Followers

Search Here...

Sunday 28 July 2019

தமிழ் தேசியமொழியாக ஆகவே முடியாது.... தமிழ் மொழி வளராமல் போனதற்கு காரணம் என்ன ?....அலசல்

"தமிழ் மொழி" வளர வேண்டும் என்று தமிழனுக்கு ஆசை.
நியாயமான ஆசை.



"தெலுங்கு மொழி" வளர வேண்டும் என்று தெலுங்கனுக்கு ஆசை.

"கொங்கனி மொழி" வளர வேண்டும் என்று கோவாகாரனுக்கு ஆசை.

"பஞ்சாபி மொழி" வளர வேண்டும் என்று ஹரியானா, பஞ்சாப்காரனுக்கு ஆசை.

"கன்னட மொழி" வளர வேண்டும் என்று கன்னடனுக்கு ஆசை.

"ஹிந்தி மொழி" வளர வேண்டும் என்று பீஹார், உத்திர, மத்திய, இமாச்சல பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு ஆசை.

"மலையாள மொழி" வளர வேண்டும் என்று மலையாளிக்கு ஆசை.

"குஜராத்தி மொழி" வளர வேண்டும் என்று குஜராத்திக்காரனுக்கு ஆசை.

"அஸ்ஸாமி மொழி" வளர வேண்டும் என்று அஸ்ஸாமிக்காரனுக்கு ஆசை.

"ஒடியா மொழி" வளர வேண்டும் என்று ஒடிசாக்காரனுக்கு ஆசை.

"மிஸோ மொழி" வளர வேண்டும் என்று மிஸோராம்காரனுக்கு ஆசை.

"ஆங்கில மொழி" வளரட்டும் என்று அருணாச்சல பிரதேச, மேகாலய, நாகாலாண்ட், சிக்கிம் ஊர்களில் உள்ளவர்களுக்கு ஆசை.
தன் தாய் மொழியான அஸ்ஸாமி மொழியை இவர்கள் வளர்க்க ஆசைப்படவில்லை.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,
"ஹிந்தி மற்றும் ஆங்கிலம்" வளர்கிறது.
பிற மொழிகள் அதனதன் மாநிலங்களை விட்டு தாண்ட முடியவில்லை.

"ஹிந்தி மொழி" - இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் பரவி இருக்கிறது...
ஆங்கிலம் - உலகம் முழுவதும் பரவி இருக்கிறது...

ஹிந்தியும், ஆங்கிலமும் வளர்ந்தாலும்,
மற்ற மொழிகள், வளர்வது ஒரு புறம் இருக்க, அவர்கள் மாநிலத்திலேயே கூட அழிந்து வருகிறது.
உலகமெங்கும் ஆங்கிலமும், இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் ஹிந்தியும் பரவுவது ஏன்?
ஒரு மொழி பிறரால் கற்று கொள்ளப்பட வேண்டுமென்றால்,
1. அந்த மொழியில் பொதுவாக பிற மொழிகளில் உச்சரிக்கப்படும் சொற்கள் பயன்பாட்டில் இருக்க வேண்டும்இடம் இருக்க வேண்டும்
2. அந்த மொழி கட்டுப்பாடு அதிகம் இல்லாததாக, எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாத மக்களாக இருக்க வேண்டும்.


ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள்,
ஹிந்தியில் தமிழை விட அதிக எழுத்துக்கள் உண்டு.
இருந்தாலும்,
இந்த இரண்டு மொழிகளும் வளர்கிறது.. பேசப்படுகிறது.
இந்த 2 மொழிகளுமே,
பொதுவாக பிற மொழிகளில் பயன்பாட்டில் உள்ள "ஷ ஹ" போன்ற சொற்களை ஏற்கிறது..

ஹிந்தி (Hindi), இங்கிலீஷ் (English) என்று சொல்லும் போதே அதில் "ஷ ஹ" என்ற சொற்கள் வருகிறது...

Hospital என்ற ஆங்கில வார்த்தையை,  ஹாஸ்பிடல் (हॉस्पिटल) என்று அதே உச்சரிப்புடன் ஹிந்தியில் சொல்ல முடியும்.
தமிழ் இலக்கணத்தில் "ஷ ஹ" போன்ற எழுத்துக்கள் இல்லை.
ஆதலால், தமிழில் ஆச்பிடல் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

ஆச்பிடல்  என்று சொல்லும் போதே வெளி மாநிலத்தில் சொல்லப்படும் Hospital என்ற ஆங்கில சொற்களை, கூட  சரியாக உச்சரிக்க விடாமல் தடுக்கிறது தமிழ் இலக்கணம்.

"சமஸ்க்ரித" என்ற தேவபாஷை வார்த்தையை கூட "சமற்கிருத" என்று சரியாக உச்சரிக்க விடாமல் செய்கிறது தமிழ் இலக்கணம்.
தமிழ் இலக்கணத்தில் "ஷ ஹ" போன்ற எழுத்துக்கள் இல்லை.

தமிழ் பிறரால் பேசப்படாமல் இருப்பதற்கு, இது ஒரு முக்கிய காரணம்.

உண்மையான தமிழ் ஆர்வலர்கள், August என்று சொல்லப்பட்ட ரோமானிய காலண்டரை "ஆகஸ்ட்" என்று சொல்ல கூடாது என்பதற்காக "ஆகத்து" என்று சொல்வதை பார்த்து இருக்கலாம்.

ஆகஸ்ட் என்ற வார்த்தை தமிழ் மொழி அல்ல.
அது ஒருவனின் பெயராக இருந்தால் கூட, தமிழ் இலக்கணம் "ஆகஸ்ட் என்று சொல்ல கூடாது" என்று தடை விதிக்கிறது.

"கஸ்ட்" என்ற பெயர் கொண்ட ரோமானியன் தமிழ்நாடு வந்தால், அவனை "கத்து" என்று வேறு மாதிரி அழைத்தால், அவனால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? 

அது போல பல கட்டுப்பாடுகள் கொண்ட மொழிகள் யாவும், வளர முடியாமல் தேங்கி விடுகிறது...

சில மொழிகள் அற்புதமான பொக்கிஷங்களை தனக்குள் வைத்து இருந்தும் அழிந்து விடுகிறது...


சமஸ்கரித, ஹிந்தி மொழியில் ராவணன், ராமன் என்ற சொற்களை உச்சரிப்பு குலையாமல் சொல்ல முடியும்...
"Raavan, "Ram" என்று ஆங்கிலத்திலும் சொல்ல முடியும்.

தமிழ் இலக்கணப்படி "ர" என்ற எழுத்து முதலில் வர கூடாது என்று சொல்கிறது...
தமிழ் ஆர்வலர்கள் அதனால் "ர" என்று சொல் முதலில் வரும் வார்த்தைகளில் கூடவே "இ" என்ற சொல்லை சேர்த்து சொல்வார்கள்.
கம்பன் கூட ராமனை "இராமன்" என்று சொல்வது அதனால் தான்.
"ராவணன்" என்ற சொல்லை "இராவணன்" என்று தமிழ் இலக்கணம் சொல்ல சொல்கிறது.
இந்த கட்டுப்பாடுகள், வெறும் "இ" என்ற எழுத்துக்களை மட்டும் சேர்க்கவில்லை, சொற்களையே வேறு மாதிரியாக சொல்ல, கேட்க வைக்கிறது..

இது போன்ற

  • இலக்கண கட்டுப்பாடுகள், 
  • பிற மொழிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் "ஷ ஹ" போன்ற எழுத்துக்கள் இல்லாததாலும், 

     தமிழ் பிறரால் பேசப்படாமல் உள்ளது.

மேலும் இரண்டு குறைகள் நம் தமிழ் மொழியில் உண்டு...

பிற மொழிகளில் ஒவ்வொரு சொல்லுக்கும் நான்கு விதமான உச்சரிப்புகள் உண்டு.
தமிழில் இதற்கும் வழி இல்லை.

புதிதாக தமிழை கற்று கொள்ள வேண்டுமென்றால், அவன் படாதாபாடு பட வேண்டும்...

"அச்சு" என்று சொல்லும் போது "ச" என்ற எழுத்தை அழுத்தி உச்சரிக்க வேண்டும்,
"சங்கு" என்று சொல்லும் போது "ச" என்ற எழுத்தை மென்மையாக உச்சரிக்க வேண்டும்.

ஒரே எழுத்தை எந்த வார்த்தைக்கு மென்மையாக பயன்படுத்த வேண்டும்,  எந்த வார்த்தைக்கு அதே சொல்லை, அழுத்தமாக  பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற  வித்தியாசங்களை, தமிழ் நாட்டில் இருந்து கொண்டே, பேசி பேசி அனுபவத்தில் தான் கொண்டு வர முடியும்..
"வெறும் புத்தகம் மூலமாக தமிழை கற்கவே முடியாது" என்ற பெரும் குறையை தமிழ் கொண்டுள்ளது...

மற்றொரு குறை, இலக்கணம் மீற அனுமதிக்காத மொழி தமிழ்...

ஆங்கிலத்தில் "you, he, she, it, they, we, came" என்ற 7 வார்த்தைகள் தெரிந்தாலே,
"You came, he came, she came, it came, they came, we came" என்று சொன்னால் புரிந்து கொள்வார்கள்.
நன்றாக இங்கிலீஷ் பேசுகிறான் என்று கூட சொல்வார்கள்...



தமிழில் "நீ, அவன், அவள், அது, அவர்கள், நாம், வா" என்று மட்டும் சொல்லி பேச சொன்னால், தமிழ் இலக்கணம் இடம் தராது...
"நீ வா" என்று சொன்னால் ஒப்புக்கொள்ளும் தமிழ் இலக்கணம்,
"அவள் வா, அது வா, அவர்கள் வா, நாம் வா" என்று சொன்னால் ஒருவாறு பொருள் புரிந்தாலும், தமிழ் பேசுபவர்கள் "கொல்..." என்று சிரித்து கேலி செய்வார்கள்...
இந்த அவமானத்திற்கு பயந்தே பலர் தமிழை பேச தயங்குகிறார்கள்..

நாட்டின் பிரதமர் "பொங்கல் வாழ்த்துக்கள்" என்று தமிழில் சொல்ல முயற்சித்தாலும், "சரியாக உச்சரிக்கிறாரா?" என்று பார்க்கும் தமிழர்கள் அதிகம்..

ஆங்கில மொழியில் தவறாக பேசினால் கூட கேலி செய்யாமல் இருப்பார்கள்..

இலக்கணம் மாறி விட்டது என்று தெரிவதால், வெளி மாநிலக்காரன் தமிழில் பேச ஆசைப்பட்டு "அவள் வந்தான்" என்றோ, பெரியவர்களை "நீங்கள்" என்ற சொல்லுக்கு பதில் "நீ" என்று சொல்லி விட்டாலோ, கேலி சிரிப்பும், கோபமும் ஏற்பட்டு விடும்.

இந்த தர்ம சங்கடங்கள் பிற மொழி பேசுபவர்களுக்கு இருப்பதால், தமிழ் நாட்டிலேயே வாணிகம் செய்தாலும், "ஹிந்தியும், ஆங்கிலமும்" பேசியே வாழ நினைக்கிறார்கள்..

அவர்கள் பிள்ளைகள் இங்கேயே வளர்ந்தால், அவர்கள் பிள்ளைகள் தவறாக பேசினாலும் 'குழந்தை' என்று தமிழர்கள் நினைப்பதால், உற்சாகப்படுத்த, தமிழை அவர்கள் பிள்ளைகள் பேச ஆரம்பிக்கிறார்கள்..




ஹிந்தியிலும் சில கட்டுப்பாடுகள் இருப்பதாலேயே உலகம் வரை பரவ முடியாமல் உள்ளது..
உதாரணத்திற்கு,
பெரியவர்களை "ஆப் ஆயியே" (நீங்கள் வாருங்கள்) என்று மரியாதை சொல்லாக "ஆப்" என்ற சொல்லை பயன்படுத்துகிறது.
சிறியவர்களை "தும் ஆவோ" (நீ வா) என்று "தும்" என்ற சொல் கொண்டு அழைக்கிறது..

இந்த இலக்கணம் தமிழனுக்கு புரிவதால், தமிழனுக்கு ஹிந்தி கற்றுக்கொள்வதில் சிரமம் இருப்பதில்லை. ஹிந்தி கற்க முடிகிறது..

ஆங்கிலமோ "அந்த கவலையே வேண்டாம்" என்று சொல்லி பெரியவனோ, சிரியவனோ... "You come" என்று சொல்லி விடு என்று எளிதாக முடித்து விடுகிறது.

மிகவும் எளிதாகக்கப்பட்ட ஆங்கிலத்தை எவரும் படிக்கலாம்.
படிக்கும் போது "இலக்கண கட்டுப்பாடோ, பிறர் கேலி செய்வார்களோ" என்ற பயமோ தேவை இல்லை என்று தன்னை மாற்றி கொள்கிறது..

மனு (manu) என்ற அரசன் மூலமாக மனித குலம் தோன்றியது என்று நம் ஹிந்து சாஸ்திரம் சொல்கிறது.
"Man" என்ற சொல்லை ஆங்கில மொழியில் ஏற்று கொண்டது...

"Thee, thou" என்று பயன்படுத்தப்பட்ட ஆங்கிலம் இன்று அதை மாற்றி கொண்டு "you" என்று காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டது..

தமிழ் மொழி அழிந்து விட கூடாது என்பதால், "ஷ, ஹ, ஸ, ஜ, க்ஷ, ஸ்ரீ" போன்ற எழுத்துக்களை இப்பொழுது தமிழில் சேர்த்து உள்ளனர் என்று பார்க்கிறோம்.
இந்த எழுத்துக்கள், வந்த பிறகு,
"சாக்கிறதை" என்று தமிழன் சொல்லாமல், தமிழனையும் பிறரை போல "ஜாக்கிரதை" என்று சொல்ல உதவி செய்தது..


இராமன், இராவணன், இலக்குவன், இரத்தம், என்று சொல்லையே வேறு மாதிரி சொல்லாமல் "ராமன், ராவணன் என்று சொல்லலாம்" என்ற இலக்கணத்தில் சில சலுகைகள் தமிழ் மொழியில் கொண்டு வரப்பட்டது..

இந்த மாறுதல்கள் சில முன்னேறங்கள் கொண்டு வந்தாலும், "நான் வந்தாள்" என்று இலக்கணம் தவறி வெளி மாநிலத்தவன் பேசினால், கேலி செய்து சிரிக்கும் கூட்டமும்,
ஒரு புத்தகத்தை மட்டுமே வைத்து "அச்சு, சங்கு" என்று படித்தும், சரியான உச்சரிப்பை அறியமுடியாத சங்கடங்கள் தொடர்கிறது.
இந்த சங்கடங்கள் தமிழ் மொழியை வளர விடாமல் தடுக்கிறது....

இது போலவே, ஒவ்வொரு மொழிக்கும் சில தடைகள் அதை பிறர் படிக்க விடாமல் செய்கிறது..

இந்திய மொழிகளில் "ஆங்கிலம்" அளவுக்கு வளைந்து கொடுக்காவிட்டாலும், பெருமளவுக்கு வளைந்து கொடுப்பது "ஹிந்தி" மொழியாக உள்ளதால், அதை ஒரு புத்தகம் மூலமாகவே கூட படித்து, சரியாக உச்சரிக்கலாம் என்பதால்,
குஜராத்தி, கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒடியா, கொங்கனி போன்ற ஊர்களில் உள்ளவர்கள் கூட ஹிந்தி பேச முனைகிறார்கள்...

ஹிந்தி பெரும்பாலானவர்கள் பேசுவதால், பாரத தேசத்தில்
காஷ்மீரில் என்ன பேசுகிறார்கள்? 
பாகிஸ்தான்காரன் என்ன சொல்கிறான்? 
பீஹார்காரன் என்ன நினைக்கிறான்? 
என்று புரிந்து கொள்ள முடிகிறது..

அதற்கான தீர்வுகள் நடக்க, பேச்சுவார்த்தை பொதுவான ஹிந்தியில் நடக்கும் போது பல சங்கடங்களுக்கு தீர்வு கிடைக்கிறது...
பாகிஸ்தானில் கூட ஹிந்தி தானே பேசுகிறார்கள்..

குஜராத்தில் உருவான "சௌராஷ்டிர மொழி", இன்று பேச்சு அளவில் மட்டும் தான் உள்ளது.
முகம்மது கஜினி என்ற ஆப்கான் நாட்டில் இருந்து வந்த கொள்ளைக்காரன், குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலே தங்கத்தால் ஆனது என்று தெரிந்ததும், கொள்ளை அடிக்க 18 முறை தாக்கினான்.
17 முறை தோற்று ஹிந்து அரசனிடம் காலில் விழுந்து விழுந்து, மன்னிக்கப்பட்ட கொள்ளைக்காரன் இவன்.

இவன் படையெடுப்பால் சிதறி (civil disturbance), நாடோடிகள் ஆன "சௌராஷ்டிர சமூகம்" பாரத தேசம் முழுவதும் பிரிந்து ஹிந்து ராஜ்யங்களில் தஞ்சம் அடைந்தனர்.
தமிழ்நாட்டில் குறிப்பாக பாண்டிய தேசத்தில் அதிகம் இவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

தன் சுய உழைப்பாலும், நேர்மையாலும் வளரும் இந்த சமூகம், சௌராஷ்டிர மொழியின் எழுத்து வடிவத்தை இழந்து நிற்கிறார்கள் என்பது வேதனையே..

சௌராஷ்டிர மொழியில் ரகசியமான கல்வெட்டுகள், காவியங்கள் கிடைத்தாலும் படித்து புரிந்து சொல்பவர்கள் இல்லை...

அந்நிய படையெடுப்பின் காரணத்தால், சௌராஷ்டிர மொழி அதன் எழுத்துக்களை இழந்தது.

அந்நிய படையெடுப்பு இல்லாத இன்றைய காலத்தில்,
தானாகவே தன் தாய் மொழியை அழிவுக்கு இழுத்து கொண்டு செல்கின்றனர் போலி அரசியல்வாதிகள்.

தங்கள் மொழியை தன் மாநிலத்திலேயே தனியார் பள்ளிகள் என்ற ரூபத்தில், தமிழை ஒதுக்கி, அழித்து கொள்கின்றனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளை நடத்துவது அரசியல்வாதிகளும் அவர்கள் பினாமிகளுமே.

பெரும்பாலான தமிழ் குழந்தைகள், தமிழ்நாட்டிலேயே படித்தாலும்,
இந்த அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் பள்ளியில் தமிழை எடுத்து படிப்பதில்லை. 
தமிழ் கட்டாய பாடமும் இல்லை. ஆங்கிலமே முக்கியத்துவம் பெறுகிறது.

பிரெஞ்ச் படிக்க கூட ஆரம்பித்து விட்டார்கள்.
தனியார் பள்ளியில் தமிழ் கற்று கொள்வதில்லை.

இன்று தமிழ் பேசுகிறார்களே ஒழிய, தமிழை படிக்க தெரியாத நிலையில் உள்ளனர்.
தன் ஊரில் உள்ள தனியார் பள்ளியை கூட சரி செய்ய திறன் இல்லாத,
இறை பக்தி இல்லாத, போலி அரசியல்வாதிகள்,
"தமிழை படித்து புரிந்து கொள்ள முடியாமல் அழித்து விட்டால், கம்ப ராமாயணம், ஆழ்வார்கள் பாசுரம், நாயன்மார்கள் பதிகங்கள் அழிந்து விடும்" என்று நினைக்கிறார்கள்.

"போலிகளை சில காலம் பாரத மக்கள் ஏற்பது போல இருந்தாலும், மீண்டும் விழித்து கொண்டு போலிகளை அழித்து விடுவார்கள்" என்பதற்கு நம் பாரத சரித்திரமே சான்று...

புத்தர் அவதரித்த பின், அவர் கொள்கை அற்புதமாக உள்ளது என்று பாரத பூமியில் பலர் மொட்டை தலையுடன் "புத்தம் சரணம் கச்சாமி" என்று அலைய ஆரம்பித்து விட்டனர்...
"சமாதானம், அன்பு" என்று சொல்லி, சோம்பேறிகள் ஆகி, இஸ்லாமிய படையெடுப்புகள் நடந்த போது, புத்த மதத்தை ஏற்று இருந்த ஆப்கான், சிந்து தேச அரசர்கள் மரண அடி வாங்கினார்கள்.. இஸ்லாமிய தேசமாக ஆகி விட்டது இந்த தேசங்கள்..

சுதாரித்த பாரத மக்கள், அடியோடு புத்த மதத்தை எட்டி உதைத்தனர்.. அது சீன தேசத்தில் போய் விழுந்தது...
அன்பு, சமாதானம் சந்யாசிக்கு சொன்னது.. 
இதையே ராணுவத்தில் உள்ளவனும், அரசனும் ஏற்றால் தவறு.. ஆபத்தும் கூட...
ஹிந்து மதத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் "அவனவன் தர்மத்தில் இருந்து இறை உணர்வுடன் இருக்க வேண்டும்" என்று சொல்கிறார்.

நீ க்ஷத்ரியனாக இருந்தால், சந்நியாசி போல வாழாதே... ஒரு கன்னத்தில் எதிரி அடிப்பான் போல தெரிந்தால், அவன் அடிப்பதற்கு முன்பேயே அவன் இரு கன்னத்திலும் அறைந்து விடு என்று க்ஷத்ரியனை, நாட்டை காப்பவனை விழிப்புடன் இருக்க சொல்கிறார்.
ஞானிக்கு ஞான மார்க்கம் சொல்கிறார்.
செயலில் ஆர்வம் உள்ளவனுக்கு கர்ம யோகம் சொல்கிறார்..
பக்தனுக்கு பக்தி யோகம் சொல்கிறார்..
சந்யாசிக்கு சந்யாஸ யோகம் சொல்கிறார்..

"சுதந்திரமாக அவரவர் தர்மத்தில் இருந்து கொண்டே இறை உணர்வில் இருக்கலாம்" என்று காட்டிய ஸ்ரீ கிருஷ்ணரே "பரதெய்வம்" என்று பாரத மக்கள் உணர்ந்து, போலி மதங்களை, குறுகிய கோட்பாடுகள் உள்ள கொள்கைகளை உதறினார்கள்.

வெளி மாநிலத்திலும், வெளி நாட்டிலும் வேலை பார்க்கும் தமிழர்களுக்கு நிலைமை மோசம்.. பெரும்பாலான குழந்தைகளுக்கு தமிழ் எழுத்தே தெரியாது.
தமிழ் பேசுவது கூட அடுத்த தலைமுறையோடு அழிந்தே போய் விடும்.

தன்னுடைய தாய் மொழி காக்கப்பட வேண்டும், அது உலகமெங்கும் உள்ள பலரால் பேசப்பட்டு வளர வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்கிறோம்.
அதில் தவறு இல்லை.

ஒவ்வொரு மொழியிலும், அதில் எழுதப்பட்ட அற்புதமான இலக்கியங்கள், காவியங்கள், ரகசிய ஆராய்ச்சிகள், கல்வெட்டுகள், உள்ளது.

ஒரு மொழி, பலரால் படிக்கப்பட்டால் தான், அதில் உள்ள காவியங்கள், ஆராய்ச்சி கட்டுரைகள், அந்த மொழி பேசுபவர்களின் பண்பாடு, கலாச்சாரம் தெரிந்து கொள்ள முடியும்.

பிற மொழிகளை கற்றுக்கொண்டால், அந்த தேசத்தில் உள்ளவர்களுடன் பேசி வணிகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

உலகில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கற்று கொள்கிறார்கள் பேசுகிறார்கள்.

இந்தியாவில் ஹிந்தியை பெரும்பாலான மக்கள் கற்று கொள்கிறார்கள், பேசுகிறார்கள்.

