Followers

Search Here...

Showing posts with label ப்ரம்மா. Show all posts
Showing posts with label ப்ரம்மா. Show all posts

Saturday 20 May 2023

ப்ரம்மாவின் ஒரு பகல், பூமியில் எத்தனை வருடங்கள்? தேவலோகத்தில் எத்தனை வருடங்கள்? - அறிவோம் மனு ஸ்ம்ருதி

ப்ரம்மாவின் ஒரு பகல், பூமியில் எத்தனை வருடங்கள்? தேவலோகத்தில் எத்தனை வருடங்கள்?  

பூ: புவ: ஸுவ: மஹ: ஜன: தப: சத்ய: 

பூ: என்ற நமது பூலோகத்திற்கு மேல் புவர் (நக்ஷத்ரம்) லோகங்களுக்கு மேல், தேவர்கள் ஸுவ என்ற சொர்க்க லோகத்தில் வசிக்கின்றனர்.

அதற்கும் மேல் மஹ, ஜன, தப லோகங்களுக்கு மேல் ப்ரம்ம தேவன் சத்ய லோகத்தில் வசிக்கிறார்.


இப்பொழுது சத்ய லோகத்தில் இருக்கும் ப்ரம்ம தேவன் 50 வயது முடிந்து, 51வது வயதின் முதல் நாள் பகலை கழித்து கொண்டு இருக்கிறார்.


ப்ரம்மா, தன் ஒவ்வொரு நாளும் 71 சதுர் யுகங்களை ஆளும் 14 மனுக்களை பார்க்கிறார் . 

அவருடைய இன்றைய பொழுதில், 27 சதுர் யுகங்கள் முடிந்து விட்டது.

இப்பொழுது இவர் 28வது சதுர் யுகத்தை பார்த்து கொண்டு இருக்கிறார்.

இந்த சதுர் யுகத்தில் 3 யுகங்கள் (சத்ய, த்ரேதா, த்வாபர) முடிந்து விட்டது. 

4வது யுகம் "கலி யுகம்" நடந்து கொண்டு இருக்கிறது  மனிதர்களுக்கு  5000 பூலோக வருடங்கள் கலியுகத்தில் முடிந்து விட்டது.

पित्र्ये रात्र्यहनी मासः प्रविभागस्तु पक्षयोः ।

कर्मचेष्टास्वहः कृष्णः शुक्लः स्वप्नाय शर्वरी ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

பித்ருக்கள் வாழும் உலகத்தில் ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு மாத காலமாகும். 

இந்த 1 மாதத்தில், 

15 நாட்கள் கொண்ட தேய்பிறை கால சமயத்தில் (அமாவாசை வரை), பித்ருக்கள் கர்மானுஷ்டங்கள் செய்கின்றனர். இது அவர்களுக்கு பகல் பொழுது.

அடுத்த 15 நாட்கள் கொண்ட வளர்பிறை கால சமயத்தில் (பௌர்ணமி வரை), இரவு பொழுதாக இருப்பதால், உறங்குகின்றனர்.


ஒவ்வொரு மனிதனும், தன் பெற்றோரை நினைத்து கொண்டு, பித்ருக்கள் உறங்க போகும் முன், தன் கையால் எள், ஜலம் கொடுத்து தன் பெற்றோரை நினைத்து கொண்டு தர்ப்பணம் (திருப்தி) செய்கிறான்.

दैवे रात्र्यहनी वर्षं प्रविभाग: तयोः पुनः ।

अह: तत्रोदगयनं रात्रिः स्याद् दक्षिणायनम् ॥ 

- மனு ஸ்ம்ருதி (Manu Smriti)

(மனிதர்கள் வாழும்) பூலோகத்தில் ஒரு வருடம் என்பது, (சொர்க்க லோகத்தில் உள்ள) தேவர்களுக்கு பகலும், இரவும் சேர்ந்த ஒரு நாள் மட்டுமே.


தேவ லோகத்தில்:

  • தை (6-8AM), மாசி (8-10AM), பங்குனி (10AM-12Noon), 
  • சித்திரை (12Noon -2PM), வைகாசி (2PM -4PM), ஆனி (4PM -6PM)
என்ற 6 மாதங்கள் தேவலோகத்தில் ஒரு பகலாக  உள்ளது. இதற்கு உத்தராயணம் என்று பெயர்.

  • ஆடி (6PM -8PM), ஆவணி (8PM -10PM), புரட்டாசி (10PM -12AM), 
  • ஐப்பசி (12AM -2AM), கார்த்திகை (2AM -4AM), மார்கழி (4AM -6AM)
என்ற மற்றொரு 6 மாதங்கள், தேவ லோகத்தில் ஒரு இரவாக உள்ளது. இதற்கு தக்ஷிணாயணம் என்று பெயர்.

மார்கழி மாத காலத்தில் 18 நாள் மஹாபாரத யுத்தம் நடந்தது. 

யுத்தத்தில் 10வது நாள் பீஷ்மர் வீழ்ந்தார். 

உத்தராயணம் வரும் வரை உயிரை விட்டு விடாமல், யோகத்தில் இருந்து, தை மாதம் வந்ததும் (உத்தராயண காலம்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து "1000 நாமங்களால்" ஸ்துதி செய்து, அவர் முன்பாக தேகத்தை துறந்து மேலுலகம் சென்றார்.
ब्राह्मस्य तु क्षपाहस्य यत् प्रमाणं समासतः ।
एकैकशो युगानां तु क्रमशस्तन् निबोधत ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
(சத்ய லோகத்தில் இருக்கும்) பிரம்மாவுடைய பகல், இரவு கால கணக்கை, யுக அளவை சொல்கிறேன். கேளுங்கள்.

चत्वार्याहुः सहस्राणि वर्षाणां तत् कृतं युगम् ।
तस्य तावत् शती सन्ध्या सन्ध्यांशश्च तथाविधः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
4000 தேவ வருடங்கள் மேலும் 400 தேவ வருடங்கள் காலை, 400 தேவ வருடங்கள் மாலை சந்தியா காலங்களாக, மொத்தம் 4800 தேவ வருடங்கள் ஒரு க்ருத-யுகம் காலம்
इतरेषु ससन्ध्येषु ससन्ध्यांशेषु च त्रिषु ।
एकापायेन वर्तन्ते सहस्राणि शतानि च ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
இதில் 1000 வருடங்கள் குறைத்து,  100 வருடங்கள் ஒவ்வொரு சந்தியிலும் படிப்படியாக குறைய, மற்ற மூன்று யுகங்கள் காலத்தை அறியலாம். அதாவது,
  • 3600 தேவ வருடங்கள் ஒரு த்ரேதா-யுகம் காலம் = பூமியில் 3*4,32,000 வருடம்
  • 2400 தேவ வருடங்கள் ஒரு துவாபர-யுகம் காலம் = பூமியில் 2*4,32,000 வருடம்
  • 1200 தேவ வருடங்கள் ஒரு கலி-யுகம் காலம் = பூமியில் 4,32,000 வருடம் 

  • பூமியில் 360 நாட்கள் = பூமியில் வருடம் = தேவலோகத்தில் தேவ நாள்
  • பூமியில் 360 வருடம் = தேவலோகத்தில் 360 தேவநாள் = தேவலோகத்தில் தேவ வருடம்
  • பூமியில் 36,000 வருடம் = தேவலோகத்தில் 36,000 தேவ நாள் தேவலோகத்தில் 100 தேவ வருடம் (ஒரு இந்திரனின் ஆயுள்)
  • பூலோகத்தில் ஒரு கலி யுகம் = பூமியில் 4,32,000 வருடம் = தேவலோகத்தில் 4,32,000 தேவ நாள் = தேவலோகத்தில் 1200 தேவ வருடம் 12 இந்திரர்கள் ஆயுட் காலம்
  • பூலோகத்தில் 4 யுகம் சேர்த்து = பூமியில் 43,20,000 வருடம் = தேவலோகத்தில் 43,20,000 தேவ நாள் = தேவலோகத்தில் 12,000 தேவ வருடம் = தேவ லோகத்தில் 1 தேவ யுகம்  = 120 இந்திரர்கள் ஆயுட் காலம்
  • 71 * பூலோகத்தில் 4 யுகம் சேர்த்து = ஒரு மனுவின் ஆயுட் காலம் (மன்வந்தரம்)
यदेतत् परि-सङ्ख्यातमादावेव चतुर्युगम् ।
एतद् द्वादश साहस्रं देवानां युगम् उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)

இந்த 4 யுகங்கள் சேர்ந்தால், மொத்தம் 12000 (4800,3600,2400,1200) தேவ வருடங்கள் ஆகிறது.  (அதாவது 120 இந்திரர்கள் ஒரு சதுர் யுகத்தில் பதவிக்கு வருகின்றனர்)

दैविकानां युगानां तु सहस्रं परि-सङ्ख्यया ।
ब्राह्मम एकम् अहर्ज्ञेयं तावतीं रात्रिम् एव च ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
1000 முறை இப்படிப்பட்ட 12000 தேவ வருடங்கள் முடியும் போது (1,20,00,000 Deva Yug), அது சத்ய லோகத்தில் பிரம்மாவுக்கு ஒரு பகலாக இருக்கிறது. அதே கால அளவுக்கு பிரம்மாவுக்கு ஒரு இரவும் இருக்கிறது.

तद् वै युग सहस्रान्तं ब्राह्मं पुण्यम् अहर्विदुः ।
रात्रिं च तावतीम् एव ते अहोरात्र विदो जनाः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ப்ரம்மாவின் இந்த பகல் பொழுது "புண்ய காலம்" என்று சொல்கிறோம். ப்ரம்மாவின் இரவு பொழுதும் "புண்ய இரவு" என்று சொல்கிறோம். ப்ரம்மாவின் இரவு பொழுதிலும் அழியாமல் இருப்பவர்கள் "அஹோ ராத்திரிகள்" என்று செல்லப்படுகிறார்கள்.

तस्य सो अहर्निशस्यान्ते प्रसुप्तः प्रतिबुध्यते ।
प्रतिबुद्ध: च सृजति मनः सद् असद् आत्मकम् ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ப்ரம்மா தன்னுடைய இரவு காலத்தில் தூங்குவார். முடியும் தருவாயில் எழுந்திருப்பார். எழுந்த பிறகு, "ஸத் (soul) அஸத்தில் (nature) பிரவேசித்தபடியான  ரூபமான படைப்பை" மீண்டும் தொடங்குகிறார்.

मनः सृष्टिं विकुरुते चोद्यमानं सिसृक्षया ।
आकाशं जायते तस्मात् तस्य शब्दं गुणं विदुः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ப்ரம்மாவின் மனம், படைப்பை செய்ய ஏவப்பட்டு, ஆகாயத்தை படைத்தார். ஆகாயத்தில் "சப்தம்" (ஒலி) குணமாக அமைத்தார்.

आकाशात् तु विकुर्वाणात् सर्व-गन्धवहः शुचिः ।
बलवान् जायते वायुः स वै स्पर्शगुणो मतः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ஆகாயத்திலிருந்து வாசனைகளை கடத்தும், மிகவும் சுத்தமான, மஹா பலம் பொருந்திய வாயுவை (காற்று) படைத்தார். வாயுவில் "ஸ்பரிசம்" (தொடுதல்) கூடுதல் குணமாக அமைத்தார்.

वायो: अपि विकुर्वाणाद् विरोचिष्णु तमोनुदम् ।
ज्योति: उत्पद्यते भास्वत् तद् रूप गुणम् उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
வாயுவிலிருந்து பிரகாசத்தை ஏற்படுத்தும், இருட்டை போக்கடிக்கும் ஜோதியை (அக்னி)  படைத்தார். ஜோதியில் "உருவம்" (பார்த்தல்) கூடுதல் குணமாக அமைத்தார்.

ज्योतिषश्च विकुर्वाणाद् आपो रस गुणाः स्मृताः ।
अद्भ्यो गन्धगुणा भूमि: इत्येषा सृष्टि: आदितः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ஜோதியிலிருந்து (அக்னி) தண்ணீரை படைத்தார். தண்ணீரில் "ரசத்தை" (சுவை) கூடுதல் குணமாக அமைத்தார்.

यद् प्राग् द्वादश साहस्रम् उदितं दैविकं युगम् ।
तदेक सप्ततिगुणं मन्वन्तरम् इह उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
12,000 தேவ வருடங்கள் "ஒரு சதுர் யுகம்" என்று முன்பே சொல்லப்பட்டது. தேவ லோகத்தை பொறுத்தவரை "12,000 தேவ வருடங்கள், ஒரு தேவ யுகம்" என்று சொல்லப்படுகிறது.
71 தேவ யுகங்கள் (71 சதுர் யுகம் சேர்த்து), ஒரு மனுவின் ஆயுட் காலம் (மன்வந்தரம்) என்று சொல்லப்படுகிறது.

मन्वन्तराण्य सङ्ख्यानि सर्गः संहार एव च ।
क्रीडन् इव एतत् कुरुते परमेष्ठी पुनः पुनः ॥ 
- மனு ஸ்ம்ருதி (rule book)
எப்படி படைப்பும், சம்ஹாரமும் எண்ண முடியாததோ, அது போல, மன்வந்திரங்களும் எத்தனை முடிந்தது? எத்தனை நடக்க போகிறது? என்று எண்ண முடியாதபடி விளையாட்டாக ( லீலையாக) மீண்டும் மீண்டும் படைப்பு தொழிலை செய்து கொண்டே இருக்கிறார்


Thursday 8 October 2020

Ram Sloka by Brahma - பிரம்மதேவன் சொன்ன எளிதான "ராம ஸ்தோத்திரம்" - வால்மீகி ராமாயணம். நாமும் சொல்லலாம்...

பிரம்மதேவன் ப்ரத்யக்ஷமாகி, ராமபிரானை ஸ்தோத்திரம் செய்கிறார். அற்புதமான எளிதான ராம ஸ்தோத்திரம். 

நாமும் இந்த ஸ்தோத்திரத்தை, ராமபிரானுக்கு முன் சொல்லலாம்.  

வால்மீகி ராமாயணம் படித்த புண்ணியமும் நமக்கு கிடைக்கும். 

When Sitadevi entered the fire, in front of Rama, Brahma, Indra, Yama, Shiva, his Father appeared in front Rama, an incarnation of Supreme Narayana.

ஆத்மானம் மானுஷம் மன்யே 

ராமம் தசரதாத்மஜம் |

யோஹம் யஸ்ய யதஸ்சாஹம் 

பகவாம்ஸ் தத் அப்ரவீத் மே ||

- வால்மீகி ராமாயணம்

आत्मानं मानुषं मन्ये रामं दशरथात्मजम् |

योऽहं यस्य यतश् चाहं भगवांस् तद् ब्रवीतु मे ||

"நான் தசரத மஹாராஜனின் புத்திரன், நான் ஒரு மனிதன் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறேன். நான் யார்? யாருடையவன்? யாரிலிருந்து வந்தவன்? என்று நீங்களே சொல்லுங்கள்." என்றார் ராமபிரான்.

Looking at Brahma (Son of Narayana (Parabrahmam)), Rama says, 

"I 'think', i am a human, by the name Rama, the son of King Dasaratha. Hey Gracious Divinity! Tell me who am i really?"




இதி ப்ருவானம் காகுத்ஸ்தம்

ப்ரம்ம ப்ரம்ம விதாம் வர: |

அப்ரவீ ஸ்ருனு மே ராம 

சத்யம் சத்ய பராக்ரம ||

- வால்மீகி ராமாயணம்

इति ब्रुवाणं काकुत्स्थं ब्रह्मा ब्रह्म विदां वरः |

अब्रवीच्छृणु मे राम सत्यं सत्य पराक्रम ||

பரப்ரம்மத்தை அறிந்த ப்ரம்ம தேவன், ராமபிரான் கேட்டதும், பேசலானார், "பராக்கிரமசாலியான ஸ்ரீ ராமா! சத்தியத்தை சொல்கிறோம்.. கேளுங்கள்!" 

Hearing the words of Rama, Brahma (the creator), knower of parabrahmam (his creator), spoke with Rama permission. Brahma began to tell the truth of rama.

"Listen to my true word, O the truly brave lord!"




பவான் நாராயணோ தேவ: 

ஸ்ரீமான் சக்ராயுதோ விபு: | 

ஏக சங்கோ வரா ஹஸ்த்வம் 

பூதபவ்ய ஸபத்னஜித்: || 

- வால்மீகி ராமாயணம்

भवान् नारायणो देवः श्रीमां चक्रायुधो विभुः |  1

एक शृङ्गो वरा हस्त्वं भूत भव्य सपत्न जित् |  2

தாங்களே ஸ்ரீயபதி. தாங்களே கால சக்கரத்தை ஏந்தி இருக்கும் சாஷாத் பரம்பொருள் நாராயணன். 

ஒரு கையில் வேதத்தின் நாதத்தை குறிக்கும் சங்கத்தை வைத்து, தீய சக்திகளை ஒழிப்பவர் தாங்களே.

Rama ! You are the Lord Narayana himself the glorious god, who wields the discus.

Rama ! You are the Divine Boar with a single tusk, the conqueror of your past and future enemies

க்க்ஷரம் ப்ரம்ம சத்யம் ச 

மத்யே ச அந்தே ச ராகவ | 

லோகானாம் த்வம் பரோ தர்மோ 

விஸ்வக்சேனஸ் சதுர்புஜ: || 

- வால்மீகி ராமாயணம்

अक्षरं ब्रह्म सत्यं च मध्ये च अन्ते च राघव | 3

लोकानां त्वं परो धर्मो विष्वक्सेनश् चतुर्भुजः | 4

ராமா! தாங்களே என்றும் அழியாத பரப்ரம்மம்.

தாங்களே சத்யத்தின் ஆரம்பமாகவும், நடுவாகவும், முடிவாகவும் உள்ளீர்கள்.

தாங்களே உலகத்துக்கு தர்மத்தின் ரூபம். 

தாங்களே நான்கு கைகளுடைய விஸ்வக்சேனர்.

Rama ! You are ParaBrahmam, the imperishable, the Truth abiding in the middle as well as at the end of the universe. 

Rama ! You are the supreme righteousness of people, whose powers go everywhere. You are the four-armed Visvaksena

சார்ங்கதன்வா ஹ்ருஷிகேச: 

புருஷ: புருஷோத்தம: | 

அஜித: கங்கத்ருத விஷ்ணு: 

கிருஷ்ணஸ்சைவ ப்ருஹத் பல: || 

- வால்மீகி ராமாயணம்

शार्ङ्गधन्वा हृषीकेशः पुरुषः पुरुषोत्तमः | 5

अजितः खड्ग धृग् विष्णुः कृष्णश्चैव बृहद् बलः |  6

சாரங்கம் என்ற வில் எந்தியவர் தாங்கள். இந்திரியங்களுக்கு ஈசன் தாங்களே.

தாங்களே புருஷர்களில் புருஷோத்தமன். யாராலும் தோற்கடிக்க முடியாதவர் தாங்கள்.

கைகளில் கத்தி வைத்து இருப்பவர், எங்கும் வியாபித்து இருக்கும் விஷ்ணு தாங்களே! 

யாவரையும் கவர்ந்து இழுக்கக்கூடியவர் தாங்களே, மஹா பலசாலியும் தாங்களே!

Rama ! You are the wielder of a bow called Saranga, the lord of the senses, the supreme soul of the universe, the best of men, 

Rama ! You hold the invincible, the wielder of a sword named Nandaka, the all-pervader, the bestower of happiness to the earth and endowed with great might

சேனானீர் க்ராமனீஸ்ச த்வம் 

புத்தி: சத்ம் க்ஷமா தம: | 

ப்ரபவஸ்சாப்ய யஸ்ச த்வம் 

உபேந்த்ரோ மதுசூதன: || 

- வால்மீகி ராமாயணம்

सेनानीर् ग्रामणीश्च त्वं बुद्धिः सत्तं क्षमा दमः | 7

प्रभवश्चाप्य यश्च त्वम् उपेन्द्रो मधुसूदनः | 8

சேனைகளுக்கு அதிபதி தாங்கள். புலன்களை ரமிக்க செய்பவர் தாங்களே! 

புத்தியை தூண்டுபவர் தாங்களே! சத்வ குணத்துக்கு காரணமும் தாங்களே! 

பொறுமை என்ற குணத்துக்கும் காரணம் தாங்களே! பற்றற்ற குணத்துக்கும் காரணம் தாங்களே! ஆரம்பமும், முடிவும் தாங்களே! 

தாங்களே உபேந்திரன் என்ற பெயரில், தேவர்கள் கூட்டத்தில் இந்திரனுக்கு சகோதரனாகவும் இருக்கிறீர்கள். 

மது என்ற அரக்கனை அழித்தவரும் தாங்களே!

Rama ! You are the leader of the army and the village headman. You are the intellect. You are the endurance and the subduer of the senses. 

Rama ! You are the origin and the dissolution of all. You are the Upendra the Divine Dwarf (vamanaa), the younger brother of Indra. You are also the destroyer Madhu, the demon

இந்த்ர கர்மா மஹேந்திரஸ் த்வம் 

பத்மநாபோ ரனாந்த க்ருத் |

ரண்யம் சரணம் ச த்வாம் 

ஆஹுர் திவ்யா மஹர்ஷய: ||

- வால்மீகி ராமாயணம்

इन्द्र कर्मा महेन्द्रस् त्वं पद्मनाभो रणान्त कृत् | 9

शरण्यं शरणं च त्वाम् आहुर् दिव्या महर्षयः | 10

இந்திர தேவனை கொண்டு உங்கள் காரியங்களை தாங்களே செய்து கொள்கிறீர்கள்.

தாங்களே பத்மநாபன் என்று அறியப்படுகிறீர்கள்.

சரண் அடைந்த அனைவருக்கும், அடைக்கலம் தருபவர் தாங்களே என்று ரிஷிகளும் சொல்கின்றனர்!

Rama ! You perform action for Indra the lord of celestials, the Supreme Ruler, the one having a lotus in one's navel and who puts an end to all in battle. 

Rama ! the divine sages pronounce you to be fit to afford protection to all and the refuge for all.




சஹஸ்ர ஸ்ருங்கோ வேதாத்மா 

ஸதஜிஹ்வோ மஹர்ஷ: | 

- வால்மீகி ராமாயணம்

सहस्र शृङ्गो वेदात्मा शत जिह्वो महर्षभः | 11

ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இருக்கும் வேதம் பல வித ஒலிகளில், பல வித வழிகளில் உங்களையே அழைக்கின்றது.

Rama ! You are like a great Bull representing all Vedas, with hundred heads (rules) and thousand horns (precepts)

த்வம் த்ரயானாம் ஹி லோகானாம் 

ஆதிகர்தா ஸ்வயம் ப்ரபு: | 

ஸித்தானாம் அபி ஸாத்யானாம் 

ஆஸ்ரயஸ் சாஸி பூர்வஜ: ||

- வால்மீகி ராமாயணம்

त्वं त्रयाणां हि लोकानाम् आदिकर्ता स्वयं प्रभुः | 12

सिद्धानाम् अपि साध्यानाम्  आश्रयश्चासि पूर्वजः || 13

தாங்களே மூன்று உலகங்களையும் படைத்தவர். தாங்களே ப்ரபு. 

ஸித்தி அடைந்தவர்களுக்கும் லட்சியம் தாங்களே. 

மோக்ஷம் அடைய முயற்சி செய்பவர்களுக்கும் லட்சியம் தாங்களே! 

முதலில் இருந்தவரும் தாங்களே!

Rama ! You are the first creator of all, the three worlds, and the self constituted Lord of all. 

Rama ! You are the refuge and the forbear of Siddhas (a class of demi-gods endowed with mystic powers by virtue of their very birth) and Sadhyas (a class of celestial beings.)

த்வம் யஞ்யஸ்த்வம் வஷட்காரஸ்த்வம் 

ஓங்கார: பரந்தப: | 

ப்ரபவம் நிதனம் வா தே 

ந விது: கோ பவாநிதி || 

- வால்மீகி ராமாயணம்

त्वं यज्ञस्त्वं वषट्कारस्त्वम् ओङ्कारः परन्तप | 14

प्रभवं निधनं वा ते न विदुः को भवानिति | 15

யாகமும் தாங்களே!  வஸத்தும், ஓங்காரமும் தாங்களே! தவத்துக்கும் அப்பாற்ப்பட்டவர் தாங்கள். 

தங்களை ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவர் கிடையாது. 

தாங்களை யாருமே அறிந்து கொள்ளவும் முடியாது.

Rama ! You are the sacrificial performance. You are the sacred syllable 'Vashat' (on hearing which the Adhvaryu priest casts the oblation to a deity into the sacrificial fire). You are the mystic syllable 'OM'. You are higher than the highest. 

Rama ! People neither know your end nor your origin nor who you are in reality.

த்ருஷ்யசே சர்வ பூதேஷு

ப்ராஹ்மணேஷு ச கோஷு ச |

திக்ஷு சர்வாசு ககனே

பர்வதேஷு வனேஷு ச ||

- வால்மீகி ராமாயணம்

दृश्यसे सर्व भूतेषु ब्राह्मणेषु च गोषु च | 16

दिक्षु सर्वासु गगने पर्वतेषु वनेषु च | 17

தாங்களே எங்கும் அனைவரிடத்திலும் இருந்தாலும், ப்ரம்மத்தையே உபாசிக்கும் ப்ரம்மணர்களிடமும், பசுக்களிடமும், அனைத்து திசைகளிலும், ஆகாயத்திலும், மலைகளிலும், மரங்களிலும் குறிப்பாக தெரிகிறீர்கள்.

Rama ! You appear in all created beings in the cattle and in brahmanas. 

Rama ! You exist in all quarters, in the sky, in mountains and in rivers.

சஹஸ்ர சரண: ஸ்ரீமான் 

ஸதஷீர்ஷ: சஹஸ்ர த்ருக் | 

த்வம் தாரயசி பூதானி 

வசுதாம் ச ச-பர்வதாம் || 

- வால்மீகி ராமாயணம்

सहस्र चरणः श्रीमाञ् शतशीर्षः सहस्र धृक् | 18

त्वं धारयसि भूतानि वसुधां च सपर्वताम् | 19

ஆயிரம் கால்கள் உடையவர் தாங்களே! 

மஹாலக்ஷ்மி என்றும் உங்களுடனேயே இருப்பதால் தாங்கள் ஸ்ரீமானாகவே இருக்கிறீர்கள். 

ஆயிரம் முகங்களில் ஆயிரக்கணக்கான கண்கள் உடையவர் தாங்கள். பூமியை மலைகள் தாங்கி இருப்பது போல, தாங்களே எங்களை தாங்குகிறீர்கள்.

Rama ! With thousand feet, with hundred heads and with thousand eyes along with Lakshmi the goddess of wealth, You bear the earth with all its created beings along with its mountains.

அந்தே ப்ருதிவ்யா சலிலே 

த்ருஷ்யசே த்வம் மஹோரக: | 

த்ரீல்லோகான் தாராயன் ராம 

தேவ கந்தர்வ தானவான் || 

- வால்மீகி ராமாயணம்

अन्ते पृथिव्याः सलिले दृश्यसे त्वं महोरगः | 20

त्रीँल्लोकान् धारयन् नाम देव गन्धर्व दानवान् | 21

ஒரு பெரிய சர்பம் தன்னை சுருட்டி கொண்டு இருப்பது போல, லோகங்கள் ஸ்ருஷ்டி ஆகாத காலத்தில், தேவ கந்தர்வர்கள் உட்பட 14 லோகங்களையும் (பொதுவாக மேலுலகம், பூலோகம் , பாதாள லோகம் என்று மூன்று லோகம் என்று சொல்வோம்) சேர்த்து தனக்குள் அடக்கி கொண்டு, நீங்கள் மட்டுமே அன்று இருந்தீர்கள்.

O Rama! You appear as Sesha, a large serpent in water, at the earth's bottom, bearing the three worlds, gods, Gandharvas, the celestial musicians and the demons.


அஹம் தே ஹ்ருதயம் ராம 

ஜிஹ்வா தேவீ சரஸ்வதி | 

தேவா காத்ரேஷு ரோமானி 

நிர்மிதா ப்ரஹ்மண ப்ரபோ || 

- வால்மீகி ராமாயணம்

अहं ते हृदयं राम जिह्वा देवी सरस्वती | 22

देवा गात्रेषु लोमानि निर्मिता ब्रह्मणा प्रभो | 23

நானே உங்கள் இதயம். சரஸ்வதியே உங்கள் நாக்கு. தேவர்கள் உங்கள் தலை கேசம். 

ரூபமில்லாத நிலையில் ப்ரம்மமாக நீங்கள் இருக்கும் நிலையில் இப்படி தானே வேதம் உங்களை வர்ணிக்கிறது.

O Rama! I I am your heart. Saraswati, the goddess (of learning) is your tongue. 

O lord ! The demi0-gods (30 crore devas) are the hair on all your limbs.

நிமேசஸ்தே பவேத்ராத்ரி

ருன்மே ஷஸ்தே பவேத்திவா |

சம்ஸ்காராஸ்தே பவன் வேதா

ந தத்ஸதி த்வயா வினா ||

- வால்மீகி ராமாயணம்

निमेषस्तेऽ भवद्रात्रि रुन्मे षस्तेऽ भवद्दिवा | 24

संस्कारास्ते भवन्वेदा न तदस्ति त्वया विना | 25

நீங்கள் விழித்து இருந்தால், அதுவே பகல். நீங்கள் உறங்கினால், அதுவே இரவு. 

வேதங்கள் உங்களை பற்றியும், உங்கள் குணங்களை பற்றியும் தான் சொல்கிறது! நீங்கள் இல்லாமல் வேதமே இல்லை.

Rama ! Night has been recognized as the closing of your eye-lids and the day, as the opening of eye-lids. 

Rama ! The correct usages of your words are the Vedas. Without you, this visible universe or Veda does not exist

ஜகத்சர்வம் சரீரம் தே 

தைர்யம் தே வசுதாதலம் | 

அக்னி கோப: ப்ரஸாதஸ்தே 

சோம ஸ்ரீவத்ச லக்ஷன || 

- வால்மீகி ராமாயணம்

जगत्सर्वं शरीरं ते स्थैर्यम्ं ते वसुधा तलम् | 26

अग्निः कोपः प्रसादस्ते सोमः श्रीवत्स लक्षण | 27

அனைத்து உலகங்களும் உங்கள் சரீரம். 

இந்த பூமி உங்களின் தைரியத்தை குறிக்கிறது. 

அக்னி உங்கள் கோபம். 

நிலவு உங்கள் அணுகிரஹம், அதுவே உங்கள் ஸ்ரீவத்சம்.

Rama ! The entire cosmos is your body. The earth constitutes your firmness. 

Rama ! Fire is your anger. The moon constitutes your placidity. You are Lord Vishnu who bears the mark Srivatsa




த்வயா லோகாஸ்த்ரய: க்ராந்தா: 

புரானே விக்ரமைஸ்த்ரிபி: | 

மஹேந்த்ரஸ்ச க்ருதோ ராஜா 

பலிம் பத்த்வா மஹாசுரம் || 

- வால்மீகி ராமாயணம்

त्वया लोकास्त्रयः क्रान्ताः पुराणे विक्रमैस्त्रिभिः | 28

महेन्द्रश्च कृतो राजा बलिं बद्ध्वा महासुरम् | 29

நீங்களே புராண காலத்தில் மூன்று அடியால் பூலோகம் முதல் சத்ய லோகம் வரை பலி சக்கரவர்த்தியிடம் இருந்து மூன்று லோகங்களையும் கைப்பற்றி, இந்திர தேவனை மீண்டும் மகேந்திரன் ஆக்கினீர்கள்.

Rama ! In the past, the three worlds were occupied by you in your three strides, after binding the exceptionally formidable Bali, who captured the three worlds. Rama ! and you made Indra the king again.

சீதா லக்ஷ்மீர் பவான் விஷ்ணு 

தேவ: க்ருஷ்ண: ப்ரஜாபதி: | 

வதார்தம் ராவணஸ்யேஹ 

ப்ரவிஷ்டோ மானுஷீம் தனும் || 

- வால்மீகி ராமாயணம்

सीता लक्ष्मीर् भवान् विष्णुर्देवः कृष्णः प्रजापतिः | 30

वधार्थं रावणस्येह प्रविष्टो मानुषीं तनुम् | 31

சீதாதேவி சாக்ஷாத் மஹாலக்ஷ்மி. தாங்கள் சாக்ஷாத் மஹாவிஷ்ணு. 

நீங்கள் மனித ரூபத்தில் வந்தது ராவணனை வதம் செய்வதற்கே! 

Rama ! Sita is no other than Goddess Lakshmi (the divine consort of Lord Vishnu), while you are Lord Vishnu. You are having a shining dark-blue hue. You are the Lord of created beings.

Rama ! For the destruction of Ravana, you entered a human body here, on this earth.

ததிதம் ந: க்ருதம் கார்யம்

த்வயா தர்மப்ருதாம் வர|

நிஹதோ ராவணோ ராம

ப்ரஹ்ருஷ்டோ திவமாக்ரம ||

- வால்மீகி ராமாயணம்

तदिदं नः कृतं कार्यं त्वया धर्म भृतां वर | 32

निहतो रावणो राम प्रहृष्टो दिवमाक्रम | 33

ஓ தர்மத்தின் தலைவனே! உங்கள் காரியம் இனிதே நிறைவேறியது.

ராவணன் கொல்லப்பட்டுவிட்டான்.

நீங்கள் உங்களுடைய  விண்ணுலகத்திற்கு மகிழ்ச்சியோடு வாருங்கள்.

O Rama ! You are the foremost among the supporters of righteousness! The aforesaid purpose of ours has been fulfilled.

O Rama ! Ravana has been killed. Please Return to your divine abode, with a rejoice.

அமோகம் பல வீர்யம் தே 

அமோகஸ்தே பராக்ரம | 

அமோகம் தர்சனம் ராம 

ந ச மோக: ஸ்தவஸ்தவ || 

அமோகாஸ்தே பவிஷ்யந்தி 

பக்திமன் தஸ்ச யே நரா: || 

- வால்மீகி ராமாயணம்

अमोघं बल वीर्यं ते अमोघस्ते पराक्रमः | 34

अमोघास्ते भविष्यन्ति भक्ति मन्तश्च ये नराः | 35

உங்கள் வலிமையும் வீரமும் அமோகமானது.

உங்கள் நோக்கம் அமோகமானது.

உங்கள் மகிமை அமோகமானது.

உங்கள் பக்தர்கள் கூட ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள்.

O Lord! Unerring is your valour. Your exploits are never in vain. 

O Rama! Your blessed sight is powerful. The songs in praise of you never go in vain.

Rama ! Those humans who are full of devotion to you, will never be unsuccessful on this earth.

யே த்வாம் தேவம் த்ருவம் பக்தா: 

புராணம் புருஷோத்தமம் | 

ப்ராப்னுவந்தி சதா காமாந் 

இஹ லோகே பரத்ர ச || 

- வால்மீகி ராமாயணம்

ये त्वां देवं ध्रुवं भक्ताः पुराणं पुरुषोत्तमम् | 36

प्राप्नुवन्ति सदा कामान् इह लोके परत्र च | 37

ஆதி புருஷரான உங்களை சரணடைந்து பக்தி செய்பவர்கள் எவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரும், இக லோகத்தில் தான் விரும்பியது அனைத்தையும் அடைந்து, விண்ணுலகத்திலும் ஆனந்தத்தை பெறுகிறார்கள்.

O Rama ! You are the primeval and the eternal lord, belonging to ancient times and the Supreme Person. 

O Rama ! Those who are devoted to you, will forever attain their desired objects here as well as hereafter.

இமமார்ஷம் ஸ்தவம் நித்யம்

இதிஹாசம் புராதனம் |

யே நரா: கீர்த்தயிஷ்யந்தி

நாஸ்தி தேஷாம் பராபவ: ||

- வால்மீகி ராமாயணம்

इममाषं स्तवं नित्यम् इतिहासं पुरातनम् | 38

ये नराः कीर्तयिष्यन्ति नास्ति तेषां पराभवः | 39

ஆதி புருஷரான, நித்யமாக இருக்கும் உங்கள் சரித்திரத்தை கீர்த்தனம் செய்யும் மனிதர்கள் ஒரு போதும் நாசமாக மாட்டார்கள்." என்று ஆச்சர்யமாக 'ராமபிரானை ஸ்தோத்திரம் செய்தார்', ப்ரம்ம தேவன்.

O Rama ! Humiliation will never be the situation of those humans who will recite this hymn sung by me, the foremost seer who could see what future holds on everyone.