Followers

Search Here...

Tuesday 3 October 2017

சயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் கைகளை காட்டி என்ன சொல்கிறார் ?


பெருமாள் ஒரு கையை தலை பக்கமும், தன் இன்னொரு நீண்ட கையை கால் பக்கமும் நீட்டி சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
இதை எல்லோரும் பார்த்து இருப்போம். இதன் உண்மை உணர்ந்தால், பெருமாள் யார் என்று தெரியும், பக்தியும் தானே வரும்.





நன்றாக கவனித்தால், பெருமாள் நம்மிடம், தன் தலையில் உள்ள பெரிய கிரீடத்தை காட்டி, 'வாழும் காலத்தில், யார் யாரையோ நம்பிக்கொண்டு, ஏமார்ந்து, கடைசியில் ஒருவரும் காக்க முடியாத மரணம் வந்து, இத்தனை நாள் யார் யாரையோ நம்பி வாழ்ந்தது வீண் என்று வெறுத்து, கிடைத்த மனித பிறவியை வீண் செய்யாமல், இந்த உலகத்தையும், உன்னையும் படைத்த மகாராஜன் நான் என்று பார்.
நான் காப்பாற்ற முடிவு செய்தவனை, உலகமே எதிர்த்து கவிழ்க்க நினைத்தாலும் முடியாது.
நான் உலகை படைத்த மகா ராஜா என்று தெரிந்தால் மட்டும் போதுமா, இதோ என் காலை இறுக பிடித்துக் கொள். சம்சார சாகரத்தில் இருந்தும் நான் உன்னை விடுவித்து, மோக்ஷம் தருகிறேன்.

குருவே துணை - ஜூலை 23, 2017

No comments: