Followers

Search Here...

Saturday 25 April 2020

ஆணுக்கு உடல் வலிமையே 'பலம்'. பெண்ணுக்கு பலம் எது?

ஆணுக்கு உடல் வலிமையே 'பலம்'. பெண்ணுக்கு பலம் எது?
ஆண், தன்னை எதிர்ப்பவர்களை தன் உடல் பலத்தால் எதிர்க்கிறான். 

பெண், தன்னை எதிர்ப்பவர்களை, தன் பொறுமையால், தியாகத்தால், அன்பால் எதிர்க்கிறாள். 
எதிர்க்க வேண்டும்.




பெண்ணுக்கு பொறுமையும், தியாகமும், அன்புமே பலம்.
பொறுமை இல்லாத பெண், குலத்தை நாசம் செய்கிறாள்.
தியாக குணம் இல்லாத பெண், பிரச்சனையை வளர்க்கிறாள்.
அன்பு இல்லாத பெண், வெறுப்பை வளர்க்கிறாள்.

சீதாதேவி, 10 மாதம் ராவணனால் சிறைபிடிக்கப்பட்டு, ராமபிரான் ராவணனை கொன்ற பின்,
வானரர்கள், ராக்ஷஸர்கள் முன்னிலையில் 'அக்னியில் இறங்கி' தன் கற்பை நிரூபித்தாள்.
இருந்தாலும்,
'சீதாதேவி, 10 மாதம் ராவணனால் சிறைபிடிக்கப்பட்டாள்' என்ற காரணத்தை காட்டி, சீதையை பற்றி அவதூறு பேச ஆரம்பித்து விட்டார்கள் அயோத்தி மக்கள்.

'ராமர் மோகத்தால் இப்படி சீதையை ஏற்று கொண்டு விட்டாரே!!!!'
என்று ராமரை பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து விட்டனர்.

அயோத்தி அரசரான ராமபிரான், பெரும் சங்கடத்தில் ஆழ்ந்தார்.
"இப்படி ஒவ்வொருவருக்காகவும் சீதையை அக்னி பிரவேசம் செய்ய வைக்க முடியுமா? இது நியாயமா?.. 
இப்படி மக்கள் சீதையை இப்படி பேச ஆரம்பித்து விட்டார்களே!!
இவர்கள் சந்தேகத்தை போக்க வழியே இல்லையே!!" 
என்றும் கவலைப்பட்டார்.




அரசனுக்கு "மனைவி மக்கள் மட்டும்" குடும்பம் அல்ல.
அரசனுக்கு, "மக்கள் அனைவருமே" தன் குடும்பம் தான்.
அனைவருக்கும் சம்மதமாக வாழவேண்டியது தலைவனின் கடமை.

சீதாதேவி, அரசனாக இருக்கும் ராமபிரானின் நிலைமையை உணர்ந்து கொண்டாள்.
சீதாதேவி, அயோத்தியாவின் அரசர் ராமபிரானை பார்த்து சொல்கிறாள்,
"அயோத்தி மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நீக்க, உங்களை பற்றி அவதூறு பேசுவதும் நிற்க, நான் உங்களை விட்டு விலகுவதே வழி. 

ஆண் தன்னை எதிர்ப்பவர்களை, உடல் பலத்தால் அடக்குகிறான். 

உடல் ரீதியாக வெல்லமுடிந்தாலும், ஆண்களால் எதிரியை திருத்த முடியாமல் போகிறது.

பெண்ணுக்கு பலம் பொறுமையும், தியாகமும், அன்புமே.

சந்தேகப்படும் என் மக்களிடம் கோபத்தை காட்டுவதை விட, என் பொறுமையையே காட்ட விரும்புகிறேன். நான் உங்களை விட்டு விலகி சென்று, என் தியாகத்தால், மக்களின் சந்தேகத்தை நீக்கி, அவர்கள் அன்பை பெறுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். 
மேலும் உங்களை என் காரணமாக பழித்து பேசுவதும் நிற்கும்"
என்று சொல்கிறாள்.
ஸ்ரீ ராமரின் குணங்களை பார்த்தே, "இவர் பரமாத்மா" என்று உணர்ந்தார் ஹனுமான் என்று பார்க்கிறோம்.

ராமபிரானின் குணங்களுக்கு ஈடு கொடுக்கிறாள் சீதாதேவி.
பெண்ணுக்கு 'சகிப்பு தன்மையே, த்யாகமே, அன்பே பலம்' என்று சீதாதேவியே நமக்கு காட்டுகிறாள்.

சீதையின் பெருமையை கொண்டாடுபவர்கள் "ராமா" என்று சொல்வதை விட "சீதாராம்" என்று சீதையை சேர்த்து சொல்லி ஆனந்தப்படுகிறார்கள்.

ஜெய் சீதாராம். 

1 comment:

Premkumar M said...

ஆணுக்கு உடல் வலிமையே 'பலம்'.
பெண்ணுக்கு பலம் எது?

தெரிந்து கொள்வோம்...

https://www.proudhindudharma.com/2020/04/Power-of-woman.html