Followers

Search Here...

Sunday 27 June 2021

சீதையின் பெருமை.. கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்

கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்

"14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும்" என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால், ராமபிரான் சித்ர கூடத்தில் பரதனை பார்த்து தன் பாதுகையை கொடுத்து சமாதானம் செய்து, அயோத்திக்கு திருப்பி அனுப்பிய பிறகு தண்டக வனத்தில் பிரவேசித்தார்.


அங்கு சரபங்க முனிவரை தரிசித்தார். 

ராமபிரானை தரிசித்த பிறகு,  சரபங்க ரிஷி தன் உடலை அக்னியில் விட்டு விட்டு, ப்ரம்ம லோகம் சென்று விட்டார்.


சரபங்கர் சொன்னபடி, சுதீக்ஷன ரிஷியை பார்க்க பல வனங்கள், மலைகள் கடந்து வந்து கொண்டிருந்தார் ராமபிரான். கூடவே லக்ஷ்மணரும், சீதா தேவியும் வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழிகளில், பல ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சில ரிஷிகள் ராமபிரானை பார்த்து, தங்களுக்கு நேரும் அபாயத்தை பற்றி விவரித்து, ராமபிரானிடம் அபயம் கேட்டனர். 





स: अयं ब्राह्मण भूयिष्ठो 

वानप्रस्थ गणो महान् |

त्वन्नाथ: अनाथवद् राम 

राक्षसै: वध्यते भृशम् ||

- वाल्मीकि रामायण

ஸ: அயம் ப்ராஹ்மண பூயிஷ்டோ

வான ப்ரஸ்த கணோ மஹான் |

த்வன்நாத: அனாதவத் ராம

ராக்ஷஸை: வத்யதே ப்ருஸம் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! We are a group of great sages, mostly brahmins, leading a vanaprastha life. Yet with a protector like you, we are slaughtered in large numbers like orphans by rakshasas.

ராமா ! நாங்கள் பெரும்பாலும் வானப்ரஸ்தம் ஏற்ற ப்ராம்மணர்கள். உங்களை போன்ற பாதுகாவலர் இருந்தும், இங்கு ராக்ஷஸர்களால் அனாதைகள் போல நாங்கள் குவியல் குவியலாக கொல்லப்படுகிறோம்.


एहि पश्य शरीराणि 

मुनीनां भावित आत्मनाम् |

हतानां राक्षसै र्घोरै: 

बहूनां बहुधा वने ||

- वाल्मीकि रामायण

யேஹி பஸ்ய சரீராணி

முனீனாம் பாவித ஆத்மநாம் |

ஹதானாம் ராக்ஷஸை கோரை: 

பஹுனாம் பஹுதா வனே ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! Come and see the huge number of dead bodies, who had perceived the Supreme Spirit, killed in large numbers in the forest by the fierce rakshasa.This is a veritable Holocaust.

ராமா ! இதோ பாருங்கள்.. இங்கு குவியலாக கிடக்கும் எலும்பு குவியலை. நர மாமிசம் உண்ணும் ராக்ஷஸர்கள், தவம் செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை விழுங்கி துப்பிய எலும்புகள் இவை. 


पम्पा नदी निवासानाम् 

अनु-मन्दाकिनीम् अपि |

चित्रकूट आलयानां च 

क्रियते कदनं महत् ||

- वाल्मीकि रामायण

பம்பா நதீ நிவாஸானாம்

அனு-மந்தாகினீம் அபி |

சித்ரகூட ஆலயானாம் ச

க்ரியதே கதனம் மஹத் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama ! A great slaughter is taking place amongst those residing on the bank of the Pampa lake, near the river Mandakini, and on mount Chitrakuta.

ராமா! பம்பா நதிக்கரையில், மந்தாகினி ஓடும் நதிக்கரையில், சித்ரகூட சமீபத்தில் வசிக்கும் அனைவரையும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள் ராக்ஷஸர்கள்.


एवं वयं न मृष्यामो 

विप्रकारं तपस्विनाम् |

क्रियमाणं वने घोरं 

रक्षोभि: भीम कर्मभिः ||

- वाल्मीकि रामायण

ஏவம் வயம் ந ம்ருஷ்யாமோ

விப்ரகாரம் தபஸ்வினாம் |

க்ரியமானம் வனே கோரம்

ரக்ஷோபி: பீம கர்மபி: ||

- வால்மீகி ராமாயணம்

We are not able to tolerate the fearful deeds perpetrated by the dreadful rakshasas in the forest.

ராமா! ராக்ஷஸர்கள் செய்யும் இந்த பெரும் நாசத்தை, எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. 





तत: त्वां शरणार्थं च 

शरण्यं सम उपस्थिताः |

परिपालय नो राम 

वध्यमानान् निशाचरैः ||

- वाल्मीकि रामायण

தத: த்வாம் சரணார்தம் ச

சரண்யம் ஸம உபஸ்திதா: |

பரிபாலய நோ ராம

வத்யமானான் நிஸாசரை: ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! you are worthy of refuge. Hence we have come to you seeking your protection. We are being killed by the night stalkers. Save us.

நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்கு தகுதியானவர். எனவே உங்கள் பாதுகாப்பை நாடி நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களால் நாங்கள் கொல்லப்படுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்.


परा त्वत्तो गतिर्वीर 

पृथिव्यां न: उपपद्यते |

परिपालय न सर्वान् 

राक्षसेभ्यो नृप आत्मज ||

- वाल्मीकि रामायण

பரா த்வத்தோ கதி வீர

ப்ருதிவ்யாம் ந: உபபத்யதே |

பரிபாலய ந சர்வான்

ராக்ஷஸேப்யோ ந்ருப ஆத்மஜ ||

- வால்மீகி ராமாயணம்

O great warrior ! Here on this earth, there is no protector as mighty as you. So, O prince ! Save us all from these demons raakshas.

பராக்ரமசாலியே ! ராமா ! இந்த உலகில் உங்களை போன்ற வலிமையான ரக்ஷகன் இல்லவே இல்லை. நீங்கள் எங்கள் அனைவரையும் இந்த ராக்ஷஸர்களிடமிருந்து ரக்ஷிக்க வேண்டும். 


एतत् श्रुत्वातु काकुत्स्थ: 

तापसानां तपस्विनाम् |

इदं प्रोवाच धर्मात्मा 

सर्वान् एव तपस्विनः ||

- वाल्मीकि रामायण

ஏதத் ஸ்ருத்வாது காகுத்ஸ்த:

தாபஸானாம் தபஸ்வினாம் |

இதம் ப்ரோவாச தர்மாத்மா

சர்வான் ஏவ தபஸ்வின: ||

- வால்மீகி ராமாயணம்

Having heard this, righteous Rama of the Kakutstha dynasty said to all the ascetics engaged in penance.

இவ்வாறு தவ ரிஷிகளின் சொல்ல, தர்மத்தில் இருப்பவர்களை காக்கும் காகுஸ்தனான ராமபிரான் கம்பீரமாக பேசலானார்.. 


नैवम् अर्हथ मां वक्तुम् 

आज्ञाप्य अहं तपस्विनाम् |

केवलेन् आत्म कार्येण 

प्रवेष्टव्यं मया वनं ||

- वाल्मीकि रामायण

நைவம் அர்ஹத மாம் வக்தும்

ஆஞாப்ய அஹம் தபஸ்வினாம் |

கேவலேன ஆத்ம கார்யேன

ப்ரவேஷ்டவ்யம் மயா வனம் ||

- வால்மீகி ராமாயணம்

You should not speak to me this way. I deserve to be commanded to do this task. I am at your service. I came to the forest only for my work.

ரிஷிகளான தாங்கள் இவ்வாறு என்னிடம் கேட்பது கூடாது. எனக்கு நீங்கள் ஆணை இட வேண்டும். நீங்கள் இட்ட ஆணையை செயல்படுத்தும் சேவகன் நான். நான் என்னுடைய கடமையை செய்யவே வனத்திற்கு வந்தேன்.


विप्रकारम् अपाक्रष्टुं 

राक्षसै:  भवताम् इमम् |

पितु: तु निर्देश-करः 

प्रविष्ट: अहमिदं वनम् ||

- वाल्मीकि रामायण

விப்ரகாரம் அபாக்ரஷ்டும்

ராக்ஷஸை: பவதாம் இமம் |

பிது: து நிர்தேச கர:

ப்ரவிஷ்ட: அஹம் இதம் வனம் ||

- வால்மீகி ராமாயணம்

I came into this forest in obedience to my father's orders to repel the aggression of demons against you.

என் தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு வந்த நான், உங்களுக்கு தொந்தரவு செய்யும் இந்த ராக்ஷஸர்களை தடுப்பேன்.


भवताम् अर्थ सिद्ध्यर्थम् 

आगत: अहं यदृच्छया |

तस्य मे अयं वने 

वासो भविष्यति महाफलः ||

- वाल्मीकि रामायण

பவதாம் அர்த சித்தார்தம்

ஆகத: அஹம் யத்ருச்சயா |

தஸ்ய மே அயம் வனே

வாஸோ பவிஷ்யதி மஹாபல: ||

- வால்மீகி ராமாயணம்

But by good fortune, I have got a chance to accomplish your mission. Therefore, My forest life shall become greatly fruitful by this.

அதிர்ஷ்டத்தால், உங்களுக்கு சேவை செய்ய, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு சேவை செய்வதால் என் வனவாசம் பலன் பெற்றது.




तपस्विनां रणे शत्रून् 

हन्तुम् इच्छामि राक्षसान् |

पश्यन्तु वीर्यम् ऋषय: 

सभ्रातु: मे तपोधनाः ||

- वाल्मीकि रामायण

தபஸ்வினாம் ரணே சத்ரூன்

ஹந்தும் இச்சாமி ராக்ஷஸான் |

பஸ்யந்து வீர்யம் ருஷய:

ஸ-ப்ராது: மே தபோதன: ||

- வால்மீகி ராமாயணம்

I wish to kill those raakshasas who are your enemies. O great rishis !, you may witness my valor supported by my brother.

உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த ராக்ஷஸர்களை நான் ஒழிப்பேன். மஹாத்மாக்களான ரிஷிகளே! என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் காணப்போகிறீர்கள்.


दत्त्वा अभयं च अपि तपोधनानां 

धर्मे धृतात्मा सह लक्ष्मणेन।

तपोधनै: च अपि सभाज्यवृत्तः 

सुतीक्ष्णमेव अभिजगाम वीरः ||

- वाल्मीकि रामायण

தத்வா அபயம் ச அபி தபோதனானாம்

தர்மே த்ருதாத்மா சஹ லக்ஷ்மணேன |

தபோதனை: ச அபி ஸபாஜ்ய வ்ருத்த:

சுதீக்ஷ்ண மேவ அபி-ஜகாம வீர: ||

- வால்மீகி ராமாயணம்

Brave Rama who is Steadfast in righteousness, worthy of honour, gave assurance to protect the rishis endowed with the wealth of penance, and proceeded towards sage Suteekshna.

சங்கல்பத்தில் உறுதியும், மரியாதைக்குரியவருமான துணிவுடைய ராமபிரான், தவமே செல்வமாக கொண்ட ரிஷிகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார். மேலும், சுதீக்ஷ்ண ரிஷியை நோக்கி தரிசிக்க முன்னேறினார்.


சுதீக்ஷ்ண ரிஷியை தரிசித்து, அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு தங்கி விட்டு, மேலும் தண்டக வனத்திற்குள் சஞ்சரிக்கலானார்.

குற்றங்களே கண்ணுக்கு தெரியாத, கருணையே உருவான சீதாதேவி... ராமபிரானிடம் சொல்கிறாள்...


त्रीण्येव व्यसनानि 

अत्र कामजानि भवन्ति उत |

मिथ्या वाक्यं परमकं 

तस्माद् गुरुतरौ उभौ ||

परदार अभिगमनं 

विना वैरं च रौद्रता ||

- वाल्मीकि रामायण

த்ரீன் ஏவ வ்யஸனானி

அத்ர காமஜானி பவந்தி உத |

மித்யா வாக்யம் பரமகம்

தஸ்மாத் குருதரௌ உபௌ ||

பரதார அபிகமனம் 

வினா வைரம் ச ரௌத்ரதா ||

- வால்மீகி ராமாயணம்

O Man of Truth! Three things born out of lust. 

speaking untruth, 

having sexual relation with others' wives and

resorting to violence with no enmity. 

The later two are worst than the 1st.

ஓருவனுக்கு திருப்தியே இல்லாத போது, மூன்று வகையான தீமைகள் பிறக்கின்றன. 

திருப்தியே இல்லாதவன், பொய் பேச துணிவான். 

திருப்தியே இல்லாதவன், பர தாரத்தை கூட அபகரிக்க நினைப்பான்.

திருப்தியே இல்லாதவன், தன்னிடம் பகை காட்டாதவனிடம் கூட வலிய சென்று பகையை காட்டுவான். 

பொய் சொல்வதை காட்டிலும், மற்ற இரண்டும் மிகவும் கொடியது.

मिथ्यावाक्यं न ते भूतं 

न भविष्यति राघव |

कुत: अभिलाषणं स्त्रीणां 

परेषां धर्म नाशनम् ||

- वाल्मीकि रामायण

மித்யா வாக்யம் ந தே பூதம்

ந பவிஷ்யதி ராகவ |

குத: அபிலாஷனம் ஸ்த்ரீணாம்

பரேஷாம் தர்ம நாஸனம் ||

- வால்மீகி ராமாயணம்

O Raghava! you never spoke untruth in the past nor you will speak in future. 

Also, you will never desire other man's wife both in past and future.

ராகவா! நீங்கள் அன்றும் இன்றும் என்றுமே சத்தியத்தை மீறுபவர் இல்லை. உங்களிடம் அஸத்தியம் கிடையவே கிடையாது. 

ராகவா! அதே போல, பிற தாரத்தின் மேல் ஆசை கொள்வதில்லை.


तव नास्ति मनुष्येन्द्र 

न च अभूत् ते कदाचन |

मनस्यपि तथा राम 

न च एतद् विद्यते क्वचित् ||

- वाल्मीकि रामायण

தவ நாஸ்தி மனுஷ்யேந்த்ர

ந ச அபூத் தே கதாசன |

மனஸ்யபி ததா ராம

ந ச ஏதத் வித்யதே க்வசித் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! You hadn't desire for other women in the past. You havn't it now. Never does it exist even in your mind

ராகவா! பிறர் தாரத்தை அடையும் ஆசை உங்களுக்கு முன்பும் இருந்தது இல்லை.  இப்பொழுதும் இல்லை. உங்கள் மனதில் இந்த எண்ணமே இல்லை.


स्वदार-निरत: त्वं 

च नित्यमेव नृपात्मज |

धर्मिष्ठ: सत्य-सन्धश्च 

पितु र्निर्देश कारकः ||

- वाल्मीकि रामायण

ஸ்வதார நிரத: த்வம்

ச நித்யம் ஏவ ந்ருப ஆத்மஜ |

தர்மிஷ்ட: சத்ய சந்த: ச

பிது நிர்தேஸ காரக: ||

- வால்மீகி ராமாயணம்

O prince! you are always faithful to your wife. You are righteous, truthful and obedient to your father's orders.

ராகவா! நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பத்னிக்கு துரோகம் செய்யாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் தர்மத்தை அறிந்தவர், சத்தியத்தை மீறாதவர், தகப்பனார் ஆணையை மீறாதவர்.


सत्यसन्ध महाभाग 

श्रीमन् लक्ष्मण पूर्वज |

त्वयि धर्मश्च सत्यं च 

त्वयि सर्वं प्रतिष्ठितम् ||

- वाल्मीकि रामायण

சத்யசந்த மஹாபாக

ஸ்ரீமந் லக்ஷ்மண பூர்வஜ |

த்வயீ தர்ம: ச சத்யம் ச

த்வயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம் ||

- வால்மீகி ராமாயணம்

Rama! O Man of truth! O auspicious one! O brother of lakshmana! In you,  truth and righteousness are ever present.

ராகவா! சத்யசந்தரே! போற்றுதலுக்கு உரியவரே! லக்ஷ்மணனுக்கு சகோதரரே! உங்களிடம் எப்பொழுதும் தர்மமும், சத்தியமும் குடி கொண்டு இருக்கிறது.


तत् च सर्वं महाबाहो 

शक्यं धर्तुं जितेन्द्रियैः |

तव वश्येन्द्रिय त्वं 

च जानामि शुभ-दर्शन ||

- वाल्मीकि रामायण

தத் ச ஸர்வம் மஹாபாஹோ

சக்யம் தர்த்தும் ஜிதேந்த்ரியை: |

தவ வஸ்யேந்த்ரிய த்வம்

ச ஜானாமி சுப தர்சன ||

- வால்மீகி ராமாயணம்

Only those who restrain their senses can hold all these features. I know that you have control over your senses.

ராகவா! புலனடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற நற்குணங்கள் காணப்படும். நீங்கள் புலனடக்கம் உள்ளவர் என்பதை நான் அறிவேன்.





तृतीयं यदिदं रौद्रं 

पर-प्राणाभि हिंसनम् |

निर्वैरं क्रियते मोहात् 

तत् च ते समुपस्थितम् ||

- वाल्मीकि रामायण

த்ருதீயம் யதீதம் ரௌத்ரம்

பர- ப்ரானாபி ஹிம்ஸனம் |

நிர்வைரம் க்ரியதே மோஹாத் 

தத் ச தே சமுபஸ்திதம் ||

- வால்மீகி ராமாயணம்

But i find the 3rd blemish of harming others without any direct enmity in you.

ராகவா! உங்களிடம் பொய்யும் இல்லை, பெண்ணாசையும் இல்லை. ஆனால் 'உங்களிடம் நேரிடையாக பகை இல்லாதவர்களை தாக்கும்' மூன்றாவது குறை தெரிகிறதே!! 


प्रतिज्ञात: त्वया वीर 

दण्डकारण्य वासिनाम् |

ऋषीणां रक्षणार्थाय 

वध: संयति रक्षसाम् ||

- वाल्मीकि रामायण

ப்ரதிஞாத: த்வயா வீர

தண்டக ஆரண்ய வாஸினாம் |

ருஷீணாம் ரக்ஷண அர்தாய

வத: ஸம்யதி ரக்ஷஸாம் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! You have promised the forest dwellers that you will kill the rakshasas in the battle, in order to protect the rishis, residing in the Dandaka forest.

ராகவா ! தண்டக வனத்தில் வசிக்கும் ரிஷிகளைப் பாதுகாப்பதற்காக, 'ராக்ஷஸைக் கொல்வேன்' என்று வனவாசிகளுக்கு வாக்குறுதி அளித்து விட்டீர்களே!


एत: निमित्तं च वनं 

दण्डका इति विश्रुतम् |

प्रस्थित: त्वं सह भ्रात्रा 

धृत बाण शरासनः ||

- वाल्मीकि रामायण

ஏத: நிமித்தம் ச வனம்

தண்டகா இதி விஸ்ருதம் |

ப்ரஸ்தித: த்வம் சஹ ப்ராத்ரா

த்ருத பாண சராஸந: ||

- வால்மீகி ராமாயணம்

Raghava ! It is very evident to see that you want to kill the rakshasas in dandaka forest and hence you have started entering dandaka forest with bow and arrows along with your brother.

ராகவா ! நீங்கள் தண்டக வனத்தில் ராக்ஷஸைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இதன் காரணமாக தான், நீங்கள் உங்கள் சகோதரருடன் வில் மற்றும் அம்புகளுடன் தண்டக வனத்தில் நுழையத் தொடங்கியுள்ளீர்கள்.


ततस्त्वां प्रस्थितं दृष्ट्वा 

मम चिन्ताकुलं मनः |

त्वद् वृत्तं चिन्तयन्त्या वै 

भवेन् निश्श्रेयसं हितम् ||

- वाल्मीकि रामायण

தத: த்வாம் ப்ரஸ்திதம் த்ருஷ்டவா

மம சிந்தாகுலம் மன: |

த்வத் வ்ருத்தம் சிந்தயந்த்யா வை

பவேந் நிஸ் ஸ்ரேயஸம் ஹிதம் ||

- வால்மீகி ராமாயணம்

Raghava ! I am worried that this will bring you no good.

ராகவா! இந்த காரணத்தால் நான் பெரிதும் கவலை கொள்கிறேன். 'உங்கள் புகழுக்கு எந்த குறையும் ஏற்பட கூடாதே!' என்று கவலை கொள்கிறேன்,  என்றாள் சீதாதேவி.


பரமாத்மா தர்மத்தை காப்பவர்.

தர்மம் செய்பவர்களை காக்க, அவர்களை தொந்தரவு செய்பவர்களை, அதர்மம் செய்பவர்களை தண்டித்து விடுவார்.


தாயாருக்கு தாய் பாசமே மேலோங்கி இருக்கும். தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளை அதர்மமே செய்தாலும் பரிந்து பேசும் குணம் உடையவள்.


ராமபிரான், ரிஷிகளை அநியாயமாக கொன்று குவித்ததை பார்த்ததும், 'ராக்ஷஸர்களுக்கு தண்டனை தர வேண்டும்' என்று வாக்கு கொடுத்தார்.

ராக்ஷஸர்கள் கொன்று குவித்து எலும்பு குவியலை நேரில் பார்த்தும், 'ராக்ஷஸர்களை தண்டிக்க வேண்டுமா? அவர்களை திருத்தலாமே!' என்று நினைத்தாள் சீதாதேவி..

இந்த குணம் இந்த இடத்தில் மட்டுமல்ல, அசோகவனத்திலும் காணலாம்.

சீதாதேவியை பார்த்து, "உன் கண்ணை பிடுங்கட்டுமா? நர மாமிசமாக உன்னை வெட்டி சாப்பிட போகிறேன்" என்று 10 மாதங்கள் ராக்ஷஸிகள் சூழ்ந்து கொண்டு சித்ரவதை செய்தனர்.

போரில் ராவணன் கொல்லப்பட்ட பின், ஹனுமான் சீதாதேவியை அழைக்க வந்த போது, "உங்களை கொடுமையான சொற்களால் இத்தனை மாதங்கள் மிரட்டிய இந்த ராக்ஷஸிகளை துண்டு துண்டாக வெட்டட்டுமா? இவர்கள் கண்களை பிடுங்கி ஏறியட்டுமா?" என்று கேட்க, அப்பொழுதும் சீதாதேவி தன்னை சித்ரவதை செய்த ராக்ஷஸிகளுக்கு பரிந்து பேசி ஹனுமானை சமாதானம் செய்து விட்டாள்.


தர்மத்தை மீறி நடப்பவர்களை கண்டால், பெருமாளுக்கு பிடிக்காது. 

தகப்பன் நிலை, பெருமாளுக்கு.

'இவன் நல்ல பிள்ளையாக இல்லையே! தர்மம் சொன்னாலும் கேட்காமல், அதர்மம் செய்கிறானே!' என்று கோபப்படுவார்.


தாயாரோ, தனக்கே துரோகம் செய்தாலும், அதர்மமே செய்தாலும், "சொல்லி திருத்துங்கள்… தண்டிக்காதீர்கள்" என்று பரிந்து பேசுவாள்.

குற்றம் வெளிப்படையாக செய்தாலும், குற்றத்தை பார்க்காமல், சிபாரிசு செய்பவளாக தாயார் இருக்கிறாள்.


மஹாலக்ஷ்மியே சீதாதேவியாக அவதரித்து இருப்பதால், இந்த ஆச்சர்யமான குணம் வெளிப்பட்டது.


'எலும்பு குவியலாக ரிஷிகளை கொன்று குவித்த, ராக்ஷஸர்களை கொல்ல கூடாது' என்பதற்காக 'தன்னிடமே ஒரு குற்றம் இருப்பதாக சொல்லும்' தாயுள்ளம் கொண்ட சீதாதேவியை கண்டு மந்தாஹாசம் செய்தார் ராமபிரான்.

தாயாரின் குணம் இது என்று அறிந்த ராமபிரான், சீதாதேவியிடம், "தர்மத்தை காப்பது என் கடமை. நானாக ராக்ஷஸர்களை அனாவசியமாக கொல்ல நினைக்கவில்லை. 

ரிஷிகள் என்னிடம் வந்து காப்பாற்றுமாறு கேட்டார்கள். அவர்களை காக்கும் பொறுப்பு இருப்பதால், அவ்வாறு வாக்கு கொடுத்தேன். 

நீ எனக்கு எதுவும் ஆக கூடாதே! என்ற அக்கரையில் தான் இப்படி பேசினாய் என்று அறிவேன். 

வாக்கு கொடுத்து விட்டால், என்னால் மீறவே முடியாது" என்று சாமர்த்தியமாக பேசி, மந்தஹாசத்துடன் சீதாதேவி, லக்ஷ்மணருடன் மேலும் வனத்திற்குள் நடக்கலானார்.


"கோவிலில், முதலில் தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்?" என்பதற்கு இதுவே காரணம்.


நேரிடையாக பெருமாள் சந்நிதிக்குள் நாம் சென்றால், தகப்பனார் போல இருக்கும் பெருமாள், உடனேயே 'இந்த பிள்ளையின் நல்ல குணங்கள் என்ன? கெட்ட குணங்கள் என்ன? நல்ல செயல்கள் என்ன? கெட்ட செயல்கள் என்ன?' என்று கவனித்து விடுவார்.

நாமோ பெரும்பாலும் அதர்மம் செய்பவர்களே! 

பெருமாள் பெருமைப்படும் அளவுக்கு நம் செயல்கள் இல்லை.

நம்மை பார்த்தவுடனேயே, 

'இப்படி அதர்மம் செய்கிறானே! இவனை திருத்த, தண்டனை கொடுத்தால் என்ன?' என்று நினைப்பார்.

நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க சென்றால், நாம் செல்வதற்கு முன்பேயே, 'நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுகிரஹம் மட்டுமே செய்யுங்கள்' என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார்.

தாயாரை பார்த்து விட்டு, வரும் நம்மை, 'தவறு தெரிந்தாலும் எதுவும் சொல்லாமல், நாம் கேட்பதை எல்லாம் கிடைக்க செய்து' அணுகிரஹம் செய்து விடுவார் பெருமாள்.

சீதாதேவியின் பெருமை மகத்தானது... 

திருப்பதியில் பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், தாயாருக்கு திருமலையில் தனி சந்நிதி இல்லை. 

நாம் திருமலையப்பனை பார்க்கும் போது, பெருமாள் நம்மை பார்க்கும் போது, தாயாரும் அவர் நெஞ்சிலிருந்து பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், திருப்பதியில் மட்டும் பெருமாள் 'யார் வந்தாலும் குற்றம் பார்க்காமல் அணுகிரஹம் மட்டுமே செய்கிறார்'. 

Sunday 20 June 2021

ராம கீதை.. கிருஷ்ணர் பகவத் கீதை உபதேசித்தார். ராமபிரான் செய்த உபதேசமும் தெரிந்து கொள்வோம். ராமரின் தர்ம உபதேசம்.. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது... வால்மீகி ராமாயணம்

பரதன் தகப்பனார் பரலோகம் சென்றதால், ராமபிரான் வனவாசம் சென்றதால் பெரும் துயரில் வாடினார்.



तस्य साधु इति अमन्यन्त 

नागरा विविधा जनाः।

भरतस्य वच: श्रुत्वा 

रामं प्रति अनुयाचतः।।

- वाल्मीकि रामायण

தஸ்ய ஸாது இதி அமன்யந்த

நாகரா விவிதா ஜனா: |

பரதஸ்ய வச: ஸ்ருத்வா

ராமம் ப்ரதி அனுயாசத: ||

- வால்மீகி ராமாயணம்

Hearing the words of Bharata requesting Rama to return Ayodhya, various classes of people of the city of Ayodhya, in acceptance exclaimed "well said".

'அயோத்திக்கு ராமபிரான் திரும்பி வரவேண்டும்' என்று பரதன் கூறியதை கேட்டு, அயோத்தி நகரத்தின் பல தரப்பட்ட மக்கள் ஆரவாரத்துடன் ஜெயகோஷம் செய்து, அவர்களும் ராமபிரானை அயோத்திக்கு அழைத்தனர்.





तमेवं दुःखितं प्रेक्ष्य 

विलपन्तं यशस्विनम् ।

रामः कृतात्मा भरतं 

सम आश्वास यद् आत्मवान् ।।

- वाल्मीकि रामायण

தமேவம் துஹ்கிதம் ப்ரேக்ஷ்ய

விலபந்தம் யஷஸ்வினம் |

ராம: க்ருத் ஆத்மா பரதம்

ஸம ஆஷ்வாஸ யத் ஆத்மவான் ||

- வால்மீகி ராமாயணம்

But rama, the cultured and realized soul, consoled the lamenting bharata as follows

தர்மமும், ஒழுக்கமும் உடைய ராமபிரான், புலம்பி அழும் பரதனை ஆறுதல்படுத்தலானார்.


न आत्मनः कामकार: 

अस्ति पुरुष: अयम् अनीश्वरः।

इतश्च इतरतश्च एनं 

कृतान्तः परिकर्षति।।

- वाल्मीकि रामायण

ந ஆத்மன: காமகார:

அஸ்தி புருஷ: அயம் அனீஸ்வர: |

இத: ச இதரத: ச ஏனம்

க்ருதாந்த: பரிகர்ஷதி ||

- வால்மீகி ராமாயணம்

A being cannot live completely by his free-will without the super power. The super power pulls the being here and there.

எந்த உயிரும் 'தனக்கு ஈசன் இல்லை' என்று தன்னிச்சையாக, சுதந்திரமாக வாழ முடியாது. தெய்வ சக்தியே ஒருவனை எதிலும் இழுக்கிறது, விலக்குகிறது.


सर्वे क्षयान्ताः निचयाः 

पतनान्ता समुच्छ्रयाः।

संयोगा विप्र योगान्ता 

मरणान्तं च जीवितम्।।

- वाल्मीकि रामायण

சர்வே க்ஷயாந்தா: நிசயா:

பதநாந்தா ஸமுச்ச்ரயா: |

ஸம்யோகா விப்ர யோகாந்தா

மரணாந்தம் ச ஜீவிதம் ||

- வால்மீகி ராமாயணம்

All that are earned shall end in spending. All that ascend end in falling. All that are unified shall end in departure. All that are born have to end in death

சம்பாதித்தது எல்லாம், ஒரு நாள் செலவழிந்தே போகும். உயரத்துக்கு சென்றால், ஒரு நாள் கீழே இறங்கி தான் ஆக வேண்டும். இன்று சேர்ந்து இருப்பவர்கள் எல்லாம், ஒரு நாள் பிரிந்து தான் ஆக வேண்டும். பிறந்தவர்கள் எல்லாம், ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும்


यथा फलानां पक्वानां 

न अन्यत्र पतनाद् भयम्।

एवं नरस्य जातस्य 

न अन्यत्र मरणाद् भयम् ।।

- वाल्मीकि रामायण

யதா பலானாம் பக்வானாம்

ந அந்யத்ர பதநாத் பயம் |

ஏவம் நரஸ்ய ஜாதஸ்ய

ந அந்யத்ர மரணாத் பயம் ||

- வால்மீகி ராமாயணம்

The only fear of a ripened fruit is the fear of falling down (from the tree). In the same way every man who is born has no other fear except the fear of death.

மரத்தில் பழுத்த பழம் 'தான் விழ போகிறோம்' என்ற பயத்தில் இருக்கிறது. அது போல, இந்த உலகில் பிறந்தவர்கள் மரணத்தில் நிச்சயம் விழ போகிறோம் என்ற பயத்தில் இருக்கின்றனர்.


यथा आगारं दृढ स्थूणं 

जीर्णं भूत्वा अवसीदति।

तथैव सीदन्ति नरा 

जरा मृत्यु वशं गताः।।

- वाल्मीकि रामायण

யதா ஆகாரம் த்ருட ஸ்தூணம்

ஜீர்ணம் பூத்வா அவஸீததி |

ததைவ ஸீதந்தி நரா

ஜரா ம்ருத்யு வஸம் கதா: ||

- வால்மீகி ராமாயணம்

The construction with strong pillars also gets shaken when it grows old. In the same way, people under the sway of old age and death finally gets destroyed.

உறுதியான தூண்கள் வைத்து கட்டப்பட்ட மாளிகைகள் கூட, வயது ஆக ஆக இடிந்து தரைமட்டமாகி விடும். அது போல, நரர்களும் வயதாகி மரணத்தில் விழுகின்றனர்.





अत्येति रजनी या तु 

सा न प्रतिनि वर्तते।

य अत्येव यमुना पूर्णा 

समुद्रम् उदका कुलम् ।।

- वाल्मीकि रामायण

அத்யேதி ரஜனீ யா து

ஸா ந ப்ரதிநி வர்ததே |

ய அத்யேவ யமுனா பூர்ணா

சமுத்ரம் உதகா குளம் ||

- வால்மீகி ராமாயணம்

The river yamuna that mingle with the sea does not return back. One night which has gone is not going to return back)

கடலுக்கு சென்று கலந்து விட்ட யமுனா நதி எப்படி திரும்பி வர போவதில்லையோ, அதுபோல, கடந்து சென்று விட்ட இரவு பொழுது மீண்டும் வர போவதில்லை.


अहो रात्राणि गच्छन्ति 

सर्वेषां प्राणिनाम् इह।

अायूंषि क्षपयन्ति आशु 

ग्रीष्मे जलमिव अंशवः।।

- वाल्मीकि रामायण

அஹோ ராத்ராணி கச்சந்தி

சர்வேஷாம் ப்ராணினாம் இஹ |

ஆயூம்ஷி க்ஷபயந்தி ஆஸு

க்ரீஷ்மே ஜலமிவ அம்சவ: ||

- வால்மீகி ராமாயணம்

Days and nights are going on. They drink the life like the rays of sun drink the water in summer

பகலும் இரவும் போய் கொண்டே இருக்கிறது. சூரிய கதிர்கள் தண்ணீரை உரிஞ்சுவது போல, கழிந்து போன ஒவ்வொரு பகலும், இரவும் ஒவ்வொருவரின் ஆயுளையும் உறிஞ்சி கொண்டு இருக்கிறது.


आत्मानम् अनुशोच त्वं 

किम् अन्यम्.अनुशोचसि।

आयु: ते हीयते यस्य 

स्थितस्य च गतस्य च।।

- वाल्मीकि रामायण

ஆத்மானம் அனுஸோச த்வம்

கிம் அன்யம் அனுஸோசதி |

ஆயு: தே ஹீயதே யஸ்ய

ஸ்திதஸ்ய ச கதஸ்ய ச ||

- வால்மீகி ராமாயணம்

1st of all bother about you. Why do you lament for others? Your life is diminishing every seconds

பரதா! நீ உன்னை நினைத்து கவலை கொள். பிறரை நினைத்து இப்படி ஏன் சோகப்படுகிறாய்? உன்னுடைய வாழ்க்கையே ஒவ்வொரு நொடியும் கரைந்து கொண்டு இருக்கிறது என்று உணர்ந்து பார்.


सहैव मृत्यु: व्रजति

सह मृत्यु: निषीदति।

गत्वा सुदीर्घम् अध्वानं 

सह मृत्यु: निवर्तते ।।

- वाल्मीकि रामायण

ஸஹைவ ம்ருத்யு: வ்ரஜதி

சஹ ம்ருத்யு: நிஷீததி |

கத்வா சு-தீர்கம் அத்வானம்

சஹ ம்ருத்யு: நிவர்ததே ||

- வால்மீகி ராமாயணம்

Death follows a man wherever he goes. When he sits, death sits with him. Even after travelling a very long distance, the man returns along with death

மரணம் அனைவரையும் எப்பொழுதுமே தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உட்கார்ந்து இருந்தால் கூட கூடவே மரணம் உட்கார்ந்து இருக்கிறது. எத்தனை தூரம் ஒருவன் பயணித்தாலும், கூடவே மரணம் வருகிறது.


गात्रेषु वलयः प्राप्ता  

श्वेताश्चैव शिरो रुहाः।

जरया पुरुषो जीर्णः 

किं हि कृत्वा प्रभावयेत्।।

- वाल्मीकि रामायण

காத்ரேஷு வலய: ப்ராப்தா

ஸ்வேதாஸ்சைவ சிரோ ருஹா |

ஜரயா புருஷோ ஜீரண:

கிம் ஹி க்ருத்வா ப்ரபாவயேத் ||

- வால்மீகி ராமாயணம்

Wrinkles form on the body and hair turns grey in old age. In this way, decayed with age, what can a man do to have control over death.

தோலில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. வயதாக வயதாக கேசங்கள் நரைக்கிறது. இதை கூட தடுக்க முடியாத ஜீவனால் எந்த சக்தியை கொண்டு மரணத்தை தடுத்து விட முடியும்?





नन्दन्ति उदित आदित्ये 

नन्दन्ति अस्तमिते अहनि।

आत्मनो नाव बुध्यन्ते 

मनुष्या जीवित क्षयम्।।

- वाल्मीकि रामायण

நந்தந்தி உதித ஆதித்யே

நந்தந்தி அஸ்தமிதே அஹநி |

ஆத்மனோ நாவ புத்யந்தே

மனுஷ்யா ஜீவித  க்ஷயம் ||

- வால்மீகி ராமாயணம்

People rejoice when the Sun rises and rejoice when the Sun sets. They do not know the gradual diminution of their life day by day

ஜீவாத்மாக்கள், சூரியன் உதிப்பதை கண்டு குதூகலம் அடைகிறார்கள். சூரியன் மறைவதை கண்டு குதூகலம் அடைகிறார்கள். ஆனால், கழிந்து போகும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை கரைக்கிறது என்று உணராமல் இருக்கின்றனர்.


हृष्यन्ति ऋतु मुखम् दृष्ट्वा 

नवं नवम् इह आगतम् ।

ऋतूनां परिवर्तेन 

प्राणिनां प्राण सङ्क्षयः।।

- वाल्मीकि रामायण

ஹ்ருஷ்யந்தி ருது முகம் த்ருஷ்டவா

நவம் நவம் இஹ ஆகதம் |

ருதூநாம் பரிவர்தேன

ப்ராணினாம் ப்ராண சங்க்ஷய: ||

- வால்மீகி ராமாயணம்

At the advent of each new season men feel delighted to see the newly blossomed flowers and fruits. But with the change of the seasons the life span also diminishes.

பருவ கால மாற்றத்தால் புதிதாக பூத்து குலுங்கும் பூக்களையும் பழங்களையும் கண்டு ஜீவாத்மாக்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். இந்த மாற்றத்தோடு தன்னுடைய ஆயுளும் கரைந்து கொண்டு இருக்கிறது என்று இவர்கள் உணர்வதில்லை.


यथा काष्ठं च काष्ठं च 

समेयातां महार्णवे।

समेत्य च व्यपेयातां 

कालम् आसाद्य कञ्चन।।

एवं भार्या: च पुत्रा: च 

ज्ञातयश्च धनानि च।

समेत्य व्यवधा वन्ति 

ध्रुवो हि एषां विनाभवः।।

- वाल्मीकि रामायण

யதா காஷ்டம் ச காஷ்டம் ச

சமேயாதாம் மஹார்ணவே |

ஸமேத்ய ச வ்யபே-யாதாம்

காலம் ஆஸாத்ய கஞ்சன ||

ஏவம் பார்யா: ச புத்ரா: ச

ஞாதய: ச தனானி ச |

சமேத்ய வ்யவதா வந்தி

த்ருவோ ஹி ஏஷாம் வினாபவ: ||

- வால்மீகி ராமாயணம்

In a mighty ocean, two pieces of woods meet one another, float together and in due course get separated. In the same way wives, sons, relatives and riches remain together for some time and thereafter get separated. Their separation is certain.

பெருங்கடலில், விழுந்த இரு மர துண்டுகள் மிதந்து மிதந்து ஒரு சமயம் ஒன்றோடு ஒன்று சந்திக்கின்றன, சில நேரம் சேர்ந்தே பயணிக்கின்றன, கடைசியில் அதனதன் பாதையில் பிரிந்து சென்று விடுகின்றன. அது போல வாழ்க்கையில் மனைவியும், பிள்ளையும், சொந்தமும், செல்வமும் சில காலங்கள் இருந்து விட்டு பிரிந்து செல்கிறது. பிரிவு என்பது தவிர்க்க முடியாதது.


न अत्र कश्चिद् यथाभावं 

प्राणी समभि वर्तते।

तेन तस्मिन् न सामर्थ्यं 

प्रेतस्या अनुशोचतः।।

- वाल्मीकि रामायण

ந அத்ர கஸ்சித் யதாபாவம்

ப்ராணீ ஸமபி வர்ததே |

தேன தஸ்மின் ந சாமர்த்யம்

ப்ரேதஸ்யா அனுஸோசத: ||

- வால்மீகி ராமாயணம்

Here, no being an escape it's destiny. Therefore, no one should grieve for the dead

யாராலும் தெய்வம் நிர்ணயித்த முடிவிலிருந்து தப்பிக்க இயலாது. ஆகையால், யாரும் மரணத்தை கண்டு சோகத்தில் மூழ்கி விட கூடாது. 


यथा हि सार्थं गच्छन्तं 

ब्रूयात् कश्चित् पथि स्थितः।

अहमप्य आगमिष्यामि 

पृष्ठतो भवता म ति ।।

एवं पूर्वै: गतो मार्गः 

पितृ पैतामहो ध्रुवः।

तम् आपन्नः कथं शोचेद् 

यस्य नास्ति व्यति क्रमः।।

-  वाल्मीकि रामायण

யதா ஹி சார்தம் கச்சந்தம்

ப்ரூயாத் கஸ்சித் பதி ஸ்தித: |

அஹமப்ய ஆகமிஷ்யாமி

ப்ருஷ்டதோ பவதோ ம தி ||

ஏவம் பூர்வை: கதோ மார்க:

பித்ரு பைதாமஹோ த்ருவ: |

தம் ஆபன்ன: கதம் ஸோசேத்

யஸ்ய நாஸ்தி வ்யதி க்ரம: ||

- வால்மீகி ராமாயணம்

A passerby says to another passerby, "May you go 1st. I shall also follow you"

This is how all our predecessor have gone. We are going to follow their course. Why should one worry for that which is inevitable?

ஒரு வழிப்போக்கன், மற்றொரு வழிப்போக்கனை பார்த்து, "நீ முதலில் செல். நானும் உன்னை தொடர்ந்து வருகிறேன்" என்று சொல்வது போல, நமக்கு முன்னால் நமது மூதாதையர்கள் சென்றுள்ளனர். நாமும் அவர்களை பின் தொடர்ந்து செல்ல தான் போகிறோம். தடுக்க முடியாத விஷயங்களை கண்டு வருத்தப்பட்டு என்ன பயன்?





वयसः पतमानस्य

स्रोतसो वा अनिवर्तिनः।

आत्मा सुखे नियोक्तव्य: 

सुखभाजः प्रजाः स्मृताः।।

- वाल्मीकि रामायण

வயஸ: பதமானஸ்ய

ஸ்ரோதஸோ வா அநிவர்தின: |

ஆத்மா சுகே நியோக்த்வய:

சுகபாஜ: ப்ரஜா ஸ்ம்ருதா: ||

- வால்மீகி ராமாயணம்

Like the flow of water which never reverts to its source, age passes. Therefore, a man must employ his self in righteous acts that bring him happiness. By doing so, it is said, people will always be happy.

ஓடும் நதி எப்படி திரும்புவதில்லையோ, அது போல போன வயதும் திரும்பப்போவதில்லை. ஆதலால், ஜீவாத்மாக்கள் நல்ல ஒழுக்கமான காரியங்களில் மட்டுமே தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். அதன் மூலமாகவே ஆத்மசுகம் கிடைக்கும். மக்கள் எப்பொழுதும் ஆத்ம சுகத்தோடு இருக்க வேண்டும்.


धर्मात्मा स शुभैः कृत्स्नैः 

क्रतुभि: च आप्त दक्षिणैः।

स्वर्गं दशरथः प्राप्तः 

पिता नः पृथिवी पतिः।।

- वाल्मीकि रामायण

தர்மாத்மா ஸ ஸுபை: க்ருத்ஸ்நை:

க்ரதுபி: ச ஆப்த தக்ஷிணை: |ஸ்வர்கம் தசரத: ப்ராப்த:

பிதா ந: ப்ருதிவீ பதி: ||

- வால்மீகி ராமாயணம்

Our righteous father and lord of the earth, Dasaratha, attained heaven by giving abundant charities and performing several sacrifices in accordance with tradition.

பூலோகத்தை ஆண்ட நம்முடைய தகப்பனார் தசரதர், அள்ளி அள்ளி தானம் செய்தார், சாஸ்திர விதிப்படி யாகங்கள் செய்தார். அதன் பலனாக சுவர்க்கம் சென்று விட்டார்.


भृत्यानां भरणात् सम्यक् 

प्रजानां परि-पालनात्।

अर्थानाम् च धर्मेण 

पिता न: त्रिदिवम् गतः।।

- वाल्मीकि रामायण

ப்ருத்யானாம் பரணாத் ஸம்யக்

ப்ராஜானாம் பரி பாலநாத் |

அர்தாநாம் ச தர்மேன

பிதா: ந: த்ரிதிவம் கத: ||

- வால்மீகி ராமாயணம்

He took care of his employees well. He ruled the subjects well. He managed the finance well. As a result he has gone to heavens

தகப்பனார் தன்னை நம்பி இருப்பவர்களை ஒரு குறையின்றி பார்த்து கொண்டார். தன் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தார். அரசாங்க நிதியை நன்கு மேற்பார்வை செய்து திரண்பட கையாண்டார். அதன் பலனாக அவர் சுவர்க்கம் சென்று இருக்கிறார்.





कर्मभि: तु शुभै: इष्टैः 

क्रतुभि: च आप्त दक्षिणैः।

स्वर्गं दशरथः प्राप्तः 

पिता नः पृथिवी पतिः।।

- वाल्मीकि रामायण

கர்மபி: து ஸுபை: இஷ்டை:

க்ரதுபி: ச ஆப்த தக்ஷிணை: |

ஸ்வர்கம் தசரத: ப்ராப்த

பிதா ந: ப்ருதிவீ பதி: ||

- வால்மீகி ராமாயணம்

Dasaratha, our father and lord of the earth, reached heaven by performing auspicious acts and offering abundant charities in sacrifices.

பரதா! நம்முடைய தகப்பனார், இந்த பூமியை ஆண்டவர், தன்னுடைய நன்னடத்தையாலும், அதிகமாக தானம் செய்ததாலும் சுவர்க்கம் சென்றுள்ளார்.


इष्ट्वा बहुविधै: यज्ञै:

भोगां च अवाप्य पुष्कलान्।

उत्तमं च आयु: आसाद्य 

स्वर्गतः पृथिवी पतिः।।

- वाल्मीकि रामायण

இஷ்ட்வா பஹுவிதை: யஞை: 

போகாம் ச அவாப்ய புஸ்கலான் |

உத்தமம் ச ஆயு: ஆஸாத்ய

ஸ்வர்கத: ப்ருதிவீ பதி: ||

- வால்மீகி ராமாயணம்

King Dasaratha, lord of the earth, having performed various kinds of  rituals. He enjoyed long life. He led a good life. He has gone to heavens

பரதா! நம்முடைய தகப்பனார், இந்த பூமியை ஆண்டவர், பல விதமான யாகங்கள் செய்துள்ளார். நீண்ட ஆயுளுடன் வாழ்க்கையை சுகமாக அனுபவித்தார்.  நல்ல வாழ்க்கை வாழ்ந்தார்.  இப்பொழுது சுவர்க்கம் சென்று இருக்கிறார்.


आयु: उत्तमम् आसाद्य 

भोगानपि च राघवः।

स न शोच्यः पिता तात 

स्वर्गत: सत्कृत: सताम् ।।

- वाल्मीकि रामायण

ஆயு: உத்தமம் ஆஸாத்ய

போகாநபி ச ராகவ: |

ஸ ந ஸோச்ய: பிதா தாத

ஸ்வர்கத: ஸத்க்ருத: சதாம் ||

- வால்மீகி ராமாயணம்

O dear Barata! our father, king Dasaratha, who was honoured by the virtuous and enjoyed a long life. He enjoyed all pleasure. He has attained heavens. Cry not much for him

பரதா! நம்முடைய தகப்பனார், இந்த பூமியை ஆண்டவர்,  வாழ்க்கையை சுகமாக நீண்ட காலம் அனுபவித்தார்.  பூலோக சுகங்கள் அனுபவித்தார். இப்பொழுது சுவர்க்கம் சென்று இருக்கிறார். அவரை நினைத்து கொண்டு இத்தனை துயர் கொள்ளாதே!


स जीर्णं मानुषं देहं 

परित्यज्य पिता हि नः।

दैवीम् ऋद्धिम्  अनुप्राप्तो 

ब्रह्म लोक विहारिणीम् ||

- वाल्मीकि रामायण

ஸ ஜீர்ணம் மானுஷம் தேஹம்

பரித்யஜ்ய பிதா ஹி ந: |

தைவீம் ருத்திம் அனு ப்ராப்தோ

ப்ரஹ்ம லோக விஹாரிணீம் ||

- வால்மீகி ராமாயணம்

Our father, king Dasaratha, abandoned the wornout mortal body, and attained a celestial form that sports in the world of brahma

பரதா! நம்முடைய தகப்பனார் தசரதர் தன்னுடைய வயதான உடலை விட்டு விட்டு, திவ்ய தேகத்துடன் ப்ரம்ம லோகத்தில் சுகமாக சஞ்சரித்து கொண்டு இருக்கிறார்.


तं तु न एवं विधः कश्चित् 

प्राज्ञ: शोचितुम् अर्हति।

तत्विधो मद् विध: च 

अपि श्रुतवान् बुद्धिमत्तरः ||

- वाल्मीकि रामायण

தம் து ந ஏவம் வித: கஸ்சித்

ப்ராஞ: ஸோசிதும் அர்ஹதி |

தத்விதோ மத் வித: ச

அபி ஸ்ருதவான் புத்திம் உத்தர: ||

- வால்மீகி ராமாயணம்

Wise men like you who knows the transitory nature of life should not worry much about the bitter realities like death

உன்னை போன்ற அறிவாளிகள், உலக வாழ்க்கை நிலையற்றது என்று தெரிந்தும், மரணத்தை நினைத்து இத்தனை துக்கம் கொள்ள கூடாது.





एते बहुविधा शोका 

विलाप रुदिते तथा।

वर्जनीया हि धीरेण 

सर्व अवस्थासु धीमता ||

- वाल्मीकि रामायण

ஏதே பஹுவிதா ஸோகா

விலாப ருதிதே ததா |

வர்ஜநீயா ஹி தீரேண

ஸர்வ அவஸ்தாசு தீமதா ||

- வால்மீகி ராமாயணம்

A wise man, holding on to his fortitude in all circumstances, should avoid such occasions of grief, these words of lamentation and this crying.

உன்னை போன்ற தீரர்கள், உலக வாழ்க்கை நிலையற்றது என்று தெரிந்தும், மரணத்தை நினைத்து இத்தனை புலம்பல், அழுகை கூடாது.


स स्वस्थो भव मा शोचे: 

यात्वा च आवस तां पुरीम्।

तथा पित्रा नियुक्त असि 

वशिना वदतां वर।।

- वाल्मीकि रामायण

ஸ ஸ்வஸ்தோ பவ மா ஸோசே:

பாத்வா ச ஆவஸ தாம் புரிம் |

ததா பித்ரா நியுக்த அஸி

வஸினா வததாம் வர ||

- வால்மீகி ராமாயணம்

O foremost of the eloquent! compose yourself. Lament not. Go back to the city and rule as you are instructed by our father.

பரதா! உன்னை நிதானப்படுத்தி கொள். புலம்பி துக்கப்படாதே. உடனேயே அயோத்தி நகருக்கு செல். தகப்பனார் உனக்கு சொன்னபடி ஆட்சி பொறுப்பை ஏற்று நல்லாட்சி செய்.


यत्र अहमपि तेनैव 

नियुक्तः पुण्यकर्मणा।

तत्रैव अहं करिष्यामि 

पितु: आर्यस्य शासनम्।।

- वाल्मीकि रामायण

யத்ர அஹம் அபி தேநைவ

நியுக்த: புண்ய கர்மனா: |

தத்ரைவ அஹம் கரிஷ்யாமி

பிது: ஆர்யஸ்ய ஸாசனம் ||

- வால்மீகி ராமாயணம்

I shall also stick to the command of our noble father who was a man of sacred deeds

நானும், ஒழுக்கம் மீறாத நம் தகப்பனார் சொல் படி இணங்கி இருப்பேன்


न मया शासनं तस्य

त्यक्तुं न्याय्यम् अरिन्दम।

स त्वया अपि सदा मान्यं 

स वै बन्धु स नः पिता।|

- वाल्मीकि रामायण

ந மயா சாசனம் தஸ்ய

த்யக்தும் ந்யாய்யம் அரிந்தம் |

ஸ த்வயா அபி சதா மான்யம்

ஸ வை பந்து ஸ ந: பிதா ||

- வால்மீகி ராமாயணம்

O subduer of enemies! I cannot give up his instruction neither you can. He is our sire and well wisher

எதிரியை ஒழிப்பவனே! பரதா! அவருடைய வாக்கை நீயோ அல்லது நானோ மீறவே முடியாது. அவர் தான் நமக்கு குரு. அவர் மட்டும் தான் நம் நலனை பற்றியே நினைப்பவர். 


तद् वचः पितु: एव 

अहं सम्मतं धर्मचारिणः।

कर्मणा पालयिष्यामि 

वनवासेन राघव।।

- वाल्मीकि रामायण

தத் வச: பிது: ஏவ

அஹம் சம்மதம் தர்மசாரிண: |

கர்மணா பாலயிஷ்யாமி

வன வாஸேன ராகவ ||

- வால்மீகி ராமாயணம்

O Bharata! I will, therefore, guard the oath of our father through my forest life

பரதா! தகப்பனாரின் வாக்கை காப்பாற்றியே ஆக வேண்டும். ஆதலால் நான் வனத்திலேயே தங்குகிறேன்.


धार्मिकेण नृशंसेन 

नरेण गुरुवर्तिना।

भवितव्यं नरव्याघ्र 

परलोकं जिगीषता।।

- वाल्मीकि रामायण

தார்மிகேந ந சம்ஸேன

நரேந குரு வர்தினா |

பவிதவ்யம் நர வ்யாக்ர

பரலோகம் ஜிகிஷதா ||

- வால்மீகி ராமாயணம்

O best of men! if a man aspires to conquer the higher world, One should be noble, cultured, virtuous, disciplined, follow the parents to win the heavens

பரதா! மேலுலகங்களை ஆள ஆசைப்படுபவன், தர்மத்தில் இருந்து கொண்டு, இரக்கம் உள்ளவனாக, ஒழுக்கம் உள்ளவனாக, பெற்றோர் சொல்படி வாழ வேண்டும்.


आत्मानम् अनुतिष्ठत्वं 

स्वभावेन नरर्षभ।

निशाम्यतु शुभं वृत्तं 

पितु: दशरथस्य नः।

- वाल्मीकि रामायण

ஆத்மாநம் அனுதிஷ்டத்வம்

ஸ்வபாவேந நரர்ஷப |

நிஸாம்யது சுபம் வ்ருத்தம்

பிது: தசரதஸ்ய ந: ||

- வால்மீகி ராமாயணம்

O best of men! having seen the auspicious life of our father Dasaratha and his conduct, you also stick to your own duty.

(Be in your self nature knowing our father's virtuous conduct)

பரதா! நம்முடைய தகப்பனாரின் புண்யமான வாழ்க்கையையும், அவரது நடத்தையையும் நீ பார்த்து இருக்கிறாய். நீ அவருக்கு பிள்ளை என்ற கடமையை விலகாமல் செய். 

इत्येवम् उक्त्वा वचनं महात्मा 

पितु: निदेश प्रति-पालनार्थम्।

यवीयसं भ्रातरम् अर्थ् च 

प्रभु: मुहूर्ताद् विरराम रामः।।

- वाल्मीकि रामायण

இத்யேவம் உக்த்வா வசனம் மஹாத்மா

பிது: நிதேச ப்ரதி பாலநார்தம் |

யவீயஸம் ப்ராதரம் அர்தவத் ச

ப்ரபு: முஹர்தாத் விரராம ராம: ||

- வால்மீகி ராமாயணம்

Rama, the magnanimous lord, After telling these to guard his father's vow, the great soul Rama rests for a moment

மஹாத்மாவான ஸ்ரீராமர், தன் இளைய சகோதரன் பரதனுக்கு தர்ம உபதேசம் இவ்வாறு செய்த பிறகு, சில நொடிகள் அமைதியாக இருந்தார்.



Sunday 6 June 2021

51 பாபங்கள் பற்றி பரதன் சொல்கிறார்… பாப காரியங்கள் என்னென்ன? தெரிந்து கொள்வோம் வால்மீகி ராமாயணம்

எந்தெந்த காரியங்கள் பாபத்தை கொடுக்கும்?  51 பாப காரியங்கள் என்னென்ன?

பரதன் பலவித பாபங்களை அடுக்கி, தன் சோகத்தை கௌசல்யா தேவியிடம் வெளிப்படுத்துகிறார். தெரிந்து கொள்வோம் வால்மீகி ராமாயணம்

कृता शास्त्र अनुगा बुद्धिर् 

मा भूत् तस्य कदाचन |

सत्य संधः सताम् श्रेष्ठो 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

க்ருதா சாஸ்த்ர அனுகா புத்தி: 

மா பூத் தஸ்ய கதாசன |

சத்யசந்த: சதாம் ஸ்ரேஷ்ட

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம்

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who do not have resolve to follow the vedic texts.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால், 

வேத சாஸ்திரம் வழிகாட்டும் தர்மத்தை கடைபிடிக்காதவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


प्रेष्यम् पापीयसाम् यातु 

सूर्यम् च प्रति मेहतु |

हन्तु पादेन गाम् सुप्ताम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

ப்ரேஸ்யம் பாபியசாம் யாது

ஸூர்யம் ச ப்ரதி மேஹது |

ஹந்து பாதேன காம் சுப்தாம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let be myself become the slave of the evils.  

let the same hell reach me, which is received by those, who urinate in the direction of the sun.

let the same hell reach me, which is received by those, who kicks a sleeping cow with his foot.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பாபிகள் சொல்லும் வேலையை செய்யும் அடிமையாக நான் போவேனாக !

சூரியன் இருக்கும் திசை பார்த்து மலம் மூத்திரம் செய்பவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

தூங்கி கொண்டு இருக்கும் பசு மாட்டை காலால் எட்டி உதைப்பவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !





कारयित्वा महत् कर्म 

भर्ता भृत्यम् अनर्थकम् |

अधर्मः यो अस्य सो अस्याः तु 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

காரயித்வா மஹத் கர்ம

பர்தா ப்ருத்யம் அனர்தகம் |

அதர்ம: யோ அஸ்ய ஸோ அஸ்யா: து 

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who compels his employees in evil deeds.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால், 

தனக்கு கீழே வேலை பார்ப்பவர்களை பாவ காரியங்கள் செய்ய தூண்டுபவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


परिपालय मानस्य 

राज्ञो भूतानि पुत्रवत् |

ततः तु द्रुह्यताम् पापम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

பரிபாலய மானஸ்ய 

ராஞோ பூதானி புத்ரவத் |

தத: து த்ருஹ்யதாம் பாபம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who seek to harm a king who protects his people as if they are his own children.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தன் மக்களை தன் பிள்ளைகள் போல காக்கும் அரசனை கொலை செய்பவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


बलि षड् भागम् उद्धृत्य 

नृपस्य अरक्षतः प्रजाः |

अधर्मः यो अस्य सो अस्य अस्तु 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

பலி ஷட் பாகம் உத்-த்ருத்ய

ந்ரூபஸ்ய அரக்ஷத: ப்ரஜா: |

அதர்ம: யோ அஸ்ய ஸோ அஸ்ய அஸ்து

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who takes the sixth part of the revenue of his people, but fails to protect them.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பொது மக்களின் வருமானத்தில் 6ல் ஒரு பங்கை தனக்கு வாங்கிக்கொண்டு, அவர்களை காக்காமல் இருக்கும் அரசன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


संश्रुत्य च तपस्विभ्यः 

सत्रे वै यज्ञ दक्षिणाम् |

ताम् विप्रलपताम् पापम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

ஸம்ஸ்ருத்ய ச தபஸ்விப்ய:

சத்ரே வை யஞ தக்ஷிணாம் |

தாம் விப்ரலபதாம் பாபம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest,  

let the same hell reach me, which is received by those, who do not offer the promised donation to vedic pandits in vedic rituals.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

வைதீகனுக்கு கொடுக்க ஒப்புக்கொண்ட தானத்தை கொடுக்காமல் ஏமாற்றுபவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


हस्ति अश्व रथ सम्बाधे 

युद्धे शस्त्र समाकुले |

मा स्म कार्षीत् सताम् धर्मम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

ஹஸ்தி அஸ்வ ரத ஸம்பாதே

யுத்தே சஸ்த்ர ஸமாகுலே |

மா ஸ்ம கார்ஷீத் ஸதாம் தர்மம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who fails to observe the code of warfare followed by the virtuous in a battle abundantly provided with elephants horses chariots weapons and men.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பெரிய யானை படை, குதிரை படை, போர் வீரர்கள் இருந்தாலும் தர்மப்படி போர் செய்யாமல், அதர்ம போர் செய்பவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


उपदिष्टम् सुसूक्ष्म अर्थम् 

शास्त्रम् यत्नेन धीमता |

स नाशयतु दुष्ट आत्मा 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

உபதிஷ்டம் சுஸூக்ஷ்ம அர்தம்

சாஸ்த்ரம் யத்னேன தீமதா |

ஸ நாசயது துஷ்ட ஆத்மா

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest,  

let the same hell reach me, which is received by those, who forget the subtle meanings of the scriptures taught with care by a wise teacher.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

குருநாதர் கவனத்தோடு, அர்த்தத்துடன் சொல்லி கொடுத்த உபதேசத்தை மறப்பவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


मा च तम् व्यूढबाह्वंसम् 

चन्द्रार्कसम्तेजनम् |

द्राक्षीद्राज्यस्थमासीनम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

மா ச தம் வ்யூட பாஹ்வம்சம்

சந்த்ரார்க சம்-தேஜனம் |

த்ராக்ஷீத் ராஜ்யஸ்தம் ஆஸீனம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let me not get the fortune of seeing that Rama having large arms and broad shoulders radiant as the sun and the moon and seated on a throne.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

சூரிய சந்திரன் போல நீண்ட புஜங்கள் உடைய ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து கொண்டு அரசாளும் காட்சியை பார்க்கும் பாக்கியம் அற்றவனாக நான் போவேனாக!


पायसम् कृसरम् चागम् 

वृथा सो अश्नातु निर्घृणः |

गुरूमः च अपि अवजानातु 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

பாயஸம் க்ருஸரம் ஸாகம்

வ்ருதா ஸோ அஸ்னாது நிர்க்ருண: |

குரூம: ச அபி அவஜானாது

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who excessively, unnecessarily consumes milk and meat,

let the same hell reach me, which is received by those, who insult his guru.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால், 

அதிகமாகவோ, அநாவசியமாகவோ பசும்பாலை, மாமிசத்தை உண்பவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

தன் குருநாதரை அவமானம் செய்பவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!


गाश्च स्पृशतु पादेन 

गुरून् परिवदेत्स्वयम् |

मित्रे द्रुह्येत सोऽत्यन्तम् 

यस्यार्योऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

கா: ச ஸ்ப்ருஸது பாதேன

குரூன் பரிவதேத் ஸ்வயம் |

மித்ரேத் ருஹ்யேத ஸோ அந்யதாம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who kick the cows, 

let the same hell reach me, which is received by those, who defame/abuse his guru, 

let the same hell reach me, which is received by those, who cheats his own friend.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தன் குருநாதரை தாழ்த்தி பேசுபவன், மாட்டை காலால் உதைப்பவன், நண்பனை ஏமாற்றுபவன், எந்த நரகங்களை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !


विश्वासात्कथितम् किंचित्

परिवादम् मिथः क्वचित् |

विवृणोतु स दुष्टात्मा 

यस्यार्योओऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

விச்வாஸத் கதிதம் கிஞ்சித்

பரிவாதம் மித: க்வசித் |

விவ்ருணோது ஸ துஷ்டாத்மா

யஸ்ய ஆர்யோ ஓ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம்

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who reveals little abusing words about others spoken occasionally in secret trusting him.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தனிமையில் மற்றொருவரின் தவறை பற்றி சொன்னதை கேட்டு, வெளியே சொல்பவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !


अकर्ता ह्यकृतज्ञश्च 

त्यक्तात्मा निरपत्रपः |

लोके भवतु विद्वेष्यो 

यस्यार्योऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

அகர்தா ஹி அக்ருதஞ: ச

த்யக்த ஆத்மா நிரபத்ரப: |

லோகே பவது வித்வேஷ்யோ

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest,  

let the same hell reach me, which is received by those, who is a non doer for his/her own duty, an ungrateful person; a desperate man, the one who has abandoned shame and the one who is worthy of hate

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,, 

தனக்கு விதிக்கப்பட்ட காரியத்தை செய்யாதவன், நன்றியற்றவன், அவநம்பிக்கையான மனிதன், அவமானத்தை கைவிட்டவன், வெறுக்கத் தகுதியானவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !


पुत्रैः दारैः च भृत्यैः च 

स्व गृहे परिवारितः |

स एको मृष्टम् अश्नातु 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

புத்ரை: தாரை: ச ப்ருத்யை: ச 

ஸ்வ க்ருஹே பரிவாரித: |

ஸ ஏகோ ம்ருஷ்டம் அஸ்னாது

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம்

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who consumes delicious food for himself alone when he is surrounded by his sons, wife and servants in his house.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

வீட்டில் பிள்ளைகள், மனைவி, வேலைக்காரர்கள் இருந்தும், இருக்கும் உணவை தான் மட்டுமே சாப்பிடுபவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !





अप्राप्य सदृशान् दारान्

अनपत्यः प्रमीयताम् |

अनवाप्य क्रियाम् धर्म्याम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

அப்ராப்ய ஸத்ருசான் தாரான்

அனபத்ய: ப்ரமீயதாம் |

அனவாப்ய க்ரியாம் தர்ம்யாம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who die without having a child, or child who do not fulfilling his religious duties.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தனக்கு ஈம காரியங்கள் செய்ய ஆளில்லாமல் மரணிப்பவர்கள், எந்த நரகத்தை அடைவார்களோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !


मात्मनः सम्ततिम् द्राक्षीत्

स्वेषु दारेषु दुःखितः |

आयुः समग्रमप्राप्य 

यस्यार्योऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

மாத்மன: சம்ததிம் த்ராக்ஷீத்

ஸ்வேஷு தாரேஷு துஃகித: |

ஆயு: சமக்ரம் அப்ராப்ய

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let myself be not blessed with a child, and in distress, may not get a full long life to live.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால், 

எனக்கு பிள்ளைகள் பிறக்காமல் போகட்டும். மேலும், கஷ்ட காலங்களை தாங்கும் சக்தி இல்லாமல், நீண்ட காலம் வாழ ஆயுசு இருந்தும், அல்ப ஆயுசாக என் உயிர் போகட்டும்.


राज स्त्री बाल वृद्धानाम् 

वधे यत् पापम् उच्यते |

भृत्य त्यागे च यत् पापम् 

तत् पापम् प्रतिपद्यताम् ||

- वाल्मीकि रामयाण 

ராஜ ஸ்திரீ பால வ்ருத்தானாம்

வதே யத் பாபம் உச்யதே |

ப்ருத்ய த்யாகே ச யத் பாபம்

தத் பாபம் ப்ரதி பத்யதாம் ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who killed a king or a women or his child or an aged person or abandon his dependents.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

அரசனை கொலை செய்தவன், தன் பிள்ளையை கொலை செய்தவன், பெண்ணை கொலை செய்தவன், வயதானவர்களை கொலை செய்தவன், தன்னை நம்பி வாழ்பவர்களை கை விட்டவன் எந்த நரகங்களை அடைவார்களோ, அந்த நரகங்களை நான் அடைவேனாக !


लाक्षया मधुमांसेन 

लोहेन च विषेण च |

सदैव बिभृयाद्भृत्यान् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

லாக்ஷ்யா மது மாம்சேன

லொஹேன ச விசேண ச |

சதைவ பிப்ருயாத் ப்ருத்யான்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who encourages meat, liquor, drug or poisonous materials to his wife, children and other dependents/employees.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தன் பிள்ளைகளுக்கோ, மனைவிக்கோ, தனக்கு கீழ் வேலை பார்ப்பவனுக்கோ மது மாமிசம் மற்றும் விஷ போதை பொருட்கள் கொடுத்து உற்சாகப்படுத்துபவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !


सम्ग्रामे समुपोढे स 

शत्रुपक्ष्भयम्करे |

पलायामानो वध्येत 

यस्यार्योऽनुमे गतः ||

- वाल्मीकि रामयाण 

சம்கிராமே சமுபோடே ஸ

சத்ரு பக்ஷ பயம் கரே |

பலாயாமானோ வத்யேத

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who gets killed in the battle field while he tries to escape from the battle in a cowardice way.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

போர் களத்தில் எதிரியை கண்டு பயந்து ஓடி மரணத்தை சந்தித்தவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !


कपालपाणिः पृथिवीम् 

अटताम् चीरसम्वृतः |

भिक्समाणो यथोन्मत्तो 

यस्यार्योऽनुमते गतह् ||

- वाल्मीकि रामयाण 

கபால பாணி: ப்ருத்வீம்

அடதாம் சீர சம்வ்ருத: |

பிக்ஷ மாணோ யதோன் மத்தோ

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let be myself wander like a mad man with a skull begging bowl in the hand, wearing tree bark.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பைத்தியகாரனை போல, மரவுரி அணிந்து கொண்டு, கையில் மண்டை ஓட்டையையே பாத்திரமாக எடுத்து கொண்டு பிச்சை எடுக்கும் படி, நான் வாழ்வேனாக!


पाने प्रसक्तो भवतु 

स्त्रीष्वक्षेषु च नित्यशः |

काम्क्रोधाभिभूतस्तु 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

பானே ப்ரஸக்தோ பவது

ஸ்திரீஷு அக்ஷேஸு ச நித்யஸ: |

காம க்ரோத அபி பூதஸ்து

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who are drug addict, womanizer and a gambler and who don't have control over infatuation and anger.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பெண் மோகத்தில் விழுந்தவன், மதுவுக்கு அடிமையானவன், சூதாடி, கோபத்தை கட்டுப்படுத்தாதவன் எந்த நரகங்களை அடைவானோ, அந்த நரகங்களை நான் அடைவேனாக !


यस्य धर्मे मनो भूयाद्

अधर्मम् स निषेवताम् |

अपात्रवर्षी भवतु 

यस्यार्योऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

யஸ்ய தர்மே மனோ பூயாத்

அதர்மம் ச நிஷேவதாம் |

அபாத்ர வர்ஷீ பவது

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம்

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who is not interested to know about dharma, but interested in doing adharma and who distributes gifts for the undeserving people.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தர்மம் எது என்று தெரியாமல், அதர்மத்தில் நாட்டம் மிகுந்து, தானம் வாங்க தகுதி இல்லாதவர்களுக்கு தானம் செய்பவன் எந்த நரகங்களை அடைவானோ, அந்த நரகங்களை நான் அடைவேனாக !


संचितान्यस्य वित्तानि 

विविधानि सहस्रशः |

दस्युभिर्विप्रलुप्यन्ताम् 

यश्यार्योऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

சஞ்சிதானி அஸ்ய வித்தானி

விவிதானி சஹஸ்ரஸ: |

தஸ்யுபி: விப்ர லுப்யன்தாம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same situation reach me, of those whose accumulated huge wealth in thousand but snatched away by robbers.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

செல்வத்தை கோடி கோடியாக சேர்த்தவன் கடைசியில் அதை திருடனிடம் இழப்பது போல, நான் ஆவேனாக !


उभे संध्ये शयानस्य 

यत् पापम् परिकल्प्यते |

तच् च पापम् भवेत् तस्य 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

உபே சந்த்யே சயானஸ்ய

யத் பாபம் பரிகல்பதே |

தச் ச பாபம் பவேத் தஸ்ய

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம்

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who sleeps at the sandhya time (at sun rise and at sun set).

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால், 

சந்தியா காலத்தில் தூங்குபவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !


यद् अग्नि दायके पापम् 

यत् पापम् गुरु तल्पगे |

मित्र द्रोहे च यत् पापम् 

तत् पापम् प्रतिपद्यताम् ||

- वाल्मीकि रामयाण 

யத் அக்னி தாயகே பாபம்

யத் பாபம் குரு தல்பகே |

மித்ர த்ரோஹே ச யத் பாபம்

தத் பாபம் ப்ரதி பத்யதாம் ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who burns the houses unnecessarily and who violates his boundary to rape elderly women or violates his guru's bed.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

வீட்டுக்கு தீ வைப்பவன், தன்னை விட வயதில் மூத்த பெண்ணையோ/குரு பத்னியையோ கெடுப்பவன், எந்த நரகத்துக்கு அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !


देवतानाम् पितृऋणाम् च 

माता पित्रोस् तथैव च |

मा स्म कार्षीत् स शुश्रूषाम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

தேவதானாம் பித்ரு ருணாம் ச

மாதா பித்ரோஸ் ததைவ ச |

மா ஸ்ம கார்ஷீத் ச ஸுஷ்ரூஷாம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம்

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who have not done his obligations to his parents and sires.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தேவ கடனையும், திவசம் போன்ற பித்ரு கடனையும் அடைக்காதவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !





सताम् लोकात् सताम् कीर्त्याः

सज् जुष्टात् कर्मणः तथा |

भ्रश्यतु क्षिप्रम् अद्य एव

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

சதாம் லோகாத் சதாம் கீர்த்யா:

சாஜ் ஜுஸ்டாத் கர்மண: ததா |

ப்ரஸ்யது க்ஷிப்ரம் அத்ய ஏவ

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same situation reach me, who have fall from the glory and deeds of the cultured people.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பெரும் புகழோடு வாழ்ந்தவன், நல்லொழுக்கம் விட்டு, அவமானத்தை சந்தித்து அவமானப்படுவது போல, நான் ஆவேனாக !


अपास्य मातृशुश्रूषाम्

अनर्थे सोऽवतिष्ठताम् |

दीर्घबाहुर्महावक्षा 

यस्यार्योऽसुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

அபாஸ்ய மாத்ரு சுஸ்ரூஷாம்

அனர்த்தே ஸோ அவதிஷ்டதாம் |

தீர்க பாஹு: மஹா வக்ஷா

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest,  

let the same hell reach me, who have failed to give his service to his mother.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பெற்ற தாய்க்கு பணிவிடை செய்யாமல் இருப்பவன், எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை நான் அடைவேனாக !


बहुपुत्रो दरिद्रश्च 

ज्वररोगसमन्वितः |

स भूयात्सततक्लेशी 

यस्यार्योऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

பஹு புத்ரோ தரித்ர: ச

ஜ்வர ரோக சமன்வித: |

ஸ பூயாத் சதத க்லேசீ

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same situation reach me, who possess many dependents (children) but without food or wealth resources, affected with fever and disease and be forever in distress 

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

அதிக பிள்ளைகள் பெற்று, தரித்திரத்தால் துன்பப்பட்டு, நோய்களால் அவதிப்படுபவன்  எந்த துன்பத்தை அனுபவிப்பானோ, அதை அனுபவிப்பேனாக !


आशामाशम् समानानाम् 

दीनानामूर्ध्वचक्षुषाम् |

आर्थिनाम् वितथाम् कुर्याद् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

ஆசாமாசம் சமானானாம்

தீனானாம் ஊர்த்வ சக்ஷுஷாம் |

ஆர்தினாம் விததாம் குர்யாத்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: || 

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who stops the donations offered to those who seek lifting their eyes towards the giver with great expectation.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

கொடுக்கும் நிலையில் இருந்தும், தனக்கு உதவி செய்வாரா? என்று எதிர்பார்ப்பவனுக்கு உதவி செய்யாமல் இருப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


मायया रमताम् नित्यम् 

परुषः पिशुनोऽशुचिः |

राज्ज़्नो भीत स्त्वधर्मात्मा

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

மாயயா ரமதாம் நித்யம்

பருஷ: பிசுனோ அஸுசி: |

ராஜ்ஜ்னோ பீதஸ்த்வ தர்மாத்மா    

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: || 

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who is cruel, conspires and do back bite the king.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

அரசனுக்கு எதிராக சதி வேலை செய்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


ऋतुस्नाताम् सतीम् भार्याम्

ऋतुकालानुरोधिनीम् |

अतिवर्तेत दुष्टात्मा 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

ருதுஸ்நாதாம் ஸதீம் பார்யாம்

ருது கால: அனுரோதினீம் | 

அதிவர்ததே துஷ்டாத்மா 

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who incur the sin of ignoring his chaste wife, who having bathed after her course of menstruation. approaches him for union having regard for the season favorable for procreation.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

மாதவிடாய் காலம் முடிந்து, தன் கணவன் மூலமாக பிள்ளை பெற்று கொள்ள வேண்டும் என்று வரும் மனைவியை புறக்கணிப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


धर्मदारान् परित्यज्य 

परदारान्नि षेवताम् |

त्यक्तधर्मरतिर्मूढो

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

தர்ம தாரான் பரித்யஜ்ய 

பரி தாரானி ஷேவதாம் | 

த்யக்த தர்ம ரதி: மூடோ 

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who has sex with other men's wife and forsaken his own wife.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பிறர் மனைவியிடம் உறவு கொண்டு, தன் மனைவியை புறக்கணிப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


विप्रलुप्त प्रजातस्य 

दुष्कृतम् ब्राह्मणस्य यत् |

तदेव प्रतिपद्येत

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

விப்ரலுப்த ப்ரஜாதஸ்ய    

துஷ்க்ருதம் ப்ராஹ்மணஸ்ய யத் | 

ததேவ ப்ரதிபத்யேத 

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those priest, who is considered childless even though he gets children who is not brought up by him in righteous and cultured way.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

ஒரு பிராம்மணன் தன் பிள்ளையை ஒழுக்கமுள்ளவனாகவும் தர்மத்தில் இருப்பவனாகவும் வளர்க்காமல் இருந்தால், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


पानीयदूषके पापम् 

तथैव विषदायके |

यत्तदेकः स लभताम्

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

பானீய தூஷகே பாபம்

ததைவ விஷ தாயகே |

யத்தத் ஏக: ஸ லபாதாம்    

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who pollutes the drinking water and those who administers poison to others.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

குடிக்கும் ஜலத்தை மாசு படுத்துபவன், அடுத்தவனுக்கு விஷம் கொடுப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


ब्राह्मणायोद्यताम् पूजाम् 

विहन्तु कलुषेन्द्रियः |

बालवत्साम् च गाम् दोग्दु

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

ப்ராஹ்மணா யோத்யதாம் பூஜாம்

விஹந்து கலுஷ இந்த்ரிய: |

பால வத்ஸாம் ச காம் தோக்து 

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who spoil the homage of a priest, and those who milk a cow having a young calf (new calf born < 10 days)

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

ப்ராம்மணனுக்கு கிடைக்க வேண்டியதை கெடுப்பவன், 10 நாள் கூட ஆகாத கன்றுவுக்கு கொடுக்காமல், தாய் பசுவின் பாலை கறப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


तृष्णार्तम् सति पानीये 

विप्रलम्भेन योजयेत् |

लभेत तस्य यत्पापम्

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

த்ருஷ்ணார்தம் ஸதி பானீயே  

விப்ர லம்பேன யோஜயேத் |

லபேத தஸ்ய யத் பாபம் 

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who disappoints a person oppressed with thirst, even though water was available.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தாகம் என்று வந்தவனுக்கு, தண்ணீர் இருந்தும் கொடுக்க மறுத்தவனுக்கு, எந்த நரகம் கிடைக்குமோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


भक्त्या विवदमानेषु 

मार्गमाश्रित्य पश्यतः |

तस्य पापेन युज्येत

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

பக்த்யா விவத மானேஷு

மார்கம் ஆஸ்ரித்ய பஸ்யத: |

தஸ்ய பாபேன யுஜ்யேத

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who while standing on the road, merely witnesses a dispute between two divided groups without trying to make peace between them.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

இரு தரப்புகள் சண்டை போடுவதை பார்த்தும், சண்டையை விலக்கி சமாதானம் செய்யாமல் பார்த்து கொண்டே இருப்பவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !


विहीनाम् पति पुत्राभ्याम्

कौसल्याम् पार्थिव आत्मजः |

एवम् आश्वसयन्न् एव 

दुह्ख आर्तः निपपात ह ||

- वाल्मीकि रामयाण

விஹீனாம் பதி புத்ராப்யாம்

கௌசல்யாம் பார்திவ ஆத்மஜ: |

ஏவம் ஆஸ்வசயன் ந ஏவ 

துஹ்க ஆர்த: நிபபாத ஹ ||

- வால்மீகி ராமாயணம் 

Thus counseling Kausalya, who was devoid of her husband and son, the prince Bharata fell down finally unconscious, depressed with anguish.

தனது கணவரையும், மகனையும் இழந்து சோகத்தில் தவிக்கும்  கௌசல்யா மாதாவிடம், வேதனையுடன் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பரதன் இவ்வாறு பேசி விட்டு, இறுதியாக மூர்ச்சையாகிவிட்டார்.


ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால், 

1 வேத சாஸ்திரம் வழிகாட்டும் தர்மத்தை கடைபிடிக்காதவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

2 பாபிகள் சொல்லும் வேலையை செய்யும் அடிமையாக நான் போவேனாக !

3 சூரியன் இருக்கும் திசை பார்த்து மலம் மூத்திரம் செய்பவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

4 தூங்கி கொண்டு இருக்கும் பசு மாட்டை காலால் எட்டி உதைப்பவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

5 தனக்கு கீழே வேலை பார்ப்பவர்களை பாவ காரியங்கள் செய்ய தூண்டுபவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

6 தன் மக்களை தன் பிள்ளைகள் போல காக்கும் அரசனை கொலை செய்பவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

7 பொது மக்களின் வருமானத்தில் 6ல் ஒரு பங்கை தனக்கு வாங்கிக்கொண்டு, அவர்களை காக்காமல் இருக்கும் அரசன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

8 வைதீகனுக்கு கொடுக்க ஒப்புக்கொண்ட தானத்தை கொடுக்காமல் ஏமாற்றுபவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

9 பெரிய யானை படை, குதிரை படை, போர் வீரர்கள் இருந்தாலும் தர்மப்படி போர் செய்யாமல், அதர்ம போர் செய்பவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

10 குருநாதர் கவனத்தோடு, அர்த்தத்துடன் சொல்லி கொடுத்த உபதேசத்தை மறப்பவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

11 சூரிய சந்திரன் போல நீண்ட புஜங்கள் உடைய ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து கொண்டு அரசாளும் காட்சியை பார்க்கும் பாக்கியம் அற்றவனாக நான் போவேனாக!

12 அதிகமாகவோ, அநாவசியமாகவோ பசும்பாலை, மாமிசத்தை உண்பவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

13 தன் குருநாதரை அவமானம் செய்பவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

14 தன் குருநாதரை தாழ்த்தி பேசுபவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

15 மாட்டை காலால் உதைப்பவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

16 நண்பனை ஏமாற்றுபவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

17 தனிமையில் மற்றொருவரின் தவறை பற்றி சொன்னதை கேட்டு, வெளியே சொல்பவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

18 தனக்கு விதிக்கப்பட்ட காரியத்தை செய்யாதவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

19 நன்றியற்றவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

20 அவநம்பிக்கையான மனிதன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

21 அவமானத்தை கைவிட்டவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

22 வெறுக்கத் தகுதியானவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

23 வீட்டில் பிள்ளைகள், மனைவி, வேலைக்காரர்கள் இருந்தும், இருக்கும் உணவை தான் மட்டுமே சாப்பிடுபவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

24 தனக்கு ஈம காரியங்கள் செய்ய ஆளில்லாமல் மரணிப்பவர்கள், எந்த நரகத்தை அடைவார்களோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

25 எனக்கு பிள்ளைகள் பிறக்காமல் போகட்டும். மேலும், கஷ்ட காலங்களை தாங்கும் சக்தி இல்லாமல், நீண்ட காலம் வாழ ஆயுசு இருந்தும், அல்ப ஆயுசாக என் உயிர் போகட்டும்.

26 அரசனை கொலை செய்தவன், தன் பிள்ளையை கொலை செய்தவன், பெண்ணை கொலை செய்தவன், வயதானவர்களை கொலை செய்தவன், தன்னை நம்பி வாழ்பவர்களை கை விட்டவன் எந்த நரகங்களை அடைவார்களோ, அந்த நரகங்களை நான் அடைவேனாக !

27 தன் பிள்ளைகளுக்கோ, மனைவிக்கோ, தனக்கு கீழ் வேலை பார்ப்பவனுக்கோ மது மாமிசம் மற்றும் விஷ போதை பொருட்கள் கொடுத்து உற்சாகப்படுத்துபவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

28 போர் களத்தில் எதிரியை கண்டு பயந்து ஓடி மரணத்தை சந்தித்தவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

பைத்தியகாரனை போல, மரவுரி அணிந்து கொண்டு, கையில் மண்டை ஓட்டையையே பாத்திரமாக எடுத்து கொண்டு பிச்சை எடுக்கும் படி, நான் வாழ்வேனாக!

29 பெண் மோகத்தில் விழுந்தவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

30 மதுவுக்கு அடிமையானவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

31 சூதாடி, எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

32 கோபத்தை கட்டுப்படுத்தாதவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

33 தர்மம் எது என்று தெரியாமல், அதர்மத்தில் நாட்டம் மிகுந்து, தானம் வாங்க தகுதி இல்லாதவர்களுக்கு தானம் செய்பவன் எந்த நரகங்களை அடைவானோ, அந்த நரகங்களை நான் அடைவேனாக !

34 செல்வத்தை கோடி கோடியாக சேர்த்தவன் கடைசியில் அதை திருடனிடம் இழப்பது போல, நான் ஆவேனாக !

35 சந்தியா காலத்தில் தூங்குபவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

36 வீட்டுக்கு தீ வைப்பவன், தன்னை விட வயதில் மூத்த பெண்ணையோ/குரு பத்னியையோ கெடுப்பவன், எந்த நரகத்துக்கு அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

37 தேவ கடனையும், திவசம் போன்ற பித்ரு கடனையும் அடைக்காதவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

38 பெரும் புகழோடு வாழ்ந்தவன், நல்லொழுக்கம் விட்டு, அவமானத்தை சந்தித்து அவமானப்படுவது போல, நான் ஆவேனாக !

39 பெற்ற தாய்க்கு பணிவிடை செய்யாமல் இருப்பவன், எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை நான் அடைவேனாக !

40 அதிக பிள்ளைகள் பெற்று, தரித்திரத்தால் துன்பப்பட்டு, நோய்களால் அவதிப்படுபவன்  எந்த துன்பத்தை அனுபவிப்பானோ, அதை அனுபவிப்பேனாக !

41 கொடுக்கும் நிலையில் இருந்தும், தனக்கு உதவி செய்வாரா என்று எதிர்பார்ப்பவனுக்கு உதவி செய்யாமல் இருப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

42 அரசனுக்கு எதிராக சதி வேலை செய்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

43 மாதவிடாய் காலம் முடிந்து, தன் கணவன் மூலமாக பிள்ளை பெற்று கொள்ள வேண்டும் என்று வரும் மனைவியை புறக்கணிப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

44 பிறர் மனைவியிடம் உறவு கொண்டு, தன் மனைவியை புறக்கணிப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

45 ஒரு பிராம்மணன் தன் பிள்ளையை ஒழுக்கமுள்ளவனாகவும் தர்மத்தில் இருப்பவனாகவும் வளர்க்காமல் இருந்தால், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

46 குடிக்கும் ஜலத்தை மாசு படுத்துபவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

47 அடுத்தவனுக்கு விஷம் கொடுப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

48 ப்ராம்மணனுக்கு கிடைக்க வேண்டியதை கெடுப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

49 10 நாள் கூட ஆகாத கன்றுவுக்கு கொடுக்காமல், தாய் பசுவின் பாலை கறப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

50 தாகம் என்று வந்தவனுக்கு, தண்ணீர் இருந்தும் கொடுக்க மறுத்தவனுக்கு, எந்த நரகம் கிடைக்குமோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

51 இரு தரப்புகள் சண்டை போடுவதை பார்த்தும், சண்டையை விலக்கி சமாதானம் செய்யாமல் பார்த்து கொண்டே இருப்பவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

தனது கணவரையும், மகனையும் இழந்து சோகத்தில் தவிக்கும்  கௌசல்யா மாதாவிடம், வேதனையுடன் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பரதன் இவ்வாறு பேசி விட்டு, இறுதியாக மூர்ச்சையாகிவிட்டார்.