Followers

Search Here...

Showing posts with label அர்த்தத்துடன். Show all posts
Showing posts with label அர்த்தத்துடன். Show all posts

Saturday 28 March 2020

ஸ்கந்தம் 6: அத்யாயம் 8 - நாராயண கவசம் (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவதம் (ஸ்ரீ சுக ப்ரம்மம் - பரீக்ஷித் மகாராஜனுக்கு சொன்ன நாராயண கவசம்)

நாராயண கவசம்
ஸ்கந்தம் 6: அத்யாயம் 8



ப்ருஹஸ்பதி தேவர்களுக்கு குரு. 
ஒரு சமயம் இந்திரதேவனை பார்க்க சென்ற போது, இந்திரன் தன் சபையில் நடனம் பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.

தன் குரு வருகிறார் என்று தெரிந்தும், "இவர் எதற்காக இந்த சமயத்தில் வருகிறார்?" என்று நினைத்தான்.
இவன் எண்ணத்தை அறிந்து கொண்ட ப்ருஹஸ்பதி அமைதியாக திரும்பி விட்டார்.

நடனம் முடிந்து, சபை கலைந்த பின்,  தேவகுரு ப்ருஹஸ்பதியை பார்க்க அவர் ஆசிரமத்துக்கு சென்று பார்த்தான். ஆனால், ப்ருஹஸ்பதி தரிசனம் கொடுக்காமல் மறைந்து விட்டார்.

"ப்ருஹஸ்பதி தேவர்களிடம் கோபத்தில் உள்ளார்" என்று தெரிந்து கொண்ட அசுரர்கள், "இது தான் சமயம்" என்று தேவர்களை தாக்கி, சொர்க்க லோகத்தில் இருந்து அடித்து துரத்த, பூலோகத்தில் வந்து மனிதர்களை போல சஞ்சாரம் செய்து கொண்டு, பிச்சை எடுத்து கொண்டு இருந்தார்கள்.


"இதற்கு விமோச்சனம் கிடையாதா?" என்று வருத்தப்பட்டு ப்ரம்ம தேவனிடம் முறையிட, 
"குரு இல்லாமல் இருக்க கூடாது.  ப்ருஹஸ்பதி மனமிறங்கி வரும்வரை, த்வஷ்டா மகன் விஸ்வரூபனை குருவாக வைத்து கொள். அவர் சொல்படி கேள். அசுரர்களை சமாளிக்க வழி சொல்வார்" என்று சொன்னார்.

மூன்று தலைகள் உடைய பிராம்மணரான விஸ்வரூபன், தேவர்களுக்கு குருவாக இருக்க சம்மதித்தார். 

 தீராத நோய்கள் குணமாக, எதிரிகளை ஜெயிக்க, தேவர்களுக்கு "நாராயண கவசம்" சொன்னார். 

இதை சிரத்தையுடன் ஜபித்த இந்திரன் அசுரர்களை தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றான். சொர்க்க லோகத்தை மீண்டும் கைப்பற்றினான். 

ராஜோவாச - श्रीराजोवाच
சுக ப்ரம்ம ரிஷியிடம், பரீக்ஷித் மன்னர் கேட்கிறார்

यया गुप्त: सहस्राक्ष: स-वाहान् रिपु-सैनिकान् ।
क्रीडन्न-इव विनिर्जित्य त्रि-लोक्या बुभुजे श्रियम् ॥
யயா குப்த: ஸஹஸ்ராக்ஷ:
ஸவாஹான் ரிபு ஸைநிகான் |
க்ரீடந்நிவ விநிர் ஜித்ய
த்ரிலோக்யா புபுஜே ஸ்ரியம் ||


ஆயிரம் கண்களுடைய (ஸஹஸ்ராக்ஷ) இந்திர தேவன், எந்த (யயா) வித்யையினால் பாதுகாக்கப்பட்டு (குப்த), எதிரிகளின் படைகளை (ரிபு ஸைநிகான்)  எல்லாம் (ஸவாஹான்) விளையாட்டாக (க்ரீடந்நிவ) வென்று (விநிர் ஜித்ய), மூன்று உலகங்களுக்கும் (த்ரிலோக்யா) தலைவனாகும் ஐஸ்வர்யத்தை (ஸ்ரியம்) அடைந்தாரோ !(புபுஜே)




भगवं तत्  मम आख्याहि वर्म नारायण-आत्मकम् ।
यथा आततायिन: शत्रून् एन गुप्त अजयन् मृधे ॥
பகவம் தன் மமாக்யாஹி
வர்ம நாராயணாத் மகம் |
யதா (ஆ)ததாயின: ஸத்ரூன்
யேன குப்தோ அஜயன் ம்ருதே ||

அப்படி பாதுகாக்கக்கூடிய (வர்ம)  நாராயண கவசம் (நாராயண ஆத்மகம்) என்னும் வித்யையை எனக்கு (மம) தாங்கள் (பகவம் தன்) உபதேசிக்க (ஆக்யாஹி) வேண்டும்.
எதிரிகள் (ஸத்ரூன்) எப்படியெல்லாம் (யதா) வீழ்த்த முயற்சித்தாலும் (ததாயின),
நாராயண கவச மந்திரத்தை ஜபித்ததன் மூலம் (யேன), இந்திர தேவன் போரில் (ம்ருதே) எதிரிகளால் ஜெயிக்கமுடியாதபடி (அஜயன்) காப்பாற்றப்பட்டாரே (குப்தோ).

ஸ்ரீ ஸுக உவாச 
ஸ்ரீசுகர் உபதேசிக்கிறார்

वृत: पुरोहित: त्वाष्ट्रो महेन्द्राय अनुपृच्छते ।
नारायण-आख्यं वर्म-आह तद् इह एक-मना: श‍ृणु ॥
வ்ருத: புரோஹிதஸ் த்வாஷ்ட்ரோ
மஹேந்த்ரா யாநு ப்ருச்சதே |
நாராயணாக்யம் வர்மாஹ
தத் இஹ ஏக மன: ஸ்ருணு ||

தேவர்களின் புரோஹிதனாய் வரிக்கப்பட்ட (வ்ருத: புரோஹிதஸ்) விஸ்வரூபனிடம் (த்வாஷ்ட்ராவின் பிள்ளை), சத்ருக்களை ஜெயிக்க உபாயம் என்ன? (யாநு ப்ருச்சதே) என்று கேட்ட இந்திர தேவனுக்கு (மஹேந்த்ரா) நாராயண கவசம் (நாராயணாக்யம் வர்மாஹ) என்ற மந்திரத்தை உபதேசித்தார்.
அதை இங்கு (தத் இஹ) உனக்கு உபதேசிக்கிறேன். பரீக்ஷித் மன்னா ! ஒரு மனத்துடன் கேள் (ஏக மன: ஸ்ருணு)

விஸ்வரூப உவாச - श्रीविश्‍वरूप उवाच
விஸ்வரூபன் இந்திர தேவனிடம் உபதேசிக்கிறார்

धौत अङ्‌घ्रि पाणि: आचम्य स-पवित्र उदङ्‍मुख: ।
कृत स्व अङ्ग कर न्यासो मन्त्राभ्यां वाग्यत: शुचि: ॥
தௌத அங்க்ரி பாணிர் ஆஸம்ய
ஸபவித்ர உதங்முக: |
க்ருத ஸ்வாங்க கர ந்யாஸோ மந்த்ராப்யாம் 
வாக்யத: ஸுசி: ||

கை (பாணிர்), கால்களை (அங்க்ரி), நன்றாக அலம்பிக்கொண்டு (தௌத),  தீர்த்தத்தை எடுத்து அச்சுதாய  நம:, அனந்தாய நம:, கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்று முறை தீர்த்தம் எடுத்து ஆசமனம் செய்து (ஆசம்ய),
மோதிர விரலில் தூய்மையான  தர்ப்பை புல்லால் மோதிரம் (ஸபவித்ரம்) அணிந்து கொண்டு, வடக்கு/உத்திர திசையை பார்த்து (உதங்முக)
பகவானின் நாமத்தால் (மந்த்ராப்யாம்), உடம்பில் உள்ள 8 அங்கங்களை தொட்டு, ஸுத்தி (சுத்தி) செய்து கொள்ளவேண்டும் (க்ருத ஸ்வாங்க கர ந்யாஸோ).
அங்க சுத்தி செய்யும் போது, மனத்தூய்மையோடு (ஸுசி:), மனதோடு / வாக்கு இல்லாமல் (வாக்யத:) சொல்லவேண்டும்.

नारायण-परं वर्म सन्नह्येद् भय आगते ।
पादयो: जानुनो: ऊर्वो उदरे हृदि अथ उरसि ॥
मुखे शिरसि आनुपूर्व्याद् ओङ्कार आदीनि विन्यसेत् ।
ॐ नमो नारायणाय इति विपर्ययम् अथ अपि वा ॥ 
நாராயணபரம் வர்ம 
ஸந்நஹ்யேத் பய ஆகதே |
பாதயோர் ஜாநுநோ ஊர்வோ 
உதரே ஹ்ருத்யத் உரஸி ||
முகே ஸிரஸி ஆநுபூர்வ்யாத்
ஓங்கார ஆதீநி வின்ய ஸேத் |
ஓம் நமோ நாராயணா யேதி
விபர்யய மதாபி வா ||

உடலாலும், மனதாலும் நமக்கு வரும் (ஆகதே) ஆத்யாத்மிக பயத்தை (பய) போக்கிக்கொள்ள, 
காற்று, மழை, வெயில், இடி, மின்னல் முதலிய தெய்வ சங்கல்பத்தால் நமக்கு வரும் (ஆகதே) ஆதிதைவிக பயத்தை (பய) போக்கிக்கொள்ள,
பஞ்சபூதங்களாலும், பிராணிகளாலும் நமக்கு வரும் (ஆகதே) ஆதிபௌதீக பயத்தை (பய) போக்கிக்கொள்ள,
எங்கும் நிறைந்த நாராயண கவசத்தை (நாராயணபரம் வர்ம) தன்னோடு பிணைத்து (ஸந்நஹ்யேத்) கொள்ள வேண்டும்.
பூஜிப்பவரின் சரீரம் சுத்தமாக இருந்தால்தான் அவர் செய்யும் பூஜையும் மிகவும் சுத்தமாக அமையும். அதன் பயனும் விரும்பும் முறையில் கிடைக்கும். அந்தச் சரீரத்துக்கு ந்யாஸம் (ஸுத்தி) அவசியம்.

சர்வ உலகங்களை (தான் உட்பட) படைத்ததும் நாராயணனே!
தான் படைத்ததை மீண்டும் தன்னிடம் ஒடுக்கி கொள்பவரும் நாராயணனே!
என்ற தியானத்துடன்,
எட்டு அங்கங்களாக இருக்கும் நம் உடலில், 
1. பாதங்கள் (பாதயோ), 2. முழங்கால் (ஜாநுநோ), 3. தொடை (ஊர்வோ), 
4. வயிறு (உதரே), 5. இதயம் (ஹ்ருத்ய), 6. மார்பு (உரஸி), 7. முகம் (முகே), 8. தலை (ஸிரஸ்) 
என்று முறையே ஒன்றன் பின் ஒன்றாக (ஆநுபூர்வ்யாத்) தொட்டு (வின்ய ஸேத்), ஓம் என்ற ஓங்காரத்தித்தில் ஆரம்பிக்கும் (ஓங்கார ஆதீநி), திருவஷ்டாக்ஷரம் என்ற எட்டு எழுத்து மந்திரத்தை (ஓம் ந மோ நா ரா ய ணா ய) முறையே சொல்லி, நாராயணன் ஒருவனே (யேதி) கதி! என்று தியானித்து கொண்டு அங்க ந்யாஸம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு இதையே தலைகீழாக (விபர்யய) சொல்லி (மதாபி வா) தலை முதல் பாதம் வரை தொட்டு முறையே (ஓம் ந மோ நா ரா ய ணா ய) சொல்ல வேண்டும்.




कर-न्यासं तत: कुर्याद् द्वादश अक्षर विद्यया ।
प्रणव आदि य-कार अन्तम् अङ्गुलि अङ्गुष्ठ पर्वसु ॥
கர ந்யாஸம் தத: குர்யாத்
த்வாத ஸாக்ஷர வித்யயா |
ப்ரணவாதி 'ய'கார அந்தம்
அங்குலி அங்குஷ்ட பர்வஸு ||

அதற்கு பிறகு (தத:) (ஓம் ந மோ ப க வ தே வா சு தே வா ய) என்ற 12 எழுத்து த்வாத ஸாக்ஷர மந்திரத்தை (த்வாத ஸாக்ஷர வித்யயா) ஜபம் செய்து கொண்டே, கரங்களை (கர) சுத்தி (ந்யாஸம்) செய்து கொள்ள வேண்டும் (குர்யாத்)
வலது ஆள் காட்டி விரல் தொட்டு, ஓம் என்ற ப்ரணவத்தில் ஆரம்பித்து,(ப்ரணவாதி),
வலது சுண்டு விரல் வரை, கட்டை விரலால் தொட்டு கொண்டே, தொடர்ந்து,
இடது சுண்டு விரல் ஆரம்பித்து, இடது ஆள் காட்டி வரை, கட்டை விரலால் தொட்டு கொண்டே, முதல் 8 எழுத்துக்கள் சொல்லி, மீதமுள்ள 4 எழுத்தை, கட்டை விரலின் அடி பகுதியை (அங்குஷ்ட பர்வஸு) ஆள் காட்டி விரலால் இரு கைகளில் தொட்டு, 'ய'காரத்தோடு முடிப்பது ('ய'கார அந்தம்) கர ந்யாஸம்.
न्यसेद्‌ हृदय ओंङ्कारं वि-कारम् अनु मूर्धनि ।
ष-कारं तु भ्रुवो: मध्ये ण-कारं शिखया न्यसेत् ॥
ந்யஸேத் ஹ்ருதய ஓங்காரம்
'வி'காரம் அனு மூர்தனி |
'ஷ'காரம் து ப்ருவோர் மத்யே
'ண'காரம் ஸிகயா ந்யஸேத் ||

அங்க ந்யாஸம், கர ந்யாஸம் செய்த பிறகு, 6 எழுத்து மந்திரமான, "விஷ்ணு ஷடக்ஷரியை" (விஷ்ணவே நம:) 
இதயத்தில் (ஹ்ருதய) - "ஓம்" என்ற ஓங்காரத்தை (ஓங்காரம்) நிறுத்தி (ந்யஸேத்), 
தலையில் (அனு மூர்தனி) - 'வி' என்ற அக்ஷரத்தை நிறுத்தி,
புருவ மத்தியில் (ப்ருவோர் மத்யே) - 'ஷ' என்ற அக்ஷரத்தை நிறுத்தி,
சிகையில் (ஸிகயா ந்யஸேத்) - 'ண' என்ற அக்ஷரத்தை நிறுத்தி,

वे-कारं नेत्रयो: युञ्‍ज्याद् न-कारं सर्व-सन्धिषु ।
म-कारम् अस्त्रम् उद्दिश्य मन्त्र-मूर्ति: भवेद् बुध: ॥
'வே'காரம் நேத்ரயோர் யுஞ்ஜ்யாந்
'ந'காரம் ஸர்வ ஸந்திஷு |
'ம'கார மஸ்த்ர முத்திஸ்ய
மந்தரமூர்திர் பவேத் புத: ||

கண்களில் (நேத்ரயோர்) - 'வே' என்ற அக்ஷரத்தை நிறுத்தி (யுஞ்ஜ்யாந்),
அனைத்து சந்திகளிலும் (ஸர்வ ஸந்திஷு) - 'ந'  என்ற அக்ஷரத்தை நிறுத்தி,
'ம' என்ற அக்ஷரத்தை ஆயுதங்களில் (அஸ்த்ர) நிறுத்தியும்,
இப்படி தன்னையே மந்திர மூர்த்தியாக (மந்தரமூர்திர்) ஆக்கிக்கொள்பவன் (பவேத்) புத்திமான் (புத:) ||

स-विसर्गं फड् अन्तं 
तत् सर्व-दिक्षु विनिर्दिशेत् ।
ॐ विष्णवे नम इति ॥ 
ஸ விஸர்கம் பட் அந்தம்
தத் ஸர்வ திக்ஷ விநிர்திஸேத் |
ஓம் விஷ்ணவே நம இதி ||

"ஓம் விஷ்ணவே நம" என்று தியானித்து கொண்டே வரும் போது, 
"ம"காரம் சொல்லும் போதே, அதனோடு "பட்" என்ற அக்ஷரத்தையும் விஸர்கமாக சேர்த்து (ஸ விஸர்கம் பட்), கிழக்கு திசையில் ஆரம்பித்து, நான்கு திசைகளிலும் "ம: அஸ்த்ராய பட்" (தத் ஸர்வ திக்ஷ) என்று சொல்லி (விநிர்திஸேத்) முடிக்க வேண்டும் (அந்தம்). 
இப்படி (இதி) ஓங்காரத்திற்கு காரணமான விஷ்ணுவே (ஓம் விஷ்ணவே) நம்மை சூழ்ந்து இருக்க, அவரை மமதை இல்லாமல் நமஸ்கரிக்க வேண்டும் (நம:). 

आत्मानं परमं ध्यायेद् ध्येयं षट्‍‌-शक्तिभि: युतम् ।
विद्या तेज: तप: मूर्तिम् इमं मन्त्रम् उदाहरेत् ॥
ஆத்மானம் பரமம் த்யாயேத்
த்யேயம் ஷட் ஸக்திபிர் யுதம் |
வித்யா தேஜஸ் தபோ மூர்திம்
இமம் மந்த்ரம் உதாஹரேத் ||

ஆறு ஐஸ்வர்யங்கள் (ஷட் ஸக்திபிர்) (பூர்ணமான ஐச்வர்யம், பூர்ணமான தர்மம், பூர்ணமான புகழ், பூர்ணமான ஸ்ரீ,பூர்ணமான வைராக்யம்,பூர்ணமான மோக்ஷம்) நிறைந்தவரான (யுதம்)  சர்வ சாஸ்திரமும் அறிந்த, தேஜோ மயமான, தவ மூர்த்தியான (வித்யா தேஜஸ் தபோ மூர்திம்) பரமாத்மா நாராயணனே நான் (ஆத்மானம்) தியானிக்க (த்யேயம்) தகுதியானவர் என்ற மனத்தெளிவுடன், நாராயண-கவசம் என்ற இந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும் (இமம் மந்த்ரம் உதாஹரேத்)




ॐ हरि: विदध्याद् मम सर्व-रक्षां
न्यस्त अङ्‌घ्रि पद्म: पतगेन्द्र पृष्ठे ।
दर अरि चर्म असि गदा इषु चाप
पाशान् दधान: अष्ट गुण: अष्ट बाहु: ॥
ஓம் ஹரிர் விதத்யான்
மம ஸர்வ ரக்ஷாம்
ந்யஸ் அங்க்ரி பத்ம:
பதகேந்த்ர ப்ருஷ்டே | 
தராரி சர்மாஸி
கத  இஷு சாப
பாஸான் ததாந 
அஷ்ட குண அஷ்ட பாஹு: ||

ஓங்காரத்திற்கு காரணமான பகவான் விஷ்ணு (ஓம் ஹரிர்) கருடனின் மீது அமர்ந்து இருக்க, தனது  தாமரை (பத்ம:) போன்ற திருவடிகள் (அங்க்ரி) கருடனின் முதுகில் (பதகேந்த்ர ப்ருஷ்டே) தொட்டு (ந்யஸ்த) கொண்டு இருக்க, சங்கு (தர), சக்கரம் (அரி), கேடயம் (சர்ம), நந்தகம் என்ற வாள் (அஸி), கதை (கத), அம்பு (இஷு), வில் (சாப), மற்றும் அங்குசம் (பாஸான்) என்ற எட்டு ஆயுதங்களை, கஜேந்திரன் என்ற யானையை காப்பதற்காக எட்டு கைகளில் (அஷ்ட பாஹு) தரித்து (ததாந) கொண்டு வந்த, எட்டு குணங்களுடைய (அஷ்ட குண) பரமாத்மா நாராயணன், எல்லா நேரங்களிலும் அவருடைய எட்டு கரங்களால் என்னைப் அனைத்து விதத்திலும் (மம ஸர்வ ரக்ஷாம்) பாதுகாத்து அருள வேண்டும் (விதத்யான்).
जलेषु मां रक्षतु मत्स्य मूर्ति: 
याद:-गणेभ्यो वरुणस्य पाशात् ।
ஜலேஷு மாம் ரக்ஷது
மத்ஸ்ய மூர்தி:
யாதோ கணேப்யோ
வருணஸ்ய பாஸாத் |

மத்ஸ்ய மூர்த்தியாக அவதாரம் செய்த பரமாத்மா, நீரில் (ஜலேஷு) ஏற்படும் அபாயத்திலிருந்து என்னை காக்கட்டும் (மாம் ரக்ஷது). நீரில் வாழும் உயிர்களின் (யாதோ கணேப்யோ) வருண பாசத்திலிருந்து (வருணஸ்ய பாஸாத்) என்னை காக்கட்டும்.
स्थलेषु माया-वटु वामन: अव्यात्
त्रिविक्रम: खे अवतु विश्वरूप: ॥
ஸ்தலேஷு மாயா
வடு வாமன அவ்யாத் |
த்ரிவிக்ரம: கே(அ)வது
விஸ்வரூப: ||

7 வயது பிராம்மண சிறுவனாக (வடு) அவதரித்து, வஞ்சகனை வஞ்சனையால் அடிப்பது போல, கபடம் செய்து (மாயா) மூன்று அடி மண் கேட்டு, விஸ்வரூபம் (விஸ்வரூப:) எடுத்து மூவுலகங்களை அளந்த, 
வாமன பகவான், என்னை நிலத்தில் (ஸ்தலேஷு) காக்கட்டும் (அவ்யாத்).
உலகளந்த பெருமாள் (த்ரிவிக்ரம) என்னை ஆகாயத்தில் (கே) காக்கட்டும் (அவது).
दुर्गेषु अटवि आजि-मुख-आदिषु प्रभु:
पायाद् नृसिंह: असुर यूथप अरि: ।
துர்கேஷு அடவி
ஆஜி முக ஆதிஷு ப்ரபு:
பாயாந் ந்ருஸிம்ஹ
அஸுர யூதப அரி: |

ஆபத்தான இடங்களாலும் (துர்கேஷு), அடர்ந்த வனங்களாலும் (அடவி), யுத்த களம் போன்றவற்றாலும்  (ஆஜி முக ஆதிஷு) மனதில் ஏற்படுகின்ற அச்சத்தை போக்க, அசுரர்களின் தலைவன் (அஸுர யூதப) ஹிரண்யகசிபுவை ஒழிக்க (அரி) நரசிம்மாக (ந்ருஸிம்ஹ) வந்தது போல வந்து, பரமாத்மா (ப்ரபு:) என்னை காக்கட்டும் (பாயாந்).

विमुञ्चतो यस्य महा-अट्टहासं
दिशो विनेदु: न्यपतं च गर्भा: ॥
விமுஞ்சதோ யஸ்ய
மஹா அட்டஹாஸம்
திஸோ விநேதுர்
ந்யபதம்ஸ் ச கர்பா: ||

அசுரர்கள் நடுங்கும் நரசிம்மஹ ரூபத்துடன் அவர் கொடுத்த (விமுஞ்சதோ யஸ்ய) மஹா அட்டகாசமான சிம்ம கர்ஜனை எல்லா திசைகளிலும் அதிர (திஸோ விநேதுர்) செய்தது. மேலும், அது கர்ப்பத்தில் வளரும் அசுர சிசுவையும் சிதைக்குமளவிற்கு (ந்யபதம்ஸ் ச கர்பா:) அசுரர்களிடம் ஒரு பயத்தை கொடுத்தது.
அசுரர்களை நடுங்க செய்யும் பகவான், ஆபத்தான இடங்களில், பகவான் நரசிம்மராக வந்து எனக்கு கருணை காட்டட்டும்.




रक्षतु असौ मा अध्वनि यज्ञ-कल्प:
स्व-दंष्ट्रया उन्नीत धरो वराह: ।
ரக்ஷது அஸௌ மா அத்வநி
யஜ்ஞ கல்ப: ஸ்வ தம்ஷ்ட்ரயா 
உந்நீத தரோ வராஹ: |

போகும் பாதைகள் (அத்வநி) அனைத்திலும் வரும் ஆபத்துகளில் இருந்து, உலகத்தை (தரோ) தன் கொம்பினால் (ஸ்வ தம்ஷ்ட்ரயா) பிரளய ஜலத்திலிருந்து மீட்டு உயர்த்தி (உந்நீத) காப்பாற்றிய அந்த (அஸௌ) யஞ்ய மூர்த்தியான (யஜ்ஞ கல்ப:) வராஹ பகவான் என்னை (மா) காக்கட்டும் (ரக்ஷது).


राम: अद्रि-कूटेषु अथ विप्रवासे
स-लक्ष्मण: अव्याद् भरत-अग्रज: अस्मान् ॥
ராம: அத்ரி கூடேஷ 
அத விப்ர வாஸே
ஸ-லக்ஷ்மண அவ்யாத்
பரத அக்ரஜ  அஸ்மான் ||

மலை சிகரங்களில் (அத்ரி கூடேஷ), மேலும் வெளி தேசங்களில் (அத விப்ர வாஸே) என்னை (அஸ்மான்) பரதனின் மூத்த சகோதரனான (பரத அக்ரஜ) ஸ்ரீ ராமர் (ராம), லக்ஷ்மணருடன் சேர்ந்து (ஸ-லக்ஷ்மண), காத்து ரக்ஷிக்கட்டும் (அவ்யாத்).
माम् उग्र-धर्माद् अखिलात् प्रमादात्
नारायण: पातु नरश्च हासात् ।
மாமுக்ர தர்மா
தகிலாத் ப்ரமாதாந்
நாராயண: பாது
நரஸ்ச ஹாஸாத்

ஒரு வேளை நான் (மாம்) வேத தர்மத்துக்கு விரோதமாக  திமிர் தனத்தால் முட்டாள் தனத்தால் (ப்ரமாதாந்), அனைத்து விதமான (அகிலாத்) போலி மத தர்மங்களை ஏற்று உக்கிரமான காரியங்கள் (உக்ர தர்மாத்) செய்ய துணிந்தால், நரர்களுக்கு (நரஸ்ச) ஈஸ்வரனான அந்த நாராயணன் (நாராயண:) என் கர்வத்தை அடக்கி (ஹாஸாத்) மீண்டும் சனாதன வேத தர்மத்தில் வாழும்படியாக  ரக்ஷிக்கட்டும் (பாது).
दत्तस्तु अयोगाद् अथ योग-नाथ:
पायाद् गुण-ईश: कपिल: कर्म-बन्धात् ॥
தத்தஸ் த்வ அ-'யோகா'த்
அத யோகநாத:
பாயாத் குணேஸ:
கபில: கர்ம பந்தாத் ||

யோகத்திற்கு தலைவனாக (யோகநாத:) இருக்கும் அந்த (அத) தத்ராத்ரேயர் (தத்தஸ்),  உண்மையான யோகத்திற்கு விரோதமாக (த்வ அ-'யோகா'த்) செயல்படுபவர்களிடமிருந்து என்னை காக்கட்டும் (பாயாத்). குணபூர்ணனான (குணேஸ:) கபிலர், என்னை கர்மா பந்தத்தில் (கர்ம பந்தாத்) இருந்து காக்கட்டும் (பாயாத்).
सनत्कुमार: अवतु कामदेवाद्
हय-शीर्षा मां पथि देव-हेलनात् ।
ஸநத் குமார:
அவத் காம தேவாத்
ஹய ஸீர்ஷா மாம்
பதி தேவ ஹேலநாத் |

ஞான மார்க்கத்தை விரும்பும் சனத் குமாரர்கள் (ஸநத் குமார:), என்னை காம தேவதையிடம் (காம தேவாத்) இருந்து காக்கட்டும் (அவத்).
பூதேவர்களான (தேவ) வேதப்ராம்மணர்களையும், பஞ்ச பூதங்களை இயக்கும் தேவர்களையும் (தேவ) கேலி செய்த (ஹேலநாத்) அபராதத்தில் இருந்து வேதத்திற்கு பதியாக (பதி) இருந்து ரக்ஷிக்கும் ஹயக்ரீவர் (ஹய ஸீர்ஷா) என்னை (மாம்) காக்க வேண்டும்.
देवर्षि-वर्य: पुरुष अर्चन अन्तरात्
कूर्मो हरिर्मां निरयाद् अशेषात् ॥
தேவர்ஷி வர்ய:
புருஷ அர்சன அந்தராத்
கூர்மோ ஹரிர் மாம்
நிரயாத் அஷேஷாத் ||

புருஷோத்தமனை (புருஷ) ஆராதனை (அர்சன) செய்யாத பாவங்களில் (அந்தராத்) இருந்து தேவ ரிஷிகளிலேயே சிறந்தவரான (தேவர்ஷி வர்ய) நாரதர் என்னை காக்கட்டும்.
கூர்ம அவதாரம் (கூர்மோ) செய்து மந்திர மலையை தாங்கி தேவர்களுக்கு அம்ருதம் கொடுத்த பகவான் (ஹரிர்), என்னை (மாம்) மீளமுடியாத (அஷேஷாத்) நரகங்களில் (நிரயாத்) விழுந்து விடாமல் காக்கட்டும்.




धन्वन्तरि: भगवान् पातु अपथ्याद्
द्वन्द्वाद् भयाद् ऋषभो निर्जित आत्मा ।
தந்வந்தரிர் பகவான்
பாது அபத்யாத்
த்வந்த் வாத் பயாத்
ருஷபோ நிர்ஜிதாத்மா |

உடலில் வரும் சர்வ நோய்களிலிருந்தும் (அபத்யாத்), வைத்திய நாராயணனாக இருக்கும் தன்வந்தரி பகவான் என்னை ரக்ஷிக்கட்டும் (பாது)
இந்திரியங்களை வென்ற (நிர்ஜிதாத்மா) ரிஷப ரிஷி,  வெப்பம்-குளிர், சுகம்-துக்கம், மானம்-அவமானம் போன்ற இரட்டைகளினால் (த்வந்த் வாத்) ஏற்படும் துக்கத்தில் இருந்து, பயத்திலிருந்து (பயாத்) என்னை காக்கட்டும்.
यज्ञ: च लोकाद् अवताद् जन-अन्ताद्
बलो गणात् क्रोध वशाद् अहीन्द्र: ॥
யஜ்ஞஸ்ச லோகாத்
அவதாஜ் ஜநா அந்தாத்
பலோ கணாத் க்ரோத
வஸாத் அஹீந்தர: ||

யஜ்ஞ (யஜ்ஞஸ்ச) ஸ்வரூபியான நாராயணன் உலக (லோகாத்) ஜனங்களால் (ஜநா) எனக்கு ஏற்படுத்து நினைக்கும் அபவாதங்களில் (அவதாஜ்) இருந்து என்னை காக்கட்டும் (அந்தாத்).
பாம்பு போன்ற கோப குணமுள்ள விஷ ஜந்துக்களிடமிருந்து (கணாத் க்ரோத வஸாத்), ஆதிசேஷ அவதாரமான (அஹீந்தர:) பலராமர் (பலோ) என்னை காக்கட்டும்.
द्वैपायनो भगवान् अप्रबोधाद्
बुद्ध: तु पाषण्ड गण प्रमादात् ।
த்வைபாயநோ பகவாந்
அப்ர போதாத்
புத்தஸ்து பாஷண்ட கணாத்
ப்ரமா தாத் |

வேத சாஸ்திரங்களை அறியாத அஞானத்திலிருந்து (அப்ர போதாத்), வேத மூர்த்தியான வ்யாஸ பகவான் (த்வைபாயநோ பகவாந்) ரக்ஷிக்கட்டும்.
புத்தி மழுங்கி (ப்ரமா தாத்) வேத மார்க்கத்தை விட்டு, பாஷாண்ட கூட்டங்களில் (போலி மதங்கள்) (பாஷண்ட கணாத்) சேர்ந்து விடாமல் இருக்க, புத்திமானான (புத்தஸ்து) பரமாத்மா நாராயணன் என்னை ரக்ஷிக்கட்டும்.

कल्कि: कले: काल-मलात् प्रपातु
धर्म अवनाय: उरु कृत-अवतार: ॥
கல்கி: கலே: கால
மலாத் ப்ரபாது
தர்ம அவநாய 
உரு க்ருத அவதார: ||

தர்மத்தை காக்கும் பொருட்டு (தர்ம அவநாய உரு) அவதரிக்க போகும் (க்ருத அவதார) கல்கி ரூபத்தை தரிக்கும் அந்த உயர்ந்த (உரு) பகவான், தர்மத்தை விட்டு விலகி, மலம் போல நாற்றமடிக்கும் (மலாத்) கலி கால துன்பத்திலிருந்து (கலே: கால) என்னை காக்கட்டும் (ப்ரபாது).

பகல் -  
ப்ராத (6 AM - 8 AM) கேசவன்
ஸங்கவ (8 AM - 10 AM) கோவிந்தன்
ப்ராஹ்வ (10 AM -12 Noon) நாராயணன்
மத்யந் (12 Noon - 2 PM) விஷ்ணு,
அபரான்ன (2 PM - 4 PM) மதுசூதனன்,
ஸாயம் (4 PM - 6 PM) மாதவன்,

இரவு - 
ப்ரதோஷ (6 PM - 8 PM) ஹ்ருஷீகேஸன்,
அர்த்தராத்திரி (8 PM - 10 PM) பத்மநாபன்,
நிஸீத (10 PM - 12 Mid Night) பத்மநாபன்,
அபரராத்திரி (12 Mid Night - 2 AM) ஸ்ரீதரன்,
ப்ரத்யூஷ (2 AM - 4 AM) ஜனார்த்தன,
ப்ரபாதே (4 AM - 6 AM) விஸ்வேஸ்வரன் .

ஸுர்ய அஸ்தமனத்திற்கும் (6PM), ஸுர்ய உதயத்துக்கும் இடையே 30 நாழிகைகள் உண்டு 
(720 Minutes or 12 hrs). (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்.)
ஸுர்ய உதயத்துக்கு முந்தைய 5 நாழிகைக்கு (4AM - 6AM) 
உஷத்காலம் (ப்ரம்ம முகூர்த்தம்) என்று பெயர்.





मां केशवो गदया प्रात: अव्याद्
गोविन्द आसङ्गवम् आत्त-वेणु: ।
மாம் கேஸவோ கதயா
ப்ராத: அவ்யாத்
கோவிந்த ஆஸங்கவம்
ஆத்தவேணு: |

கதை ஏந்தியிருக்கும் (கதயா) கேசவன் (கேஸவோ) என்னை (மாம்) காலையில் (ப்ராத:) (6AM-8AM) காக்கட்டும் (அவ்யாத்).
கைகளில் புல்லாங்குழல் (ஆத்தவேணு) வைத்து இருக்கும் கோவிந்தன், என்னை இரண்டாம் முற்பகலில் (ஸங்கவம்) (8AM - 10AM) காக்கட்டும்.
नारायण: प्राह्ण उदात्त शक्ति:
मध्यम् दिने विष्णु: अरीन्द्रपाणि: ॥
நாராயண: ப்ராஹ்வ
உதாத்த ஸக்தி:
மத்யந் தினே விஷ்ணு:
அரீந்தர பாணி: ||

கம்பீரமான சக்தி ஆயுதத்தை தரித்த (உதாத்த ஸக்தி:) நாராயணன், என்னை பூர்வாஹ்னவத்தில் (ப்ராஹ்வ) (10AM - 12 Noon) காக்கட்டும்.
கையில் கால சக்கரத்தை வைத்து இருக்கும் (அரீந்தர பாணி:) விஷ்ணு பகவான் என்னை மத்யான (12 Noon - 2 PM) (மத்யந்) வேளையில் காக்கட்டும்.

देवो अपराह्णे मधु-हा उग्र-धन्वा
सायं त्रि-धामा अवतु माधवो माम्
தேவா: அபராஹ்ணே
மது ஹோக்ர தன்வா
ஸாயம் த்ரிதாமா அவது
மாதவோ மாம் |

கொடிய (உக்ர) தனுஷை தரித்து தேஜோமயமான மதுசூதனன் (மதுஹா) அபரான்னத்தில் (அபராஹ்ணே) (2PM - 4PM) காக்கட்டும் (தன்வா). 
மூன்று இடங்களிலும் (த்ரிதாமா) (படைத்தல், காத்தல், அழித்தல்) வீற்று இருக்கின்ற மாதவன் என்னை ஸாயங்கால வேளையில் (ஸாயம்) (4PM - 6PM) காக்கட்டும் (அவது).
दोषे हृषीकेश उत अर्ध-रात्रे
निशीथ एक: अवतु पद्मनाभ:
தோஷே ஹ்ருஷீகேஸ |
உத அர்த-ராத்ரே 
நிஸீத ஏக: 
அவது பத்மநாப: ||

இந்திரியங்களை ஜெயித்த ஹ்ருஷீகேஸன் ப்ரதோஷ (தோஷே) (6PM - 8PM) காலத்தில் என்னை காக்கட்டும் (அவது).
மேலும் (உத), 
அசகாய சூரனான பத்மநாபன் ஒருவரே (ஏக:), அர்த்த ராத்திரி முதல் நிஸீத காலம் வரை (அர்த-ராத்ரே நிஸீத) (8PM - 12 Mid Night) காக்கட்டும் (அவது).
श्रीवत्स-धामा अपर-रात्र ईश:
प्रत्यूष ईश असि-धरो जनार्दन:
ஸ்ரீவத்ஸ தாம:
அபர ராத்ர ஈஸ:
ப்ரத்யூஷ ஈஸ:
அஸி தர: ஜநார்தன: |

ஸ்ரீவத்சம் உடைய (ஸ்ரீவத்ஸ தாமா) பகவான் (ஈஸோ) ஸ்ரீதரன்,  அபர ராத்திரியில் (அபர ராத்ர) (12 Mid Night - 2 AM) காக்கட்டும் (அவது).
இரவின் முடிவு சமயத்தில் (ப்ரத்யூஷ) (2 AM - 4 AM) வாள் ஏந்தி (அஸி தர:) நிற்கும் ஜனார்த்தன பகவான் (ஈஸ) காக்கட்டும். 
दामोदर: अव्याद् अनुसन्ध्यं प्रभाते
विश्व ईश्वरो भगवान् कालमूर्ति:
தாமோதர அவ்யாத் அநு ஸந்தயம் | 
ப்ரபாதே விஸ்வேஸ்வரோ பகவான் 
கால மூர்த்தி || 

ஒவ்வொரு சந்திகளிலும் (அநு ஸந்தயம்) (@6AM, @12 Noon, @6PM) தாமோதரன் என்னை காக்கட்டும் (அவ்யாத்).
காலமூர்த்தியும், உலகை நிர்வாகம் செய்பவனுமாகிய பகவான் (விஸ்வேஸ்வரோ பகவான்) விடிகாலை உஷத்காலத்தில் (ப்ரபாதே) (4 AM - 6 AM) என்னை காக்கட்டும் (அவ்யாத்).

चक्रं युग-अन्त अनल तिग्म-नेमि
भ्रमत् समन्ताद् भगवत्-प्रयुक्तम्
दन्दग्धि दन्दग्धि अरि-सैन्यम् आशु
कक्षं यथा वात-सखो हुताश:
சக்ரம் யுகாந்த அனல
திக்ம நேமி
ப்ரமத் ஸமந்தாத்
பகவத் ப்ர-யுக்தம்  |
தந்தக்தி தந்தக்தி 
அரி ஸைன்யம் ஆஸு 
கக்ஷம் யதா வாத
ஸக: ஹுதாஸ: || 


நாராயணன் கையில் இருக்கும் வஜ்ராயுதம் போல கூறிய நுனி உடைய (திக்ம நேமி) காலத்தை அழிக்கும் (யுகாந்த) காலசக்கரம் (சக்ரம்) நாற்புறங்களிலும் (ஸமந்தாத்) அக்னி பிழம்பாக (அனல) சுற்றிக்கொண்டே (ப்ரமத்) இருக்கிறது.
எப்படி (யதா) உலர்ந்த புற்களை (கக்ஷம்) காற்றை துணை கொண்டு (வாத ஸக:), ஒரு நொடியில் (ஆஸு) அக்னியால்  பஸ்பமாகிறதோ (ஹுதாஸ:)
அது போல, பகவான் (பகவத்) கையிலிருந்து புறப்பட்ட (ப்ர-யுக்தம்) சக்கரம், எதிரிகளை, அவர்கள் சேனைகளை (அரி ஸைன்யம்)  ஒரு நொடியில் (ஆஸு) அடியோடு தண்டிக்கப்படுவார்கள் (தந்தக்தி) தண்டிக்கப்படுவார்கள் (தந்தக்தி).



गदे अशनि स्पर्शन विस्फुलिङ्गे
निष्पिण्ढि निष्पिण्ढि अजित प्रिया असि ।
कुष्माण्ड वैनायक यक्ष रक्षो:
भूत ग्रहां चूर्णय चूर्णय अरीन् ।।
கதே அஸநி ஸ்பர்ஸன 
விஸ்புலிங்கே 
நிஷ்பிண்தி நிஷ்பிண்தி
அஜித ப்ரியாஸி |
குஸ்மாண்ட வைநாயக
யக்ஷ ராஷோ 
பூத க்ராஹன் 
ஸீர்ணய ஸீர்ணய அரீன் ||

ஏ கதயே (கதே)! நீ பெருமாளின் நெருங்கிய பிரியத்துக்கு பாத்திரமாக (அஜித ப்ரியாஸி) இருக்கிறாய். எதிரிகளை ஒடுக்குவதற்காக, பெருமாள் உன்னை தொடும்போது (ஸ்பர்ஸன), கோடி மின்னல்கள் (அஸநி) உருவாவது போல, நெருப்பு துணுக்கைகள் கிளம்பி கிளம்பி (நிஷ்பிண்தி நிஷ்பிண்தி) ஜொலிக்கின்றனறாய் (விஸ்புலிங்கே)
குஸ்மாண்டர்கள்,  வைநாயகர்கள், யக்ஷர்கள்,  ராஷஸர்கள்,  பூதங்கள், கிரஹங்கள் (க்ராஹன்), போன்ற எதிரிகளை (அரீன்) என்னை நெருங்க விடாமல், அவர்களை துளைத்து (Drill) (ஸீர்ணய ஸீர்ணய) விடுங்கள்.
त्वं यातुधान प्रमथ प्रेत मातृ:
पिशाच विप्र-ग्रह घोर-द‍ृष्टीन् ।
दरेन्द्र विद्रावय कृष्ण-पूरितो
भीम स्वन: अरे: हृदयानि कम्पयन् ॥
த்வம் யாதுதான ப்ரமத
ப்ரேத மாத்ரு பிஸாச
விப்ர க்ரஹ கோர த்ருஷ்டீன் |
தரேந்த்ர வித்ராவய
க்ருஷ்ண பூரிதோ
பீம ஸ்வநா அரேர்
ஹ்ருதயானி கம்பயன் ||

கிருஷ்ண பரமாத்மா வைத்திருக்கும் (தரித்து இருக்கும்) சங்கங்களில் உயர்ந்த பாஞ்சசன்யமே (தரேந்த்ர) ! கிருஷ்ண பரமாத்மா தன் திருவாயால் சங்கத்தை ஊதும்போது (க்ருஷ்ண பூரிதோ), நீ (த்வம்) கொடுக்கும் (வித்ராவய) பேரொலி (பீம ஸ்வநா), பயங்கரமான ரூபமுடைய (கோர த்ருஷ்டீன்) யாதுதானர், ப்ரமதர், ப்ரேதங்கள்,  மாத்ரு கணங்கள்,  பிஸாசர்கள்,  ப்ரம்ம ராக்ஷஸர்கள் (விப்ர க்ரஹ) போன்ற தீயவர்களின் (அரேர்) இதயங்களை (ஹ்ருதயானி) நடுங்கச்செய்து (கம்பயன்) செய்து விடுகிறது.

त्वं तिग्म-धार-असि-वर अरि-सैन्यम्
ईश-प्रयुक्तो मम छिन्धि छिन्धि ।
चक्षूंषि चर्मन् छत चन्द्र छादय
द्विषाम् अघोनां हर पाप चक्षुषाम् ॥
த்வம் திக்ம தார அஸி வர 
அரி ஸைன்யம்
ஈச ப்ரயுக்தோ மம சிந்தி சிந்தி |
சக்ஷம்ஷி சர்மன்
ஸத சந்த்ர சாதய 
த்விஷாம் அகோநாம் 
ஹர பாப சக்ஷுஷாம் ||

உயர்ந்த நந்தகம் என்ற மிக கூர்மையான வாளே (திக்ம தார அஸி வர)! நீங்கள் உலகை படைத்த பரமாத்மாவின் ஆளுமையில் (ஈச ப்ரயுக்தோ) உள்ளீர்கள்.
பரமாத்மாவால் பிரயோகிக்கப்படும் நீங்கள் (த்வம்), என்னுடைய (மம) சத்ருக்களின் கூட்டத்தை (அரி ஸைன்யம்) தூள் தூளாக்க வேண்டும் (சிந்தி சிந்தி).
நூற்றுக்கணக்கான சந்திரனை போல (ஸத சந்த்ர) பல கண்களை (சக்ஷம்ஷி) உடைய கேடயமே (சர்மன்)! என்னை கண்டு பொறாமைப்படுபவர்களின் (த்விஷாம்) கண்ணை மறைத்து விடுங்கள் (சாதய).
கொடிய (அகோநாம்) பாபங்களை (பாப) செய்யும் சத்ருக்களின் கண்ணை (சக்ஷுஷாம்) பறித்து (ஹர) விடுங்கள்.
यन्नो भयं ग्रहेभ्य अभूत् केतुभ्यो नृभ्य एव च ।
सरीसृपेभ्यो दंष्ट्रिभ्यो भूतेभ्यो अंहोभ्य एव च ॥
सर्वाणि एतानि भगवन्नाम रूप अनुकीर्तनात् ।
प्रयान्तु सङ्‌क्षयं सद्यो ये न: श्रेय:प्रतीपका: ॥
யந்நோ பயம் 
க்ரஹேப்யோ பூத் கேதுப்யோ 
ந்ருப்ய ஏவ ச |
ஸரீஸ்ருபேப்யோ தம்ஷ்ட்ரிப்யோ 
பூதேப்யோ அம்ஹோப்ய ஏவ ச ||
ஸர்வாண் யேதாநி 
பகவந் நாம ரூப அனு கீர்தநாத் |
ப்ரயாந்து ஸங்க்ஷயம் 
ஸத்யோ யே ந: 
ஸ்ரேய: ப்ரதீபகா: ||


கிரஹங்கள் (க்ரஹே ப்யோ பூத்), தூமகேது போன்ற வால்நக்ஷத்ரங்கள்  (பூத்கேது ப்யோ) பொறாமை கொண்ட மநுஷ்யர்கள் (ந்ருப்ய),
மேலும் (ஏவ ச)
விஷ ஜந்துக்களான தேள், சர்ப்பங்கள் (ஸரீஸ்ருபேப்யோ), கோரைப்பல் கொண்ட புலி, நாய் போன்ற மிருகங்கள் (தம்ஷ்ட்ரிப்யோ), பாபத்தால் அலையும் பூதங்கள் (பூதேப்யோ), பாப காரியங்கள் (அம்ஹோப்ய) போன்றவற்றால் (ஏவ ச) என்னென்ன பயங்கள் உண்டாகுமோ (யந்நோ பயம்), அவை அனைத்தும் (ஸர்வாண் யேதாநி), பகவானின் நாமத்தை கீர்த்தனை செய்வதாலும், பகவானின் ரூபத்தை கீர்த்தனை செய்வதாலும், பகவானின் அஸ்திரங்களை பற்றி கீர்த்தனை செய்வதாலும் (பகவந் நாம ரூப அனு கீர்தநாத்) விரட்டி ஒழிக்கப்பட்டு (ப்ரயாந்து ஸங்க்ஷயம்), விக்னங்கள் (ப்ரதீபகா) ஒழிந்து நல்லது (ஸ்ரேய:) மட்டுமே நடக்கும்.. இது சத்யமாயிற்றே (ஸத்யோ யே ந:)!
गरुडो भगवान् स्तोत्र स्तोभ: छन्दोमय: प्रभु: ।
रक्षतु अशेष कृच्छ्रेभ्यो विष्वक्सेन: स्व-नामभि: ॥
கருடோ பகவான் 
ஸ்தோத்ர ஸ்தோபஸ் சந்தோ 
மய: ப்ரபு: |
ரக்ஷது அஸேஷ-க்ருசரேப்யோ 
விஷ்வக் ஸேன: 
ஸ்வ-நாமபி: ||

வேதமே வழிபடுபவராகவும் (ஸ்தோத்ர ஸ்தோபஸ்) வேத ஸ்வரூபியாகாகவும் (சந்தோ மய:) போற்றப்படுகிறார் (ப்ரபு:) கருட பகவான்.
விஷ்வக்சேனர் என்றும் பெயர் கொண்ட (ஸ்வ-நாமபி) கருடபகவான், எனக்கு வரும் எல்லையற்ற துன்பங்களில் (அஸேஷ-க்ருசரேப்யோ) இருந்து காக்கட்டும் (ரக்ஷது).

सर्व-आपद्‌भ्यो हरे: नाम रूप यान आयुधानि न: ।
बुद्धि इन्द्रिय मन: प्राणान् पान्तु पार्षद भूषणा: ॥
ஸர்வ ஆபத்ப்யோ 
ஹரேர் நாம ரூப யாந ஆயுதாநி ந: | 
புத்தி இந்த்ரிய மன: ப்ராணான் 
பாந்து பார்ஷத பூஷணா: ||

ஹரியின் நாமும், ஹரியின் ரூபமும், ஹரியின் வாகனமும் (யாந), ஹரியின் ஆயுதங்களும் (ஆயுதாநி) என்னை (ந:) சர்வ ஆபத்துக்களில் (ஸர்வ ஆபத்ப்யோ) இருந்தும் காக்கட்டும்.
மோக்ஷம் அடைந்த பார்ஷதர்களில் பூஷணமாக (பார்ஷத பூஷணா:) இருக்கும் கருட பகவான், என் புத்தி, புலன்கள் (இந்த்ரிய), மனம், பிராணன் அனைத்தையும் காக்கட்டும் (பாந்து).




यथा हि भगवान् एव वस्तुत: सद् असद् च यत् ।
सत्येन अनेन न: सर्वे यान्तु नाशम् उपद्रवा: ॥
யதா ஹி பகவான்  
ஏவ வஸ்துத: 
ஸத் அஸச்ச யத் |
ஸத்யே நாநேந 
ந: ஸர்வே யாந்து 
நாசம் உபத்ரவா: ||

அழியாத ஆத்மாக்களாகவும் (ஸத்), அழியக்கூடிய இயற்கையாகவும்  (அஸச்ச) உலகில் காணப்படும் அனைத்தும் (யத்) உண்மையில் ஒரே பரமாத்மா ஸ்வரூபமே (யதா ஹி பகவான் ஏவ வஸ்துத:)!
இதுவே சத்யம் என்பதில் எனக்கு (ஸத்யே நாநேந) சந்தேகமில்லை.
இது சத்தியமாக இருப்பதாலேயே இயற்கையால் எங்கள் அனைவருக்கும் (ந: ஸர்வே) ஏற்படும் சங்கடங்கள் நாசமாகி (நாசம் உபத்ரவா:) விரட்டப்பட்டு (யாந்து) எங்களுக்கு நல்லதே நடக்கட்டும்.

यथा ऐकात्म्य अनुभावानां विकल्प रहित: स्वयम् ।
யதா ஐகாத்ம்ய அநுபாவாநாம்
விகல்ப ரஹித ஸ்வயம் |


ஆத்மா (Soul), இயற்கை (Nature) என்று தனியாக தெரிந்தாலும், பிரளய காலத்தில் இவை அனைத்தும் தன்னிடம் ஒடுங்கும் போது, இவை (யதா) அனைத்தும் உண்மையில் ஒன்றுதான் (ஐகாத்ம்ய) என்ற ஞான அனுபவம் (அநுபாவாநாம்) பகவானுக்கு சுயமாகவே (ஸ்வயம்) இருப்பதால், பேத பாவனை இல்லாமல் (விகல்ப ரஹித) இருக்கிறார்.
भूषण आयुध लिङ्ग-आख्या 
धत्ते शक्ती: स्वमायया ॥
பூஷண ஆயுத லிங்காக்யா
தத்தே ஸக்தீ: ஸ்வ மாயயா ||

தன் மாயையை கொண்டே (ஸ்வ மாயயா), தன் சக்தியை கொண்டே (தத்தே ஸக்தீ:), சங்கு சக்கரம் போன்ற பூஷணங்களாகவும், ஆயுதங்களாகவும், விபவ, அர்ச்சா அவதார ரூபங்களாகவும் (லிங்க), ராம கிருஷ்ண நரசிம்ம பரசுராம போன்ற நாமங்களாவும் (ஆக்யா), தன்னை காட்டி கொள்கிறார்.

तेन-एव सत्य मानेन सर्वज्ञो भगवान् हरि: ।
पातु सर्वै: स्वरूपैर्न: सदा सर्वत्र सर्वग: ॥
தேநைவ ஸத்ய மானேன
ஸர்வஜ்ஞோ பகவான் ஹரி: |
பாது ஸர்வை: ஸ்வரூபைர்
ந: ஸதா ஸர்வத்ர ஸர்வக: ||

இப்படி(தேநைவ) சத்திய ஸ்வரூபியான (ஸத்ய மானேன) அனைத்தையும் அறிந்துள்ள (ஸர்வஜ்ஞோ) பகவான் ஹரி,
அவருடைய அனைத்து ரூபங்களாலும் (ஸர்வை: ஸ்வரூபைர்) என்னை எங்கும் எப்பொழுதும் பரவி (ந ஸதா ஸர்வத்ர ஸர்வக:) இருந்து காக்கட்டும்.

विदिक्षु दिक्षु ऊर्ध्वम् अध: समन्ताद्
अन्त: बहि: भगवान् नारसिंह: ।
விதிக்ஷு திக்ஷுர் த்வமத: 
ஸமந்தாத் அந்தர்பஹிர் 
பகவான் நாரஸிம்ஹ: |

அனைத்து மூலைகளிலும் (விதிக்ஷு), அனைத்து திசைகளிலும், மேலும் கீழும் (ஊர்த்வமத), அனைத்து பக்கங்களிலும் (ஸமந்தாத்), உள்ளும் புறமும் (அந்தர்பஹிர்) நரசிம்ம பகவான் காக்கிறார்.
प्रहापयँ लोकभयं स्वनेन
स्वतेजसा ग्रस्त समस्त तेजा: ॥
ப்ரஹா-பயன் லோக-பயம் 
ஸ்வனேன ஸ்வ-தேஜஸா 
க்ரஸ்த ஸமஸ்த தேஜா: ||


திவ்யமான தேஜஸ் உடைய (ஸ்வ-தேஜஸா) நரசிம்ம பகவான் தனது அட்டகாசமான கர்ஜனையால் (ஸ்வனேன), நம்மை அழிக்க வரும் பயத்தையும், லோகத்தால் வரும் பயத்தையும் (ப்ரஹா-பயன் லோக-பயம்), போக்கி (க்ரஸ்த) அனைவருக்கும் ஆரோக்கியத்தை தருகிறார் (ஸமஸ்த தேஜா:).

मघवन् इदम् आख्यातं वर्म नारायण आत्मकम् ।
विजेष्यसे अञ्जसा येन दंशित असुर यूथपान् ॥
மகவந் இதம் ஆக்யாதம் 
வர்ம நாராயணாத் மகம் |
விஜேஷ்-யஸே அஞ்ஜஸா யேன 
தம்ஸிதோ அஸுர யூதபான் ||

இந்திர தேவா (மகவந்)! என்னால் (மகம்), இப்போது சொல்லப்பட்ட (இதம் ஆக்யாதம்) நாராயண கவசத்தை (வர்ம நாராயணாத்) கொண்டு (யேன) நீ பாதுகாக்கப்பட்டு (தம்ஸிதோ), அசுர படைகளை (அஸுர யூதபான்) எளிதாக வென்று (விஜேஷ்) புகழ் (யஸே) அடைவாய்.
एतद् धारयमाण: तु यं यं पश्यति चक्षुषा ।
पदा वा संस्पृशेत् सद्य: साध्वसात् स विमुच्यते ॥
ஏதத் தாரய மாணஸ்து 
யம் யம் பஸ்யதி சக்ஷுஷா | 
பதா வா ஸம் ஸ்ப்ருஸேத் ஸத்ய: 
ஸாத்வஸாத் ஸ விமுச்யதே ||

இந்த நாராயண கவசத்தை எப்பொழுதும் மனதில் தியானிக்கும் பாகவத உத்தமன் (ஏதத் தாரய மாணஸ்து), யார் யாரையெல்லாம் (யம் யம்) கண்ணால் பார்க்கிறானோ (பஸ்யதி சக்ஷுஷா), காலால் (பதா வா) தொடுகிறானோ (ஸம் ஸ்ப்ருஸேத்), அப்படி தொடப்பட்டவன், பார்க்கப்பட்டவன் கூட, அனைத்து பாவங்களில் (ஸாத்வஸாத்) இருந்தும், சத்தியமாக உடனே (ஸத்ய:) விடுபட்டு (ஸ விமுச்யதே) விடுகிறான்.

न कुतश्चिद् भयं तस्य विद्यां धारयतो भवेत् ।
राज दस्यु ग्रह-आदिभ्यो व्याधि-आदिभ्य: च कर्हिचित् ॥
ந கதஸ்சித் பயம் தஸ்ய 
வித்யாம் தாரயதோ பவேத் | 
ராஜதஸ்யு க்ரஹாதிப்யோ 
வ்யாதி ஆதிப்யஸ்ச கர்ஹிசித் ||

அரசர்கள் (ராஜ), திருடர்கள் (தஸ்யு), க்ரஹங்கள் (க்ரஹாதிப்யோ),  நோய்கள் (வ்யாதி ஆதிப்யஸ்ச) போன்றவற்றால் ஏற்படும் துன்பங்களால், துளியும் பயப்படாமல் (ந கதஸ்சித் பயம் தஸ்ய), நாராயண கவசம் என்ற இந்த வித்தையை (வித்யாம்) எப்பொழுதும் மனதில் தியானிப்பவன் (தாரயதோ பவேத்) அனைத்து சமயத்திலும் (கர்ஹிசித்) மஹாவிஷ்ணுவால் பாதுகாக்கப்பட்டு கொண்டே இருக்கிறான்.

इमां विद्यां पुरा कश्चित् कौशिको धारयन् द्विज: ।
இமாம் வித்யாம் புரா கஸ்சித் 
கௌஸிகோ தாரயன் த்விஜ: | 


முன்பு ஒரு காலத்தில் (புரா) கௌசீக (விஸ்வாமித்ர) கோத்திரத்தில் பிறந்த ஒரு பிரம்மச்சாரி பிராம்மணன் (த்விஜ), இந்த நாராயண கவசம் என்ற வித்யை (இமாம் வித்யாம்) உபதேசம் பெற்று (கஸ்சித்),  தினமும் அனுசந்தானம் (தாரயன்) செய்து கொண்டு இருந்தான்.




योग-धारणया स्व-अङ्गं जहौ स मरु-धन्वनि ॥
யோக தாரணயா ஸ்வ அங்கம் 
ஜஹௌ ஸ மருதன்வனி || 

தீரனான இந்த பிராம்மணன், தன் யோக பலத்தால் (யோக தாரணயா), தன் சரீரத்தை (ஸ்வ அங்கம்) ஒரு மரு பூமியில் (Thar Desert, Rajasthan) (ஸ மருதன்வனி) துறந்து (ஜஹௌ) புண்ணிய லோகங்களுக்கு சென்று விட்டான்.

तस्य उपरि विमानेन गन्धर्व पति: एकदा ।
தஸ்யோபரி விமானேன 
கந்தர்வ பதிரே கதா | 

தேவர்களில் கந்தர்வர்கள் என்று பிரிவு உண்டு. கந்தர்வர்களின் தலைவன் சித்ரரதன் (கந்தர்வ பதிரே). அவன் (தஸ்ய) ஒரு சமயம் (எகதா), ஆகாய விமானத்தில் உயரே பறந்து (உபரி) சென்று கொண்டிருந்தான்.

ययौ चित्ररथ: स्त्रीभि: वृतो यत्र द्विज-क्षय: ॥
யயௌ சித்ர ரத: ஸ்த்ரீபிர் 
வ்ருதோ யத்ர த்விஜ க்ஷய: || 

எந்த இடத்தில் (யத்ர) இந்த பிராம்மணனின் சரீரம் கிடந்ததோ (த்விஜ க்ஷய) இந்த மரு பூமி வழியாக தேவ ஸ்த்ரீகள் சூழ (ஸ்த்ரீபிர்
வ்ருதோ) ஆகாய விமானத்தில் சித்ரரதன் சென்று கொண்டிருந்தான் (யயௌ).

गगनाद् न्यपतत् सद्य: स-विमानो हि अवाक्-शिरा: ।
ககநாந் ந்யபதத் ஸத்ய: 
ஸவிமாநோ ஹ்யவாக் ஷிரா: |


உடனே (ஸத்ய) தலைகீழாக விமானத்தோடு (ஸவிமாநோஹ்) ஆகாயத்திலிருந்து தலைகுப்புற (யவாக் ஷிரா:) விழுந்தான் (ககநாந் ந்யபதத்).

स वालिखिल्य वचनाद् अस्थीनि आदाय विस्मित: ।
ஸ வாலிகில்ய  வசநாத்
அஸ்தீன்யாதாய விஸ்மித: | 

கந்தர்வன், வாலகில்ய ரிஷியின் மூலம் (ஸ வாலிகில்ய  வசநாத்) இந்த எலும்பு யாருடையது, என்ன ஜபம் செய்து கொண்டிருந்தான் என்று அறிந்து, அந்த கௌசீக ப்ராம்மணனுடைய எலும்பை எடுத்து (அஸ்தீன் ஆதாய) வியந்தான் (விஸ்மித:)


प्रास्य प्राची-सरस्वत्यां स्‍नात्वा धाम स्वम्-अन्वगात् ॥
ப்ராஸ்ய ப்ராசீ ஸரஸ்வத்யாம் 
ஸ்நாத்வா தாம ஸ்வம் அன்வகாத் || 

வாலகில்ய ரிஷி சொன்ன அறிவுரைப்படி, அந்த ப்ராம்மணனின் எலும்பை கிழக்கு நோக்கி பாயும் சரஸ்வதி நதியில் (ப்ராசீ ஸரஸ்வத்யாம்) போட்டு விட்டு (ப்ராஸ்ய), சரஸ்வதி நதியில் ஸ்நானம் (ஸ்நாத்வா) செய்து விட்டு, தன் இருப்பிடமான தேவலோகம் சென்றான் (தாம ஸ்வமன்வகாத்)

ஸ்ரீ ஸுக உவாச - श्रीशुक उवाच
ஸ்ரீசுகப்ரம்ம ரிஷி, பரீக்ஷித் மன்னரிடம் பேசுகிறார்

य इदं श‍ृणुयात् काले यो धारयति च आद‍ृत: ।
तं नमस्यन्ति भूतानि मुच्यते सर्वतो भयात् ॥
ய இதம்  ஸ்ருணுயாத் காலே 
யோ தாரயதி சாத்ருத: |
தம் நமஸ்யந்தி பூதாநி 
முச்யதே ஸர்வதோ பயாத் ||

பயம் ஏற்படும் காலங்களில் (காலே), யார் (யோ) இந்த நாராயண கவசத்தை கேட்டு (ய இதம்  ஸ்ருணுயாத்) நம்பிக்கையுடன் (ச அத்ருத) மனதில் அனுசந்தானம் செய்கிறார்களோ (தாரயதி), அந்த நமஸ்கரிக்க தக்க மகாத்மாக்கள் (தம் நமஸ்யந்தி பூதாநி)அனைத்து வித பயத்திலிருந்தும் (ஸர்வதோ பயாத்) விடுபடுவார்கள் (முச்யதே).


एतां विद्याम् अधिगतो विश्वरूपाद्  छतक्रतु: ।
ஏதாம் வித்யாம் அதிகத: 
விஸ்வரூபா சதக்ரது: |

இந்த (ஏதாம்) நாராயண கவசம் என்ற வித்யையை (வித்யாம்), ஆயிரம் கண்களுடைய (சதக்ரது:) இந்திரன்,
தேவர்களின் புரோஹிதனாய் இருக்கும் விஸ்வரூபனிடமிருந்து பெற்றார் (அதிகத:).

त्रैलोक्य-लक्ष्मीं बुभुजे विनिर्जित्य मृधे असुरान् ॥
த்ரைலோக்ய லக்ஷ்மீம் புபுஜே 
விநிர்ஜித்ய ம்ருதே அஸுரான் ||

இந்திர தேவன்!  அசுரர்களை போரில் (ம்ருதே) வென்று (விநிர்ஜித்ய),
மூன்று உலக ஐஸ்வர்யங்களையும் (த்ரைலோக்ய லக்ஷ்மீம்) அனுபவித்தான் (புபுஜே).




Monday 20 January 2020

Hanuman Chalisa with meaning (ஹனுமான் சாலிசா அர்த்தத்துடன்) - Tulasi Das (துளசி தாசர்) தெரிந்து கொள்வோம்...

ShreeGuru charana saroja-raja
Nija manu mukuru sudhaari |
Baranau ragubhara bimala jasu
Jo dhaayaku phala chari ||


श्रीगुरु चरन सरोज रज,
निज मनु मुकुरु सुधारि ।
बरनउँ रघुबर बिमल जसु,
जो दायकु फल चारि ।।


ஸ்ரீகுரு சரண சரோஜ-ரஜ
நிஜ மனு முகுரு சுதாரி |
பரணவ் ரகுபர பிமல ஜசு
ஜோ தாயகு பல சாரி ||





With the dust of Guru's Lotus feet, 
I clean the mirror of my mind first. 
Then, love to narrate the sacred glory of Sri Ram Chandra, 
The Supreme among the Raghu dynasty who gives us the meaning of four fold fruits of life.(Dharma, Artha, Kama and Moksha).

குருவின் பாததுளி என் சிரசில் விழ,
என் மனதின் கண்ணாடியை சுத்தம் செய்து கொள்கிறேன்.
ஸ்ரீ ராம சந்திரனின் மகிமையை கேட்பதால்,
ரகு வம்சத்தினரிடையே உயர்ந்த ராமபிரானின் சரித்திரம் நமக்கு நான்கு புருஷார்த்தங்களையும் தருகிறது. (தர்மம், அர்த்த, காம மற்றும் மோட்சம்). 



 


Budhdhi-heena thanu jaanikey
Sumirou pavana kumaara |
Bala-budhdhi bidhya dehoomohe
Harahu kaleysa bikaara ||

बुद्धिहीन तनु जानिके,
सुमिरौं पवन-कुमार ।
बल बुधि बिद्या देहु मोहिं,
हरहु कलेस बिकार ।।

புத்தி-ஹீன தனு ஜானிகே
சுமிரௌ பவன குமார |
பல-புத்தி பித்யா தேஹூ மோஹி
ஹரஹு கலேச பிகார ||

Fully aware of the deficiency of my intelligence,
I concentrate my attention on Pavan Kumar and
humbly ask for strength, intelligence and true knowledge
to relieve me of all blemishes

என்னிடம் உள்ள குறையை அறிந்து கொண்டு,
நான் என் குருவாகிய பவன குமாரனான ஹனுமனை பிரார்த்திக்கிறேன்.
எனக்கு வலிமையும், புத்தியும் உண்மையான அறிவையும் தருமாறு அடிபணிந்து பிரார்த்திக்கிறேன்
எனது எல்லா குற்றங்களையும், குறைகளையும் மன்னியுங்கள்


Jai Hanumaan gyana guna sagara
Jai Kapeesha thihun lokhey ujaagara || 1 ||

जय हनुमान ज्ञान गुन सागर ।
जय कपीस तिहुँ लोक उजागर ।।

ஜெய் ஹனுமான ஞான குண சாகர
ஜெய் கபீஷ திஹு லோகே உஜாகர


Victory to you, O'Hanuman! Ocean of Wisdom and virtue
Victory to the Best of Vanara, who is well known in all the three worlds

விவேகம் மற்றும் நல்லொழுக்கத்தின் பெருங்கடலே ! ஹே 'ஹனுமான்! உங்களுக்கே ஜெயம் !
வானரர்களில் சிரேஷ்டரே !! மூன்று உலகங்களிலும் நன்கு அறியப்பட்டவரே ! உமக்கே ஜெயம் !






Raama dhootha athulitha bala dhama
Anjani-puthra Pavana sutha naamaa || 2 ||

राम दूत अतुलित बल धामा ।
अंजनि-पुत्र पवनसुत नामा ।। 

ராம தூத அதுலித பல தாமா
அஞ்சனி-புத்ர பவனசூத நாமா

You, the Divine messenger of Ram and repository of immeasurable strength,
known as Anjana's son and also known as the son of the wind (pavanaputra).

ராமபிரானின்  தெய்வீக தூதரே ! அளவிட முடியாத பலம் கொண்டவரே !
அஞ்சனையின் மகனே ! வாயு புத்திரனே !



Mahaabeera Bikrama Bajharangee
Kumathi nivaara sumathi Key sangee || 3 ||

महाबीर बिक्रम बजरंगी ।
कुमति निवार सुमति के संगी ।।

மஹாபீர பிக்ரம பஜரங்கீ
குமதி நிவார சுமதி கே சங்கீ

Oh Hanuman ji! You are valiant and brave, with a body as strong as Thunderbolt
You are the dispeller of darkness of evil thoughts and companion of good sense and wisdom.

வாயு புத்திரனே ! எல்லையில்லா வீரமும் ! எல்லையில்லா தைரியம் உள்ளவரே ! வலுவான கட்டுடல் உடையவரே !
தீய எண்ணங்களின் இருளை விரட்டுபவரே !
நல்ல அறிவுக்கும் ஞானத்திற்கும் துணையாக இருப்பவரே !


Kanchana barana biraja subesa
Kaanana Kundala kunchathi Kesha || 4 ||

कंचन बरन बिराज सुबेसा ।
कानन कुंडल कुंचति केसा ।।

கஞ்சன பரண பிராஜ சுபேசா
கானன குண்டல குஞ்சதி கேசா

Hanumanji ! your physique is golden coloured and your dress is pretty.
Your ear rings and long curly hair are also divine.

ஹே அஞ்சனை குமாரா ! உங்கள் உடல் தங்கம் போல இருக்கிறது. உங்கள் உடை அலங்காரமும் அழகாக இருக்கிறது.
உங்கள் காதுகளில் உள்ள குண்டலங்கள், நீண்ட சுருள் முடி கூட அழகாக உள்ளது


Haath Bajra Aur Dhvajaa bhirajhay
Kaandhey moonj janeyvu  saajai || 5 ||

हाथ बज्र औ ध्वजा बिराजै ।
काँधे मूँज जनेऊ साजै ।।

ஹாத பஜ்ர ஒள த்வஜா பிராஜய்
காந்தே மூன்ஜ ஜனேஉ சாஜய்


Vajra (mace) and victory flag are shining in your hand.
Sacred thread made of Munja grass adorns your shoulder

ஹே அஞ்சனை குமாரா ! உங்கள் கையில் கதையும் வெற்றிக் கொடியும்  பிரகாசிக்கின்றன.
மூன்ஜ புல்லால் செய்யப்பட்ட புனித நூல் (பூணூல்) உங்கள் தோள்பட்டையை அலங்கரிக்கிறது.







Shankara suvana kesaree Nandana
Theja prataapa mahaa jaga bandana || 6 ||

संकर सुवन केसरीनंदन ।
तेज प्रताप महा जग बंदन ।। 

சங்கர சுவன கேசரீ நந்தன
தேஜ ப்ரதாப மஹா ஜக பந்தன

O descendant of Lord shiva ! You give joy and pride to King Kesari.
Your great majesty is celebrated by the whole world

சங்கரனின் அம்சமாக இருப்பவரே ! உங்களால் கேசரி மன்னருக்கு மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுகிறது.
உம்முடைய பெருமை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது


Bidhyaavaana gunee athi chaathur
Rama kaaja karibey ko aathur || 7 ||

बिद्यावान गुनी अति चातुर ।
राम काज करिबे को आतुर ।। 

பித்யாவாண குனி அதி சாதுர
ராம காஜ கரிபே கோ ஆதுர

You are the repository of learning, virtuous and Very clever,
You are always keen to carry out to do Rama's tasks.

சர்வ சாஸ்திரங்களும் அறிந்தவரே ! நல்லொழுக்கம் உடையவரே ! மஹா புத்திசாலியே !
ராமபிரான் இட்ட பணியை எப்போதும் செய்து முடிக்க ஆர்வம் கொண்டவரே !


Prabhu charitra sunibey -ko rasiya
Rama Lakhana Sithaa man Basiyaa || 8 ||

प्रभु चरित्र सुनिबे को रसिया ।
राम लखन सीता मन बसिया ।। 

பிரபு சரித்ர சுனிபே -கோ ரசியா
ராம லகன சீதா மன பசியா

You get intensely delighted to listen to the narration of Lord Ram's lifestory.
Sri Rama, Sri Lakshmana and Devi Sita always Dwel in your Heart.

ராமபிரானின் சரித்திரத்தை கேட்பதில் நீங்கள் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறீர்கள்.
ஸ்ரீ ராமர், ஸ்ரீ லட்சுமணர் மற்றும் தேவி சீதா எப்போதும் உங்கள் இதயத்தில் வாழ்கிறார்கள்.



Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்






Sookshma roopa dhari Siyahi dikhaava
Bikata roopa dhari lanka jaravaa || 9 ||

सूक्ष्म रूप धरि सियहिं दिखावा ।
बिकट रूप धरि लंक जरावा ।।

சூக்ஷ்ம ரூப தரி சியஹி திகாவா
பிகட ரூப தரி லங்க ஜராவா


You appeared before Devi Sita in a diminutive form and spoke to her,
At Same time, you assumed an awesome gigantic form and struck Lanka on fire

நீங்கள் தேவி சீதா முன் ஒரு சிறிய வடிவத்தில் தோன்றி தேவியுடன் பேசினீர்கள்!
அதே சமயம், நீங்கள் ஒரு அற்புதமான விஸ்வரூப வடிவத்தை எடுத்துக் கொண்டு, இலங்கையை தீக்கு இரையாக்கினீர்கள்



Bheema roopa dhari asura samhaarey
Raama chandhra key kaaja samvaarey || 10 ||

भीम रूप धरि असुर सँहारे ।
रामचंद्र के काज सँवारे ।। 

பீம ரூப தரி அசுர சம்ஹாரே
ராம சந்த்ர கே காஜ சம்வாரே

Assuming a Gigantic form you destroyed the Rakshasa and accomplished the Task given by Sri Rama.

ஒரு பிரம்மாண்டமான வடிவத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் ராக்ஷஸர்களை அழித்தீர்கள்.
ஸ்ரீ ராமர் கொடுத்த பணியை அற்புதமாக நிறைவேற்றினீர்கள்


Laaya Sanjeevana Lakhana Jiyaaye
ShriRaghubeera Harashi ur laaye || 11 ||

लाय संजीवन लखन जियाये ।
श्रीरघुबीर हरषि उर लाये ।। 

லாய  சஞ்சீவன லகன ஜியாயே
ஸ்ரீரகுபீர ஹரஷி உர் லாயே

You brought the Sanjivani herb and revived Sri Lakshmana.
Sri Rama embraced You overflowing with Joy.

நீங்கள் சஞ்சீவனி மூலிகையை கொண்டு வந்து ஸ்ரீ லட்சுமணனை உயிர்ப்பித்தீர்கள்.
ஸ்ரீ ராமர் உங்களை மகிழ்ச்சியுடன் தழுவினார்.
Raghupathi Keenhi bahutha badaayi
Thum mama priya Bharata sama bhaai || 12 ||

रघुपति कीन्ही बहुत बडाई ।
तुम मम प्रिय भरत सम भाई ।। 

ரகுபதி கீன்ஹி பஹுத படாயீ
தும் மம ப்ரிய பரத சம பாயீ

Sri Rama Praised You Greatly,
And said: "You are as dear to me as my brother Bharata"

ஸ்ரீ ராமர் உங்களைப் பெரிதும் புகழ்ந்தார்,
மேலும், "நீங்கள் என் சகோதரர் பரதனைப் போலவே எனக்கு மிகவும் பிரியமானவர்" என்றார்.

Sahasa badhana tumharo jasa gaavai
Asa-kahi Shreepati kanta lagaavai || 13 ||

सहस बदन तुम्हरो जस गावैं ।
अस कहि श्रीपति कंठ लगावैं ।।

சஹச பதன தும்ஹரோ ஜச காவைய்
அச-கஹி ஸ்ரீபதி கண்ட லகாவை





Once, Lord Rama embraced you,
the thousand headed AdiShesa (Lakshmana) also praised Your Glory

பகவான் ராமர் உங்களைத் தழுவினார் என்றதும், 
ஆயிரம் தலை ஆதிஷேசனும் (லட்சுமணர்) உங்கள் மகிமையை புகழ்ந்தார்



Sanakaadhika Brahmaadhi muneesa
Naradha-Saaradha sahitha aheesa || 14 ||

सनकादिक ब्रह्मादि मुनीसा ।
नारद सारद सहित अहीसा ।। 

சனகாதிக பிரம்மாதி முனீசா
நாரத-சாரத சஹித அஹீசா

Even Sanaka, Lord Brahma and other Sages,
Narada and Devi Saraswati unable to sing the glories of Hanumanji exactly

சனகர், பிரம்மா, மற்றும் பிற முனிவர்கள்,
நாரதர் மற்றும் தேவி சரஸ்வதி ஆகியோர் கூட
அனுமனின் மகிமையை முழுமையாக பாட முடிவதில்லை.

Yama Kubera Dhigbaala Jahaan they
Kabi kobidha kahi sake kahan they || 15 ||

यम कुबेर दिगपाल जहाँ ते ।
कबि कोबिद कहि सके कहाँ ते ।। 

எம குபேர திக்பால ஜஹான் தே
கபி கோபித கஹி சகே கஹான் தே

Even Yama (God of Death), Kubera (God of Wealth) and the demi gods of each directions (Dighbala) have been vying with one another in offering homage to your glories.
Poets and Scholars have not been able to Describe Your Glories in full.

 யமன், குபேரன் மற்றும் ஒவ்வொரு திசைகளின் தெய்வங்களும் (திக்பாலா) கூட உங்கள் மகிமைக்கு மரியாதை செலுத்துவதில் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள்.
கவிஞர்கள் மற்றும் அறிஞர்கள் உங்கள் மகிமைகளை முழுமையாக விவரிக்க முடிவதில்லை.


Thum upakara Sugreevahin keenha
Rama milaaya raja padha dheenha || 16 ||

तुम उपकार सुग्रीवहिं कीन्हा ।
राम मिलाय राज पद दीन्हा ।। 

தும் உபகார  சுக்ரீவஹிம் கீன்ஹா 
ராம மிலாய ராஜ பத தீன்ஹா

You Rendered a great Help to Sugriva.
You Introduced him to Sri Rama and thereby Gave back his Kingdom

நீங்கள் சுக்ரீவனுக்கு பெரும் உதவி புரிந்தீர்கள்.
சுக்ரீவனை  ஸ்ரீ ராமருக்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் அவருடைய ராஜ்யத்தை திரும்பக் கிடைக்க செய்தீர்கள்.





Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||
Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||
Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்



Tumharo mantra Bibheeshana maana
Lankeshwara Bhaye sab jag jaanaa || 17 ||

तुम्हरो मन्त्र बिभीषन माना ।
लंकेस्वर भए सब जग जाना ।।

தும்ஹரோ மந்த்ர பிபீஷன மானா
லங்கேஷ்வர பய சப் ஜக ஜானா


Vibhishana By listenening your advice.
He became Lord of Lanka, which is known all over the universe

உங்கள் ஆலோசனையை விபீஷணர் கேட்டார்.
இலங்கையின் அரசர் ஆனார். இதை உலகம் அறியுமே !





Juga sahasra jojana para Bhaanu
Leelyo thaahi madhura phala jaanu || 18 ||

जुग सहस्र जोजन पर भानू ।
लील्यो ताहि मधुर फल जानू ।।

ஜுக சஹஸ்ர ஜோஜன பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ


You flew towards the sun who is thousands of Yojanas away, 
thinking of him as a sweet fruit playfully

பல ஆயிரம் தொலைவில் உள்ள சூரியனை நோக்கி ஒரு சமயம் நீங்கள் பறந்து, 
சூரியனையே ஒரு பழமாக விழுங்கும்படியாக லீலை செய்தீர்களே 

Prabhu mudrikaa mayli mukha maahee
Jaladhi laanghi gaye ajaraja nahee || 19 ||

प्रभु मुद्रिका मेलि मुख माहीं ।
जलधि लांघि गये अचरज नाहीं ।।

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹி
ஜலதி லாங்கி கயே அஜரஜ நாஹீ

From mahendra muka parvat (the mountain), you carried the Rama's ring.
There is no wonder that you went across the ocean to reach Lanka.

மகேந்திர முக பர்வத்தில் (மலை) இருந்து, நீங்கள் ராமரின் மோதிரத்தை எடுத்துச் சென்றீர்கள்.
பெருமையுடைய நீங்கள் கடலைக் கடந்து  இலங்கையை சென்றதில் ஆச்சரியமில்லையே!


Durgama kaaja jagatha kay jaythey
Sugama anugraha tumharey theythey || 20 ||

दुर्गम काज जगत के जेते ।
सुगम अनुग्रह तुम्हरे तेते ।।

துர்கம காஜஜ கத கே ஜேதே
சுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

Oh Dear Hanuman !... Even the difficult tasks in the world
becomes easily achievable by your grace

ஓ அன்புள்ள அனுமனே ! ... உலகில் கடினமான பணிகள் கூட
உங்கள் அருளால் எளிதில் முடிந்து விடுமே


Rama dhuaare tum rakhvarey
Hotha na aagyaa binu paisaarey || 21 ||

राम दुआरे तुम रखवारे ।
होत न आज्ञा बिनु पैसारे ।।

ராம துஆரே தும ரக்வாரே
ஹோத ந ஆக்ஞா பினு பைசாரே


You are the doorkeeper of Rama's abode.
Without your permission nobody can enter Rama's abode

நீங்களே ராமபிரானின் காப்பாளனாக உள்ளீர்கள்.
உங்கள் அனுமதியின்றி யாரும் ராமரின் அருகில் நெருங்க முடியாது.



Sab sukha lahai tumhari sarnaa
Tum racchak kaahu ko darnaa || 22 ||

सब सुख लहै तुम्हारी सरना ।
तुम रच्छक काहू को डरना ।। 

சப் சுக லஹை தும்ஹாரி சரணா
தும ரச்சக காஹு கோ டர்ணா

All happiness stay with those who take refuge in you.
When you are the protector, why be afraid?

எல்லா மகிழ்ச்சிகளும் உங்களை அடைக்கலம் புகுபவர்களுடன் தங்குகின்றன.
நீங்கள் பாதுகாவலராக இருக்கும்போது, ஏது பயம்?





Aapana theja samhaaro aapai
Theeno lokha haanka they kaampai || 23 ||

आपन तेज सम्हारो आपै ।
तीनों लोक हाँक ते काँपै ।। 

ஆபன தேஜ சம்ஹாரோ ஆபை
தீனோ லோக ஹாங்க தே காம்பை

When you roar, all the three worlds tremble.
only you can control your might.

நீங்கள் கர்ஜிக்கும்போது மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.
உங்களால் மட்டுமே உங்கள் வலிமையைக் கட்டுப்படுத்த முடியும்.


Bhootha pisaacha Nikata nahi aavai
Mahaabeera jab naama sunaavai || 24 ||

भूत पिसाच निकट नहिं आवै ।
महाबीर जब नाम सुनावै ।।

பூத பிசாச நிகட நஹி வை
மஹாபீர ஜப நாம சுனாவை

Evil Spirits and Ghosts don't come near us
O great Courageous ! when your name is chanted

ஓ மகா தைரியம் கொண்டவரே ! தீய சக்திகளும் பேய்களும் அருகில் வருவதில்லை
உங்கள் பெயர் உச்சரிக்கப்படும் போது



Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்



Naasai rogha harai sab peera
Japatha niranthara Hanumatha beera || 25 ||

नासै रोग हरै सब पीरा ।
जपत निरंतर हनुमत बीरा ।।

நாசை ரோக ஹரை சப் பீரா
ஜபத நிரந்தர ஹனுமத பீரா


Diseases will run away, all pains will be gone,
when a devotee continuously repeats Hanuman the brave's name

நோய்கள் ஓடிவிடும், எல்லா வலிகளும் நீங்கும்,
தீரமுள்ள அனுமனின் பெயரை தொடர்ந்து சொல்லும்போது



Sankata theym Hanumaana chudaavai
Mana Krama bachana dhyaana jo laavai || 26 ||

संकट तें हनुमान छुडावै ।
मन क्रम बचन ध्यान जो लावै ।। 

சங்க தே ஹனுமான சுடாவை
மன க்ரம பசன த்யான ஜோ லாவை

All odds in life will be vanished who remember Hanuman
Whose thoughts, words and deed are with hanuman

அனுமனின் அனுகிரத்தால் வாழ்க்கையில் உள்ள அனைத்து முரண்பாடுகளும் மறைந்துவிடும்.
எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களில் ஹனுமனை நினைப்போருக்கு

Sab para Rama tapasvee rajaa
Thina kay kaaja sakala Tum saaja || 27 ||

सब पर राम तपस्वी राजा ।
तिन के काज सकल तुम साजा ।।

சப பர ராம தபஸ்வீ ராஜா
தின கே காஜ சகல தும சாஜா


Rama who is like a rishi is the king of all.
You managed all his tasks

ரிஷி போன்ற ராமபிரான் அனைவருக்கும் ராஜா.
அவருடைய எல்லா பணிகளையும் நீங்களே நிர்வகித்தீர்கள்!





Aur manoratha jo koyi laavai
Soyi amitha jeevana phala paavai || 28 ||

और मनोरथ जो कोइ लावै ।
सोइ अमित जीवन फल पावै ।। 

ஒளர் மனோரத ஜோ கோஇ லாவை
சோஇ அமித ஜீவன பல பாவை

Whoever brings their wishes to you,
they get unlimited fruits (results)

 மனோரதங்கள் பூர்த்தியாக யார் யாரெல்லாம் உங்களிடம் வருகிறார்களோ!
அவரவர்களுக்கு வேண்டிய பலன்களை தருகிறீர்கள்.

Chaaro yuga prathaapa tumhara
Hai parasidhdhi jagatha ujiyaaraa || 29 ||

चारों युग प्रताप तुम्हारा ।
है परसिद्ध जगत उजियारा ।।

சாரோ யுக ப்ரதாப தும்ஹாரா
ஹை பரஸித்தி ஜகத உஜியாரா

Your glory is for all the four yugas,
Your greatness is very famous throughout the world, and illumines the world

உங்கள் மகிமை நான்கு யுகங்களிலும் பிரதிபலிக்கிறது.
உங்கள் மகத்துவம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது, உலகத்தை ஒளிரச் செய்கிறது 

Saadhu Santh ke thum Rakhwaarey
Asura nikanthana Rama dhulaarey || 30 ||

साधु संत के तुम रखवारे ।
असुर निकंदन राम दुलारे ।। 

சாது சந்த கே தும ரக்வாரே
அசுர நிகந்தன ராம துலாரே

Oh Hanumanji! You are the saviour and the guardian angel of saints and sages and
You destroy all the evil Rakshasa, Oh dearest of Shri Rama !

ஓ ஹனுமான் ! நீங்கள் சாதுக்கள் முனிவர்களின் பாதுகாவலர்.
தீயவர்களை அழிக்கும் நீங்கள், ராமபிரானுக்கு மிகவும் ப்ரியமானவர்


Ashta sidhdhi nava nidhi key dhaathaa
Asa-bara dheena Jaanakee maathaa || 31 ||

अष्ट सिद्धि नव निधि के दाता ।
अस बर दीन जानकी माता ।।

அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா
அச-பர தீன ஜானகீ மாதா


Oh Hanuman ! You hold the 8 Siddhis and 9 Nidhis within you. You can also bless others
Because devi sita blessed you to grant these powers to others.

8 ஸித்திகள் மற்றும் 9 நிதிகள் கொண்ட நீங்கள், இந்த செல்வங்களை தன் பக்தனுக்கும் தருவதற்கு
உரிமையை தேவி சீதை உங்களுக்கு வரமாக தந்தாளே!!


8 siddhi are:
  1. Anima அணிமா - (decrease size of body even to size of atom), 
  2. Magima மகிமா - (increase the size of body even to size of universe),
  3. Garima கரிமா - (increasing the weight of body heavier than a powerful mountain)
  4. Lagima லகிமா - (ability to make the body lighter than air and fly)
  5. praapthi ப்ராப்தி - (ability to get whatever desired and ability to understand any language even animal and birds)
  6. ishitha ஈசத்துவம் - (ability to order even brahma and 30 crore demi gods and capable to leading army and rule)
  7. prakaamiya ப்ராகாமியம் - (ability to travel in any (earth, water, air) and remain young forever)
  8. Vashithva வசித்துவம் - (ablity to control his senses and others mind and senses)

9 Nidhi are
  1. Padma Nidhi (possessed with enough gold (wealth) to donote others)
  2. Mahapadma Nidhi (possessed with enough gems and jewels to donate surplus to spiritual causes)
  3. Nil Nidhi (possessed with wealth which never ceases and goes for generations)
  4. Mukund Nidhi (possessed with wealth to lead royal life which has art, music and poetry)
  5. Nand Nidhi (possessed with wealth to handle family and good in gold trading)
  6. Makar Nidhi (possessed with great expertise in using weapons, warfare and establish kingdoms)
  7. Kachchap Nidhi (possessed with surplass food and clothes)
  8. Shank Nidhi (possessed with ability to get delicious food from nowhere)
  9. Karva Nidhi (possessed with noble nature)
Rama rasaayana tumhare paasa
Sadhaa raho Raghupati ke dhaasaa || 32 ||

राम रसायन तुम्हरे पासा ।
सदा रहो रघुपति के दासा ।।

ராம ரசாயன தும்ஹரே பாசா
சதா ரஹோ ரகுபதி கே தாசா

Oh Hanuman! You hold the essence of devotion to Rama,
Always remaining His Servant.

ஓ ராமதாஸா ! நீங்கள் ராமபக்தியின் சாரத்தை அறிந்தவர்.
எப்போதும் அவரது தாஸனாகவே இருக்கிறீர்கள்.





Ashta sidhdhi nava nidhi key dhaathaa
Asa-bara dheena Jaanakee maathaa || 31 ||

अष्ट सिद्धि नव निधि के दाता ।
अस बर दीन जानकी माता ।।

அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா
அச-பர தீன ஜானகீ மாதா


Oh Hanuman ! You hold the 8 Siddhis and 9 Nidhis within you. You can also bless others
Because devi sita blessed you to grant these powers to others.

8 ஸித்திகள் மற்றும் 9 நிதிகள் கொண்ட நீங்கள், இந்த செல்வங்களை தன் பக்தனுக்கும் தருவதற்கு
உரிமையை தேவி சீதை உங்களுக்கு வரமாக தந்தாளே!!



Rama rasaayana tumhare paasa
Sadhaa raho Raghupati ke dhaasaa || 32 ||

राम रसायन तुम्हरे पासा ।
सदा रहो रघुपति के दासा ।।

ராம ரசாயன தும்ஹரே பாசா
சதா ரஹோ ரகுபதி கே தாசா

Oh Hanuman! You hold the essence of devotion to Rama,
Always remaining His Servant.

ஓ ராமதாஸா ! நீங்கள் ராமபக்தியின் சாரத்தை அறிந்தவர்.
எப்போதும் அவரது தாஸனாகவே இருக்கிறார்.

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதாயையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதாயையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்


Thumharey bhajana Rama ko paavai
Janama-janama ke dhukh bisaraavai || 33 ||

तुम्हरे भजन राम को पावै ।
जनम जनम के दुख बिसरावै ।। 

தும்ஹரே பஜன ராம கோ பாவை
ஜன்ம-ஜன்ம கே துக பிசராவை

Singing your name gets us Rama himself and
Removes our sufferings (sin) got through our many previous births

உங்களை பாடுவதாலேயே ராம தரிசனம் கிடைத்து விடுகிறது.
ஜென்ம ஜென்மமாக நம்மிடம் உள்ள துன்பங்களும் (பாவம்) நீங்கி விடுகிறது.

Antha-kaala Raghubara pura jayee
Jahaan janma Hari-Bakhta Kahaayee || 34 ||

अंत काल रघुबर पुर जाई ।
जहाँ जन्म हरि-भक्त कहाई ।। 

அந்த-கால ரகுபர புர ஜாயீ
ஜஹான் ஜன்ம ஹரி-பக்த கஹாயீ

At the end of the life those souls reach the Lord Rama's abode
who were born and been a Devotee of Lord Rama

அந்திம காலத்தில், ராமபிரானின் சரணத்தை அடையும் பாக்கியத்தை,
தன் வாழ்நாள் முழுவதும் ராமரிடமே பக்தி செய்யும் பக்தர்கள் பெறுகிறார்கள்.

Aur Devathaa Chiththa na dhareyi
Hanumatha saye sarva sukha karayi || 35 ||

और देवता चित्त न धरई ।
हनुमत सेइ सर्व सुख करई ।।

ஒளர தேவதா சித்த ந தரயீ
ஹனுமத சேயி சர்வ சுக கரயீ


One need not hold any other demigod in mind. 
Hanuman alone will give all happiness.


வேறு ஒரு தெய்வத்தையும் மனதில் ஏற்க அவசியமில்லை நமக்கு. 
நம் ஹனுமான் மாத்திரமே எல்லா மகிழ்ச்சியையும் தந்து விடுவார்.


Sankata harai -mitai sab peera
Jo sumirai Hanumatha Balabeera || 36 ||

संकट हरै मिटै सब पीरा ।
जो सुमिरै हनुमत बलबीरा ।।

சங்கட ஹரை -மிடை சப் பீரா
ஜோ சுமிரை ஹனுமத பலபீரா

Problems and Pains will be removed from one's life
who remembers Hanuman the mighty brave one

வாழ்க்கையில் உள்ள சிக்கல்களும், துக்கங்களும் நம்மை விட்டு தூர விலகி போகும்,
நாம் மகா பலம் பொருந்திய சிரஞ்சீவியாக அனுமனை தியானித்தால்.





Jai Jai Jai Hanumaan Gosaayi
Jai Jai Jai Hanumaan Gosaayi
Kripaa Karahu guru deva ki naayi || 37 ||

जै जै जै हनुमान गोसाई ।
जै जै जै हनुमान गोसाई ।
कृपा करहु गुरु देव की नाई ।।

ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான கோசாயீ
ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான கோசாயீ
க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

Victory to you Hanuman ! Master of the senses.
Show mercy on us like a Guru does

உங்களுக்கே  வெற்றி ஹனுமான் ! புலன்களை அடக்கியவரே !
ஒரு குருவைப் போல எங்கள் மீது கருணை காட்டுங்கள்


Jo satha baara paata kara koyi
Chootahi bandhi mahaa sukha hoyee || 38 ||

जो सत बार पाठ कर कोई ।
छूटहि बंदि महा सुख होई ।। 

ஜோ சத பார பா கர கோயீ
சூடஹி பந்தி மஹா சுக ஹோயீ

One who recites this Hanuman Chalisa one hundred times daily for one hundred days 
He become free from the bondage of life and death and enjoys the highest bliss which is everlasting.

இந்த ஹனுமான் சாலிசாவை நூறு நாட்களுக்கு தினமும் நூறு முறை பாராயணம் செய்தால்
அவர் வாழ்க்கை மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, நித்தியமான மிக உயர்ந்த ஆனந்தத்தை அனுபவிப்பார்

Jo yah patai Hanumana Chaleesaa
Hoya sidhdhi saakhi Gaureesaa || 39 ||

जो यह पढै हनुमान चलीसा ।
होय सिद्धि साखी गौरीसा ।।

ஜோ யஹ படை ஹனுமான சலீசா
ஹோய ஸித்தி சாகி கௌரீசா


Those whoever reads this hanuman chalisa on Hanuman ji ,
will get spiritual enrichment. Lord Shiva is the witness to my (Tulasidas) statement

ஹனுமானை பற்றி சொல்லும், இந்த ஹனுமான் சாலிசாவை யார் படித்தாலும்,
அவர்கள் ஆன்மீக சாதனைகளைப் பெறுவார்கள். சிவன் எனது (துளசிதாஸ்) கூற்றுக்கு சாட்சி



Thulasidhaasa sadhaa hari cheraa
Keejai Naatha Hrudhaya maham deyra
Keejai Naatha Hrudhaya maham deyra || 40 ||

तुलसीदास सदा हरि चेरा ।
कीजै नाथ हृदय महँ डेरा
कीजै नाथ हृदय महँ डेरा ।।

துளசீதாச சதா ஹரி சேரா
கீஜை நாத ஹ்ருதய மஹம் டேரா
கீஜை நாத ஹ்ருதய மஹம் டேரா

Tulasidas is always a disciple of Lord Rama.
O lord Rama ! Make my heart your abode

இந்த துளசிதாஸ் எப்போதும் ராமரின் சீடரே.
ஹே ராமா ! என் இதயத்தையே உங்களது தங்குமிடமாக்குங்கள் !





Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||
Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதாயையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்



Jai Bolo Hanumaan kee ||
जय  बोलो  हनुमान  की  ||
ஜெய் போலோ ஹனுமான் கீ ||
ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Jai Bolo Hanumaan kee ||
जय  बोलो  हनुमान  की  ||
ஜெய் போலோ ஹனுமான் கீ ||

ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Jai Bolo Hanumaan kee ||
जय  बोलो  हनुमान  की  ||
ஜெய் போலோ ஹனுமான் கீ ||
ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Let us Know the Meaning of Bhaja Govindam by Adi Sankara. ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் அர்த்தத்துடன் (Bhaja Govindham with meaning)  தெரிந்து கொள்ள