Followers

Search Here...

Thursday 17 December 2020

பெண்ணை மணம் செய்து கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். தெரிந்து கொள்வோமே..

 பெண்ணை மணம் செய்து கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். தெரிந்து கொள்வோமே..

யானஸ்ய பாரா அபினிஹிதஸ்ய 

அதுரஸ்ய ஸ்திரியா இதி சர்வை: தாதவ்ய: |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

வாகனத்திற்கு, சுமையை தூக்கி வருபவர்களுக்கு, நோயாளிக்கு, பெண்களுக்கு, மற்றும் முதியவர்கள், குழந்தைகளுக்கு, வழி விட்டு நடக்க வேண்டும். அவர்களை நடக்கும் பாதையில் தடையாக இருக்க கூடாது.


அஷிஸ்ட பதித மத்த உன்மத்தானாம் ஆத்மா 

ஸ்வஸ்தி அயன அர்த்தேன சர்வை: இவ தாதவ்ய: |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் நலனை கருத்தில் கொண்டு, முட்டாள்களுக்கும், வர்ணத்துக்கு அப்பாற்பட்டு இருப்பவனுக்கும், குடிகாரனுக்கும், பைத்தியத்துக்கும் வழி விட வேண்டும். 





சகோத்ராய துஹிதரம் ந ப்ரயச்சேத் |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் பெண்ணை, சகோதர உறவு கொண்ட ஒரே ரிஷி கோத்திர பையனுக்கு மணம் செய்து கொடுக்க கூடாது.


ப்ராஹ்மே விவாஹே பந்து ஷீல ஸ்ருத அரோஞானி புத்வா ப்ரஜா சஹத்வ கர்மபய பிரதிபாதயேத் சக்தி விஷயேன அலம்க்ருதே |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் மகள், அவள் கணவனோடு புகுந்த வீட்டில் சேர்ந்து தன் கடமையை ஒழுங்காக செய்ய, திருமணம் ஆகும் முன்பேயே அந்த குடும்பத்தை பற்றியும், பழக்க வழக்கம் பற்றியும், விஷய ஞானத்தை பற்றியும், ஆரோக்கியத்தை பற்றியும் அறிந்து கொண்டு, பிறகு தன்னால் முடிந்த அளவுக்கு தன் பெண்ணுக்கு நகை போட்டு, மணம் செய்து கொடுக்க வேண்டும்.


ந சம்சயே ப்ரத்யக்சவத் ப்ரூயாத் |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

நன்றாக புரிந்து கொள்ளாத விஷயத்தை பற்றி, தெளிவாக புரிந்தது போல பேச கூடாது.



No comments: