Followers

Search Here...

Thursday 2 July 2020

'யாகத்தில் பலி' உண்டா? வேதம் எதற்காக இது போன்ற பலியை அனுமதிக்கிறது? அதை பற்றி ஒரு அலசல்..

வேதத்தில் சில இடங்களில் 'யாகத்தில் பலி'  பற்றி சொல்கிறது.
"இது சரியா, தவறா?" என்ற கேள்விக்கு முன்,
'வேதத்தின் நோக்கம் என்ன?'
என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்...
முக்கியமாக ஹிந்துக்கள்.

ஹிந்து தர்மம், மற்ற போலி புத்தகம் போல, 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு' என்று உளரும் புத்தகம் அல்ல,
"கடவுள் அரூபமானவர்" என்று மட்டும் சொல்லி
குறுகிய மனப்பானமாய் கொண்ட  புத்தகமும் அல்ல..
நம் ஹிந்து தர்மம், சந்யாசியிடம் "அடித்தாலும் அமைதியாக இரு" என்று சொல்லும்.
அதே சமயம்,
நாட்டை காக்க எல்லையில் நிற்கும் வீரனை பார்த்து அதே போதனையை கூறி உளராது.
"உன் எதிரி அடிப்பான் என்று தெரிந்தால் கூட அவனை அடித்து நொறுக்கி விடு"
என்று அவர்கள் குணம், நிலைக்கு ஏற்ப தர்மங்களை சொல்லும்.
அத்வைத யோகிகளை பார்த்து "கடவுள் அரூபமானவர்" என்று சொல்லும் ஹிந்து தர்மம்.
அதே சமயம், அத்வைதம் புரியாத பல கோடி மக்களுக்காக 'தெய்வம் உருவம் கொண்டு உறவாடும். தைரியமாக பக்தி செய்." என்றும் சொல்லும்.
"எல்லாம் வல்லவர். ஆனால்,தெய்வத்தால் உருவம் எடுத்து வர முடியாது" என்று தெய்வத்தை தரம் தாழ்த்தி பேசாது ஹிந்து தர்மம்.

வேதத்தின் நோக்கம் என்ன?
'அனைத்து தரப்பு ஜீவனையும் மோக்ஷம் அழைத்து செல்வது தான்', வேதத்தின் நோக்கம்.
நம்மில் சிலர்
ஆன்மீக வளர்ச்சி அடைந்து இருப்பார்கள்..
சிலர் ஆன்மீக தேடலில் இருப்பார்கள்..
சிலர் ஆன்மீக எண்ணமே கூட இல்லாமல் இருப்பார்கள்.

பல தரப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு, பல வித உலக ஆசைகளும் உண்டு.

வேதத்தின் நோக்கமோ, இவர்கள் அனைவரையும் மோக்ஷ பாதையில் இழுக்க வேண்டும், பரமாத்மா நாராயணனை சேர வைக்க வேண்டும்.
ஆன்மீக சிந்தனையும் ஊட்ட வேண்டும்.
பிறகு
வேதத்தில் உள்ள தெய்வங்களில் ஏதாவது ஒரு வழியில் பக்தியை வளர்க்க வேண்டும்.
கடைசியில்,
மூல தெய்வம் பரவாசுதேவனே என்ற உண்மையை புரிய வைக்க வேண்டும்.
மோக்ஷத்துக்கு தயார் செய்ய வேண்டும்...
இதுவே "வேதத்துக்கு நோக்கம்".

மனிதர்கள் பலதரப்பட்ட குணத்துடன், பக்குவத்துடன் இருக்கிறார்கள்.

பூஜையில் கூட குணத்தால் மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.
தெய்வத்துக்கு ஏதாவது "துளசி, பூ, பழம் வைத்து பூஜை செய்"
என்று சொன்னால் சிலர் ஏற்பார்கள்.. சிலர் மறுப்பார்கள்..




நாயன்மார்கள் சிவ பக்தி செய்தார்கள்..
"வில்வ பூஜை செய்தாலே, சிவன் ப்ரீதி அடைவார், நமக்கு அணுகிரஹம் செய்வார்" என்று வாழ்ந்தார்கள்.

அதில் கண்ணப்பநாயனார் வேடுவன்.
சிவபூஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அவர் பக்தி அவர் குணத்துக்கு ஏற்றவாறு ரஜோ குணத்துடன் இருந்தது..
சிவபெருமானுக்கு தான் வேட்டையாடிய மிருகங்களின் மாமிசத்தை பூஜைக்கு வைப்பார்.
ஒரு சமயம், இவனிடம் லீலை செய்த சிவபெருமான், கல் ரூபத்தில் இருந்தாலும், ரத்தம் வடியுமாறு லீலை செய்தார்.

சிவபெருமான் மேனியில் இருந்து ரத்தம் வடிவதை பார்த்து, தன் கண்ணையே பிடுங்கி அந்த சிவலிங்கத்தில் வைத்து விட்டார்.

பயங்கரமான பூஜை தான்...
ஆனால், மற்றவன் கண்ணை பிடுங்கி இருக்கலாமே வேடுவன்?..
அப்படி செய்யவில்லையே...
சங்கரன் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது...

வேடனான கண்ணப்பன் எப்படி இருந்தாலும் மாமிசம் சாப்பிடத்தான் போகிறான்.

"பகவானுக்கு கொடுத்து விட்டு பிறகு சாப்பிடுவோம்" என்று நினைவே, அனாவசிய மிருக வதையை பெரும்பாலும் குறைத்து விடும்.

இன்றைய உலகில் அளவுக்கு மீறி மிருக வதை நடப்பதற்கு சுயநலமும், தான் சாப்பிடுவதை தெய்வத்துக்கு காட்டி விட்டு சாப்பிடாததே காரணம்.

"தன் வயிரே முக்கியம்" என்ற சுயநலம் மனிதனுக்கு அதிகமானதால், விலங்குகள் நிலை அந்தோ பரிதாபம் என்று உள்ளது..

சாத்வீக தெய்வமான பரவாசுதேவனை, மாமிசம் உண்ணும் ஒருவன் வழிபடும் போது, சிறிது காலத்தில், ஜீவ ஹிம்சை செய்து இந்த வயிறை வளர்க்க வேண்டுமா? என்று மனதை மாற்றி விடுவார்.

பெருமாள் பக்தி செய்வதே நாம் அனைவருக்கும் இன்று தேவை.

தெய்வத்திடம் உண்மையான பக்தி இருந்தால், சில சமயம் இப்படிப்பட்ட பயங்கராமான பூஜைகள் தான் தெரியும் என்ற பக்தனுக்கும் தெய்வங்கள் அருள் செய்து விடுவார்கள்..
சிவபெருமான் கண்ணப்பருக்கும் காட்சி கொடுத்தார்.

ஆனால் பெரும்பாலான சிவ பக்தர்கள், விஷ்ணு பக்தர்கள், முருக பக்தர்கள் நெய், பூ, பழம் போன்ற சாத்வீக பூஜை தான் செய்கின்றனர்.

இப்படி வேதத்தில், அங்குமிங்கும் பலி இடும் யாகங்கள் சொல்லப்ட்டு இருப்பதற்கு காரணம்,
மனிதர்களில் சிலர், ரஜோ குண பூஜையை தான் விரும்புவார்கள் என்பதால் தான் வேதம் ஆங்காங்கு அப்படிப்பட்ட பூஜையை சொல்கிறது.

கண்ணப்பன், ராவணன் போன்றோர் செய்த ரஜோ குண பூஜையையும் தெய்வங்கள் ஏற்கிறது..
இதுவே முக்கிய காரணம்.

ராவணன் கூட சிவபக்தன் தான்.
அவன் குணத்துக்கு, பூ, பழம் வைத்து பூஜை செய்தால், முழு திருப்தி இருக்காதாம்..

ஒரு மிருகத்தை பலி இடலாமா?
என்று நினைத்தால், அதுவும் இவனுக்கு திருப்தியாக இருக்காதாம்.

ஒரு நரபலி கொடுத்தால் தான் இவனுக்கு திருப்தி ஏற்படுமாம்..

அதிலும் 'தானே அந்த நரபலியாக இருக்க வேண்டும்' என்று நினைப்பானாம்.

பொதுவாக ரஜோ குணம் அதிகம் உள்ளவர்கள் விஷ்ணு பக்தி செய்ய தயங்குவவதற்கு  காரணமும் இதுவே.
விஷ்ணு சாத்வீக மூர்த்தி. 
பெரும்பாலும் பலி போன்ற பூஜைகளை விட, துளசி, பூ, பழம் கொடுத்து பூஜை செய்யும் பக்தனுக்கு அணுகிரஹம் செய்து விடுவார் விஷ்ணு.

சம்ஹார மூர்த்தியான ருத்ரனோ, படைப்பு தொழிலை ஏற்ற ப்ரம்ம தேவனோ, இது போன்ற பூஜைக்கும் அணுகிரஹம் செய்து விடுவார்கள்..

நாயன்மார் தங்கள் பக்தியால் தரிசித்த சிவபெருமானை, 
ராவணன் தன் 10  தலைகளை ஒவ்வொன்றாக அறுத்து சிவபூஜை செய்து தரிசனம் செய்வானாம்.
அது மட்டுமா! ஒரு சமயம்,
'கைலாய மலையை சிவபெருமானோடு தூக்கி' தன் பலத்தை சிவனுக்கே காட்ட வேண்டும் நினைத்தான்.
கர்வமே இல்லாமல் இருந்தார்கள் நாயன்மார்கள்.
ராவணன் கர்வமே ரூபம் கொண்டவனாக இருந்தான்..




ஆனால், இருவருமே சிவபக்தர்கள்.
இருவருமே சிவனை தரிசித்தவர்கள். ஆனால் குணம் வேறு.

வேதத்தின் நோக்கம்,
குணம் கெட்டவனாக இருந்தாலும், நாதீகனாக இருந்தாலும், அவரவர்களுக்கும் வாய்ப்பு தந்து, அவர்கள் விருப்பப்படி தெய்வத்துடன் சம்பந்தம் செய்து கொள்ள வேத தெய்வங்கள் அனுமதிக்கிறது.

ரஜோ குணம் அதிகம் உள்ள ராவணன் போன்றவர்களும், அவர்கள் குணத்துக்கு ஏற்ப பூஜை செய்ய, ஆங்காங்கு உயிர் பலி சம்பந்தமான அதர்வண மந்திரங்கள் உள்ளது.

ஆனால்,
"பெரும்பாலான பூஜை சாத்வீகமாகவே உள்ளது" என்பதை ஹிந்துக்கள் கவனிக்க வேண்டும்.

பலி இடும் சம்பந்தமான பூஜைகள் இருப்பதற்கு காரணம் உண்டு.

ராவணனாக இருந்தால் கூட, கடவுளே இல்லை என்று நாதீகனாக இருந்தால் கூட, அவனையும் ஹிந்துவாக வைத்து கொள்ள, நம் தெய்வங்கள் வழி செய்கிறது.

கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருப்பவனுக்கு, திடீரென்று ஒரு நாள் திருப்பதி கோவிலுக்குப் போன பின், வர இருந்த பெரிய ஆபத்து தானாக விலகி விடுகிறது.. அல்லது திடீரென்று லாபம் கிடைக்கிறது..

அதுவரை நாதீகனாக அலைந்தவன், 'சரி திருப்பதி மட்டும் செல்வோம்" என்று நினைக்கிறான்.

தனக்கு தேவையானதை பிரார்த்தனையாக வைக்கிறான்..
ஒரு சில பிரார்த்தனைகள் பலித்து விடுகிறது.

"நம் நம்பிக்கையில் தான் குறைவோ!" என்று யோசிக்கிறான்..

திருப்பதி பெருமாள் படத்தை வாங்கி தன் வீட்டில் வைத்து கொள்கிறான்.

மெதுவாக, இவனில் மாற்றம் நடக்கிறது...
சுயநலம் அகன்று பக்தி வளர்கிறது...

இப்படி வேதம் அனைவருக்கும் வழி காட்டி, கடைசியில், நம்மை பெருமாள் வரை கூட்டி சென்று விடும் அற்புத சக்தி கொண்டது.

ஆங்காங்கு வேதத்தில் காணப்படும் பலி யாகங்கள், 
ராவணன் போன்ற ரஜோ குண புத்தி உள்ளவர்களும் பகவானை பூஜை செய்யட்டும்
என்ற காரணமே அன்றி, வேதத்தின் பொதுவான அபிப்ராயம் நாயன்மார், ஆழ்வார்கள் செய்த சாத்வீக பூஜையே.

த்ரேதா யுகத்தில் இருந்த ராவணன் போல, தன் தலையையே அறுத்து பூஜை செய்யும் ராக்ஷஸ பூஜை செய்பவர்கள், இந்த கலியில் கிடையாது.

இன்று பொதுவாக தாமஸ, சாத்வீக குணங்கள் உடைய மக்களாகவே இருப்பதால், இது போன்ற யாகங்கள் நமக்கு தேவையுமில்லை.
ஆதலால், ஆங்காங்கு காணப்படும் இது போன்ற பலி யாகங்களை ஹிந்துக்கள் ஏற்பதில்லை.

"இதை காட்டியாவது, ஹிந்துக்களை குழப்பலாமா?.. 
நம் போலி புத்தகத்தை காட்டி ஏமாற்றலாமா?"
என்று மூடர் கூட்டம் அலைகிறது.

"ஒரு கன்னத்தில் அடித்தால், மறுகன்னத்தையும் காட்டு"
என்று பேசும் இந்த மூடர் கூட்டத்தின் வீட்டில் போய் தங்கி விட்டால், வீட்டையே எடுத்துக்கொள் என்று சொல்வார்களா?..

"போதனை ஒன்று, செயல் வேறு" என்று வாழ்ந்து,
ஊரை ஏமாற்றி,
நிலத்தை மட்டுமில்லாது, மலையையும் அபகரித்து திருடும் இந்த கூட்டம், நசுக்கப்பட வேண்டும்.

ஹிந்துக்கள், தங்கள் பெருமையை அறிய வேண்டும்.

ஹிந்து தர்மத்தில்,
ராவணனுக்கும் தெய்வ பக்தி செய்ய இடம் உண்டு.
நாயன்மார் போன்ற பக்தர்களுக்கும் தெய்வ பக்தி செய்ய இடம் உண்டு.
வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.

No comments: