Followers

Search Here...

Friday 3 April 2020

யோகி, போகி, ரோகி... ப்ராம்மணர்கள் எத்தனை வேளை சாப்பிட வேண்டும்?

யோகி, போகி, ரோகி... தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய உண்மைகள்.. (முக்கியமாக ப்ராம்மணர்கள்)
மூன்று வேளை சாப்பிடுபவன் "ரோகி",
இரண்டு வேளை சாப்பிடுபவன் "போகி",
ஒரு வேளை சாப்பிடுபவன் "யோகி".

கலியில் வேதம் முழுவதும் கற்க ஒருவனால் முடியாது என்று உணர்ந்து, ஒன்றாக இருந்த 'வேதத்தை நான்காக பிரித்து கொடுத்தார்' வேத வியாசர்.




அன்றைய காலங்களில் மூன்று வேளைக்கு மேல் சாப்பிடுபவர்கள் மனிதர்கள் என்றே கருதுவது இல்லையோ என்னவோ தெரியவில்லை. மூன்று வேளைக்கு மேல் சாப்பிடுபவர்களை பற்றி நம் ரிஷிகள் சொல்லவில்லை அல்லது சொல்ல பிரியப்படவில்லை என்றே தெரிகிறது.

ப்ராம்மணர்கள் எத்தனை வேளை சாப்பிட வேண்டும்? என்ற குறிப்பு சந்தியா வந்தனத்தில் இருக்கிறது.

என்ன சொல்கிறது இந்த மந்திரம்? 
இதன் அர்த்தம் என்ன?
"தண்ணீர் (ஜலதேவதை), தனக்கு உறைவிடமாகிய 'பூமியை' புனிதமாக்கட்டும்.

தண்ணீரால் புனிதமாக்கப்பட்ட பூமி, 'என்னை' புனிதமாக்கட்டும்.

தண்ணீரால் புனிதமாக்கப்பட்ட பூமி, வேதத்தை கற்ற 'வேதியனை' புனிதமாக்கட்டும்.

என்றும் புனிதமாயுள்ள வேதம், 'என்னை' புனிதமாக்கட்டும்.

பிறர் உண்ட பிறகு பெறப்பட்ட உணவோ,
புசிக்கத் தகாததுமான உணவோ,
துர்நடத்தை உள்ளவர்களிடம் இருந்து ஏற்றுக் கொண்ட உணவோ,
அவை எல்லாவற்றினின்றும் 'என்னை' ஜலதேவதை புனிதமாக்கட்டும் என்று பிரார்த்தித்து, புனிதமான என்னைப் பரமாத்ம ஜோதியில் ஹோமம் செய்கின்றேன்."

இப்படி சாப்பாட்டை பற்றி ஒரு இடத்தில் மட்டும் தான் வருகிறது.

இப்படி ஒரு மந்திரம் மதிய வேளையில் சந்தியாவந்தனம் செய்யும் போது வருகிறது..

"மாத்யானிக சந்தியா வந்தனம் செய்து விட்டு, சாப்பிட உட்கார்" என்று சொல்லும் பழக்கம் சந்தியா வந்தனம் செய்யும் பிராம்மண குடும்பத்தில் இன்றும் இருப்பதை காணலாம்.

சாப்பாட்டை பற்றி இது போன்ற மந்திரம், காலையில், மாலையில் செய்யும் சந்தியா வந்தனத்தில்  இல்லை.

"பிராம்மணன் ஒரு வேளை சாப்பிட்டு யோகியாக வாழ்வான்"
என்று தான் ரிஷிகள் ஆசைப்பட்டு, இப்படி ஒரு முறையை அமைத்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அர்த்தங்கள் புரிந்து கொள்ளும் போது, சந்தியா வந்தனம் "நம்மை ரோகியாக வாழாதே!" என்று எச்சரிப்பது புரியும்.




ஒரு வேளை சாப்பாட்டை குறைத்து கொண்டால்,
நம் உடலுக்கு ஆரோக்யம் கூடுவது மட்டுமல்ல, 130 கோடி மக்கள் கொண்ட பாரத நாட்டுக்கே நாம் பெரும் உபகாரம் செய்கிறோம் என்று தோன்றும்.

மந்திரம்:
ஆப: புனந்து ப்ருதிவீம் ப்ருதிவீ பூதா புனாது மாம் !
புனந்து ப்ரஹ்மணஸ்பதிர் ப்ரஹ்ம பூதா  புனாது மாம் !
யதுச்சிஷ்ட மபோஜ்யம் யத்வா துச் சரிதம் மம !
ஸர்வம் புனந்து மாமாபோ அஸதாஞ்ச ப்ரதிக்ரஹ ஸ்வாஹா !!

Morning சந்தியாவந்தனம் with meaning
https://youtu.be/aHW0UEmZwKo

Afternoon சந்தியாவந்தனம் with meaning
https://youtu.be/q3gr3oWadqs

Evening சந்தியாவந்தனம் with meaning
https://youtu.be/dZbJ8KWZl0w

No comments: