Followers

Search Here...

Showing posts with label வள்ளுவர். Show all posts
Showing posts with label வள்ளுவர். Show all posts

Friday 10 January 2020

இந்த உலகில் இருக்கும் வரை, நாம் எப்படி வாழ வேண்டும்? நம் லட்சியம் என்ன? அறம் பொருள் இன்பம் வீடு என்றால் என்ன? ... தெரிந்து கொள்ள வேண்டாமா ஹிந்துக்கள்?

சம்ஸ்க்ரிதத்தில்
"தர்ம, அர்த்த, காம, மோக்ஷ" என்று 4 விஷயங்கள் சொல்லப்படுகிறது..
அதையே தமிழில்,
"அறம் பொருள் இன்பம் வீடு" என்று சொல்கிறோம்.

மோக்ஷம் என்ற சம்ஸ்க்ரித சொல்லுக்கு
  1. "விடுதலை" என்றும் அர்த்தம் உண்டு,
  2. "வீடு" என்ற அர்த்தமும் உண்டு.

வீடு:
நாராயணனை பக்தி செய்து, மோக்ஷம் அடைந்த ஜீவன்கள், பரவாசுதேவன் நாராயணனின் இருப்பிடமான வைகுண்டம் அடைந்தால், அந்த ஜீவன் தன்னுடைய சொந்த "வீடு" சேர்ந்தார் என்று அர்த்தம்.
அந்த ஜீவன் நிரந்தர ஆனந்த நிலையிலேயே இருக்கிறான்.




விடுதலை:
"உடம்பு நான் இல்லை, ஆத்மாவே நான்" என்று மட்டும் உணர்ந்து, வைராக்யத்துடன் வாழும் அத்வைதிக்கு, "கைவல்யம்" என்ற "விடுதலை" என்ற மோக்ஷம் மட்டும் கிடைக்கிறது.
அந்த ஜீவனுக்கு "வீடு" என்ற மோக்ஷம் கிடைப்பதில்லை.
இந்த ஜீவன், விடுதலை அடைந்த திருப்தி மட்டுமே பெறுகிறான்.

தமிழன், 
'மோக்ஷம்' என்ற சம்ஸ்க்ரித சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு என்று அறிந்து இருந்தால் தானே, 
தமிழில் "விடுதலை" என்ற நேரிடையான அர்த்தத்தை பயன்படுத்தாமல், "வீடு" என்று குறிப்பாக பயன்படுத்தி இருக்க முடியும்.
நாம் சற்று யோசித்து பார்க்கவேண்டும்.

நம் தமிழ் முனிகள்,
"அறம் பொருள் இன்பம் விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம் பொருள் இன்பம் வீடு"
என்று சொன்னதிலிருந்தே,
'தமிழ் அறிவும், சம்ஸ்க்ரித அறிவும்' எப்படி ஆழ்ந்து இருந்தது நம் தமிழர்களுக்கு என்று தெரிகிறது.

உலக மொழிகள் தோன்றுவதற்கு முன்,
காலம் கணிக்க முடியாததாக
'சம்ஸ்க்ரிதமும், தமிழும்' இருக்கும் போது,
இரண்டு மொழியுமே தெரிந்து இருந்த தமிழன்,
"தமிழும் காலம் சொல்ல முடியாததாக உள்ளது.. சம்ஸ்க்ரிதமும் காலம் சொல்ல முடியாததாக உள்ளது.. இரண்டும் அறிந்து இருந்தவர்கள் தமிழர்கள்" என்று சொல்லி கொள்ளாமல்,
"பழமையான தமிழ் வாழ வேண்டும், ஆனால் நாம் அறிந்து மற்றொரு பழமையான சம்ஸ்க்ரிதம் அழிய வேண்டும்"
என்று நினைப்பது, அறிவுள்ள பேச்சா? என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இரண்டுமே பழமையான மொழிகள். 
"நாம் பேசிய மொழி" என்ற உணர்ச்சி இல்லாத தமிழன் தமிழனா?...

அறிவில்லாததால், போலி மதங்களை தழுவியதால்,
பழமையான நாம் பேசிய மொழிகளை வெறுக்கும் கேடுகெட்டவர்களை ஒடுக்க வேண்டும், சனாதன தர்மத்தில் இருக்கும் பாரத மக்கள்.
12 லக்ஷம் முன், த்ரேதா யுகத்தில், ராமபிரான் அவதரித்த போது,
திருச்சி அருகில் அன்பில் என்ற ஊரில் பிறந்த ஒரு வேடுவ தமிழன் தான், ராமபிரான் சரித்திரத்தை எழுதி, "வால்மீகி" என்று உலக புகழ் பெற்று, இன்றும் புகழ் குறையாமல் இருக்கிறார்..

போலி தமிழர்களுக்கு, போலி மதங்களில் புகுந்ததால் ஹிந்துக்களை வெறுக்கும் பொறமைக்காரர்களுக்கு, "வால்மீகி தமிழன்" என்று கூட தெரியாதே!!


அது மட்டுமா, ராமபிரான் காலம் வரை உத்திர பிரதேசம் சென்று வாழ்ந்த வால்மீகி, ராமபிரான் அவதாரம் முடிந்த பிறகு,
மீண்டும் தன் தாயகம் திரும்பி, "திருநீர்மலை" (சென்னை அருகே) என்ற ஊரில் முக்தி பெற்றார் என்றாவது தெரியுமா?

அதே ராமபிரானுக்கு சமஸ்க்ரிதத்தில் "ஆதித்ய ஹ்ருதயம்" சொன்ன அகத்தியரும் நம் தமிழ் முனி என்று தெரியுமா?
12 லட்சம் முன் த்ரேதா யுகத்தில் "நம் தமிழர் வால்மீகி, சமஸ்க்ரித மொழியில் ராமபிரானை பற்றி எழுதி உள்ளாரே!!  நாம் தமிழில் எழுதுவோம்"
என்று கலியுகத்தில் கம்பன் என்ற இன்னொரு தமிழன் எழுதினான் என்று கூட புரியாத முட்டாளா இன்றைய தமிழன்?
1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ அந்நியர்களால் அடிமைப்பட்டு கிடந்த நம்மை,
போலி மதவாத ஊடகங்களாலும்,
நம் சரித்திர பெருமை அறியாத சாக்கடை புத்தி கொண்ட ஏமாற்று தலைவர்களாலும்,
நம் பெருமை நமக்கு மறைக்கப்பட்டதே!!
அந்தோ பரிதாபம்!!
கும்பகோணத்தில் பல கோவில்கள் காணப்பட்டாலும்! 
யார் இதை அமைத்தாரகள்? 
அந்த மூலவர் எப்பொழுது வந்து இருப்பார்?
என்ற ஆராய்ச்சி செய்யும் புத்தி கூட இல்லாத மழுங்கிய தமிழர்கள் ஆனோமே!!
அந்தோ பரிதாபம் !!
மீனாட்சி கோவிலில் 'உடைக்கப்பட்ட சிவலிங்கம்' கண் எதிரே காட்டப்பட்டாலும்!! 
நம் கோவிலுக்கு என்ன நடந்து இருக்கும்? 
யார் செய்தார்கள்? 
என்ற சரித்திர அறிவு இல்லையே இன்றைய தமிழனுக்கு!!
அந்தோ பரிதாபம் !!
'காஞ்சி வரதன் 40 வருடம் ஒரு முறை 48 நாட்கள் காட்சி கொடுக்க போகிறார்' என்று மட்டும் அறிந்து, தனக்கு தெய்வ அருள் கிடைக்குமா? என்று ஓடி வந்து பார்த்த கோடிக்கணக்கான மக்களுக்கு,
இதே ஆதி வரதனை, 
1017ADல் அவதரித்த ராமானுஜர் பார்த்த போதும், 
அதற்கு பின் அவதரித்த வேதாந்த தேசிகர் பார்த்த போதும், 
இந்த விதி இல்லையே என்று ஆராய அறிவில்லையே?..
அந்தோ பரிதாபம் !!




ராமானுஜர் காலத்தில் 'அத்திவரதர் வெளியில் தான் இருந்தார்' என்கிற போது, எந்த இஸ்லாமிய கலவரத்தால், இந்த 1000 வருட காலத்தில் அத்திவரதர் குளத்தில் மறைக்கப்பட்டார்?
என்ற சாதாரண கேள்வி கூட இன்றைய ஹிந்துக்களுக்கு ஏழவில்லையே!!
அந்தோ பரிதாபம் !!
தற்காலிக ஏற்பாட்டை, 
ராமானுஜர், தேசிகர் பார்க்காத சம்பிரதாயத்தை, 
ஆகம விதி என்று நினைத்து மீண்டும் 
ஆதி வரதரை குளத்தில் வைக்க விட்டு விட்டனரே!! இன்றைய ஹிந்துக்கள்!
அந்தோ பரிதாபம் !!

- நம் பெருமை நாம் அறியாதவரை..
- இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு நம் ஊரின் வரலாறு முன் எப்படி இருந்தது? என்று 2000, 3000 வருடம் முன் சென்று பார்த்து தெரிந்து கொள்ளாதவரை...
- நம் ஊரில் உள்ள கோவில் முதன் முதலில் யாரால் அமைக்கப்பட்டது? என்று அறியாதவரை,
- கோவில் உருவாகும் முன் இருந்த இந்த மூலவர் எந்த காலத்தில் இருந்தார் யாருக்கு தரிசனம் கொடுத்தார்? என்று அறியாதவரை,
ஹிந்துக்களை மதம் மாற்றி, 
ஹிந்துக்களை கொண்டே, ஹிந்து கோவில்களை, மொழியை, கலாச்சாரத்தை அழித்து விடுவார்கள் இந்த போலி அந்நியர்கள்..

ஹிந்துவின் பெருமை அறியாது, "மதம் மாறிய ஹிந்துக்களே" ஹிந்துக்களை அழிக்க முற்படுவார்கள்.
இந்த உண்மையை இன்றும் ஹிந்துக்களாக வாழும் பாரத மக்கள் உணர வேண்டும்.
மீனாட்சி கோவிலில் சிவ லிங்கத்தை உடைத்தவன்,
ஸ்ரீ ரங்கத்தில் 10000 வைஷ்ணவர்களை கோவிலேயே கொன்று குவித்து செல்வங்களை எடுத்து சென்றவன்,
ககாத்திய தேசம் என்ற தெலுங்கானாவில் பெரும் கொள்ளை அடித்து, காளி கோவில் கோஹினூர் வைரம் இன்றும் பெருமையுடன் பேசப்படும் வைரம் உட்பட பல விலை உயர்ந்த ரத்தினங்களை கொள்ளை அடுத்து அலாவுதீன் கில்ஜிக்கு சமர்ப்பித்த மாலிக் காபூர் என்ற இஸ்லாமியன், பூர்வீகத்தில் "ஹிந்துவாக பிறந்தவன்" என்பதை மறக்க கூடாது.
அது மட்டுமா,
1200ADல் பாரத நாட்டில் ஹிந்துக்களை கொன்று, கோவில்களை இடித்து, பிருத்விராஜ் சவுஹான் என்ற ஹிந்து அரசனிடம் முதலில் மன்னிக்கப்பட்டு, மீண்டும் திடீர் தாக்குதல் செய்து பிருத்விராஜ் சவுஹான் கண்ணை பிடுங்கி, ஏளனமாக சிரித்து, கண் பிடுங்கிய நிலையிலும் தான் வைத்து இருந்த அம்பினால் அதே இடத்தில் கொலை செய்யப்பட்டவன் கோரி என்ற இஸ்லாமிய வம்சத்தில் வந்த "முகமது கோரி".. 
இந்த கோரி வம்சத்துக்கு விதை போட்டவன் "அமீர் சூரி" என்ற பௌத்த மதத்தை தழுவி இருந்த ஆதி ஹிந்து வம்சம் என்பதை மறக்க கூடாது.

அசோக மன்னர் "பௌத்த மதத்தில்" ஈர்க்கப்பட்டு, ஆப்கான் முதல் தன் ஆட்சியில் இருந்த அனைத்து சிற்றரசர்களையும் பௌத்த மதத்துக்கு இழுத்தார்.
அசோக மன்னனால் அன்று போடப்பட்ட விதை, 947ல் பெளத்த நாடாக இருந்தது ஈரான், ஆப்கான் போன்ற ஹிந்து தேசங்கள்.
பௌத்த மதத்தையும் விட்டு, இவர்கள் இஸ்லாமுக்கு மாறியதான் விளைவு, அவர்கள் வம்சத்தில் மற்ற மதங்களை வெறுக்கும் முஹம்மத் கோரி போன்றவர்கள் கிடைத்தார்கள்.
தங்கள் தாய் மதத்தை, கலாச்சாரத்தையே அழிக்க பெரு முயற்சி செய்தார்கள்.

சரித்திரம் அறிந்து கொள்ளாதவரை, ஹிந்துக்கள் ஏமாற்றப்பட்டு கொண்டே தான் இருப்பார்கள்..

இனி,
கைவல்யம் என்ற விடுதலைக்கும்,
வைகுண்டம் என்ற வீடுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய இங்கே படிக்கவும்.
"உயிர் பிரிந்த பிறகு, நாம் போய் சேர வேண்டியது எங்கே?"
என்ற நமக்குள் எழும் கேள்விக்கு,
நமது அற்புதமான ஹிந்து தர்மம் "நீ மோக்ஷத்துக்கு செல்ல வேண்டும்" என்று பாதை காட்டுகிறது.
அதை காட்டவே 4வது பதமாக "மோக்ஷம் (வீடு)" என்று சொல்கிறது.




உலகில் பிறந்த நாம் அனைவருமே, "அடைய வேண்டிய லட்சியம், மோக்ஷமே" (சம்சார உலகில் மீண்டும் பிறந்து விடாமல் இருக்கும் நிலை)
என்று முடிவாக சொல்வதால்,
கடைசியாக "மோக்ஷம்" என்ற பதத்தை வைக்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.

"மோக்ஷம்" - உயிர் பிரிந்த பின் கிடைக்கப்போகும் விஷயம்.

இந்த உலகில் இருக்கும் வரை எப்படி வாழ வேண்டும்?
என்ற கேள்விக்கு விடையாக
"அறம் பொருள் இன்பம்" என்று பதில் சொல்கிறது, நம் சனாதன தர்மம்.

நம் சனாதன தர்மம் சொல்லும் ""தர்ம(அறம்), அர்த்த(பொருள்), காம(இன்பம்)"என்ற அற்புதத்தை, தன்னால் முடிந்த அளவுக்கு விவரிக்க, ஆசைப்பட்ட தமிழ் முனி அல்லவா நம் திருவள்ளுவர்.
'மோக்ஷம் என்ற லட்சியத்தை அடைவதற்கு', இந்த உலகில் நாம் எப்படி வாழ வேண்டும்? என்று சொல்லும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை, 
1330 குறள்களாக நமக்கு தந்து விட்டாரே!! நம் தமிழ் முனி திருவள்ளுவர்.

தான் சொல்ல போகும் அறம், பொருள், இன்பம் வழிகாட்டுதலின் முடிவு யார்?
என்று தன் முதல் குறளிலேயே சொல்கிறார் திருவள்ளுவர்.




"அகர முதல் எழுதெல்லாம் ஆதி பகவன்" என்று "பகவான் என்ற சம்ஸ்க்ரித சொல்லை" பயன்படுத்தி,
"எழுத்துக்களில் நான் 'அ'கரமாக இருக்கிறேன்" என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் "அக்ஷரானாம் 'அ'காரோஸ்மி" என்று சொல்வதையே "அகர" என்ற சொல்லை கொண்டே ஆரம்பித்து,
தான் எழுதும் 1330 குறளின் லட்சியம், அந்த பரந்தாமனை அடைவதே என்று காட்டி விடுகிறார் திருவள்ளுவர்.

இப்படி,
நம்முடைய லட்சியம் "மோக்ஷம் என்ற வீடு பெறுவதே" என்று காட்டி,
நாம் உலகில் வாழும் வரை "அறம் பொருள் இன்பம்" என்ற பாதையில் செல்ல, 1330 அறிவுரைகளை வழங்கினார் திருவள்ளுவர்.


நாம் உலகில் வாழும் வரை "அறம் பொருள் இன்பம்" என்ற பாதையில் செல்ல வேண்டும் ஏன் சொன்னார்கள்?
எதற்காக "அறம் பொருள் இன்பம்" என்று வரிசையில் சொன்னார்கள்?

உலகில் "பொருள்" தானே மிக முக்கியம்!! 
"பொருள், இன்பம், அருள்" என்று சொல்லி இருக்கலாமே?
ஏன் "அறம் பொருள் இன்பம்" என்று குறிப்பிட்ட வரிசையில் சொன்னார்கள்? 
இந்த கேள்வியே 'உண்மையான ஆன்மீக தேடல் உள்ள ஜீவனுக்கு' தான் தோன்றும்.

எதற்காக "அறம் பொருள் இன்பம்" என்று இந்த வரிசையில் சொன்னார்கள்?

"அறம், பொருள், இன்பம், வீடு என்ற மோக்ஷத்தை" சேர்த்து சொல்லும் அருமையான குறள் ஒன்றை பார்ப்போம்.
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு        

"உலகில் பணம் (செல்வம்/பொருள்) இல்லாமல் வாழ முடியாது" என்று வள்ளுவரே சொல்கிறார் பாருங்கள்.
அதே  சமயம், 
"இந்த உலகில் நாம் வாழும் போது, அருள் என்ற அறம் ('தர்ம') செய்யாது போனால், மனித வாழ்வின் லட்சியமான அவ்வுலகம் (வைகுண்டம்) என்ற வீடு (மோக்ஷம்) என்ற லட்சியத்தை நீ அடைய முடியாது!! 
மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பாய்!!" 
என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.

வள்ளுவர் "அறம், பொருள், இன்பத்தை" 1330 குரளால் எழுதியதன் நோக்கமே, நாம் 'நம் வாழ்க்கையின் லட்சியமான வீடு என்ற மோக்ஷத்தை அடைய தான்' என்று அறிய வேண்டும்.

"உலகில் பணம் (செல்வம்/பொருள்) இல்லாமல் வாழ முடியாது" என்று வள்ளுவரே சொல்கிறார் பாருங்கள்.

"இந்த உலகில் நீ வாழ வேண்டுமானால், மற்றவர்களை ஏமாற்றியாவது!! அதர்மம் செய்தாவது!! பொருள் சம்பாதிக்க வேண்டும்" 
என்பதற்காகவா வள்ளுவர் "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்று சொன்னார்?
சற்று யோசிக்க வேண்டும்.
வள்ளுவர் அதர்மத்தை போதிக்கவா இப்படி சொன்னார்?
சற்று யோசிக்க வேண்டும்.

இதன் ரகசியத்தை கொஞ்சம் ஆராயும் போதே, நமக்கு இதன் அர்த்தம் புரிந்து விடும்.

"அறம், பொருள், இன்பம்" என்று ஏன் இந்த வரிசையில் சொன்னார்கள் என்பதும் புரியும்.

உலகில் வாழும் வரை, நாம் அனைவருக்குமே பொருள் அவசியமாகிறது. 

"பொருள்" இருந்தால் தான், 
நமக்கு உலக இன்பங்கள் கிடைக்கும்
நாம் உணவு உண்ண, உடை உடுத்த, "பொருள்" தேவைப்படுகிறது.

அதே சமயம், 
"பொருள்" இருந்தால் தான், 
"அறம்" என்ற 'தர்ம'த்தை செய்யவும் முடியும். 
பசி என்று வந்தவனுக்கு கொஞ்சம் அன்னம் (தர்மம்) கொடுக்க, "பொருள்" தேவைப்படுகிறது.

நாட்டில் நல்லவர்களை தீயவர்களிடமிருந்து காக்க, 
நாட்டில் தர்மத்தை காக்க, ஆயுதங்கள் வாங்க, "பொருள்" தேவைப்படுகிறது.

தெய்வத்துக்கு கோவில் கட்டி, நாம் ஆசையாக பூஜை என்ற தர்மத்தை செய்து காலத்தை கழிக்கவும் "பொருள்" தேவைப்படுகிறது.

"அறம்  செய்யவும் பொருள் தேவை. இன்பத்தை பெறவும் பொருள் தேவை" என்பதால், 
பொருளை நடுவில் வைத்து, "அறம் பொருள் இன்பம்" என்று சொல்கிறார்கள். 
எத்தனை ஆழ்ந்த அர்த்தம்!!  
எத்தனை அற்புதமான தர்மத்தில் நாம் பிறந்து இருக்கிறோம்!! என்று நினைத்து பார்க்க வேண்டும்.
ஹிந்துவாக பிறந்ததே பாக்கியமல்லவா? 

"பொருள்" இருந்தால் தான், "அறம்" என்ற "தர்மம்" காரியங்களும் செய்ய முடியும், 
"பொருள்" இருந்தால் தான், "இன்பம்" என்ற "காமத்தை" பெற முடியும்,
என்பதால் தான், 
மறை (வேதம்) சொல்லும் ஆழ்ந்த அர்த்தத்தை அறிந்த வள்ளுவர், 
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்கிறார்.





இப்பொழுது இன்னொரு கேள்வியும், ஆன்மீக தேடல் உண்மையாக உள்ளவனுக்கு தோன்றும்.. 

"அறம் செய்ய... இன்பம் கிடைக்க... "பொருள் அவசியம்" என்பதால், "பொருள்" இந்த இரண்டுக்கும் நடுவில் வைக்கப்பட்டது என்பது புரிகிறது. 
ஆனால், அந்த பொருளை கொண்டு, 
  1. 'அறம்' - அதிகம் செய்ய வேண்டுமா? 
  2. உலக 'இன்பத்தில்' - அதிகம் செலவு செய்ய வேண்டுமா?" 

என்ற கேள்வி எழுகிறது.

"எது முக்கியம்? அறமா? இன்பமா?..   பொருளை கொண்டு அறம் செய்வதா? உலக இன்பத்தை அடைவதா?" 
என்ற கேள்விக்கு, வள்ளுவரே பதில் சொல்கிறார் என்பதும் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தாலே புரியும்.

"அறம் செய்தால் தான் அவ்வுலகம் (வீடு) கிடைக்கும்"  என்று வள்ளுவர் சொல்வதை நன்றாக கவனிக்க வேண்டும். 
(அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை)

"அறம் செய்ய விரும்பு" என்று ஒளவையும் சொல்கிறாள். 

"பொருளை கொண்டு அதிகமாக "அறம்" மட்டுமே செய்" என்று நமக்கு அழுத்தமாக சொல்லவே, முதலாவதாக "அறம்" என்று ஆரம்பிக்கிறது.

"முடிந்த அளவுக்கு நீ அறம்  மட்டுமே செய்!! 
செய்தது போக, உன்னிடம் பொருள் இருந்தால், உனக்கும் கொஞ்சம் உணவு கொடுத்துக்கொள், உடை வாங்கிக்கொள்!!" 
என்று நமக்கு உணர்த்தவே, 
"அறம் பொருள் இன்பம்" என்று வரிசைப்படுத்தி சொல்கிறது, நம் சனாதன தர்மமாகிய ஹிந்து மதம்.

வள்ளுவர் சொன்னபடி, "அறம் செய்ய, பொருள் அவசியம்" என்று உணர்ந்து, 
தர்மப்படி பொருளை சம்பாதித்து, அறம் செய்தால்,
"இந்த உலகில் நாம் செய்த அறம், உலகை விட்டு சென்ற பின், 
வாழ்க்கையின் லட்சியமான மோக்ஷம் என்ற வீடு (அவ்வுலகம்) கிடைக்க செய்யும்" 
என்கிறார் வள்ளுவர்.





"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்" 
என்று வள்ளுவன் சொன்ன 'தர்மத்தின் தலைவனான பரந்தாமனை அடைய, பொருளை கொண்டு அறம் செய்வோம்'.

எத்தனை ஆழ்ந்த அர்த்தம்!!  
எத்தனை அற்புதமான தர்மத்தில் நாம் பிறந்து இருக்கிறோம்!! என்று நினைத்து பார்க்க வேண்டும்.
ஹிந்துவாக பிறந்ததே பாக்கியமல்லவா? 



Friday 11 January 2019

தெய்வத்தால் ஆகாதேனினும் முயற்சி - வள்ளுவன் வாக்கு என்ன சொல்கிறது?


தெய்வத்தால் ஆகாதேனினும்
முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் -
திருக்குறள்.




தெய்வம் தன் சக்தியின் மூலம், நமக்கு அருள் (நன்மை) செய்ய இயலாமல் போனாலும்,
கடுமையான மனித முயற்சியால் நாம் ஆசைப்படுவதை அடைய முடியும்.

இப்படி அர்த்தம் கொள்பவன் அறிவில்லாதவன்.
இப்படி அர்த்தம் கொள்பவன் "போலி தமிழன்"
தெய்வ நம்பிக்கை உள்ள வள்ளுவர், தெய்வ பலத்தை தாழ்த்தி, மனித முயற்சியை உயர்த்தி சொல்ல தேவையுமில்லை.




மனிதனின் முயற்சிக்கு பலன் கொடுப்பது இறைவனே, என்கிற பொழுது, 'இறைவனால் முடியாத ஒன்றை, மனித முயற்சியினால் பெற முடியும்' என்று வள்ளுவர் போன்ற தமிழ் புலவர்கள், தெய்வ புலவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள். 
தமிழ் சங்கமும் ஏற்று இருக்காது.

தமிழ் இலக்கணம் அறிந்த "உண்மை தமிழன்" இதன் உண்மை பொருளை அறிகிறான்.

தமிழ் இலக்கணப்படி, தெய்வம் என்ற சொல்லுக்கு "விதி" என்றும் பொருள் உண்டு.









"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்" ..
என்று வள்ளுவன் கடவுளை "பகவான்" என்ற சொல் கொண்டு அழைக்கிறார்.
'அ' என்ற அகர எழுத்தே பரமாத்மாவை தான் குறிக்கிறது.
எழுத்துக்களில் 'அ' என்ற அகரமாக இருக்கிறேன் 
என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் "அக்ஷரானாம் அகாரோஸ்மி" என்று சொல்வதை தான்,
வள்ளுவர் தன் முதல் குறளிலேயே பயன்படுத்துகிறார். 
"ஆதி பகவன்" என்று பரமாத்மாவை குறிப்பிடுகிறார்.




ஓம் என்ற ஓங்காரம், 'அ' என்ற அகர ஓசையில் தான் ஆரம்பிக்கிறது என்றும் நாம் அறிவோம்.
ஓம் என்ற சொல்லின் பொருளை அறிய, https://www.proudhindudharma.com/2018/01/WhatisAumOM.html?m=1
படிக்கவும்.

தெய்வம் என்ற சொல்லுக்கு தமிழ் இலக்கண படி "விதி" என்று பொருள் இருப்பதை கவனித்தால், 
வள்ளுவர் நமக்கு சொல்லும் பொருள் விளங்கும்.





நாம் இதுவரை செய்த பாவ புண்ணியங்களால் ஏற்படும் எதிர்வினை தான் "விதி" என்கிறோம்.


"விதியின் காரணத்தால், நமக்கு சில காரியங்கள் தடைப்பட்டாலும், நம் கர்ம விதியையும் மாற்ற, நல்ல காரியங்கள் விடாமல் செய்து வந்தால், விதிப்பலனையும் நல்ல காரியங்களால் மாற்றி, நாம் ஆசைப்படுவதை அடைய முடியும்"
என்கிறார் வள்ளுவர்.


HARE RAMA HARE KRISHNA - BHAJAN
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka