விளையாடி கொண்டிருந்த தன் குழந்தை ஒரு நாள் திடீரென்று சாக்கடைக்குள்விழுந்து விட்டது.
இதை பார்த்த தாய், பதறி போனாள்.
மிகவும் நாகரீகமானவள் அவள். அழகானவள். சுத்தமானவள்.
தனக்கு அழுக்காகுமே?
தான் போய் சாக்கடையில் இறங்குவதாவது?
என்று துளியும் நினைக்காமல், குழந்தையை காக்க வேண்டுமே! என்ற ஒரே எண்ணத்தில், தானும் சாக்கடையில் குதித்து விட்டாள்.
குழந்தையை மேலும் மூழ்கி விடாமல் தானே கைப்பற்றி, சாக்கடையில் இருந்து தூக்கி விட்டு, தானும் வெளி வந்தாள்.
அது போல,
வைகுண்டத்தில் இருக்கும் வாசுதேவன், ஆனந்தமயமான மோக்ஷத்தை விட்டு விட்டு, 'ஜீவாத்மாக்கள் சாக்கடை போன்ற உலக விஷயங்களில் விழுந்து விட்டதே!' என்று நினைத்து,
'இவர்களை எப்படியாவது மோக்ஷத்துக்கு அழைத்து சென்று விட வேண்டும்' என்று முடிவு கட்டி, தானே உலகத்தில் குதித்து விட்டார்.
ராமபிரானாகவும், கிருஷ்ணராகவும் அவதாரம் செய்து அனைவரிடமும் பழகினார்.
இந்த விபவ அவதாரங்கள் 'குறிப்பிட்ட காலம் வரை தான்' என்பதால், விபவ அவதாரம் போதாதென்று,
'ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு' அனைவரும் அர்ச்சனை (பூஜை) செய்யும் படியாக, ஒவ்வொரு ஜீவனுக்கும் கிடைக்கும் படியாக அர்ச்ச அவதாரம் செய்து விட்டார்.
அவரவர் இஷ்டத்துக்கு பூஜை செய்யட்டும்..
பூஜை செய்யாமல் கூட போகட்டும்.. இவர்கள் வீட்டில் இவர்களை விடாமல் தங்கி விடுவோம்.
'தன்னை என்றாவது ஒரு நாள், இவன் கவனித்து விட்டால், தன்னிடம் பக்தி ஏற்பட செய்து, ஞானத்தை கொடுத்து, மோக்ஷம் கொடுத்து விடலாம்' என்று பிடிவாதம் செய்து கொண்டு அவதரித்து விட்டார்.
ராமபிரானாக, கிருஷ்ணராக வந்த நோக்கமும்,
கோவிலில் இருப்பதற்கு நோக்கமும்,
நம் வீட்டில் பூஜை அறையில் இருப்பதற்கு நோக்கமும்,
படங்களாக வருவதற்கு நோக்கமும் ஒன்றே.
நம்மை எப்படியாவது கை பிடித்து தூக்கி, மோக்ஷம் கொடுப்பதற்கே, பெருமாள் ஒரு தாயை போல, சம்சாரம் என்னும் சாக்கடையில் தானே குதிக்கிறார்.
நம் வீட்டில் இருக்கும் ராம, கிருஷ்ண விக்கிரகத்தை, படத்தை இந்த அனுபவத்தில் பார்க்க நாம் ஆரம்பிக்கும் போது தான், பகவானின் கருணையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்த மூன்றுக்கும் அப்பாற்பட்டு இருப்பதாலேயே, பரமாத்மாவை ஒரு பொருளுக்குள், தேசத்துக்குள், காலத்துக்குள் அடைக்க முடியாது.
ஆதலால், "பரமாத்மாவை எனக்கு காட்டு" என்று ஒருவன் கேட்டால், "அவனுக்கு காட்ட முடியாது"என்று சொல்வதற்கு காரணமே இதுதான்.
பரமாத்மாவை "அனுமானத்தாலும்" தெரிந்து கொள்ள முடியாது.
காரணம்,
நம் அனுமானத்துக்கும், அப்பாற்பட்டவர் பரமாத்மா.
நாம் பொதுவாகவே ஒரு 'காரியத்தை' பார்த்து தான், 'காரணத்தை' அனுமானம் செய்கிறோம்.
உதாரணத்திற்கு,
'வீடு' என்ற ஒரு காரியம் கண் எதிரே இருப்பதை பார்த்து, 'யாரோ ஒருவர் இதை முன்பு கட்டி இருக்கிறார்'
என்று அனுமானிக்கிறோம்.
ஆனால்,
ஜீவாத்மாவின் அனுமானம் அனைத்துமே சரியாகவும் இருக்க முடியாது.
நம் 'புத்திக்கு எட்டிய அளவு தான் அனுமானமும்' உண்டாகிறது.
ஒருவனின் அனுமானம் பிற்காலத்தில் தவறு என்று கூட நிரூபிக்க படலாம்.
"உலகம் தட்டை' என்று ஒரு அந்நிய மதம் அனுமானித்தது.
கலிலியோ 'உலகம் உருண்டை' என்று அனுமானித்தார். அதற்காக அவரை தண்டித்தார்கள்.
பிற்காலத்தில்,
'உலகம் உருண்டை தான்' என்று நிரூபிக்கப்பட, மனித அனுமானங்களால் உருவாக்கப்பட்ட மத கொள்கைகள் நகைப்பு உரியதானது.
மனித அனுமானங்கள், அந்தந்த காலத்தை அனுசரித்தோ, தேசத்தை அனுசரித்தோ, பொருளை அனுசரித்தோ நிர்ணயிக்கப்படுகிறது.
காலம் மாறும் போது,
தேசம் மாறும் போது,
பொருள் (வஸ்து) மாறும் போது,
மனித அனுமானங்கள் மாறுபடகூடும்.
இப்படி இருக்க, அனுமானத்தை கொண்டு, 'இவர் தான் பரமாத்மா' என்று மனித புத்தியை கொண்டு, எழுதப்பபட்ட போலி மதங்களை கண்டு ஏமாற கூடாது.
நம்முடைய புத்தியோ "அளவு உடையதாக' இருக்கிறது.
பரமாத்மாவோ 'அளவற்று' இருக்கிறார்.
அளவுடைய நம் புத்தியால், அளவில்லாத பரமாத்மாவை
எப்படி அனுமானிக்க முடியும்?
'அளவில்லாத பரமாத்மாவை நாம் புரிந்து கொள்ள முடியாது' என்பது உண்மை என்றாலும்,
'அந்த பரமாத்மா அளவிடமுடியாதவர், காலத்துக்கும், தேசத்துக்கும், பொருளுக்கும் அப்பாற்ப்பட்டவர்' என்ற அளவுக்காவது நாம் தெரிந்து கொண்டாலே, பரத்துவ ஞானம் நமக்கு உண்டாக ஆரம்பித்து விடும்,
'நம்முடைய புத்தியால் தெரிந்து கொள்ள முடியாதவர் பரமாத்மா' என்று தெரிந்து கொண்டாலே போதுமானது.
உன்னுடைய கண்ணை கொண்டு அந்த பரமாத்மாவை பார்க்க முடியாது.
ஆனால்,
'உன் கண்ணுக்கு பார்க்கும் சக்தியை கொடுத்ததே அந்த பரமாத்மா தான்' என்று நீ புரிந்து கொண்டாலே போதும்.
உன்னுடைய காதை கொண்டு அந்த பரமாத்மாவை கேட்க முடியாது.
ஆனால்,
'உன் காதுக்கு கேட்கும் சக்தியை கொடுத்ததே அந்த பரமாத்மா தான்' என்று புரிந்து கொண்டாலே போதும்.
எந்த பரமாத்மா உள்ளே இருப்பதால், உன் கண் பார்க்கிறதோ, காது கேட்கிறதோ, நாக்கு சுவைக்கிறதோ, அந்த பரமாத்மாவை உன் கண்களால், காதால், நாக்கால் எப்படி பார்க்க, கேட்க, சுவைக்க முடியும்?
அதனால், 'பரமாத்மா நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்' என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
அப்படி எங்கும், எல்லாமுமாக, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட, தனித்த சாட்சியாக, யாவரிடத்திலேயும் ஹ்ருதயத்தில் இருக்க கூடிய அந்த பரமாத்மா "சாஷாத் நாராயணனே" என்று சர்வ சாஸ்த்திரமும் சொல்கிறது.
வேதம் "நாராயணனே பரதெய்வம்" என்று சொல்வதை புரிந்து கொள்ளாதவர்கள், மோக்ஷம் அடையாமல் இருக்கிறார்கள்.
புரிந்து கொள்ளாததாலேயே, பரமாத்மாவை 'நாராயணன், விஷ்ணு' என்று சொன்னால், முப்பத்து முக்கோடி தேவர்களை போல 'அவரும் ஒரு தேவன்' என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
மனிதர்கள் நினைப்பது ஒருபுறம் இருக்கட்டும்..
தேவர்கள் கூட சில சமயம், விஷ்ணுவும்தன்னை போல ஒரு தேவன் தான் என்று நினைத்து விடுகிறார்கள்?
வைகுண்டத்தில் இருக்கும் பரமாத்மா நாராயணன், காலத்துக்கும், தேசத்துக்கும், வஸ்துவுக்கும் அப்பாற்பட்டவர் என்றாலும், எந்த வஸ்துவாகவும் வர கூடியவர், எந்த தேசத்திலும், எந்த காலத்திலும் இருப்பவர் என்பதால், சொர்க்க லோகத்தில் உள்ள தேவர்களை போல தானும் "விஷ்ணு" என்ற தேவனாகவும் (வஸ்துவாக) தன்னை க்ஷீராப்தியில் அவதரித்து கொண்டு விடுகிறார்.
"ஆதித்யாநாமஹம் விஷ்ணு:" என்று பகவத் கீதையில் "தேவர்களுக்குக்குள்ளே நான் விஷ்ணு என்ற தேவனாகவும் இருக்கிறேன்" என்று சொல்கிறார்.
அதுமட்டுமா,
"மனிதர்களுக்குள்ளே நான் ராமனாக இருக்கிறேன்" என்றும் ராம்பிரானே ப்ரம்ம தேவனை பார்த்து "ஆத்மாநம் மானுஷம் மன்யே" என்று சொல்கிறார்.
"மனிதனாக பரமாத்மா வந்து விட்டதால், ராமபிரான் மனிதன் தானே" என்று நினைப்பவர்கள் அஞானிகள்.
"தேவனாக வந்து விட்டதால், விஷ்ணுவும் மற்ற தேவர்களை போல தானே" என்று நினைப்பவர்களும் அஞானிகளே.