Followers

Search Here...

Showing posts with label வியாபாரி கதை. Show all posts
Showing posts with label வியாபாரி கதை. Show all posts

Monday 4 May 2020

கர்ம வினை பலம் வாய்ந்ததா? மிட்டாய் வியாபாரி கதை.. படிப்போமே !

ஒரு மிட்டாய் வியாபாரி இருந்தான்.
நாள் முழுக்க அலைந்து, மிட்டாய் விற்பான்.
நல்லவன்.
அன்றன்று நடக்கும் வியாபாரத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தான்..
கஷ்டமான வாழ்க்கை. ஆனாலும் தைரியமாக நடத்தி வந்தான்.




தினமும் ஒரு சிவன் கோவில் வழியாக தான் செல்வான். 
சிவபெருமானை ஒரு நாள் கூட பக்தியுடன் பார்த்ததில்லை.
"இப்படி கஷ்டப்படுகிறேனே!!" என்று சிவபெருமானை திட்டுவானே தவிர, "சக்தியுள்ள சிவபெருமான் தன் துக்கத்தை போக்குவார்"
என்று நம்ப மாட்டான்.
தெய்வத்திடம் வெறுப்பை காட்டுவான்.

ஒரு சமயம், பார்வதிக்கு இவன் மேல் கருணை ஏற்பட்டது..
சிவபெருமானிடம் "இவனுக்கு கருணை செய்யுங்களேன்" என்று கேட்டுக்கொண்டாள்.
"என்னிடம் அவனுக்கு பக்தி இல்லையே! என் மீது வெறுப்பை உமிழ்கிறான்.
அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த பாப புண்ணிய கர்மாவுக்கு ஏற்ப இப்போது வாழ்க்கை அமைந்து உள்ளது..
இருந்தாலும் நீ ஆசைப்படுகிறாய் என்பதால், இவனுக்கு கருணை செய்கிறேன்"
என்றார் கருணா மூர்த்தியான சிவபெருமான்.

அவன் செல்லும் பாதையில் விலையுயர்ந்த வைர கல் பதித்த மாலை கிடக்கும் படி செய்தார்.

"தெய்வமாவது கொடுப்பதாவது... எதேச்சையாக எனக்கு கிடைத்தது.. என் அதிர்ஷ்டம்"
என்றே நினைத்து எடுத்துக்கொள்ளட்டும் என்றார் சிவபெருமான்.
பார்வதி சந்தோஷப்பட்டாள்.

அன்று வழக்கம் போல வியாபாரத்துக்கு கிளம்பினான் அந்த மிட்டாய் வியாபாரி.
அந்த வைர மாலை இருக்கும் இடத்துக்கு அருகில் வரும் போது, திடீரென்று ஒரு எண்ணம் ஏற்பட்டது...
"இப்படியே அலைகிறோமே!! வயதாகி கண் தெரியாமல் போய் விட்டால், கண் தெரியாமல் நடக்க முடியுமா?... இப்பொழுதே பழக்கி கொண்டு பார்ப்போமே!!"
என்று நினைத்து கொண்டான்.

உடனே கண்ணை மூடிக்கொண்டு நடக்க ஆரம்பிக்க, அந்த வைர மாலை இருக்கும் இடத்தை கடந்து விட்டான்.
கண் விழித்து பார்த்த அந்த வியாபாரி, மிகவும் சந்தோஷப்பட்டான்.
"ஆஹா.. கண் மூடிக்கொண்டே நடந்து விட்டோமே!!" என்ற திருப்தியுடன் சென்று விட்டான்.

இவனுக்கு பின்னால் வந்த மற்றொருவன், அவன் செய்த புண்ணியத்துக்கு பலனாக இந்த வைர மாலையை பார்த்தான். எடுத்து சென்று விட்டான்..

பார்வதி, சிவபெருமானிடம் "இப்படி செய்து விட்டானே" என்று வருத்தப்பட்டாள்.

"கர்ம வினை பலம் வாய்ந்தது. தெய்வ பக்தி இல்லாமல் இருக்கும் இவனுக்கு வலுக்கட்டாயமாக கருணை செய்ய நினைத்தாலும் கர்ம வினை ஜெயித்து விட்டது.
இவன் என்னிடம் ஒரு துளி பக்தி கொண்டிருந்தாலும், அந்த கர்ம வினையை மீறி, என் கருணை ஜெயித்து இருக்கும்"
என்றார் சிவபெருமான்.

"கர்ம வினை நம்மை தாக்க கூடாது"
என்று தான் தெய்வங்கள் ஆசைப்படுகிறது..

தெய்வத்தின் கருணை நமக்கு பலிக்க, தெய்வத்திடம் பக்தி அவசியமாகிறது..

ஆனால், தெய்வத்தை நெருங்காத எவனுக்கும், அவனவன் செய்த கர்மாவுக்கு (புண்ணியமோ, பாவ செயலோ) பலனை கொடுத்து, தெய்வங்கள் நகர்ந்து விடுவார்கள்..




"வெறுப்பு இல்லாத, அன்பையே" தெய்வம் நம்மிடம் எதிர்பார்க்கிறது..

சக்தியுள்ள தெய்வத்திடம், வெறுப்பை உமிழ்பவன், தான் செய்யும் கர்மாவுக்கு பலனை தானே அனுபவிக்கிறான்.

"தெய்வ பக்தி இல்லாதவன் பாவம் செய்யும் போது" தெய்வம் திருத்த முடியாமல் போகிறது...
"தெய்வ பக்தி இல்லாதவன் புண்ணிய காரியங்கள் செய்ய மனதில் ஆசை உண்டாக்கவும் முடியாமல்" போகிறது.

தெய்வ பக்தி இருந்தால், தெய்வ அனுக்கிரஹம் நமக்கு பலித்து விடும்.

கர்ம வினையால் ஏற்படும் துன்பங்கள், தெய்வ பலத்தால் நம்மை விட்டு விலகும்.

வாழ்க ஹிந்து தர்மம்.
ஹிந்து தர்மம் சொல்லாத தர்மங்கள் இல்லை.
ஹிந்துவாக பிறப்பதே, ஹிந்துவாக வாழ்வதே பெருமை.