Followers

Search Here...

Showing posts with label வால்மீகி ராமாயணம். Show all posts
Showing posts with label வால்மீகி ராமாயணம். Show all posts

Sunday 17 April 2022

அஸூயை இல்லாதவர் ராமர். மாத்ஸர்யம் என்றால் பொறாமை. அஸூயை என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்.

 அஸூயை இல்லாத ராமபிரான்...

நமக்கு, சிலர் செய்யும் குற்றத்தை பார்த்து கோபம் வரும். 

அவர்கள் குற்றத்தை பார்த்த பிறகு, அவர்களிடம் உள்ள குணங்கள் கூட தோஷமாக தோன்றும்.

இதற்கு 'அஸூயை' என்று பெயர்.


ஒருவர் குற்றத்தை பார்த்த பிறகும், அவர்களிடம் உள்ள மற்ற குணங்கள் தோஷமாக பார்க்காமல் இருப்பதற்கு, 'அனஸூயை' என்று பெயர்.


'அஸூயை இல்லாதவர் ராமபிரான்' என்று தமிழ் முனிவரான வால்மீகி, 24 வயது ராமபிரானை பார்த்து  சொல்கிறார். 

स हि रूपोपपन्नश्च वीर्यवान् अनसूयकः |

भूमौ अनुपमः सूनुर्गुणै: दशरथोपमः || 

- வால்மீகி ராமாயணம்


ராவணன் 'பேடித்தனமாக' ராமபிரான், லக்ஷ்மணன் இல்லாத சமயத்தை ஏற்படுத்தி, சீதாதேவியை கடத்தி சென்றான்.


ராமபிரான் பஞ்சவடியில் இருந்து கிளம்பி, சீதையை காப்பாற்ற இலங்கை வந்து போர் செய்கிறார்.


ராவணன் முதல் முறையாக ராமபிரானுடன் போர் செய்ய நேருக்கு நேர் வருகிறான்.

அன்று வரை, ராவணன் எந்த போரிலும் தோல்வியை பார்க்காதவன். மஹா வீரன்.

சீதாதேவியை கடத்தியது ராவணன் செய்த குற்றம். 

மற்றபடி, அவனும் மஹாவீரன் தான்.


இவன் செய்த ஒரு குற்றத்துக்காக, வீணாக இவன் வீரத்தை குற்றம் சொல்ல ஆசைப்படவில்லை ராமபிரான்.


முதல் முறை போர் புரிய வந்த ராவணனின் தேரை உடைத்து, கிரீடத்தை தட்டி, அவன் தேர் கொடியை உடைத்து தள்ள, யாரிடமும் இது வரை தோற்று அறியாத ராவணன், 38 வயது ராமபிரானிடம் தோற்றான். 


தன்னிடம் போர் புரிவதற்கு முன், ராவணன் சுக்ரீவனை, கவாக்ஷன், கவயன், ருஷபன், ஜ்யோதிமுகன், நபன், நீலன், ஹனுமான், லக்ஷ்மணன் அனைவரையும் கீழே விழ செய்து, கடைசியாக ராமபிரானிடம் போர் புரிய வந்தான்.


இவர்கள் அனைவரையும் தோற்கடித்த வீரன் என்பதால், ராமபிரான் தோற்று நிற்கும் ராவணனை பார்த்து,

"ராவணா! நீ பெரிய காரியத்தை செய்துள்ளாய். மஹாபலம் கொண்ட என் சேனையை எதிர்த்து வென்றுள்ளாய்.

பலருடன் போர் செய்ததால் நீ தோற்று இருக்கலாம். அதனால் உன்னை இன்று யமலோகம் அனுப்ப நான் நினைக்கவில்லை" என்று அஸூயையே இல்லாமல் சொல்கிறார்.

कृतं त्वया कर्म महत् सुभीमं

हतप्रवीरश्च कृतस्त्वयाऽहम् ।

तस्मात्परिश्रान्त इव व्यवस्य

न त्वां शरैर्मृत्युवशं नयामि ॥ 

- வால்மீகி ராமாயணம்

பெரும் அவமானத்தோடு திரும்பி நடந்து செல்கிறான் ராவணன்.

இந்த இடத்தில் சாதாரண மனிதன் எவன் இருந்திருந்தாலும், ராவணன் செய்த ஒரு குற்றத்துக்கு, அஸூயை கொண்டு, அவன் வீரத்தையும் கேலி செய்து, "பேடி ராவணா! நான் இல்லாத போது சீதாதேவியை கடத்தினாயே? நீயெல்லாம் ஒரு வீரனா?" என்று அவன் வீரத்தை குறையாக சொல்லி இருப்பான்.


சீதாதேவியை கடத்தினான் என்ற குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வந்த ராமபிரான், ராவணனிடம் உள்ள மற்ற நல்ல குணங்களையோ, திறமையையோ கேலியாகவோ, தோஷமாகவோ பேசவே இல்லை.


'ஒருவரிடம் உள்ள குற்றத்துக்காக, அவரிடம் உள்ள நல்ல குணத்தையும் தோஷமாக சொல்வது' - அஸூயை.


இந்த அஸூயையே இல்லாதவர் ராமபிரான் என்று வால்மீகி சொல்கிறார். 

மனிதனாக வாழ நினைக்கும் எந்த மனிதனும், இந்த உயர் பண்புகள் கொண்ட ராமபிரானை வணங்காமல் இருக்கமுடியாது.


What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.

Sunday 27 June 2021

சீதையின் பெருமை.. கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்

கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்

"14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும்" என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால், ராமபிரான் சித்ர கூடத்தில் பரதனை பார்த்து தன் பாதுகையை கொடுத்து சமாதானம் செய்து, அயோத்திக்கு திருப்பி அனுப்பிய பிறகு தண்டக வனத்தில் பிரவேசித்தார்.


அங்கு சரபங்க முனிவரை தரிசித்தார். 

ராமபிரானை தரிசித்த பிறகு,  சரபங்க ரிஷி தன் உடலை அக்னியில் விட்டு விட்டு, ப்ரம்ம லோகம் சென்று விட்டார்.


சரபங்கர் சொன்னபடி, சுதீக்ஷன ரிஷியை பார்க்க பல வனங்கள், மலைகள் கடந்து வந்து கொண்டிருந்தார் ராமபிரான். கூடவே லக்ஷ்மணரும், சீதா தேவியும் வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழிகளில், பல ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சில ரிஷிகள் ராமபிரானை பார்த்து, தங்களுக்கு நேரும் அபாயத்தை பற்றி விவரித்து, ராமபிரானிடம் அபயம் கேட்டனர். 





स: अयं ब्राह्मण भूयिष्ठो 

वानप्रस्थ गणो महान् |

त्वन्नाथ: अनाथवद् राम 

राक्षसै: वध्यते भृशम् ||

- वाल्मीकि रामायण

ஸ: அயம் ப்ராஹ்மண பூயிஷ்டோ

வான ப்ரஸ்த கணோ மஹான் |

த்வன்நாத: அனாதவத் ராம

ராக்ஷஸை: வத்யதே ப்ருஸம் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! We are a group of great sages, mostly brahmins, leading a vanaprastha life. Yet with a protector like you, we are slaughtered in large numbers like orphans by rakshasas.

ராமா ! நாங்கள் பெரும்பாலும் வானப்ரஸ்தம் ஏற்ற ப்ராம்மணர்கள். உங்களை போன்ற பாதுகாவலர் இருந்தும், இங்கு ராக்ஷஸர்களால் அனாதைகள் போல நாங்கள் குவியல் குவியலாக கொல்லப்படுகிறோம்.


एहि पश्य शरीराणि 

मुनीनां भावित आत्मनाम् |

हतानां राक्षसै र्घोरै: 

बहूनां बहुधा वने ||

- वाल्मीकि रामायण

யேஹி பஸ்ய சரீராணி

முனீனாம் பாவித ஆத்மநாம் |

ஹதானாம் ராக்ஷஸை கோரை: 

பஹுனாம் பஹுதா வனே ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! Come and see the huge number of dead bodies, who had perceived the Supreme Spirit, killed in large numbers in the forest by the fierce rakshasa.This is a veritable Holocaust.

ராமா ! இதோ பாருங்கள்.. இங்கு குவியலாக கிடக்கும் எலும்பு குவியலை. நர மாமிசம் உண்ணும் ராக்ஷஸர்கள், தவம் செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை விழுங்கி துப்பிய எலும்புகள் இவை. 


पम्पा नदी निवासानाम् 

अनु-मन्दाकिनीम् अपि |

चित्रकूट आलयानां च 

क्रियते कदनं महत् ||

- वाल्मीकि रामायण

பம்பா நதீ நிவாஸானாம்

அனு-மந்தாகினீம் அபி |

சித்ரகூட ஆலயானாம் ச

க்ரியதே கதனம் மஹத் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama ! A great slaughter is taking place amongst those residing on the bank of the Pampa lake, near the river Mandakini, and on mount Chitrakuta.

ராமா! பம்பா நதிக்கரையில், மந்தாகினி ஓடும் நதிக்கரையில், சித்ரகூட சமீபத்தில் வசிக்கும் அனைவரையும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள் ராக்ஷஸர்கள்.


एवं वयं न मृष्यामो 

विप्रकारं तपस्विनाम् |

क्रियमाणं वने घोरं 

रक्षोभि: भीम कर्मभिः ||

- वाल्मीकि रामायण

ஏவம் வயம் ந ம்ருஷ்யாமோ

விப்ரகாரம் தபஸ்வினாம் |

க்ரியமானம் வனே கோரம்

ரக்ஷோபி: பீம கர்மபி: ||

- வால்மீகி ராமாயணம்

We are not able to tolerate the fearful deeds perpetrated by the dreadful rakshasas in the forest.

ராமா! ராக்ஷஸர்கள் செய்யும் இந்த பெரும் நாசத்தை, எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. 





तत: त्वां शरणार्थं च 

शरण्यं सम उपस्थिताः |

परिपालय नो राम 

वध्यमानान् निशाचरैः ||

- वाल्मीकि रामायण

தத: த்வாம் சரணார்தம் ச

சரண்யம் ஸம உபஸ்திதா: |

பரிபாலய நோ ராம

வத்யமானான் நிஸாசரை: ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! you are worthy of refuge. Hence we have come to you seeking your protection. We are being killed by the night stalkers. Save us.

நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்கு தகுதியானவர். எனவே உங்கள் பாதுகாப்பை நாடி நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களால் நாங்கள் கொல்லப்படுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்.


परा त्वत्तो गतिर्वीर 

पृथिव्यां न: उपपद्यते |

परिपालय न सर्वान् 

राक्षसेभ्यो नृप आत्मज ||

- वाल्मीकि रामायण

பரா த்வத்தோ கதி வீர

ப்ருதிவ்யாம் ந: உபபத்யதே |

பரிபாலய ந சர்வான்

ராக்ஷஸேப்யோ ந்ருப ஆத்மஜ ||

- வால்மீகி ராமாயணம்

O great warrior ! Here on this earth, there is no protector as mighty as you. So, O prince ! Save us all from these demons raakshas.

பராக்ரமசாலியே ! ராமா ! இந்த உலகில் உங்களை போன்ற வலிமையான ரக்ஷகன் இல்லவே இல்லை. நீங்கள் எங்கள் அனைவரையும் இந்த ராக்ஷஸர்களிடமிருந்து ரக்ஷிக்க வேண்டும். 


एतत् श्रुत्वातु काकुत्स्थ: 

तापसानां तपस्विनाम् |

इदं प्रोवाच धर्मात्मा 

सर्वान् एव तपस्विनः ||

- वाल्मीकि रामायण

ஏதத் ஸ்ருத்வாது காகுத்ஸ்த:

தாபஸானாம் தபஸ்வினாம் |

இதம் ப்ரோவாச தர்மாத்மா

சர்வான் ஏவ தபஸ்வின: ||

- வால்மீகி ராமாயணம்

Having heard this, righteous Rama of the Kakutstha dynasty said to all the ascetics engaged in penance.

இவ்வாறு தவ ரிஷிகளின் சொல்ல, தர்மத்தில் இருப்பவர்களை காக்கும் காகுஸ்தனான ராமபிரான் கம்பீரமாக பேசலானார்.. 


नैवम् अर्हथ मां वक्तुम् 

आज्ञाप्य अहं तपस्विनाम् |

केवलेन् आत्म कार्येण 

प्रवेष्टव्यं मया वनं ||

- वाल्मीकि रामायण

நைவம் அர்ஹத மாம் வக்தும்

ஆஞாப்ய அஹம் தபஸ்வினாம் |

கேவலேன ஆத்ம கார்யேன

ப்ரவேஷ்டவ்யம் மயா வனம் ||

- வால்மீகி ராமாயணம்

You should not speak to me this way. I deserve to be commanded to do this task. I am at your service. I came to the forest only for my work.

ரிஷிகளான தாங்கள் இவ்வாறு என்னிடம் கேட்பது கூடாது. எனக்கு நீங்கள் ஆணை இட வேண்டும். நீங்கள் இட்ட ஆணையை செயல்படுத்தும் சேவகன் நான். நான் என்னுடைய கடமையை செய்யவே வனத்திற்கு வந்தேன்.


विप्रकारम् अपाक्रष्टुं 

राक्षसै:  भवताम् इमम् |

पितु: तु निर्देश-करः 

प्रविष्ट: अहमिदं वनम् ||

- वाल्मीकि रामायण

விப்ரகாரம் அபாக்ரஷ்டும்

ராக்ஷஸை: பவதாம் இமம் |

பிது: து நிர்தேச கர:

ப்ரவிஷ்ட: அஹம் இதம் வனம் ||

- வால்மீகி ராமாயணம்

I came into this forest in obedience to my father's orders to repel the aggression of demons against you.

என் தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு வந்த நான், உங்களுக்கு தொந்தரவு செய்யும் இந்த ராக்ஷஸர்களை தடுப்பேன்.


भवताम् अर्थ सिद्ध्यर्थम् 

आगत: अहं यदृच्छया |

तस्य मे अयं वने 

वासो भविष्यति महाफलः ||

- वाल्मीकि रामायण

பவதாம் அர்த சித்தார்தம்

ஆகத: அஹம் யத்ருச்சயா |

தஸ்ய மே அயம் வனே

வாஸோ பவிஷ்யதி மஹாபல: ||

- வால்மீகி ராமாயணம்

But by good fortune, I have got a chance to accomplish your mission. Therefore, My forest life shall become greatly fruitful by this.

அதிர்ஷ்டத்தால், உங்களுக்கு சேவை செய்ய, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு சேவை செய்வதால் என் வனவாசம் பலன் பெற்றது.




तपस्विनां रणे शत्रून् 

हन्तुम् इच्छामि राक्षसान् |

पश्यन्तु वीर्यम् ऋषय: 

सभ्रातु: मे तपोधनाः ||

- वाल्मीकि रामायण

தபஸ்வினாம் ரணே சத்ரூன்

ஹந்தும் இச்சாமி ராக்ஷஸான் |

பஸ்யந்து வீர்யம் ருஷய:

ஸ-ப்ராது: மே தபோதன: ||

- வால்மீகி ராமாயணம்

I wish to kill those raakshasas who are your enemies. O great rishis !, you may witness my valor supported by my brother.

உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த ராக்ஷஸர்களை நான் ஒழிப்பேன். மஹாத்மாக்களான ரிஷிகளே! என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் காணப்போகிறீர்கள்.


दत्त्वा अभयं च अपि तपोधनानां 

धर्मे धृतात्मा सह लक्ष्मणेन।

तपोधनै: च अपि सभाज्यवृत्तः 

सुतीक्ष्णमेव अभिजगाम वीरः ||

- वाल्मीकि रामायण

தத்வா அபயம் ச அபி தபோதனானாம்

தர்மே த்ருதாத்மா சஹ லக்ஷ்மணேன |

தபோதனை: ச அபி ஸபாஜ்ய வ்ருத்த:

சுதீக்ஷ்ண மேவ அபி-ஜகாம வீர: ||

- வால்மீகி ராமாயணம்

Brave Rama who is Steadfast in righteousness, worthy of honour, gave assurance to protect the rishis endowed with the wealth of penance, and proceeded towards sage Suteekshna.

சங்கல்பத்தில் உறுதியும், மரியாதைக்குரியவருமான துணிவுடைய ராமபிரான், தவமே செல்வமாக கொண்ட ரிஷிகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார். மேலும், சுதீக்ஷ்ண ரிஷியை நோக்கி தரிசிக்க முன்னேறினார்.


சுதீக்ஷ்ண ரிஷியை தரிசித்து, அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு தங்கி விட்டு, மேலும் தண்டக வனத்திற்குள் சஞ்சரிக்கலானார்.

குற்றங்களே கண்ணுக்கு தெரியாத, கருணையே உருவான சீதாதேவி... ராமபிரானிடம் சொல்கிறாள்...


त्रीण्येव व्यसनानि 

अत्र कामजानि भवन्ति उत |

मिथ्या वाक्यं परमकं 

तस्माद् गुरुतरौ उभौ ||

परदार अभिगमनं 

विना वैरं च रौद्रता ||

- वाल्मीकि रामायण

த்ரீன் ஏவ வ்யஸனானி

அத்ர காமஜானி பவந்தி உத |

மித்யா வாக்யம் பரமகம்

தஸ்மாத் குருதரௌ உபௌ ||

பரதார அபிகமனம் 

வினா வைரம் ச ரௌத்ரதா ||

- வால்மீகி ராமாயணம்

O Man of Truth! Three things born out of lust. 

speaking untruth, 

having sexual relation with others' wives and

resorting to violence with no enmity. 

The later two are worst than the 1st.

ஓருவனுக்கு திருப்தியே இல்லாத போது, மூன்று வகையான தீமைகள் பிறக்கின்றன. 

திருப்தியே இல்லாதவன், பொய் பேச துணிவான். 

திருப்தியே இல்லாதவன், பர தாரத்தை கூட அபகரிக்க நினைப்பான்.

திருப்தியே இல்லாதவன், தன்னிடம் பகை காட்டாதவனிடம் கூட வலிய சென்று பகையை காட்டுவான். 

பொய் சொல்வதை காட்டிலும், மற்ற இரண்டும் மிகவும் கொடியது.

मिथ्यावाक्यं न ते भूतं 

न भविष्यति राघव |

कुत: अभिलाषणं स्त्रीणां 

परेषां धर्म नाशनम् ||

- वाल्मीकि रामायण

மித்யா வாக்யம் ந தே பூதம்

ந பவிஷ்யதி ராகவ |

குத: அபிலாஷனம் ஸ்த்ரீணாம்

பரேஷாம் தர்ம நாஸனம் ||

- வால்மீகி ராமாயணம்

O Raghava! you never spoke untruth in the past nor you will speak in future. 

Also, you will never desire other man's wife both in past and future.

ராகவா! நீங்கள் அன்றும் இன்றும் என்றுமே சத்தியத்தை மீறுபவர் இல்லை. உங்களிடம் அஸத்தியம் கிடையவே கிடையாது. 

ராகவா! அதே போல, பிற தாரத்தின் மேல் ஆசை கொள்வதில்லை.


तव नास्ति मनुष्येन्द्र 

न च अभूत् ते कदाचन |

मनस्यपि तथा राम 

न च एतद् विद्यते क्वचित् ||

- वाल्मीकि रामायण

தவ நாஸ்தி மனுஷ்யேந்த்ர

ந ச அபூத் தே கதாசன |

மனஸ்யபி ததா ராம

ந ச ஏதத் வித்யதே க்வசித் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! You hadn't desire for other women in the past. You havn't it now. Never does it exist even in your mind

ராகவா! பிறர் தாரத்தை அடையும் ஆசை உங்களுக்கு முன்பும் இருந்தது இல்லை.  இப்பொழுதும் இல்லை. உங்கள் மனதில் இந்த எண்ணமே இல்லை.


स्वदार-निरत: त्वं 

च नित्यमेव नृपात्मज |

धर्मिष्ठ: सत्य-सन्धश्च 

पितु र्निर्देश कारकः ||

- वाल्मीकि रामायण

ஸ்வதார நிரத: த்வம்

ச நித்யம் ஏவ ந்ருப ஆத்மஜ |

தர்மிஷ்ட: சத்ய சந்த: ச

பிது நிர்தேஸ காரக: ||

- வால்மீகி ராமாயணம்

O prince! you are always faithful to your wife. You are righteous, truthful and obedient to your father's orders.

ராகவா! நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பத்னிக்கு துரோகம் செய்யாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் தர்மத்தை அறிந்தவர், சத்தியத்தை மீறாதவர், தகப்பனார் ஆணையை மீறாதவர்.


सत्यसन्ध महाभाग 

श्रीमन् लक्ष्मण पूर्वज |

त्वयि धर्मश्च सत्यं च 

त्वयि सर्वं प्रतिष्ठितम् ||

- वाल्मीकि रामायण

சத்யசந்த மஹாபாக

ஸ்ரீமந் லக்ஷ்மண பூர்வஜ |

த்வயீ தர்ம: ச சத்யம் ச

த்வயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம் ||

- வால்மீகி ராமாயணம்

Rama! O Man of truth! O auspicious one! O brother of lakshmana! In you,  truth and righteousness are ever present.

ராகவா! சத்யசந்தரே! போற்றுதலுக்கு உரியவரே! லக்ஷ்மணனுக்கு சகோதரரே! உங்களிடம் எப்பொழுதும் தர்மமும், சத்தியமும் குடி கொண்டு இருக்கிறது.


तत् च सर्वं महाबाहो 

शक्यं धर्तुं जितेन्द्रियैः |

तव वश्येन्द्रिय त्वं 

च जानामि शुभ-दर्शन ||

- वाल्मीकि रामायण

தத் ச ஸர்வம் மஹாபாஹோ

சக்யம் தர்த்தும் ஜிதேந்த்ரியை: |

தவ வஸ்யேந்த்ரிய த்வம்

ச ஜானாமி சுப தர்சன ||

- வால்மீகி ராமாயணம்

Only those who restrain their senses can hold all these features. I know that you have control over your senses.

ராகவா! புலனடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற நற்குணங்கள் காணப்படும். நீங்கள் புலனடக்கம் உள்ளவர் என்பதை நான் அறிவேன்.





तृतीयं यदिदं रौद्रं 

पर-प्राणाभि हिंसनम् |

निर्वैरं क्रियते मोहात् 

तत् च ते समुपस्थितम् ||

- वाल्मीकि रामायण

த்ருதீயம் யதீதம் ரௌத்ரம்

பர- ப்ரானாபி ஹிம்ஸனம் |

நிர்வைரம் க்ரியதே மோஹாத் 

தத் ச தே சமுபஸ்திதம் ||

- வால்மீகி ராமாயணம்

But i find the 3rd blemish of harming others without any direct enmity in you.

ராகவா! உங்களிடம் பொய்யும் இல்லை, பெண்ணாசையும் இல்லை. ஆனால் 'உங்களிடம் நேரிடையாக பகை இல்லாதவர்களை தாக்கும்' மூன்றாவது குறை தெரிகிறதே!! 


प्रतिज्ञात: त्वया वीर 

दण्डकारण्य वासिनाम् |

ऋषीणां रक्षणार्थाय 

वध: संयति रक्षसाम् ||

- वाल्मीकि रामायण

ப்ரதிஞாத: த்வயா வீர

தண்டக ஆரண்ய வாஸினாம் |

ருஷீணாம் ரக்ஷண அர்தாய

வத: ஸம்யதி ரக்ஷஸாம் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! You have promised the forest dwellers that you will kill the rakshasas in the battle, in order to protect the rishis, residing in the Dandaka forest.

ராகவா ! தண்டக வனத்தில் வசிக்கும் ரிஷிகளைப் பாதுகாப்பதற்காக, 'ராக்ஷஸைக் கொல்வேன்' என்று வனவாசிகளுக்கு வாக்குறுதி அளித்து விட்டீர்களே!


एत: निमित्तं च वनं 

दण्डका इति विश्रुतम् |

प्रस्थित: त्वं सह भ्रात्रा 

धृत बाण शरासनः ||

- वाल्मीकि रामायण

ஏத: நிமித்தம் ச வனம்

தண்டகா இதி விஸ்ருதம் |

ப்ரஸ்தித: த்வம் சஹ ப்ராத்ரா

த்ருத பாண சராஸந: ||

- வால்மீகி ராமாயணம்

Raghava ! It is very evident to see that you want to kill the rakshasas in dandaka forest and hence you have started entering dandaka forest with bow and arrows along with your brother.

ராகவா ! நீங்கள் தண்டக வனத்தில் ராக்ஷஸைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இதன் காரணமாக தான், நீங்கள் உங்கள் சகோதரருடன் வில் மற்றும் அம்புகளுடன் தண்டக வனத்தில் நுழையத் தொடங்கியுள்ளீர்கள்.


ततस्त्वां प्रस्थितं दृष्ट्वा 

मम चिन्ताकुलं मनः |

त्वद् वृत्तं चिन्तयन्त्या वै 

भवेन् निश्श्रेयसं हितम् ||

- वाल्मीकि रामायण

தத: த்வாம் ப்ரஸ்திதம் த்ருஷ்டவா

மம சிந்தாகுலம் மன: |

த்வத் வ்ருத்தம் சிந்தயந்த்யா வை

பவேந் நிஸ் ஸ்ரேயஸம் ஹிதம் ||

- வால்மீகி ராமாயணம்

Raghava ! I am worried that this will bring you no good.

ராகவா! இந்த காரணத்தால் நான் பெரிதும் கவலை கொள்கிறேன். 'உங்கள் புகழுக்கு எந்த குறையும் ஏற்பட கூடாதே!' என்று கவலை கொள்கிறேன்,  என்றாள் சீதாதேவி.


பரமாத்மா தர்மத்தை காப்பவர்.

தர்மம் செய்பவர்களை காக்க, அவர்களை தொந்தரவு செய்பவர்களை, அதர்மம் செய்பவர்களை தண்டித்து விடுவார்.


தாயாருக்கு தாய் பாசமே மேலோங்கி இருக்கும். தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளை அதர்மமே செய்தாலும் பரிந்து பேசும் குணம் உடையவள்.


ராமபிரான், ரிஷிகளை அநியாயமாக கொன்று குவித்ததை பார்த்ததும், 'ராக்ஷஸர்களுக்கு தண்டனை தர வேண்டும்' என்று வாக்கு கொடுத்தார்.

ராக்ஷஸர்கள் கொன்று குவித்து எலும்பு குவியலை நேரில் பார்த்தும், 'ராக்ஷஸர்களை தண்டிக்க வேண்டுமா? அவர்களை திருத்தலாமே!' என்று நினைத்தாள் சீதாதேவி..

இந்த குணம் இந்த இடத்தில் மட்டுமல்ல, அசோகவனத்திலும் காணலாம்.

சீதாதேவியை பார்த்து, "உன் கண்ணை பிடுங்கட்டுமா? நர மாமிசமாக உன்னை வெட்டி சாப்பிட போகிறேன்" என்று 10 மாதங்கள் ராக்ஷஸிகள் சூழ்ந்து கொண்டு சித்ரவதை செய்தனர்.

போரில் ராவணன் கொல்லப்பட்ட பின், ஹனுமான் சீதாதேவியை அழைக்க வந்த போது, "உங்களை கொடுமையான சொற்களால் இத்தனை மாதங்கள் மிரட்டிய இந்த ராக்ஷஸிகளை துண்டு துண்டாக வெட்டட்டுமா? இவர்கள் கண்களை பிடுங்கி ஏறியட்டுமா?" என்று கேட்க, அப்பொழுதும் சீதாதேவி தன்னை சித்ரவதை செய்த ராக்ஷஸிகளுக்கு பரிந்து பேசி ஹனுமானை சமாதானம் செய்து விட்டாள்.


தர்மத்தை மீறி நடப்பவர்களை கண்டால், பெருமாளுக்கு பிடிக்காது. 

தகப்பன் நிலை, பெருமாளுக்கு.

'இவன் நல்ல பிள்ளையாக இல்லையே! தர்மம் சொன்னாலும் கேட்காமல், அதர்மம் செய்கிறானே!' என்று கோபப்படுவார்.


தாயாரோ, தனக்கே துரோகம் செய்தாலும், அதர்மமே செய்தாலும், "சொல்லி திருத்துங்கள்… தண்டிக்காதீர்கள்" என்று பரிந்து பேசுவாள்.

குற்றம் வெளிப்படையாக செய்தாலும், குற்றத்தை பார்க்காமல், சிபாரிசு செய்பவளாக தாயார் இருக்கிறாள்.


மஹாலக்ஷ்மியே சீதாதேவியாக அவதரித்து இருப்பதால், இந்த ஆச்சர்யமான குணம் வெளிப்பட்டது.


'எலும்பு குவியலாக ரிஷிகளை கொன்று குவித்த, ராக்ஷஸர்களை கொல்ல கூடாது' என்பதற்காக 'தன்னிடமே ஒரு குற்றம் இருப்பதாக சொல்லும்' தாயுள்ளம் கொண்ட சீதாதேவியை கண்டு மந்தாஹாசம் செய்தார் ராமபிரான்.

தாயாரின் குணம் இது என்று அறிந்த ராமபிரான், சீதாதேவியிடம், "தர்மத்தை காப்பது என் கடமை. நானாக ராக்ஷஸர்களை அனாவசியமாக கொல்ல நினைக்கவில்லை. 

ரிஷிகள் என்னிடம் வந்து காப்பாற்றுமாறு கேட்டார்கள். அவர்களை காக்கும் பொறுப்பு இருப்பதால், அவ்வாறு வாக்கு கொடுத்தேன். 

நீ எனக்கு எதுவும் ஆக கூடாதே! என்ற அக்கரையில் தான் இப்படி பேசினாய் என்று அறிவேன். 

வாக்கு கொடுத்து விட்டால், என்னால் மீறவே முடியாது" என்று சாமர்த்தியமாக பேசி, மந்தஹாசத்துடன் சீதாதேவி, லக்ஷ்மணருடன் மேலும் வனத்திற்குள் நடக்கலானார்.


"கோவிலில், முதலில் தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்?" என்பதற்கு இதுவே காரணம்.


நேரிடையாக பெருமாள் சந்நிதிக்குள் நாம் சென்றால், தகப்பனார் போல இருக்கும் பெருமாள், உடனேயே 'இந்த பிள்ளையின் நல்ல குணங்கள் என்ன? கெட்ட குணங்கள் என்ன? நல்ல செயல்கள் என்ன? கெட்ட செயல்கள் என்ன?' என்று கவனித்து விடுவார்.

நாமோ பெரும்பாலும் அதர்மம் செய்பவர்களே! 

பெருமாள் பெருமைப்படும் அளவுக்கு நம் செயல்கள் இல்லை.

நம்மை பார்த்தவுடனேயே, 

'இப்படி அதர்மம் செய்கிறானே! இவனை திருத்த, தண்டனை கொடுத்தால் என்ன?' என்று நினைப்பார்.

நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க சென்றால், நாம் செல்வதற்கு முன்பேயே, 'நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுகிரஹம் மட்டுமே செய்யுங்கள்' என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார்.

தாயாரை பார்த்து விட்டு, வரும் நம்மை, 'தவறு தெரிந்தாலும் எதுவும் சொல்லாமல், நாம் கேட்பதை எல்லாம் கிடைக்க செய்து' அணுகிரஹம் செய்து விடுவார் பெருமாள்.

சீதாதேவியின் பெருமை மகத்தானது... 

திருப்பதியில் பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், தாயாருக்கு திருமலையில் தனி சந்நிதி இல்லை. 

நாம் திருமலையப்பனை பார்க்கும் போது, பெருமாள் நம்மை பார்க்கும் போது, தாயாரும் அவர் நெஞ்சிலிருந்து பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், திருப்பதியில் மட்டும் பெருமாள் 'யார் வந்தாலும் குற்றம் பார்க்காமல் அணுகிரஹம் மட்டுமே செய்கிறார்'. 

Friday 28 May 2021

Rama Rajya - How people lived under the Rule of Ram? ராம ராஜ்யம் - ராமபிரான் அரசாட்சியில் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? தெரிந்து கொள்வோம் - வால்மீகி ராமாயணம்

Rama Rajya - How people lived under the Rule of Ram? 

ராம ராஜ்யம் - ராமபிரான் அரசாட்சியில் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? தெரிந்து கொள்வோம் - வால்மீகி ராமாயணம் 

राज्यन् दशसहस्राणि प्राप्य वर्षाणि राघवः |

शताश्वमेधानाजह्रे सदश्वान्भूरिदक्षिणान् ||

-  वाल्मीकि रामायण

ராஜ்யன் தச சஹஸ்த்ராணி 

ப்ராப்ய வர்ஷாணி ராகவ: |

சத அஸ்வமேதான் ஆஜஹ்னே 

சத அஸ்வான்  பூரிதக்ஷிணம் ||

- வால்மீகி ராமாயணம் 

பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் ராமபிரான் ஆட்சி செய்து, நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்து புகழ் பெற்றார்.

Ram ruled kingdom for ten thousand years, Rama performed a hundred of aswamedha yagya and numerous gifts bestowed





न पर्यदेवन् विधवा न च व्यालकृतं भयम् |

न व्याधिजं भयन् वापि रामे राज्यं प्रशासति ||

-  वाल्मीकि रामायण

ந பர்யதேவன் விதவா 

ந ச வ்யாலக்ருதம் பயம் |

ந வ்யாதிஜம் பயன் வாபி 

ராமே ராஜ்யம் ப்ரஸாசதி ||

- வால்மீகி ராமாயணம்

ராமராஜ்யத்தில், கணவனை இழந்து யாரும் விதவை ஆகவில்லை. விஷ ஜந்துக்கள் கடிக்குமே! என்ற பயமோ, வியாதி வருமே! என்ற கவலையோ யாருக்கும் இருக்கவில்லை. 

While Rama was ruling the kingdom, there were no widows to lament, nor there was no danger from wild animals, nor any fear born of diseases.


निर्दस्युरभवल्लोको नानर्थः कन् चिदस्पृशत् |

न च स्म वृद्धा बालानां प्रेतकार्याणि कुर्वते || 

-  वाल्मीकि रामायण

நிர்தஸ்யு பவத் லோகே

ந அனர்த: கஸ்சித் அஸ்ப்ருஷத் |

ந ச ஸ்ம வ்ருத்தா பாலானா

 ப்ரேத காரியாணி குர்வதே ||

- வால்மீகி ராமாயணம் 

ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் நிம்மதியாக கஷ்டங்கள் எதுவும் இன்றி வாழ்ந்தனர். திருடர்கள் இல்லாமல் உலகம் கவலையின்றி இருந்தது. மற்றவர்கள் பொருளை யாரும் தொடக் கூட மாட்டார்கள் என்ற நிலை இருந்தது. முதியவர்கள் பாலர்களுக்கு அந்திம சம்ஸ்காரங்கள் செய்யும்படியாக ஒரு சம்பவம் கூட நிகழவில்லை.

The world was bereft of thieves and robberies. No one felt worthless nor did old people perform obsequies concerning youngsters.


सर्वं मुदितमेवासीत्सर्वो धर्मपरोअभवत् |

राममेव अनुपश्यन्तो न अभ्यहिन्सन् परस्परम् ||

-  वाल्मीकि रामायण

ஸர்வம் முதிதமேவ அஸீத் 

சர்வா தர்மோபரோ அபவத் |

ராமமேவ அனுபஸ்யந்தோ 

ந அப்ய-ஹின்ஸன் பரஸ்பரம் ||

- வால்மீகி ராமாயணம் 

எங்கும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. எங்கும் தர்மமே தலை தூக்கி நின்றது. ராமனையே அனுசரித்து அனைவரும் இருந்தனர். யாரும், தங்களுக்குள் சண்டையிடுவதில்லை.  அடித்துக் கொள்வதில்லை. 

Every living beings felt pleased. Every one was intent on virtue. Everyone's eye fixed towards Rama alone. No one killed one another.


आसन्वर्षसहस्राणि तथा पुत्रसहस्रिणः |

निरामया विशोकाश्च रामे राज्यं प्रशासति ||

-  वाल्मीकि रामायण

ஆஸன் வர்ஷ சஹஸ்ராணி 

ததா புத்ர சஹஸ்ரிண: |

நிராமயா விசோகா: ச 

ராமே ராஜ்யம் ப்ரசாஸதி || 

- வால்மீகி ராமாயணம்

அனைவரும் ஆயிரம் வருஷங்கள் ஆயிரக் கணக்கான புத்திரர்களோடு வாழ்ந்தனர். ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் வியாதியின்றி, வருத்தம் இன்றி, சுகமாக இருந்தனர். 

While Rama was ruling the kingdom, people survived for thousands of years, with thousands of their progeny, all free of illness and grief.

रामो रामो राम इति प्रजानाम् अभवन् कथाः |

रामभूतं जगाभूद् रामे राज्यं प्रशासति ||

-  वाल्मीकि रामायण

ராமோ ராமோ ராம இதி

ப்ரஜாநாம் அபவன் கதா: |

ராமபூதம் ஜகாபூத்

ராமே ராஜ்யம் ப்ரஸாசதி || 

- வால்மீகி ராமாயணம்

ராமா, ராமா, ராமா' என்றே ப்ரஜைகள் எப்பொழுதும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.  கதைகள் பேசினாலும், ராமனைச் சுற்றியே, ராமனைப் பற்றியே பேசினர்.  ராம மயமாகவே உலகம் விளங்கியது. ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்களின் மனதில் ராமரே நிறைந்திருந்தார். 

While Rama ruled the kingdom, the talks of the people centered round Rama, Rama and Rama. The world became Rama's world.





नित्यपुष्पा नित्यफला: तरवः स्कन्धविस्तृताः |

कालवर्षी च पर्जन्यः सुखस्पर्शश्च मारुतः ||

-  वाल्मीकि रामायण

நித்ய-புஷ்பா நித்ய-பலா:

தரவ: ஸ்கந்த-விஸ்த்ருதா: |

காலவர்ஷீ ச பர்ஜன்ய:

சுக-ஸ்பர்ச: ச மாருத: || 

- வால்மீகி ராமாயணம்

மரங்கள் நித்யம் பூத்துக் குலுங்கின. அனைத்து காலங்களிலும் அனைத்து விதமானபழங்கள் பழுத்துத் தொங்கின. கிளைகள் படர்ந்து விஸ்தாரமாக நின்றன.  பருவ காலங்களில் விடாது மழை பெய்தது.  காற்று இதமாக வீசியது. 

The trees there were bearing flowers and fruits regularly, without any injury by pests and insects. The clouds were raining in time and the wind was delightful to the touch.


ब्राह्मणाः क्षत्रिया वैश्याः शूद्रा लोभविवर्जिताः |

स्वकर्मसु प्रवर्तन्ते तुष्ठाः स्वैरेव कर्मभिः ||

-  वाल्मीकि रामायण

ப்ராஹ்மணா: க்ஷத்ரியா வைஸ்யா: 

சூத்ரா லோப விவர்ஜிதா: |

ஸ்வ-கர்மசு ப்ரவர்தந்தே 

துஷ்டா: ஸ்வை: ஏவ கர்மபி: || 

- வால்மீகி ராமாயணம்

ப்ராம்மணர்களோ, க்ஷத்திரியர்களோ, வைஸ்யர்களோ, சூத்ரர்களோ, யாராக இருந்தாலும் பேராசை இன்றி, அவரவர் வேலைகளை நியாயமாக செய்து கொண்டிருந்தனர்.  தங்கள் தங்கள் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்தனர். தங்கள் செயல்களிலேயே திருப்தியுடன் இருந்தனர். 

Brahmins (the priest-class), Kshatriyas (the warrior-class), Vaishyas (the class of employers, merchants and agriculturists), Shudras (the employee-class) were performing their own duties, satisfied with their own work and bereft of any greed.


आसन् प्रजा धर्मपरा रामे शासति नानृताः |

सर्वे लक्षण-सम्पन्नाः सर्वे धर्म-परायणाः ||

दश-वर्ष सहस्राणि रामो राज्यम् अकारयत् |

वाल्मीकि रामायण

ஆஸன் ப்ரஜா தர்மபரா

ராமே சாஸதி ந அன்ருதா: |

சர்வே லக்ஷண சம்பண்ணா:

சர்வே தர்ம-பராயணா: || 

தச-வர்ஷ சஹஸ்ராணி

ராமோ ராஜ்யம் அகாரயத் |

- வால்மீகி ராமாயணம்

ப்ரஜைகள் தர்மத்தில் நம்பிக்கையுடன் அனுசரித்தும் வந்தனர். அனைத்து மக்களும் சிறந்த குணாதிசயங்களைக் கொண்டிருந்தனர். அனைவரும் நல்லொழுக்கத்திலேயே இருந்தனர். ராமபிரான் இவ்வாறு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அரசாட்சி புரிந்தார்.

While Rama was ruling, the people were intent on virtue and lived without telling lies. All the people were endowed with excellent characteristics. All were engaged in virtue. Rama was engaged in the kingship thus for one thousand years.

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram


Tuesday 9 March 2021

இக்ஷ்வாகு பரம்பரை... ராமபிரானின் மூதாதையர்கள்.. ராம பரம்பரை தெரிந்து கொள்வோமே! - வால்மீகி ராமாயணம்

 'அப்பாவுக்கு கொடுத்த வாக்கை மீற முடியாது' என்று உறுதியாக இருந்தார் ராமபிரான்.

கைகேயீ மாதாவுக்கு பரிந்து கொண்டு, ராமபிரான், பரதனை பார்த்து பேசலானார், 


पुरा भ्रातः पिता नः 

स मातरम् ते समुद्वहन् |

मातामहे समाश्रौषीद्

राज्य शुल्कम् अनुत्तमम् ||

- वालमीकि रामायण


புரா ப்ராத: பிதா ந: 

ச மாதரம் தே சமுத்வஹன் |

மாதாமஹே சமாஸ்ரௌஷீத்

ராஜ்ய சுல்கம் அனுத்தமம் ||

 - வால்மீகி ராமாயணம்

பரதா! வெகு வருடங்களுக்கு முன், நம் தந்தை தசரத மஹாராஜன், உன்னுடைய தாயார் கைகேயீயை மணக்கும் போது, "வரதட்சிணையாக" அவருடைய மாமனாருக்கு தன் அரசாங்கத்தை கொடுப்பதாக சொல்லி இருந்தார்"

O, My brother! Long ago, when our father married your mother, he promised your maternal grandfather that he would confer his kingdom as an exceptional marriage-dowry"




'ஆண்கள் வரதட்சிணை கொடுக்கும் வழக்கம் பாரத தேசத்தில் இருந்தது' என்று தெரிகிறது. 

947ல் நுழைந்த இஸ்லாமியர்களாலும், 1498ல் நுழைந்த வாஸ்கோ-ட-காமா என்ற கிறிஸ்தவர்களாலும், பாரத மக்கள் சூறையாடப்பட்டனர். செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. பெண்கள் கற்பை காக்க பெரும் அபாயம் ஏற்பட்டது. 

ஆண்கள் வரதட்சிணை கேட்கும் நிலை வந்ததும், கணவன் இறந்தால் பெண் உடன்கட்டை ஏறுவதும், பிராம்மணர்கள் தங்கள் வேதத்தை விட்டதும், ஹிந்துக்கள் நம் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளாமல் போனதற்கும், 1000 வருட அந்நிய ஆக்ரமிப்பினால் ஏற்பட்ட கலாசார சீரழிவே காரணம்.

देव असुरे च सम्ग्रामे

जनन्यै तव पार्थिवः |

सम्प्रहृष्टो ददौ राजा

वरम् आराधितः प्रभुः ||

- वालमीकि रामायण


தேவ அசுரே ச சம்க்ராமே

ஜனன்யே தவ பார்திவ: |

சம்ப்ரஹ்ருஷ்டோ ததொள ராஜா

வரம் ஆராதித: ப்ரபு: ||

 - வால்மீகி ராமாயணம்

"அதற்கு பிறகு தேவாசுர போர் நடக்கும் சமயத்தில், தசரத மஹாராஜா உன் தாயாருக்கு இரண்டு வரங்களை, தக்க சமயத்தில் உதவி செய்ததற்கு நன்றியாகவும், ஆசையாகவும் கொடுத்தார்."

Thereafter, in a conflict between Gods and demons, your mother received the promise of two boons from the efficient lord of the earth, King Dasartha, as a token of his joy and gratitude.


ततः सा सम्प्रतिश्राव्य

तव माता यशस्विनी |

अयाचत नर श्रेष्ठम्

द्वौ वरौ वर वर्णिनी ||

तव राज्यम् नर व्याघ्र

मम प्रव्राजनम् तथा |

तच् च राजा तथा तस्यै

नियुक्तः प्रददौ वरौ ||

- वालमीकि रामायण


தத: ஸா சம்ப்ரதிஸ்ராவ்ய

தவ மாதா யஷஸ்வினி |

அயாசத் நர ஸ்ரேஷ்டம்

த்வௌ வரௌ வர வர்ணிநீ ||

தவ ராஜ்யம் நர வ்யாக்ர

மம ப்ரவ்ராஜனம் ததா |

தச் ச ராஜா ததா தஸ்யை

நியுக்த: ப்ரததொள வரௌ ||

 - வால்மீகி ராமாயணம்

"மஹா வீரனே! புகழ் கொண்ட உனது தாயார், அந்த இரண்டு வரங்களை தான் இப்பொழுது கேட்டு கொண்டு இருக்கிறாள். அதில் ஒன்று உனக்கு நகர ராஜ்யம், எனக்கு வனவாசம்".

O, Tiger among men! Your illustrious mother of beautiful complexion consequently demanded these two boons from that chief of men, for you the throne and for me the exile to the forest.


'கைகேயீ மாதா தனக்கு உரிய சொத்தை தான் கேட்டு இருக்கிறாள்' என்று பரதனை சமாதானம் செய்தார் ராமபிரான்.

'எப்படியாவது ராமபிரானை அயோத்திக்கு வரவழைக்க வேண்டும்' என்று நினைத்த ஜாபாலி 

"ராமா! தசரதரோ இறந்து விட்டார். யாருக்கும் யாரும் உறவு கிடையாது. தனியாக பிறக்கிறார்கள். தனியாக இறக்கிறார்கள். ஆட்சி உன் வருகைக்காக காத்து இருக்கிறது. தர்மமாவது சத்யமாவது… இகலோகமாவது! பரலோகமாவது! இறந்தவனுக்கு திதி அன்று, இங்கு உணவு கொடுத்தால், இறந்தவன் சாப்பிட போகிறானா? கைக்கு வரும் ஆட்சியை பிடித்து கொள்" என்று பேசினார். 


இந்த நாஸ்தீக பேச்சுக்கு பதில் கொடுத்த ராமபிரான், கடைசியாக ஜாபாலியை பார்த்து, 'எப்படி உங்களை போன்ற ஒருவரை, அயோத்தி அரச சபையில் என் தகப்பனார் அனுமதித்தார்?" என்று கேட்டார். 

ஜாபாலியின் பேச்சு ராமபிரானை கோபப்படுத்தியது.

வசிஷ்டர், 'ராமபிரானின் குல தர்மத்தை காட்டியாவது, வனம் செல்ல விடாமல் தடுக்கலாம்' என்று நினைத்தார்.


क्रुद्धम् आज्ञाय राम: तु

वसिष्ठः प्रत्युवाच ह।

जाबालिः अपि जानीते 

लोकस्य अस्य गत आगतिम्॥

- वालमीकि रामायण


க்ருத்தம் ஆஞாய ராம:து 

வசிஷ்ட ப்ரத்யுவாச ஹ |

ஜாபாலி: அபி ஜாநீதே

லோகஸ்ய அஸ்ய கத ஆகதிம் ||

 - வால்மீகி ராமாயணம்

ராமபிரானுக்கு ஏற்பட்ட கோபத்தை கவனித்த வசிஷ்டர், பேச தொடங்கினார்..  

"ராமா! ஆத்மாக்கள் இந்த உலகத்துக்கு எப்படி வருகிறது, போகிறது என்ற உண்மையை அறிந்தவர் தான் ஜாபாலி"

Recognizing that Rama has become angry, Vashishta spoke as follows: "Even Jabali is aware of the going and coming of this world."


निवर्तयितु कामः तु त्वाम् 

एतद् वाक्यम् अब्रवीत् |

इमाम् लोक समुत्पत्तिम् 

लोक नाथ निबोध मे ||

- वालमीकि रामायण


நிவர்தயிது காம: து த்வாம்

ஏதத் வாக்யம் அப்ரவீத் |

இமாம் லோக சமுத்பத்திம்

லோக நாத நிபோத மே ||

 - வால்மீகி ராமாயணம்

"எப்படியாவது உங்களை அயோத்திக்கு திருப்பி அழைத்து சென்று விட வேண்டும் என்ற ஆசையால் தான், ஜாபாலி இப்படியெல்லாம் பேசிவிட்டார். 

லோகத்திற்கு தலைவனே! நான் உமக்கு உம்முடைய வம்ச வரலாற்றை சொல்கிறேன்.."

"He spoke in this manner, on account of his desire that you should return. O, Lord of the people! Learn from me of the creation of the world!"


सर्वम् सलिलम् एव आसीत् 

पृथिवी यत्र निर्मिता |

ततः समभवद् ब्रह्मा 

स्वयम्भूर् दैवतैः सह ||

- वालमीकि रामायण


சர்வம் சலிலம் ஏவ ஆஸீத்

ப்ருத்வீ யத்ர நிர்மிதா |

தத: சமபவத் ப்ரஹ்மா

ஸ்வயம்பு: தைவதை: சஹ ||

 - வால்மீகி ராமாயணம்

முதலில் எங்கும் காரனோதகம் என்ற பிரளய ஜலமே எங்கும் இருந்தது. ஜலத்திலிருந்து இந்த உலகம் (மண்) உண்டானது. பிரம்ம தேவன் வெளிப்பட்டார்.

"All was water only in the beginning" from which element the earth was formed. After that, the self-existent Brahma with all the gods came into existence."


स वराहः ततो भूत्वा

प्रोज्जहार वसुंधराम् |

असृजच् च जगत् सर्वम्

सह पुत्रैः कृत आत्मभिः ||

- वालमीकि रामायण


ச வராஹ: ததோ பூத்வா

ப்ரோஜ்ஹார வசுந்தராம் |

அஸ்ருஜச் ச ஜகத் சர்வம்

சஹ புத்ரை: க்ருத ஆத்மபி: ||

 - வால்மீகி ராமாயணம்

பிரளய ஜலத்தில் மூழ்கி இருந்த பூமியை வராஹ ரூபத்துடன் பகவான் வெளிக்கொணர்ந்தார். ப்ரம்ம தேவன் தன் மானஸ புத்ரர்களை கொண்டு, கோடிக்கணக்கான மோக்ஷமடையாத ஜீவன்களுக்காக உலகத்தில் பசு, பக்ஷி, மனிதன், ஈ, எறும்பு உட்பட பல வித உடல்களை ஸ்ருஷ்டி செய்தார். 

"Thereafter, that baghavan, assuming the form of boar, caused the earth to rise from water and with his sons of pure soul, created the entire world."




आकाश प्रभवो ब्रह्मा

शाश्वतो नित्य अव्ययः |

तस्मान् मरीचिः सम्जज्ने

मरीचेः कश्यपः सुतः ||

- वालमीकि रामायण


ஆகாச ப்ரபவோ ப்ரஹ்ம

சாஸ்வதோ நித்ய அவ்யய: |

தஸ்மான் மரீசி: சம்ஜஜ்னே

மரீசே: கஸ்யப: சுத: ||

 - வால்மீகி ராமாயணம்

ப்ரம்ம தேவன் மரீசி என்ற ரிஷியை படைத்தார். 

மரீசியின் மானஸ புத்ரனாக கஷ்யபர் வெளிப்பட்டார்.

From Brahma was born Marichi. Marichi's son was kashyapa.


विवस्वान् कश्यपाज् जज्ने

मनुर् वैवस्तवः स्मृतः |

स तु प्रजापतिः पूर्वम्

इक्ष्वाकुः तु मनोः सुतः ||

- वालमीकि रामायण


விவஸ்வான் கஷ்யபாஜ் ஜஜ்னே

மனு: வைவஸ்தவ: ஸ்ம்ருத: |

ச து ப்ரஜாபதி: பூர்வம்

இக்ஷ்வாகு: து மனோ: சுத: ||

 - வால்மீகி ராமாயணம்

கஷ்யபரின் மானஸ புத்ரனாக விவஸ்வான் (சூரிய தேவன்) வெளிப்பட்டார். விவஸ்வானின் மானஸ புத்ரனாக ஸ்வாயம்பு மனு வெளிப்பட்டார்.

From Kashyapa, Vivasvan(sun-god) was born. manu was the son of Vivasvan. Manu for his part, was formerly the lord of creation. Ikshvaku was Manu' s son.


यस्य इयम् प्रथमम् दत्ता

समृद्धा मनुना मही |

तम् इक्ष्वाकुम् अयोध्यायाम्

राजानम् विद्धि पूर्वकम् ||

- वालमीकि रामायण


யஸ்ய இயம் ப்ரத்மம் தத்தா

சம்ருத்தா மனுனா மஹீ |

தம் இக்ஷ்வாகும் அயோத்யாயாம்

ராஜானம் வித்தி பூர்வகம் ||

 - வால்மீகி ராமாயணம்

ஸ்வாயம்பு மனு இந்த பூலோகத்தை இக்ஷ்வாகுவுக்கு கொடுத்தார். அயோத்தி ஆண்ட முதல் அரசர் இவரே.

The entire fertile earth was given by Manu to Ikshvaku and know that Ikshvaku was thus the first king of Ayodhya!


इक्ष्वाकोः तु सुतः श्रीमान् 

कुक्षिर् एव इति विश्रुतः |

कुक्षेर् अथ आत्मजो

वीरो विकुक्षिर् उदपद्यत ||

- वालमीकि रामायण


இக்ஷ்வாகோ: து சுத: ஸ்ரீமான்

குக்ஷி: ஏவ இதி விஸ்ருத: |

குக்ஷேர் அத ஆத்மஜோ

வீரோ விகுக்ஷி: உதபத்யத ||

 - வால்மீகி ராமாயணம்

இக்ஷ்வாகுவின் மூத்த மகன் குக்ஷி.

குக்ஷியின் மூத்த மகன் விகுக்ஷி.

Ikshvaku's son was known as Kukshi, the illustrious king. Then, Kukshi's son was the valiant Vikukshi.


विकुक्षेः तु महा तेजा

बाणः पुत्रः प्रतापवान् |

बाणस्य तु महा बाहु:

अनरण्यो महा यशाः ||

- वालमीकि रामायण


விகுக்ஷே: து மஹா தேஜா

பான: புத்ர: ப்ரதாபவான் |

பானஸ்ய து மஹா பாஹு

அநரண்யோ மஹா யஷா: ||

 - வால்மீகி ராமாயணம்

விகுக்ஷியின் மூத்த மகன் பானன்.

பானனின் மூத்த மகன் அநரண்யன்.

To Vikukshi was born the most splendid and powerful son, Bana. To Bana was born Anaranya the mighty armed and the most illustrious son.


नाना वृष्टिर् बभूव अस्मिन्

न दुर्भिक्षम् सताम् वरे |

अनरण्ये महा राजे

तस्करो वा अपि कश्चन ||

- वालमीकि रामायण


நாநா வ்ருஷ்டி: பபுவ அஸ்மின்

ந துர்பிக்ஷம் சதாம் வரே |

அநரண்யே மஹா ராஜே

தஸ்கரோ வா அபி கஸ்சன ||

 - வால்மீகி ராமாயணம்

அநரண்யன் ஆட்சி காலத்தில் மழைக்கு குறை இல்லாமல் இருந்தது. வறட்சி இல்லாமல் இருந்தது. திருடர்கள் இல்லாத காலமாக இருந்தது.

While this King Anaranya, the most excellent among beings was reigning, there was neither dearth of rain nor a drought. No one was a thief.


अनरण्यान् महा बाहुः

पृथू राजा बभूव ह |

तस्मात् पृथो: महा राजः

त्रिशन्कु: उदपद्यत ||

स सत्य वचनाद् वीरः

सशरीरो दिवम् गतः |

- वालमीकि रामायण


அநரண்யான் மஹா பாஹு:

ப்ருதூ ராஜா பபூவ ஹ |

தஸ்மாத் ப்ருதோ: மஹா ராஜ:

த்ரிசங்கு உதபத்யத ||

ச சத்ய வசநாத் வீர:

ஸ-சரீரோ திவம் கத: |

 - வால்மீகி ராமாயணம்

அநரண்யனின் மூத்த மகன் ப்ருது. 

ப்ருதுவுக்கு மூத்த மகனாக திரிசங்கு பிறந்தார்.

சத்யமே பேசும் திரிசங்கு தன் மனித சரீரத்தோடு சொர்க்க லோகம் சென்றார்.

Anaranya elder son is Prutu. Prutu son is Trisanku. Trisanku due to his truthness was able to reach swarg loka with his human body.


त्रिशन्को: अभवत् सूनुर्

धुन्धुमारो महा यशाः |

धुन्धुमारान् महा तेजा

युवन अश्वो व्यजायत ||

- वालमीकि रामायण


த்ரிசங்ஜோ: அபவத் சூனு:

துந்துமாரோ மஹா யஷா: |

துந்துமாரன் மஹா தேஜா

யுவனஸ்வோ வ்யஜாயத ||

 - வால்மீகி ராமாயணம்

திரிசங்குவுக்கு மூத்த மகனாக துந்துமாரன் பிறந்தார்.

துந்துமாரனுக்கு மூத்த மகனாக யுவனஸ்வன் பிறந்தார்.

To Trishanku was born a son, the highly illustrious Dundhumara. From Dundhumara was born the hero, Yuvanasva.


युवन अश्व सुतः श्रीमान्

मान्धाता समपद्यत |

मान्धातुः तु महा तेजाः

सुसंधि: उदपद्यत ||

- वालमीकि रामायण


யுவனஸ்வ சுத: ஸ்ரீமான்

மான்தாதா சமபத்யத |

மான்தாது: து மஹா தேஜா:

சுசந்தி: உதபத்யத ||

 - வால்மீகி ராமாயணம்

யுவனஸ்வனுக்கு மூத்த மகனாக மான்தாதா பிறந்தார்.

மான்தாதாவுக்கு மூத்த மகனாக சுசந்தி பிறந்தார்.

The illustrious Mandhata was born as a son to Yuvanasva. To Mandhata was born the hero, Susandhi.


सुसंधेर् अपि पुत्रौ द्वौ

ध्रुव संधिः प्रसेनजित् |

यशस्वी ध्रुव संधेः 

तु भरतो रिपु सूदनः ||

- वालमीकि रामायण


சுசந்தே அபி புத்ரௌ த்வௌ 

த்ருவசந்தி: ப்ரசேனஜித் |

யஷஸ்வீ த்ருவ சந்தே:

து பரதோ ரிபு சூதன: ||

 - வால்மீகி ராமாயணம்

சுசந்திக்கு, 'த்ருவசந்தி பிறகு ப்ரசேனஜித்' என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர்.

த்ருவசந்திக்கு மூத்த மகனாக அழியா புகழ் பெற்ற பரதன் பிறந்தார்.

There were two sons Dhruvasandhi and prasenajit to Susandhi. From Dhruvasandhi was born the illustrious Bharata, the annihilator of enemies."


भरतात् तु महा बाहो:

असितो नाम जायत |

यस्य एते प्रतिराजान

उदपद्यन्त शत्रवः |

हैहयाः ताल जन्घाः च 

शूराः च शश बिन्दवः ||

- वालमीकि रामायण


பரதாத்: து மஹா பாஹோ

அசிதோ நாம ஜாயத |

யஸ்ய ஏதே ப்ரதிராஜான்

உதபத்யன்த சத்ரவ: |

ஹைஹயா: தாளஜன்கா: ச 

சூரா: ச ஸஸ பிந்தவ: ||

 - வால்மீகி ராமாயணம்

மஹா வீரரான பரதருக்கு மூத்த மகனாக அசிதர் பிறந்தார்.

அசிதரின் சபையில் ராஜ மந்திரிகளாக இருந்த ஹைஹயன், தாளஜன்கன், ஸஸபிந்தவன் ஆகியோர் அரசனுக்கு எதிராக திரும்பினர்.

"From the mighty armed Bharata was born a son named Asita, for whom his royal adversaries, Haihayas, Talajanghas and the valiant Shashibindavas became the enemies.





तामः तु सर्वान् प्रतिव्यूह्य

युद्धे राजा प्रवासितः |

स च शैल वरे रम्ये

बभूव अभिरतो मुनिः ||

- वालमीकि रामायण


தாம: து சர்வான் ப்ரதி வ்யூஹ்ய

யுத்தே ராஜா ப்ரவாசித: |

ஸ ச சைல வரே ரம்யே

பபூவ அபிரதோ முனி: ||

 - வால்மீகி ராமாயணம்

மற்ற அரசர்களோடு போர் செய்யும் போது, சமயத்தில் இவருடைய போர் படையே இவர் மீது திரும்ப, காட்டுக்குள் தப்பித்தார் அசிதர். 

அங்கேயே அசிதர் ராஜ ரிஷியாக மலைகளில் வசித்து வந்தார். 

Having drawn out his battle-array against all those kings in a combat, the king Asita was driven away. Asita then became a devoted sage taking asylum in an excellent and charming mountain.


द्वे च अस्य भार्ये गर्भिण्यौ

बभूवतुर् इति श्रुतिः |

एका गर्भविनाशाय

सपत्न्यै गरळं ददौ ||

- वालमीकि रामायण


த்வே ச அஸ்ய பார்யே கர்பின்யௌ

பபூ-வது: இதி ஸ்ருதி: |

ஏகா கர்ப விநாசாய

ச-பத்ன்யை கரலம் ததொள ||

 - வால்மீகி ராமாயணம்

அசிதருடைய 2 மனைவிகள் கர்ப்பமாக இருந்தனர். ஒருவள், பொறாமையினால் மூத்த மனைவியின் (காளிந்தீ) கர்ப்பத்தை கலைக்க விஷம் கொடுத்து விட்டாள்.

Asita's two wives became pregnant. It is a hearsay that one of his wives gave poison to the other co-wife in order to destroy her foetus.



भार्गवः च्यवनो नाम

हिमवन्तम् उपाश्रितः |

तम् ऋषिम् समुपागम्य

कालिन्दी तु अभ्यवादयत् |

स ताम् अभ्यवदद् विप्रो

वर ईप्सुम् पुत्र जन्मनि ||

- वालमीकि रामायण


பார்கவ: ச்யவனோ நாம

ஹிமவந்தம் உபாஸ்ரித: |

தம் ரிஷிம் சமுபாகம்ய

காளிந்தீ து அப்யவாதயத் |

ச தாம் அப்யவதத் விப்ரோ

வர ஈப்சும் புத்ர ஜன்மனி ||

 - வால்மீகி ராமாயணம்

ப்ருகு வம்சத்தில் உதித்த ச்யவன ரிஷி, ஹிமாலயத்தில் இருந்து வந்தார்.

கற்பவதியான காளிந்தீ ச்யவன ரிஷியிடம் சரண் புகுந்தாள். குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள்.

A sage called Chyavana, belonging to Bhrigu race was staying in a Himalayan mountain. Kalindi (Asita's wife) approached that sage and offered her salutation. That brahmna spoke the following words to her, who wanted to obtain a boon for the birth of a son.


पुत्रस्ते भविता देवि

महात्मा लोकविश्रुतः |

धार्मिकश्च सुशीलश्च

वंशकर्तारिसूदनः ||

- वालमीकि रामायण


புத்ர: தே பவிதா தேவி

மஹாத்மா லோக விஸ்ருத: |

தார்மிக: ச சுசீல: ச

வம்ச கர்தாரி சூதன: ||

 - வால்மீகி ராமாயணம்

ச்யவன ரிஷி, கற்பவதியான காளிந்தீயை பார்த்து, "அரசியே! உலகம் புகழும் பிள்ளை மஹாத்மாவாக பிறப்பான். தர்மம் தெரிந்தவனாகவும், நன்நடத்தை உள்ளவனாகவும், உங்கள் வம்சத்தை வளர்ப்பவனாகவும், எதிரிகளை ஒழிப்பவனாகவும் ஒரு மகன் பிறப்பான்" என்று ஆசி கூறினார்.

Queen! A high-souled son, who will be world-famous, righteous, of a good conduct, a perpetuator of the race and an annihilator of enemies will be born to you.


कृत्वा प्रदक्षिणं हृष्टा

मुनिं तमनुमान्य च |

पद्मपत्र समानाक्षं

पद्मगर्भ समप्रभम् |

ततः सा गृहम् आगम्य

देवी पुत्रम् व्यजायत ||

- वालमीकि रामायण


க்ருத்வா ப்ரதக்ஷிணம் ஹ்ருஷ்டா

முனிம் தம் அனுமான்ய ச |

பத்ம பத்ர சமானாக்ஷம்

பத்ம கர்ப சமப்ரபம் |

தத: ஸா க்ருஹம் ஆகம்ய

தேவீ புத்ரம் வ்யஜாயத ||

 - வால்மீகி ராமாயணம்

பெருமகிழ்ச்சி அடைந்த அரசி, ச்யவன ரிஷியை வலம் வந்து நமஸ்கரித்து விட்டு, தன் இருப்பிடம் திரும்பினாள். அவளுக்கு தாமரை போன்ற கண்களுடைய, தாமரை இலையில் மலர்ந்த பிரம்மாவை போன்ற ப்ரகாசத்துடன் ஒரு மகன் பிறந்தான்.

The delighted Queen Kalindi circumambulated that sage, took permission from him to leave and thereafter on reaching home, had delivered a son, having eyes resembling lotus-leaves and having a radiance like that of Brahma the Lord of creation.


सपत्न्या तु गरः तस्यै

दत्तो गर्भ जिघांसया |

गरेण सह तेन एव

जातः स सगरो अभवत् ||

- वालमीकि रामायण


ஸ-பத்ன்யா து கர: தஸ்யை

தத்தோ கர்ப ஜிகாம்சயா |

கரேன சஹ தேன ஏவ

ஜாத: ஸ சகரோ அபவத் ||

 - வால்மீகி ராமாயணம்

கர்ப்பத்தை கலைக்க விஷம் (கர) கொடுத்து அசிதரின் மற்றொரு மனைவி கொல்ல பார்த்தும், இந்த பிள்ளை பிறந்தான். விஷம் குடித்தும், விஷத்தோடு பிறந்த பிள்ளை என்பதால், இவனுக்கு "சகரன்' என்று பெயர்.

Poison was given earlier by her co-wife with an intention to kill her foetus. Born with that poison itself, he became Sagara (a man with poison).


स राजा सगरो नाम यः

समुद्रम् अखानयत् |

इष्ट्वा पर्वणि वेगेन

त्रासयन्तम् इमाः प्रजाः ||

- वालमीकि रामायण


ச ராஜா சகரோ நாம ய:

சமுத்ரம் அகானயத் |

இஷ்ட்வா பர்வனி வேகேன

த்ராசயந்தம் இமா: ப்ரஜா: ||

 - வால்மீகி ராமாயணம்

கடலை முழுக்க அகற்றி ஆராய்ச்சி செய்தவர், இந்த சகர சக்கரவர்த்தி. (குறிப்பு: எகிப்த் அருகே உள்ள சஹாரா என்ற கடற்பரப்பு இன்று பாலைவனமாக உள்ளது)

அவர் சக்தியை கண்டும், இவர் பௌர்ணமி அன்று செய்யும் யாகங்களை கண்டும் உலகமே ஆச்சர்யப்பட்டது. தேவர்கள் தங்கள் பதவி பறிபோய் விடுமோ என்று பயந்தனர்.

It was king SAgara who excavated the ocean and who, by his sacrifice, on the day of the full moon, by his energy, frightened the people here by the speed of his digging.


असमन्जः तु पुत्रो अभूत्

सगरस्य इति नः श्रुतम् |

जीवन्न् एव स पित्रा तु

निरस्तः पाप कर्म कृत् ||

- वालमीकि रामायण


அசமஞ்ச: து புத்ரோ அபூத்

சகரஸ்ய பாப கர்ம க்ருத் |

ஜீவன்ந ஏவ ஸ பித்ரா து

நிரஸ்த: பாப கர்ம க்ருத் ||

 - வால்மீகி ராமாயணம்

சகர சக்கரவர்த்திக்கு அசமஞ்சன் என்ற மகன் பிறந்தான். அவனுடைய அதர்மம் மீறிய செயல்களை கண்டு, சகர சக்கரவர்த்தி நாடு கடத்தினார். 

Asamanja was Sagara's son. There was a hearsay that on account of his wicked deeds, Asamanja was banished by his father even during his life time.


अंशुमान् इति पुत्रो अभूद्

असमन्जस्य वीर्यवान् |

दिलीपो अंशुमतः पुत्रो

दिलीपस्य भगीरथः ||

- वालमीकि रामायण


அம்சுமான் இதி புத்ரோ அபூத்

அசமஞ்ச: ய வீர்யாவான் |

திலீபோ அம்சுமத: புத்ரோ

திலீபஸ்ய பகீரத: ||

 - வால்மீகி ராமாயணம்

அதன் பிறகு, அஸமஞ்சனின் மகன் மகா வீரனான 'அம்சுமான்' சகர சக்கரவர்த்திக்கு ஆட்சி செய்தார். 

(குறிப்புசகர சக்ரவர்த்திக்கு இரண்டு மனைவிகள். மூத்தவள் பெயர் 'கேஷினி' விதர்ப தேசத்து பெண். இளையவள் பெயர் சுமதி. அரிஷ்டநேமி என்று அழைக்கப்படும் காஷ்யபரின் மகள் இவள். கருடனின் சகோதரி. சகர மன்னன் தன் இரு மனைவிகளுடன் 100 வருடங்கள் இமாலய பர்வதத்தில் தவம் செய்தார். ப்ருகு ரிஷி காட்சி கொடுத்து, ஒருவளுக்கு ஒரே ஒரு புத்ரன் குலத்தை விருத்தி செய்ய பிறப்பான். மற்றொருவளுக்கு 60000 புத்ரர்கள் மகாபலத்துடன், புகழுடன், உற்சாகம் குறையாமல் பிறப்பார்கள் என்று வரம் கொடுத்தார். கேஷினி தனக்கு குலத்தை வளர செய்யும் ஒரு புத்ரன் வேண்டும் என்று கேட்டாள். அவளுக்கு "அசமஞ்சன்" என்ற புத்ரன் பிறந்தார். சுமதி 60,000 புத்ரர்களை பெற்றாள். மூத்தவன் அசமஞ்சன், தன் சகோதரர்களை கங்கையில் மூழ்கடித்து விளையாடினான். இதை தொடர்ந்து செய்ய, ஜனங்களை காக்க இவன் தகுதி அற்றவன் என்று இவனை நாடு கடத்தினார் சகர மன்னன். அசமஞ்சனின் பிள்ளை அம்ஷுமான் பொறுப்பாக இருந்தான். இவன் மூலம் குலம் விருத்தி ஆனது.

தான் சகல சுகங்களுடன் பிறந்ததற்கு காரணம், முந்தைய ஜென்மத்தில் ப்ராம்மணனாக பிறந்து கன்னிகா தானம் செய்த பலனே என்று அறிந்தார். ஒரு கன்னிகா தானம் செய்ததற்கே இத்தனை பலன் கிடைக்குமென்றால், இந்த பிறவியில் 60000 பெண் குழந்தைகளை கன்னிகா தானம் செய்து மேலும் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். சகர சக்கரவர்த்திக்கு ஏற்படும் புண்ணியத்தை தடுக்க, தேவேந்திரன், வரம் கேட்கும் போது "60000 புத்ரி" என்று வேண்டும் சொல்லும் போது, "60000 புத்ர' என்று கேட்டு விட்டார். 

மற்றொரு முறை, அஸ்வமேத யாகம் செய்த போது, யாக குதிரையை மறைத்து, கபில ரிஷி இருக்கும் ஆசிரமத்துக்கு அருகில் (While Horse Island is in Riverside county, CA) கட்டி விட்டு மறைந்து விட்டார் இந்திரன்.

60000 புத்திரர்களும், யாக குதிரை இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். பல ஆயிரம் தூரம் கடந்து, கபிலர் ஆசிரமம் (california) வந்து, 'இவர் தான் திருடிவிட்டார்' என்று விஜாரிக்காமல் தாக்க நினைத்தனர். கபிலர் கண் திறந்து கோபமாக பார்க்க, அந்த பார்வையிலிருந்து வெளிப்பட்ட அக்னியால் 60000 மகன்களும் அங்கேயே (Ash Island is in Oregon) பொசுங்கி சாம்பலாகினர். 60000 பேரும் திதி கொடுப்போர் இல்லாமல், அபர காரியம் செய்யப்படாமல் இறந்ததால், பசி தாகத்துடன் ஆவியாக அலைந்து கொண்டிருந்தனர்)

அம்சுமானுக்கு திலீபன் பிறந்தார்.

திலீபனுக்கு பகீரதன் பிறந்தார்.

(குறிப்பு: தன் மூதாதையர்களான 60000 பேரும் புண்ணிய லோகங்கள் செல்லாமல் இருப்பதை அறிந்து கொண்டான் பகீரதன். ப்ரம்ம தேவனை பிரார்த்தனை செய்தார். த்ரிவிக்ரம அவதாரம் செய்த போது, ப்ரம்ம தேவன் தன் கமண்டல ஜலத்தால் பெருமாளின் திருவடிக்கு பாத பூஜை செய்த ஜலம், சத்ய லோகம் தாண்டி சொர்க்க லோகம் வரை வந்து தங்கி இருந்தாள். அந்த புண்ணியமான கங்கை ஜலத்தை பூமிக்கு கொண்டு வந்து அந்த சாமபலில் தெளித்தால், அனைவரும் புண்ணிய லோகங்களுக்கு செல்வார்கள் என்று ப்ரம்ம தேவன் தெரிவித்தார். பகீரதன் மீண்டும் கங்கையை நோக்கி தவம் செய்து, கங்கா தேவியை சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வந்தார். கங்கையின் வேகத்தை தானே தாங்குவதாக சிவபெருமான் ஹிமாலயத்தில் கைலாயத்தில் இருந்து தாங்க சம்மதித்தார். கங்கை பூமிக்கு வந்தாள். 60000 பெரும் புண்ணிய லோகங்களுக்கு சென்றனர்)

"A valiant son called amshuman was born to Asamanja. Dilipa was Amshuman's son. Bhagiratha was Dilipa's son.





भगीरथात् ककुत्स्थः तु

काकुत्स्था येन तु स्मृताः |

ककुत्स्थस्य तु पुत्रो अभूद्

रघु: येन तु राघवः ||

- वालमीकि रामायण


பகீரதாத் ககுத்ஸ்த: து

காகுத்ஸ்தா ஏன து ஸ்ம்ருதா: |

ககுத்ஸ்தஸ்ய து புத்ரோ அபூத்

ரகு: ஏன து ராகவ: ||

 - வால்மீகி ராமாயணம்

பகீரதனுக்கு ககுத்ஸ்தன் பிறந்தார்.

காகுஸ்தன் என்று உங்கள் வம்சத்தில் உள்ளவர்களை அழைக்கும் முறை இவரால் ஏற்பட்டது.

ககுத்ஸ்தனுக்கு ரகு பிறந்தார். ராகவா என்று உங்கள் வம்சத்தில் உள்ளவர்களை அழைக்கும் முறை இவரால் ஏற்பட்டது.

Of Bhagiratha was born kakutstha, from whom the Kakutsthas take their name. To Kakutsthas was born a son called Raghu, from whence spring Raghavas.


रघोः तु पुत्रः तेजस्वी

प्रवृद्धः पुरुषदकः |

कल्माषपादः सौदास

इत्य् एवम् प्रथितो भुवि ||

- वालमीकि रामायण


ரகோ: து புத்ர: தேஜஸ்வீ

ப்ரவ்ருத்த: புருஷதக: |

கல்மாஷபாத: சௌதாஸ

இத்யேவம் ப்ரதிதோ புவி ||

 - வால்மீகி ராமாயணம்

ரகுவுக்கு ப்ரவ்ருத்தன் பிறந்தார்.

இவர் புருஷதக என்றும், கல்மாஷபாதர் என்றும், சௌதாஸர் என்றும் அழைக்கப்பட்டார்.

From Raghu was born a renowned son named Pravriddha, known in the world under the names Purushadaka, Kalmashapada and Soudasa.


कल्माषपाद पुत्रो अभूत्

शन्खणः तु इति विश्रुतः |

यः तु तद् वीर्यम् आसाद्य

सह सेनो व्यनीनशत् ||

- वालमीकि रामायण


கல்மாஷபாத புத்ரோ அபூத்

சங்கண: து இதி விஸ்ருத: |

ய: து தத் வீர்யம் ஆஸாத்ய

சஹ சேனோ வ்யநீனஸத் ||

 - வால்மீகி ராமாயணம்

கல்மாஷபாதனுக்கு சங்கணன் பிறந்தார். சங்கணன் போரில் வீர மரணம் எய்தார்.

Kalmashapada's son was renowned as Shankhana, who, even on attaining his father's valour, perished (in a battle) along with his army.


शन्खणस्य तु पुत्रो अभूत्

शूरः श्रीमान् सुदर्शनः |

सुदर्शनस्य अग्नि वर्ण

अग्नि वर्षस्य शीघ्रगः ||

- वालमीकि रामायण


சங்கநஸ்ய து புத்ரோ அபூத்

சூர: ஸ்ரீமான் சுதர்சன: |

சுதர்சனஸ்ய  அக்னிவர்ண

அக்னி வர்ஷஸ்ய சீக்ரக: ||

 - வால்மீகி ராமாயணம்

சங்கணனுக்கு சுதர்சனன் பிறந்தார்.

சுதர்சனனுக்கு அக்னிவர்ணன் பிறந்தார்.

அக்னிவர்ணனுக்கு சீக்ரகன் பிறந்தார்.

The fortunate Sudarshana was the son of Shankhana. Sudarshana's son was Agnivarna; and of Agnivarna was born Sheeghraga.


शीघ्रगस्य मरुः पुत्रो

मरोः पुत्रः प्रशुश्रुकः |

प्रशुश्रुकस्य पुत्रो अभूद्

अम्बरीषो महा द्युतिः ||

- वालमीकि रामायण


சீக்ரகஸ்ய மரு: புத்ரோ

மரோ: புத்ர: ப்ரசுஸ்ருக: |

ப்ரசுஸ்ருகஸ்ய புத்ரோ அபூத்

அம்பரீஷோ மகா த்யுதி: ||

 - வால்மீகி ராமாயணம்

சீக்ரகனுக்கு மரு மகனாக பிறந்தார். 

மருவுக்கு ப்ரசுஸ்ருகன் பிறந்தார்.

ப்ரசுஸ்ருகனுக்கு அம்பரீஷன் பிறந்தார்.

Shighraga son was Maru and Maru's son was Prashushruga from Prashushruga was born Ambarisha of that great radiance


अम्बरीषस्य पुत्रो अभून्

नहुषः सत्य विक्रमः |

नहुषस्य च नाभागः

पुत्रः परम धार्मिकः ||

* नहुषस्य ययातिस्तु नाभागस्तु ययातिजः |

- वालमीकि रामायण


அம்பரீஷஸ்ய புத்ரோ அபூன்

நஹுஷ: சத்ய விக்ரம: |

நஹுஷஸ்ய ச நாபாக:

புத்ர பரம தார்மிக: ||

* நஹுஷஸ்ய யயாதி: து 

  நாபாக: து யயாதிஜ: |

 - வால்மீகி ராமாயணம்

அம்பரீஷனுக்கு நஹுஷன் மகனாக பிறந்தார். 

நஹுஷனுக்கு நாபாகன் என்ற தர்மாத்மா பிறந்தார்.

* வசிஷ்டர் ஜனகரிடம் இக்ஷ்வாகு பரம்பரை சொல்லும் போது, கொஞ்சம் விரிவாக சொல்கிறார். 

நஹுஷனுக்கு யயாதி பிறந்தார். யயாதிக்கு நாபாகன் பிறந்தார்.

To Ambarisha was born a son named Nahusha who was full of valor. Nahusha's son was Naabhaga of outstanding virtue.

* At marriage vashishta narrates ikshvaku lineage. There he elaborates little more to janaka.

Nahusha's son was Yayati.Yayati's son was Naabhaga of outstanding virtue.


अजः च सुव्रतः चैव

नाभागस्य सुताउ उभौ |

अजस्य चैव धर्मात्मा

राजा दशरथः सुतः ||

- वालमीकि रामायण


அஜ: ச சுவ்ரத: சைவ

நாபாகஸ்ய சுதாஉ உபௌ |

அஜஸ்ய சைவ தர்மாத்மா

ராஜா தசரத: சுத: ||

 - வால்மீகி ராமாயணம்

நாபாகனுக்கு, அஜன் சுவ்ரதன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

அஜனுக்கு தசரத ராஜன் பிறந்தார்.

Aja and Suvrata were the two sons of Naabhaga and it was Aja who begot the virtuous King Dasartha.

तस्य ज्येष्ठो असि दायादो

राम इत्य् अभिविश्रुतः |

तद् गृहाण स्वकम् राज्यम्

अवेक्षस्व जगन् नृप ||

- वालमीकि रामायण


தஸ்ய ஜ்யேஷ்டோ அசி தாயாதோ

ராம இதி அபிவிஸ்ருத: |

தத் க்ருஹான ஸ்வகம் ராஜ்யம்

அவேக்ஷஸ்வ ஜகன் ந்ருப ||

 - வால்மீகி ராமாயணம்

ராமா! தசரதற்கு மூத்த பிள்ளையான நீ, வம்ச வழக்கப்படி ராஜ்யத்தை பெற்று கொள்ளலாம். ஆதலால், ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டு, மக்களை வழி நடத்துவாயாக !"

You are the eldest son of that Dasaratha, very well-known as Rama, the heir who can claim over the inheritance. O, King! Hence, take over your kingdom and look after your people there.

इक्ष्वाकूणाम् हि सर्वेषाम्

राजा भवति पूर्वजः |

पूर्वजेन अवरः पुत्रो

ज्येष्ठो राज्ये अभिषिच्यते ||

- वालमीकि रामायण


இக்ஷ்வாகூனாம் ஹி சர்வேஷாம்

ராஜா பவதி பூர்வஜ: |

பூர்வஜேன அவர: புத்ரோ

ஜ்யேஷ்டோ ராஜ்யே அபிஷிச்யதே ||

 - வால்மீகி ராமாயணம்

மூத்த பிள்ளையே அரசனாகும் வழக்கம் இக்ஷ்வாகு வம்சத்தில் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

மூத்த மகன் இருக்கும் போது, இளையவன் அரசனாக முடியாது. மூத்த பிள்ளையே முடி சூட்டிக்கொள்ள வேண்டியவன்.

The eldest son only becomes the king in the entire Ikshvaku race. When the eldest son exists, the younger son will not become a king. The eldest son only is anointed to the crown.





स राघवाणाम्

कुल धर्मम् आत्मनः |

सनातनम् न अद्य

विहातुम् अर्हसि ||

प्रभूत रत्नाम् अनुशाधि मेदिनीम् |

प्रभूत राष्ट्राम् पितृवन् महा यशाः ||

- वालमीकि रामायण


ச ராகவானாம்

குல தர்மம் ஆத்மன: |

சனாதனம் ந அத்ய

விஹாதும் அர்ஹசி ||

ப்ரபூத ரத்னாம்

அனுசாதி மேதிநீம் |

ப்ரபூத ராஷ்ட்ராம்

பித்ருவன் மஹா யஷா ||

- வால்மீகி ராமாயணம்

குல தர்மம் அறிந்தவனே! ரகு குலத்தில் உள்ள வழக்கம் இது. இந்த வழக்கம் உன்னால் மீறப்பட கூடாது. இந்த பூமியை, பெரிய ராஜ்யத்தை உன் தந்தை ஆண்டு காத்தது போல, நீயும் காக்க வேண்டும்." என்று வசிஷ்டர் ராமபிரானை பார்த்து சொல்லி, ராஜ்யத்தை ஏற்க வைக்க முயற்சித்தார். 

"O, the celebrated one! This is the eternal tradition of your race, those born in Raghu dynasty and ought not to be violated by you. Rule over the earth, this vast kingdom abudant with precious metals, as did your father."

Thus Vashishta also tried to convince Shri Rama to come back and take up Throne in his kingdom based on ikshvagu tradition.


ஜெய் ஸ்ரீராம்

Jai Shri Ram