Followers

Search Here...

Showing posts with label கௌதம. Show all posts
Showing posts with label கௌதம. Show all posts

Sunday 17 May 2020

கௌதம ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... கௌதம கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே!! நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

கௌதம ரிஷி கோத்திரம்

"உலகில் உள்ள அழகையெல்லாம் திரட்டி, ஒரு பெண்ணை ஸ்ருஷ்டி செய்து, வேதம் படித்த ப்ராம்மணனுக்கு மணம் செய்து கொடுக்க வேண்டும்"
என்று ஆசைப்பட்டார் பிரம்ம தேவன்.
அதற்காக தன் மனதால் அஹல்யாவை ஸ்ருஷ்டி செய்தார்.

நேபாளத்தில் (Nepal) மிதிலாபுரியை ஆண்டு கொண்டிருந்த ஜனக மஹாராஜனுக்கு குருவாக இருந்தார் "கௌதமர்".

தனக்கென்று மிதலாபுரியின் சமீபத்தில் ஒரு ஆஸ்ரமம் அமைத்து வசித்தார்.

1. கௌதமர்
2. கஸ்யபர்
3. அத்ரி
4. ஜமதக்னி
5. பரத்வாஜர்
6. வசிஷ்டர்
7. விஸ்வாமித்திரர்
இந்த 7 ரிஷிகளும் சப்த ரிஷிகள்.

இவர்கள் பிரம்ம ஆயுசு முழுக்க இருப்பவர்கள்.
தேவர்களுக்கும் மேல் இருப்பவர்கள்.




நக்ஷத்திர ரூபமாக இவர்கள் துருவ மண்டலத்தை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.

பெண்கள் ஒதுங்கி இருக்க வேண்டிய காலங்களில் தேவ(கோவில், பூஜை), பித்ரு (திவசம்) போன்ற காரியங்களில் ஈடுபட கூடாது... தானே சமைக்க கூடாது. இதனால் மஹா பாபங்கள் ஏற்படும்.

இதனால் ஏற்படும் பாபங்களின்  நிவிர்த்திக்காக ஒரு சூத்திரம் (formula) அருளினார் கௌதம ரிஷி. 
கௌதம சூத்திரம் சொன்னபடி ரிஷி பஞ்சமி என்ற விரதத்தை பெண்கள் செய்வது கடமையும் கூட.
பிரம்ம தேவன் தன் மானஸ புத்ரியான அகலிகையை கௌதம ரிஷிக்கு மணம் செய்து கொடுத்தார்.

இவர்களுக்கு சதானந்தர், சிரகாரீ என்ற இரண்டு புதல்வர்கள்.
இந்த சதானந்தர் தான் "ஜனக மஹாராஜனின் குடும்பத்துக்கு ராஜ புரோஹிதராக" இருந்தார்.

இந்திரன் பூமியில் அழகுக்கெல்லாம் அழகுடைய அகலிகையை, கௌதம ரிஷியின் ரூபத்தை எடுத்துக்கொண்டு ஏமாற்றி கெடுத்து விட்டான்.
கௌதம ரிஷி இதை அறிந்து, இந்திரனை சபித்து, தெரியாமல் தவறு செய்து விட்ட அகலிகையையும் "கல்லாக போ" என்று சபித்து விட்டார்.

அந்த சமயத்தில் ராமபிரான் அவதரித்து விட்டார் என்று அறிந்து இருந்ததால், "எப்பொழுது ராமர் பாத துளி உன் மீது படுமோ அப்பொழுது விமோசனம்" என்று வரமும் கொடுத்து கிளம்பி விட்டார்.

இந்திரன், தேவன் தானே!! ஏன் இப்படி செய்தார்?
1000 அஸ்வமேத யாகம் செய்தால், அதற்கு பலன் இந்திர பதவி. 
இது யாருக்கும் பொது நீதி.
மஹா புண்ணியங்கள் செய்யும் போது, யார் வேண்டுமானாலும் இந்திரன் ஆகலாம் என்கிற போது, தவறுகள் ஏற்படும்.

பரமாத்மா நாராயணன் கண்ணபிரானாக அவதரித்த போதும், மனித குழந்தை என்று நினைத்து த்ரேதா யுகத்தில் இருந்த இந்திர தேவன் விருந்தாவனத்தை அழிக்க நினைத்து பிரளய கால மழையை வரவழைத்தான்.
இந்திரனின் கர்வத்தை அடக்க, பரமாத்மாவாகிய கண்ணன், 7 வயது சிறுவனாக இருந்த போதும், தன் சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தூக்கி ஊர் மக்களை காப்பாற்றினார்.

மேலும், தேவர்கள் சில சமயம் இப்படி சில காரியங்களை செய்து பெருமாளின் பெருமையை காட்ட இப்படி செய்வார்கள்.

கண்ணபிரான் தன்னை விட பலசாலி என்று காட்ட இந்திரன் இப்படி செய்தார்.
அதே போல, ராமபிரானின் சரணத்தில் பதிதர்கள் (மஹாபாபம்) விழுந்தால் கூட பாவனம் (புண்ணிய ஆத்மாவாக) ஆகி விடுவார்கள் என்று காட்ட, இந்திரன் செய்த காரியம் இது.

"இந்திரன் இப்படி கெடுக்காது போனால், ராமபிரானின் பெருமை உலகுக்கு எப்படி தெரியும்?" என்று ஸ்ரீமத்வாச்சாரியார் கேட்கிறார்.