Followers

Search Here...

Tuesday 3 October 2017

பெருமாள் 'அபய ஹஸ்தம்' அர்த்தம் என்ன?


கோவிலுக்கு போகும் பக்தன்,
அர்ச்சகர் தனக்கு என்ன கொடுப்பார்?,
ஏன் மாலை தனக்கு கொடுக்கவில்லை?
அர்ச்சகர் பக்கத்தில் இருந்தவருக்கு என்ன கொடுத்தார்?
என்று யார் என்ன கொடுக்கிறார்கள் என்று பார்த்து,
யாரை காண வந்தோமோ அவரை பார்க்காமல் விட்டு விட கூடாது.

அவர் என்ன கொடுத்தார், இவர் என்ன கொடுத்தார் என்று எண்ணத்தை சிதற விட்டு, வந்த நோக்கத்தை விடக்கூடாது.


நமக்கு தேவையான ஒன்றை யாரும் தரமுடியாத ஒன்றை பெருமாள் வைத்துக்கொண்டு நமக்காக நிற்கிறார். நமக்காகவே நிற்கிறார்.
உலகத்தையும், உன்னையும் படைத்த பெருமாள், கையை கவனித்தால், அவர் நமக்கு என்ன தருகிறார் என்று தெரிந்து விடும்.

கோவிலுக்கு வந்து, அவர் முன் வீண் பேச்சு பேசி, யார் என்ன கொடுக்கிறார்? என்று பார்க்க கூடாது.
உலகில் பல வித துன்பங்கள், ஆபத்துகள், மரணத்துக்கு நடுவே நிற்கும் நமக்கு, பெருமாள் தன் கையை காட்டி 'அபயம்' என்று சொல்கிறார்.

அர்ச்சகர் தீர்த்தம் கொடுத்தாரா?
100 ரூபாய் கொடுத்தேனே ஒரு மாலை போட்டாரா?
என்று கேட்டு, நமக்கு தேவையான சொல்லான 'பயப்படாதே' என்ற அபயம் கொடுக்கும் பெருமாளை கவனிக்க மறந்து விடக்கூடாது.
பெருமாள் 'அபயம்' என்று சொன்ன பின், உலக பயம் என்பது நமக்கு ஏது?

குருவே துணை

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 

No comments: