Followers

Search Here...

Wednesday 23 October 2019

தெய்வங்கள் ஹிந்து மதத்தை காக்கிறதா?.. எப்படி ஹிந்துக்கள் 1000 வருட அந்நிய படையெடுப்பையும் மீறி, ஹிந்துவாகவே இன்றும் பல கோடி மக்கள் இருக்கிறார்கள்..? அலசல்

"உலகம் (இயற்கை) ஒரு மாய திரை (ஜீவனை பொறுத்தவரை பொய், நிலையற்றது)..
உலகில் காணப்படும் ஜீவனாகிய நாம் அனைவரும் ஈஸ்வரனின் அம்சமே..
ஆதலால்,
பிறவி கடலை கடக்க, உலக பற்றை உதறி தள்ளி, ஈஸ்வரனிடம் பக்தி செய்து, மோக்ஷம் பெற வேண்டும்"
என்று சொல்கிறது 'அத்வைதம்'.



வேதத்தில், சில சூக்தங்கள் 'அத்வைதமாக இருக்கிறது'.

"ஜீவன் வேறு, பரமாத்மா வேறு.
ஜீவன் "பரமாத்மாவிற்கு அடி பணிந்தவன்".
பிறப்பு, இறப்பு, முதுமை, எதிர்காலம் எதுவும் இவன் இஷ்டத்தில் இல்லை.
முயற்சிக்கு பலன் கிடைப்பதே பரமாத்மாவின் அருளால் தான்.
முயற்சிக்காமல் சில சமயங்களில் பலன் கிடைப்பதும் பரமாத்மாவின் அருளால் தான்.

ஜீவன் செய்யும் முயற்சிக்கெல்லாம், அவன் இஷ்டத்தில் பலன் கிடைப்பது இல்லை. 
அவன் நினைப்பதெல்லாம் நடப்பதும் இல்லை.
முயற்சிக்கு பலன் கிடைப்பதே பரமாத்மாவின் அருளால் தான்.

ஆதலால்,
பிறவி கடலை கடக்க, ஈஸ்வரனிடம் பக்தி செய்து, மோக்ஷம் பெற வேண்டும்"
என்று சொல்கிறது 'த்வைதம்'.

வேதத்தில் "சில சூக்தங்கள் த்வைதமாகவும் இருக்கிறது".

ஜீவன் மற்றும் பரமாத்மா உறவை காட்டும் போது, இந்த இரு மார்க்கமும் மாறுபடுகிறது.
ஆனால்,
"அத்வைதம், த்வைதம்" இரண்டுமே, "ஈஸ்வர பக்தி செய்து தான், மோக்ஷம் அடைய வேண்டும்" என்று முடிவாக சொல்கிறது..

"இந்த இரண்டு விதமான பார்வையும், வேதத்தில் தான் உள்ளது" என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்..
ஆக, இரண்டு மார்க்கமுமே பொய் அல்ல..
புரிந்து கொள்ள, நமக்கு தான் பக்குவம் தேவைப்படுகிறது.

"உலகத்தையும் (ஸ்ரீவத்சம்/லட்சுமி), ஜீவனையும் (கௌஸ்துபம்) இரண்டையும் உடையவனாக ஈஸ்வரன் இருக்கிறார்"
என்று விசேஷித்து சொல்கிறது 'விசிஷ்ட அத்வைதம்'. (அத்வைதத்தில் த்வைதம்)


புரிந்து கொள்ள:

அஞானியாக ஜீவன் இருக்கும் வரை,
"தான் வேறு, உலகில் உள்ள மற்ற ஜீவன்கள் வேறு, பரமாத்மா வேறு'"
என்று ஜீவன் 'த்வைத'மாக தான் பார்க்கிறான்.
ஆதலால்,
வேதம், அஞானிக்கும் மோக்ஷ பாதையை வழிகாட்ட, 'த்வைத' தத்துவத்தை ஒரு இடத்தில் சொல்கிறது.

அதே சமயம்,
ஆதிசங்கரர், ஜடபரதர், ஸ்ரீசுகர் போன்ற ஞானியாக இருக்கும் ஜீவன்,
"தான் வேறல்ல, உலகில் உள்ள மற்ற ஜீவன்களும் வேறல்ல, இந்த ஜீவனை படைத்த பரமாத்மாவும் வேறல்ல"
என்று 'அத்வைத'மாக பார்க்கிறார்கள்.
ஆதலால்,
வேதம், ஞானிக்கு மோக்ஷ பாதையை வழிகாட்ட அத்வைத தத்துவத்தையும் மற்றொரு இடத்தில் சொல்கிறது.

ஞானிக்கு 'அத்வைதம்' காட்டி,
அஞானிக்கு 'த்வைதம்' காட்டி,
உலகில் மனிதனாய் பிறந்த அனைவருக்கும், பிறவி கடலை கடக்க வழி சொல்கிறது நம் வேதம் (சப்த பிரம்மம்)

"ஒரே வழி, ஒரே கட்டளை" என்று பிடிவாதம் செய்து, மனிதர்களால் உருவான பொய் மதம் இல்லையே!! நம் சனாதன ஹிந்து தர்மம்.

ஆதி சங்கரர் (சிவபெருமான்) அவதாரம் செய்த போது,
வேதம் கூறும் ஞான மார்க்கத்தை புரிந்து கொள்ளாமல், மோக்ஷ பாதையில் செல்லாமல்,
"இந்த யாகம் செய்தால் இந்த பலன் கிடைக்கும்,
அந்த மந்திரம் சொன்னால் சூன்யம் வைக்கலாம்,
அந்த மந்திரம் ஸித்தி ஆனால் வசியம் செய்யலாம்"
என்ற அளவுக்கு கர்ம மார்க்கத்தை மட்டுமே எடுத்து கொண்டு பாரத தேசம் முழுவதும், வறட்டு பிடிவாதம் செய்யும் கர்மடர்கள் அதிகமாகி இருந்தனர்.

இவர்கள் ஞான மார்க்கத்தை மறந்து,
"யாகம் செய்தால் இந்த பலன் கிடைக்கும், இந்த சுகம் கிடைக்கும்"
என்ற ரீதியில் போனதால், 70வதுக்கும் மேற்பட்ட பல பொய் மதங்கள் உருவாகின.. பௌத்த மதமும் இதில் ஒன்று.



"நரபலி காளிக்கு கொடுத்தால், காளி வரம் கொடுப்பாள்" என்ற அளவுக்கு பாரத தேசத்தில் அசாம் போன்ற இடங்களில், அஞானிகள் கையில், 'வேதம்' மாட்டிக்கொண்டு தவித்தது..
ஞானியான "ஆதி சங்கரர்", இவர்களை ஞான மார்க்கத்தில் திருப்ப,
வேதத்தில் சொல்லப்பட்ட "அத்வைத" மார்க்கத்தை அதிகம் ப்ரகாசப்படுத்தி,
70வதுக்கும் மேற்பட்ட பொய் மதங்களை, தர்க்க வாதத்தினால், தன் தரிசனத்தால் ஒடுக்கி,
பாரத மக்களை, மீண்டும் ஞான மார்க்கத்தில் ஆர்வத்தை கொடுத்து, வேதத்தை ஞான மார்க்க ரீதியில் பார்க்க செய்து, 
பெரும் உபகாரம் செய்தார்.

1017ADல் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர்வேதத்தின் முழு நோக்கமான,"விசிஷ்ட அத்வைத" மார்க்கத்தை வழி காட்டினார்.

அஞானியாக இருப்பவர்கள் "பக்தி செய்து, நாராயண நாமத்தை பெற்று ஜபித்து இருங்கள்" என்று வேதம் சொல்லும் த்வைத மார்க்கத்தை காட்டி வழி நடத்தி, அஞானியையும் ஞானியாக ஆக்கி, ஜீவன் வேறு பகவான் வேறல்ல என்ற அத்வைத மார்க்கத்தையும் காட்டி, பெரும் புரட்சி செய்தார்.

ஆதி சங்கரர் வந்தும் மாறாமல், "ஆடை இல்லாமல் திரிந்த சமணர்கள் அனைவரையும் வேத மார்க்கத்தில் மீண்டும் திருப்பி, நாராயணனே வேதம் இறுதியாக சொல்லும் பரதெய்வம்" என்று வேதத்தை கொண்டே (புருஷ சூக்தம்) நிரூபித்து, ஹிந்துக்களை ஹிந்து தர்மத்தில் இருந்து விலகி விடாமல் இருக்க தயார் செய்தார் ஸ்ரீ ராமானுஜர்.
ராமானுஜரின் காலத்துக்கு பின், தமிழ்நாட்டில் "சேங்கனூர்" என்ற கிராமத்தில், 4000 திவ்ய பிரபந்ததுக்கும் அதன் உண்மையான உள் அர்த்தத்தை உலகுக்கு அள்ளி கொடுத்த "பெரியவாச்சான் பிள்ளை" என்ற "கிருஷ்ண சூரி" அவதரித்தார்.

மற்ற மதங்களில் தவறான புரிதல், குழப்பங்கள் ஏற்படும் போது, மதங்கள் அழிகிறது. 
அதை சரி செய்ய மக்களே பாடுபடுகின்றனர். 
மதத்தை வளர்க்க 
"பணம் கொடுத்து, பொய் பிரச்சாரம் செய்து, மற்ற மதங்களை கீழ்த்தரமாக பேசி வெறுப்பை விதைத்து" 
தங்கள் மதத்தை வளர்க்க முயற்சிக்கின்றனர்.

ஆனால்,
நம் ஹிந்து தர்மத்தில் உள்ள நாம், "வழி தவறி ஹிந்து தர்மம் அழியும்" அபாயம் நேர்ந்தால்,
தெய்வங்களே தன்னை வெளிப்படுத்தி கொண்டு அவதாரங்கள் செய்து, ஹிந்து தர்மத்தை தெய்வங்களே முன் நின்று காக்கின்றனர்..



"மனிதர்களால்" மற்ற மதங்கள் காப்பாற்றப்படுகிறது..
"தெய்வங்களால்" நம் சனாதன ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது.

1000 வருடங்கள், வெளி மதங்களே ஆண்டு அட்டகாசம் செய்தும், இன்றும் ஹிந்து தர்மம் துளி கூட அழியவில்லை..
மாறாக, உலகம் முழுவதும் இன்று ஹிந்துக்கள் பரவி கிடக்கின்றனர்..

வெளி மதமான அரேபிய இஸ்லாமியர்கள் 800 வருடங்கள் "ஹிந்துக்கள் செல்வத்தை, நம்பிக்கையை, கோவிலை, பெண்களை, சுதந்திரத்தை சூறையாடி, அதிக வரி ஹிந்துக்களுக்கு, வரி இல்லாத வாழ்க்கை இஸ்லாமியனாக மாறுபவனுக்கு"
என்று விதித்து பெரும் சவாலை பாரத மக்களுக்கு தந்தனர்..

ஹிந்து அரசனும், ஹிந்து அரசனும் போருக்கு சென்றால், போர்க்களத்தில் சண்டை இட்டு கொள்வார்கள்..
பாண்டிய அரசன் சோழ அரசனிடம் தோற்றால், பாண்டிய தேசத்தையும் தன் சோழ ஆட்சிக்கு கொண்டு வந்து ஆட்சி செய்வார்கள் அரசர்கள்.
மகாபாரத போர் கூட, குருக்ஷேத்ரம் என்ற போர் காலத்தில் தானே நடந்தது.
ஸ்ரீ ராமர் ராவணனை எதிர்கொண்ட போது கூட, ஊருக்குள் புகுந்து பொது மக்களை கொல்லவில்லையே ! 




இஸ்லாமிய சுல்தான்கள், ஹிந்து அரசனிடம் போர் செய்யும் போது,
ஊரில் புகுந்து பொது மக்களை கொன்று, 
கோவிலை இடித்தும், அரசர்களை பணிய வைத்தார்கள்..
"அலாவுதீன் கில்ஜி" ஆட்சியின் போது,
அவன் அனுப்பிய "மாலிக் காபூர்",
ககாத்திய தேசத்தை (தெலுங்கானா) எதிர்த்த போது,
அங்கு இருந்த பொது மக்களை கொன்று, கோவில்களை இடித்து, செல்வங்களை கொள்ளை அடித்து, பெரும் நாசம் செய்தான்..

அப்பொழுது அங்கு இருந்த ஒரு காளி கோவிலில் இருந்த ஒரு வைர கல் தானே இன்று "கோஹினூர் வைரம்" என்று இங்கிலாந்து நாட்டில் வைத்துள்ளார்கள்...

ஒரு காளி கோவிலில் சர்வ சாதாரணமாக வைர மாலைகள் இருந்தது என்றால், நம் செழிப்பு எத்தகையானதாக இருந்து இருக்க வேண்டும்!!?
என்று எண்ணி பார்க்க வேண்டும்..
ஒரு கோவிலை இடித்தாலே மனம் பதறும் போது, இப்படி ஒரு பேடிகள் சூழ்ந்து, மக்களை, கோவிலை இடிக்கும் போது, அரசர்கள் வேறு வழி இல்லாமல், சரண் அடைந்தனர்..
சில அரசர்கள் தலை சீவப்பட்டனர்.. 
சில அரசர்கள் பெரும் செல்வத்தை தானமாக கொடுத்தனர்..

ககாத்திய தேசத்தை தொடர்ந்து, பாண்டிய தேசமான மதுரைக்கு நுழைந்து, அதே செயலை செய்து,
பொது மக்களை கொன்று, மீனாட்சி கோவிலை பிடித்தான்.. 
"மாற்றி வைக்கப்பட்ட போலி சிவலிங்கத்தை இடித்தே விட்டான்" மாலிக் காபூர்..
விளைவு:
பாண்டிய மன்னன் "கோவிலை இடித்து விடுவானே" என்று பாண்டிய தேசத்தின் கஜானாவை திறந்து விட்டார்..
இதை தொடர்ந்து,
மேலும் ஸ்ரீ ரங்கம் வரை சென்று, 13000 வைஷ்ணவர்களை கோவிலிலேயே கொன்று, ஸ்ரீரங்கத்தையே சூறையாடி, உற்சவராக இருக்கும் ஸ்ரீரங்கநாதரை (சிலை திருடன்) டில்லிக்கு தூக்கி சென்று விட்டான் என்று சரித்திரம் போகிறது...



கிடைத்த செல்வமே அளவிடமுடியாமல் இருக்க, சோழ நாட்டில் கால் பிறகு வைத்து கொள்ளலாம் என்று மாலிக் காபூர் டில்லி திரும்பி,

தன் சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு வெற்றி பரிசாக அனைத்தையும் கொடுத்தான் (கோஹினூர் வைரம் (Kohinoor Diamond) உட்பட)..
இது நடந்தது 1310AD சமயத்தில்..

இஸ்லாமியர்கள் பாரத தேசத்துக்குள் வந்து "300 ஆண்டுகளே" ஆன சமயம் அது..

அந்த காலத்தில் இருந்த ஹிந்துக்களின் நிலைமையே எப்படி இருந்து இருக்குமோ!! என்று நினைத்து பார்க்க முடியவில்லை..

1857AD வரை இஸ்லாமியர்களின் ஆட்சி பாரத மண்ணில் கொடி கட்டியது என்று பார்க்கும் போது தான், "எத்தனை நெஞ்சுரம் மிக்கவர்களாக நம் பாட்டனார்கள் இருந்து இருக்கிறார்கள்" என்று புரிந்து கொள்ள முடியும். "இவர்கள் ஏழை ஆனாலும் ஹிந்துவாகவே வாழ்வேன்"
என்று இருந்ததால் தானே, அவர்கள் பரம்பரையில் வந்த நாம் இன்றும் ஹிந்துவாக இருக்கிறோம்..
நினைத்து பார்க்க வேண்டும் ந்த காலங்களில் வாழ்ந்த நம் பாட்டனார்களை..

1238AD சமயத்தில் "மத்வாச்சாரியார்" என்று போற்றப்படும் "ஆனந்த தீர்த்தர்" என்ற மகான் கர்நாடக தேசத்தில் உதித்தார்.
ருக்மிணி தேவி துவாரகையில் தானே வழிபட்ட  பாலகிருஷ்ண விக்ரஹம் இவர் கையில் கிடைத்து, உடுப்பியில் இந்த கிருஷ்ணருக்கு கோவில் அமைத்தார்.
ஞானியான மத்வாச்சாரியார்,
இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் நசுக்கப்படும் ஹிந்துக்கள், "காலம் கனியாதோ!!" என்று பயந்து மதம் மாறி விடாமல், "பகவான் காப்பாற்றுவார்" என்ற நம்பிக்கையை வளர்க்க,
அஞானியாக உள்ள பொது மக்களுக்கு, மனோ தைரியமும், தெய்வ நம்பிக்கையும் ஏற்பட, "ஜீவனாகிய நாம் அனைவரும் பரமாத்மா ஸ்ரீ வாசுதேவனை வணங்குவோம்" என்று
வேதத்தில் சொல்லப்பட்ட "த்வைத" மார்க்கத்தை அதிகம் ப்ரகாசப்படுத்தி, பாரத மக்களின் மனதில் பக்தியின் மூலம் தெய்வ நம்பிக்கையை விதைத்தார்.

பாரத மக்களை பக்தி மார்க்கத்தில் ஆர்வத்தை கொடுத்து, வேதத்தில் சொல்லப்படும் த்வைத மார்க்கத்தை ப்ரகாசப்படுத்தினார்.

"பக்தி மார்க்கம்" பாரத பூமி எங்கும் சூழந்தது..
இஸ்லாமியர்கள் 800 வருடங்கள் கடும் முயற்சி செய்தும், இந்த கோட்டையை தகர்க்க முடியவில்லை..

இவரின் ஆரம்ப காலத்தில் தான் "ஜெயதேவர்" வாழ்ந்தார்.

பிறகு வந்த மகான்களை கொஞ்சம் நினைத்து பார்ப்போம்..

இஸ்லாமிய ஆக்கிரமிப்பை சமாளிக்க,
மனோ தைரியமும், மக்களிடையே பக்தியையும் பரப்ப,
மஹாராஷ்டிரா தேசத்தில் "நாமதேவர்", "தியானேஸ்வர்" என்ற மாவுலி அவதரித்தார்கள்..
உத்திர பிரதேசத்தில், "ராமானந்தர்" அவதரித்தார்.
அவரின் சிஷ்யராக "கபீர் தாசர்" அவதரித்தார்.
தமிழ்நாட்டில் "மணவாள மாமுனிகள்" அவதரித்தார்.

குஜராத்தில், "நரசிங்க மேதா" அவதரித்தார்.

உத்திர பிரதேசத்தில் "சூரதாஸ்" அவதரித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், "வல்லபாச்சாரியார்" அவதரித்தார்.

வங்காள தேசத்தில், உலகம் போற்றும் இஸ்கான் (Iskcon) சொல்லும் "ஹரே கிருஷ்ண ஹரே ராம" மந்திரத்தை கொடுத்த மஹாவிஷ்ணுவின் அவதாரமான "கிருஷ்ண சைதன்யர்" அவதரித்தார்.



அதை தொடர்ந்து
கர்நாடக தேசத்தில் "புரந்தர தாசர்", "கனக தாசர்" அவதரித்தார்கள்.

அதை தொடர்ந்து
உத்திர பிரதேசத்தில், ஹிந்தியில் ராமாயணம் கொடுத்த "துளசி தாசர்" அவதரித்தார்.

ராஜஸ்தானில் "பக்த மீரா" அவதரித்தாள்.

அதை தொடர்ந்து,
தமிழ்நாட்டில், பிரகலாதனின் அம்சமாக "ஸ்ரீ ராகவேந்திரர்" அவதரித்தார்.
அதை தொடர்ந்து,
மஹாராஷ்டிராவில் "துக்காராம்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
தெலுங்கு தேசத்தில், "கோபண்ணா" என்ற "பத்ராசல ராமதாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
மஹாராஷ்டிராவில் சாம்ராட் வீர சிவாஜிக்கு ஆத்ம குருவாக, "சமர்த்த ராம தாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
பஞ்சாப தேசத்தில் "குரு கோவிந்த் சிங்" அவதரித்தார்.

தமிழகத்தில், ராம நாமத்தின் பெருமையை காட்ட "போதேந்திரர்" அவதரித்தார்.
"ஸ்ரீதர் ஐயாவால்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
கர்நாடக தேசத்தில், "விஜய தாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
தமிழ் நாட்டில் கர்நாடக இசை சக்கரவர்த்தி, ஸ்ரீ ராமரை நேரில் கண்டு தரிசித்த மகான் "ஸ்ரீ தியாகராஜர்" திருவாரூரில் அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
வங்காள தேசத்தில் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமான "ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்" அவதரித்தார்.
அவரை தொடர்ந்து,
சிவபெருமான் அம்சமாக விவேகானந்தர் அவதரித்தார்.

பாரத பூமியை மகான்கள் சுற்றிக்கொண்டு, ஹிந்துக்களை ஹிந்து தர்மத்தை 800 வருட இஸ்லாமிய ஆட்சியில் காத்தனர்.

800 வருட இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது..  ஹிந்துக்களை அழிக்க முடியாமல் விழுந்தது...

தெய்வங்கள் மகான்களாக பாரத தேசம் முழுவதும் அவதரித்து,
ஹிந்து தர்மத்தை தெய்வங்களே முன் வந்து காத்தனர்.
"தெய்வங்களால்" நம் சனாதன ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது... 

எத்தனை பெருமை நமக்கு....
மனிதன் அழிக்க நினைத்தாலும், தெய்வங்கள் காக்கும் ஹிந்து தர்மத்தில் பிறந்ததற்கு...நாம் எத்தனை பெருமைப்பட வேண்டும்??!!

நாம் எத்தனை கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்..  
நம் பெருமை நமக்கே தெரியாமல் இருப்பது தான் விந்தை.


வாழ்க பாரதம்... வாழ்க ஹிந்துக்கள்.  



Sunday 20 October 2019

கருவுற்று இருக்கும் தாய் நினைத்தால், கெட்ட குணத்தோடு பிறக்க போகும் குழந்தையையும் தெய்வ குழந்தையாக ஆக்க முடியும்.. நல்ல குழந்தைகள் பெறுவது எப்படி?




  • நல்ல குணங்கள் கொண்ட குழந்தைகள், 
  • தேசிய பற்று உள்ள குழந்தைகள், 
  • ஆன்மீக பற்று உள்ள குழந்தைகள், 
  • தீய குணங்கள் கொண்டவர்களை எதிர்க்க நெஞ்சுரம் கொண்ட குழந்தைகள்,
  • பணத்திற்காக தெய்வத்தையும், தேசத்தையும் பழிக்காத குழந்தைகள்,
  • பணத்திற்காக தெய்வத்தையும், தேசத்தையும் பழிப்பவர்களை ஆதரிக்காத குழந்தைகள்,
  • தீய பழக்கம் கொண்டவர்களுடன் பழக நேர்ந்தாலும், தீய பழக்கங்கள் ஏற்காத குழந்தைகள்,
  • ஹிந்துவாகவே வாழ விரும்பும் குழந்தைகள்,
  • ஹிந்து தெய்வங்களை மதிக்க தெரிந்த குழந்தைகள்,
  • மனித நேயம் உள்ள குழந்தைகள்,
  • ஹிந்து தெய்வங்களை கேலி செய்யும் மிலேச்ச, வாலிகர்கள் கையால் எதையும் வாங்காத குழந்தைகள், 
  • தேசபற்றுள்ள குழந்தைகள்,

நம் இந்திய நாட்டில் பிறந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஹிந்துவாக பிறந்த நாதீகனுக்கும் இது போன்ற நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும்..

பாரத தேசம் உயிர் பெற்று என்றுமே இருக்க, நம் தேசத்தில் பிறக்க போகும் எதிர்கால குழந்தைகளின் குணம், பழக்கம், தேச பற்று, தெய்வ நம்பிக்கை மிக முக்கிய பங்கு வகிக்கிறது..

தீயவனுக்கு கூட,
வாலிகனுக்கு கூட,
நாதீகனுக்கு கூட,
தேச பற்றுள்ள குழந்தைகள்,
ஹிந்து தெய்வங்கள் மீது பற்றுள்ள குழந்தைகள்,
ஆன்மீக சிந்தனை உள்ள குழந்தைகள்
பிறக்க வேண்டும்.

நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறக்க செய்ய நம்மால் முடியும்.. அது சாத்தியமே.. 



ஹிந்து பெண்கள் கையில் தான் இந்த பாரத தேசத்துக்கு அப்படிப்பட்ட குழந்தைகளை கொடுக்கவல்ல பெரும் வாய்ப்பு உள்ளது.
நம் பாரத நாட்டின் பெண்கள், குறிப்பாக கருவுற்று இருக்கும் போது,
பொறாமை, வஞ்சம், கேலி, பேராசை, தெய்வ நிந்தை, கோபம் போன்ற குணங்களை தவிர்த்து,
முடிந்தவரை நல்ல குணத்துடனேயே 10 மாதமும் இருக்க பழக வேண்டும். அதற்கு ஏற்ற சத்சங்கத்தில் இருக்க வேண்டும்.

  • நம் நாட்டின் மீது தேச பற்றை அதிகமாக்கும் புத்தகங்களையே கர்ப்ப காலங்களில் படிக்க வேண்டும்..
  • ஆன்மீக சிந்தனையை அதிகமாக்கும் புத்தகங்கள் அதிகம் படிக்க வேண்டும்.. 
  • ஆன்மீக பெரியோர்கள் பேசும் ஆன்மீக விஷயங்களையே கேட்க வேண்டும்..
  • குமுதம், ஆனந்த விகடன் போன்ற கேளிக்கை நிறைந்த மனதை சபலப்படுத்தும் புத்தகங்கள், நாவல்கள் போன்ற ஆன்மீக சிந்தனை தராத புத்தகங்களை இந்த சமயத்திலாவது பிறக்க போகும் குழந்தைக்காகவாவது தவிர்க்க வேண்டும்.
  • தீய குணங்கள் கொண்டவர்களை தன்னிடம் நெருங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  • எப்பொழுதும் மகிழ்ச்சியாக மன கொதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
  • பிறக்க போகும் குழந்தை, தாய் தந்தை மதிக்கும், ராம கிருஷ்ணரை போன்று உலகம் ஆளும் திறமையுடன், பலத்துடன்,  ஹிந்துவாகவே வாழ அதிகம் விரும்பும் பிள்ளையாக பிறக்க வேண்டும் 

என்று எப்பொழுதும் ஆசை பட வேண்டும்.



  • வேதத்தில் உள்ள ஹிந்து தெய்வங்களை தினமும் பிரார்த்திக்க வேண்டும்.
  • ஹிந்து தெய்வங்களை கேலி செய்யும் மிலேச்ச, வாலிகர்கள் நட்பை, அவர்கள் கொடுத்ததை வாங்குவதை தவிர்க்க வேண்டும்..
  • அதிக நேரம் ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்...

இப்படி ஒரு கருவுற்ற பெண் 10 மாதமும் வாழ்ந்தால்,

  • நாத்தீகன் குடும்பத்திலும் ஆத்தீகன் பிறப்பான்..
  • குணம் கெட்ட தகப்பனுக்கும், குணசீலன் பிறப்பான்...
  • வாலிக குணம் கொண்ட தகப்பனுக்கும், ஹிந்துவாக வாழ விரும்பும் நல்லவன் பிறப்பான்...
  • தீயவன் குடும்பத்திலும் நல்லவன் பிறப்பான்.. 

என்று நமது சாஸ்திரம் சொல்கிறது..

பொதுவாகவே,
பிறக்கும் குழந்தைகளின் குணம்,
பூர்வ ஜென்ம வாசனையாலும், அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் குணத்தாலும் தான் நிர்ணயிக்கப்படுகிறது..

பூர்வ ஜென்ம குணங்கள்
தீய குணங்களா? நல்ல குணங்களா? என்று நமக்கு தெரியாது...
ஆனால், கருவுற்று இருக்கும் போது தாய்,
எதை கேட்கிறாளோ,
எதை பார்க்கிறாளோ,
எதை ருசிக்கிறாளோ,
எதை நினைக்கிறாளோ
அவை எல்லாம் குழந்தையின் பிறவி குணத்தையும் மாற்றவல்லது..

இதை சத்யம் ஆக்கியவள் "கயாது". பிரகலாதனின் தாய்.



ஹிரண்யகசிபு மகா பலசாலி...
அசுரர் குல அரசன்.

அசுரர்களும், தேவர்களும் காஷ்யப ரிஷியால் படைக்கப்பட்டவர்கள்..

அசுரர்கள், சுயமாகவே மகா பலம் கொண்டவர்கள்.
இது தவிர, தவம் செய்து பல வரங்களையும் பெற்று இருந்தனர்..

நாத்தீகன் "கடவுளே இல்லை" என்று சொல்லி திரிபவன்..

மனித படைப்புக்கு முன் படைக்கப்பட்டவர்கள் அசுரர்கள்.
அசுரர்கள் "கடவுள் இல்லை" என்று உளரும் நாத்தீகன் கிடையாது..
"நானே கடவுள்" என்று ஈஸ்வரனையும் எதிர்க்க வல்லவர்கள்.

சிவனையும், ப்ரம்மாவையும் நேரில் பார்த்த இவர்கள் "தானே தெய்வம்" என்று சொல்லும் அளவுக்கு பலமுடையவர்களாக இருந்தனர்..
தேவர்களை அடக்கிய ஹிரண்யகசிபு, பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை கைப்பற்றி விட்டான்..

பாற்கடலில் உள்ள விஷ்ணுவை மட்டும் அவனால் பார்க்க முடியவில்லை..
நாராயணனையும் வென்று விட்டால், 'இனி ஒரு தெய்வமும் தனக்கு மேல் கிடையாது' என்று சொல்லி கொள்ள ஆசைப்பட்டான்.

ஒரு வருடமல்ல, இரண்டு வருடமல்ல, ஒரு மனுவின் முழு கால அளவான 71 சதுர் யுகத்தை ஹிரண்யகசிபு ஒருவனே ஆண்டு வந்தான்.



அவனுக்கு பல குழந்தைகள் உண்டு. அனைவருமே அசுர குழந்தைகள்.. யாருக்கும் அடங்காதவர்கள்.. மகா பலசாலிகள்..

தேவர்கள் சொர்க்க லோகத்தில் ஹிரண்யகசிபுவுக்கு பயந்து, அவன் கட்டளைப்படி, வேலை செய்து கொண்டு இருந்தனர்..
வரம் கொடுத்த பிரம்மாவும் இவனுக்கு பயந்து மறைந்து இருந்தார்.. சிவனும் அமைதியாக இருந்தார்.




அந்த சமயத்தில், ஹிரண்யகசிபுவின் மனைவி "கயாது" கருவுற்றாள்.
அப்பொழுது ஹிரண்யகசிபு சில வருடங்கள் தவம் செய்ய சங்கல்பித்து இருந்தான்..

தன் மனைவி கருவுற்று இருப்பதால், அவளுக்கு பிறக்க போகும் தன் குழந்தையை தான் இருந்து பார்க்க ஆசைப்பட்டான்.

"தான் தவம் முடித்து திரும்பி வரும் வரை, அவளுடைய கர்ப்பம் தங்கட்டும்" என்று தன் வலிமையால் நிறுத்தி விட்டு, தவம் செய்ய புறப்பட்டான்.

71 சதுர் யுகங்கள் தலை தூக்க முடியாமல், தேவர்கள் அவமானப்பட்டனர். மும்மூர்த்திகளும் கூட அமைதி காத்த நிலையில், பெருந்துயரை தேவர்களாக இருந்தும் அனுபவித்து கொண்டிருந்தனர்.

'வேத மந்திரங்களையே' இவன் காலத்தில் மாற்றி விட்டான்..
எந்த தேவனுக்கும் 'பூஜை' கிடையாது, 'மரியாதை' கிடையாது என்று செய்து விட்டான்..
"ப்ரம்ம" தேவனுக்கும், "சிவனுக்கும்", மறைந்து இருக்கும் "விஷ்ணுவுக்கும்" கூட பூஜை இல்லாமல் செய்து விட்டான் ஹிரண்யகசிபு.

பூமியில் உள்ள மக்கள் வேதத்தில் உள்ள தெய்வங்கள் பெயரே மறந்து விட்டனர்..
அனைவரின் வாயிலும் "ஹிரண்யாய நம:' என்ற கோஷம் தான்.


ஹிரண்யகசிபுவுக்கு கோவில்கள், ஹிரண்யகசிபுவுக்கு பூஜைகள், ஹிரண்யகசிபுவுக்கு ஸ்தோத்திரங்கள், ஹிரண்யகசிபுவின் பெயரில்  வேதங்கள் 
என்று 71 சதுர் யுகமும் சர்வவல்லமையுடன் ஆட்சி செய்து வந்தான். எதிர்க்க ஆள் இல்லாமல் அசுரர்கள் ஆட்சி நடந்தது.
தன் தவ வலிமையால், "கயாது தான் வரும்வரை பிரசவிக்காமல் இருக்கட்டும்" என்று சொல்லி ஹிரண்யகசிபு தவம் செய்ய சென்று விட்டான்.
இது தெரிந்ததும், தேவர்கள் பெரும் பதட்டத்திற்கு உள்ளாகினர்..

"ஹிரண்யகசிபு என்ற இந்த அசுரனையே எதிர்க்க வழி தெரியவில்லை, இவனுக்கு இன்னோரு மகன் வேறு பிறக்க போகிறானே!!!
நம்மை நிரந்தரமாக தலை தூக்க விட மாட்டான் போல உள்ளதே"
என்று நினைத்த தேவர்களின் தலைவன் இந்திரன், 'இது தான் சமயம்' என்று அதர்மம் நடக்க போவதை தடுக்க சில சமயம் அதர்மத்தை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்...

ஹிரண்யகசிபு இல்லாததால், தைரியம் கொண்டு, கருவுற்று இருக்கும் கயாது முன் தோன்றினார்.

பிறக்க போகும் குழந்தை அசுரன் என்பதால், வரப்போகும் அபாயத்தை நினைத்து, கயாதுவின் பிடித்து தன் இடத்திற்கு இழுத்து சென்றார் இந்திர தேவன்..

இந்திரனை எதிர்க்க பலமில்லாத கயாது, கதறினாள், கூச்சலிட்டாள்..
அப்பொழுது ப்ரம்ம தேவனின் மானஸ புத்ரர் நாரத முனி ப்ரத்யக்ஷமானார்..

நாரதர் இந்திரனை தடுத்து, "கயாதுவை கொல்வதால் ஒரு பயனும் இல்லை.
மேலும் நீ இப்படி செய்தாய் என்று ஹிரண்யகசிபுவுக்கு தெரிந்தால், உன் நிலையை நினைத்து பார்" என்று நிதானப்படுத்தினார்.


"பிறக்கப்போகும் குழந்தையும் அசுர குணத்துடன் பிறக்குமே, எங்களுக்கு விமோசனமே கிடையாதா?" என்று இந்திரன் கேட்க,
"இந்த குழந்தை மூலம் தான் உங்களுக்கு நல்ல காலம் ஏற்பட போகிறது" என்று சமாதானம் பேசி இந்திரனை விலக்கினார்.

கயாதுவை மீண்டும் அவள் அரண்மனையிலேயே விட்டு விட்டு செல்ல நினைத்தார் நாரதர்.

தேவ அசுரர்கள் எப்பொழுதும் பகைமை உணர்வு கொண்டவர்கள் என்பதால், 'ஹிரண்யகசிபு திரும்பி வரும் வரை தனக்கு பாதுகாப்பு நாரதர் மட்டுமே தர முடியும்' என்று தீர்மானித்தாள் கயாது.

நாரதர் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினாள்.

நாரதர், இவள் நிலையை புரிந்து கொண்டு தன் ஆசிரமத்துக்கு கூட்டி சென்றார்..
ரிஷிகளில், முனிவர்களில் சிறந்தவர் நாரதர்.

ரிஷிகள், முனிவர்கள் எப்பொழுதும் தியானம், தவம் செய்வதில் ஆர்வம் மிக்கவர்கள்.
சில ரிஷிகள் கோபமிக்கவர்கள் கூட.
தவம் செய்து சிவபெருமானை, விஷ்ணுவை வழிபடுபவர்கள்..


முனியான நாரதரோ,
அனைவரும் ரசிக்கும் படியாக கழுத்தில் துளசி மாலை அணிந்து கொண்டு, நெற்றியில் திலகம் இட்டு கொண்டு, எப்பொழுதும் நாராயண நாமத்தை பஜித்து கொண்டே இருப்பார்..

கடும் தவம் செய்து தெய்வங்களை நெற்றியின் புருவத்தில் ஜோதி ஸ்வரூபமாக தரிசிக்கும் ரிஷிகள் மத்தியில்,
நாரதர் தன் பஜனையால் நேராக கைலாயம் சென்று ருத்ரனை தரிசித்து விடுவார்.
பாற்கடலில் உள்ள தன் இஷ்ட தெய்வமான நாராயணனையும் எந்த தடையும் இல்லாமல் தரிசித்து விடுவார்.
ப்ரம்ம லோகம் முதல், பாதாள லோகம் வரை,
தேவர்கள் ஆட்சி செய்தாலும்,
அசுரர்கள் ஆட்சி செய்தாலும்
இவருக்கு எங்கும் மதிப்பு.
எப்பொழுதும் ஆனந்தமாகவே உள்ள இவர் முகத்தை பார்த்தாலே, தேவர்கள் மட்டுமல்ல, கம்சன், ஹிரண்யகசிபு போன்றவர்கள் கூட இவரை தடுப்பதில்லை..

நாராயண நாமத்தில் ஸித்தி அடைந்தவர் நாரதர்..



இப்படி ஒரு மகான், கயாதுவின் கர்ப்ப காலத்தில் கூடவே இருந்தார் என்றால், அவள் பாக்கியத்தை கேட்கவும் வேண்டுமா?..

நாரதர் கயாதுவுக்கு
ஸத் விஷயங்களை, நல்ல பண்புகள், ஒழுக்கத்தின் பெருமைகளை, தர்மங்களை,
தான் எப்படி ப்ரம்ம புத்ரன் ஆனேன் என்ற காரணத்தை தினமும் சொல்வார்..

தினமும் நல்ல விஷயங்களை கேட்டு கொண்டே, மன சாந்தியுடன், நிம்மதியாக நாரதர் ஆசிரமத்தில் இருந்து வந்தாள்.

நாரதர் இப்படி நல்ல தர்மங்களை சொல்லி கொண்டே இருக்க, கர்பவதியான கயாது கேட்டு கொண்டே தூங்கி விடுவாள்..
இவள் தூங்கி இருக்கும் போதும்,
நாரதர் பிரத்யேகமாக தூங்கி கொண்டு இருக்கும் அவளுக்கு, நாராயணனின் மகத்துவத்தை, பர தத்துவத்தை சொல்ல ஆரம்பிப்பார்.
நாராயண நாமத்தை அகண்டமாக சொல்வார்.

இப்படி அவள் விழித்து இருக்கும் போது பொதுவான தர்மங்களையும்,
அவள் தூங்கும் போது நாராயணனின் பெருமையையும் சொல்ல சொல்ல, அவள் கர்ப்பத்தில் இருந்த அசுர குணங்களுடன் உள்ள குழந்தை பிரகலாதன், பக்த பிரகலாதனாக தயாராகி கொண்டு இருந்தார்.

பல வருடங்கள் தவம் செய்து விட்டு, திரும்பி வந்தான் ஹிரண்யகசிபு.
கர்பத்துடனேயே உள்ள தன் மனைவியை தேவர்கள் ஹிம்சை செய்யாமல் நாரதர் தான் பார்த்து கொள்கிறார் என்றதும், ஹிரண்யகசிபுவுக்கு நாரதர் மேல் தனி பிரியம் ஏற்பட்டது..

கயாது அழகான ஆண் குழந்தையை பெற்றாள்.
பிரகலாதன், பிறவியிலேயே நாராயண ஸ்மரணையுடனேயே பிறந்தான்.
மற்ற அசுர குழந்தைகள் மத்தியில், இவன் குணம் மட்டும் தனித்து இருந்தது.

'ராஜா மகன் ஆயிற்றே, அப்படித்தான் இருப்பான்' என்று ஹிரண்யகசிபு நினைத்து கொண்டான்.



தகுந்த வயதில் பாடசாலை அனுப்பினான்..
அங்குள்ள, மாணவர்கள் அனைவரையும் நாராயண கீர்த்தனை செய்ய வைத்து விட்டான்.

71 சதுர் யுகங்களாக, மக்கள் மனதில் இருந்து மறைந்து போய் இருந்த 'நாராயண' நாமத்தை வெளிப்படுத்தி விட்டான் பிரகலாதன்.

தன் பிள்ளை, அசுர குணத்துடன் இல்லாமல் சாத்வீகமாக இருப்பதை பொறுத்து கொண்ட ஹிரண்யகசிபுவால், 'நாராயண' நாமம் மீண்டும் உலகிற்கு வெளிப்பட்டதை ஒப்புக்கொள்ள முடியவில்லை..

பிரகலாதன் தன் பிள்ளை என்பதால் அறிவுரை சொல்லி நிறுத்த பார்த்தான்.. பலிக்கவில்லை..
அசுர குணம் கொண்ட இவன், தன் பிள்ளை என்பதை கூட மறந்தான்.
யானையை ஏவி மிதிக்க வைத்தான்.. விஷ பாம்புகள் கடிக்க செய்ய பார்த்தான்..
எங்கும் நாராயணன் இருப்பதை ஞானத்தால் பார்த்த பிரகலாதனுக்கு எதுவும் ஆகவில்லை.
இவன் பலத்தை கண்டு ஹிரண்யகசிபுவே பிரமித்தான்..
"தான் செய்த தவம் எல்லாம் இவனுக்கு பலித்து விட்டதோ" 
என்று நினைத்தான்.

"உலகமே என்னை வணங்கும் போது நீயும் என்னை வணங்கு" என்று சொல்ல,
"நீங்கள் என் தந்தை என்ற காரணத்துக்கு உங்களை என் தெய்வமாக வணங்குகிறேன்.. 
ஆனால் நம் அனைவருக்கும் தெய்வம் அந்த நாராயணனே"
என்று பிரகலாதன் பதில் சொல்ல,
மகா ஆத்திரம் கொண்டான்..
"யாரடா நீ?.. சந்தன காட்டுக்குள் முளைத்த கருங்காலி மரமே...
அசுர குலத்தில் பிறந்து, எனக்கு மகனாக பிறந்தும், எப்படி உனக்கு இந்த புத்தி வந்தது?
உனக்கு யார் "நாராயணன் பரப்ரம்மம்" என்று சொன்னான்?.."
என்று மிரட்டி உண்மையை அறிந்து கொள்ள பார்த்தான்....
பிரகலாதன் பதில் சொல்லவில்லை...



நா ப்ருஷ்ட கஸ்யசித் ப்ரூயாத்
ந ச அந்யாயேன ம்ருச்சத:

"கேட்காமல் யாருக்கும் நல்ல வார்த்தைகளை சொல்லாதே..
நேர்வழி தவறி இருப்பவர்கள் விஷமமாக கேட்டாலும் நல்ல வார்த்தைகளை சொல்லாதே!!" என்று சாஸ்திரம் சொல்கிறது..

"நாராயணா என்ற சொல்லை யார் உனக்கு சொல்லி கொடுத்தார்கள்?" என்று தந்தை கேட்டும், அவன் கேட்பதில் விஷமம் உள்ளதால், பிரகலாதன் பதில்
சொல்லாமல் மௌனமாக இருந்தான்..

"நாரதர் தான் எனக்கு உபதேசம் கருவில் இருக்கும் போதே செய்தார்" என்று ரகசியத்தை சொல்லவில்லை.

நினைத்ததை நடத்தியே தீர வேண்டும் என்று அசுர குணம் கொண்ட ஹிரண்யகசிபு, தன்னிடம் இவன் சொல்ல தயங்கினாலும், இவனுக்கு பாடம் சொல்லி தரும் ஆசிரியர்கள் கேட்டால் சொல்வான் என்று நினைத்து, அவர்களை கேட்க சொன்னான்.

"குரு கேட்டால் சிஷ்யன் எதையும் மறைக்க கூடாது.. யார் உனக்கு நாராயண நாமத்தை சொல்லி தந்தது"
என்று ஆசிரியர்கள் கேட்டும், ரகசியத்தை சொல்லவில்லை பிரகலாதன்..

உண்மையை சொன்னால், இவர்கள் தன் தந்தையிடம் சொல்லி விடுவார்கள் என்பதால், அதர்மத்துக்கு வழி செய்ய குருவே கேட்டாலும், சொல்லக்கூடாது என்று அமைதியாக இருந்தார் பிரகலாதன்.

ஆனால், மனதில் ஒன்று நினைத்து, வெளியில் ஒன்று பேசும் குணம் குழந்தைகளுக்கு கிடையாது...

நாராயண நாமத்தின் மகிமையை தன்னுடன் படிக்கும் அசுர குழந்தைகளுக்கு சொல்லும் போது, அவர்கள் "யார் நாராயணன்.. யார் உனக்கு சொன்னார்கள்?" என்று கேட்ட பொழுது மறைக்காமல்
ரகசியத்தை அவர்களுக்கு சொன்னான் பக்த பிரகலாதன்.

இப்படி அசுர குலத்தில் பிறந்தும், ஹிரண்யகசிபுவுக்கே மகனாக பிறந்தும், அசுர குணங்கள் இல்லாமல், ஞானியாக,
"பிரகலாத ஆழ்வான்" என்றும்,
"பக்த பிரகலாதன்" என்றும் ஆனதற்கு, கயாது கருவுற்ற காலத்தில் அவள் கேட்ட ஸத் சங்கமே காரணம்..

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் பிறவி குணங்கள் கூட, தாயின் ஸத் சங்கத்தால் மாறி விடும்.

தாய் கேட்காவிட்டாலும், ஸத் சங்கத்தில் இருந்து கொண்டிருந்தால், அவள் கருவில் உள்ள குழந்தையின் குணங்கள் மாறி, நல்ல குழந்தைகள் பிறக்கும்..

இந்த ரகசியம் நம் பாரத நாட்டில் இது நாள் வரை காக்கப்பட்டது..
கர்ப்ப காலங்களில் பெண்களை பிறந்த வீட்டுக்கு அனுப்புவது கூட அவள் வேலை சிரமம் கூட இல்லாமல் ஸத் சங்கத்தை அனுபவிப்பாள் என்பதற்காக தான்.



மன உளைச்சல் கொண்டு, பணத்திற்காக வேலைக்கு சென்று, ஸத் சங்கம் இல்லாமல் தின்று தூங்கி வழியும் பெண்கள், தாமஸ குணம் கொண்ட சோம்பேறிகளையும்,
கோபம், ஆத்திரம், பொறாமை வளர்க்கும் புத்தகங்கள், நாடகங்கள், சினிமா கேளிக்கைகளில் பொழுது போக்கும் பெண்கள் ராஜஸ குணம் கொண்ட கோபப்படும் பொறாமைப்படும் குழந்தைகளை பெற்று விடுகின்றனர்.

வீட்டுக்கு வீடு நம் பாரத நாட்டில் பிறக்கும் குழந்தைகள் நல்லவர்களாகவும், தெய்வ சிந்தனை உடைவர்களாகவும், மகான்களாகவும், ஞானிகளாகவும் பிறந்தனர்.
இன்று வரை ஏறத்தாழ 90 சதவீத பாரத பெண்கள் கர்ப்ப காலங்களில் ஸத் சங்கத்தில் ஈடுபட்டு கொண்டுள்ளனர்.
பெரும்பாலும் இந்த மண் நல்ல குழந்தைகளை தான் பெற்றுள்ளது.

1000 வருடங்கள், நம் பாரத நாட்டை அந்நிய மதங்கள் சூழ்ந்த போதும், வீட்டுக்கு வீடு தேசபற்றுள்ளவர்கள், தெய்வ பக்தியுடன் ஹிந்துவாகவே வாழ முடிந்ததற்கு காரணம் நம் ஹிந்து தாய்மார்களே..

இனி வருங்காலத்தில் பிறக்க போகும் குழந்தைகள், 
தேசபற்றுள்ளவர்களாக, 
தெய்வ பக்தியுடன் ஹிந்துவாகவே வாழ விரும்புபவர்களாக 
வாழ வழி செய்ய போவதும் நம் ஹிந்து தாய்மார்களே...

அசுர தகப்பனுக்கு, அசுர குலத்தில் பக்தனான பிரகலாதன் பிறந்தது போல, பெற்றவர்கள் தீய பழக்கம், குணம் கொண்டிருந்தாலும்,
நல்ல பிள்ளைகள் பிறக்க வழி செய்ய போவது கருவுற்று இருக்கும் பெண்களே.
கருவுற்று இருக்கும் தாய் நல்ல குழந்தைகளை பெற்று நம் பாரத நாட்டுக்கு தர வேண்டும்.



நம் பாரத நாட்டுக்கு, மகான்களை தேச பற்றுள்ளவர்களை, ஹிந்து தெய்வங்களை மதிக்கும் குழந்தைகளை பெற்று தர, கயாதுவை போன்ற தாய்மார்களே தேவை. 

வாழ்க ஹிந்து மதம்..
வாழ்க ஹிந்துக்கள்..