Followers

Search Here...

Wednesday 27 December 2017

மகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka

மகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka




"கர்நாடக தேசம்", "கிஷ்கிந்த தேசம்" (Hampi) , "மகிஷ தேசம்" (Mysuru) ஆகிய தேசங்கள், இன்று "கர்நாடகா" என்று அழைக்கப்படுகிறது.
ராமாயண காலத்தில், ஸ்ரீ ராமர் கால் பட்ட இடம் இந்த கர்நாடகா தேசம். சபரியையும், பின் கிஷ்கிந்தை என்ற ஹம்பி நகரில், ஹனுமனையும், சுக்ரீவனையும் இங்கு தான் கண்டார்.
நாகரீகம் அறியாத, காட்டுவாசி போல வாழும் "சபரி" என்பவள், ஒரு நாள் மதங்க முனிவரை "பம்பா நதி என்ற துங்கபத்ரா நதி" அருகே கண்டாள்.

அவரையே தன் குருவாக ஏற்று, பார்த்த நாளில் இருந்து அவருக்கு சேவை செய்ய ஆரம்பித்தாள். 
அவர் ஆசிரமத்தை கூட்டி பெருக்குவது முதல் பூ, பழம் கொண்டு வந்து பூஜைக்கு கொடுப்பது வரை விடாது செய்து வந்தாள்.

ஒரு நாள், மதங்க முனிவர், தான் இந்த உலகத்தை விட்டு செல்லப்போவதாக சொல்லி, தன் சிஷ்யர்களை கூப்பிட்டு, 
யார் யாருக்கு என்ன வரம் வேண்டுமோ அதை தன் தவ வலிமையால் அனுக்கிரகம் செய்து கொண்டிருந்தார்.





சபரியை பார்த்து, 'உனக்கு என்ன வேண்டும்?' என்றார்.
எதை கேட்பது? என்று அறியாதவள், தன்னை விட்டு குரு செல்ல போகிறாரே என்ற கவலையில் அழுதாள்.

இவளின் உண்மையான குரு பக்தியை கண்டு மனம் குளிர்ந்த மதங்கர், "உன்னை பார்க்க அந்த பரமாத்மா ஸ்ரீ ராமராக வருவார். அவரை தரிசித்த பின், நீயும் பரலோகம் வந்து, என்னை அங்கு தரிசிக்கலாம்" என்று அனுக்கிரகம் செய்தார்.

அன்று முதல், காலை எழுந்து ஆசிரமத்தை கூட்டி பெருக்கி, கோலம் போட்டு, காய் கனிகளை பறித்து ஸ்ரீ ராமருக்காக காத்து இருப்பாள்.

இப்படியே பல வருடங்கள் ஆகி, கிழவி ஆகி விட்டாள் சபரி. 
இருந்தும் நம்பிக்கை இழக்கவில்லை. 
குரு வாக்கியத்தை சத்தியம் என்று திடமாக நம்பினால். உண்மையான சிஷ்யன் இப்படி தானே இருப்பான். 
பூ பழம் பறிப்பதை ஒரு நாளும் நம்பிக்கை இழந்து நிறுத்தவில்லை.





ஒரு நாள், ஸ்ரீ ராமரும், லக்ஷ்மணரும் சேர்ந்து சபரியை பார்க்க, அவள் ஆசிரமம் தேடி வந்தனர்.
சபரி வரவேற்று, ஸ்ரீ ராமருக்கு கால் பிடித்து விட்டு, அன்று பறித்து வைத்திருந்த பழங்கள் சாப்பிட கொடுத்தாள். லக்ஷ்மணருக்கும் கொடுத்தாள்.
யாரிடமும் கை நீட்டி வாங்கி பழக்கமில்லாத ஸ்ரீ ராமர், சபரியின் அன்பில் தன்னை மறந்தார். 
அவள் கொடுக்கும் பழங்களை கை நீட்டி வாங்கி சுவைத்தார். 
ஸ்ரீ ராமர் கண் முன்னே, தன் தேகத்தை யோகத்தினால் பஸ்பமாக்கி, ஜ்யோதி ரூபமாக, தன் குருவை அடைந்தாள் சபரி
கர்நாடக தேசத்தில் நடந்த சரித்திரம்.

மஹாபாரத சமயத்தில், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக, "சகாதேவன்" திக்விஜயம் செய்தார்.

கர்நாடக தேச அரசர்கள், சகாதேவன் பெயர் சொல்லி வந்த அவர் படைத்தலைவனுக்கே பயந்து, தோல்வியை ஒப்புக்கொண்டனர். 



ராஜசுய யாகத்திற்கு பல சன்மானங்கள் வழங்கினர்.
சகாதேவன் கிஷ்கிந்தை தேசத்தில் 7 நாள் கடும் போர் புரிந்தார். 
இறுதியில், கிஷ்கிந்தை தேச அரசர்கள் (Hampi) சகாதேவனின் போர் திறனை கண்டு ஆச்சர்யப்பட்டனர். 
இறுதியில், மகிழ்ச்சியுடன் முத்தும், பொன்னும் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்கு அளித்தனர்.
மகிஷ தேசம் (Mysuru) ப்ராம்மணர்கள் இல்லாத தேசமாக இருந்தது.

கர்ணன், இந்த தேசத்தில் உள்ளவர்களை "கலாச்சாரம் இல்லாதவர்கள், வாலிகர்கள்" என்றான்.

க்ஷத்ரியர்களாக இருந்த இவர்கள் சூத்ரனை போல வேலை செய்ய ஆரம்பித்ததால், கலாச்சாரத்தை இழந்தவர்கள் என்று இகழ்ந்தான்.

மகிஷ தேசம் என்பது, இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது.

மஹாபாரத சமயத்தில், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக, அர்ஜுனனும் திக்விஜயம் செய்தார்.





மகிஷ தேச அரசர்களை அர்ஜுனன் போரில் தோற்கடித்தான். 
இதை தொடர்ந்து, குஜராத்தில் உள்ள சௌராஷ்டிர தேசம் நோக்கி திக்விஜயம் செய்தார்.

மஹாபாரத போர் முடிந்த பின்னர், யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகம் செய்து பாரத தேச சக்கரவர்த்தி ஆவதற்கு, மீண்டும் அர்ஜுனன் இந்த கர்நாடக தேசம் திக்விஜயம் செய்து அனைத்தையும் கைப்பற்றினார்.

பாண்டவர்களின் சொத்தாக ஆனது இந்த தேசம்

1 comment:

Premkumar M said...

கர்நாடகா மாநிலம், மஹாபாரத சமயத்தில் (கலியுகம் [3102BCEக்கு] ஆரம்பிப்பதற்கு 100 வருஷம் முன்னர்) முன் எப்படி இருந்தது?
யார் இங்கு வாழ்நதார்கள்?
தெரிந்து கொள்வோமே.

Share it if worth reading !

https://www.proudhindudharma.com/2017/12/karnataka.html