது கூட இல்லை.
தன் பிள்ளைகளின் பெயரை காதால் கேட்டதற்கே இப்படி ஒரு பாசம் வைத்து இருந்தான் என்றால்,
கண்ணால் பார்த்து இருந்தால், என்ன செய்து இருப்பான் இவன்? என்று நினைத்து பார்க்க வேண்டும்.

தன் மகன் வாழ வேண்டும் என்றால்,
தன் சகோதரன் மகன்கள் 12 வருடம் காட்டில் அலைந்தால் கூட பரவாயில்லை என்று நினைத்தான்.
பாண்டவர்களை விழாவுக்கு அழைப்பது போல அழைத்து,  மாளிகையில் தங்க வைத்து, மாளிகைக்கே தீ வைத்து கொளுத்தினான் என்று தெரிந்தும், தன் மகனை பாசத்தின் காரணமாக எதிர்க்காமல், நாடு கடத்தாமல் இருந்தான்.


தன் மருமகளை தன் சபையில் வைத்து அவமானப்படுத்துகிறான் துச்சாதனன் என்று தெரிந்தும்,
அவனை பார்த்து ஒரு சொல் சொல்லவில்லை.
மகனுக்காக எந்த அதர்மத்தையும் செய்ய தயாராக இருந்தான்.

"போர் வர போகிறது, உன் 100 மகன்களும் கூண்டோடு அழிய போகிறார்கள்" என்று பரவாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணரே சொல்லியும், பாசத்தின் காரணமாக, தெய்வம் எச்சரித்தும் கேட்க மறுத்தான்.
பரவாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணர், தன் விஸ்வரூபத்தை காட்டியும், இதை பிறவி குருடன் த்ருதராஷ்டிரனும் பார்க்கட்டும் என்று அணுகிரஹம் செய்தும்,
அதர்மத்தை பிடித்து கொண்டு, தர்மத்தின் பக்கம் தான் தெய்வம் துணை போகும் என்று தெரிந்தும்,
குருட்டு நம்பிக்கையில் தன் 100 பிள்ளைகள் ஜெயித்து விடுவார்கள் என்று நம்பினான்.

சுய நலத்துக்காக, தன் பாசத்துக்காக, 
தெய்வமே எதிர் அணியில் இருந்தாலும், தான் ஜெயித்து விடலாம் என்று குருட்டு நம்பிக்கை கொண்டிருந்தான்.

த்ருத்ராஷ்டிரனின் சுய நலத்தாலும், குருட்டு பாசத்தாலும் "குரு வம்சமே அழிய போகிறது" என்று அறிந்த வேத வியாசர்,
இத்தனை நாள் தன்னிடமும் தர்மங்களை கேட்டானே (ஸத் சங்கம்) என்ற கருணையால்,
இவனும் 'வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை, தர்மத்துக்காக வாழ்ந்து இருக்கலாமே' என்ற ஞானத்தையாவது இவன் அடையட்டும் என்று நினைத்தார்.
சஞ்சயனை அழைத்து போரில் நடக்கவிருக்கும் அனைத்தையும் சபையில் இருந்து கொண்டே பார்க்க ஞான திருஷ்டி கொடுத்தார்.
சஞ்சயன் மூலமாக போரில் நடக்கவிருப்பதை த்ருத்ராஷ்டிரன் கேட்கட்டும் என்று சங்கல்பித்தார்.
வியாசரின் அருளால்,
அர்ஜுனன் மட்டுமே பார்த்த விஸ்வரூபத்தை சஞ்சயனும் கண்டு, பாசத்தாலும், சுய நலத்தாலும் மயங்கி கிடக்கும்
த்ருத்ராஷ்டிரனுக்கு அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள்? (பகவத்கீதை) என்பதை கூற,
தன் பிள்ளைகள் அழிய போவது நிச்சயம், தெய்வம் பாண்டவர்கள் பக்கம் என்று அமைதி ஆனான் த்ருத்ராஷ்டிரன் .




த்ருத்ராஷ்டிரனை போன்றே நாமும் இரட்டை நாக்கு உடையவர்களாக தான் வாழ்கிறோம்.

நல்லவனாக வாழ ஆசைப்பட்டாலும், பிள்ளைகள், சுற்றத்தார், சமுதாயம் என்று ஏதேதோ சால்ஜாப்புகள் சொல்லி கொண்டு, அதர்மம் என்று தெரிந்தும் பல காரியங்கள் செய்கிறோம்.
அதர்மம் செய்தவர்களுக்கு துணையும் செய்கிறோம்.

"நல்லவனுக்காக எந்த நிலையிலும் துணை நிற்பேன்,
எனக்கு விதிக்கப்பட்ட தர்மங்களை விடவே மாட்டேன்",
என்ற உறுதி பெரும்பாலான மக்களிடம் கலியுகத்தில் காணப்படவில்லை.

நீ ஏன் உன் கடமைகளை செய்யவில்லை? 
ப்ராம்மணன் ஏன் ப்ராம்மணனாக இல்லை? 
பெண்கள் தங்கள் எல்லைகளுக்குள் இல்லை? 
ஹிந்துக்கள் நெற்றியில் ஏன் ஒரு திலகம் கூட இல்லை?
ஏன் ஹிந்துக்கள் பாசுரங்கள், திவ்ய பிரபந்தங்கள், கீதையை படிக்க வில்லை?
என்று கேள்விகளை மகான்கள் கேட்டால்,
"சமுதாயம் கெட்டு விட்டது. 
சமுதாயத்தை ஒத்து தானே போக வேண்டும் சார்" 
என்று சொல்லும் கூட்டம் இந்த கலியில் அதிகம் காணப்படுகின்றனர்.


வெகு சில மகாத்மாக்கள், இன்றும் தங்கள் கடமைகளை செய்து கொண்டு, அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தில் நின்று, உறுதியான முதுகெலும்புடன் வாழ்கின்றனர்.

ஆனால் பெரும்பாலானவர்கள், த்ருத்ராஷ்டிரனை போல தான் வாழ்கிறோம்..

வெளியில் பார்க்க "நல்லவன் போலவும்",
உண்மையில்,
ஹிந்து தர்மத்துக்கே கூட எதிராக செயல்கள் செய்து கொண்டும், 
கொடுக்கப்பட்ட கடமைகளையும் செய்யாமல், 
கோவிலுக்கு செல்லாமல், 
பூஜை, ஒழுக்கம் என்ற எந்த கடமையும் செய்யாமல், 
பெயரளவில் "ஹிந்து" என்று இரட்டை வேடம் போடுகிறோம்.

இப்படி உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேசும் மக்களே, எங்கும் காணப்படுகின்றனர் கலியுகத்தில்.
'சிசுபாலனை போல, கம்சனை போல, ராவணனை போல', 
உள்ளும் புறமும் உண்மையான தீயவனாக இருந்து, நல்லவர்களை தாக்கினால்,
பெருமாள் பெருமாளாகவே அவதாரம் செய்வார்.

கலியுகத்தில் சுத்தமான கெட்டவன் கூட கிடையாது.
எதிலும் போலி தனம் காணப்படும் என்று சொல்லப்படுகிறது.

த்ருத்ராஷ்டிரனை போன்ற இரட்டை நாக்கு கொண்ட நல்ல பாம்பை அடிக்க பெருமாள், பெருமாளாக வருவதில்லை.

சிசுபாலனை, கம்சனை போல, அடித்து ஒழிக்க வேண்டிய அளவுக்கு தீயவர்கள் இல்லை என்பதால்,
அவர்கள் மனதில் உள்ள அழுக்கை அகற்றி, ஞானத்தை கொடுக்க,
சாதுக்களாக, மகாத்மாவாக பெருமாள் கலியுகத்தில் அவதரிக்கிறார்.

வெளியில் நல்லவன் போல நடித்து,
மனதில் ஹிந்து தர்மத்தின் படி வாழ தெரியாமல் இருக்கும் நம் மனதை திருத்தினாலே போதும் என்பதால் தான்,
சமயத்தில் பகவானே,
மகாத்மா கிருஷ்ண சைதன்யராகவும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சாராகவும் அவதாரம் செய்து கோடிக்கணக்கான மக்களின் மனதை நல்வழிப்படுத்தினார்.
ஆதிஷேஷனே ஸ்ரீ ராமானுஜராக, பிரகலாதனே ஸ்ரீ ராகவேந்திரராக அவதாரம் செய்து,
சூர தாஸ், கபீர் தாஸ், மீரா, துளசி தாஸ், புரந்தர தாஸ், ராம தாஸ், தியாகராஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள்,  வள்ளலார் என்று ஆயிரக்கணக்கான மகான்களை பாரத தேசம் முழுவதும் அவதரிக்க செய்து, ஹிந்துக்களின் இதயத்தில் ஹிந்து தர்மத்தை பதிக்க,
பெருமாள் அணுகிரஹம் செய்தார்.
இவர்கள் எழுதிய பக்தி பாடல்கள், இன்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு வழி காட்டுகிறது.


த்ருத்ராஷ்டிரனுக்கு, பெருமாள் வியாசர் என்ற ஒரு குருவை மட்டுமே காண்பித்தார்.

நமக்கோ, பாரத தேசத்தில் எங்கு கால் வைத்தாலும் அங்கு ஒரு மகானை ஸ்ருஷ்டி செய்து,
நம்முடைய இந்த இரட்டை வாழ்க்கையை நினைவு படுத்தி,
உள்ளும் புறமும் ஹிந்துவாக வாழ தானே உதவுகிறார்.
இது போதாது என்று,
ஊருக்கு ஊர் தனக்கு ஒரு கோவிலை அமைத்து கொண்டு,
தன் தரிசனத்தை அவ்வப்போது கொடுத்து கொண்டு,
நம் மனதில் உள்ள அழுக்கை நமக்கே புரிய வைக்கிறார். அகற்றுகிறார்
"இப்படி இரட்டை வாழ்க்கை வாழ்கிறோமே"
என்று உண்மையாக "வருத்தப்படும்" மனிதர்களுக்கு,
பெருமாளே, அவன் பக்திக்கு ஏற்ற ஒரு ஆதம் குருவை காண்பித்து,
அவர் மூலமாக மேலும் ஸத் சங்கம் கிடைக்க செய்கிறார்.

கலியில், உள்ளும் புறமும் கெட்டவன் பிறப்பதில்லை என்பதால்,
கொஞ்சம் நல்லவன் கொஞ்சம் கெட்டவன் என்று பிறப்பதால்,
பெருமாள், மகான்களாக, சாதுக்களை போன்று அவதாரம் செய்கிறார்.
பெருமாளே மகாத்மாவாக அவதாரம் செய்யும் போது,
அவரையே ஆத்ம குருவாக கலியில் கிடைக்கப்பட்டவர்கள் மகா பாக்கியசாலிகள்.
"ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராகவும், ராமகிருஷ்ணராகவும்" பரவாசுதேவனே அவதரித்தார்.

சிவபெருமானே "விவேகானந்தராகவும்", "காஞ்சி மஹா பெரியவராகவும்", "ஆதி சங்கரராகவும்" அவதரித்தார்.

ஸத் சங்கம் கிடைத்த ஜீவன், 
மெதுவாக த்ருத்ராஷ்டிரனை போல வாழும் இரட்டை வாழ்க்கையை வெறுக்க ஆரம்பிக்கிறான்.
ஸத் சங்கம் கிடைத்த ஜீவன், 
தர்மத்துக்காக வாழ தயாராகிறான். 
பக்தி செய்ய ஆரம்பிக்கிறான்.

ஆத்ம குருவை பூரணமாக சரண் அடைந்த பக்தன், 
மோக்ஷ வாசலை நெருங்கி விடுகிறான்.

ஆத்ம குருவின் கருணையால் உள் அழுக்குகள் அழிந்து, உள்ளும் புறமும் சுத்தமானவனாக ஆன பின்,
மீண்டும் பிறவாத மோக்ஷத்தை பெருமாள் அணுகிரஹித்து விடுகிறார்.

வெளியில் நல்லவன் போலவும், 
உண்மையில் ஆசாரம் இல்லாமல் தன் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டும், 
இரட்டை நாக்குடன் த்ருத்ராஷ்டிரனை போல வாழும் நாம், 
த்ருத்ராஷ்டிரனை போல, 
நல்லவர்கள் சொல்வதை கடைபிடிக்காமல் போனாலும், 
அவ்வப்போது ஸத் சங்கங்களில் கலந்து கொண்டு இருந்தாலே, 
மகான்களின் கருணைக்கு ஒரு நாள் பாத்திரமாகி, குரு கடாக்ஷத்தினால் நாமும் ஒரு நாள் சித்தசுத்தி பெற்று, 
உள்ளும் புறமும் தர்மத்தில் வாழ்ந்து, கிருஷ்ண சரணத்தை அடைவோம்.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம்.

நமக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்பட எதை பற்றிக் கொள்ள வேண்டும்?
இரட்டை வாழ்க்கை வாழும் நமக்கு, "ஸத் சங்கமே கதி".

நல்லோர்கள், மகான்கள், தர்ம சிந்தனை உடையவர்கள் பேசுவதை, மகான்கள் சரித்திரத்தை கேட்டு கொண்டும், 
அவர்களுக்கு நம்மால் முடிந்த தொண்டு செய்து கொண்டும் இருப்பதே "ஸத் சங்கம்".

இப்படி வாழ முயற்சி செய்ய ஆரம்பித்தாலே, 
குருவின் கருணை ஒருநாள் நம் மீதும் பட்டு, நம் அழுக்குகள் நீங்கி, இறுதியில் பகவானை அடையலாம்.

வாழ்க ஹிந்துக்கள்..

Hare Rama Hare Krishna - (Listen to Bhajan)

Sandhya Vandanam - Morning (With Meaning)


Sandhya Vandanam - Evening (With Meaning)

Sandhya Vandanam - Afternoon (With Meaning)




Tuesday 4 June 2019

நாடிகள் உடம்பில் சரியாக இயங்க என்ன செய்ய வேண்டும்? மனதில் அமைதி, விவேக புத்தி, உடல் ஆரோக்கியம் கிடைக்க என்ன வேண்டும்? தெரிந்து கொள்வோமே ...

சைக்கிள் பழகுபவன், 
பல தடவை விழுந்தபிறகு, நேரே விடுவதற்கு தெரிந்து கொள்வது போல,


பிராணாயாமம் செய்பவன், 
பல தடவை பிராணனை அடக்க முடியாமல் போய், முடிவில் வெற்றிக் காண்பான்.
அவரவர்களுடைய பக்குவத்திற்கு ஏற்றவாறு,
பிராணாயாமத்தினால் சில மாதங்களிலோ, சில ஆண்டுகளிலோ, பலன் தெரியும்..

குண்டலினி சக்தியை உயிர் பெற செய்ய, முதலில், நம் உடம்பில் உள்ள நாடிகள் சரியாக இயங்க வேண்டும்.

உடம்பில் உள்ள "நாடிகள் யாருக்கு  சுத்தமாக" உள்ளதோ!!, அவர்கள்
மனதில் அமைதி இருக்கும்
விவேக புத்தியுடன் செயல்படுவார்கள். 
உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நம் உடம்பில் உள்ள நாடிகளை சுத்தி செய்ய என்ன செய்ய வேண்டும்?

8 தடவை பிரணவத்தை (அஉம்) நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு இடது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),
16 தடவை உச்சரித்து, வலது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.
8 தடவை பிரணவத்தை (அஉம்) நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு வலது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),
16 தடவை உச்சரித்து, இடது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.

இது ஒரு எண்ணிக்கை.
இது போல, 64 எண்ணிக்கை வரை ஏற்றிக் கொண்டு போகலாம். 

இவ்வாறு 6 மாதம் செய்தால், நாடி சுத்தி ஏற்படும்.

நாடி சுத்தி ஏற்பட்டவன்,
குண்டலினி சக்தி எழுவதற்கு, மற்றொரு பிராணாயாம பயிற்சி செய்ய தகுதி பெறுகிறான்...

முதலில் நாடி சுத்தி அடைய முயற்சி செய்வோம்....

வாழ்க ஹிந்துக்கள்.  வாழ்க ஹிந்து தர்மம்.


Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Afternoon (With Meaning)

Sandhya Vandanam - Evening (With Meaning)



Sandhya Vandanam - Morning (With Meaning)






Sunday 2 June 2019

வில்வ மரம் பற்றி...துளசி அர்ச்சனையை ஏற்கும் திருப்பதி பெருமாள், எதற்காக ஒரு சமயம் வில்வ அர்ச்சனை செய்து கொள்கிறார்? தெரிந்து கொள்வோமே...

வில்வ மரம் பற்றி...



எப்பொழுதும், துளசி அர்ச்சனையை ஏற்கும் பெருமாள்,
எதற்காக திருப்பதியில் மட்டும், ஒரு சமயம் வில்வ அர்ச்சனை செய்து கொள்கிறார்?

ஒவ்வொரு மரமும், செடியும், ஒரு தெய்வத்துக்கு விசேஷமாக சொல்லப்படுகிறது.

பெருமாளுக்கு துளசி உகந்தது என்று சொல்லப்படுகிறது.
துளசியை கொண்டு அர்ச்சனை செய்யும் போது, பெருமாள் மிகவும் உகந்து ஏற்று கொள்கிறார் என்று அறிகிறோம்.


அது போல,
ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு ஸ்தல வ்ருக்ஷம் (மரம்) உண்டு.
மகாலட்சுமிக்கு 'வில்வ மரம்" உகந்தது என்று ஸ்ரீசூக்தம் நமக்கு காட்டுகிறது.

தாயார் வில்வ இலையால், புஷ்பத்தால் அர்ச்சனை செய்தால், மிகவும் ப்ரீதி அடைகிறாள் என்று அறிகிறோம்.

ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்க நாச்சியார் சந்நிதி அருகில் தாயாருக்காக வில்வ மரம் இருக்கிறது. 
"வில்வ மரத்தடியில் எப்பொழுதும் மகாலட்சுமி தாயார் இருக்கிறாள்,
துளசி வனத்தில் பெருமாள் இருக்கிறார்" என்று பக்தர்கள் பக்தி கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள்.

மற்ற மதங்களில் உலகில் உள்ள அனைத்தும் தான் அனுபவிக்கவே என்று போதிக்கப்படுகிறது.
நம் சனாதன தர்மமோ, ஒரு செடியை பார்த்தாலும், ஒரு மரத்தை பார்த்தாலும், ஒரு நதியை பார்த்தாலும், அதற்கு சம்பந்தமான தெய்வங்கள் நினைவுக்கு வரவழைத்து, நம்மை எப்பொழுதும் இறை முன்னேற்றத்துக்கே அழைக்கிறது.





அற்புதமான ஹிந்து மதத்திற்கு வெளிநாட்டவன் கூட ஈர்க்கப்படுகிறான். பக்தி செய்கிறான்.
ராஸலீலையின் போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், 8 வயது கோபாலனாக, ஒவ்வொரு கோபிக்கும் ஒவ்வொரு கிருஷ்ணனாக ஆகி, எங்கும் கண்ணன் என்று ஆகி ராஸ நடனம் ஆட, திடீரென்று மறைந்த விட்டார்.
கோபியர்கள் கண்ணன் எங்கே? கண்ணன் எங்கே? என்று தேடும் போது, துளசி செடியை பார்த்ததும், துளசி செடியை பார்த்து 'கண்ணனை பார்த்தீர்களா?" என்று கேட்டனர் என்று பாகவதம் நமக்கு காட்டுகிறது.
அதே போல,
ராமாயணத்தில், சீதையை தொலைத்து, ஸ்ரீ ராமர் "சீதையை கண்டீர்களா? என்று அங்கு இருந்த 'வில்வ மரத்தை' பார்த்து கேட்டார் என்று வருகிறது.


இது போன்ற சம்பவங்களை கவனிக்கும், வேதத்தின் சாரம் அறிந்தவர்கள், 'ஸ்ரீ ராமரும், ஸ்ரீ கிருஷ்ணரும் சாக்ஷாத் நாராயணனே' என்று அறிந்து கொள்கின்றனர்.

திருப்பதி பெருமாளுக்கு தனுர் மாத சமயத்தில், வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படுகிறது என்று பார்க்கிறோம்..
துளசி இலையால் அர்ச்சனை செய்தால், பெருமாள் உகப்பு (மகிழ்ச்சி) கொள்கிறார்.
திருப்பதி பெருமாளுக்கு எதற்காக 'வில்வ அர்ச்சனை' செய்கிறார்கள்? 

மற்ற கோவில்கள் போல, திருப்பதியில் தாயாருக்கு தனி சந்நிதி இல்லை.
இங்கு தாயார், பெருமாளின் வக்ஷஸ்தலத்தில் (மார்பிலேயே) இருக்கிறாள்.
ஸ்ரீ (லக்ஷ்மி) பெருமாள் வக்ஷஸ்தலத்திலேயே இருப்பதால் தான், பெருமாளுக்கு இங்கு 'ஸ்ரீனிவாசன்' என்று பெயர்.

"தாயாருக்கு உகக்குமே" என்று, வில்வ அர்ச்சனையை பெருமாள் ஏற்று கொள்கிறார் திருப்பதியில்.

திருவேங்கடமுடையானுக்கு வில்வ அர்ச்சனை செய்யும் போது, அது தாயாருக்கு செய்யப்படுகிறது என்று பக்தர்கள் அறிகிறார்கள்.

சமஸ்கரிதத்தில் வில்வத்துக்கு "ஸ்ரீபலம்" என்றும் பெயர் உண்டு.

மகாலக்ஷ்மிக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து, லக்ஷ்மி கடாக்ஷத்தை பெறுவோம்.
வில்வ அர்ச்சனை சிவபெருமானுக்கும் உகந்தது. 


ஞானமும் (மெய் அறிவு),
செல்வமும்,
ஆயுளும்,
வில்வ அர்ச்சனை மூலம்,
லட்சுமியும், பெருமாளும், சிவபெருமானும் நமக்கு அருள்கின்றனர்.

ஹிந்துக்களாக வாழ்வதே பெருமை...

வாழ்க ஹிந்துக்கள்..

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - afternoon (with meaning)



Sandhya Vandanam - morning (with meaning)


Sandhya Vandanam - evening (with meaning)




Friday 31 May 2019

கல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே? - என்று சொல்கிறார்கள் போலி பகுத்தறிவாளிகள்...இவர்கள் பார்ப்பது என்ன? நாம் பார்ப்பது என்ன? ஒரு அலசல்

"பகுத்தறிவாளி" என்று நினைத்து பேசுபவர்கள், ஹிந்துக்களை பார்த்து கேலியாக,
"நன்றாக பார். கல் தானே இருக்கிறது. கல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே!!"
என்று குரைக்கிறார்கள்.


'கண்ணால் எதை பார்க்கிறோமோ, அது தானே உண்மை' என்று போலி பகுத்தறிவாளிகள் நினைக்கிறார்கள்.
தங்கத்தால் ஆன கிண்ணத்தை ஒருவன் பார்த்து "கிண்ணம்" என்று சொல்கிறான்.
இதில் பால் ஊற்றி குடிக்கலாம் என்று நினைக்கிறான்.
"அப்படி சொல்லாதே... அப்படியெல்லாம் நினைக்காதே... நன்றாக பார். இது வெறும் தங்கம் தான். இனி நீ இதை 'தங்கம்' என்று தான் சொல்ல வேண்டும்" என்று சொல்வானா ஒருவன்?
'இது தங்கம்' என்று சொல்பவனுக்கே தெரியுமே... ஆனால் இப்போது "தங்கத்தில் கிண்ணம் தெரிகிறதே" என்று சொன்னால், போலி பகுத்தறிவாதிக்கு புரிவதில்லை.

அதே போல,
மண்ணால் செய்யப்பட்ட குதிரையை ஒரு குழந்தை பார்த்து "ஆஹா... குதிரை" என்று சொல்லி அதனுடன் விளையாடுகிறது.
"அப்படியெல்லாம் சொல்லாதே... மண் குவியல் என்று தான் சொல்ல வேண்டும்" என்று சொல்வானா ஒருவன்?
'இது மண் தான்' என்று குழந்தைக்கே தெரியுமே... ஆனால் இப்போது "அந்த மண்ணில் குதிரை தெரிகிறதே" என்று சொன்னால், போலி பகுத்தறிவாதிக்கு புரிவதில்லை.

கண்ணால் பார்ப்பது மட்டுமே நிஜம் என்றால், மனிதனுக்கு புத்தி எதற்கு? மனம் எதற்கு? மிருகமாகவே இருந்து விடலாமே..

தாய், தன் குழந்தையை பார்த்து, "என் செல்ல குழந்தை" என்று கொஞ்சுகிறாள்.

'வெளியில் என்ன பார்க்கிறாயோ அது தான் உண்மை.' என்று குரைக்கும் பகுத்தறிவாளிகள், தன் தாயிடமே சென்று,
"என்னை நன்றாக பார். சதை, எலும்பு, நரம்பு, ரத்தத்தால் செய்யப்பட்ட 80 கிலோ மாமிச பிண்டம் தான் நான்.
80 கிலோ மாமிசம் தானே உன் கண்ணுக்கு எதிரில் நிற்கிறது. இந்த மாமிசத்தை பார்த்து 'என் குழந்தை, என் குழந்தை' என்று சொல்கிறாயே!!"
என்றா தன் தாயை பார்த்து கேலி செய்வான்?

தாய்க்கு தெரியாதா, தன் குழந்தை மாமிசத்தால் ஆனவன் தான் என்று.
'மாமிச உடம்பு தான் இது' என்று தாய்க்கு தெரிந்தாலும்,
அதில் தன் குழந்தை இருப்பதை தன் மனதாலும், புத்தியாலும் பார்ப்பதால் தானே "என் மகனே" என்று கொஞ்சுகிறாள்.





தாய்க்கு பகுத்தறிவு உள்ளதா? 
கண்ணால் காண்பதே நிஜம் என்று நினைத்து குரைக்கும், முட்டாள் பகுத்தறிவாதிக்கு பகுத்தறிவு உள்ளதா?

தெய்வ நம்பிக்கை உள்ள கிறிஸ்தவன், கொலை செய்யப்பட்டு, இறந்தே போய்விட்ட ஏசுவை, தெய்வமாக நினைத்து, அவருடைய உருவத்தை சிலையாக வைத்து, "ஏசு ஏசு" என்று கல்லை பார்த்து கும்பிடுகிறான்.
இவர்களை பார்த்து,
"நன்றாக பார். கல் தானே இருக்கிறது. கல்லை பார்த்து 'ஏசு ஏசு' என்று சொல்கிறாயே, அறிவில்லை?
அவர் கொலை செய்யப்பட்டு 2000 வருடங்கள் ஆகி விட்டதே..முட்டாள்" என்றா கேட்கிறான் இந்த போலி பகுத்தறிவாதி?...

இது போன்ற முட்டாளை, கிறிஸ்துவன் மதித்தால், அது அவன் வணங்கும் ஏசுவை அவமானபடுத்தியதற்கு சமம் அல்லவா!
உண்மையான கிறிஸ்தவன், இப்படி தன் வழிபாட்டையும், தான் தெய்வமாக வழிபடும் ஏசுவையும் சேர்த்து தான் கேலி செய்கிறான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமியனும் மெக்காவில் உள்ள கல்லை தன் வாழ்நாளில் ஒரு முறையாவது முத்தமிட வேண்டும் என்று நினைக்கிறான். 'கல்லை பார்க்க எதற்காக அலைகிறாய்?' என்றா கேட்பான் இந்த போலி பகுத்தறிவாதி?

தெய்வத்தை எந்த விதத்தில் கேலி செய்பவனையும், தெய்வ நம்பிக்கை உள்ளவன் தன் தலைவனாக ஏற்று கொள்ள முடியுமா?
'உன் தாய் விபச்சாரி' என்று கேலி செய்தவனை, 'பரவாயில்லை, சொல்லிக்கொள்' என்று இருப்பானா? ஒரு மான உணர்ச்சி உள்ள மகன்.

தான் வணங்கும் தெய்வத்தை பழிப்பவனை பார்த்து, 'நீ தான் என் தலைவன் சொல்வானா?' தெய்வ நம்பிக்கை உள்ளவன்..

தெய்வ நம்பிக்கை உள்ள அனைவரும் புறக்கணிக்க வேண்டியவன் அல்லவா, இந்த போலி பகுத்தறிவாதி...

மனம், புத்தி இரண்டையும் பயன்படுத்தாத இவர்களிடம், அவனுடைய தாயே புத்தி சொன்னால் கூட புரிந்து கொள்ள மாட்டானே!!

அறிவாளியாக இருந்தாலாவது, "கொஞ்சம் புத்தியை, மனதை பயன்படுத்தி பார், நான் மாமிச சரீரத்தை பார்த்து மகனே என்று சொல்லவில்லை.. அந்த உருவத்தில் என் குழந்தை இருப்பதை பார்க்கிறேன்" என்று தானே தாய் சொல்வாள்..

அது போலவே,
இறந்து போன தன் தகப்பன் உடலை பார்த்து, போலி பகுத்தறிவாதி மகனும் "ஐயோ அப்பா... அப்பா" என்று கதறி அழுகிறான்.
பார்க்க வேதனையாக இருந்தாலும், 'இவன் போலி பகுத்தறிவு அப்போது எங்கே போனது?' என்று தானே கேட்க தோன்றுகிறது.

அந்த போலி பகுத்தறிவாதி மகனிடம் சென்று,
"நன்றாக பார். இங்கு அசையாத ஒரு மாமிசம் பிண்டம் தானே இருக்கிறது.
எதற்கும் உதவாத இந்த மாமிசத்தை பார்த்து 'அப்பா... அப்பா..' என்று சொல்கிறாயே!!.. அறிவு இல்லை?"
என்று கேட்டால், அந்த போலி பகுத்தறிவு மகன் என்ன சொல்வான்?

அதே போல,
என்றோ இறந்து போனவனின், சிலையை, போட்டோவை வைத்து கொண்டு அந்த சிலைக்கு மாலையும் போட்டு, வணக்கமும் தெரிவித்து, மரியாதை செய்து மகிழ்கிறான் கோமாளியான நாத்தீகனும், போலி பகுத்தறிவாதியும்.

அந்த போலி நாத்தீகனிடம் சென்று,
"நன்றாக பார்.. இது ஒரு பேப்பர், இது ஒரு கருங்கல்.
முட்டாள்தனமாக பேப்பரை பார்த்து, கல்லை பார்த்து
'ராமசாமி கிழவன்.. ராமசாமி கிழவன்.. தான் வளர்த்த பெண்ணை கட்டிக்கொண்ட கருக்காலி" என்று சொல்கிறாயே!!..அறிவு இல்லையா"
என்று கேட்டால், அந்த நாத்தீகன் என்ன சொல்வான்?


ஐயா, நான் போட்டோ பேப்பரை பார்க்கவில்லை.. அந்த பேப்பரில் காணப்படும் இறந்து போன அந்த கிழவனை நினைத்து பார்க்கிறேன். இறந்து விட்ட அவரை பார்க்க முடியாது என்பதால், அவர் சொன்ன விஷயங்கள் என் மனதில் இருப்பதால், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த போட்டோவுக்குள் இருக்கும் அவருக்கு என்னால் முடிந்த மரியாதையை காட்டி கொள்கிறேன்" என்று தானே சொல்வான் போலி பகுத்தறிவு பேசும் மடையர்கள்.

இதை தானே ஆஸ்தீகன், செய்கிறான்.

இறந்து போன மனிதன், கொலை செய்யப்பட்ட ஆவிகளுக்கே, தங்கள் நன்றியை தெரிவிக்க, அவர்கள் உருவத்தை போட்டோவில், சிலையாக செய்து, மாலை போட்டு, வணக்கம் செலுத்தும் போது...
சர்வ வல்லமை கொண்ட பரமாத்மா, எங்கும் உள்ள பரமாத்மாவை,
ஒரு கல்லில், போட்டோவில் இருப்பதாக பாவித்து வணங்கினால், இவன் மூளைக்கு புரியவில்லை.

இவர்களை போன்ற போலிகள், தான் கொண்டாடும் போலி தலைவனை சிலை வைத்து, மாலை போடும் போது, தாங்கள் இப்பொழுது என்ன செய்கிறோம்? என்று கொஞ்சம் விவேகம் இருந்து யோசித்தாலே,
ஆஸ்தீகன் கல்லை பார்க்கவில்லை, அதனில் தன் தெய்வத்தை பார்க்கிறான் என்று புரிந்து கொள்வான்.
அந்த தெய்வத்துக்கு மரியாதை செய்கிறான். அந்த தெய்வத்திடம் தன் பிரார்த்தனையை வைக்கிறான் என்று புரிந்து கொள்ள முடியும்.

தான் கல்லுக்கு மரியாதை செய்யும் போது, "என் தலைவனை நினைத்து மரியாதை செய்கிறேன்" என்று பேசும் இவர்கள்,
ஆஸ்தீகன் 'சிவபெருமானை இந்த சிலையில் பார்க்கிறேன்' என்று வணங்கினால்,
ஆஸ்தீகனை கேலி செய்து, அவன் தெய்வத்தையும், கலாச்சாரத்தையும் கேலி செய்து பிழைப்பு செய்கிறான்.
இது போன்ற போலிகள், சமுதாயத்தை சீரழித்து விடுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற கீழ் தரமான போலிகளை, நாம் வழிபடும் தெய்வத்தை வெறுக்கும் போலிகளை, வேரோடு ஒதுக்க வேண்டும்.
இவர்களை சட்டத்தாலும், ஒடுக்க வேண்டும்.


தான் மட்டும் சிலை வழிபாடு செய்து, இறந்து போய் விட்ட கிழவனை வணங்குவேன், ஆனால்,
நீ எங்கும் உள்ள தெய்வத்தை உன் ஆசைக்காக ஒரு சிலையாக செய்து, 'எங்கும் இருப்பவர், அதிலும் இருக்கிறார்' என்று வழிபட்டால், கேலி செய்வேன் என்று சொன்னால்,
அது போன்ற போலிகளை ஜென்ம விரோதியாக கூட நினைக்கலாம்.

தெய்வத்தையே நிந்தனை செய்து, நம் வழிபாடுகளை கேலி செய்யும் கூட்டம், ஆசை வார்த்தை கூறி, நமக்கே வயிற்றுக்கு சோறு போட்டால் கூட, அவர்கள் முகத்திலேயே துப்பி விட வேண்டும்.

பகுத்தறிவு போர்வையில், இருக்கும் இந்த போலிகள்,  நசுக்கப்பட வேண்டும்.

மானமுள்ள ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், தெய்வ வழிபாட்டை கேலி செய்யும் இவர்களை, மதிப்பது கூட, நாம் வழிபடும் தெய்வத்துக்கு நாம் செய்யும் அவமானமாகும்.

வாழ்க ஹிந்துக்கள்.

Hare Rama, Hare Krishna - listen to Bhajan

Sandhya vandanam - morning with meaning



Sandhya vandanam - afternoon with meaning.

Sandhya vandanam - evening with meaning.




Saturday 25 May 2019

ஹிந்து பெயரில் மறைந்து கொண்டு, ஹிந்துக்களை பற்றி இழுவாக பேசும் பிற மதக்காரர்களை (வாஹீகர்கள்) பற்றி நாரதர் அப்பொழுதே எச்சரித்து இருக்கிறார் - தெரிந்து கொள்வோமே ! மஹாபாரதம்

சாந்தி பர்வத்தில், மோக்ஷ தர்ம பர்வத்தில் நாரதர் சொல்கிறார்.



नारद उवाच॥ 
अनाम्नाय मला वेदा 
ब्राह्मणस्या व्रतं मलम् ।
मलं पृथिव्या वाहीकाः 
स्त्रीणां कौतूहलं मलम् ॥
-  महाभारतम्-12-शांतिपर्व

நாரதர் வ்யாசரிடம் சொல்கிறார்
அனாம்நாய மலா வேதா
ப்ராஹ்மணஸ்யா வ்ரதம் மலம் |
மலம் ப்ருதிவ்யா வாஹிகா:
ஸ்த்ரீனாம் கௌதூஹலம் மலம் ||
-  மஹாபாரதம் சாந்தி பர்வா 
1.
சப்த ப்ரம்மமாகிய "வேதம்" ஓதப்படாமல் இருந்தால், அது வேதத்திற்கே கறை.
2.
ஒழுக்கமுள்ள ப்ராம்மணன், கொடுத்த வாக்கை மீறினால், அது ப்ராம்மணனுக்கு கறை.
3.
பாரத நாட்டில் பிறந்தும் வெளி கலாச்சார நம்பிக்கை, உடை, உணவு பழக்கம் கொண்டவர்கள் (வாலிகர்கள்), உலகிற்கே கறை.
4.
ஆர்வமே பெண்ணுக்கு கறை.
வேதம் ஓதப்படாமல் இருந்தால், வேதம் மறையும், தீயவர்களுக்கு கொண்டாட்டம்.
வேதம் உலகெங்கும் ஓதப்பட்டால், நாதீகம் அழியும். ராக்ஷஸ குணம் கொண்டவர்கள் தானாக அடங்குவார்கள்.
கொடுத்த வாக்கை மீறும் ப்ராம்மணன் மரியாதை இழக்கிறான்.
வாக்கை காப்பாற்றும் ப்ராம்மணன் மதிக்கப்படுகிறான்.


பாரத நாட்டில் பிறந்தும் வெளி கலாச்சார நம்பிக்கை, உடை, உணவு பழக்கம் கொண்டவர்கள் (வாலிகர்கள்), உலகிற்கே கறை/களங்கம். பாரத கலாச்சாரத்தை கெடுப்பவர்களை துடைத்து எடுத்து விட்டால், பாரத கலாச்சாரம் தானாக பிரகாசம் அடையும்.
ஆர்வமே பல சமயங்களில் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
பெண்கள் தன் ஆர்வத்தை கட்டுப்படுத்தி, எல்லை தாண்டாமல் பழகி கொள்ளும் போது, பெண்கள் மரியாதை பெறுகிறார்கள்.



மகாபாரதம்....