Followers

Search Here...

Saturday 31 December 2022

100 பாபங்கள் அறிவோம்.

100 பாபங்கள் :

தர்ம சிந்தனை உடையவர்களாகவே ஹிந்துக்கள் இருக்கின்றனர். 


ஹிந்துக்கள் மற்ற நாட்டின் மீது படை எடுத்து, அந்த மக்களை அடிமை படுத்தி, அவர்கள் கலாச்சாரத்தை, செல்வத்தை கொள்ளை அடித்ததில்லை. 


தன் மதத்தவர்கள் மற்ற மதம் போனாலும் கண்டிப்பதில்லை. 


ஆள் சேர்க்க மற்றவர்களை போல பிரச்சாரம் செய்து இங்கே இழுப்பதும் இல்லை. 


ஹிந்துக்கள் "பாபங்களுக்கு பயந்ததே" இதற்கு காரணம்


100 பாபங்களுக்கு முக்கியமாக ஹிந்துக்கள் பயந்தனர்.

1.

ஐந்து மகா பாபங்கள் (Five greatest sin)

மதுபானம், சூதாட்டம், கொலை, பொய் சாட்சி, கற்பழித்தல் - பாபம்

2. 

உணவு கட்டுப்பாடின்றி, கண்ட இடத்தில், கண்ட பேர் கையால், கண்ட பொருளை சாப்பிடுவது - பாபம்.

3.

கடவுள் வழிபாடு இன்றி, கடவுள் நம்பிக்கை இன்றி, நன்றி இல்லாமல் சாப்பிடுவதும், தூங்குவதும் - பாபம்.


4.

உண்மையான பக்தி இல்லாமல், பக்தனை போல வேஷம்போட்டு பிறரை ஏமாற்றுவது - பாபம்


5. 

பிறர் நலத்தை கவனிக்காமல், சுயநலமாக இருப்பது - பாபம்


6.

மிருகத்திற்கு ஊசி போட்டு (செயற்கையாக) கரு உண்டாக்குவது - பாபம்


7.

பெண்ணுக்கு ஊசி போட்டு (செயற்கையாக) கரு உண்டாக்குவது - பாபம்


8.

கருவில் உள்ள குழந்தை வளர்வதை (ஸ்கேன்) பார்ப்பது - பாபம்


9.

பெண்களை, 'பிள்ளை பெறும் இயந்திரமாக' நினைப்பது - பாபம்.


10.

உருவான கருவை கலைத்து விடுவது (ப்ரூண ஹத்தி)  - பாபம்.


11.

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல், வளர்ப்பது - பாபம்


12. 

குழந்தை வேண்டாம் என்று கருத்தடை செய்வது - பாபம்.


13.

குழந்தை பிறப்பதை வேடிக்கை பார்ப்பது - பாபம்.


14.

கன்றுக்குட்டியை விற்று விட்டு, பசுமாட்டிடம் பால் கறப்பதும், குடிப்பதும் - பாபம்


15. 

பால் கறக்கும் வரை பசுவை காப்பாற்றி அதன் மூலம் பயன் அடைந்து, மலட்டு தன்மை வந்த பிறகு நன்றி கெட்டு விற்பது - பாபம்


16.

காளை கன்றுகளை கொலைகாரனுக்கு கொடுப்பது - பாபம்


17.

மீன், ஆடு, கோழி இவைகளை வளர்த்து, பின் தானே அவைகள் சாவதற்கு காரணமாக இருப்பது - பாபம்


18.

மாமிசம் சாப்பிடுவதும், மாமிசம் வியாபாரம் செய்வதும் - பாபம்


19.

காலத்தில் பெண்களை திருமணம் செய்து கொடுக்காமல் இருப்பது - பாபம்.


20.

ஆண் பிள்ளையை ஆன்மீகமாக வளர்த்து, பெண் பிள்ளையை கலாச்சாரம் தெரியாமல், அவர்கள் இஷ்டத்துக்கு வளர்ப்பது - பாபம்.


21.

படித்த பெண்களை வேலைக்கு அனுப்பி, பெற்றோர்கள் பணம் சேர்ப்பது - பாபம்


22. 

கலப்பு மணம், விதவா விவாகம், பெண்களுக்கு மறுமணம் செய்வது - பாபம்.


23.

பெண், தாலி கட்டிய கணவனை மீறுவதும், ஆண், தன் மனைவியை கைவிடுவதும் - பாபம்.


24.

விவாகரத்து எக்காரணம் கொண்டும் ஆணும், பெண்ணும் செய்து கொள்வது - பாபம்


25. 

படிக்கும் காலங்களில், ஜாதி வேற்றுமை பார்ப்பது - பாபம்


26.

வேலை பார்க்கும் இடங்களில், ஜாதி வேற்றுமை பார்ப்பது - பாபம்


27.

ஜாதியின் அடிப்படையில் சலுகை கொடுத்து, கல்வி, அதனால் ஏற்பட்ட அறிவு, திறமை, உழைப்பு ஆகிய நான்கை புறக்கணிப்பது - பாபம்


28.

ஒரு சமூகம் முன்னேற்றமடைய கொடுக்கப்பட்ட சலுகையை, காலத்துக்கு ஏற்றவாறு மாற்றாமல், முன்னேற்றம் அடைந்த பிறகும் அதே சலுகையை வைத்து சண்டை இடுவது - பாபம்


29.

நன்றாக படிக்கும் மாணவனுக்கு, மதிப்பெண் (mark) வேண்டுமென்றே குறைவாக போடுவது - பாபம்.


30.

நன்றாக உழைத்தவனுக்கு பதவி உயர்வு தராமல், உழைக்காதவனுக்கு பதவி உயர்வு தருவது - பாபம்.


31.

தான் செய்த தவறை, குற்றத்தை, பிறர் தலையில் கட்டுவது - பாபம்


32. 

வேலை பார்ப்பவனை, திடீரென்று வேலை இல்லை என்று சொல்லி, அனுப்பி விடுவது - பாபம்.


33.

சம்பள உயர்வுக்காக, பார்க்கும் வேலையை விட்டு, நன்றி கேட்டு, மற்ற வேலைக்கு தாவுவது - பாபம்.


34.

சொன்ன சம்பளம் ஒன்று, கொடுத்த சம்பளம் வேறு என்று ஏமாற்றுவது - பாபம்


35. 

வேலை நிறுத்தம் செய்து, பெரிய நிறுவனங்களை பாதிக்கப்பட செய்வது - பாபம்


36.

ஊழியர்களுக்கு ஊதியம் தராமல், அதிக லாபத்தை முதலாளி வைத்துக்கொள்வது - பாபம்


37.

குடி இருக்கும் வீட்டை, சொந்த வீடாக நினைப்பது - பாபம்


38.

ஜாதி வேற்றுமையை சொல்லி கேலி செய்வதோ, திட்டுவதோ - பாபம்


39.

அவரவர் தர்மப்படி செய்து கொள்ளும் ஆடை அலங்காரம், நடைமுறை பழக்கங்களை கேலி செய்வது - பாபம்.


40.

பெற்றோர்களை விட்டு விட்டு, வெளிநாடு சென்று பிழைப்பது - பாபம்.


41.

தன் நாட்டு நாகரீகத்தை விட்டு, பிற நாட்டு நாகரீகத்த்தில் நாட்டம் காட்டுவது - பாபம்


42. 

தாய் மொழியை மதிக்காமல், பிற மொழியை பேசுவதும், படிப்பதும் - பாபம்.


43.

தன் மதத்தை விட்டு, பிற மதத்தில் சேர்வது - பாபம்.


44.

உடலை விட்டு பிரிந்த பெற்றோர்களுக்கு ஈமக்கடன் செய்யாமல் இருப்பது - பாபம்


45. 

மறைந்த பெற்றோர்களுக்கு திதி (திவசம்), தர்ப்பணம் (தன் கையால் கொஞ்சம் ஜலம் விட்டு திருப்தி செய்வது) செய்யாமல் இருப்பது - பாபம்


46.

வருடம் ஒரு முறை, மறைந்த பெற்றோர்களுக்கு திதி (திவசம்) செய்யாமல், வெறும் தானம் மட்டும் செய்வது - பாபம்


47.

சகோதரர்கள் யாராவது ஒருவர் திதி செய்தால் போதும் என்று சும்மா இருப்பது - பாபம்


48.

ஒரே சமையல் செய்து, பல திவசங்களுக்கு பயன்படுத்துவது - பாபம்


49.

சமையல், பக்ஷணம் போன்றவை திவச நாளில் செய்யாமல், ஒரு நாள் முன்பே செய்து பயன்படுத்துவது - பாபம்.


50.

கணவன் மனைவி உறவு இல்லாமல் இருப்பது, கணவன் மனைவி உறவு அல்லாத ஆணும் பெண்ணும் சேர்ந்து வாகனத்தில் போவது - பாபம்.


51.

போதை பொருட்களை, சித்தத்தை கலக்கும் மாத்திரைகளை உட்கொள்வது - பாபம்


52. 

டாக்டர் அனுமதியின்றி தூக்க மாத்திரை சாப்பிடுவது - பாபம்.


53.

கண்ட வேளையில் தூங்குவதும், கண்ட வேளையில் சாப்பிடுவதும் - பாபம்.


54.

கடன் வாங்குவதும், வாங்கிய கடனை அடைக்காமல் ஏமாற்றுவதும் - பாபம்


55. 

தான தர்மம் செய்யாமல், கஞ்சனை போன்று சேர்த்து வைத்து கொள்வது - பாபம்


56.

பாவத்திற்கு பண உதவி செய்வது - பாபம்


57.

வரி கொடுக்காமல், பொய் கணக்கு போடுவது - பாபம்


58.

கோவில் சொத்தையும், தர்ம சொத்தையும் சேர்ப்பது - பாபம்


59.

ஆச்சார்யாளையும், பெரியோர்களையும் பற்றி அவதூறாக பேசுவது - பாபம்.


60.

நான்கு வேதத்தையும், இதிஹாசத்தை பற்றியும் குறை சொல்வது - பாபம்.


61.

ப்ராம்மணனாக பிறந்து, ஸ்நானம், சந்தியா வந்தனம் இரண்டும் செய்யாமல் உணவு உண்பது - பாபம்


62. 

ப்ராம்மணனாக பிறந்து, புகை பிடிப்பது - பாபம்


63.

தெய்வத்திற்கு உகந்த புண்ணிய காலங்களில்,  முன்னோர்களுக்கும் பெற்றோர்களுக்கும் திவசம் போன்ற காரியங்கள் செய்யும்  நாளில் சவரம் செய்து கொள்வது - பாபம்.


64.

தெய்வத்திற்கு உகந்த புண்ணிய காலங்களில்,  முன்னோர்களுக்கும் பெற்றோர்களுக்கும் திவசம் போன்ற காரியங்கள் செய்யும்  நாளில் உறவு கொள்வது - பாபம்.


65. 

ப்ராம்மணனாக பிறந்து, பூணல் போட்ட பிறகு, பூணல் இல்லாமல் இருப்பதும், கழற்றி வைப்பதும் - பாபம்


66.

ப்ராம்மணனாக பிறந்து, குடுமி, பஞ்சகஜம், பூணல் இல்லாமல் எதை செய்தாலும் - பாபம்


67.

பெண்கள் தங்கள் அவயவங்கள் தெரியுமாறு உடையணிவது - பாபம்


68.

ஆண்களும், பெண்களும் அரைகுறை ஆடையோடு கேளிக்கை செய்வது - பாபம்


69.

தம்பதிகளாக இல்லாத ஆணும், பெண்ணும் கை குலுக்குவதும், கட்டிபிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் - பாபம்.


70.

அட்டஹாசமாக சிரிப்பதும், அட்டஹாசமாக கூச்சல் போடுவதும், அட்டஹாசமாக சண்டைபோடுவதும், அழுவதும் - பாபம்.


71.

இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி கலகம் மூட்டுவதும், குடும்பத்தை பிரிப்பதும் - பாபம்


72. 

பெண்கள் மாத விலக்கு காலங்களில் விலகி இல்லாமல், சேர்ந்திருப்பது - பாபம்


73.

மாத விலக்கான பெண்கள் ஓய்வாக இல்லாமல், இவர்களுக்கு மற்றவர்கள் சமைத்து ஓய்வு அளிக்காமல், இவர்களை சமைக்க செய்வதும், அந்த உணவை பிறர் சாப்பிடுவதும் - பாபம்.


74.

தெய்வத்திற்கு உகந்த புண்ணிய காலங்களில்,  முன்னோர்களுக்கும் பெற்றோர்களுக்கும் திவசம் போன்ற காரியங்கள் செய்யும்  நாளில் மாத விலக்கான பெண்கள் கலந்து கொள்வது - பாபம்.


75. 

ஜனனம் ஆன சமயத்திலும், மரண சமயத்திலும் தேவ காரியங்கள் செய்வது - பாபம்


76.

மரணம், மாத விலக்கு போன்ற தீட்டு காலங்களில், கோவிலுக்குள் போவது - பாபம்


77.

பெண்கள் தன் கணவனை தவிர அன்ய புருஷனிடம் அளவுக்கு மீறி பேசுவது, பழகுவது - பாபம்


78.

கணவனை சொல்லை விட, அன்ய புருஷன் சொல்வதை கேட்டு நடப்பது - பாபம்


79.

கணவனை விட்டு, வேறு தேசம் சென்று வேலை பார்ப்பது - பாபம்.


80.

பெற்றோர்களை விட்டு, பெண் வேறு தேசம் சென்று படிப்பது, வேலை பார்ப்பது - பாபம்.


81.

மாமனார், மாமியாரை வீட்டை விட்டு போ, என்று மருமகள் சொல்வது - பாபம்


82. 

மருமகளை, மகனோடு வாழ விடாது மாமனார், மாமியார் செய்தால் - பாபம்


83.

கல்யாணம் ஆகியும், பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் இருந்தால் - பாபம்.


84.

கல்யாணம் ஆகியும், பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பாமல் பெண்ணை வைத்து கொண்டு, மாப்பிள்ளையிடம் பணம் வாங்குவது - பாபம்.


85. 

படுத்த படுக்கை ஆகிவிட்ட பெற்றோர்களை கவனிக்காமல், பெற்ற பிள்ளைகள் (ஆண்/பெண்) இருப்பது - பாபம்


86.

வியாதியினால் அவதிப்படும், அங்கஹீனம் ஆகி அவதிப்படும் எந்த உறவினரையும்  புறக்கணிப்பது, கவனிக்காமல் இருப்பது - பாபம்


87.

ஆபத்து, பேரழிவு காலங்களில் உறவினர்களை இழந்து, அகதிகள் ஆகி போனவர்களை புறக்கணிப்பது, கவனிக்காமல் இருப்பது - பாபம்


88.

அகதியாக இருப்பவன், கஷ்டப்படுபவன், காப்பாற்றப்பட்டு வாழ வழி காட்டப்பட்டவுடன், காப்பாற்றிய தேசத்துக்கே, மக்களுக்கே பாதகம் செய்வது. அகதியாக வாழும் இடத்தையே சொந்தம் கொண்டாடுவது - பாபம்


89.

சேர்ந்து இருந்து கொண்டே, கூட இருப்பவனுக்கு குழி பறிப்பது, ஏமாற்றுவது - பாபம்.


90.

தஞ்சம் என்று வந்தவரை, சமயத்தில் பிறரிடம் காட்டிக்கொடுப்பது - பாபம்.


91.

கொலைகாரனிடமிருந்து தப்பி ஓடும் விலங்கை, மனிதன் பிடித்து கொடுத்து கொலைக்கு தூண்டுவது - பாபம்


92. 

சம்பளம் கொடுக்காமல், வேலை வாங்குவது - பாபம்


93.

வியாபாரத்தில் வரும் லாபத்தை, அவ்வப்போது வேலை செய்வோருக்கு சம்பளம் போக, லாபத்தில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது - பாபம்.


94.

வேலைக்கு வரும் பெண்களிடம் தவறாக பேசுவது, பார்ப்பது, கற்பழிப்பது - பாபம்.


95. 

நம்பிக்கையோடு வந்த நோயாளி, தவறுதலான சிகிச்சையினால் மரணம் அடைந்தால் - பாபம்


96.

கர்ம வினையை அனுபவிக்காமல், ஒருவர் உறுப்பை மற்றவருக்கு வைப்பது  - பாபம்


97.

ரத்த தானம், மாமிச தானம், கண் தானம் செய்வதும் கூட - பாபம்


98.

தெய்வத்தின் பெயரால், கொலை செய்வது - பாபம்


99.

தற்கொலை செய்து கொண்டால் - பாபம்.


100.

பிறப்புக்கு தாய் தந்தை தான் காரணம் என்று, கடவுள் காரணமில்லை என்று சொல்லி, மரணம் எந்த வயதிலும், எந்த நிலையிலும் வரலாம் என்று அறிந்தும், பிறப்புக்கும், மரணத்திற்கும் பகவான் சூத்ரதாரியாக இருக்கிறார் என்று அறியாமல், நாதீகனாக நன்றி கெட்டு இருப்பது - பாபம்.


தெரிந்தோ, தெரியாமலோ இந்த பாபங்கள் நம் வாழ்வில் ஸம்பவித்தால், காரணமில்லாத துக்கங்கள் (நம் துர்மரணம் அல்லது நம் ப்ரியபட்டவர்கள் துர்மரணம், எல்லாம் இருந்தும் நிம்மதி இழந்த நிலை, நோய், கவலை) நம் வாழ்விலும், நம் சந்திதியினருக்கும் சேரும். 


பூஜையோ, தானமோ, தர்மமோ இந்த பாபங்களை எளிதில் போக்காது. இதை செய்ய நமக்கு நேரமும் கிடையாது.


தினமும் நடக்கும் போதும், உட்காரும் போதும், அமைதியாக இருக்கும் போதும், தூங்க செல்லும் போதும், எழுந்திருக்கும் போதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், 

கோவிந்தனின் நாமத்தை சொல்லி கொண்டிருந்தால், செய்த பாபத்திற்கு அதுவே ப்ராயச்சித்தமாகும். 


நம் திறனையும் மீறி, பாபத்தால் ஏற்படும் துக்கங்கள், கோவிந்தனின் நாமத்தை சொல்வதால், நமக்கு ஏற்படாமல் இருக்கும்.


பெருமாள் "கோவிந்தா" என்ற இந்த சொல் ஒன்றை தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார். 


திரௌபதியை காப்பாற்றிய சொல்லும் "கோவிந்தா" என்ற நாமமே.


கலியில் யோகம், யாகம், பூஜை, தவம் எதையும் செய்ய சக்தியற்ற மனிதர்களுக்கு, "கோவிந்தா" என்ற நாமமே வழித்துணை.

Friday 30 December 2022

மஹாபாரத போரில், 18 அக்ஷௌணி சேனையில் எத்தனை போர் வீரர்கள் இருந்தனர்? குருக்ஷேத்ரத்துக்கு 'ஸமந்த-பஞ்சகம்' என்ற பெயர் எதனால் கிடைத்தது?

குருக்ஷேத்ரத்துக்கு 'ஸமந்த-பஞ்சகம்' என்ற பெயர் எதனால் கிடைத்தது?

மஹாபாரத போரில், 18 அக்ஷௌணி சேனையில் எத்தனை போர் வீரர்கள் இருந்தனர்?


ரிஷிகள் ஸூதரிடம் "ஸமந்த-பஞ்சகம் என்ற இடத்தை பற்றி சொன்னீர்களே, அதை பற்றி மேலும் சொல்ல வேண்டும்" என்று பிரார்த்தித்தனர்.


ஸூதர் பேசலானார்...

"அந்தணர்களே! கேளுங்கள், சொல்கிறேன்.

ஸாதுக்களே !  ஸமந்த-பஞ்சகம் பற்றி சொல்கிறேன்.

த்ரேதா யுகமும், துவாபர யுகமும் சந்தித்த சமயத்தில், அஸ்திரங்களில் சிறந்த பரசுராமர் கோபத்தினால் தூண்டப்பட்டு, பூமியில் அரசாளும் க்ஷத்ரியர்களை அடிக்கடி வதம் செய்தார்.

शृणुध्वं मम भो विप्रा ब्रुवतश्च कथाः शुभाः।

समन्त-पञ्चक आख्यं च श्रोतुमर्हथ सत्तमाः।।

त्रेता-द्वापरयोः सन्धौ रामः शस्त्रभृतां वरः।

असकृत्पार्थिवं क्षत्रं जघानामर्षचोदितः।।

- மஹாபாரதம் (வியாசர்)

அக்னியை போன்று இருந்த பரசுராமர், தன் பராக்ரமத்தால் க்ஷத்ரியர்களை அழித்து, ஸமந்த-பஞ்சகம் என்ற இடத்தில 5 ரத்த மடுக்களை (பள்ளம்) அமைத்து, கோபத்தால் அந்த மடுக்களில் தண்ணீர் போல ரத்தத்தையே நிரப்பினார். க்ஷத்ரியர்களின் ரத்தத்தினாலேயே பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தார் என்று கேள்விப்படுகிறோம்.


இப்படி இவர் செய்வதை கண்ட ரிஷிகர் போன்ற பித்ருக்கள் சேர்ந்து, இவர் முன் தோன்றி, "ராமா! ராமா! ப்ருகு குலத்தில் தோன்றியவனே! உன்னுடைய இந்த அதீத சக்தியை கண்டும், உன் பித்ரு பக்தியை கண்டும் ஆனந்தப்படுகிறோம்.

अथर्चीकादयोऽभ्येत्य पितरो रामम् अब्रुवन्।

राम राम महाभाग प्रीताः स्म तव भार्गव।।

- மஹாபாரதம் (வியாசர்)


பெரியசக்தி உள்ளவனே! உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும். வேண்டிய வரத்தை கேட்டு கொள்" என்றனர்.


பரசுராமர், "பித்ருக்களாகிய நீங்கள் என்னை கண்டு ப்ரீதி அடைந்து அனுகிரகம் செய்ய ஆசைப்பட்டால், நான் இது வரை க்ஷத்ரியர்களை அழித்ததாகிய பாவத்திலிருந்து விடுபட வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்." என்றார்.

यदि मे पितरः प्रीता यद्यनुग्राह्यता मयि।

यच्च रोषाभिभूतेन क्षत्रमुत्सादितं मया।।

अतश्च पापान्मुच्येऽहमेष मे प्रार्थितो वरः।

ह्रदाश्च तीर्थभूता मे भवेयुर्भुवि विश्रुताः।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட பித்ருக்கள், "அப்படியே ஆகும். இனி நீ பொறுத்து கொள்ள வேண்டும்" என்று ஆசிர்வதித்தனர்.


இதை கேட்ட பிறகு, பரசுராமர் சாந்தமடைந்தார்.


ரத்தமே ஜலமாக இருந்த அந்த மடுக்கள் இருக்கும் இடமே "ஸமந்த-பஞ்சகம்" என்று பெயர் பெற்றது.

இதே இடத்தில், துவாபர யுகமும், கலி யுகமும் சந்தித்த சமயத்தில், கௌரவ சேனைக்கும், பாண்டவ சேனைக்கும் யுத்தம் உண்டாயிற்று.

अन्तरे चैव संप्राप्ते कलिद्वापरयोरभूत्।

समन्तपञ्चके युद्धं कुरुपाण्डवसेनयोः।।

- மஹாபாரதம் (வியாசர்)


தர்மத்தை நிலைநாட்டிய இந்த க்ஷேத்ரத்தில் யுத்தம் செய்வதற்காக 18 அக்ஷௌணிகள் சேர்ந்தனர்.

तस्मिन्परमधर्मिष्ठे देशे भूदोषवर्जिते।

अष्टादश समाजग्मुरक्षौहिण्यो युयुत्सया।।

- மஹாபாரதம் (வியாசர்)


ப்ராம்மணர்களே ! இந்த தர்ம க்ஷேத்ரத்திலேயே அனைத்து அக்ஷௌணிகளும் அழிந்தனர்.


இவ்வாறு இந்த க்ஷேத்ரம் 'ஸமந்த-பஞ்சகம்' என்று பெயர் பெற்றது." என்று சொன்னார்.


ரிஷிகள் அக்ஷௌணியின் எண்ணிக்கை பற்றி கேட்க, ஸூதர் மேலும் பேசலானார்..


"சேனை விதியில்,

1 தேர் (ரதம்), 1 யானை, 3 குதிரைகள், 5 காலாட்கள் சேர்ந்து - ஒரு பத்தி (1,1,3,5) என்று சொல்லப்படுகிறது.

एको रथो गज: च एको नराः पञ्च पदातयः।

त्रय: च तुरगा: तज्ज्ञैः पत्ति: इति अभिधीयते।।

- மஹாபாரதம் (வியாசர்)

3 பத்தி சேர்ந்து - ஒரு சேனாமுகம் (3,3,9,15) என்று சொல்லப்படுகிறது.

3 சேனாமுகம் சேர்ந்து - ஒரு குல்மம் (9,9,27,45) என்று சொல்லப்படுகிறது.

पत्तिं तु त्रि-गुणाम् एताम् आहुः सेनामुखं बुधाः।

त्रीणि सेनामुखान् एको गुल्म इति अभिधीयते।।

- மஹாபாரதம் (வியாசர்)


3 குல்மம் சேர்ந்து - ஒரு கணம் (27,27,81,135) என்று சொல்லப்படுகிறது.

3 கணம் சேர்ந்து - ஒரு வாஹினி (81,81,243,405) என்று சொல்லப்படுகிறது.

3 வாஹினி சேர்ந்து - ஒரு ப்ருதன் (243,243,729,1215) என்று சொல்லப்படுகிறது.

त्रयो गुल्मा गणो नाम वाहिनी तु गणा: त्रयः।

स्मृता: तिस्र: तु वाहिन्यः पृतनेति विचक्षणैः।।

- மஹாபாரதம் (வியாசர்)


3 ப்ருதன் சேர்ந்து - ஒரு சமு (729,729,2187,3645) என்று சொல்லப்படுகிறது.

3 சமு - ஒரு அனீகினீ (2187,2187,6561,10935) என்று சொல்லப்படுகிறது.

10 அனீகினீ - ஒரு அக்ஷௌணி (21870,21870,65610,109350)  என்று சொல்லப்படுகிறது.

चमू: तु पृतन अस्ति  स्रस्तिस्र: चमु अस्तु अनीकिनी।

अनीकिनीं दशगुणां प्राहु: अक्षौहिणीं बुधाः।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஒரு அக்ஷௌணியில், ஏறத்தாழ (ப்ரசங்க்யமாக)  20 ஆயிரத்துக்கும் மேல், ஆயிரத்துக்கும் மேல், நூற்றுக்கும் மேல் ரதங்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும், லட்சத்துக்கு மேல், ஆயிரத்துக்கும் மேல், காலாட் படையும், 50 ஆயிரத்துக்கும் மேல் முன்னூறுக்கும் மேல் குதிரைப்படைகளும் உள்ளனர்.

अक्षौहिण्याः प्रसंख्याता रथानां द्विजसत्तमाः।

संख्या गणित तत्त्वज्ञैः सहस्राणि एक विंशतिः।।

शतानि उपरि च एव अष्टौ तथा भूय: च सप्ततिः।

गजानां च परीमाणमेतदेव विनिर्दिशेत्।।

ज्ञेयं शतसहस्रं तु सहस्राणि नव एव तु नराणाम् अपि ।

पञ्च आशच्छ तानि त्रीणि च अनघाः।।

- மஹாபாரதம் (வியாசர்)


இவ்வாறு அக்ஷௌணியின் எண்ணிக்கையை மஹாபாரதத்தில் காண்கிறோம்.


சரியாக, 

1 அக்ஷௌணி என்பது

21,870 ரதங்களும்; 21,870 யானைகளும்; 65,610 குதிரைகளும்; 1,09,350 காலாட்படையும் சேர்ந்தது.

அது போல,

18 அக்ஷௌணி (2,18,700) என்பது, 3,93,660 ரதங்களும்; 3,93,660 யானைகளும்;  11,80,980 குதிரைகளும்; 19,68,300 காலாட்படையும் சேர்ந்தது. 

(Nearly 39 lakh (39,36,600) mighty army men around the world, have died fighting each other in same place called kurukshetra @ samantha-panchakam in 18 days mahabharata War)


மஹாபாரத போரின் முடிவில், வெறும் 10 பேர் மட்டுமே இதில் உயிரோடு இருந்தனர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸாத்யகி, யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன், சஹதேவன், அஸ்வத்தாமன், க்ருதவர்மன், கிருபர்)

Thursday 29 December 2022

பரீக்ஷித் எத்தனை வருடங்கள் வாழ்நதார்? How long king parikshit lived?

How long king parikshit lived? ரீக்ஷித் எத்தனை வருடங்கள் வாழ்நதார்?

அஸ்வத்தாமா தூங்கிக்கொண்டிருந்த பாண்டவர்களின் பிள்ளைகளை மற்றும் திரௌபதியின் சகோதரன், சிகண்டி போன்றவர்களை கொன்று, கர்ப்பமாக இருக்கும் உத்திரையின் மீதும் அஸ்திரம் செலுத்தினான்.

அதை கிருஷ்ணர் தடுத்தார்.


இவனின் காரியங்களை பார்த்து ஸ்ரீகிருஷ்னர், "3000 வருடங்கள் உயிரோடு இருந்து, காட்டில் தனி ஆளாக அலைந்து கொண்டிருப்பாய்" என்று சபித்தார்.


அதே சமயம், தன்னால் காப்பாற்றப்பட்ட பிள்ளை, கர்ப்பத்தில் வளர்ந்து, பரீக்ஷித் என்ற பெயருடன் புகழ் பெறுவான் என்றார்.

மேலும்,

"சூரனான பரீக்ஷித் நீண்ட ஆயுளை அடைந்து சிறந்த விரதத்தை கடைபிடித்து கொண்டு, சரத்வானுடைய பிள்ளையான இந்த க்ருபரிடம் அனைத்து அஸ்திரங்களையும் கற்பான். தர்மாத்மாவான பரீக்ஷித், உத்தமான சாஸ்திரங்களை படித்து, க்ஷத்ரிய தர்மத்தில் இருந்து, 60 வருட காலங்கள் பூமியை ஆள போகிறான்." என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னார்.

वयः प्राप्य परिक्षित्तुं देवव्रतमवाप्य च।

कृपाच्छारद्वताच्छूरः सर्वास्त्राण्युपपत्स्यते।।

विदित्वा परमास्त्राणि क्षत्रधर्मव्रते स्थितः।

षष्टिं वर्षामि धर्मात्मा वसुधां पालयिष्यति।।

इतश्चोर्ध्वं महाबाहुः कुरुराजो भविष्यति।          

परिक्षिन्नाम नृपतिर्मिषतस्ते सुदुर्मते।।

- மஹாபாரதம் (வியாசர்)

Tuesday 27 December 2022

கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்? how many days krishna studied in shanthibini ashram?

கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்?

how many days krishna studied in shanthibini ashram?

பீஷ்மர் சொல்கிறார்...


ततस्तौ जग्मतुस्तत्र गुरुं सान्दीपिनिं पुनः।

गुरुशुश्रूषणायुक्तौ धर्मज्ञौ धर्मचारिणौ।।

व्रतम् उग्रं महात्मानौ विचरन्ताववन्तिषु।

अहोरात्रैश्च तुष्पष्ट्या साङ्गान्वेदानवापतुः।।

- மஹாபாரதம் (வியாசர்)

கிருஷ்ணரும், பலராமரும் சாந்தீபினி ஆஸ்ரமத்துக்கு சென்றனர். தர்மம் அறிந்தவர்களுமான, தர்மத்தை கடைபிடிப்பவர்களுமான இருவரும், கடுமையான ப்ரம்மச்சர்யத்தை கடைபிடித்து கொண்டு, குருவுக்கு இரவுபகல் பாராது சேவை செய்து, 64 நாட்களில் வேதம், வேத அங்கங்கள் (கலைகள்) முழுவதையும் கற்றனர்.

लेख्यं च गणितं चोभौ प्राप्नुतां यदुनन्दनौ।

गान्धर्ववेदं वैद्यं च सकलं समावापतुः।।

हस्तिशिक्षामश्विशिक्षां द्वादशाहेन चाप्नुताम्।

तावुभौ जग्मतुर्वीरौ गुरुं सान्दीपिनिं पुनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

அந்த யாதவர்கள், எழுத்து (writing), எண் (maths), சங்கீதம் (music), வைத்தியம் (medicine), யானை பயிற்சி (elephant handling  / riding), குதிரை பயிற்சி (horse handling /ride) இவற்றையெல்லாம் 12 நாட்களில் கற்றனர்.


धनुर्वेदचिकीर्षार्थं धर्मज्ञौ धर्मचारिणौ।

ताविष्वासवराचार्यमभिगम्य प्रणम्य च।।

- மஹாபாரதம் (வியாசர்)

தர்மம் அறிந்தவர்களுமான, தர்மத்தை கடைபிடிப்பவர்களுமான இருவரும், தனுர் வேதம் (weaponary) கற்று கொள்ள மீண்டும் சாந்தீபினி ஆஸ்ரமம் வந்து, தன் ஆசாரியரை வணங்கினர்.


तेन वै सत्कृतौ राजंश्चरन्तौ ताववन्तिषु।

पञ्चाशद्भिरहोरात्रैर्दशाङ्गं सुप्रतिष्ठितम्।।

स-रहस्यं धनुर्वेदं सकलं ताववापतुः।

दृष्ट्वा कृतार्थो विप्रेन्द्रो गुर्वर्थे तावचोदयत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

யுதிஷ்டிர ராஜன் ! வில் வித்தையில் தேர்ந்த அந்த சாந்தீபினியை நமஸ்கரித்து, அவரால் மிகவும் விரும்பப்பட்ட இந்த இருவரும், அவந்தி தேசத்தில் இருந்து கொண்டே, 50 நாட்களில் இரவு பகல் பாராமல் கற்று, 10 அங்கங்களோடு கூடிய தனுர் வேதத்தை அதன் ரஹஸ்யங்களோடு கூட அறிந்து கொண்டு, மனதில் ஆழமாக பதியும் படி கற்றனர்.


கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்? 64+12+50=126 நாட்கள்.


ஸ்ரீ கிருஷ்ணராக பகவான் நாராயணனே வந்தார் என்பதால் 128 நாட்களில் படித்தார் என்பது கூட ஆச்சரியமில்லை.

இவை அனைத்தும் சாந்தீபினியே சொல்லி கொடுத்தார் என்று பார்க்கும் போது, அவர் பெருமையை நாம் உணரலாம்.

உஜ்ஜயினி என்று இன்று சொல்லப்படும் நகரமே அன்று அவந்தி தேசமாக இருந்தது. 

மனு ஸ்மிருதி அறிவோம் - பாகம் 12

மனு ஸ்மிருதி அறிவோம் - பாகம் 12

चातुर्वर्ण्यस्य कृत्स्नो अयमुक्तो धर्मस्त्वया अनघः ।

कर्मणां फलनिर्वृत्तिं शंस नस्तत्त्वतः पराम् ॥

மனு ஸ்மிருதி

நான்கு வர்ணத்தில் இருப்பவர்களின் விதிமுறையை சொன்னீர்கள். இனி எங்களுக்கு செயல்களால் (கர்மா/action) விளையும் பலனை (கர்மவினை/reaction) பற்றி விவரிக்க வேண்டும்.

स तानुवाच धर्मात्मा महर्षीन् मानवो भृगुः ।

अस्य सर्वस्य शृणुत कर्मयोगस्य निर्णयम् ॥

மனு ஸ்மிருதி

மனுவின் புத்ரனான ப்ருகு ரிஷிகளை பார்த்து "அனைத்து கர்மாவுக்கும் ஏற்படும் பலனை விவரிக்கிறேன்" என்றார்.


शुभ: अशुभ फलं कर्म मनो-वाग्-देह सम्भवम् ।

कर्मजा गतयो नॄणाम् उत्तम अधम मध्यमः ॥

நாம் மனதினாலும், சொல்லினாலும், உடலாலும் செய்யும் செயலை பொறுத்து, நல்லதும் கெட்டதும் நடக்கிறது. இந்த செயல்களை பொறுத்தே, ஒருவனுக்கு உத்தம வாழ்க்கையும், கீழ்த்தரமான வாழ்க்கையும், நடுத்தரமான வாழ்க்கையும் அமைகிறது.


तस्यैह त्रिविधस्यापि त्र्यधिष्ठानस्य देहिनः ।

दश-लक्षण युक्तस्य मनो विद्यात् प्रवर्तकम् ॥

மனம், வாக்கு, தேகம் இந்த மூன்றினாலும் 10 வகையான வினைகள் உண்டாகின்றன. மனமே எந்த செயலுக்கும் மூல காரணமாக இருக்கிறது.


परद्रव्येष्वभिध्यानं मनसा अनिष्ट चिन्तनम् ।

वितथा अभिनिवेशश्च त्रिविधं कर्म मानसम् ॥

பிறர் பொருளை பார்த்து ஆசைப்படும் போது, மனம் 3 விதமான பாவ காரியங்களை செய்ய தூண்டும்.

पारुष्यम् अनृतं चैव 

पैशुन्यं चापि सर्वशः ।

असम् बद्ध-प्रलापश्च 

वाङ्मयं स्याच् चतुर्विधम् ॥

- மனு ஸ்மிருதி

கடுமையாக பேசுதல், பொய் பேசுதல், பழி சுமத்துதல், ஊர்வம்பு பேசுதல். இந்த 4ம் வாக்கினால் செய்யப்படும் பாவ செயல்கள்.


अदत्तानामुपा आदानं हिंसा चैव अविधानतः ।

परदारोपसेवा च शारीरं त्रिविधं स्मृतम् ॥

பிறர் சொத்தை பறித்து அனுபவித்தல், ஹிம்சை செய்தல், பிறர் மனைவியை அடைதல், இந்த 3ம் உடலால் செய்யப்படும் பாவ செயல்கள்.


मानसं मनसेवा अयमुपभुङ्क्ते शुभाशुभम् ।

वाचा वाचा कृतं कर्म कायेनेव च कायिकम् ॥

மனத்தால் செய்த நல்ல செயல்களின் பலனையும், கெட்ட செயல்களின் பலனையும், மனத்தினால் அனுபவித்தாக வேண்டும்.

பேசியதால் செய்த நல்ல செயல்களின் பலனையும், கெட்ட செயல்களின் பலனையும், வாக்கிலேயே அனுபவித்தாக வேண்டும்.

शरीरजैः कर्मदोषैः

याति स्थावरतां नरः ।

वाचिकैः पक्षिमृगतां 

मानसैः अन्त्य जातिताम् ॥

- மனு ஸ்மிருதி

மனிதன் உடலால் செய்யும் பாவ செயல்களுக்கு, மரம், செடியாக அடுத்த பிறவி எடுப்பான்.

பேசியதால் செய்த பாவ செயல்களுக்கு, மனிதன் அடுத்த பிறவியில் மிருகமாகவும், பறவையாகவும் பிறவி எடுப்பான்.

மனதால் செய்த பாவ செயல்களுக்கு, மனிதன் அடுத்த பிறவியில் மிகவும் இகழ தக்க ஜாதிகளில் பிறப்பான்.

वाग्दण्डोऽथ मनोदण्डः कायदण्डस्तथैव च ।

यस्यैते निहिता बुद्धौ त्रिदण्डीति स उच्यते ॥

வாக்கையும், மனதையும், தேகத்தையும் கட்டுப்படுத்தி வைத்து இருப்பவனே த்ரிதண்டி (சந்நியாசி) என்று பெருமையை அடைகிறான்.


त्रिदण्डमेतन्निक्षिप्य सर्वभूतेषु मानवः ।

कामक्रोधौ तु संयम्य ततः सिद्धिं नियच्छति ॥

இப்படி த்ரிதண்டியாக சொல், மனம், தேகம் மூன்றையும் கட்டுப்படுத்தி, எந்த உயிரிடத்திலும் வெறுப்பு காட்டாமல், ஆசையும், கோபமும் தன்னை நெருங்க விடாமல் பார்த்து கொள்பவன், "ஸித்தி" அடைகிறான்.


य: अस्य आत्मनः कारयिता तं क्षेत्रज्ञं प्रचक्षते ।

यः करोति तु कर्माणि स भूतात्म: उच्यते बुधैः ॥

உள்ளிருக்கும் ஆத்மா, உடலை (க்ஷேத்ரம்) காரியங்கள் செய்ய வைப்பதால், அதற்கு "க்ஷேத்ரஞன்" என்று பெயர். இந்த உடல் 5 பூதங்களால் ஆனது. காரியங்கள் செய்வதால், உடலுக்கு "பூதாத்மா" என்றும் பெயர்.


जीवसञ्ज्ञो अन्तरात्मा अन्यः सहजः सर्वदेहिनाम् ।

येन वेदयते सर्वं सुखं दुःखं च जन्मसु ॥

இந்த உடலுக்குள் வசித்து கொண்டிருக்கும் ஆத்மா அலாதியானது. பிறவியில் சுக துக்க அனுபவம் இந்த ஆத்மா இருப்பதாலேயே ஏற்படுகிறது.


तावुभौ भूतसम्पृक्तौ महान् क्षेत्रज्ञ एव च ।

उच्चावचेषु भूतेषु स्थितं तं व्याप्य तिष्ठतः ॥

பூதாத்மாவில் இருக்கும் க்ஷேத்ரஞனும் (soul),  பூதாத்மாவும் (nature/body), எங்கும் வியாபித்து, அனைத்துக்கும் அப்பாற்ப்பட்டு இருக்கும் பரமாத்மாவிடம் அடங்கி இருக்கிறது.



असङ्ख्या मूर्तयः तस्य 

निष्पतन्ति शरीरतः ।

उच्चावचानि भूतानि 

सततं चेष्टयन्ति याः ॥

- மனு ஸ்மிருதி

பரமாத்மாவிடமிருந்து கணக்கற்ற ஆத்மாக்கள் (க்ஷேத்ரஞர்கள்), அக்னியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி போல நூற்றுக்கணக்காக வெளிப்பட்டு, பல சரீரங்களில் புகுந்து கொண்டு, இயங்குகிறது.


पञ्चभ्य एव मात्राभ्यः प्रेत्य दुष्कृतिनां नृणाम् ।

शरीरं यातनार्थीय मन्यदुत्पद्यते ध्रुवम् ॥

- மனு ஸ்மிருதி

பஞ்ச பூதங்களால் ஆன மனிதன் பாவ காரியங்கள் செய்தால், மனித உடலை விட்ட (மரணித்த) பிறகு, நரகங்களில் கொடுக்கப்படும் தண்டனையை தாங்கும் படியான  சரீரமான "யாதனா" என்ற சரீரத்தை பெறுகிறான்.


तेनानुभूय ता यामीः शरीरेणैह यातनाः ।

तास्वेव भूतमात्रासु प्रलीयन्ते विभागशः ॥

- மனு ஸ்மிருதி

தான் செய்த பாவ காரியங்களுக்கு தண்டனையை அனுபவித்த ஜீவன், தண்டிக்கப்பட்ட பிறகு, யாதனா சரீரத்தை பஞ்ச பூதங்களில் இழந்து விடுவான்.


सो अनुभूय असुखोदर्कान् दोषान् विषयसङ्गजान् ।

व्यपेत कल्मषो अभ्येति तावेवोभौ महौ जसौ ॥

- மனு ஸ்மிருதி

விஷய சுகங்களில் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்று, பாபம் நீங்கிய பிறகு, மீண்டும் மஹத் (பஞ்ச பூதங்கள்) மற்றும் பரமாத்மாவுடன் சேர்ந்து பயணிக்கிறான்.


तौ धर्मं पश्यतस्तस्य पापं चातन्द्रितौ सह ।

याभ्यां प्राप्नोति सम्पृक्तः प्रेत्येह च सुखासुखम् ॥

- மனு ஸ்மிருதி

எங்கும் இருக்கும் மஹத்தும், பரமாத்மாவும், இந்த ஜீவன் இந்த உடலை கொண்டு செய்யும் தர்மம், அதர்மம், அதனால் இந்த ஜீவன் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.


यद्याचरति धर्मं स प्रायशोऽधर्ममल्पशः ।

तैरेव चावृतो भूतैः स्वर्गे सुखमुपाश्नुते ॥

- மனு ஸ்மிருதி

பஞ்ச பூதங்களால் ஆன மனித உடலை கொண்டு ஜீவன் தர்மத்தை அதிகமாகவும், அதர்மத்தை கொஞ்சமாகவும் செய்து இருந்தால், ஸ்வர்க லோகத்தை அடைந்து சுகத்தை அனுபவிப்பான்.

यदि तु प्रायशोऽधर्मं सेवते धर्ममल्पशः ।

तैर्भूतैः स परित्यक्तो यामीः प्राप्नोति यातनाः ॥

- மனு ஸ்மிருதி

பஞ்ச பூதங்களால் ஆன மனித உடலை கொண்டு ஜீவன் அதர்மத்தை அதிகமாகவும், தர்மத்தை கொஞ்சமாகவும் செய்து இருந்தால், யாதனா சரீரத்தை பெற்று நரக லோகத்தை அடைந்து தண்டனைகளை அனுபவிப்பான்.


यामीस्ता यातनाः प्राप्य स जीवो वीतकल्मषः ।

तान्येव पञ्च भूतानि पुनरप्येति भागशः ॥

- மனு ஸ்மிருதி

இப்படி ஜீவன் நரகத்தில் தண்டனை அனுபவித்து, பாபங்கள் கழிந்த பிறகு, மீண்டும் பஞ்ச பூதங்களோடு சேருகிறான்.


एता दृष्ट्वाऽस्य जीवस्य गतीः स्वेनैव चेतसा ।

धर्मतोऽधर्मतश्चैव धर्मे दध्यात् सदा मनः ॥

- மனு ஸ்மிருதி

'தர்ம காரியங்கள் மூலம் சுகங்களையும், அதர்ம காரியங்களால் துக்கத்தையும் ஜீவன் பெறுகிறான்' என்ற கதியை உணர்ந்து, மனதை எப்பொழுதும் தர்ம காரியங்கள் செய்வதிலேயே ஈடுபடுத்த வேண்டும்.


सत्त्वं रजस्तमश्चैव त्रीन् विद्यादात्मनो गुणान् ।

यैर्व्याप्यैमान् स्थितो भावान् महान् सर्वानशेषतः ॥

- மனு ஸ்மிருதி

இனி, ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற 3 குணங்களின் தன்மைகளை சொல்கிறேன். இந்த மூன்றும் அனைத்து உயிரிடத்திலும் வியாபித்து இருக்கிறது.


यो यदेषां गुणो देहे साकल्येनातिरिच्यते ।

स तदा तद्गुणप्रायं तं करोति शरीरिणम् ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற 3 குணங்களும் அனைவரிடத்திலும் இருந்தாலும், யாருக்கு எந்த குணம் அதிகம் நிரம்பி உள்ளதோ, அவனை அந்த குணம் கொண்டவனாக பார்க்க வேண்டும்.


सत्त्वं ज्ञानं तमो अज्ञानं 

रागद्वेषौ रजः स्मृतम् ।

एतद् व्याप्तिमदेतेषां 

सर्वभूताश्रितं वपुः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணம் அதிகமாக இருக்கும் போது, ஞானம் (மெய் அறிவு) உண்டாகும். தமஸ் என்ற குணம் அதிகமாக இருக்கும் போது, அஞ்ஞானம் உண்டாகும். ரஜோ குணம் அதிகமாகும் போது, விருப்பு வெறுப்பு உண்டாகும். இந்த மூன்றுமே அனைத்து உயிரிடத்திலும் பரவி இருக்கிறது.

तत्र यत् प्रीतिसंयुक्तं किं चिदात्मनि लक्षयेत् ।

प्रशान्तमिव शुद्धाभं सत्त्वं तदुपधारयेत् ॥

- மனு ஸ்மிருதி

பரமாத்மாவை நினைத்து  கொண்டும்,  ப்ரஸன்னமாகவும், தூய்மையாகவும் இருக்கும் ஜீவன், ஸத்வ குணத்தில் இருக்கிறான் என்று அறியலாம்.


यत् तु दुःख समायुक्तम् 

अप्रीतिकरमात्मनः ।

तद् रजो प्रतीपं विद्यात् 

सततं हारि देहिनाम् ॥

- மனு ஸ்மிருதி

எப்பொழுதும் துக்கப்பட்டு கொண்டும், ப்ரியமில்லாமலும், விஷய சுகங்களிலேயே ஈடுபடும்  ஜீவன், ரஜோ குணத்தில் இருக்கிறான் என்று அறியலாம்.


यत् तु स्यान् मोहसं युक्तम् 

अव्यक्तं विषय आत्मकम् ।

अप्रतर्क्यम् अविज्ञेयं 

तमस्तदुपधारयेत् ॥

- மனு ஸ்மிருதி

மோகம் கொண்டும், நல்லது கெட்டது அறியும் விவேகமில்லாமலும், புலன்களை பற்றிய அறியாமையோடும் இருக்கும்  ஜீவன், தமோ குணத்தில் இருக்கிறான் என்று அறியலாம்.


त्रयाणामपि चैतेषां गुणानां यः फलोदयः ।

अग्र्यो मध्यो जघन्यश्च तं प्रवक्ष्याम्यशेषतः ॥

- மனு ஸ்மிருதி

இந்த மூன்று குணங்களும் (ஸத்வ, ரஜோ, தமஸ்) உயர்ந்த பலனையும், மத்யமான பலனையும், கீழான பலனையும் தருகிறது. அதை பற்றி சொல்கிறேன்.


वेदाभ्यासस्तपो ज्ञानं शौचमिन्द्रियनिग्रहः ।

धर्मक्रियाऽत्मचिन्ता च सात्त्विकं गुणलक्षणम् ॥

- மனு ஸ்மிருதி

வேத மந்திரங்கள் ஜபம் செய்வதில் ஈடுபாடும், புலன்களை அடக்கி தவம் செய்வதில் (விரதங்களில்) ஈடுபாடும், ஆத்மா நான் என்ற அறிவோடும், உள்ளும் புறமும் தூய்மையோடும், புலனடக்கத்தோடும், தர்மமான செயல்கள் செய்து கொண்டும், ஆத்மாவை பற்றி சிந்தித்து கொண்டும் இருக்கும் ஜீவன் ஸத்வ குணத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்.

आरम्भरुचिता अधैर्यम् 

असत्कार्य परिग्रहः ।

विषयोपसेवा चाजस्रं 

राजसं गुण-लक्षणम् ॥

- மனு ஸ்மிருதி

பலனை எதிர்பார்த்தே காரியங்கள் செய்து கொண்டும், நினைத்தது நடக்காத பட்சத்தில் அதைரியம் அடைந்தும், செய்ய கூடாத செயல்கள் செய்தும், விஷய சுகங்களில் நாட்டம் கொண்டும், இருக்கும் ஜீவன், ரஜோ குணத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்.

लोभः स्वप्नोऽधृतिः क्रौर्यं 

नास्तिक्यं भिन्नवृत्तिता ।

याचिष्णुता प्रमादश्च 

तामसं गुणलक्षणम् ॥

- மனு ஸ்மிருதி

பேராசை கொண்டும், அதிகம் தூங்கி கொண்டும், கோழையாகவும், குறை சொல்லி கொண்டும், தெய்வத்தை பழித்து கொண்டும், ஒழுக்கமான வாழ்க்கையில் நாட்டமில்லாமலும், பிறர் பொருளை வாங்கி கொள்வதிலும், போதையோடு இருப்பதிலும் நாட்டம் கொண்டும் இருக்கும் ஜீவன், தமோ குணத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்.


यत् कर्म कृत्वा कुर्वंश्च करिष्यंश्चैव लज्जति ।

तज् ज्ञेयं विदुषा सर्वं तामसं गुणलक्षणम्

- மனு ஸ்மிருதி

ஒரு காரியத்தை செய்த பிறகும், செய்யும் போதும், செய்ய போகும் போதும், மனம் வெட்கப்படுமானால், அந்த காரியங்கள் தமோ குணத்தின் லக்ஷணம் என்று அறிய வேண்டும்.

येनास्मिन् कर्मणा लोके ख्यातिमिच्छति पुष्कलाम् ।

न च शोचत्यसम्पत्तौ तद् विज्ञेयं तु राजसम् ॥

- மனு ஸ்மிருதி

பரலோகத்தில் சௌக்கியம் கொடுக்காத காரியமாக இருந்தாலும், இந்த உலகில் பெரும் புகழை பெறுவதற்காக செய்யப்படும் காரியங்கள், ரஜோ குணத்தின் லக்ஷணம் என்று அறிய வேண்டும்.


यत् सर्वेणेच्छति ज्ञातुं यन्न लज्जति चाचरन् ।

येन तुष्यति चात्माऽस्य तत् सत्त्वगुणलक्षणम् ॥

- மனு ஸ்மிருதி

ஒரு காரியத்தை செய்த பிறகும், செய்யும் போதும், செய்ய போகும் போதும், மனம் சுகப்படுமானால், அந்த காரியங்கள் ஸத்வ குணத்தின் லக்ஷணம் என்று அறிய வேண்டும்.


तमसो लक्षणं कामो रजसस्त्वर्थ उच्यते ।

सत्त्वस्य लक्षणं धर्मः श्रैष्ठ्यमेषां यथोत्तरम् ॥

- மனு ஸ்மிருதி

தமோ குணத்தில், காமமே முக்கியமான லக்ஷணமாக இருக்கும். ரஜோ குணத்தில், பொருளே முக்கியமான லக்ஷணமாக இருக்கும். ஸத்வ குணத்தில், அறமே (தர்மமே) முக்கியமான லக்ஷணமாக இருக்கும். தமோ குணத்தை விட ரஜோ குணம் சிறந்தது. ரஜோ குணத்தை விட ஸத்வ குணம் சிறந்தது.


येन यस्तु गुणेनैषां संसरान् प्रतिपद्यते ।

तान् समासेन वक्ष्यामि सर्वस्यास्य यथाक्रमम् ॥

- மனு ஸ்மிருதி

இந்த குணங்களால் ஜீவன் எத்தகைய நிலைகளை அடைகிறான் என்பதை பற்றி முழுமையாக வரிசைப்படி கூறுகிறேன். கேளுங்கள்.


देवत्वं सात्त्विका यान्ति मनुष्यत्वं च राजसाः ।

तिर्यक्त्वं तामसा नित्यमित्येषा त्रिविधा गतिः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணத்திலேயே (அறத்தில் விருப்பம்) இருப்பவன், தேவனாகிறான். ரஜோ குணத்திலேயே (பொருளில் விருப்பம்) இருப்பவன் மனித பிறவியே மீண்டும் எடுக்கிறான். தமோ குணத்திலேயே (காமத்தில் விருப்பம்) இருப்பவன் பறவை மிருகம் போன்ற கீழ் பிறவிகளை எடுக்கிறான்.


त्रिविधा त्रिविधैषा तु विज्ञेया गौणिकी गतिः ।

अधमा मध्यमाग्र्या च कर्मविद्याविशेषतः

- மனு ஸ்மிருதி

3 குணங்களால் (ஸத்வ, ரஜோ, தமோ)  கிடைக்கும் இந்த 3 பிறவிகளும் (தேவ, மனித, மிருக), அந்தந்த ஜீவன் செய்த காரியத்தை பொறுத்து, மேல் நிலை, நடுநிலை, கீழ் நிலை என்ற விதிப்படி பிறவிகளை பெறுகிறார்கள். 


स्थावराः कृमिकीटाश्च 

मत्स्याः सर्पाः सकच्छपाः ।

पशवश्च मृगाश्चैव 

जघन्या तामसी गतिः ॥

- மனு ஸ்மிருதி

தமோ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான அசையாத செடிகளாகவும், மரங்களாகவும், புழு, பூச்சி, மீன், பாம்பு, ஆமை, வளர்ப்பு மிருகங்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


हस्तिनश्च तुरङ्गाश्च शूद्रा म्लेच्छाश्च गर्हिताः ।

सिंहा व्याघ्रा वराहाश्च मध्यमा तामसी गतिः ॥

- மனு ஸ்மிருதி

தமோ குணத்தின் அளவை பொறுத்து, நடு நிலையான யானை, குதிரை, சிங்கம், புலி  போன்ற பிறவிகள் ஏற்படும். ஒருவன் சூத்திரனாக (employee), மிலேச்சனாக (வேத சாஸ்திரம் அறியாதவனாக) பிறப்பதும் முன் ஜென்மத்தில் அந்த ஜீவனுக்கு இருந்த தமோ குணமே காரணம்.  சூத்திரனாக (employee), மிலேச்சனாக பிறப்பதும் நடு நிலையான பிறவிகளே.

चारणाश्च सुपर्णाश्च पुरुषाश्चैव दाम्भिकाः ।

रक्षांसि च पिशाचाश्च तामसीषूत्तमा गतिः

- மனு ஸ்மிருதி

தமோ குணத்தின் அளவை பொறுத்து, மேல் நிலையான சாரணர்கள், கருடன் போன்ற பறவைகள், கர்வம் பிடித்த மனிதர்கள், ராக்ஷஸர்கள்  போன்ற பிறவிகள் ஏற்படும்


झल्ला मल्ला नटाश्चैव पुरुषाः शस्त्रवृत्तयः ।

द्यूतपानप्रसक्ताश्च जघन्या राजसी गतिः ॥ 

- மனு ஸ்மிருதி

ரஜோ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான இரும்பை வைத்து கொண்டு சண்டை செய்பவர்கள், மல் யுத்தம் செய்பவர்கள்,   நடிகர்கள், ஆயுதம் செய்பவர்கள், சூதாடிகள், குடிகாரர்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


राजानः क्षत्रियाश्चैव राज्ञां चैव पुरोहिताः ।

वादयुद्धप्रधानाश्च मध्यमा राजसी गतिः ॥

- மனு ஸ்மிருதி

ரஜோ குணத்தின் அளவை பொறுத்து, நடு நிலையான அரசர்கள், க்ஷத்ரியனாக பிறந்தவர்கள், அரச புரோகிதர்கள், வாதம்-விவாதம் நடத்துபவர்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


गन्धर्वा गुह्यका यक्षा विबुधानुचराश्च ये ।

तथैवाप्सरसः सर्वा राजसीषूत्तमा गतिः ॥

- மனு ஸ்மிருதி

ரஜோ குணத்தின் அளவை பொறுத்து, மேல் நிலையான கந்தர்வர்கள், குஹ்யர்கள், யக்ஷர்கள், விபுதர்கள், அப்சரஸ்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


तापसा यतयो विप्रा ये च वैमानिका गणाः ।

नक्षत्राणि च दैत्याश्च प्रथमा सात्त्विकी गतिः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான தபஸ்விகள், சந்யாசிகள், வேத விற்பன்னர்கள், விமானத்தில் பறக்கும் கல்விமான்கள், தைத்யர்கள், நக்ஷத்திரங்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


यज्वान ऋषयो देवा वेदा ज्योतींषि वत्सराः ।

पितरश्चैव साध्याश्च द्वितीया सात्त्विकी गतिः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, நடு நிலையான யக்ஞம் செய்பவர்கள், ரிஷிகள், தேவர்கள், வேதரூபமான தெய்வங்கள், கிரக தெய்வங்கள், பித்ரு தெய்வங்கள், சாத்யர்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்


ब्रह्मा विश्वसृजो धर्मो महानव्यक्तमेव च ।

उत्तमां सात्त्विकीमेतां गतिमाहुर्मनीषिणः ॥

- மனு ஸ்மிருதி

ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, மேல் நிலையான ப்ரம்ம தேவன், பிரஜாபதி, தர்ம தேவன், மஹத் (ப்ரக்ருதி), அவ்யக்தம் போன்ற பிறவிகள் ஏற்படும்

एष सर्वः समुद्दिष्टस्त्रिप्रकारस्य कर्मणः ।

त्रिविधस्त्रिविधः कृत्स्नः संसारः सार्वभौतिकः ॥

- மனு ஸ்மிருதி

இவ்வாறு மூன்றினால் (வாக்கு, செயல், மனம்) செய்யப்படும் காரியங்களால் மூன்று விதமான குணங்களால், பல விதமான பிறவிகள் எவ்வாறு ஏற்படுகிறது என்று கூறினேன். இதில் சில பிறவிகளை கூறினேன். மற்ற பிறவிகளை இதை அனுசரித்து ஊகித்து கொள்ள வேண்டும்.


इन्द्रियाणां प्रसङ्गेन धर्मस्यासेवनेन च ।

पापान् संयान्ति संसारानविद्वांसो नराधमाः ॥

- மனு ஸ்மிருதி

எந்த மனிதன் புலன்களை அடக்காமலும், அந்த புலன்கள் வழியே சென்று விஷய சுகங்களிலேயே வாழ்ந்து, தர்ம வழியிலும் நடக்காமலும், செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளாமலும் வாழ்கிறானோ, அவன் அடுத்த பிறவியில் கீழ்த்தரமான நிலையை பெறுவான்.


यां यां योनिं तु जीवोऽयं येन येनैह कर्मणा ।

क्रमशो याति लोकेऽस्मिंस्तत् तत् सर्वं निबोधत ॥

- மனு ஸ்மிருதி

ஜீவன் எந்த எந்த கர்ம வினைகளை செய்து எந்தெந்த உலகத்தை அடைகிறான். எந்தெந்த பிறவியை அடைகிறான் என்பதை முழுவதும் கூறுகிறேன். கேளுங்கள்.


बहून् वर्षगणान् घोरान्नरकान् प्राप्य तत्क्षयात् ।

संसारान् प्रतिपद्यन्ते महापातकिनस्त्विमान् ॥

- மனு ஸ்மிருதி

மிக கொடிய பாபம் செய்தவர்கள், பல்லாயிரம் வருடங்கள் பயங்கரமான நரகங்களில் வேதனையை அனுபவிப்பார்கள். அதற்கு பிறகு மிஞ்சிய பாபங்களை எந்த பிறவிகள் எடுத்து அனுபவிப்பார்கள் என்று கூறுகிறேன்.


श्वसूकरखरोष्ट्राणां गोऽजाविमृगपक्षिणाम् ।

चण्डालपुक्कसानां च ब्रह्महा योनिमृच्छति ॥

- மனு ஸ்மிருதி

ப்ராம்மணனை கொன்றவன் கொடிய நரகத்தை அனுபவித்த பிறகு, நாய், பன்றி, கழுதை ஒட்டகம், ஆடு நாடாகவும், பறவையாகவும்  பிறப்பார்கள். மனிதனாக நாயை தின்று வாழும் சண்டாளனாகவும், புக்கஸர்களாகவும் தாழ்ந்த பிறவிகளை எடுப்பார்கள்.

कृमिकीट पतङ्गानां 

विड्भुजां चैव पक्षिणाम् ।

हिंस्राणां चैव सत्त्वानां 

सुरापो ब्राह्मणो व्रजेत् ॥

- மனு ஸ்மிருதி

மதுபானம் (சுராபானம்) செய்த பிராம்மணன், கொடிய நரகத்தை அனுபவித்த பிறகு, புழு பூச்சியாகவும், அணில், மலம் உண்ணும் ஜந்துவாகவும், புலி முதலிய கொடிய மிருகமாகவும் பிறவிகளை எடுப்பார்கள்.


लूताऽहिसरटानां च तिरश्चां चाम्बुचारिणाम् ।

हिंस्राणां च पिशाचानां स्तेनो विप्रः सहस्रशः ॥

- மனு ஸ்மிருதி

தங்கத்தை திருடிய விப்ரன் , சிலந்தியாகவும், பாம்பு, ஓணான், நீரில் வாழும் உயிரினமாகவும், கொடிய மிருகமாகவும், பிசாசாகவும் பிறவிகளை எடுப்பார்கள்.


तृणगुल्मलतानां च क्रव्यादां दंष्ट्रिणामपि ।

क्रूरकर्मकृतां चैव शतशो गुरुतल्पगः ॥

- மனு ஸ்மிருதி

தன் குருவின் பத்னியை அடைய நினைத்தவன், புல்லாகவும், புதராகவும், கொடியாகவும், மாமிசம் உண்ணும் மிருகங்களாகவும் பிறவிகளை பலமுறை அடைவான்.


हिंस्रा भवन्ति क्रव्यादाः कृमयोऽमेध्यभक्षिणः ।

परस्परादिनः स्तेनाः प्रेत्यान्त्यस्त्रीनिषेविणः ॥

- மனு ஸ்மிருதி

விலங்குகளை கொல்வதையே தங்கள் வேலையாக கொண்டிருப்பவர்கள், மிருகங்களை உண்ணும் விலங்காகவும், மலத்தை உண்ணும் புழுக்களாகவும், திருடர்களாகவும், தம் இனத்தையே உண்ணும் பிராணிகளாகவும் பிறப்பார்கள். சண்டாள பெண்ணுடன் உறவு கொண்டவர்கள் ப்ரேத சரீரத்தோடு அலைவார்கள்.


संयोगं पतितैर्गत्वा परस्यैव च योषितम् ।

अपहृत्य च विप्रस्वं भवति ब्रह्मराक्षसः ॥

- மனு ஸ்மிருதி

நாடு கடத்தப்பட்டவனோடு உறவு கொண்டவனும், பிறர் மனைவியை அடைந்தவனும், ப்ராம்மணனின் பொருளை திருடியவனும், அடுத்த பிறவியில் ப்ரம்ம-ராக்ஷஸனாகவும் அலைவார்கள்.


मणिमुक्ताप्रवालानि हृत्वा लोभेन मानवः ।

विविधाणि च रत्नानि जायते हेमकर्तृषु ॥

- மனு ஸ்மிருதி

ரத்தினங்கள், முத்துக்கள், பவழங்கள் பல வகையான உயர்ந்த ரத்தின கற்கள் முதலியவனற்றை திருடியவன், அடுத்த பிறவியில் பொற்கொல்லனாக பிறப்பான்.


धान्यं हृत्वा भवत्याखुः कांस्यं हंसो जलं प्लवः ।

मधु दंशः पयः काको रसं श्वा नकुलो घृतम् ॥

- மனு ஸ்மிருதி

தானியங்களை திருடியவன் எலியாக பிறப்பான். வெண்கலத்தை திருடியவன் அன்னமாக பிறப்பான். தண்ணீர் திருடியவன் தவளையாக பிறப்பான். பால் திருடியவன் காக்கையாக பிறப்பான். தேன் திருடியவன் ஈயாக பிறப்பான். ரசமான (சுவையான) பொருட்களை திருடியவன் நாயாக பிறப்பான்.


मांसं गृध्रो वपां मद्गुस्तैलं तैलपकः खगः ।

चीरीवाकस्तु लवणं बलाका शकुनिर्दधि ॥

- மனு ஸ்மிருதி

மாமிசத்தை திருடியவன் கழுகாக பிறப்பான். மாமிச கொழுப்பை (வபை) திருடியவன் நீர்காக்கையாக பிறப்பான். எண்ணெய் திருடியவன் வௌவாலாக பிறப்பான். உப்பை திருடியவன் சுவர்க்கோழியாக பிறப்பான். தயிரை திருடியவன் ராஜாளியாக பிறப்பான்.


कौशेयं तित्तिरिर्हृत्वा क्षौमं हृत्वा तु दर्दुरः ।

कार्पासतान्तवं क्रौञ्चो गोधा गां वाग्गुदो गुडम् ॥

- மனு ஸ்மிருதி

பட்டு வஸ்திரங்களை திருடியவன் தித்திரி பறவையாக பிறப்பான். கைத்தறியை திருடியவனும் தவளையாக பிறப்பான். பசுவை திருடியவன் உடும்பாக பிறப்பான். வெல்லப்பாகை திருடியவன் வாக்குத பறவையாக பிறப்பான்.


छुच्छुन्दरिः शुभान् गन्धान् पत्रशाकं तु बर्हिणः ।

श्वावित् कृतान्नं विविधमकृतान्नं तु शल्यकः ॥

- மனு ஸ்மிருதி

வாசனை திரவியங்களை திருடியவன் மூஞ்சூராக பிறப்பான். கீரை காய் கறிகளை திருடியவன் மயிலாக பிறப்பான். சமைத்த அன்னத்தை திருடி தின்றவன் முள்ளம் பன்றியாக பிறப்பான். சமைக்காத அரிசி பருப்பை திருடியவன் சல்ய மிருகமாக (முள்ளம்பன்றி) பிறப்பான்.


बको भवति हृत्वाऽग्निं गृहकारी ह्युपस्करम् ।

रक्तानि हृत्वा वासांसि जायते जीवजीवकः ॥

- மனு ஸ்மிருதி

நெருப்பை திருடியவன் நாரையாக பிறப்பான். முறம், உரல் போன்ற  வீட்டுக்கு தேவையான பொருளை திருடியவன் குளவியாக பிறப்பான். சிவப்பு நிறமுள்ள துணிகளை திருடியவன் சகோர பறவையாக பிறப்பான்.


वृको मृगैभं व्याघ्रोऽश्वं फलमूलं तु मर्कटः ।

स्त्रीं ऋक्षः स्तोकको वारि यानान्युष्ट्रः पशूनजः ॥

- மனு ஸ்மிருதி

மானை திருடியவன் ஓநாயாக பிறப்பான். குதிரையை திருடியவன் புலியாக பிறப்பான். பழங்களையும் மூலிகைகளையும் திருடியவன் குரங்காக பிறப்பான். பெண்ணை திருடியவன் கரடியாக பிறப்பான். தண்ணீரை திருடியவன் சாதக பறவையாக பிறப்பான். வாகனங்களை திருடியவன் ஒட்டகமாக பிறப்பான். ஆடு மாடுகளை திருடியவன் வெள்ளாடாக பிறப்பான்.


यद् वा तद् वा परद्रव्यमपहृत्य बलान्नरः ।

अवश्यं याति तिर्यक्त्वं जग्ध्वा चैवाहुतं हविः ॥

- மனு ஸ்மிருதி

பிறருடைய பொருளை திருடியவனும், ஹோமம் செய்யப்பட்ட ஹவிஸை திருடியவன், அடுத்த பிறவியில் மிருகமாக பிறப்பான்.


स्त्रियोऽप्येतेन कल्पेन हृत्वा दोषमवाप्नुयुः ।

एतेषामेव जन्तूनां भार्यात्वमुपयान्ति ताः ॥

- மனு ஸ்மிருதி

இந்த பாவங்களை புரிந்த பெண்களும், அடுத்த பிறவியில் மிருகமாக பிறந்த இவர்களுக்கு மனைவியாக பிறப்பார்கள்.


स्वेभ्यः स्वेभ्यस्तु कर्मभ्यश्च्युता वर्णा ह्यनापदि ।

पापान् संसृत्य संसारान् 

प्रेष्यतां यान्ति शत्रुषु ॥

- மனு ஸ்மிருதி

நான்கு வர்ணத்தில் இருப்பவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை செய்யாமல் வாழ்ந்தால், அடுத்த பிறவியில் தன்னை ஒழிக்க நினைக்கும் எதிரியை எதிர்க்க முடியாமல், அவன் சொல்படி நடக்கும் படியான பிறவியை அடைவார்கள்.


वान्ताश्युल्कामुखः प्रेतो 

विप्रो धर्मात् स्वकाच्च्युतः ।

अमेध्यकुणपाशी च क्षत्रियः कटपूतनः ॥

- மனு ஸ்மிருதி

பிராம்மண வர்ணத்தில் (MLA, MP, Advocate, Judiciary) இருந்தும்,  தன் தர்மத்தை விட்டால், அடுத்த பிறவியில் கொள்ளிவாய் பிசாசாக பிரேத சரீரத்தோடு இருந்து, மனிதர்களின் வாந்தியை சாப்பிடும் ஜென்மத்தை அடைவான். க்ஷத்ரிய வர்ணத்தில் (army, police, defence) இருந்தும், தன் தர்மத்தை விட்டவன், மலத்தையும், பிணத்தையும் தின்னும் கடபூதமாக அலைவான்.


मैत्राक्षज्योतिकः प्रेतो वैश्यो भवति पूयभुक् ।

चैलाशकश्च भवति शूद्रो धर्मात् स्वकाच्च्युतः ॥

- மனு ஸ்மிருதி

வைஸ்ய வர்ணத்தில் (employer, business, self-employed) இருந்தும், தன் தர்மத்தை விட்டவன், புண்ணில் வழிகின்ற சீழை உண்ணும் மைத்ராஷ ஜோதி என்னும் பிரேத ஜென்மாவை எடுப்பான்.

சூத்திர வர்ணத்தில் (employee) இருந்தும், தன் தர்மத்தை விட்டவன், பேன்களை தின்னும் சைலாஷகம் என்னும் பிரேத ஜென்மாவை எடுப்பான்.


यथा यथा निषेवन्ते विषयान् विषयात्मकाः ।

तथा तथा कुशलता तेषां तेषूपजायते ॥

- மனு ஸ்மிருதி

உலக விஷயங்களில் மூழ்கி எத்தனைக்கு எத்தனை சுகங்களை அனுபவிக்கிறானோ, அத்தனைக்கு அத்தனை அதிலேயே மூழ்கி கிடப்பான்.


तेऽभ्यासात् कर्मणां तेषां पापानामल्पबुद्धयः ।

सम्प्राप्नुवन्ति दुःखानि तासु तास्विह योनिषु ॥

- மனு ஸ்மிருதி

தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி,  பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், அதன் தன்மையை பொறுத்து, கீழான, மிகவும் கீழான பிறவிகளை பெற்று பலவிதமான துன்பங்களை அனுபவிப்பார்கள்


तामिस्रादिषु चोग्रेषु नरकेषु विवर्तनम् ।

असिपत्रवनादीनि बन्धनछेदनानि च ॥

- மனு ஸ்மிருதி

தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி,  பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், தாமிஸ்ரம் போன்ற கொடிய நரகங்களுக்கு சென்று நரக வேதனை அனுபவிப்பார்கள். அசிபத்ர வனம் (இலைகளே முள் போல இருக்கும் ஈச்ச மரம் போன்றவை இருக்கும் காடு) கொண்ட நரகங்களை அடைந்து, கட்டப்பட்டும், வெட்டப்பட்டும், பல வேதனைகளை அனுபவிப்பார்கள்.


विविधाश्चैव सम्पीडाः काकोलूकैश्च भक्षणम् ।

करम्भवालुकातापान् कुम्भीपाकांश्च दारुणान् ॥

- மனு ஸ்மிருதி

தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி,  பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், காக்கை கோட்டான் போன்றவற்றால் கொத்தி தின்னப்பட்டு, எரியும் மணலில் புரட்டப்பட்டு, பெரிய பாத்திரத்தில் வேக வைத்து கொடிய நரகத்தில் சித்ரவதை செய்யப்படுவார்கள்.


सम्भवांश्च वियोनीषु दुःखप्रायासु नित्यशः ।

शीतातपाभिघातांश्च विविधानि भयानि च ॥

- மனு ஸ்மிருதி

தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி,  பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், கீழ்தரமான வாழ்க்கையில் பிறந்தும், பெரும் துன்பங்களை அனுபவித்து கொண்டும், வெப்பம் குளிரினால் துன்பப்பட்டும், பல்வேறு வகையான பயங்களோடு வாழும்படியாக பிறப்பான்.


असकृद् गर्भवासेषु वासं जन्म च दारुणम् ।

बन्धनानि च काष्ठानि परप्रेष्यत्वमेव च ॥

- மனு ஸ்மிருதி

தன் தர்மத்தை மீறி பாபம் செய்பவர்கள்,  மீண்டும் மீண்டும் கர்ப வாசம் செய்து பிறந்து, உலக விஷயங்களில் பந்தப்பட்டு, துன்பங்களை அனுபவித்து, பிறருக்கு அடிமையாகவே வாழ்வார்கள்.


बन्धु-प्रिय वियोगांश्च 

संवासं चैव दुर्जनैः ।

द्रव्यार्जनं च नाशं च 

मित्र अमित्रस्य चार्जनम् ॥

- மனு ஸ்மிருதி

தன் தர்மத்தை மீறி பாபம் செய்பவர்கள், அடுத்த பிறவியில் உறவினர்கள், பிரியப்பட்டவர்கள் பிரிவதை கண்டும், தீயவர்களோடு சேர்ந்து வாழும் நிலையையும், பணத்தை சேர்ப்பதில்- பெரும் துன்பத்தை அனுபவித்தும், சேர்த்த செல்வம் செலவழிந்து போவதையும், நண்பர்கள் பகைவர்களாக ஆவது போன்ற துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.


जरां चैवाप्रतीकारां व्याधिभिश्चोपपीडनम् ।

क्लेशांश्च विविधांस्तांस्तान् मृत्युमेव च दुर्जयम् ॥

- மனு ஸ்மிருதி

தன் தர்மத்தை மீறி பாபம் செய்பவர்கள், முதுமையால் தளர்ந்தும், தீராத வியாதிகளால் பீடிக்கப்பட்டும், பலவகையான மன கலக்கத்துடன் வாழும்படியாகவும், தவிர்க்க முடியாத மரணத்தையும் அடைவார்கள்.


यादृशेन तु भावेन यद् यत् कर्म निषेवते ।

तादृशेन शरीरेण तत् तत् फलमुपाश्नुते ॥

- மனு ஸ்மிருதி

எந்த எண்ணத்தோடு எந்த காரியத்தை ஒருவன் செய்கிறானோ, அதற்கு ஏற்ற தேகத்தோடு பிறவிகள் எடுத்து அதற்கான பலனை அடைகிறான்.


एष सर्वः समुद्दिष्टः कर्मणां वः फलोदयः ।

नैःश्रेयसकरं कर्म विप्रस्येदं निबोधत ॥

- மனு ஸ்மிருதி

இது வரை, சாஸ்திரம் சொல்லும் முறையையும், அதற்கு விரோதமான காரியங்கள் செய்வதால் ஏற்படும் துன்பங்களை பற்றியும் சொன்னேன். இனி, விப்ரன் என்று சொல்லப்படும் வேதமோதுபவன் செய்ய வேண்டிய காரியங்களை பற்றி சொல்கிறேன்.


वेद अभ्यास: तपो ज्ञानम् इन्द्रियाणां च संयमः ।

अहिंसा गुरु-सेवा च निःश्रेयसकरं परम् ॥

- மனு ஸ்மிருதி

வேதத்தை கற்று கொள்ளுதல், அதை பற்றிய நினைவுடனேயே தபஸில் இருத்தல், ப்ரம்ம ஞானத்தை அடைதல், புலன் அடக்கதோடு இருத்தல், அஹிம்சையாகவே இருத்தல், குரு சேவை செய்தல். இந்த  6 காரியங்களை, வேதமோதும் விப்ரன் செய்தால் மோக்ஷத்தை அடைவான்.


सर्वेषाम् अपि चैतेषां शुभानाम् इह कर्मणाम् ।

किंचित् श्रेयस्करतरं कर्मोक्तं पुरुषं प्रति ॥

- மனு ஸ்மிருதி

இப்போது கூறிய இவற்றில் மிக மிக உயர்ந்தது என்று பார்ப்போம்.


सर्वेषाम् अपि चैतेषाम् आत्मज्ञानं परं स्मृतम् ।

तद् ह्यग्र्यं सर्वविद्यानां प्राप्यते ह्यमृतं ततः ॥

- மனு ஸ்மிருதி

இந்த அனைத்திலும் ப்ரம்ம ஞானத்தை அடைவதே மிக மிக உயர்ந்தது. பகவானை அறியும் ஞானமே ப்ரம்மஞானம். இந்த ப்ரம்ம ஞானமே மோக்ஷத்திற்கு முக்கிய காரணம்.


षण्णामेषां तु सर्वेषां कर्मणां प्रेत्य चैह च ।

श्रेयस्करतरं ज्ञेयं सर्वदा कर्म वैदिकम् ॥

- மனு ஸ்மிருதி

வேதத்தை கற்று கொள்ளுதல், அதை பற்றிய நினைவுடனேயே தபஸில் இருத்தல், ப்ரம்ம ஞானத்தை அடைதல், அஹிம்சையாகவே இருத்தல், குரு சேவை செய்தல். இந்த 6 காரியங்களை கடைபிடிக்கும் வைதீகன் (விப்ரன்) செய்யும் வைதீக காரியங்கள் இக லோகத்திலும் பலன் தரும், பரலோகத்திலும் பலன் தரும்.


वैदिके कर्मयोगे तु सर्वाण्येतान्यशेषतः ।

अन्तर्भवन्ति क्रमश तस्मिं तस्मिन् क्रियाविधौ ॥

- மனு ஸ்மிருதி

வைதீக கர்மாக்கள் விடாமல் செய்வதால், விப்ரனின் (வைதீக பிராம்மணன்) 6 கடமைகளும் பெரும்  பலன்களை அளித்திடும்.


सुखाभ्युदयिकं चैव नैःश्रेयसिकमेव च ।

प्रवृत्तं च निवृत्तं च द्विविधं कर्म वैदिकम् ॥

- மனு ஸ்மிருதி

வைதீக கர்மாக்கள் ப்ரவ்ருத்தி (இக உலக, சொர்க்கம் முதலிய) பயன்களை தரும். நிவ்ருத்தி (மோக்ஷம்) பயன்களையும் தரும்.


इह चामुत्र वा काम्यं प्रवृत्तं कर्म कीर्त्यते ।

निष्कामं ज्ञातपूर्वं तु निवृत्तमुपदिश्यते ॥

- மனு ஸ்மிருதி

இந்த உலகத்தில் சுகமாக இருப்பதற்காகவும், மேல் உலக சுகங்களை அனுபவிப்பதற்காகவும் செய்யப்படும் காரியங்கள் "ப்ரவ்ருத்தி" வைதீக கர்மா என்று சொல்கிறோம்.  எந்த பலனையும் எதிர்பார்க்காமல், இறந்த பிறகும் வேறு பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும்  காரியங்கள் "நிவ்ருத்தி" வைதீக கர்மா என்று சொல்கிறோம்.


प्रवृत्तं कर्म संसेव्यं देवानामेति साम्यताम् ।

निवृत्तं सेवमानस्तु भूतान्यत्येति पञ्च वै ॥

- மனு ஸ்மிருதி

ப்ரவ்ருத்தி மார்க்க வைதீக கர்மாக்கள் செய்வதன் மூலம், தேவனாகவும், தேவனை போல சில காலங்கள் சொர்க்க லோகங்களில் வாசம் செய்யும் பலன்களை கூட அடையலாம்.

நிவ்ருத்தி மார்க்க வைதீக கர்மாக்கள் செய்வதன் மூலம், பஞ்சபூதங்களும் விலகி, மோக்ஷத்தை அடையலாம்.


सर्वभूतेषु चात्मानं सर्वभूतानि चात्मनि ।

समं पश्यन्नात्मयाजी स्वाराज्यमधिगच्छति ॥

- மனு ஸ்மிருதி

சர்வ சரீரங்களிலும் ஆத்மா உள்ளது. ஒவ்வொரு சரீரங்களில் இருக்கும் இந்த ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் உரைகிறது. அந்த பரமாத்மா அனைத்து ஆத்மாவுக்கும் உறைவிடமாக இருக்கிறார் என்ற சம புத்தியோடு பார்க்க தெரிந்தவன், மோக்ஷம் (வீடு) செல்கிறான்.


यथोक्तान्यपि कर्माणि परिहाय द्विजोत्तमः ।

आत्मज्ञाने शमे च स्याद् वेदाभ्यासे च यत्नवान् ॥

- மனு ஸ்மிருதி

த்விஜோத்மர்கள் (பிராம்மண, வைசிய, க்ஷத்ரிய) தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை விட்டாவது, ஆத்ம ஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டும். வேதத்தை ஓதுவதில் முயற்சியோடு இருக்க ஆத்ம ஞானம் ஏற்படும்.


एतद् हि जन्मसाफल्यं ब्राह्मणस्य विशेषतः ।

प्राप्यैतत् कृतकृत्यो हि द्विजो भवति नान्यथा ॥

- மனு ஸ்மிருதி

பிறவி எடுத்த பலனை அடைய, ப்ராம்மண வர்ணத்தில் இருப்பவனுக்கு வேதம் ஓதுவதே வழி. இதுவே மற்ற த்விஜர்களான க்ஷத்ரியர்களுக்கும், வைஸ்யர்களுக்கும்.


पितृदेव मनुष्याणां वेदश्चक्षुः सनातनम् ।

अशक्यं च अप्रमेयं च वेदशास्त्रमिति स्थितिः ॥

- மனு ஸ்ம்ருதி

பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் வேதம் கண் போன்று இருக்கிறது. அதாவது, மனிதன் வேதம் என்ற கண் கொண்டு தர்மம் எது? என்று அறிகிறான்.காலத்திற்கு அப்பாற்பட்ட வேதத்தின் சக்தி எல்லையற்றது. வேதத்தின் தன்மை 'இது தான்' என்று எவராலும் அளவிட முடியாது.


या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः ।

सर्वास्ता निष्फलाः प्रेत्य तमोनिष्ठा हि ताः स्मृताः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதம் சொல்வதற்கு விரோதமாக இயற்றப்பட்ட நூல்களும், தவறான கோட்பாடுகளும், திறம்பட ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தாலும், அவை அனைத்தையும், அஞானம் என்ற இருளில் இயற்றப்பட்டது என்றே தள்ள வேண்டும்.


उत्पद्यन्ते च्यवन्ते च यान्यतोऽन्यानि कानि चित् ।

तान्यर्वाक्कालिकतया निष्फलान्यनृतानि च ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தை ஆதாரமாக கொள்ளாத எந்த நூலாக இருந்தாலும், வேகமாக தானே அழிந்து போகும். பொய்யை கற்பிக்கும் இதை கற்பதால் நற்பலன் எதுவும் ஏற்பட போவதில்லை.


चातुर्वर्ण्यं त्रयो लोकाश्चत्वारश्चाश्रमाः पृथक् ।

भूतं भव्यं भविष्यं च सर्वं वेदात् प्रसिध्यति ॥

நான்கு வர்ணத்தை பற்றியும், மூவுலகங்கள் பற்றியும், நான்கு ஆசிரமங்களை பற்றியும் வேதம் சொல்கிறது. நடந்ததும், நடப்பதும், நடக்க போவதை பற்றியும் வேதம் சொல்கிறது.


शब्दः स्पर्शश्च रूपं च रसो गन्धश्च पञ्चमः ।

वेदादेव प्रसूयन्ते प्रसूतिर्गुणकर्मतः ॥

- மனு ஸ்ம்ருதி

சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் (சுவை), கந்தம் (சுகந்தம்) என்னும் 5ம் வேதத்திலிருந்தே தோன்றின. இவைகளின் குணமும் செயல்களும் வேதத்திலேயே விளக்கப்பட்டுள்ளன.


बिभर्ति सर्वभूतानि वेदशास्त्रं सनातनम् ।

तस्मादेतत् परं मन्ये यत्जन्तोरस्य साधनम् ॥

- மனு ஸ்ம்ருதி

காலத்தை கடந்த வேத சாஸ்திரமே சகல பூதங்களையும் (நம்மை) தாங்குகிறது. மேலான நிலையை மனிதன் அடைய வேதமே சாதனமாகும்.


सेनापत्यं च राज्यं च दण्डनेतृत्वमेव च ।

सर्वलोकाधिपत्यं च वेदशास्त्रविदर्हति ॥

- மனு ஸ்ம்ருதி

வேத சாஸ்திரம் முழுவதும் எவன் அறிந்து கொள்கிறானோ, அவனால் பெரும் படையை சேனாபதியாக வழிநடத்த முடியும். ராஜ்யத்தை ஆளும் திறன் இருக்கும். இவ்வளவு ஏன், சகல உலகங்களையும் ஆட்சி செய்யும் தகுதியும் இருக்கும்.

यथा जातबलो वह्निः

दहत्यार्द्रानपि द्रुमान् ।

तथा दहति वेदज्ञः 

कर्मजं दोषम् आत्मनः ॥

- மனு ஸ்ம்ருதி

கொழுந்து விட்டு எரியும் அக்னியானது, எப்படி பசுமையான மரங்களையும் எரித்து விடுமோ, அப்படியே வேதம் முழுவதும் கற்று 'அறிந்தவன்' கர்மாவினால் ஏற்படும் தோஷங்களை கூட எரித்து அழித்து விடும் சக்தி கொண்டிருப்பான்.



वेदशास्त्र अर्थ तत्त्वज्ञो यत्र तत्रा आश्रमे वसन् ।

इहैव लोके तिष्ठन् स ब्रह्म भूयाय कल्पते ॥

- மனு ஸ்ம்ருதி

வேத சாஸ்திரத்தின் அர்த்தத்தை உணர்ந்த தத்வ ஞானி, பிரம்மச்சாரியாக இருந்தாலும், க்ருஹஸ்தனாகவே இருந்தாலும், வானப்ரஸ்தனாக இருந்தாலும், உலகில் வாழ்ந்தபடியே ப்ரம்ம ஞானத்தை பெற்று இருப்பான்.

अज्ञेभ्यो ग्रन्थिनः श्रेष्ठा 

ग्रन्थिभ्यो धारिणो वराः ।

धारिभ्यो ज्ञानिनः श्रेष्ठा 

ज्ञानिभ्यो व्यवसायिनः ॥

- மனு ஸ்ம்ருதி

ஏதோ சிறிது வேத மந்திரங்களை கற்றவர்களை விட, முழுமையாக வேதத்தை கற்றவர்கள் மேலானவர்கள். அதை நன்கு மனதில் பதிய வைத்து கொண்டவர்கள், முழுமையாக கற்றவர்களை விட மேலானவர்கள். அர்த்தம் புரிந்தவர்கள், நன்கு மனதில் பதிய வைத்தவர்களை விட மேலானவர்கள். வேதம் சொன்னபடி வாழ்க்கையில் நடந்து காட்டுபவர்கள், அர்த்தம் புரிந்தவர்களை விட மேலானவர்கள்.


तपो विद्या च विप्रस्य निःश्रेयसकरं परम् ।

तपसा किल्बिषं हन्ति विद्यया अमृतमश्नुते ॥

- மனு ஸ்ம்ருதி

தவமும், வேதமும் வேத ப்ராம்மணனுக்கு (விப்ரனுக்கு) மேன்மை கொடுக்கும். தவத்தால் விப்ரனின் பாபங்கள் தீரும். வேதத்தால் ப்ரம்மானந்ததை அனுபவிப்பான்.


प्रत्यक्षं चानुमानं च शास्त्रं च विविधाऽऽगमम् ।

त्रयं सुविदितं कार्यं धर्मशुद्धिमभीप्सता ॥

- மனு ஸ்ம்ருதி

3 சாதனங்கள் உள்ளது. கண்ணால் பார்த்தும், அனுமானத்தாலும், சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றும் ஆராய்வதால் ஒருவன் தன்னை தர்ம வழியில் மேம்படுத்தி கொள்ள முடியும்.


आर्षं धर्मोपदेशं च वेदशास्त्रा अविरोधिना ।

यस् तर्केणा अनु सन्धत्ते स धर्मं वेद नैतरः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தையும், தர்ம உபதேச ஸ்ம்ருதிகளையும், வேதத்துக்கு விரோதமில்லாத சாஸ்திரத்தையும் (உபநிஷத்), தர்க்க சாஸ்திரத்தையும் நன்கு படிப்பதால், தர்மங்கள் என்னென்ன என்று ஒருவன் புரிந்து கொள்ள முடியும்.


नैःश्रेयसमिदं कर्म यथोदितमशेषतः ।

मानवस्यास्य शास्त्रस्य रहस्यमुपदिश्यते ॥

- மனு ஸ்ம்ருதி

இதுவரை மோக்ஷத்திற்கு சாதனமான விஷயங்கள் சொல்லப்பட்டது.  இனி, மனிதர்களுக்கு இக வாழ்வில் தேவையான தர்மத்தை சொல்கிறேன்.


अनाम्नातेषु धर्मेषु कथं स्यादिति चेद् भवेत् ।

यं शिष्टा ब्राह्मणा ब्रूयुः स धर्मः स्यादशङ्कितः ॥

- மனு ஸ்ம்ருதி

படித்த தர்ம சாஸ்திரத்தில் சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். நான் கூறப்போகும் லக்ஷணங்கள் பொருந்திய ப்ராம்மணர்களிடம் சந்தேகத்தை கேட்க வேண்டும். அதுவே தர்மம் என்று ஏற்று கொள்ள வேண்டும்.


धर्मेणाधिगतो यैस्तु वेदः सपरिबृंहणः ।

ते शिष्टा ब्राह्मणा ज्ञेयाः श्रुतिप्रत्यक्षहेतवः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதங்கள், வேத-அங்கங்கள் (உபநிஷத்), தர்ம சாஸ்திரங்கள் (ஸ்ம்ருதிகள்), புராணங்கள், மீமாம்ஸை, தர்க்கம் அனைத்தும் படித்தவரும், அவற்றின் பொருளை முழுமையாக அறிந்தவருமாக இருக்கின்ற ப்ராம்மணரிடம், கேட்டு, அவர் சொல்படி நடக்க வேண்டும்.


दशावरा वा परिषद्यं धर्मं परिकल्पयेत् ।

त्र्य्ऽवरा वाऽपि वृत्तस्था तं धर्मं न विचालयेत् ॥

- மனு ஸ்ம்ருதி

ஆசாரத்தில் இருக்கும் 10 பேர் சேர்ந்திருக்கும் சபையில், அவர்கள் எதை தர்மம் என்று நிர்ணயித்து சொல்கிறார்களோ, அதையே தர்மமாக ஏற்கலாம்.

10 பேர் கிடைக்காத பட்சத்தில் 3 பேர் சேர்ந்து சொன்னாலும், அதையே தர்மமாக ஏற்கலாம்.


त्रैविद्यो हेतुकस्तर्की नैरुक्तो धर्मपाठकः ।

त्रयश्चाश्रमिणः पूर्वे परिषत् स्याद् दशावरा ॥

- மனு ஸ்ம்ருதி

வேதங்களில் 3 சாகை ஓதியவன், தர்க்கம் மீமாம்சை போன்ற சாஸ்திரங்களை  படித்தவன், தர்மசாஸ்திரங்கள் (ஸ்ம்ருதி) அறிந்தவன், பிரம்மச்சாரி, க்ருஹஸ்தன், சந்நியாசி போன்றவர்கள் சேர்ந்த 10 பேருக்கு குறையாமல் இருக்கும் சபைக்கு  "பரிஷத்" என்று பெயர்.


ऋग्वेदविद् यजुर्विद्च सामवेदविदेव च ।

त्र्य्ऽवरा परिषद्ज्ञेया धर्मसंशयनिर्णये ॥

- மனு ஸ்ம்ருதி

ரிக் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், யஜுர் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஸாம வேதத்தை நன்கு அறிந்தவர்கள் சேர்ந்து இருக்கும் சபைக்கும் "பரிஷத்" என்று பெயர். படித்த தர்ம சாஸ்திரத்தில் சந்தேகம் ஏற்பட்டால், இவர்களின் பரிக்ஷித்தில் கேட்டு தெளிவு பெறலாம்.


एकोऽपि वेदविद् धर्मं यं व्यवस्येद् द्विजोत्तमः ।

स विज्ञेयः परो धर्मो न अज्ञानामुदितोऽयुतैः ॥

- மனு ஸ்ம்ருதி

வேதத்தை நன்கு அறிந்த ஒருவன் மட்டுமே இருந்தாலும், அந்த த்விஜனிடமே தர்மம் எது என்று கேட்டு சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம். வேதமோ, சாஸ்திரமோ அறியாத பல பேர் சேர்ந்து கொண்டு "இது தான் தர்மம்" என்று சொன்னாலும் ஏற்கக்கூடாது.


अव्रतानाममन्त्राणां जातिमात्रोपजीविनाम् ।

सहस्रशः समेतानां परिषत्त्वं न विद्यते ॥

- மனு ஸ்ம்ருதி

பிரம்மச்சர்யம், ஏகாதசி போன்ற விரதங்கள் இல்லாமல், ஜாதியை மட்டுமே வைத்து கொண்டு ஆயிரம் பேர் கூடி தர்ம எது என்று பேசினாலும், அதை "பரிஷத்" என்று ஏற்க முடியாது.


यं वदन्ति तमोभूता मूर्खा धर्ममतद्विदः ।

तत्पापं शतधा भूत्वा तद्वक्तॄननुगच्छति ॥

- மனு ஸ்ம்ருதி

தர்மம் தெரியாமல், வேத அர்த்தம் தெரியாமல், தமோ குணம் கொண்டவர்கள் "இது தான் தர்மம்" என்று சொன்னால், இதை கேட்டவன் கொண்டுள்ள பாபங்கள், 100 மடங்காக சொன்னவனை அடையும்.


एतद् वोऽभिहितं सर्वं निःश्रेयसकरं परम् ।

अस्मादप्रच्युतो विप्रः प्राप्नोति परमां गतिम् ॥

- மனு ஸ்ம்ருதி

இதுவரை சர்வ நிச்சயமாக நன்மையை தரும் விஷயங்களை சொன்னேன். நான் சொன்னபடி வாழ்க்கையை நடத்துபவர்கள் பரமபதத்தை நிச்சயம் அடைவார்கள்.


एवं स भगवान् देवो लोकानां हितकाम्यया ।

धर्मस्य परमं गुह्यं ममेदं सर्वमुक्तवान् ॥ 

- மனு ஸ்ம்ருதி

உலகத்தாருக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட இந்த பரம ரகசியமான தர்மத்தை. பகவான் மனு ரிஷிகளாகிய எங்களுக்கு சொன்னார்.


सर्वमात्मनि सम्पश्येत् सत् च असत् च समाहितः ।

सर्वं ह्यात्मनि सम्पश्यन्नाधर्मे कुरुते मनः ॥

- மனு ஸ்ம்ருதி

ஸத் (இருக்கிறார்), அஸத் (இல்லாதது போல இருக்கிறார்) இரண்டுமாகவும் பரமாத்மா இருக்கிறார். ஒவ்வொருவர் உடம்பிற்குள்ளும் இருக்கிறார் என்ற சத்யத்தை உணர்ந்து, தன் ஆத்ம ஸ்வரூபத்திலேயே இருப்பவன் மனது எப்பொழுதுமே அதர்மத்தில் செல்லாது.


आत्मैव देवताः सर्वाः सर्वमात्मन्यवस्थितम् ।

आत्मा हि जनयत्येषां कर्मयोगं शरीरिणाम् ॥ 

- மனு ஸ்ம்ருதி

சகல தேவர்களுக்குள்ளும் பரமாத்மாவே இருக்கிறார். உடலெடுத்த அனைவருக்கும் கர்ம பலனை தருவதும் அந்த பரமாத்மாவே 


खं संनिवेशयेत् खेषु चेष्टनस्पर्शनेऽनिलम् ।

पक्तिदृष्ट्योः परं तेजः स्नेहेऽपो गां च मूर्तिषु ॥ 

- மனு ஸ்ம்ருதி

வெளியிலுள்ள ஆகாசத்தை, தன் உடம்பில் இருக்கும் ஆகாசமாக  (இடைவெளி) தியானிக்க வேண்டும். வெளியிலுள்ள காற்றை (வாயு), தன் உடம்பில் இருக்கும் காற்றாக தியானிக்க வேண்டும். இவ்வாறே, வெளியில் உள்ள அக்னியை, தன் உடம்பில் இருக்கும் அக்னியாக தியானிக்க வேண்டும். இவ்வாறே, வெளியில் உள்ள நீரை, தன் உடம்பில் இருக்கும் நீரோடு தியானிக்க வேண்டும். இவ்வாறே, வெளியில் உள்ள மண்ணை (பூமி), தன் மாமிச உடம்பாகவே தியானிக்க வேண்டும்.


मनसीन्दुं दिशः श्रोत्रे क्रान्ते विष्णुं बले हरम् ।

वाच्यग्निं मित्रमुत्सर्गे प्रजने च प्रजापतिम् ॥

வெளியிலுள்ள சந்திரனை, தன் மனதாக தியானிக்க வேண்டும். வெளியிலுள்ள திசைகளை காதுகளாக தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணுவை தன் கால்களாக தியானிக்க வேண்டும். சிவபெருமானை தன்னிடம் உள்ள பலமாக தியானிக்க வேண்டும். அக்னி பகவானே தன்னுடைய நாக்காக தியானிக்க வேண்டும். மித்ரன் என்ற தேவதையே ஆசன பாகமாக தியானிக்க வேண்டும். பிறப்புறுப்பை ப்ரஜாபதியாக தியானிக்க வேண்டும். 


प्रशासितारं सर्वेषामणीयांस मणोरपि ।

रुक्माभं स्वप्नधीगम्यं विद्यात् तं पुरुषं परम् ॥

- மனு ஸ்மிருதி

இப்படி தியானம் செய்து, அனைத்தையும் ஆள்பவரும், அணுவுக்கும் அணுவாக இருப்பவரும், தங்கம் போன்று ப்ரகாசமானவரும், ஞானகண்ணால் மட்டுமே காணக்கூடியவருமான பரமாத்மாவை மெய் அறிவை (ஞானம்) கொண்டு காண வேண்டும்.


एतमेके वदन्त्यग्निं मनुमन्ये प्रजापतिम् ।

इन्द्रमेके परे प्राणमपरे ब्रह्म शाश्वतम् ॥

- மனு ஸ்மிருதி

சிலர், பரமாத்மாவை அக்னி ஸ்வரூபமாக உபாசனை செய்கிறார்கள். சிலர் பரமாத்மாவை பிராஜாபதிகளாக உபாசனை செய்கிறார்கள். சிலர் தேவேந்திரனாக உபாசனை செய்கிறார்கள். சிலர் தன்னுள் இருக்கும் ப்ராணனாக உபாசனை செய்கிறார்கள். சிலர் ப்ரம்ம ஸ்வரூபமாக உபாசனை செய்கிறார்கள்.



एष सर्वाणि भूतानि पञ्चभिर्व्याप्य मूर्तिभिः ।

जन्मवृद्धिक्षयैर्नित्यं संसारयति चक्रवत् ॥

- மனு ஸ்மிருதி

பரமாத்மா, உயிர்களை பஞ்ச பூதங்களோடு சேர்த்து பிறப்பு, வளர்ச்சி, மறைவு என்று சக்கரம் போல சுழற்றி இயங்க வைக்கிறார். 


एवं यः सर्वभूतेषु पश्यत्यात्मानमात्मना ।

स सर्वसमतामेत्य ब्रह्माभ्येति परं पदम् ॥

- மனு ஸ்மிருதி

எவன் எல்லா பூதங்களுக்கும் உள்ளே இருக்கும் ஆத்மாவையே பார்க்கிறானோ, அவனே ப்ரம்ம ஞானத்தை அடைகிறான். அவன் மேலான பரப்ரம்மத்தின் பதமான பரமபதத்தை அடைகிறான்.


இவ்வாறு ஸ்வாயம்னு மனு தர்ம சாஸ்திரமான "மனு ஸ்ம்ருதி"யை ரிஷிகளுக்கு உபதேசம் செய்தார்.