Followers

Search Here...

Sunday 6 December 2020

வேதம் படிக்கும் காலத்தில், எப்படி பிக்ஷை கேட்க வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்..

ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்..

1.

பவத் பூர்வயா ப்ராஹ்மனோ பிக்ஷேத் !

  - ஆபஸ்தம்ப சூத்திரம்


வேதம் படிக்கும் 'ப்ராம்மண' பிள்ளை, பிக்ஷை கேட்கும் போது, தாயே (பகவதி) என்று முதலில் சொல்லி கேட்க வேண்டும்.

(பவதி பிக்ஷாம் தேஹீ).


ப்ராம்மண வீட்டில் மட்டும் தான் கேட்க வேண்டும். கிடைக்காவிட்டால், அன்று பட்டினி கிடக்க வேண்டும், அல்லது குரு என்ன கொடுக்கிறாரோ அதை சாப்பிட வேண்டும்)


2.

பவத் மத்யயா ராஜன்யா

  - ஆபஸ்தம்ப சூத்திரம்


வேதம் படிக்கும் 'க்ஷத்ரிய' பிள்ளை, பிக்ஷை கேட்கும் போது, தாயே (பகவதி) என்று நடுவில் சொல்லி கேட்க வேண்டும்.

(பிக்ஷாம் பவதி தேஹீ).


ப்ராம்மண, க்ஷத்ரிய வீட்டில் மட்டும் தான் கேட்க வேண்டும். கிடைக்காவிட்டால், அன்று பட்டினி கிடக்க வேண்டும் அல்லது குரு என்ன கொடுக்கிறாரோ அதை சாப்பிட வேண்டும்)





3.

பவத் அந்த்யயா வைஸ்ய:

 - ஆபஸ்தம்ப சூத்திரம்


வேதம் படிக்கும் 'வைஸ்ய' பிள்ளை, பிக்ஷை கேட்கும் போது, தாயே (பகவதி) என்று கடைசியில் சொல்லி கேட்க வேண்டும்.

(பிக்ஷாம் தேஹீ பவதி).


ப்ராம்மண, க்ஷத்ரிய, வைஸ்ய வீட்டில் மட்டும் தான் கேட்க வேண்டும். கிடைக்காவிட்டால், அன்று பட்டினி கிடக்க வேண்டும் அல்லது குரு என்ன கொடுக்கிறாரோ அதை சாப்பிட வேண்டும்)

No comments: