Followers

Search Here...

Wednesday 26 June 2019

புராணங்களை சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர்த்தங்களை சொல்லி தருவது இல்லையே!! அது ஏன்? அதற்கு என்ன காரணம்?.. ஒரு அலசல்.

'ராமாயணம், மகாபாரதம், சிவ புராணம், விஷ்ணு புராணம், கந்த புராணம், சக்தி புராணம்'  போன்ற புராணங்களில்,
  • 'தெய்வங்களின் அவதாரத்தை' பற்றியும், 
  • 'தெய்வங்களின் அவதார காரணத்தை' பற்றியும் 
தெரிந்து கொள்கிறோம்.



இந்த புராணங்களை பற்றி  மகான்களும் பெரியோர்களும், 
கோவில்களில், பொது மேடைகளில், உபன்யாசம் செய்து விவரிக்கின்றனர்.

பாகுபாடு இல்லாமல், பொது மக்கள் அனைவருக்கும் இந்த புராணங்கள் சொல்லப்படுகிறது.
இஷ்டப்பட்டவர்கள் கேட்கிறார்கள்.

அது மட்டுமில்லாது,
இந்த புராணங்கள் யாவும் மேடை நாடகமாகவும், புத்தகமாகவும், டிவி, சினிமாக்களில் காட்சியாகவும் நடித்து  காட்டப்படுகிறது.

மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை ('இதி' - இவ்வாறு, 'ஆச' - நடந்தது) TV சீரியலாக பார்க்காத பாரத மக்கள் இருக்க மாட்டார்கள்.
பாரத நாட்டில் உள்ள கிறிஸ்தவன், இஸ்லாமியன் கூட, ஸ்ரீ ராமரை பற்றி தெரிந்து கொள்ள செய்தது.
ராமாயணம் பார்த்து,
"ராமனை போல மனிதன் வாழ வேண்டும்" என்று ஆசைப்படாத மனிதன் இருக்க முடியுமா?
  • தன் பெற்றோரை எந்த அளவுக்கு மதித்தார் ஸ்ரீ ராமர்.
  • ஜாதி பேதம் இல்லாமல், வேடுவன் குகனை நண்பன் என்றார்.
  • பலம், பராக்ரமம் இருந்தும், கர்வமே இல்லாமல் அனைவரையும் மதித்தார்.
  • எத்தனை துயரங்கள் தன் வாழ்வில் வரும் போதும் தன் தர்மத்தை விடாமல், மனம் கலங்கி சோர்ந்து விடாமல், வாழ்ந்து காட்டினார் ஸ்ரீ ராமர்.
  • சுயமாக 14000 ராக்ஷர்களை ஒருவனாக போரிட்டு அழிக்கும் பராக்கிரமம் இருந்தும், நல்லோர்களை (விபீஷணன், சுக்ரீவன்) தன்னுடன் சேர்த்து கொண்டார்.
  • கஷ்ட காலத்திலும், பலம் கொண்ட வாலி போன்ற பிறர் மனைவியை அபகரித்து தன் தம்பியை கொலை செய்ய துடிப்பவன் துணையை எதிர்பார்க்கவே இல்லை. தீயவன் பலம் கொண்டவனாக இருந்தாலும், தன் லாபத்திற்காக அவர்களுடன் துணை சேரவில்லை.
  • சீதையை மீட்க பஞ்சவடியில் (nasik) இருந்து, 2000 KM நடந்து சென்று, எதிரியை கொன்று, சீதையை மீட்டு, கடைசி வரை ஏகபத்னி வ்ரதனாகவே வாழ்ந்து மனித சமுதாயத்துக்கு வழி காட்டினார்.
  • காமத்தை ஜெயித்து, கோபத்தை ஜெயித்து, பொறாமையை ஜெயித்து. வெறுப்பை ஜெயித்து, எந்த நிலை ஏற்பட்டாலும் மனிதன் தர்மத்தில் வாழ்ந்து காட்ட முடியும் 
என்று மனிதர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார் ஸ்ரீ ராமர்.



புராணங்கள் படிப்பதன் மூலம் "தெய்வங்கள் 3 காரணங்களுக்காக அவதாரம் செய்கிறார்கள்" என்று தெரிந்து கொள்கிறோம்.
1. சனாதன (காலம் காலமாக இருக்கும்) வேத தர்மத்தை, (இன்று ஹிந்து தர்மம் என்று சொல்கிறோம்) அழிக்க நினைக்கும் தீயவர்களை ஒடுக்கவும்,

2. ஹிந்து தர்மத்தை காக்கும் சாதுக்களை, இவர்களை போன்ற தீயவர்களிடம் இருந்து காக்கவும்,

3. சனாதன (காலம் காலமாக இருக்கும்) வேத தர்மத்தை, (அதாவது ஹிந்து தர்மத்தை) அழிய விடாமல் என்றுமே நிலை நிறுத்தவும்,
தெய்வங்களின் அவதாரம் உலகில் நடக்கிறது. நடந்து கொண்டே இருக்கிறது.

இதை பரமாத்மா வாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, தெளிவாக சொல்கிறார்.
பரித்ராநாய சாதுனாம்
வினாசாய ச துஶ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்த்தாப னார்தாய ஸம்பவாமி யூகே யூகே

தர்மத்தை காக்கும் 'சாதுக்களை காக்கவும்',
தர்மத்தை அழிக்க நினைக்கும் கொடியவர்களை அழிக்கவும்,
தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும்,
ஒவ்வொரு யுகத்திலும் நான் தோன்றுகின்றேன்
என்று ஸ்ரீ கிருஷ்ணர், தெய்வங்களின் அவதார ரகசியத்தை தெளிவாக சொல்கிறார்.
ஹிந்து தர்மத்துக்காக வாழ உறுதி கொள்ளும் போது,
'தெய்வம் நமக்கு துணை நிற்கும்' என்ற உண்மை, புராணங்களை படிப்பதன் மூலம் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.

புராணங்களை படிப்பதன் மூலம்,
"ஹிந்து தர்மத்தில் திடமான நம்பிக்கையுடன் வாழ்ந்தால், நம்மை தெய்வங்கள் காக்கும்" என்ற தெளிவு, நாளடைவில், நமக்கு உண்டாகி,
ஒரு இறை உணர்வை நமக்குள் உண்டாக்குகிறது.


புராணங்களை படிப்பதன் மூலம்,
"கடவுள் காப்பாற்றுவார்" என்ற தைரியமும் நமக்கு கிடைக்கிறது. உலகை தைரியமாக சந்திக்க மனோதிடம் உண்டாகிறது.

புராணங்களை படிப்பதன் மூலம்,
"வாழ்வில் துயரங்கள் வந்தாலும், இறைவனின் கருணையை பற்றி கொண்டு, தாண்டி விடலாம்" என்ற நம்பிக்கை நமக்கு கிடைக்கிறது.

புராணங்கள், இதிஹாசங்கள் பற்றி தெளிவாக தெரிந்து, புரிந்து கொள்வதால், வாழ்வில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. 
தெய்வத்தை பற்றிய ஒரு புரிதல், ஓரளவுக்காவது உண்டாகிறது.
ஆன்மீக வளர்ச்சிக்கு நம்மை உந்துகிறது.

'தர்மத்தில் நின்று, தர்மத்தில் இருக்கும் சாதுக்களை கேலி செய்யாமல் இருந்தால்', நம்மை நிச்சயமாக தெய்வங்கள் காக்கும்
என்று புராணங்களை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அற்புதமான புராணங்கள், இதிஹாசங்கள் அனைவருக்கும் ஜாதி பேதமின்றி பொது மக்கள் அனைவருக்கும் சொல்லப்படுகிறது.

புராணங்களை அனைவருக்கும் சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர்த்தங்களை அது போல சொல்லி தருவது இல்லையே. அது ஏன்? அதற்கு என்ன காரணம்?

மாந்த்ரீகம் செய்பவர்கள் சில மந்திரங்களை உச்சாடனம் செய்கிறார்கள். "ஓம் ஹ்ரீம் க்லீம் ..." என்று சொல்லி கேட்டு இருப்போம்.

இந்த மந்திரங்கள் பீஜ (seed) மந்திரங்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த மந்திரங்கள் ஸித்தி ஆனவர்கள், நமக்கு உபதேசம் செய்தால், நமக்கும் அந்த மந்திரங்கள் பலன் அளிக்கும். 

"மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை" என்று சொல்லப்படுகிறது.
அர்த்தம் புரிந்து கொண்டு, மந்திரங்களை பல லட்சம் தடவை உச்சரிக்கும் போது, இந்த மந்திரங்கள் தரும் பலன், சக்தி வாய்ந்தது.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு சில முக்கிய 'காரணங்கள்' உண்டு.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்: 
காமம், கோபம், பொறாமை குணம் கொண்டவர்கள், தகுதி இல்லாதவர்கள், சில மந்திரங்களின் அர்த்தங்கள் புரிந்து கொள்வதால், அதை தெய்வ அனுக்கிரஹம் கிடைக்க பயன்படுத்தாமல்,  தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
க்லீம் என்ற பீஜ மந்திரத்தை, ஒரு குரு மூலம் உபதேசம் பெற்று,
ஜபம் செய்ய செய்ய,
'எந்த தெய்வத்தை நினைத்து ஜபம் செய்கிறோமோ, அந்த தெய்வங்கள் நமக்கு சப்படுவார்கள்'. சில சமயம் தெய்வங்களின் ஆவேசம் கூட நமக்குள் ஏற்படலாம்.



க்லீம் என்ற பீஜ மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று, ஜபம் செய்ய செய்ய, 'யாரை நினைத்து ஜபம் செய்தோமோ, அவர் நம்மை விரும்ப ஆரம்பிப்பார்' என்று பொதுவாக பலன் சொல்லப்படுகிறது.
இந்த பலனை, ஆன்மீக தேடல் இல்லாத ஒருவன், நாத்தீகன், மாந்த்ரீகம் செய்பவன், காமம், கோபம், பொறாமை குணம் கொண்டவன் அறிந்து கொள்ளும் போது,
தெய்வத்தை வசியம் செய்ய முயற்சிக்காமல், பெண்களை வசியம் செய்ய பயன்படுத்த ஆரம்பிக்கிறான். 
சிவபெருமான் தன் மனைவியான பார்வதியை மணந்த பின்னும், கைலாயத்தில் தியான யோகத்திலேயே இருந்தார்.
தான் இருப்பதே நினைவில்லாமல் இருக்கும் சிவபெருமானின் கடாக்ஷத்தை பெற, 
பார்வதி தேவி காஞ்சிக்கு வந்து, காஞ்சி வரதனாக இருக்கும் பரவாசுதேவனிடம் வழி கேட்டாள்.

காஞ்சி வரதன் பார்வதிக்கு "க்லீம்" என்ற பீஜ மந்திரத்தை உபதேசம் செய்து, சிவபெருமானை நினைத்து ஜபம் செய்ய சொன்னார். (திருக்கார்வானம் கள்வபெருமாள்)

சிவபெருமானை நினைத்து 'க்லீம்' என்ற பீஜ மந்திரத்தை ஜபம் செய்து தான், சிவபெருமானின் கடாக்ஷத்தை பெற்றாள் பார்வதி தேவி. 
காஞ்சியில், காமாக்ஷி என்ற பெயர் பெற்றாள் பார்வதி. 

"கணவன் மனைவியிடையே பரஸ்பரம் அன்பு இல்லாமல் இருப்பவர்கள்" காஞ்சி காமாக்ஷி கோவிலுக்கு சென்று, காமாட்சியை தரிசித்தால், "தம்பதிகளுக்குள் அன்பு உண்டாகும்" என்று லன் சொல்லப்படுகிறது.

'தெய்வத்தை குறித்து சொல்லும்' சக்தி வாய்ந்த மந்திரங்களை, மாந்த்ரீகம், வசியம் செய்ய பயன்படுத்துவார்கள் என்பதால், மந்திரங்களை, மந்திரங்களின் அர்த்தங்களை சொல்லாமல் இருந்தனர் பெரியோர்கள். 

இது போன்ற ஆபத்துகள் இருப்பதால்,
மந்திரங்கள் அனைவருக்கும் சொல்லப்படாமல், தகுதியும், பக்குவமும் அடைந்தவர்களுக்கே, உபதேசமும், அதன் அர்த்தங்களையும் விளக்கினர்.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம்: 
"தெய்வங்கள் மூன்று காரணங்களுக்காக அவதாரம் செய்கிறார்கள்", என்று புராணங்களை படிக்கும் போது தெரிந்து கொள்கிறோம் என்று பார்க்கிறோம்.
  1. வேத தர்மத்தை காக்கும் சாதுக்களை காக்கவும்
  2. வேத தர்மத்தை அழிக்கும் துஷ்டர்களை அழிக்கவும்,
  3. வேத தர்மத்தை காக்கவும்,
தெய்வங்களின் அவதாரம் நடந்து கொண்டே இருக்கிறது.


'தர்மத்தை காப்பதற்கே' தெய்வங்களின் அவதாரம் நடக்கிறது.

"தர்மத்தை விட்டு விட கூடாது" என்று தெய்வங்கள் ஆசைப்படுகிறார்கள்.
"தர்மத்தை நிலை நிறுத்தத்தான்" தெய்வங்கள் அவதாரமே செய்கிறார்கள் என்று பார்க்கும் போது
ஹிந்துக்களாகிய நாம் "நம் தர்மத்தில் இருக்க வேண்டுமா?" என்று நினைப்பது கூட தவறு.

தர்மத்தை காக்க, கலியில், தெய்வங்கள் தெய்வங்களாக அவதாரம் செய்வதில்லை. சாதுக்களாக அவதாரம் செய்கின்றனர்.

947ல் இருந்து 1947 வரை பாரத பூமியில், அந்நிய மதங்கள் நுழைந்து
வேத தர்மத்தை காக்கும் சாதுக்களை அழிக்கவும், 
வேத தர்மத்தையே அழிக்கவும், 
1000 வருடங்கள் தொடர்ந்து, கடுமையான முயற்சி செய்தனர்.

கலி யுகத்தின் ஆரம்பத்தில் இருந்து, இந்த 1000 வருட இருண்ட காலம் வரை ஹிந்துக்களாகிய  நாம் கொஞ்சம் நிதானத்தோடு கவனித்தால், ஹிந்து மதத்தை யார் காப்பாற்றினார்கள் என்று புரியும்.
பரவாசுதேவனே, கிருஷ்ண சைதன்யராகவும், ராமகிருஷ்ணராகவும் தானே அவதாரம் செய்தார்.
சிவபெருமானே, ஆதி சங்கரராகவும், விவேகானந்தராகவும் அவதாரம் செய்தார்.
பிரகலாதனே, ஸ்ரீ ராகவேந்திரராக அவதாரம் செய்தார்.
நாரதரே, புரந்தர தாசராகவும், தியாகராஜராகவும் அவதாரம் செய்தார்.
ஆதிசேஷனே, திருப்பதியில் உள்ள 7 மலைகளாவும், ராமானுஜராகவும் அவதாரம் செய்தார்.
ஆஞ்சநேயரே, ஸமர்த்த ராமதாசராக அவதாரம் செய்தார்.




யோகிகள், ரிஷிகள், ஞானிகள் அனைவரும் கலியில்,
சூர தாஸ், கபீர் தாஸ், துளசி தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பத்ராச்சல ராமதாஸ், மீரா 
என்று பாரத தேசம் முழுவதும் சாதுக்களாக அவதரித்து,  .
அந்நிய மதங்கள்,

  • கோவிலை இடித்தும்,
  • ஹிந்துக்களை கொன்றும்,
  • மதம் மாற்றியும்,

எத்தனை முயற்சி செய்தும், பாரத தேசத்தில் உள்ள
ஹிந்துக்களை அழிக்க முடியவில்லை, 
ஹிந்து தர்மமும் அழியவில்லை என்று இன்று நிரூபணமாகி உள்ளது.
இன்றும், சங்கரன், விஷ்ணு, லலிதா, லீலா, ருக்மிணி என்ற ஹிந்து பெயர்கள் கொண்ட 80 கோடிக்கும் மேல் உள்ள ஹிந்துக்கள் தன்மானத்தோடு வாழ்கிறோம். மேலும் பல கோடி
ஹிந்துக்கள் உலக நாடுகளில் ஹிந்துக்களாகவே வாழ்கின்றனர்.

பிற மதங்களை 'மனிதர்கள் உருவாக்கினார்கள்'.
அதனால், மனிதர்கள் முயற்சி செய்து பிற மதங்களை காப்பாற்றி வருகிறார்கள்.

வேத தர்மம் என்ற ஹிந்து தர்மத்தை, 'தெய்வங்களே உருவாக்கியதால்', இங்கு தெய்வங்களே அவதரித்து ஹிந்துக்களை, ஹிந்து தர்மத்தை காக்கின்றனர். 

ஹிந்துக்களாகிய நாம் நம் ஹிந்து தர்மத்தை காக்கும் போது தான், தெய்வங்கள் நம்மை கண்டு சந்தோஷப்படுவார்கள்.

ஹிந்து தர்மத்தை காக்கும் நம்மை, அழிக்க நினைக்கும் கூட்டம் அதிகரிக்கும் போது, 
ரிஷிகளை, முனிவர்களை அவதாரம் செய்ய வைக்கிறார் பரவாசுதேவன். 
இதுவும் போதாது என்றால், 
விஷ்ணுவாகிய தானே அவதாரம் செய்து, ஹிந்து தர்மத்தை மீண்டும் ஸ்தாபிக்கிறார்.

தர்மத்தை காப்பதற்கு, தெய்வங்களே அவதாரம் செய்கின்றனர்.


ஹிந்து தர்மத்தில் இருப்பது ஹிந்துக்களுக்கு அவசியம். 
ஹிந்து தர்மத்தை நாமே விட்டு விட்டால் என்ன செய்வது? 

சில மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளும் போது, 
ஆன்மீக பக்குவம் இல்லாத நிலையில் நாம் இருந்தால், நம் ஹிந்து தர்மத்தை கூட விட்டு விட வாய்ப்பு உள்ளது. 
நாம் செய்து கொண்டிருக்கும் கொஞ்சம் ஹிந்து தர்மம் கூட, கெட்டு போகும் என்பதால்,
சில மந்திரங்கள், அதன் அர்த்தங்களை சொல்ல தயங்கினர். 
பிராம்மண குலத்தில் பிறந்து, சந்யாச தர்மத்தையும் ஏற்று கொண்டு, யதிராஜராக ஆகி,
ஸ்ரீ ரங்கதிற்கு மடத்தின் பொறுப்பை ஏற்று, 
கோவில் கைங்கரியமே செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ ராமனுஜருக்கு,
திரு அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும் அறிந்து கொள்ள ஆர்வம் உண்டானது.

திருக்கோஷ்டியூர் நம்பிக்கு, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் ரகசிய அர்த்தம் தெரியும் என்று அறிந்து கொண்டார் ராமானுஜர்.

திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் பெற்று, அதன் உட்பொருளை அறிந்து கொள்ள, யதிராஜராக இருந்த ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சுமார் 100KM நடந்து, திருக்கோஷ்டியூரை அடைந்தார்.

பிராம்மண குலத்தில் பிறந்து, சன்யாசமும் பெற்று, ரங்கநாதருக்கே தொண்டு செய்யும் ராமானுஜர் வந்தும் கூட,  திரு கோஷ்டியூர் நம்பி திருப்பி அனுப்பி விட்டார்.
ப்ராம்மணனாக பிறந்தால் 'மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளலாம் என்பது கிடையாது' என்று தெரிகிறது.
ராமானுஜருக்கே சொல்ல தயங்கினார் என்று பார்க்கிறோம்.

மந்திரங்களின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள, "சில தகுதிகளை எதிர்பார்த்தார்கள்" என்று தெரிகிறது. .

இது போல 17 தடவை, ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சுமார் 100KM நடந்து நடந்து, திருக்கோஷ்டியூர் வந்து, நம்பியின் வீட்டிற்கும் முன் நிற்பார்.
ஒவ்வொரு தடவையும், ராமானுஜரை திருப்பி அனுப்பி விடுவார்.

உண்மையில், 'திரு அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும் சொல்ல தயங்கினார், பயந்தார்' திரு கோஷ்டியூர் நம்பி.

ஏன் பயம்? எதனால் தயக்கம் ஏற்பட்டது?
'தகுதி இல்லாதவர்களுக்கு சொல்லிவிட கூடாது' என்ற தயக்கமும்,
'தகுதி இல்லாதவர்கள், இதன் அர்த்தத்தை தெரிந்து கொண்டு, அவர்கள் செய்யும் கொஞ்சம் தர்மமும், தன்னால் தடைபடுமோ!!' என்ற பயமும் தான், இவரை தடுத்தது.

17 தடவை 'நம்பி' திருப்பி அனுப்பியும்,
அர்த்தத்தை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்ட ராமானுஜர், மீண்டும் மீண்டும் சளைக்காமல், கோபப்படாமல், பொறாமைப்படாமல் நம்பியை பார்க்க வர,
கடைசியாக 18வது முறையாக வந்த போது, ஸ்ரீ ராமானுஜருக்கு பரம சந்தோஷத்துடன்  உபதேசித்தார் என்று பார்க்கிறோம்.

'நான்' என்ற கர்வமே இல்லாமல், "'பெருமாளே கதி' என்று இருக்கும்  யதிராஜருக்கே "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை உபதேசம் செய்வதற்கு, அத்தனை தயக்கம் காட்டினார்கள் என்று பார்க்கிறோம்.

மந்திரங்களை, அதன் உட்பொருளை உலகத்திற்கு சொல்ல ஏன் தயக்கம் காட்டினார்?

ஏன் மந்திரங்களை ரகசியமாக வைத்து இருந்தார்கள்?
எதற்காக பயந்தார்கள்?

மந்திரங்கள் ரகசியமாகவே இருக்க வேண்டும், யாருக்கும் தெரிய கூடாது என்று நினைக்கவில்லை.
மந்திரங்களின் வீரியமும், அதன் அர்த்தமும் எல்லோருக்கும் தெரிந்தால், விபரீதமாக முடிந்து விடுமோ என்று பயந்தார்கள்.

யதிராஜரான ராமானுஜரையே 18 தடவை (18×200= 3600KM) நடக்க வைத்த பின்பு தான்,
திருக்கோஷ்டியூர் நம்பி, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து, அதன் அர்த்தம் சொன்னார் என்றால்,
மந்திரங்களை வெளி படுத்தவோ, அதன் அர்த்தங்களை சொல்ல கூடாது என்று நினைக்கவில்லை என்று தெரிகிறது.
ஆனால், மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தகுதி இல்லாதவர்களுக்கு சொல்லி விட கூடாதே!! என்று பயந்தார்கள் என்று தெரிகிறது.

சில வேத மந்திரங்கள் உலகிற்கு தெரிந்தாலும், நமக்கே காதில் விழுந்தாலும், அதன் அர்த்தங்கள் வெளி உலகிற்கு வருவதில்லை.

மந்திரங்களின் அர்த்தத்தை சொல்ல, ஏன் பயந்தார்கள்?


பொதுவாக,
மக்களின் இறை பக்குவம், மூன்று நிலைகளில் இருக்கிறது.
1. கடவுள் இருக்கிறார். அவர் நம்மை காப்பாற்றுகிறார் என்று நினைப்பது, முதல் நிலை.
2. கடவுள் நிச்சயமாக உள்ளார் என்று அனுபவத்தில் உணர்ந்து, அவர் யார்? நமக்கும் அவருக்கும் என்ன உறவு? என்று பரமாத்மா வாசுதேவனை பற்றி நினைப்பது, இரண்டாவது நிலை.
3. தனக்கும் பரமாத்மாவாகிய நாராயணனுக்கு உள்ள சம்பந்தம் தெரிந்து கொண்டதால், பிறவிக்கு காரணம் புரிந்ததால், உலக ஆசையை விட்டு, இந்த ஜென்மத்திலேயே தெய்வத்தை அடைய வேண்டும் என்ற பேராவல் உண்டாகி, காதல் கொண்டு உருகுவது, மூன்றாவது நிலை.

நம்மை கடவுள் காப்பற்றுவார் என்ற நம்பிக்கையை, 'புராணங்கள், இதிகாசங்கள்' படிப்பதன், கேட்பதன் மூலம் நாம் பெறுகிறோம்.
அதனால் தான், புராணங்களை, இதிகாசங்களை பொது மேடைகளில், கோவில்களில் மகான்கள், சந்யாசிகள், பெரியோர்கள் என்று அனைவரும், பொது மக்கள் அனைவருக்கும் எடுத்து சொல்லி,
நமக்கு ஆன்மீக வளர்ச்சியும், தர்மத்தில் இருந்தால் கடவுள் காப்பற்றுவார் என்ற நம்பிக்கையையும் வளர்க்கின்றனர்.

"இறைவன் இருக்கிறார்" என்று திடமாக அனுபவத்தில் உணர்ந்தவன்,
புராணங்கள், இதிகாசங்கள் கேட்டு கேட்டு,
"தன்னை,  கடவுள் காப்பற்றுகிறார்", "நாம் ஹிந்து தர்மத்தில் இருக்க வேண்டும்" என்ற அளவில் ஆன்மீக சிந்தனை பெற்ற ஒருவன், தொடர்ந்து புராணங்களை, இதிகாசங்களை கேட்க கேட்க, படிப்படியாக உயர்ந்து,
"தனக்கு கடவுள் என்ன செய்வார்?" என்ற கேள்வியுடன் நிற்காமல்,
'அவர் எப்படி இருப்பார்? 
அவருக்கும் நமக்கும் என்ன உறவு? 
அவர் எப்படியெல்லாம் நம்மிடம் உறவாடுகிறார்?' என்று பல கேள்விகள் உருவாகி,
அவரை தெரிந்து கொள்ள ஒரு கட்டத்தில் ஆர்வம் பெறுகிறான். 

முதல் நிலையிலிருந்து, இரண்டாவது நிலைக்கு முன்னேறுகிறான்.

இந்த ஆர்வத்தை பெற்றவன், மகான்களின் துணையை தேடுகிறான். 
"ஸத் சங்கத்தில்" தன்னை சேர்த்து கொள்கிறான்.
"நாம் ஹிந்து தர்மத்தில் இருக்க வேண்டும்" என்று ஆசைப்பட ஆரம்பிக்கிறான்.

ராம நாமத்தை, பிரணவ மந்திரத்தை, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஒரு ஆத்ம குருவிடம் உபதேசம் பெற்று, அதை எப்பொழுதும் ஜபம் செய்ய ஆசைப்பட ஆரம்பிக்கிறான்.

ஆர்வம் அதிகமாகி, மந்திரங்களின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள ஆசைப்படுகிறான்.
அததற்கு அதிகாரியான, குருவை தேடி அலைந்து, மந்திரங்களின் உட்பொருளை அறிந்து கொண்டு, அர்த்தம் புரிந்து கொண்டு, மந்திரங்களை ஜெபிக்க ஆரம்பிக்கிறான். 
இது இரண்டாவது நிலை.


யதிராஜரான ராமானுஜர், அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் பெற்று, அதன் அர்த்தம் தெரிந்து கொள்ள, 18 தடவை (18×200= 3600KM) நடந்து நடந்து, கடைசியில் தான் நம்பி, அஷ்டாக்ஷர மந்திரத்துக்கு அர்த்தம்  சொன்னார் என்று பார்க்கிறோம்.
  • இறை எண்ணமே இல்லாத நாதீகர்கள்
  • புராணங்கள், இதிகாசங்கள் கேட்டு, ஆன்மீக எண்ணம் உடையவர்கள், 'தன்னை கடவுள் காக்கிறார்' என்ற ஞானம் உடையவர்கள், ஆனால், கடவுளை பற்றி அறிந்து கொள்ள தாகம் இல்லாதவர்கள், 
மந்திரங்களை பற்றியோ, அதன் உள் அர்த்தங்களை பற்றியோ அறிந்து கொள்வது, பெரும் ஆபத்தை தந்து விடும் என்ற பயத்தாலும், தயக்கத்தாலும், மந்திரங்களை, அதன் அர்த்தங்களை ரகசியமாக வைத்தனர்.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை சொல்ல கூடாது என்பதற்காக ரகசியமாக வைத்து கொள்ளவில்லை.
இதை தெரிந்து கொள்ள தகுதி உள்ளவர்களாக உள்ளார்களா? என்பது தான் கேள்வியாக உள்ளது.

அஷ்டாக்ஷர மந்திரத்தை ராமானுஜருக்கு சொல்ல ஏன் தயங்கினார்?
"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தின் ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தையும் பார்த்தோம் என்றால்,
"ஜீவனாகிய நாம் சுதந்திரமானவன் இல்லை, நாம் பரமாத்மா நாராயணனுக்கு கட்டுப்பட்டவன். 
அதனால், அவரே கதி என்று சரணாகதி செய்து, 
நான் என்ற கர்வத்தை விட்டு, "பெருமாள் இஷ்டம்" என்று இருக்க வேண்டும்" என்று சொல்கிறது.

திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் சாரத்தையே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,
சர்வ தர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாப்யோ
மோக்ஷ இஷ்யாமி மா சுச:
என்று தெளிவாக சொல்கிறார்.
அதாவது,
அனைத்து (சர்வ) தர்மத்தையும் விட்டு,
என்னை ஒருவனையே சரண் அடைந்து விடு,
நான் உன் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து,
நீ உலகத்தில் வாழும்வரை காப்பாற்றி, உனக்கு பிறவா நிலையான மோக்ஷமும் தருகிறேன்
என்று தெளிவாக சொல்கிறார்.


"கடவுள் என்னை காப்பாற்றுகிறார்" என்ற அளவில் மட்டும் ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள்,
"தெய்வம் எனக்கு என்ன செய்யும்?" என்ற அளவில் ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள்,
"கடவுளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற தாகம் இல்லாதவர்கள்,
திருஅஷ்டாக்ஷர மந்திரத்தின் அர்த்தத்தை, தெரிந்து கொண்டால்,
பகவத் கீதையில் கடைசியாக ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதை புரிந்து கொண்டால்,
"நான் பெருமாளிடம் சரண் அடைந்து விட்டேன். அவர் நான் செய்த பாவங்களை எப்படி இருந்தாலும் மன்னித்து விடுவார். அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்.
என் தர்மத்தை விட்டாலும், அவர் என்னை காப்பாற்றுகிறார்"
என்று பேச ஆரம்பித்து விடுவான்.

பிராம்மணன், "பெருமாளை  சரண் அடைந்து விட்டேன், நான் சந்தியா வந்தனம் செய்ய தேவையில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

வியாபாரி, "பெருமாளை சரண் அடைந்து விட்டேன், நான் வியாபாரத்தில் ஏமாற்றினாலும் பரவாயில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

சூத்திரன் (வேலைக்கு செல்பவன் (employee)), "பெருமாளை சரண் அடைந்து விட்டேன், நான் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி ஏமாற்றினாலும் பரவாயில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

இன்னும் சிலர்,
"ராம" என்ற தாரக மந்திரத்தின் பொருளே "சம்சார சாகரத்தில் இருந்து கடக்க (தாரக) செய்யும்" என்பது தான்.   
"ராம ராம ராம..." என்று தாரக மந்திரத்தை சொன்னாலேயே போதும், பூஜை, ஆசாரம், அனுஷ்டானம் செய்ய வேண்டிய தேவையில்லை." என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

மந்திரங்களின் அர்த்தங்களை,
நாத்தீகர்கள்,
ஆன்மீக நிலையில் முதல் நிலையில் உள்ளவர்கள்,
காமம் கோபம் பொறாமை குணம் கொண்டவர்கள் தெரிந்து கொள்வதால்,
"தன் தர்மத்தை விட்டாலும், மோக்ஷம் கிடைத்து விடும்" என்று ஆரம்பிப்பார்கள்.
"தர்மத்தை காக்க தான், தெய்வங்களே அவதாரம் செய்கிறார்கள்" என்பதை மறந்து பேசுவார்கள்.

தெய்வங்களை குறித்து ஜபம் செய்ய வேண்டிய சில மந்திரங்களை, பெண்களை மயக்க பயன்படுத்துவார்கள்.

இப்படி பக்குவம் இல்லாத நிலையில் 80% சதவீத மக்கள் இருப்பதால், பொதுவாகவே மந்திரங்கள், அதன் அர்த்தங்கள் பொது மேடைகளில் சொல்லப்படுவதில்லை.

திருக்கோஷ்டியூர் நம்பி, 18 முறை வந்த ஸ்ரீ ராமானுஜர், கோபத்தை, பொறாமையை ஜெயித்தவர் என்று அறிந்து,
"திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தின் பொருளை சொன்னாலும், மோக்ஷம் கிடைக்கும் என்றாலும்,
தன் தர்மத்தை விட்டு விட மாட்டார் என்று நம்பிக்கை கொண்டார்.

"தனக்கு மோக்ஷம் நிச்சயம்" என்றாலும், ஸ்ரீ ராமானுஜர், கடைசி வரை தன் தர்மங்களை விடவில்லை.



தன் தர்மத்தை விட்டு, "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை சொல்லி மோக்ஷம் அடைய ஆசைப்படுபவன், பகவானை ஏமாற்றுகிறான்.
பகவான் தன்னை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும், மோக்ஷ வாசலை திறந்து விடுகிறார், கருணையின் காரணத்தால். 
ஆனால்,
உண்மையான பக்தன், தெய்வம் விரும்பும் படியாக உலகில் தர்மத்தில் வாழ்ந்து, பிறகு மோக்ஷம் அடையவே விரும்புவான்.

ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ ராமானுஜர்,  "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை உபதேசம் பெற்றதும், 
கோவிலின் உச்சிக்கு சென்று, அங்கு கூடி இருந்த அனைவருக்கும்
"ஓம் நமோ நாராயணாய! என்று சொல்லுங்கள், உங்கள் அனைவருக்கும் மோக்ஷம் நிச்சயம்" என்று சொல்லி விட்டார்.

ஓம் நமோ நாராயணனாய மந்திரத்தின் விளக்கம் இதோ

திருக்கோஷ்டியூர் நம்பி,
தகுதி உள்ளவர்களுக்கே சொல்ல வேண்டும், 
தகுதி இல்லாதவர்களுக்கு சொன்னால், "சரணாகதி செய்து விட்டேன் ! தர்மத்தை விட்டாலும், எனக்கு பகவான் நிச்சயம் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்றெல்லாம் பேச ஆரம்பித்து கலி யுகத்தில் அனைவரும் தர்மத்தை விட்டு விடுவார்களே !! என்று பயந்தார்.

"தன்னால் உலகம் அதர்மத்தில் வீழ்ந்தது" என்று ஆகி விட கூடாது என்று பயந்தார்.

பரவாசுதேவனின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனே, ஸ்ரீ ராமானுஜர்.

"தர்மத்தில் இருக்காமல், மோக்ஷம் கிடைத்து விடும் என்று சொல்லி, ஆஸ்தீகர்கள் கூட மந்திரங்களை தவறாக பயன்படுத்தி விடுவார்கள். அதனால், 
இது போன்ற மந்திரங்களை தகுதி இல்லாதவர்களுக்கு சொல்ல கூடாது என்பது தவறில்லை. 
ஆனால், 
இப்படியே மறைத்து வைத்து இருந்தாலும்,
கலியின் ஆக்கிரமிப்பில், சுய நலம் அதிகமாகி, பெரும்பாலான  மக்கள் இனி வரும் காலங்களில், அவர்களே அவரவர்கள் தர்மத்தை விட்டு, பெருமாளையும் அறிந்து கொள்ளாமல், மிலேச்ச மதங்களில், பொய் மதங்களில், பொய் தெய்வங்கள் தனக்கு சொர்க்கம் கொடுக்கும், நன்மை செய்யும் என்று நம்பிக்கொண்டு போய்  விடுவார்கள்'
என்று அறிந்து இருந்தார் ஸ்ரீராமானுஜர்.

'கலியில், 
பெரும்பாலான மக்கள், தங்கள் சுய நலத்தால், எப்படி இருந்தாலும், தர்மத்தை விட்டு விடுவார்கள்' 
என்று அறிந்த நம் ராமானுஜர்,
"தர்மத்தை விட்டாலும் பரவாயில்லை, ஓம் நமோ நாராயணாய!! என்று சொல், பகவான் உன்னை ரக்ஷித்தது, மோக்ஷமும் கொடுப்பார்"
என்று பெரும் கருணை கொண்டு,
மறைத்து வைத்திருந்த திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை அனைவருக்கும் கொடுத்து விட்டார்.
"தெய்வம் வந்து இந்த மந்திரத்தை அனைவருக்கும் சொல்லட்டும், தானாக சொல்ல கூடாது" 
என்று இருந்த திருக்கோஷ்டியூர் நம்பி,
கலியில் உலக மக்கள் யாவரும் தர்மத்தை விட்டு, கதி இன்றி இருக்க போகிறார்கள் என்று உணர்ந்து,
திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை அனைவருக்கும் அள்ளி கொடுத்த, ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ ராமானுஜரை கண்டு மனம் மகிழ்ந்தார்.


"ஓம் நமோ நாராயணாய" என்று கூட சொல்லாமல் இருக்கிறார்கள் பலர்.
"இவர்களுக்கும் ஒரு வழி காட்ட வேண்டுமே" என்று, பரவாசுதேவன் நாராயணனே "ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராக" அவதாரம் செய்து, மிகவும் சுலபமான மந்திரமாகவும் இருக்க வேண்டும், கேட்பதற்கும் இசையாக இருக்க வேண்டும் என்று,
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்று ராம என்ற தாரக மந்திரத்தையும், தன் பிற அவதாரங்களான நரசிம்ம (ஹரே), கிருஷ்ண மந்திரத்தையும் சேர்த்து தொடுத்து, ஒரு இசை மாலையாக கொடுத்து விட்டார்.
இந்த மந்திரத்தை இன்று பாடாத மனிதன் இல்லை. 
ஆன்மீக எண்ணமே இல்லாதவர்களை கூட, இந்த இசை இழுக்கிறது.
வெளிநாட்டினர் பலர், இந்த மந்திர மாலைக்கு மயங்கி கிடக்கின்றனர்.

ஹிந்துவாக பிறந்ததில், பெருமை கொள்வோம்.

மந்திரங்களை அதன் அர்த்தங்கள் புரிந்து கொண்டு, ஜபம் செய்ய செய்ய, இரண்டாம் நிலையில் இருந்து, நாளடைவில், குருவின் துணையால் மூன்றாம் நிலையை அடைகிறோம்.

இந்த மூன்றாம் நிலை அடைந்தவர்களே, நம் பாரத தேசத்தில் வாழ்ந்த மகான்களும், வாழும் மகான்களும்.

ஆழ்வார்கள் பாடிய சில பாசுரங்களை படித்து அர்த்தம் புரிந்து கொண்டால், "தான் ஒரு பெண் போலவும். பெருமாள் தன்னை எப்பொழுது மணந்து கொள்வார்?" என்பது போலவும் பாசுரங்களை பார்க்கிறோம்.

இது போன்ற பாசுரங்களை ஒரு நாத்தீகனோ, ஆன்மீக வளர்ச்சியில் முதல் நிலையிலோ, இரண்டாம் நிலையிலோ இருக்கும் ஆஸ்தீகர்கள் கூட,
"ஏன் இப்படி ஆழ்வார் பாடுகிறார்? ஏன் தன்னை பெண் என்று சொல்லி கொண்டு, பாடுகிறார்?"
என்றெல்லாம் கேட்க தோன்றும்.

4000 திவ்ய பாசுரங்கள், நாயமார் பதிகங்கள், மீராவின் பாட்டுக்கள், மகான்களின் ஸ்லோகங்கள் படிப்பதற்கே, நமக்கு ஒரு தகுதி தேவைப்படுகிறது.

ஆழ்வார்கள் பாசுரத்தை படித்து, இது என்ன காமம் கலந்து இருக்கிறது? என்று கூட சொல்லி விடுவான் நாத்தீகன்.

இறை நிலையில் மூன்றாம் நிலையில் உள்ள இவர்கள்,
உலக நினைவே இல்லாமல், 
மோக்ஷம் வேண்டி கதறி அழும், பாசுரங்கள் உண்டு, காதல் கொண்டு, தன்னை சேர்த்து கொள்ள பிரார்த்திக்கும், பாசுரங்கள் உண்டு.

மோக்ஷத்தை இந்த ஜென்மத்தோடு பெற வேண்டும் என்று மூன்றாம் நிலையில் உள்ள மகான்களால் மட்டுமே, ஆழ்வார்கள் பாடிய  பாசுரங்களை, உண்மையில் புரிந்து கொள்ள முடியும்.


குருவின் கிருபையை பற்றி கொண்டு,
நாமும் புராணங்களை கேட்டு, புரிந்து கொண்டு, படிப்படியாக முன்னேறி, நாம் தர்மத்தில் இருந்தால், பகவான் காப்பாற்றுவார் என்ற பக்குவத்தை பெற்று,
பகவானை பற்றி அறிய "மந்திரங்கள் அதன் அர்த்தங்களை" புரிந்து கொண்டு ஜபம் செய்து,
மேலும் நம் ஆன்மீக நிலையை வளர்த்து கொண்டு,
மோக்ஷம் என்ற பிறவா நிலையை அடைய, நாராயணனை சரண் அடைவோம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ராமானுஜர்.
வாழ்க ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்,
வாழ்க நம் பாரத பூமியில் வாழும் மகான்கள்.

தர்மத்தை காப்பதற்கு தான், தெய்வங்களே அவதாரம் செய்கின்றனர்.
ஹிந்துக்கள் அவரவர்கள் தர்மத்தில் இருப்பது, ஹிந்துக்களுக்கு அவசியம்.

Sandhya Vandanam is a Key Dharma for Brahmin

Sandhya Vandanam - Morning (With meaning)



Sandhya Vandanam - Afternoon (With meaning)

Sandhya Vandanam - Evening (With meaning)




Friday 21 June 2019

ப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது. பிரம்மாவின் கருணையாலேயே, நமக்கு ரங்கநாதர் கிடைத்தார், காஞ்சியில் வரதராஜன் கிடைத்தார். பிரம்மா கேட்டதால் தான் பரமாத்மா வாசுதேவன் அவதாரங்கள் செய்தார்.

ஸ்ரீ பாகவதம், யார் சிறந்த பாகவதன்? என்று சொல்லும்போது 'ப்ரம்மாவை' தான் முதலில் சொல்லுகிறது.

ப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது.



பரவாசுதேவன் முதன் முதலாக படைத்ததே ப்ரம்மாவை தான்.

தன் திருவாயாலேயே ப்ரம்ம தேவனுக்கு "ப்ரம்ம வித்யை"யை உபதேசம் பண்ணினார் பகவான்.

"உலக ஸ்ருஷ்டி செய்யும் பொழுதும், எப்பொழுதும் என் இதயத்தில் ஹரியையே நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன்"
என்று சொல்கிறார் ப்ரம்மா.

"மது-கைடபர்கள் வேதத்தை கொண்டு போய் விட்டார்கள்" என்ற பொழுது, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள் அவருக்காக மத்ஸ்ய அவதாரம் எடுத்தார்.

"தேவர்கள் அசுரர்களால் துன்பப்படுகிறார்கள்" என்றதும், அவர்கள் பிரம்மாவிடம் ஓடி வழி கேட்க, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள், அவருக்காக கூர்ம அவதாரம் எடுத்தார்.

"பூமி பிரளய ஜலத்தில் மூழ்க", ஸ்வாயம்பு மனு பிரம்மாவிடம் சென்று முறையிட, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள், அவருக்காக பிரம்மாவின் ஹ்ருதயத்தில் இருந்தே வெளிவந்து வராஹ அவதாரம் எடுத்தார்.

ஹிரண்யகசிபுவுக்கு ப்ரம்மா தான் வரம் கொடுத்தார். பின் 'இவன் அட்டகாசம் தேவர்களை துன்புறுத்த', அவர்களுக்காக, க்ஷீராப்தி வந்து ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காக, பெருமாள் நரசிம்ஹ அவதாரம் எடுத்தார்.
ராம அவதாரமும், ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காகவே நடந்தது.

பூமி தேவி துஷ்டர்கள் பெருகியதால் "பூபாரம் தாங்க முடியாமல்", ப்ராம்மாவிடம் பிரார்த்திக்க, மீண்டும் ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காக, பெருமாள் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் எடுத்தார்.

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில், பிருந்தாவனத்திற்கு வந்து, "இங்கு புல்லாய் இருக்கவாவது அனுமதி கொடு. எனக்கு இந்த ப்ரம்ம பதவி கூட வேண்டாம்"
என்று பிரார்த்திக்கிறார் ப்ரம்மா.
"நீ ஆதிகாரி புருஷன். நீ உன் பதவியில் போய் இரு"
என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்ல, வேறு வழி இல்லாமல் திரும்ப செல்கிறார் ப்ரம்ம லோகத்துக்கு.



இப்படி விபவ அவதாரங்கள், இந்த பூமியில் நிகழ செய்தது மட்டும் இல்லாமல், 
இந்த அவதாரங்கள் நிகழ்ந்த சமயத்தில் இல்லாத நமக்கும் அணுகிரஹம் செய்ய, 
ப்ரம்ம லோகத்தில் தான் வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதரை, உலக ஸ்ருஷ்டி செய்து,  ஸ்வாயம்பு மனுவை பதவியில் அமர்த்தி, 
அவர் பூமியில் வழிபட தான் வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதரை வழங்கி விட்டார் ப்ரம்மா.

அந்த ரங்கநாதரை இக்ஷ்வாகு குலத்தில், ஸ்ரீ ராமராக அவதாரம் செய்து, தன் குல தெய்வமாக ஸ்ரீ ராமரே வழிபட்டு,
ராவண வதம் முடிந்து, விபீஷணனுக்கு தன் அடையாளமாக, ஸ்ரீ ரங்கநாதரை கொடுக்க,
ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தை தானே தேர்ந்தெடுத்து இன்று வரை நாமும் காண முடியும் என்கிற அளவுக்கு கருணை செய்தார்.

பிரம்மாவின் கருணையாலேயே, நமக்கு ஸ்ரீ ரங்கநாதர் கிடைத்தார்.

'அவரே ப்ரம்ம லோகத்தில் வழிபட்ட தெய்வம்' என்று நாம் பார்க்கும் போது தான், ஸ்ரீ ரங்கநாதரை பற்றியும் புரியும், பிரம்மாவின் கருணையும் புரியும்.
அதே ப்ரம்ம தேவன், இப்பொழுது காஞ்சியில் அஸ்வமேத யாகம் செய்து, நமக்காக, காஞ்சியில் வரதராஜனாக பெருமாளை வெளிப்படுத்தினார்.

இதை உணரும் போது,
பிரம்மாவை விட, சிறந்த பக்திமான் யார் இருக்க முடியும்?


ஞானி எப்படி இருப்பார்? தெரிந்து கொள்வோமே

யார் பண்டிதன்? யார் ஞானி?
'எந்த காரியத்தை செய்தாலும், அது அந்த வாசுதேவனின் ஆராதனை' என்று உணர்ந்து செய்பவனே உண்மையான பண்டிதன்.






ஞானியின் அடையாளம்:
எப்பொழுதுமே ஒரு பலனை கருதி செய்யக்கூடாது.

நான் தான் செய்கிறேன் என்ற கர்வதோடும் செய்யக்கூடாது.

நாம் செய்யும் காரியத்தால், பலன் அடையும் மனிதர்களையோ, தெய்வங்களையோ நினைத்தும் செய்ய கூடாது.

நாம் செய்யும் காரியத்தால், தெய்வங்களோ, மனிதனோ தனக்கு ஏதாவது பலனாக தருவார்களா? என்றும் எதிர்பார்க்க கூடாது.

எந்த காரியத்தை செய்தாலும் சரி,
அது தெய்வத்துக்காக இருந்தாலும் சரி,
ஒரு மனிதனுக்காக இருந்தாலும் சரி,
விலங்கிற்காக ஆனாலும் சரி,
செய்யும் காரியம் அந்தர்யாமியாக உள்ள அந்த 'பரமாத்மாவுக்கே' என்று மட்டும் உணர்ந்து,
'எதிர்பார்ப்பு, எரிச்சல், ஏமாற்றம், கோபம்' எதுவும் இல்லாமல், 
அந்தர்யாமியாக உள்ள அந்த 'பரமாத்மாவுக்கு ஆராதனை செய்ய நமக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்து செய்பவனே - உண்மையான பண்டிதன்.
அவனே ஞானி.
ஞானி ஒரு செயலை செய்து, அதில் பலன் எதிர்பார்ப்பதில்லை.
காரணம், அவன் செய்யும் செயல்கள் யாவும் அந்த அந்தர்யாமியான வாசுதேவனை ஆராதனை செய்வதற்கே.



ஒரு செயல் செய்ததிலேயே, ஞானி திருப்தி அடைகிறான். 
'ஆராதனை செய்தோம்' என்ற திருப்தியில் இருக்கிறான். 
இவனே பண்டிதன். அவனே ஞானி.

சர்வேஸ்வரனே செய்கிறார், 
சர்வேஸ்வரனுக்கே இந்த பலன் சேருகிறது,
என்று இருப்பவன் பண்டிதன். அவனே ஞானி.

இப்படி செய்யும் எந்த கர்மாவின் பலன்களும், அவனிடம் சேராது. 

இப்படி செய்யும் எந்த கர்மாவும், அவனுடைய மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுத்து விடும்.


Thursday 20 June 2019

இன்பத்தை தரும் கடவுள், எதற்காக துன்பங்களையும் தருகிறார்? ஒரு அலசல்...

திருநாங்கூரிலிருந்து கிழக்கே 2km தொலைவில் அமைந்துள்ளது - "திருமணிக்கூடம்" என்ற திவ்ய தேசம்.
திருநாங்கூரில் உள்ள 11 திருப்பதிகளுள், இக்கோயிலும் ஒன்று.


இங்கு நாம் அனைவரும்  தரிசிப்பதற்காக வீற்றிருக்கிறார் "கஜேந்திரவரதன்" என்ற "வரதராஜ பெருமாள்".

இந்த பெருமாளை பார்த்து, திருமங்கையாழ்வார்,
பாவமும், அறமும், வீடும்,
இன்பமும், துன்பந் தானும்,
கோவமும், அருளும்,
அல்லாக் குணங்களுமாய எந்தை,
மூவரில், எங்கள் மூர்த்தி இவன் என
முனிவரோடு, தேவரும் வந்து இறைஞ்சும்
நாங்கூர்த் திருமணிக்கூடத்தனே
---- என்று மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.
(பெரிய திருமொழியில் இந்த பாசுரம் உள்ளது)

இங்கு "மூவர்" என்று சொல்லுமிடத்தில் 'ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன்' என்ற மும் மூர்த்திகளையும் குறிப்பிட்டு,
அந்த மூவரில் நடுநாயகனாக (prime hero) இருக்கும் விஷ்ணுவே, இங்கு திருமணிக்கூடத்தில் வரதராஜனாக இருக்கிறார் என்பதால்,
தன்னை போன்ற அடியார்களும், முனிவர்களும், தேவர்களும் வந்து வந்து  சேவிக்கிறார்கள் என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
மேலும், வரதராஜ பெருமாளை பார்த்து
"எல்லா குணங்களுமாக பெருமாளே இருக்கிறார்"
என்று திருமங்கையாழ்வார் சொல்வதை, ஆழ்ந்து கவனிக்கும் போது தான், அவர் பக்தன் மட்டுமில்லாது, வைராக்கியம் உள்ள ஞானி என்றும் தெரிகிறது.
அற்புதமான பிரபந்தம் இது.
புரிந்து கொள்வதும் எளிது.
இது போன்ற பாசுரங்கள் மனப்பாடம் செய்யவும் எளிதானது. தமிழும் வாழும்.

நாமும் திருமணிக்கூடம் செல்லும் பாக்கியம் பெற்றால், பெருமாள் முன் சென்று நிற்கும் போது, என்ன சொல்வதென்றே தெரியாமல்!! இருப்பதற்கு பதில்,  திருமங்கையாழ்வார் பாடிய, இந்த பிரபந்தத்தை நாமும் சொல்லி சேவிக்கலாம்.


ஆழ்வார் பாடிய பாடலை நாமும் சொல்லும் போது, 
நம்மை கண்டு பெருமாளும் சந்தோஷப்படுவார். 
நமக்கும் ஞானத்தை தருவார். 
சகல பாக்கியங்களும் கிடைக்க, நமக்கும் அணுகிரஹம் செய்து விடுவார்.

வரதராஜனை பார்த்து, திருமங்கையாழ்வார்
"நமக்கு ஏற்படும் பாவமும், அறமும், வீடும் (மோக்ஷமும்), இன்பமும், துன்பமும்,
கோபமும், அருளும், மற்றும் அனைத்து குணங்களும் வரதராஜனே" என்று ஆச்சர்யமாக பாடுகிறார்.

"புண்ணியமும் நீயே, வீடும் நீயே,
அருளும் நீயே, இன்பமும் நீயே"
என்று பகவானை பார்த்து சொன்னால் ஒரு நியாயம் தெரிகிறது....
"பகவான் நமக்கு நல்ல குணங்களை கொடுக்கிறார்" என்று சொன்னால், அதில் ஒரு நியாயம் உள்ளது...

அது என்ன?
திருமங்கையாழ்வார் துணிந்து "பாவமும் நீயே, துன்பமும் நீயே"  என்று சொல்லிவிட்டார்?
அது மட்டுமா!!
"எல்லாக் குணங்களும் நீயே" என்று 'அனைத்து குணங்களுக்கும் காரணம் வரதராஜனே' என்று சொல்லிவிட்டாரே?

பாவ செயல்களை, நம் புத்தியை கொண்டு தான் செய்கிறோம்.
செய்த தவறான செயல்களுக்கு (கர்மா) பலனாக, துன்பம் நமக்கு கிடைக்கிறது.
இப்படி இருக்க,
நாம் செய்யும் பாவத்தையும், அனுபவிக்கும் துன்பத்தையும் கூட பகவான் செயல் என்று சொல்லிவிட்டாரே..திருமங்கையாழ்வார்??

அது எப்படி நியாயம் ஆகும்? என்று நமக்கு தோன்றலாம்.

"பாவமும் பகவான் கொடுத்தது தான்" என்று திருமங்கையாழ்வார் சொல்வது, துரியோதனன் ஒரு சமயத்தில் சொன்னது போல இருக்கிறதே? என்று கூட நமக்கு தோன்றலாம்.
மகாபாரத சமயத்தில், பெரிய போர் சம்பவித்து விடும் என்ற நிலையில்,
துரியோதனனை பார்க்க ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக தூது வந்தார்.

சபையில் இருந்த அனைவரும், துரியோதனனை பார்த்து,
"துரியோதனா... வந்திருப்பது பரமாத்மா..
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதை கேள்" என்று புத்திமதி சொல்லியும்,
"குறைந்த பட்சம் 5 கிராமமாவது தானமாக பாண்டவர்களுக்கு கொடு. போர் ஏற்படாமல் தடுத்து விடலாம்"
என்று ஸ்ரீ கிருஷ்ணரே கேட்டும் கூட,
"ஒரு குண்டூசி குத்தும் இடம் கூட பாண்டவர்களுக்கு தர மாட்டேன்.
'பாண்டவர்களுக்கு கொடுக்க கூடாது' என்று இந்த புத்தியை கொடுத்ததும் உங்கள் பரமாத்மா கிருஷ்ணன் தான்"
என்று பதிலுக்கு சாமர்த்தியமாக பேசி, முடிவாக மறுத்தான் துரியோதனன்.


திருமங்கையாழ்வார் "பாவமும் இறைவனே" என்று சொன்னது போலவே,
துரியோதனன் 'தான் செய்யும் பாவ காரியத்துக்கு காரணம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான்" என்று சாமர்த்தியமாக சொல்ல,
"இவன் உண்மையில் ஞானியாக பேசுகிறானா? இல்லை திமிர் பிடித்து பேசுகிறானா?"
என்று அங்கிருந்த ரிஷிகளே திகைத்தனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்து கொண்டே, "போரில் சந்திக்கலாம்" என்று சபையை விட்டு கிளம்பினார்.

துரியோதனன் "பாண்டவர்களுக்கு கொடுக்க முடியாது" என்று 'சுயமாக' முடிவு செய்து விட்டு,
தான் தெரிந்தே செய்யும் பாவ செயலுக்கு, "இறைவன் பெயரால்" என்று தனக்கு சாதகமாக பேசி,
அங்கு இருந்த அனைவரையும் எதிர்க்கவும் முடியாமல் செய்தான்.

"எல்லாம் ஈசன் செயல்" என்று ஞானிகள், மகாத்மாக்கள் சொல்லும் வார்த்தையை,
துரியோதனன் போன்ற துர்புத்தி உள்ளவர்கள், தாங்கள் செய்யும் பாப செயல்களுக்கு மட்டும் "எல்லாம் ஈசன் செயல்" என்று சாமர்த்தியமாக பேசி ஏமாற்றுவார்கள்.
"இறைவன் பெயரால்' என்று சொல்லிக்கொண்டு, தான் செய்யும் பாவ செயல்களுக்கு இறைவனை இழுக்கும், துரியோதனனை போன்றவர்கள்  எப்பொழுதுமே உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்கள் துரியோதனன் போலவே அழிவார்கள்.

"இறைவன் பெயரால்" என்று சொல்லி, துரியோதனன் போன்ற செயல்கள் செய்பவர்களின்  சுற்றத்தை முதலில் அடியோடு அழித்து,
கடைசியில் "இறைவன் பெயரால்" என்று சொல்லி பாவ காரியங்கள் செய்பவனையும், "தெய்வமே அழிக்கும்" என்பது தான் துரியோதனன் வாழ்வில் நடந்த உண்மை.

ஆழ்வார் சொன்ன படி "பாவமும் ஈசன் செயல் தான், புண்ணியமும் ஈசன் செயல் தான்". இது உண்மைதான்.

ஆனால் இதை உண்மையான ஞானிகள் சொன்னால், 'அதில் உண்மை இருக்கிறது' என்பது நமக்கு கூட புரியும்.
அதே சமயத்தில்,
துரியோதனன் போன்ற மூடர்கள், அசுர கூட்டம் சொல்லும் போது, 'அதில் சுயநலம் இருக்கிறது' என்பது நமக்கு கூட புரியும்.

ஞானிகள் "பாவமும் ஈசன் செயல் தான், புண்ணியமும் ஈசன் செயல் தான்" என்று வாழ்வில் நிரூபித்து காட்டுகிறார்கள்.

ஜடபரதர் என்ற யோகியை, உட்காரவைத்து சந்தனம் இட்டு, புதிதாக துணிகள் கொடுத்து
, அவருக்கு கட்டி விட்டு, மாலைகள் போட்டு, ராஜா உபசாரம் செய்து பூஜை செய்தார்கள்.
"எல்லாம் பகவான் செயல்" என்று வரும் சுகத்தை ஏற்றுக்கொண்டார்.
அலங்காரம் முடிந்ததும்,
ஜடபரதரை கூட்டி கொண்டு போய், பலிபீடத்துக்கு அருகில் நிறுத்தி, பெரிய வாளுடன் ஆவேசம் வந்தது போல, ஒருவன் ஓடி வந்து இவரை வெட்ட வர, 
ஜடபரதர் அப்பொழுதும்
"எல்லாம் பகவான் செயல்" என்று வரும் ஆபத்தையும் ஏற்றுக்கொண்டார்.





"வாளும். எம்பெருமான் தான்,
வெட்ட வருபவனும். எம்பெருமான் தான்,
தன் கழுத்தில் போட்ட பூ மாலையும். எம்பெருமான் தான்,
தனக்கு ஏற்பட்ட சுகமும். எம்பெருமான் தான்,
தனக்கு ஏற்படும் துக்கமும். எம்பெருமான் தான்"
ன்று இருந்தார் ஜடபரதர்.
ஜடபரதர் தன்னை கொல்ல வருபவனையும் தடுக்கவில்லை.
ஆனால், தெய்வம் சும்மா இருக்குமா?
ஒரு ஞானியை "காளியின் பெயரால்" என்று சொல்லிக்கொண்டு, கொலை செய்ய வந்தவர்களை பார்த்து காளி தேவி கோபம் கொண்டாள்.
மகாகாளி மகா கோபம் கொண்டு, தன் பெயரால் நடக்கும் இந்த காரியத்தை பொறுக்க முடியாமல் ப்ரத்யக்ஷமாகி, அங்கு இருந்த அனைவரையும் வெட்டி சாய்த்தாள்.

ஜடபரதர் போன்ற ஞான வைராக்ய நிலையில் உள்ளவர்கள், திருமங்கையாழ்வார் பாடிய இந்த பிரபந்தத்தை பாடினால், அவர்களுக்கு தான் இதன் பூரணமான அர்த்தம் புரியும்.

துரியோதனன் போன்றவர்கள், சூதாடி ஏமாற்றி பாண்டவர்களின் சொத்தை பிடுங்கிய போது, "இது என் சாமர்த்தியம்" என்று சொல்லிக்கொண்டான்.

தனக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் போதெல்லாம் "தன் முயற்சி, தன் செயல், தன் சாமர்த்தியம்" என்று சொல்லி,
தனக்கு விபரீதமான விஷயங்கள் நடக்கும் போது மட்டும், இறைவன் மீது பழி போட்டான் துரியோதனன்.

துரியோதனன் போன்றவர்கள் அவனை போலவே அழிவார்கள்.

"பாண்டவர் சொத்தை திருப்பி கொடு" என்று கேட்ட பொழுது, 'கொடுக்க முடியாது' என்று தானே சுயமாக முடிவு செய்து விட்டு,
"நான் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஈசன் ஆசைப்படுகிறார்" என்று அப்பொழுது மட்டும் "ஈசன் செயல்" என்று சொல்லி, ஏமாற்றினான் துரியோதனன்.

துரியோதனனை போன்று பேசுபவர்கள், தன் சக மனிதர்களை வேண்டுமானால் ஏமாற்றி விடலாம்.
ஆனால், தெய்வம் மன்னிக்காது. 

ஜடபரதர், ஆழ்வார் போன்ற ஞானிகள் "தன் வாழ்வில் சம்பவிக்கும் இன்பத்தையும், துன்பத்தையும் பகவான் இஷ்டம்" என்று சொல்லும் போது, அவர்களின் ஞான நிலையை கண்டு, பகவான் அவர்களுக்கு கருணை செய்கிறார். மோக்ஷத்தையே கொடுக்கிறார்.

இன்பத்தை தரும் பகவான், அதே சமயம் எதற்காக துன்பங்களையும் தருகிறார்?
பூலோகத்தில் இன்பம் மட்டுமே இருக்க செய்தால், இங்கு இருக்கும் ஒரு ஜீவனுக்கு கூட, மோக்ஷம் அடைய வேண்டும் என்ற எண்ணமே எழாது.

ஜீவன் உலகில் உடல் எடுத்து பிறப்பதே, மோக்ஷம் அடைய வேண்டும் என்பதற்காக தான்.
நாம் ஜீவ ஆத்மா, அவர் பரம் ஆத்மா. நம் இருவருக்கும் உறவு உண்டு.
"ஓம்" என்ற பிரணவமே - 'ஜீவனுக்கும், பரமாத்மா வாசுதேவனுக்கும் உள்ள இந்த உறவை தான்' நமக்கு உணர்த்துகிறது..
புரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்.


ஜீவாத்மாவாகிய நாம் செய்யும் காரியங்களை,
'மனசாட்சி' என்ற பெயரிலும்
'அந்தர்யாமி' என்ற பெயரிலும்,
உள்ளிருந்து 'பரமாத்மா வாசுதேவன்' பார்த்து கொண்டே இருக்கிறார்.

தவறான காரியங்கள் ஜீவன் செய்யும் போதெல்லாம்,
கூடவே இருக்கும் பரமாத்மா 'தவறு செய்யாதே' என்று சொல்லவும் செய்கிறார்.

பரமாத்மா வாசுதேவன், உலகத்தில் இன்பம் மட்டுமே கிடைக்கும் படியாக செய்து இருந்தால், ஜீவாத்மாவாகிய நாம், பரமாத்மாவாகிய நாராயணனை அடைய வழி என்ன? என்று யோசித்து கூட இருக்க மாட்டோம்.

பல வித விதமான துன்பத்தை நமக்கு கொடுத்து,
ஜீவனாகிய நம்மை, உலக ஆசைகளில் இருந்து நாமாகவே விரும்பி,
சிறிது சிறிதாக விலகும் படியாக செய்து,
மெதுவாக நம்மை பகவான் நாராயணன் பக்கம் திருப்பி,
பக்தி அனுபவத்தை கொடுத்து, பரமாத்மாவை உணரும் ஆனந்தம் என்ற அனுபவத்தை கொடுத்து,
கடைசியில் மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார்.

"மோக்ஷம் அடைய வேண்டும் என்ற ஆசை" நமக்கு ஏற்பட, துன்பங்களையும் நமக்கு கொடுக்கிறார் பகவான்.

இத்தனை துன்பங்கள் உலகில் இருந்தும் கூட,
பல கோடி மக்கள், இன்னும் கோவிலுக்கு சென்று பெருமாளை சரண் அடைய வேண்டும் என்று நினைக்கவில்லை,
பெருமாளிடம் பக்தி செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை,
என்று பார்க்கிறோம்.

துன்பமே இல்லாமல் இந்த உலகை பகவான் படைத்து இருந்தால்?!! ஒருத்தன் கூட மோக்ஷத்தை பற்றியோ,
பகவானை பற்றிய எண்ணமோ,
பகவானிடம் பக்தியையோ செய்து இருக்க மாட்டான்.

நம்மை சுகமாகவே வாழ செய்தால்,
"உலகமே லட்சியம்" என்று வாழ்ந்து, 
இறைவனை நினைக்க மறந்து விடுவோம் என்பதால் தான்,
உலக துன்பங்களை பார்த்து பார்த்து, ஒரு சமயத்தில் நாமே விருப்பப்பட்டு விலக,
நம் கவனம் ஒரு சமயத்தில் பகவான் பக்கம் திரும்ப,
பகவான் அவ்வப்போது, நமக்கு துன்பமும் கொடுக்கிறார்.

ஆதலால் தான், "எல்லா குணங்களும் (இன்பமும், துன்பமும், பாவமும்) பகவான் கொடுத்தது தான்" 
என்று திருமங்கையாழ்வார் சொல்கிறார்.

தனக்கு வரும்
சுகத்தையும், துன்பத்தையும்,
லாபத்தையும், நஷ்டத்தையும்,
பாராட்டையும், இகழ்ச்சியையும்,
ஜனனத்தையும், மரணத்தையும்,
வெற்றியையும், தோல்வியையும்,
ஆரோக்கியத்தையும், நோயையும்,
இளமையையும், முதுமையையும்
"பகவான் செயல்" என்று பார்க்க தெரிந்தவன்,
மோக்ஷத்திற்கு தயாராகிறான்.
"இறைவன் செயல்" என்று இருக்கும் ஞானிகள், ஒரு வெளி மனிதனை போல வேடிக்கை பார்ப்பதால், இந்த குணங்கள் இவர்களை அசைக்க கூட முடிவதில்லை.
ஞானிகள் தங்கள் வாழ்வில் டக்கும், எந்த 'துக்க நிலையிலும்' துவண்டு போவதில்லை.
ஞானிகள் தங்கள் வாழ்வில் கிடைக்கும், எந்த 'சுகபோக நிலையிலும்' கர்வமும் கொள்வதில்லை.
சுகத்திலும், துன்பத்திலும் இறைவனை மறப்பதும் இல்லை. மறுப்பதும் இல்லை.
மறு பிறவி எடுக்க அவசியமில்லாத நிலையை பெறுகிறார்கள்.

'பாவமும் புண்ணியமும் பகவான் செயல்' என்று தன்னை பற்றிய சுய தம்பட்டம் இல்லாத ஒருவனின் வாழ்வில் சம்பவிக்கும்
பாவ செயலால் ஏற்படும் பாவ மூட்டையையும்,
புண்ணியத்தால் ஏற்படும் புண்ணிய மூட்டையையும்
பகவான் எடுத்து கொண்டு,
பாவமும் செய்யவில்லை, புண்ணியமும் செய்யவில்லை என்று ஆக்கி, வைகுண்டத்தில் இடம் தந்து விடுகிறார்.

"குணங்களுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை" நம்மை போன்றவர்களும் புரிந்து கொள்ள,
சமுத்திரத்தை (கடல்) உதாரணமாக காட்டி, புரிய வைப்பார்கள் பெரியோர்கள்.
கடற்ரைக்கு, நாம் சென்று பார்க்கும் போது,
வித விதமான அளவுகளில்,
திடீரென்று பெரிய அலையும்,
திடீரென்று சிறிய அலையும்,
மாறி மாறி, ஓயாமல் எழும்பி எழும்பி மறைந்து கொண்டே இருக்கிறது.

"கடல் அலைகள் போன்றது தான், நம் குணங்களும்"
என்று ஜடபரதர், திருமங்கை ஆழ்வார் போன்ற ஞானிகள் அறிந்து கொள்கிறார்கள்.
இதன் காரணத்தால் தான், திருமங்கையாழ்வார், "எல்லா குணங்களுக்கும் காரணம் நாராயணனே" என்று பாடுகிறார் என்று பார்க்கிறோம்.
திடீரென்று நமக்குள் ஏற்படும் பெரிய கோப அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் துக்க அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் பாவ அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் தான அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் பக்தி அலையும்,
மாறி மாறி நம்மிடம் தோன்றி தோன்றி மறைகிறது என்று அறிகிறார்கள்.

கடற்கரையில், அலைகள் ஏற்படுவதற்கு ஆதாரமாக இருப்பது எது?
அலைகளை தாண்டி கவனித்தால், அமைதியான கடல் இருப்பது தெரிகிறது.
'கடல் இருப்பதால், அலைகள் தோன்றுகிறது' என்று கவனிக்கும் போது, அனைத்து விதமான அலைகளும் ஏற்படுவதற்கு காரணம் அதற்கு ஆதாரமாக இருக்கும் "கடலே" என்று தெரிகிறது.
கடல் "அலைகளை," நம் "குணங்களுடன்" உதாரணமாக காட்டி,
அலைகள் ஏற்படுவதற்கு காரணம் "கடல்" என்று காட்டி புரிய வைப்பது போல,
நம்மிடம் பல வித குணங்கள் ஏற்படுவதற்கு காரணம், "ஜீவன்" இருப்பதால் தான், என்று புரிய வைக்கிறார்கள் பெரியோர்கள்.

நம் உடம்பில் உள்ள "ஜீவாத்மாவாகிய நாம்", நம் கூடவே அந்தர்யாமியாக (மனசாட்சியாக) இருக்கும் பரமாத்மா நாராயணனுக்கு கட்டுப்பட்டவன் என்று உணர்த்தி,
எப்படி கடல் அலைகளுக்கு ஆதாரமாக கடல் இருக்கிறதோ,
அதுபோல,
நம்மிடம் உருவாகும் அனைத்து குணங்களுக்கும், நமக்கும் ஆதாரமாக, "பரமாத்மா நாராயணனே" இருக்கிறார் என்பதால்,
உள்ளும் புறமும் எங்கும் உள்ள அந்த பரமாத்மாவே, நம் கண்ணுக்கு எதிரில், வெளியிலும் "திருமணிக்கூடம் வரதராஜ பெருமாளாக வீற்றிருக்கிறார்" என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

தமிழ் வளர,
ஆழ்வார்கள் பாடிய 4000 பிரபந்தங்களும், நாயன்மார்கள் பாடிய பதிகங்களுமே போதும்.

இதை நாம் தெரிந்து, புரிந்து கொள்ள, ஆர்வம் காட்டினாலேயே,
"தமில் தமில்..." என்று பேசி தமிழை அழித்து விடாமல், 
உண்மையிலேயே தமிழை வளர்க்கலாம்.

தமிழை வளர்த்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல், அதனோடு நம் இறை உணர்வையும் வளர்த்து கொள்ளலாம்.

போலி தமிழர்களையும்,
"பலம்" என்ற தமிழ் சொல்லை கூட "பெலம்" என்று உளரும் திருடர்களையும் தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

ஹிந்துவாக பிறந்தால், ஹிந்துவாக வாழ்ந்தால் எத்தனை அருமை!! என்று இது போன்ற ஆன்மீக விளக்கங்கள், நம் தெய்வங்களின் மகத்துவங்கள் தெரிந்து கொண்டால் தான் புரியும்.

நம்முடைய ஆயுசை, பகவத் கீதை படிக்காமல், திவ்ய பிரபந்தங்கள் படித்து புரிந்து கொள்ளாமல் வீண் செய்து விட கூடாது.
இத்தனை வருஷம் வீண் செய்தோமே!! என்று வயதான பிறகு தோன்றி பிரயோஜனமில்லை.

அதிக பட்சம் நமக்கு கொடுக்கப்பட்ட ஆயுசு 100 தான்.
அதில் நமக்கு எத்தனை குறைவோ நமக்கு தெரியாது.
அதில் இப்பொழுதே இத்தனை வருடங்கள் வீண் செய்தோமே!! என்று ஒவ்வொரு ஹிந்துவும் நினைக்க வேண்டும்.

நம்மிடம் இல்லாத விஷயங்களா, போலி மதங்களிடம் உள்ளது?
இந்த ஒரு பாசுரத்துக்கு ஈடாகுமா, பிற மதங்கள்?

ஹிந்துவாக பிறந்ததில் கர்வம் கொண்டு, அனைவரையும் ஹிந்துவாக ஆக்க வேண்டும்.
பிற மதத்தில் விழுந்து விட்ட அனைவரையும் திவ்ய பிரபந்தம், பகவத் கீதை படிக்க வைத்து ஹிந்துவாக வாழ வைக்க வேண்டும்.


வாழ்க ஆழ்வார்கள்,
வாழ்க நாயன்மார்கள்..
வாழ்க இறை உணர்ச்சி..
வாழ்க ஹிந்து தர்மம்..
வாழ்க தமிழ்.

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Afternoon (with meaning)

Sandhya Vandanam - Morning (with meaning)



Sandhya Vandanam - Evening (with meaning)




Monday 17 June 2019

விரதம் எதற்காக? உடல் ஆரோக்கியம் பெற, ஆயுள் வளர, இறை உணர்வும் வளர, நமக்கு கிடைத்த எளிதான வழி.. கடைபிடிப்போமே !!

90% வியாதிகள் பொதுவாக வயிற்றில் இருந்து தான் ஆரம்பிக்கிறது...

வயிற்றை நன்றாக வைத்து கொண்டாலே நீண்ட காலம் ஆரோக்கியம் குறையாமல் வாழலாம்.

நம் பாரத நாட்டில் வயிற்றை ஆரோக்கியமாக வைத்து கொண்டிருந்த வரை, கொடுமையான தீராத நோய்கள் இல்லாமல், நீண்ட நாள் சாதாரணமாக வாழ்ந்தனர்..

வயிற்றை ஓய்வெடுக்க விடாமல், 24 மணி நேரமும் நிரப்பி, வயிற்றை நாசமாக்கி, குடல் கோளாறு, கேன்சர் என்று உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம்..
ஹிந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும். நம் பெருமையை அறிய வேண்டும்.


நோயற்ற வாழ்வுக்கு நம் பாரதமக்கள் கடைபிடித்த வழியை பின்பற்றுவோமே...

உடல் ஆரோக்கியம் பெற,
ஆயுள் வளர,
இறை உணர்வும் வளர,
நமக்கு கிடைத்த எளிதான வழியை கடைபிடிப்போமே

உடல் ஆரோக்கியத்தை அடைவதற்கு, விரதம் நமக்கு பயன் தருகிறது.
சில குறிப்பிட்ட நாட்களில், தெய்வ சிந்தனையோடு விரதத்தை செய்யும் போது, தெய்வ அணுகிரஹமும் சேருகிறது.

விரதங்களில் மிகவும் உன்னதமானது "ஏகாதேசி".
இது மாதத்தில் இரண்டு நாட்களில் வரும்.


ஏகாதேசி விரதத்தை, குழந்தை வயதிலிருந்து கடைசி காலம் வரை கடைபிடிப்பவர்களை, நோய்கள் நெருங்க பயப்படும்.

ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள்,
ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.
தசமியில், இரவு உணவை தவிர்க்க வேண்டும்.
ஏகாதசி அன்று முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும்.

மாதத்தில் இரண்டு தினங்களில் ஏகாதேசி வருகிறது.

விரதம் இருந்தால், நமக்கு "கேன்சர் போன்ற உயிர்கொள்ளும் நோய்கள் கூட வராது" என்று ஆராய்ச்சி செய்து ஜப்பான்காரர் இன்று சொல்லி, நோபல் பரிசு கூட வாங்கி விட்டார்.

* ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

* ஏகாதசி திதி முழுவதும், முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். 
முடியாத பட்சத்தில்,
குளிர்ந்த நீரை குடிக்கலாம்.
ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம்.

உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிடலாம்.
பூரண பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. 





குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.
அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள்,
காய்கனிகள்,பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பெருமாளுக்கு காண்பித்து உண்ணலாம்.

* ஏகாதசி அன்று பகல் தூக்கம் கூடாது. 
* இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பஜனை செய்து கண் விழிக்கலாம். 
கண் விழிக்கிறோம் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்க கூடாது.

* ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது. 
துவாதசி அன்று அதி காலையில் உணவு அருந்துவதை 'பாரணை' என அழைக்கிறோம்.
துவாதசியன்று அதி காலையில் நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளை உணவாக சேர்த்து
கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா... என மூன்று முறை கூறி, சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் பச்சடி, வறுத்த சுண்டைக்காய் சாம்பார் ஆகியவை முக்கியமானவை. 
'நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்தி கீரை' கட்டாயம் சேர்த்து சாப்பிடவேண்டும் என்று குறிப்பாக சொல்வதற்கு காரணம் என்ன? 
உடல் ஆரோக்கியத்துக்காக சொல்லப்படும் இவை மூன்றும், ஆயுர் வேத மருத்துவ உணவுகள்.

ஒரு நாள் முழுக்க பட்டினி போட்ட வயிற்றில் அக்னி உருவாகி, உடம்பில் இருந்த கெட்ட செல்களை அழித்து விடும்.
அக்னியின் பாதிப்பால், காலியான வயிறும், அதே சமயம் புண்ணாகி  இருக்கும்.

இந்த புண்ணை சரி செய்வதற்கே கட்டாயம் 'நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்தி கீரை' மூன்றையும் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும் என்று நம் ஹிந்து சாஸ்திரம் சொல்கிறது .


வெறும்  கடவுள், இறை  பக்தி என்று மட்டும் சொல்லும் பொய் மதம் இல்லை, நம் ஹிந்து சனாதன தர்மம்.
நம் ஆரோக்கியத்துக்கும் அறிவுரை சொல்லும் அற்புதமான ஹிந்து  தர்மத்தை விட உயர்ந்த தர்மம் உலகில் கிடையாது.

* துவாதசியன்று பஞ்சாங்கத்தில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.

* உணவு சாப்பிடும் முன், அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். * ஏகாதசி அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர்.
இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

பகலில் சாப்பிடாமல், இரவில் சாப்பிடுவது உடலுக்கு கேடு என்று இன்றைய உலக வாழ்க்கையே நமக்கு காட்டுகிறது.
இன்று இரவில் வேலை பார்க்கும் பலர், பகலில் சாப்பிடாமல், இரவில் உண்டு, உடல் ஆரோக்கியம் இன்றி அவதிப்படுகின்றனர்.

வருடத்தில், "ஒரு மாதம் முழுவதும் பகலில் பட்டினி இரு, இரவில் நன்றாக அசைவம் சாப்பிடு" என்று அர்த்தமில்லாத விரத கட்டுப்பாடுகளை சொல்லாமல்,
விரதத்தின் மூலம் 'ஆன்மீக வளர்ச்சி'க்கும்,
அதே சமயம், விரதம் முடிக்கும் போது 'மருத்துவமும்' செய்து கொள்ள வழி காட்டி,
'ஆயுள், ஆரோக்கியத்து'க்கு வழி காட்டும் அற்புதமான விரதமே 'ஏகாதசி' போன்ற விரதங்கள்.

நம் ஹிந்து தர்மம் சொன்ன படி, விரதம் இருப்பவர்கள், 100 வயது வரை எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வார்கள். 
விரதங்கள் அனுஷ்டித்து தான், ஹிந்துக்கள் ஆரோகியமாக இது நாள் வரை வாழ்ந்தனர்.
விரதங்கள், நம் இறை வளர்ச்சிக்கும் மட்டும் அல்ல, நம் ஆரோக்கியத்துக்கும் மிக மிக தேவையான ஒன்று. 

100 வருடம் உழைக்க வேண்டிய இயந்திரங்கள், 50 வருடத்தில் பாழாகி போவதற்கு காரணம், அதற்கான ஓய்வு கொடுக்கப்படாமல் இருப்பதே..

'ஒரு வேளை' மட்டும் உண்டால், யோகி என்றும்,
'இரு வேளை' மட்டும் உண்டால், போகி என்றும்,
'மூன்று வேளை' மட்டும் உண்டால், ரோகி என்றும் சொல்வதுண்டு.
அந்த காலங்களில் அதிக பட்சம் மூன்று வேலைகள் தான் சாப்பிட்டார்கள் என்று தெரிகிறது..

இன்றோ நாலு வேளை, ஐந்து வேளை என்று கிடைக்கும் போதெல்லாம் வாயில் ஏதாவது போட்டுகொண்டு சாப்பிட்டு கொண்டே இருப்பதால்,  வயிற்றுக்கு ஓய்வு கிடைப்பதே இல்லை.

மனிதர்களின் பெரும்பாலான நோய்கள் வயிற்றில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.


இந்த வயிற்றுக்கு மாதம் இரு முறை ஓய்வு கொடுத்து, அந்த ஓய்வையும் ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் கடைபிடித்தால்,
உலகில் உணவு தேவையும் நம்மால் குறைகிறது. 
நம் வயிற்றுக்கும் மாதத்தில் இரண்டு நாள்  ஓய்வு கிடைக்கிறது. 

'நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்தி கீரை' போன்ற மருத்துவ குணங்கள் கொண்ட உணவை விரதம் முடிக்க சாப்பிடும் போது,
உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் பெறுகிறது.

உலகில் அனைவருக்கும் யோகத்தை சொல்லிக்கொடுத்தது ஹிந்து தர்மமே. 
விரதங்களின் மகத்துவத்தை என்றுமே வலியுறுத்தக்கூடிய ஹிந்து தர்மத்தை ஆராய்ச்சி செய்து, ஜப்பானியர்கள் இன்று நோபல் பரிசு பெறுகின்றனர். 

ஹிந்துக்கள் நம் பெருமை அறிவோம்.