Followers

Search Here...

Showing posts with label Mahabharata. Show all posts
Showing posts with label Mahabharata. Show all posts

Tuesday 26 December 2017

மஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜாகிஸ்தான் (Iran, Afghanistan, Uzbekistan and Tajikistan, Kazakhstan)

மஹா பாரத சமயத்தில்,
ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜாகிஸ்தான்
(Iran, Afghanistan, Uzbekistan and Tajikistan, Kazakhstan)


இந்த தேசங்கள் அனைத்தும் பாரத தேசமாக இருந்தது.

Afghanistan, Uzbekistan and Tajikistan போன்ற தேசங்கள் அனைத்தும் "காந்தார தேசம்" என்று அழைக்கப்பட்டது. 


அனைவரும் துரியோதனனின் பக்கம் நின்று போரிட்டனர்.
ராமாயண காலத்தில்,
பரதனின் தாயார் "கைகேயி" கேகேய நாட்டின் இளவரசி. 
கேகேய நாடு இன்றைய பாகிஸ்தான் தேசம்.

கேகேய நாடும், காந்தார நாடும் அருகருகே உள்ள தேசங்கள்.

ராமரின் தம்பி பரதன், "காந்தார தேசம்" என்ற பெரிய தேசத்தை அமைத்தார். மக்கள் வாழும்படி நகரை அழகாக அமைத்தார்.

மஹாபாரத சமயத்தில், இந்த தேசங்களில், பெரும்பாலானோர் "வாலிகா அல்லது பாலிகா" என்று அழைக்கப்பட்டனர்.
யார் வாலிகர்கள்? யார் மிலேச்சர்கள்? 
https://www.proudhindudharma.com/2018/04/MlechaVahlika.html படிக்கவும்

அன்றைய பாரத தேசத்தில், இந்த தேசங்களும் அடக்கம்.

அனைவரும் சனாதன தர்ம வழியில் வேத கலாச்சாரத்தின் படி வாழும் பரம்பரையில் வந்தவர்கள்.

வேத கலாச்சாரம் உள்ள இந்த பாரதத்தில் பிறந்தும், தன் முன்னோர்கள் வேத கலாச்சார படி வாழ்ந்தவர்கள் என்று தெரிந்தும், வேத கலாச்சாரத்திற்கு எதிராக எண்ணம் கொண்டு நடப்பவர்கள், குடி பழக்கம், மாட்டு மாமிசம் உண்ணும் பழக்கம், பச்சை அரிசியாக வாங்காமல், புழுங்கல் அரிசியை வாங்கி உண்பவர்களும், பொதுவாக வாலிகர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
அனைத்து தேசமும் பாரத நாடாக இருந்த சமயம் அது.




ஆப்கான் (Afghan) நாட்டில் உள்ள காந்தகார் (Gandahar) என்ற நாட்டின் பெண், த்ரிதராஷ்டிரனுக்கு மனைவி ஆனாள். இவளே "காந்தாரி".
இவள் வேத கலாச்சாரத்தில் உள்ளவள்.
இவள் மூத்த சகோதரன் "சகுனி".
ஒரு சமயம், திக் விஜயமாக சென்ற கர்ணன், "காந்தார" தேசத்தை கண்டு, இவர்கள் வாழும் முறையை கண்டு, "இவர்கள் யாவரும் வாலிகர்கள்" என்றான்.
இதன் காரணமாகவே, சகுனிக்கும், கர்ணனுக்கும் ஒரு வித கசப்பு உணர்வு கடைசி வரை இருந்தது.

பாகிஸ்தான் பகுதியில், சிந்து நதி ஓரம் உள்ள பஞ்சாப் தேசம், அன்று மாத்ர தேசம் என்ற பெயருடன் இருந்தது.

இங்கு உள்ள மக்கள், பல சமயம் வேத கலாச்சாரத்திற்கு எதிராக செயல்கள் செய்தனர். 
இந்த தேசத்தை ஆண்டு வந்தார் "சல்லியன்" என்ற அரசர். 
வேத கலாச்சாசரத்திற்கு எதிராக பல சமயம் இந்த தேச மக்கள் நடப்பதால், இவர்களையும் பல சமயம் வாலிகர்கள் என்று அழைத்தனர்.

பொதுவாக, வேத மார்க்கத்தை இகழ்பவர்கள், வாலிகர்கள் என்று கூறப்பட்டனர். (Convert)

வேத மார்க்க வழியில் நடப்பவனை, "நீ ஒரு வாலிகன்" என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.

ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற தேசத்து அரசர்கள், குதிரைபடை கொண்டு போர் புரிவதில் வல்லவர்கள். 
இந்த தேசத்தில் உள்ள குதிரைகள் மிகவும் மதிப்பு உடையவையாக இருந்தன.




பீஷ்மரின் தந்தை சந்தனுவுக்கு ஒரு அண்ணன் இருந்தார். 
அவரின் செயல்கள் யாவும், வேத கலாச்சாரத்திற்கு எதிராகவும், மேலும் அரசாட்சி செய்யும் திறன் குறைந்தும் இருக்க, சந்தனு அரசனாக முடி சூட்டப்பட்டார். 
சந்தனு மகாராஜாவின், அண்ணனை பொதுவாக 'வாலிக அரசன்' என்று அழைத்தனர்.
இன்றைய பொழுதில், நாத்தீகன், ஆத்தீகன் என்று சொல்லி, இவன் கடவுள் மறுப்பாளியா, ஒத்துக்கொள்பவனா என்று அறிவது போல, வாலிகா என்பது "வேத கலாச்சாரத்தை" மீறி செயல் செய்பவர்களை குறிக்கும் ஒரு சொல்.

மஹாபாரத சமயத்தில், வியாச பகவானை பார்க்க நாரதர் வந்து பேசும் போது, வாலிகர்களை பற்றி சொல்லும்போது, 
"வாலிகர்கள் (convert) இந்த பூமிக்கு ஒரு கறை போன்றவர்கள்" என்று சொல்கிறார்.
இவர்களால் நல்லவர்கள் நிம்மதியாக தர்மத்தில் வாழ முடியாது. தானும் கெட்டு, மற்றவர்களையும் கெடுப்பவர்கள் என்கிறார்.

துரியோதனனும் அவன் சகோதரர்களும், தன் குரு 'துரோணர்' மற்றும் 'க்ருபர்' முன்னிலையில் தாங்கள் கற்ற வித்தைகளை செய்து காட்டி கொண்டு இருந்தனர். 
அந்த சமயத்தில் இந்த வாலிக அரசரும் (சந்தனுவின் சகோதரர்), உடன் இருந்து பார்த்தார்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகம் நடத்த மற்ற தேச அரசர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். 
தன் சகோதரர்களை பல தேசங்கள் அனுப்பி சம்மதமோ, அல்லது போரில் ஜெயித்தோ வர சொல்லி அனுப்பினார்.

யுதிஷ்டிரரின் தம்பி "நகுலன்" இந்த வாலிக அரசரிடம் 'போர் புரிய வேண்டுமா? அல்லது உங்களுக்கு யுதிஷ்டிரரின் ராஜசுய யாகம் நடக்க ஆட்சேபனை ஏதும் இல்லையா?' என்றார்.
வாலிகா அரசர், 'போர் தேவையில்லை, யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகம் சிறப்பாக நடக்கட்டும்' என்று கூறி, முழுவதும் தங்கத்தில் ஆன தேரை பரிசாக தந்தார். 
யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டார்.

கர்ணனும், துரியோதனனும் அவன் தம்பி துச்சாதனனும், குல பெண் "திரௌபதி"யை சபையில் அவமானப்படுத்த முயற்சி செய்தபோது, எதிர்க்காமல், அமைதியாக உட்கார்ந்து இருந்தார், வாலிகா அரசர்.

மஹா பாரத போரில், பெரும்பாலான வாலிகா அரசர்கள், துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.

காந்தார தேச படைகள், "சகுனி"யின் பின்னால் நின்று போர் புரிந்தனர்.




13ஆம் நாள், போரில் பலரும் சேர்ந்து அர்ஜுனனின் மகன் 'அபிமன்யு'வை கொன்றனர். 
இந்த சமயமும் துரியோதனன் செயலை எதிர்க்காமல், அமைதியாக இருந்தார் வாலிகா அரசர்.

15ஆம் நாள் போரில், பீமன் தன் கதையால் ஓங்கி அடித்து, வாலிக அரசர் தலையை பிளந்தார்.

வாலிகா அரசரின் இரு புதல்வர்கள் 'சோமதத்தன், புரிச்ரவஸ்' இருவரும் 'சாத்யகி'யினால் கொல்லப்பட்டனர்.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் கர்ணன் தலைமை ஏற்றான். 
கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - சல்லியன் (punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார். இது சல்லியனை அவமானம் படுத்துவதாக இருந்தது.

போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில், வேதம் கற்ற ப்ராம்மணர்கள், 'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறியதை நினைவு கூறி, 'நீ அந்த தேச அரசன் தானே!' என்றான்.

வேத மார்க்க வழியில் நடப்பவனை, நீ ஒரு வாலிகன் என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம். சல்லியன் பெரும் அவமானம் கொண்டார். இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை விட்டு இறங்கி சென்று விட்டார். 
கர்ணன் அர்ஜுனன் பொழிந்த அம்பு மழையில் மடிந்தான்.




18ஆம் நாள் யுத்தத்தில், காந்தார அரசன் சகுனி, கடைசியில், சகாதேவனால் அடித்து விழ்த்தப்பட்டான். 
சகுனியின் மகன் "உலுகன்" என்பவனும் சகாதேவனால் மரணத்தை தழுவினான்.

போர் முடிந்து, அஸ்வமேத யாகத்திற்காக திக்விஜயம் புறப்பட்ட அர்ஜுனன், காந்தார தேசம் செல்லும் போது, சகுனியின் இன்னொரு மகனுடன் சண்டையிட்டான். 
இறுதியில் தோற்கடித்து, காந்தார தேசத்தை, யுதிஷ்டிரரின் அரசாட்சியின் கீழ் கொண்டு வந்தான்.

Sunday 3 December 2017

மஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan எப்படி இருந்தது?

மஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan

"நிஷாத தேசம்", "மத்ஸ்ய தேசம்", "சால்வ தேசம்", "மால்வ தேசம்" ஆகிய தேசங்கள், இன்று ராஜஸ்தானில் உள்ளது.


மஹா பாரத காலத்துக்கும் முன் வாழ்ந்த சத்யவான்-சாவித்ரி தம்பதிகள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்.
சத்யவான் "சால்வ தேச" அரசன்.
சாவித்ரி "மால்வ தேச" இளவரசி.
சத்யவான் உயிரை பறித்த யமனை காணும் சக்தி பெற்றவளாக இருந்தாள்.

யமனிடம் தர்க்கம் செய்து, போன உயிரை திரும்பப்பெற்றாள்.
எம தர்மராஜன், இன்னும் "நூறாண்டுகள் வாழ்க" என்று ஆசிர்வதித்து விட்டு சென்றான்.
இது ஹிந்துக்களான அனைவருக்கும் தெரிந்த சரித்திரம்.

மத்ஸ்ய தேசம் என்பது யமுனை நதி ஓரத்தில், மீன் பிடித்து வாழும் ஒரு சமூகம்.
குரு அரசன் (உத்திரபிரதேசம்) சந்தனு, இந்த தேசத்தின் மீன் பிடிக்கும் தலைவனின் மகள் "சத்யவதி"யை பார்த்து திருமணம் செய்ய நினைத்தார்.

பீஷ்மர் தன் தந்தைக்காக, சபதம் செய்து, சத்யவதியின் குழந்தைகளே சந்தனுவுக்கு அடுத்து அரசனாகட்டும் என்று சபதம் செய்து, சத்யவதிக்கும், சந்தனு மகாராஜாவுக்கும் மணம் செய்து கொண்டனர்.
இந்த தியாகத்தால், "விரும்பிய பொழுது மரணம்" என்ற வரத்தை பெற்றார் பீஷ்மர்.
இதே தேசத்தில் மகா பாரத காலத்தில் இருந்து, எழுதிய வியாச பகவானும் அவதரித்தார்.

சால்வ அரசன், காசி தேசத்து இளவரசி "அம்பா"வை விரும்பினான்.

காசி அரசன், தன் 3 மகள்களுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்து இருந்தார்.
சாலவ அரசனும் இந்த  சுயம்வரத்திற்காக வந்தான்.

காசி ராஜன், குரு அரசன் 'விசித்ரவீர்யனுக்கு' அழைப்பு விடவில்லை. இதனால், பீஷ்மர் கோபத்துடன், காசி தேசத்துக்கு படையெடுத்தார்.

அங்கிருந்த அனைத்து அரசர்களையும், சால்வ அரசன் உட்பட, தன் பராக்ரமத்தால் வென்று, 3 இளவரசிகளையும் குரு தேசத்திற்கு கொண்டு சென்றார்.
"அம்பா" சால்வ அரசனை மணக்க இருந்ததாக சொல்ல, அம்பாவை சால்வ அரசனிடம் விட்டு சென்றார்.

காசியில் அம்பாவை காப்பாற்ற முடியாமல், பீஷ்மரிடம் தோற்றதால் அவமானம் அடைந்த சால்வ அரசன், ஒரு க்ஷத்ரியனாக இருப்பதால், அம்பாவை மணக்க முடியாது என்று மறுத்து விட்டான்.



இதனால் வேதனையும், பீஷ்மரிடம் கோபமும் கொண்டாள் அம்பா.

வாழ வழி இல்லாததால், தீ மூட்டி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
பின்னர், சிகண்டியாக துரௌபதிக்கு சகோதரனாக பிறந்தாள்.

நிஷாத தேச அரசன் பெயர் "நலன்".

நிஷாத அரசனும், கோசல அரசனும் (உத்திரபிரதேசம்) நண்பர்கள்.

இந்த நிஷாத தேசம், காடுகளும், மலைகளும் நிரம்பி இருந்தன.

பாண்டவர்களும், கௌரவர்களும் துரோணரிடம் பாடம் கற்று கொண்டிருந்த சமயம் அது.
இந்த காட்டு பகுதியில் சில நாள் தங்கி போருக்கான சஸ்திர பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

ஏகலைவன் என்ற வேடுவன், துரோணரின் குருகுலத்தில் வில் வித்தை கற்று கொள்ள ஆசைப்பட்டான்.
துரோணர் க்ஷத்ரியனுக்கு மட்டுமே "இந்த சஸ்த்ர வித்தைகள் கற்று தர முடியும்" என்று மறுத்து விட்டார்.

ஏகலைவன், மறைந்து நின்று பல நாள் இவர்கள் செய்யும் பயிற்சியினை பார்த்தான்.
பின்னர், துரோணரின் பாத மண்ணை எடுத்துக்கொண்டு, அதை ஒரு இடத்தில் வைத்து அவரை போலவே ஒரு சிலை வடித்து, பல வருடங்கள் பார்த்த வில் வித்தையை பயிற்சி செய்ய ஆரம்பித்தான்.

அவன் கொண்ட குருவின் பக்தி, வில் வித்தையில் அர்ஜுனனுக்கு நிகராக நிற்கும் அளவிற்கு திறமை தந்துவிட்டது.

ஒரு நாள், துரோணர் பாண்டவர்களுடன் காட்டில் நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறைக்க முடியாத படி, அதன் வாயை சுற்றியும், அதனை சுற்றியும் அம்புகள் தெய்க்கப்பட்டு இருந்தன. ஆச்சர்யமாக, அந்த நாய் ஒரு காயமும் அடையாதவாறு அமைக்கப்பட்டு இருந்தது.

இதை கண்டு அர்ஜுனனே ஆச்சர்யப்பபட்டான்.
தேடிப்பார்த்த போது, ஏகலைவன் எதிர் வந்தான். தன் குரு தன் முன் இருப்பதை கண்டு ஆனந்தத்தில் மகிழ்ந்தான். அவரை வணங்கி "உங்கள் மூலமே இதனை கற்றேன்" என்றான்.

துரோணர் இது உடனே கண்டிக்கப் பட வேண்டியது என்று நினைத்து, இது பேராபத்து என்றும் உணர்ந்து, "எனக்கு குரு தக்ஷிணையாக உன் கட்டை விரலை கொடு" என்றார்.

ஏகலைவன் ஒரு வேடுவன்.
அம்பு விடுவதில் ஏற்கனவே வல்லவன்.
இவன் மறைமுகமாக கற்றுக் கொண்டது அஸ்திர, சஸ்திர ப்ரயோகம். அதாவது அணுகுண்டு போன்றவை உபயோகப்படுத்தும் முறை.
இவன் க்ஷத்ரியன் (army person) அல்ல. இவன் ஒரு சாதாரண பிரஜை (citizen). சாதாரண பிரஜை அணுகுண்டு தயாரிப்பது, உபயோகிப்பது ஆகியவை சட்ட விரோதமானது.


துரோணர் நினைத்தது போலவே, இவன் துரியோதனனின் பக்கம் போய், அதர்மத்தின் வழியில் சண்டை போட்டான்.

ஏகலைவன் தந்தை, மகத நாட்டின் (பீஹார்) அரசன் "ஜராசந்தனுக்கு" படை தளபதியாக இருந்தான்.
17 முறை ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் மதுராவை தாக்கினான்.
17 முறையும் தோற்றான். இதில் போரிட்ட ஏகலைவனின் தந்தை மாண்டு போனான்.

ஜாராசந்தனும் பீமனால் பின்னர் இரண்டாக கிழிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

ஏகலைவன், துரியோதனிடம் நட்பு கொண்டான்.
இதனால் சமயம் எதிர்ப்பார்த்து பகைமை கொண்ட ஏகலைவன், பாண்டவர்களின் தாய் குந்தியின் ஊரான "குந்தி போஜ" (மத்யபிரதேசம்) அரசன் குந்திபோஜன் மீதும், மதுராவின் ஸ்ரீ கிருஷ்ணர் மீதும் யாதவர்களுக்கு எதிராக போரிட தயாரானான்.

"யாதவர்கள் அனைவரும் அழிய வேண்டும்" என்ற எண்ணத்துடன் குந்திபோஜ தேசத்தை தாக்க வந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் இருந்து வந்து, யாதவர்களுக்காக போரிட்டார்.

துரியோதனின் யோசனை பேரில், ஸ்ரீ கிருஷ்ணரின் மகன் "சம்பா"வை போரில் கொலை செய்ய ஏகலைவன் முயற்சி செய்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் தக்க சமயத்தில் வந்து, யாதவர்களை கொல்லும் எண்ணம் கொண்ட  ஏகலைவன் தலையை அங்கிருந்த பாறையில் மோத, தலை பிளந்தது.

யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகத்திற்கு திக்விஜயமாக புறப்பட்ட நகுலன், மால்வ தேசத்து அரசர்களை தோற்கடித்தான்.
மால்வ அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

மஹாபாரத போர் நிச்சயம் என்ற நிலையில், கர்ணன் மால்வ தேசத்து அரசர்களிடம் போர் புரிந்து வெற்றி பெற்றான்.

மஹாபாரத போரில், சில மால்வ அரசர்கள் துரியோதனன் பக்கம் நின்று போரிட்டனர்.
சில மால்வ அரசர்கள் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

மகத அரசன் (பீகார்) ஜராசந்தனுக்கு பயந்து, சால்வ தேச (ராஜஸ்தான்) அரசர்கள் பல சமயம் குந்தி தேசத்திற்கு (மத்யபிரதேசம்) ஓடி விடுவர்.

இன்னும் சில சால்வ அரசர்கள் சிசுபாலன் இருக்கும் சேடி தேசம் (மத்யபிரதேசம்) வரை சென்று தஞ்சம் புகுவர்.

இன்னும் சில சால்வ அரசர்கள், ஜராசந்தனுக்கு பயந்து, ருக்மி இருக்கும் விதர்ப தேசம் (மஹாராஷ்டிரா) வரை சென்று தஞ்சம் புகுவர்.


மஹா பாரத போரில், ஒரு சில சால்வ அரசர்கள், துரியோதனன் பக்கம் நின்று போரிட்டனர்.
சில சால்வ அரசர்கள், பாண்டவர்கள்  பக்கம் நின்று போரிட்டனர்.

மஹாபாரத போரில், சில நிஷாத சிற்றரசர்கள், பாண்டவர்கள் பக்கம் போரிட்டனர்.
மற்றும் சிலர் துரியோதனன் பக்கம் போரிட்டனர்.
துரியோதனன் பக்கம் நின்ற நிஷாத அரசர்கள் அனைவரையும், பீமன் ஒருவனே கொன்றான்.

மஹா பாரத போரில், இந்த மத்ஸ்ய தேச படைகள், துரியோதனின் பக்கம் நின்று போரிட்டனர்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka


Monday 27 November 2017

மஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே

மஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே


விதர்ப தேசம், குந்தல தேசம், கோமந்த தேசம் ஆகிய தேசங்கள், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தன.

குந்தல தேசம், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள். பெரும்பாலும் இவை கிராமங்கள்.

கோமந்த தேசம், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கு மற்றும் கோவா பகுதிகள். இந்த தேசங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆட்சியின் கீழ் இருந்தது.

மகத அரசன் (பீஹார்) 'ஜராசந்தன்' யாதவர்கள் மீது தீராத கோபம் கொண்டு மதுராவை பல முறை தாக்கினான்.
இதனால், ஸ்ரீ கிருஷ்ணர், யாதவ மக்கள் அனைவரையும் துவாரகை (Gujarat) என்ற நகரை அமைத்து குடியேற்றினார்.
அங்கும் வந்து பல முறை போரிட்டு யாதவர்களை அழிக்க நினைத்தான் ஜராசந்தன்.
இந்த சமயத்தில், அங்கு இருந்த யாதவர்கள், தங்கள் எல்லையை பாதுகாக்க, துவாரகையிலிருந்து கோமந்த தேசம் வரை படைகளை நிறுத்தி யாதவ மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தனர்.
யாதவ ராஜ்யம் குஜராத்திலிருந்து கோவா (Goa) வரை, ஸ்ரீ கிருஷ்ணரின் கண் காணிப்பில், பாதுகாப்பாக இருந்தது.

மகாபாரத காலத்துக்கு பின், சுமார் 3000 வருடங்கள் பின் வந்த போர்ச்சுகல் (Portuguese), பிரிட்டன் (british) போன்ற கிறிஸ்தவ வணிகர்கள், கோவா சூரத் போன்ற கடல் ஓர நகரங்களை ஆக்கிரமித்து, கலாச்சாரத்தை கெடுத்து இன்றுவரை கோவா போன்ற நகரங்களை கீழ் தரமான கண்ணோட்டத்தில் பார்க்கும் அளவிற்கு செய்தனர்.

947ADக்கு பிறகு, போர்ச்சுகல் (Portuguese), பிரிட்டன் (british) போன்ற கிறிஸ்தவ வணிகர்களை எதிர்த்து, இஸ்லாமியர்களையும் எதிர்த்து, யாதவர்கள் கடுமையாக போராடினர்.
947ADக்கு பிறகு, யாதவ சமுதாயம் தங்களை காத்துக்கொள்ள பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
தமிழ்நாட்டில் இருந்த 'முல்லைக்கு தேர் கொடுத்தான்' என்றும், வள்ளல் என்றும் ஒளவையார் புகழ்ந்த பாரி போன்ற அரசர்கள் துவாரகையில் இருந்து பிற் காலத்தில் இடம் பெயர்ந்த க்ஷத்ரியர்கள்.
யாதவ அரசர்கள் எத்தனை நல்ல மனம் படைத்தவர்கள் என்பதற்கு பாரி போன்ற அரசர்களே ப்ரமானம்.
5000 வருடங்கள் தாண்டியும், யாதவர்கள் (yadav) இன்று வரை உள்ளனர். இவர்களுக்கு இன்று வரை ஸ்ரீ கிருஷ்ணரே அரசன், குல தெய்வம்.

விதர்ப தேசம், இன்றைய மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் கிழக்கு பகுதிகள்.
இன்றைய மத்திய பிரதேசத்தின் (Madhya Pradesh) வடக்கு எல்லையில்  உள்ளது என்றும் சொல்லலாம்.

விதர்ப தேசத்தில் (மகாராஷ்டிரா) ருக்மிணி வளர்ந்து வந்தாள்.
இவள் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைபருவம் முதல் இன்று வரை என்ன செய்தார்? எப்படி இருப்பார்? என்று, அவரைப்பற்றி அறிந்து இருந்தாள்.

மணந்தால், இவரை தான் மணக்க வேண்டும் என்று முடிவு கொண்டாள்.
இதற்கு ருக்மிணியின் தந்தை சம்மதித்தார்.



ருக்மிணியின் சகோதரன் பெயர் 'ருக்மி'.
இவன், தன் தங்கையை சேடி அரசன் (MadhyaPradesh) சிசுபாலனுக்கு கொடுப்பது என்று முடிவு கட்டி, திருமணத்திற்கு பிடிவாதமாக ஏற்பாடு செய்தான்.

மனம் வெதும்பிய ருக்மினி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு கடிதம் ஒன்றை ஒரு யோகியிடம் கொடுத்து, "எப்படியாவது வந்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று எழுதி  அனுப்பினாள்.
ஸ்ரீ கிருஷ்ணர், விதர்ப தேசம் வந்து, ஜராசந்தன், ருக்மி போன்றோர் பார்க்க, ருக்மிணியை தூக்கி சென்றார்.
ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, பலராமர் வந்து ஜராசந்தன் படையை சிதறடித்தார்.

ருக்மி கோபத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, கடைசியில் சண்டையிட்டு தோற்றான்.
"இவனை கொல்ல கூடாது" என்று நினைத்த ஸ்ரீ கிருஷ்ணர், "ருக்மிணியின் அண்ணன்" என்பதால், உயிரோடு விட தீர்மானித்தார்.
அப்படியே விட்டால், "திருமணம் நடக்கும் முன், மீண்டும் படையை திரட்டி துவாரகை (Gujarat) நோக்கி வருவான்" என்பதால், ஒரு சில மாதங்கள் இவன் காட்டிலேயே அலையட்டும் என்று தீர்மானித்து ருக்மி உடம்பில் கரும் புள்ளி, செம் புள்ளி குத்தி, பாதி மொட்டை அடித்து 3 குடுமிகள் முன்னும் பின்னும் வைத்து அனுப்பினார்.
ருக்மிணிக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வெகு விமரிசையாக திருமணம் துவாரகையில் நடந்தது.
குஜராத்துக்கும் (Gujarat), மஹாராஷ்டிரத்துக்கும் (Maharastra) சம்பந்தம் உண்டானது.

ஒரு சமயம், துவாரகையில் இருக்கும் போது, தேவகி ஸ்ரீ கிருஷ்ணரிடம் 'நீ குழந்தையாக இருந்த போது என்ன செய்தாய்? எப்படி இருந்தாய்? என்று பார்க்க முடியாது போய் விட்டதே!! 
இந்த பாக்கியம் யசோதைக்கு கிடைத்ததே. அவளே பாக்கியம் செய்தவள்' என்றாள்.
தன் தாய் தேவகியின் மனக்குறையை போக்க, அவளுக்காக தன்  மாய  சக்தியால், சிறு குழந்தையாக உருமாறி, அனைத்து பால லீலைகளையும் செய்து காண்பித்தார்.
அப்போது, இந்த அதிசயத்தை ருக்மிணியும்  பார்த்து விட்டாள். 

இந்த ஆச்சர்யத்தை கண்ட ருக்மிணி, தான் கண்ட குட்டி கிருஷ்ணரை போலவே ஒரு சிலை செய்தாள். அதை ஸ்ரீ கிருஷ்ணரிடமே காண்பித்து ஆசிர்வத்திக்க சொன்னாள்.
ஸ்ரீ கிருஷ்ணர் அதை தொட்டு, ருக்மிணியிடம் கொடுத்தார். 


அன்றிலிருந்து, தினமும் ருக்மிணி தேவியே அந்த விக்ரஹத்துக்கு பூஜை செய்து வந்தாள்.
இந்த விக்ரஹம், சுமார் 4000 வருடங்களுக்கு பிறகு, 12ஆம் நூற்றாண்டில் வந்த மத்வாசாரியர் மூலம் கர்நாடகாவில் உள்ள உடுப்பி (Udupi) என்ற நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று வரை காணும் படியாக இருக்கிறார். 

சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணரின் பால லீலையை பார்த்து, ருக்மிணி தேவியே வழிபட்ட மூர்த்தியே இன்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணராக உள்ளார்.

மகா பாரத போர் நிச்சயம் என்ற நிலையில், ருக்மி, "பாண்டவர்களுக்கு சகாயம்" செய்ய நினைத்தான். 
தன் நண்பனான கிருஷ்ணனிடம் ருக்மி பகைமை கொண்டவன், கிருஷ்ணனிடம் தோற்றவன்" என்பதால், விதர்ப தேச சகாயத்தை மறுத்து விட்டான் அர்ஜுனன்.
"அர்ஜுனன் மறுத்த தேசத்தை தான் ஏற்றுக்கொண்டால் அது அவமானம்" என்று துரியோதனனும் ருக்மியின் உதவியை மறுத்தான்.

மஹா பாரத போரில், விதர்ப தேசத்தை பொதுவாக பாண்டவர்களும், கௌரவர்களும் தங்கள் அணிக்கு அழைக்கவில்லை.

பெரும்பாலும், விதர்ப தேசத்தவர்கள், இருவருக்கும் பொதுவாகவே இருந்தனர்.
ஒரு சில விதர்ப தேசத்தவர்கள், துரியோதனன் படையில் சேர்ந்து கொண்டு பீஷ்மரின் கட்டளை படி போரிட்டனர்.

மஹா பாரத போரில், குந்தல தேசத்தவர்கள், பாண்டவர்கள் பக்கம் இருந்து போரிட்டனர்.


போருக்கு முன், துரியோதனன் ஆசைப்படி, ஸ்ரீ கிருஷ்ணர், தன் படைகள் துரியோதனன் பக்கமும், தான் ஒருவன் மட்டும் ஆயுதம் இல்லாமல் பாண்டவர்கள் பக்கமும் இருப்பதாக சொல்லி இருந்தார்.

கோமந்த தேச படைகள், ஸ்ரீ கிருஷ்ணரின் ஆணைப்படி, துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.

Sunday 26 November 2017

மஹா பாரத சமயத்தில், மத்யபிரதேச தேசம்: Madhya Pradesh எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே...

மஹா பாரத சமயத்தில், மத்யபிரதேச தேசம்: Madhya Pradesh எப்படி இருந்தது?.


குந்தி தேசம், அவந்தி தேசம், சேடி தேசம், கருஷ தேசம் போன்றவை இந்த மத்யபிரதேச தேசத்தை சேர்ந்தவை.

சேடி தேசம் என்ற தேசம், இன்றைய மத்யபிரதேச தேசத்தின், கிழக்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

குந்தி தேசம் என்ற தேசம், இன்றைய மத்யபிரதேச தேசத்தின், வடக்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

கருஷ தேசம் சேடி தேசத்தின் தெற்கில் உள்ள ஒரு பகுதி.

அவந்தி தேசம் என்ற தேசம், இன்றைய மத்யபிரதேச தேசத்தின், மேற்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

குந்தி, சேடி, கருஷ மற்றும் அவந்தி தேசத்தின் பெரும் பகுதியை "யாதவ" குல அரசர்கள் ஆண்டு வந்தனர்.

குந்தி தேசத்தை 'குந்தி போஜன்' ஆண்டு வந்தார். இவருக்கு வாரிசு இல்லை.

சூரசேனர், குந்தி போஜ அரசனின் சகோதரர்.
வசுதேவன், ப்ரீதா, ஸ்ருதஸ்ரவா, ராஜதி ஆகியோர் சூரசேனரின் பிள்ளைகள்..

சூரசேனர் தன் மகள் 'ப்ரீதா"வை வளர்ப்பு மகளாக கொடுத்தார்.
தன் வளர்ப்பு மகளை "குந்தி தேவி"யாக வளர்த்தார் குந்தி போஜன்.

ப்ரீதா"வை (குந்தி தேவி) உத்திர பிரதேசத்து குரு தேச அரசன் பாண்டுவுக்கு மணம் செய்து கொடுத்தார்.

அவந்தி தேசத்தில் கல்வி கற்க பல தேசத்தில் இருந்து வந்து படித்தனர்.

அவந்தி தேசத்தில் (மத்யபிரதேசம்) உள்ள உஜ்ஜைன் (Ujjain) என்ற ஊருக்கு வந்து, ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும் வந்து படித்தனர்.

மதுராவில் (UP, India) இருந்து அவந்தி தேசம் வந்து கிருஷ்ணரே படித்தார் என்றால், 5000 வருடம் முன்பு வரை, கல்வி எப்படி உயர்ந்து இருந்தது இந்த உஜ்ஜைனில் என்று அனுமானிக்கலாம்.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து வந்த சுதாமா என்ற குசேலன் இதே சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணருடன் படிக்கும் பாக்கியத்தை பெற்றார்.
சாந்தீபினி ஆசிரமத்தில் கிருஷ்ணரே படித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்ம நண்பண் சுதாமா என்ற குசேலன் என்ற பெருமை அடைந்தார். 

பாண்டவர்களின் தாய் "குந்தி" தேவியின் சகோதரி "ராஜதி" தேவி, அவந்தி தேச அரசனை மணமுடித்தாள்.

சேடி நாட்டின் அரசனாக "சிசுபாலன்" இருந்தான்.
இவன் தாயார் 'ஸ்ருதஸ்ரவா'வும், குந்தியும் சகோதரிகள்.
இவர்களின் சகோதரன் "வசுதேவன்".
வசுதேவனுக்கும் தேவகிக்கும் சாஷாத் பரப்ப்ரம்மமான "ஸ்ரீ கிருஷ்ணர்" பிறந்தார்.


கருஷ நாட்டின் அரசனாக "தண்டவக்ரன்" இருந்தான்.
இவன் தாயார் 'ஸ்ருததேவா'வும், குந்தியும் சகோதரிகள்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு, 'குந்தியும், ஸ்ருதஸ்ரவா'வும் "அத்தை" முறை.

சிசுபாலனுக்கும், தண்டவக்ரனுக்கும், ஸ்ரீ கிருஷ்ணர் மாமன் மகன்.

சிசுபாலனும், தண்டவக்ரனும், பாற்கடலில் இருக்கும் மஹா விஷ்ணுவின் துவார பாலகர்கள். 
இவர்களே மஹா விஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, சிசுபாலன், தண்டவக்ரன் என்று அவதாரம் செய்து, அவர் கையாலேயே முக்தி வேண்டி பிறந்தனர்.
சேடி நாட்டில் பிறந்த "சிசுபாலன்" பிறந்த பொழுது 3 கண், நான்கு கையுடன் விகாரமாக பிறந்தான். இதனால் பயந்து போனாள் அவன் தாயார்.

அப்பொழுது அசரீரி வாக்கு ஒன்று கேட்டது "யார் கை பட்டவுடன் இவன் மூன்றாவது கண்ணும், அதிகம் உள்ள இரண்டு கைகளும் மறையுமோ, அவனே இவன் மரணத்திற்கும் காரணம் ஆவான்".

இதை கேட்டு ஒரு புறம் கவலை கொண்டாலும், தன் குழந்தை சாதாரணமாக ஆக வழி இருப்பதால், அனைவரையும் தொட சொன்னாள்.
ஸ்ரீ கிருஷ்ணர் வந்து தொட்டதும், அதிகமாக இருந்த கண்ணும், கைகளும் மறைந்தன.
அவன் தாயார், ஸ்ரீ கிருஷ்ணர் "எக்காரணம் கொண்டும் சிசுபாலன் மரணத்திற்கு காரணம் ஆக கூடாது" என்று வேண்டினாள்.

ஸ்ரீ கிருஷ்ணர், அசரீரி வாக்கையும் மீறாமல், இவன் தாயாருக்கும் சமாதானமாக "ஒரு மனிதன் சாதாரணமாக ஒருவனை 100 முறை தொடர்ந்து திட்ட வாய்ப்பு இல்லை. எப்பொழுது, உன் மகன் என்னை தொடர்ந்து 100 முறைக்கு மேல் திட்டுவானோ அப்பொழுது மட்டுமே இவன் மரணத்திற்கு நான் காரணம் ஆவேன்" என்று சமாதானம் செய்தார்.

சேடி அரசன் சிசுபாலன், குரு தேச (உத்திர பிரதேச) இளவரசன் துரியோதனனுடனும், மகத தேச (Jamshedpur near Bihar) அரசன் ஜராசந்தனுடனும் நெருங்கிய நட்பு உள்ளவன்.

தான் பிறந்ததில் இருந்தே, தன் மாமன் மகன், 'ஸ்ரீ கிருஷ்ணரை' பகையாக நினைத்தான் சிசுபாலன். இவனுடன் சேர்ந்து இருந்தான் "தண்டவக்ரன்".

பார்க்கும் பொழுது எல்லாம், ஸ்ரீ கிருஷ்ணரை தகாத வார்த்தைகளால் காரணமே இல்லாமல் சிசுபாலன் திட்டுவான்.
சரியாக 100 நெருங்கும் முன், திட்டுவதை நிறுத்தி விட்டு, சென்று விடுவான். ஸ்ரீ கிருஷ்ணரும் கோபப்படாமல்  சிரித்துக்கொள்வார்.

ஒரு சமயம், அசுரன் ஒருவன் தேவர்களையும் அடக்கி, இவர்கள் யாராலும் வெல்ல முடியாதபடி வரம்பெற்று, பூமியில் பிறந்து அட்டகாசம் செய்து வந்தான்.
இவன் ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசத்தில் இருந்து கொண்டு அசுரர் குலத்தை மனித அவதாரம் செய்து பெரும் அட்டகாசம் செய்து வந்தான்.


ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசம் இன்றைய அஸ்ஸாம் (Assam) தேசம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் உதவியை சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் வந்து நாட, நரகாசுரனை அழிக்க துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிஸம் சென்றார்.
இந்த சமயத்தில், சிசுபாலன், தன் படையுடன் துவாரகை சென்று, துவாரகையில் தீ வைத்து கொளுத்தினான்.


சத்யபாமாவை கொண்டு நரகாசுரனை கொன்று திரும்பிய ஸ்ரீ கிருஷ்ணர், சிசுபாலனின் இந்த குற்றத்தையும் பொறுத்தார்.
நரகாசுரனின் வேண்டுதல் ஏற்று, அவன் இறந்த நாள், அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்ட பட்டதால், தேவர்களும் மகிழ்ந்ததால், அந்த நாள், தீபாவளி என்று இன்று வரை  கொண்டாடப்படுகிறது.

சிசுபாலன், தன் சகோதரியை பாண்டவர்களில் ஒருவரான 'பீமனுக்கு' மணமுடித்தான்.

ராஜசுய யாகம் நடத்த வேண்டுமானால், அனைத்து பிற அரசர்களும் சம்மதிக்க வேண்டும்.
யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்த தன் சகோதரர்களை அனைத்து தேசத்திற்கும் அனுப்பினார்.
தம்பி 'சகாதேவன்' அவந்தி தேசம் வந்து போர் புரிந்து வென்றார்.

உறவுமுறையில் உள்ள சிசுபாலன், யுதிஷ்டிரர் நடத்திய ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டான்.
அங்கு முதல் மரியாதை "ஸ்ரீ கிருஷ்ணருக்கு" கொடுக்க அனைவரும் சம்மதிக்க, யுதிஷ்டிரர் மரியாதை செய்ய ஆரம்பித்த போது, சிசுபாலன் தலைக்கு ஏறிய கோபம் கொண்டான்.

மதி மழுங்கிய நிலையில், சபையில் அனைவரின் முன்னிலையில் ஸ்ரீ கிருஷ்ணரை தகாத வார்த்தையில் திட்ட ஆரம்பித்தான்.

அனைவரும் தடுக்க நினைக்க, ஸ்ரீ கிருஷ்ணர் "அவன் பேசட்டும், என்னை 100 முறை தொடர்ச்சியாக திட்டுகிறானா என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்" என்றார்.
நிதானம் தவறிய சிசுபாலன், 100 முறை திட்டி, 101வது தடவை திட்ட ஆரம்பிக்க, தன் சுதர்சன சக்கரத்தால் அனைவரும் பார்க்க, அவன் கழுத்தை அறுத்து எறிந்தார்.

யாகம் முடிந்து, துவாரகை நோக்கி புறப்பட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
சிசுபாலனை இறந்ததால், கோபத்துடன், தண்டவக்ரன் அவன் சகோதரன் "விதுரதன்" இருவரும், ஸ்ரீ கிருஷ்ணரை துவாரகை செல்லும் வழியில் மறித்து போரிட்டனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் இருவரையும் தன் கதையால் கொன்றார்.
சிசுபாலன் இறந்த பின், யுதிஷ்டிரர், சேடி தேசத்தின் அரசனாக சிசுபாலனின் புதல்வன் "த்ருஷ்டகேது"வை அரசன் ஆக்கினார்.
த்ருஷ்டகேது "சேடி மற்றும் கருஷ தேசம்" இரண்டையும் ஆண்டு வந்தான்.


பகடை ஆடி சூழ்ச்சி செய்து பாண்டவர்களை 13 ஆண்டுகள் வனவாசம் மற்றும் 1 வருடம் அஞானவாசம் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து, இவர்கள் சொத்தை, நாட்டை எல்லாம், துரியோதனன் எடுத்துக்கொண்டான்.
பாண்டவர்கள், இந்த வன வாச காலத்தில், சில வருடங்கள் சேடி தேசத்திலும் (Madhya Pradesh) தங்கினார்கள்.

மஹாபாரத போர், நடக்கப்போவது நிச்சயம் என்று அறிந்த, கௌரவர்கள், பல தேச அரசர்களை தன் பக்கம் இழுத்தனர்.

அங்க தேச (வங்காளம் West Bengal) அரசன் கர்ணன், இந்த சமயத்தில், அவந்தி தேசத்தில் படை எடுத்து, அங்கு ஆண்ட அரசர்களை தோற்கடித்தான். 
உடன்படிக்கையின் பெயரில், அவந்தி தேச அரசர்கள், கௌரவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர்.

குந்தி தேச அரசர் 'குந்தி போஜன்' பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டார். 
துரோணரால் குந்தி போஜன் கொல்லப்பட்டார்.

சேடி மற்றும் கருஷ தேசத்தின் அரசன் 'த்ருஷ்டகேது', பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தான்.
'த்ருஷ்டகேது' 14ஆம் நாள் போரில் துரோணரால் கொல்லப்பட்டான்.

சிசுபாலனின் இன்னொரு மகன் "சுகேது"வும் துரோணரால் கொல்லப்பட்டான்.
இவனுக்கு பிறகு சிசுபாலனின் இன்னொரு மகன் "சரபன்" சேடி தேசத்து ஆட்சி புரிந்தான்.

மஹா பாரத போரில், அவந்தி தேச அரசர்கள் யாவரும், அர்ஜுனனின் பானத்தினால் கொல்லப்பட்டனர். 
அரசர்கள் இழந்த அவந்தி தேச போர் வீரர்கள், கடைசி வரை துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.


மஹா பாரத போர் முடிந்த பின், சக்ரவர்த்தி ஆன யுதிஷ்டிரர், பாரத தேசம் முழுவதும் தன் ஆட்சியில் கட்டுப்பட்டு நடக்க, தன் சகோதரர்களை அனுப்பினார்.
சேடி நாட்டு அரசன் "சரபன்", அர்ஜுனனிடம் போரிட்டு, தோற்றான்.

Saturday 25 November 2017

மஹாபாரத சமயத்தில் பஞ்சாப் : Punjab


மஹாபாரத சமயத்தில் பஞ்சாப் :  Punjab

பாஞ்சால தேசம், த்ரிகர்த தேசம் ஆகிய தேசங்கள் இன்று இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலம்.

த்ரிகர்த தேசம் என்பது சட்லஜ், இரவி, பீஸ்  என்ற 3 நதிகள் சுற்றி அமைக்கப்பட்ட தேசம்.

த்ரிகர்த தேச அரசர் "சுசர்மன்" துரியோதனன் பக்கம் நின்று போரிட்டார். விராட (நேபாளம்) தேசத்தையும், பாண்டவர்களையும் எதிரிகளாக நினைத்தார்.
பல முறை விராட தேசத்துடன் போர் புரிந்து, தோல்வி அடைந்த காரணத்தால், இவர்களிடம் ஒரு பகையை கொண்டிருந்தான். விராட தேச படை தலைவன் கீசகன், சுசர்மனை பலமுறை தோற்கடித்து இருக்கிறான்.

விராட தேசம் இன்று நேபால் என்று அழைக்கப்படுகிறது.

பாண்டவர்கள் 13 வருட வனவாசத்தில் கடைசி 1 வருடம் அஞான வாசம் விராட தேசத்தில் இருந்தனர். யுதிஷ்டிரர் விராட ராஜாவுக்கு உதவியாளனாக, பீமன் சமையல்காரனாக, அர்ஜுனன் நர்த்தனம் சொல்லிக்கொடுக்கும் பேடியாக, திரௌபதி விராட ராணிக்கு வேலைக்காரியாகவும், நகுலன் மற்றும் சகாதேவன் குதிரை லாயத்தை பார்க்கும் பணியிலும் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.
விராட அரசனின் மகன் "கீசகன்" திரௌபதியிடம் தவறாக நெருங்க எண்ணினான். இதனை பீமனிடம் சொல்ல, கீசகன் தலையை ஓங்கி அடித்து, அவன் வயிற்றுக்குள் தள்ளி, ஒரு பந்து போல ஆக்கி கொன்று விட்டான்.

கீசகன் கொடூரமாக இறந்ததை கேள்விப்பட்டு, சந்தேகம் கொண்டான் த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்". இப்படி ஒரு பலம் பீமன் போன்றவர்களுக்கு தான் உண்டு, என்று உணர்ந்த சுசர்மன், துரியோதனனை உடனே விராட தேசத்தை நோக்கி படை எடுக்குமாறு கூறினான்.
குரு தேச இளவரசன் துரியோதனன், கர்ணன், த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்" அனைவரும் விராட தேசத்தை முற்றுகை இட்டனர்.
விராட தேச படையுடன், அர்ஜுனன் ஒருவனாக சென்று அனைவரையும் தோற்கடித்தான்.


மஹா பாரத போரில், 12ஆம் நாள் யுத்தத்தில், துரோணர் யுதிஷ்டிரரை கொல்ல வியூகம் வகுத்தார். இதற்கு பெரும் தடையாக இருந்தார் அர்ஜுனன். அர்ஜுனனின் கவனத்தை திருப்ப, த்ரிகர்த தேச அரசன் சுசர்மனை அவர் படைகளுடன் தடுக்க சொன்னார். காலை ஆரம்பித்த போரில், மதியத்திற்குள், படைகள் அனைத்தையும் வீழ்த்தி, சுசர்மனை தோற்கடித்து, முன்னேறினான்.
13ஆம் நாள் போரில், துரோணர் சக்ரவ்யூஹம் அமைத்தார். அர்ஜுனன் மீண்டும் த்ரிகர்த தேச அரசன் சுசர்மனிடம் போர் செய்து பல ஆயிரம் வீரர்கள் தனி ஒருவனாக போரிட்டு கொன்றான்.

மஹா பாரத சமயத்தில், 'த்ருபதன்' பாஞ்சால தேச அரசனாக இருந்தார்.

த்ருபதனும், துரோணரும் இள வயதில் ஒன்றாக "பரத்வாஜ" மகரிஷியிடம் படித்தனர்.
"பரத்வாஜ" மகரிஷியின் மகன் "துரோணர்".
படித்து முடித்த பின், ஒரு சமயம் ஏழை "துரோணர்", தன் நண்பன் த்ருபதனை காண பாஞ்சால தேசம் சென்றார். அரசனாக இருந்த த்ருபதன் சரியாக மதிக்கவில்லை. இதனால் அவமானம் அடைந்த துரோணர், இதற்கு பதில் கொடுக்க, தன் சிஷ்யனான அர்ஜுனனை அனுப்பி த்ருபதனை போரிட்டு தோற்கடித்தார்.
அர்ஜுனன் போன்ற வீரனுக்கு ஒரு மகளும், தன்னை அவமானப்படுத்த நினைத்த துரோணரை கொல்ல ஒரு மகனும் வேண்டும் என்று வேள்வி நடத்தி, அக்னியில் இருந்து த்ருஷ்டத்யும்னன் மற்றும் துரௌபதி இளமையுடன் தோன்றினர்.

இதனால் இருவருக்கும் பகை உணர்வு எழுந்தது.

த்ருபதனுக்கு 11 குழந்தைகள். இதில் முக்கியமானவர்கள் த்ருஷ்டத்யும்னன், சிகண்டி, துரௌபதி, உத்தமௌஜ, யூதாமன்யு ஆகியோர்.

துரௌபதியை சுயம்வரத்தில் போட்டியில் ஜெயித்து, அர்ஜுனன் மணமுடித்தான்.

மஹாபாரத போரில், துரோணர் 15ஆம் நாள் போரில் த்ருபதனை கொன்றார்.
பின்னர் தொடர்ந்து நடந்த போரில், த்ருஷ்டத்யும்னன் துரோணர் தலையை சீவினான்.

கடைசி நாள் யுத்தத்தில், துரோணர் மகன் 'அஸ்வத்தாமா", த்ருஷ்டத்யும்னன், சிகண்டி, உத்தமௌஜ, யூதாமன்ய ஆகிய அனைவரையும் போரில் கொன்றான்.

கடைசி நாள் போரில் துரியோதனனும் வீழ்த்தப்பட்ட, ஆத்திரம் கொண்ட அஸ்வத்தாமா, போர் முடிந்த அந்த ராத்திரியில், படுத்துக்கொண்டிருந்த துரௌபதியின் 5 மகன்களை, பாண்டவர்களை என்று நினைத்து, தூங்கிக்கொண்டிருக்கும் போது கொன்று விட்டான். இதை போர் களத்தில் வீழ்ந்து மரணத்திற்காக காத்திருந்த துரியோதனனிடம் போய் சொல்ல, துரியோதனன் 'போர் முடிந்த பின், எஞ்சி இருந்த வாரிசையும் இப்படி அழித்து விட்டாயே!!' என்று  கோபப்பட்டான்.

Friday 24 November 2017

மஹா பாரத சமயத்தில் உத்திர பிரதேசம், ஹரியானா எப்படி இருந்தது? Uttar Pradesh, Haryana


மஹா பாரத சமயத்தில் உத்திர பிரதேசம், ஹரியானா:  Uttar Pradesh, Haryana

வ்ரஜ தேசம், 
குரு தேசம், 
காசி தேசம், 
வத்ஸ தேசம், 
கோசல தேசம்
ஆகிய தேசங்கள் இன்றைய உத்திர பிரதேசம்.



குருஜாங்கல தேசம் இன்றைய ஹரியானா (Haryana).

ராமாயண காலத்தில், 'சுமித்ரா' காசி தேச இளவரசி.
இவள் கோசல தேச அரசர் தசரதரை மணந்தாள்.
இவர்களுக்கு "லக்ஷ்மணன்" பிறந்தார். 'சத்ருக்னன்" பிறந்தார்
காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிற் காலத்தில் வந்த முகலாய ஆட்சியில் ஔரங்கசிப்  கோவிலை இடித்து, மசூதியை கட்டினான்.

த்ரேதா யுகத்தில், ராமாயண காலத்தில், கோசல தேசத்தின் தலைநகராக அயோத்தியா இருந்தது.
ஸ்ரீ ராமர் அயோத்தியாவில் அவதரித்தார்.

1526AD சமயத்தில், இந்த அயோத்தியில் இருந்த ஸ்ரீ ராமரின் கோவி்லை இடித்து, முகலாய ஆட்சியில் பாபர், மசூதியை கட்டினான்.

ஸ்ரீ ராமர், ஜனகர் மகள் "சீதை"யை மணந்தார்.
ஜனகர் மிதிலை (நேபால்) அரச மன்னர்.

அந்த சமயத்தில், லக்ஷ்மணன் கங்கை நதி ஓரம், ஒரு நகரை உருவாக்கினார். அதற்கு லக்ஷ்மணபுரம் என்று பெயர் இருந்தது.
பிற் காலத்தில் வந்த முகலாயர்கள்,
இந்த லக்ஷ்மணபுரம் என்ற நகரத்தை "லக்னோ" என்று மாற்றினர்.
இன்று இந்த நகரம் ஷியா இஸ்லாமியர்கள் நிரம்பிய முஸ்லீம் ஊராக இந்தியாவில் உள்ளது.

ஸ்ரீ ராமர், வனவாச சமயத்தில், வத்ஸ தேசத்தில்,
பிரயாகை (கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம்) வந்து, இங்கு இருந்த பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தார்.
பின்பு சித்ரகூடம் நோக்கி சென்றார்.

ஸ்ரீ ராமரை அழைத்து வர, பரதன் கோசல தேசத்தில் இருந்து வந்தார். குகனை பார்த்து விட்டு, பிரயாகையை கடந்து பரத்வாஜர் ஆஸ்ரமம் நோக்கி சென்றார்.
ஸ்ரீ ராமரின் நினைவிலேயே வந்த பரதனுக்கு,
யமுனையின் நீல நிறம் ஸ்ரீ ராமராகவும்,
கங்கையின் வெண்மை நிறம் சீதையாகவும் தெரிய,
இரண்டு புண்ய நதிகளும் சேரும் ப்ரயாகையை கண்டு மூர்ச்சையானார். பின் பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் தங்கி, சித்ரகூடம் சென்றார்.

வத்ஸ தேசத்தில், பிரயாகை என்ற ஊரை, பிற்காலத்தில் வந்த முஸ்லீம் ஆட்சியின் போது, அக்பர் இந்த பிரயாகை என்ற இடத்தை, இலகாபாத் என்று பெயர் மாற்றி முஸ்லீம் தேசமாக்க முயன்றார்.
பின் வந்த, பிரிட்டிஷ் ஆட்சியில், வழக்கம் போல, தவறாக உச்சரித்து, "அலகாபாத்" (Allahabad) என்று பெயர் மாற்றப்பட்டது.

அதே பெயரை 2018AD வரை சுதந்திர இந்தியாவும் வைத்துக்கொண்டது.
இந்த பிரயாகை என்ற அலகாபாத் நகரத்தில், 12 வருடத்திற்கு ஒரு முறை 'கும்ப மேளா' என்ற ஆச்சர்யமான விழா இன்று வரை நடக்கிறது.


மஹாபாரத சமயத்தில்,
காசி ராஜன் தன் 3 மகள்களுக்கு சுயம்வரத்தை காசியில் நடத்தினார்.

அப்போது, பீஷ்மர், சத்யவதி மகன் 'விசித்ரவீர்யன்' சார்பில் வந்து, அனைத்து அரசர்களையும் தோற்கடித்து "அம்பா, அம்பாலிகா, அம்பிகா" என்ற 3 மகள்களையும் தன் குரு தேசத்திற்கு கொண்டு சென்று, குரு அரசன் 'விசித்ரவீர்யனுக்கு' மனம் முடிக்க நினைத்தார்.

அம்பா என்ற பெண், தான் சால்வ தேச (ராஜஸ்தான்) அரசனை மணக்க ஆசை கொண்டிருந்ததாக சொல்ல,
பீஷ்மர் 'அம்பா'வை மட்டும் மீண்டும் அழைத்துக்கொண்டு சால்வ மன்னன் முன் விட்டு சென்றார்.
ஆனால்,
சால்வ மன்னன் (Rajasthan) 'அம்பா'வை பீஷ்மரிடம் தோற்றதாலும், அவரே வந்து விட்டது அவமானம் என்றும் காரணங்கள் சொல்லி விலகினான்.

அம்பா "இனி உயிர் வாழ்வது வீண்" என்று, "அடுத்த ஜென்மத்தில் பிறந்து பீஷ்மர் மரணத்திற்கு காரணம் ஆவேன்" என்று சபதம் செய்து, தீயில் விழுந்து உயிர் நீத்தாள். சிகண்டியாக பிறந்தாள்.

அம்பாலிகாவுக்கு "பாண்டு" பிறந்தார். 
பாண்டு "குந்தி" மற்றும் "மாத்ரி"யை மணந்தார்.
இவர்களுக்கு 5 பிள்ளைகள் பிறந்தனர். யுதிஷ்டிரர் மூத்தவர்.

அம்பிகாவுக்கு "திருத்ராஷ்டிரன்" பிறந்தார்.

விசித்ரவீர்யனுக்கு பிறகு, பாண்டு குரு தேசத்தை ஆட்சி செய்தார்.

பாண்டவர்களின் தந்தை "பாண்டு" குரு தேச அரசர்களின் பலத்தை, புகழை பரப்ப, திக் விஜயமாக, காசி தேசம், மகத தேசம், பௌண்ட்ரக தேசம், சுஹ்ம தேசம் போன்ற தேச அரசர்களை வென்றார்.



பாண்டுவுக்கு பிறகு, குரு தேச அரசனாக, திருத்ராஷ்டிரன் ஆட்சி செய்தார்.
கண் தெரியாத குருடனாக இருந்தாலும், பீஷ்மர், விதுரர் (chief minister) போன்றோர் துணையுடன் ஆட்சி புரிந்தான். 

பாண்டுவின் மைந்தன் யுதிஷ்டிரனுக்கு நியாயப்படி அரசாட்சி கொடுக்க வேண்டும் என்கிற நிலையில், தன் மகன் துரியோதனனுக்கு கொடுக்க ஆசை கொண்டு, மகாபாரத போருக்கு வித்திட்டான்.

வ்ரஜ தேசம், சூரசேனர் என்ற அரசர் ஆண்டு வந்தார்.

வ்ரஜ தேசம், உத்திர பிரதேசத்தில் உள்ள மதுராவில் இருந்து ஸ்ரீ வ்ருந்தாவனம் வரை உள்ள தேசம். "வ்ரஜ பூமி" என்று சொல்வார்கள்.
இங்குள்ள மக்கள் வ்ரஜ பாஷை பேசுவர்.
ஸ்ரீ கிருஷ்ணர் கோகுலத்தில் வ்ரஜ பாஷை பேசினார்.

பிராம்மண ரிஷிக்கும், ராக்ஷச தாயாருக்கும் பிறந்த ராவணன் தன் தங்கை "கும்பினி"யை 'மது' என்ற ராக்ஷஸனுக்கு மம் செய்தான். 

கோசல தேசத்தில் அருகில் தான், இந்த மது என்ற ராக்ஷஸன் இருந்து வந்தான். 
மது என்ற இந்த ராக்ஷஸன் பிராம்மணர்கள் மீது மரியாதை வைத்து இருந்தான்.
தன் ஆட்சியில் தவம் செய்து கொண்டு இருக்கும் முனிவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தான்.

இவனுக்கு "லவணாசுரன்" என்ற மகன் பிறந்தான்.
இவன் ராக்ஷஸ குணம் நிரம்பியவனாக இருந்ததால், சாதுக்களை வெறுத்தான்.

நர மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ள லவணாசுரன், தவம் செய்யும் முனிவர்களை அப்படியே கொன்று பச்சை மாமிசமாக சாப்பிட்டு, எலும்பை துப்பி விடுவான்.
ச்யவனர் (Chyavana Rishi) என்ற ரிஷி ஸ்ரீ ராமரிடம் சென்று, ராக்ஷஸர்கள் செய்யும் தொந்தரவை பற்றி சொல்ல, ராமரின் தம்பி "சத்ருக்னன்" லவணாசுரனை கொன்றார்.

மது ஆண்ட ஊருக்கு சத்ருக்கனன் அரசன் ஆனார்.
இதுவே இன்றைய மதுரா.

ராமாயண காலத்தில், ராமரின் தம்பி 'சத்ருக்னன்" மது என்ற வனம் இருந்த இடத்தை செப்பனிட்டு, 'மதுரா' என்ற நகரை உருவாக்கினார்.

மஹாபாரத சமயத்தில், இங்கு இருந்த யாதவர்கள்,
"யாதவ, வ்ருஷ்ணி, போஜ" என்று 3 பிரிவாக பிரிந்து இருந்தனர்.

இந்த தேசத்தை வ்ருஷ்ணி குல உக்ரசேனர் ஆண்டு வந்தார்.
இவர் தன் மகள் "தேவகி"யை, யாதவ குல தலைவர் "சூரசேனர்" மகன் "வசுதேவருக்கு" மணம் செய்து கொடுத்தார்.

உக்ரசேனர் மகன் 'கம்சன்' அசரீரி வாக்கினால், தேவகியையும் வசுதேவரையும் மதுராவில் உள்ள ஜெயிலில் தள்ளினான்.
இவர்களுக்கு பிறந்த ஸ்ரீ கிருஷ்ணர் 11 வயதில் கம்சனை கொன்று, மீண்டும் உக்ரசேனரை மன்னனாக்கி, பிரிந்து இருந்த யாதவர்களை ஒன்று இணைத்தார்.

மதுராவில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மாளிகை, முகலாய ஆட்சியில் ஔரங்கசிப்  இடித்து, மசூதியை கட்டினான்.

துரியோதனனும், சகுனியும் பாண்டவர்களை உயிரோடு கொளுத்த திட்டம் தீட்டினர்.
வாரனாவதம் என்ற ஊரில் இவர்களுக்காக ஒரு மாளிகை கட்டி, இரவில் பாண்டவர்கள் இருக்கும் போது, தீயிட்டு கொளுத்தினான்.
சுரங்கம் வழியாக பாண்டவர்கள், தன் தாய் குந்தியுடன் தப்பித்தனர்.
வாரனாவதம், Barnava என்ற பெயரில் இன்றைய உத்திரபிரதேசத்தில் உள்ளது.

திரௌபதியின் சுயம்வரத்தில், வத்ஸ தேச அரசர் கலந்து கொண்டார்.

திருத்ராஷ்டிரன்,
துரியோதனின் பகைமை உணர்வை குறைக்க, பாண்டவர்களையும் சமாதானம் செய்ய, தன் குரு தேசத்தில் உள்ள ஒரு மேற்கு பகுதியை பாண்டவர்களுக்கு ஆட்சி செய்ய கொடுத்தார்.
இந்த மேற்கு பகுதியில் இருந்த குரு தேசத்தின் பெயர் "குருஜாங்கள தேசம்". இந்த தேசத்தில் உள்ள காண்டவ வனம் இன்று ஹரியானா (Haryana) என்ற பெயருடன் உள்ளது.

இந்த குருஜாங்கள தேசம் வெறும் காடாக இருந்தது.
இதை வாழும் தேசமாக்கி, இந்த்ரப்ரஸ்தம் என்ற தலைநகரையும் உருவாக்கினார், யுதிஷ்டிரர்.

இந்த 'இந்த்ரப்ரஸ்தம்' பிற்காலத்தில் டெல்லி நகர் (Delhi) என்று பெயர் பெற்றது.
இன்று இந்தியாவின் தலைநகராகவும் உள்ளது.

இந்த குருஜாங்கள தேசத்தில் உள்ள ஓரு ஊரை, திருத்ராஷ்டிரன் த்ரோணருக்கு தானமாக கொடுத்தார்.
இந்த ஊர், குருகிராமம் (Gurgaon) என்ற பெயர் பெற்றது.
இந்த ஊரில் தான், பாண்டவர்களும், கௌரவர்களும் தங்கள் குரு "துரோணரிடம்" கல்வி கற்றனர்.

முஸ்லீம் ஆட்சிக்கு பிறகு, இந்த நகரம் குர்கான் "gurgaon" என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பிறகு மீண்டும் அதன் உண்மையான பெயருக்கு மாற்றப்பட்டது.

மறைக்கப்பட்ட ஹிந்து கலாச்சாரத்தை மீட்க, முதல் படியாக, 2016ஆம் ஆண்டு, ஹரியானா முதல்வர், சட்டம் திருத்தம் கொண்டு வந்து, "குருகிராம்"(Gurugram) என்ற சரித்திர பெயரை மீட்டார். 

மஹாபாரத காலத்தில், கோசல தேசத்தின் பகுதியை பலர் ஆண்டனர். "ப்ருஹத்பாலா" என்பவர் ஒரு கோசல பகுதியின் அரசனாக இருந்தார்.
இவர், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டார்.

ப்ருஹத்பால அரசன், துரியோதனின் பக்கம் நின்று போரிட்டார்.
மற்ற கோசல அரசர்கள் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.



மஹா பாரத போரில்,
13ஆம் நாள் யுத்தத்தில், துரோணர் வகுத்த சக்ரவ்யூஹத்தை உடைத்து, அபிமன்யு சென்றான்.
தனி ஒருவனாக அங்கிருந்த மஹா ரதர்களை எதிர்த்து போரிட்டான்.
எதிர்த்த கோசல அரசன் "ப்ருஹத்பாலனை" அர்ஜுனனின் மகன் அபிமன்யு கொன்றான்.

மஹா பாரத போரில், "வத்ஸ தேச அரசர்" பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டார்.

போர் முடிந்த பின், யுதிஷ்டிரரின் அஸ்வமேத யாகத்திற்கு, திக்விஜயமாக புறப்பட்ட அர்ஜுனன், கோசல தேசத்தை வீழ்த்தி யுதிஷ்டிரரின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.