Followers

Search Here...

Sunday 5 May 2024

பெண்களிடம் பொய் சொல்வதால் பாபம் ஏற்படாது.. வ்யாஸ மஹாபாரதம்

அசுரகுல குருவான சுக்ராச்சாரியாரின் பெண்ணான தேவயானியை மணந்து கொண்டிருந்த யயாதியிடம் "எக்காரணம் கொண்டும் சர்மிஷ்டையிடம் சேராதே" என்று சொல்லி இருந்தார்.

தேவயானியோடு சர்மிஷ்டையும் அவளின் 1000 கன்னிகைகளும் யயாதியோடு வந்து தங்கினார். அங்கு ஒரு மாளிகையில் வசித்தனர்.

சில காலத்திற்கு பிறகு, தேவயானி ஒரு ஆண் பிள்ளையை பெற்றாள்.


அசுரனான வ்ருஷபர்வனின் பெண் சர்மிஷ்டை, தனக்கும் ஒரு பிள்ளை வேண்டும் என்று யயாதியிடம் கேட்டாள்


சுக்ராச்சாரியார் சொன்னதை யயாதி சொல்ல, சர்மிஷ்டை இவ்வாறு சொன்னாள்,

"சிரிப்பதற்காகவோ, பெண்களிடமோ, திருமணம் செய்வதற்கோ, உயிருக்கு ஆபத்து ஏற்படும் சமயத்திலோ, அனைத்து சொத்தும் பறிக்கப்படும் சமயத்திலோ, பொய் பேசலாம் என்று சொல்லி இருக்கின்றனர், இந்த 5 பொய்கள் பாபங்கள் ஆகாது" என்று சொன்னாள்.

न नर्मयुक्तम् अनृतं हिनस्ति

न स्त्रीषु राजन् न विवाहकाले।

प्राणात्यये सर्वधनापहारे

पञ्चानृतान्याहुरपातकानि।। 

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்) 

சாட்சிக்கு நீதிமன்றம் சென்றவன், பொய் சொன்னான் என்றால், அவனை "பதிதன்" என்று சொல்கின்றனர்.

पृष्टं तु साक्ष्ये प्रवदन्तमन्यथा

वदन्ति मिथ्या पतितं नरेन्द्र।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்) 

ஒரு தேசத்தை காக்க, ஒரு ஊரை இழக்கலாம்.. தன்னை காக்க, தன் நிலத்தை இழக்கலாம்.. வ்யாஸ மஹாபாரதம்

வ்ருஷபர்வன் என்ற அசுரன், தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதியின் மகன் "கசன்", தங்களின் குருவான சுக்ராச்சாரியாரிடம் குருகுல வாசம் செய்கிறான் என்று தெரிந்து, கொலை செய்தனர்.

சுக்ராச்சாரியார் சஞ்சீவினி கொண்டு உயிர் கொடுத்து காப்பாற்றினார்.

வ்ருஷபர்வாவின் மகள் ஷர்மிஷ்டா ஒரு சமயம் தவறுதலாக சுக்ராச்சாரியாரின் பெண்ணான தேவயானியின் ஆடையை எடுத்து உடுத்தி கொண்டாள். 

இதனை கவனித்த தேவயானி மரியாதை தெரியாதவளே என்று சொல்ல, பிராம்மணனான நீங்கள் பிச்சை எடுத்து வாழ்ந்து, தன் அசுர குல அரசனிடம் கை கட்டி துதி பாடுபவர்கள் தானே என்று திட்டினாள்.


இதனால், இனி இவர்களோடு இருக்க மாட்டேன் என்று தேவயானி தன் தந்தையிடம் சொன்னாள்.

தானும் தன் மகளோடு செல்வதாக சுக்ராச்சாரியார், விருஷபர்வனிடம் சொல்ல, தங்களை விட்டு செல்ல கூடாது. 

அசுர குரு சென்று விட்டால், தாங்கள் அனைவரும் அக்னியில் விழுவோம் என்று மன்னிப்பு கேட்டான்.


தன் பெண்ணை சமாதானம் செய்யுங்கள் என்று சொல்ல, 

தேவயானி, "வ்ருஷபர்வனின் பெண் சர்மிஷ்டா அவளோடு 1000 கன்னிகைகளோடு எனக்கு வேலைக்காரியாக இருக்க வேண்டும். என்னை என் தந்தை எங்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அங்கு அவளும் என் பின்னே வர வேண்டும்" என்று சொன்னாள்.

दासीं कन्या सहस्रेण शर्मिष्ठामभिकामये।

अनु मां तत्र गच्छेत्सा यत्र दद्याच्च मे पिता।।


அதற்கு சம்மதம் தெரிவித்து, தன் மகளை தேவயாணியோடு அனுப்ப சம்மதித்தான் வ்ருஷபர்வன்.

அப்பொழுது, 

त्यजेत् एकं कुलस्यार्थे ग्रामार्थे च कुलं त्यजेत् ।

ग्रामं जनपदस्यार्थे आत्मार्थे पृथिवीं त्यजेत् ।।

ஒரு குலத்தை காக்க வேண்டிய நிலை வந்தால், அந்த குலத்தில் ஒருவனை இழக்கலாம். 

ஒரு கிராமத்தை காக்க வேண்டிய நிலை வந்தால், அந்த கிராமத்தில் உள்ள ஒரு குலத்தை இழக்கலாம்.

ஒரு தேசத்தை காக்க வேண்டிய நிலை வந்தால், அந்த தேசத்தில் உள்ள ஒரு கிராமத்தை இழக்கலாம்.

தன்னை காக்க வேண்டிய நிலை வந்தால், தான் வைத்திருக்கும் நிலத்தை இழக்கலாம்.

என்று சொன்னான்.


சர்மிஷ்டை, "தன் தவறுக்காக சுக்ராச்சாரியார் போக வேண்டாம். தேவயானியும் போக வேண்டாம்" என்று சொல்லி, அவளுக்கு வேலைக்காரியாக இருக்க சம்மதித்தாள்.

பாம்பு தன் சட்டையை கழற்றி எறிவது போல கோபத்தை கழற்றி ஏறிய வேண்டும். கோபத்தை பற்றி சுக்ராச்சாரியார் சொல்கிறார். வ்யாஸ மஹாபாரதம்

வ்ருஷபர்வா என்பவன் அசுரர்களில் ஒருவன். அவனுக்கு "சர்மிஷ்டா" என்ற பெண் உண்டு.

ப்ராம்மணரான அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியாருக்கு "தேவயானி" என்ற பெண் உண்டு.

இந்த பெண்கள் இருவரும் ஒரு சமயம் நதியில் குளிக்க சென்றார்கள். குளித்த பிறகு, ஆடைகள் கலந்து இருந்ததால், தேவயானி உடையை எடுத்து உடுத்தி கொண்டு விட்டாள் சர்மிஷ்டை.


தேவயானி "ஏ அசுரர் குல பெண்ணே! உங்கள் குல குருவான சுக்ராச்சாரியாரின் பெண்ணான என் ஆடையை எப்படி அணியலாம்?" என்று கேட்டாள்.

இதனால் கோபப்பட்ட அவள், 

"ஏ பிராம்மண பெண்ணே! உன் தந்தை தான் என் தகப்பன் முன் உட்காரும் போதும், படுக்கும் போதும் அடங்கி ஒடுங்கி குனிந்து நின்று எப்பொழுதும் என் தந்தையை துதித்து கொண்டு இருக்கிறார். நீ பிச்சை எடுத்து கொண்டு பிறரை துதி பாடி வாங்கி செல்பவருடைய பெண். நான் துதிக்கப்படுபவரும், கொடுப்பவருமான, தானம் வாங்காதவருமான அசுர குல பெண். ஏ பிச்சைக்காரி! ஆயுதம் இல்லாத நீ, ஆயுதம் உள்ள என்னிடம் பேசுகிறாய். நீ எனக்கு விரோதமாக பேசியதால், நான் இனி உன்னை மதிக்க மாட்டேன்" என்றாள்.

கோபத்தோடு, தேவயானியை பாழுங்கிணற்றில் தள்ளி விட்டு, சாகட்டும் என்று அசுர குணத்தோடு சென்று விட்டாள்.


பிறகு, யயாதி என்ற அரசன், வனத்தில் வேட்டைக்கு சென்று இருந்த போது, அவளை காப்பாற்றி அனுப்பி வைத்தான்.


தன் தந்தையான சுக்ராச்சாரியாரிடம் சென்று தான் அவமானப்படுத்த பட்டதை சொல்லி அழுதாள் தேவயானி. கோபப்பட்டாள்.


அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், அசுரர்களை இறந்த பிறகும் உயிர்ப்பிக்கும் சஞ்சீவினியை வைத்து இருந்தார். 

தன் மந்திர பலம் அசுரர்களை விட உயர்நதது என்று சொல்லி சமாதானம் செய்தார்.

பலம் இருந்தாலும், பொறுமை காப்பது அவசியம் என்று சமாதானம் செய்தார்.


தேவயானியை பார்த்து, 

"எந்த மனிதன் பிறர் கடுமையான சொற்களால் திட்டினாலும், அதிகமாக பொறுமையை கடைபிடிக்கிறானோ! அவன் நினைத்தால் உலகத்தையே வெற்றி கொள்ள முடியும்.

यः परेषां नरो नित्यमतिवादांस्तितिक्षते।

देवयानि विजानीहि तेन सर्वमिदं जितम्।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)

தனக்குள் உண்டாகும் கோபத்தை எவன் குதிரையை அடக்குவது போல அடக்குகிறானோ! அவன் தான் சாரதி என்று அழைக்கப்படுகிறான்.

यः समुत्पतितं क्रोधं निगृह्णाति इयं यथा।

स यन्तेत्युच्यते सद्भिर्न यो रश्मिषु लम्बते।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


தேவயானி! தனக்கு ஏற்படும் கோபத்தை விலக்கி கொண்டு அடக்க தெரிந்தவன் எவனோ! அவனால் உலகத்தையே ஜெயிக்க முடியும் என்று அறிந்து கொள்.

यः समुत्पतितं क्रोधमक्रोधेन निरस्यति।

देवयानि विजानीहि तेन सर्वमिदं जितम्।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


பாம்பு தன் சட்டையை கழற்றி எறிவது போல, எவன் தன் கோபத்தை கழற்றி எறிகிறானோ, அவனே "ஆண்" என்று அறிந்து கொள்.

यः समुत्पतितं क्रोधं क्षमयेह निरस्यति।

यथोरगस्त्वचं जीर्णां स वै पुरुष उच्यते।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


எவன் கோபத்தை அடக்கி கொள்கிறானோ! எவன் பிறர் திட்டுவதை பொறுத்து கொள்கிறானோ, எவன் பிறரால் துன்புறுத்தப்பட்டும் வருத்தம் கொள்ளாமல் இருக்கிறானோ, அவன் தான், தான் நினைத்த காரியத்தை செய்து முடிக்கத்தக்கவன்.

यः संधारयते मन्युं योऽतिवादांस्तितिक्षते।

यश्च तप्तो न तपति दृढं सोऽर्थस्य भाजनम्।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


100 வருடங்களும் ஒவ்வொரு மாதமும் சோம்பல் இன்றி யாகம் செய்யும் ஒருவன் ஒரு பக்கம், 

எதற்கும் கோபம் அடையாதவன் மற்றொரு பக்கம்.

இவர்கள் இருவரில், கோபமே அடையாதவன் தான் மேலானவன்.

यो यजेदपरिश्रान्तो मासिमासि शतं समाः।

न क्रुद्ध्येद्यश्च सर्वस्य तयोरक्रोधनोऽधिकः।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


கோபமில்லாதவனே அனைவரையும் விட சிறந்தவன். ஆசையும் (காமமும்), கோபமும் கீழ்த்தரமான குணங்கள்.

तस्मादक्रोधनः श्रेष्ठः कामक्रोधौ विगर्हितौ।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


கோபமுள்ளவன் தானம் செய்தாலும், யாகம் செய்தாலும், தவம் செய்தாலும் பயன் கிடைக்காது.

அன்புள்ளவளே ! யாரிடத்தில் கோபம் கிடையாதோ, அவன் செய்யும் யாகம், தவம், தானம் அனைத்தும் அதிகமாக பலன் தரும்.

கோபமுள்ளவனிடம் இவை எந்த பலனும் தராது.

இது நிச்சயம்.

क्रुद्धस्य निष्फलान्येव दानयज्ञतपांसि च।।

तस्मादक्रोधने यज्ञतपोदानफलं महत्।

भवेदसंशयं भद्रे नेतरस्मिन्कदाचन।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


எவன் கோபத்துக்கு வசமாகிறானோ, அவன் சந்நியாசி ஆவதற்கு தகுதி அற்றவன், அவன் ரிஷியும் ஆக மாட்டான், யாகம் செய்தவனும் ஆக மாட்டான், தர்ம பலன் எதையும் அடைய மாட்டான், அவனுக்கு இகமும் இல்லை, பரமும் இல்லை.

न यतिर्न तपस्वी च न यज्वा न च धर्मभाक्।

क्रोधस्य यो वशं गच्छेत्तस्य लोकद्वयं न च।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)

கோபம் கொள்பவனிடம் அவன் புத்திரன் கூட சேர்ந்து இருக்க மாட்டான். அவன் வேலைக்காரன், நண்பன், சகோதரன், மனைவி, அறம் என்ற தர்மம், சத்யம் என்ற உண்மை எதுவுமே கூட இருக்காது.

पुत्रो भृत्यः सुहृद्भ्राता भार्या धर्मश्च सत्यता।

तस्यैतान्यपयास्यन्ति क्रोधशीलस्य निश्चितम्।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)


சிறு குழந்தைகள் புத்தி இல்லாமல் கோபப்படுவார்கள். அவர்களை போல தானும் கோபப்பட வேண்டும் என்று அறிவுள்ளவன் முற்பட மாட்டான். சிறு குழந்தைகள் கோபத்தின் பலனையும், பொறுமையின் பலனையும் அறிய மாட்டார்கள்"

என்று சொல்லி, கோபத்தை விலக்க சொன்னார்.

यत्कुमाराः कुमार्यश्च वैरं कुर्युरचेतसः।

न तत्प्राज्ञोऽनुकुर्वीत न विदुस्ते बलाबलम्।।

- வ்யாஸ மஹாபாரதம் (ஆதி பர்வம்)

பிராம்மணன் குடிக்க கூடாது. பெண் எப்படிப்பட்ட ஆணை கண்டு காம வயப்படுகிறாள்? தெரிந்து கொள்வோம் வ்யாஸ மஹாபாரதம்

பெண் எப்படிப்பட்ட ஆணை கண்டு காம வயப்படுகிறாள்?

गायन्तं च एव शुल्कं च दातारं प्रियवादिनम्।

नार्यो नरं कामयन्ते रूपिणं स्रग्विणं तथा 

- ஆதி பர்வம் (வ்யாஸ மஹாபாரதம்)

ஆனந்தமாக பாடிக்கொண்டும், தேவையான பொருளை கொடுத்து கொண்டும், அன்போடு பேசி கொண்டும், நறுமணமிக்க திரவியங்கள் பூசி கொண்டும், அழகோடும் இருக்கும் ஆண், ஒரு பெண்ணிடம் பழகினால், அவள் அவனை கண்டு காம வயப்படுகிறாள், மனதை பறிகொடுக்கிறாள்


அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியாரின் பெண் "தேவயானி", தன்னிடம் பழகிய தேவர்களுக்கு குருவான ப்ருஹஸ்பதியின் மகனான "கசன்" என்பவனை கண்டு காமவசப்பட்டு விட்டாள்.


அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியார், சஞ்சீவனி என்ற ரகசிய ஆயுர்வேதத்தை வைத்து இருந்தார். இதனால், அசுரர்கள் போரில் இறந்தாலும், பிழைக்க செய்து கொண்டிருந்தார்.

தேவர்களுக்கு குருவான ப்ருஹஸ்பதிக்கு இந்த ரகசியம்  தெரியாததால், தன் பிள்ளை சுக்ராச்சாரியாரியாரிடம் அனுப்பி ப்ரம்மச்சர்யத்தில் இருந்து பணிவிடை செய்ய அனுப்பினார்.

மேலும், அவரின் பெண்ணான தேவயானியின் மனதில், இவனை கண்டு பிரியம் ஏற்படும் படி நடந்து கொள்ள சொன்னார்.


தேவயானியிடம் சமயம் கிடைக்கும் போதெல்லாம், அன்பாக பேசி கொண்டும், ஆடி பாடி கொண்டும், அவளுக்கு தேவையான பூ பழம் எல்லாம் வாங்கி கொடுத்து கொண்டும் 5 வருடங்கள் பழகினான்.

தேவயானி இவனிடம் பெரும் ஆசை கொண்டு இருந்தாள்.


ஒரு சமயம், கசன் மாடுகளை மேய்க்க சென்ற போது, ஆலமரத்தின் நிழல் அருகே மாடுகளோடு வந்த கசனை அசுரர்கள் கண்டனர். அசுரர்கள் இவனை வழி மறித்து, அடித்து கொன்று, துண்டு துண்டாக்கி நாய்க்கு (स्व) போட்டு விட்டனர்.

हत्वा शालावृकेभ्यश्च प्रायच्छँल्लवशः कृतम्।

ततो गावो निवृत्तास्ता अगोपाः स्वं निवेशनम्।।


தேவயானி இவன் திரும்பி வராததை கண்டு, தன் தகப்பனாரிடம் சென்று, "ஏதோ ஆபத்து ஏற்பட்டு விட்டது. கசன் அசுரர்களால் கொல்லப்பட்டு இருக்க வேண்டும். பிழைக்க வையுங்கள்" என்று அழுதாள்.

 

அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியார், சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க, அந்த நாய்களை கிழித்து கொண்டு கசன் உயிரோடு திரும்பி விட்டான்.

भित्त्वा भित्त्वा शरीराणि वृकाणां स विनिर्गतः।

आहूतः प्रादुरभवत्कचो हृष्टोऽथ विद्यया।।


இதே போல, மீண்டும் ஒரு சமயம், அசுரர்கள் இவனை பிடித்து, இவனை அரைத்து, சமுத்திர ஜலத்தில் கரைத்து விட்டனர்.

वनं ययौ कचो विप्रो ददृशु: दानवाश्च तम्।

पुनस्तं पेषयित्वा तु समुद्राम्भस्यमिश्रयन्।।


மீண்டும் தேவயானி அழுது பிழைக்க வைக்க வற்புறுத்தினாள்.

அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியார், சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க, மீண்டும் கசன் உயிரோடு திரும்பி விட்டான்.


தங்களுடைய குரு இவனை மீண்டும் மீண்டும் பிழைக்க வைக்கிறார் என்று கோபம் கொண்ட அசுரர்கள், மீண்டும் ஒரு சமயம், மூன்றாவது முறையாக கசன் மாட்டி கொண்ட போது, அவனை கொன்று, கொளுத்தி, மாவாக பொடித்து, மதுவில் சேர்த்து அந்த ப்ராம்மணரான சுக்ராச்சாரியாருக்கே கொடுத்து விட்டனர், அவரும் குடித்து விட்டார்.

ततस्तृतीयं हत्वा तं दग्ध्वा कृत्वा च चूर्णशः।

प्रायच्छन्ब्राह्मणायैव सुरायामसुरास्तथा।।


மீண்டும் தேவயானி அழுது பிழைக்க வைக்க வற்புறுத்தினாள்.

அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியார், சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க, அவர் வயிற்றில் தான் கசன் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டார்.


தேவயானியிடம் "தான் வேண்டுமா? கசன் வேண்டுமா" என்று கேட்டார்.

किं ते प्रियं करवाण्यद्य वत्से

वधेन मे जीवितं स्यात् कचस्य।


தேவயானி அழுது கொண்டே, "கசன் இல்லாமல் எனக்கு உலகில் சுகம் இல்லை. நீங்கள் இல்லாமல் நான் வாழவும் முடியாது" என்றாள்.

कचस्य नाशे मम शर्म नास्ति

तवोपघाते जीवितुं नास्मि शक्ता।।


பிராம்மணன் மட்டுமே சஞ்சீவினி மந்திரத்தை கற்று அதில் ஸித்தி அடைய முடியும். உள்ளே இருக்கும் கசன் கூட பிராம்மணன் தான்.

ஆதலால், கசனிடம் "சஞ்சீவினி மந்திரத்தை கற்று கொடுத்து, பிறகு அவனை உயிர்ப்பிக்க' முடிவு செய்தார். 

குழந்தாய்! நீ என்னால் பிழைக்கப்பெற்று, நீ என் சரீரத்திலிருந்து வெளி வர போவதால், நீ எனக்கு புத்ரனாகிறாய். நீ என் புத்ரனாகி என்னை பிழைக்கவும் செய்.  

पुत्रो भूत्वा भावय भावितो मां 

अस्मद् देहाद् उपनिष्क्रम्य तात।


அவன் ஒழுக்கமானவன் என்பதால், வெளியே வந்த பிறகு, தன்னை பிழைக்க செய்யுமாறும் கேட்டு கொண்டார்.


குருவிடம் வித்தையை கற்று கொண்ட கசன், அந்த மந்திரத்தை ஜபித்து கொண்டே, அவருடையாய் குக்ஷியை (வயிற்றை) கிழித்து கொண்டு வெளி வந்தான்.

गुरोः सकाशात्समवाप्य विद्यां

भित्त्वा कुक्षिं निर्विचक्राम विप्रः।


விழுந்து கிடந்த சுக்ராச்சாரியாரை தான் ஜபம் செய்து உயிர்ப்பிக்க செய்தான். 

உடனே கசன், அசுரர்களுக்கு குருவான சுக்ராச்சாரியாரின் காலில் விழுந்து, "கல்வி தாகம் உள்ளவனுக்கு எந்த ஆசிரியர் காதுகளில் கல்வியை போதிக்கிறாரோ, அவர் அவனுக்கு தகப்பனாகவும், தாயாகவும் ஆகிறார். அவர் செய்த இந்த பெரிய உபகாரத்துக்கு, பதிலாக அந்த ஆசிரியருக்கு எந்த தீங்கும் நினைக்க மாட்டான். அப்படிப்பட்ட கல்வி அறிவை தந்த ஆசிரியரை எவன் பூஜிக்காமல் இருக்கிறானோ, அவன் புகழ் அழியும், அவன் பாப லோகங்களையே அடைவான்

என்று சொன்னான்.

यः श्रोत्रयो: अमृतं सन्निषिञ्चेद् विद्याम् अविद्यस्य यथा त्वमार्यः।

तं मन्येऽहं पितरं मातरं च तस्मै न द्रुह्येत्कृतमस्य जानन्।।

ऋतस्य दातारम् अनुत्तमस्य निधिं निधीनामपि लब्धविद्याः।

ये नाद्रियन्ते गुरुम् अर्चनीयं पापाँल्लोकांस्ते व्रजन्त्यप्रतिष्ठाः।।

இப்படி அழகாக பேசிய கசனை கண்ட அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், தான் மது குடித்ததாலும், அதனோடு பிரியமான கசனையும் தாம் குடித்ததையும் நினைத்து, அதனால் ஏமாற்றப்பட்டதையும் அறிந்து பெரும் கோபம் கொண்டார். 

அந்த கோபத்திலும், ப்ராம்மணர்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்று எண்ணி, இவ்வாறு சொன்னார்.


"இன்று முதல் எந்த பிராம்மணன் அறிவு கெட்டு மது பானம் செய்வானோ, அவன் புத்தி கெடும். அதனால் தர்மத்தை விடுவான். ப்ரம்மஹத்தி செய்த பாபத்தை மது அருந்தியதால் இவன் பெற்று வாழும் லோகத்திலும், பர லோகத்திலும் இகழப்படுவான்.

என்னால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த பிராம்மண தர்மத்தை தங்கள் குருவிடம் பாடம் பயின்ற அனைத்து சாதுக்களான ப்ராம்மணர்களும், தேவர்களும் மற்றும் எல்லா மக்களும் கேட்க கடவீர்" என்றார்.

यो ब्राह्मणो अद्यप्रभृति इह कश्चित्  मोहात् सुरां पास्यति मन्द-बुद्धिः।

अपेतधर्मा ब्र्हमहा च एव स स्या- स्याद् अस्मिं लोके गर्हितः स्यात्परे च।।

मया चैतां विप्र धर्मोक्ति सीमां मर्यादां वै स्थापितां सर्वलोके।

सन्तो विप्राः शुश्रुवांसो गुरूणां देवा लोकाश्चोपशृण्वन्तु सर्वे।।


பிறகு, விதியினால் மதி இழந்த அசுரர்களையும் அழைத்து, இவ்வாறு சொன்னார்.

"அசுரர்களே! நீங்கள் முட்டாள்களாக இருக்கிறீர்களே! நீங்கள் செய்த செயலால், கசன் தான் நினைத்த காரியத்தில் வெற்றி பெற்று விட்டான். 

பிரம்மாவுக்கு நிகராக, இனி இவனும் எனக்கு சமமாக அமர போகிறான்.

தேவர்களுக்காக, யாரும் செய்ய துணியாத செயலை செய்து சாதித்து விட்டான்.

இவனுடைய புகழ் அழியாததாகி விட்டது.

இவன் இனி யஞ பாகத்துக்கும் உரியவனாகி விட்டான்."

என்றார்.

आचक्षे वो दानवा बालिशाः स्थ सिद्धः कचो वत्स्यति मत्सकाशे।

सञ्जीविनीं प्राप्य विद्यां महात्मा तुल्यप्रभावो ब्राह्मणो ब्रह्मभूतः।।

योऽकार्षीद्दुष्करं कर्म देवानां कारणात्कचः। 

न तत्किर्तिर्जरां गच्छेद्याज्ञीयश्च भविष्यति।।

பதில் பேசமுடியாமல் திகைத்து நின்ற தானவர்கள் (அசுரர்கள்), திரும்பி சென்றனர்.

एतावदुक्त्वा वचनं विरराम स भार्गवः।

दानवा विस्मयाविष्टाः प्रययुः स्वं निवेशनम्।।


அதன் பிறகு, கசன், அசுர குருவான சுக்ராச்சாரியாரிடம் 1000 வருடங்கள் தொடர்ந்து பணிவிடை செய்து, பிறகு தன் தேவ லோகத்துக்கு புறப்பட தயார் ஆனான்.

गुरोरुष्य सकाशे तु दश वर्षशतानि सः।

अनुज्ञातः कचो गन्तुमियेष त्रिदशालयम्।।


கசன் கிளம்புவதை கண்ட தேவயானி, "அங்கிரஸ ரிஷியின் பேரனே ! நீங்கள் ஒழுக்கத்தாலும், உங்களின் குலத்தாலும், உங்களின் கல்வியினாலும், உங்களின் தவத்தினாலும், புலன்களை அடக்கி இருந்ததாலும் நீங்கள் சோபிக்கிறீர்கள். எப்படி என் தந்தையான சுக்ராச்சாரியாருக்கு உங்கள் பாட்டனார் அங்கிரஸர் மரியாதைக்கு பாத்திரமானவரோ, அது போல உங்கள் தந்தையான ப்ருஹஸ்பதி எனக்கு மரியாதைக்கு பாத்திரமானவர். பூஜிக்கத்தக்கவர். நான் சொல்வதை கேளுங்கள். நீங்கள் பிரம்மச்சர்ய விரதத்தில் இருந்த போது, நான் எப்படி கட்டுப்பாடுடன் நடந்து கொண்டேனோ, அது போல, வித்யை கற்ற பிறகு, நீங்கள் அன்புள்ள என்னிடம் பிரியம் வைக்க தகுதி பெறுகிறீர்கள். வேத மந்திரங்கள் சொல்லி, சாஸ்த்திரப்படி என்னை பாணிக்கிரஹணம் செய்து கொள்ளுங்கள்" என்று கேட்டாள்.

ऋषे: अङ्गिरसः पौत्र वृत्तेनाभिजनेन च।

भ्राजसे विद्यया चैव तपसा च दमेन च।।

ऋषिर्यथाङ्गिरा मान्यः पितुर्मम महायशाः।

तथा प्रान्यश्च पूज्यश्च मम भूयो बृहस्पतिः।।

एवं ज्ञात्वा विजानीहि यद्ब्रवीमि तपोधन।

व्रतस्थे नियमोपेते यथा वर्ताम्यहं त्वयि।।

स समावृतविद्यो मां भक्तां भजितुमर्हसि।

गृहाण पाणिं विधिवन्मम मन्त्रपुरस्कृतम्।।


"குற்றமில்லாதவளே! உன்னுடைய தந்தையை நான் எப்படி பூஜிக்கிறேனோ, அந்த அளவுக்கு உன்னை பூஜிக்கிறேன். நீ உண்மையில் அதை விட பூஜிக்க தகுதியானவள். 

நீ உன் தந்தையான சுக்ராச்சாரியாருக்கு உயிரை விட ப்ரியமானவள். குரு புத்ரியே! நீ தர்மப்படி பூஜிக்க தகுந்தவள். 

தேவயானி! என் குருவும், உன் தகப்பனாருமான சுக்ராச்சாரியார் எப்படி என்னால் பூஜிக்க தகுதி உள்ளவரோ! அது போல நீயும் பூஜிக்க தகுந்தவள். ஆதலால் நீ இவ்வாறு கேட்க கூடாது" என்றான் கசன்.

पूज्यो मान्यश्च भगवान्यथा तव पिता मम।

तथा त्वमनवद्याङ्गि पूजनीयतरा मम।।

प्राणेभ्योऽपि प्रियतरा भार्गवस्य महात्मनः।

त्वं भत्रे धर्मतः पूज्या गुरुपुत्री सदा मम।।

यथा मम गुरुर्नित्यं मान्यः शुक्रः पिता तव।

देवयानि तथैव त्वं नैवं मां वक्तुमर्हसि।।


தேவயானி கசனை பார்த்து, "நீங்கள் அங்கிரஸரின் பிள்ளையும் தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதிக்கு தான் பிள்ளை. என் தந்தைக்கு பிள்ளை இல்லை நீங்கள். நீங்கள் எனக்கு பூஜிக்கதக்கவராகவும், கௌரவிக்க தக்கவராகவும் இருக்கிறீர்கள். கசனே! நீங்கள் பலமுறை அசுரர்களால் கொல்லப்பட்ட போதும், ஆரம்பம் முதலே நான் உங்கள் மீது வைத்து இருந்த அன்பை நினைத்து பார்க்க வேண்டும். அன்பினாலும் ஆசையினாலும் நான் உங்களிடம் காட்டிய அன்பை நீங்கள் அறிவீர்கள். உங்களிடம் பற்று உள்ள என்னை, குற்றம் செய்யாத என்னை நீங்கள் கை விட கூடாது" என்றாள்  

गुरुपुत्रस्य पुत्रो वै न त्वं पुत्रश्च मे पितुः।

तस्मात्पूज्यश्च मान्यश्च ममापि त्वं द्विजोत्तम।।

असुरैर्हन्यमाने च कच त्वयि पुनःपुनः।

तदाप्रभृति या प्रीतिस्तां त्वमद्य स्मरस्व मे।।

सौहार्दे चानुरागे च वेत्थ मे भक्तिमुत्तमाम्।

न मामर्हसि धर्मज्ञ त्यक्तुं भक्तामनागसम्।।


"தேவயானி! செய்ய கூடாத காரியத்தில் என்னை நீ ஏவ கூடாது! நீ என் விஷயத்தில் கருணை செய். எனக்கு நீ குருவுக்கும் மேலான குரு. சந்திரனை போன்ற முகமுள்ளவளே! இனியவளே! கோபமுள்ளவளே! நீ எந்த சுக்ராச்சாரியார் வயிற்றில் வசித்தாயோ, நானும் அதே வயிற்றில் தான் வசித்தேன்! தர்மப்படி நீ எனக்கு சகோதரி ஆனாய். ஆதலால் நீ இவ்வாறு சொல்லாதே! குருகுலத்தில் சுகமாக வசித்தேன். எனக்கு கோபமில்லை. உன்னிடம் நான் விடைபெற்று கொள்கிறேன்! செல்கிறேன்! எனக்கு மங்களம் உண்டாக நீ பிரார்த்தனை செய். தர்மத்துக்கு விரோதமின்றி நான் இருந்தேன். சோம்பல் இல்லாமல் என் குருவான சுக்ராச்சாரியாருக்கு எப்பொழும் பணிவிடை செய்து கொண்டிரு" என்று சொன்னான் கசன். 

अनियोज्ये नियोक्तुं मां देवयानि न चार्हसि।

प्रसीद सुभ्रु त्वं मह्यं गुरोर्गुरुतरा शुभे।।

यत्रोषितं विशालाक्षि त्वया चन्द्रनिभानने।

तत्राहमुषितो भद्रे कुक्षौ काव्यस्य भामिनि।।

भगिनी धर्मतो मे त्वं मैवं वोचः सुमध्यमे।

सुखमस्म्युषितो भद्रे न मन्युर्विद्यते मम।।

आपृच्छे त्वां गमिष्यामि शिवमाशंस मे पथि।

अविरोधेन धर्मस्य स्मर्तव्योऽस्मि कथान्तरे।

अप्रमत्तोत्थिता नित्यमाराधय गुरुं मम।।

 

"அறம் என்ற தர்மத்தை மீறாத காமம் தவறல்ல. அந்த காமத்தை உன்னிடம் கேட்ட என்னை நீ விட்டு விடுவாயானால், நீ கற்ற சஞ்சீவினி வித்யை உனக்கு பலன் கொடுக்காமல் போகட்டும்" என்று கடிந்து பேசினாள்.

यदि मां धर्मकामार्थे प्रत्याख्यास्यसि याचितः।

ततः कच न ते विद्या सिद्धिमेषा गमिष्यति।।  


"நீ என்னுடைய குருவின் பெண் என்பதால் ஒன்றும் செய்யாமல் விடுகிறேன். உன் குற்றத்தினால் அல்ல. குருவும் எனக்கு உன்னை சபிக்க அனுமதி கொடுக்கவில்லை. நீ விரும்பினால், இன்னும் ஆசைதீர சபித்து கொள். ரிஷிகள் சொன்ன தர்மத்தை நான் சொன்னேன். நான் சாபத்திற்கு தகுதி அற்றவன் என்றாலும், உன்னுடைய காமத்தால் சபிக்கப்பட்டேன். உன்னுடைய காமம் நிறைவேறாது. நீ பிராம்மண பெண்ணாக பிறந்தும், உன்னை எந்த ரிஷி புத்திரனும் மணம் செய்து கொள்ள மாட்டான். 

நீ என்னை பார்த்து "உன் வித்யை பலிக்காது" என்று சொன்னாய். 

அப்படியே இருக்கட்டும்.

நான் இந்த வித்யையை யாருக்கு சொல்லி தருகிறேனோ அவர்களுக்கு பலத்தால் போதும்."

என்று சொல்லிவிட்டு, அந்த பிராம்மண ஸ்ரேஷ்டனான் கசன் உடனே விரைவாக சொர்க்க லோகம் நோக்கி கிளம்பினான்.

गुरुपुत्रीति कृत्वाऽहं प्रत्याचक्षे न दोषतः।

गुरुणा चाननुज्ञातः काममेवं शपस्व माम्।।

आर्षं धर्मं ब्रुवाणोऽहं देवयानि यथा त्वया।

शप्तो ह्यनर्हः शापस्य कामतोऽद्य न धर्मतः।।

तस्माद्भवत्या यः कामो न तथा स भविष्यति।

ऋषिपुत्रो न ते कश्चिज्जातु पाणिं ग्रहीष्यति।।

फलिष्यति न ते विद्या यत्त्वं मामात्थ तत्तथा।

अध्यापयिष्यामि तु यं तस्य विद्या फलिष्यति।।


அவன் வந்ததை கண்ட இந்திரன் முதலான தேவர்கள், ப்ருஹஸ்பதியை முதலில் கௌரவித்து, பிறகு அவர் மகனான கசனை பார்த்து "எங்களுக்கு பயன் கிடைப்பதற்காக, ஆச்சர்யமான காரியத்தை நீ செய்ததால், உன் புகழ் என்றுமே அழியாது. நீ யஞ பாகத்திற்கு உரியவன் ஆனாய்" என்று வாழ்த்தினர்.

Friday 12 April 2024

யமன், ஏன் விதுரனாக பிறந்தார்? மஹாபாரத சரித்திரம் அறிவோம்

யமன், ஏன் விதுரனாக பிறந்தார்?

वैशंपायन उवाच। வைசம்பாயனர் ஜனமேஜெயனுக்கு மஹாபாரத சரித்திரத்தை சொன்னார்..


பழமையான ஒரு காலத்தில், வேதத்தின் அர்த்தம் அறிந்த, பெரும் புகழுடைய மகிமையுள்ள ஒரு ப்ரம்ம ரிஷி, திருடாமல் இருந்த போது,  திருடி விட்டார் என்று நினைத்து, அரசன் கழு மரத்தில் ஏற்றி விட்டான்.

वैदार्थविच्च भगवान् ऋषि: विप्रो महायशाः।

शूले प्रोतः पुराणर्षि: अचोर: चोर शङ्कया।।

ஆணீமாண்டவர் என்ற அறியப்பட்ட அந்த ரிஷி, யம லோகம் சென்று, தர்ம தேவனான யமதர்மனை பார்த்து இவ்வாறு சொன்னார்.

अणीमाण्डव्य इत्येवं विख्यातः स महायशाः।

स धर्ममाहूय पुरा महर्षि: इदमुक्तवान्।।


"தர்மனே! நான் சிறுவனாக இருந்த போது, ஒரு பறவையை இரும்பினால் குத்தி இருக்கிறேன். அந்த பாபம் தான் என் நினைவில் இருக்கிறது. வேறு பாபம் செய்யவில்லை. அந்த பாபத்தை நான் இதுவரை செய்த 1000 மடங்காக அளவற்று நான் செய்த தபசு எப்படி போக்காமல் இருந்தது? உயிர் கொலை பாபம் என்றால், பிராம்மணனை கொன்ற மஹாபாபம் உனக்கும் உண்டு. அந்த பாபத்தினால் நீ சூத்திரனின் யோனியில் பிறப்பாய்" என்று சபித்தார்.

इषीकया मया बाल्याद्विद्धा ह्येका शकुन्तिका।

तत्किल्बिषं स्मरे धर्म न अन्यत् पापम् अहं स्मरे।।

तन्मे सहस्रममितं कस्मान्नेहाजयत्तपः।

गरीयान् ब्राह्मणवधः सर्वभूतवधाद्यतः।।

तस्मात्त्वं किल्बिषाद् तस्मात् छूद्र योनौ जनिष्यसि।

இந்த சாபத்தின் காரணமாக, தர்ம தேவன், வித்வானாக, தர்மம் அறிந்தவனாக சூத்திர யோனியில் விதுரனாக பிறந்தார்.

तेन शापेन धर्मोऽपि शूद्रयोनावजायत।।

विद्वान् विदुर रूपेण धार्मिकः किल्बिषात् ततः।

- aadi parva (vyasa mahabharata)

Friday 23 February 2024

திருப்பதி செல்லும் போது என்ன பிரார்த்தனை செய்து கொண்டுபயணிக்க வேண்டும்? ஜாம்பவதி சொன்ன பிரார்த்தனையை நாமும் சொல்வோம்.

திருப்பதி ஶ்ரீனிவாசனை வழிபட்டதன் பயனாக, அடுத்த ஜென்மத்தில் ஜாம்பவதியாக பிறந்து, ஶ்ரீ கிருஷ்ணரை மணந்தாள்.

அவளுடைய முன் ஜென்மத்தில், 

பகவான் விராட் ரூபத்தில் 14 லோகங்களாகவும் இருக்கிறார். அவரே திருமலையில் ஸ்ரீனிவாசனாக இருக்கிறார். அந்த ஶ்ரீனிவாசனை "எப்பொழுது தரிசிப்பேன்? எப்பொழுது தரிசிப்பேன்?" என்ற தாபத்தோடு பிரார்த்தனை செய்து கொண்டே சேஷாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.


ஜாம்பவதி முன் ஜென்மத்தில், திருமலையில் ஏறும் போது, செய்த பிரார்த்தனை.

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य वक्षः श्रीवत्स रत्नै: भूषितं विस्तृतं च ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य तुन्दं वलित्रयेणाङ्कितं सुंदरं च ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य कण्ठं महर्लोकस्य आश्रयं कंबु तुल्यम् ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य नाभिं सदा अन्तरिक्षस्य आश्रयं वै सुपूर्णम् ॥

कदा द्रक्ष्ये वदनं वै मुरारे: जन-लोकस्य आश्रयं सर्वदैव ॥

शिरः कदा श्रीनिवासस्य द्रक्ष्ये सत्यस्य लोकस्य आश्रयं सर्वदैव ।

कटिं कदा श्रीनिवासस्य द्रक्ष्ये भूर्लोकस्य आश्रयं सर्वदैव ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य च ऊरु तलातलस्य आश्रयं सर्वदैव ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जानु सुकोमलं सुतलस्य आश्रयं च ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जङ्घे रसातलस्य आश्रयेः सर्वदैव ।

कदा द्रक्ष्ये पादतलं हरेश्च पाताल-लोकस्य आश्रयं सर्वदैव ॥

- गरुडपुराणम् - ब्रह्मकाण्डः (मोक्षकाण्डः)


கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய வக்ஷ:? ஶ்ரீவத்ஸ  ரத்னை: பூஷிதம் விஸ்த்ருதம் ச !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய துந்தம்? வலித்ரயேன அங்கிதம் சுந்தரம் ச !!

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய கண்டம்? மஹர் லோகஸ்ய ஆஸ்ரயம் கம்பு துல்யம் !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய நாபிம்? ஸதா அந்தரிக்ஷஸ்ய ஆஸ்ரயம் வை சுபூர்ணம் !

கதா த்ரக்ஷே வதனம் வை முராரை:? ஜன லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

ஸிர: கதா ஶ்ரீநிவாஸஸ்ய த்ரக்ஷே? சத்யஸ்ய லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

கடிம் கதா ஶ்ரீநிவாஸஸ்ய த்ரக்ஷே? பூலோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ச ஊரு? தலாதலஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ஜானு ஸு கோமளம்? சுதலஸ்ய ஆஸ்ரயம் ச !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ஜங்கே? ரஸாதலஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

கதா த்ரக்ஷே பாத தலம் ஹரே: ச? பாதாள லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

"ஸ்ரீவத்ஸம் என்ற அடையாளம் கொண்ட ஶ்ரீநிவாசனின் திருமார்பை எப்பொழுது  தரிசிப்பேன்? 

மூன்று மடிப்புகள் கொண்ட ஶ்ரீநிவாசனின் திவ்யமான திரு வயிற்றை எப்பொழுது தரிசிப்பேன்?

மகர லோகத்தில் இருப்பவர்கள் வழிபடும் ஶ்ரீநிவாசனின் சங்கம் போன்ற கழுத்தை எப்பொழுது நான் தரிசிப்பேன்? 

அனைத்து அந்தரிக்ஷமும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீநிவாசனின் திரு நாபியை எப்போது தரிசிப்பேன்?

ஜன லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் முராரியின் திரு முக மண்டலத்தை எப்பொழுது நான் காண்பேன்? 

ஸத்ய லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் சிரஸை எப்பொழுது தரிசிப்பேன்?

பூ லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் இடையை எப்பொழுது தரிசிப்பேன்?

தலாதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் தொடையை எப்பொழுது தரிசிப்பேன்?

சுதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் கோமளமான முழங்காலை எப்பொழுது தரிசிப்பேன்?

ரஸாதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் 

இரு கால்களை எப்பொழுது தரிசிப்பேன்?

பாதாள லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் 

திரு பாதங்களை எப்பொழுது தரிசிப்பேன்?

என்று ஸ்ரீனிவாசனின் தரிசனம் கிடைக்க வேண்டுமே என்ற தவிப்போடு தீர்த்த யாத்திரை செய்தாள்.

Sunday 21 January 2024

மஹாபாரதம் (கேள்வி 2) - நான்கு யுகங்களில் உள்ள மனிதர்களை பற்றி பீமனுக்கு சொன்னது யார்? என்ன சொன்னார்?

நான்கு யுகங்களை பற்றி பீமனுக்கு யார் சொன்னார்?

பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்து கொண்டிருந்தார்கள்.

காற்றில் ஒரு சமயம் சௌகந்திக மலர் ஒன்று திரௌபதி அருகில் வந்து விழுந்தது.

அது போல மேலும் பல மலர்கள் வேண்டும் என்று பீமனிடம் கேட்டாள்.

பீமன் அந்த மலரை தேடி கொண்டு கிளம்பினான். போகும் வழியில், ஹனுமானை கண்டான்.

ஹனுமானிடம் இலங்கையை தாண்டுவதற்காக பெரிய ரூபத்தை எடுத்து கொண்ட காட்சியை தனக்கு காட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தான்.


एवमुक्तः स तेजस्वी प्रहस्य हरिरब्रवीत् - Aranya kAndam (Vyasa Mahabharata)

இதை கேட்டு ஹனுமான் புன்முறுவல் செய்தார்.


न तच्छक्यं त्वया द्रष्टुं रूपं नान्येन केनचित्।
कालावस्था तदा ह्यन्या वर्तते सा न सांप्रतम्।
ततोऽद्य दुष्करं द्रष्टुं मम रूपं नरोत्तम ।।

अन्यः कृतयुगे कालश्रेतायां द्वापरे परः।
अयं प्रध्वंसनः कालो नाद्य तद्रूपमस्ति मे ।।

பீமனை பார்த்து, "அந்த உருவம் உன்னாலும் மற்றவர்களாலும் இப்போது பார்க்க இயலாது. க்ருத யுக காலம் வேறு. த்ரேதா யுக காலம் வேறு. துவாபர யுக காலம் வேறு.

அடுத்த அடுத்த காலங்களில் சக்திகள் குறைகிறது.

அந்த ரூபத்தில் நானும் இப்போது இல்லை.


भूमिर्नद्यो नगाः शैलाः सिद्धा देवा महर्षयः।
कालं समनुवर्तन्ते यथा भावा युगेयुगे ।। 

कालंकालं समासाद्य नराणां नरपुङ्गव।
बलवर्ष्मप्रभावा हि प्रहीयन्त्युद्भवन्ति च ।।

तदलं बत तद्रूपं द्रष्टुं कुरुकुलोद्वह।
युगं समनुवर्तामि कालो हि दुरतिक्रमः ।।

யுகங்கள் அதனதன் சக்திக்கு ஏற்று நடப்பது போல, இந்த பூமியும், நதிகளும், மரங்களும், மலைகளும், சித்தர்களும், தேவர்களும், ரிஷிகளும் காலத்தை ஏற்று அனுசரித்து நடக்கிறார்கள்.

மனிதர்களுடைய தேக பலமும் யுகம் செல்ல செல்ல குறைகிறது. முந்திய யுகங்களில் தேக பலம் அதிகமாக இருக்கிறது.

காலத்தை அனுசரித்து நான் இருப்பதால், நீயும் அந்த ரூபத்தை பார்க்க ஆசைப்பட வேண்டாம். காலத்தை மீறி நாம் இருக்க கூடாதல்லவா?"

என்றார் ஹனுமான்.


युगसङ्ख्यां समाचक्ष्व आचारं च युगेयुगे।
धर्मकामार्थभावांश्च कर्मवीर्ये भवाभवौ ।।

"யுகங்களின் கால அளவை அந்த யுகங்களில் இருந்த ஆசாரங்களை, அறம் பொருள் இன்பம் போன்றவைகளின் உண்மையான அர்த்தத்தை, பாவம் புண்ணியம் பற்றியும், ஆற்றலையும், பிறப்பையும், இறப்பையும் பற்றி எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும்"

என்று கேட்டான் பீமன். 


कृतं नाम युगं श्रेष्ठं यत्रधर्मः सनातनः।
कृतमेव न कर्तव्यं तस्मिन्काले युगोत्तमे ।। 

न तत्र धर्माः सीदन्ति क्षीयन्ते न च वै प्रजाः।
ततः कृतयुगं नाम कालेन गुणतां गतम् ।।

ஹனுமான், பீமனை பார்த்து,

"க்ருத யுகத்தில் தர்மம் (அறம்) நிலையாக இருந்தது. அந்த யுகத்தில் நல்ல தர்மங்களே (அறமே) செய்யப்பட்டது. அதர்மமாக (அறமில்லாமல்) காரியங்கள் செய்யப்படவில்லை. அந்த யுகத்தில் தர்மம் (அறம்) வாடவே இல்லை. மக்களும் குறையாமல் இருந்தனர். இதனாலேயே இந்த யுகம் க்ருத யுகம் என்று அழைக்கப்பட்டது.


देव दानव गन्धर्व यक्ष राक्षस पन्नगाः।
नासन्कृतयुगे तात तदा न क्रयविक्रयः ।।
न सामऋग्यजुर्वर्णाः क्रिया नासीच्च मानवी।
अभिध्याय फलं तत्र धर्मः संन्यास एव च ।।
न तस्मिन्युगसंसर्गे व्याधयो नेन्द्रियक्षयः।
नासूया नापि रुदितं न दर्पो नापि वैकृतम् ।। 

க்ருத யுக சமயத்தில், தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், ராக்ஷஸர்களும், பன்னகர்களும் இந்த பூமியில் இருக்கவில்லை. 

அந்த யுகத்தில், வாங்குவது-விற்பது என்ற காரியங்கள் இல்லை.

ருக், யஜு ஸாம என்று தனித்து இல்லாத காலம் அது.. மனிதர்களுக்கு உழைக்க அவசியமும் இல்லை. 

அந்த யுகத்தில் நினைத்த மாத்திரத்தில் அனைத்தும் கிடைத்தது. 

அனைவருக்கும் ஸந்யாஸமே (மோக்ஷ எண்ணமே) இருந்தது.

அந்த யுகத்தில் நோய் யாருக்குமே இல்லை.

அந்த யுகத்தில் புலன்கள் தன் சக்தியை இழப்பதே இல்லை.

அந்த யுகத்தில் யாருமே மற்றவரின் நல்ல குணத்தை பார்த்து அஸூயை படாமல் இருந்தனர்.

அந்த யுகத்தில் யாரும் அழுவதில்லை. யாருக்கும் தன்னை பற்றி அகங்காரம் இல்லை. யாரும் கபடம் செய்வதில்லை. 


न विग्रहः कुतस्तन्द्री न द्वेषो न च पैशुनम्।
न भयं नापि संतापो न चेर्ष्या न च मत्सरः ।।

யாரும் சண்டை இடுவதும் இல்லை.

அந்த யுகத்தில் யாருக்கும் சோம்பல் கிடையாது. யாரிடமும் விரோதமும் கிடையாது. யாருமே மற்றவரை கோள் சொல்வதும் கிடையாது. 

எதை நினைத்தும் பயமும் கிடையாது. 

கிடைக்கவில்லையே என்ற தாபமும் யாருக்கும் கிடையாது. பொறாமையும் கிடையாது. 

யாருக்கும் மற்றவரை கண்டு எரிச்சலும் இல்லை. 


ततः परमकं ब्रह्म सा गतिर्योगिनां परा।
आत्मा च सर्वभूतानां शुक्लो नारायणस्तदा ।। 

அப்படிப்பட்ட க்ருத யுகத்தில், 

எவர் யோகிகளுக்கு கதியாக இருக்கிறாரோ, எவர் அனைத்து உயிருக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறாரோ, எவர் பரமானந்தத்துடனேயே இருக்கிறாரோ, அந்த பரம ஸ்வரூபியான நாராயணன், க்ருத யுகத்தில் "வெண்மையாக" இருந்தார்.


ब्राह्मणआः क्षत्रिया वैश्याः शूद्राश्च कृतलक्षणाः।
कृते युगे समभवन्स्वकर्मनिरताः प्रजाः ।।

समाश्रयं समाचारं समज्ञानं च केवलम्।
तदा हि समकर्माणो वर्णा धर्मानवाप्नुवन् ।।

க்ருத யுகத்தில் இருந்த க்ஷத்ரியர்கள் (army,police), பிராம்மணர்கள் (vedic scholars with 6 duties), வைசியர்கள் (employer), சூத்திரர்கள் (employee) அவர்களுடைய இயற்கையான குணத்தில் கலப்படம் இல்லாமல் இருந்தனர். தங்கள் கடமையை பற்றுடன் செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த க்ருத யுகத்தில் இருந்த நான்கு வர்ணத்து மக்களும், 

பிரம்மத்தை அடைவதையே நோக்கமாக கொண்டிருந்தனர்.

அந்த பிரம்மத்தை அடைவதற்காக ஒழுக்கத்தோடு எப்பொழுதுமே இருந்தார்கள்.

பிரம்மத்தை பற்றிய அறிவும் கொண்டிருந்த இவர்கள் அதற்கான காரியங்களே செய்து கொண்டிருந்தார்கள். பிரம்மத்தை அடையும் தகுதியோடு இருந்தார்கள்.


एकदेवसदायुक्ता एकमन्त्रविधिक्रियाः।
पृथग्धर्मास्त्वेकवेदा धर्ममेकमनुव्रताः ।। 

வர்ணத்தை (குணத்தை) பொறுத்து, வெவ்வேறு தர்மங்களோடு வாழ்ந்தாலும், பிரம்மத்தை மட்டுமே அனைவரும் தியானித்தார்.

அனைவரும் ஓம் என்ற ப்ரணவத்தையே ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஒன்றாக இருந்த வேதத்தையே ப்ரமாணமாக கொண்டு வாழ்ந்தார்கள். 

தர்மத்திலேயே அனைவரும் வாழ்ந்தார்கள்


चातुराश्रम्य युक्तेन कर्मणा कालयोगिना।
अकामफल संयोगात्प्राप्नुवन्ति परां गतिम् ।।

செய்யும் காரியத்தில் பலனை எதிர்பார்க்காமல், தன் காரியங்களை ஈடுபாட்டுடன் செய்து கொண்டே, 4 வரணத்து மக்களும் உத்தம கதியை அடைந்தார்கள்.


आत्मयोग समायुक्तो धर्मोऽयं कृतलक्षणः।
कृते युगे चतुष्पादश्चातुर्वर्ण्यस्य शाश्वतः ।।

ஆத்மாவை ப்ரம்மத்துடனேயே இணைத்து கொண்டு, 4 வரணத்து மக்களும் வாழ்ந்தார்கள். 

தவம் (மன அடக்கம்), சௌசம் (தூய்மையான நடத்தை), தயை (இரக்கம்), உண்மை (சத்யம்) என்ற நான்கு தர்மமும் இந்த மக்களால் காக்கப்பட்டது இந்த க்ருத யுகத்தில்.


कामः कामयमानेषु ब्राह्मणेषु तिरोहितः'।
एतत्कृतयुगं नाम त्रैगुण्यपरिवर्जितम् ।। 

மோக்ஷமே குறிக்கோள் என்று வாழ்ந்த இந்த மக்களால், அறம் பொருள் இன்பம் என்பதில் இன்பம் என்ற காமம் நசிந்து கிடந்தது.

ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று குணமும் இல்லாத யுகமாக க்ருத யுகம் இருந்தது.


त्रेतामपि निबोध त्वं यस्मन्सत्रं प्रवर्तते।
पादेन ह्रसते धर्मो रक्ततां याति चाच्युतः ।।

த்ரேதா யுகத்தை பற்றியும் சொல்கிறேன் கேள்…

த்ரேதா யுகத்தில், யாகங்கள் நிரம்ப செய்யப்பட்டது.

த்ரேதா யுகத்தில் தர்மத்தின் ஒரு கால் குறைந்தது.

இந்த த்ரேதா யுகத்தில் அச்சுதனான நாராயணன் "சிவப்பு" நிறத்தில் இருந்தார்.


सत्यप्रवृत्ताश्च नराः क्रिया धर्मपरायणाः।
ततो यज्ञाः प्रवर्तन्ते धर्माश्चविविधाः क्रियाः ।।

த்ரேதா யுகத்தில் அனைவரும் சத்தியத்தில் திட சித்தத்தோடு இருந்தார்கள்.

தர்ம காரியங்களில் ஈடுபட்டார்கள்.

பல வித யாகங்கள், பல வித தர்மங்கள், பல வித கிரியைகள் செய்தனர்.


त्रेतायां भावसंकल्पाः क्रियादानफलोपगाः।
प्रचलन्ति न वै धर्मात्तपोदानपरायणाः।

स्वधर्मस्थाः क्रियावन्तो नरास्त्रेतायुगेऽभवन् ।।

த்ரேதா யுகத்தில், கிரியை செய்தால் தான் பலன் கிடைக்கும்.

அதன் காரணத்தால், பல வித கொடைகள் செய்தார்கள்.

த்ரேதா யுகத்தில், தவம், தானம் இரண்டையும் கடைப்பிடித்தார்கள். இதனாலேயே எவரும் தர்மத்தில் இருந்து விலகாமல் இருந்தனர்.

த்ரேதா யுகத்தில் இருந்த மனிதர்கள் தங்கள் தர்மத்தில் இருந்து கொண்டு, தங்கள் காரியங்களை செய்து கொண்டு இருந்தார்கள்.


द्वापरे च युगे धर्मो द्विभागो नः प्रवर्तते।
विष्णुर्वै पीततां याति चतुर्धा वेद एव च ।।

த்வாபர யுகத்தில் தர்மத்தின் கால்களில் இரண்டு குறைந்தது.

த்வாபர யுகத்தில் விஷ்ணுவானவர் "பொன்" நிறத்தில் இருக்கிறார்.

த்வாபர யுகத்தில் வேதம் நான்காக பிரிந்தது.


ततोऽन्ये च चतुर्वेदास्त्रिवेदाश्च तथा परे।
द्विवेदाश्चैकवेदाश्चाप्यनृचश्च तथा परे ।। 

த்வாபர யுகத்தில் சிலர் சதுர் வேதிகளாகவும், சிலர் த்ரிவேதிகளாகவும், சிலர் ஒரு வேதம் அறிந்தவர்களாகவும், சிலர் வேதமே அறியாதவர்களாகவும் ஆனார்கள்.


एवं शास्त्रेषु भिननेषु बहुधा नीयते क्रिया।
तपोदानप्रवृत्ता च राजसी भवति प्रजा ।।

வேத சாஸ்திரமும் பிரிந்ததால் கிரியைகளும் பிரிந்தன. த்வாபர யுகத்தில் உள்ள மக்கள் ரஜோ குணத்தால் தவத்திலும் தானத்திலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டனர். 


एकवेदस्य चाज्ञानाद्वेदास्ते बहवः कृताः।
सत्यस्य चेह विभ्रंशात्सत्ये कश्चिदवस्थितः ।।
सत्यात्प्रच्यवमानानां व्याघयो बहवोऽभवन्।
कामाश्चोपद्रवाश्चैव तदा वै दैवकारिताः ।। 

ஒன்றாய் இருந்த வேதத்தை முழுவதும் அறிய முடியாததால் வேதம் பிரிக்கப்பட்டது.

த்வாபர யுகத்தில் மனிதனின் புத்தி சக்தி குறைந்ததால், சத்தியத்தில் யாரும் நிலையாக இருப்பதில்லை.

சத்தியத்தில் இருந்து நழுவியதால், பல வித நோய்களும், ஆசைகளும், தெய்வ தண்டனையால் கஷ்டங்களும், உண்டாகின்றன.


यैरर्द्यभानाः सुभृशं तपस्तप्यन्ति मानवाः।
कामकामाः स्वर्गकामा यज्ञांस्तन्वन्ति चापरे ।

एवं द्वापरमासाद्य प्रजाः क्षीयन्त्यधर्मतः।

சிலர், இந்த கஷ்டத்தை போக்கி கொள்ள தவம் செய்கின்றனர்.

சிலர், உலக விஷயங்கள் கிடைப்பதற்காக யாகங்கள் செய்கிறார்கள்.

சிலர் ஸ்வர்கத்தை விரும்பி யாகங்கள் செய்கிறார்கள்.

மனிதர்கள் துவாபர யுகத்தை அடைந்து அதர்மத்தால் இவ்வாறு குறைவடைகிறார்கள்.


पादेनैकेन कौन्तेय धर्मः कलियुगे स्थितः ।
तामसं युगमासाद्य कृष्णो भवति केशवः।
वेदाचाराः प्रशाम्यन्ति धर्मयज्ञक्रियास्तथा ।।
கலி யுகத்தில் தர்மம் ஒரே ஒரு காலில் நிற்கும்.
கலி யுகத்தில் தமோ குணமே மேலோங்கி இருக்கும். 
இந்த யுகத்தை அனுசரித்து கேசவன் கருமை நிறத்தில் இருக்கிறார்.
வேதங்கள் (அறிவு), ஆசாரங்கள் (ஒழுக்கம்) மட்டுமின்றி, தர்மமும் (அறமும்) யாகங்களும் (service) மற்ற கிரியைகளும் (work) குறைந்து காணாமல் போகும்.

ईतयो व्याधयस्तन्द्री दोषाः क्रोधादयस्तथा।
उपद्रवाः प्रवर्तन्ते आधयो व्याधयस्तथा ।
युगेष्वावर्तमानेषु धर्मो व्यावर्तते पुनः।
கலி யுகத்தில், பல வித உபாதைகள், வியாதிகள், கோபமும், சோம்பறித்தனமும் உண்டாகும்.
பெரும் தொந்தரவுகளும், மனோ வியாதியும் உண்டாகும்.
பெரும் பயம் உண்டாகும். கலி யுகம் செல்ல செல்ல, தர்மங்கள் (அறம்) குறைந்து விடும். 

धर्मे व्यावर्तमाने तु लोको व्यावर्तते पुनः ।
लोके क्षीणे क्षयं यानति भावा लोकप्रवर्तकाः।
युगक्षयकृता धर्माः प्रार्थनानि विकुर्वते ।। 
மனிதர்களிடம் தர்மம் (அறம்) குறைய குறைய, உலகம் க்ஷீணமாகும். 
உலகம் க்ஷீணமாக, உலகில் நடைபெற்ற தர்மங்கள், ஞானம் (அறிவு) குறைந்து போகும்.
கலியின் இறுதியில் செய்யப்படும் தர்மங்கள், விரும்பிய பலனை தராமல் எதிர்வினையாக பலன் தந்து விடும்.

एतत्कलियुगं नाम अचिराद्यत्प्रवर्तते।
युगानुवर्तनं त्वेतत्कुर्वन्ति चिरजीविनः ।।
கலி யுகம் என்பது வெகு சீக்கிரத்தில் வர போகிறது.
சிரஞ்சீவிகள் யுகத்தை அனுசரித்து இருக்கிறார்கள். 

यच्च ते मत्परिज्ञाने कौतूहलमरिंदम।
अनर्थकेषु को भावः पुरुषस्य विजानतः ।।
एतत्ते सर्वमाख्यातं यन्मां त्वं परिपृच्छसि।
युगसङ्ख्यां महाबाहो स्वस्ति प्राप्नुहि गम्यताम् ।।
பகைவர்களை அடக்குபவனே! என்னை (விஸ்வரூபத்தை) பற்றி நீ அறிய ஆவல் படுகிறாய். மனிதனுக்கு ப்ரயோஜனமில்லாத விஷயத்தில் என்ன பிடிவாதம்? 
யுகங்களின் வரலாற்றை பற்றி நீ கேட்டதால், நான் சொன்னேன். க்ஷேமமாக இரு. நீ போகலாம்" என்கிறார் ஹனுமான். 

மஹாபாரதம் (கேள்வி 1) - சௌகந்திக மலரை பீமன் பறிக்க சென்ற போது, பாண்டவர்களோடு அர்ஜுனன் இருந்தானா?

பாண்டவர்கள் வன வாசம் சென்றார்கள். 

ஒரு சமயம், திரௌபதி திவ்யமான நறுமணம் கொண்ட 1000 இதழ்கள் கொண்ட தாமரை மலரை கண்டாள். 

சௌகந்திக மலரை பறிக்க சென்றான் பீமன். 

அந்த சமயம் சகோதரர்களோடு அர்ஜுனன் இருந்தானா? 


பீமன் வரவில்லையே என்று தர்மபுத்திரர் திரௌபதி, நகுலன், சகாதேவனோடு, அங்கிருந்த ப்ராம்மணரைகளையும் கடோதகஜன் உதவியோடு அழைத்து கொண்டு, கந்தமாதன் என்ற மலையை அடைந்தார்கள்.

குபேரன் "பீமன் சௌகந்திக மலர்களை வேண்டுமளவுக்கு எடுத்து கொள்ளட்டும்" என்று அனுமதி கொடுத்த பிறகு, பீமன் மலர்களை பறித்து கொண்டான்.


ऊषुर्नातिचिरं कालं रममाणाः कुरूद्वहाः |

प्रतीक्षमाणआ बीभत्सुं गन्धमादनसानुषु || 

- ஆரண்ய காண்டம் (மஹாபாரதம்)

கந்தமாதன் என்ற அந்த மலை அடிவாரத்திலேயே சில காலம் பீபத்ஸு என்ற பெயர் கொண்ட அர்ஜுனனை எதிர்பார்த்து வசித்து வந்தார்கள்.


பதில்: சௌகந்திக மலரை பீமன் பறிக்க சென்ற போது, பாண்டவர்களோடு அர்ஜுனன் இல்லை

Saturday 20 January 2024

ஆபத்துக்கள் நீங்க.. இமம் மே வருண ஸ்ருதி என்ற மந்திரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோம்..

பெரிய ஆபத்துக்கள் நீங்க… சொல்ல வேண்டிய மந்திரம். எந்த அனுபவத்தில் சொல்ல வேண்டும்?

வேத மந்திரம்: 

இமம் மே வருண ஸ்ருதி....


ஶ்ரீ ஶ்ரீ அண்ணா (ஶ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள்) இந்த ஒரு வரிக்கு மட்டும் கொடுக்கும் ஆச்சர்யமான விளக்கம்…  (visit srisrianna.com to download discourses)

इमम् मे वरुण श्रुधि

Rigveda: Mandala 1 - Suktam 25 Mantra 19  

YajurVeda: Chapter 21 Mantra 1

இமம் மே வருண ஸ்ருதி.... என்ற வேத மந்திரம், பொதுவாக வருணனை குறித்து சொல்லப்படுகிறது. 

ஆனால், 

இதே மந்திரம், சந்தியா வந்தனத்தில், சூரியனை பார்த்து சொல்லும்படியாகவும் இருக்கிறது என்று பார்க்கிறோம்

"ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி) என்பது இந்த மந்திரத்துக்கு அர்த்தம்.


சூரியனை பார்த்து, "ஹே வருணா" என்று சந்தியாவனத்தில் அழைக்கிறோம்.

சூரியனும், வருணனும் வேறு வேறு தேவன் அல்லவா? இந்த சந்தேகம் பொதுவாக உண்டாவது சகஜம்.

பொதுவாக, எந்த வேத மந்திரத்தை எடுத்தாலும், அதில் 3 தெய்வங்கள் அடக்கம்...  ராம மந்திரம், திருவஷ்டாக்ஷர மந்திரத்துக்கும் இது பொருந்தும்.


1. "ராம நாமமே (சப்தமே) பகவான் தான்" என்று தியானிப்பது ஒரு முறை 

(ஹனுமான் ராம நாமத்தை ஜபம் செய்து கொண்டிருந்தார். ராம நாமத்திலிருந்தே, பகவான், ஶ்ரீ ராமபிரானாக அவதாரம் செய்தார்.

2. ராம ஜபம் செய்யும் போது, ராமபிரானை தியானிப்பது ஒரு முறை

3. ராம ஜபம் செய்யும் போது, பரமாத்மா நாராயணனை தியானிப்பது ஒரு முறை.

இவ்வாறு, ராம நாமம் என்ற தாரக மந்திரத்தை, மூன்று விதத்தில் ஜபிக்கலாம்.


இங்கு "வருணா" என்று சொல்லும் போது, 

1. வருணன் என்ற வேத மந்திரமே (ஒலியே) பரமாத்மா தான் என்று ஜபிப்பது ஒரு நிலை.

2. வருணன் என்று சொல்லும் போது, வருண தேவனை தனியாக தியானித்து ஜபிப்பது ஒரு நிலை.

3. வருணன்  என்று சொல்லும் போது, அந்த வருண தேவனும் விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனுக்குள் அடக்கம் என்று உணர்ந்து, நாராயணனை ஜபிப்பது ஒரு நிலை.

உண்மையான மெய் ஞானிகள் 3ம் நிலையில் இருந்து கொண்டு த்யானம் செய்கிறார்கள்.


பரவாசுதேவன் நாராயணனின் அறிவு "வேதம்" என்று சொல்லப்படுகிறது.

ப்ரம்ம தேவன் படைக்கப்பட்ட போது, வேதத்தை கொடுத்தார்.

வேதம் சொன்னபடி உலகங்கள் படைக்கப்பட்டன. சப்த ரிஷிகள் படைக்கப்பட்டனர். அவர்கள் மூலம் தேவர்கள், அசுரர்கள், பக்ஷிகள், மிருகங்கள், மனிதர்கள் படைக்கப்பட்டனர்.


இந்திரன் படைக்கப்படும் முன்பேயே வேதம் இருந்தது. வேதம் "இந்திராய ஸ்வாஹா" என்று சொல்கிறது 

தேவர்களை படைத்த ப்ரம்ம தேவன், "இந்திராய ஸ்வாஹா" என்று சொல்லும் போது, தன்னை படைத்த நாராயணனின் புஜமே இந்திரன் என்று த்யானம் செய்கிறார். 

தான் படைத்த தேவேந்திரனை ப்ரம்மா தியானிப்பது இல்லை. 

அந்த தேவேந்திரன் நாராயணனின் புஜமாக இருக்கிறான் என்றே த்யானம் செய்கிறார்.


ஞானிகள் வேதத்தில் சொல்லப்படும் தெய்வத்தின் பெயர்களை, விராட் ரூபமாக உள்ள நாராயணனின் அங்கங்களாகவே தியானிக்கிறார்கள்.


இங்கு "ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி), என்று சொல்லும் போது, இந்த வேத மந்திரமே பரமாத்மா தான் என்று நினைப்பது ஒரு முறை.

"ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி), என்று சொல்லும் போது, வருண தேவனை நினைத்து ஜபம் செய்வது ஒரு முறை. வருண தேவன் மூலம் நமக்கு புஷ்டியும், மழையும் (தண்ணீர்) கிடைக்கும்.


அதே சமயம் "ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி), என்று சொல்லும் போது, 

ஞானிகள், வருணன் என்ற பெயரில் கருணையை வர்ஷிக்கும் நாராயணனின் கண்களை த்யானிக்கிறார்கள்.


பகவான் எங்கேயோ வைகுண்டத்தில் இருக்கிறார். நாம் கூப்பிடுவது அவர் காதில் கேட்குமா?

கஜேந்திரன் என்ற யானை, "ஹே ஆதி மூலமே" என்று அழைத்தது. பகவான் நாராயணனுக்கு கேட்டதே! 

உடனே அபயம் கொடுத்து காப்பாற்றினாரே ! 

அது மட்டுமா!

பகவான், மனித வடிவம் எடுத்து ஶ்ரீ கிருஷ்ணனாக துவாரகையில் இருக்கிறார்

மனித உருவில் தான் இருக்கிறார் 

பல மைல் தூரத்தில் உள்ள ஹஸ்தினாபுர அரச சபையில், யாருமே காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கும் திரௌபதி, தன் மானத்தை இழக்கும் பேராபத்தில் இருந்த போது, மனித உருவத்தில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணன் தன்னை நிச்சயம் காப்பாற்றுவார் என்று திடமாக நம்பினாள்.

மனித உருவில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணர், துவாரகையிலிருந்து எப்படி உடனே வருவார்? என்று சந்தேகப்படவில்லை.

உடனே "ஹே கோவிந்தா" என்று அழைத்தாள்.

பல மைல் தூரம் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணருக்கு இவள் அழைப்பது கேட்டது.

மனித உருவில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணர், தேரை கிளப்பி கொண்டு அஸ்தினாபுரம் வரை சென்று திரௌபதியை காப்பாற்றலாம். ஆனால் அதற்கு இப்பொது அவகாசமில்லை.

அப்பொழுது துவாரகையில் ருக்மணியோடு சொக்கட்டான் ஆடி கொண்டிருந்தார். 

திரௌபதி காப்பாற்ற படவேண்டும் என்று சங்கல்பித்து "அக்ஷயம்" என்று சொக்கட்டானை உலுக்கி போட, துச்சாதனன் திரௌபதியின் புடவை பிடித்து இழுக்க, மலை மலையாக பல பல வண்ண வண்ண புடவைகள் திரௌபதி அணிந்திருந்த புடவை வழியே வெளி வர தொடங்கியது.

எதிரியான துச்சாதனன் களைத்து விட்டான்..  இன்னும் புடவைகள் திரௌபதியை காக்க காத்து இருந்தது.

திரௌபதியின் ஆபத்து விலகியது.


உள்ளும் புறமும் உண்மையாக பகவானை நினைத்து, தன்னை நிச்சயம் காப்பாற்றுவார் என்று நினைத்த கஜேந்திரன், திரௌபதி இருவரும், பகவானின் பெயரை, சந்தேகமில்லாமல், திடமான எண்ணத்தோடு சொல்லி  பயனை அடைந்தார்கள்.

அது போல, 

ஸாயங்கால சந்தியா வந்தனம் செய்யும் போது, கஜேந்திரன், திரௌபதி கொண்டிருந்த விசுவாசத்தை போல, "ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி) என்று அழைத்தால், நமக்கு நேர இருக்கும் பெரும் ஆபத்திலிருந்து பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுவார். 


இப்படி ஒரு அர்த்தம் கொண்ட சாயங்கால சந்தியா வந்தனத்தை தெரிந்து கொண்ட பிறகும், ஒருவன் செய்யாமல் இருக்க முடியுமா?