Followers

Search Here...

Friday 24 April 2020

நிர்வாகம் செய்ய, குடும்பம் நடத்த முக்கியமான தகுதி எது? தெரிந்து கொள்ளவேண்டும்...

சகிப்பு தன்மை
குடும்பத்துக்காக சம்பாதித்து, குடும்பத்துக்காகவே உழைத்தாலும்,
குடும்பத்தில் உள்ளவர்களே சில சமயம் அவமானப்படுத்தவும் செய்வார்கள். திட்டுவார்கள்.




"குடும்பத்துக்கே இவன் தான் ஆதாரம்"
என்று தெரிந்தும் அவமானம் செய்யத்தான் செய்வார்கள். குறை கண்டுபிடிப்பார்கள்.
இது இயற்கை என்று உணர வேண்டும்.
பலரை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவனுக்கும் இதே நிலை தான்.
கீழே வேலை பார்ப்பவர்களே திட்டுவார்கள், கேலி செய்வார்கள்...

இப்படி கேலி செய்பவர்களை, திட்டுபவர்களை கண்டு கோபப்பட்டால், சமயத்தில் கவிழ்த்தும் விடுவார்கள்.
வியாபாரத்தை முடக்கி விடுவார்கள்.
கோபம் கூடவே கூடாது..
பொறுப்பில் இருப்பவர்கள் பொறுமையை இழக்கவே கூடாது.

'சகிப்பு தன்மை'யால் மட்டுமே, தனக்கு ஏற்படும் அவமானங்களை கண்டுகொள்ளாமல் சமாளிக்க வேண்டும்.

இவர்கள் செய்யும் கேலிகளை, திட்டுதல்களை பொறுமையுடன் ஆலோசனை செய்து பார்க்க வேண்டும்.

நியாயம் இல்லாத கேலிகளை, திட்டுதலை, ஆலோசனைகளை சிரித்து கொண்டே விலக்க வேண்டும்.
கோபம் அடையாமல் சகித்து, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.
சகிப்பு தன்மை இல்லாதவன்,  குடும்ப நிர்வாகம் செய்யவும் லாயக்கு இல்லை.

சகிப்பு தன்மை இல்லாதவன்,
நிர்வாகம் செய்யவும் லாயக்கு இல்லை.

சகிப்பு தன்மை இல்லாதவன்,
எந்த பொறுப்பை ஏற்கவும் லாயக்கு இல்லை.

No comments: