Followers

Search Here...

Showing posts with label தெய்வபக்தி. Show all posts
Showing posts with label தெய்வபக்தி. Show all posts

Friday 8 May 2020

தெய்வபக்தி நமக்கு எப்படி இருக்க வேண்டும்? அங்கோல என்ற அதிசய மரம் நமக்கு விடை சொல்கிறது !

"அங்கோல மரம்" ஒரு அற்புதமான மரம்.

"அங்கோல மரம்" என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்கிறோம்.
('அழிஞ்சில் மரம்' என்று மலையாளத்தில்) ('அளிசல்மரம்' என்று தமிழில்)
மற்ற மரங்களில் இருந்து வித்யாசப்படுகிறது இந்த மரம்.




அழிஞ்சில் மரத்தின் பழங்கள் கீழே உதிர்ந்தால், ஆச்சரியமாக, மீண்டும் மரத்திலே பழையபடி நகர்ந்து ஓட்டிக் கொள்ளும்.
"தெய்வபக்தி நமக்கு எப்படி இருக்க வேண்டும்?"
என்று ஆதி சங்கரர் சொல்லும் போது, இந்த மரத்தை உதாரணம் காட்டுகிறார்.

சிவானந்த லஹரியில் பக்தியை பற்றி சொல்லும் போது, இந்த மரத்தை உதாரணமாக சொல்கிறார் ஆதி சங்கரர்.

"உலகம் மாயை, உடம்பு நானல்ல" என்ற ஞானத்தை (அறிவு) கூட நாம் அறிந்து கொண்டு விடலாம்,
ஆனால், இந்த ஞானம், அனுபவத்தில் பலருக்கு திடமாக வருவதில்லை.

ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தாலே, பலருக்கு "உடல் வேறு, ஆத்மாவாகிய நான் வேறு" என்று உண்மை மறந்து விடும்.

கோடியில் ஒருவனுக்கு தான் இந்த ஞானம் ஸித்தி ஆகிறது.
ஆதி சங்கரர், ராமகிருஷ்ணர், ஜடபரதர் போன்றவர்களுக்கு இந்த ஞான அநுபவம் சாத்தியமாகிறது.

இந்த ஞானம் அனுபவத்தில் வரும் வரை "தெய்வபக்தியை பிடி' என்கிறார்.

தெய்வபக்தி என்றால் என்ன?
"தெய்வத்திடம் அன்பு, தெய்வம் காப்பாற்றுவார் என்ற திட நம்பிக்கையே" - தெய்வபக்தி.

"நம் தெய்வ பக்தி எப்படி இருக்க வேண்டும்?"
என்று சிவானந்த லஹரியில் பாடுகிறார்.
‘அங்கோலம் நிஜபீஜ சந்ததி' என்று "அங்கோல மரத்தை உதாரணம் காட்டி நமக்கு தெய்வபக்தி எப்படி இருக்க வேண்டும்?" என்று வழி காட்டுகிறார்.

1.
அங்கோல மரம் போல 'ஈஸ்வரன்' இருக்கிறார், அதன் பழமாக நீ இருக்க வேண்டும்.
விலகி சென்றாலும், நீயாகவே நகர்ந்து நகர்ந்து அங்கோல மரத்தில் ஒட்டிக்கொள்ளும் பழம் போல, அவரை விட்டு விலக முடியாமல் இருந்தால், அதுவே "பக்தி" என்கிறார்.

எப்படி காந்தம் எந்த பக்கம் திருப்பினாலும் வடக்கு பக்கம் தானாக திரும்புமோ, அது  போல, குடும்பம், வேலை என்று எத்தனை விதமான பொறுப்புகள் வந்தாலும், உன் மனம் ஈஸ்வரனிடமே மீண்டும் மீண்டும் திரும்பினால் - அதுவே பக்தி.
2.
காந்தமும், இரும்பு ஊசியும் போல உனக்கு ஈஸ்வரனிடம் உறவு இருக்க வேண்டும். அதுவே "பக்தி" என்கிறார்.

"ஈஸ்வரன் "காந்தம்" என்பதில் சந்தேகமில்லை. 
ஆனால், நீ மரமாக இருந்து விட கூடாது, அவர் ஈர்க்கும் இரும்பாக மாறி, அவர் அருகில் செல்" என்கிறார்.

"பகவானை அடைய அவர் சம்பந்தமான தகுதியை வளர்த்துக்கொள்" என்கிறார்.
3.
கற்புக்கரசியும் அவளது கணவனும் போல இருக்க வேண்டும். அதுவே "பக்தி" என்கிறார்.

ராவணன் "உலக ஐஸ்வர்யங்கள் கொடுக்கிறேன், பட்டத்து ராணி ஆக்குகிறேன்" என்று சொன்னாலும், தன் கணவனையே நினைத்து இருந்த கற்புக்கரசி போல "நீயும் ஈஸ்வரனையே நினைத்து கொண்டு இரு" என்கிறார்.



4.
மரமும் அதைச் சுற்றிப் பற்றும் படரும் கொடியும் போல இருக்க வேண்டும். அதுவே "பக்தி" என்கிறார்.

"அவரை சார்ந்து இருந்தால் உன் வாழ்க்கை பயணத்தை பற்றி பயப்படவேண்டாம். அவரை சார்ந்தே நீ வாழ்ந்து விடலாம் என்று உணர்ந்து 'அவருக்காக வாழ்'" என்கிறார்.
5.
ஆறுகளும் கடலும் போல இருக்க வேண்டும். அதுவே "பக்தி" என்கிறார்.
"நீ எங்கு சுற்றினாலும், முடிவில் அவரிடம் கலக்க வேண்டியவன் என்பதை மறக்காதே!!" என்கிறார். அதுவே "பக்தி" என்கிறார்.

ஈஸ்வரனிடமே மனசு லயிக்க வேண்டும்.
அதுவே பக்தி..
அந்த பக்தி நமக்கு வர வேண்டும்.

குருநாதர் துணை.
வாழ்க ஹிந்து தர்மம்.

வாழ்க ஹிந்துக்கள்.


Saturday 30 November 2019

கர்மாவுக்கும், கர்ம யோகத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தெரிந்து கொள்வோமே

சமைத்ததை அப்படியே சாப்பிட்டால் - சாதம்.
அதையே தெய்வத்திடம் காட்டி
"இன்று எனக்கு சோறு கிடைத்தது. அதை விட, வாயில் போட்டால் சுவைக்கிறது. இவை அனைத்துக்கும் காரணமான உயிரும் இருக்கிறதே. உனக்கு நன்றி. உயிரை நிற்க வைத்துள்ள நீயே இந்த உணவையும் ஜீரணம் செய்கிறாய்" என்று சொல்லிவிட்டு சாப்பிட்டால் - பிரசாதம்.



சாப்பாடு கிடைக்காமலோ, சாப்பிடாமலோ கிடந்தால் - பட்டினி.
சாப்பாடு சாப்பிடாமல், தெய்வ சிந்தனையுடன் இருந்தால் - விரதம்.

தாகம் எடுத்து குடித்தால் - தண்ணீர்.
தாகம் எடுத்து, தெய்வத்திடம் காட்டிவிட்டு, தெய்வ சிந்தனையுடன் குடித்தால் - தீர்த்தம்.

அருமையான பாட்டை அமைத்தால், கேட்டால் - இசை.
அருமையான பாட்டை தெய்வத்திற்காக அமைத்தால், கேட்டால் - கீர்த்தனம்.

ஈவு இரக்கம் கொண்டிருந்தால் - அவனுக்கு இதயம் உள்ளவன் என்று பெயர்.
இறைவனே அனைத்துமாக காட்சி தருகிறார் என்ற நினைவில் ஈவு இரக்கம் கொண்டிருந்தால் - இதயத்தில் இறைதன்மை கொண்டிருக்கும் அவனே கோவிலாகிறான்.

தனக்கும், உறவுக்கும், ஊருக்கும் உழைப்பது - செயல் (கர்மா).
தெய்வம் நம் செயலை பார்த்து திருப்தி அடைய வேண்டும் என்ற ஆசையில், தனக்கும், உறவுக்கும், ஊருக்கும் உழைப்பது - சேவை (கர்ம யோகம்).

தனக்காகவும், பிறருக்ககாவும் பல இடங்கள் செல்வது - பயணம்.
தெய்வம் ஆசைப்படுகிறது என்றும், தெய்வத்தை காணப்பதற்கும் பல இடங்கள் செல்வது - தீர்த்த யாத்திரை.



ஒழுக்கம், தர்மம், அடக்கம் என்று வாழ்பவன் - மனிதன்.
இறைவனே லட்சியம் என்று வாழ்பவன் - புனிதன்.

மனிதர்கள் தெய்வபக்தி இல்லாமல் செயலை செய்யும் போது, செய்யும் காரியங்கள் அனைத்தையும் கர்மமாக ஆகி, பாவம் புண்ணியம் சேர்த்து, யமனிடம் உதைப்பட்டு பின் மீண்டும் பிறந்து விடுகிறான்.

மனிதர்கள் தெய்வபக்தியுடன் செயலை செய்யும் போது, செய்யும் காரியங்கள் அனைத்தையும் கர்ம யோகமாக ஆகி, பாவம் புண்ணியம் அனைத்தும் அந்த தெய்வமே ஏற்று விடுவதால், யமனிடம் உதைப்படாமல், மோக்ஷம் அடைந்து விடுகிறான்.

ஆதலால் நாமும் பக்தி செய்வோம் !!

வாழ்க ஹிந்து தர்மம்.  வாழ்க ஹிந்துக்கள்.