Followers

Search Here...

Sunday 14 June 2020

பாசுரம் (அர்த்தம்) - தாள்களை எனக்கே... நம்மாழ்வார் பரமபத நாதனான விராட் ரூபனாக நினைத்து பாடிய அழகான பாசுரம். சடாரியின் பெருமையை விளக்கும் பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரமபுருஷன் "அனைவரிடத்திலும் அந்தர்யாமியாக இருப்பதால், 
அவரே ஆயிரக்கணக்கான கண்களுடன், தலையுடன், தானே அனைத்துமாக இருக்கிறார்"
என்று பரவாசுதேவனின் விராட் ரூபத்தை 'புருஷ சூக்தம்' வர்ணிக்கிறது.
இந்த புருஷ சூக்தத்தின் அர்த்தத்தை, தமிழில் பாசுரமாக பாடி கொடுத்து விட்டார் நம்-ஆழ்வார்.




தாள்களை எனக்கே
தலைத்தலை சிறப்ப தந்த பேருதவி 
கைம்மாறா !! 
தோள்களை ஆரத் தழுவி !
என் உயிரை அறவிலை செய்தனன் சோதீ !!

தோள்கள் ஆயிரத்தாய் !
முடிகள் ஆயிரத்தாய் ! துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !
பேர்கள் ஆயிரத்தாய் !
தமியனேன் பெரிய அப்பனே !
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)


தன் பலத்தால் "பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை" பிடித்து வைத்து இருந்த பலி சக்கரவர்த்தி,
தானமாக, தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் கொடுத்தான்.

"7 லோகங்களையும் அடமானம் வைத்தாலும், தன் திருவடிக்கு ஈடு ஆகாது"
என்று மிரட்டி, 'மூன்றாவது அடி எங்கே?' என்று பெருமாள் கேட்க,
தன்னையே அர்ப்பணம் (ஆத்ம நிவேதனம்) செய்து நின்றான் பலி சக்கரவர்த்தி.
தன் சொத்தையும், தன்னையும் சமர்ப்பணம் செய்த பிறகு, அதற்கு கைமாறாக பெருமாள் தன் திருவடியை தொடும் ஆனந்தத்தை பலி சக்கரவர்த்திக்கு கொடுத்தார்.
இது வாமன அவதார சரித்திரம்.   




பெருமாளின் திருவடியை தான் நமக்கு கோவிலில் "சடாரி" என்று வைக்கிறார்கள்.

"பெருமாளின் திருவடி சம்பந்தம் கிடைக்க", பலி சக்கரவர்த்தி தன் சொத்து அனைத்தையும் கொடுத்து, தன்னையே கொடுத்தான்.
ஆனால்,
ஒன்றுமே கொடுக்காத நமக்கு, கைம்மாறு எதிர்பார்க்காமல் பெருமாள் தன் திருவடி (சடாரி) கொடுத்துவிட்டாரே !!

"கைம்மாறு எதிர்பார்க்காமல், தன் திருவடியை (தாள்களை) என் தலை மேல் வைத்து சிறப்பித்து (எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த) பேருதவிக்கு நான் என்ன செய்வேன்?" என்று திகைக்கிறார்.

பெருமாள் திருவடி (சடாரி) தன் தலை மீது பட்டதால், தன் சரீரமே பெருமாள் சொத்து ஆகி விட்டது என்ற பூரிப்பில், நம்மாழ்வார் தன்னையே ஆரத்தழுவி கொண்டு (தோள்களை ஆரத் தழுவி) "எனது ஆத்மாவை, அந்த பரஞ்சோதியான நாராயணனுக்கு பரிபூரணமாக சமர்ப்பணம் செய்து விட்டேன் (என் உயிரை அறவிலை செய்தனன் சோதீ)"
என்று தன்னையே அர்ப்பணம் (ஆத்ம நிவேதனம்) செய்கிறார்.
தானே அனைத்துமாக விராட் புருஷனாக இருக்கும் பெருமாள், 
ஒவ்வொருவரின் உள்ளிலிருந்து கொண்டு, பார்க்க செய்கிறார், கேட்க செய்கிறார் என்பதால், 
அவரே ஆயிரக்கணக்கான தோள்களை உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான தலைகள் உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான கண்களை உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான கால்களாகவும், 
அவரே ஆயிரக்கணக்கான பெயர்களுடனும்,
இருக்கிறார், என்று புருஷ சூக்த்தத்தை அப்படியே தமிழில் நமக்கு கொடுத்து விட்டார்.

பலி சக்கரவர்த்தி தன்னையும், தன் சொத்துகள் அனைத்தையும் கொடுத்தார். அதற்கு கைமாறாக தன் திருவடியை கொடுத்தார்.
ஆனால்,
திறன் இல்லாத நமக்கு (தமியனேன் எனக்கு), கைம்மாறு எதிர்பார்க்காமல் தன் திருவடியை கொடுத்த பெருமாள், நமக்கு "அப்பா" என்று உறவு காட்டி அழைக்கிறார்.

நம்மிடம் எதுவுமே எதிர்பார்க்காமல், 7 உலகங்களுக்கும் ஈடு இல்லாத தனது திருவடி நமக்கு கொடுத்து, "பயப்படாதே" என்று அபயம் தருகிறார்.




பெருமாளின் திருவடி (சடாரி) நம் மீது பட்டாலே, அனைத்து பாவங்களும் போய் விடும் என்று ராமபிரானின் சரித்திரம் மூலமே நிரூபணம் ஆனது.
நம் தகப்பனான பெருமாளை "நம் பெருமாள்" என்றுநம்மிடம் எதுவுமே எதிர்பார்க்காமல், 7 உலகங்களுக்கும் ஈடுஇல்லாத தனது திருவடி நமக்கு கொடுத்து, "பயப்படாதே" என்று அபயம் தருகிறார்.

நம் தகப்பனான பெருமாளை "நம் பெருமாள்" என்றும் "எம் பெருமாள்" என்று
ம் உறவு சொல்லி கொண்டாடுவோம்.
நம் சொந்த வீடான மோக்ஷத்தை இந்த பிறவி முடிந்ததும் பெறுவோம்.

வாழும்வரை பெருமாளிடம் பக்தி செய்வோம். ஆழ்வார்கள் பாசுரங்களை அர்த்தம் புரிந்து படிப்போம்.

வாழ்க ஹிந்துக்கள். "எம் பெருமாள்" என்று
உறவு சொல்லி கொண்டாடுவோம்.
நம் சொந்த வீடான மோக்ஷத்தை இந்த பிறவி முடிந்ததும் பெறுவோம்.

வாழும்வரை பெருமாளிடம் பக்தி செய்வோம்.
ஆழ்வார்கள் பாசுரங்களை அர்த்தம் புரிந்து படிப்போம்.

வாழ்க ஹிந்துக்கள்.

Saturday 13 June 2020

பாசுரம் (அர்த்தம்) - சூழ்ந்தகன்று ஆழ்ந்துயர்ந்த... நம்மாழ்வார் வைகுண்டம்) பரமபத நாதனான நாராயணனை நினைத்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சூழ்ந்து அகன்று ஆழ்ந்துயர்ந்த
முடிவில் பெரும் பாழேயோ !
சூழ்ந்து அதனில் பெரிய பர
நன் மலர் சோதீயோ !
சூழ்ந்து அதனில் பெரிய சுடர்
ஞான இன்பமேயோ !
சூழ்ந்து அதனில் பெரிய என்
அவா அறச் சூழ்ந்தாயே  !
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

** பிரளய காலத்தில் உலகம் இருண்டு கிடக்க,
** மோக்ஷம் அடையாத ஆத்மாக்கள் உறங்கி கிடக்க,
** சில ஆத்மாக்கள் கைவல்யம் என்ற மோக்ஷத்தை அனுபவித்து கிடக்க,
** பரமபதம் என்ற மோக்ஷத்தை அடையும் (அடையபோகும்) தன்னை போன்ற விஷ்ணு பக்தர்களை பரவாசுதேவன் நாராயணன் அரவணைத்து கொள்கிறார்"
என்று பரமபதத்தின் பெருமையை பாடுகிறார் நம்மாழ்வார்.
திருவாய்மொழியில் உள்ள அருமையான பாசுரம்.




