Followers

Search Here...

Sunday 25 April 2021

முருக பக்தி செய்பவர்களுக்கு என்ன கிடைக்கும்? விஸ்வாமித்திரர் ராமபிரானிடம் சொல்கிறார். தெரிந்து கொள்வோமே வால்மீகி ராமாயணம்

'முருக பக்தி' செய்பவர்களுக்கு என்ன கிடைக்கும்? - விஸ்வாமித்திரர் ராமபிரானிடம் சொல்கிறார்.

இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய 'பகீரதன்' தேவலோகத்தில் இருந்த கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார்.

பகீரதனின் மகன் காகுத்ஸன்.

இந்த குலத்தில் பரவாசுதேவன் நாராயணனே ராமபிரானாக அவதரித்தார்.

தேவர்களுக்கு சேனாதிபதியாக, சிவபெருமான் அம்சத்துடன் கூடிய ஒரு குழந்தை அவதரிக்க செய்ய, கங்கையிடம் தேவர்கள் பிரார்தித்தனர். 

அக்னி தேவனே சிவபெருமானின் அம்சத்தை கங்கையிடம் செலுத்த, கங்காதேவி கர்ப்பம் தரித்தாள்.

தெய்வாம்சம் கொண்ட இந்த புத்ரன் (ஸ்கந்தன்) கங்கையில் குழந்தையாக தோன்றினான்.




இந்த குழந்தையை, 6 கார்த்திகை நக்ஷத்திர தேவதைகள் தாயாக இருந்து வளர்க்க ஆசைப்பட்டனர். 

உடனேயே, அவர்கள் மார்பில் பால் ஊறியது. 

6 தலைகளால் (ஆறுமுகம்) ஆறு தேவதைகள் கொடுத்த பாலை குடித்தது அந்த குழந்தை.

கார்த்திகையின் பிள்ளையாக இருந்த இந்த பிள்ளை (கார்த்திகேயன்), மறுநாளே வாலிபனாக வளர்ந்து, தேவர்களுக்கு படை தளபதியாக ஆகி விட்டார்.

भक्तश्च यः कार्तिकेये 

काकुत्स्थ भुवि मानवः |

आयुष्मान् पुत्र पौत्रश्च 

स्कन्दसा लोक्यतां व्रजेत् || 

- वाल्मीकि रामायण


பக்தஸ்ச ய: கார்த்திகேய

காகுத்ஸ்த புவி மானவ: |

ஆயுஷமான் புத்ர பௌத்ரஸ்ச

ஸ்கந்தஸா லோக்யதாம் வ்ரஜேத் ||

- வால்மீகி ராமாயணம்




ராமபிரானை பார்த்து, விஸ்வாமித்திரர்,

"காகுத்ஸன் வம்சத்தில் உதித்தவனே! கார்த்திகேயனிடம் யார் பக்தி செய்கிறார்களோ! அவர்களுக்கு நீண்ட ஆயுளும், அவர் பிள்ளைக்கும், கொள்ளுப்பேரனுக்கும் சேர்த்து நீண்ட ஆயுளும் கிடைக்கும். உலக வாழ்வு முடிந்த பிறகு, இவர்கள் ஸ்கந்தன் வழி சென்று ஸ்கந்த லோகம் அடைவார்கள்."

என்று ராமபிரானிடம் சொன்னார்.


Viswamithra said

"Rama of Kakutstha! He who is a devotee of Kartikeyaa, he thrives with longevity, also with sons, grandsons on this humanly earth in his mortal life, and on its conclusion he becomes one with Skanda on journeying to Skanda's abode"

Thursday 1 April 2021

திருவேங்கடமுடையானை தரிசிப்பதால், நம் அனைவருக்கும் ஏற்படும் பாக்கியம் என்ன? பாசுரம் (அர்த்தம்) - "உளன் கண்டாய் நன்நெஞ்சே". திருப்பதி பெருமாளை தொழும் பாசுரம். திருமழிசை ஆழ்வார் தன் நெஞ்சையே கேட்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

திருவேங்கடமுடையானை தரிசிப்பதால், நம் அனைவருக்கும் ஏற்படும் பாக்கியம் என்ன? 

திருமழிசை ஆழ்வார் "உள்ளுவார் உள்ளத்து" என்ற பதத்தின் மூலம், நமக்கு பதில் சொல்கிறார்...

"உள்ளுவார் உள்ளத்து" என்ற பதத்திற்கு அர்த்தத்தை பெரியவாச்சான் பிள்ளை சொல்லும் போது, 

திருவேங்கடமுடையானை தரிசித்த பாக்கியம் பெற்ற பிறகு, நாம் தனியாக முயற்சி செய்து பகவானை நம் நெஞ்சில் புகுத்தி கொள்ள வேண்டிய அவசியமே இல்லையாம்.


திருவேங்கடமுடையானை நாம் பார்த்த மாத்திரத்திலேயே, எம்பெருமானே ஆசையோடு நம் உள்ளத்தில் வலிய வந்து  புகுந்து அமர்ந்து கொள்ள ஓடி வருவாராம் ("உள்ளுவார் உள்ளத்து")





அத்தனை ஆசையோடு நம் நெஞ்சில் புக வரும் எம்பெருமானை, "நான்" என்ற அகம்பாவத்தோடு, நாம் எம்பெருமானை தடுக்காமல் இருந்தாலேயே போதுமாம்.

"நான்" என்ற இந்த அகம்பாவம் தானே, நம் நெஞ்சில் எம்பெருமானை அமர விடாமல் செய்கிறது!

இந்த அகம்பாவத்தை நாம் விட்டொழித்து, அவரை நம் உள்ளத்தில் அமர அனுமதித்தாலேயே போதுமாம். எம்பெருமான் தானாகவே நம் நெஞ்சில் அமர்ந்து விடுவாராம்.

"அகம்பாவம் இல்லாமல் ஸ்ரீனிவாச பெருமாளை பார்த்த என் நல்-நெஞ்சே ! உள்ளத்தில் புகுந்து கொண்டு இருக்கும் எம்பெருமானை பார் (உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்)" 

என்று பாடுகிறார் திருமழிசை ஆழ்வார்.


திருமழிசை ஆழ்வார் (நான்முகன் திருவந்தாதி) பாடுகிறார்...

உளன் கண்டாய் நன்நெஞ்சே!

உத்தமன் என்றும் உளன்கண்டாய்!

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்!

தன் ஒப்பான் தானாய் உளன் காண் தமியேற்கும்,

என் ஒப்பார்க்கு ஈசன் இமை


குருநாதர் துணை