சீனா, ரஷ்ய போன்ற தேசங்களில் வர்த்தக கால் பதிக்க கோடிக்கணக்கான வாய்ப்புகள் இருக்கிறது.

வாய்ப்புகள் இருந்தும் சீன மொழியை, ரஷ்ய மொழியை ஆர்வத்துடன் கற்று கொள்பவர்கள் மிக குறைவாகவே உள்ளனர்.

மிகவும் கடினமான மொழியாக, ஆயிரம் வடிவங்கள் கொண்ட எழுத்துக்கள் உள்ள சீனா, ரஷ்ய மொழிகள் அவர்கள் தேசத்தில் பேசப்பட்டாலும், வணிக வாய்ப்புகள் இருந்தாலும், ஆங்கிலம் போல அனைவராலும் பேசப்படவில்லை, கற்றுக்கொள்ளப்படவில்லை.

"தமிழை பிற மொழி பேசுபவர்கள் கற்று கொண்டால், தமிழில் உள்ள அற்புதமான கம்ப ராமாயணத்தில் உள்ள கவித்துவத்தின் அழகை, ஆழ்வார்கள் அருளிய 4000 திவ்ய பிரபந்தங்களை, நாயன்மார்கள் பாடிய பதிகங்களை, பிற மொழி பேசுபவர்களும் அறிந்து கொண்டால், அவர்களும் ரசிப்பார்களே" என்று உண்மையான தமிழன் நினைக்கிறான்.

பாரத தேசம் முழுவதும் பொது மொழியாக பேசப்பட்ட "சமஸ்கரித மொழி" இன்று ஒரு சில இடங்களில் பேசப்பட்டாலும், அர்த்தங்களை சரியாக புரிந்து கொள்ளும் அறிஞர்கள் 120 கோடி மக்களில் எண்ணி விடும் அளவிற்கே உள்ளனர்.

இதனால், சமஸ்கரித மொழியில் இருந்த பல அரிய விஷயங்கள் அதன் உண்மையான அர்த்தங்கள் என்ன என்று தெரியாமல் போய், அழிந்து விடும் நிலைக்கு ஆகிவிட்டது... இது பாரத மக்களுக்கே இழப்பு.


சமஸ்கரித மொழியில் எத்தனை பொக்கிஷங்களை இழந்து விட்டோம் நாம்!! ....

  1. ஆயுர்வேதம் (medicine),
  2. ஸ்தாபத்யம் (engineering),
  3. காந்தர்வ வேதம் (music),
  4. தனுர் வேதம்(weaponry)
  5. 6 தர்ம சாஸ்திரங்கள்,
  6. சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)'
  7. கல்பம் (expert in knowing  procedures for Vedic rituals and rituals associated with major life events such as birth, wedding and death in family, as well as discussing the personal conduct and proper duties of an individual in different stages of his life),
  8. வியாகரணம் (expert in grammers and linguistic analysis),
  9. நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words),
  10. சந்தஸ் (expert in poetic metres),
  11. ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy),
  12. யோகம் (expert in meditation, contemplation and liberation),
  13. ஸாங்க்யம் (Expert in consciousness and matter),
  14. நியாயம் (Expert in exploring sources of knowledge),
  15. சௌகதம்,
  16. மீமாம்ஸா (expert in correct conduct, both ethical and liturgical),
  17. பாஞ்சராத்ரம் (expert in Agama rules and guiding five observances every day to lord narayana),
  18. 4 வேதங்கள்,
  19. இதிஹாசங்கள்,
  20. புராணங்கள், 
    என்று எதுவுமே தெரியாமல் போய் விட்டது...

ஸ்தாபத்யம் (engineering) என்ற சாஸ்திரத்தை கற்ற ஸ்தபதிகள் என்ன என்ன அற்புதங்கள் செய்தார்களோ... எத்தனை கட்டிடங்கள் இடிக்கப்பட்டதோ 1000 வருட அந்நிய ஆதிக்கத்தில்..

சமஸ்கரித மொழி அனைவருக்கும் பொதுவாக இருந்த மொழி.
ஸ்தாபத்யம் கற்ற இந்த ஸ்தபதிகள் கட்டிய ஆயிரக்கணக்கான கோவில்கள், இன்று சமஸ்கரித மொழியில் இருந்த ஆச்சர்யங்களை நமக்கு காட்டுகிறது..

ஸ்தாபத்யம் கற்ற ஒரு engineer கட்டிய கல்லணை இன்று வரை சாட்சி சொல்கிறது...

சம்ஸ்க்ரிதம் என்ற மொழி தெரிந்து இருந்தவரை,
இந்தியாவை நோக்கி பிச்சை எடுக்கவும், கொள்ளை அடிக்கவும், வர்த்தகம் செய்யவும், வெளிநாட்டில் இருந்து,பாரதம் நோக்கி வந்தார்கள் என்று சரித்திரம் காட்டுகிறது.
அரேபியன் உள்ளே வந்தான்,
சீனா காரன் உள்ளே வந்தான்,
பிரெஞ்ச்காரன் உள்ளே வந்தான்,
ஆங்கிலேயன் உள்ளே வந்தான்,
டட்ச்காரன் உள்ளே வந்தான்,
போர்ச்சுகல்காரன் உள்ளே வந்தான்.
சமஸ்கரித மொழி பேசிய வரை, இந்தியக்காரன் வெளி நாட்டை நோக்கி போகவில்லை. பிச்சை எடுக்கவில்லை.



சம்ஸ்க்ரித மொழியை இழந்தோம், 
இன்று பாரத பூமியே வெளிநாட்டுக்கு சென்று பிச்சை கேட்டு வாணிகம் செய்யும் நிலையில் உள்ளது...

நம் சொத்தை தோண்டி எடுக்க துப்பு இல்லாத நமக்கு, அறிவு மட்டும் இன்னும் இருப்பதால், வெளிநாட்டில் சென்று வாணிக பிச்சை செய்கிறோம்.

சமஸ்கரித மொழியில் வேதம் மட்டும் இல்லை.. பிற படிப்புகளும் இருந்தது..

கோவில் கட்டிய ஸ்தபதி, ஐயர் இல்லையே.
போலி அரசியல்வாதிகள் களைய படவேண்டும்.

நம் பாரத தேச மொழிகளை, அதில் எழுதப்பட்ட இலக்கியங்கள், பக்தி காவியங்கள், பாடல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் படித்தாலே, பாரத நாடு மீண்டும் சுய சார்புள்ள நாடாக ஆக முடியும்.

வெளிநாட்டவர்கள் நம் நாட்டை கைப்பற்ற ஏன் அலைந்தார்கள்? என்று யோசித்தாலேயே நமக்கு நம் பெருமை புரிய ஆரம்பிக்கும்..

இந்தியாவுக்குள் நுழையும் முன்னர் தேனும், ரொட்டியும்,மாமிசம் மட்டுமே உணவு என்று அலைந்த வெளிநாட்டினர், இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர் தானே பல கண்டுபிடிப்புகள் செய்தார்கள்!!

1400AD சமயத்தில் உள்ளே நுழைந்த போர்ச்சுகல் கிறிஸ்தவர்கள்.. இதற்கு முன் உலகத்திற்கு ப்ரயோஜனமாக ஏதாவது கண்டுபிடித்தார்களா?...

"பிற மொழி பேசுபவர்களும், தமிழ் மொழி தெரிந்து இருந்தால்,
அகத்தியரின் சுவடிகளை ஆராய்ச்சி செய்து சித்த மருத்துவம், நாடி ஜோதிடம் போன்றவை உலகம் எங்கும் பரவுமே, 
நம் அகத்திய முனியின் பெருமை உலகம் காணுமே" என்று உண்மையான தமிழன் நினைக்கிறான்.

அவனவன் தாய் மொழியை எங்கும் நிரப்ப, எதிலும் பரப்ப நினைக்கிறான்.
இதில் தவறு இல்லை.

மொழி வளர்வதால், மொழி மட்டும் காக்கப்படுவதில்லை, அதில் உள்ள அற்புதமான தெய்வ காவியங்கள், இலக்கியங்கள், ஆராய்ச்சிகள் என்று அனைத்தும் மக்களுக்கு மன தூய்மைக்கும், புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தி கொள்வதற்கும் பயன் தருகிறது.

ஒவ்வொரு மொழியிலும் அற்புதமான காவியங்கள், ரகசிய சுவடிகள், ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கி உள்ளது..
இவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அந்த மொழி தெரிந்தவர்கள் உலகில் இருக்க வேண்டும்.

தமிழன் தமிழை வளர்க்க ஆசைப்படுகிறான்..

"தமிழ் மொழி தேய்ந்து போகிறது" என்று பார்க்கிறானே தவிர, அவன் ஊரிலேயே பாசுரங்கள், பதிகங்கள் வளர்க்க ஆள் இல்லை.

போலி தமிழனுக்கு பதிகங்கள் கண்ணுக்கு தெரியவில்லை.
தமிழன் என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி, தமிழை தமிழ் நாட்டிலேயே அழித்து கொண்டு இருக்கிறான்.

தெலுங்குக்காரன் தெலுங்கை வளர்க்க ஆசைப்படுகிறான்..
தெய்வ பக்தியுடன் இருப்பதால் பத்ராசல ராமதாசர், தியாகராஜர் கீர்த்தனைகள், அன்னமாச்சாரியா கீர்த்தனைகள் போன்றவற்றை மதிக்கிறான்..அவன் மொழி அவன் ஊரில் வாழ்கிறது.. 


இதே போல
குஜராத்காரன் குஜராத்தி மொழியை அவனிடத்தில் உள்ள மகான்களின் கீர்த்தனைகளை மதித்து காக்கிறான்.

கன்னடகாரன் கன்னட மொழியை புரந்தர தாசர், கனக தாசர் போன்றவர்கள் கொடுத்த கீர்த்தனைகளை மதிப்பதால், கன்னட மொழியை காக்கிறான்.

இப்படி அவரவர்கள் தங்கள் தாய் மொழியை காப்பாற்றி வந்தாலும், இந்தியாவில் ஹிந்தி வளர்வது போல வளர்க்க முடியவில்லை.
உலக அளவில் இங்கிலீஷ் வளர்வது போல, வளர்க்க முடியவில்லை.

உலகமெங்கும் ஆங்கிலமும், 
இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் ஹிந்தியும் 
பரவுவதற்கு காரணம்...
1. இந்த மொழிகளில் பொதுவாக பிற மொழிகளில் உச்சரிக்கப்படும் சொற்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
2. இந்த மொழிகளில் கட்டுப்பாடு அதிகம் இல்லை.  தவறாக பேசினாலும் கேலி செய்வதில்லை. 

இந்த சீர்திருத்தங்களை கொண்டு வந்தால், தமிழ் போன்ற மொழிகளும் பிறரால் கற்று கொள்ளப்படும்.

இந்த சீர்திருத்தங்களை கொண்டு வரும் வரை, 
அவரவர் மாநிலத்தில் உள்ள தாய் மொழியை, தனியார் பள்ளியிலும் கட்டாய பாடமாக சொல்லி தர வேண்டும். 

போலி அரசியல் வாதிகள், 
"ஹிந்து தெய்வங்களின் மேல் பக்தி, தெய்வ நம்பிக்கை ஏற்பட்டு விடுமே" என்பதால் பதிகங்களை, பாசுரங்களை ஒதுக்க தமிழை தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் சொல்லி தருவதில்லை. 

போலி தமிழர்கள் ஒடுக்க பட  வேண்டும்.


Friday 26 July 2019

அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்காமல் - நிரந்தரமாக ஒரு மண்டபம் ஏற்பாடு செய்து பூஜை செய்ய ஆரம்பிக்கலாம்...

ப்ரம்மா யாகத்தை "விஷ்ணுவுக்கு ஒரு ஆராதனையாக" செய்ததால், அதன் பலனாக, அக்னி குண்டத்தில் இருந்து, அதி ஆச்சர்யமாக "வரதராஜ பெருமாள்" தாருமூர்த்தியாக ஆவிர்பவித்தார்.
ஸ்ரீ காஞ்சிபுர மஹாத்மியத்தில், 'காஞ்சிபுரம் வரதர் கோவில் மூலவர் தாருமூர்த்தி' (மரத்தால் ஆன மூர்த்தி) என்று தெளிவாக கூறியுள்ளது.


ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அவர்களும், "ஆதி அத்திகிரி வரதர் மூலவர், காப்பிடு திருமேனி" என்று தனது கிரந்தத்தில் கூறியுள்ளார்.

"காப்பிடு திருமேனி" என்றால், "தைலம் சாற்றப்பட்ட மர திருமேனி" என்று அர்த்தம்.
கஜேந்திரன் என்ற யானை (ஹஸ்தி) தன் உடலை விட்டு வைகுண்டம் செல்லும் போது, தன் உடம்பை விட்டு விட்டு சென்றார்.
அதுவே காலத்தில் சிறு மலையாக ஆனது.
பிரம்மாவுக்காக யாகத்தில் இருந்து சுயமாக ஆவிர்பவித் வரதராஜ பெருமாள், இந்த ஹஸ்தி கிரியில் தன்னை பிரதிஷ்டை செய்யுமாறு ப்ரம்மாவிடம் சொன்னார்.

எம்பெருமான் வரதராஜ பெருமாள் காஞ்சியிலேயே தங்கி விட்டார்.
வரதராஜ பெருமாளுக்கு அன்று முதல் உத்ஸவத்தை ப்ரம்மாவே தொடங்கி வைத்தார்.
18 லட்ச வருடங்கள் (சத்ய யுகத்தில்) முன் நடந்த சரித்திரம்

தமிழ்நாடு 1311ADல் ஆரம்பித்து 1486AD வரை இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் சிக்கியது.

1311ADல் கில்ஜி படையை தலைமை தாங்கிய "மாலிக் காபூர்" மதுரையை தாக்கினான். 
"மீனாட்சி கோவிலை தாக்க போகிறான்" என்றவுடன் மூலவராக உள்ள சுந்தரேஸ்வரரை சுவர் எழுப்பி மறைத்து, வேறு ஒரு சிவ லிங்கத்தை வைத்தனர்.

ஒரு லட்சம் போர் வீரர்களுடன் மீனாட்சி கோவிலில் செருப்பு காலுடன் நுழைந்து, நேராக மூலவர் இருக்கும் இடம் சென்று அங்கு இருந்த சிவ லிங்கத்தை ஈட்டிகளால் குத்தி அடியோடு சாய்த்து விட்டனர். 

மதுரை மக்கள் நிலையை நினைத்து பார்க்க முடியாத காலம் அது. பாண்டிய அரசாட்சி முடிவுக்கு வந்த காலம். 
இன்றும் அவன் "குத்தி சாய்த்த அந்த சிவ லிங்கம்" கோவிலில் வைக்கப்பட்டு கதை சொல்கிறது.
அதை தொடர்ந்து ஸ்ரீரங்கம் சென்று, அங்கு இருந்த 10000 வைஷ்னவர்களை தலை சீவி, ஸ்ரீ ரங்கம் ரத்த காடானது. 



1378AD வரை பாண்டிய தேசம் முழுவதும் "கில்ஜி" (Khilji) ஆக்கிரமிப்பில் சிக்கியது. 

அதை தொடர்ந்து, 

"முகமது பின் துக்ளக்" ஆட்சி வரை இஸ்லாமிய ஆக்ரமிப்பு தமிழகத்தில் தொடர்ந்தது.
விஜயநகர பேரரசு வீறு கொண்டு எழுந்த சமயம் அது. 

"கம்பண்ணா" என்ற விஜயநகர இளவரசன் கர்நாடக தேசத்தில் இருந்து புறப்பட்டு, இஸ்லாமிய ஆட்சியை 1378ADல் முடிவுக்கு கொண்டு வந்தார்.

மீண்டும் மதுரை மீனாட்சி கோவிலிலும், ஸ்ரீ ரங்க கோவிலிலும் தீபம் எரிந்தது. 
சுவற்றுக்கு பின் இருந்த "சிவ பெருமான்" மீண்டும் வெளி வந்தார். 

70 ஆண்டுகள் ஸ்ரீ ரங்கநாதர் மதுரை, கேரளா, மேல்கோட்டை, திருப்பதி போன்ற ஊர்களில் இருந்து விட்டு, மீண்டும் ஸ்ரீ ரங்கம் வந்து சேர்ந்தார். 

இஸ்லாமிய படையெடுப்பின் காலத்தில், உற்சவர் ஸ்ரீ ரங்கநாதர் இல்லாத சமயத்தில், மாற்றாக வேறு ஒரு மூர்த்தியை ஆராதனை செய்து வந்தனர். 
இதற்கு உதாரணமாக, 


இன்றும், ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சன்னதியில், ஆதி ரங்கநாயகி தாயாரும், தாயார் இல்லாது இருந்த அந்த சமயத்தில் மாற்று தாயாராக ஆராதனத்தில் இருந்த தாயார் என்று "இரண்டு தாயார்கள்" இன்றும் ஸ்ரீ ரங்கத்தில் ஆராதனத்தில் உள்ளனர்.

ஸ்ரீ ரங்கம், நம்பெருமாள் தான் ஆதியில் இருந்தவர். 

அவர் இல்லாத சமயத்தில் மாற்றாக வழிபட்ட பெருமாளும் இன்றும் இருக்கிறார். 
"ஆதி பெருமாள்" வந்துவிட்டார் என்றவுடன், இரண்டு மூர்த்திகளுக்கும் ஆராதனைகள் செய்யப்பட்டன. 
புதிதாக பெருமாள் உள்ளாரே என்று, பழைய ஆதி பெருமாளை பூட்டி வைக்கவில்லை. 
பழைய மூலவர் மீண்டும் கிடைத்தால், அந்த மூர்த்தியையும் தரிசனத்திற்கு வைக்கும் பழக்கம் உள்ளது. 

இன்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சன்னதியில், "இரு தாயாரும்" தரிசனம் தருகிறார்கள்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் பாண்டிய தேசம் சிக்கியது போல, 

1404ADல் காஞ்சி நகரம் துக்ளக் ஆட்சிக்கு பின் டெல்லியை தலைமையாக ஆட்சி செய்த "சையத்" ஆட்சியாலும், ஆந்திர தேசத்தை ஆக்ரமித்து இருந்த "பாமினி" சுல்தான்களாலும் பெரும் ஆபத்தில் சிக்கியது

1291AD முதல் 1403AD வரை காஞ்சி வரதர் கோவிலில், கல்வெட்டுகள் கிடைக்கிறது. 


1404AD முதல் 1486AD வரை காஞ்சிபுரம் வரதர் கோவிலில் கல்வெட்டு குறிப்புகள் இல்லை. 
இந்த 84 வருட காலங்கள் இக்கோவிலின் இருண்ட காலம் என்று கருதப்படுகிறது.

அதற்கு பிறகு,

மீண்டும் 1486ADல் ஆரம்பித்து கல்வெட்டுகள் கிடைக்கிறது.

1404AD சமயத்தில், இஸ்லாமிய படையெடுப்பால், நமது கோவிலில் மூலவராக, ஆராதனத்தில் இருந்த "ஆதி அத்திகிரி வரதர்", பாதுகாப்புக்காக திருக்கோவில் வளாகத்தில் உள்ள திரு அனந்த புஷ்கரணி குளத்தில் மறைக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தார்.  
வரதனுக்காக, எத்தனை லட்ச பாரத ஜனங்கள் அன்று உயிர் தியாகம் செய்தார்களோ...!! 



1487AD சமயத்தில், படையெடுப்பு காலம் முடியும் சமயத்தில், உடையார் பாளையம் ஜமீன் குடும்பத்தினர் முன் வந்து,
"அத்தி மரத்தால் ஆன மூலவர் 83 வருடங்களாக நீரில் மூழ்கி இருப்பதால், வலுவாக இருக்க மாட்டார்" என்ற ஐயத்தின் காரணமாகவோ,  இல்லை "மீண்டும் படையெடுப்பு வந்தால் என்ன செய்வது?" என்ற பயத்தாலோ, 
மூலவரை குளத்தில் இருந்து வெளியே எடுக்காமல், 
காஞ்சிபுரம் அருகில் உள்ள பழைய சீவரம் கோவிலில் மூலவராக இருந்த பெருமாளை, காஞ்சி கோவிலில் மூலவராக பிரதிஷ்டை 1487ல் செய்யப்பட்டார்.
உண்மையில் நமது ஆதி அத்திகிரி வரதர் (மூலவர்)  பல்லாண்டுகள் (83 வருடங்கள் 1404AD-1487AD) நீருக்குள் இருந்தாலும் அவர் திருமேனியில் எந்த வித சேதமும் ஏற்படவில்லை.

அப்படியே "மூல மூர்த்திக்கு பின்னம் ஏற்பட்டு இருந்தாலும், அதை சீர் செய்து ஆராதனை செய்ய வேண்டும்" என்று பஞ்சாத்ர ஆகம விதி சொல்கிறது.
ஆகம விதி தெரிந்தும், ஆதி அத்திகிரி வரதரை (மூலவரை) நிரந்தரமாக வெளியில் வைத்து ஆராதனை செய்ய 1487ADல் பயந்தார்கள் என்பது ஏற்புடையது.




இதற்கு ஏற்பாடாக 40 வருடத்திற்கு ஒரு முறை 48 நாட்கள் மட்டும் ஆதி வரதரை குளத்தில் இருந்து எடுத்து வெறும் தரிசனமாவது செய்வோம் என்று முடிவெடுத்து இருப்பார்கள் என்பதே உண்மை.

1947AD வரை இந்திய தேசம் இஸ்லாமிய ஆட்சியாலும், கடைசி 200 வருடங்கள் கிறிஸ்தவ ஆட்சியாலும் ஆக்ரமிப்பு செய்யப்பட்டு இருந்ததை மறுக்க முடியாது. 

மீண்டும் ஒருவாறு காஞ்சி வரதராஜன் கோவிலில், உத்சவங்கள் நடக்க, உபகாரம் செய்த உடையார் பாளையம் ஜமீன் குடும்பத்துக்கு "மண்டகப்படி" உத்சவம் பிரத்யேகமாக, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரட்டாதி நக்ஷத்திரம் அன்று நடைபெற்று வருகிறது. 



இதற்கான கல்வெட்டு, 
திரு பெருந்தேவி தாயார் சன்னதியில் வடக்கு பகுதியில் உள்ள முற்றத்தில் இருக்கும் குத்துக்கல்லில் தெலுங்கு மொழியில் இருக்கும் கல்வெட்டு கூறுகின்றது.

"சையத்" ஆட்சிக்கு பின், "லோதி" ஆட்சி தொடர்ந்தது. 
லோதிக்கு பின், "முகலாய" ஆட்சி தொடர்ந்தது. 
முகலாய ஆட்சியில் "பாபர், ஹுமாயுன், அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான்,  ஒளரங்கசீப்" போன்றவர்கள் வரை, இந்திய நாடு கடும் சேதத்தை சந்தித்தது. 

முகலாயர்களின் வீழ்ச்சியும், கிறிஸ்தவர்களின் எழுச்சியும் ஆரம்பித்த சமயத்தில், 

அதாவது 1780ADல் (சாலிவாஹன சகாப்தம் 1703) வருடம், 1404ல் இருந்து, சுமார் 376 வருடங்கள் திருக்குளத்தில் வைக்கப்பட்டு இருந்த "ஆதி அத்தி வரதரை" ஒரு முறையாவது தரிசனம் செய்வோம் என்று தீர்மானித்தது, 1780ADல் திருக்குளத்தில் இருந்து வெளியில் எடுத்து, 

வரதனை காண்போமா !! என்று தவித்து கொண்டிருந்த  வைணவ பக்தர்களுக்கு "ஆதி அத்திகிரி மூலவர் தரிசன" வைபவம் தொடங்கப்பட்டது.

அப்பொழுதும் முகலாயர்களின் ஆட்சி, கிறிஸ்தவர்களின் அரசியல் சூழ்ச்சி நடந்து கொண்டிருந்ததால், 

48 நாட்கள் மட்டும் ரகசியமாக வெளியில் எடுத்து, "ராமானுஜர் பார்த்த, ப்ரம்ம தேவனுக்கு காட்சி கொடுத்த வரதனை" தரிசித்து, மனத்துயருடன் மீண்டும் திருக்குளத்தில் வைத்து விட்டனர்.

'1780ADல் (சாலிவாஹன சகாப்தம் 1703) வருடம், "ஆதி அத்திகிரி மூலவர் தரிசன" வைபவம் தொடங்கப்பட்டது' என்ற கல்வெட்டு, 
பேரருளாளன் துவஸ்தம்பத்தின் கீழ் பக்கம் 'தெலுங்கு எழுத்தில்' உள்ள கல்வெட்டு மூலம் நமக்கு தெரிகிறது.      
1947ADல் இந்திய சுதந்திரம் பெற்று விட்டது. 



இருந்தாலும், 
1780AD முதல், 40 வருடத்திற்கு ஒரு முறை 48 நாட்கள் மட்டும் ரகசியமாக வைணவர்கள் தரிசனம் செய்து வந்த "ஆதி அத்தி வரதரை", சம்ப்ரதாயம் என்று நினைத்து பயம் நீங்கிய சுதந்திர இந்தியாவில், 
1979ADல் திருகுளத்தில் இருந்து வெளியே எடுத்தும், 48 நாட்கள் தாங்கள் தரிசித்து விட்டு, மீண்டும் குளத்தில் வைத்து விட்டனர்.

2019ADல் ஜூலை மாதம், " ஆதி அத்தி வரதர் மீண்டும் திருகுளத்தை விட்டு வெளியே வருகிறார்" என்ற செய்தி உலகம் எங்கும் பரவியது..  

அனந்த சரஸ்வதி என்ற புஷ்கரணியில் பாதுகாத்து வைத்து இருந்த, ஆதி அத்தி வரதரை தற்போது ஜூலை 1  2019ல் வெளியில் கொண்டு வந்து போது, ஆச்சர்யங்கள் நிகழ்ந்தது.
ஒவ்வொரு நாளும் 2 லட்சம் பக்தர்கள் வந்து, "மூலவர் தரிசன" வைபவத்தில் தன் சிரமங்களை கூட பார்க்காமல், அத்தி வரதரை ஒரு முறையாவது கண்ணால் பார்த்து விட வேண்டும் என்று தரிசித்தனர்.

ஒவ்வொரு 40 வருடம் கழித்தும், வெறும் 48 நாட்களே ஆதி வரதர் தரிசனம் தருவார் என்ற ஏற்பாடு, முதன் முதலாக 1780AD (சாலிவாஹன சகாப்தம் 1703) வருடம் ஆரம்பித்தது.

பேரருளாளன் துவஜஸ்தம்பத்தின் கீழ் பக்கம் தெலுங்கு எழுத்தில்  இருக்கும் கல்வெட்டு மூலம் இந்த உண்மை நமக்கு தெரிகிறது.

"அன்று வரதனுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் தான், மீண்டும் பிறவி எடுத்து வந்தார்களோ!!" என்று தோறும் அளவுக்கு 2019ல் சிரமங்களை பார்க்காமல், லட்சக்கணக்கான பக்த ஜனங்கள் காஞ்சியை சூழ்ந்தனர்.. 
"வரதா.... இனி உன்னை காண்பேனா!! என்று எத்தனை இதயங்கள் அன்று கதறியதோ !! 


"2019 ஜூலை மாதம் அத்தி வரதர் காட்சி கொடுக்க வருகிறார்" என்றதும், "48 நாட்கள் தான் தரிசிக்க முடியும்" என்றவுடன், 

தினமும் 2 லட்சம் பக்தர்கள் "வரதா... கோவிந்தா.. கோவிந்தா.." என்று தரிசனம் செய்ததை பார்த்தால் புரிந்து கொள்ளலாம். 

தன் உடல் கஷ்டங்களை பொருட்படுத்தாமல், ஆதி வரதனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று வந்தார்களே..  

இவர்கள் தாகத்தை தீர்க்கும் படியாக, ஜூன் 2019 மாதம் வரை தாங்க முடியாத வெயிலை பார்த்த தமிழகம் மழையில் நனைந்தது. 

வரதனின் கருணையை நேரில் கண்டது. 
நாத்தீகம் ஒழிந்தது. 
லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வரதனை கண்டு தாகம் தீர்ந்து போனது.
"ஆழ்வார்கள், பெரிய நம்பிகள், ஆளவந்தார், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ ராமானுஜர், ஸ்வாமி தேசிகர், மணவாள மாமுனிகள்" முதலான ஆச்சார்யர்கள், மங்களாசாசனம் செய்த பெருமாளே "ஆதி அத்திகிரி வரதர்".

நம் கூரத்தாழ்வாருக்கு "கண் கொடுத்த பெருமாளை" நாம், சுதந்திர இந்தியாவில் எப்பொழுதும் நம் கண்களால் தரிசனம் செய்து கொண்டே இருப்பது தானே, நாம் கண் பெற்ற பயன்....

"அத்திவரதர்" நம்மோடு கூடவே எப்போதும் இருக்க வேண்டும். 

"ஆதி அத்தி வரதர்" நிரந்தரமாக வந்து விட்டார் என்றால், உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருடம் முழுவதும் வருகை புரிவார்கள்.

அதனால், நம் காஞ்சிபுரம் மற்றும் வரதர் கோவில் மேலும் மேலும் புகழ் பெறும்.

'மழையே இல்லாமல், வெயிலில் தவித்த நமக்கு' கருணை கடலான அத்தி வரதர் "மழை மேகங்களை திரட்டி தமிழகத்தை குளிர்வித்து விட்டார்".

நமது நாடும், நமது திருக்கோவிலும், பல பெருமைகள், பல பெருமைகள் அடைய,

ஆதி அத்திகிரி வரதர் - மூலவர் தரிசன வைபவம் நிரந்தரமாக எப்பொழுதும் நடக்க வேண்டும்.

இதுவே தினமும் ஓடோடி வரதனை பார்க்க வந்த, கோடிக்கணக்கான பாரத மக்களின் ஆசை.

காஞ்சியில் 2 மூல மூர்த்திகளாக நமக்கு பெருமாள் கிடைத்தார்கள் என்று நினைக்க வேண்டும்..

அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்காமல், அடுத்த 40 வருடங்கள் பூஜைகள் இல்லாமல் செய்வதற்கு பதில், இவருக்கும் ஒரு மண்டபம் ஏற்பாடு செய்து பூஜைகள் செய்ய ஆரம்பிக்கலாம்.

ப்ரம்மா முதல் ராமானுஜர் வரை தரிசித்த அத்தி வரதருக்கு, தினமும் பூஜை நடக்க செய்யலாம்.

கலவர காலத்தில் ஏற்பட்ட இந்த ஏற்பாடு தொடர வேண்டிய அவசியம் உண்டா?? என்பது ஆஸ்தீகர்களின் கேள்வியாக உள்ளது.

இந்த வழக்கப்படி ஜூலை 2019 அத்தி வரதர் புஸ்கரணி தீர்த்தத்தில் இருந்து வெளி வந்து ஒரு மண்டலம் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். 
இந்திய குடியரசு தலைவர் வரை தரிசனம் செய்ய ஆசை கொண்டு இருந்தனர்.


"ப்ரம்ம தேவன் தனக்கு கொடுத்த கடமையை செய்ய வேண்டும்" என்று காஞ்சி வரதன் சொல்லி விட்டதால், ப்ரம்மா ப்ரம்மலோகத்துக்கு கிளம்பி ஆக வேண்டும்.

பெருமாளுக்கு உத்ஸவம், வைதீக முறைப்படியான நித்ய பூஜைகளை வகுத்து கொடுத்து, வரதராஜன் வீற்றிருக்கும் அந்த மலையை சுற்றி அக்ரஹாரங்கள் அமைத்து,
பூரணமாக வேதம் கற்ற வேதியர்களையும் அங்கு வசிக்கும் படியாக செய்து, வைதீக பூஜைகள், உத்சவங்கள் ச்ரத்தையோடு தினமும் செய்யுமாறு தானே சொல்லி, அனைத்து ஏற்பாடும் செய்தார் ப்ரம்மா.

காஞ்சி வரதனுக்கும் சேவை செய்யும் ஆசை உள்ள அனைத்து மக்களையும் காஞ்சிபுரத்தில் குடி ஏற்றினார்.





Wednesday 24 July 2019

ஏசு கிறிஸ்து யார்? ஜோசப் யார்? Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...

ஏசு ஜோசப் யார்?
பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம்.
இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...


கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் தான், இவர்கள் என்று புரியும்..

மகாபாரதம் 5000 வருடம் முன் 'துவாபர' யுகத்தில் நடந்தது.
வியாசர், மகாபாரதம் நடக்கும் போதே எழுதினார்.
சம காலத்தில் இருந்தார்.
மகாபாரதம் எழுதி முடித்த பின், வியாசர் கிருஷ்ணரை பற்றி மட்டுமே  பாகவதம் என்ற புண்ணிய கிரந்தத்தையும் இயற்றினார்.
இதை அர்ஜுனன் பேரன் பரிக்ஷித் 7 நாட்கள் தொடர்ந்து கேட்டார்.

ராமாயணம் சுமார் 12 லட்ச வருடங்கள் முன் த்ரேதா யுகத்தில் நடந்தது.
தமிழ்நாட்டில் திருச்சி அருகில், அன்பில் என்ற ஊரில், ப்ருகு ரிஷியே வேடுவ ஜாதியில், ருக்சன் என்ற வேடுவனாக பிறந்து, ராம நாமத்தை ஜபித்து, வால்மீகி ரிஷியாகி, நாரதர், ப்ரம்மா, சரஸ்வதி அனுகிரஹத்துடன், ராமர் அவதாரம் செய்த காலத்திலேயே ராமாயணம் எழுதி, அதை ராமரின் புதல்வர்கள் லவன் மற்றும் குசனுக்கு சொல்லி, ராமாயணத்தை ஸ்ரீ ராமரே முதன் முதலாக தன் புதல்வர்கள் மூலமே கேட்டார் என்ற பெருமை அடைந்தது.
தமிழன் வால்மீகி த்ரேதா யுகத்தில் சமஸ்கரித மொழியில் கவி நடையில் ராமாயணம் எழுதினார்.
அது தமிழில் இல்லையே என்று, கலி யுகத்தில், கம்பர் தமிழில் கவி நடையில் தமிழாக்கம் செய்து தமிழனுக்கு கொடுத்தார்.

5000 வருடங்கள் முன் இருந்த இந்த இரு புராணங்களையும், இதன் காலத்தையும், முதலில் ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு பின்,
ஆராய்ச்சி செய்ய ஆர்வம் இருந்தால், 2000 வருடம் முன் உருவாக்கப்பட்ட பைபிளை படிக்கலாம்.

இப்படி படிக்கும் போது,  உண்மையான அறிவை நமக்கு கொடுக்கும்.
காலத்தை கணிக்கும் போதும் சில உண்மைகள் தானாக விளங்கும்.

5000 வருடங்கள் முன் நிகழ்ந்த மகாபாரதத்தை, அரைகுறையாக தெரிந்து கொண்டு,
12 லட்சம் வருடங்கள் முன் நிகழ்ந்த ராமாயணத்தை 'சீதைக்கு ராமன் சித்தப்பா, இலங்கையை சேர்ந்த ப்ராம்மண ராவணனை தமிழன்' என்ற அளவுக்கு தவறுதலாக புரிந்து கொண்டு, இருக்கும் ஹிந்துக்கள்,
2000 வருடம் முன் உருவாக்கப்பட்ட பைபிளை படித்தால், மோசம் போவது நிச்சயம்... ஏமாறுவதும் நிச்சயம்.

அற்புதமான ஹிந்து மதத்தில் பிறந்தும், மதம் மாறுவதற்கு காரணம் ராமாயண, மகாபாரத 'காலத்தை'யும், அதன் 'சரித்திரத்தை'யும் புரிந்து கொள்ளாமல் இருப்பதே..

ஹிந்துக்கள் மகா அறிவாளிகள் தான். சந்தேகமில்லை.
ஆனால் தன் மத விஷயங்களை பொறுத்தவரை, போதிய அறிவு இல்லாமல் உள்ளனர் என்பதே நம் பலவீனம்.
இது சற்று வருத்தம் அளிக்க கூடிய விஷயமாக உள்ளது.


இனி....
சுமார் 100ADல் உருவாக்கப்பட்ட பைபிள் வசனங்களை கவனிப்போம்..


ஏரோது (herod) என்ற ராஜா, "ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது" என்று கேட்டபொழுது, அவனும், அவனோடு கூட ஜெருசலம்  நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
Matthew 2.3
(3102BC முன், அதாவது சுமார் 5000 வருடம் முன் பரப்ரம்மமே ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்தார்.
கிருஷ்ணர் பிறந்து விட்டார் என்றதும், மதுரா அரசனாக கொடுங்கோல் ஆட்சி செய்யும் கம்சன் மனம் கலங்கினான்.
5000 வருடம் முன்பேயே நடந்த அதே நிகழ்வு.. இன்றும் மதுரா போய் பார்க்கலாம்..)
ஏரோது (herod) ராஜா, பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான் என்பதால், அப்பா ஜோசப் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதன் தாய் மேரியையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போனான்.
Matthew 2.13, 2.14
(கிருஷ்ணரை கம்சன் கொன்று விடுவானோ என்று தேவகி பயப்பட, பிறந்த குழந்தையாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் 'அப்படி பயம் இருந்தால், தன்னை கோகுலம் எடுத்து செல்லுங்கள்' என்று சொல்ல, குழந்தை கிருஷ்ணரை எடுத்துக்கொண்டு  கோகுலம் புறப்பட்டார் வசுதேவர். 
 5000 வருடம் முன் நடந்த நிகழ்வு.. இன்றும் மதுரா உள்ளது..கிருஷ்ணர் பிறந்த இடம் உள்ளது. போய் பார்க்கலாம்.)

ஏரோது (Herod) மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலை செய்தான்.
Matthew 2.16
(கிருஷ்ணர் பிறந்து விட்டார் என்று அறிந்த கம்சன், ஒரு மாதத்தில் பிறந்த அனைத்து குழந்தையையும் கொன்று விட சொல்லி, பூதனை என்ற அரக்கியை கோகுலத்துக்கு அனுப்பினான்.
5000 வருடம் முன் நடந்த நிகழ்வு.. இன்றும் கோகுலம் உள்ளது.. போய் பார்க்கலாம்.)
ஏரோது (Herod) இறந்த பிறகு, பிள்ளையையும் அவன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான் ஜோசப். 
Matthew 2.20, 2.21
(கம்சனை தன் 11 வயதில் ஸ்ரீ கிருஷ்ணர் கொன்ற பின், மதுராவில் வசுதேவரும், தேவகியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்...)

5000 வருடம் (3102BCக்கு முன்) முன்பு, பாரத மண்ணில் நடந்த சரித்திரம்.

அரைகுறையாக யாரோ ஒரு கிராமத்தான் மஹாபாரத கதையை கேட்டு, அதே கதையை தன் அறிவுக்கு எட்டிய அளவுக்கு,
யவனர்கள் என்று அழைக்கப்பட்ட தேசங்களில் திரிந்து கொண்டிருந்தவர்களுக்கு சுமார் 2000 வருடம் (சுமார் 100ADல்) முன்பு சொல்லி இருக்கலாம்..

பொதுவாக உச்சரிப்பு புரிந்து கொள்ளாமல் போகும் போது, தவறான அர்த்தங்களை புரிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது..  கீழே உள்ள வீடியோவை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

அது போல, 5000 வருடம் முன் நிகழ்ந்த ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம், உலகம் முழுக்க பேசப்பட்டு, சரித்திரம் உருமாறி 3000வருட காலத்தில் யவன தேசங்களான ஜெருசலம் போன்ற தேசங்களில் மாறுபட்டு இருக்க கூடும்.


இன்று கூட கிராமங்களில் நாடக நடிகர்கள் கிருஷ்ண கதையை "கண்ணன் பொறந்தான் மதுரைல... கோகுல கிராமத்துல வளந்து, பொல்லாத கம்சன ஒரே அடி போட்டு கொன்றான். பெத்த அப்பா அம்மாவை சிறையிலேந்து காப்பாற்றினான்" என்று அவர்கள் பாணியில் சொல்வது உண்டு.


இப்படி கண்ணன் கதை சொல்லும் பழக்கம் உலகம் முழுக்க, பரவி இருந்தது...
உலகத்தில் உள்ள க்ஷத்ரியர்கள் அனைவரும் பங்குபெற்ற மகாபாரத போருக்கு பின்னர், உலகமே தர்மபுத்திரர் ஆட்சிக்கு கீழ் வந்தது.

5000 வருடம் முன் நடந்த கிருஷ்ணன் கதையை, 2000 வருடம் முன் கிறிஸ்து ஆக்கியது போல தோன்றுகிறதா?

கம்ச மாமா கதையை திருடி, ஏரோது (herod) ஆக்கியது போல தோன்றுகிறதா?

மதுரா என்ற ஊரையே திருடி, பெத்லகேம் ஆக்கியது போல தோன்றுகிறதா?

கோகுலம் என்ற ஊரையே திருடி, எகிப்து ஆக்கியது போல தோன்றுகிறதா?

2000 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட கதை, 5000 வருடம் முன் இருந்த கதையை சுட்டுள்ளது என்று தோன்றுகிறதா?

ஏசு அவதார கதை இப்படி தான் பைபிளில் எழுதப்பட்டுள்ளது...
புதிய ஏற்பாடு "மத்யு" (Matthew) அப்படி தான் தெளிவாக, 5000 வருடத்திற்கு முன் இருந்த மகாபாரத கதையை சுட்டு சொல்கிறது...

இதை மாற்ற 3வது new testament கொண்டு வந்தாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை...

மற்றொரு புதிய ஏற்பாடு லூக்கில் சொல்வதை இனி பார்ப்போம்..
மேலும் தொடர்வோம்...
ஜோசப், தன் மனைவி மேரிக்கு பிறந்த குழந்தைக்கு 8வது நாளில் "ஹேசு கிறிஸ்து" என்று பெயர் வைத்தார்..
Luke 2.21
(குழந்தை பிறந்து 10வது நாள் பெயர் வைக்கும் பழக்கம் ஹிந்துக்களுக்கு உண்டு.
ஜோசப் அய்யாவிடம் இந்த பழக்கம் இருக்கிறது.
ஜோசப், ஏசு, மேரி ஒரு சுத்தமான ஹிந்து கலாச்சாரத்தை கொண்ட வெளிநாட்டில் வசித்த குடும்பம் என்று தெரிகிறது.)
இன்று கூட இஸ்கான் போன்ற கிருஷ்ண அமைப்புகளில், ஹிந்து கலாச்சாரத்தில்  ஈர்க்கப்பட்டு, வெளிநாட்டில் வாழும் குடும்பங்கள் இருப்பதை காண்கிறோம். இவர்கள் கிருஷ்ணா என்று உச்சரிப்பதில்லை. கிஸினா என்று தான் உச்சரிக்கிறார்கள். 
2000 வருடங்கள் முன், இந்த நாடுகளில் உச்சரிப்பில் கிருஷ்ணர் கிருஸ்துவாக மருவி இருக்க கூடும்.

உலகம் முழுவதும் ஹிந்து கலாச்சாரமே இருந்தது என்று இன்று வரை பூமியில் கிடைக்கும் சிவ லிங்கமும், கோவில்களின் பாகங்களே சாட்சி...
ஹிந்து கலாச்சாரத்தில், நன்றாக கவனித்தோம் என்றால்,  பரமாத்மாவை "ப்ரம்மம்" என்ற சொல் கொண்டு அழைக்கிறார்கள்.





அந்த ப்ரம்மமே, "வாமன, நரசிம்ம, ராம, கிருஷ்ணனாக அவதாரம் செய்தார், ருத்ரனாக" வந்தார்  என்று சொல்கிறார்கள்.
அவரே அனைத்துமாக இருக்கிறார்.
அவரே 'நாராயணன்' என்றும் சொல்கிறது ரிக் வேதம்.

ப்ரம்மமே 'பரமாத்மா' என்ற வழிபாட்டில் இருந்து, இரண்டு சித்தாந்தங்கள் வெளி வந்தன என்று பார்க்கிறோம்.
அந்த ப்ரம்மம் அரூபமானவர், வேதத்தில் உள்ள ருத்ரனே அந்த பரமாத்மா என்று "சைவ" சித்தாந்தமும்,

அந்த பரமாத்மா ரூபம் தரித்து நாராயணனாக இருக்கிறார் என்று புருஷ சூக்தம் போன்ற வேத சூக்தங்களை காட்டி நிரூபித்து, நாராயணனே அந்த பரமாத்மா என்று "வைணவம்" சித்தாந்தமும் உருவானது.
ப்ரம்மமே 'பரமாத்மா' என்று ஹிந்துக்கள் அனைவரும்  ஒப்புக்கொண்டாலும்,
அரூபமான ருத்ரனே 'பரமாத்மா' என்றும்,
விஷ்ணுவே 'பரமாத்மா' என்றும் இரண்டு சித்தாந்தங்களாக பிரிந்தது என்று பார்க்கிறோம்.

இது ஒரு ஆச்சரியமில்லை...

கொஞ்சம் நாம் கவனித்தால்,
2000 வருடங்கள் முன் தோன்றிய கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டுமே "யூத மதத்தில் இருந்து பிரிந்த" இரு வேறு சித்தாந்தங்கள் என்ற ஒற்றுமையை பார்க்கிறோம்.

யூத மதம் "ப்ரம்மம்" என்ற சொல்(ஒலி) போலவே ஒலிக்கும், "ஆப்ரஹாம்" (இப்ராஹிம்) என்பவரே தங்கள் வழிகாட்டி என்று நம்புகின்றனர்.

ஒலி அடிப்படையில் சொல்லி பார்த்தால், "ப்ரம்மம், இப்ராஹிம், ஆப்ரஹாம்" மூன்றும் ஒரே மாதிரியான சப்தத்தை ஒலிக்கிறது என்று கவனிக்கலாம்.

சைவ சித்தாந்தங்கள் போலவே,
இறைவன் அரூபமானவர், அவரையே சரண் அடைய வேண்டும் என்று இஸ்லாம் என்ற சித்தாந்தம் நபிகளால் உருவானது.
இஸ்லாம் என்ற அரேபிய சொல்லுக்கே "சரணாகதி" என்று தான் பொருள். ஆங்கிலத்தில் surrender to god என்று பொருள் தருகிறது.

இறைவன் அரூபமானவர் என்று சொல்லும் சித்தாந்தத்தை சைவர்கள் கடைபிடிக்கின்றனர்.
அரூபமானவர் ருத்ரன் என்று காட்ட, ஒரு ரூபமில்லாத லிங்கத்தை ருத்ரனாக வழிபடுகின்றனர்.
தியானம் செய்கின்றனர்.
இஸ்லாமில் மசூதிகள் அமைப்பு லிங்க ரூபமாக உள்ளது.
தியானத்திற்கு அதிக மரியாதை உள்ளது.  
வீண் பேச்சுக்கள் பேச மாட்டார்கள் இஸ்லாமியர்கள்.

மற்றொரு சித்தாந்தத்தில்,
இறைவன் ரூபம் உடையவர்.
அவர் கிறிஸ்து என்று கிறிஸ்துவம் உருவானது.
இவர்கள் உருவ வழிபாடு செய்கின்றனர்.


இந்தியாவில் ஹிந்துவாக பிறந்தும், புரியாமல் மதம் மாறியுள்ள கிறிஸ்தவர்கள் கூட, இன்று 90 சதவீதம் ஹிந்து மதப்படி தான் பூஜை, ஸ்லோகங்கள், ஜபம், துளசி மாலை, இசை கச்சேரி, ஸ்தூபம், தூபம், தேர், பாத யாத்திரை என்று ஏறத்தாழ  ஹிந்துவாகவே கிறிஸ்துவை ஆக்கி, வழிபடுகின்றனர்.

ஏசு, கிருஷ்ண பக்தனா?
அல்லது கிருஷ்ணர் கதையை தான் கொஞ்சம் எடுத்து கிறிஸ்து என்ற பெயரில் எழுதப்பட்டதா? என்பது நமக்கு தேவை இல்லாத சர்ச்சை..
அது அவரவர் சிந்தனைக்கு விட்டு விடலாம்.

5000 வருடத்திற்கு முன் நடந்த கிருஷ்ண சரித்திரம், 2000 வருடத்திற்கு முன் நடந்ததாக சொல்லப்படும் சரித்திரத்தில் நடந்ததா? 
இல்லை கதை களம் மட்டும் எடுக்கப்பட்டதா? என்பது அவரவர் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏசு, ஜோசப், மேரி, ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தி கொண்ட ஒரு ஹிந்து குடும்பமாக தான் தெரிகிறது.
ரோமானிய அரசாட்சியில் இந்த யூத குடும்பங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர் என்று பார்க்கிறோம்.

வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.


தன் குழந்தைக்கு புண்யாஜலம் தெளித்து சுத்தி செய்ய, ஜெருசலத்தில் உள்ள 'கோவிலுக்கு' ஜோசப்பும், மேரியும் சென்று, தன் குழந்தையை தெய்வத்திடம் (lord) காண்பித்தனர்.
Luke 2:22
(குல தெய்வத்தை பார்க்க போகும் பழக்கம் ஜோசப் அய்யாவிடம் இருந்துள்ளது.
ஜோசப் அய்யா, எந்த தெய்வத்திடம் ஏசு குழந்தையை  காட்டினார்?? எந்த கோவிலுக்கு கூட்டி சென்றார்?? என்று மட்டும் சொல்ல பைபிள் மறுக்கிறது.. மறைக்கிறது !!
Luke 2:22 வசனம் எதிர்காலத்தில் மறைக்கப்படலாம்...

'என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்' என்று ஏசு சொல்லும் முக்கியமான வசனத்தில் கூட, அவர் எந்த சமூகத்தை உண்மையில் சொன்னார்? என்று சொல்ல பைபிள் மறுக்கிறது.. மறைக்கிறது)

அந்த காலங்களில் அடக்கி ஆண்ட ரோமானியர்களுக்கு பயந்து மறைக்கப்பட்டு இருக்கலாம்...
வீட்டில் பிறக்கும் ஒவ்வொரு முதல் ஆண் குழந்தையும் இறைவனால் புனிதப்படுத்தப்பட வேண்டும் என்ற விதிப்படி, ஏசுவை இறைவன் முன் காண்பித்தனர் அவன் பெற்றோர்கள்.
Luke 2:23
(ஏசுவுக்கு ஆசி கூறிய தெய்வம் நாராயணன் என்றோ ஸ்ரீ கிருஷ்ணர் என்றோ, சொல்ல பைபிள் மறுக்கிறது.. மறைக்கிறது.)

ஏசு உண்மையா? கற்பனையா? என்பது தேவை இல்லாத சர்ச்சை.

அப்படி ஒருவர் இருந்தார் என்றே நம்புவோம்.
கலியுக முடிவில், தான் வைகுண்டம் போக தீர்மானித்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.
தான் மறைந்து விட்டால், துவாரகை கடலில் மூழ்கி விடும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதும், லட்சக்கணக்கான யாதவர்கள் நான்கு திசையிலும் அவரவர்கள் குடும்பத்துடன் பிரிந்து சென்றனர் என்று மகாபாரதம் காட்டுகிறது.

பாரத நாட்டில் இன்றும் வடக்கில் யாதவர்கள் (yadav) என்றும், தெற்கில் குறிப்பாக தமிழகத்தில் கோனார்கள், யாதவர்கள் என்றும் இருக்கின்றனர்.

யூதர்கள் என்ற குலமும் யாதவர்கள் தான்.
யது குலத்தில் வந்த இவர்கள் யாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

யாதவ, யூத, யது என்ற சொல்லிலேயே ஒற்றுமை தெளிவாக தெரிகிறது.

பெயர் மருவி உள்ளதே தவிர, இவர்கள் வாழ்வு முறை, வழிபாடு, ஏசு "பரம பிதாவே என்று அழைக்கும் முறை" எல்லாம் ஹிந்து கலாச்சாரமாக தான் உள்ளது.
இவர்களுக்கு கிருஷ்ணரே குல தெய்வம் என்று தெளிவாக தெரிகிறது.

காலபோக்கில் உடை, பாஷை மாறி போனாலும், கதை களமோ, தன் மகனுக்கு கிறிஸ்து என்று பெயர் வைக்கும் பழக்கமோ இவர்களை விட்டு மாறவில்லை என்று தெரிகிறது.

ஸ்ரீ ராகவேந்திரர், க்ஷீரடி சாய் பாபா போன்ற உத்தமர்கள், ராம, கிருஷ்ண பக்தி செய்த மகான்கள்.

கிருஷ்ணரை வணங்கிய இந்த மகான்களையே தெய்வமாக இன்றும் பல லட்ச பாரத மக்கள் வணங்குகின்றனர் என்று பார்க்கிறோம்.

ஸ்ரீ கிருஷ்ணரை பரம பிதாவாக வழிபட்ட கிறிஸ்து ஒரு மகான் தான்.
மகானையே வழிபடும் பழக்கம் நமக்கு உண்டு.
இது இவர்களிடத்திலும் உள்ளது...

அடியேன் ராமானுஜ தாஸன் என்று வைணவர்கள் சொல்லி கொள்வார்கள்.

இந்த பழக்கமே கிறிஸ்து என்ற மகானை பின்பற்றியவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

கிறிஸ்துவை வழிபடுவதில் தவறில்லை.
ஆனால் அவர் யாரை வணங்கினாரோ அந்த பரம பிதாவான ஸ்ரீ கிருஷ்ணரை புரிந்து கொள்ள, பகவத் கீதையை படித்து கிருஷ்ண பக்தர்களாக ஆக முயற்சிக்க வேண்டும்.
காலத்தை ஒட்டிய ஆராய்ச்சி செய்தால், கிறிஸ்து வெளிநாட்டில் வாழ்ந்த கிருஷ்ண பக்தன் என்றே தெரிகிறது...
யூத குலத்தில் ஏசு என்று ஒருவர் பிறந்தார் என்றே ஒப்புக்கொண்டாலும், இவர் தன் வாழ்நாள் முழுவதும் "பர மண்டலத்தில் இருக்கும் பிதாவே" என்று வழிப்பட்டது சாஷாத் யாதவ கண்ணனையே என்று தெரிகிறது.

ராமரை வணங்கிய ராகவேந்திரரையே தன் தெய்வமாக வழிபடும் பழக்கம் ஹிந்துக்களுக்கு உள்ளது போலவே,
கிருஷ்ணன் என்ற பரம பிதாவை வணங்கிய கிருஸ்து என்ற மகானை தன் தெய்வமாக வழிபடும் பழக்கம் வெளிநாட்டில் வாழ்ந்த ஹிந்துக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது...
மாடு மேய்த்த கண்ணனை போல, பக்தனான இவரும் ஆடு மேய்க்க ஆசைப்பட்டார் என்று ஊருக்கு தகுத்தாற்போல சொல்லி இருக்கலாம் அங்கு இருந்த பெரியோர்கள்.
அல்லது, கிருஷ்ணர் கதையை சற்று மாற்றி, அங்கு மாடுகளை விட ஆடுகள் அதிகம் என்பதால், ஆடு மேய்த்தார் என்று சொல்லி இருக்கலாம்.

கிருஸ்துவின் கதை, கிருஷ்ணர் கதையில் இருந்து எடுக்கப்பட்டதா? 
அல்லது கிருஷ்ணர் கதையை ஒரு கிராமத்தான் தன் இஷ்டத்துக்கு மாட்டுக்கு பதில் ஆடு என்றும், கம்சனுக்கு பதில் ஏரோது என்றும்,
கிருஷ்ணருக்கு பதில் கிறிஸ்து என்றும்,
மதுராவுக்கு பதில் பெத்லகேம் என்றும்,
கோகுலம் என்ற ஊரை, எகிப்து என்றும் மாற்றினார்களா என்பதும் யோசிக்க வேண்டியதாக உள்ளது...
எது எப்படியோ!!  ஏசு ஒரு யாதவ பையன் தான். நம்ம பையன் தான்.
வெளிநாடுகளில் வாழும் இஸ்கான் ஹிந்துக்களை போல தான் இவர்கள் என்று புரிந்து கொள்ள முடியும்.

கிருஷ்ணனை தான் இப்படி கிறிஸ்து என்று  சொன்னார்களா? இல்லை,
தாங்கள் யாதவ குலம் என்பதால் கிருஷ்ண கதையை தன் போக்கில் எழுதி, ரோமானியர்களை பல தெய்வ கொள்கையில் இருந்து மாற்ற, ஒரே தெய்வம் தான், அவரே கிருஷ்ணர் என்று நிலை நாட்ட முயற்சித்தார்களா? என்பது அவரவர் சிந்தனைக்கு விட்டு விடலாம்...

கிருஷ்ண பக்தியை, கிருஷ்ணரே பரமாத்மா என்று சொல்லும் இஸ்கான் போன்ற அமைப்புகளும், யாதவர்கள் போன்ற மனோபாவம் கொண்டவர்களாக தான் உள்ளனர்.
அவர்களுக்கு ஒரே தெய்வம் தான். ஒரே ஜபம் தான். ஒரே குறிக்கோள் தான்.

வைணவம் என்ற சித்தாந்தம் மற்றும் இஸ்கான் என்ற சமீபத்தில் 1970ல் உருவாக்கப்பட்ட அமைப்பும், கிருஷ்ண பக்தியை அனைவரிடமும் பரப்ப ஆசைப்படுகிறது.

வைணவத்தில் ஜாதி மதம் பார்க்காமல் அனைவருக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து, நாராயணன் சொத்து நீ என்று உபதேசங்கள் செய்து, வைணவனாக சேர்த்து கொள்கிறது.

இஸ்கான் போன்ற அமைப்புகள், ஒரு படி மேலே போய், கிருஷ்ண பக்தி செய்பவர்களுக்கு உண்ண உணவு, உடை, நிம்மதியான வாழ்க்கை, ஜபம், என்று கொடுத்து, பூணூல் போட்டு, பூஜைகள் செய்ய சொல்லிக்கொடுத்து உலக மக்கள் யாவரையும் கிருஷ்ண பக்தி செய்ய இழுக்கிறது...

ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்ட யாதவ, என்ற யூதர்களும், மத மாற்றம், கிருஸ்துவே கடவுள், அவர் பெயரை ஜபம் செய்யுங்கள் என்று கிருஸ்து பக்தி செய்ய அழைக்கிறார்கள்...

மனித அறிவுள்ள நாம், பாரத பூமியில் பிறந்த பிறகும், முட்டாளாக இருக்க கூடாது...

நமக்கு சுட்ட கதை வேண்டுமா ?
சுடாத கதை வேண்டுமா ?
என்று சிந்திக்க வேண்டும்.

இன்று கூட ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற ஜபத்தை வெளிநாட்டவர்கள் சொல்லும் போது, அவர்கள் உச்சரிப்பில் ஒரு வித்தியாசம் தெரிகிறது...

மும்பா தேவி என்று சொல்லை கூட சொல்ல முடியாமல் தவிக்கும் வெளிநாட்டவர்கள், "பாம்பே" என்று உலறினார்கள்...

பாரத நாடு என்று சொல்ல இயலாமல், சிந்து என்ற நதியை வைத்தே பாரத மக்களை அடையாளப்படுத்தி, அதையும் ஹிந்து, ஹிண்டு, இந்து என்றும் உளறி கொட்டினர்.
br />
1000 வருடங்கள் இவர்களிடம் சிக்கி, 1947ல் விடுபட்ட போது, மகா உளறல்காரர்களான பிரிட்டிஷ் நாட்டினர், இண்டியா என்று அவர்களாக நமக்கு ஒரு பெயர் வைத்து, பாரத நாட்டில் சிந்து பகுதியை, பாக்கி இடம் (பாகிஸ்தான்) என்று பெயர் கொடுத்து, கையெழுத்து போட்டு விட்டு தன் ஊருக்கு சென்றனர்.

உண்மையான பெயர் என்ன என்று தெரிந்த பின்னும், இப்பொழுது இருக்கும் பெயர் அர்த்தமில்லாத பெயர் என்றும் தெரிந்தும், அறிவுள்ள மனித சமுதாயம் அதை மாற்ற யோசிக்குமா? யோசிக்காதா?

பாம்பே என்ற அர்த்தமில்லாத பெயரை மாற்றி, மீண்டும் மும்பை என்று மாற்றினார்கள்.
இது போல பல அர்த்தமில்லாத பெயர்களை மாற்றி அதன் உண்மையான பெயர்களுக்கு மாற்றி உள்ளனர் அறிவு உள்ள நம் பாரதமக்கள்.

1000 வருடங்கள் உள்ளே நுழைந்த வெளி நாட்டினர்களுக்கு, உச்சரிப்பு பிரச்சனையால், ஊர் பெயர்களை மட்டுமல்ல, பாரதம் என்ற பெயரையே இண்டியா என்று மாற்றி விட்டனர் என்று பார்க்கிறோம்.

5000 வருடங்கள் முன் குடி பெயர்ந்த யாதவர்கள் ஊட்டிய கிருஷ்ண பக்தி யவன தேசங்களில் நிலைத்தாலும், கிருஷ்ண என்ற சொல் வெளிநாட்டவர்களால் கிறிஸ்து ஆகி இருக்கலாம். பெயர்கள் உருமாறி இருக்கலாம்.

பாரத மக்கள், ஒரிஜினல் எது? ஒரிஜினல் யார்? என்று புரிந்து கொள்ளும் போது, போலிகளை ஒதுக்கி, அர்த்தமில்லாத பெயர்களை மாற்றுவதில் தயங்குவதில்லை.

அதே போல,
யாதவ கூட்டம் யவன தேசங்களுக்கு சென்று வாழ்ந்த போது, என்றோ ஒரு காலத்தில் யூத குலம் என்று பெயர் மருவி இருக்கலாம்.

அங்கு 'கிறிஸ்து'  என்ற ஒரு நல்ல பிள்ளை, "கிருஷ்ணரே கதி" என்று வாழ்ந்து இருக்கலாம்.

இங்கு காந்தியை மகான் என்று, ஆஞ்சநேயர் போன்ற உத்தமமான பக்தர்களை கூட வழிபடும் பழக்கம் உண்டு..
இது போலவே,
யாதவ என்ற யூத குலத்தில் பிறந்த கிறிஸ்து என்ற மகானை தெய்வமாக கும்பிடும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

ஆர்வத்தால், கிருஷ்ணர் கதையை கொஞ்சம் இவர் சரித்திரத்தில் சேர்த்து இருக்கலாம்.

பக்தியின் காரணத்தால், தான் வணங்கும் குருவின் சரித்திரத்தில் தெய்வங்களின் சரித்திரத்தை பொருத்தி பார்ப்பது கூட உண்டு.

இதில் மறைக்கப்பட்ட உண்மை எதுவென்றால், "பரம பிதாவே" என்று ஏசு அழைக்கும் தெய்வம், அவர் அப்பா இவரை கூட்டிக்கொண்டு எந்த இறைவனை வணங்கினார்? எந்த கோவிலுக்கு போனார்? போன்றவை மறைக்கப்பட்டது தான். ரோமானியர்களுக்கு பயந்து அன்று மறைக்கப்பட்டு இருக்கலாம்.

யூத குலத்தில் பிறந்த மகான் ஏசு வழிபட்ட அந்த பரம பிதா கிருஷ்ணரே என்ற உண்மையை உணர்வது, உணர்த்துவது ஒவ்வொரு ஹிந்துவின் கடமையும் கூட..

பரம பிதாவின் ராஜ்யம் உலகெங்கும் பரவும் என்று ஏசு சொல்கிறார்...
இன்று இஸ்கான் போன்ற அமைப்புகளால் அது நிரூபணம் ஆகிறது என்று பார்க்கிறோம்..

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க யாதவர்கள்...
வாழ்க யது குலம்...
வாழ்க வெளிநாட்டில் சென்று வாழ்ந்த பெயர் மாறி போன யூத குலம்...
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.


ஸ்ரீ கிருஷ்ணர் சரித்திரத்தை அனைத்து கிறிஸ்தவர்களும் படிக்க வேண்டும்.
ஏசுவின் பிரியமான புத்தகம் பகவத் கீதையாக தான் இருக்க வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ணரை இகழ்வது, ஏசுவுக்கு கட்டாயம் ஏற்பு உடையதாக இருக்காது..
பரம பிதா ஸ்ரீ கிருஷ்ணரை, ஏசும் எவரையும் ஏசு ஏற்க வாய்ப்பு இல்லை.

பாரத மண்ணில் பிறக்க கட்டாயம் ஏசு ஆசைப்பட்டு இருப்பார்.

சாய்பாபா என்ற மகாத்மாவை வணங்கும் ஹிந்துக்களுக்கு, கிருஸ்து என்ற கிருஷ்ண பக்தரை வணங்க தயக்கம் இருக்காது..
ஆனால் அவர் வணங்கிய பரம பிதாவை ஏசினால், ஏசுவும் கை விடுவார் என்றே புரிகிறது...

தவறான உச்சரிப்பில் உருவான தெய்வங்களை வணங்காமல், ஸ்ரீ கிருஷ்ணரையே அனைவரும் வணங்குவோம்.

இஸ்கானில் உள்ள வெளிநாட்டவர்கள் கிருஷ்ணரை கிஸினா என்று உச்சரிக்கிறார்கள். 1000 வருடங்கள் கழித்து, வெளிநாடுகளில் இவர்கள் வழிபாடு பிடித்து, எங்கள் தெய்வம் கிஸினா என்று சொல்லி கொண்டு அலைந்தால் எப்படி இருக்கும்? பொய்யான பெயர்களை களைவோம். கிருஷ்ணா என்ற உண்மையான பரமாத்மாவை பற்றிக்கொள்வோம்.

வாழ்க யூதர்கள்.  வாழ்க வெளிநாடுகளில் வாழ்ந்த, வாழும் கிருஷ்ண பக்தர்கள்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்...




பரிகாரம் செய்தும், துன்பங்கள் வருவது ஏன்?

டாக்டரை பார்க்க சென்றான் ஒரு நோயாளி .

டாக்டரை பார்த்து
"நீங்கள் சௌக்கியமா? எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டான்.
தான் நலம் விசாரிக்க வேண்டி இருக்க, இவன் தன்னை நலம் விசாரிப்பதை பார்த்து, டாக்டருக்கே சிரிப்பு வந்து விட்டது.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் டாக்டரும் சங்கடப்பட்டார்.





யாரிடம் நலம் விஜாரிக்கிறோம் என்று கூட அறியாமல் கேட்கிறானே, 'பாவம்' என்று நினைத்தார் டாக்டர்.
உண்மையில்,
நாம் டாக்டரை பார்க்கும் போது, "டாக்டர், நான் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டால்,
அந்த டாக்டரும், "சரி" என்று சுதந்திரமாக சிகிச்சையோ, சரியான ஆலோசனையோ சொல்வார்.

அதே போல,
நாம் தெய்வத்தையோ, மகானையோ, ஒரு ஞானியையோ பார்க்கும் போது,
"நீங்கள் சௌக்கியமா? எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டால், மகான்களும், தெய்வமும் அஞானத்தால் கேட்பவனை கண்டு மந்தஹாசம் செய்வார்கள்.
அஞானியாக இருக்கும் நாம், "நான் ஆரோக்கியமாக, நன்றாக இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டால், சுதந்திரமாக, நமக்கு உதவி செய்ய முன் வருவார்.

ஒருவன் டாக்டரிடம் சென்று தனக்கு உள்ள நோயை குணப்படுத்த கேட்டான்.

பரிசோதித்த டாக்டர்,
"ஒரு  ஆப்பரேஷன் செய்ய வேண்டும். ஆப்பரேஷன் நல்ல படியாக முடிந்தால் உயிர் பிழைக்கும், 
ஒருவேளை தவறானால், உயிர் போகவும் வாய்ப்பு உள்ளது. 
ஆப்பரேஷன் முடிந்து 3 மாதங்கள் படுத்த படுக்கையாக தான் இருக்க வேண்டி இருக்கும். அதற்கு பின் உடல் சரியாகி விடும்" என்று சொல்லி,
"சரி என்றால் கையெழுத்து போடு" என்று கேட்டார்.
அவனும், 'டாக்டர், நீங்கள் என் உடம்பை கிழித்து ஆப்பரேஷன் செய்யுங்கள். 
இதனால் ஏற்படும் வலியை பல மாதங்கள் ஆனாலும் நான் பொறுத்துக்கொள்கிறேன். 
நீங்கள் என் உடலை கிழித்து ஆப்பரேஷன் செய்வதற்கு, உங்களுக்கு பணமும் தருகிறேன். மேலும், 
ஆப்பரேஷன் fail ஆனால் கூட, நீங்கள் காரணமில்லை என்று  கையெழுத்து கூட போடுகிறேன். காரணம், 
உங்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை" என்றான்.


அதே போல,
நாமும் தெய்வத்திடம் அந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டு, கையெழுத்து போட்டு தன்னை ஒப்படைத்து விட வேண்டும்.
டாக்டர் செய்த ஆப்பரேஷன் கூட fail ஆகலாம் என்று சொல்ல வாய்ப்பு உண்டு.
ஆனால், பெருமாளிடம் தன்னை  ஒப்படைத்தவன் தோற்றதே கிடையாது.

ஆப்பரேஷன் செய்து நோய் குணமாகும் வரை, நமக்கு ஏற்படும் தற்காலிக சங்கடங்கள் போல,  
பெருமாளிடம் தன்னை  ஒப்படைத்த பின், நம் நன்மைக்காக அவர் செய்யும் ஆப்பரேஷனால் ஏற்படும் துன்பம் கூட, ஒரு காரணத்துக்காகவே, தற்காலிக துன்பமே என்று நாம் உணர வேண்டும். அவ்வப்போது வரும் கஷ்டங்கள் தானாகவே பனி போல விலகி விடும்.

மகான்களும் தங்கள் வாழ்வில் ஏற்படும் துன்ப காலத்தை இந்த ஞானத்தினால் உணர்ந்து, துன்ப காலத்தை தைரியம் இழக்காமல் கழிக்கின்றனர்.

"இன்பமும், துன்பமும் தெய்வ இஷ்டம்" என்று இருந்தால், ஸ்ரீக்ருஷ்ணரே நம் குடும்ப பொறுப்பை சேர்த்து நிர்வாகிப்பார்.

சம்சார சூழலில் சிக்கி நோய்வாய்ப்பட்டு இருக்கும் நாம், நாராயணன் (தன்வந்திரி) என்ற வைத்தியரிடம் தன்னை ஒப்படைத்து விட்டால், அந்த வைத்தியரே சரியான சிகிச்சை செய்து, மோக்ஷம் என்ற ஆனந்தம் வரை கிடைக்க செய்திடுவார்..


வாழ்க ஹிந்துக்கள்.. வாழ்க ஹிந்து தர்மம்..

குருவே துணை.