சூழ்ந்து அகன்று ஆழ்ந்துயர்ந்த
முடிவில் பெரும் பாழேயோ !
என்று சொல்லும் போது,
"ப்ரம்மாவின் ஆயுசு முடிந்த பின், பிரளய ஜலத்தால், 14 உலகங்களும் சூழப்பட்டு, அழிந்து போய், பேரிருள் சூழ்ந்திருக்கும் நிலையை" சொல்கிறார் ஆழ்வார்.
"தமஸ்" என்ற சமஸ்க்ரித சொல்லையே இங்கு தமிழில் "பாழ்" என்று சொல்கிறார் நம்மாழ்வார்.
"பாழ்" என்றால் "இருள்" என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
ஆத்மாவுக்கு அழிவே இல்லை.
ஆதலால்,
உலகங்கள் அழிந்தாலும், பரமாத்மா நாராயணன் அழிவதில்லை, கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களும் (நாமும்) அழிவதில்லை.

"மோக்ஷம் அடைந்த ஜீவ-ஆத்மாக்கள், பரமாத்மாவை அடைந்து இருப்பது போல,
பிரம்மாவின் ஆயுசு முடிந்தும், இன்னமும் மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்களும் அழியாமல் பரமாத்மா நாராயணனிடம் 'பாழ்' என்ற இருள் நிலையில், 'தான் எங்கு இருக்கிறோம்?' என்றே அறியாமல் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்"
என்கிறார்.

இப்படி மகா பிரளய காலத்தில், பரமாத்மாவோடு இருந்த போதிலும், தான் எங்கு இருக்கிறோம்? என்றே அறியாமல்" மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்கள் உறங்கி கொண்டு இருக்கிறார்கள்.

"மீண்டும் உலக ஸ்ருஷ்டி செய்ய பரவாசுதேவன் சங்கல்பிக்கும் வரை, 'தமஸ் என்ற பாழ் இருளில்' இந்த ஜீவாத்மாக்கள் இருக்கிறார்கள்"
என்கிறார்.
அடுத்ததாக,
சூழ்ந்து அதனில் பெரிய பர
நன் மலர் சோதீயோ !
என்று சொல்லும் போது,
"14 உலகங்களும் அழிந்த நிலையிலும், மோக்ஷம் அடையாத ஜீவ ஆத்மாக்கள் அழியாமல் 'நன் மலர் ஜோதியாக' பிராகாசித்து கொண்டே நாராயனிடம் ஒடுங்கி கிடக்கிறது.
ஆனால், ஒரே ஒரு குறை.
அந்த மோக்ஷம் அடையாத ஜீவன்கள் இருளில் (பாழேயோ) கிடக்கிறார்கள்"
என்கிறார் நம்மாழ்வார்.

அதாவது,
"'நாராயணிடம் தான், நாம் இருக்கிறோம்' என்று அறியாமலேயே, மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்கள் 'தமஸ்' என்ற நிலையிலேயே கிடக்கிறார்கள்"
என்கிறார்.



"குழந்தை தன் தாய்மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் போது, தாயின் அரவணைப்பை, சுகமான தூக்கத்தை அனுபவித்தாலும், தான் தாயின் மடியில் தான் தூங்குகிறோம் என்று தெரியாமலேயே (தமஸ்) இருப்பது போல,
மோக்ஷம் அடையாமல் இருக்கும் ஜீவாத்மாக்கள், பிரளய காலத்தில் நாராயணின் இதயத்திலேயே உறங்கி கொண்டு இருந்தாலும், அவரிடம் தான் நாம் இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளாமல் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்"
என்கிறார் ஆழ்வார்.

பிரளய காலத்தில் மட்டுமல்ல, நாம் தினசரி தூங்கும் போது கூட, இந்த சேர்க்கை அனைவருக்கும் நடக்கிறது.

"தூங்கினால் சுகமாக உள்ளது" என்று மட்டுமே அறிகிறோம்.
ஆனால், "யார் மடியில் உறங்கினோம்?..யார் சுகமான தூக்கத்தை கொடுத்தார்கள்?"
என்று அறியாமலேயே தூங்குகிறோம்
என்று சாஸ்திரம் சொல்கிறது.

அதனால் தான் தூக்கத்தை "தாமஸ" குணம் என்று சொல்கிறோம்.
புத்தி விழிப்பு இல்லாத நிலை அது.

"தாமஸ்" விரட்டி அடிக்கப்பட வேண்டிய விஷம்.
மூளையை மழுங்க செய்வது தாமஸ். 'இருள் போன்றது' தாமஸ்.
ஹிந்துக்கள் இந்த தாமஸிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அடுத்ததாக,
சூழ்ந்து அதனில் பெரிய சுடர்
ஞான இன்பமேயோ !
என்று சொல்லும் போது,
"உடல் நானல்ல..ஆத்மாவே நான்" என்ற ஞானத்தை (அறிவை) மட்டும் பெற்றவர்கள், பிரளய காலத்தில், சம்சாரத்தில் இருந்து முழு விடுதலை அடைந்து, கைவல்யம் என்ற மோக்ஷத்தை அடைந்து 'சுதந்திர காற்றை' (ஞான இன்பம் என்று சொல்கிறார்) அனுபவிக்கிறார்கள்"
என்று சொல்கிறார்.

இரண்டு விதமான மோக்ஷம் சொல்லப்படுகிறது.
ஒன்று : கைவல்யம் (விடுதலை)
மற்றொன்று : பரமபதம் என்ற வைகுண்டம் (வீடு)

"உடல் நானல்ல..ஆத்மாவே நான்" என்ற அத்வைத ஞானத்தை (அறிவை) மட்டும் பெற்றவர்கள் "நானே பரமாத்மா" என்ற அனுபவத்திலேயே இருப்பதால், கைவல்யம் (விடுதலை) என்ற மோக்ஷத்தை அடைகிறார்கள்.

உடல் நானல்ல..ஆத்மாவே நான் என்ற ஞானம் அனுபவத்தில் உள்ளதால், 
சம்சாரத்தில் மீண்டும் இவர்கள் பிறப்பதில்லை.

ஜெயில் பல வருடம் சிறை கைதியாக இருந்த ஒருவன், ஒருநாள் விடுதலை பெற்றது போன்ற நிலையே "கைவல்யம்".

சிறையில் இருந்து விடுதலை அடைந்தோமே!!
என்ற சந்தோஷத்தில் இன்பமாக ஊர் முழுக்க அலைபவன் போல,
கைவல்யம் பெற்றவனும் இருக்கிறான்.
இதையே "ஞான இன்பமேயோ" என்று சொல்கிறார்.

"கைவல்யம்" என்ற மோக்ஷத்தை விட, "பரமபதமே" நமக்கு சிறந்தது என்பதால்,
கடைசியாக,
சூழ்ந்து அதனில் பெரிய என்
அவா அறச் சூழ்ந்தாயே  !
என்று சொல்லி பரமபதத்தை நமக்கு காட்டுகிறார் ஆழ்வார்.

அத்வைத ஞானம் பெற்றவன், நானே பரமாத்மா என்று நினைப்பதால், கைலவல்யம் மட்டுமே அடைகிறான்.
அதாவது "விடுதலை" மட்டுமே அடைகிறான்.
ஆனால் "வீடு" போய் சேர்வதில்லை.

ஜெயிலில் பல வருடம் அடைபட்டு, விடுதலை அடைந்தவன், "விடுதலை அடைந்தேன்" என்பதிலேயே திருப்தி அடைவது போல "கைவலயம்".

"உடல் நானல்ல, ஆத்மாவே நான்" என்ற ஞானத்தோடு,
"என் வீடு எது? என் தகப்பன் யார்? என்னை படைத்தவன் யார்?" என்று அறிந்தவன், மோக்ஷம் அடையும் போது, பரமபதம் என்ற வீடு போய் சேருகிறான்
என்கிறார் ஆழ்வார்.

"பரமபதம் என்ற மோக்ஷத்தை அடையும் (அடையபோகும்) தன்னை போன்ற விஷ்ணு பக்தர்களை பரவாசுதேவன் நாராயணன் அரவணைத்து கொள்கிறார்"
என்று பரமபதத்தின் பெருமையை பாடுகிறார் நம்மாழ்வார்.
இதையே
"என் அவா அறச் சூழ்ந்தாயே"
என்கிறார் நம்மாழ்வார்.

பரமபத நாதனான நாராயணனை தொழுவோம்.

குருநாதர் துணை.