Followers

Search Here...

Saturday 21 December 2019

நமக்கு மந்திர ஸித்தி ஆக என்ன செய்ய வேண்டும்? ஹிந்துக்கள் தெரிந்து கொள்வோமே..

புரஸ்சரணம் என்றால் என்ன?
நாம் குருவிடம் உபதேசமாக பெற்ற மந்திரங்கள் நமக்கு ஸித்தி ஆவதற்கு "புரஸ்சரணம் (புரச்சரம்) என்கிற முறையை கடைபிடிக்க வேண்டும்" என்று சாஸ்திரம் வழி காட்டுகிறது.




உதாரணத்திற்கு, திருவஷ்டாக்ஷர மந்திரத்தையோ, தாரக மந்திரமான "ராம" நாமத்தையோ, அதில் ஸித்தி பெற்ற குருவிடம் நாம் உபதேசம் பெற்ற பின்,
அந்த மந்திரத்தை அக்ஷரத்திற்கு லக்ஷம் ஜபம் செய்ய வேண்டும். 
உதாரணத்திற்கு,
தாரக மந்திர (ராம) ஜபம் லட்சம் தடவை சொல்லும் போது, 2 எழுத்துள்ள தாரக மந்திரம், மொத்தம் சேர்த்து 2 லட்சம் ஆகிறது..

ஜபம் செய்த பின்,
2,00,000/10= 20,000 தடவை, தாரக மந்திரம் சொல்லி அக்னியில் "ஹோமம்" செய்ய வேண்டும்.

ஹோமம் செய்த பின்,
20,000/10 = 2,000 தடவை தாரக மந்திரம் சொல்லி தீர்த்தம் விட்டு "தர்ப்பணம்" செய்ய வேண்டும்.

தர்ப்பணம் செய்த பின்,
2,000/10 = 200 தடவை தாரக மந்திரம் சொல்லி தீர்த்தத்தை தன் தலை மேல் தெளித்து "மார்ஜனம்" செய்ய வேண்டும்.
மார்ஜனம் செய்த பின்,
200/10 = 20 "வேத பிராம்மணர்களுக்கு" அல்லது நாம் சொல்லும் "வேத மந்திரத்தில் ஸித்தி ஆன" 20 பேருக்கு போஜனம் செய்ய வேண்டும்.

இப்படி செய்யும் முறையே "புரஸ்சரணம்" என்று சொல்லப்படுகிறது...
இந்த முறையில் உபதேசம் பெற்ற மந்திரம் சொல்லப்படும் போது, நமக்கு அந்த மந்திர ஸித்தி உண்டாகும்.. அதன் சம்பந்தமான தெய்வ காட்சிகள் கூட கிடைக்கும்.

இந்த சாதனைகள் செய்யும் நேரத்தில்,
அதிகம் பேச கூடாது..
கோபம், காமம் கூடவே கூடாது.. பொறுமை அவசியம்.
புளிப்பு, இனிப்பு, காரம் உணவில் சேர்க்க கூடாது..
ஒரே இடத்தில் இருந்தே செய்ய வேண்டும்..
கோவில், தன் வீட்டில், புண்ய க்ஷேத்ரத்தில் செய்யலாம்.
மந்திர ஸித்தி அடைய லட்சியவாதியாக இருக்க வேண்டும்.

"தெய்வம் கருணையே வடிவானவர், சுலபமானவர்" என்று ஒரு புறம் சொல்கிறது வேதம்...
மற்றொரு இடத்தில்,
"தெய்வ அணுகிரஹம் கிடைக்க, அக்ஷரத்திற்கு லக்ஷம் ஜபம் செய்ய வேண்டும், பிறகு புரஸ்சரணம் முறையில் ஹோமம், செய்ய வேண்டும்" என்றும் சொல்கிறதே!!..
"இப்படி செய்தால் தான் பகவான் நமக்கு அருள் புரிவாரா?..." என்ற கேள்வி நமக்கு எழலாம்..

நம் முயற்சியே இல்லாமல் பகவான் கருணையை வர்ஷித்து கொண்டு தான் இருக்கிறார்..
நாத்தீகனுக்கு கூட, காமம், கோபம், பேராசை கொண்டவனுக்கு கூட, கோவிலில் அர்ச்ச அவதாரமாக உள்ள பெருமாள் வீதி உலா என்று தானே புறப்பட்டு, மதியாதார் வீட்டுக்கு முன் கூட வந்து நிற்கிறார்.. தரிசனத்தை தகுதி பாராட்டாமல் தருகிறார்..
அர்ச்ச அவதாரமாக இருக்கும் போது, பெருமாள் தன் பெருமை அறியாமல், சுலபமாக தான் இருக்கிறார். அனைவரும் பார்த்து விடுகின்றனர்.







14 வருடம் ராம தரிசனத்துக்காக காத்து இருந்தார், பரதன்...
பல துன்பங்களை சகித்து கொண்டு, கடைசியில் நரசிம்மமாக தரிசனம் பெற்றான் பிரகலாதன்.
பல வருடங்கள் காத்து இருந்து, ராம தரிசனம் பெற்றாள் சபரி.
80 கோடி ராம ஜெபம் செய்து, ராமபிரானை நேரில் தரிசித்தார் தியாகராஜர்.
எல்லையில்லா பெருமை உடைய பெருமாளை தரிசிக்க, எத்தனை முயற்சி செய்தாலும் தகுமே...

இந்த உலகில், அல்ப விஷயத்தை அடைவதற்கே, எத்தனை முயற்சி செய்கிறோம்..
மோக்ஷமே கொடுத்து விடும் பகவானை தரிசிக்க, இந்த சாதனைகள் ஒன்றும் கஷ்டமில்லையே... 

அக்ஷரத்திற்கு லட்சம் ஜபித்து, முறையாக புரஸ்சரண ஹோமம் செய்தால் தான் பகவான் கருணை செய்வார் என்று இல்லை..

மந்திர ஸித்தி பெற்ற குரு, நமக்கு உபதேசம் செய்ததற்கே, அந்த மந்திரத்தின் அதிபதியான தேவதை நம் மீது கருணை காட்டி விடுகிறார்கள் என்பது உண்மைதான்.
குருவின் மகத்துவமே, நமக்கும் தெய்வ அருள் கிடைக்க செய்து விடும்.

உதாரணத்திற்கு, ராம தரிசனம் பெற்ற, ராம நாமத்தில் ஸித்தி ஆன ஒரு குரு, நமக்கு தாரக மந்திரத்தை உபதேசம் செய்த போதே, குருவின் சிபாரிசு பெற்ற நமக்கு மறு ஜென்மம் கிடையாது என்று நிச்சயிக்கப்பட்டு விடுகிறது.
மோக்ஷ வாசலை திறந்து விட்டு விடுகிறார் பரமாத்மா நாராயணன்..

"குருவின் உபதேசமே தனக்கு மோக்ஷத்தை நிச்சயம் கொடுத்து விடும்" என்ற ஆன பிறகு,
எதற்காக அக்ஷரத்திற்கு லக்ஷம் ஜபம் செய்ய வேண்டும்? 
பிறகு எதற்கு புரஸ்சரணம் ஹோமம், செய்ய வேண்டும்? 
என்று கேட்க தோன்றலாம்...
ஒரு தந்தை (குரு), தன் பெண்ணை (நாம்) ஒரு நல்ல வரனுக்கு (பரமாத்மா) மணம் செய்து கொடுக்கிறார்.
கணவன், இவளை தன் மனைவி என்ற காரணத்துக்காகவே, கட்டாயம் தன் வீட்டுக்கு கூட்டி கொண்டு தான் செல்ல போகிறான்.

இருந்தாலும்,
அந்த பெண் தன்னை பார்த்து அவன் ஆசைப்படும் விதமாக தன்னை அழகாக அலங்கரித்து கொள்கிறாள்.
அவள் "தன்னை தான் அலங்கரித்து கொள்கிறாள்" என்றாலும், இதைப்பார்த்து கணவன் சந்தோஷப்படுவான் என்பதால் தானே அப்படி செய்து கொள்கிறாள்.
அது போல,
குருவின் கருணைக்கு பாத்திரமாகி, குரு மூலம் மந்திர உபதேசமும் பெற்று விட்டால், பெருமாளின் வீடான மோக்ஷம் நமக்கும் சொந்தம் ஆகி விடும்..  பெருமாள் நம்மையும் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொண்டு விடுகிறார்.. சந்தேகமே இல்லை.
பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து மீட்க பட்டு விடுவோம் என்பதில் ஐயமே இல்லை...
குருவின் கருணையால், குரு செய்த மந்திர உபதேசத்தால், நமக்கு மோக்ஷம் நிச்சயம் என்பதற்காக,
மீதி நாட்களை சும்மா இருந்து, தினமும் மற்றவர்களை போலவே நாமும் சாப்பிட்டு, தூங்கி பொழுதை போக்கி இந்த ஜென்மத்தை முடித்து கொண்டால், குரு கிருபையால் மோக்ஷம் கிடைத்து விடும்... ஆனாலும் நமக்கே பெருமாள் முன் நிற்க கூசுமே.. நம்மையே நமக்கு பிடிக்காமல் போகுமே..

ஒரு பெண் தன் கணவனை காணும் முன், அவன் ஆசையோடு தன்னை பார்க்க வேண்டுமே என்று தன்னை அலங்கரித்து கொள்வது போல,
மோக்ஷம் என்ற வீட்டுக்கு குருவின் கருணையால் போகப்போகும் நாமும், அந்த பரமாத்மா நம்மையும் ஆசையாக காண வேண்டுமே!! என்ற ஆவலில் நம்மை அலங்கரித்து கொள்ளும் முறையே புரஸ்சரணம்.
நெற்றியில் திருமண், வாயில் எப்பொழுதும் குரு உபதேசித்த பகவானின் நாமம், மனதில் எப்பொழுதும் பகவானின் சிந்தனை, தினமும் நாம் செய்யும் காரியங்களை பார்த்து பகவான் "சபாஷ்" போடும் படியாக வாழ்ந்து, கடைசியில் இந்த உடலை இந்த மண்ணில் விட்டு விட்டு சென்றால்,
மோக்ஷ வாசலில் நம் வருகைக்காக பெருமாள் காத்து இருந்து, ஆசையோடு அழைத்து செல்கிறார்..




இவ்வாறு அக்ஷரத்திற்கு லட்சம் மந்திர ஜபம் செய்யப்பட்டு, புரஸ்சரண ஹோமம் செய்யும் போது, குருவின் கருணையால், பகவான் ப்ரீதி அடைந்து, அந்த மந்திரம் நமக்கு ஸித்தி அகும்படி செய்கிறார்.

மந்திர ஸித்தி அடைந்தவன், மற்றவர்களுக்கு செய்கிற ஹோமம் ஒரு சில ஆவர்த்தி ஆனாலும் நல்ல பலன் கொடுக்கும்..
அந்த மந்திரத்தின் தேவதை தன் சக்திக்கு உட்பட்ட அனைத்து அணுகிரஹத்தையும், ஸித்தி பெற்றவனுக்கு தரும்..

உப தேவதைகளை விட்டு, பரமாத்மா நாராயணன் ப்ரீதி அடையும் மந்திரங்களில் ஸித்தி ஆனவர்கள், மோக்ஷத்துக்கே தகுதி பெறுகிறார்கள். அவர்களே மகான்கள்..

வாழ்க ஹிந்து தர்மம்..
ஹிந்துவாக பிறக்க வாய்ப்பு கிடைத்ததே மகா பாக்கியம்...

போலி மதங்களில் உள்ளவர்களும், ஹிந்து தர்மத்தில் ஈர்க்கப்படுகிறார்கள்...

Friday 13 December 2019

பிரபந்தங்கள், பதிகங்கள், பஜகோவிந்தம், கந்த ஷஷ்டி கவசம் சொல்லி பிரார்த்தனை செய்வதற்கும், வேத மந்திரங்களை சொல்வதற்கும் வித்யாசம் உண்டா? தெரிந்து கொள்ள வேண்டாமா?

தெய்வ சாந்நித்யம்:
"ருத்ரம், புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்கள், சரியாக உச்சரிக்க படும்போது,
தெய்வங்கள் அந்த இடத்தில் தன் சாந்நித்யத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

"தெய்வ சாந்நித்யம்" அதிகம் உள்ள இடத்தில், எளிதாக "தெய்வ அருள்" பாமரனுக்கும் கிடைத்துவிடும்.



தெய்வ அருள்:
ஆழ்வார்கள் பாசுரங்களும், நாயன்மார்கள் பதிகங்களும் பாடும் போது,
தெய்வத்தை நாம் ஸ்துதி (போற்றி) செய்வதால், பக்தனுக்கு பக்தி வளர்கிறது..
தெய்வ அருள் (அனுக்கிரஹம்) கிடைக்கிறது.


4000 திவ்ய பிரபந்தங்கள் "வேதத்துக்கு ஈடானது" என்று கூறுகிறார்கள் பெரியோர்கள்.

"தமிழ் மறை" என்று திவ்ய பிரபந்தத்தை கூறுகிறார்கள் பெரியோர்கள்.

வேதத்தை அறிந்த, சர்வ சாஸ்திரமும் கரை கண்ட 'ஸ்வாமி வேதாந்த தேசிகர்', 
கடைசியாக ஆழ்வார்கள் தமிழில் அருளிய "திவ்ய பிரபந்தங்களை" எடுத்து படிக்கும் போது,
'தான் கற்ற வேதத்தின் சாரம் அனைத்தும் 4000த்தில் அடங்கி இருப்பதை கண்டு பிரமித்தார்' என்று அறிகிறோம். 
"தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே" என்று திவ்ய பிரபந்தத்தை வேதத்துக்கு நிகராக உயர்த்தி பேசுகிறார்.
"மறையில் (வேதத்தில்) தெளியாத அர்த்தங்கள் எல்லாம், பிரபந்தங்கள் மூலம் தெளிந்தது" என்று திவ்ய பிரபந்தத்தின் பெருமையை உரைக்கிறார் தேசிகர் என்று அறிகிறோம்.

அதே போல, யதி ராஜரான "ராமானுஜர்", 
திவ்ய பிரபந்தத்தை அனைத்து வைஷ்ணவ கோவில்களிலும் பெருமாளுக்கு முன் பாட வேண்டும் என்று, பெரும் சீர்திருத்தம் செய்தார். 
"திவ்ய பிரபந்தம் கேட்காத பெருமாள் கோவில் உலகில் இல்லை" என்ற அளவுக்கு தமிழ் மொழியில் உள்ள "திவ்ய பிரபந்தத்தை" உலகெங்கும் பரப்பினார்.

இப்படி "திவ்ய பிரபந்தத்தை பெருமாள் முன் கட்டாயம் பாட வேண்டும்" என்று தமிழை முன் நிறுத்தினார் ராமானுஜர்.

வேதத்துக்கு நிகரான 'திவ்ய பிரபந்தத்தை பெருமாளே உகந்து கேட்கிறார்' என்றதும், 
அதற்காக, உடனே ராமானுஜர்,
"இனி வேத மந்திரங்கள் ஓத வேண்டாம்.. பூஜை விதிகளை மாற்றுங்கள். திவ்ய ப்ரபந்தமே போதும்!!" என்று சொல்லி விடவில்லை.
இதை நாம் கவனிக்க வேண்டும்.. 
இதில் உள்ள ரகசியத்தை அறிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும்..

வேதமும், திவ்ய ப்ரபந்தமும் இரண்டையும் அறிந்தவர் ராமானுஜர். 
இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை அறிந்தவர்.. 

"ஸ்துதி வேறு, மந்திரங்கள் வேறு" என்ற வேற்றுமையை அறிந்தவர் ராமானுஜர்.
"ஸ்துதி (prayer) வேறு, மந்திரங்கள் வேறு" என்ற வேற்றுமையை  நாமும் உணர வேண்டும்..
"திவ்ய ப்ரபந்தமோ, பதிகங்களோ, கந்த சஷ்டி கவசமோ, கந்த குரு கவசமோ, அபிராமி அந்தாதியோ" மந்திரங்கள் அல்ல.. 
இவை அனைத்துமே "தெய்வத்தை பற்றிய ஸ்துதிகள், பாடல்கள்".

"ருத்ரம், புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்கள், தெய்வத்தை பற்றிய ஸ்துதிகள், பாடல்கள் அல்ல.. 




'ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள் உச்சரிக்க படும் போது, அந்த வேத ஒலிகள், சிவபெருமானை போற்றி பாடவில்லை.
மாறாக,
ஏகாதச ருத்ரர்களையே (11 ரூபத்தில் உள்ள சங்கரனை) அங்கு ஆவிர்பவிக்க செய்கிறது. 
சிவபெருமானை போற்றி பாடும் வெறும் பாடல் அல்ல 'ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள்.
சிவபெருமானையே ஆவிர்பவிக்க செய்கிறது ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள்.
இந்த வேற்றுமையை நாம் உணர வேண்டும்.




'புருஷ சூக்தம்' போன்ற வேத மந்திரங்கள் உச்சரிக்க படும் போது, அந்த வேத ஒலிகள், ப்ரம்ம தேவனை படைத்த, உலக சிருஷ்டிக்கு காரணமான மூலமான பரமாத்மா நாராயணனை வெறுமனே போற்றி பாடுகிறது என்று நினைக்க கூடாது.
மாறாக, பரமாத்மா நாராயணனையே அங்கு ஆவிர்பவிக்க செய்கிறது.
நாராயணனை போற்றி பாடும் வெறும் பாடல் அல்ல 'புருஷ சூக்தம்' போன்ற வேத மந்திரங்கள்.
நாராயணனை ஆவிர்பவிக்க செய்யும் வேத மந்திரங்கள் இவை என்று அறிய வேண்டும்.

நாராயணனை, போற்றி பாடப்படும் திவ்ய ப்ரபந்தமும்,
நாராயணனை, ஆவிர்பவிக்க செய்யும் வேத மந்திரமும் 
ஒன்று என்று நினைக்க கூடாது.
இந்த வேற்றுமையை ஹிந்துக்கள் நாம் உணர வேண்டும்.

தமிழில் அர்ச்சனை செய்தால் கடவுளுக்கு புரியாதா?
என்று கேட்பது வீண் பிடிவாதம்..
மனிதர்களுக்கு இடையே உள்ள காழ்ப்புணர்ச்சியை, தெய்வத்திடம் நாம் காண்பிக்க கூடாது. 
2000 வருடத்துக்கு முன்பேயே, பெருமாள் தமிழ் பிரபந்தங்களை கேட்டு கொண்டு தான் இருக்கிறார். 
ஊமை தன் மனதில் பிரார்த்தனை செய்தாலும் புரிந்து கொள்கிறார்.
காழ்ப்புணர்ச்சியை ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள் மீீது காண்பிக்க கூடாது. 

தெய்வ சாந்நித்தியம் வேத மந்திரங்களால் மட்டுமே ஏற்படுகிறது.
தெய்வ சாந்நித்தியம் உள்ள கோவில்களில்,
நாம் போய் நின்று"கோவிந்தா.. கோவிந்தா..." என்று ஸ்துதி செய்தால் கூட, நினைத்த காரியங்கள் நிறைவேறுகிறது.

தெய்வத்துக்கு எந்த மொழியும் தடையில்லை.. ஊமை பாஷையும் அறிந்தவர் அவர்.
ஆனால், நாம் செய்யும் பிரார்த்தனைகள் பலிக்க, அந்த தெய்வங்கள் தன் சாந்நித்யத்தை காட்ட, வேத மந்திரங்கள் அவசியம். 

வேதத்தை ஒதுக்கி, வழிபடும் இடங்களில், தெய்வ சாந்நித்யம் குறைகிறது. 

ஹிந்து தர்மத்தின் மீது பொறாமை கொண்டவர்கள், 'வேத மந்திரங்கள் கோவிலில் ஒலிக்க கூடாது' என்று பெருமுயற்சி செய்கின்றனர். 
கோவிலை காப்பது ஹிந்துக்களின் கடமை.

வேத மந்திரங்கள் கோவிலில் ஒலிக்க செய்வது ஹிந்துக்களின் கடமை.

கோவிலில் 'பாசுரங்கள், பதிகங்கள், கந்த சஷ்டி கவசம்' பாடுவதும் நமக்கு உள்ள கடமை.

இதை ஹிந்துவாக பிறந்த எவரும் மறக்க கூடாது. 





ஹிந்து கலாச்சாரத்தை கெடுத்து, தன் போலி தெய்வங்களை பாரத மண்ணில் விதைக்க முயலும் கீழ்தரமானவர்களை ஒடுக்க வேண்டியது, ஒவ்வொரு ஹிந்துவுக்கும் கடமை.


"ஸ்துதி வேறு, மந்திரங்கள் வேறு" என்ற வேற்றுமையை நாமும் உணர வேண்டும்..

கோவிலில், "ருத்ரம், புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்கள் ஓதி அர்ச்சகர்கள், தெய்வ சாநித்தியம் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. அர்ச்சகர்கள் பார்த்து கொள்கிறார்கள்.
கோவிலில் "பாசுரங்கள், பதிகங்கள், பஜனைகள் பாடி" பக்தர்கள் தன் பக்தியை வெளிப்படுத்தி, தெய்வ சாந்நித்யம் நிறைந்த அந்த இடத்தில், தெய்வ அனுகிரஹத்தை பெற முயற்சிக்க வேண்டும்.

'வேத மந்திரங்கள் கூடாது, பாசுரங்கள், பதிகங்கள் மட்டுமே சொல்ல வேண்டும், தமிழில் போற்றி பாட வேண்டும்' 
என்று சொல்ல சொல்லி அர்ச்சகரை தடுக்க கூடாது.

"தெய்வ சாநித்யத்தை" வேத மந்திரங்களால் நிலைக்க செய்வது, அர்ச்சகர்கள் கடமை.
"தெய்வ அருளை" பாடல்கள் மூலம் ஸ்துதி (prayer songs) செய்து பெற வேண்டியது நம் கடமை.. 

தமிழில் உள்ள பக்தி பாடல்களை, பாசுரங்களை பாட தான், 'நாம்' இருக்கிறோம். மறக்க கூடாது.

கோவிலுக்கு சென்று ஏதாவது பாட 'நாம்' ஆசைபட வேண்டும்.
கோவிலுக்கு சென்று  'நமோ நாராயணா, சிவாய நம, முருகா போற்றி' என்றும், பாசுரங்களை, பதிகங்களை 'நாம்' ஸ்துதி செய்ய வேண்டும்.

வெறும் மரம் போல தெய்வத்துக்கு முன் நின்று விட்டு வெளியே செல்வது, கோடீஸ்வரனிடம் சென்று 1 ரூபாய் பிச்சை வாங்குவது போல ஆகும்.  


கோவிலுக்கு செல்லும் நாம், அர்ச்சகர் என்ன சொல்ல வேண்டும்? என்று சொல்வதை விட, நாம் என்ன சொல்ல வேண்டும்? என்று கவனிக்க வேண்டும்.

அர்ச்சகர் தெய்வ சாந்நித்யம் குறையாமல் வேத மந்திரங்களை சொல்ல வேண்டும்.
பக்தர்களான நாம், தெய்வ அனுகிரஹத்தை பெற அவரை போற்றி பாட வேண்டும். 
இதற்காக தானே, நமக்கு இத்தனை பக்தி பாடல்களை நமக்கு சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் கொடுத்து இருக்கிறார்கள். 
சிந்திக்க வேண்டாமா ஹிந்துக்கள்??.