Followers

Search Here...

Showing posts with label பெருமாள். Show all posts
Showing posts with label பெருமாள். Show all posts

Saturday 27 October 2018

திருமலையில் மட்டும் பெருமாள் தடையில்லாமல் எப்படி அணுகிரஹம் செய்கிறார்? அலர்மேல் மங்கையான மகாலட்சுமி (அலமேலு தாயார்) எப்படி நமக்கு அனுக்கிரஹம் கிடைக்க உதவுகிறாள்? தெரிந்து கொள்வோமே

அகல கில்லேன் இறையும்
என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய் உலகமூன் றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே
- நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி


"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா"

பொதுவாக, ஜனங்களோடு ஜனங்களாக இருந்தால், எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியாது.
கொஞ்சம் மாடியில் ஏறி நின்று பார்த்தால், அந்த தெருவில் போகும் எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியும்.

தனக்கு ஒரு ஏழு அடுக்கு மாடி அமைத்துக்கொண்டு, அங்கு நின்று கொண்டால், எல்லோரையும் பார்க்கலாமே என்று சங்கல்பம் செய்தார் பாற்கடலில் உள்ள எம்பெருமான்.
ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன், எம்பெருமான் சங்கல்பத்தை உணர்ந்து, ஏழு மலையாக ஆகி பூலோகத்திற்கு வந்து விட்டார்.
உன்னதமான இடத்தில் இருந்தால் தான், கருணையை அனைவருக்கும் வர்ஷிக்க முடியும் என்பதால், திருமலையின் உச்சியில் போய், எம்பெருமான் அர்ச்ச அவதாரம் செய்து நின்று விட்டார்.
கருணையே வடிவானவள் மகாலட்சுமி.
க்ஷீராப்தியில் இருந்து பெருமாள் பூலோகம் வந்து விட, தனக்கொரு இடம் தேடினாள்.

கருணையே வடிவான மகாலட்சுமி திருமலையை விட உயர்ந்த இடத்தை தேடினாள்.
திருமலையை விட உயரமான இடம், எம்பெருமானின் வக்ஷஸ்தலமே என்று, அங்கு போய் அமர்ந்து விட்டாள்.
திருமலையில் எம்பெருமான் வக்ஷஸ்தலத்தில் (பெருமாள் மார்பில்) எப்பொழுதும் பிரியாமல் இருக்கிறாள் மகாலட்சுமி.

மலர்ந்த (அலர்) தாமரைப்பூவின் மேல் அமர்ந்திருக்கும் மகாலட்சுமிக்கு "அலர்மேல் மங்கை" (அலமேலு தாயார்) என்று பெயர்.

இப்படி எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து, இனி ஒரு நொடி பொழுது (இறை பொழுதும்) கூட உங்களை விட்டு பிரிய மாட்டேன் (அகல இல்லேன்) என்று அமர்ந்தாள் அலர்மேல் மங்கையான மகாலட்சுமி.

எம்பெருமானை தனியாக வழிபடுவதை விட, தாயாரையும் சேர்த்து வழிபடும் போது தான், பெருமாள் தடையில்லாமல் அணுகிரஹம் செய்கிறார்.

"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று நம்மாழ்வார் அழைக்கும் போது,
'தாயாரை முதலில் சொல்லி, அவளை முன்னிட்டு,  எம்பெருமானிடம் சரணாகதி' செய்கிறார்.

மகாலட்சுமி (ஸ்ரீ தேவி) எம்பெருமான் மார்பில் இருப்பதால் (நிவாசம்), வெங்கடேச பெருமாளுக்கு, "ஸ்ரீனிவாச பெருமாள்" என்றும் பெயர் வந்தது.

எப்படி பகவானை நாம் அணுக வேண்டும்?
எப்படி அணுகினால், பகவான் தடையில்லாமல் நமக்கு அணுகிரஹம் செய்வார்? என்பதை இந்த ஒரு பாசுரமே நமக்கு காட்டி விடுகிறது.

இப்படி திருமலையில், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளே மகாலட்சுமி!!
இப்படி அமர்ந்தது அவள் சுகத்திற்காகவா? இல்லை பெருமாள் சுகத்திற்காகவா? என்று கேட்டால், இரண்டுமே இல்லையாம்.
நாம் அனைவரும் சுகம் பெற வேண்டும் என்பதற்காக தான், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளாம் மகாலட்சுமி.

அது எப்படி?
பொதுவாக ஆழ்வார்கள், மற்ற திவ்ய தேசம் சென்று அங்கு இருக்கும் பெருமாளை சேவிக்கும் போது பிரேம பக்தியுடன் கொஞ்சி மகிழ்வார்கள்.
ஆனால் திருமலை வந்து விட்டால் மட்டும், ஆழ்வார்கள் அனைவரும், கதறி அழுது சரணாகதி செய்து விடுகின்றனர்.





நம்மாழ்வார், திருமலையப்பனிடம் வந்து,
"திருவேங்கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்று கதறி அழுது சரணாகதி செய்கிறார்.

திருமலையப்பனிடம் வந்தால் மட்டும் ஏன் இப்படி ஆழ்வார்களின் மனோபாவத்தில் கூட வித்தியாசம் தெரிகிறது?
மற்ற திவ்ய தேச பெருமாளும் இவர் தானே?
இருந்தும்,
திருமலையப்பனுக்கு மட்டும் என்ன விஷேசத்தை ஆழ்வார்கள் பார்த்தார்கள்?

பொதுவாக, திருமலையை தவிர்த்து, மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் ஒரு சன்னதியில் இருப்பார். தாயார் தனி சன்னதியில் இருப்பாள்.
மற்றும் சில திவ்ய தேசங்களில் பெருமாளும் தாயாரும் ஒரே சந்நிதியில் அருகருகே கூட இருப்பார்கள்.

பொதுவாக தாய்க்கு தான், தன் பிள்ளை தவறே செய்தாலும் கூட, அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், கருணையே செய்ய தோன்றும்.
தாயுள்ளம் மகத்தானது.

பொதுவாக பெருமாள், தகப்பன் ஸ்தானத்தில், ஒரு நீதிபதி ஸ்தானத்திலும் நம்மை பார்ப்பாராம்.
பக்தனே சில சமயம் தவறு செய்தாலும்  பாரப்பட்சம் காட்ட கூடாது என்று நினைப்பாராம்.

பத்ராசல ராமதாஸர், ராமருக்கு கோவில் கட்ட இஸ்லாமிய அரசன் தானிஷாவின் வரி பணத்தை எடுத்து கட்டி விட்டார்.
இதற்கு 12 வருடம் சிறையில் தள்ளி, தினமும் சவுக்கடி கொடுக்க உத்தரவு இட்டான் தானிஷா.
உடம்பெல்லாம் ரத்தம் ஏற்பட்டு, தினமும் சிறையில் அழுது, ராமரிடம் கீர்த்தனைகள் இயற்றினார்.
ராமரோ தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என்று ஒரு நீதிபதி போல பேசாமல் இருந்தார்.
கடைசியில் இனி தாளாது என்ற நிலையில், ராமதாசருக்கு சீதையின் நினைவு வர,
"சீதம்மா...  இந்த ராமதாசனை காப்பாற்ற வருமாறு, நீயாவது அருகில் இருக்கும் ஸ்ரீ ராமரிடம் சொல்லம்மா..."
என்று கதற, சீதை ஸ்ரீ ராமரிடம் "இனி ஒரு க்ஷணம் தாமதிக்காமல் காப்பாற்றுங்கள்" என்று சொல்ல,
தானே ஒரு மனிதனாக வந்து, தானிஷாவை பார்த்து, தங்க கட்டிகளாக வரி பணத்தை வட்டியுடன் கட்டி, விடுதலை செய்யுமாறு செய்து மறைந்து விட்டார்.

பெருமாளை மட்டும் நாம் தனியாக பிரார்த்தனை செய்தால், நம் குற்றம் குறை அவருக்கு தெரிவதால், கட்டுப்பாடு இல்லாமல் அணுகிரஹம் செய்ய கொஞ்சம் தயங்குவாராம்.

ஸ்ரீ ரங்கம் உட்பட மற்ற திவ்ய தேச பெருமாள் கூட, தாயார் அருகில் இல்லாமல் இருப்பதால், ஆழ்வார்களுக்கு கூட தடையில்லாமல் அணுகிரஹம் செய்யாமல் இருந்தார்களாம்.

'அணுகிரஹம் குறைவில்லாமல் செய்யலாமே' என்று மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காரணம் கேட்டால், "இன்னும் இதயம் கணியட்டும்" என்று மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும்  சொல்வார்களாம்.

ஒரே பெருமாள் தான் என்றாலும், அந்தந்த திவ்ய தேச மகத்துவம் பொருத்து தான் பழகுவார்களாம்.

இப்படி ஏன் அணுகிரஹம் செய்ய மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும் தயங்குகிறார்கள்? என்று கேட்டால், நமக்காக சிபாரிசு செய்ய தாயார் கூட இல்லை என்பதால் தான்.

எம்பெருமானை நாம் தனியாக சேவிக்கும் போது, நம் தகுதி, நேர்மையை பார்ப்பாராம். இதனாலேயே அணுகிரஹம் செய்ய தயங்குவாராம்.

ஸ்ரீ ராம அவதார சமயத்தில், 'தானும் வனவாசம் வருவேன்' என்று லக்ஷ்மணன் வந்து விட்டார்.
அன்றைய இரவு பொழுதில், லக்ஷ்மணன் பார்த்து, "பொழுது விடிந்ததும் நீ வேண்டுமானால் அயோத்தி திரும்பி செல்கிறாயா?" என்று ஸ்ரீ ராமர் கேட்டு விட்டார்.
ஸ்ரீ ராமரை விட்டு நொடி பொழுது பிரிந்தாலும், உயிர் போய் விடும் என்ற நிலையில் இருந்த லக்ஷ்மணன், செய்வதறியாது ஸ்ரீ ராமரின் பாதங்களில் விழுந்து விட்டார்.
ஸ்ரீ ராமரின் சம்மதத்தை பெற, ஸ்ரீ ராமரிடம் கேட்டால் நடக்காது என்று அறிந்து, தலையை தூக்கி, அருகில் நின்று இருந்த சீதையை பரிதவிப்புடன் பார்த்து, தனக்கு சிபாரிசு செய்ய பிரார்த்தித்தார்.

லக்ஷ்மணனின் நிலையை புரிந்து கொண்ட சீதை, ஸ்ரீ ராமரை பார்த்து, " எப்படி குளத்தில் இருக்கும் மீனை வெளியே எடுத்தால் அதற்கு உயிர் தங்காதோ, அது போல லக்ஷ்மஷ்ணன் உங்கள் பிரிவை தாள மாட்டான்."
என்று சொல்ல, ராமர் மறு பேச்சின்றி அழைத்து கொண்டார்.
அதற்குப்பின், கடைசி வரை லக்ஷ்மணனை பிரிந்து ஒரு க்ஷணம் இருந்ததில்லை ஸ்ரீ ராமர்.


தாயாருக்கு அத்தனை மதிப்பு கொடுப்பாராம் பெருமாள்.

தாயாரை முன்னிட்டு, பெருமாளை சேவித்தால், நம் தகுதி பார்க்காமல் அணுகிரஹம் உடனே செய்து விடுவார்.

தனியாக தான் சந்நிதியில் இருந்தால், நமக்கு பெருமாள் அணுகிரஹம் செய்வாரோ என்னவோ என்று நினைத்த தாயார், திருமலையில் எம்பெருமான் நெஞ்சில் போய் அமர்ந்து விட்டாளாம்.

பெருமாள், தாயாரை பார்த்து, 'இப்படி என் நெஞ்சோடு அமர்ந்து விட்டாயே, உனக்கு வேண்டுமானால் தனி சன்னதி இருக்க செய்யட்டுமா?" என்று கேட்க,
"வேண்டவே வேண்டாம்" என்றாளாம்.
"சரி, அப்படியென்றால் ஒரே சந்நிதியில் அருகேயே இருக்கிறாயா?" என்று கேட்க,
"அதுவும் வேண்டாம்"
என்றாளாம் தாயார்.
மேலும்,
'எனக்கு தனி சந்நிதி கொடுத்து, ராவணன் தூக்கி போனான் என்ற அனுபவமே போதும்.
தனி சந்நிதி கொடுத்தால், மற்றவர்களை நம்ப இயலவில்லை.
உங்கள் அருகிலேயே இருந்தாலும், உங்களையும் நம்ப முடியாது.
ஒரு சமயம், கஜேந்திரன் என்ற ஒரு யானை உங்களை கூப்பிட்டான் என்றதும், அருகில் இருந்த நான் கூட முக்கியமில்லை என்று, கிளம்பி விட்டீர்களே.
இதனால் எனக்கு தனியாக இடமும் வேண்டாம், உங்கள் பக்கத்திலும் இடம் வேண்டாம்.
நான் இனி இறை பொழுது கூட அகல கில்லேன், அகல கில்லேன்,  நான் உங்கள் நெஞ்சோடு தான் இருப்பேன்.
நீங்கள் எந்த பக்தன் அழைத்தாலும், என்னையும் தூக்கி கொண்டு செல்லுங்கள்"
என்று பிடிவாதம் செய்து அமர்ந்து விட்டாளாம் தாயார்.

இப்படி, நமக்கு தடையே இல்லாமல் அணுகிரஹம் செய்ய, அலர்மேல் மங்கை தாயார் வக்ஷஸ்தலத்தில் இறை பொழுது கூட அகல கில்லேன் என்று அமர்ந்து விட்ட ஸ்ரீனிவாச பெருமாளே என்பதை தான், நம்மாழ்வார்,
"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று சொல்கிறார்.

திருமலையில், பெருமாளுக்கு உள்ள விசேஷம் இதுவே.

திருமலையப்பனை காண நாம் மலை ஏறி செல்லும் போது, பெருமாள் பார்ப்பதற்கு முன்,  ஸ்ரீனிவாசனின் மார்பில் இருக்கும் தாயார், நம்மை முதலில் பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நம் பாவ புண்ணியத்தை பார்க்கும் முன், தாயார் முந்திக்கொண்டு, "நம் குழந்தை, அணுகிரஹம் செய்யுங்கள்" என்று நமக்காக சிபாரிசு செய்து விடுகிறாள்.

தாயார் பார்த்ததினாலேயே, பெருமாள், நம் தகுதி பாராமல், உடனே அணுகிரஹம் செய்து விடுகிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.

திருமலையப்பனுக்கு உள்ள இந்த தனித்துவம், மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காண இயலாது.

திருமலையில், தாயாரை தன் மார்போடு வைத்து இருப்பதால், தடையின்றி நம்மிடம் கருணையை வர்ஷிக்கிறார் பெருமாள்.

நிகரில் புகழாய்.
உலக மூன்றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

சொர்க்கத்தில் உள்ள தேவர்கள், தப லோகத்தில் இருக்கும் ரிஷிகள், பிரம்மா உட்பட ஒரு நாள் அழிந்து விடுவார்கள். ஆனால் வைகுண்டத்தில் உள்ள தேவர்களான நித்ய பார்ஷதர்கள் வைகுண்ட நாதனை போல அமரர்கள்.
வைகுண்ட நாதனை போல அவர்களும் என்றுமே இருப்பவர்கள்.
பரமாத்மாவாக இருப்பதால், வைகுண்ட நாதனுக்கு கூட, உலகத்தை ஸ்ருஷ்டி செய்ய வேண்டும், உலகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்ற பொறுப்பு உண்டு.
நித்ய பார்ஷதர்களான இவர்களுக்கு அந்த பொறுப்பு கிடையாது என்பதால், இவர்கள் லட்சியம் வைகுண்ட நாதனுக்கு கைங்கர்யம் செய்வதே. தேவைப்பட்டால், இவர்களே ப்ரம்ம லோகம் முதல், பூலோகம் வரை வந்து போகவும் முடியும். சுதந்திரமானவர்கள், அமரர்கள்.

அப்படிப்பட்ட அமரர்களான நித்ய பார்ஷதர்களும் (அமரர் முனிக்கணங்கள்), பூலோகத்தில் உள்ள திருமலை வந்து சேவை செய்ய விரும்பும் பெருமை உடைய திருவேங்கடத்தானே என்று
"நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே"
என்று நம்மாழ்வார் திருமலையப்பனின் புகழை நமக்கு காட்டுகிறார்.

வைகுண்டத்திலேயே எம்பெருமானை சேவிக்கும் பாக்கியம் பெற்ற நித்ய பார்ஷதர்களே திருமலை வந்து சேவிப்பார்கள் என்றால், இந்த உலகத்திலேயே உள்ள எனக்கு உன் திருவடி அடையாமல் வேறு என்ன செய்வேன்?

நித்ய பார்ஷதர்களுக்கு திருமலை இல்லையென்றால், வைகுண்டம் இருக்கிறது. அங்கு போய் உமக்கு சேவை செய்து கொள்வார்கள்.
அவர்களே வைகுண்டம் வேண்டாம், திருமலை தான் வேண்டும் என்று வரும்போது,
பூலோகத்தில் புகலிடம் இல்லாத எனக்கு, நீஙகள் ஒருவர் தானே கதி என்று,
"புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்கிறார் நம்மாழ்வார்.

வைகுண்டம் சென்று உங்கள் திருவடியை பிடிக்க இயலாத எனக்கு திருமலையில் உள்ள நீங்கள் தானே கதி. புகலிடம் இல்லாத அடியேன், உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே என்கிறார்.

இங்கு "உன் திருவடியில் புகுந்தேனே" என்று கூறாமல்,
"உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே"என்கிறார்.

இங்கு "அமர்ந்து" என்ற சொல்லை சொல்லி, சரணாகதி செய்த நம்மாழ்வார், மோக்ஷம் வேண்டினாலும், உடனே தந்து விட வேண்டாம், கொஞ்சம் திருமலையில் தங்கி (அமர்ந்து) உங்களுக்கு இங்கேயே சில காலம் சேவை செய்ய அணுகிரஹம் செய்து விட்டு, பின்னர் மோக்ஷம் கொடுங்கள் என்கிறார்.

மோக்ஷம் யாருக்கு கொடுக்கிறார் பெருமாள்?
இரண்டு விதமான நிலைக்கு, மோக்ஷம் கொடுக்கிறார் பெருமாள்.
1. "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து செய்தால், உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

2. "இனி தாளாது என்ற ஆர்த்தி (துடிப்பு) இல்லாமல்" சரணாகதி செய்து விட்டானானால், அவன் ப்ராரப்தம் முடியும் வரை உடம்போடு வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா?
கோபிகைகள் போல "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து விட்டால், ப்ராரப்த கர்மாவும் பொசுங்கி, உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

ஞானியும் ப்ராரப்த கர்மாவை அனுபவிக்கிறார்கள்.


நம்மாழ்வார் திருமலையப்பனை பூரண சரணாகதி செய்தவர்.
"இனி தாளாது" என்ற ஆர்த்தியும் (துடிப்பு) உள்ளவர்.
உடனே மோக்ஷம் பெறுவதற்கு தகுதி இருந்தாலும்,
பிராரப்த காலம் முடியும்வரை, இந்த உடலோடு இருந்து, திருவெங்கட நாதனுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டாராம் ஆழ்வார்.

இதை குறிப்பதாக, "உன் திருவடியில் அமர்ந்து" என்று சொல்லி, எப்பொழுது பிராரப்த காலம் முடியுமோ, அப்பொழுது திருவெங்கட நாதனுக்கு திருமலையில் செய்த சேவையை, வைகுண்டம் சென்று செய்வோம் என்று பிரார்த்தித்தார்.


Wednesday 29 August 2018

காலம் கடந்து அனாதி காலமாக இருக்கும் நான்கு விஷயங்கள் என்ன?

நான்கு விஷயங்கள் கால அளவுக்கு உட்படாமல், காலத்தால் கணிக்க முடியாமல், அனாதியாக முடிவே இல்லாமல் இருந்து கொண்டே இருக்கிறது.
அது என்ன?



1. 'உலகம் என்ற ப்ரக்ருதி' அனாதி காலமாக இருக்கிறது.
2. 'ஆத்மா' (நம் உயிர்) அனாதி காலமாக இருக்கிறது.
3. 'பெருமாள்' அனாதி காலமாக இருக்கிறார்.
4. 'வேதம்' அனாதி காலமாக இருக்கிறது.
அனாதி காலமாக இருக்கும் இந்த நான்குக்கும், பிறப்பும் தெரியவில்லை, இறப்பும்/அழிவும் தெரியவில்லை.
ஆனால் இந்த நான்குக்கும் ஆவிற்பாவம் உண்டு.

ஆவிற்பாவம் என்றால், தோற்றம் என்று அர்த்தம் கொள்ளலாம்.

பிறப்பும், தோற்றமும் ஒரே அர்த்தம் இல்லை.
அதே போல,
இறப்பும், மறைவும் ஒரே சொல் அல்ல.

பிறப்புக்கு முன் இறப்பு வராது.
இறப்புக்கு பின், பிறப்பு வராது.

ஆனால்,
தோற்றத்துக்கு முன், மறைவு இருக்க முடியும்.
மறைவுக்கு பின், தோற்றம் இருக்க முடியும்.

பிறப்புக்கும், இறப்புக்கும் உள்ள பொருள்:
ஒரு லைட் பல்ப் உருவாக்கும் (பிறப்பு) முன், லைட் பல்ப் இருந்து இருக்க வாய்ப்பில்லை.
அது போல,
ஒரு லைட் பல்ப் உடைந்த பின் (இறப்பு), அதே லைட் பல்ப் மீண்டும் உருவாக வாய்ப்பில்லை.
நம் உடல், இந்த லைட் பல்ப் போன்றது.
உடலுக்கு பிறப்பு உண்டு. இறப்பு உண்டு. இறந்த பின், மீண்டும் அதே உடல் பிறக்காது.






தோற்றத்துக்கும், மறைவுக்கும் உள்ள பொருள்:
ஒரு லைட் பல்பில் உருவாகும் வெளிச்சத்துக்கு(தோற்றம்) முன், வெளிச்சம் இல்லாமல் அணைந்து (மறைவு) இருக்க முடியும்.
அது போல,
ஒரு லைட் பல்ப் அணைந்து இருந்த (மறைவு) சமயத்துக்கு முன், வெளிச்சமும் கொடுத்து இருக்க முடியும்.
நம் உயிர் என்ற ஆத்மா, இந்த வெளிச்சம் போன்றது.
இது உடலில் புகுந்து இருக்கும் போது தோற்றம் அளிக்கிறது. உடலை விட்டு வெளியே செல்லும் போது, இல்லாதது போல மறைந்து விடுகிறது. ஆனால் மீண்டும் வேறொரு உடலில் புகுந்து தன்னை வெளிப்படுத்துகிறது.

ஆத்மாவை புரிந்து கொள்ளாதவர்கள், "உடலே நான்" என்று சொல்லிக்கொள்ளும் மடையர்கள், ஒருவனுடைய ஆத்மா உடலை விட்டு வெளியேறிய பின், அவனே 'இறந்து விட்டான்/மரித்து விட்டான்' என்று சொல்லிக்கொள்வர்.

'ஆத்மா ஒன்று உள்ளே இருப்பதால் தான் இந்த உடம்பு இதுநாள் வரை வேலை செய்தது' என்று உணர்ந்திருந்த ஹிந்துக்கள், பொதுவாகவே, உடலை விட்டு பிரிந்த ஆத்மாவை, "இறந்து விட்டார், மரித்து விட்டார்" என்று மடத்தனமாக சொல்லாமல், 'ஆத்மா மறைந்து விட்டது, இறைவனடி சேர்ந்தார். ஆத்மா வைகுண்டம் அடைந்தது, சிவபதம் அடைந்தது' என்று உண்மை அறிந்து சொல்லும் பழக்கம் கொண்டிருந்தனர். உண்மை அறிவு கொண்டிருக்கும் நம் ஹிந்துக்கள்.

1. அனாதி காலமாக உள்ள உலகம், மறைக்கப்பட்டு, மீண்டும் ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "ஸ்ருஷ்டி" என்று பெயர்.

2. அனாதி காலமாக உள்ள நாம் (ஜீவ ஆத்மா / உயிர்), ஒரு உடலுக்குள் புகுந்து, ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "ஜன்மம்" என்று பெயர்.

3.  அனாதி காலமாக உள்ள பெருமாள் (பரம் ஆத்மா), ஒரு உடலுக்குள் புகுந்து, ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "அவதாரம்" என்று பெயர்.

4. அனாதி காலமாக உள்ள வேதம் (பரமாத்மாவின் அறிவு), ஒரு ரிஷியின் காதில் புகுந்து, ஆவிர்பவிக்கும் (கேட்கப்படும்) போது, அதற்கு "ஸ்ருதி" என்று பெயர்.
காதில் கேட்ட வேதத்தை, வாயால் ஆவிர்பவிக்கும் (சொல்லாக வெளிப்படும்) போது, அதற்கு "ஆம்நாயம்" என்று பெயர்.
வாயால் சொன்னதை, காலப்போக்கில் கேட்டது ஒன்று, சொல்வது ஒன்று என்று ஆகி விடாமல், கேட்ட அதே வேத சொற்களை ஒரு காவல்காரனை போல காத்து, பரம்பரை பரம்பரையாக வேத சொற்கள் மாறிவிடாமல், விட்டுப்போகாமல் எடுத்து செல்வதற்கு, "சந்தஸ்" என்று பெயர்.

ஹிந்துக்கள் கொண்டிருந்த இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத பிற பொய் மதங்களில், நம்பிக்கைகளில், ஹிந்துக்கள் வீழ்வதே அவமானம்.
ஹிந்துவாக பிறந்து, பின் மதம் மாறுபவர்கள் அவமானப்படவேண்டும்.

ஆராய்ச்சியின்றி, காரணமின்றி எதுவும் செய்யாத ஹிந்துக்களின் பழக்கம், பேச்சு எல்லாம் உயர்ந்தவை.

ஹிந்துக்களாக பிறந்ததே புண்ணியம்.
வேற்று மதங்கள் கூட, மத மாற்றம் என்ற போர்வையில்,
*ஹிந்துக்களின் காவி உடை அணிந்து பாத யாத்திரை செல்கின்றனர்.
*வெள்ளை உடை அணிந்து தான் தன் கோவிலில் ஆராதனை செய்கின்றனர்.
*சமஸ்கரித மொழியை வெட்கமே இல்லாமல் பயன்படுத்துகின்றனர்.
*தமிழை கொலை செய்கின்றனர்.
*ஹிந்துக்களின் தெய்வீக கர்நாடக இசையை திருட முயற்சிக்கின்றனர்.
*வெட்கமே இல்லாமல் கொலு வைக்கின்றனர்.
*தேர் இழுக்கின்றனர்.
*கோவில் ஸ்தூபம் இருப்பதை பார்த்து, மானம் இல்லாமல் தாங்களும் ஸ்தூபம் வைக்கின்றனர்.
*சுய சிந்தனை இல்லாமல், நம்மிடம் காபி அடித்து, வெட்கமில்லாமல், ஹிந்துக்களை மதம் மாற்றுகின்றனர்.
*மனு என்ற அரசன் முதல் மனிதன் என்று சொன்னதையும் காப்பி அடித்து "Man" என்றனர்.
*நவ க்ரஹங்கள் என்று சொன்ன என்றோ சொல்லி வைத்ததை வைத்து "9 planets" உண்டு என்கின்றனர்.
*செவ்வாய் கிரஹம் சிவப்பு என்று அறிந்து, நவ க்ரஹத்தில் செவ்வாய் தேவதைக்கு இடுப்பில் சிவப்பு துணி கட்டுவதை அடிப்படையாக கொண்டு, "Mars is Red planet" என்றனர்.



*பஜனை செய்வதை பார்த்து, காப்பி அடிக்கிறோம் பேர்வழி என்று பைத்தியம் வராத குறையாக ஆடுகின்றனர்.
*நான்கு மறை வேதம் என்ற சப்த ப்ரம்மத்தின் பெயரை ஒரே ஒரு புத்தகம் எழுதி அதை வெட்கமே இல்லாமல் இதுவும் "வேதம்" என்று ஹிந்துக்களின் வேதம் என்ற பெயரை திருடுகின்றனர்.
*திருட்டு செயலே பழக்கம் ஆகி போனதால், திருட்டு புத்தியுடன், திருட்டு தனமாக, புரியாத ஹிந்துக்களை மதம் மாற்றுக்கின்றனர்.
*இஸ்லாமியன் திருடனை உதைப்பான் என்று இன்று வரை நெருங்க பயப்படுகின்றனர்.
ஹிந்துக்கள் திருடனை அடிக்க வேண்டாம், நம் வீட்டில் உள்ள பொருளை திருடி, நமக்கே காட்டும் திருடன் இவன் என்று தெரிந்து கொண்டாலே போதும்.
*கிருஷ்ணன் மாடு மேய்த்தான், என்றால், பெயரையும் ஏறத்தாழ அதையும் காப்பி செய்து, மாட்டுக்கு பதில் ஆடு மேய்த்தான் என்றனர்.
*உலகம் உருண்டை என்று வராஹ அவதாரத்திலேயே சொன்னதை மறுக்க நினைத்து, கடைசியில் உலகம் உருண்டை தான் என்று அறிவியல் சொல்ல, தன்னுடைய ஒரே கொள்கையில் மரண அடி வாங்கினர்.

இப்படி ஹிந்துக்களை, ஹிந்துக்களின் சின்னங்களை, ஹிந்துக்களின் தத்துவங்களை திருடி பிழைப்பு நடத்தும் பொய் மதத்தில், ஹிந்துவாக பிறந்தவன், இருப்பவன் மாறுவதே அவமானம். மாறியவன் ஹிந்துவாக மாறுவதே புத்திசாலித்தனம்.

இப்படி தறிகெட்டு காசுக்காகவோ, நம் krishணனை கிறிஸ்ஆக பெயர் மாற்றி இந்திய மண்ணிலேயே, ஹிந்துக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் திருடர்களிடம் இருந்து, சுய புத்தியுடன் ஹிந்துக்களாக மீண்டும் திரும்புவதே சிறந்தது.



காப்பி அடித்து பாஸாக துடிக்கும் பொய் மதங்களில் ஹிந்துக்கள் வீழாமல் இருக்க வேண்டும்.
இதற்கு ஒரே வழி.. ஹிந்துக்கள் தன் மதத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஹிந்துக்களுக்கு பகிர வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள். வாழ்க நாம்.

 நன்றி: எந்தரோ மஹாநுபாபு(...லு) அந்தரிகி வந்தநமு (Salutations to all those great men in this world)





Tuesday 3 October 2017

பெருமாள் 'அபய ஹஸ்தம்' அர்த்தம் என்ன?


கோவிலுக்கு போகும் பக்தன்,
அர்ச்சகர் தனக்கு என்ன கொடுப்பார்?,
ஏன் மாலை தனக்கு கொடுக்கவில்லை?
அர்ச்சகர் பக்கத்தில் இருந்தவருக்கு என்ன கொடுத்தார்?
என்று யார் என்ன கொடுக்கிறார்கள் என்று பார்த்து,
யாரை காண வந்தோமோ அவரை பார்க்காமல் விட்டு விட கூடாது.

அவர் என்ன கொடுத்தார், இவர் என்ன கொடுத்தார் என்று எண்ணத்தை சிதற விட்டு, வந்த நோக்கத்தை விடக்கூடாது.


நமக்கு தேவையான ஒன்றை யாரும் தரமுடியாத ஒன்றை பெருமாள் வைத்துக்கொண்டு நமக்காக நிற்கிறார். நமக்காகவே நிற்கிறார்.
உலகத்தையும், உன்னையும் படைத்த பெருமாள், கையை கவனித்தால், அவர் நமக்கு என்ன தருகிறார் என்று தெரிந்து விடும்.

கோவிலுக்கு வந்து, அவர் முன் வீண் பேச்சு பேசி, யார் என்ன கொடுக்கிறார்? என்று பார்க்க கூடாது.
உலகில் பல வித துன்பங்கள், ஆபத்துகள், மரணத்துக்கு நடுவே நிற்கும் நமக்கு, பெருமாள் தன் கையை காட்டி 'அபயம்' என்று சொல்கிறார்.

அர்ச்சகர் தீர்த்தம் கொடுத்தாரா?
100 ரூபாய் கொடுத்தேனே ஒரு மாலை போட்டாரா?
என்று கேட்டு, நமக்கு தேவையான சொல்லான 'பயப்படாதே' என்ற அபயம் கொடுக்கும் பெருமாளை கவனிக்க மறந்து விடக்கூடாது.
பெருமாள் 'அபயம்' என்று சொன்ன பின், உலக பயம் என்பது நமக்கு ஏது?

குருவே துணை

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 

Wednesday 22 February 2017

திருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்? திருமலையில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்த அனந்தாழ்வார்


அனந்தாழ்வார்
பகவானை ஆராதிப்பதற்காக தான், உலகத்தில் உள்ள அனைத்துமே படைக்கப்பட்டது.
பரவாசுதேவன், முதலில் ப்ரம்மாவை படைத்தார்.
வேதத்தை உபதேசித்தார்.
பரவாசுதேவன், ப்ரம்மாவை பார்த்து,

  • பழத்தை ஸ்ருஷ்டி செய் !
  • புஷ்பங்களை ஸ்ருஷ்டி செய் !
  • பசு மாட்டை ஸ்ருஷ்டி செய்து, பால் ஸ்ருஷ்டி செய் !
  • இப்படி இப்படி ஸ்ருஷ்டி செய் !

என்று சொல்ல, ப்ரம்மா இவை அனைத்தையும் படைத்து இருக்கிறார்.


இவையெல்லாம் எதற்கு படைக்க சொன்னார் பகவான்?

  • உடனே பால் காய்ச்சி, காபி போட்டு நாம் சாப்பிடுவதற்காகவா? இல்லை.
  • பூவை பறித்து மனைவி தலையில் வைப்பதற்காகவா? இல்லை.

பின் எதற்காக பிரம்மாவை படைக்க சொன்னார்?

வாங்கிய பாலில், ஒரு துளியாவது எடுத்து, சாளகிராமத்தில் விடுகிறானா? என்று நம்மை பார்க்கிறார்.
சம்சார கடலில் இருந்து மீட்டு, மோக்ஷம் கொடுப்பதற்காக பகவான் நம்மிடம் சிறு பக்தியையாவது, நன்றியை எதிர்பார்க்கிறார்.
தான் குடிக்கும் பசும்பாலை, ஸ்ருஷ்டி செய்த பகவானுக்கு, நன்றி உணர்வுடன் தன் வீட்டில் உள்ள பெருமாளுக்கு காட்டி விட்டாவது குடிக்கிறானா?
அருகில் உள்ள கோவிலில் உள்ள பெருமாளுக்கு கொடுக்கிறானா?
என்று பார்க்கிறார் பகவான்.
பூக்கும் பூவில் கொஞ்சம் தொடுத்து, பகவானுக்கு போட்டு, தன் நன்றியை காட்டுகிறானா?
என்று பார்க்கிறார் பகவான்.
எம்பெருமானுக்கு பூவும், பழமும் அர்ப்பணம் செய்வதை விடுத்து, வேறு யாருக்கு செய்யத்தகும்?
என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் சொல்கிறார்.
"தேவும் எப்பொருளும் படைக்க,
பூவில் நான்முகனைப்படைத்த,
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்,
பூவும் பூசனையும் தகுமே?" 
என்கிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாளை மகளாக பெற்ற பெரியாழ்வார், தன் நிலத்தில் எல்லாம் பூந்தோட்டம் அமைத்து, பூக்கள் அனைத்தையும் பெருமாளுக்கு கொடுப்பதற்கே என்று வாழ்ந்து காட்டினாரே.
ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர் (1017 AD -1137 AD) ஸ்ரீரங்கத்தில் ப்ரவசனம் செய்து கொண்டு இருந்தார்.
சிஷ்யர்கள் எல்லோரும் பக்தி ஸ்ரத்தையுடன் கேட்டு கொண்டு இருந்தனர்.
அப்பொழுது, நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில்,

"எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து,
அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே"
என்ற இந்த பாசுரத்தை சொல்லும் கட்டம் வந்தது.

இதை சொல்லும் போது, தொண்டை தழுதழுத்து கண்களில் கண்ணீர் வழிந்தது உடையவர் ராமானுஜருக்கு.

பக்தி ஸ்ரத்தை உடைய சிஷ்யர்கள், ஆச்சார்யான் முகத்தை ஒவ்வொரு அசைவையும் அப்படி கவனிப்பார்களாம்.

எந்த கட்டத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்தது? என்று கண்டுபிடித்து விட்டார்களாம்.

"எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"நம் குல தெய்வம் என்று நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்."

"முந்தை, வானவர் வானவர் கோனொடும்"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"தேவர்களுக்கும் தேவன், தேவாதிதேவன் என்று எம்பெருமானின் பரத்துவத்தை, பெருமையை நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்.
"திருவேங்கடத்து"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"திருமலை திவ்ய தேசமாயிற்றே !  என்று நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்.

"அந்தமில் புகழ்"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"எம்பெருமான் புகழை நினைத்து நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்.


"கார் எழில் அண்ணலே"
என்ற இடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்திருந்தது என்றால்,
"எம்பெருமானின் அழகை, சௌந்தர்யத்தை நினைத்து, ராமானுஜர் சித்தம் உருகி கண்ணீர் விட்டு இருக்கலாம் என்று நினைக்கலாம்.

இப்படி இருக்க, இந்த சின்ன பாசுரத்தில் எந்த இடத்தில் உடையவருக்கு கண்ணீர் வந்தது என்று கண்டுபிடித்து விட்டார்களாம் அவரது சிஷ்யர்கள்.

"சிந்து பூ மகிழும்" என்று சொல்லுமிடத்தில் ராமானுஜருக்கு கண்ணீர் வந்ததாம்.

"பூக்கள் அதிகமாக சிந்தி வீணாகி கிடக்கிறது திருமலையில்" என்று சொல்லும் போது கண்ணீர் விட்டார் ராமானுஜர்.

ப்ரவசனம் முடிந்த பிறகு, தனித்து ராமானுஜர் அருகில் வந்து,
"தேவரீர், திருவுள்ளத்தில் என்ன கலக்கம்?"
என்று கேட்டார்கள் சிஷ்யர்கள்.

ஸ்ரீ ராமானுஜர்,
"வண்டுகள், மான்கள் விளையாடும் சோலையாக உள்ளது ஸ்ரீரங்கம்.
இங்கு இடமும் செழிப்பாக உள்ளது.
சீதோசன நிலையும் அளவாக உள்ளது.
இப்படி ஒரு சூழ்நிலையில், ஸ்ரீ ரங்கநாதருக்கு சேவை செய்ய எளிதாக ஆள் கிடைப்பார்கள்.
திருமலையில் பூக்கும் பூக்களை தொடுத்து, வெங்கடேச பெருமாளுக்கு ஒரு பூமாலை கட்டி தினமும் கைங்கர்யம் செய்ய ஒருவர் கூட இல்லையே !! என்று நினைத்த பொழுது கண் கலங்கியது" என்றார்.

ஆச்சார்யன் சிறு தாபம் கூட அடைய விட மாட்டார்களாம் உத்தம சிஷ்யர்கள்.

குருநாதரின் மனதில் இருந்த இந்த துக்கத்தை நீக்க, திரு அநந்தான் என்ற சிஷ்யர் உடனே எழுந்து ராமானுஜரை சேவித்தார்.
"அடியேன், அந்த கைங்கர்யத்தை செய்கிறேன்"
என்று புறப்பட தயாரானார்.

இன்றைய காலத்திலேயே திருமலை செல்வது கொஞ்சம் கடினம்.
சுமார் 1050CEல் திருப்பதி செல்வது என்பது மகா கடினம்.

"ராமானுஜர் மனதில் தாபப்பட்டார் என்பதற்காக, ஸ்ரீரங்கத்தில் உள்ள தங்கள் வீடு, மனைவி, மக்கள் என்று எல்லோரையும் விட்டு விட்டு, திருப்பதி செல்ல முடியுமா?
அவ்வளவு எளிதில் செல்ல முடியுமா?"
என்றெல்லாம் நினைத்து, அவரது மற்ற சிஷ்யர்கள் கைங்கர்யம் செய்ய தயாராக இல்லையோ? என்று நாம் நினைத்து விட கூடாது.

ராமானுஜர் அடியார்களில் ஒருவர் கூட இப்படி நினைக்க மாட்டார்கள்.
பின்பு ஏன், "நானும் செல்கிறேன்" என்று மற்ற சிஷ்யர்கள் புறப்படவில்லை?

மற்ற சிஷ்யர்களுக்கு
"திருவேங்கடமுடையான் முக்கியமா?
ராமானுஜர் முக்கியமா? என்ற கேள்வி எழ,
திருப்பதி சென்றால், ராமானுஜரை விட்டு பிரிய வேண்டுமே !!"
என்று தாபபட்டு நின்று கொண்டிருந்தனர்.

அப்படியென்றால், அனந்தாழ்வார், ராமானுஜரை விட  திருவேங்கடமுடையான் தான் முக்கியம், என்று நினைத்து விட்டாரோ?

அனந்தாழ்வார் ராமானுஜர் மேல் அளவு கடந்த பக்தி உள்ளவர்.

தன் குருநாதனுக்கு அப்படி ஒரு கலக்கம் இருந்தால், அதை நிறைவேற்றாத ஒரு சிஷ்யன் இருந்து என்ன பயன்? என்று நினைப்பவர் அநந்தாழ்வார்.
ஸ்ரீ ராமரை விட்டு பிரிய முடியாமல், கூடவே இருந்து கைங்கரியம் செய்தார் லக்ஷ்மணன்.
மற்ற சிஷ்யர்கள், ராமானுஜரை விட்டு பிரிய முடியாமல், லக்ஷ்மணனை போல இருந்தனர்.
அனந்தாழ்வாரோ, பரதனை போல, இருந்தார்.
ராமானுஜருக்கு எது மகிழ்ச்சி தருமோ? அதை செய்து முடிப்பது முக்கியம் என்று இருந்தார்.

"ராமானுஜருக்கு பூ கைங்கர்யம் திருமலையில் செய்து மாலை கட்டி பெருமாளுக்கு போட ஆள் இல்லையே என்ற தாபம் ராமானுஜருக்கு இருக்குமானால், அந்த தாபம் நீங்கி அவரது மனது சந்தோஷப்பட வைப்பதே நம் லட்சியம்"
என்று புறப்பட்ட தயாரானார்.

சந்தோஷமாக ஸ்ரீராமானுஜரின் அனுமதி பெற்று, வாகன வசதிகள் இல்லாத அந்த காலத்தில், அப்பொழுது கர்பவதியாக இருந்த தன் மனைவியையும் அழைத்து கொண்டு, ஸ்ரீரங்கத்தில் இருந்து, நடந்து நடந்து நடந்து  திருமலை வந்து சேர்ந்தார் அனந்தாழ்வார்.

அந்த சமயத்தில் திருமலை அடர்ந்த காடாகவும், புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் நிறைந்ததாகவும் இருந்தது.

ராமானுஜர் (1017CE) அவதரித்த பின் தான், வெங்கடேச பெருமாளின் அருள், ஞானிகளுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைவருக்கும் கிடைத்தது.
இன்று தினமும் லட்சம் பேர் வந்து பார்க்க காரணமாய் இருந்தவர் நம் ராமானுஜர், நம் தமிழர்.

அநந்தாழ்வார் தன் மனைவியுடன் திருமலையிலேயே வாசம் செய்தார்.

தினமும் திருமலையில் உள்ள பூக்களை தொடுத்து பெருமாளுக்கு அலங்காரம் செய்து வந்தார்.
தான் வசிக்கும் இடத்திலேயே ஒரு நந்தவன பூந்தோட்டமும் அமைத்தார்.

அநந்தாழ்வாருக்கு
"இப்பொழுது நல்ல மழைக்காலமாக இருக்கிறது. தண்ணீர் நிறைய கிடைக்கிறது. பூக்கள் பூத்து குலுங்குகிறது. நல்ல வெயில் காலத்தில் தண்ணீர் இல்லாமல் போய் விட்டால், பூஞ்செடிகள் வாடி விடுமே!!
அதற்கு முன்னேற்பாடாக, இப்பொழுதே நாம் ஒரு பெரிய குளம் வெட்டி ஏற்பாடு செய்து விட்டோம் என்றால், இதன் மூலம் நம் புஷ்ப கைங்கர்யம் எப்பொழுதும் தடைப்படாமல் நடக்கும்"
என்று அவருக்கு திடீரென்று மனதில் தோன்றியது,

அருகிலேயே ஒரு குளம் அமைத்தால், நீர் பாய்ச்சி தினமும் பல வித பூக்கள் வளர்த்து தொண்டு செய்யலாமே என்று நினைத்தார்.

தினமும் பூக்கள் பறித்து, மாலை கட்டி, பெருமாளுக்கு பூங்கைங்கர்யமும் செய்கிறார், மீதி நேரத்தில், பெரிய குளம் வெட்டவும் ஆரம்பித்தார்.

ஒரு வைஷ்ணவன் 'உதவிக்காக அடுத்தவரிடம் கை நீட்ட கூடாது'.
கூலிக்கு ஆள் போட்டு குளம் வெட்ட, இவரிடமோ கையில் பணம் இல்லை.

கையில் பணம் இல்லை, ஆனால் பக்தி இருக்கிறது இவரிடம்.
பெருமாளுக்காக குளம் வெட்ட, ஆர்வம் மட்டுமே இவரிடம் உள்ள செல்வம்.


அநந்தாழ்வார் தன் மனைவியுடன்,சேர்ந்து இந்த குளம் வெட்ட ஆர்வமாக செயல் பட்டார்.
நிறைமாதமான மனைவியும் இவருக்கு அனுகூலமானவள், தெய்வ பக்தி உள்ளவள்.

அநந்தாழ்வார் மம்மட்டியால் மண்ணை தோண்டி தோண்டி குழி அமைக்க, அவர் மனைவி அந்த மண்ணை கொண்டு போய் குளம் அமைக்கும் இடத்தை தாண்டி போய் கொட்டி விட்டு வருவாள்.

கையில் ஒரு சுமை, வயிற்றில் ஒரு சுமை என்று இருந்தும், நிறை மாத கர்ப்பிணியான இவள் பக்தியுடன் இந்த சேவையை பெருமாளுக்கு செய்தாள்.

கரடு முரடான பாதையில் நடந்து மூச்சு வாங்க இளைப்பாறி, நடந்து கொண்டிருக்கும் அந்த அம்மாளை மலையில் இருந்த ஒரு வேடுவன், கவனித்தான்.

அவள் கர்ப்பவதியாக இருப்பதை கண்டு, மனம் கலங்கி,
மெல்ல அவளிடம் சென்று,
"அம்மா, நீங்கள் செய்யக்கூடிய காரியமா இது?
நான் இந்த காட்டில் எதற்கு இருக்கிறேன்?. கொடுங்கள். நான் இந்த மண்ணை கொட்டி, குளம் கட்டும் வரை உதவி செய்கிறேன்"
என்று சொன்னான்.

அநந்தாழ்வார் மனைவியோ,
"இது தன் கணவனும், தானும் மட்டுமே செய்ய வேண்டிய கைங்கர்யம். பெருமாளுக்காக செய்கிறோம்"
என்றாள்.

வேடுவன்
"அம்மா, பெருமாளுக்காக செய்யும் கைங்கர்யம் என்று சொல்லி, நீங்கள் மட்டும் செய்யலாமா?
நானும் சேர்ந்து செய்தால் எனக்கும் புண்ணியமாகி போகுமே"
என்றான்.

அந்த அம்மாளோ,
"கணவர் மற்றவர் இந்த கைங்கர்யம் செய்ய பிரியப்படமாட்டார்" என்றாள்.
இனி பேசி ஒன்றும் ஆகாது என்று, அந்த வேடுவன் அந்த அம்மாளின் கையில் இருந்த மண் சட்டியை பிடுங்கி, அவள் கேட்காமலே எடுத்து சென்று கொட்டி விட்டு அவள் கையில் கொடுத்தான்.

வேடுவன்
"அம்மா, இந்த நிலையில் நீங்கள் வேலை செய்வது எனக்கு கவலை தருகிறது.
நீங்கள் பேசாமல் அவரிடம் இருந்து மண்ணை கொண்டு வந்து என்னிடம் தாருங்கள். நான் கொட்டி வருகிறேன்"
என்றான்.

மறுப்பு சொல்ல முடியாமல், அந்த அம்மாள், திரும்ப சென்று, மண் அள்ளிக்கொண்டு வர,
அவளிடம் அந்த மண்ணை வாங்கி, கிடு கிடு வென்று ஓடி போய் மண்ணை கொட்டி விட்டு வந்தான் வேடுவன்.

மீண்டும் மண்ணை அள்ள வந்த தன் மனைவியை பார்த்து,
"எப்படி இவ்வளவு சீக்கிரமாக வருகிறாய்?
நான் சொன்ன இடத்தில் கொட்டாமல் அருகிலேயே மண்ணை கொட்டி விட்டு வருகிறாயா?"
என்றார் அநந்தாழ்வார்.

"இல்லை, வேறொருவர் தான் இந்த கைங்கர்யத்தை செய்கிறார்.
வேண்டாம் என்றாலும், வற்புறுத்தி செய்கிறார்"
என்று உண்மையை அப்படியே சொன்னாள்.

"வேறொருவருக்கு எதற்காக நம் கைங்கர்யத்தை கொடுக்கிறாய்?"
என்று  கேட்க,
"நான் வேண்டாம் என்றாலும், கேட்காமல் அவரே நான் எடுத்து செல்லும் மண் சட்டியை பிடுங்கி கொட்டிவிட்டு தருகிறார்."
என்று இவள் சொல்ல
அநந்தாழ்வார் கோபத்துடன்
"யார் அந்த வேடுவன் தன் கைங்கர்யத்தில் இடைஞ்சல் செய்வது?"
என்று சென்று பார்த்தார்.

இவர் வருவதை பார்த்த அந்த வேடுவன், மெதுவாக அவர் முன்வந்து நின்றான்.

அநந்தாழ்வார் கோபத்துடன்
"யாரப்பா நீ? எதற்காக நாங்கள் செய்யும் காரியத்தில் வந்து இடைஞ்சல் செய்கிறாய்?
நீ எதற்காக இப்படி அடுத்தவர் செய்யும் வேலையில் குறுக்கீடு செய்கிறாய்?
உன் உதவி ஒன்றும் தேவை இல்லை.
நாங்களே இதை செய்து கொள்கிறோம்"
என்றார்.

"ஸ்வாமி, நல்ல காரியம் தானே செய்கிறீர்கள். உங்களுடன் சேர்ந்து நானும் செய்கிறேனே?"
என்றான் வேடுவன்.


"நீ கைங்கரியம் செய்ய ஆசைப்பட்டால், தனியாக நீயே ஒரு தோட்டம் போடு.
நான் செய்யும் கைங்கர்யத்துக்கு போட்டிக்கு ஏன் வருகிறாய்?
புண்ணியம் வேண்டுமானால் தனியாக செய்யேன்.. யார் தடுத்தது?"
என்றார் கோபமாக.

"எனக்கு புண்ணியமெல்லாம் வேண்டாம் சாமி.
இந்த கர்பவதியாக இருக்கும் அம்மாள் இப்படி கஷ்டப்பட்டு மண்ணை தூக்கி வருவது எனக்கு தாங்கவில்லை."
என்றான்.

"அயோக்கிய பயலே, நான் தாலி கட்டியவன். எனக்கு இல்லாத அக்கறை, பரிவு உனக்கு வந்து விட்டதோ?"
என்றார் கோபமாக.

"இல்ல சாமி,  எப்பொழுதும் கணவனை காட்டிலும் அம்மாவுக்கு தன் பிள்ளை மேல் அதிக கருணை இருக்கும்.
இந்த அம்மா படும் கஷ்டத்தை என்னால் சகிக்க முடியவில்லை.
என்னை உங்கள் பிள்ளையாக நினைத்து, இந்த கைங்கர்யம் செய்ய அனுமதி அளியுங்கள்"
என்று வேடுவன் கேட்க,

"போடா பயலே... "
என்று அதட்டி அடிக்க வருவதற்குள், அந்த வேடுவன் ஓடி விட்டான்.

இதற்கு பின், திரும்பி மீண்டும் குளம் வெட்டும் இடத்திற்கு வந்தார்.
தன் மனைவியை பார்த்து,
"அந்த பயல் வந்தால் இனி கொடுக்காதே !
நாம் இரண்டு பேர் மட்டுமே சேர்ந்து, இந்த கைங்கர்யத்தை செய்து முடித்திட வேண்டும்.
திருமலையப்பன் பார்க்க வருவார் என்பதற்காக நாம் இதை செய்யவில்லை.
நம் ராமானுஜர் வரும்போது, இந்த கைங்கர்யத்தை நாம் இருவரே செய்தோம் என்று காட்ட வேண்டும்."
என்று சொல்லி, மீண்டும் அவர் குளம் வெட்ட ஆரம்பிக்க, அந்த அம்மாளும் மீண்டும் மண்ணை அள்ளிக் கொண்டு நடக்கலானாள்.

போய் விட்டான் என்று நினைத்த அந்த வேடுவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

மீண்டும் அந்த அம்மாளை பார்த்து
"அம்மா, அவர் கிடக்கிறார் விடுங்கள். ரொம்ப  கோபக்காரர் போல.
அவர் சொல்கிறார் என்பதற்காக நான் போக நினைத்தாலும், உங்களை இப்படிவேலை செய்ய விட்டுவிட்டு என்னால் செல்ல முடியவில்லை"
என்றான்.

அந்த அம்மாள்,
"வேண்டாமப்பா..  அவர் யார் உதவியும் வேண்டாம் என்கிறார்" என்று சொல்லிகொண்டிருக்கும் போதே மீண்டும் அவளிடம் இருந்து மண் சட்டியைபிடுங்கி கொண்டு ஓடி போய் கொட்டிவிட்டு வந்து, சட்டியை கொடுத்தான்.

எதிர்க்கவும் முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல், அந்த அம்மாள்அநந்தாழ்வார் இருக்கும் இடம் சென்றாள்.

மகா உத்தமியான அவள் தன் கணவனிடம், அந்த வேடுவன் மீண்டும் வந்து என் கையிலிருந்து பிடுங்கி கொட்டுகிறான் என்று உண்மையை சொன்னாள்.

அநந்தாழ்வார் வந்ததே கோபம். 'தான் இருவர் மட்டுமே செய்ய நினைத்த கைங்கர்யத்தை' இவன் வந்து கெடுக்கிறானே என்று ஆத்திரத்துடன் அவன்  இருக்கும் இடம் நோக்கி வந்தார்.
"ஏண்டா... உன்னை இங்கிருந்து கிளம்பு என்று சொல்லியும் எங்கள் கைங்கர்யத்தை கெடுக்க வந்தாயா?"
என்று கையில் இருந்த மம்மட்டியுடன் அருகில் வர,
கோபத்துடன் வருகிறார் என்று அறிந்த அந்த வேடுவன், ஓட ஆரம்பிக்க, இவர் துரத்திக்கொண்டே, தன் கையிலிருந்த மம்மட்டியை அவன் மேல் வீச, அந்த வேடுவன்  உதட்டில் பட்டு, ரத்தம் வர ஆரம்பித்து.
தாடையை பிடித்துக்கொண்டே காட்டில் ஓடி மறைந்து விட்டான்.

திரும்பி வந்த அநந்தாழ்வார் அன்றைய நாள் குளம் வெட்டும் வேலையை முடித்து,
அன்றைய பொழுது பெருமாளுக்கு கட்ட வேண்டிய பூ மாலையை கட்ட ஆரம்பித்தார்.

இன்று நடந்த சண்டையால், பெருமாளுக்கு பூ மாலை கட்டி முடிக்க, கொஞ்சம் நேரம் ஆகி விட்டது.

திருவாராதனைக்கு நேரம் ஆக, வெங்கடேச பெருமாள், கோவில் அர்ச்சகர் மூலமாக ஆவேசித்து,
"அநந்தாழ்வாரை உடனே சன்னதிக்கு அழைத்து வா"
என்றார்.

அங்கிருந்த அர்ச்சகர்கள், அநந்தாழ்வாரிடம் ஓடி சென்று தெரிவிக்க,
"இப்பொழுது தான் மாலை கட்ட ஆரம்பித்துள்ளேன். பாதியில் வந்தால் என் கைங்கர்யம் விட்டு போனதாகும். கட்டி முடித்ததும் நானே வருகிறேன்.
பூ மாலை கட்ட சொல்லி, ஸ்ரீராமானுஜர் எனக்கு அளித்த கைங்கர்யம் இது.
பூ மாலை கட்டி முடித்த பின் வருகிறேன்"
என்று சொல்லி அனுப்பினார்.

உடனே பெருமாள்
"கூப்பிட்ட போது வரவில்லையென்றால், உமது மாலை எமக்கு தேவையில்லை."
என்று சொல்லி அனுப்ப,

பதிலுக்கு அநந்தாழ்வார்,
"மாலையை போட்டுக்கொள்ளட்டும், போட்டுக்கொள்ளாமல் இருக்கட்டும்.
பூ மாலை கட்டி கோவிலில் கொடுக்க வேண்டியது என் தொண்டு.
அந்த பூ மாலையை போட வேண்டியது அர்ச்சகர், போட்டுக்கொள்ள வேண்டியது நீர்."
என்று சொல்லி திருப்பி அனுப்பினார்.

உடனே பெருமாள்,
"என் உகப்புக்காக பூ மாலை கட்டாமல், பின் யார் உகப்புக்காக மாலை கட்டுகிறீர் நீர்?"
என்று கேட்க,

பதிலுக்கு அநந்தாழ்வார்,
"உம்முடைய உகப்புக்காக நான் மாலை கட்டவே இல்லையே.
நான் பூ மாலை கட்டுவது என் ராமானுஜன் உகப்புக்காக. என் ஆச்சார்யான் ஸ்ரீராமானுஜர் ஆசை பட்டார் என்றல்லவோ மாலை கட்டிக்கொண்டு இருக்கிறேன்."
என்று பதில் கூறினார்.

உடனே பெருமாள்
"கூப்பிட்ட பொழுது நீர் இங்கு வரவில்லையென்றால், இனி நீர் இங்கு இருக்க கூடாது.
திருமலையை விட்டு இறங்கும். இனி இங்கு இருக்க கூடாது. நீ உன் சொந்த ஊருக்கே போ. என்னை மதிக்காமல் நீ இங்கு இருக்க கூடாது"
என்றார்.


அநந்தாழ்வார் பதிலுக்கு,
"நான் இருக்கக்கூடாது என்று சொல்வதற்கு நீர் யார்? நீரா என்னை அழைத்தீர்?
என்னை இங்கு போக சொல்லி யார் அனுப்பினாரோ, அவர் சொல்லாமல் நான் போக மாட்டேன்.
மேலும், உமக்கே இது சொந்த இடம் இல்லை.
உம்முடைய சொந்த ஊர் 'வைகுண்டம்'.
அதை விட்டு நீரும் இங்கு வந்துள்ளீர். நான் ஸ்ரீ ரங்கத்தில் இருந்து வந்துள்ளேன்.
இருவருக்குமே இது பொது இடம் தான்.
என்னை போ என்று சொல்ல உமக்கு உரிமை இல்லை"
என்று சொல்லிவிட்டார் அநந்தாழ்வார்.

அதற்கு மேல் வாக்குவாதம் செய்யாமல் பெருமாள் அமைதியாகி விட்டார்.

அநந்தாழ்வார் தான் கட்டிக்கொண்டிருந்த பூ மாலை கைங்கர்யத்தை முடித்து விட்டு, கோவிலுக்குள் பூக்கூடையுடன் வந்தார்.
பொதுவாக,

  • தொடுத்த பூமாலையை அர்ச்சகர் வாங்கி, பெருமாளுக்கு போட்டு,
  • தான் கட்டிய பூமாலையுடன் பெருமாள் இருக்கும் அழகை வெகு நேரம் ரசித்து,
  • துளசி, தீர்த்தம், சடாரி வாங்கிய பின்பு தான் 

திரும்பி செல்வார் அநந்தாழ்வார்.

இன்றோ,
அநந்தாழ்வார் "இப்படி பெருமாளிடம் எதிர்த்து கோபமாக பேசி விட்டோமே !!
பெருமாள் நம்மிடம் கோபமாக இருப்பாரே !!" 
என்று தனக்குள்ளேயே வெட்கப்பட்டு, பூமாலையை வைத்து விட்டு, பெருமாளை கூட பார்க்காமல் கிளம்ப முற்பட்டார்.

"ராமானுஜன்" என்ற பெயரை கேட்ட பின்னும், பெருமாளுக்கு கோபம் வருமா?
வெங்கடேச பெருமாளுக்கு துளி கூட கோபம் இல்லை.
ஆனால் பெருமாள் கோபமாக இருப்பாரோ? என்று அநந்தாழ்வாராகவே நினைத்து கொண்டார்.

தலை குனிந்தே வந்து, பூக்கூடையை சன்னதியில் வைத்து விட்டு, தலை குனிந்த படியே திரும்பி செல்ல முயல,
ராமானுஜ அடியானான அனந்தாழ்வார் தன்னை பார்க்க மாட்டாரா? என்று பெருமாள் எதிர்பார்க்க,
உடனே,
பெருமாள் அர்ச்ச அவதார ரூபத்திலேயே "அநந்தாழ்வான்" என்று குரல் கொடுக்க,
அநந்தாழ்வார் திரும்பி பெருமாளை பார்க்க, அவர் கண்ணில் பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிவது தெரிந்தது.
"ஆ..." என்று அலறினார். மூர்ச்சை ஆகிவிட்டார் அநந்தாழ்வார்.
சிறிது நேரம் கழித்து, மூர்ச்சை தெளிந்த அநந்தாழ்வார்,
"இன்று ஒரு வேடுவனை மண் வெட்டியால் அடித்தோமே" என்பது ஞாபகம் வர, "தான் செய்யும் கைங்கர்யத்தில் சேர்ந்து கொள்ள வந்தது பெருமாள் தான்" என்று புரிந்ததும் கதறினார்.

மேலும்,
'திருமலையில் பூக்கள் சிந்தி உள்ளதே'
என்று நினைத்ததற்கே என் ஆச்சார்யான் கண்ணீர் விட்டார் என்றால்,
'எம்பெருமான் திருமேனியில் இப்படி ஒரு காயம் வந்து விட்டது'
என்று என் ஆச்சார்யனுக்கு தெரிந்தால், எத்தனை துக்கப்படுவார்?
இனி என் ஆச்சார்யனுக்கு எதிரில் நிற்க முடியுமா?
'நான் அவர் உகப்புக்காக கைங்கர்யம் செய்கிறேன்' என்று சொல்லி வந்து விட்டு, அவர் மனது தவிக்கும் படியாக இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டேனே, எம்பெருமானே !!

ப்ராக்ருத சரீரம் என்றால், ஒரு வைத்தியனை அழைத்தாவது காயத்திற்கு மருந்து கொடுப்பேன்.
இந்த சரீரமோ திவ்ய மங்கள விக்ரஹம் ஆயிற்றே!!  நான் எங்கு போய் இதற்கு மருந்து தருவேன்?"
என்று கதற ஆரம்பித்தார் அநந்தாழ்வார்.

உடனே பெருமாள்
"அநந்தாழ்வார், எனக்கு தொண்டர் அடி பொடி வேண்டும். பாகவதனின் பாத துளியே எனக்கு மருந்து. கொடுப்பீரா?"
என்று சொல்லி அநந்தாழ்வார் நடந்து வந்த பாத தூளியே தனக்கு மருந்தாக ஏற்று கொண்டார் திருமலையப்பன்.
அதையே "ஸ்ரீ பாதரேணு" என்கிறோம்.

இன்று வரை பெருமாளுக்கு தாடையில் பச்சை கற்பூரத்தை பாதரேணுவாக வைத்து, அதை நமக்கு பிரசாதமாகவும் தருகிறார்கள்.

அந்த பிரசாதம் சர்வ வியாதிக்கும் நிவ்ருத்தி ஆகிறது.

கருணா மூர்த்தியான எம்பெருமான்,
"தன் அடியார்கள் ஆர்வத்துடன் செய்யும் சிறு கைங்கர்யத்தையும் ஆசையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு துளசி இலையானாலும், ஒரு பூவானாலும், ஒரு பழமானாலும் அதை ஆர்வத்துடன் கொடுத்தால், ஆசையுடன் ஏற்றுக்கொள்கிறேன்."
என்கிறார்.
அநந்தாழ்வார் செய்த சிறு பூ கைங்கர்யத்துக்கு அத்தனை ஆசைப்பட்டு, அவருடன் சேர்ந்து தானும் செய்ய ஆசைப்பட்டார். அது போதாது என்று, தனக்கு செய்யும் தொண்டனின் பாத தூளியே தனக்கு பிடித்தமானது என்றும் ஏற்றுக்கொண்டார் திருமலையப்பன்.
இன்றும் வெங்கடேசபெருமாள் பச்சை கற்பூரமாக ஸ்ரீ பாத ரேணுவாக ஏற்று, இதை சாத்திக்கொள்கிறார்.

பரம வைஷணவரான அநந்தாழ்வார், திருமலையிலேயே இருந்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தார்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka