Followers

Search Here...

Wednesday 27 December 2017

மஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது?

மஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது?




"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்" என்று அறியப்பட்ட பாரத தேசங்கள், இன்று முஸ்லீம் தேசமாக பாகிஸ்தான் என்ற பெயரில் பிரிக்கப்பட்டது.
ராமாயண காலத்தில், கைகேயி பிறந்த ஊர் "கேகேய" தேசம்.
இந்த தேசம் இன்று பாகிஸ்தானில் உள்ளது.

ராமர் காட்டுக்கு சென்ற துக்கத்தில், கோசல மன்னன் (உத்திரபிரதேசம்) "தசரதன்" உயிர் பிரிந்தது.
அந்த சமயம், 'பரதனும், சத்ருகனனும்' கேகேய தேசத்தில் இருந்தனர். அங்கிருந்து புறப்பட்டு கோசல தேசம் (UP, INDIA) வந்தார் பரதன்.

ராமரின் தம்பி பரதன், "தக்ஷஷிலா" மற்றும் "புருஷபுரா" என்ற இரண்டு முக்கியமான நகரங்களை கேகேய தேசத்திற்கு அருகில் உருவாக்கினார்.
இந்த இரண்டு நகரங்களும் (Taxila, Peshawar) கூட, இன்று பாகிஸ்தான் பகுதியில் தான் உள்ளது.
பரதன் அமைத்த "தக்ஷஷிலா" என்ற நகரம் தக்ஷிலா (Taxila) என்றும், 
பரதன் அமைத்த "புருஷபுரா" என்ற நகரம் பெஷாவர் (Peshawar) என்றும்,
இன்று பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்களால் ஆக்ரமிக்கப்பட்டு விட்டது.
முஸ்லீம் நகரம் போல பெயர் மாற்றப்பட்டு, இன்று அழைக்கப்படுகிறது.




மதம் மாறுபவர்கள் செய்யும் முதல் வேலையும் இதுவே.
சனாதன தர்மம் இருந்த தேசம், இன்று முஸ்லீம் தேசமாக ஆனது துரத்ரிஷ்டமே !!

வியாசர் எழுதிய மஹாபாரத்தை, "வைசம்பாயனர்" என்ற அவரது சிஷ்யர் கேட்டார்.
அதனை, இப்போதுள்ள இந்த தக்ஷிலா (Taxila) என்ற நகரில் தான், அர்ஜுனனின் குடும்ப வாரிசான "ஜனமேஐயன்" கேட்டார். 
முஸ்லீம் நாடாகி போன இந்த பாகிஸ்தானில், பல சரித்திரங்கள் ஹிந்துக்கள் இழந்து விட்டோம்.
ஸ்ரீ ராமரின் புதல்வர்களில், லவன் உருவாக்கிய நகரம் "லவபுறம்", இன்று லாகூர் (lahore) என்று பெயர் மாற்றப்பட்டு, முஸ்லீம் நாடாக பிரித்து கொடுத்து விட்டோம்.

ராமரின் தம்பி 'பரதன்' கட்டிய நகரமும், அவர் பிள்ளை 'லவன்' கட்டிய நகரமும் முஸ்லீம் தேசமாக காரணம் ஆனோம்.

ஸ்ரீ ராமர் பிறந்த அயோத்தியிலும் அவருக்கான மரியாதை செய்ய ஹிந்துக்கள் தவறுகிறோம்.




ஹிந்துக்கள் கொஞ்சம் சரித்திரத்தை உணர்ந்து, இழந்ததை அறிந்து, இனியாவது இருப்பதை இழக்காமல் இருக்க வேண்டும்.

ஹிந்துக்களாக இருந்து பின் மதம் மாறிய கூட்டங்களே, பெரும்பாலும் ஹிந்துக்களுக்கு தடையாக இருந்துள்ளனர்.

அமைதியாக இருத்தல், சம தர்மம் பேசுதல், இவை தான் ஹிந்துக்கள் லட்சணம் என்று பிற போலி மதங்களில் உள்ளவர்கள் எண்ணம். 
இதுவே, மத மாற்றம் செய்ய ஹிந்துக்களே கொடுக்கும் வாய்ப்பு.

இப்படி மதம் மாறிய கூட்டமே, இன்றைய பாகிஸ்தான்.

இந்த மதம் மாறிய மனிதர்களே, ஹிந்துக்களின் கலாச்சாரத்தை அழிப்பவர்கள் என்பது கவனிக்க வேண்டிய உண்மை.





'பரதன்' உருவாக்கிய "காந்தாரம், தக்ஷிலா, புருஷபுரா",
ஸ்ரீ ராமரின் புதல்வன் 'லவன்' உருவாக்கிய "லவனபுரி",
'லக்ஷ்மணன்'  உருவாக்கிய "லக்ஷ்மனபுரா", ஆகிய நகரங்களை, 
இந்த மதம் மாறிய கூட்டத்திற்காக, சம தர்மம் பேசும் ஹிந்துக்கள் தானம் கொடுத்து விட்டனர்.

சரித்திர அறிவு இல்லாததே இதற்கு காரணம்.

உண்மையான ஊர் பெயரும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.

காந்தாரம் 'Gandahar, Afghanistan' ஆனது.

தக்ஷிலா 'Taxila, Pakistan' ஆனது.

லவனபுரி 'Lahore, Pakistan'' ஆனது.

லக்ஷ்மனபுரா 'Lucknow, India' ஆனது,

புருஷபுரா 'Peshawar, Pakistan' ஆனது.
மகா கொடிய பாம்புகள் இருந்த இடமாக இருந்தது "தக்ஷஷிலா". தேவலோக நாகங்கள் கூட இங்கு வாசம் செய்தன. 
தன் தந்தை பரீக்ஷித் பாம்பு கடித்து மறைந்தார் என்ற கோபத்தில், இந்த தக்ஷஷிலா என்ற இடத்தில் தான் சர்ப்ப யாகம் செய்து கொடும் விஷம் கொண்ட கோடிக்கணக்கான பாம்புகளை கொன்றான்.




தனிப்பட்ட விரோதத்திற்காக பாம்பு வர்க்கமே இருக்க கூடாது என்று நினைப்பது தவறு என்று உணர்ந்து, பின் கோபம் தணிந்து, யாகத்தை பாதியில் நிறுத்திக்கொண்டான் 'ஜனமேஐயன்'.

இனி, மகாபாரத சமயத்தில் பாகிஸ்தான் எப்படி இருந்தது? என்று பார்ப்போம்.

மஹா பாரத சமயத்தில்,
மாத்ர தேசத்தை (Punjab Region in Pakistan), சல்யன் என்ற அரசன் ஆண்டு வந்தார். இவர் பாண்டவர்களின் உறவினர். இவரின் மகள் "மாத்ரி" குரு தேச அரசன் 'பாண்டு'வை மணந்தாள்.

நகுலன் மற்றும் சகாதேவனுக்கு, சல்யன் தாத்தா முறை.

மஹா பாரத போர் நடக்க போவது நிச்சயம் என்ற நிலையில், பாண்டவர்கள் பக்கம் தன் தேசம் துணை நிற்கும் என்று சொல்வதற்காக "குரு" தேசம் (UP, India) நோக்கி வந்து கொண்டிருந்தார் சல்யன்.

இதனை கேள்விப்பட்ட துரியோதனன், படையோடு வந்து கொண்டிருக்கும் சல்ய அரசனுக்கும் அவர் படைகளுக்கும் வழியில் உபசரித்து பெரிய விருந்து கொடுத்தான்.
பாண்டவர்கள் தான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்று நினைத்து, உபசரிப்பை ஏற்றுக்கொண்டார்.


பின்னர், துரியோதனன் தான், சூழ்ச்சி செய்து இதை செய்துள்ளான் என்று அறிந்தார். 
அடுத்தவன் சமைத்த உணவை உண்டால், அவனுக்கு பதில் செய்ய வேண்டும் என்பது தர்மம். 
இதற்கு கட்டுப்பட்டு, தன்னிடம் என்ன உதவி எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார் சல்யன்.

மாத்ர தேச படைகள், துரியோதனன் பக்கம் நின்று போர் புரிய வேண்டும், மேலும் கர்ணன் போர் புரியும் சமயத்தில், சல்ய அரசரே தேர் ஓட்ட வேண்டும் என்று கேட்டனர்.
தர்மத்தை மீறாத அரசர், சம்மதித்து, துரியோதனன் பக்கம் நின்று போர் செய்தார்.

மஹா பாரத போரில், 13ஆம் நாள் யுத்தத்தில், துரோணர் வகுத்த சக்ரவ்யூஹத்தை உடைத்து, அபிமன்யு சென்றான்.
தனி ஒருவனாக அங்கிருந்த மஹா ரதர்களை எதிர்த்து போரிட்டான்.

எதிர்த்த கோசல அரசன் (உத்திரபிரதேசம்) "ப்ருஹத்பாலனை" அர்ஜுனனின் மகன் அபிமன்யு கொன்றான்.
பின்னர், மாத்ர அரசன் சல்யனின் மகன் "ருக்மரதன்" மேலும் சல்யனின் சகோதரன் இருவரையும் அபிமன்யு போரில் கொன்றான்.

மேலும் அபிமன்யு, துரியோதனின் மகன் லக்ஷ்மணனையும் கொன்றான்.



படு தோல்வி நிகழப்போவதை உணர்ந்த துரோணர், 6 மஹா வீரர்களை (கிருபர், கர்ணன், யாதவ தலைவன் க்ரிதவர்மன், துரியோதனன், சகுனி, துச்சாதனன்) தன்னுடன் சேர்ந்து கொண்டு அபிமன்யுவை கொல்ல சொன்னார்.

தளராத அபிமன்யு, அனைவரையும் எதிர்த்து போரிட்டு, சகுனியின் சகோதரனையும் பல ஆயிரம் சேனைகளை வீழ்த்தினான்.

கடைசியாக களைத்த நிலையில் ஆயுதம் இல்லாத நிலையில், துச்சாதனன் கதையால் தாக்கி அபிமன்யுவை கீழே விழ செய்தான். 
குருக்ஷேத்ர போரின் விதியை மீறி, அனைவரும் சேர்ந்து அபிமன்யுவை கொன்றனர்.

மஹா பாரத சமயத்தில்,
சிந்து தேசத்தை (பாகிஸ்தான் பகுதி) ஆண்டு வந்தான் 'ஜயத்ரதன்'. 
இவன் துரியோதனின் தங்கை "துஷலா"வை மணந்தான்.

இவன் தந்தை 'வ்ரிதக்ஸ்த்ரா' நாட்டை ஜயத்ரதன் கையில் ஒப்படைத்து, தவம் செய்ய சென்றார்.

மஹாபாரத சமயத்தில், பாண்டவர்கள் 13 வருடம் வனவாசம் மேற்கொண்ட போது, 
ஜயத்ரதன், தன்னுடன் சில கேகேய படைகளுடன் (பாகிஸ்தான் பகுதி) வந்து திரௌபதியிடம் தவறாக நடக்க முயன்றான்.



அர்ஜுனன் ஓடி வந்து, அனைவரையும் துரத்தி, ஜயத்ரதனை பிடித்து இழுத்து வந்து, யுதிஷ்டிரரிடம் நிறுத்தினான்.
துரியோதனனின் தங்கையின் கணவன் 'ஜயத்ரதன்' என்பதால், உயிரோடு விட்டு, ஆனால் செய்த தவறுக்கு இவன் எந்த நாட்டுக்கும் சில மாதங்கள் செல்லாமல் இருக்க, இவன் தலையை மழுக்கி 4 குடுமிகள் முன்னும் பின்னும் இருக்குமாறு செய்து பீமன் அவமானப்படுத்தி அனுப்பினான்.

மஹாபாரத போரில், சில கேகேய அரசர்கள், பாண்டவர் பக்கமும், 
சில கேகேய அரசர்கள், துரியோதனன் பக்கமும் நின்று போர் செய்தனர்.

"வ்ரிஹத்ஷாத்ரா" என்ற கேகேய அரசன் பாண்டவர் பக்கம் போர் புரிந்தான். இவனை துரோணர் 14ஆம் நாள் யுத்தத்தில் கொன்றார்.

வ்ரிஹத்ஷாத்ராவின் மகன் 'விசோகன்' என்பவனும் போரிட்டான். இவனை கர்ணன் மாய்த்தான்.
'விசோகன்' இறந்ததை கண்ட இவன் படைத்தளபதி 'உக்ரகர்மன்', படு வேகத்துடன் கர்ணனின் மகன் 'ப்ரசேனனை' நோக்கி பாய்ந்து, கொன்றான்.

தன் மகன் கொல்லப்பட்டதை கண்ட கர்ணன், 'உக்ரகர்மன்' கையையும், தலையையும் தன் அம்புகளால் கொய்து எறிந்தான்.

ஜயத்ரதன் மஹா பாரத போருக்கு தயாரான போது, அவன் தந்தை இவனுக்காக ஒரு வரம் தந்தார். 
'போரில் ஒரு வேளை உன் தலை போனால், உன் தலை கீழே விழ காரணமானவன் தலையும் வெடித்து சிதறும்' என்றார்.




ஜயத்ரதன், அபிமன்யு மரணத்திற்கு முக்கிய காரணமானான். 
இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜுனன், 'அடுத்த நாள் சூரியன் மறைவதற்கு முன், ஜயத்ரதனை கொல்வேன், ஜயத்ரதனை கொல்ல முடியாவிட்டால், அங்கேயே தீ மூட்டி அதில் இறங்கிவிடுவேன்' என்று சபதம் செய்தான்.

மறுநாள் 14ஆம் நாள் யுத்தத்தில், கௌரவர்கள் சக்ரவ்யூகம் அமைத்து ஜயத்ரதனை ஒளித்து விட்டனர்.
அபிமன்யுவின் இறப்பினால், அர்ஜுனன் படு பயங்கர கோபத்துடன் போரிட்டான்.

இந்த ஒரு நாளில் மட்டும் 21,870 தேர் படை, 21,870 யானை படை, 65,610 குதிரை படை, 1,09,350 காலாட்படைகளை வதம் செய்தான். 
சூரியன் இன்னும் சில நாளிகையில் மறைந்து விடும் நிலையில், ஜயத்ரதனை கண்டுபிடிக்க முடியவில்லை. 
ஸ்ரீ கிருஷ்ணர் தன் மாயை கொண்டு, சுதர்சன சக்கரத்தை எடுத்து சில நாளிகை சூரியனை மறைத்து விட்டார். 
சூரியன் மறைந்து விட்டது, இனி கவலை இல்லை என்று, ஜயத்ரதன் வெளிய வர, ஸ்ரீ கிருஷ்ணர் இருளை விலக்கினார்.
சூரியன் பிரகாசிக்க, ஜயத்ரதன் எதிரில் நிற்க, அர்ஜுனன் அம்பு அவன் தலையை கொய்து, அது கீழே விழும் முன், இன்னொரு அம்பு மூலம் அடித்து தூக்கி, இப்படியே அவன் தலையை, அவன் தந்தை இருக்குமிடம் வரை தூக்கி சென்று, அவர் கையில் போட்டது.
பதறிய அவர், அறுந்த தன் மகனின் தலையை பார்த்து கீழே போட, அவர் தலையும் வெடித்து சிதறியது.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் 'கர்ணன்' தலைமை ஏற்றான்.

கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - 'சல்லியன்' (punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார். இது சல்லியனை அவமானம் படுத்துவதாக இருந்தது. இருந்தாலும் சம்மதித்தார்.

போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில், வேதம் கற்ற ப்ராம்மணர்கள், 'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறியதை நினைவு கூறி, "நீ அந்த மாத்ர தேச அரசன் தானே" என்றான். வாலிகன் என்றால் யார் என்று தெரிந்து கொள்ள வாலிகன் படிக்கவும்

வேத மார்க்க வழியில் நடப்பவனை, 'நீ ஒரு வாலிகன்' என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.



சல்லியன் பெரும் அவமானம் கொண்டார்.

இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை குழியிலிருந்து நகர்த்த மறுத்தார். வேறு வழியில்லாமல், கர்ணன் இறங்கி தேரை நகற்ற முயன்றான். 
'சபையில் கர்ணன் திரௌபதியின் ஆடையை கழற்றி அனைவரும் பார்க்க செய்ய வேண்டும்' என்று சொன்னதை ஸ்ரீ கிருஷ்ணர் நினைவு படுத்த, ஆத்திரம் கொண்ட அர்ஜுனன் வில்லில் இருந்து அம்புகள் பறந்து, கர்ணன் தலையை கொய்து எரிந்தது.

18ஆம் நாள் போரில், யுதிஷ்டிரருடன் போரில் ஈடுபட்டு, சல்லியன் கொல்லப்பட்டார்.

மஹாபாரத போர் முடிந்த பின், அர்ஜுனனின் பேரன் பரிக்ஷித் மட்டும் மிஞ்சினான்.

பாரத தேசத்தை ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வர, அஸ்வமேத யாகம் செய்ய யுதிஷ்டிரர் தீர்மானித்தார்.

திக்விஜயமாக, அர்ஜுனன் அனைத்து நாடுகளுக்கும் படையுடன் சென்றார்.
அப்போது சிந்து தேசத்தை ஜயத்ரதனின் மகன் "சுரதா" ஆண்டு வந்தான்.
'அர்ஜுனன் படையுடன் வந்து கொண்டு இருக்கிறான்' என்று கேள்விப்பட்டதற்கே, நடுங்கினான்.

தன் படைகளுக்கு அர்ஜுனனை தடுக்க ஆணையிட்டான். 
அர்ஜுனன் வருகிறார் என்று உணர்ந்த துரியோதனின் தங்கை "துஷலா" அர்ஜுனனை பார்க்க ஓடி வந்தாள்.
'தன் மகனுடன் போர் புரிய வேண்டாம்' என்று அர்ஜுனனிடம் வேண்டினாள்.
அர்ஜுனன் தன் தங்கை உறவு என்பதாலும், 'பாரத வர்ஷத்திற்கு யுதிஷ்டிரர் சக்கரவர்த்தி என்பதில் சம்மதம் என்றால், போர் செய்யும் எண்ணம் இல்லை' என்றார்.




யுதிஷ்டிரர் சக்கரவர்த்தி என்பதில் ஆட்சேபனை யாருக்குமே இல்லை என்றாள் "துஷலா".
அர்ஜுனன் சிந்து தேசத்தவர்களை அஸ்வமேத யாகத்திற்கு அழைத்து, மற்ற தேசங்களுக்கு திக்விஜயம் செய்ய புறப்பட்டார்.

ஜயத்ரதனின் மகன் "சுரதா" அர்ஜுனன் சிந்து தேசத்தை நோக்கி படை எடுக்க வந்து இருக்கிறான், தன் தந்தையை போரில் கொன்றது போல தன்னையும் கொன்று விடுவார் என்ற பயத்திலேயே, படுத்த படுக்கையாகி விட்டான். 
அர்ஜுனன் திரும்பி சென்றுவிட்ட போதிலும், பயத்தில் இருந்து மீள முடியாமல், உயிர் விட்டான்.

அஸ்வமேத யாகம் செய்து, உலகையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த யுதிஷ்டிரர், தன் இறுதி பயணத்தை இமாலயம் நோக்கி செல்ல திட்டமிட்டார். உலகின் சக்கரவர்த்தியாக பரிக்ஷித் நியமிக்கப்பட்டார்.

சாபத்தினால், தக்ஷகன் என்ற பாம்பு கடித்து பரிக்ஷித் உயிர் நீத்தார்.

பரிக்ஷித் மகன் 'ஜனமேஜெயன்", தன் தந்தை இப்படி கொடிய பாம்பு கடித்து இறந்ததை அறிந்து, ஆத்திரம் கொண்டு, இந்த "தக்ஷஷிலா" (Taxila, Pakistan) என்ற நகரில் சர்ப்ப சாத்ர யாகம் நடத்தினான்.




இந்த யாகத்தில் அங்கு இருந்த பாம்புகள் யாவும் காந்தத்தினால் ஈர்க்கப்பட்ட இரும்பு போல, தானாக வந்து யாக தீயில் வந்து விழுந்தன.
இப்படி ஒரு இனத்தையே அழிப்பது பாவம் என்று, அஸ்தீக மகரிஷி வந்து, ஜனமேஜெயன் கோபத்தை தணித்து, யாகத்தை மேலும் தொடர விடாமல் தடுத்தார்.

Hare Rama Hare Krishna - Bhajan 

Sandhya Vandanam -  Morning (With Meaning) 

Sandhya Vandanam -  Afternoon (With Meaning) 




Sandhya Vandanam -  Evening  (With Meaning) 


No comments: