Followers

Search Here...

Showing posts with label சரணாகதி. Show all posts
Showing posts with label சரணாகதி. Show all posts

Monday 14 November 2022

சந்தியா வந்தனத்தில் கர்மயோகம், பிறகு ஞான யோகம், பக்தி யோகம், சரணாகதி அடங்கி இருக்கிறது.. சந்தியாவந்தனத்தில் பகவத்கீதை.... வ்யாச பகவான் கொடுத்த பொக்கிஷத்தை அறிவோம்.

சந்தியாவந்தனத்தில் பகவத்கீதை.... 

பகவத்கீதையில்...

  • கர்ம யோகம், 
  • ஞான யோகம், 
  • பக்தி யோகம், 
  • சரணாகதி 

சொல்லப்பட்டு இருக்கிறது.


பகவத்கீதை சொன்னவர், சாக்ஷாத் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.


மஹாபாரதத்தில் வரும் பகவத்கீதையை நமக்கு அப்படியே கொடுத்தவர் பகவான் வியாசர்.

வியாசர் "நான்கு வேதமும் ஒருவரே கலியில் படிக்க முடியாது" என்று தெரிந்து, நான்கு சிஷ்யர்களை கொண்டு வேதத்தை பிரித்து கொடுத்தார்.

அவரே சந்தியாவந்தனத்தையும் கலிக்கு தகுந்தாற்போல முறை செய்து கொடுத்தார்

பகவத்கீதை கேட்டு மஹாபாரதம் எழுதி விட்டு,  வியாசர் நமக்காக முறை செய்து கொடுத்த சந்தியாவந்தனத்தில், பகவத்கீதை இல்லாமல் இருக்க முடியுமா?


அவர் வகுத்து கொடுத்து, நாம் செய்யும் சந்தியாவந்தனத்தில் பகவத்கீதை இருப்பதை நாம் காணலாம், அனுபவிக்கவும் செய்யலாம்.




1. கர்ம யோகம்

ஆசமனம், அங்க ரக்ஷை, பிராணாயாமம், பிறகு 2 குளியல் இதையெல்லாம் பார்ப்பவர்களுக்கு, ஏதோ ஒரு வேலை (கர்மா) செய்வது போல தெரியும்.

ரக்ஷை இட்டு கொண்டாலும், குளித்தாலும், குடித்தாலும் நாம் அனைத்து கர்மாவையும் தெய்வத்தின் பெயரால் செய்வதால், செய்பவனுக்கு "கர்மயோகம்" என்பது புரியும்.

2. ஞான யோகம்

இப்படி தண்ணீரை வைத்து கொண்டு ஏதோ வேலை (கர்மா) செய்து கொண்டிருந்தவன், திடீரென்று அமைதியாக நின்று கொண்டு இருப்பான். பார்த்தால் "ஞானி" போன்று இருக்கும்.

செய்பவனோ, உண்மையில் காயத்ரீ ஜபம் செய்து கொண்டு பகவானை தியானம் செய்கிறான். அப்பொழுது நாம் "ஞானயோகம்" செய்கிறோம் என்பது புரியும்.


3. பக்தி யோகம்

தெளிந்த ஞானம் ஏற்பட்ட பிறகு, பகவானிடம் பக்தி ஏற்படும்.

இது வரை அமைதியாக நின்று கொண்டு இருந்தவன், திடீரென்று நான்கு திசையையும் வணங்கி, அபிவாதயே என்று நமஸ்காரம் செய்வதை பார்த்தால், பக்தி போல தோன்றும்.

செய்பவனும் 'பகவான் அனைத்து திசையிலும் இருக்கிறார்' என்று அனைத்து திசையையும், உள்ளும் புறமும் பொய் இல்லாமல் இருந்தால் நமக்கு காட்சி கொடுப்பார் (ரிதகும் சத்யம்) என்று சொல்லிக்கொண்டும், அவர் எப்படி இருக்கிறார் என்று வர்ணித்து கொண்டும் சொல்வதை கவனித்தால், "பக்தியோகம்" இது தானே என்று புரியும்.

4. சரணாகதி

பக்தியின் முடிவு சரணாகதி (surrender to god). பகவத்கீதையில் "ஸர்வ தர்மான்.." என்று சொல்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

பக்தனை பார்த்து, "அனைத்தையும் எனக்கு சமர்ப்பணம் செய்து விடு" என்கிறார்.

அது போல, "காயேன வாசா.." சொல்லி அனைத்தையும் "நரர்களுக்கு ஆதியாக இருக்கும் அந்த நாராயணனிடம் அனைத்தையும் ஸமர்ப்பிக்கிறேன்" என்று சொல்வதை பார்த்தால், சரணாகதி செய்கிறோம் என்பது அனுபவத்தில் நமக்கு புரியும்.


பகவத்கீதையில் உள்ள கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், சரணாகதி போன்றவற்றை நம் அனுபவத்தில் கொடுக்கும் இந்த சந்தியாவந்தனத்தை, அதன் அருமையை தெரிந்தும், யார் செய்யாமல் இருப்பார்கள்?


English Meaning Sandhya Vandanam:
Afternoon(to live 100yrs)
https://www.youtube.com/watch?v=0SYdzobuSYE
Evening (to avoid accidental death)
https://www.youtube.com/watch?v=iWyHeXyI8s0
Morning
https://www.youtube.com/watch?v=F9b31khruk4

தமிழ் அர்த்தம் சந்தியா வந்தனம்:
மதியம் (100 வயது வாழ)
https://www.youtube.com/watch?v=xszkkP3vB-0
மாலை (அகால மரணம் தவிர்க்க, நீண்ட காலம் வாழ
https://www.youtube.com/watch?v=B2bhRr7EB4k
காலை
https://www.youtube.com/watch?v=-SDhzQlvfRU

குருநாதர் துணை

Friday 6 March 2020

நமஸ்காரம், சரணம் (சரணாகதி) - இரண்டுக்கும் என்ன வித்யாசம்? தெரிந்து கொள்ள வேண்டாமா ஹிந்துக்கள்?...

நமஸ்காரத்துக்கும் (கும்பிடுதல்), சரணாகதிக்கும் (சரணம்) உள்ள வேற்றுமை என்ன? 

ஒரு கற்புள்ள பெண்,
"தன் கணவனே தனக்கு தேவையான அனைத்தையும் சாதித்து கொடுப்பான்"
என்று தீர்மானம் செய்து கொண்டு,
"தனக்கும் திறமை இருக்கிறதே!!" என்று தன் வரையில் தனியாக பிற முயற்சிகள் (சாதனை) செய்யாமல் இருப்பாள்.
அதாவது
"வேறு சாதனைகள் செய்வது (அன்ய சாதனை) இல்லை என்று இருப்பாள்.



அதேபோல, கற்புள்ள பெண்,
"தன் புருஷனே தன்னை காப்பாற்றுவான்"
என்று திடமாக நம்புவாள்.
"இன்னொரு புருஷன் இவனை விட புத்திசாலி திறமைசாலி என்றாலும், ஏறெடுத்தும் பார்க்காமல், தன் புருஷனே தன்னை காப்பாற்றுவான்" என்று இருப்பாள்.
அதாவது,
"வேறு ஒருவரை நம்புவது (அன்ய ஆஸ்ரயம்) இல்லை" என்று இருப்பாள்.
அதேபோல, கற்புள்ள பெண்,
"தன் புருஷன் பார்த்து தனக்கு நல்லது செய்தாலும் சரி! கெட்டது செய்தாலும் சரி!"
என்று தனக்கு என்ன லாபம்? என்று சிந்திக்காமல் இருப்பாள்.
அதாவது,
"வேறு ஒரு பலனை எதிர்பார்ப்பது (அன்ய பலன்) இல்லை" என்று இருப்பாள்.

இது கற்புக்கரசிகளுக்கான 'லட்சணம்'.  அன்ய சாதனை செய்யாமல், அன்ய ஆஸ்ரயம் தேடாமல், அன்ய பலனில் எதிர்பார்ப்பு இல்லாமல், கற்புக்கரசி பெண்கள் இருக்கின்றனர்.
இதையே "சரணம்" (சரணாகதி)  என்று சொல்கிறோம்.

கற்புக்கான 'லட்சணம்' தான், "வைஷ்ணவ ஸித்தாந்தம்".

"பெண்" என்ற இடத்தில் நாராயணன் மீது பக்தி கொண்ட நம்மை போன்ற வைஷ்ணவர்களை மாற்றி கொண்டு,
"கணவன்" என்ற இடத்தில் "நாராயணன்" என்று மாற்றி போடும் போது, வைஷ்ணவர்கள் "நிலை" நமக்கு புரியும்.
வைஷ்ணவ "சித்தாந்தமும்" நமக்கு புரியும்.

சிவன் கோவிலுக்கு போய் "சிவபெருமானே !! சரணம்.. சரணம்" என்று சொல்லிவிட்டு,
அடுத்து ஐயப்பன் கோவிலுக்கு சென்று "சரணம் சரணம் ஐயப்பா" என்று சொன்னால், அது சரணம் ஆகாது. சரணாகதி ஆகாது.

பெயரளவில் "சரணம் சரணம்" என்று கத்தி விட்டால், அது சரணாகதி ஆகி விடாது. 
இப்படி செய்வது "நமஸ்காரம்" (கும்பிடுதல்) என்று சொல்கிறோம்.

அலுவலகத்தில், நமக்கு மேல் உள்ள அதிகாரியை பார்த்து சல்யூட் வைப்பதும், பெரியவர்களை கண்டால் வணக்கம் செய்வதும், நம்  மரியாதையை காட்ட மட்டுமே !

அதுபோல,
தெய்வத்துக்கு மரியாதை தரும் அளவில் உள்ள பக்தன், எந்த கோவிலுக்கு போனாலும் அந்த தெய்வத்தை தனக்கு தெரிந்த அளவுக்கு "சரணம், போற்றி, வாழ்க" என்று துதி செய்கிறான்.


"மரியாதை உள்ள பக்தன்" என்று இப்படிப்பட்டவர்களை தெய்வங்களும் அறிந்து கொள்கிறார்கள்.

"இவன் சரணம் சரணம் என்று சொல்லிவிட்டான்" என்பதற்காக "சரணாகதி" செய்து விட்டான் என்று தெய்வங்களும் நினைப்பது இல்லை.

ஒரு கற்புள்ள பெண், "தன் கணவனே என் தெய்வம்" என்று இருப்பது போல, "நாராயணனே என் தெய்வம்" என்று சொல்லும் பக்தன் (வைஷ்ணவன்), ஒரு கற்புள்ள பெண் எப்படி இருப்பாளோ! அது போல, தானும் தன் தெய்வத்துக்கு நேர்மையாக இருக்கிறான். 

"நாராயணனே என் தெய்வம்!" என்று சரணாகதி செய்த வைஷ்ணவன் எப்படி இருக்கிறான்?
1.
"நாராயணனே தனக்கு தேவையான அனைத்தையும் சாதித்து கொடுப்பார்" 
என்று தீர்மானம் செய்து கொண்டு,
"தனக்கு திறமை இருக்கிறதே!!" என்று தன் வரையில் "தனியாக ஒரு யோகாஸனம்  செய்வோமா? தியானம் செய்வோமா?"
என்று கூட நினைக்காமல் இருப்பான்.
அதாவது
"வேறு சாதனைகள் செய்வது (அன்ய சாதனை) இல்லை" என்று இருப்பான்.






2.
அதேபோல,
"நாராயணனே தன்னை காப்பாற்றுவார்"
என்று திடமாக நம்புவான்.
"இன்னொரு தெய்வம் இருக்கிறார், அவர் அருள் உடனே செய்து விடுவார். உடனே கல்யாணம் நடக்கும், வேலை கிடைக்கும்"
என்று யார் சொன்னாலும், ஏறெடுத்தும் பார்க்காமல், "நாராயணனே தன்னை காப்பாற்றுவார்" என்று திடமாக நம்புவான்.
அதாவது,
"வேறு ஒருவரை நம்புவது (அன்ய ஆஸ்ரயம்) இல்லை" என்று இருப்பான்.

அதேபோல,
"நாராயணன் பார்த்து தனக்கு நல்லது செய்தாலும் சரி, கெட்டது செய்தாலும் சரி. அவர் இஷ்டம்"
என்று தனக்கு லாபமா, நஷ்டமா என்று சிந்திக்காமல் இருப்பான்.
அதாவது,
"வேறு ஒரு பலனை எதிர்பார்ப்பது (அன்ய பலன்) இல்லை" என்று இருப்பான்.

"நமஸ்காரம் செய்பவர்களால், சரணாகதி செய்தவர்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாததற்கு" இதுவே காரணம்.

நமஸ்காரம் வேறு!...  சரணாகதி வேறு! என்று அறிவோம். 

ஒரு தெய்வத்திடம் சரணாகதி செய்தவனை, வெறும் நமஸ்காரம் செய்து தெய்வத்துக்கு மரியாதை செய்பவன்,
"நீங்கள் இந்த கோவிலுக்கு தான் போவீர்களா? அந்த கோவிலுக்கு போக கூடாதா?" 
என்று எளிதாக கேட்டு விடுவான்.

ஒரு கற்புள்ள பெண்ணை பார்த்து,
"உன் கணவன் நல்லவன் தான்!! 
ஆனால், பக்கத்து வீட்டுக்காரனும் நல்லவன் தான்! 
நீ அவனையும் வந்து பார்க்க கூடாதா?" என்று கேட்டால், அந்த பெண் எத்தனை ஆத்திரப்படுவாளோ! எரிச்சல் அடைவாளோ! அதே நிலையை சரணாகதி செய்தவன் அனுபவிக்கிறான்.

இந்த வித்யாசத்தை அந்த காலங்களில் அறிந்து இருந்தார்கள். 
அவரவர் தெய்வ நம்பிக்கையை கொச்சை படுத்தாமல் இருந்தார்கள். 

வெளிநாட்டிலிருந்து வந்த வந்தேறிகள், "தனக்கு ஒரு தெய்வம் உண்டு" என்று சொன்ன போது, இதன் காரணத்தால்,
"அவர்களை மத மாற்றம் செய்யவோ, அவர்கள் தன் தெய்வத்தை பார்த்தால் என்ன?" என்றோ கேட்கவே இல்லை.

இந்த கீழ்த்தரமான புத்தி, அந்நியர்களின் நுழைவு 947ADக்கு பின்னர் பாரத மக்களிடம் விதைக்கப்பட்டது.
"ஏன் எங்கள் தெய்வத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள கூடாது.. வந்து பாருங்கள்"
என்ற கீழ்த்தரமான பேச்சுக்கள் முக்கியமாக கிறிஸ்தவ நுழைவுக்கு பின்னர் அதிகமானது.

வாஸ்கோட காமா என்ற கிறிஸ்தவன் 1498ADல் காலடி எடுத்து வைத்த காலத்திலிருந்தே இந்த பேச்சுக்கள் இந்தியாவில் பரவப்பட்டது. 
அந்நிய தேச இஸ்லாமியர்கள் வடபாரத தேசங்களை பிடித்துக்கொண்டு இருந்த சமயத்தில், 
அந்நிய தேச கிறிஸ்தவர்கள் தென் பாரத தேசங்களை பிடித்து கொண்டார்கள். 
அந்நிய தேச இஸ்லாமியர்கள், கட்டாயத்தால் மதம் மாற்ற,
அந்நிய தேச கிறிஸ்தவர்கள், இது போன்ற கீழ்த்தரமான பேச்சுக்கள் மூலமாகவும், 
கொஞ்சம் இடம் கொடுத்தால், அடுத்தவன் வணங்கும் தெய்வத்தையே கேலி செய்யும் அளவுக்கும் போனார்கள். 
சமயம் கிடைத்த போதெல்லாம், கோவிலை தாக்குவதும் நடந்தது.
சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் இருந்த கோவிலை இடித்து, சாந்தோம் சர்ச் கட்டிவிட்டனர். 
மற்றவன் தெய்வ நம்பிக்கையை கொச்சை படுத்த இயற்கையாகவே விரும்பாத பாரத மக்கள், ஒரு மைல் தள்ளி இன்று உள்ள கபாலீஸ்வரர் கோவிலை அமைத்துக்கொண்டனர்.




காளையார் சிவன் கோவிலுக்கு கோபுரங்கள் கட்டி அழகு பார்த்த, மருது சகோதரர்களை, பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் நாட்டு  கிறிஸ்தவர்கள்,
நம் நாட்டின் குறுநில அரசனை பிடிக்க, "காளையார் கோவிலை வெடி வைத்து தகர்த்து விடுவோம்" என்று சொல்லி மிரட்ட,
கோவிலை காப்பாற்ற, மகா வீரர்களான மருது சகோதரர்கள் தானாக வந்து சரண் அடைந்தனர்.


கோவிலை வைத்து இவர்களை பிடித்து, இருவரையும் பொது மக்கள் பார்வையில் தூக்கில் போட்டு கொன்றனர்.
கிறிஸ்தவர்கள், நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய போக்கு இது என்பதை சரித்திரம் நமக்கு காட்டுகிறது.

சரணாகதி என்றால் என்ன புரிந்து கொள்ள முடியாத அந்நியர்கள், செய்த பெரும் குழப்பமே, இன்று வரை நம்மிடையே நீடிக்கிறது.

ஹிந்துக்கள் அறிவு பெற வேண்டியது அவசியம்.

"வெட்கமில்லாமல் எங்கள் தெய்வத்தை வந்து பாருங்கள்" 
என்று சொல்லும் போலி மதங்களுக்கு ஏமாற்றப்பட்டு போன பாரத மக்களை, மீண்டும் ஹிந்துவாக ஆக்க வேண்டியதும் ஒவ்வொருவரின் கடமை.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க நம் ஹிந்து தர்மம்.

குருவே துணை... 

Wednesday 24 July 2019

பரிகாரம் செய்தும், துன்பங்கள் வருவது ஏன்?

டாக்டரை பார்க்க சென்றான் ஒரு நோயாளி .

டாக்டரை பார்த்து
"நீங்கள் சௌக்கியமா? எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டான்.
தான் நலம் விசாரிக்க வேண்டி இருக்க, இவன் தன்னை நலம் விசாரிப்பதை பார்த்து, டாக்டருக்கே சிரிப்பு வந்து விட்டது.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் டாக்டரும் சங்கடப்பட்டார்.





யாரிடம் நலம் விஜாரிக்கிறோம் என்று கூட அறியாமல் கேட்கிறானே, 'பாவம்' என்று நினைத்தார் டாக்டர்.
உண்மையில்,
நாம் டாக்டரை பார்க்கும் போது, "டாக்டர், நான் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டால்,
அந்த டாக்டரும், "சரி" என்று சுதந்திரமாக சிகிச்சையோ, சரியான ஆலோசனையோ சொல்வார்.

அதே போல,
நாம் தெய்வத்தையோ, மகானையோ, ஒரு ஞானியையோ பார்க்கும் போது,
"நீங்கள் சௌக்கியமா? எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டால், மகான்களும், தெய்வமும் அஞானத்தால் கேட்பவனை கண்டு மந்தஹாசம் செய்வார்கள்.
அஞானியாக இருக்கும் நாம், "நான் ஆரோக்கியமாக, நன்றாக இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டால், சுதந்திரமாக, நமக்கு உதவி செய்ய முன் வருவார்.

ஒருவன் டாக்டரிடம் சென்று தனக்கு உள்ள நோயை குணப்படுத்த கேட்டான்.

பரிசோதித்த டாக்டர்,
"ஒரு  ஆப்பரேஷன் செய்ய வேண்டும். ஆப்பரேஷன் நல்ல படியாக முடிந்தால் உயிர் பிழைக்கும், 
ஒருவேளை தவறானால், உயிர் போகவும் வாய்ப்பு உள்ளது. 
ஆப்பரேஷன் முடிந்து 3 மாதங்கள் படுத்த படுக்கையாக தான் இருக்க வேண்டி இருக்கும். அதற்கு பின் உடல் சரியாகி விடும்" என்று சொல்லி,
"சரி என்றால் கையெழுத்து போடு" என்று கேட்டார்.
அவனும், 'டாக்டர், நீங்கள் என் உடம்பை கிழித்து ஆப்பரேஷன் செய்யுங்கள். 
இதனால் ஏற்படும் வலியை பல மாதங்கள் ஆனாலும் நான் பொறுத்துக்கொள்கிறேன். 
நீங்கள் என் உடலை கிழித்து ஆப்பரேஷன் செய்வதற்கு, உங்களுக்கு பணமும் தருகிறேன். மேலும், 
ஆப்பரேஷன் fail ஆனால் கூட, நீங்கள் காரணமில்லை என்று  கையெழுத்து கூட போடுகிறேன். காரணம், 
உங்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை" என்றான்.


அதே போல,
நாமும் தெய்வத்திடம் அந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டு, கையெழுத்து போட்டு தன்னை ஒப்படைத்து விட வேண்டும்.
டாக்டர் செய்த ஆப்பரேஷன் கூட fail ஆகலாம் என்று சொல்ல வாய்ப்பு உண்டு.
ஆனால், பெருமாளிடம் தன்னை  ஒப்படைத்தவன் தோற்றதே கிடையாது.

ஆப்பரேஷன் செய்து நோய் குணமாகும் வரை, நமக்கு ஏற்படும் தற்காலிக சங்கடங்கள் போல,  
பெருமாளிடம் தன்னை  ஒப்படைத்த பின், நம் நன்மைக்காக அவர் செய்யும் ஆப்பரேஷனால் ஏற்படும் துன்பம் கூட, ஒரு காரணத்துக்காகவே, தற்காலிக துன்பமே என்று நாம் உணர வேண்டும். அவ்வப்போது வரும் கஷ்டங்கள் தானாகவே பனி போல விலகி விடும்.

மகான்களும் தங்கள் வாழ்வில் ஏற்படும் துன்ப காலத்தை இந்த ஞானத்தினால் உணர்ந்து, துன்ப காலத்தை தைரியம் இழக்காமல் கழிக்கின்றனர்.

"இன்பமும், துன்பமும் தெய்வ இஷ்டம்" என்று இருந்தால், ஸ்ரீக்ருஷ்ணரே நம் குடும்ப பொறுப்பை சேர்த்து நிர்வாகிப்பார்.

சம்சார சூழலில் சிக்கி நோய்வாய்ப்பட்டு இருக்கும் நாம், நாராயணன் (தன்வந்திரி) என்ற வைத்தியரிடம் தன்னை ஒப்படைத்து விட்டால், அந்த வைத்தியரே சரியான சிகிச்சை செய்து, மோக்ஷம் என்ற ஆனந்தம் வரை கிடைக்க செய்திடுவார்..


வாழ்க ஹிந்துக்கள்.. வாழ்க ஹிந்து தர்மம்..

குருவே துணை.  



Saturday 16 February 2019

சரணாகதி செய்து விட்டால் மட்டும், பகவான் காப்பாற்றி விடுவாரா?... ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது...

குருவே துணை

"பகவானை நாம் சரணம் அடைந்தால், பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுகிறார்".


திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஒரு மகான் சேங்கனூர் என்ற ஊரில் பிறந்தார்.
பெரியவாச்சான் பிள்ளை, அவரது குரு நம்பிள்ளை
இதே ஊரில் தான் 4000 திவ்ய பிரபந்ததுக்கும் விளக்க உரை எழுதிய ரோகினி நக்ஷத்திரத்தில், அவதரித்த பெரியவாச்சான் பிள்ளை என்ற கிருஷ்ணசூரியும் தோன்றினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாட்டில், கும்பகோணம் அருகில் உள்ளது "சேங்கனூர்" என்ற இந்த க்ஷேத்ரம்.

சேங்கனூர் அருகில் உள்ள திருக்கண்ணமங்கை கோவிலில் உள்ள பக்தவத்சல பெருமாளிடம் இவருக்கு இருந்த பக்தியின் காரணமாக திருக்கண்ணமங்கை ஆண்டான் எனறே பெயர் அமைந்தது.

கோவிலில் தானே, பூ கைங்கர்யம் செய்து கொண்டு, கோவிலை சுத்தப்படுத்தி கொண்டு, பகவானிடம் சரணாகதி செய்து, வாழ்ந்து வந்தார்.
ஒரு சமயம், "பகவான் சரணாகதி செய்பவர்களை காப்பாற்றுவார் என்று எப்படி நம்புவது?" என்ற சந்தேகத்துடன் இருந்த ஒருவர், திருக்கண்ணமங்கை ஆண்டானிடத்தில், அவர்கள் வந்து,
"சரணாகதி.. சரணாகதி.. என்று சொல்கிறீரே. 
நாம் சரணாகதி செய்து விட்டால் மட்டும் பெருமாள் காப்பாற்றி விடுவாரா?" 
என்று அவரிடம் சாஸ்திரத்தின் மேல் நம்பிக்கை இல்லாததால், விதண்டாவாதம் செய்தார்.


திருக்கண்ணமங்கை ஆண்டான், இவருக்கு சாஸ்திரத்தை கொண்டு பதில் சொல்லவில்லை. மௌனமாகவே உடகார்ந்து இருந்தார்.

'சாஸ்திரம் இப்படி சொல்லி இருக்கிறது' என்று சொன்னால், சாஸ்திரத்தை நம்ப இவர் தயாரில்லை.
இவரிடம், சாஸ்திரத்தை கொண்டு நிரூபிக்க முயற்சி செய்வது வீண்.

சாஸ்திரத்தை நம்பாத ஜனங்களிடம், சகஜமாக உலகத்தில் நடக்கும் விஷயங்களை காட்டி நிரூபிக்கலாம்.

'சாஸ்திரம் இப்படி சொல்லி இருக்கிறது' என்று சொல்லி புரியவைக்க முடியாத ஜனங்களுக்கு, ஹித உபதேசங்கள் செய்து ஆசாரியர்கள் நல்வழி படுத்திவிடுவார்கள்.

அந்த சமயம்,
எதிர் வீட்டில் ஒருவன் நாய் வளர்த்து கொண்டு இருந்தான்.
அன்று, அவனோடு அந்த நாய் தெருவோடு நடந்து கொண்டிருக்கும் போது,
அந்த தெருவிலேயே இருக்கும் இன்னொரு நாய், இதை பார்த்தவுடன், அங்கிருந்து வேகமாக ஓடி வந்து, இவனின் நாயை பார்த்து கோபத்துடன் "லொள் லொள்.." என்று ஹிம்சை பண்ண ஆரம்பித்தது.


யாரிடமோ பேசி கொண்டிருந்த அந்த வீட்டு நாயின் எஜமானன், தான் வளர்க்கும் நாய் ஹிம்சிக்கப்படுகிறது என்று பார்த்த அடுத்த நொடி, 'குபீர்' என்று பாய்ந்து, தன் நாயை தாக்க வந்த அந்த நாயை கல்லால் அடித்து துரத்தி விட்டு, தன் சொந்த நாயை அணைத்து கொண்டு, தன் வீட்டுக்கு கூட்டி சென்றான்.
இந்த நிகழ்வை பார்த்து கொண்டிருந்த திருக்கண்ணமங்கை ஆண்டான், தன்னிடம் விதண்டாவாதம் செய்தவரை பார்த்து,
"இந்த எஜமானனுக்கு ஏன் இந்த நாயின் மேல் அபிமானம் ஏற்பட்டது?
இந்த எஜமானனும் நாயும் ஒரே ஜாதியா? ரத்த சம்பந்த உறவா?"
என்று கேட்க,




"இது இவன் சொந்த நாய். அதனால் அபிமானம் இவனுக்கு ஏற்பட்டது" என்றார்.

"சொந்த நாயாக இது ஆவதற்கு காரணம் என்ன?" என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் கேட்க,

"இந்த நாய் அவன் வீட்டோடு எப்பொழுதும் இருக்கிறது. 
அவன் கொடுக்கும் உணவை சாப்பிட்டு, அவன் காலையே சுற்றி சுற்றி வருகிறது. 

இந்த அன்பு, அந்த எஜமானனுக்கு ஜாதியில் இது நாயாக இருந்தாலும், தன் சொந்தம் என்று நினைக்க வைக்கிறது. இதை காப்பாற்ற வேண்டியது தன் பொறுப்பு என்று நினைக்கிறான்" என்றார்.

"தனக்கு பிரியமான இந்த நாய் மேலே, இன்னொரு நாய் வந்து ஹிம்சை செய்தால் அதை தான் விலக்கி, அணைத்து காப்பாற்றுவது ஒரு அல்ப மனிதனுக்கே ஸ்வபாவமாக இருக்குமென்றால்,
பக்தவத்சலனான திருக்கண்ணமங்கை எம்பெருமான் அப்படி செய்ய மாட்டாரா?
எம்பெருமானே கதி என்று அவர் அடியிலேயே கிடக்கும் அடியார்களை, அணைத்து கொள்ளாமல் இருந்து விடுவாரா?


அந்த தெரு நாய் போன்று, மோக்ஷத்திற்கு எதிரான பாதையில் திருப்பி, மீண்டும் உலக விஷயங்களில் திருப்ப நினைப்பவர்களை, தன் அடியார்களோடு சேரவிடாமல் விலக்கி, அணைத்து கொண்டு காப்பாற்ற மாட்டாரா, எம்பெருமான்?.
"சரணாகதி செய்தால், சத்தியமாக எஜமானன் காப்பாற்றுகிறான்" என்று உலக வாழ்க்கையிலேயே தெரியும் பொழுது,
கருணையே வடிவான எம்பெருமான், சரணாகதி செய்தவர்களை காப்பாற்றுவாரா என்று சந்தேகமும் ஒருவனுக்கு எழும்புமா?"

சரணாகதி செய்த அடியார்களுக்கு எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதே லட்சியம்.

அந்த கைங்கர்யம் செய்து கொண்டிருப்பது மட்டுமே சரணாகதி செய்தவன், தன் எஜமானனான எம்பெருமானுக்கு செய்ய வேண்டியது"
என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் ஹித உபதேசமாக உலக விஷயத்தை வைத்தே விளக்கி சொல்ல,
சந்தேகம் தெளிந்து விடைபெற்றார் அந்த நபர்.

சரணாகதி செய்தவன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

காலை 4 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள்,
பல் துலக்கி,
கை கால்களை அலம்பிக்கொண்டு,
விஷ்ணு சஹஸ்ரநாமம்,
கஜேந்திர மோக்ஷம்,
ருத்ர கீதம்,
ப்ராத ஸ்மரணம் ,
சுப்ரபாதம்,
ஆத்ம நிவேதனம்,
திருப்பள்ளி எழுச்சி,
திருப்பாவை
முதலியவைகளை சொல்லி,
ராமானுஜர், மாத்வர், ஆதிசங்கரர் போன்ற ஆசார்யர்களும்,
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் போன்ற அவதார புருஷர்களும்,
மேலும் பல மகான்களும் இயற்றிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து கொண்டு,

காலை 6 மணி முதல், 8 மணிக்குள், 
ஸ்நானம், அனுஷ்டானம் செய்து,
ஸ்ரீமத் பாகவதமோ,
ஸ்ரீமத் ராமாயணமோ,
ஸ்ரீமத் பகவத் கீதையோ,
ஒரு வேளை, தேவர்களின் பாஷையான சம்ஸ்க்ரிதம் தெரியாதவர்கள் என்றால்,
4000 திவ்ய ப்ரபந்தமோ பாராயணம் செய்ய வேண்டும்.
பாராயணம் முடித்து விட்டு, பூஜை செய்ய வேண்டும்.

மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை, தனிமையான இடத்தில் மௌனமாக அமர்ந்து கொண்டு பகவானின் மூர்த்தியை தியானம் செய்து கொண்டோ,
ஹரே ராமா சொல்லிக்கொண்டோ,
குருவிடம் உபதேசம் ஆகி இருந்தால், அவர் உபதேசம் செய்த பகவன் நாமாவை குருவின் திருவடியை தியானம் செய்து கொண்டே சொல்லிக்கொண்டோ, இருக்க வேண்டும்.


தினசரி குடும்ப காரியங்களுக்கு இடையில் ஒழிவு/நேரம் கிடைக்கும் போதும், விடுமுறை நாட்களிலும்
கிருஷ்ண சைதன்யர் சரித்திரமமோ,
ஸ்ரீ ராமகிருஷ்ணர் சரித்திரமோ,
பாரத மண்ணில் தோன்றிய மீரா, துளசிதாஸ், துக்காராம், ஏகநாதர், பத்ராசல ராமதாசர், சமர்த்த ராமதாசர் போன்ற பக்தர்களின் சரித்திரமமோ,
ஆழ்வார்கள், நாயன்மார்கள் சரித்திரமோ,
அல்லது
இந்த மகான்கள் நமக்கு சொன்ன உபதேங்களை தனியாக படித்துக்கொண்டோ, பலபேர் கூடியோ படிக்க வேண்டும்.

பகல் தூக்கம் கூடாது.
பகல் தூக்கம் ஆரோக்கியத்துக்கும் கெடுதல்.
பகல் தூக்கத்தினால், நேரம்  வீணாகி, பாரமார்கத்துக்கும் விரோதமாகிறது.

இந்த விதியை மனிதனாக பிறந்த அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

பெரியவர்கள் மட்டுமில்லாது,
குடும்பத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும் அனுசரித்து கொண்டு, உற்சாகத்துடன் செய்ய வேண்டும்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்த வரிசைப்படி செய்ய சொல்லி தர வேண்டும்.

இப்படி ஒரு நியமப்படி, தானும் வாழ உண்மையாக ஆசைப்படுபவர்களுக்கு பகவான் அவர்கள் வாழ்க்கையை அனுகூலம் ஆக்கி கொடுப்பான்.

இப்படி வாழ்ந்தால் பகவான் நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகிறார். அவரே நம்மை காண வருவார்.
மகான்கள் நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இது ஒவ்வொரு ஹிந்துவின் வாழ்க்கை முறை.

ஹிந்துவாக பிறந்த நாம், இந்த முறையில் வாழ முயற்சிப்போம்.

"பகவானை நாம் சரணம் அடைந்தால், பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுகிறார்".

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka


sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka